சில சமயம் மெகாதொடர்களுக்கு வரும் சுண்டி இழுக்கும் விளம்பரங்கள், பார்வையாளர்களை மணிக்கு தொலைகாட்சிக்கு முன்பு அழைக்கிறது. குறிப்பாக விஜய் தொலைகாட்சியின் 'ரோஜா கூட்டம்'. இனி எதோ ஒரு தொலைகாட்சியில் வரப் போகும் மொகாதொடர்கள் பற்றிய சிறு சிறு அறிமுகங்கள்
*********
கணவன் கண்டதெல்லாம்
மனைவியின் அனைத்து பக்கங்களையும் அறிந்த கணவன், கணவனின் வேறு பக்கங்களை அறியாத மனைவி இவர்களை வைத்து பக்கம் பக்கமாக வசனமே இல்லாமல் அவர்களின் உணர்ச்சிகள், வாழ்க்கை எப்படியெல்லாம் புரட்டி புரட்டி எங்கெல்லாம் செல்கிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காணத்தவறாதீர்கள் 'கணவன் கண்டதெல்லாம்'
மாங்கல்ய தோரணம்
கவலையில்லாத கணவன், சீரியல்களின் கண்ணீருக்குக் கூட கலங்கும் மனைவி, இவர்களுடைய உலகம் மிகச் சிரியது, வீட்டில் இருவருமே சேர்ந்து இருக்கும் நேரம் வெறும் 2 மணி நேரம் தான், அப்பவும் ஒருவார்த்தை கூட பேசிக் கொள்ளமாட்டார்கள், இவர்களுக்கு இடையே ஒரு பெண் நுழையும் போது இவர்கள் என்ன ஆனார்கள் ?
தேன்கூடு
மனைவி சரி இல்லை என்று நினைக்கும் கணவன், மாதச் சம்பளம் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கும் மனைவி, இவர்களுக்கு இரு குழந்தைகள் இவர்களின் எதிர்காலம் ஒரு புதிர்காலமா ?.
மல்லிகை தோட்டம்
ராஜு, தீபா இவங்க இரண்டு பேர் தான் இந்த கதையின் முக்கிய பாத்திரமென்றாலும் தட்டுமுட்டு சாமான்களாக நிறைய பாத்திரங்கள் இவங்க காதலுக்கு எதிர்பாக நிற்கிறார்கள், இடையில் ராஜுவின் மனம் சோபாவின் பக்கம் செல்கிறது, அவனை விடாமல் துறத்தும் தீபா.....இவங்க சேர்ந்தாங்களா ? பிரிந்தார்களா ?
சோபனா
சாப்ட்வேர் மனைவி, சாதாரண வேலை பார்க்கும் கணவன், மகிழ்ச்சியான இல்லம். இவை எல்லாம் சென்ற மாதம் வரை உண்மை. திடிரென்று வேலையை விடச் சொல்லும் கணவன், விவரம் தெரியாமல் துடிக்கும் மனைவி, இவர்களுக்கிடையே பிரச்சனை பெரிதாக இவன் தான் காரணமா ? திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு
வானம் வாழ்க்கைபடும்
இவங்க குடும்பம் ரொம்ப பெரியது, இவங்க போடும் சண்டையும் தான், இவங்க குடும்பத்தின் திடீர் குழப்பத்திற்குக் காரணம் அவங்க அப்பா, 60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வந்து நிற்கிறார். அம்மாவின் சோகத்தில் பங்கெடுக்கும் வயது வந்த இரு பிள்ளைகள், இவர்களின் பல பக்கங்கள்.
யப்பா.........முடியல.
பின்பற்றுபவர்கள்
காலம் தொலைகாட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலம் தொலைகாட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2 மார்ச், 2010
வரப் போகும் மெகா தொடர்கள் !
பதிவர்:
கோவி.கண்ணன்
at
3/02/2010 11:53:00 AM
தொகுப்பு :
காலம் தொலைகாட்சி,
நகைச்சுவை,
மொக்கை
15
கருத்துக்கள்


30 டிசம்பர், 2009
செய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைக் காட்சி) !
இன்றைய தலைப்புச் செய்திகள்: செம்மொழி மாநாடு குறித்து கருணாநிதி ஆலோசனை, காங்கிரஸ் கட்சியை யாரும் அழிக்க முடியாது சோனியா சூளுரை. டைகர் உட்சை முந்துகிறார் திவாரி. திருப்பதி கோவில் ஏஆர் ரஹ்மான் இசைக்கு இந்து முன்னனி எதிர்ப்பு, எடியூரப்பா ஆட்சிக்கு மீண்டும் இடையூறு, பொன்னகரம் தேர்தல் தள்ளி வைப்பு தேர்தல் ஆணைய அறிவிப்பு.
வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கிற செம்மொழி மாநாட்டை எப்படி நடத்துவது என்கிற ஆலோசனை நடத்த தமிழறிஞர் குழுவை நாளைக் கூட்டுவதாக கருணாநிதி அறிவித்தார். செம்மொழி மாநாடு குறித்து அனைத்து உலக தமிழர் அமைப்புகளிலும், வெளி நாடுகளில் வாழும் தமிழர் தலைவர்களிடமும் ஆலோசனை கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். உலக வரலாற்றில் முதன் முறையாக செம்மொழிக்காக மாநாட்டை ஒரு தமிழனே நடத்துவதும், அந்தப் பெருமை தனக்கே கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறதென்றும், மாநாடு நடக்கக் கூடாது என்பதற்காக எதிரிகளும் விசமிகளும் பல்வேறு கேள்விகள் கேட்டு வருகிறார்கள், அதையெல்லாம் நாங்கள் சட்டை செய்யாது தமிழ் தாய்க்கு பொன்னாடையாகவே போற்றுவோம் என்றார்.
காங்கிரசின் 125 ஆண்டு நிறைவு காணுவதை ஒட்டி அதன் தலைவி திருமதி சோனியா காந்தி பேசிய அறிக்கையில் காங்கிரசை யாராலும் அழிக்க முடியாது என்றார். அப்படி என்றால் அது தானாகவே அழியும் என்று நினைக்கிறீர்களா ? என்று கேட்ட செய்தியாளரை கூட்டத்தினர் குப்புறத் தள்ளி அப்புறப்படுத்தினர். சுதந்திர இந்தியாவில் காந்தியின் கனவை நிறைவேற்றும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்றார். 'சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தேவை அற்றது என்றும் அது கலைக்கப்படுவதை தாம் விரும்புவதாக காந்திஜி சொன்னதைப் பற்றி புகழ்பெற்ற தொலை காட்சி நிறுவனம் ஒன்றின் செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது காந்திஜி ஆவியாக வந்து தாம் அவ்வாறு சொன்னது தவறு என்றும் காங்கிரஸின் தொடரும் பொற்கால ஆட்சி இந்திய நலனுக்கு என்றென்றும் தேவை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த நரசிம்மராவின் கனவில் 10 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதாகவும் குறிப்பிட்டார். காந்திஜி ஆவியின் விருப்பப்படி காங்கிரஸ் கட்சி அதன் லட்சியங்களை அடையும் வரை அதை யாராலும் அழிக்க முடியாது என்று சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
இணையங்களில் டைகர் உட்சின் லீலைகளை தேடுவது போலவே என் டி திவாரி குறித்து எதுவும் சிக்குமா என்று தேடுபவர்கள் எண்ணிக்கை கூடி இருப்பதாக இந்திய இணைய தள தேடல் குறித்து ஆராய்ந்து வரும் ஒரு பெயரில்லாத செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதற்கிடையே இந்த செய்தியைப் பற்றி திவாரி கூறுகையில் அது எதிர்கட்சிகளின் சதி என்றும் கிராபிக்ஸ் பயன்படுத்தி எடுத்திருக்கிறார்கள், வீடியோவில் இருந்தது நான் அல்ல என்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் தத்துருபமாக ஒரிஜினல் போலவே கிராபிக்ஸ் செய்யும் நம் இந்திய கிராபிக்ஸ் வல்லுனர்கள் அதைத் திரைப்படத்துறையில் பயன்படுத்தினால் இந்தியாவிலும் அவதார் போன்ற சிறந்த கிராபிக்ஸ் படங்களை உருவாக்கி ஹாலிவுட்டுக்கு சவாலாக இருக்க முடியும் என்றார்.
இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பன், ஆகம விதிக்கு இந்து கோவில்களை புத்தாண்டு பிறப்புக்காக டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவில் திறந்து பூஜை செய்தால் இந்து முன்னணி அதை தடுக்கும் விதத்தில் போராட்டம் நடத்தும். அத்துடன் அதற்கு உடந்தையாக இருக்கும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அறங்காவலர்கள் மீது வழக்கு தொடருவோம். என்றார். அங்கு வரும் பக்தர்களை ஓட ஓட விரட்டுவீர்களா ? கூடவே ஒடுவதற்கு போதிய கட்சித் தொண்டர்கள் இல்லை என்பதால் பக்தர்களை தாங்கள் தடுக்கப் போவதில்லை என்றார், மேலும் அவர் சற்று ஆவேசமாக திருப்பதி வெங்கடாஜலபதி பற்றிய பாடல்களுக்கு இசைஅமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை வைத்து இசை அமைத்து ஆல்பம் வெளியிடப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இசை அமைத்தால் சிறப்பாக இருக்கும். எனவே தேவஸ்தானம் தனது திட்டத்தை கைவிட வேண்டும் மேற்கண்டவாறு இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பன் கூறினார். புத்த மதத்தைச் சேர்ந்த ராஜேபக்சே நுழைய முடிந்த கோவிலுக்கு ரஹ்மான் இசை அமைப்பதால் என்ன முழுகிவிடப் போவது என்று கேட்ட செய்தியாளரிடம் யார் கண்டது... காஞ்சி பெரியவாளை கைது செய்த போது சுனாமி வந்தது போல் ஏஆர்ரஹ்மான் திருப்பதி இசையால் அபச்சாரம் நிகழ்ந்து மீண்டும் ஒரு சுனாமி கூட வரலாம், நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கிற செம்மொழி மாநாட்டை எப்படி நடத்துவது என்கிற ஆலோசனை நடத்த தமிழறிஞர் குழுவை நாளைக் கூட்டுவதாக கருணாநிதி அறிவித்தார். செம்மொழி மாநாடு குறித்து அனைத்து உலக தமிழர் அமைப்புகளிலும், வெளி நாடுகளில் வாழும் தமிழர் தலைவர்களிடமும் ஆலோசனை கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். உலக வரலாற்றில் முதன் முறையாக செம்மொழிக்காக மாநாட்டை ஒரு தமிழனே நடத்துவதும், அந்தப் பெருமை தனக்கே கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறதென்றும், மாநாடு நடக்கக் கூடாது என்பதற்காக எதிரிகளும் விசமிகளும் பல்வேறு கேள்விகள் கேட்டு வருகிறார்கள், அதையெல்லாம் நாங்கள் சட்டை செய்யாது தமிழ் தாய்க்கு பொன்னாடையாகவே போற்றுவோம் என்றார்.
காங்கிரசின் 125 ஆண்டு நிறைவு காணுவதை ஒட்டி அதன் தலைவி திருமதி சோனியா காந்தி பேசிய அறிக்கையில் காங்கிரசை யாராலும் அழிக்க முடியாது என்றார். அப்படி என்றால் அது தானாகவே அழியும் என்று நினைக்கிறீர்களா ? என்று கேட்ட செய்தியாளரை கூட்டத்தினர் குப்புறத் தள்ளி அப்புறப்படுத்தினர். சுதந்திர இந்தியாவில் காந்தியின் கனவை நிறைவேற்றும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்றார். 'சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தேவை அற்றது என்றும் அது கலைக்கப்படுவதை தாம் விரும்புவதாக காந்திஜி சொன்னதைப் பற்றி புகழ்பெற்ற தொலை காட்சி நிறுவனம் ஒன்றின் செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது காந்திஜி ஆவியாக வந்து தாம் அவ்வாறு சொன்னது தவறு என்றும் காங்கிரஸின் தொடரும் பொற்கால ஆட்சி இந்திய நலனுக்கு என்றென்றும் தேவை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த நரசிம்மராவின் கனவில் 10 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதாகவும் குறிப்பிட்டார். காந்திஜி ஆவியின் விருப்பப்படி காங்கிரஸ் கட்சி அதன் லட்சியங்களை அடையும் வரை அதை யாராலும் அழிக்க முடியாது என்று சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
இணையங்களில் டைகர் உட்சின் லீலைகளை தேடுவது போலவே என் டி திவாரி குறித்து எதுவும் சிக்குமா என்று தேடுபவர்கள் எண்ணிக்கை கூடி இருப்பதாக இந்திய இணைய தள தேடல் குறித்து ஆராய்ந்து வரும் ஒரு பெயரில்லாத செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதற்கிடையே இந்த செய்தியைப் பற்றி திவாரி கூறுகையில் அது எதிர்கட்சிகளின் சதி என்றும் கிராபிக்ஸ் பயன்படுத்தி எடுத்திருக்கிறார்கள், வீடியோவில் இருந்தது நான் அல்ல என்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் தத்துருபமாக ஒரிஜினல் போலவே கிராபிக்ஸ் செய்யும் நம் இந்திய கிராபிக்ஸ் வல்லுனர்கள் அதைத் திரைப்படத்துறையில் பயன்படுத்தினால் இந்தியாவிலும் அவதார் போன்ற சிறந்த கிராபிக்ஸ் படங்களை உருவாக்கி ஹாலிவுட்டுக்கு சவாலாக இருக்க முடியும் என்றார்.
இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பன், ஆகம விதிக்கு இந்து கோவில்களை புத்தாண்டு பிறப்புக்காக டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவில் திறந்து பூஜை செய்தால் இந்து முன்னணி அதை தடுக்கும் விதத்தில் போராட்டம் நடத்தும். அத்துடன் அதற்கு உடந்தையாக இருக்கும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அறங்காவலர்கள் மீது வழக்கு தொடருவோம். என்றார். அங்கு வரும் பக்தர்களை ஓட ஓட விரட்டுவீர்களா ? கூடவே ஒடுவதற்கு போதிய கட்சித் தொண்டர்கள் இல்லை என்பதால் பக்தர்களை தாங்கள் தடுக்கப் போவதில்லை என்றார், மேலும் அவர் சற்று ஆவேசமாக திருப்பதி வெங்கடாஜலபதி பற்றிய பாடல்களுக்கு இசைஅமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை வைத்து இசை அமைத்து ஆல்பம் வெளியிடப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இசை அமைத்தால் சிறப்பாக இருக்கும். எனவே தேவஸ்தானம் தனது திட்டத்தை கைவிட வேண்டும் மேற்கண்டவாறு இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பன் கூறினார். புத்த மதத்தைச் சேர்ந்த ராஜேபக்சே நுழைய முடிந்த கோவிலுக்கு ரஹ்மான் இசை அமைப்பதால் என்ன முழுகிவிடப் போவது என்று கேட்ட செய்தியாளரிடம் யார் கண்டது... காஞ்சி பெரியவாளை கைது செய்த போது சுனாமி வந்தது போல் ஏஆர்ரஹ்மான் திருப்பதி இசையால் அபச்சாரம் நிகழ்ந்து மீண்டும் ஒரு சுனாமி கூட வரலாம், நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
பதிவர்:
கோவி.கண்ணன்
at
12/30/2009 12:13:00 PM
தொகுப்பு :
அரசியல்,
காலம் தொலைகாட்சி,
நகைச்சுவை
14
கருத்துக்கள்


23 டிசம்பர், 2009
செய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைகாட்சி)
இன்றைய முதன்மைச் செய்திகள், தமிழக தலைவர் முன்னூறாவது முறையாக மூச்சும் பேச்சும் தமிழுக்கே என்றார். வெற்றிமுரசு கொட்டும் சேட்டைக்காரன் சிறப்பு செய்திகள், பிற்பட்டவர் வீட்டில் பூரி கிழங்கு சாப்பிட்டார் ராகுல் காந்தி.....இன்னும் பக்கத்துக்கு பக்கம் (சாரி...இது குங்குமம் வெளம்பரம் இல்லை, செய்தி .....செய்தி தடங்களுக்கு வருந்துகிறோம்)
நேபாள நாட்டில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் கலைமகன் விருது பெற்றுக் கொண்ட தமிழினவேந்தன் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். தனக்கு இந்த விருது பெரும் தகுதி இல்லை என்றாலும் விருது கொடுப்பவர்களின் மனம் கோணாமல் இருக்க இந்த விருதை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். தனது மூச்சும் பேச்சும் முன்னூறாவது முறையாக தமிழுக்கும் தமிழனுக்கு அற்பணிக்கப் போவதாகக் கூறினார். பேச்சின் இடையே தலைவா இது 301 ஆவது முறை எண்ணிக்கை தவறு என்று கத்திய தொண்டரின் ஆர்வக் கோளாறு வேந்தனை முகம் சுளிக்க வைத்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு சிற்றுரை ஆற்றி முடித்தார். வேந்தனுக்கு நடத்திய பாராட்டுவிழாவின் மகிழ்ச்சியில் எழுந்த ஆனந்த கண்ணீர் மீண்டும் ஒரு மழை வெள்ளமோ என்று வியக்க வைத்தது (இது பற்றிய செய்தித் தொகுப்பில் சென்னை அரங்க நாயகம் சுரங்கப் பாதையின் சூழ்ந்திருந்த நீரில் பேருந்து ஒன்று நகரமுடியாமல் நின்று கொண்டிருப்பதையும் அதை கிரேன் மூலம் இழுப்பதும் காட்டப்பட்டது)
மூன் பிக்சர் வெளியீடாக வெளியான சேட்டைக்காரன் தமிழக மற்றும் இந்திய உலக வரலாறு திரைப்படங்களின் சாதனைகளை ஒன்றும் இல்லாமல் செய்திருக்கிறது. இங்கே நீங்கள் பார்பவர்கள் ரேசனுக்கு காத்திருப்பவர்கள் அல்ல, அடுத்தவராம் சேட்டைக்காரன் டிக்கெட்டுக்கு சென்ற வாரம் முதல் வரிசையில் நிற்பவர்கள் தான், அடுத்தவன் உயிர் கூட தலைவனுக்கே சொந்தம் என்று கூறி உணர்ச்சி வசப்பட்ட ரசிகர்களை சமாதானப் படுத்தி அழைத்துச் செல்லும் காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உணவையும் மறந்து 6 நாட்களாக வரிசையில் காத்திருக்க வைக்கிறதென்றால் சேட்டைக்காரன் உலக சாதனைச் செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்பதை டிடிவி சானலும் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தில் வரும் 'நாய் கடிச்சா தூங்க மாட்டே....' பாட்டு பட்டையைக் கிளப்புவதாகவும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர், டுஸ்மோர்....சில இடத்தில் த்ரைஸ்மோரெல்லாம் கேட்டது திரையரங்கு வளாகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது
(வெளம்பர இடைவேளை.....சேட்டைக்காரன்.........'நாய் கடிச்சா தூங்க மாட்டே....')
உத்திர பிரதேசம் ஜான்சி மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு பிற்பட்ட சமூகத்தைச் சார்ந்த சுய உதவிக் குழுவினர் ஒருவர் வீட்டில் பூரி கிழங்கு சாப்பிட்டார். பூரி கிழங்கு சுவையாக இருந்ததாகவும், இளைஞர்கள் பூரி கிழங்கு சாப்பிடுவதால் கேஸ் ட்ரபிள் எதுவும் வராது என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தவே தாம் துணிந்து பூரி கிழங்கு சாப்பிட்டதாகவும் தெரிவித்தார். பூரி கிழங்கு சாப்பிட்டதற்கு காசு கொடுத்தீர்களா ? என்று கேட்ட செய்தியாளர் ஒருவரிடம் சிரித்து மழுப்பிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாக வட்டார செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
நன்றி வணக்கம்...
இது ஒரு காலம் தொலைக்காட்சியின் தயாரிப்பு
நேபாள நாட்டில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் கலைமகன் விருது பெற்றுக் கொண்ட தமிழினவேந்தன் உணர்ச்சி வசப்பட்டு பேசினார். தனக்கு இந்த விருது பெரும் தகுதி இல்லை என்றாலும் விருது கொடுப்பவர்களின் மனம் கோணாமல் இருக்க இந்த விருதை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். தனது மூச்சும் பேச்சும் முன்னூறாவது முறையாக தமிழுக்கும் தமிழனுக்கு அற்பணிக்கப் போவதாகக் கூறினார். பேச்சின் இடையே தலைவா இது 301 ஆவது முறை எண்ணிக்கை தவறு என்று கத்திய தொண்டரின் ஆர்வக் கோளாறு வேந்தனை முகம் சுளிக்க வைத்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு சிற்றுரை ஆற்றி முடித்தார். வேந்தனுக்கு நடத்திய பாராட்டுவிழாவின் மகிழ்ச்சியில் எழுந்த ஆனந்த கண்ணீர் மீண்டும் ஒரு மழை வெள்ளமோ என்று வியக்க வைத்தது (இது பற்றிய செய்தித் தொகுப்பில் சென்னை அரங்க நாயகம் சுரங்கப் பாதையின் சூழ்ந்திருந்த நீரில் பேருந்து ஒன்று நகரமுடியாமல் நின்று கொண்டிருப்பதையும் அதை கிரேன் மூலம் இழுப்பதும் காட்டப்பட்டது)
மூன் பிக்சர் வெளியீடாக வெளியான சேட்டைக்காரன் தமிழக மற்றும் இந்திய உலக வரலாறு திரைப்படங்களின் சாதனைகளை ஒன்றும் இல்லாமல் செய்திருக்கிறது. இங்கே நீங்கள் பார்பவர்கள் ரேசனுக்கு காத்திருப்பவர்கள் அல்ல, அடுத்தவராம் சேட்டைக்காரன் டிக்கெட்டுக்கு சென்ற வாரம் முதல் வரிசையில் நிற்பவர்கள் தான், அடுத்தவன் உயிர் கூட தலைவனுக்கே சொந்தம் என்று கூறி உணர்ச்சி வசப்பட்ட ரசிகர்களை சமாதானப் படுத்தி அழைத்துச் செல்லும் காட்சி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உணவையும் மறந்து 6 நாட்களாக வரிசையில் காத்திருக்க வைக்கிறதென்றால் சேட்டைக்காரன் உலக சாதனைச் செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்பதை டிடிவி சானலும் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தில் வரும் 'நாய் கடிச்சா தூங்க மாட்டே....' பாட்டு பட்டையைக் கிளப்புவதாகவும் ரசிகர்கள் ஒன்ஸ்மோர், டுஸ்மோர்....சில இடத்தில் த்ரைஸ்மோரெல்லாம் கேட்டது திரையரங்கு வளாகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது
(வெளம்பர இடைவேளை.....சேட்டைக்காரன்.........'நாய் கடிச்சா தூங்க மாட்டே....')
உத்திர பிரதேசம் ஜான்சி மாவட்டத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு பிற்பட்ட சமூகத்தைச் சார்ந்த சுய உதவிக் குழுவினர் ஒருவர் வீட்டில் பூரி கிழங்கு சாப்பிட்டார். பூரி கிழங்கு சுவையாக இருந்ததாகவும், இளைஞர்கள் பூரி கிழங்கு சாப்பிடுவதால் கேஸ் ட்ரபிள் எதுவும் வராது என்பதை இளைஞர்களுக்கு உணர்த்தவே தாம் துணிந்து பூரி கிழங்கு சாப்பிட்டதாகவும் தெரிவித்தார். பூரி கிழங்கு சாப்பிட்டதற்கு காசு கொடுத்தீர்களா ? என்று கேட்ட செய்தியாளர் ஒருவரிடம் சிரித்து மழுப்பிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்ததாக வட்டார செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
நன்றி வணக்கம்...
இது ஒரு காலம் தொலைக்காட்சியின் தயாரிப்பு
பதிவர்:
கோவி.கண்ணன்
at
12/23/2009 09:31:00 AM
தொகுப்பு :
அரசியல்,
காலம் தொலைகாட்சி,
நகைச்சுவை
8
கருத்துக்கள்


11 டிசம்பர், 2009
செய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைகாட்சி)
முதன்மை செய்திகள் : பணகரன் அலுவலகம் கொளுத்தியது நக்சலைட்டுகளாக இருக்கும் காவல் துறை சந்தேகம். புதிய மாநிலம் தலுங்கானா உதயம்...தமிழகத்தில் இடைத் தேர்தல் ஓட்டு வேட்டையில் முந்துகிறது ஆளும் கட்சி......
சென்ற ஆண்டு பணகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு மூன்று பேர் கொலையான வழக்கில் அரசு தரப்பு காவல்துறை தரப்பின் சாட்சிகளை போதிய ஆதாரம் இல்லை என நிராகரித்தது, நீதிபதி அரசு தரப்பு ஞாயங்களை ஏற்று காவல் துறை குற்றம் சுமத்தியவர்களை விடுதலை செய்தார், பொய் சாட்சிகளை கொண்டு வந்ததற்காக நீதிபதி காவல் துறைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க, பணகரன் அலுவலகம் தீவிரவாதிகளாலோ அல்லது முகமூடி கும்பல்களாலோ கொளுத்தப்பட்டு இருக்கலாம், விரைவில் பிடித்து விடுவோம் என்று தெரிவித்தனர். விடுதலை அடைந்த நிரபராதிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நீதிபதி தீர்ப்பு குறித்து கருத்துக் கூறிய பணகரன் நிறுவனர், திரு மாலாபதி விரைவில் தங்களுக்கு ஞாயம் கிடைக்கும் என்றும், நிரபிராதிகள் விடுவிக்கப்பட்டது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். பணகரன் அலுவலக விவாகரம் குறித்துக் கருத்துக் கூறிய ஆளும்கட்சி மத்திய அமைச்சர், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, எதிர்கட்சிகளின் சோடிப்பு வழக்கு என்பதால் தான் வழக்கு நிலைக்கவில்லை, என்றும் ஞாயம் எப்போதுமே வெல்லும் என்று தெரிவித்தார். பணகரன் அலுவகம் விவாகாரத் தீர்ப்பு குறித்து பணகரன் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளி இட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. தீர்ப்புக்கு பிறகு பணகரன் அலுவலகம் முன்பு அதன் ஊழியர்கள் கொண்ட்டாம் பற்றிய ஒரு சிறிய வீடியோ காட்சி. ...
தலுங்கானக் கோரிக்கையில் தலுங்கானக் கட்சியின் தலைவரின் 10 நாள் உண்ணாவிரதம் மத்திய அரசு தலுங்கான கோரிக்கையை ஏற்றதினால் முடிவுக்கு வந்திருகிறது, தலுங்கான பற்றி தமிழக அரசியல் தலைவரும் முக்கிய கட்சிதலைவருமான பாமுக தலைவர் பொறியாளர் பட்டைதாசுவிடம் கேட்ட போது, இது போல் தமிழகமும் பிரிக்கப்படவேண்டும் என்கிற தனது கோரிக்கை இப்பொழுது தான் தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும், தலுங்கான தனிமாநிலம் அமைவதை தாம் வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
தலுங்கான கட்சித்தலைவரின் உண்ணாவிரதம் பற்றிக் கூறிய தமிழக துணை அமைச்சர், வாழ்த்துவதாகவும், ஆனால் 10 நாட்கள் உண்ணாவிரதம் மிகவும் அதிகம் தான், இது போன்ற மக்கள் வாழ்வாதரப் பிரச்சனையில் எங்கள் தலைவர் மூன்றே மணி நேர உண்ணாவிரதத்தால் வெற்றிகரமாக சாதித்தார், அந்த சாதனை இன்று வரை உலக அளவில் யாராலும் முறியடிக்கபடாததாக இருக்கிறது என்றார்.
நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் கையே ஓங்கி இருக்கிறது, ஆளும்கட்சிக்கு பாமுக மறைமுக ஆதரவு தெரிவித்து வந்தவாசி தொகுதிகளில் ஓட்டு வேட்டையிலும் இறங்கி உள்ளனர். நீங்கள் ஓ போடப் போவதாகச் சொன்னீர்களே என்று கேட்ட செய்தியாளரை முறைத்த பொறியாளர் பட்டைதாசு நான் அவ்வாறு சொல்லவில்லை, செய்தியாளர்கள் அப்படி ஒரு தவறான தகவலை வெளி இட்டதாகவும், எங்கள் கட்சி எந்த ஒரு கட்சிக்கும் தொடர்ந்து எதிரியாக இருந்ததே இல்லை என்று குறிப்பிட்டார். ஆளும் கட்சிக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு காப்புறுதி என்றும் ஓட்டுப் போடாதவர்களுக்கு காப்பு உறுதி என்று ஆளும் கட்சிக்காரார்களால் வாக்காளர்கள் எச்சரிக்கப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
நன்றி வணக்கம்...
வாசித்தது கோவியார்
இது ஒரு காலம் தொலைகாட்சி (டைம் டிவி) யின் ஆக்கம்...
சென்ற ஆண்டு பணகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு மூன்று பேர் கொலையான வழக்கில் அரசு தரப்பு காவல்துறை தரப்பின் சாட்சிகளை போதிய ஆதாரம் இல்லை என நிராகரித்தது, நீதிபதி அரசு தரப்பு ஞாயங்களை ஏற்று காவல் துறை குற்றம் சுமத்தியவர்களை விடுதலை செய்தார், பொய் சாட்சிகளை கொண்டு வந்ததற்காக நீதிபதி காவல் துறைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க, பணகரன் அலுவலகம் தீவிரவாதிகளாலோ அல்லது முகமூடி கும்பல்களாலோ கொளுத்தப்பட்டு இருக்கலாம், விரைவில் பிடித்து விடுவோம் என்று தெரிவித்தனர். விடுதலை அடைந்த நிரபராதிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நீதிபதி தீர்ப்பு குறித்து கருத்துக் கூறிய பணகரன் நிறுவனர், திரு மாலாபதி விரைவில் தங்களுக்கு ஞாயம் கிடைக்கும் என்றும், நிரபிராதிகள் விடுவிக்கப்பட்டது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். பணகரன் அலுவலக விவாகரம் குறித்துக் கருத்துக் கூறிய ஆளும்கட்சி மத்திய அமைச்சர், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, எதிர்கட்சிகளின் சோடிப்பு வழக்கு என்பதால் தான் வழக்கு நிலைக்கவில்லை, என்றும் ஞாயம் எப்போதுமே வெல்லும் என்று தெரிவித்தார். பணகரன் அலுவகம் விவாகாரத் தீர்ப்பு குறித்து பணகரன் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளி இட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. தீர்ப்புக்கு பிறகு பணகரன் அலுவலகம் முன்பு அதன் ஊழியர்கள் கொண்ட்டாம் பற்றிய ஒரு சிறிய வீடியோ காட்சி. ...
தலுங்கானக் கோரிக்கையில் தலுங்கானக் கட்சியின் தலைவரின் 10 நாள் உண்ணாவிரதம் மத்திய அரசு தலுங்கான கோரிக்கையை ஏற்றதினால் முடிவுக்கு வந்திருகிறது, தலுங்கான பற்றி தமிழக அரசியல் தலைவரும் முக்கிய கட்சிதலைவருமான பாமுக தலைவர் பொறியாளர் பட்டைதாசுவிடம் கேட்ட போது, இது போல் தமிழகமும் பிரிக்கப்படவேண்டும் என்கிற தனது கோரிக்கை இப்பொழுது தான் தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும், தலுங்கான தனிமாநிலம் அமைவதை தாம் வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.
தலுங்கான கட்சித்தலைவரின் உண்ணாவிரதம் பற்றிக் கூறிய தமிழக துணை அமைச்சர், வாழ்த்துவதாகவும், ஆனால் 10 நாட்கள் உண்ணாவிரதம் மிகவும் அதிகம் தான், இது போன்ற மக்கள் வாழ்வாதரப் பிரச்சனையில் எங்கள் தலைவர் மூன்றே மணி நேர உண்ணாவிரதத்தால் வெற்றிகரமாக சாதித்தார், அந்த சாதனை இன்று வரை உலக அளவில் யாராலும் முறியடிக்கபடாததாக இருக்கிறது என்றார்.
நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் கையே ஓங்கி இருக்கிறது, ஆளும்கட்சிக்கு பாமுக மறைமுக ஆதரவு தெரிவித்து வந்தவாசி தொகுதிகளில் ஓட்டு வேட்டையிலும் இறங்கி உள்ளனர். நீங்கள் ஓ போடப் போவதாகச் சொன்னீர்களே என்று கேட்ட செய்தியாளரை முறைத்த பொறியாளர் பட்டைதாசு நான் அவ்வாறு சொல்லவில்லை, செய்தியாளர்கள் அப்படி ஒரு தவறான தகவலை வெளி இட்டதாகவும், எங்கள் கட்சி எந்த ஒரு கட்சிக்கும் தொடர்ந்து எதிரியாக இருந்ததே இல்லை என்று குறிப்பிட்டார். ஆளும் கட்சிக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு காப்புறுதி என்றும் ஓட்டுப் போடாதவர்களுக்கு காப்பு உறுதி என்று ஆளும் கட்சிக்காரார்களால் வாக்காளர்கள் எச்சரிக்கப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
நன்றி வணக்கம்...
வாசித்தது கோவியார்
இது ஒரு காலம் தொலைகாட்சி (டைம் டிவி) யின் ஆக்கம்...
பதிவர்:
கோவி.கண்ணன்
at
12/11/2009 10:35:00 AM
தொகுப்பு :
அரசியல்,
காலம் தொலைகாட்சி,
நகைச்சுவை
25
கருத்துக்கள்


இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்