பின்பற்றுபவர்கள்

31 ஜனவரி, 2011

தாமரையின் மீது திடீர் மீது பாசம் கொண்ட உபிகள் !

மேயிர மாட்டுக்கு நக்குற மாடு இளப்பம் என்பார்கள், அதைவிடுங்க, காலில் விழுவதற்கும் காலை நக்குவதற்கும் எதாவது வேறுபாடு இருக்கிறதா ? வேண்டுமானால் மாகாத்மா காந்தி கூட வெள்ளைக்காரனின் காலணியை நக்கப் பணிக்கப்பட்டார், அதானால் காலை நக்குவது இளிவானது அல்ல, காலில் விழுவது தான் இழிவு என்று விளக்கம் கொடுக்கலாம். அம்மா காலில் விழும் அதிமுக தொண்டர்கள் இருப்பது போலவே கருணாநிதிக்கு காலை நக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். இதுல யார் சிறந்த விசுவாசி என்று எப்படிச் சொல்ல முடியும் ? வளர்பவனுக்காக குலைக்கும் நாயும், வளர்பவனுக்காக கடிக்கும் நாயும் ஒன்று தானே. இதில் உசத்தி என்று எதைச் சொல்வது ?

******

சீமானின் சமூக / அரசியல் ரீதியான வளர்ச்சியைப் பற்றிக் கேட்டால், சீமான் ஒரு வெத்து வேட்டு, பெரிதாக தொண்டர்கள் இல்லை, எங்களை எதிர்த்து ஒண்ணும் புடுங்க முடியாது என்று தான் பாராளுமன்ற தேர்தலின் போது உபி களால் சீமான் பற்றி கருத்துக் கூறமுடிந்தது. அதே 'தேச துரோகம் செய்துவிட்டார்' என்று அடைக்கப்பட்ட சீமான் சிறையில் இருந்து வந்த பிறகு கருணாநிதியை வீழ்த்த ஜெ - வை ஆதரிப்போம் என்று சொன்னதும், 'தன்மான சீமான் போயாஸ் தோட்டத்து அடிமை ஆனார், சீமானை நம்பியவர்களுக்கு பட்டை நாமம், சீமான் ஆதரவாளர்களே உங்கள் நிலை அந்தோ பரிதாபம்' என்றார்கள்.

சென்றவாரம் கவிஞர் தாமரை ஜெ - கருணாநிதியை ஒப்பிட்டு இரண்டுமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் தான் எதற்கும் ஜெ வை ஆதரிக்கும் முடிவை மறுபரீசிலனை செய்யவும் என்று இருந்தது, தாமரையின் கடிதத்தில் எள்ளளவும் கருணாநிதிக்கான ஆதரவு என்று எதுவும் இல்லை, கிட்டதட்ட முத்துக்குமார் கடிதம் போன்று சற்று நிதானத்துடன் எழுதப்பட்டதே தாமரையின் கடிதம். தாமரையின் கடிதத்தை உபி கண்ணாபின்னாவென்று வழிமொழிந்தார்கள். தாமரையின் கடிதம் பற்றி எனது கருத்து என்னவென்றால், இது தேர்தல் நேரம், ஜெ-வையோ, கருணாநிதியையோ அரசியலை விட்டே அனுப்பும் சக்தி உடைய மூன்றாம் தலைவர்கள் யாருமே இல்லை. எனவே தற்போதைய சூழலில் தமிழின எதிர்பாக தொடரும் ஆட்சியை அகற்றவேண்டும் என்பதே முதன்மையான இலக்கு, எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற ரீதியில் தான் சீமானின் ஆதரவு அமைந்திருக்கிறது. ஒருவேளை ஜெ வெற்றிபெற்றால் ராஜபக்சேவிடம் (திருமா, கனிமொழி போன்று) விருந்து சாப்பிடப் போவாரா இல்லையா என்பதெல்லாம் பின்னால் நடைபெறுவது, அந்த நேரத்தில் எது போன்று நடந்து கொள்ளவேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்ள முடியும். இன்னும் சொல்லப் போனால் தன்னை சிறையில் அடைத்தவருக்கே ஓட்டு கேட்ட வைகோ போன்ற நிலை சீமானுக்கு இல்லை.

கருணாநிதி எதிர்பாளர்கள் ஜெவின் ஆதரவாளர்களாகவோ, சீமானின் ஆதரவாளர்களாகவோ இல்லாத சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜெ விற்கு தான் வாக்களித்தனர், அந்த வாக்கு கூட 'ஜெ திடிர் ஈழத்தாயானார்' என்பதற்காக அல்ல, காங்கிரசுக்கும் திமுகவிற்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நிலையை தற்போது தான் சீமான் வெளிப்படையாக அறிவித்து எடுத்திருக்கிறார். எனவே ஆளும் கட்சிக்கான எதிர்ப்பு வாக்கு என்பது கடந்த பாராளுமன்ற தேர்தல் முதலே துவங்கப்பட்டது, அது சீமான் மூலமாக இன்னும் பலம் பெறுகிறது அவ்வளவே. தமிழர் நலன் கருதும் அனைவரின் நிலைப்பாடும் இதுவே, இதற்கும் சீமானின் நிலைப்பாடுகளுக்கும் தொடர்பே இல்லை, ஒருவேளை சீமான் எந்த முடிவும் எடுக்காவிட்டாலும் ஈழ/ தமிழக மீனவர் ஆதரவு நிலை கொண்டவர்கள் ஜெ - வைத்தான் ஆதரிப்பாளர்கள், அதற்குக்கு காரணம் ஜெ வெற்றிப் பெறவேண்டும் என்கிற நோக்கம் இல்லை, கருணாநிதி ஆட்சி தொடரக் கூடாது என்பதே.

சீமான் மீது உபிகள் பாசம் கொண்டிருந்தார்கள் என்பது சீமான் அதிமுகவை ஆதரிக்கப் போகிறேன் என்று அறிவித்தப் பிறகே தெரிந்தது, அதே போன்று தாமரை மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என்பது தாமரை சீமானுக்கு எதிர்ப்பு கடிதம் எழுதிய போது தெரியவருகிறது. இது தீடிர் பாசமா ? சந்தர்பவாத வேசமா ?

28 ஜனவரி, 2011

செயற்க்கைக் கோளை சனிப் பிடிக்கிறதாம் - நாசா !

என்னக் கொடுமைங்க,

மின்னஞ்சலில் வந்தது.... என்பதாக கூகுள் பஸ்ஸுலும், பேஸ்புக்கிலும் கீழ்கண்ட தகவல் கசிய விடப்படுகிறது.

*********************

செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் - திரு நள்ளாறு சனி பகவான்


இன்று பல நாடுகள் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.அவற்றில் செல்போன் பயன்பாடு,ராணுவ பயன்பாடு,உளவு...என்று பல்வேறு காரணங்களுக்கு செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3வினாடிகள் ஸ்தம்பித்து விடுகிறது.3வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்துவிடுகிறது. எந்த வித பழுதும் செயற்கைக்கோளில்-அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.

இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.இது எப்படி சாத்தியம்?என்பதை ஆராய்ந்தது. கிடைத்த ஆய்வு முடிவு-நாசாவை மட்டுமல்ல..உலகத்தையே மிரள வைத்தது.ஆம்!நமது இந்து மதம் எவ்வளவு விஞ்ஞானபூர்வ மானது என்பதை நமக்கே உணர்த்தியுள்ளது. எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியில்-இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள-புதுச்சேரியின் திருநள்ளாறு- ஸ்ரீதர்ப்பணேசவரர் கோயிலுக்கு நேர் மேலே உள்ள வான்பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள் …தம்பித்துவிடுகின்றன.அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்.. ...ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புல்னாகாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும்-ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக்கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்துவிடுகின்றன.அதே சமயம்,செயற்கைக்கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவென்றால்,இந்தக் கோவில்தான் இந்துக்களால் “சனிபகவான்”…தலம் என்று போற்றப்படுகிறது.ஆக,இந்துக்கள் உலகிலேயே அறிவுத்திறனும்,அறிவியலில் மிக நீண்ட பாரம்பரியமும் கொண்டவர்கள் என்பது இதன் மூலம் புலனாகிறது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு,நாசா விலிருந்து பல முறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்துவிட்டனர்.மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.அவர்களும் திருநள்ளாறு சனிபகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டனர். இன்று வரையிலும்,விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்த்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றிய தகவல்கள் ஜூனியர் விகடனில் 2005 -06 வாக்கில் , வெளிவந்தது. நாம் ஏன் நமது பெருமைகளை நமது சந்ததிகளுக்குச் சொல்லுவது இல்லை..?

**************

மேற்கண்ட மின் அஞ்சலில் நாசா இணையத் தளம் செயற்கைகோள் குறித்து அவ்வாறான அறிக்கைக் கொடுத்ததாக சுட்டிகள் எதுவும் இல்லை. ஜூனியர் விகடன் 2005-2006 வாக்கில் கட்டுரை வெளியிட்டதாக சொன்னதன் பகுதியின் இணைப்பும் இல்லை, இந்த தகவல் 7 ஆண்டுகள் முந்தையது என்றாலும் இந்துத்துவவாதிகளுக்கு தேவையான தகவல் என்பதால் கண்டிப்பாக எடுத்து வைத்திருப்பர் என்பது குறிபிடத் தக்கது. முழுக்க முழுக்க வெறும் வதந்தியைப் பரப்பி திருநள்ளாருக்கு கூட்டம் சேர்க்கும் நோக்கிலும், மதநம்பிக்கையைப் பரப்பும் மலிவான உத்தியுடனும் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதே தகவல் மின் அஞ்சல்வழியாக பரப்பப்படுவதுடன் தமிழ் பார்பனர்கள் நடத்தும் இணையத் தளத்திலும், பார்பனர் உலகம் என்றபெயரில் மற்றொரு இணையத் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது

மத நம்பிக்கைகளுக்கு அறிவியல்சாயம் பூசுவதும் அது களைவதும் புதிதல்ல. மகரவிளக்கு குட்டு வெளிப்பட்டு இருக்கும் இவ்வேளையில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு இது போன்று புதியவத(வா)ந்திகளை பரப்புகிறார்கள்.

இது போன்று மற்றொரு அறிவியல் ஆன்மிகத் தகவல் என்பதாக இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டுத்தலமான மெக்கா உலகத்தின் மையத்தில் இருப்பதாக கட்டுரைகள் எழுதப்படுவதுண்டு. பூமி தட்டையாக இருந்தால் நீள அகலத்தை வைத்து நடுப்பகுதி எது என்றே சொல்ல முடியும், ஆனால் கோள வடிவத்தில் அதுவும் சுழலும் கோள வடிவத்தில் நடுப்பகுதி எது ? அப்படியே கோளத்தின் நடுப்பகுதி எது என்றால் அது சுழற்சி மையமான துருவ பகுதிதானேயன்றி நாடுகள் அமைந்த நிலப்பகுதி அல்ல. இப்படி நடுப்பகுதியில் தான் மெக்கா அமைந்திருக்கிறது என்று நம்பப்பட்டு பரப்பப்பட்டாலும், சென்ற ஆண்டுவரை இந்தோனேசிய இஸ்லாமியர்கள் மெக்கா எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்ற குழப்பத்தில் வேறொரு இடம் நோக்கி தொழ, அதை அல்லா ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்னும் விவாதங்கள் கூட நடந்து முடிவில் தெரியாமல் செய்-தவற்றை அல்லா ஏற்றுக் கொள்வான், தொழுகையின் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த மெக்கா - உலக நடுப்பகுதி நம்பிக்கையை மேலும் வளர்த்துக் கொள்ள இஸ்லாமியர்கள் கிரின்விச் நேரத்திற்கு மாற்றாக மெக்காவை மையப்படுத்தும் நேரங்களுக்கு மாறவேண்டும் என்றும் இஸ்லாமிய அறிவியல் அறிஞர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏசுநாதர் கண்களில் வடியும் ரத்தம் என்று கிளப்பிவிடப்படும் வதந்திகளில் ஒன்றாக அவரின் இரத்தவகையையும் அந்த இரத்ததில் இருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் அறிவித்தனர்.

மிராக்கல் ஆப் அல்லா
மிராக்கல் ஆப் ஜீஸஸ்
மிராக்கல் ஆப் புத்தா
மிராக்கல் ஆப் காத்தவராயன்
என்று இணையத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடுங்கள் ஏகப்பட்ட குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டும்.

it is a medical miracle என்று தமிழ் படத்தில் சொல்லப்படுவது போல் அறிவியல் ஆன்மிக அற்புதம் என்கிற கட்டுக்கட்டுகான கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. மனித வரலாறுகள் பதியப்பட்ட காலங்களில் இருந்தே இந்த நம்பிக்கைகள் ஊன்றுவதும் பின்பது பட்டுப்போவதும் நடந்தேறிவருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. புதிய மதத்தின் / மதங்களின் எழுச்சி என்பது பழைய மதத்தின்/மதங்களின் பழைமைவாதத்தை எதிர்த்து கட்டப்பட்டுகிறது என்பதால் நான் குறிப்பிடும் கூற்று உண்மை. அண்ணாவின் மாஜி கடவுள் நூல் கிடைத்தால் படித்துப்பாருங்கள், பண்டைய ஐரோப்பிய நாடுகளில் இருந்த கடவுள்களெல்லாம் காணாமல் போன வரலாறுகள் தெரியும். இன்றைய கடவுள்கள் குறித்த நம்பிக்கைகள் அழிய இன்னும் ஒராயிரம் நூற்றாண்டுகள் எடுக்கலாம், ஆனால் கண்டிப்பாக நம்பிக்கைகள் அனைத்தும் அழிவுக்கு உட்பட்டதே.

இன்னும் இரண்டு சுனாமிக்கு இரையாக வேண்டிய இலக்கிய குப்பைகள் தமிழகத்தில் உண்டு ஆனால் வாழ்க்கைகுக்த் தேவையான இலக்கியம் இன்னும் கிடைத்தபாடில்லை என்று தமிழகத்து இலக்கிய வளர்ச்சி பற்றி வைரமுத்து ஆதங்கமாகக் குறிப்பிட்டாராம். இவை மதங்களுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் கூட பொருந்தும் அதாவது இன்னும் சில உலக அழிவுகளுக்கு அசைந்து கொடுக்காத மதங்கள், மூடர் நம்பிக்கைகள் நிறைய உண்டு ஆனால் முடநம்பிக்கையை கட்டுமானமாகக் கொள்ளாத உண்மையான ஆன்மிகம் இது என்று காட்ட மனிதனுக்கு எந்த ஒரு மதமும் இன்னும் கிடைத்தப்பாடில்லை.

இணைப்பு :

அப்துல்கலாம் ஐன்ஸ்டன் ஆனக் கதை !

25 ஜனவரி, 2011

தமிழக மீனவர்களுக்கு இலவச இறுதிச் சடங்கு !

நாள் தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் செய்திகளுக்கு குறைவு இல்லை. வட இந்தியன் வம்பிலுத்துவிட்டு வெளிநாடுகளில் நைய புடைக்கப்பட்டால் இந்தியனை அடித்துவிட்டார்கள் என்று கண்டனம் தெரிவித்து அனைத்து மாநில மக்களிடம் இந்திய உணர்வு அரசியல் நடத்தும் இந்தியா, எதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் சிங்கு தலைப்பாகை வைக்கக் கூடாது என்றால் இந்தியர்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று பொங்கி எழும் பிரதமர், தான் எழுதிய பாடல் போலவே காகிதக் ஓடத்தை டெல்லிக்கு அனுப்பும் தமிழக முதல்வர், இவர்கள் கூட்டணி தமிழக சட்ட சபைத் தேர்தலை நெருங்கும் இந்த நேரத்தில் கொலை செய்யப்படும் மீனவர் உடல் நலம் கருதி 'இலவச இறுதிச் சடங்கு நடத்தவும், பதினாறாம் நாள் கருமாதிக்கு பண உதவி செய்யும் இலவச திட்டம்' அறிவித்து தேர்தலில் வென்றுவிட நினைத்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. ஈழத்தமிழர்கள் பிணங்களின் மீது ஏறி நின்று பாராளுமன்ற வெற்றியைச் சுவைத்தார்கள், சட்ட மன்ற வெற்றிச் சுவைக்கு தமிழக மீனவன் பிணங்கள் போலும்.

வங்காளவிரிகுடா சிங்களவெறிகுடாவாகி மீனவர்களின் இரத்தங்கள் கலந்து நிறமாறிக் கிடக்கிறது.

தமிழர்கள் இந்தியர்கள் இல்லை என்று இந்தியாவே ஒதுங்கி வேடிக்கைப் பார்பதன் மூலம் மறைமுகமாகக் குறிப்பிட்டு உணர்த்தும் போது தேசியவாதம் பேசும் தேசியவியாதிகளை எதால் அடிக்கலாம் ?

நம்மால் நேரிடையாக ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்றாலும், முடிந்த வழியில் இந்த அக்கரமங்களுக்கு செருப்படிக் கொடுத்தோம், எதிர்ப்பைக் காட்டினோம் என்று வரலாற்றில் எழுத்தின் வழியாகப் பதியவைக்கவில்லை என்றால் நாம் தமிழனுக்கு பொறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

21 ஜனவரி, 2011

கலவை 21 ஜனவரி 2011 !

ஸ்விஸ் வங்கியில் இந்தியர்களின் கள்ளப்பணம் மலைக்கவைக்கிறது. உலகின் முதல் நிலை பணக்கார நாடாக இருக்க வேண்டிய இந்தியாவைச் சுரண்டி மக்களுக்கு கீழே வறுமைக் கோட்டைப் போட்டுவிட்டு இலவசத் திட்டங்களால் ஆளும் மாநில, நடுவன் அரசுகளை நினைத்தால் இந்த நாட்டை ஆள்வோர் ஏன் நாசமாகப் போகக் கூடாதுன்னு நினைக்கத் தோன்றுகிறது.

Black money in Swiss banks — Swiss Banking Association report, 2006 details bank deposits in the territory of Switzerland by nationals of following countries :
TOP FIVE

INDIA $1,456 BILLION
RUSSIA $470 BILLION
U.K. $390 BILLION
UKRAINE $100 BILLION
CHINA $96 BILLION

Now do the math’s – India with $1,456 billion or $1.4 trillion has more money in Swiss banks than rest of the world combined. Public loot since 1947:

ஆளும் அரசியல்வாதிகள் இவற்றை இந்தியாவிற்கு கொண்டுவர முயற்சிக்கமாட்டார்கள், ஏனெனில் இதில் அரசியல்வாதிகள் வைத்திருக்கும் கணக்கும் அடங்கும், மேலும் தேர்தல் தோறும் செலவுகளுக்கு இந்தக் கருப்புப் பணத்தை மிரட்டி வாங்கிதான் இறக்குவார்கள். போலிஸ்காரனே திருடனாக இருந்தால் திருட்டை எப்படி கண்டுபிடிக்கத் துணிவார்கள். இந்தியாவின் ஏழ்மை உருவானது அல்ல சுரண்டி சுரண்டியே உருவாக்கப்பட்டது, வெள்ளைக்காரனே நாட்டை ஆண்டிருக்கலாமா ? 60 ஆண்டுகால குடியரசு இந்தியாவை காங்கிரசு கட்சி தான் நிறையமுறை தனியாகவும் கூட்டணீயாகவும் ஆண்டு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*****

அற்புதம் என்று சொல்லாமல் ஏற்றும் திருவண்ணாமலை தீபம் லட்சகணக்கானோரை ஈர்பதுடன், அது ஏற்றபடுவது என்று தெரிந்தும் ஆன்மிக அன்பர்களின் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு குறைவதில்லை. ஐயப்பன் சோதியாக காட்சி தருகிறார் என்று நம்பிக்கைய ஊட்டி ஏற்றப்படும் தீபத்தையும் இப்படி வெளிப்படையாகவே அறிவித்து சபரிமலை பருவம் (சீசன்) வரை நாள் தோறும் மகரசோதி ஏற்றினால் இப்படி ஒரே நாளில் கூட்டம் கூடி நெருங்கி 350க்கும் மேற்பட்டோர் இறந்தது நேர்ந்திருக்காது. சபரிமலை (காந்தமலை) மகரசோதி ஒரு நம்பிக்கை மோசடி அல்லது கோவில் நிர்வாகத்தினரால் ஏற்றப்படுவது தான் என்று அறிவித்து இந்த மாயையை உடைக்க நீதிமன்றம் நாடி ஏன் யாரும் பொது நல வழக்குத் தொடரவில்லை ? இந்தியாவில் செய்யப்படும் தெரிந்தே தவறுகளில் இதுவும் ஒன்று. ஆன்மிகம் ஏமாற்றோ அல்லது அற்புதமோ இல்லை, அது (வெறும்) அனுபவம் தான் என்பதை உணரும் நம்பிக்கையாளர்கள் தான் இது போன்ற எதிர்பாராத கெட்ட நிகழ்வுகளுக்கு விடிவு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும். என்னதான் பகுத்தறிவுவாதி அறிவு வெளிச்சம் காட்டினாலும் பக்தி போதையில் சொருகிய கண்களுக்கு அவை தெரியவே தெரியாது, ஆன்மிகம் அற்புதம் அல்ல என்று வாழ்ந்து காட்டிய வள்ளலார்கள் இருந்தாலும் ஆன்மிக வியாபாரிகளும், மூடநம்பிக்கையாளர்களும் இவற்றை கிஞ்சித்தும் நினைத்துப் பார்ப்பது இல்லை.

*****

கிடக்கிறவ கிடக்கா கிழவியைத் தூக்கி மனையில் வை என்று பழமொழி சொல்லுவார்கள், அகோபில மடத்தின் ஸ்ரீரங்கநாத யதிந்திர மகாதேசிகன் சுவாமிகள் என்னும் ஒரு சாமியார் (இந்தியாவில் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை ஒழித்தாலும், சாமியார்களுக்கு பெயருக்கு முன்னால் வைத்துக் கொள்ளும் ஶ்ரீ தாங்கிய நீள புனைப் பெயர்களை அழிக்கவே முடியாது போல) சமஸ்கிரதத்தை தேசியமொழியாக அறிவிக்கச் சொல்லி வேண்டுகோள் வைத்து அந்த முயற்சிக்கு இந்துக்கள் 10 அல்லது விழுக்காடேனும் வருமானத்தை செலவிடனுமாம். குதிரை பசிக்கு கொள்ளு காணூம் சேனத்தை தங்கத்தில் செய்ய ஆசைப்பட்டானாம் குதிரைக்காரன். மாநில மொழிகளுக்கே அந்த தகுதியைத் தர மத்திய அரசு அசைந்துக் கொடுக்கக் காணும் இந்த கோலத்தில் எந்தமாநிலத்திலும் பேசப்படாத சமஸ்கிரதத்திற்கு ஆட்சி மொழி/ தேசியமொழி தகுதிக் கொடுக்கனும் என்கிற வேண்டுகோளை எப்படி எடுத்துக் கொள்வது. இந்த சாமியார்கள் பேசும் தாய்மொழிகளுக்கு அந்த தகுதியைக் கேட்பதில்லை என்பது எவ்வளவு நகைமுரணாக இருக்கிறது பாருங்கள்.

*****

தேர்தல் நெருங்க நெருங்க ஆளும் கட்சிக்கு காய்சல் எடுத்து நாள் தோறும் இலவச அறிவிப்பு மாத்திரை எடுத்துக் கொள்ளப்படுகிறது. வீடுகட்ட பயன்படுத்தும் ஆற்றுமணலின் ஒரு கிலோ விலை தமிழக அரசு கொடுக்கும் இலவச அரிசியின் ஒரு கிலோ விலையை விட கூடுதலாக இருக்கிறதாம். யானை இலவசம் யானைக்குப் போடும் ஒருவேளை தீணி ஐந்து யானைகளுக்கான விலை. இதுதான் இலவசங்களின் பலாபலன். சிறிதும் கூச்சமின்றி 'இந்த ஆண்டின் கூடுதல் மழை நல்லாட்சிக்கு கிடைத்தச் சான்றிதழ்' என்று ஒரு அமைச்சர் சொல்லுகிறார். அப்படி என்றால் மழையால் பயிர்கள் அழிய கடன் தொல்லையால் நிவாரணமின்றி தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் பிணங்கள் அரசுக்குக் கிடைத்தச் சான்றிதழின் முத்திரைகளா ?

*****

எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பதில் முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்து, ஓரளவுக்கு இடங்கள் முடிவாகி விட்டன. அதன்படி, தி.மு.க., 128 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. காங்கிரசுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. பா.ம.க.,வுக்கு 24 இடங்களும், 2013ம் ஆண்டு காலியாகவுள்ள ராஜ்யசபா இடங்களில் அன்புமணிக்கு ஒன்றும் வழங்கப்பட உள்ளது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு 12, கொ.மு.க., - 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளுக்கு தலா மூன்று இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், 2006 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், 48 இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை, 12 இடம்கூடுதலாக வழங்கப்படுகின்றன. அக்கட்சிக்கு, அ.தி.மு.க., அணியிலும், "டிமாண்ட்' இருந்ததால், அக்கட்சியை தக்க வைக்க தி.மு.க., சற்று தாராளம் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க., அணியில் இருந்து காங்கிரசுக்கு, 75 சீட் வரை தர பேரம் பேசப்பட்டுள்ளது. அதனால், வேறு வழியின்றி காங்கிரசுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க, தி.மு.க., தரப்பில் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. தி.மு.க., அணியில் கொங்கு முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், தி.மு.க., சின்னத்திலேயே போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளன.

- இது தினமலரில் வந்த செய்தி

தனித்து ஆளும் திமுக அடுத்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சியாக மாறுவதற்கு முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. கழுதைத் தேய்ந்து கட்டெறும்பானக் கதையாக திராவிடக் கட்சிகளின் நிலைமையும் இப்படி கவலைக்கிடமாகியுள்ளது, திராவிடத்தின் பரிணாமம் தான் இந்த வீழ்ச்சி என்று கொள்ளவேண்டும். இந்தத் தேர்தலுடன் காங்கிரசு தமிழ்நாட்டில் இருக்குமா இல்லையா என்று நன்கு தெரிந்துவிடும்.

20 ஜனவரி, 2011

பிள்ளைக்கறி, பலி கேட்ட கடவுள்கள் !

நரபலி என்றதும் எதோ போலி சாமியார் அல்லது மந்திரவாதிகள் செய்யும் கொடிய செயல் என்று நினைக்கிறோம். ஆனால் இவை பக்தி ஆன்மிகம் என்ற பெயரில் போற்றபடுவது எத்தனை பேருக்குத் தெரியும். தான் விரும்பும் ஒன்றை வேண்டுதல் நிறைவேறியதும் கடவுளுக்காக விட்டுக் கொடுப்பது என்பது காலம் காலமான இறை நம்பிக்கையில் ஒன்று அதன் நீட்சியாக பெற்றப் பிள்ளையை பலி கொடுப்பது, அல்லது வேண்டிய வரம் கிடைக்க மாற்றான் பிள்ளையை கடத்தி பலி கொடுப்பது இவையெல்லாம் அண்மைக் காலம் வரையிலும் கூட நடந்தேறிவருகிறது. மின்னொளி காலத்திலேயே இப்படி என்றால் படிப்பறிவும், உலக அறிவும் இல்லாதா இருண்ட காலங்களில் இவை நடைபெற்றது மிகுதியாவே இருந்திருக்க வேண்டும்.

சேக்கிழார் "அருளிச்" சமைத்த திருத்தொண்டர் என்னும் பெரிய புராணத்தில் பெற்ற பிள்ளையை இறையடியார்களுக்கு கறி சமைத்துக் கொடுத்த சிறுதொண்டர் என்னும் அடியார் பற்றிய கதை ஒன்று உண்டு, தட்டச்சப் பொறுமையில்லை, அதில் புதிதாக ஒன்றும் சொல்லப் போவதில்லை, எனவே கூகுளிட்டத் தேடலில் கிடைத்தக் கதையை அப்படியே தருகிறேன்.

சிவனடியாருக்கு அன்னம் அளித்தப்பின் தான் சிறுதொண்டர் சாப்பிடுவது வழக்கம். மன்னரின் சேனதிபதியான பரஞ்சோதியாரே இவர். ஒரு நாள் அவ்ர் வீட்டிற்கு ரொம்ப நேரமாகியும் ஒரு அடியாரும் வராததால் அடியாரைத் தேட இவர் வெளியில் சென்றார். அவரைச் சோதிக்க எண்ணி சிவபெருமானே இப்படி ஒரு நாடகம் நடத்தினார். சிவனே ஒரு பைரவர் சடாதாரி வேஷத்தில் வந்து சாப்பிட கேட்டார். அவரது மனைவி மகிழ்ந்து, "அடியாரைத் தேடித்தான் என் கண்வர் போயிருக்கிறார். இதோ வந்துவிடுவார் என்றார். சிவனும் வெளியே ஒரு மரத்தடியில் அமர்ந்தார். பின் சிவன் வந்தபின் சாப்பாடு தயாராக இருந்ததால் இலை போடப்பட்டது, ஆனால் சிவனோ அவரது மகனைக் கறி செய்து படைத்தால்தான் தான் சாப்பிடுவேன் என்று சொல்ல, அடியாருக்கு அன்னம் படைப்பதே தன் முதல் கடமை என்பதால் அதேபோல் தன் ஐந்து வயது மகன் சீராளத்தேவன் பள்ளியிருந்து வந்ததும் அவன் சம்மதத்துடன் தம்பதிகள் இருவரும் அவனை வெட்டிக் கறி சமைத்தனர். பின் உணவு உண்ணும் சமயம் சிவன் ரூபத்தில் இருந்த அடியார், "பிள்ளை இல்லாத வீட்டில் நான் உண்ண மாட்டேன் என்று சண்டி பண்ண, சிறுத்தொண்டர் மனம் கலங்கி சிவபெருமானை வேண்ட, பின் வெட்டப்பட்டு உணவாக இருந்த மகன் உயிருடன் திரும்பி வந்தான்.

இந்தக் கதை உண்மை என்றால் இது போன்றச் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியது மற்றபடி கற்பனையாக இருந்தால் இது போன்ற சமூகக் கேடு மற்றும் மூட நம்பிக்கையின் உச்சமான அபத்தக் கற்பனை என்பதால் நிராகரிப்பதுடன் கண்டிக்கத்தக்கது. இதை இலக்கியமாக பதித்த சேக்கிழார் தற்போது இல்லை என்பதால் இதை மிகச் சிறந்த பக்தியின் / அன்பின் வெளிபபடு என்பவர்கள் கண்டிக்கத் தக்கவர்கள். இது போன்ற அபத்த கற்பனைகளும், நடப்புகளும் சைவ சமயத்திலோ அல்லது இந்து மதத்திலோ மட்டும் தான் இருக்கிறது என்று கருதத் தேவை இல்லை.

ஆப்ரகாமிய மதங்களில் ஒரு பொதுக் கதை உண்டு, இது பழைய ஏற்பாட்டிலும், குரானிலும் சொல்லப்படுகிறது, இஸ்ரவேலர்கள் பின்பற்றும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்படுவது படி ஆப்ராகாமின் இருமனைவிகளான ஹகர் மற்றும் சாராவிற்குப் பிறந்த குழந்தைகள் முறையே ஈசாக் மற்றும் இஸ்மாயில் என்பவர்கள் ஆகும், முதல் மனைவியான சாராவுக்கு குழந்தைப் பேரு இல்லாததால் இரண்டாவதாகப் மணந்து கொண்ட எகிப்திய மனைவியான ஹகருக்கு பிறந்தவர் இஸ்மாயில், இஸ்மாயில் பிறந்த பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு சாராவும் ஒரு மகனைப் பெற்றெடுத்தார், அவர் பெயர் ஈசாக். இஸ்மாயில் எகிப்திய மனைவி குழந்தையாதலால் இஸ்லாமாயிலை இஸ்ரவேலர்களும் சாராவும் வாரிசாக அங்கீகரிக்கவில்லை. பின்பு அவர்கள் எகிப்திற்கே திரும்பச் சென்றுவிட்டார்கள். ஈசாக் இஸ்ரவேலர்களின் வாரிசாகத் தொடர்ந்தார். ஆப்ரகாமை சோதிக்க விரும்பிய இறைவன் ஈசாக்கை பலி இட பணித்தார், இறைவன் விருப்பதை ஏற்ற ஆப்ரகாம் ஈசாக்கை பலியிட வாளை உயர்த்த இறைவனால் தடுக்கப்பட்டு, ஆப்ராமின் நேர்மை பாராட்டப்பட்டு ஈசாக்கு பதிலாக ஒரு கம்பளி ஆட்டை பலியிடச் சொன்னார் இறைவன் என்பதாகக் கதை முடிகிறது. ஈசாக் வழிவந்தவர்கள் இஸ்ரவேலர்கள் எனவும், இஸ்மாயிலின் வழிவந்தவர்கள் இஸ்லாமியர்கள் என்பவும் இஸ்ரவேலர்களுக்கு மற்றொரு இறைத் தூதரான மோசஸ் கிடைத்தார் என்பதும் பழைய ஏற்பாட்டை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை.


இதே கதை சற்று மாறுபட்ட வடிவத்துடன் குரானிலும் சொல்லப்படுகிறது. இப்ராஹிம் (ஆப்ரகாம்) மகன் இஸ்மாயில் என்று சொல்லபடுவதுடன் மகனைப் பலியிட இறைவன் கட்டளை இட்டான், பலியிடும் நேரத்தில் இறைவனால் தடுக்கப்பட்டு மகனுக்கு பதிலாக ஆட்டைப் பலியிட்டால் போதும் என்று இறைவன் பணித்தான் என்பது குரானில் சொல்லப்படும் கதை. குரானில் இஸ்மாயிலின் தாய் பெயர் குறிப்பிடப்படவில்லை என்கிறார்கள். இரண்டு கதையிலும் கம்பளி ஆடும், ஆடும் இடம் பெறுகிறது, பலி இடப்படுபவர் பெயர் வேறு, ஆனால் அவர்களின் தந்தை ஒருவரே. இஸ்ரவேலர்கள் சொல்லுவது திரிக்கப்பட்டக் கதை எனவும் குரானை அல்லாவே நேரடியாக ஜிப்ரல் (காப்ரில்) மூலமாக இறைத்தூதர் முகமது நபிக்குச் சொன்னதால் அல்லாச் சொன்னதே உண்மையான கதை என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். பலி இட கட்டளை இட்டது ஈசாக்கையா அல்லது இஸ்மாயிலையா என்று குரானில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இஸ்லாமியர்கள் இஸ்மாயிலையே பலியிடச் சொல்லி இருக்கக் கூடும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை, மேலும் இஸ்லாமியர்கள் தொழுகையை நோக்கிய புனிதத் தலமான காஃபாவை கட்டியவர் இஸ்மாயில் என்பதும் அவர்களின் நம்பிக்கை. இஸ்மாயிலை இப்ராஹிம் நபி பலியிடத் துணிந்ததைத் தான் தியாகத் திருநாள் (பக்ரீத்) என்று கொண்டாடப்படுகிறது.

*****

மேற்கண்ட இந்துமத (சைவ சமய) கதைகளிலும், சரி ஆப்ரகாமிய மதக்கதைகளிலும் சரி குழந்தைகள் உயிருடன் மீண்டதாக அல்லது பலியிடாமல் மீண்டதாகச் சொல்லப்படுவது சற்று ஆறுதலான முடிவு. இறைவன் நரபலி கேட்பதாகவும், கொடுப்பதாகவும் அதுவும் பெற்ற மகனையே இறைவன் கேட்பதாகச் சொல்லப்படும் கதைகள் எந்த ஒரு தனிபட்ட மதத்திற்கும் உடையகதைகளோ, அவைகள் மட்டும் தான் மூட நம்பிக்கைகளைக் கொண்டிருந்தது என்று சொல்ல எதுவும் கிடையாது. ஆனால் இம்மதங்கள் ஒன்றை ஒன்று மூடநம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தான் சாடிக் கொள்கின்றன எவ்வளவு நகைமுரணானது என்பதே இந்த இடுகையில் நான் ஒப்பிட்டு அளவில் பதிய வைத்துள்ளேன்.

இணைப்புகள் :
சிறுதொண்டர்
ஈசாக்
இஸ்லாமியில்
ஆப்ரகாம்

18 ஜனவரி, 2011

தமிழ்மணம் விருதுகள் 2010 - சில எண்ணங்கள் !

முதலில் நடந்து முடிந்த தமிழ்மணம் விருதுகள் 2010 வெற்றியாளர்களுக்கு நல்வாழ்த்துகள். சென்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகுதியான பதிவர்கள் போட்டிக்கு இடுகையை முன்மொழிந்துள்ளார்கள். இதற்கு பதிவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருப்பது முதன்மையான காரணம் என்றே நினைக்கிறேன். மொத்தம் 1511க்கு மேற்பட்ட இடுகைகள் போட்டியில் பங்கு பெற்றன. முதல்கட்ட வாக்கெடுப்பில் இத்தனை இடுகைகளையும் போதிய நேரமின்மையால் அனைத்து பதிவர்களும், வாசகர்களும் படித்து வாக்களித்திருப்பார்களா என்பது ஐயமே. ஏற்கனவே படித்த இடுகைகளைக் கருத்தில் கொண்டும், அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் போட்டி இடுகிறார்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் முதல்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள் அமைந்தன. முதல் கட்ட பொதுவாக்கெடுப்பில் 1551 இடுகைகளில் இருந்து இரண்டாம் கட்டத்திற்கு இடுகைகள் தேர்வாகிய போது போட்டிப் பட்டியல் எண்ணிக்கையை 200 ஆகக் குறைந்தது என்றாலும் போட்டியிடத் தகுதியான கட்டுரைகள் பல ஆதரவாளர்கள் இன்மையால் வாக்குகள் இல்லாமல் இரண்டாம் கட்டப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பதும் உண்மைதான். நான் அறிந்தவகையில் சில பிரிவின் போட்டி இடுகைகள் உள்ளடக்கத் தரத்திற்காக வெற்றிப் பெறவேண்டும் என்று வாக்களித்திருந்ததாலும் அவை இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிற்குள் நுழையவே இல்லை, பலர் வாசித்திருக்காமல் விடுபட்டதால் போதிய வாக்கின்மையால் தகுதி இழந்திருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு முடிவு நிலையும் இதே தான் என்றாலும் போட்டி இடும் இடுகைகள் எண்ணிக்கை 200 என்பதால், முதல்கட்ட வாக்கெடுப்பில் வாக்களித்தவர்கள் பலர் அனைத்தையும் படித்துப் பார்த்து வாக்களித்திருப்பர். இரண்டாம் கட்ட முடிவில் 80 விழுக்காட்டுக் கட்டுரைகள் போட்டியிடும் தன்மையில் இருந்தது. 20 பிரிவுகளில் பிரிவுக்கு ஐந்தாக இரண்டாம்கட்ட முடிவு அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பதிவர்களால் ஏற்படுத்தப்பட்ட நடுவர் குழுவிற்கு தமிழ்மணம் அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு நடுவருக்கும் இருபிரிவுகள் என 40 நடுவர்களுக்கு அனுப்பப் பட்டிருந்தது, அதில் எனக்கு இருபிரிவிற்கான நடுவராக இருக்கும் வாய்பு கிடைத்தது. எனக்கு அனுப்பட்ட அதே இருபிரிவுகள் வேறொரு நடுவருக்கும் அனுப்பப் பட்டிருக்க வேண்டும். நான் நடுவராக இருந்த இரு பிரிவுகளில் ஒன்றில் இரு இடுகைகளை முதல் பரிசுக்கு பரிந்துரைத்திருந்தேன். இரண்டாம் பரிசுக்கு ஒரு இடுகையும் பரிந்துரைத்திருந்தேன். ஆனால் வெற்றி அறிவிப்பில் முதலிடம் பெற்ற இருவரில் ஒருவர் முதலிடம் பெற்றதாகவும் மற்றவர் இரண்டாம் இடத்திற்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. அதே பிரிவின் மற்றொரு நடுவர் பார்வையின் மதிப்பீட்டையும் ஒப்பிட்டு அவ்வாறு முடிவுகள் அமைந்திருக்கும் என்றே நினைக்கிறேன், ஆனால் மற்றொரு பிரிவில் நான் தேர்வு செய்தபடியே முடிவுகள் அமைந்திருந்தன, அதே முடிவை மற்றொரு நடுவரும் வழங்கி இருப்பார் என்றே நினைக்கிறேன்.

இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால் இதில் எனது அரசியல் நோக்கமோ, குழப்படி செய்யும் நோக்கமோ ஒன்றும் இல்லை. சொல்ல வருவது இது தான், போட்டியில் கடைசிவரை ஒரு சில நல்ல இடுகைகள் செல்ல முடியாமல், முதல்கட்டத்திலேயே பட்டியலில் இடம்பிடிக்காமல் போனதற்கு போட்டி எண்ணிக்கை மிகுந்திருந்ததே ஆகும். இரண்டாம் இடம் கிடைத்த பலரில் சிலருக்கு முதலிடம் கிடைக்கமல் போனதற்கு நடுவர்களின் மதிப்பீடும் காரணம். உங்கள் கட்டுரை தரமானதாக இருந்து போட்டியில் விருது வெல்லவில்லை, அல்லது முதலிடம் கிடைக்கவில்லை என்று வருந்தினால் மேற்கண்டதை கவனத்தில் கொள்ளுங்கள். போட்டியில் வெற்றி பெற முடியாமல் போவதற்கு சில சமயம் உழைப்பு என்பதைத் தாண்டி இது போன்ற காரணங்களும் அமைந்துவிடும் என்பது மிகவும் வருத்தத்துக்குரிய நடைமுறை உண்மை. தெரிந்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்கிற மனநிலையை மாற்றிக் கொண்டால் இந்த வருத்தம் ஏற்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இதை வாக்களிப்பவர்கள் மட்டுமின்றி தெரிந்தவர்களின் வாக்கு பலம் இருக்கிறது என்பதற்காக தன்னுடைய எழுத்து மற்றும் இடுகை பற்றி நன்கு அறிந்தவர்களும் கவனத்தில் கொண்டால் மேலும் குறையும். போட்டிக்கு இடுகையை அனுப்பும் முன் தன்னுடைய எழுத்தின் தன்மையை மேம்படுத்திக் கொண்டு போட்டியிடுவதும் மிகவும் தேவையான ஒன்று என்பதை போட்டியாளர்கள் கவனத்தில் கொள்வது இன்னும் சிறப்பு. எல்லோருக்கும் போட்டியிட உரிமை உள்ளது, அதே வேளை தெரிந்தவர் வாக்கு பலம் அந்த உரிமையை வெற்றியாக்கிக் காட்டும் என்று நினைப்பது கடைசி கட்டம் வரை நிலைப்பது இல்லை. போட்டியின் இறுதி முடிவை கவனத்தில் கொண்டு, வரும் காலத்தில் எழுத்தின் தன்மைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதே எதிர்வரும் போட்டியில் வெற்றி ஈட்டித்தரும் சிறந்த வழியாக அமையும், இவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வெற்றிபெற்ற இடுகைகளை வாசித்துப் பார்ப்பது மிகவும் தேவையான ஒன்று.

இது போன்று ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் போட்டியில் இதே போன்று நடைமுறைச் சிக்கல்கள் நடைமுறைதான் என்பதை நாம் ஒப்புக் கொண்டு தமிழ்மணம் நிர்வாகத்தை கண்டிப்பாக பாராட்டவேண்டும். இதற்கு அவர்கள் செலவிட்ட நேரமும், உழைப்பும் தன்னார்வத்தால், தமிழார்வத்தால் ஏற்படுவது மட்டுமே. வெற்றி என்பது மகுடம், நன்றாக எழுதியும் சிலருக்கு அது கைகூடாமல் போனதற்கு மேற்சொன்ன நடைமுறைக் காரணிகளும் உள்ளன. என்னைப் பொருத்த அளவில் வெற்றி வாய்ப்பு பலருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன், அதே போன்று மருத்துவர் புருனோ மற்றும் வினவு, மேலும் வெளிப்படையாக அறிவித்துக் கொள்ளாத சிலர் இந்த முறை போட்டியில் பங்குபெறவில்லை. ஏற்கனவே தகுதியடைந்தவர்கள் வழிவிட்டால் தான் மேலும் தகுதியானவர்களை அடையாளம் காணமுடியும், இது என்னுடைய நம்பிக்கை.

தமிழ்மணம் விருதுகள் 2010 வெற்றியாளர்கள் மட்டும் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் நல்வாழ்த்துகள், என்னை நடுவரில் ஒருவராக தேர்ந்தெடுத்த தமிழ்மணம் விருது குழுவினருக்கு நன்றி.

17 ஜனவரி, 2011

பொங்கல் பொங்கல் !

வழக்கமாக வேலை நாட்களில் வரும் பொங்கல் இந்த ஆண்டு சனிக்கிழமை வந்ததால் கொண்டாட மிக்க மகிழ்ச்சியாக அமைந்தது. சிங்கை குட்டி இந்தியாவிலும் இரு ஆண்டுகளாக பொங்கலுக்கு அலங்கார மின் விளக்குகள் ஒளிர்ந்தன. வழக்கமாக பொங்கல் காய்கறிகளுக்கு வரும் பச்சை மொச்சை இந்த ஆண்டு தேடினாலும் கிடைக்கவில்லை. தமிழக தொடர் மழையால் மொச்சைப் பூக்கள் உதிர்ந்தோ அல்லது விளைச்சல் குறைந்தோ இருக்கலாம் என்றே நினைக்கிறேன். மற்றபடி பனங்கிழங்கு, மஞ்சள், இஞ்சி மற்றும் இதர பொங்கல் காய்கறிகள் கிடைத்தன.

7:00 - 9:00 நல்ல நேரமாம். அன்று சனிக்கிழமை காலை 9:00 - 10:30 இராகு காலம். இந்தக்கணக்குகளெலெல்லாம் இந்தியாவைத் தாண்டி எடுபடுமா ? சிங்கையில் பகல் வெளிச்ச சேமிப்பிற்காக ஒருமணி நேரத்தை கூட்டியே வைத்திருக்கிறார்கள், 6:30 - மணிக்கு மேல் தான் சூரியன் வெளியே தலைகாட்டும், சூரியன் உதிப்பை வைத்து கணக்கிடும் நாள், வின்மீன் கணக்குகள் இப்படி தள்ளப்பட்ட பகல் உடைய நாடுகளில் சூரிய உதிப்பை கணக்கிட்டு ஒப்பிட்டுப்பார்பது நம்பிக்கை என்றாலும் எந்த வகையிலும் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. இருந்தாலும் இவற்றிலெல்லாம் எனக்கு சிறிதும் நம்பிக்கையும் கிடையாது. பூமி என்றாவது சுழலாமல் போனால் அன்று கெட்ட நாள், மற்றபடி எல்லா நாளும், நேரமும் என்னைப் பொருத்த அளவில் உலகில் உள்ள ஒருவருக்கேனும் நல்ல நாள் தான் நல்ல நேரம் தான்.

சனிக்கிழமை என்பதால் பொருமையாகவே பொங்கலிடுவோம் என்கிற முடிவில் காலை 7 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு 7:30 வாக்கில் பொங்கல் வைத்தோம், பானையில் பசும்பாலை ஊற்றி வைத்த பற்ற வைத்த 10 நிமிடத்திற்குள் இரு பானைகளும் பொங்கியது. இருவருக்குப் போதும் என்று சிறிய அளவில் வாங்கிய சில்வர் பானைதான், விளக்கி எடுக்க சில்வர் பானையே சரியாக இருக்கும் என்பதால் சில்வர் பானையையே பொங்கலுக்கு பயன்படுத்துகிறோம், அதுவும் சென்ற ஆண்டு அடிப்பிடிக்க அதை தமிழகம் செல்லும் போது எடுத்து நன்றாக தேய்த்து திரும்பவும் எடுத்து வந்திருந்தோம்.

வெண்பொங்கல், சர்கரை பொங்கல், மரக்கறி எல்லாம் செய்து முடிக்கவே 9:00 மணிக்கு மேல் ஆகி இருந்தது. இடையில் மகள் அரிசிமாவினால் கோலம் போட்டு முடித்திருந்தாள். அதற்குள் செங்கதிரை எழுப்பி பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் சொல்ல வைக்க அவன் கையில் தட்டையும் கரண்டியையும் பிடித்த ஒலி எழுப்பச் செய்ய, கரண்டியை வீசி எரிந்தான், பிறகு புத்தாடை அவனுக்கு அணிவித்து, பொங்கலை வழிபாட்டு அறையில் வைத்து பூசை போட்டு முடிக்க 9:30 மணிக்கு மேல் ஆகி இருந்தது. வெளிச்சத்தைப் பார்த்தால் கொண்டாட்டம் தான் அவனுக்கு, தீப ஆரதனைக்குக் முன்பே சாமி கும்பிட போட்டால் நீச்சல் அடிக்கும் (குப்புற கிடக்கும் குஷி மன)நிலையில் அவனுக்கு கட்டுக்கடங்காத மகிழ்ச்சி. சென்ற ஆண்டு இதே நேரத்தில் வயிற்றினுள் இருந்தான். எங்களுக்கும் அவன் வருகையால் இல்ல எண்ணிக்கை இந்த பொங்கலுக்கு கூடி இருந்தது மேலும் பொங்கல் கொண்ட்டாட்டத்தை உற்சாகம் ஆக்கியது.

அளவான இனிப்புடன் சர்கரைப் பொங்கல் மிகச் சுவையாகவே வந்திருந்தது. பெண்கள் மட்டும் தான் பண்பாட்டு உடைகளை அணிய சமூகம் பணித்திருக்கிறது, நினைக்க வெட்கமாக இருக்க... இன்னிக்காவது வேட்டி அணிவோம் என்றே நான் அணிந்திருந்தேன். அன்று முழுவதுமே வெளியிலும் கூட வேட்டியுடன் சென்று வந்தேன். ராம்ராஜ் வேட்டி சட்டை நல்லா தான் இருக்கு. தூய வெள்ளையில் கட்டியதும் நான் தமிழன் என்கிற ஒரு கர்வத்தைக் கொடுக்கிறது, வேட்டி அணிபவர்கள் கண்டிப்பாக அதை உணர்கிறார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு சில மனத்தடைகளைத் தவிர்த்து என்னைக் கேட்டால் ஆண்களுக்கு எளிதான, உடுத்த வசதியான (சவுகரியம்) உடை வேட்டி தான்.

வழக்கமாக பொங்கல் அன்றே வரும் பொங்கல் இடுகை, வீட்டில் கணிணியை பதிவெழுதப் பயன்படுத்தக்கூடாது, படிக்க மட்டுமே என்கிற தற்கட்டுப்பாட்டினால் இன்று வந்துள்ளது.

பொங்கல் கொண்டாடிய, தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடிய அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.


இது சென்ற பொங்கல் :

2009 பொங்கல்

14 ஜனவரி, 2011

பெரியார் ஏன் பெரியார் ?

வரலாற்றுவழியாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குமான சமூகத் தாழ்வு குறித்த ஒற்றுமைகள் ஏராளம். அதனால் ஏற்பட்ட வன்கொடுமை, சமூகத் தாழ்வு, சச்சரவுகள், கொடூரங்களும் மிக மிக அதிகம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் செட்டியார், பிள்ளைமார் உள்ளிட்ட மேட்டுக்குடிகளின் பொறுப்பிலேயே இருக்கிறது. அங்கெல்லாம் தாழ்த்தப் பட்டவர்களுக்கு, நாடர்கள், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலம் இருந்தது. இன்றும் கூட அந்நிலைமை இருக்கிறது. பள்ளிகளிலும் அதே நிலைமை இருந்தது. நாய்களும், பன்றிகளும், கழுதைகளும் நடமாடும் தெருக்களில் மனிதர்களாகிய தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க அனுமதி மறுக்கப் பட்டிருந்தது பெரும்பாலான பார்பனர் அக்ரஹாரம் உள்ளிட்ட மேட்டுக்குடி பண்ணையார்கள் வசிக்கும் தெருக்களில். இந்த கொடுமையான அடக்குமுறைகளை - அநீதிகளை களை வதற்காக பல பெரியார்கள் தோன்றினார்கள். அந்த கொடுமைகள் குறைந்தபாடில்லை.

தமிழ்நாட்டிலும் இக்கொடுமைகளை எதிர்த்துப்போராட தந்தைப் பெரியார் பிற்பட்ட வகுப்பில் இருந்து தோன்றியதாக திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்கள் இன்றும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்கு தந்தைப் பெரியார் பாடுபட்டாரா? பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டாரா? இந்த இரு சமுதாயத்தினரையும் தன் சமுதாயமாகவே பார்த்தாரா? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய பார்பனர்களை கடுமையாக எதிர்த்ததுபோல் - தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்திய மேட்டுக்குடி சமுதாயத்தினரை எதிர்த்தாரா ?

பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே தந்தை பெரியார் எடுத்த முடிவுகள் எது? என்பதை ஆராயும்போது அவருடைய செயல், எண்ணம், தொண்டு எல்லாமே தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என இருவருக்கும் தான் என்பதை மறுக்க முடியாது. இதை அவரே பலதடவை சொல்லியும் இருக்கிறார்.

தந்தை பெரியார் கூறுகிறார் :-
‘‘என்போன்ற ‘சூத்திரன்’ என்று சொல்லப்படுபவன் ‘பறையன்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாகச் சொல்லுவதெல்லாம், ‘சூத்திரர்கள்’ என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத் தானேயல்லாமல் வேறில்லை. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது.

பார்ப்பனரல்லாதவர்களோ - முக்கால் வாசிப்பேர் - பார்ப்பனர்களைப் பின்பற்றுபவர்களாகவும், பார்ப்பானுக்குத் தாசிமகனாய் இருந்தாலும் சரி, நாம் பறையனுக்கு மேலே இருந்தால் போதும் - என்று முட்டாள்தனமாய்க் கருதிக் கொண்டிருக்கின்றவர்கள் என்றாலும், நம்மால் கூடியதைச் செய்துதான் வருகின்றோம். எதற்கும் உங்கள் முயற்சியும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாவிட்டால் ஒரு காரியமும் நடவாது. தவிரவும், தீண்டாமை ஒழிவதற்கு இது ஒரே ஒரு மார்க்கந்தான் என்று நான் சொல்ல வரவில்லை. தீண்டாமை ஒழிய வேண்டுமானால், மதத்தைவிட்டு விடுங்கள்; அல்லது ஏதாவது ஒரு மதம் வேண்டுமானால், தீண்டாமை இல்லாத மதத்தைத் தழுவலாம். ஆகவே நான் சொல்லுவதை பொறுமையுடனும் சுய புத்தியுடனும் ஆராய்ச்சி செய்து பார்த்து, உங்களுக்குச் சரி என்று தோன்றியபடி நடவுங்கள். - (குடியரசு 25.4.1926)

பிற்பட்ட வகுப்பினரான சூத்திரன் என்று சொல்லப்படும் உனக்கும் கீழே தாழ்த்தப்பட்ட ஒருவன் இருப்பதால் மகிழ்ச்சியடையும் நீயும் பார்பனர்களால் தாழ்த்தப்பட்டவன் தான், உனக்கும் கிழே உள்ளவனை முன்னேற்றாமல் சமூக சமத்துவம் ஏற்படாது, , இந்து மதத்தினால் தொடரும் தீண்டாமையை ஒழிக்க பிற்பட்டவர்களும் மதத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்பதாக பிற்பட்டவர்களுக்கு சுட்டிகாட்டிச் சொல்லுகிறார். தாழ்த்தப்பட்ட தலித்துகளே இந்துமதத்தில் இல்லை என்றால் சூத்திரனுக்குத்தான் அந்த இடத்தில் வைக்கப்படுவர் எனவே சூத்திரனாகச் சொல்லப்படும் பிற்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களை சமமாக நடத்தாவிட்டால் பிற்பட்டவர்களுக்கும் ஆபத்தானது என்பதே தந்தை பெரியார் சொல்வது

************

அதையே வேறுரொரு கூட்டத்தில்,


தந்தை பெரியார் கூறுகிறார்,

“தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால், அது எங்கள் நலத்திற்கு செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கு என்று செய்ததாக மாட்டாது. ஏனெனில் உங்களுக்கும் எங்களுக்கும் சமூக வாழ்வின் பொதுத் தத்துவத்தில் சிறிதும் பேதமில்லை. அநுபோகத்தில் மாத்திரம் ஏதாவது அளவு வித்தியாசமிருக்கலாம். உதாரணமாக நீங்கள் எப்படி தீண்டப்படா தவர்களோ, அப்படியே தான் உங்களை விட சிறிது மேல் வகுப்பார் என்கின்ற நாங்களும் ஒரு வகுப்பாருக்கு - அதாவது கடவுள் முகத்திலிருந்து பிறந்ததாகவும் பூலோக தேவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர் களுக்கு நாங்கள் தீண்டாதவர்களாகவே இருக்கின்றோம். கோயில் பிரவே ஷம் என்பதிலும் உங்களைவிட சற்று முன்னால் போக மாத்திரம் அனுமதிக் கப்படுகிறோமே தவிர மற்றபடி பார்ப்பனர் நிற்கும் இடத்திற்குப் பின்னால் தான் நிற்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். நீங்கள் கோயிலுக்குள் வந்தால் எப்படிக் கோயிலும் சாமியும் தீட்டுப்பட்டு விடுகின்றதோ, உங்கள் எதிரில் சாப்பிட்டால் உங்களுடன் சாப்பிட்டால் உங்கள் வீட்டில் சாப்பிட்டால் எப்படித் தோஷமும் பாவமுமான காரியமாகி விடுகின்றதோ அப்படியே எங்கள் வீட்டிலே எங்கள் முன்னாலே எங்கள் பக்கத்திலே சாப்பிட்டாலும் தோஷம், மோசம் பாவமென்று தான் சொல்லப்படுகின்றது”

நமது சமூகத்திற்கு பெயர் சொல்லி அழைப்பதிலும் உங்களைவிட மிக இழிவாகவேதான் அழைக்கப்படுகின்றோம். உங்களைப் பறையர் என்றும், பள்ளர் என்றும் சொல்லுகிறார்கள். ஆனாலும் பறையர், பள்ளர் என்கின்ற வார்த்தை தொழிலையும், வசிப்பு இடத்தையும் பொறுத்து ஏற்படுத்தப்பட்டது. பறையனும் பள்ளனும் அந்த பெயரால் சுதந்திரமான வராகவும் இழிவுபடுத்தத்தகாதவராகவும் இருக்கிறார்கள். ஆனால் எங்களை அழைக்கும் பெயராகிய சூத்திரன் என்று சொல்லப்படும் பேரானது பிறவி யிலேயே இழிவை உண்டாக்கத்தக்கதும், ஒருவனுக்குப் பிறவி அடிமை யாகவும், பிறவி தாசி மகனாகவும் மற்றும் மிக்க இழிவான கருத்துக் கொண்டதாகவுமே இருக்கின்றது. எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நிர்ப்பந்தங்களும் சகிக்க முடியாத இழிவை கொடுக்கக்கூடியதாகவே இருக்கின்றது. பறையன் என்றால் சொந்தத்தாய் தந்தைக்கே பிறந்தவன் என்கின்ற கருத்து உண்டு. ஆனால் சூத்திரன் என்றால் - தாசிமகன், வேசிமகன், வைப்பாட்டி மகன், பிறவி அடிமை, விலைக்கு வாங்கப்பட்ட அடிமை என்பது போன்ற பல இழிவுப் பொருள்கள் நிறைந்திருக்கின்றத - (குடியரசு 16-6-1929)


அதாவது பிற்பட்ட சூத்திரர் நிலையும் தாழ்த்தப்பட்டவர் நிலையும் ஏறக்குறைய ஒன்று தான், தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னெடுத்துச் செல்லும் போராட்டங்கள் அனைத்திலும் பிற்பட்டவர்களை சூத்திரன் என்று சொல்லும் இழிவு நிலையை அகற்றுவதும் அடங்கி இருக்கிறது.

**********
dalit12
அதே தெளிவில் வேறொரு கூட்டத்தில், தந்தைப் பெரியார் அதையே,

"பறையன் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுகிறீர்-களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களேயாவீர்கள். மற்றும் பேசப் போனால் பறையன், சக்கிலி என்பதற்கு இன்னார்தான் உரிமை என்றும், அது கீழ்சாதி என்பதற்கு இன்னது ஆதாரமென்று சொல்-லுவதற்கு ஒன்றுமே இல்லை. கை பலமேயொழிய, தந்திரமேயொழிய வேறில்லை. ஆதலால் பறைபட்ட-மாவது சீக்கிரத்தில் மறைந்துவிடக் கூடும். உங்கள் சூத்திரப்பட்டத்-திற்குக் கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஆகிய அநேக ஆதாரங்கள் உண்டு.... ஆதிதிராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுகளும், செய்யப்படும் முயற்சி-களும், ஆதிதிராவிடர் அல்லாத மக்களில் பார்ப்பனரல்லாத எல்-லோருடைய நன்மைக்கும் என்பதாக உணருங்கள் என்று பெரியார் குறிப்-பிட்டுள்ளார். (குடிஅரசு 11.10.1931)

தாழ்தப்பட்டவர்களுக்கு பிற்பட்டவர்கள் ஏன் போராடவேண்டும் என்று சொன்ன பெரியார், தாம் உருவாக்கிய திராவிட இயக்கம் என்றால் என்ன என்பதை மிக அழகாக,

‘திராவிடர் கழகம்’என்பது, 4-வது வருணத்தாராக ஆக்கப்பட்டு, சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு, சரீரப் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் ஒரு 4 கோடி மக்கள் கொண்ட சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்லவேண்டும்.


திராவிட இயக்கம் என்பது சூத்திரனாக இழிவுபடுத்தப்பட்ட பிற்பட்டவர்களுக்கும், சமூதாயத்தால் இழிவு படுத்தப்பட்ட மிகவும் பிற்பட்டவர்களுக்கும், உடல் உழைப்பாளிகளாக ஒதுக்கிவைப்பட்டு தீண்டதகாதவர்கள் ஆக்காபட்ட மொத்தம் 4 கோடி பேர்களின் சமூக விடுதலைக்கானது. பெரியார் காலத்தில் பிற்பட்டவர், மிகவும் பிற்பட்டவர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற அரசு பிரிவுகள் இல்லை, பிற்பட்டவர்களையும், மிகவும் பிற்பட்டவர்களை தாழ்த்தப்பட்ட சூத்திரர்களும், பஞ்சமர் (ஐந்தாம் பிரிவினர்) அல்லது சண்டாளர்கள் என்று பார்பனர்களால் அழைக்கப்பட்டவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் இருந்தது.

*****

இவ்வாறு தான் தந்தை பெரியார் சூத்திரன் என்று சொல்லப்பட்டவர்களுக்கும் பஞ்சமர் என்று சொல்லப்பட்டவர்களுக்கும் தான் பாடுபடுகிறேன் என்று தெள்ளத்தெளிவாக கூறியதால் தான் திராவிட இயக்க எழுத்தாளர்கள் முதல், திருமா உள்ளிட்ட பல தலித் தலைவர்களும், எழுத்தாளர்களும் கூட தந்தை பெரியார் தலித்துகளுக்காக பாடுபட்டார் என்பதை எழுதி மெய்பித்து வருகின்றனர்.

பார்பனர்கள் பிற்பட்டோர்களுடன் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்டடோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டோரை தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கினர். அதை பிற்பட்ட சமூகத்துக்கு புரிய வைத்து ஒட்டுமொத்த தீண்டாமைக் கொடுமை விலங்குகளை தகற்தெறிய பாடுபட்டார். அவருடைய நோக்கமே ஒட்டுமொத்த தீண்டாமை குறித்தே இருந்தது. தானும் தாழ்த்தப்பட்டவன் தான் என்று பிற்பட்டவர்களுக்கு புரியவைக்காமல் தலித்துகளுக்கு மட்டுமே பாடுபட்டாலே சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் தீண்டாமை விலங்கை அறுத்தெறிய முடியும் என்கிற நம்பிக்கைகள் அவருக்குக் கிடையாது. தனக்கும் கீழானவன் என்பதாக பிற்படுத்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு செய்த கொடுமைகளை தந்தை பெரியார் ஏற்றதே இல்லை. தீண்டாமையை கடைபிடிக்கின்ற பிற்படுத்தப்பட்டவர்களை எதிர்த்து எந்த ஒரு போராட்டத்தையும் அவர் ஆரம்பிக்கவில்லை மாறாக இந்த நிலை தொடர்வது கூடாது 'பார்பனர் உன்னையும் சூத்திரனாகத்தான் வைத்திருக்கிறார்கள்' என்று ஒட்டுமொத்தமாக அவர்களைவைத்தே சுட்டிக்காடி திருத்தினார்.

தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்தினால் தாழ்த்தப்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும் ? பெரியார் சொல்லுகிறார்

"இந்த ஜில்லா ஆதிதிராவிடர்கள் மகாநாட்டுக்கு நான் இதற்கு முன் நான்கைந்து தடவை அழைக்கப்பட்டிருந்தாலும், அப்போது பல காரணங்களால் எனக்கு வர முடியாமல் போய் விட்டதால், இந்தத் தடவை கட்டாயமாய் எப்படியாவது வரவேண்டுமென்று கருதியே வந்து சேர்ந்தேன். வரவேற்பு கழகத் தலைவர் என்னைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து கூறினார். அவ்வளவு புகழ்ச்சி எனக்கு வெட்கத்தை கொடுத்ததேயல்லாமல் மற்றபடி அதில் உண்மை இல்லை என்று சொல்லுவேன்,

உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால் இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிற்கவேண்டும். முடியாவிட்டால் வேறு பட்டணங்க ளுக்குக் குடியேறிவிட வேண்டும். அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லா விட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்கு போய்விட வேண்டும். அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிகளாய்ப் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணியவில்லையானால். உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்லுவேன்."

****

பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய கிராமங்களில் இன்றும் தீண்டாமைக் கொடுமைகள் தொடரும் போது, அன்றைக்கு எத்தனை கிராமங்கள் இதே போன்று இருந்திருக்கும் ? வாழும் இடத்தில் அடையாளப்படுத்தப்பட்டால் அடையாளம் காண முடியாத இடத்துக்கு இடம் பெயர்வதன் மூலம் இழிவுகளை அகற்றிக் கொள்ளமுடியும், மதம் மாறுவதால் இழிவை அகற்றிக் கொள்ளமுடியும் என்று பெரியா வலியுறுத்தினார். ஆம் இன்றைக்கு வெளிநாடுகளில் வாழும் தலித்துகள் எவருக்குமே வன்கொடுமைகள் தொடர்வது இல்லை.

முதாய்பாக, தந்தை பெரியார்,

‘‘ஆதித்திராவிட சமுகத்தாருக்கு, மற்ற சமூகத்தார் செய்யும் கொடுமைகளைப் பற்றிக் கேட்க எனக்கு ஆத்திரமாய் இருக்கின்றது. ஆனால் இதற்கு யார் ஜவாப்தாரி என்பதைப் பற்றி யோசித்துப் பார்க்கையில், உங்களைக் கொடுமை செய்பவர்கள் ஜவாப்தாரியல்லர்; ஏனெனில் அவர்கள் தங்களது நம்பிக்கையின்பேரில், தங்களது மத உணர்ச்சி, மத ஆதாரம் ஆகியவைகளில் உள்ள பற்றுதலின் பேரில் தங்கள் முன் ஜென்மத்தின் கர்மம் - பூர்வபுண்ணியம்-தலைவிதி என்கின்ற சுதந்திரத்தின் பேரில், ஒரு உரிமை பாராட்டி அம்மாதிரி செய்கிறார்களேயொழிய வேறில்லை....

மத சம்பிரதாயப்படி நீங்கள் சக்கிலியரை பறையர்களை விட உயர்ந்த ஜாதியாராகவும் கடவுள் அந்தப்படி உங்களைப் படைப்பித்ததாகவும் அதற்குக் காரணம் உங்களு டைய பூர்வஜன்ம கர்மத்தின் விதி யென்றும் கருதுகிறீர்கள். உங்களைத் தாழ்ந்த ஜாதியாய் கருதியிருப்பவர் களும் அப்படியேதான் மத ஆதாரத் தாலும் கடவுள் செயலாலும் பூர்வ ஜன்மாந்தர கர்ம விதியாலும் அப்படிப் பிறந்ததாகக் கருதியிருக்கின்றார்கள். இந்த மாதிரியான மதம் கடவுள் ஜென் மாந்திர விதி ஆகிய மூன்றையும் நம்பியிருக்கின்றவன் இம்மூன்றையும் பாதுகாக்க விரும்புகின்றவன் எப்படி மற்ற மக்களை சமமாகக் கருதக்கூடும்? பணக்காரனும் தான் பணக்காரனா யிருப்பதற்கு இதே காரணம்தான் கருதிக் கொண்டிருக்கிறான். திருடனும் தான் திருடனாய் இருப்பதற்கும், அயோக்கி யனும் தான் அயோக்கியனாய் இருப்பதற்கும், அரசனும் தான் அரசனா யிருப்பதற்கும், கூலியும் தான் கூலியாயிருப்பதற்கும், ஏழையும் தான் ஏழை யாயிருப்பதற்கும், கொடுங்கோல் ஆட்சியில் கஷ்டப்படும் குடிகளும் (பிரஜையும்)தாங்கள் கஷ்டப்படுவதற்கும் மத சம்பிரதாயத்தையும் கடவுள் சித்தத்தையும் பூர்வ ஜன்ம கர்மவிதியையும் காரணமாய் கருதி தங்கள் நிலையில் திருப்தி கொண்டு இருக்கின்றார்கள். இந்த மாதிரி மக்களை உடைய தேசத்தில் எந்த மாதிரியான முன்னேற்றத்தைக் காணக்கூடும்? இந்த தேசத்தை மனிதத் தன்மையுடைய தேசமாகவும், மானமுள்ள தேசமாகவும், சுவாதீனமும் சமத்துவமுமுள்ள தேசமாகவும், ஆகச் செய்யவேண்டுமானால் மேல்கண்ட மூன்றும் அதாவது மதம், கடவுள், விதி ஆகிய மூன்றும் அடியோடு ஒழிக்கப் பட்டாக வேண்டும். அந்தப்படி யில்லாதபட்சம் வெறும் பேச்சுதான் நடை பெறுமே யொழிய காரியத்தில் ஒரு சிறிதும் பயனடைய முடியாது என்று நான் உறுதியாய்ச் சொல்லுவேன்


************

பெரியார் ஏன் பெரியார் ? வெறுமனே 'உபதேசம், பிரசங்கம்' செய்யாமல் தாழ்த்தப்பட்டவன், சூத்திரன் எல்லாம் ஒண்ணு தான், இந்துமதத்தில் இருக்கும் இந்த பிரிவு கொடுமைகளை அழிக்காமல் தமிழனின் இழிநிலைமாறாது என்று மேடை தோறும் முழங்கினார். பெரியாரின் விழிப்புணர்வால் திராவிட இயக்கங்கள் மலர்ந்தது, பின்னர் தலித் இயங்கள் வளர்ந்துள்ளன. ஆட்சி அதிகாரத்தில் நடுத்தர மற்றும் பிற்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பங்களிக்க வாய்ப்பு அமைந்தது. மகாத்மா காந்தியை அவர் வாழும் காலத்திலேயே மகாத்மா என்று அழைக்கப்பட்டது போல் பெரியார் வாழ்ந்த காலத்திலேயே பெரியார் என்று போற்றப்பட்டார் பெரியார். பெரியார் தம் பிற்பட்ட நாயக்கர் சமூகத்திற்காக மட்டுமே போராடி இருந்தால் ஆட்சி அதிகார பீடத்தில் அவர்கள் மட்டும் அல்லவா அமர்ந்திருப்பார்கள் ?

படம்: நன்றி தமிழ்ஹிந்து.

பின்குறிப்பு : இந்தக்கட்டுரை தமிழ் ஹிந்துவில் பெரியார் பேச்சின் குறிப்பிட்ட ('Context') பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டுபெரியார் மீது அவதூறாக எழுதப்பட்ட கட்டுரைக்கு மறுப்பாக எழுதப்பட்டது. முழுவதையும் மறுத்து எழுத போதிய ஆதரங்கள் உண்டு, இருந்தும் வளவள என்று ஏழுதும் அயற்சியைத் தவிர்க, அந்தக் குறிப்பிட்ட கட்டுரையின் அவதூற்றை உங்கள் எண்ணத்திற்கே விட்டு வைத்திருக்கிறேன்

12 ஜனவரி, 2011

கமான் சீமான் கமான் !

வைகோ ஜெயலலிதாவிடம் சேர்ந்ததற்கும் சீமான் ஜெ வுடன் கைகோர்த்திருப்பதும் ஒரே நிகழ்வாக பரப்பப்படும் அளவுக்கு சீமான் அரசியல் நுழைவு ஆளும் கட்சி ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. தமிழக வாக்காளர்களைப் பொருத்த அளவில், நோக்கர்களைப் பொறுத்த அளவில் வைகோ ஜெ விடம் சேர்ந்த நிகழ்வு அரசியல் ரீதியாக வைகோவினால் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முடிவு. வைகோ உள்ளே இருந்ததற்கும் சீமான் உள்ளே இருந்ததற்கும் சொல்லப்பட்ட காரணம் விடுதலைப் புலிகள் ஆதரவு என்றாலும் சீமானுக்கு அதை தேச தூரோகம் என்ற இந்திய முத்திரை குத்தி அனுப்பினார்கள். வைகோ உள்ளே இருந்த போது இலங்கையின் நிலவரம் கவலை கொள்ளுவதாக இல்லை. சீமான் உள்ளே வைக்கப்பட்டது எல்லாம் முடிந்த பிறகே எனவே இவை இரண்டும் ஒரே மாதிரியான உணர்வுகளுக்கு பின் எடுக்கப்பட்ட முடிவோ, பார்க்கக் கூடிய நிகழ்வோ அல்ல. வைகோ ஜெவின் தனிப்பட்ட முடிவால் பழிவாங்கப்பட்டு அந்த காயம் முற்றிலும் ஆறும் முன்பே துரோகியை விட எதிரியே மேல் என ஜெவுடன் தொடர்ந்தால் தான் அரசியல் வாழ்வு என்னும் நிலைக்கும் என்னும் முடிவுக்குத் தள்ளப்பட்டவர். வைகோ ஜெவுடன் அரசியலில் சேர்ந்திருந்தாலும் தனிப்பட்ட கொள்கையான ஈழ ஆதரவு என்பதையெல்லாம் மாற்றிக் கொள்ளவும் இல்லை. சீமான் எடுத்துள்ள முடிவு எதிரிக்கு எதிரிக்கு நண்பன் என்னும் நிலையே.

2006ல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் அரசியல் சூழலும் தற்போதைய அரசியல் சூழலும் ஒன்று இல்லை. பலமான கூட்டணி, இலவசத் திட்டம் என்பதுடன், விஜயகாந்து என்கிற திரைப்படக் கவர்ச்சியும் வாக்குகளைப் பிரித்தும் கருணாநிதியின் திமுக வெற்றி பெற்றதோ மைனாரிட்டி அளவில் தான். ஆனால் இன்றைய தேர்தல் சூழலுக்கு முன்பு ஈழம், தமிழக மீனவர் பிரச்சனைகள், ஸ்பெக்டரம் மெகா ஊழல் , விலைவாசி உயர்வு விஷ்வரூபமாக நின்று கொண்டு இருக்கின்றன. இவற்றையெலலம் சரி செய்து ஈழ எதிர்ப்பாளர்களான காங்கிரசு மற்றும் பாமக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வது கருணாநிதிக்கு பெரும் அறைகூவல்.

இந்த தேர்தல் இலவச திட்ட ஏமாற்றுகளுக்கும் இன உணர்விற்கும் நடக்கும் போர் போல் தான் நினைக்க வேண்டி இருக்கிறது, இன உணர்வு சார்பாக வாள் சுழற்றப் போகும் சீமான் வைகோவைப் போல் வெறும் வைகோல் புலி அல்ல. அடிபட்ட புலி. இதுவரை சீமானை ஆதாரித்துவந்தது போலவும், ஜெவுடன் கைகோர்ததால் சீமான் தன்மானம் இழந்துவிட்டது போலவும் பரப்பும் உபிகளின் புலம்பல்களில் சீமான் ஒரு பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்து வந்திருப்பதைக் காட்டுகிறது, அது உறுதிப்பட்டதால் தான் என்னவோ சீமானும் தேச துரோகம் செய்ததாக கைது செய்து அடைக்கப்பட்டார்.

கருணாநிதியால் வாரி வழங்கப்படும் இலவசத் திட்டங்களைக் கருத்தில் கொண்டும், ஸ்பெக்டரம், ஈழ ஆதரவு ஆகியவற்றுடன் ஊன்றிப் பார்த்தால் இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிகவும், சீமானும் இணைந்து சந்தித்தால் தமிழகத்தில் வெற்றித் தோல்வியில் இழுபறி நிலையே நீடிக்கும், அப்போது காங்கிரசோ, பாமகவோ எடுக்கும் முடிவில் அதிமுக ஆட்சி அமைய வாய்ப்பு இருக்கிறது.

ஜெ நம்ப வைத்து கழுத்து அறுப்பவராம், நம்ப வைத்து பிறகு 'இதயத்தில் இடம் கொடுப்பது' கழுத்தறுப்பு கணக்கில் வராதா ? ஜெ காலில் விழ வைப்பவராம். உண்மை தான். அஜித்திற்கு நேர்ந்த அவமானம், மிரட்டல்கள், கருணாநிதி என்று மேடையில் சொன்னதற்காக கவுதம் மேனனுக்கு நடந்தது எல்லாம் என்ன ? விஜய் ஜெவைத் தேடிப் போனதன் காரணம் என்ன ? இவை எல்லாம் காலில் விழாததால் ஏற்பட்ட பலாபலன்கள் தானே.

வைகோ அப்படி மாறினார், சீமானும் மாறுவார்.......! மாறிவிட்டுப் போகட்டுமே....அரசியல் யாருடைய அப்பன் வீட்டுச் சொத்தும் இல்லையே.......பிறகு என்ன ? நம்பிக் கழுத்தறுத்தவர்கள் நிறைய உண்டு தான்....அவர்களிடம் மட்டும் தான் கழுத்து அறுத்து கொள்வேன் என்பது மட்டும் என்ன கொள்கையோ, சீமான் நாளைக்கே கழுத்தறுத்தாலும் அவர் ஏற்கனவே கழுத்து அறுத்தவர் இல்லையே.

வரும் தேர்தலில் யார் முதல்வராக வரவேண்டும் என்பதைவிட யார் தொடரக் கூடாது என்கிற முடிவில் ஜெவுடன் கைகோர்த்த சீமானின் முடிவு என்னைப் போன்ற பொதுவானவர்களால் வரவேற்கத்தக்கது.

சீமான் ஒன்றும் வைகோ போன்று ஒடுங்கிய புலி அல்ல... அடிபட்ட புலி

கமான் சீமான் கமான் !

சீமான் முடிவு சரியானதே......பதிவர் மோகன்தாஸின் பதிவு

11 ஜனவரி, 2011

ஒரு கற்பத்து ஏழு கணத்து ஐந்து கும்பம் அதில் 35 கீழ்முந்திரிகள் !

தலைப்பு தாறுமாறாக புரியாத மொழியில் இல்லை, தமிழ் எண்ணியல் முறைகள் பற்றி ஒரு சிலராவது அறிந்திருப்பீர்கள்.

நேற்றைய கூகுள் பஸ்ஸில் சுல்தான் ஐயா கூகுள் பஸ்ஸில் அந்த தகவலை விட்டிருந்தார். தமிழில் ஒரு கோடிக்குமேல் எண்ணுவதற்கு குறியீட்டு எண்கள் இல்லையா ? என்போர் அறிந்து கொள்ள வேண்டிய தகவல். ஆங்கிலத்தில் கூட சில்லியன் வரை தான் எண்ண முடியும், அதன் பிறகு அதனை மடங்குகளாக எண்ணிக் கொள்ள வேண்டும். இந்த தமிழ் எண்களால் ஆனப் பயன் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் (ஸ்பெக்ட்ரம்) இந்திய அரசிற்கு ஏற்பட்ட நட்டம் 'ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி' என்று லட்சம் மடங்காகச் சொல்லப்படுவது எளிதாக 'ஒரு கற்பத்து ஏழு கணத்து ஐந்து கும்பம்' சொல்லிவிடலாம்.


தமிழ் எண்கள்

ஏறுமுக இலக்கங்கள்
1 = ஒன்று -one
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thouand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம்

இறங்குமுக இலக்கங்கள்
1 – ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்

தமிழ் எண்களில் ஆர்வம் உள்ளவர்கள், ஸ்பெக்ட்ரம் பேரத்தில் நீரா ராடியா பெற்றுக் கொண்ட 60 கோடி (சர்வீஸ் சார்ஜ்) என்கிற தொகை 'ஒரு கற்பத்து ஏழு கணத்து ஐந்து கும்பத்தின்' எந்தப் பகுப்பு (டிவிசன்) மற்றும் விழுக்காடில் வருகிறது என்பதை தமிழின் இறங்கு முக எண்ணை வைத்துச் சொன்னால் நான் எனது தமிழ் கணக்கு அறிவை வளர்த்துக் கொள்வேன். கணிணி மற்றும் மின்னணு கணி பயன்படுத்திப் பார்த்தேன் என்னால் சரியான இறங்கும எண்ணை கொண்டுவர முடியவில்லை.

உலகப் பெரும் ஊழலை ஒற்றை எண்களில் (1.75 கற்பம் - கப்பம் இல்லை) சொல்லும் அளவுக்கு தமிழில் எண்கள் இருப்பது தமிழுக்குப் பெருமையா ?

இல்லை.....

அந்த அளவுக்கும் ஊழல் செய்வது தமிழனுக்குப் பெருமையா ?


************

ராடியா பெற்றுக் கொண்ட பேரத் தொகையை கீழ்கண்டவாறு வலைப்பதிவு நண்பர் வெண்பூ குறிப்பிட்டு இருந்தார்.

மொத்த‌ம் 1,75,000 கோடி
ராடியா ப‌ங்கு 60 கோடி

அதாவ‌து ஒன்றில் 0.0003428571 ப‌ங்கு

இதை த‌மிழில் சொல்வ‌த‌ற்கு கீழ்முந்திரி (1 / 102400) உப‌யோக‌மாகும். அத‌ன் ம‌திப்பு 0.000009765625. இதை 35ஆல் பெருக்க‌ 0.000341796875 வ‌ருகிற‌து. இது ஏற‌த்தாழ‌ ராடியா ப‌ங்கிற்கு ஒத்து வ‌ருவ‌தால், மொத்த‌ தொகையில் அவ‌ர‌து ப‌ங்கு "35 கீழ்முந்திரிக‌ள்" என்று சொல்ல‌லாம்.

அதாவது ஸ்பெக்டரம் பணத்தில் ராடிய பெற்றுக் கொண்ட பங்கு மொத்தப் பணத்தில்

35கீழ்முந்திரிகள்.

4:24 PM, January 11, 2011

*******

ராசாவால் ஏற்பட்ட அரசு பண நட்டம் அல்லது வருமான இழப்பு அல்லது ஊழல்

ஒரு கற்பத்து ஏழு கணத்து ஐந்து கும்பம்

அந்த தொகையில் ராடியாவிற்கு கிடைத்த கையூட்டின் (கமிசன்) பங்கு

35 கீழ்முந்திரிகள்.

10 ஜனவரி, 2011

துரோணாச்சாரியாரும் உச்ச நீதிமன்றமும் !

ஒரு சமூக நீதி தொடர்பான தீர்பின் ஊடாக தூரோனாச்சாரியாரின் செயலை பற்றி எதிர் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அதாவது தன்னை குருவாக உருவகித்து ஏகலைவன் கற்றத் தேர்ந்து கூடவே வெல்ல முடியாதவன் என்ற தகுதியைப் பெற்றதற்கு காணிக்கையாக தூரோனாச்சாரியார் ஏகலைவன் கட்டைவிரலைக் கேட்பது பற்றிய கதை அனைவருக்கும் தெரிந்ததே, அதைத்தான் உச்ச நீதிமன்றம் கண்டனம் செய்திருக்கிறது. தன்னுடைய நேரடி மாணவன் ஆக இல்லாதவனிடம் காணிக்கை கேட்டதில் உள்நோக்கம் இருந்தது, அதன் படி ஏகலைவன் என்கிற ஒரு சிறந்த வேட்டுவ வீரனை தலையெடுக்கவிடாமல் செய்து அந்த புகழை அர்சுனனுக்கு கிடைக்குமாறு துரோணாச்சாரியார் செய்தது கடைந்தெடுத்த ஐயோக்கியத் தனம் கண்டனத்துக்குரியது, துரோணரின் செயல் அவமானமானது என்பதாக தீர்பில் சொல்லப்பட்டுள்ளது.

*****

எனக்கு இந்துமதம் என்கிற ஒருங்கிணைந்த இந்திய சமயங்களுக்கான பொதுப் பெயரில் எப்போதுமே ஒப்புதல் இல்லை. இந்துமதத்தினர் என்பவர் யார் யார் ஆப்ரகாமிய மதங்களைச் சாரதவரோ அவர்கள் அனைவரும் இந்துக்கள் என்பதாக வெள்ளைக்காரன் வழிகாட்டுதலின் பெயரில் நமது சமயம் எது என்பதன் பெயருக்கு உடைய இடத்தில் இந்துமதம் என்று போடப்பட்டுள்ளது என்பதைத் தவிர்த்து இந்துக்களில் பெரும்பான்மையினர் விரும்பி அதனைப் போட்டுக் கொண்டதில்லை. அல்லது இந்து மதம் என்பதன் பொருள் தெரியாதவர்கள் இந்து மதத்தினரின் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்றும் சொல்லலாம். மதத்திற்கான கொள்கைகள் என்பதில் பார்பனர்கள் போற்றும் நான்கு வேதங்களை ஏற்றுக் கொள்பவர்கள் இந்துக்கள் என்பதாக இந்துமதத்தினருக்கு கொடுக்கப்படும் விளக்கம்.

இந்துகளில் எத்தனை பேருக்கும் அப்படியான நான்கு வேதங்கள் இருப்பது தெரியும் ? நான்கு வேதங்களும் அதை மேற்கோள் காட்டி பின்னர் வந்த பகவத் கீதை, மனு உள்ளிட்டதில் இருக்கும் நான்கு வருண கோட்பாட்டை பார்பனரில் பெரும்பான்மையினர் தவிர்த்து இந்துக்களின் பெரும்பான்மையினர் தற்காலத்தில் ஏற்றுக் கொள்வதில்லை. எனவே இந்து மதத்தினர் நான்கு வேதங்களை போற்றுபவர்கள் என்கிற அடிப்படையே ஆட்டம் கண்டவையே. பிறகு எது தான் இந்து மதம் ? இந்துமதம் என்பது ஒரு பொதுப் பெயர் தான். இந்தியர் என்பதில் இந்திய இஸ்லாமியர், கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியரும் அடக்கம் என்பது போல் தனித் தனியான பல் வேறு சமய நம்பிக்கைகளை உடைய இந்தியம் சாராத சமயத்தினர் தவிர்த்து அனைவரும் இந்துக்கள்.

இந்து சமயத்தின் மூட நம்பிக்கை என்பது பொதுவாக இந்துக்கள் அனைவரிடமும் இருக்கும் மூட நம்பிக்கை அல்ல. அதனுள் இருக்கும் குறிப்பிட்ட பிரிவில் இருக்கும் மூடநம்பிக்கை சார்ந்தது மட்டுமே. வைணவர்களிடம் இருக்கும் சில நம்பிக்கைகள் சைவர்களிடம் இருக்காது, அது போல் குலதெய்வ வழிபாட்டினர், சக்தி வழிபாட்டினர் இவர்களிடம் இருக்கும் நம்பிக்கை பிறரிடம் இருக்காது, எனவே இந்து சமய மூடநம்பிக்கை இந்துக்களுக்கு பொதுவானதோ, பொதுப்படுத்துதலில் அடக்குவதோ தவறு, அல்லது இந்திய சமயம் சார்ந்த தெளிவுகள் எதுவுமே இல்லாமல் பொதுப் படையாகச் சொல்லும் ஒரு மேலோட்டமான விமர்சனம் மட்டுமே. தலையில் தேங்காய் உடைப்பதோ, குழந்தைகளை குழிக்குள் போட்டு பிறகு எடுப்பதோ இந்துக்கள் அனைவரின் செயல் அல்ல, அது போல் பூணூல் அணிவதன் மூலம் தாம் உயர்ந்த பிராமணப் பிறவி (இருபிறப்பு) அடைவதாகக் கூறிச் செய்யும் பார்பனர்கள் மற்றும் ஆசாரி, செட்டியார் உள்ளிட்டோரின் மூட நம்பிக்கை இந்து மதத்தினர் அனைவருக்கும் பொதுவானதோ, வலியுறுத்தப்பட்டதோ அல்ல. இந்துமதத்தின் பொதுவான நம்பிக்கை இதுதான் என்று சொல்ல அறுதியிட்டு எதுவும் இல்லை. ஆப்ரகாமிய மதங்களின் தாக்கத்தில் பொதுவான புனித நூல் 'பகவத் கீதை' என்பது நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படுகிறது, தீவிர சைவர்களை அதில் சத்தியம் செய்யச் சொன்னால் வெறும் கடமைக்குத்தான் செய்வார்கள்.

*****

முதல் பத்திக்கும் மேற்கண்ட இந்து சமயம் சார்ந்த தகவல்களுக்கும் தொடர்பில்லை, இந்திய நிலப்பரப்பின் பழங்கதைகள் என்பதாக இராமயணம் மகாபாரதம் உள்ளிட்டவை, அவைகளும் பல்வேறு உள்ளடக்கத்துடன் (வெர்சன்) ஆயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்படுகின்றன, இன்றைக்கு அவற்றை படிக்கும் நாம் அறிவாளிகள் போலவும், அவற்றில் இருப்பது அபத்தங்கள், முறையற்றவை போன்றும் நமக்குத் தெரிவதற்கு இன்றைய வாழ்வியல் சூழல் என்பது தவிர்த்து வேறெதுவுமே இல்லை. மேற்கண்ட துரோணர் - ஏகலைவன் கதையையே எடுத்துக் கொண்டால், ஏகலைவன் என்கிற பாத்திரம் கதையில் வைத்திருக்க காரணம், தூரோணர் என்பவரின் ஆசிரியர் திறமையை சிறப்பிக்க வரும் ஒரு பாத்திரம், அதாவது அந்த ஆசிரியரை மனதினால் நினைத்தாலே அவர் கற்றுக் கொடுக்க வேண்டியவற்றை அவர் இல்லாமலேயே கற்றுக் கொள்ள முடியும், என்பது தான் அந்த ஏகலைவன் பாத்திரத்தின் மூலம் கதையில் சொல்ல வருவது, மகாபாரதத்தில் இது ஒரு கிளைக்கதைதான்.

ஏகலைவன் ஒரு வேடன், இயல்பாக வில் ஏற்றம் செய்யக் கூடியவன், மேலும் அவனுக்கு ஒரு ஆசிரியர் கிடைக்கும் போது அவன் அதில் சிறந்தவன் ஆகிறான், எது போன்ற ஆசிரியர் என்பதில் துரோணர் என்பதை பதிலாக வைத்திருக்கும் ஒரு கிளைக்கதை, அந்த ஏகலைவன் பாத்திரமே துரோணரின் ஆற்றலைக் குறிக்கப் பயன்படுத்தும் ஒரு குறியிடூ, அத்துடன் அந்தப் பாத்திரம் கதைக்குத் தேவை இல்லை என்பதாக கட்டைவிரலை வெட்டிக் காணிக்கைக் கேட்பதுடன் அந்தப் பாத்திரத்தை ஓரம் கட்டிவிட்டு மகாபாரதக் கதை அடுத்தப் பகுதிக்கு கதை நகர்ந்துவிடும். இதே போன்று இராமயணத்தில் சொல்லபடும் வாலியின் பாத்திரமும் அவன் அளவில் அவனுடைய பலம் எதிரே போருக்கு நிற்பவனைவிட இருமடங்கு என்பதாக சொல்வது அவன் எளிதில் நேருக்கு நேர் வெல்ல முடியாதவன் என்று சொல்வதற்கான ஒரு கதை சொல்லும் உத்திமட்டுமே, பிறகு எப்படி வெல்லப்பட்டான் ? என்று சொல்ல இராமன் மறைந்திருந்து வில் ஏற்றிக் கொன்றான் என்பதாக அந்த கிளைக்கதையை முடித்து அடுத்தப்பகுதிக்குச் செல்கிறார்கள்.

இந்த இருகதைகளை வைத்து தான், துரோணர் செய்தது சரியா ? இராமன் மறைந்திருந்து கொன்றது சரியா என்ற விவாதமெல்லாம் நடக்கின்றன, உச்சகட்டமாக உச்ச நீதிமன்றமே விமர்சனம் செய்திருக்கிறது. பல பாகங்களையும், பல நூறு கிளைக்கதைகளையும் வைத்துக் கதை எழுதியவர்கள் இந்த சின்ன கிளைக்கதையில் சறுக்கிவிட்டதை, கோட்டைவிட்டதை தற்போது நாம் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்பு என்று கூறி மேதாவித்தனத்தை காட்டும் போது, இந்துமதம் குறித்த பலவேறு எதிர்மறை விமர்சனம் செய்யும் என்னால் கூட நகைக்காமல் இருக்க முடியவில்லை. திரவுபதிக்கு ஐந்து கணவர்கள் இருக்கும் அதே மகாபாரத்கதையில் தான், தன் கணவனுக்கு (திருதராட்சதன்) கண் இல்லை என்பதால் தானும் கண்ணைக்கட்டிக் கட்டி வாழும் (காந்தாரியின்) கதையும் சொல்லப்பட்டு இருக்கிறது. விமர்சனம் செய்பவர்கள் திரவுபதி கதை மட்டுமே எடுத்துக் கொண்டு கதை எழுதியவன் முட்டாள் என்பது போல் பரப்புகிறார்கள்.

பலதார மணங்களுக்கு ஆதரவானவர்கள் கூட ஒரு பெண் அவ்வாறு பல கணவர்களை திருமணம் செய்வது சமூகக் கேடு என்பது போலவும், இந்தக் கதைகள் பண்பாடற்ற கலாச்சாரத்தின் கண்ணாடி என்பது போலவும் இந்தியபண்பாடுகள் கீழானவை என்பது போல் சொல்லுகிறார்கள். இந்தப் பழங்கதைகள் எந்தக் காலத்திற்கும் ஏற்றக் கருத்துகள் கொண்டவை என்று சொன்னால் அதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன், ஆனால் அதே சமயத்தில் அனைத்தையும் ஒளிவு மறைவு இன்றி பதிவு செய்திருப்பதன் வெளிப்படையை நாம் போற்றவேண்டும் என்றோ எழுதிய கதைகளை விமர்சனம் செய்வது இன்றைய சூழலில் நாம் அறிவாளிகள் என்று காட்டிக் கொள்ளூம் ஒரு மேட்டிமைத் தனமேயன்றி வெறொன்றும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை. பலநூறு கிளைக்கதைகளை வைத்து எழுதப்பட்டவை சின்ன சின்ன நிகழ்வுகளை எழுதும் போது சறுக்கிவிட்டது என்று சொல்ல அவை 'சித்தி, அண்ணாமலை, செல்வி, அண்ணாமலை' வகை கதைகளும் அல்ல.

தீர்ப்பு சொல்லும் நீதிபதிகள் கடவுள்களும் அல்ல. முன்பெல்லாம் மிசனரிகள் தான் இந்திய புராணக் கதைகளின் பாத்திரங்களை இழிவு செய்வார்கள், இப்போது இந்திய நீதிபதிகளே செய்வது வருத்ததிற்குரியது. மற்றபடி இதை எழுதுவதன் மூலம் நான் இந்துமத இடிதாங்கி என்று நினைத்தால் தவறு, அந்த புரிதலைத் தவிர்க்கவே இரண்டாம் மூன்றாம் பத்திகளில் இந்துமதத்தின் வரையரைக் குறித்துக் குறிப்பிட்டுள்ளேன்

6 ஜனவரி, 2011

திருவள்ளுவர் குறித்த சமயச் சர்சைகள் !

திருக்குறளில் இருக்கும் குறள்களுக்கு இட்டுக்கட்டிப் பொருள் சொல்வதில் நம் தமிழக சமயங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை. திருவள்ளுவர் சைவ சமயத்தவர் என்று ஒரு கூட்டமும், இல்லை இல்லை திருவள்ளுவர் 'இலக்குமி' குறித்தெல்லாம் பாடலில் சொல்லி இருக்கிறார் அவர் விஷ்ணுவை வழிபடும் வைணவப் பிரிவைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டமும் சொல்லிக் கொண்டு திருவள்ளுவருக்கு பட்டைப் போடுவதா ? நாமம் போடுவதா ? அப்படிப் போட்டாலும் எந்தக் கலை நாமம் போடுவது என்றெல்லாம் விவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் மறுத்து 'எண்குணத்த்தான், தாமரைக் கண்ணான்' என்ற சொல் சங்க காலம்த் தொட்டே புத்தரைக் குறிக்கிறது, ஐம்பெருங்காப்பியங்களிலும் அந்தச் சொற்கள் புத்தரைத்தான் குறிக்கிறது எனவே திருவள்ளுரும், திருக்குறளும் பவுத்தம் சார்ந்தவை என்கின்றனர் ஒரு கூட்டத்தார்.

மயிலை சீனி வெங்கடசாமி மற்றும் பலர் 'பகவன்' என்ற சொல் சமணர்களின் அருகனைக் குறிப்பதாலும், தவம் செய்தல், வீடுபேறு போன்றவை சமண / பவுத்த சமயங்களுக்கே உரிய கொள்கை என்பதால் திருவள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றும் சொல்லி இருக்கின்றனர். திருவள்ளுவரை பவுத்தராக, சமணராகச் சொல்ல கிடைக்கும் காரணங்களைவிட சைவம் மற்றும் வைணவமாகச் சொல்லக் கிடைக்கும் சொற் தரவுகள் மிகவும் சொற்பமே. இதையெல்லாம் வீட நகைச்சுவையானது என்னவென்றால் கிறித்துவர்கள் சிலர் திருவள்ளுவரும், புனித தோமையரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள், தோமையரின் போதனைகளைத்தான் திருக்குறளில் திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் எனவே திருவள்ளுவர் ஒரு கிறித்துவர் என்றும் சொல்கின்றனர். கிறித்துவர்கள் அனைவரும் முகமது நபியை ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர்கள் என்பதால் (இஸ்லாமியர்களின் நம்பிக்கைப் படி அல்லா உலகின் முதல் சமயமாக இஸ்லாமைத்தான் படைத்தாராம், முகமது நபியை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஒருவர் முழுமையான இஸ்லாமியர் ஆகிறார். இந்த நம்பிக்கைபடி கிறித்துவர்கள் அனைவரும் அரைகுறை இஸ்லாமியர்கள்) திருவள்ளுவரை இஸ்லாமியர் என்றும் சொல்லலாம் போல :)


(திருநீறு - என்று ஒன்று புழக்கத்தில் இல்லாத சங்க காலத்தில் திருவள்ளுவர் திருநீற்றுப்பட்டைப் போட்டுக் கொண்டிருப்பதாக சைவ(வெறியர்களால்) திரித்து திருத்தப்பட்டு, திருவள்ளுவர் அவமானப்படுத்தப்பட்டுள்ளப் படம்)

திருவள்ளுவர் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட கிமுவில் சைவ, வைணவ சமயங்கள் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவான உண்மை. சங்க இலக்கியங்கள் நாலடியார் ஆகியவற்றில் குலதெய்வ வழிபாடுகளும் (மாயோன், சேயோன்) பற்றிய குறிப்புகளும், சமண, பவுத்த மதக் குறிப்புகள் மட்டுமே காணக்கிடக்கின்றன. தொன்று தொட்டுவந்த மாயோன் சேயோன் வழிபாடு பின்னர் புராணப் புகுத்தலின் வழியாக சைவ வைணவ சமயத்தினுள் இழுத்து கொள்ளப்பட்டுள்ளது என்பதே உண்மை. மதம் மாறியவர் அந்த சமயத்தைச் சேர்ந்தவராகிவிடுவார் என்பது போல் குலசாமிகள் மதமாற்றம் செய்யப்பட்டது போன்றவை தான் பிற்காலத்தில் தமிழ் தெய்வங்கள் வைதீக சமய தெய்வங்கள் ஆனக் கதைகளும். இது கிடக்கட்டும்.

திருவள்ளுவர் குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர் என்று சொல்ல திருக்குறள் மக்களிடையே பரவலாக புகழ்பெற்றதும் தொன்மை வாய்ந்தது என்பது தவிர்த்து வேறு காரணங்கள் இல்லை. தொன்மை சார்ந்தவை தெய்வீகமானவை என்கிற மூட நம்பிக்கைகள் சார்ந்து இல்லாவிட்டாலும், திருக்குறளின் சமூக கருத்துகளுக்காகவே அது போற்றத்தக்க இலக்கிய நூல் என்ற பெயர் பெற்றது. பெரியார் உள்ளிட்டோர் புறகணித்தாலும் திருக்குறளுக்கு உரை எழுதாதவர்கள் தமிழறிஞர் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்பது போல் கருணாநிதி உள்ளிட்டோர் திருக்குறளுக்கு உரை எழுதித் தள்ளி தங்கள் சார்ந்துள்ள கொள்கையின் வழியாக திருக்குறளுக்கு பொருளும் எழுதினர். கருணாநிதி உள்ளிட்ட பகுத்தறிவாளர்களுக்கு திருவள்ளுவரை சமயம் சார்ந்தவர் இல்லை என்பதாக காட்டக் கூடிய கட்டாயம் அவர்கள் (முன்பு?) சார்ந்திருந்த கொள்கை என்பது தவிர்த்து வெறெதுவும் இல்லை.

திருக்குறளை கருணாநிதி மட்டுமல்ல, ஆத்திகவாதிகளும் கூட சமயம் சார்பற்றது திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் என்பதாகவும் நிறுவுகின்றனர். சைவ, வைணவ, பவுத்த, சமணம் சார்ந்தவர் என திருவள்ளுவருக்கு சமயச் சாயம் பூச திருக்குறள் தொண்மையானது மற்றும் புகழ்பெற்றது ஒரு காரணம் என்ற போதிலும், சமய சார்பற்றவர் என்று காட்ட என்ன சிறப்புக்காரணம் இருக்க முடியும் ? குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர் திருவள்ளுவர் என்று சொல்வதன் மூலம் திருக்குறள் புறக்கணிக்கப்படலாம் என்கிற தேவையற்ற அச்சமே. மேலும் சமயசார்பற்றவர் என்று சொல்வதன் மூலம் திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்கிற புதிய பொதுவான புனித சாயம் பூசப்படும். ஏனென்றால் பொதுவானவரைத்தான் பலதரப்பும் விரும்புமாம்.

இவர்களெல்லாம் இப்படி வட்டம் கட்டி திட்டம் போட்டு செயல்படுவார்கள் என்றால் திருவள்ளுவர் திருக்குறளை எழுதி இருக்கவே மாட்டார். கண்ணதாசன் எழுதிய' ஏசு காவியத்தை' 200 ஆண்டுகளுக்குப் பிறகு படித்த ஒருவர் கண்ணதாசன் கிறித்துவ நம்பிக்கையாளர் என்பதுடன் அவர் ஒரு கிறித்துவர் என்று சொன்னால் அப்போது உள்ளவர்கள் நம்பக் கூடும், மாற்றாக கண்ணதாசன் 'அர்தமுள்ள இந்துமத'ம் எழுதியவர் எனவே அவர் ஒரு இந்து என்று மற்றொருவர் சொன்னால் அதையும் சிலர் நம்புவார்கள், கண்ணதாசனின் தத்துவப்பாடல்களை மட்டும் சுட்டிக்காடி கண்ணதாசன் எந்த மதத்தையும் சாராதவர் என்று வேறு சிலர் சொன்னால் அதுவும் நம்பப்படும். ஆனால் கண்ணதாசன் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது அவர் வாழும் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தானே தெரியும்.

**********

திருவள்ளுவர் குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர் என்பற்கு ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, சமய நம்பிக்கைகளான வேள்வி மற்றும் வீடுபேறு, இறைவணக்கம் ஆகியவை திருக்குறளில் இருக்கின்றது. எனவே அவர் எதோ ஒரு சமயம் சார்ந்தவராக இருக்க வேண்டும் அது சமணமாகவோ, பவுத்தமாகவோ அல்லது சாக்கியமாகவோ கூட இருக்கலாம், அல்லது அப்போது நிலவிய அவற்றின் கலவையாகக் கூட இருக்கலாம், தற்போதும் கூட சைவம், வைணவம் இருபிரிவுகள் இருந்தாலும் இரண்டையும் வழிபடும் நம்பிக்கையாளர்கள் இப்பிரிவுகளை மட்டும் பின்பற்றுபவர்களை விடமிகுதி. திருவள்ளுவரை குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர் என்று அந்த குறிப்பிட்ட சமயத்தை சார்ந்தவர்கள் கொண்டாடுவதாலும், திருவள்ளுவர் சமயசார்பற்ற பொதுவானவர் என்று புதிய புனித பொதுச சாயம் பூசப்படுவதாலோ தனியாக பெருமை ஒன்றும் சேர்ந்து கொள்ளப் போவதில்லை, திருக்குறளில் இருக்கும் நல்லக் கருத்துகளை விட்டுவிட்டு அவற்றிற்கும் சமய சாயமும், சமயமற்ற பொதுச் சாயம் (வெள்ளை அடிப்பது) பூசுவதால் திருக்குறளுக்கு என்ன நேர்ந்துவிடப் போகிறது, இவையெல்லாம் தற்காலத்தினர் திருக்குறளுக்குத் தேடித்தரும் சிறுமைகள் ஆகும். கண்டிப்பாக ஒப்பிட வில்லை ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன், ஏஆர் ரகுமான் ஒரு இஸ்லாமியர் என்பதற்காக அவரது இசை ஒரு இந்துவுக்கு கசக்கிறதா என்ன ? திருவள்ளுவர் எந்த சமயம் சார்ந்தவராக இருந்தால் என்ன ? அவரை ஏன் குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர் என்றும் சமயமே சாரதவர் என்றும் விவாதம் செய்ய வேண்டும் ?

சுட்டிகள் :

1. திருவள்ளுவரும் வைணவமும்
2. திருவள்ளுவரின் திருநெறி மேன்மைமிகு சைவநீதி
3. ஆதிபகவன்
4. (பார்பனர்களின்!) மனுக்குறளே திருக்குறள்
5. புனித தோமா -புனித தோமையர் கட்டுகதைகள்
6. திருவள்ளுவர் சமயம் யாது? - தமிழ்த் தென்றல் திரு.வி.க

5 ஜனவரி, 2011

குப்புறப் படுத்தாலும்......

பால் குடிக்க மட்டும் கற்றுக் கொண்டு பிறக்கும் குழந்தை நாள் அடைவில் செய்யும் செயல்கள்...வியப்போ வியப்பு...நாமும் அதையெல்லாம் செய்திருப்போம், ஆனால் நாம பார்த்திருக்க மாட்டோம். குழந்தைகளின் தலை நிற்கவே நான்கு மாதங்கள் ஆகும், அப்பறம் தான் பிரண்டு படுக்க முயற்சி செய்வார்கள். எங்க வீட்டு குட்டிப் பையன் சிவ செங்கதிர் நேராகவே படுத்திருந்தது போதும்னு முடிவு செய்து குப்புற படுத்து தலையைத் தூக்க துவங்கி இருக்கிறான்.



ரெடி ஸ்டார்ட்......




கையை எடுக்க வரலையே.....



கையை கஷ்டப்பட்டு எடுத்தாலும்....தலையைத் தூக்கினால் தான் ஒப்புக் கொள்ளுவாங்களாம்....




தலையை நிப்பாட்டவே எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும்...



தலையைத் தூக்கிட்டோம்லே.....



எப்பூடி.......!!! எல்லோரும் ஜோராக ஒரு தடவை கைத்தட்டுங்க....
மீசையில் ஒண்ணும் மண்ணு ஒட்டல....வாயிலேர்ந்து கொஞ்சம் ஜொள்ளு தான்......

3 ஜனவரி, 2011

காலம் மலையேறிவிட்டது !

மாறவே மாறாது என்று நினைத்தவை முற்றிலும் மாறிப் போய் இருப்பதைத்தான் காலம் மலை ஏறிவிட்டதாகச் சொல்லுவார்கள். ஒரு காலத்தில் மலை ஏறுவது என்பது அத்தனை கடினமான செயலாக இருந்திருக்க வேண்டும். தற்காலத்தில் மலை ஏறுதல் மிக எளிதானது, எத்தகைய செங்குத்தான வழியே இல்லாத மலை என்றாலும் உச்சிக்கு ஹெலிக்காப்டரில் சென்று கயிறு கட்டி இறங்கி விட முடியும். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மலை ஏற்றம் அவ்வளவு எளிதான ஒன்றாக இல்லை. கைலாய மலைக்குச் சென்றவர்களில் எத்தனை பேர் திரும்பினார்கள் என்று தெரியாது. தென்னிந்தியர்களுக்கு பழக்கப்படாத கடுங்குளிர், பனி கைலாய மலைக்குச் சென்றவர்களில் எத்தனை பேர் மீண்டு இருப்பார்கள் ? அப்படியும் சென்று திரும்பியவர்கள் உள்ளனர், முடியாது என்று நினைத்தவை அதனை உடைத்துக் காட்டுவதை மலையேற்றத்துடன் தொடர்புபடுத்திப் பேச மலையேற்றம் மிகக் கடினமாக இருந்திருக்க வேண்டும். அதுவும் சாமானியர்களால் சாதிக்கப்பட்டுள்ளது என்பதனைச் சொல்ல மலையேறிவிட்டது என்கிற உவமையாக மலையேறிவிட்ட பழமொழி வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எந்த காலத்தில் இருக்கிங்க, நீங்க நினைப்பது எல்லாம் எப்போதே மலையேறிவிட்டது, மாற்றம் என்கிற ஒன்றைத் தவிர அனைத்தும் மாறக் கூடியது என்பதை இப்படியெல்லாம் கூடச் சொல்லி வைத்துள்ளார்கள்


ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது தான் அந்த ஆண்டு விரைவாகச் சென்றதாக நினைக்கிறோம். மற்றபடி எந்த ஒரு ஆண்டும் முன்னை விட விரைவாகச் சென்றிருக்க வாய்ப்புகள் இல்லை. கடந்தவை நினைவு என்பதாக சேமிக்கப்படுவதால் அதன் சுருக்கத்தை மட்டும் தான் நம்மால் நினைத்துப் பார்க்க முடியும். ஒராண்டுகளில் நடந்த நல்லது கெடுதல்களில் எவையெல்லாம் நமக்கு முதன்மையாகப் பட்டதோ அது மட்டுமே நினைவில் நிற்கும், அவற்றை நொடிகளில் நினைத்துப் பார்க்க முடியும். அதனால் தான் பின்னோக்கிய காலம் வெகு விரைவாக கடந்து சென்றதாக உணர்கிறோம். மற்றபடி சென்ற ஆண்டின் நாட்களைப் போன்று தான் இந்த ஆண்டின் (ஆங்கில) புத்தாண்டு பிறப்பும் வெகுவிரைவாக கரைந்தது. திருமணம் உறுதிப்பட்டோர்களுக்கு திருமண நாள் வரை வரப்போகும் காலம் மெதுவானது தான். உதவியாளர் தேதிப்படி செயல்படும் தொழில் நடத்துவோர்க்கு எந்த ஆண்டுமே (தனிப்பட்ட) நேரம் என்பதே இருக்காது. (சார் இன்னிக்கு உங்க ப்ரோக்ராம்...... இரவு 8 மணிக்கு பார்க் ஷர்டனில் உங்கள் மனைவி, குழந்தைகளோடு உங்களுக்கு டின்னர்), அன்றாடம் ஒன்று போல் வேலை செய்பவர்களுக்கு, (தன்னுடைய வயது, மனைவி வயது குழந்தைகளின் வயது என்பது தவிர்த்து) புத்தாண்டு என்ன மாற்றம் கொண்டுவரும் ? பொதுவாக நம் வாழ்க்கை முறையில் ஓர் ஆண்டுகான நிகழ்வுகள் இவை என்பதாகத் தான் பெரும்பாலோனர்களின் ஆண்டுகள் ஓடிப் போய்விடுகின்றன. பருவ சுழற்சி இல்லை என்றால் ஆண்டுகள் பற்றிய கணக்கே நாட்களின் தொகுப்பை அறிவிக்கும் ஒரு அளவீடு என்ற அளவில் தான் இருக்கும்.

நினைத்துப் பார்த்தால் வியப்பாகவே உள்ளது, வள்ளுவர் வாக்கின் படி ஒவ்வொரு நாளும் செல்லும் போது நம் வாழ்நாளின் ஒரு நாளும் கூடவே செல்கிறது, புதிதாக ஒரு ஆண்டில் நம் வாழ்நாளில் ஒரு ஆண்டு எண்ணிக்கையும் சேர்ந்தே செல்கிறது, இது பற்றி எண்ணம் சிறிதும் இன்றி புத்தாண்டுகளைக் கொண்டாடத்தான் செய்கிறோம். மலையேறுவது அவ்வளவு எளிதல்ல, அப்படி ஏறினாலும் எதுவும் திரும்பாத காலத்தில் காலம் மலையேறி விட்டது என்பதை உவமையாகக் சொன்னார்கள், அப்படித்தான் 2010 மலையேறிப் போய்விட்டது. 2010 மட்டுமல்ல 2009ம் எனக்கு இனிமையான ஆண்டாகவும் பல நல்வரவுகளை பெற்றுத் தந்த ஆண்டாகவும் இருந்தது, வரும் ஆண்டுகள் இந்த அளவுக்குச் சிறப்பாக இல்லாவிட்டாலும் கிடைத்தவை செழிக்க வேண்டும் என்பதைத் தவிர்த்து புத்தாண்டில் வேறெதையும் நினைக்க வில்லை.

பிறந்த ஊருக்குச் சென்ற போது நான் சிறுவயதில் பார்த்த போது இளமை துடிப்புடன் வீறு நடை போட்டவர்கள், முதிய தோற்றத்தில் இருக்கிறார்கள். நண்பர்களின் தலையிலும் சிலரின் மீசையிலும் கரு...கரு..மை. மனித தோற்றத்தை ஜீன்களின் படி நிலை முடிவு செய்கின்றன.வாரிசுகளின் நிகழ்கால நிழலில் இளைப்பாறுவதால் நமது நிகழ்காலம் கண்டுகொள்ளப்படாமலேயே கடந்து செல்லுகிறது. கால சுழற்சியும் முதுமையும் மரணமும் இல்லை என்றால் புது உலகம் என்று எதையும் சொல்ல முடியாது, ஒவ்வொரு இழப்பிலும் உலகம் புதுப்பிக்கப்படுகிறது. காலம் மலையேறி முடித்துவிடவில்லை, மலையேறுதலில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்