டோண்டு சாரின் இந்தப் பதிவில் சோ இராமசாமியின் எங்கே பிராமணன் என்கிற ஜெ டிவி தொடர் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இவாறு கூறுகிறா
"சோவின் நண்பர் அசோக் யாருமே பிராமணன் இல்லைன்னு சம்பந்தப்பட்டவாளையே சொல்ல வைத்தது பற்றி அங்கலாய்க்கிறார். சோவோ கண்களை உருட்டியபடி அதுதானே உண்மை என்பதுதான் இந்த சீரியலின் முக்கிய விஷயம்னு சொல்கிறார். அசோக் தேடுவது வர்ணரீதியான பிராமணனை. ஆனால் தறசமயம் இருப்பவர்களோ சாதி ரீதியான பிராமணர்கள் என்கிறார் அவர். பிறகு நான்கு வர்ணங்களையும் அவர் ஒரிஜினலாக கொடுத்த விளக்கங்கள் பிரகாரம் வர்ணிக்கிறார். அவற்றில் பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள்.
சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்."
- என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
பார்பனர்கள், பிராமணன் எங்கே இருக்கிறான் ? என்று தேடிக் கொண்டு இருப்பதாகவும், பிராமணன் இவன் தான் என்று காட்டும் படி தற்போது(ம்) எவருமே இல்லை என்பதாக அங்காலாய்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். பிராமணன் பிச்சை எடுத்து உண்பது என்கிற ஒரு விதி இருக்கிற படியால் இன்றைய தேதியில் பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பது இயலாத ஒன்று என்பதற்காக பார்பனர்கள் அக்மார்க் 'பிராமணிய' வழியில் செல்வதை விட்டுவிட்டார்களா தெரியவில்லை. காஞ்சி சங்கர மடத்தின் தலைமை பார்பனர் 'சங்கராச்சாரியார்' கூட பிச்சை எடுத்து உண்ணுவது கிடையாது. பிறகு எங்கே பிராமணர்களைத் தேடுவது.
வருண பிராமணனோ, வர்க்கப் பார்பனரோ தீவிரமாக பிராமணியத்தில் இருந்த போது தீண்டாமை ஆலமரமாக வளர்ந்து இருந்தது
பிராமணன் இருக்கிறானா இல்லையா என்பதை விட, இன்னொன்று தான் உறுத்தலாகவும் ஏமாற்று வேலையாகவும் தெரிகிறது, பார்பனர்களே பிராமணர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்கிற உண்மை ஒப்புக் கொண்டு வேளையில், பார்பனர்கள் கோவில்களில் அமர்ந்து கொண்டு கடவுளுக்கு நாங்கள் முகவர்கள் என்று கூறுவதில் எதுவும் பொருள் இருக்கிறதா என்றே தெரியவில்லை. பிராமணர்கள் கடவுளைக் காட்டினார்கள் முகவர்களாக செயல்பட்டார்கள் என்பதை ஒப்புக் கொண்டாலும், பிராமணர்கள் யார் என்றே அறிந்திடாத, பூணூல் தவிர்த்து எந்த ஒரு மனத் தூய்மை, செயல் தகுதி எனக்காட்டப்படும் அந்த தன்மையில் எதுவும் இல்லாதவர்கள் தங்களை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வதுடன் நிற்காமல் கடவுளை நாங்கள் தற்போதும் காட்டுகிறோம் என்பதில் ஏதேனும் உண்மை உண்டா ? உண்மையிலேயே கடவுளைக் காட்ட, முகவராக செயல்பட வர்கவழி பார்பனர்களுக்கு புரோகிதம் பரம்பரைத் தொழில் என்பதைத் தவிர்த்து பூசை செய்யும் உரிமைக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது ?
பொதுமக்கள் 'பார்பனர்களை சக மனிதனுக்கு மேலாக மதிக்கப் படவேண்டும்' என்பதற்கு வேறு எதாவது ஒரே ஒரு காரணம் உண்டா ?
பிராமணனையே பார்க்காத, காட்டமுடியாத பார்பனர்கள் கடவுளைக் காட்டுவேன் / காட்டுவார்கள் என்று சொல்வது கலியுகப் பித்தலாட்டமா ? கலி முற்றியதன் வெளிப்பாடா ?
பின்பற்றுபவர்கள்
விவாத மேடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவாத மேடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
24 ஜூலை, 2009
18 டிசம்பர், 2008
பிராமணர்கள்தான் ஆரியர்களா.... இல்லை யூதர்களா ? - இளங்கோ !
இந்த பதிவில் கேள்வியாக கேட்டு தனிப்பதிவாக போட்ட பதிவர் இளங்கோவிற்கான பதிவு இது:
பிராமணர்கள்தான் ஆரியர்களா.... இல்லை யூதர்களா ? - இளங்கோ !
முதலில் கேள்வியே தப்பு, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பகுப்பில் பிராமணர்கள் என்றால் ஆரியர்கள் அல்லது பிராமணர்கள் அனைவரும் ஆரியர்கள் என்று தவறாகவே சொல்லப்படுகிறது. பிராமணர் என்றால் எண்ணம் சொல் செயல் குறித்த மேலான எண்ணம் உடையவர்களுக்கு, அவர்கள் தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தோர் என்ற பொருளில் பிராமணர்கள் என்ற தகுதிச் சொல் வழங்கப்பட்டது. பிராமணர் என்ற வடசொல்லுக்கு தமிழில் அந்தணர் என்ற பொருள். மேலும் பிராமணர் என்ற பண்புப் பெயர் தகுதியின் அடைப்படை அடைமொழி யன்றி பிறப்பின் அடிப்படையில் கிடையாது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மணியக்காரர் என்கிற பட்டம் ஊர் நாட்டமைகளுக்கு வழங்குவதுண்டு, மணியக்காரர் என்றால் குறிப்பிட்ட சாதியைச் சொல்வதன்று, அந்த கிராமத்தின் நாட்டாமைக்கு வழங்கப்படும் பட்டப்பெயரே. பின்னாளில் மணியக்காரரின் வாரிசுகளை மணியக்காரர் என்று சொல்ல ஆரம்பித்து ... சாதியாக பரிணமித்தது, தற்பொழுது இல்லை, சத்திரியன், பிள்ளைமார், பட்டமும் அப்படித்தான். சங்ககாலத்தில் அந்தணர் என்ற தகுதி படித்தவர்களுக்கு, குருக்களுக்கு என படித்தவர்கள் பல குலத்தொழில்களை செய்திகொண்டிருந்தவர், பல்வேறு குலங்களில் பிறந்திருந்தாலும் வழங்கப்பட்டது, அவர்களை பிறரில் இருந்து வேறுபடுத்திக் காட்ட 'பேட்ஜ்' போல முப்புறிநூல் அணியும் பழக்கமும் இருந்தது.
இன்றைய பார்பனர்கள் பல நிறத்திலும் இருப்பதற்கு காரணம் முன்பு அந்தணர்கள் பட்டம் பெற்றவர்களில் பல்வேறு வகுப்பினரும் இருந்திருந்தார்கள், அவர்களின் சந்ததிகள் ஆதிசங்கரர் மற்றும் இராமனுஜருக்கு பிறகு தங்களை பார்பனர்களாக நினைத்துக் கொண்டனர். உண்மையிலேயே பார்பனர்கள் மற்றும் ஆரியர்கள் யாரென்றால் அவர்கள் அனைவரும் இன்றும் இருக்கும் காஷ்மீரத்து பண்டிட்டுகள் மட்டுமே. இன்றைய தேதியில் மதமாற்றம் போல் பண்டைய காலத்தில் இன்றைய பார்பனர்களில் பெரும்பகுதி திராவிடர்களில் இருந்து பார்பனர்களாக 'இனம்' மாறியவர்களே. காஷ்மீரத்து பண்டிட்டுகளின் முகம், மூக்கு, உடல், நிறம் ஜெர்மானியர்களை அல்லது ஐரோப்பியர்களை ஒத்தே இருக்கிறது, தென்னிந்திய பார்பனர்கள் மற்றும் ஏனைய முன்னாள் திராவிட இன்னாள் பார்பனர்களுக்கு உடல் ஐரோப்பியர்கள் போல் இருப்பதில்லை, முன்னாள் திராவிடர்களான இன்னாள் பார்பனர்கள் யாரும் கைபர் போலன் கனவாய் வழி வந்தவர்கள் அல்ல
கேள்வியே....பார்பனர்கள் ஆரியர்களா.... இல்லை யூதர்களா ? என்று இருக்க வேண்டும்.
கேள்விக்கு வருவோம்... 'ஆரியர்கள் ஜெர்மானியர்களே' என்றே பார்பனரான ஆவி மதன் தனது 'வந்தார்கள் வென்றார்கள்...' தொடரில் எழுதி இருக்கிறார். அதாவது ஆரியர்கள் அனைவரும் ஹிட்லர் வம்சம். அப்படி கைபர் போலன் வழியாக வந்த ஒர்ஜினல் ஆரியர்களில் மொழி பிராகிரதம் எனப்படும் வடமொழியின் முதல் வடிவம், அதன் ஒலிப்பு மற்றும் இலக்கணம் கிரேக்கம், லத்தீனம், ஜெர்மானியம் ஆகிய ஐரோப்பிய மொழிகளை ஒத்தது. சமஸ்கிரதத்தில், மாதா = மதர், பிதர்/பித்ரு = பாதர், பிராகிரதம் எழுத்தில்லாத மொழியாகவே இருந்தது, தென்னிந்தியாவில் குறிப்பாக காஞ்சிபுரத்தில் தான் சமஸ்கிரத்திற்கான இன்றைய எழுத்துவடிவம் கிருந்த எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு, பின்னரே வேதங்கள் எழுத்தில் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சமஸ்கிரத்திற்கு எழுத்துக்கள் வந்த காலத்தில் ஒரிஜினல் ஆரியர் (பார்பனர்) மற்றும் முன்னாள் திராவிடர்களாக இருந்து ஆரிய இனமாக தங்களை மாற்றிக் கொண்ட இன்றைய பார்பனர்கள் பலரும் ஒரே பார்பனர்களாக ஆகி இருந்தனர். பண்டைய இந்தியாவில் பாலி, பிராகிரதம் மற்றும் ஆதித்தமிழ் ஆகிய மொழிகளே இருந்தன. இவற்றில் பாலி, சமஸ்கிரதமும் முற்றிலும் பேச்சு வழக்கில் இருந்து மறைந்து வடமாநில வட்டார மொழிகளாக திரிந்தது, ஆதித்தமிழ் திராவிட மொழிகளாக திரிந்தது.
பண்டைய இந்தியாவில் வடக்கில் பெருமளவு ஐம்பூத வணக்கமும், தெற்கில் நிலப்பிரிவு படி ஐந்து நிலத்தில் (குறிஞ்சு முதல் பாலை வரை) தனித்தனியான கடவுளை வணங்கினர்.
நான்கு வேதங்களான ஒரிஜினல் ஆரியர்களின் இருக்கு, யஜூர், சாம, அதர்வான வேதங்களுக்கும், இந்திய சமயங்களுக்கும் அவ்வளவு தொடர்ப்பு இல்லை, பின்னாளில் தொடர்ப்பு ஒட்டவைக்கப்பட்டது. நான்கு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்கள் ஆரியர்கள் திராவிடர்களை வெற்றிக் கொண்ட கதைதான். அரசன் பெயராக இந்திரன், கண்ணன் போன்றோரின் பெயர் சொல்லப்பட்டுள்ளது, கண்ணன் ஆயர் குலத்தோன், ஆரிய குலத்திற்கு நண்பன் என்று வேதங்களில் சொல்லப்படுகிறது. வெகு பிற்காலத்தில் இருக்கு வேத கண்ணனும், திராவிட மருத நில மாலும் ஒன்றாக்கினர், அதுபோல் வேதகாலத்தில் இருந்த சங்கரன் என்கிற ஏவல் தெய்வமும், தமிழக (சைவ) சிவனும் ஒன்றென சொல்லிவைத்தனர். வடக்கில் இருந்த குமர குருபரனே தெற்கின் முருகன் அல்லது சேயோன் என்று சொல்லிவைத்தனர். இவற்றையெல்லாம் ஒட்ட வைத்தில் பெரும்பங்காற்றியது கந்தபுராணம்.
*****
இன்றைய தேதியில் "பிராமணர்" என்கிற தகுதியாருக்கும் இல்லை, எனவே ஆரியர்கள் எவராக இருந்தாலும் பார்பனர் என்று சொல்லலாம். பிரமணர் என்று சொன்னால் பிராமணர் அல்லாதோர் அதாவது சூத்திரர் என்று ஒரு சமூகத்தையும் நீங்கள் ஒப்புக் கொள்வதாக பொருள், சாதிகள் பிறப்பு அடிப்படை என்று ஆகிவிட்ட பொழுது 'பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர்' என்கிற தகுதியடைப்படைச் சொற்கள் எவருக்குமே பொருந்தது.
**********
ஒருவரை பிராமணர் என்ற சொல்லத் தகுதியானவை:
யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.'
இதன் படி பார்த்தால் பிராமணன் என்று நாம் தற்போது அறிந்தவர்களில் யாருமே இல்லை. நம்மிடமிருந்து மறைந்து வாழ்கிறார்களோ என்னவோ? :-)
- நன்றி நண்பர் குமரன்
பிராமணர் என்கிற சொல்லுக்கான தகுதி ஒருவருக்கும் இல்லை, அனைவருமே சூத்திரன் என்ற சொல்லுக்கு இருக்கும் தகுதியில் தான் இருக்கின்றனர். நான் பார்பனர்களை மட்டுமே சொல்லவில்லை, இன்றைய தேதியில் பார்பனர் உட்பட நான் ஷத்திரியன் என்று மார்தட்டும் அனைத்து சாதிகளும் சூத்திரன் என்ற தகுதியில் தான் இருக்கின்றனர். ஒருவரை பார்பனர் என்று அறிந்து நீங்கள் அவரை பிராமணர் என்று சொல்வது, அழைப்பது மறைமுகமாக உங்களை நீங்களே சூத்திரன் என்று சொல்வதாக, ஒப்புக் கொள்வதாக பொருள்.
பார்பனர்களுக்கு பிறவி குணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, பார்பனீயம் என்ற கட்டமைப்பில், சூழலில் வளர்வதால் அந்த குணம் அவர்களுக்கு இருக்கிறது. மற்றபடி எந்த சாதியினர் வீட்டுக் குழந்தையும் பார்பனர் வீட்டில் வளர்ந்தால் பார்பன குணத்துடன் தான் வளரும், இது பிற சாதிவிட்டில் வளர்க்கப்படும் பார்பன குழந்தைக்கும் பொருந்தும். சிங்கையில் தமிழர்கள் வீட்டில் வளர்ந்த சீனர்கள் தமிழர்களைப் போல் பண்பாடும் நாகரீகமும், தமிழ் பேச்சும் உள்ளவர்களாகவே உள்ளனர்
பிராமணர்கள்தான் ஆரியர்களா.... இல்லை யூதர்களா ? - இளங்கோ !
முதலில் கேள்வியே தப்பு, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பகுப்பில் பிராமணர்கள் என்றால் ஆரியர்கள் அல்லது பிராமணர்கள் அனைவரும் ஆரியர்கள் என்று தவறாகவே சொல்லப்படுகிறது. பிராமணர் என்றால் எண்ணம் சொல் செயல் குறித்த மேலான எண்ணம் உடையவர்களுக்கு, அவர்கள் தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தோர் என்ற பொருளில் பிராமணர்கள் என்ற தகுதிச் சொல் வழங்கப்பட்டது. பிராமணர் என்ற வடசொல்லுக்கு தமிழில் அந்தணர் என்ற பொருள். மேலும் பிராமணர் என்ற பண்புப் பெயர் தகுதியின் அடைப்படை அடைமொழி யன்றி பிறப்பின் அடிப்படையில் கிடையாது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மணியக்காரர் என்கிற பட்டம் ஊர் நாட்டமைகளுக்கு வழங்குவதுண்டு, மணியக்காரர் என்றால் குறிப்பிட்ட சாதியைச் சொல்வதன்று, அந்த கிராமத்தின் நாட்டாமைக்கு வழங்கப்படும் பட்டப்பெயரே. பின்னாளில் மணியக்காரரின் வாரிசுகளை மணியக்காரர் என்று சொல்ல ஆரம்பித்து ... சாதியாக பரிணமித்தது, தற்பொழுது இல்லை, சத்திரியன், பிள்ளைமார், பட்டமும் அப்படித்தான். சங்ககாலத்தில் அந்தணர் என்ற தகுதி படித்தவர்களுக்கு, குருக்களுக்கு என படித்தவர்கள் பல குலத்தொழில்களை செய்திகொண்டிருந்தவர், பல்வேறு குலங்களில் பிறந்திருந்தாலும் வழங்கப்பட்டது, அவர்களை பிறரில் இருந்து வேறுபடுத்திக் காட்ட 'பேட்ஜ்' போல முப்புறிநூல் அணியும் பழக்கமும் இருந்தது.
இன்றைய பார்பனர்கள் பல நிறத்திலும் இருப்பதற்கு காரணம் முன்பு அந்தணர்கள் பட்டம் பெற்றவர்களில் பல்வேறு வகுப்பினரும் இருந்திருந்தார்கள், அவர்களின் சந்ததிகள் ஆதிசங்கரர் மற்றும் இராமனுஜருக்கு பிறகு தங்களை பார்பனர்களாக நினைத்துக் கொண்டனர். உண்மையிலேயே பார்பனர்கள் மற்றும் ஆரியர்கள் யாரென்றால் அவர்கள் அனைவரும் இன்றும் இருக்கும் காஷ்மீரத்து பண்டிட்டுகள் மட்டுமே. இன்றைய தேதியில் மதமாற்றம் போல் பண்டைய காலத்தில் இன்றைய பார்பனர்களில் பெரும்பகுதி திராவிடர்களில் இருந்து பார்பனர்களாக 'இனம்' மாறியவர்களே. காஷ்மீரத்து பண்டிட்டுகளின் முகம், மூக்கு, உடல், நிறம் ஜெர்மானியர்களை அல்லது ஐரோப்பியர்களை ஒத்தே இருக்கிறது, தென்னிந்திய பார்பனர்கள் மற்றும் ஏனைய முன்னாள் திராவிட இன்னாள் பார்பனர்களுக்கு உடல் ஐரோப்பியர்கள் போல் இருப்பதில்லை, முன்னாள் திராவிடர்களான இன்னாள் பார்பனர்கள் யாரும் கைபர் போலன் கனவாய் வழி வந்தவர்கள் அல்ல
கேள்வியே....பார்பனர்கள் ஆரியர்களா.... இல்லை யூதர்களா ? என்று இருக்க வேண்டும்.
கேள்விக்கு வருவோம்... 'ஆரியர்கள் ஜெர்மானியர்களே' என்றே பார்பனரான ஆவி மதன் தனது 'வந்தார்கள் வென்றார்கள்...' தொடரில் எழுதி இருக்கிறார். அதாவது ஆரியர்கள் அனைவரும் ஹிட்லர் வம்சம். அப்படி கைபர் போலன் வழியாக வந்த ஒர்ஜினல் ஆரியர்களில் மொழி பிராகிரதம் எனப்படும் வடமொழியின் முதல் வடிவம், அதன் ஒலிப்பு மற்றும் இலக்கணம் கிரேக்கம், லத்தீனம், ஜெர்மானியம் ஆகிய ஐரோப்பிய மொழிகளை ஒத்தது. சமஸ்கிரதத்தில், மாதா = மதர், பிதர்/பித்ரு = பாதர், பிராகிரதம் எழுத்தில்லாத மொழியாகவே இருந்தது, தென்னிந்தியாவில் குறிப்பாக காஞ்சிபுரத்தில் தான் சமஸ்கிரத்திற்கான இன்றைய எழுத்துவடிவம் கிருந்த எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு, பின்னரே வேதங்கள் எழுத்தில் வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சமஸ்கிரத்திற்கு எழுத்துக்கள் வந்த காலத்தில் ஒரிஜினல் ஆரியர் (பார்பனர்) மற்றும் முன்னாள் திராவிடர்களாக இருந்து ஆரிய இனமாக தங்களை மாற்றிக் கொண்ட இன்றைய பார்பனர்கள் பலரும் ஒரே பார்பனர்களாக ஆகி இருந்தனர். பண்டைய இந்தியாவில் பாலி, பிராகிரதம் மற்றும் ஆதித்தமிழ் ஆகிய மொழிகளே இருந்தன. இவற்றில் பாலி, சமஸ்கிரதமும் முற்றிலும் பேச்சு வழக்கில் இருந்து மறைந்து வடமாநில வட்டார மொழிகளாக திரிந்தது, ஆதித்தமிழ் திராவிட மொழிகளாக திரிந்தது.
பண்டைய இந்தியாவில் வடக்கில் பெருமளவு ஐம்பூத வணக்கமும், தெற்கில் நிலப்பிரிவு படி ஐந்து நிலத்தில் (குறிஞ்சு முதல் பாலை வரை) தனித்தனியான கடவுளை வணங்கினர்.
நான்கு வேதங்களான ஒரிஜினல் ஆரியர்களின் இருக்கு, யஜூர், சாம, அதர்வான வேதங்களுக்கும், இந்திய சமயங்களுக்கும் அவ்வளவு தொடர்ப்பு இல்லை, பின்னாளில் தொடர்ப்பு ஒட்டவைக்கப்பட்டது. நான்கு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகங்கள் ஆரியர்கள் திராவிடர்களை வெற்றிக் கொண்ட கதைதான். அரசன் பெயராக இந்திரன், கண்ணன் போன்றோரின் பெயர் சொல்லப்பட்டுள்ளது, கண்ணன் ஆயர் குலத்தோன், ஆரிய குலத்திற்கு நண்பன் என்று வேதங்களில் சொல்லப்படுகிறது. வெகு பிற்காலத்தில் இருக்கு வேத கண்ணனும், திராவிட மருத நில மாலும் ஒன்றாக்கினர், அதுபோல் வேதகாலத்தில் இருந்த சங்கரன் என்கிற ஏவல் தெய்வமும், தமிழக (சைவ) சிவனும் ஒன்றென சொல்லிவைத்தனர். வடக்கில் இருந்த குமர குருபரனே தெற்கின் முருகன் அல்லது சேயோன் என்று சொல்லிவைத்தனர். இவற்றையெல்லாம் ஒட்ட வைத்தில் பெரும்பங்காற்றியது கந்தபுராணம்.
*****
இன்றைய தேதியில் "பிராமணர்" என்கிற தகுதியாருக்கும் இல்லை, எனவே ஆரியர்கள் எவராக இருந்தாலும் பார்பனர் என்று சொல்லலாம். பிரமணர் என்று சொன்னால் பிராமணர் அல்லாதோர் அதாவது சூத்திரர் என்று ஒரு சமூகத்தையும் நீங்கள் ஒப்புக் கொள்வதாக பொருள், சாதிகள் பிறப்பு அடிப்படை என்று ஆகிவிட்ட பொழுது 'பிராமணர், வைசியர், சத்திரியர், சூத்திரர்' என்கிற தகுதியடைப்படைச் சொற்கள் எவருக்குமே பொருந்தது.
**********
ஒருவரை பிராமணர் என்ற சொல்லத் தகுதியானவை:
யார்தான் பிராமணன்? எவனொருவன் இரண்டற்றதும், பிறவி, குணம், தொழில் என்பவை இல்லாததும், உள்ளும் புறமும் ஆகாசம் போலக் கலந்திருப்பதும் அளவிடக் கூடாததும், அனுபவத்தால் உணரத்தக்கதுமாகிய இறுதிப் பொருளை நேருக்கு நேராகத் தெரிந்து காமம், குரோதம் முதலிய குற்றங்களல்லாதவனாய், பாபம், மாற்சரியம், விருப்பம், ஆசை, மோகம் முதலியவை நீங்கியவனாய், ஆடம்பரம், அகங்காரம் முதலியவை பொருந்தாத நெஞ்சமுடையவனாய் இருக்கின்றானோ இங்ஙனம் கூறப்பட்ட இலக்கணமுடையவனே பிராமணனென்பது சுருதி ஸ்மிருதி புராண இதிகாசம் என்பவற்றின் அபிப்ராயமாகும்.'
இதன் படி பார்த்தால் பிராமணன் என்று நாம் தற்போது அறிந்தவர்களில் யாருமே இல்லை. நம்மிடமிருந்து மறைந்து வாழ்கிறார்களோ என்னவோ? :-)
- நன்றி நண்பர் குமரன்
பிராமணர் என்கிற சொல்லுக்கான தகுதி ஒருவருக்கும் இல்லை, அனைவருமே சூத்திரன் என்ற சொல்லுக்கு இருக்கும் தகுதியில் தான் இருக்கின்றனர். நான் பார்பனர்களை மட்டுமே சொல்லவில்லை, இன்றைய தேதியில் பார்பனர் உட்பட நான் ஷத்திரியன் என்று மார்தட்டும் அனைத்து சாதிகளும் சூத்திரன் என்ற தகுதியில் தான் இருக்கின்றனர். ஒருவரை பார்பனர் என்று அறிந்து நீங்கள் அவரை பிராமணர் என்று சொல்வது, அழைப்பது மறைமுகமாக உங்களை நீங்களே சூத்திரன் என்று சொல்வதாக, ஒப்புக் கொள்வதாக பொருள்.
பார்பனர்களுக்கு பிறவி குணம் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, பார்பனீயம் என்ற கட்டமைப்பில், சூழலில் வளர்வதால் அந்த குணம் அவர்களுக்கு இருக்கிறது. மற்றபடி எந்த சாதியினர் வீட்டுக் குழந்தையும் பார்பனர் வீட்டில் வளர்ந்தால் பார்பன குணத்துடன் தான் வளரும், இது பிற சாதிவிட்டில் வளர்க்கப்படும் பார்பன குழந்தைக்கும் பொருந்தும். சிங்கையில் தமிழர்கள் வீட்டில் வளர்ந்த சீனர்கள் தமிழர்களைப் போல் பண்பாடும் நாகரீகமும், தமிழ் பேச்சும் உள்ளவர்களாகவே உள்ளனர்
பதிவர்:
கோவி.கண்ணன்
at
12/18/2008 09:29:00 AM
தொகுப்பு :
கட்டுரைகள்,
சமூகம்,
விவாத மேடை
13
கருத்துக்கள்
18 செப்டம்பர், 2008
பொது நலவழக்குத் தொடுக்க யாராவது முன் வரவேண்டும் !
//தாழ்த்தப்பட்ட 18 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் அந்த சமுதாய மக்கள் முன்னேற்றம் அடையவில்லை. இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாறி போனாலும் அவர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்து சலுகை வழங்க வேண்டும் என்று ரங்கநாதன் மிஸ்ரா அறிக்கை தந்துள்ளது.
இதை அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் சட்ட மசோதாவாக கொண்டு வர முயற்சி நடக்கிறது. இதனால் இந்து ஹரிஜன மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை அறியாமல் அவர்கள் சில மத ஊர்வலங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
எனவே மதம் மாறியவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க கூடாது என்று டெல்லியில் 21ம் தேதி பாஜக தாழ்த்தப்பட்டோர் அணி சார்பில் பேரணி நடைபெறுகிறது.
மேலும் இந்து ஹரிஜன மக்கள் மத்தியில் விழிப்புணர்வு யாத்திரையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.//
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறித்துவர்களுக்கான இட பங்கீடு குறித்து முன்பே எழுதி இருந்தேன்.
மதம் மாறும் தாழ்த்தப்பட்டவர்களை பிற்பட்டவராக அறிவிக்கிறது இந்திய அரசியல் சட்டம். இது எந்த வகையில் ஞாயம் என்பது தெரியவில்லை.
ஒரு சாதியின் சமூக நிலையை வைத்தே இட ஒதுக்கீட்டிற்குள் அந்த சாதி குறிப்பிட்ட பிரிவுக்குள் வருகிறது.
மதமாற்றம் ஒருவரின் சமுக நிலையை அடுத்த நாளே மாற்றிவிடுகிறது என்பது வெறும் மத விளம்பரங்கள் தான், தலித்துகள் மதம் மாறிய பிறகும் தலித்துகளாகவே நடத்தப்படுவதுதான் கொடுமையே. அவர்கள் எதை நம்பி மதம் மாறினார்களோ அதன் பயனை அடைந்தவர்கள் என்பது விழுக்காட்டு அளவில் மிக மிகக் குறைவே. சாதிவெறி என்பது கிறித்துவ மதத்தில் இருக்கிறது என்பதை கிறித்துவர்களே ஒப்புக் கொண்ட விசயம் தான். நான் அறிந்த வகையில் தங்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை மறுக்கப்படும் என்பதற்காகவே இந்து மத வழிபாடுகளில் இருந்து கிறித்துவ வழிபாட்டுக்கு மாறினாலும் இந்துவாகவே சர்டிபிகேட் அளவில் தொடர்பவர்கள் உள்ளனர். அவர்கள் இட பங்கீட்டு சலுகைகளையும் அனுபவத்தே வருகிறார்கள். இந்த யோசனை இல்லாத பல தலித் கிறித்துவர்கள் உரிமையை இழந்து 50 ஆண்டுகளாகப் போராடியே வருகிறார்கள். அவர்களுக்கும் கொடுப்போம் என்ற வாக்குறுதி தேர்தல் காலங்களோடு நிற்கிறது.
மதம் மாறினால் சமூக பொருளாதாரம் மாறும் என்று எந்த மதமாவது எழுத்தளவில் இந்திய அரசுக்கு ஆவணங்கள் வழங்கியுள்ளதா ?
எதன் அடிப்படையில் தலித் கிறித்துவர்கள் பிற்பட்டவர் பிரிவுக்கு தள்ளிவிடப் படுகின்றனர் ? தனக்கு பிடித்த மதத்துக்கு ஒருவர் மாறுவதற்கும் அவரது சமூக, பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு ?
மதம் மாறுவது சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது அதனால் தான் தலித் கிறித்துவர்களை பிற்பட்டோருக்கு மாற்றுகிறோம் என்று அரசாங்கம் சொல்ல முடிந்தால்... அனைத்து தலித் பெருமக்களையும் கிறித்துவ மதத்திற்கு மாறச் சொல்லி அரசாங்கமே சிபாரிசு செய்து, இட ஒதுக்கீட்டு தலைவலிகளை குறைத்துக் கொள்ளலாமே...ஏன் செய்வது இல்லை ?
இந்த கேள்விகளை வைத்து தலித் கிறித்துவர்கள், அல்லது அவர்கள் சார்பில் யாராவது வழக்கு தொடர்ந்தால் அரசாங்கத்தின் மவுனம் கலையும்.
தற்போதுள்ள நடைமுறை அதாவது, 'மதச்சார்பற்று நடந்து கொள்வோம்' என்று உறுதி எடுத்துக் கொண்ட அரசாங்கத்தின் செயல், இந்து தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் தான் இடப்பங்கீடு என்பது இந்து மதத்தின் மக்கள் தொகையைக் கட்டிக் காக்கும் கேடயமாகவே இருக்கிறது என்று யாரும் குற்றம் சாட்டினால் இந்திய அரசாங்கம் என்ன பதில் அளிக்கும் ?
பொருளாதாரத்திலும் சமூகத்திலும் நசுக்கப்பட்டுள்ள தலித் கிறித்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் எதிராக போராடும் உரிமை அதே போன்ற நிலையில் இருக்கும் இந்து தலித் அமைப்புகளுக்குக் கூட கிடையாது என்றே நினைக்கிறேன். வேண்டுமென்றால் இந்து தலித் அமைப்புகள், கிறித்துவ தலித் மக்களுக்கும் சேர்த்தே இட ஒதுக்கீட்டு அளவை கூடுதலாக்கச் சொல்லி கோரிக்கை வைத்து போராடுவது தான் சிறந்த வழி.
********
1. தாழ்த்தப்பட்ட 18 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் அந்த சமுதாய மக்கள் முன்னேற்றம் அடையவில்லை - இல.கனேசன்
தகவலுக்கு நன்றி ! அப்படியென்றால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் எப்போதும் கைவைக்காமல் முன்னேற்றம் அடையும் வரையில் அப்படியே தொடரலாம்.
2. இதனால் இந்து ஹரிஜன மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை அறியாமல் அவர்கள் சில மத ஊர்வலங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள். - இல.கனேசன்
என்ன ஒரு கரிசனம் - சிலிர்க்கிறது ! இப்போதாவது தெரிகிறதா ? இந்து தாழ்த்தப்பட்டவராக தொடர சம்மதம் தெரிவித்தால் வெகுமதியாக இட ஒதுக்கீடு கொடுக்கலாம், என்பதை இவ்வளவு கரிசனமாக, அழகாகச் சொல்ல முடியுமா ?
3. மதம் மாறிய தலித்துகளை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கூடாது என பாஜக கூறியுள்ளது.
அவர்களைத்தான் நாங்கள் தாழ்த்த முடியாதே பிறகு எப்படி தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லமுடியும் என்பதைத்தான் சொல்லமுடியாமல் சொல்கிறார்கள் போலும்.
சுட்டிகள் :
வருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு... !
இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !
தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமையாம்...!
மதமாற்றமா ? மனமற்றமா ?
இதை அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் சட்ட மசோதாவாக கொண்டு வர முயற்சி நடக்கிறது. இதனால் இந்து ஹரிஜன மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை அறியாமல் அவர்கள் சில மத ஊர்வலங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
எனவே மதம் மாறியவர்களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க கூடாது என்று டெல்லியில் 21ம் தேதி பாஜக தாழ்த்தப்பட்டோர் அணி சார்பில் பேரணி நடைபெறுகிறது.
மேலும் இந்து ஹரிஜன மக்கள் மத்தியில் விழிப்புணர்வு யாத்திரையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.//
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கிறித்துவர்களுக்கான இட பங்கீடு குறித்து முன்பே எழுதி இருந்தேன்.
மதம் மாறும் தாழ்த்தப்பட்டவர்களை பிற்பட்டவராக அறிவிக்கிறது இந்திய அரசியல் சட்டம். இது எந்த வகையில் ஞாயம் என்பது தெரியவில்லை.
ஒரு சாதியின் சமூக நிலையை வைத்தே இட ஒதுக்கீட்டிற்குள் அந்த சாதி குறிப்பிட்ட பிரிவுக்குள் வருகிறது.
மதமாற்றம் ஒருவரின் சமுக நிலையை அடுத்த நாளே மாற்றிவிடுகிறது என்பது வெறும் மத விளம்பரங்கள் தான், தலித்துகள் மதம் மாறிய பிறகும் தலித்துகளாகவே நடத்தப்படுவதுதான் கொடுமையே. அவர்கள் எதை நம்பி மதம் மாறினார்களோ அதன் பயனை அடைந்தவர்கள் என்பது விழுக்காட்டு அளவில் மிக மிகக் குறைவே. சாதிவெறி என்பது கிறித்துவ மதத்தில் இருக்கிறது என்பதை கிறித்துவர்களே ஒப்புக் கொண்ட விசயம் தான். நான் அறிந்த வகையில் தங்களுக்கான இட ஒதுக்கீட்டு உரிமை மறுக்கப்படும் என்பதற்காகவே இந்து மத வழிபாடுகளில் இருந்து கிறித்துவ வழிபாட்டுக்கு மாறினாலும் இந்துவாகவே சர்டிபிகேட் அளவில் தொடர்பவர்கள் உள்ளனர். அவர்கள் இட பங்கீட்டு சலுகைகளையும் அனுபவத்தே வருகிறார்கள். இந்த யோசனை இல்லாத பல தலித் கிறித்துவர்கள் உரிமையை இழந்து 50 ஆண்டுகளாகப் போராடியே வருகிறார்கள். அவர்களுக்கும் கொடுப்போம் என்ற வாக்குறுதி தேர்தல் காலங்களோடு நிற்கிறது.
மதம் மாறினால் சமூக பொருளாதாரம் மாறும் என்று எந்த மதமாவது எழுத்தளவில் இந்திய அரசுக்கு ஆவணங்கள் வழங்கியுள்ளதா ?
எதன் அடிப்படையில் தலித் கிறித்துவர்கள் பிற்பட்டவர் பிரிவுக்கு தள்ளிவிடப் படுகின்றனர் ? தனக்கு பிடித்த மதத்துக்கு ஒருவர் மாறுவதற்கும் அவரது சமூக, பொருளாதாரத்திற்கும் என்ன தொடர்பு ?
மதம் மாறுவது சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துகிறது அதனால் தான் தலித் கிறித்துவர்களை பிற்பட்டோருக்கு மாற்றுகிறோம் என்று அரசாங்கம் சொல்ல முடிந்தால்... அனைத்து தலித் பெருமக்களையும் கிறித்துவ மதத்திற்கு மாறச் சொல்லி அரசாங்கமே சிபாரிசு செய்து, இட ஒதுக்கீட்டு தலைவலிகளை குறைத்துக் கொள்ளலாமே...ஏன் செய்வது இல்லை ?
இந்த கேள்விகளை வைத்து தலித் கிறித்துவர்கள், அல்லது அவர்கள் சார்பில் யாராவது வழக்கு தொடர்ந்தால் அரசாங்கத்தின் மவுனம் கலையும்.
தற்போதுள்ள நடைமுறை அதாவது, 'மதச்சார்பற்று நடந்து கொள்வோம்' என்று உறுதி எடுத்துக் கொண்ட அரசாங்கத்தின் செயல், இந்து தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் தான் இடப்பங்கீடு என்பது இந்து மதத்தின் மக்கள் தொகையைக் கட்டிக் காக்கும் கேடயமாகவே இருக்கிறது என்று யாரும் குற்றம் சாட்டினால் இந்திய அரசாங்கம் என்ன பதில் அளிக்கும் ?
பொருளாதாரத்திலும் சமூகத்திலும் நசுக்கப்பட்டுள்ள தலித் கிறித்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் எதிராக போராடும் உரிமை அதே போன்ற நிலையில் இருக்கும் இந்து தலித் அமைப்புகளுக்குக் கூட கிடையாது என்றே நினைக்கிறேன். வேண்டுமென்றால் இந்து தலித் அமைப்புகள், கிறித்துவ தலித் மக்களுக்கும் சேர்த்தே இட ஒதுக்கீட்டு அளவை கூடுதலாக்கச் சொல்லி கோரிக்கை வைத்து போராடுவது தான் சிறந்த வழி.
********
1. தாழ்த்தப்பட்ட 18 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும் அந்த சமுதாய மக்கள் முன்னேற்றம் அடையவில்லை - இல.கனேசன்
தகவலுக்கு நன்றி ! அப்படியென்றால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் எப்போதும் கைவைக்காமல் முன்னேற்றம் அடையும் வரையில் அப்படியே தொடரலாம்.
2. இதனால் இந்து ஹரிஜன மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதை அறியாமல் அவர்கள் சில மத ஊர்வலங்களில் கலந்து கொண்டு வருகிறார்கள். - இல.கனேசன்
என்ன ஒரு கரிசனம் - சிலிர்க்கிறது ! இப்போதாவது தெரிகிறதா ? இந்து தாழ்த்தப்பட்டவராக தொடர சம்மதம் தெரிவித்தால் வெகுமதியாக இட ஒதுக்கீடு கொடுக்கலாம், என்பதை இவ்வளவு கரிசனமாக, அழகாகச் சொல்ல முடியுமா ?
3. மதம் மாறிய தலித்துகளை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கூடாது என பாஜக கூறியுள்ளது.
அவர்களைத்தான் நாங்கள் தாழ்த்த முடியாதே பிறகு எப்படி தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லமுடியும் என்பதைத்தான் சொல்லமுடியாமல் சொல்கிறார்கள் போலும்.
சுட்டிகள் :
வருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு... !
இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !
தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமையாம்...!
மதமாற்றமா ? மனமற்றமா ?
பதிவர்:
கோவி.கண்ணன்
at
9/18/2008 11:29:00 PM
தொகுப்பு :
எதிர்வினை,
கட்டுரைகள்,
சமூகம்,
சாதி,
விவாத மேடை
21
கருத்துக்கள்
5 ஜூன், 2008
அன்றாடம் காய்ச்சும் அர்சகர்களுக்கு சென்னை அண்ணா நகரில் 50 லட்சம் மதிப்புள்ள வீடு... !
முகச்சவரத்திற்கு சென்று ரூபாய் 1000/- கொடுத்ததையும், மேலும் டிப்ஸ் கொடுத்ததைப் பற்றியும் ஒரு இடுகை எழுதி இருந்தேன். அதற்கு எதிர்வினை போல பதிவர் டோண்டு இராகவன் ஒரு பதிவிட்டு இருந்தார். டிப்ஸ் கொடுப்பது பிச்சைக்காரர்கள் ஆக்குகிறதாம்.. அவர் சொன்னது ஓரளவுக்குச் சரிதான் என்றாலும், எனது கேள்வியாக 'கோவிலுக்கு உள்ளே கெஞ்சாத குறையாக வாங்கப்படும் தட்டுகளில் பெறப்படும் டிப்ஸ் பற்றி என்ன நினனக்கிறீர்கள் ?' என்றேன். அதற்கு மழுப்பலான பதிலே வந்திருக்கிறது. அர்சகர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுக்கிறார்களாம். அரசு பிச்சைக்காரனாக ஆகிவிட்டதாம், புள்ளி விபரமெல்லாம் சொல்லி இருக்கிறார்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் எந்த அர்சகரும் குடிசையில் வசிக்கவில்லை. மொபட்டில்லாத அர்சகரே சென்னையில் இல்லை. சிறு நகரங்களில் தான் சைக்கிளில் வந்து போகும் அர்சகர்களை பார்த்து இருக்கிறேன். மேலே முகச் சவரம் சென்று வந்த தகவலுடன் கூடுதலாக ஒரு தகவல், முகச்சவரம் செய்துவிட்டு அதே அண்ணா நகரில் பைக்கில் வந்த போது என் நண்பர் ஒரு ப்ளாட் வீட்டைக்காட்டினான், 'இதோ பார்...இந்த வீட்டில் தான் எங்க வீட்டுக்கு புதுமனை புதுவிழாவுக்கு பூஜை செய்ய வந்த அர்சகர் வசிக்கிறார், சொந்த வீடாம்.. ஒரு விசிட்டுக்கு 2000 முதல் 5 ஆயிரம் வாங்குவார்...அடுத்த இடத்தில் அப்பாய்ன்மெண்ட் இருக்குன்னு சட்டுன்னு கிளம்புவார்...மாசத்துக்கு எப்படியும் 20 வீட்டிலாவது அவரை கூப்பிடுவார்கள், எதோ ஒரு கோவிலில் வேறு அர்சகராக இருக்கிறாராம்', எனக்கு சட்டென்று 'பேசமல் இதுநம்மாளு படத்தில் வருவது போல் ஒரு பூணூல் தயார் செய்து தொழிலை மாற்றிக் கொள்ளலாமா ?' என்று சலனம் கூட ஏற்பட்டது.
அதில் எனதருமை வீஎஸ்கே ஐயா, போட்டிருக்கும் பின்னூட்டம் உண்மையிலேயே சிரிப்பை வரவழைக்கிறது,
*************
"தட்டில் காசு போடவில்லையென்று எந்த அர்ச்சகரும் விபூதி குங்குமம் கொடுக்க மறுப்பதில்லை.
இது ஒரு திசை திருப்பும் முயற்சி.
இந்த அழகில் ஆதரவு ஓட்டு வேறு.
அநியாயமாகப் பணம் பிடுங்கும் சவரக்கடைத் தொழிலாளியும், அன்றாடங்காய்ச்சி அர்ச்சகரும் ஒன்றா?"
*************
- என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஐயா, அர்சகரும் நாவிதரும் ஒன்று இல்லை என்று தானே காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்,
எடுப்பது பிச்சை என்றாலும், பெருமாள் கோவில் எடுத்தால் அதற்கு பெயர் ஈகையா ?
தட்டில் காசு போடாவிட்டாலும் விபூதி கொடுப்பார்கள், 1000 ரூபாய் நோட்டைப் போடுங்கள், கருவரைக்கே அழைத்துச் சென்று மாலை போட்டு, பரிவட்டம் கட்டி அனுப்புவார்கள். காசுக்கு தகுந்த வேலை என்று நாவிதர்களும் அதே போன்று தரமான சேவை செய்கிறார்கள். இதில் அர்சகர் என்ன ? நாவிதன் என்ன ?
சென்னை மாநகரில் ப்ளாட்பாரம் பக்கத்தில், பாலத்திற்கு அடியில், கூவம் நதிக்கரையில் வசிக்கும் ஏழை அர்சகர் எவரும் இருந்தால் காட்டுங்கள் அன்றாடம் 'காய்ச்சும்' அர்சகரை தெரிந்து கொள்கிறேன். அன்றாடம் காய்ச்சும் அர்சகர்கள் எனக்கு தெரிந்து மடப்பள்ளியில் புளியோதரைக்கு புளிக்காய்ச்சுபவர்களாகத்தான் இருக்கிறார்களே அன்றி வேறு எதைக் காய்ச்சுகிறார்கள் என்று தெரியவில்லை. அர்சகர்வீட்டில் கஞ்சு காய்ச்சுக் குடித்ததாகக் கூட நான் கேள்விப்பட்டதில்லை.
ஒரு பழமொழி உண்டு....
'பறையர்களில் பரம்பரை பணக்காரர்கள் இல்லை...பார்பனர்களில் பரம ஏழைகள் இல்லை'
கொஞ்சம் கொஞ்சம் தவறினாலும் பழமொழியில் 90 விழுக்காடு சரிதான்
அர்சகருக்கு கொடுப்பது காணிக்கையாம்...நாவிதருக்கு கொடுப்பது டிப்ஸாம்...பிச்சையாம்.. கேட்பதற்கு ஆண்டவன் இல்லை என்ற நாத்திக அவ நம்பிக்கைதான் போலும் !
:)
அதே முகச்சவரம் மற்றும் உடம்பு பிடி ... லேசாக தலைமுடி வெட்டல் ... முகத்துக்கு பவுடர் எல்லாம் போட்டு வெறும் 13 ரூபாய் தான் எங்கள் ஊர் சலூனில் வாங்கினார்கள். நானே விரும்பி கூடுதலாகவே அங்கும் கொடுத்தேன்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் எந்த அர்சகரும் குடிசையில் வசிக்கவில்லை. மொபட்டில்லாத அர்சகரே சென்னையில் இல்லை. சிறு நகரங்களில் தான் சைக்கிளில் வந்து போகும் அர்சகர்களை பார்த்து இருக்கிறேன். மேலே முகச் சவரம் சென்று வந்த தகவலுடன் கூடுதலாக ஒரு தகவல், முகச்சவரம் செய்துவிட்டு அதே அண்ணா நகரில் பைக்கில் வந்த போது என் நண்பர் ஒரு ப்ளாட் வீட்டைக்காட்டினான், 'இதோ பார்...இந்த வீட்டில் தான் எங்க வீட்டுக்கு புதுமனை புதுவிழாவுக்கு பூஜை செய்ய வந்த அர்சகர் வசிக்கிறார், சொந்த வீடாம்.. ஒரு விசிட்டுக்கு 2000 முதல் 5 ஆயிரம் வாங்குவார்...அடுத்த இடத்தில் அப்பாய்ன்மெண்ட் இருக்குன்னு சட்டுன்னு கிளம்புவார்...மாசத்துக்கு எப்படியும் 20 வீட்டிலாவது அவரை கூப்பிடுவார்கள், எதோ ஒரு கோவிலில் வேறு அர்சகராக இருக்கிறாராம்', எனக்கு சட்டென்று 'பேசமல் இதுநம்மாளு படத்தில் வருவது போல் ஒரு பூணூல் தயார் செய்து தொழிலை மாற்றிக் கொள்ளலாமா ?' என்று சலனம் கூட ஏற்பட்டது.
அதில் எனதருமை வீஎஸ்கே ஐயா, போட்டிருக்கும் பின்னூட்டம் உண்மையிலேயே சிரிப்பை வரவழைக்கிறது,
*************
"தட்டில் காசு போடவில்லையென்று எந்த அர்ச்சகரும் விபூதி குங்குமம் கொடுக்க மறுப்பதில்லை.
இது ஒரு திசை திருப்பும் முயற்சி.
இந்த அழகில் ஆதரவு ஓட்டு வேறு.
அநியாயமாகப் பணம் பிடுங்கும் சவரக்கடைத் தொழிலாளியும், அன்றாடங்காய்ச்சி அர்ச்சகரும் ஒன்றா?"
*************
- என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஐயா, அர்சகரும் நாவிதரும் ஒன்று இல்லை என்று தானே காலம் காலமாக சொல்லி வருகிறார்கள்,
எடுப்பது பிச்சை என்றாலும், பெருமாள் கோவில் எடுத்தால் அதற்கு பெயர் ஈகையா ?
தட்டில் காசு போடாவிட்டாலும் விபூதி கொடுப்பார்கள், 1000 ரூபாய் நோட்டைப் போடுங்கள், கருவரைக்கே அழைத்துச் சென்று மாலை போட்டு, பரிவட்டம் கட்டி அனுப்புவார்கள். காசுக்கு தகுந்த வேலை என்று நாவிதர்களும் அதே போன்று தரமான சேவை செய்கிறார்கள். இதில் அர்சகர் என்ன ? நாவிதன் என்ன ?
சென்னை மாநகரில் ப்ளாட்பாரம் பக்கத்தில், பாலத்திற்கு அடியில், கூவம் நதிக்கரையில் வசிக்கும் ஏழை அர்சகர் எவரும் இருந்தால் காட்டுங்கள் அன்றாடம் 'காய்ச்சும்' அர்சகரை தெரிந்து கொள்கிறேன். அன்றாடம் காய்ச்சும் அர்சகர்கள் எனக்கு தெரிந்து மடப்பள்ளியில் புளியோதரைக்கு புளிக்காய்ச்சுபவர்களாகத்தான் இருக்கிறார்களே அன்றி வேறு எதைக் காய்ச்சுகிறார்கள் என்று தெரியவில்லை. அர்சகர்வீட்டில் கஞ்சு காய்ச்சுக் குடித்ததாகக் கூட நான் கேள்விப்பட்டதில்லை.
ஒரு பழமொழி உண்டு....
'பறையர்களில் பரம்பரை பணக்காரர்கள் இல்லை...பார்பனர்களில் பரம ஏழைகள் இல்லை'
கொஞ்சம் கொஞ்சம் தவறினாலும் பழமொழியில் 90 விழுக்காடு சரிதான்
அர்சகருக்கு கொடுப்பது காணிக்கையாம்...நாவிதருக்கு கொடுப்பது டிப்ஸாம்...பிச்சையாம்.. கேட்பதற்கு ஆண்டவன் இல்லை என்ற நாத்திக அவ நம்பிக்கைதான் போலும் !
:)
அதே முகச்சவரம் மற்றும் உடம்பு பிடி ... லேசாக தலைமுடி வெட்டல் ... முகத்துக்கு பவுடர் எல்லாம் போட்டு வெறும் 13 ரூபாய் தான் எங்கள் ஊர் சலூனில் வாங்கினார்கள். நானே விரும்பி கூடுதலாகவே அங்கும் கொடுத்தேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்