பின்பற்றுபவர்கள்

விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9 நவம்பர், 2009

ஸ்வாமி ஓம்கார் VS சித்தூர்.முருகேசன் !

ஸ்வாமி ஓம்காரின் 'வேத வாழ்க்கை (8)' தொடரில் வரும் 'பசு' புராணம் அண்ணன் சித்தூர் முருகேசன் அவர்களை மிகவும் சினம் அடைய வைத்தது, சித்தூர் முருகேசன் ஓம்கார் பதிவுக்கு இட்ட பின்னூட்டம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஓம்கார் பின்னூட்டத்தை நீக்கிவிட்டார். இதைப் பார்த்து சினந்த சித்தூர் முருகேசன் ஓம்காருக்கு எதிர்வினைப் பதிவு ஒன்றைப் போட்டார்.


இரு இடுகைகளையும் நான் படித்த வரையில்,

* ஸ்வாமி ஓம்கார் பசு கொல்லப்படுவதைச் சுட்டி சுற்றுச் சூழல் கேடு அல்லது சுற்றுச் சூழலுக்கு பசுவின் பங்கு குறித்து எழுதி இருந்தார்.

அதை சித்தூர் முருகேசன் புரிந்து கொண்ட விதம்

* ஸ்வாமி ஓம்கார் பசு புனிதம் என்கிறார், பசுவை கொல்வது பாவம் என்கிறார், என்கிற ரீதியில் தனது எதிர்ப்புகளை எழுதி இருந்தார்.

ஸ்வாமி ஓம்கார் மற்றும் சித்தூர் முருகேசன் இருவருமே சோதிடத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர்கள், சோதிடம் பற்றிய கருத்தில் ஒருவரை ஒருவர் மறுத்தது இல்லை.

ஸ்வாமி ஓம்கார் பசுவை மட்டுமல்ல, மரங்கள் வெட்டப்படுவது பற்றியும் எழுதி இருந்தார். இருந்தாலும் அந்த தொடரில் மற்றொரு பகுதியில் மரம் குறுந்தகடை (சிடி) படிக்கும் என்று எழுதி இருந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கு எந்த ஒரு சான்றையும் ஸ்வாமி ஓம்கார் தரமுடியாது. சிடியில் டேட்டா பதிவு என்பது பல்வேறு டிகோடிங் முறைகளை அடக்கியது, அதை என்கோட் செய்து படிக்கும் முறைகளும் கணிணியால் மட்டுமே செய்யக் கூடிய ஒன்று, பச்சை மரத்திற்கு அருகில் சிடியைக் கொண்டு சென்றால் அதில் அடங்கி இருக்கும் தகவலுக்கேற்ற (எம்எஸ்எஸ், இளைய ராஜா, ஏஆர் ரஹ்மான் இசை ?) மரம் உணர்ச்சி வசப்படும் என்பது ஓம்காரின் கூற்றாக இருக்கிறது. இது நம்புவதற்கோ, அறிவியல் மூலம் நிருபணம் செய்யவோ கூறு அற்றதும், ஒட்டுமொத்தமாக அந்த கருத்தே நிராகரிக்கக் கூடியது ஆகும். மரம் உணர்ச்சி வசப்பட இயற்கைச் சூழல் மாறி மாறி அமைந்தால் தான் உண்டு மற்றபடி குயில் என்னதான் இனிமையாக மரத்தின் மீது அமர்ந்து பாடிக் கொண்டிருந்தாலும் மரம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதே எனது கருத்து, தொடு உணர்ச்சி என்பது தவிர்த்து மரம் கேட்கும் திறனற்றது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஸ்வாமி ஓம்கார் அந்த கருத்தில் அழுத்தமாக இருந்தால் அவ்வாறு சொன்னதற்கு வேறெதும் காரணங்கள் இருக்கிறதா என்பதை விளக்கினால் நன்று. ஸ்வாமி ஓம்கார் பசு பற்றிய எழுதிய கட்டுரைகளில் பசுவை புனிதப் படுத்தவில்லை ஆனால் பசு பற்றிய நல்ல கருத்துகளை மட்டும் குறிப்பிட்டு இருந்தார்

அண்ணன் சித்தூர் முருகேசன் எழுதிய கருத்தில் ஒன்று மனதில் பதிந்தது, "அந்தபசுவால் பயன் பெற்றவன் இனி பயன் பெறமுடியாது என்ற நிலை வரும்போது அதை நான் ஃபங்க்ஷனிங் ப்ராப்பர்ட்டியாககருதி விற்று விடுகிறான். அதை வாங்கி சென்றே வெட்டுகிறான்"

அதாவது,

"பசு புனிதம் என்று சொல்லுபவர்கள், பசு கிழவியானதும் அதாவது கன்று ஈனுவதற்கான வாய்ப்பும், பால் கொடுக்க முடியாத சூழலில் அதை ஏன் அடிமாட்டுக்காரனிடம் விற்கிறார்கள் ? விற்பவனை விட்டுவிட்டு கொல்பவனை மட்டும் குறை சொல்வது ஏன் ?" என்று கேட்டிருந்தார்.

என்னைப் பொருத்த அளவில் இது சிந்தனையைத் தூண்டும் கேள்வி தான். பசுவை தெய்வம், தாய் என்றெல்லாம் ஒப்பிடும் இந்துக்கள், பசுவதை மீளாப் பாவம் என்றெல்லாம் பயமுறுத்தும் இந்துக்கள், இறந்த பசுவை தோல் உறித்துவிட்டு தின்றார்கள் என்று தலித்துகளை சிலர் அடித்து கொன்றதையும் ஞாயம் பேசும் இந்துக்கள் எந்தப் பசுவும் இயற்கை மரணம் அடைந்ததைப் பார்த்திருக்கிறார்களா ? அல்லது இயற்கையாக வயதானதும் வயதின் காரணமாக இந்தியாவில் இறக்கும் பசுக்களின் அதாவது கிழப்பசுக்களின் எண்ணிக்கை எத்தனை விழுக்காடு ? ஒருவிழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும்.

* பால் கரக்கும் வரையில் தான் பசு புனிதமாக பார்க்கப்படுகிறது, அதன் பிறகு அடிமாட்டுக்காரணிடம் கிடைத்த விலைக்கு விற்கிறார்கள். அடிமாட்டு விலைக்கு வாங்குபவர் அந்த கிழட்டு பசுமாட்டிற்கு வைக்கோலும், புல்லும் போட்டு சாகும் வரை பார்த்துக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் தான் அடிமாட்டுக்காரனிடம் விற்கிறார்களா ?

* பாலைக் கரந்து... கரந்து குடித்துவிட்டு பசு கிழடு ஆனதும் விற்பது என்பது அந்த மாட்டைக் கொல்வதைவிட பாவம் இல்லையா ?

* பசுவதைப் பற்றிப் பேசுவோர் எத்தனை பேர் தோல் செருப்புகளைப் புறக்கணித்திருக்கிறார்கள் ?

**********

ஆட்டுக்குட்டி, ஒட்டகம், பசு இவையெல்லாம் மதங்களில் காட்டப்படும் விலங்குகள் என்பதைத் தவிர்த்து எனக்கு அவற்றின் மீது பெரிய கருத்துகள் இல்லை. வலி உணர்வு கொண்ட எந்த ஒரு உயிரனத்தையும் கொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. விலங்குகள் குறித்து புனிதம், அசுத்தம் பேசுப்வர்களின் கொல்லாமை மற்றும் கொள்கை பேசுவோரின் 'விலங்குகள்' பற்றிய கருத்துகளும் ஏற்புடையது அல்ல. தின்பது என்றாகிவிட்டால் நாய்கறி சாப்பிடுவது கூட இழிவானது கிடையாது.

விலங்குகளுக்கு பேசும் திறன் இருந்தால் அதுவும் வாழ்வுரிமைப் பற்றிப் பேசும் அல்லது அப்படி பேசுவதற்கு அதற்கு உரிமை உண்டு என்பதை நாம் ஏற்க மறுக்கிறோம்.

உயிர்கொலை அல்லது கொல்வதற்கான உணவு சுழற்சி பற்றிய விளக்கங்கள், மனிதனும் ஏதோ ஒரு விலங்குக்கு தன்னை உணவாக்கினால் ஏற்றுக் கொள்வதற்கு நன்றாக இருக்கும். இல்லையா ?

:)


மூப்பு அடிமாடுகள் விற்கப்படுவது தடை செய்யப்படவேண்டும் என்பது குறித்து வாய் பேசாமல், அந்த அடிமாடு வெட்டப்படுவதைப் பற்றி பெருமூச்சு விடுவது ஞாயமற்றதும் பக்க சார்பனதும் ஆகும்.

7 அக்டோபர், 2009

திரைத் துறையினரின் கண்டனங்கள் மற்றொரு நடிப்பு !

நடிகைகளைப் பற்றி அவதூறுகளாக செய்தி வெளி இடுகிறார்கள் என்று கண்டனக்குரல் எழுப்பி இருக்கின்றனர் தென்னிந்திய திரைப்பட (நடிகர்) சங்கத்தைக் கூட்டிய நடிகர்கள். அவதூறுகளுக்கு கண்டனம் தெரிவிப்பதில் ஒன்றும் தவறு இல்லை. செய்தி ஊடகங்களும் திரைப்படத்துறையும் நகமும் சதையும் போன்றதே. ஒருவரை ஒருவர் சார்ந்தே மக்கள் முன் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். படப்படிப்பு தளங்களில் உச்ச நடிகர்கள் தும்முவது முதல் நடிகைகள் பித்த வாந்தி எடுப்பதுவரை செய்தியாக்குவது செய்தி ஊடகங்களின் மக்கள் சேவை என்றால் குப்பைப் படங்களை அதே செய்தி ஊடகங்களின் வழியாகத்தான் மிகவும் பிரமாண்ட விளம்பரங்களின் வழி பொதுமக்களின் சுறுக்குப் பையின் சில்லரைக்கு குறிவைத்து செயல்படுவது திரைத்துதுறை.

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு என்கிற பெயரில் திரைத்துறையில் அலைக்கழிக்கப்பட்டு அன்றாடம் சிக்கி சீரழியும் பெண்கள் எத்தனையோ பேர். அதில் ஒருசில பெண்கள் விதிவிலக்காக எந்த ஒரு சிரமமும் இல்லாமல் நல்ல நடிகையாக வளர்பவர்கள் என அவர்களின் எண்ணிக்கைக் குறைவே. இதைத் திரைத்துறையில் இருப்பவர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். திரைத்துறை என்பது முழுக்க முழுக்க ஆண்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழில் கூடம். நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் 'அலைக்கப்படும்' பெண்கள் அதை நம்பி சிக்கியபிறகு, நல்ல வாய்ப்புக் கிடைப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்துவிடுபட்டு பணம் புகழுக்காக அதைத் தொடர்வார்கள். அப்படி வாய்ப்பே கிடைக்காதவர்கள் பழகிக் கொண்டதன் காரணமாக, அதில் இருந்து விடுபட முடியாத சூழல்காரணமாக விலைமாதர்களாக்கப் படுகின்றனர்.

திரைத்துரையில் இருப்பவர்களும் கூட நடிகர்களை நாம் அவமானப்படுத்தக் கூடாது என்கிற கட்டுப்பாட்டில் நடிகர்கள் குறித்துப் பேசும் போது 'அவர்' என்கிற மரியாதை விகுதியைப் பயன்படுத்தியே நடிகர்கள் குறித்துப் பேசுவார்கள், ஆனால் நடிகைகளைக் குறிப்பிடும் போது அவ்வாறு சொல்வது இல்லை. அங்கே 'அவள்' வந்துவிடும். திரைத்துறைச் சார்ந்த ஒரு சில நண்பர்கள் நடிகர்கள் குறித்துப் பேசும் போது மரியாதை கலந்து பேசியபோது, நடிகைகளை ஏன் அவ்வாறு சொல்லமாட்டேன்கிறீர்கள் என்று கேட்டபோது நடிகைகளுக்கு என்ன மரியாதை, வாய்ப்புக்காக எதையும் செய்பவர்கள் தானே என்பது போல் பதில் அளித்தார். வாய்ப்புக் கொடுக்கிறேன் என்று கூறி எதையும் செய்யச் சொல்பவர்கள் பற்றிக் குறிப்பிட மறுக்கிறார்கள், மறக்கிறார்கள்.

திரைப்படங்கள் அனைத்துமே ஆண்களை மையமாகவும் பெண்களை அதில் கவர்சிக்காக சேர்ப்பது போலவே பெரும்பாண்மைப் படங்கள் அமைவது உண்டு, அதிலும் ஆண்களை 'ஹீரோ' ஆக்கி அந்த 'ஹீரோ'வின் பாத்திரம் நடிகர்களுக்கு பொருந்துவது போல் தான் அமைக்கிறார்கள். ஒருசில நல்லப்படங்கள், இயக்குனர்கள் இருந்தாலும் திரைத்துறை என்பது கலைச்சார்ந்த ஒன்று என்பதைவிட வணிகம் சார்ந்த ஒன்றாகிவிட்ட சூழலில் அந்த ஒருசிலரை வைத்து ஒட்டு மொத்த திரைத்துறையும் தூய்மையானது, மக்களுக்காக இயங்குகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. தனிப்பட்ட நல்ல மனிதர்களை, அவர்களின் போற்றப்படும் திறன்களை ஒரு குழுவிற்குள் சென்று ஒட்டவைப்பது, குழுவிற்கு அடையாளமாக்குவது அவர்களுக்கும் அவர்களின் செயலுக்கும் களங்கம் விளைவிப்பது போன்றதாகும் என்பதால் விதிவிலக்குகளை (எக்சப்சன்களை) கணக்கில் கொள்வது தவறு. ஹீரோக்களின் திரையில் காட்டும் ஹீரோ இசத்தை உயர்த்திக்காட்ட எத்தனையோ பஞ்ச் டயலாக்குகளை யோசிக்கும் அதே திரைத்துறையினர் நடிகைகளின் மார்ப்புக் கச்சைகளின் அளவை எவ்வளவு குறைத்துக் காட்டினால் 'U/A' முத்திரைகள் கிடைக்கும் / அல்லது தப்பிக்கலாம் என்றெல்லாம் யோசிக்கிறார்கள். அதிலும் சிலர் படத்துக்கு 'A' முத்திரை கிடைத்தால் மகிழவும் செய்கிறார்கள்.

திரைத்துறைகளில் 'அட்ஜஸ்ட்மெண்ட்', 'டிஸ்கசன்' ஆகிய சொற்களில் நடிகைகளை சபலம் கொண்ட தயாரிப்பாளர், வெளியீட்டாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோர்களுக்கு விருந்து வைப்பதே வழக்கம், இதைத் திரைத்துறைச் சார்ந்தவர்கள் மறுக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். திரைத் தொழிற்கூடங்களில் திரைக்குப் பின்னால் நடக்கும் ஆடை அவிழ்புகள் எத்தனையோ, அதில் கழட்டிப் போடப்பட்டதில் ஒன்றிரண்டை போட்டு நடிகைகளைத் திரையில் காட்டுகிறார்கள். 'துணை நடிகை' என்றால் 'அவள் விபச்சாரி' என்பது போல் நினைக்கும் செய்தி இதழ் வாசகனுக்கும், திரைப்பட ரசிகனுக்கும் அப்படி ஒரு நினைப்பை ஏற்படுத்தியதின் பங்கு யாருக்கு ? திரைத்துறைக்கு ? செய்தி ஊடகங்களுக்கு ? இருவரும் சமமாகவே அதைச் செய்கிறார்கள்

செய்தி ஊடகங்கள் நடிகைகளை அவதூறு செய்துவிட்டார்கள் என்று கண்டனக் குரல் நடிகர்கள் எழுப்பினால் அதை வெளி இடுவதும் அதே அவதூறு செய்திவெளி இட்ட ஊடகங்கள் தான் என்பதை ரசிகர்களோ வாசகர்களோ புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதை செய்தி ஊடகமும் சரி, திரைத்துறையும் சரி நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றன.

திரைத்துறைக் களங்கப்பட்டு உள்ளதால் தானே செய்தி இதழ்கள் அதை கிசுகிசுக்களாக வெளி இடுகின்றன ? கிசுகிசு தகவல்கள் கொடுப்பதும் திரைத்துறையினரே, பிறரை நொந்து கொள்வதில் பயன் ஏது ? அல்லது அறியாமல் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் முறைகேடுகள் நடக்கின்றனவா ? நடிகைகள் அனைவருமே மிகவும் ஒழுக்கமானவர்கள் இல்லை என்று சொல்லவரவில்லை, ஆனால் அவர்களில் பலர் ஒழுக்கம் கெட்டுப் போவது திரைத்துறையினரால் ஏற்படுத்தப்பட்டப் பழக்கம் தான்.

நடிகர்கள் / நடிகைகளை அவதூறு செய்கிறார்கள் என்று கவலைப்படும் திரைத்துறையினர் (நான் அதைத் தவறு என்று சொல்லவரவில்லை), பெண்களை வைத்து, பெண்களுக்கு ஆசைகாட்டி, பலவந்தப்படுத்தி, வற்புறுத்தி அவர்கள் கண்ணுக்கு முன்பே நடக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பற்றி நடிகர் சங்கங்களில் விவாதித்திருக்கிறார்களா ? அதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா ? என்று எந்த ஒரு ரசிகனும் கேட்கமாட்டான். நடிகைகளின் தற்கொலைகளுக்கு திரை உலகம் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. ஒரே முறை தற்கொலை செய்து கொள்ளும் நடிகைகள் பற்றி அலோசனை நடத்தியதாக செய்திகள் வந்தன, அதுவும் நடிகைகள் மன அழுத்தத்திலிருந்து காத்துக் கொள்ள கவுன்சிலிங்க் கொடுக்கலாம் என்பது போன்ற ஆலோசனைதான், ஆனால் அதே கூட்டத்தில் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றி எந்த ஒரு முடிவையும் எடுக்கவோ, எட்டவோ இல்லை. இது போன்று கண்டனக் குரல்கள் யாருக்கான நாடகம் ? இதற்கு உடந்தையாக நடிகைகளையும் அழைத்துக் கொள்வதை நடிகைகளே புரிந்து கொள்ளாதது வியப்பளிக்கிறது. நடிகைகளுக்குத்தான் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. தென்னிந்திய திரைப்பட சங்கத்தலைவராக இதுவரை தேர்ந்தெடுக்கப் பட்ட நடிகைகள் எத்தனை பேர் ?

பின்குறிப்பு : திரைத்துறையைச் சார்ந்த பதிவர் நண்பர்கள் ஜாக்கிசேகர், கேபிள் சங்கர் மற்றும் ஷன்முகப் ப்ரியன் ஐயா ஆகியவர்கள் தவறாக எழுதி இருப்பது போல் உணர்ந்து கொண்டால் மன்னிக்க வேண்டுகிறேன்.

11 செப்டம்பர், 2009

புதிய தலைமுறை - ஒரு வாசகப் பார்வை !

அச்சு ஊடக இதழ்களை இணைய ஊடகங்கள் தின்று வரும் இன்றைய காலகட்டங்களில் அச்சு ஊடகங்களில் புதிய வார இதழ்களின் வரவுகள் குறைந்துவிட்டது. அது தவிர ஏற்கனவே இருக்கும் குமுதம், ஆவி, குங்குமம் போன்ற நன்கு அறிமுகமான இதழ்களுடன் பொட்டிக் கடைகளில் தொங்கி வாசகருக்கு முன்னாள் அறிமுகம் ஆக வேண்டுமென்றால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதுடன் பக்களின் உள்ளடக்கம் மற்றும் பகிர்வின், இலக்கியத்தின் தன்மை தரமெல்லாம் ஏற்கனவே இருக்கும் இதழ்களுக்கு போட்டி போடும் தன்மையில் இருந்தால் தான் ஓரளவு நின்று வளரமுடியும்.

சென்ற வாரம் சென்னை சென்றிருந்த போது பதிவர் நண்பர் மற்றும் அன்பு தம்பி அதிஷா(வினோத்) அழைப்பின் பேரில் அவர் அலுவலகம் அருகில் சென்றேன். பதிவர் யுவகிருஷ்ணாவும் (லக்கிலுக்) அங்கிருந்தார்.

பொதுவான் பேச்சுகளுக்கு பிறகு விரைவில் மூத்த மற்றும் பிரபல பத்திரிக்கையாளர் திரு மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும், 'புதிய தலைமுறை' வார இதழை அறிமுகப்படுத்தினார்கள். வாங்கிப் பார்த்தேன். நண்பர்களிடையேயும் கொடுத்து பரவலாக்கம் செய்யச் சொல்லி 20 பிரதிகள் கொடுத்தனர். சிவப்பு எழுத்தில் தலைப்பு 'புதிய தலைமுறை' கம்யூனிச பெயர் போல் இருக்கிறது, புத்தகம் தலைப்பை பார்த்து வாசகர் டரியல் ஆகமாட்டாங்களா ? ன்னு கேட்டேன். சிரித்தார்கள்.

சரி புத்தகம் பற்றி இப்போது, புத்தகத்தில் உள்ள அனைத்துக் பக்கங்களையும் படிக்கவில்லை, ஆனால் அனைத்துத் தலைப்புகளிலும் என்ன பொருளில் எழுதி இருக்கிறார்கள் என்பதை உள்ளிடில் ஒரிரு வரிகள் படிக்கும் ஊகிக்க முடிகிறது.

வடிவமைப்பு :அளவு புதிய ஆனந்த விகடன், மூன்று அட்டைகள் (விளம்பரம்) தவிர்த்து, பளபளப்பான தாளில் வண்ணப் படங்களுடன் வேறு விளம்பரம் இன்றி 48 பக்கங்கள், விலை பற்றிய விவரங்கள் இல்லை.

உள்ளடக்கம் :

முன் அட்டையில் இந்திய இளைஞர்கள் (இரு இளைஞிஞள், இரு இளைஞர்கள், நடுவில் ஒரு சிங் இளைஞன்) , மற்றும் உள்ளிட்டின் குறிப்பு சினிமா, நலம்,விளையாட்டு, சந்திப்பு என இருக்கிறது.

முன் அட்டையின் பின் பக்கம் யுனிவெர்செல் (மொபைல்) விளம்பரம், முதல் பக்கம்
எம்ஜிஆர் படத்தின் தொடக்கத்தில் வருவது போல் 'வெற்றி...வெற்றி' எனத் தலைபிட்ட கட்டுரை தொடக்கமாக இருக்கிறது. கடைகாரர்கள் லாபம் என்று எழுதி பட்டியல் எழுதுவது போல், எதையும் நேர்மறையாக தொடங்க வேண்டும் என்று முதல் பக்கத்தை தொடங்கியதாக தெரிகிறது. அந்தக் கட்டுரையில் 'சாய்னா நெஹ்வால்' மற்றும் இந்திய பெண் வீராங்கணைகளைப் பற்றிய தகவல் புகைப்படங்களுடன் நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்டு இருந்தது. அது ஒரு தன்முனைப்பு மற்றும் பாராட்டுக் கட்டுரை.

அடுத்து உடல்குறையுற்றோர் மற்றும் ஏழைகள் கல்வி உதவி பெறுவதற்கான தகவல் கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. சிங்கையில் ஊனம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இல்லை, அதற்கு பதிலாக உடல் குறையுற்றோர் என்று எழுதுவார்கள். ஊனம் என்ற சொல்லுக்கு பதிலாக இந்திய தமிழ் இதழ்கள் உடல் குறையுற்றோர் என்று எழுதினால் அவர்களுடைய தன்னம்பிக்கை மிகுதியாகும், ஊனம் என்ற சொல்வது அவர்களை தனித்துவிட்டுவிடுகிறது. அவர்களைக் குறிக்க ஒரு அடையாளப் பெயர் தேவைதான். இருந்தாலும் அதை புண்படா வண்ணம் குறிப்பிட வேண்டும். அதாவது அடையாளம் தேவை, அடைமொழி தேவையற்றது. குருடர் என்பதை பார்வையற்றோர் என்றும், செவிடர் என்பதை கேளாதோர் என்றும் எழுதிப் பழகிக் கொள்ள வேண்டும். கைகால் நன்கு செயல்படாதவர்களை மாற்றுத் திறனுடையோர் என்று குறிப்பது வழக்காகி இருக்கிறது.

அடுத்ததாக அதிஷா மற்றும் லக்கிலுக், அண்ணா பல்கலை வளாகத்தில் பொறியல் கல்லூரி சேர்க்கைக்கு நடைபெற்ற நேர்முகம், சேர்க்கை ஆகிய பற்றி மாணவர்களும் பெற்றோர்களும் அடைந்த துன்பங்களை நேரில் சென்று கண்டு வந்து எழுதி இருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று 'காலை 7 மணிக்கு நேர்முகம் தொடங்கி விடுவதால் தொலைவில் இருந்து வருபவர்கள் நேரடியாக கோயம்பேட்டிலிருந்து கல்லூரிக்கு வந்துவிடுகிறார்கள், அவர்களுக்கு குளிக்க பல்விளக்கக் கூட நேரம் இல்லாமல் போய்விடுகிறது, கல்லூரி நிர்வாகம் நேரங்களை மாற்றி அமைத்தால் பெற்றோர்கள் சிரமத்துக்கு உள்ளாக மாட்டார்கள் என்று சொல்லி இருந்தார்கள்.

அடுத்து வாமனன் திரை விமர்சனம், சீமானுடன் மாணவர்கள் பேட்டி, கடவுள் எங்கே இருக்கிறார் ? ஆன்மிகம் தொடர்புடைய உரையாடல் கதை, சர்கரை நோய் பற்றிய மருத்துவ கட்டுரை, இளைஞர்களுக்காக 'பைக் வாங்குவது எப்படி ?' ங்கிற கட்டுரை.

சரியாக நடுப்பக்கத்துக்கு முன் உமாஷக்தியின் கவிதை.

நடுப்பக்கம் அரசியல், இருபக்கம் சேர்ந்த நடுப்பக்கத்தில் இந்திய அரசியல் மரத்தின் அரசியல் வாதிகளின் கிளைகளும், கிளைக்களுக்கு கிளைகளாக அரசியல் வாதிகளின் வாரிசு பெயர்கள், அவர்களின் சிரிய புகைப்படங்களுடன் படங்களுடன் வாழ்க ஜெனநாயகம் என்று ஒரு பெரிய வண்ண இந்திய வரைபடம்அடுத்து இதழின் பல்சுவைக்காக சேர்க்கப்பட்ட புறநகர் பயணக் கட்டுரை, ஆலம்பரா கோட்டை பற்றிய விவரங்கள் அடங்கி இருந்தது.. அடுத்து இன்றைய திரையில் வெற்றி நடைபோட்டு வரும், சமுத்திரகணி, பாண்டிராஜன் மற்றும் சசிகுமார் ஆகியோர் பற்றிய தகவல்கள், நேர்முகம் இடம் பெற்றிருந்தன.

சன் குழும திரைப்படம் ஒன்றை கிண்டலடித்த 'காசிலா மணி' என்னும் நகைச்சுவை படங்களுடன் சிரிப்பு. வைரமுத்துவின் நடந்து வந்த பாதை, தனது முதல் பேச்சு எங்கே எப்போது என்பதைப் பற்றி எழுதி இருந்தார்.

சிறுகதை இல்லாமல் வார இதழா ? அருணா ஸ்ரீனிவாசன் எழுதிய 'நிறைவு' சிறுகதை இடம் பெற்றிருக்கிறது. அடுத்ததாக ஒரு சமூகக் குற்றம் பற்றி, 'தவறு செய்தவர் ஆசிரியர் தண்டனை அனுபவிப்பது மாணவன்!' என்கிற புலனாய்வு செய்திக் கட்டுரை.

தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும், இகலப்பை பயன்பாடு தரவிரக்கத் தகவலுடன் கணிணி தொடர்புடைய ஒரு கட்டுரை. நிறைவாக ஒரு புத்தக அறிமுகத்துடன் 46 அவது பக்கத்தில் இதழ் முடிகிறது.

******

வார இதழ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை திரு மாலன் மிக மிக நன்கு அனுபவமாகவே அறிந்தவர் என்பதால் 'புதிய தலைமுறை' யும் அவ்வாறே பொருளடக்கம் மற்றும் வடிவம் பெற்றிருக்கிறது. அதனால் வார இதழ்களில் மற்றொரு புதிய இதழாகப் பார்க்கிறேன். மற்றபடி வார இதழின் வடிவங்களை, கட்டுமானங்களை கட்டுடைத்து மாறுபட்ட வார இதழாக அமைக்க முயற்சித்தது போல் தெரியவில்லை, எல்லோரும் பயணிக்கும் சாலையில் பயணித்தால் சரி என்று நினைப்பதாக தெரிகிறது. கட்டுரைகளின் எழுத்தில் வழக்கமான ஊடக நீட்டல் முழக்கல், வருணனை சுற்றல், அலங்காரங்கள் போல் எழுதப்பட்டு இருக்கிறது. அதாவது பத்திரிக்கைத் தனம் நிறையவே இருந்தது. பத்திரிக்கையில் எழுதுபவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள். அனுபவம் தானே எழுத்து. எழுதியது தானே அனுபவம்.

குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் வரிசையில் 'புதிய தலைமுறை' மற்றொரு வார இதழாக அமைந்திருகிறது என்று சுறுக்கமாக சொல்லிவிடுகிறேன். எதாவது மாறுதல் இருக்க வேண்டும் என்கிற வம்படியாக கருத்துச் சொல்ல முடியவில்லை. மாறுதல் என்றால் என்ன மாறுதல் வாசகர் எதிர்ப்பார்ப்பு குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் இவைகளால் ஏற்கனவே நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளதால், புதியமாறுதல்களுடம் ஒரு இதழை முன்மொழிவது, அமைப்பது கடினம் என்பதை நான் இந்த நூலின் அமைப்பையும் பொருளடக்கத்தையும் வைத்துப் புரிந்து கொண்டேன்.

பலசரக்குடன் எத்தனை மளிகைக் கடை திறந்தாலும், தரம், மளிவு மற்றும் அருகில் இருக்கும் கடை எதுவோ அதில் தான் மக்கள் வாங்குவார்கள். வாசகர் நாடிகளை அறிந்து எத்தனை இதழ்கள் வந்தாலும் அவைகள் வெற்றிபெரும். அந்த வகையில் 'புதிய தலைமுறை' வார இதழ் வாசகர்களைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட வார இதழ்.

புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியர் திருமாலன், உதவி ஆசிரியராக ((எடிட்டராக) திரு யுவகிருஷ்ணா, மற்றொரு உதவி ஆசிரியராக திரு அதிஷா ஆகியோரை வாழ்த்துகிறேன். உங்கள் இதழ் பிற பிரபல வார இதழ்கள் போல் வாசகர்களை ஈர்த்து நிலைக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்