பின்பற்றுபவர்கள்

பதிவர் சிங்கை வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் சிங்கை வட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 மே, 2010

மணற்கேணி - 2009 நிறைவு நிகழ்ச்சிகள் !


மணற்கேணி - 2009 நிறைவு நிகழ்வுகளாக, வெற்றியாளர்களை சிறப்பிக்கும் வண்ணம், வெற்றியாளர்கள் கலந்து கொள்ளும், சிங்கைப்பதிவர்கள் சார்பாக கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதைத் சிங்கைப் பதிவர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

(நூல் அட்டைப்படம் மருத்துவர் ருத்ரன் ஐயா)

வெற்றியாளர்கள்:
திரு தருமி (அரசியல் சமூகம்)
திரு தேவன் மாயம் (தமிழ் அறிவியல்)
திரு பிராபகர் (தமிழ் இலக்கியம்)

மணற்கேணி போட்டியில் கலந்து கொண்ட பதிவுகளின் இணைப்பு இங்கே (தமிழ்வெளி)

நிகழ்ச்சியில் சிங்கைப் பதிவர்கள், வலைப்பதிவு வாசிப்பவர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

நிகழ்ச்சி பற்றி மேலும் அறிய அழையுங்கள்:
கோவி.கண்ணன் 9876 7586
குழலி 8116 5721
ஜோசப் பால்ராஜ் 9337 2775

28 டிசம்பர், 2009

சிங்கையில் அழகிய சிங்கர் !

பதிவர் மற்றும் பாடகர் எம் எம் அப்துல்லா சிங்கையில் முகாமிட்டு இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை சிங்கைக்கு இல்லத்தினரோடு வந்தார், வேறு சில காரணங்களால் விமான நிலையம் சென்று சந்திக்க முடியவில்லை. மறுநாள் ஜோசப் பால்ராஜ், அப்துல்லா இருவரும் என் வீட்டுக்கு வந்து மூவருமாக சேர்ந்து சிங்கை நாதனை பார்க்கப் போகலாம் என்று முடிவு செய்தோம். அதன் படி மாலை 6 மணி வாக்கில் ஜோசப்பால்ராஜின் 'சொந்த'க்காரில் என் வீட்டுக்கு இருவரும் வந்தனர். சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு சிற்றுண்டிகளை முடித்துக் கொண்டு சிங்கை நாதன் வீட்டிற்கு கிளம்பினோம்.

போகும் வழியில் ஈரோடு பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடந்ததையும் அங்கு ஆட்டம் போட்டதையும் பகிர்ந்து கொண்டு வந்தார். கேபிள் (சங்கர்), தண்டோரா இருவரும் பட்டையைக் கிளம்பினார்களாம், காரில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது, இவரும் பாட தொடங்கிவிட்டார். பால்ராஜ் பாட்டு ஒலியை முற்றிலுமாக குறைத்துவிட்டார். அப்துல்லா மட்டுமே பாடிக் கொண்டு வந்தார் ( உன்னை நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்.....). ஏன்ம்பா பாட்டை நிறுத்திட்டிங்கன்னு அப்துல்லா கேட்க, அதான் லைவாக பாடுறியே அதான் நிறுத்திவிட்டேன் என்று சொல்ல கலகலப்பு.

சிங்கை நாதன் வீட்டுக்கு மாலை 7:30க்குச் சென்றோம். வீட்டில் உள்ளவர்கள் இன்னும் 1 மணி நேரத்தில் வந்துவிடுவதாகச் சொன்னார் செந்தில். செந்தில் தற்போது பார்க்கும் பொழுது முகம் நன்றாக தெளிவடைந்திருக்கிறார்.

சற்று கூடுதல் எடை, வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் உடல் எடை கூடுகிறதாகச் சொன்னார். VAD எனப்படும் இதய இயக்கியை சிறிய பையில் போட்டு குறுக்காக மாட்டிக் கொண்டு இருந்தார். நன்றாக நடக்கவும் பேசவும் முடிகிறது.

எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார். சிறிது நேரம் அவருடைய மருத்துவ நிலவரம் குறித்துக் கேட்டுக் கொண்டோம், மற்ற நிலவரங்களைப் பேசினோம். 45 நிமிடங்கள் ஆகி இருந்தது, அப்துல்லாவிற்கு வேறு சிலரைப் பார்க்க வேண்டியிருந்ததால் செந்தில் வீட்டினர் வரும் வரை காத்திருக்க முடியவில்லை. செந்திலிடம் விடை பெற்று குட்டி இந்தியாவிற்கு வந்தோம். பிறகு நான் வீட்டிற்கு விடை பெற்றேன்.

புதுகை அப்துல்லாவுடன் பதிவர் சந்திப்பு வார இறுதியில் நடக்க இருக்கிறது. அது பற்றிய விவரம் விரைவில் வரும்.

தம்பி அப்துல்லா இனிய குரலில் பாடுபவர், பதிவர் என்பதைத் தாண்டி அனைவரையும் அண்ணா என்று அழைக்கும் பாசக்காரப் பயப் புள்ளன்னு பேரு இருக்கு. ஏற்கனவே சிங்கை வந்திருக்கிறார். அப்போது குறுகிய கால இடைவெளியில் சந்தித்தோம். பிறகு தனிப்பட்ட முறையில் சென்னையில் சந்தித்து இருக்கிறேன். சாதி, மதம், குழு மனப்பாண்மையில் இயங்கும் பதிவுலகில் அப்துல்லா போன்றோர் விதிவிலக்கு, அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர். நாம் சந்திப்பவர்களில் 'இவருடன் நட்பு வேண்டும், இவர் நண்பராக அமைய மாட்டாரா ?' என்று நினைக்க வைப்போர் மிகக் குறைவுதான். அப்படி இருப்பவர்களில் இவரும் ஒருவர். அந்தவகையில் புதுகை அப்துல்லா எனக்கு தம்பி அப்துல்லா.

பின்குறிப்பு : அப்துல்லாவிற்கு அழகிய சிங்கர் பெயர் அளிப்பு அப்பாவி முரு (நன்றி)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்