பின்பற்றுபவர்கள்

24 மே, 2012

'சுன்னத்' - சுவனப்பிரியன் செய்த அறுப்பு வாதம் !

நண்பர் சுவனப்பிரியன் தனது மதம் சார்ந்த பிரச்சாரங்களை மதம் சார்ந்தது என்று எழுதாமல் மாற்றுவழியில் மனிதனுக்கு மகத்தான நன்மை என்ற ரீதியில் சுன்னத் பற்றி ஒரு பதிவை எழுதி இருக்கிறார். இதே போன்ற அவரது பதிவுக்கு எதிர்வினை ஏற்கனவே எழுதப்பட்டது என்றாலும், அவரது மத ரீதியிலான பொய் பிரச்சாரங்களை அவ்வப்போது நாமும் விமர்சிப்பதன் மூலம் அவரது பிரச்சாரங்களை முறியடிக்க முடியாவிட்டாலும், அவரது பதிவைப் படித்துவிட்டு 'மாட்டிக் கொள்ளாமல்' பாலியல் தொழிலாளியை நாடி உயிர்கொள்ளி நோயை ஒரு சிலர் ஆட்கொள்ள நேர்ந்தால் தடுக்க முடியும் என்பதால் இதை மீண்டும் எழுதுகிறேன், மற்றபடி அவர் பதிவை எவரும் பெருட்படுத்தமாட்டார்கள் என்றால் எனக்கு ஒன்றும் இல்லை.

சுவனப்பிரிய ன் முதலில் பதிவுக்கு தலைப்பு ''சுன்னத் பண்ணுங்க! எய்ட்ஸை விரட்டுங்க!' ' என்று தான் வைத்திருந்தார், பின்னர் ' 'சுன்னத்'(கத்னா) பண்ணிக் கொள்ளும் ஜிம்பாப்வே எம்பிக்கள்!' என்று மாற்றியுள்ளார்.

சுன்னத் எய்ட்ஸ் நோயை தடுக்குமா ? என்பதற்கு முன்பு சுன்னத் வரலாறு பற்றிப் பார்ப்போம், ஆண்களுக்கு ஆண்குறியின் முன் தோலை அகற்றிக் கொள்ளும் பழக்கம் யூத இனத்தின் பழக்கமாக இருந்தது, இதற்கு அடிப்படைக்காரணம் கடும் குளிர் மற்றும் வரட்சி ஆகிய காரணங்களுக்காக அவர்களிடையே குளிக்கும் பழக்கமும் குறைவாக இருந்தது, அதனால் பருவமடைந்த ஆண்களுக்கு ஆண்குறியில் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு அதற்கான தீர்வு முந்தோலை அகற்றிக் கொள்ளுதல் என்று வழக்கமாக பின்னர் மதக்கடமைகளில் ஒன்றாக வழியுறுத்தப்பட்டது, பூணூல் அணிந்தவர் 'உயர்ந்தோர்' என்று பரப்பட்டதைப் போல் சுன்னத் செய்து கொள்ளாதவர்கள் அசுத்தமானவர்கள் என்ற கருத்து யூதர்களிடம் இருந்து பின்னர் அவ்வாறு செய்து கொள்ளாதவர்களை விமர்சனம் செய்யும் அளவுக்கு ஆனதும், ஏற்கனவே யூத மதம் என்கிற நிறுவனத்தை துவங்கியவர்கள் என்ற நிலையில் யூத இனம் மேலனதாகவும், அவர்களது செயல்கள் உயர்ந்த பண்பு நலன் சார்ந்த, நாகரீகமேன்மை பட்டதாகவும் அரபுக்களிடமும், ரோமானியர்களிடமும் ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது, பின்னர் யூத மதப்பிரிவுகளாக கிறிஸ்தவமும், இஸ்லாமும் பிரிய 'சுன்னத்' செய்து கொள்வது மதப் பழக்கம், ஒழுக்கம் சார்ந்தவை என்பதாக கொள்கையாக்கிக் கொள்ளப்பட்டது. 19 நூற்றாண்டிற்கு முன்பே கிறிஸ்தவ பிரிவு சுன்னத் செய்து கொள்ளும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டது, இன்றைய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் யூதர்கள் அல்லாத கிறித்துவர்களில் சுன்னத் செய்து கொள்பவர்கள் 5 விழுக்காட்டிற்கும் குறைவே.

சுன்னத் செய்து கொள்ளாத ஐரோப்பிய பிரபலங்கள் Famous Intact Men குறித்த தகவல்களை அந்த இணையத் தளத்தில் காணலாம்.

இஸ்லாமியர்கள் சுன்னத் பழக்கம் கைவிடப்படாமல் இருப்பதற்குக் காரணம் ? வேறு ஒன்றுமே இல்லை, அவை குரானிலும் கதீசிலும் சொல்லப்பட்டு கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது என்பது தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை. குரான் கட்டளையை மீற அவர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில் அவர்களால் அந்தப் பழக்கத்தை விட்டொழிக்க முடியாது. அதை ஞாயப்படுத்தச் சொல்லி யாரும் கேட்காவிட்டாலும், நெற்றியில் கிரல் விழுந்த ஒருவர் உலகில் உள்ள எல்லோருக்கும் அதே கீரல் இருந்தால் தன்னைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்பதாகத் தான் இவர்கள் அதை மற்றவர்களுக்கு 'பரிந்துரை' செய்கிறார்கள்.

சுன்னத் செய்து கொள்வது எய்ட்ஸ் பரவலை தடுக்கிறதா ?

இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, காரணம். எய்ட்ஸ் பரவல் பாதுகாப்பற்ற பாலியல் உறவால் பரவுகிறது என்றாலும், அவ்வாறு பாதுக்காப்பற்ற பாலியல்உறவை நாடும் சுன்னத் செய்யப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொள்ளாது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. சுன்னத் செய்யப்பட்ட ஆண் ஒருமுறை பாலியல் தொழிலாளியை நாடி நோயைத் தொற்றிக் கொள்ளவில்லை என்றால் அடுத்த் முறை அவர் கவலைப்படாமல் செல்லலாம் என்று சொல்ல ஒன்றும் இல்லை. உலக சுகாதார நிறுவனங்கள் இத்தகைய பொய் பிரச்சாரங்களை நிராகரித்துவருகின்றனர், மாறாக பாதுக்காப்பான பாலியல் உறவை நாடச் சொல்லுகிறார்கள்.

மனைவியர் தங்கள் கணவனை சுன்னத் செய்து கொள்ளச் சொல்வது 'நீ பாலியல் தொழிலாளியிடம் சென்றுவருவதை நான் மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறேன்' என்பதே ஆகும், கணவனின் வருமானம் மட்டும் போதும் எங்கு 'போனாலும்' கவலை இல்லை என்று எந்த ஒரு மனைவியும் நினைக்கமாட்டாள். படிப்பறிவு இல்லாதவர்களுக்கு எய்ட்ஸ் என்பது காற்றில் பரவும் நோய் சுன்னத் செய்து கொள்ளாதவர்களை அது 'கப்' என்று பிடித்துக் கொள்ளும் என்ற தகவல் பரப்பட்டாலன்றி அறிவுள்ள எவரும் நன்றாக ஒழுக்கமாக நடந்து கொள்ளும் கணவனை நீ அறுத்துக் கொண்டு வா என்று சொல்லமாட்டார்கள், ஒருவேளை ஆப்பிரிக்க பெண்களுக்கு எய்ட்ஸ் காற்றில் பரவும் நோய் என்று சொல்லப்பட்டதோ ?

கணவர்களான ஆண்களுக்கு சுன்னத் வழியுறுத்தும் சுவனப்பிரியன் மனைவியர்களான பெண்களுக்கு என்ன வழியுறுத்துவாறோ ? ஆப்பிரிக்க நாடுகளில் செய்யப்படும் பெண்களுக்கான சுன்னத் ?

*****

சுன்னத் செய்வது என்பது காட்டுமிராண்டி பழக்கம், இதை மதப் பழக்கம் என்றால் அதில் சொல்வதற்கு விமர்சனம் செய்ய ஒன்றும் இல்லை, அலகு குத்தி காவடி எடுப்பதற்கு என்ன விமர்சனமே அதே போன்றதுதான், அது அம்மதப் பழக்கவழக்கம் யாருக்கும் விமர்சனம் செய்யும் உரிமை இல்லை, செய்து கொள்பவர்களுக்கு இல்லாத அக்கரை நமக்கு ஏன் என்று விட்டுவிடலாம். ஆனால் அது பொதுவானது, கடைபிடிக்க வேண்டியது என்னும் போது தான் நாம் விமர்சனம் செய்கிறோம், மதக் கடமை என்றாலும் இவை காட்டுமிராண்டி பழக்கம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. காரணம் ?

முதலில் சுன்னத் செய்து கொள்வதோ உடலில் ஏதேனும் மாற்றம் செய்து கொள்வதோ அவரவர் விருப்பம் என்றாலும் இவை ஒருவரிடம் அவருடைய அனுமதி பெறாமல் செய்வது கொடுமையான ஒன்று, குறிப்பாக ஆண் குழந்தைகள் பிறந்ததும் இரண்டு வயதிற்குள் மதக் கடமை என்று நிறைவேற்றிவிடுகிறார்கள், அதில் குழந்தைக்கு என்ன விருப்பம் இருக்க முடியும் ? ஒரு ஆண் வளர்ந்த பருவ வயதில் மதக் கடமை ஒன்று இருக்கிறது நிறைவேற்றுவது உனது கடமை என்று சொன்னால் அவனுடைய விருப்பம் பற்றி கேட்கும் ஒரு வாய்ப்பு அது பற்றிய மத ரிதியிலான புரிந்துணர்வும் அவனுக்கு இருக்கும், அவனுடைய அனுமதியுடன் அதை செய்துவிடமுடியும், ஆனால் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளை மதக் கடமைகள் என்று கூறி அறுத்துப் போடுவதை (Child Abuse) மதக் கடமை என்று நியாப்படுத்தினாலும் அதை காட்டுமிராண்டித் தனம் என்று விமர்சனம் செய்வதில் தவறே இல்லை.

*****

ஒரு சில ஆண்களுக்கு பிறவி குறைபாடாக முன் தோலை பின்னுக்கு தள்ள முடியாத நிலையில் மருத்துவ தீர்வாக சுன்னத் செய்யப்படுகிறது, மற்றபடி நல்ல நிலையில் இருக்கும் ஆணை அறுத்துக் கொள்ளச் சொல்வதில் எந்த ஒரு அறிவார்ந்த செயலும் இருப்பதாகத் தெரியவில்லை, பாலியல் நோய் பற்றிய விழிப்புணர்வில் பாதுகாப்பான உடல் உறவுக்குத்தான் வழியுறுத்த வேண்டுமே அன்றி சுன்னத்தை முதன்மைத் தீர்வாக செல்வது அறியாமையின், மதப்பற்றின் வெளிப்பாடே.

கைவிரல்களில், நகங்களில் அழுக்கு சேராத நாளே இல்லை, கை கழுவி விட்டு தான் சாப்பிடுகிறோம், அதற்காக நகங்களை வேருடன் பிடுங்கிக் கொள்ளுங்கள், கரண்டியால் சாப்பிடப் பழகுகங்கள் என்று யாரும் சொல்வது கிடையாது, ஆண்குறியில் அழுக்குகள் சேர்வது இயல்பான ஒன்று நாள் தோறும் குளிக்கும் போது அதை கழுவ எவ்வளவு நேரமாகும் ? அதைத் தவிர்க்க ஏன் வெட்டிக் கொள்ள வேண்டும் ? என்றோ ஒரு நாள் பல்வலிவரலாம் பற்களை பிடுங்கிக் கொள் நல்லது என்றால் பல்லின் பயன் ? முற்றிலும் இழக்கிறோம். அதே தான் சுன்னத் செய்து கொள்ளும் ஆண்கள் ஆண் உறுப்பின் மென்மையை இழக்கிறார்கள், அதானால் கிடைக்கும் முழுமையான உடல் உறவு மற்றும் தன்னின்ப பழக்கத்தின் முழுச் இன்பத்தையும் இழக்கிறார்கள். ஏற்கனவே சுன்னத் செய்யப்பட்டு உணர்வு நரம்புகளின் உணர்வுகள் குறைந்த நிலையில் அதன் மீது ஆணுறையும் அணிந்து கொள்ளும் ஆண்களுக்கு உடலின்பம் என்பது 50 விழுக்காடு கிட்டுமா ? என்பதே ஐயம். சுன்னத் செய்யப்பட்ட ஆண்குறி ரப்பர் ஆண்குறிகளைவிட சற்று துடிப்பானது என்று மட்டுமே சொல்லலாம், இயற்கை வழங்கிய அற்புதமான முன் தோலை வெட்டிக் கொள்வதால் ஆண்களுக்கும் நட்டம், அதை வெட்டிக் கொண்டு பாலியல் தொழிலாளியை நாடிவாருங்கள் என்று சொல்ல பெண்களுக்கும் நட்டம்.

இவர்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறார்கள் ? வேறு என்ன ? மேலே சொல்லி உள்ள 'முகத்தில் கிரல் பட்டவன் நிலையே' நாம் அவர்களைப் பார்த்து பரிதாப்படுவோம், ஆண் குழந்தைகள் சுன்னத் செய்வதிலிருந்து முற்றிலும் காப்பற்றப்படவேண்டும், மதவாத மூடப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் ஒழிய வேண்டும்.

சுன்னத் செய்யச் சொல்வதைவிட இரண்டு குழந்தைப் பெற்ற ஆணை கு.க செய்யது கொள்ளச் சொல்வது தான் மிக முக்கியமானது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், கள்ளத் தொடர்பில் உருவாகும் கருவையும் தடுக்க முடியும்.

Rights of Parent and Child

Infant circumcision violates the UN Declaration of Human Rights.
Article V, United Nations Declaration of Human Rights states that "No one shall be subjected to torture or to cruel, inhuman or degrading treatment or punishment." It says nothing about circumcision of infants nor when it is chosen by adolescents and adults. This Article is aimed fairly and squarely at the treatment of captives, prisoners and suspects by law enforcement and military authorities. Its only relevance to circumcision is to prohibit this as a forcible treatment of captives or prisoners.
Circumcision, with its proven prophylactic benefits, cannot ever be officially regarded as contravening the UN Declaration when performed by suitably qualified persons at the request of the patient or his legal guardians.
Parents have no right to inflict circumcision on their sons.
Numerous research projects have shown that there is a small net prophylactic (i.e. preventative) benefit from infant circumcision which doesn't accrue if the circumcision is performed after infancy. Furthermore, in a number of cultures the religious or social norm is for boys to be circumcised. If a boy is not circumcised as an infant then these benefits are denied to him.
An infant cannot make his own decision to be circumcised (just as he cannot make his own decisions about immunisation, religious upbringing, choice of schooling, etc). Parents have a right and a duty to make, on behalf of a child, those decisions which he cannot make for himself. It is thus up to the parents to make the decision based on what they see as the benefits and risks. They make many other far-reaching decisions for their children every day, so why not this one too?
Infant circumcision is highly traumatic for the boy.
There is little evidence that circumcision itself is more than slightly stressful for the average baby. All babies cry when they are undressed or restrained. Many babies sleep quite peacefully through their circumcision, whilst others go to sleep contentedly as soon as they are comfortably dressed again after it.
General anaesthetics should normally be avoided with infants, but a small amount of local anaesthetic to provide a dorsal penile nerve block can be used. Most doctors (and all Jewish Mohels) prefer to completely avoid the small risks posed by any anaesthetic agents. Instead, a few drops of wine or a sugar solution pacifier have been found to have excellent results.
A baby's nervous system is not as highly developed as in an older child, although he can feel some pain, neither is his memory. A baby cannot localize any pain from his circumcision; has no sense that his penis is in any way different from any other part of his body; and doesn't remember anything of the circumcision (whereas an older child - say over 2 years old - will localize and remember any pain).

இணைப்பு : 12 Reasons to Say “No” to Circumcision

95 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஒழுக்கமாகவும்,உடல் மற்றும் மனத்தூய்மையுடனும் வாழ்ந்தாலே போதும்.அப்படி வாழ முடியாதவர்கள் அறுத்துக்கொள்ளலாம்

மாசிலா சொன்னது…

உங்கள் வாதத்துடன் ஒத்துப் போகிறேன்.

சுன்னத் செய்துகொள்வது அவரவர் விருப்பம்தான். இதற்காக இம்முறை எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்க உதவும் என போலி விளம்பரம் செய்வது ஆபத்தில்தான் முடியும்.

கடவுள்தான் மனிதனையும் இப்பிரபஞ்சத்தையும் படைத்தார் என்பவர்கள் இம்மனிதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஏன் அவன் உடல் உறுப்புகளில் பலவித மாற்றங்களை செய்துகொள்கிறார்கள்?

மொத்தத்தில் சுவனப்பிரியனின் சுன்னத் வாதம் ஒரு முட்டாள்தனமான வாதம். கடும் கண்டனத்திற்குறியது. இளைஞர்களை அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் பொய் விளம்பர பிரச்சாரம்.

மாசிலா சொன்னது…

சுவனப்பிரியனின் "சுன்னத் செய்துகொள்ளுங்கள் ..." பதிவை தடை செய்ய தமிழ்மண நிர்வாகத்திற்கு நான் அனுப்பிய மடல் இதோ :

#இங்கு பிரச்சினைக்கு உள்ளான இப்பதிவின் தலைப்பை பார்த்தாலே உங்களுக்கு நான் இதை தடை செய்ய கேட்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர் என நம்புகிறேன். உயிர்களுடன் விளையாடும் வீண் விளம்பரங்கள் பிரச்சாரங்கள் உடனடியாக தடை செய்யவும்.
நன்றி.#

தருமி சொன்னது…

//அவை குரானிலும் கதீசிலும் சொல்லப்பட்டு கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது ..//

இக்கட்டாயம் குரானில் சொல்லப்படவில்லை. அதாவது அல்லா சொல்லவில்லை.
ஆனால் குரானில் மனிதன் எக்குறையுமில்லாமல் முழுமையாகப் படைக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்லப்பட்டுள்ளது.

அல்லாவால் முழுமையாக, குறையில்லாமல் படைக்கப்பட்ட பின்னும் ’கத்னா’ செய்வதென்றால் அவர்கள் அல்லா செய்த படைப்பு முழுமையானதல்ல; அது குறையோடு உள்ளது என்று சொல்கிறார்கள் என்றுதானே பொருள்?!

கோவி.கண்ணன் சொன்னது…

//இக்கட்டாயம் குரானில் சொல்லப்படவில்லை. அதாவது அல்லா சொல்லவில்லை.
ஆனால் குரானில் மனிதன் எக்குறையுமில்லாமல் முழுமையாகப் படைக்கப்பட்டிருக்கிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. //


நீங்கள் சொல்வது தவறு ஆண் மும்மீன்களுக்கான சொர்கத்தின் திறவு கோல் முந்தோலில் தான் முடியப்பட்டு இருக்கிறது, அதை வெட்டி எடுக்கவில்லை என்றால் சொர்கத்திற்கு செல்லும் சாவி கிடைக்காது.

கோவி.கண்ணன் சொன்னது…

//மாசிலா கூறியது...
சுவனப்பிரியனின் "சுன்னத் செய்துகொள்ளுங்கள் ..." பதிவை தடை செய்ய தமிழ்மண நிர்வாகத்திற்கு நான் அனுப்பிய மடல் இதோ : //

அந்த இடுகை தடைச் செய்ய தகுதியான அவதூறுகளுடன் எழுதப்பட்டவை தான். இவர் பதிவை படித்துவிட்டு யாரேனும் பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இவர் பொறுப்பேற்பாரா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//suji சொன்னது…
ஒழுக்கமாகவும்,உடல் மற்றும் மனத்தூய்மையுடனும் வாழ்ந்தாலே போதும்.அப்படி வாழ முடியாதவர்கள் அறுத்துக்கொள்ளலாம்//

அதே அதே.

"நீங்கள் பலரை நாடுபவராக இருந்து உங்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு தேவைப்பட்டால் சுன்னத் செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னால் அதில் கொஞ்சமேனும் பொருள் இருக்கும்

Unknown சொன்னது…

அருமை.......குரானிலேயே சொல்லப்பட்டாலும் அது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் என்பதில் சந்தேகமே இல்லை.

suvanappiriyan சொன்னது…

திரு கோவி கண்ணன்!

//"நீங்கள் பலரை நாடுபவராக இருந்து உங்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு தேவைப்பட்டால் சுன்னத் செய்து கொள்ளுங்கள்" என்று சொன்னால் அதில் கொஞ்சமேனும் பொருள் இருக்கும் //

அதெப்படி...நான் எழுதிய பதிவின் நோக்கத்தை இரண்டு வரிகளில் விளக்கி விட்டீர்களே!

கோவி.கண்ணன் சொன்னது…

//அதெப்படி...நான் எழுதிய பதிவின் நோக்கத்தை இரண்டு வரிகளில் விளக்கி விட்டீர்களே!//

அதையும் என்போன்றவர்களால் தான் சொல்ல முடியும். ஏனெனில் பாலியல் தொழிலாளியை நாடிச் செல்பவர்களை பாதுகாக்க உங்களுக்கு உங்கள் மதம் அனுமதிக் கொடுக்கவில்லை, மாறாக அவர்களை கல்லால் அடித்துக் கொல்லச் சொல்கிறது உங்கள் மதம், மற்றபடி ஒழுக்கமானவர்களுக்கு நீங்கள் செய்து கொள்ளச் சொல்லும் சுன்னத் பயனற்றது மற்றும் தனிமனிதனுக்கு பேரிழப்பும் ஆகும்.

வேகநரி சொன்னது…

'சுன்னத் பண்ணுங்க! எய்ட்ஸை விரட்டுங்க!' இஸ்லாமிய மத பிரசாரம் வெறி எந்தளவுக்கு ஆபத்தானது என்பது தெரிகிறது. அதை சூடான சினிமா இடுகைகள் பகுதிக்கு அனுப்பியது நல்லது. அந்த பதிவில இன்னொரு மத பிரசாரகர் சொல்வதை பாருங்க
//இதில் பேசிய எம்.பி. ஒருவர் பெண்கள் அழகாக இருப்பதால் அவர்கள் மீது ஆண்களுக்கு ஆசை வருகிறது. எனவே பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும். இதன் மூலம் எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கலாம்' என்றார்//
அதுக்குதானேயப்பா இஸ்லாம் பெண்களை முக்காடு இட சொல்கிறது ஹிஜாப் பற்றி கேலியும் கிண்டலும் செய்வதால் நஷ்டம் இஸ்லாமியர்களுக்கு அல்ல என்பதை தெரிஞ்சுக்குங்கோ ...!!!

இஸ்லாம் இவர்களின் பெண்கள் மீதான பார்வையையே கோணலாக்கியுள்ளது.

kaialavuman சொன்னது…

சமீபத்தில் (ஃபெப்ரவரி மாதம் என்று நினைவு) இந்தியாவில் புற்று நோய் பற்றிய தகவல்கள் வெளியிட்டிருந்தார்கள். அதில் இந்திய பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது (உயிரிழப்பு) Cervical Cancer-ஆல். ஆனால், இதில் இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் பாதிப்பு அடைவதில்லை என்ற தகவல் [இந்த கருத்து முழுக்க முழுக்க தகவல் அடிப்படையில் தான்; ஆராய்ச்சிகளில் அடிப்படையில் அல்ல] வெளியிட்டிருந்தார்கள். இதற்கு காரண்ம் இஸ்லாமிய ஆண்களின் சுன்னத் பழக்கமாகக் கூட இருக்கலாம் என்று முன்னணி நாளிதழ்களில் கூட வெளியாகியுள்ளது.

மற்றபடி, இந்த சுன்னத், 100 சதவிகிதம் Cervical Cancer-ஐத் தடுக்கும் என்றும் கூற விழையவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//சமீபத்தில் (ஃபெப்ரவரி மாதம் என்று நினைவு) இந்தியாவில் புற்று நோய் பற்றிய தகவல்கள் வெளியிட்டிருந்தார்கள். அதில் இந்திய பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது (உயிரிழப்பு) Cervical Cancer-ஆல். ஆனால், இதில் இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் பாதிப்பு அடைவதில்லை என்ற தகவல் [இந்த கருத்து முழுக்க முழுக்க தகவல் அடிப்படையில் தான்; ஆராய்ச்சிகளில் அடிப்படையில் அல்ல] வெளியிட்டிருந்தார்கள். இதற்கு காரண்ம் இஸ்லாமிய ஆண்களின் சுன்னத் பழக்கமாகக் கூட இருக்கலாம் என்று முன்னணி நாளிதழ்களில் கூட வெளியாகியுள்ளது.

மற்றபடி, இந்த சுன்னத், 100 சதவிகிதம் Cervical Cancer-ஐத் தடுக்கும் என்றும் கூற விழையவில்லை.//

இதற்கெல்லாம் அடிப்படை ஆதாரம் எதுவும் கிடையாது. 100 விழுக்காட்டு மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 15 விழுக்காடு என்றால் அதில் பாதித்துள்ளவர்களின் விழுக்காடுகளை ஒப்பிட்டால் தான் தகவல் தெரியவரும். மற்றவர்களில் 85 க்கு 10 பேர் பாதித்துள்ளனர் இஸ்லாமியர்களில் 2 பேர் மட்டுமே பாதித்துள்ளனர் என்றால் ஒப்பிடத் தக்க 15ல் 2 பேர் என்பது 13 விழுக்காடு அதை 86/10 ல் கிடைக்கும் 8.5 விழுக்காட்டில் ஒப்பிட அதிகமாகும். தவிர இது போன்ற கணக்கு வழக்குகளை இஸ்லாமிய நாடுகளிலும் நடத்தப்படும் போல் தான் முழுவிவரம் தெரியவரும்

Unknown சொன்னது…

//மாசிலா கூறியது...கடவுள்தான் மனிதனையும் இப்பிரபஞ்சத்தையும் படைத்தார் என்பவர்கள் இம்மனிதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் ஏன் அவன் உடல் உறுப்புகளில் பலவித மாற்றங்களை செய்துகொள்கிறார்கள்?//

//தருமி கூறியது...அல்லாவால் முழுமையாக, குறையில்லாமல் படைக்கப்பட்ட பின்னும் ’கத்னா’ செய்வதென்றால் அவர்கள் அல்லா செய்த படைப்பு முழுமையானதல்ல; அது குறையோடு உள்ளது என்று சொல்கிறார்கள் என்றுதானே பொருள்?!//

நான் சொல்ல நினைத்ததையே மேலே மாசிலாவும் தருமி அய்யாவும் கூறியிருக்கிறார்கள். அதனால் ஒரு ரிப்பீட்டு மட்டும் போட்டுக்கிறேன்

பெயரில்லா சொன்னது…

ஹிஹி, விட்டா சுன்னத் செய்பவர்களுக்கு சுவனப்பிரியன் ரெண்டு கிலோ அரிசியும் கதர் சேட்டு,கதர் வேட்டியும் இலவசமாக கொடுப்பதாக அறிக்கை விட்டாலும் விடுவார் :)

பெயரில்லா சொன்னது…

சுவனப்பிரியன் என்ற பெயர் வந்ததுக்கும் இந்த சுன்னத்'க்கும் எதோ சம்மந்தம் இருக்குன்னு நினைக்கிறன்!

ஒருவேளை, சுவனப்பிரியன் சுன்னத் செய்கிற தொழிலா செய்கிறார்????

கோவி.கண்ணன் சொன்னது…

//கந்தசாமி. கூறியது...
ஹிஹி, விட்டா சுன்னத் செய்பவர்களுக்கு சுவனப்பிரியன் ரெண்டு கிலோ அரிசியும் கதர் சேட்டு,கதர் வேட்டியும் இலவசமாக கொடுப்பதாக அறிக்கை விட்டாலும் விடுவார் :)//

பல்லைப் பிடிங்கிவிட்டு பட்டானி கொடுப்பது போல்

பெயரில்லா சொன்னது…

பாவம் சுவனம், ஒருவேளை தனது வருமானத்துக்காக இவ்வாறு எழுதலாம், இதெல்லாம் ஒரு வியாபார தந்திரம் தானே:)

suvanappiriyan சொன்னது…

திரு கந்தசாமி!

//ஹிஹி, விட்டா சுன்னத் செய்பவர்களுக்கு சுவனப்பிரியன் ரெண்டு கிலோ அரிசியும் கதர் சேட்டு,கதர் வேட்டியும் இலவசமாக கொடுப்பதாக அறிக்கை விட்டாலும் விடுவார் :)//

மக்களுக்கு சுகாதார வாழ்வு கிடைக்க அவர்களுக்கு ஆர்வம் வூட்டும் வகையில் அரசு இலவசங்களை கொடுத்தால் அதை வரவேற்போமே! :-)

நம்ம ஜெயலலிதா அம்மா கூட அரசு தொட்டிலில் போடப்படும் அனாதை குழந்தைகளுக்கு இலவச சுன்னத் செய்ய முன்பு ஆர்டர் பிறப்பித்திருந்தார். ஒரு பெண்ணுக்கு தெரிந்த மருத்துவ குணம் பல ஆண்களுக்கு இன்னும் வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

//பாவம் சுவனம், ஒருவேளை தனது வருமானத்துக்காக இவ்வாறு எழுதலாம், இதெல்லாம் ஒரு வியாபார தந்திரம் தானே:)//

ஹி...ஹி...நம்ம தொழில் கணிணி துறையையும் கணக்கியலையும் சார்ந்ததுங்கோ! இனிமேல போய் இதுக்காக டாக்டருக்கு எல்லாம் படிக்க முடியாது. ஆலோசனை வேண்டுமானால் சொல்லலாம். :-)

.

கோவி.கண்ணன் சொன்னது…

//நம்ம ஜெயலலிதா அம்மா கூட அரசு தொட்டிலில் போடப்படும் அனாதை குழந்தைகளுக்கு இலவச சுன்னத் செய்ய முன்பு ஆர்டர் பிறப்பித்திருந்தார். ஒரு பெண்ணுக்கு தெரிந்த மருத்துவ குணம் பல ஆண்களுக்கு இன்னும் வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.//

அதற்கு உடல்நலன் காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை, அந்தக் குழந்தைகளில் முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளும் இருக்கும் என்பதால் சொல்லி இருப்பார். அவருக்கு ஒருவேளை ஆனாதை ஆக்கப்படும் குழந்தைகளில் கனிசமான அளவில் இஸ்லாமியப் பெற்றோருடையது என்று சொன்னார்களோ என்னவோ. அரசு சார்பில் அதற்கான காரணங்கள் தெரிவிக்காத போது உடல் நலன் சார்ந்தது என்று நீங்கள் கூறுவது பொய் பிரச்சாரம்

kaialavuman சொன்னது…

//இதற்கெல்லாம் அடிப்படை ஆதாரம் எதுவும் கிடையாது. 100 விழுக்காட்டு மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 15 விழுக்காடு என்றால் அதில் பாதித்துள்ளவர்களின் விழுக்காடுகளை ஒப்பிட்டால் தான் தகவல் தெரியவரும். மற்றவர்களில் 85 க்கு 10 பேர் பாதித்துள்ளனர் இஸ்லாமியர்களில் 2 பேர் மட்டுமே பாதித்துள்ளனர் என்றால் ஒப்பிடத் தக்க 15ல் 2 பேர் என்பது 13 விழுக்காடு அதை 86/10 ல் கிடைக்கும் 8.5 விழுக்காட்டில் ஒப்பிட அதிகமாகும். தவிர இது போன்ற கணக்கு வழக்குகளை இஸ்லாமிய நாடுகளிலும் நடத்தப்படும் போல் தான் முழுவிவரம் தெரியவரும் //

புள்ளிவிவரங்களை வைத்து எதுவும் சொல்ல முடியாது என்பது உண்மை. அதனால் தான் இது ஆராய்ச்சி அடிப்படையில் அல்ல என்பதையும் குறித்திருந்தேன். மற்ற்படி, அது எண்ணிக்கையின் அடிப்படையிலான தகவல் அல்ல; சதவிகித அடிப்படையிலான தகவல் தான்.

suvanappiriyan சொன்னது…

திரு கோவிக் கண்ணன்!

//அதற்கு உடல்நலன் காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை, அந்தக் குழந்தைகளில் முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளும் இருக்கும் என்பதால் சொல்லி இருப்பார். அவருக்கு ஒருவேளை ஆனாதை ஆக்கப்படும் குழந்தைகளில் கனிசமான அளவில் இஸ்லாமியப் பெற்றோருடையது என்று சொன்னார்களோ என்னவோ. அரசு சார்பில் அதற்கான காரணங்கள் தெரிவிக்காத போது உடல் நலன் சார்ந்தது என்று நீங்கள் கூறுவது பொய் பிரச்சாரம்//

உசிலம்பட்டியிலும் சேலத்திலும் கள்ளிப்பாலைக் கொடுத்தும் முழு நெல்லையும் கொடுத்து கொல்வது எந்த சமூகம் என்பதை முன்பு ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார்களே! இதனால்தானே அரசு தொட்டில் திட்டமே வந்தது? அதே போல் தமிழகம் முழுக்க கணக்கெடுத்தால் முதியோர் இல்லங்களில் அவஸ்தைபடும் பெற்றோர்கள் சதவீதத்தில் எந்த மதத்தினர் என்பதையும் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வைக்கும் வாதங்களை உங்கள் மனசாட்சியாவது ஒத்துக் கொள்கிறதா?.

yasir சொன்னது…

தருமி அய்யா சொல்வது போல் குரானில் இந்த கட்டிங் முறை இல்லை என்றே தோன்றுகிறது. ஹதீதுகளில் காணப்படுவதாகத்தான் செய்தி. ஒரு சந்தேகம்,அரபு நாட்டுக் கடவுளின் படைப்பில் குறை இருப்பதால்தான் வெட்டி எடுக்கிறார்களா? எதையும் தேவையில்லாமல் கடவுள் படைப்பதில்லையே பிறகு எதற்காக நீக்க வேண்டும்? கடவுளுக்குத் தேவைப்பட்டது மனிதனுக்குத் தேவையில்லையோ? படைத்த பின் நீக்குவதைவிட படைக்கும் முன்பே சிந்திக்க வில்லையோ? முன்யோசனை இல்லாதவன் அனைத்தும் அறிந்தவனா? இதைத்தான் சிந்திக்கத் தெரிந்தவனுக்கு பல அத்தாட்சிகள் இருக்கும் என்றானோ??

rajamelaiyur சொன்னது…

நல்ல ஆழமான பார்வை உங்களுது ...

நம்பள்கி சொன்னது…

///அலகு குத்தி காவடி எடுப்பதற்கு என்ன விமர்சனமே அதே போன்றதுதான், அது அம்மதப் பழக்கவழக்கம் யாருக்கும் விமர்சனம் செய்யும் உரிமை இல்லை, செய்து கொள்பவர்களுக்கு இல்லாத அக்கரை நமக்கு ஏன் என்று விட்டுவிடலாம்.///

இது தவறான வாதம் கண்ணன் அவர்களே!

அப்ப தலையிலே தேங்காய் உடைக்கலாமா? குழந்தைகளை மண்ணில் புதைக்கலாமா? தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தால் இந்தியாவில் தண்டனை உண்டு. அப்படிதானே?

உலகில் நாம் சட்ட திட்டங்களுக்கு அடி பணிந்து தான் நடக்க வேண்டும்....

நம்பள்கி சொன்னது…

இது போன பின்னூட்டத்தின் தொடர்ச்சி..

சில நாடுகளில் பெண்களின், Clitoris- ஐ mutilate (வெட்டி விடுவார்கள்) செய்து விடுவார்கள். இதுவும் அவர்கள் சம்பந்தப்பட்டது என்று விட்டு விடலாமா?

"According to the WHO, it is practiced in 28 countries in western, eastern, and north-eastern Africa, in parts of the Middle East, and within some immigrant communities in Europe, North America, and Australasia."

Ref:
http://en.wikipedia.org/wiki/Female_genital_mutilation

தருமி சொன்னது…

எல்லாத்தையும் அல்லா தலையில் போட்டுர்ரீங்களே, கண்ணன்!

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D -ல் என்ன சொல்லியிருக்கு தெரியுமா?

இது ஒரு கடமையாக குரானில் நேரடியாக அறிவிக்கப்படாத போதிலும், நபிவழி என்ற முறையில் உலகம் முழுவதிலும் இது கடைபிடிக்கப் படுகின்றது ...

சிரிப்புசிங்காரம் சொன்னது…

சுன்னத் செய்யச் சொல்வதைவிட "இரண்டு குழந்தைப் பெற்ற ஆணை கு.க செய்யது கொள்ளச் சொல்வது தான் மிக முக்கியமானது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், கள்ளத் தொடர்பில் உருவாகும் கருவையும் தடுக்க முடியும்."
ஹி.ஹி அருமையான யோசனை...முஸ்லீம் மக்கள் தொகையைக் கட்டுப் படுத்தமுடியும்...நாட்டில் பயங்கரவாதம் ஒழியும்,குண்டுவைக்கிறது கொறையும்..

தருமி சொன்னது…

"We have indeed created man in the 'best of moulds'." (Qur'an 95:4)

"You will not see any flaw in what the Lord of Mercy creates." (Qur'an 67:3)

இதை வைத்துதான் என் கேள்வி: எப்படி அல்லா தப்பு பண்ணிட்டார்னு “தைரியமா” இஸ். சகோ.சொல்றாங்கன்னு தெரியலையே!

kumar சொன்னது…

என்ன பிரச்னை கோவியாரே உங்களுக்கு?
தமிழ் ஹிந்து,சந்து,பொந்திலிருந்து வரும் வரும்
பெருச்சாளிகளை விட உங்கள் பற்கள் கூராக இருப்பது ஏன்?
(பெருச்சாளிகள் பாழ் செய்பவை)
@@@ அந்தக் குழந்தைகளில் முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்த
குழந்தைகளும் இருக்கும் என்பதால் சொல்லி இருப்பார்.
அவருக்கு ஒருவேளை ஆனாதை ஆக்கப்படும் குழந்தைகளில்
கனிசமான அளவில் இஸ்லாமியப் பெற்றோருடையது
என்று சொன்னார்களோ என்னவோ.@@@
காவிக்கும்பலை பற்றி நீங்கள் எங்களுக்கு பாடம்
எடுக்கவேண்டாம் என்ற நீங்களா இப்படி?
காவிக்கூட்டமே இவ்வளவு மோசமாக எழுதியதில்லையே
ஐய்யா?
சரி போகட்டும்.சுவனப்ப்ரியனின் அடுத்த கேள்விக்கு
நீங்கள் நெஞ்சில் கை வைத்து உண்மை சொல்ல வேண்டும்.

@@@@உசிலம்பட்டியிலும் சேலத்திலும் கள்ளிப்பாலைக் கொடுத்தும்
முழு நெல்லையும் கொடுத்து கொல்வது எந்த சமூகம் என்பதை
முன்பு ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார்களே! இதனால்தானே
அரசு தொட்டில் திட்டமே வந்தது? அதே போல் தமிழகம் முழுக்க
கணக்கெடுத்தால் முதியோர் இல்லங்களில் அவஸ்தைபடும்
பெற்றோர்கள் சதவீதத்தில் எந்த மதத்தினர் என்பதையும்
நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வைக்கும்
வாதங்களை உங்கள் மனசாட்சியாவது ஒத்துக் கொள்கிறதா?.@@@
உண்மை என்னவென்றால் மெத்த படித்த மேதாவிகளாம்
பார்ப்பனர்களின் பெற்றோர்களே முதியர் இல்லத்தில் மெஜாரிட்டி.

@@@ ஒரு ஆண் வளர்ந்த பருவ வயதில் மதக் கடமை
ஒன்று இருக்கிறது நிறைவேற்றுவது உனது கடமை
என்று சொன்னால் அவனுடைய விருப்பம்
பற்றி கேட்கும் ஒரு வாய்ப்பு அது பற்றிய மத ரிதியிலான
புரிந்துணர்வும் அவனுக்கு இருக்கும், அவனுடைய அனுமதியுடன்
அதை செய்துவிடமுடியும்@@@

சுத்த லூசுத்தனம் இது.கொஞ்சம் தள்ளி போய் பதினாலு வயதில்
எனக்கு சுன்னத் நடந்தது.கொஞ்சம் கிக்கான பாட்டு காதில
விழுந்தாலே ஐட்டம் தூக்கிக்கும்.வயசு அப்படி.
அறுத்து போட்ட வலி இருக்கும்போது அது தூக்குனா?
பெரிய வேதனை ஐய்யா அது.

மாமன் மடியில வச்சு எத்தனை வயசுல காது குத்தறீங்க?
கொஞ்சம் பொறுக்க வேண்டியதுதான? ஒரு பதினெட்டு வருஷம்.
போடான்னுட்டு போயிடும்.பின்னால அதுவா வேணா
தொப்புள்லையோ,இல்ல வேற எங்கேயோ குத்திக்கும்.
அப்புறம் முக்கியமான விஷயம் நான் முஸ்லீம்தான்.
என்ன பெயரளவு முஸ்லீம்.போன முறை முசல்மான்கள்
எப்போது குமார் என்று பெயர் வைத்து கொள்ள ஆரம்பித்தார்கள்
என்று கேட்டுருந்தீர்கள்.நியாயமான கேள்வி.
என்ன பிரச்னை என்றால் ++ கொண்டிதோப்புகடாகுமார் ++
என்ற பெயரில் ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன்,எழுதி கிழித்து விடலாம் என்று.
அன்றிலிருந்து இந்த குமார் என்னோடு ஒட்டிகொண்டது தான்
மிச்சம்.ஒன்றும் எழுதி கிழித்த பாடில்லை.
மற்றபடி முக்காடு எங்கள் இனத்து பெண்களுக்குத்தான் எங்களுக்கில்லை.
(உடனே முக்காடை பற்றி ஒரு பதிவு போட்டு சாவடிக்க வேண்டாம்)
சிங்கபுரத்திலேதான் நானும் வசிக்கிறேன்.வாய்ப்பு கிடைக்கும்போது
உங்களை சந்திக்கவே விரும்புகிறேன்.
@@@@ தன்னெஞ்சறிவது பொய்யற்க.பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னை சுடும். @@@@

நன்றி.

kumar சொன்னது…

என்ன பிரச்னை கோவியாரே உங்களுக்கு?
தமிழ் ஹிந்து,சந்து,பொந்திலிருந்து வரும் வரும்
பெருச்சாளிகளை விட உங்கள் பற்கள் கூராக இருப்பது ஏன்?
(பெருச்சாளிகள் பாழ் செய்பவை)
@@@ அந்தக் குழந்தைகளில் முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்த
குழந்தைகளும் இருக்கும் என்பதால் சொல்லி இருப்பார்.
அவருக்கு ஒருவேளை ஆனாதை ஆக்கப்படும் குழந்தைகளில்
கனிசமான அளவில் இஸ்லாமியப் பெற்றோருடையது
என்று சொன்னார்களோ என்னவோ.@@@
காவிக்கும்பலை பற்றி நீங்கள் எங்களுக்கு பாடம்
எடுக்கவேண்டாம் என்ற நீங்களா இப்படி?
காவிக்கூட்டமே இவ்வளவு மோசமாக எழுதியதில்லையே
ஐய்யா?
சரி போகட்டும்.சுவனப்ப்ரியனின் அடுத்த கேள்விக்கு
நீங்கள் நெஞ்சில் கை வைத்து உண்மை சொல்ல வேண்டும்.

@@@@உசிலம்பட்டியிலும் சேலத்திலும் கள்ளிப்பாலைக் கொடுத்தும்
முழு நெல்லையும் கொடுத்து கொல்வது எந்த சமூகம் என்பதை
முன்பு ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார்களே! இதனால்தானே
அரசு தொட்டில் திட்டமே வந்தது? அதே போல் தமிழகம் முழுக்க
கணக்கெடுத்தால் முதியோர் இல்லங்களில் அவஸ்தைபடும்
பெற்றோர்கள் சதவீதத்தில் எந்த மதத்தினர் என்பதையும்
நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வைக்கும்
வாதங்களை உங்கள் மனசாட்சியாவது ஒத்துக் கொள்கிறதா?.@@@
உண்மை என்னவென்றால் மெத்த படித்த மேதாவிகளாம்
பார்ப்பனர்களின் பெற்றோர்களே முதியர் இல்லத்தில் மெஜாரிட்டி.

@@@ ஒரு ஆண் வளர்ந்த பருவ வயதில் மதக் கடமை
ஒன்று இருக்கிறது நிறைவேற்றுவது உனது கடமை
என்று சொன்னால் அவனுடைய விருப்பம்
பற்றி கேட்கும் ஒரு வாய்ப்பு அது பற்றிய மத ரிதியிலான
புரிந்துணர்வும் அவனுக்கு இருக்கும், அவனுடைய அனுமதியுடன்
அதை செய்துவிடமுடியும்@@@

சுத்த லூசுத்தனம் இது.கொஞ்சம் தள்ளி போய் பதினாலு வயதில்
எனக்கு சுன்னத் நடந்தது.கொஞ்சம் கிக்கான பாட்டு காதில
விழுந்தாலே ஐட்டம் தூக்கிக்கும்.வயசு அப்படி.
அறுத்து போட்ட வலி இருக்கும்போது அது தூக்குனா?
பெரிய வேதனை ஐய்யா அது.

மாமன் மடியில வச்சு எத்தனை வயசுல காது குத்தறீங்க?
கொஞ்சம் பொறுக்க வேண்டியதுதான? ஒரு பதினெட்டு வருஷம்.
போடான்னுட்டு போயிடும்.பின்னால அதுவா வேணா
தொப்புள்லையோ,இல்ல வேற எங்கேயோ குத்திக்கும்.
அப்புறம் முக்கியமான விஷயம் நான் முஸ்லீம்தான்.
என்ன பெயரளவு முஸ்லீம்.போன முறை முசல்மான்கள்
எப்போது குமார் என்று பெயர் வைத்து கொள்ள ஆரம்பித்தார்கள்
என்று கேட்டுருந்தீர்கள்.நியாயமான கேள்வி.
என்ன பிரச்னை என்றால் ++ கொண்டிதோப்புகடாகுமார் ++
என்ற பெயரில் ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன்,எழுதி கிழித்து விடலாம் என்று.
அன்றிலிருந்து இந்த குமார் என்னோடு ஒட்டிகொண்டது தான்
மிச்சம்.ஒன்றும் எழுதி கிழித்த பாடில்லை.
மற்றபடி முக்காடு எங்கள் இனத்து பெண்களுக்குத்தான் எங்களுக்கில்லை.
(உடனே முக்காடை பற்றி ஒரு பதிவு போட்டு சாவடிக்க வேண்டாம்)
சிங்கபுரத்திலேதான் நானும் வசிக்கிறேன்.வாய்ப்பு கிடைக்கும்போது
உங்களை சந்திக்கவே விரும்புகிறேன்.
@@@@ தன்னெஞ்சறிவது பொய்யற்க.பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னை சுடும். @@@@

நன்றி.

-/பெயரிலி. சொன்னது…

கோவி கண்ணன்
நல்ல கட்டுரை - நீங்கள் அநாவசியத்துக்கு நேரத்தை வீணாக்குகின்றீர்கள் என்று தனிப்பட்ட என் கருத்திருப்பினுங்கூட.


ஆனால், தமிழ்மணம் இக்கட்டுரையைத் தடைசெய்ததாக இங்கே குறிப்பிட்டிருக்கின்றது. நானறிந்தவளவிலே தமிழ்மணத்தினை ஒரு வாசகனாகப் பார்க்கும்போது, தமிழ்மணம் கட்டுரையைத் தடையேதும் செய்யததாகத் தெரியவில்லை. தானியங்குவழியில் சொற்களைக் கொண்டு வகைப்படுத்தும் நிரல் கட்டுரையை அள்ளி எங்காவது போடாதிருந்தால், தமிழ்மணம் ஏதேனும் நடவடிக்கை அதன் பதிவிலே மதம் சம்பந்தமாகபதிவுகளிலே குறிப்பிட்டிருக்கும் விதிகள், தீர்மானங்களின்படியே எடுத்திருக்குமென்று நம்புகிறேன்.

kumar சொன்னது…

என்ன பிரச்னை கோவியாரே உங்களுக்கு?
தமிழ் ஹிந்து,சந்து,பொந்திலிருந்து வரும் வரும்
பெருச்சாளிகளை விட உங்கள் பற்கள் கூராக இருப்பது ஏன்?
(பெருச்சாளிகள் பாழ் செய்பவை)
@@@ அந்தக் குழந்தைகளில் முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்த
குழந்தைகளும் இருக்கும் என்பதால் சொல்லி இருப்பார்.
அவருக்கு ஒருவேளை ஆனாதை ஆக்கப்படும் குழந்தைகளில்
கனிசமான அளவில் இஸ்லாமியப் பெற்றோருடையது
என்று சொன்னார்களோ என்னவோ.@@@
காவிக்கும்பலை பற்றி நீங்கள் எங்களுக்கு பாடம்
எடுக்கவேண்டாம் என்ற நீங்களா இப்படி?
காவிக்கூட்டமே இவ்வளவு மோசமாக எழுதியதில்லையே
ஐய்யா?
சரி போகட்டும்.சுவனப்ப்ரியனின் அடுத்த கேள்விக்கு
நீங்கள் நெஞ்சில் கை வைத்து உண்மை சொல்ல வேண்டும்.

@@@@உசிலம்பட்டியிலும் சேலத்திலும் கள்ளிப்பாலைக் கொடுத்தும்
முழு நெல்லையும் கொடுத்து கொல்வது எந்த சமூகம் என்பதை
முன்பு ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார்களே! இதனால்தானே
அரசு தொட்டில் திட்டமே வந்தது? அதே போல் தமிழகம் முழுக்க
கணக்கெடுத்தால் முதியோர் இல்லங்களில் அவஸ்தைபடும்
பெற்றோர்கள் சதவீதத்தில் எந்த மதத்தினர் என்பதையும்
நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வைக்கும்
வாதங்களை உங்கள் மனசாட்சியாவது ஒத்துக் கொள்கிறதா?.@@@
உண்மை என்னவென்றால் மெத்த படித்த மேதாவிகளாம்
பார்ப்பனர்களின் பெற்றோர்களே முதியர் இல்லத்தில் மெஜாரிட்டி.

@@@ ஒரு ஆண் வளர்ந்த பருவ வயதில் மதக் கடமை
ஒன்று இருக்கிறது நிறைவேற்றுவது உனது கடமை
என்று சொன்னால் அவனுடைய விருப்பம்
பற்றி கேட்கும் ஒரு வாய்ப்பு அது பற்றிய மத ரிதியிலான
புரிந்துணர்வும் அவனுக்கு இருக்கும், அவனுடைய அனுமதியுடன்
அதை செய்துவிடமுடியும்@@@

சுத்த லூசுத்தனம் இது.கொஞ்சம் தள்ளி போய் பதினாலு வயதில்
எனக்கு சுன்னத் நடந்தது.கொஞ்சம் கிக்கான பாட்டு காதில
விழுந்தாலே ஐட்டம் தூக்கிக்கும்.வயசு அப்படி.
அறுத்து போட்ட வலி இருக்கும்போது அது தூக்குனா?
பெரிய வேதனை ஐய்யா அது.

மாமன் மடியில வச்சு எத்தனை வயசுல காது குத்தறீங்க?
கொஞ்சம் பொறுக்க வேண்டியதுதான? ஒரு பதினெட்டு வருஷம்.
போடான்னுட்டு போயிடும்.பின்னால அதுவா வேணா
தொப்புள்லையோ,இல்ல வேற எங்கேயோ குத்திக்கும்.
அப்புறம் முக்கியமான விஷயம் நான் முஸ்லீம்தான்.
என்ன பெயரளவு முஸ்லீம்.போன முறை முசல்மான்கள்
எப்போது குமார் என்று பெயர் வைத்து கொள்ள ஆரம்பித்தார்கள்
என்று கேட்டுருந்தீர்கள்.நியாயமான கேள்வி.
என்ன பிரச்னை என்றால் ++ கொண்டிதோப்புகடாகுமார் ++
என்ற பெயரில் ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன்,எழுதி கிழித்து விடலாம் என்று.
அன்றிலிருந்து இந்த குமார் என்னோடு ஒட்டிகொண்டது தான்
மிச்சம்.ஒன்றும் எழுதி கிழித்த பாடில்லை.
மற்றபடி முக்காடு எங்கள் இனத்து பெண்களுக்குத்தான் எங்களுக்கில்லை.
(உடனே முக்காடை பற்றி ஒரு பதிவு போட்டு சாவடிக்க வேண்டாம்)
சிங்கபுரத்திலேதான் நானும் வசிக்கிறேன்.வாய்ப்பு கிடைக்கும்போது
உங்களை சந்திக்கவே விரும்புகிறேன்.
@@@@ தன்னெஞ்சறிவது பொய்யற்க.பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னை சுடும். @@@@

நன்றி.

Sadiq சொன்னது…

எந்தவித மருத்துவ ஆதாரமும் இல்லாமல் , வெறும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்ட கட்டுரை.

//சுன்னத் செய்து கொள்வது எய்ட்ஸ் பரவலை தடுக்கிறதா ?
இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, காரணம். எய்ட்ஸ் பரவல் பாதுகாப்பற்ற பாலியல் உறவால் பரவுகிறது என்றாலும், அவ்வாறு பாதுக்காப்பற்ற பாலியல்உறவை நாடும் சுன்னத் செய்யப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொள்ளாது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை//

//சுன்னத் செய்வது என்பது காட்டுமிராண்டி பழக்கம்//

சுன்னத் செய்வது காட்டுமிராண்டி பழக்கம் என்றால், உலகத்திலேயே பெரிய காட்டுமிராண்டி உலக சுகாதார நிறுவனம் (WHO) தான். !!!

சுன்னத் (circumcision) செய்வது, HIV கிருமி பரவுவதை 70% வரை தடுக்கிறது என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே WHO நிபுணர் குழு 2007 லில் சுன்னத் செய்வ‌து HIV பரவுவதை குறைப்பதற்கான வழியாக பரிந்துரைத்தது.


"The recommendations represent a significant step forward in HIV prevention", said Dr Kevin De Cock, Director, HIV/AIDS Department, World Health Organization. "Countries with high rates of heterosexual HIV infection and low rates of male circumcision now have an additional intervention which can reduce the risk of HIV infection in heterosexual men. Scaling up male circumcision in such countries will result in immediate benefit to individuals. However, it will be a number of years before we can expect to see an impact on the epidemic from such investment."

http://www.who.int/hiv/mediacentre/news68/en/index.html

http://www.who.int/hiv/topics/malecircumcision/en/index.html

சரி உலக சுகாதார நிறுவனமே பரிந்துரைத்த பிறகு, ஏன் இந்தியாவில் இதைப்பற்றி இந்தியாவில் யாரும் வாய் திறப்பதில்லை ?

சுன்னத் செய்வது குறிப்பிட்ட மதத்தினருடைய செயலாக பார்ப்பதுதான் காரணம்.

அந்த 20007 WHO மாநாட்டில் இருந்த இந்திய நிபுணர் குழு கூறுவதை பாருங்கள்

Indian officials, who were present at the conference, agree that circumcision is a hygienic practice but they are loath to be seen as endorsing it because of its strong association with Muslims.

Speaking to TOI, a senior official conceded as much: "Over 25% of people in Europe go for circumcision for protection against AIDS. .But in India, we cannot encourage it because of its association with Muslims. Leave alone implementing it, even agreeing with the study would mean being attacked by Hindus.. Then, we also don't want to make the bulk of the Muslim population feel that they can be safe with unprotected sex."

http://articles.timesofindia.indiatimes.com/2005-08-04/india/27843351_1_circumcised-men-hiv-rates-richard-feachem

இந்த ஆய்வு சரி என்று ஏற்றுக் கொண்டால் கூட ஹிந்துக்கள் எதிர்ப்பார்கள் என்ற ஒரு நிபுணர் கூறிகிறார்.

இந்திய மக்களிடையே சுன்னத் செய்வதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று National AIDS Research Institute ஆய்வாளர்கள் கூறுகிரார்கள்.

As male circumcision has emerged as an effective HIV prevention option there is a need to explore its acceptability in India,” the preliminary report prepared by researchers from Pune-based National AIDS Research Institute (NARI) says.

http://www.indianexpress.com/news/need-to-work-for-acceptability-of-circumcision-hiv-experts/748902/0

சுன்னத் செய்வது 100% HIV பரவுவதை தடுக்கிறது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் மருத்துவ துறையில் , ஒரு நோயை, ஏதாவது முறை100% தடுத்தால்தான் பரிந்துரைக்க வேண்டும் என்பது கிடையாது . நாம் குழநதைகளுக்கு கொடுக்கும் தடுப்பூசிகள் 100% தடுப்பது கிடையாது. உதாரணமாக ஆய்வில் உள்ள HIV தடுப்பூசி வெறும் 30% தான் நோய் பரவுவதை தடுக்கிறது. சுன்னத் செய்வது 70% வரை தடுக்கிறது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே சுன்னத் செய்து HIV பரவுவதை குறையுங்கள் என்று WHO பரிந்துரைத்த பிறகும், மக்கள் எதிர்ப்பார்கள் என்பதற்காகவே நமது அரசாங்கம் இந்த உண்மையை மூடி மறைக்கிறது. எந்த மாதிரி எதிர்ப்பு வரும் என்பதற்கான உதாரணம் தான் கோவி கண்ணனுடைய இந்த பதிவு.

இந்த‌ ஆதாரங்களை படித்த பிறகாவது கோவி கண்ணன் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவாரா ?

http://en.wikipedia.org/wiki/Circumcision_and_HIV

Sadiq சொன்னது…

//சமீபத்தில் (ஃபெப்ரவரி மாதம் என்று நினைவு) இந்தியாவில் புற்று நோய் பற்றிய தகவல்கள் வெளியிட்டிருந்தார்கள். அதில் இந்திய பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது (உயிரிழப்பு) Cervical Cancer-ஆல். ஆனால், இதில் இஸ்லாமிய பெண்கள் அதிக அளவில் பாதிப்பு அடைவதில்லை என்ற தகவல் [இந்த கருத்து முழுக்க முழுக்க தகவல் அடிப்படையில் தான்; ஆராய்ச்சிகளில் அடிப்படையில் அல்ல] வெளியிட்டிருந்தார்கள். இதற்கு காரண்ம் இஸ்லாமிய ஆண்களின் சுன்னத் பழக்கமாகக் கூட இருக்கலாம் என்று முன்னணி நாளிதழ்களில் கூட வெளியாகியுள்ளது.
மற்றபடி, இந்த சுன்னத், 100 சதவிகிதம் Cervical Cancer-ஐத் தடுக்கும் என்றும் கூற விழையவில்லை.//

இதற்கெல்லாம் அடிப்படை ஆதாரம் எதுவும் கிடையாது. 100 விழுக்காட்டு மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 15 விழுக்காடு என்றால் அதில் பாதித்துள்ளவர்களின் விழுக்காடுகளை ஒப்பிட்டால் தான் தகவல் தெரியவரும். மற்றவர்களில் 85 க்கு 10 பேர் பாதித்துள்ளனர் இஸ்லாமியர்களில் 2 பேர் மட்டுமே பாதித்துள்ளனர் என்றால் ஒப்பிடத் தக்க 15ல் 2 பேர் என்பது 13 விழுக்காடு அதை 86/10 ல் கிடைக்கும் 8.5 விழுக்காட்டில் ஒப்பிட அதிகமாகும். தவிர இது போன்ற கணக்கு வழக்குகளை இஸ்லாமிய நாடுகளிலும் நடத்தப்படும் போல் தான் முழுவிவரம் தெரியவரும்//

சதவீதக் கணக்கு கூடத் தெரியாத முட்டாள்கள் அல்ல ஆய்வாளர்கள். எல்லா முன்னனி ஊடகங்களில் வந்த Million death study என்ற ஆய்வைப் பற்றி அவர் கூறுகிறார். இந்திய பெண்களை அதிகமாக தாக்கும் புற்று நோய் கர்ப்பபை வாய் புற்று நோய் ஆகும். இந்த நோயால், நம் நாட்டில் வருடத்திற்கு 33400 பெண்கள் இறக்கிறார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது. ஆனால் முஸ்லிம் பெண்களை இந்நோய் தாக்குவது 40% சதவீதம் குறைவு என்றும் , இதற்கு காரணம் முஸ்லிம் ஆண்கள் சுன்னத் செய்வதால் இருக்க கூடும் என்றும் கூறுகிறது.

Cervical cancer was around 40% less common in Muslim than in Hindu women, probably due to
high circumcision rates among Muslim men having a protective effect against human
papillomavirus (HPV) infection, a causative agent in cervical cancer.

http://www.cghr.org/wordpress/wp-content/uploads/Press_Release_Lancet_Cancer_English.pdf

An interesting find is that in States where Muslim population was higher, cervical cancer risk was “much lower.”

For instance, Jammu and Kashmir and Assam, which have 75 and 40 per cent Muslim population respectively, have “less than a quarter of the national rates of cervical cancer,” the authors write.

As seen internationally, circumcision in men greatly reduces the chances of sexual transmission of HPV virus. Women also had lower incidence of oral cancer. However, breast and stomach cancers were much higher.
http://www.thehindu.com/health/medicine-and-research/article3251406.ece
http://articles.timesofindia.indiatimes.com/2012-03-29/india/31254449_1_cervical-cancer-cancer-deaths-cancer-cases


சுன்னத் செய்வது கர்ப்ப பை புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்று ஏற்கனவே ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.


Male Circumcision, Penile Human Papillomavirus Infection, and Cervical Cancer in Female Partners
http://www.nejm.org/doi/full/10.1056/NEJMoa011688

சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி The Journal of American Medical Association ல் வந்த கட்டுரை.

The Medical Benefits of Male Circumcision
http://jama.jamanetwork.com/article.aspx?articleid=1104451

கோவி சார் , பூனை கண்னை மூடிவிட்டால் ..... என்ற பழமொழி தான் ஞாபகம் வருகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

// உசிலம்பட்டியிலும் சேலத்திலும் கள்ளிப்பாலைக் கொடுத்தும் முழு நெல்லையும் கொடுத்து கொல்வது எந்த சமூகம் என்பதை முன்பு ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார்களே! இதனால்தானே அரசு தொட்டில் திட்டமே வந்தது? அதே போல் தமிழகம் முழுக்க கணக்கெடுத்தால் முதியோர் இல்லங்களில் அவஸ்தைபடும் பெற்றோர்கள் சதவீதத்தில் எந்த மதத்தினர் என்பதையும் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் வைக்கும் வாதங்களை உங்கள் மனசாட்சியாவது ஒத்துக் கொள்கிறதா?.//

கள்ளிப்பால் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான், அதைப் பற்றிய விழிப்புணர்வு படங்களெல்லாம் கூட வந்திருக்கிறது. ஆனால் அதை இந்திய சமய சார் செயலாக யாரும் ஞாயப்படுத்தவில்லை. பெங்களூரில் இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்த பெண் குழந்தை கொலை பற்றிய தகவல் வெளி வந்த போதும் யாரும் அதை இஸ்லாமிய இழி செயலாக கருதவில்லை, வலைப்பதிவில் குறிப்பாக தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட பதிவுகளில் அதுபற்றி யாரும் பேசவும் இல்லை, ஒரு குழந்தையின் கொலையை மத அரசியல் ஆக்கிப் பார்க்கும் மனம் யாருக்கும் வாய்க்கவில்லை, அதுவே ஒரு இந்து மதப் பெற்றோருக்கு பிறந்த குழந்தையாக இருந்திருந்தால் நீங்கள் மனுதர்மம் பாரீர் என்று உங்கள் சகாக்களுடன் சேர்ந்து நான்கு கட்டுரைகள் வடித்து கண்ணீர் வடித்திருப்பீர்கள், என்னைப் போன்றவர்கள் தனிமனித செயலை சமய அரசியல் ஆக்கிப் பார்க்க விரும்புவதில்லை. இது போல் கொல்லப்படும் குழந்தைகள் எத்தனையோ ? ஒரே ஒரு இஸ்லாமியத் தாயின் ஆற்றாமையால் அந்தத் தகவல் மீடியாவில் வந்தது. பச்சிளங்குழந்தையை வெள்ளைத் துணியில் மூட்டையாக்கி அந்த தாய் கண்ணீர் விட்டது எவரையும் மனம் இளகச் செய்யும், அது போல் காட்சிகள் தொடர்ந்து வெளியே வராததால் நீங்களும் உங்கள் மதமும் உத்தமர் வேசம் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள், பிறந்த உடன் கள்ளிப்பாலுக்கு காவு ஆகும் குழந்தைகள் போல் எல்லா சமூகத்திலும் பெண் குழந்தைகள் கொல்லப்பட்டுதான் வருகின்றனர், உங்களது நீலிக் கண்ணீருக்கு மதம் சார்ந்த விடயங்கள் மட்டுமே தெரியும். உடனேயே ஒரு குரானை எடுத்து வந்து பதில் சொல்ல வராதீர்கள். தனிமனித வக்கிரங்களை முற்றிலும் நீக்கியதாக எந்த மதத்திலும் மார்தட்டப்படுவதில்லை. உங்கள் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

http://www.thinaboomi.com/2012/04/11/11904.html

கோவி.கண்ணன் சொன்னது…

//சிங்கபுரத்திலேதான் நானும் வசிக்கிறேன்.வாய்ப்பு கிடைக்கும்போது
உங்களை சந்திக்கவே விரும்புகிறேன்.
@@@@ தன்னெஞ்சறிவது பொய்யற்க.பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னை சுடும். @@@@

நன்றி.//

நல்லது, மனிதர்களில் மதவாதிகளை சந்திக்க நான் விரும்பியதில்லை மன்னிக்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுன்னத் செய்வது 100% HIV பரவுவதை தடுக்கிறது என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் மருத்துவ துறையில் , ஒரு நோயை, ஏதாவது முறை100% தடுத்தால்தான் பரிந்துரைக்க வேண்டும் என்பது கிடையாது . நாம் குழநதைகளுக்கு கொடுக்கும் தடுப்பூசிகள் 100% தடுப்பது கிடையாது. உதாரணமாக ஆய்வில் உள்ள HIV தடுப்பூசி வெறும் 30% தான் நோய் பரவுவதை தடுக்கிறது. சுன்னத் செய்வது 70% வரை தடுக்கிறது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே சுன்னத் செய்து HIV பரவுவதை குறையுங்கள் என்று WHO பரிந்துரைத்த பிறகும், மக்கள் எதிர்ப்பார்கள் என்பதற்காகவே நமது அரசாங்கம் இந்த உண்மையை மூடி மறைக்கிறது. எந்த மாதிரி எதிர்ப்பு வரும் என்பதற்கான உதாரணம் தான் கோவி கண்ணனுடைய இந்த பதிவு.

இந்த‌ ஆதாரங்களை படித்த பிறகாவது கோவி கண்ணன் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவாரா ?

http://en.wikipedia.org/wiki/Circumcision_and_HIV//

யாரும் சொல்லவில்லையா ? அப்போ சுவனப்பிரியன் கட்டுரை சொல்வது தான் என்ன ?

எய்ட்ஸ் தொற்ற பாதுகாப்பற்ற உடலுறவு என்று தான் சொல்கிறார்கள் அன்றி ஆண்குறியின் முந்தோல் தான் காரணம் என்று சொல்லுவதில்லை. உங்கள் கருத்துகளைக் கேட்டு பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பாதிக்கப்படும் சுன்னத் செய்யப்பட்டஆண்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா ?

எய்ட்ஸ் நோய் தாக்காமல் இருக்க ஒழுக்கமான வாழ்க்கையும் அது முடியாதவர்களுக்கு ஆணுறைகளும் தான் பரிந்துரையாக இருக்கவேண்டுமே அன்றி டபுள் புரொட்க்ஸன் ?

மார்க்க ரீதியாக பாலியல் தொழிலாளிகளுக்கும் அவர்களை நாடுவோர்களுக்கும் கல்லால் அடித்துக் கொள்ளப்படுவது தான் தீர்வு என்று சொல்லப்படும் போது நீங்கள் சொல்லும் சுன்னத் தீர்வு யாருக்கானது ? மற்றவர்களுக்கு ஆணுறையே சிறந்த ஏற்ற பாதுகாப்பு எனும் போது தேவையற்ற அறுவை சிகிச்சை எதற்காக ? ஆப்ரிக்க நாடுகளில் சுன்னத் செய்ய ஆகும் செலவை உணவுக்காகவும், ஆணுறைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பரிந்துறைக்கப்பட்ட இணைப்பை நீங்கள் படிக்கவில்லையா ?

ஆப்ரிக்காவின் முதன்மை பிரச்சனை உணவு பல்வேறு நோய் தொற்றலும் அன்றி அவர்களது பாலியல் வேட்கை அல்ல.

சுன்னத் செய்து கொள்ள்வதன் மூலம் எய்ட்ஸ் தடுக்கப்படுகிறது என்கிற உங்களது தவறான பிரச்சாரங்களின் மூலம் சுன்னத் செய்யப்பட்ட ஆண்கள் பாலியல் தொழிலாளியை நாடும் விழுக்காடு கூடும் என்பதையாவது ஒப்புக் கொள்ள உங்களுக்கு மனம் இருக்கிறதா ?

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுப்பது போல் சமூகத்தில் பாலியல் சார்ந்த குற்றங்கள் நடைபெற உங்களது யோசனைகள் வழியமைக்கும் ஆபத்து இதில் இருக்கிறது என்பதே வெளிப்படையான உண்மை.

உதாரணத்திற்கு உங்கள் மார்க்கத்தில் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்து கொள்ள அனுமதி என்பது ஒரு ஆண் தன்னால் நான்கு திருமணங்களை செய்து கொள்ளும் ஆசையை வளர்த்துக் கொண்டு அதற்கான முயற்சியில் இறங்க வழி சொல்வது போன்றதே.

கோவி.கண்ணன் சொன்னது…

//மாமன் மடியில வச்சு எத்தனை வயசுல காது குத்தறீங்க?
கொஞ்சம் பொறுக்க வேண்டியதுதான? //

காது குத்துவதால் காதை அறுத்துப் போடுவதில்லை, குழந்தைகளுக்கு காதணி அணிவித்துவிடுவது இன்றைக்கும் தொடரும் பழக்கம் தான், காது குத்துவதில் ஏற்படும் வலி ஒரு தடுப்பூசி போடும் அளவுக்கே உள்ளது என்பதால் அதை தடைச் செய்யச் சொல்லும் அளவுக்கு குழந்தை வதை என்னும் கொடுமையாக பார்க்கப்படுவதில்லை, ஆனால் நீஙகள் எந்த ஒரு தனிமனித அனுமதியும் இல்லாமல் ஆண் குழந்தைகளின் குறிகளை அறுவை செய்துவிடுகிறீர்கள். இத்தகைய அறுவை சிகிச்சை முறையற்ற பயிற்சி அற்றவர்களால் கடந்த காலங்களில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். தற்காலத்திலும் இவை குறைந்த விழுக்காடாக தொடர்கின்றன,

கோவி.கண்ணன் சொன்னது…

//சுன்னத் செய்வது கர்ப்ப பை புற்றுநோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது என்று ஏற்கனவே ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.//

இரண்டு குழந்தைகளுக்கு மேல்
குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது கருக்கலைப்புகளையும், பிரசவத்தின் போதும் பெண்கள் இறப்பை பெரிதும் தவிர்க்கிறது என்றும் தான் சொல்கிறார்கள், குறிப்பாக ஆண்களுக்கு செய்யப்படும் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மிகவும் எளிதானது என்றும் சொல்கிறார்கள், உங்கள் மதத்து ஆண்களுக்கு நீங்கள் ஏன் பரிந்துரை செய்வது இல்லை. கர்ப்பை புற்றுநோய் பட்டியல்களுடன் அபார்சன் மற்றும் பிரசவத்தின் போது இறக்கும் பெண்கள் குறித்த பட்டியலும் போட்டால் நாம் இது குறித்து நிறைய பேசலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//-/பெயரிலி. கூறியது...
கோவி கண்ணன்
நல்ல கட்டுரை - நீங்கள் அநாவசியத்துக்கு நேரத்தை வீணாக்குகின்றீர்கள் என்று தனிப்பட்ட என் கருத்திருப்பினுங்கூட.


ஆனால், தமிழ்மணம் இக்கட்டுரையைத் தடைசெய்ததாக இங்கே குறிப்பிட்டிருக்கின்றது. நானறிந்தவளவிலே தமிழ்மணத்தினை ஒரு வாசகனாகப் பார்க்கும்போது, தமிழ்மணம் கட்டுரையைத் தடையேதும் செய்யததாகத் தெரியவில்லை. தானியங்குவழியில் சொற்களைக் கொண்டு வகைப்படுத்தும் நிரல் கட்டுரையை அள்ளி எங்காவது போடாதிருந்தால், தமிழ்மணம் ஏதேனும் நடவடிக்கை அதன் பதிவிலே மதம் சம்பந்தமாகபதிவுகளிலே குறிப்பிட்டிருக்கும் விதிகள், தீர்மானங்களின்படியே எடுத்திருக்குமென்று நம்புகிறேன்.//

பெயரிலி இதில் நான் மதம் சார்ந்து எதையும் எழுதவில்லை, மதம் சார்ந்து எழுதப்பட்ட இடுகையின் மறுப்பாக மதம் சார்ந்த சொல்லாடல்கள் சில வந்திருக்கும், இந்தக்கட்டுறையின் நோக்கம் தவறாக திசைத் திருப்படும் ஆண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கவே எழுதினேன், இந்த இடுகையை தடை செய்தாலும் எனக்கு வருத்தம் இல்லை. அவ்வாறு செய்யமாட்டார்கள் என்றே நம்புகிறேன்

kumar சொன்னது…

விவாதத்தில் கடைசி வார்த்தை தன்னுடையதாக இருக்க வேண்டும்
என்று எண்ணும் வறட்டு சித்தாந்தவாதி நீர்.
நீங்கள் மதவாதி இல்லை என்று கூறிக்கொள்வதால் மட்டும் அது
உண்மை என்று ஆகிவிடாது.
உங்கள் பதிவுகளின் வகையை பார்த்தாலே தெரிகிறது,
இஸ்லாமிய வெறுப்பு உங்களிடம் உச்சத்தில் இருப்பது.
அதற்கு சுவனப்ரியன் என்பவர் வகையாக தீனி போடுகிறார்.
மதவாதிகளை சந்திப்பதில்லை என்ற உங்களின் உயர்ந்த
நோக்கம் பாராட்டுக்குரியது.
ஆனால் கண்ணாடியில் தினம் தினம் முகம் பார்க்கிறீர்கள் தானே?

Sadiq சொன்னது…

பூனை கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு , காதையை பொத்திக்கொண்டுவிட்டது !!!
இனி உலக சுகாதார நிறுவனம் (WHO) சொன்னாலும் சரி, National AIDS research institute சொன்னாலும் சரி , ஒன்றும் காதில் விழப்போவதில்லை.


உங்களுக்கு இந்த பரிந்துரைகளின் மீது சந்தேகமோ எதிர்ப்போ தெரிவிக்க வேண்டும் என்றால் உலக சுகாதார நிறுவனம் (WHO) அல்லது National AIDS research instituteயோ தொடர்பு கொள்ளுங்கள்.

அவர்களை தொடர்பு கொள்ளும்போது குப்பன் சொன்னார், சுப்பன் சொன்னார், கோவி கண்ணன் சொன்னார் என்று கூறாமல், உருப்படியான ஏதாவது மருத்துவ ஆதாரம் இருந்தால் கொடுங்கள்.

மற்றபடி ஆணுறையால் HIV பரவுவதை எளிமையாக தடுக்கலாம் தான், ஆனால் WHO முன்தோல் நீக்கத்தை (சுன்னத் என்ற வார்த்தை மீதுதான் வெறுப்பு என்று நினைக்கிறேன்) ஏன் பரிந்துரைக்கிறது ?

தவறான உடலுறவில் ஈடுபடுபவர்கள் ஆணுறை உபயோகிக்கிறார்களா என்று அரசாங்கம் கண்காணிக்க முடியாது.

ஆனால் ஒரு குறிப்பிட்ட நோய் தடுப்பு முறை (முன் தோல் நீக்குதல்) 90% சதவீத மக்களை சென்றடைய அரசால் முடியும். அம்மை நோய் மற்றும் போலியோ தடுப்பு மருந்துகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.


"HIV பரவுவதை 70% குறைக்கும் இந்த நோய் தடுப்பு முறையை (முன்தோல் நீக்கம்) ஏன் மூடி மறைக்கிறாய்" என்று நம் நாட்டு மக்கள் அரசைகேட்க வேண்டிய தருணம் இது.

அரசு இந்துத்வாவாதிகள் எதிர்ப்பார்கள் என்று தான் பயந்து கொண்டிருக்கிறது.

இங்கே பகுத்தறிவு பேசுபவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்ற் மர்மம் புரியவில்லை.

மற்றபடி கண் ,காது, மூளையை திறந்து வைத்திருப்பவர்களுக்கு கொடுத்த ஆதாரம் போதுமானது.

பி.கு. உங்கள் மதம் என்று தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். நான் என் மதம் என்னவென்று சொன்னேனா ?

உலக சுகாதார நிறுவனம் (WHO) , National AIDS research institute எந்த மதத்தை பின்பற்றுகிறார்கள் என்று விசாரித்து சொல்லுங்கள்.

வேகநரி சொன்னது…

//இந்த இடுகையை தடை செய்தாலும் எனக்கு வருத்தம் இல்லை. அவ்வாறு செய்யமாட்டார்கள் என்றே நம்புகிறேன்//
இந்த கட்டுரை இஸ்லாமிய காட்டுமிராண்டித்தனமான செயலை பற்றி விழிப்பணர்வூட்டும் சிறந்த கட்டுரை. இதை தடை செய்ய நினைக்கலாமா.
அலகு குத்தி காவடி எடுப்பவர்கள் கூட இது தான் சிறந்தது மற்றவங்களும் செய்யுங்க என்று விளம்படுத்தியதில்லை. ஆன அலகு குத்தி காவடி எடுப்பது இஸ்லாமியர்களுக்கு குமட்டுமாம், வேதனை நிறைந்த சுன்னத்து இனிக்குமாம். காது குத்தலை சுன்னத்தோடு ஒப்பிடுகிறார்களே!!! காது குத்தி வித வித மான தோடு போட்டு பெண் தன்னை அழகுபடுத்துவது அவர்களுக்கு தடை செய்யபட்டதாயிற்றே. இப்போ ஆண்கள் சிலருமல்லவா 20, 22 வயதில் காது குத்துகிறார்கள்.

khaleel சொன்னது…

kumar

//விவாதத்தில் கடைசி வார்த்தை தன்னுடையதாக இருக்க வேண்டும்
என்று எண்ணும் வறட்டு சித்தாந்தவாதி நீர்.
நீங்கள் மதவாதி இல்லை என்று கூறிக்கொள்வதால் மட்டும் அது
உண்மை என்று ஆகிவிடாது.
உங்கள் பதிவுகளின் வகையை பார்த்தாலே தெரிகிறது,
இஸ்லாமிய வெறுப்பு உங்களிடம் உச்சத்தில் இருப்பது.
அதற்கு சுவனப்ரியன் என்பவர் வகையாக தீனி போடுகிறார்.
மதவாதிகளை சந்திப்பதில்லை என்ற உங்களின் உயர்ந்த
நோக்கம் பாராட்டுக்குரியது.
ஆனால் கண்ணாடியில் தினம் தினம் முகம் பார்க்கிறீர்கள் தானே?//

உங்கள் கருத்தை வழி மொழிகிறேன்.

தமிழ்சேட்டுபையன் சொன்னது…

1.எய்ட்ஸ் நோய் ஆணுறை அனியாமல் பாலியல் பெண்களிடம் செல்லும் அனைவருக்கும் வரும்!

2.சுன்னத் செய்தாலும் 100%வருவதற்கு வாய்ப்பு உண்டு!

3.சுன்னத் செய்தால் வராது என்றால்....இதை விளம்பரமாக சுகாதார நிறுவனம் ஏன் வெளியிடவில்லை...?

முதல்ல பன்னி குட்டி போடுறமாதிரி போடுறத நிறுத்த கு.கா. செய்யுங்க....அப்புறம் சுன்னத் செய்யுங்க...

கோவி.கண்ணன் சொன்னது…

// பூனை கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு , காதையை பொத்திக்கொண்டுவிட்டது !!!
இனி உலக சுகாதார நிறுவனம் (WHO) சொன்னாலும் சரி, National AIDS research institute சொன்னாலும் சரி , ஒன்றும் காதில் விழப்போவதில்லை.


உங்களுக்கு இந்த பரிந்துரைகளின் மீது சந்தேகமோ எதிர்ப்போ தெரிவிக்க வேண்டும் என்றால் உலக சுகாதார நிறுவனம் (WHO) அல்லது National AIDS research instituteயோ தொடர்பு கொள்ளுங்கள். அவர்களை தொடர்பு கொள்ளும்போது குப்பன் சொன்னார், சுப்பன் சொன்னார், கோவி கண்ணன் சொன்னார் என்று கூறாமல், உருப்படியான ஏதாவது மருத்துவ ஆதாரம் இருந்தால் கொடுங்கள். //

அதே உலக சுகாதார நிறுவனம் தான் எய்ட்ஸ்க்கு கருத்தடை சாதனங்களை பரிந்துரைக்கிறது மேலும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நிரந்தர அறுவை சிகிச்சை தான் தீர்வு என்கிறது உங்க ஆளுங்க ஏன் செய்து கொள்வதில்லை ? வேண்டாத கர்பமும் பிள்ளை பெறும் போது மரணமும், வதவதவென்று பெத்துப் போட்டுக் கொள்வதால் குழந்தைகளுக்கு முறையான கல்வியும் அளிக்க முடியாமல் போகிறது என்பதை நீங்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்.

//மற்றபடி ஆணுறையால் HIV பரவுவதை எளிமையாக தடுக்கலாம் தான், ஆனால் WHO முன்தோல் நீக்கத்தை (சுன்னத் என்ற வார்த்தை மீதுதான் வெறுப்பு என்று நினைக்கிறேன்) ஏன் பரிந்துரைக்கிறது ?

தவறான உடலுறவில் ஈடுபடுபவர்கள் ஆணுறை உபயோகிக்கிறார்களா என்று அரசாங்கம் கண்காணிக்க முடியாது.//

அப்படியென்றால் அரசு பாலியல் தொழிலை முறைப்படுத்தி எல்லா ஆண்களும் சுன்னத் செய்து கொண்டு செல்லுங்கள் என்று சொல்லலாமே கல்லால் அடித்து கொல்வது தான் ஞாயம் என்று சொல்லும் உங்கள் மதத்தில் ஒரு ஆண் சுன்னத் செய்து கொண்டு பாலியல் தொழிலாளியிடம் சென்றால் வரவேற்குமா ? சுன்னத் செய்துள்ளேன் என்னை கல்லால் அடிக்காதீர்கள் என்றும் என்னிடம் வந்தவர்கள் சுன்னத் செய்தே வந்தார்கள் என்று ஒரு பாலியல் தொழிலாளி சொன்னால் அவளை கல்லால் அடிக்க மாட்டார்களா ? விபச்சாரம் அதை நாடிச் செல்பவர்களும் தண்டனைக்குரியவர்கள் என்னும் உங்கள் தீர்ப்பின் முன் சுன்னத் எந்த வகையில் அவற்றை அப்பீல் செய்யப் பயன்படும் ?

முறையான குடும்ப வாழ்க்கை வாழும் தற்காலத்தில் ஒழுக்கமானவர்களுக்கு பாலியல் நோய் தொற்று ஆகயத்தில் இருந்து ஒருவரைப் பற்றுகிறதா ? பின்னர் எதற்காக ஒழுக்க சீலர்கள் சுன்னத் செய்து கொள்ள வேண்டும் ? ஒருவேளை கர்ப்பப் பை புற்று நோய் சுன்னத் செய்யாத ஆண்களால் பெண்களுக்கு ஏற்படுகிறது என்றாலும் குடும்பக்கட்டுபாடு செய்யாத ஆண்களால் ஏற்படும் வேண்டாத கர்பமும் அதை நான்கு மாதத்திற்கு பிறகு கலைக்க முயற்சிப்பவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுவதும் உண்மை தானே ?

//ஆனால் ஒரு குறிப்பிட்ட நோய் தடுப்பு முறை (முன் தோல் நீக்குதல்) 90% சதவீத மக்களை சென்றடைய அரசால் முடியும். அம்மை நோய் மற்றும் போலியோ தடுப்பு மருந்துகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.//

சுன்னத் எய்ட்ஸ் தொற்றுவதைத் தடுக்கிறதா இல்லையா என்பது ஒருவர் பாலியல் தொழிலாளியிடம் சென்றுவரும் எண்ணிக்கையைப் பொருத்ததே இதை மறுக்கும் நீங்கள் இதற்கான ஆதாரத்தைக் கொடுத்துவிட்டுப் பேசுங்கள், சுன்னத் செய்யாதவருக்கு ஒரே ஒருமுறை உறவால் தொற்றினால், சுன்னத் செய்யப்பட்டவருக்கு இரண்டாம் முறையோ மூன்றாம் முறையோ தொற்றும் என்பது தானே உண்மை. ஆணுறைகளைவிட பாதுகாப்பு இல்லாத சுன்னத் செய்வாதால் ஆண்களுக்கு இழப்பே. உங்களவர் எழுதும் சுன்னத் கட்டுரைகளில் பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறையும் பயன்படுத்துங்கள் என்று எங்காவது குறிப்பிட்டு இருந்தால் நான் இதைப் பற்றி எழுதப் போவதில்லை, நீங்கள் எழுதவும்மாட்டீர்கல் ஏனெனில் அது மார்க்க விரோதம், நேரடியாக விபச்சாரத்திற்கு ஊக்குவிப்பதாகும் ? ஆனால் அதையே சுன்னத் செய்து கொண்டு செல்வதால் தடுக்க முடியும் என்று நீஙகள் சொல்வதிலும் பாலியல் தொழிலை நாடுபவர்களை ஊக்கப்படுத்தும் செயல் தான் இருக்கிறது என்பதை நீங்கள் ஏன் சிந்திக்கமறுக்கிறீர்கள்,

கோவி.கண்ணன் சொன்னது…

//"HIV பரவுவதை 70% குறைக்கும் இந்த நோய் தடுப்பு முறையை (முன்தோல் நீக்கம்) ஏன் மூடி மறைக்கிறாய்" என்று நம் நாட்டு மக்கள் அரசைகேட்க வேண்டிய தருணம் இது. //

குடும்பக்கட்டுப்பாட்டின் நன்மைகள் என்று ஒவ்வொரு அரசும் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து ஊக்கப்படுத்துகிறது, அதை காதில் வாங்கிக் கொள்ளத நீங்கள் அரசு சொல்கிறது என்று சுன்னத் பற்றிய தகவலைச் சொல்வதில் உங்கள் மதம் சார்ந்த கொள்கைபரவல் இருக்கும் என்று நீங்கள் நம்புவதைத் தவிர அதில் ஆண் சமுகத்தின் நலனுக்கான அக்கரை என்று கொள்ள ஒன்றும் இல்லை.

// அரசு இந்துத்வாவாதிகள் எதிர்ப்பார்கள் என்று தான் பயந்து கொண்டிருக்கிறது.
//
ஒரு இந்துத்துவாதி பயந்தாலும் பயப்படாவிட்டாலும் அவனுடைய ஆணுறுப்பின் முன் தோல் பிரச்சனை இருந்தால் அவன் அறுவை செய்து கொள்ளத்தான் வேண்டும் எனவே இதில் இந்துதுவாக்களின் மீதான பயம் என்று கூற ஒன்றும் இல்லை. இந்துத்துவாக்களுக்கு பயம் இருக்கும் என்று நம்பும் உங்களைப் போல் இது உங்கள் மதத்தாரின் விளமபரங்களுக்கு நன்மை என்று பிறர் ஏன் நினைக்கக் கூடாது ?

//இங்கே பகுத்தறிவு பேசுபவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்ற் மர்மம் புரியவில்லை.// இதைப் பற்றி கவலைப்படவேண்டியவர்கள் பகுத்தறிவாளர்களை மதிப்பவர்கள் தான். பகுத்தறிவாளர்கள் பெண் அடிமைத்தனம் கடவுள் நம்பிக்கையின் நீட்சியாக மதவாதம் மதவெறி பற்றிக் கூடத்தான் விமர்சிக்கிறார்கள் அவையெல்லாம் உங்கள் பார்வையில் படாதபோது நீங்கள் குறிப்பிடும் பகுத்தறிவாளர்களின் பண்பு, பரிந்துரை என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் ?

//மற்றபடி கண் ,காது, மூளையை திறந்து வைத்திருப்பவர்களுக்கு கொடுத்த ஆதாரம் போதுமானது.// கண்ணாடிக்கு முன் சொல்லிக் கொள்ள வேண்டிய வஜனம்

அடுத்து எதையாவது பின்னூட்டம் என்ற பெயரில் போடும் முன் ஆண்களுக்கான குடும்பக் கட்டுபாடு மற்றும் பாலியல் தொழிலின் அங்கீகாரம் குறித்து ஏதாவது சொல்லிவிட்டு சுன்னத் - எய்ட்ஸ் பற்றி எழுதவும்.

kumar சொன்னது…

மொதல்ல ஒன் பேர தமிழ் மார்வாடிபையன்னு மாத்து.சேட்டுன்னு
கூப்பிடறதுலாம் தமிழ் மாமா பசங்க வேலை.(சௌகார்பேட்டையில
உங்க கால நக்குற கூட்டம்)
பன்னின்னு நீ சொன்ன ஒடனே சௌகார்பேட்டையில வயத்த
இம்மாம் பெர்சுல தள்ளிகினு நடக்கமுடியாம நடக்குமே
ஒன் கூட்டத்து பொம்பளைங்கோ அதுதான் நியாபகத்துக்கு வருது.
ஹையோ! ஹையோ!!

கோவி.கண்ணன் சொன்னது…

//மதவாதிகளை சந்திப்பதில்லை என்ற உங்களின் உயர்ந்த
நோக்கம் பாராட்டுக்குரியது.
ஆனால் கண்ணாடியில் தினம் தினம் முகம் பார்க்கிறீர்கள் தானே?//

உங்களை நான் பார்த்திடாத, தனிப்பட்ட தொடர்புகள் இல்லாத நிலையில் உங்களுக்கும் எனக்குமான தொடர்பு என்பது வெறும் பின்னூட்டங்கள் மட்டும் தான், அதுவும் இஸ்லாமிய விமர்சனம் என்று நீங்கள் கருதும் பதிவுகளில் மட்டுமே, எனவே நாம் சந்தித்துப்பேசிக் கொள்ள தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை என்று நம்புவதால் தான் நான் மதவாதிகளை சந்திக்கவிருபவதில்லை மதவாதிகள் என்றால் எல்லா மதவாதிகளையும் தான். உங்களைவிட இந்துத்துவ அ.நீ கோஸ்டிகள் இருக்கும் திசைக்கே செல்லக் கூடாது என்றும் நினைப்பேன்,

நாள் தோறும் கண்ணாடியில் முகம்பார்ப்பது மட்டுமெ கிடையாது முழுவதும் பார்ப்பது தான் வழக்கம். எங்கள் வீட்டு குளியல் அறைகளில் ஒரு மீட்டர் நீள/அகலத்திற்கு முழுக்கண்ணாடியே உண்டு.

தருமி சொன்னது…

என்ன கண்ணன் .. என் கேள்விக்கும் யாராவது பதில் சொல்லுவாங்களான்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

Unknown சொன்னது…

//

தருமி noreply-comment@blogger.com



19:12 (Il y a 21 minutes)














à moi















தருமி"'சுன்னத்' - சுவனப்பிரியன் செய்த அறுப்பு வாதம் !" என்ற இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்:

என்ன கண்ணன் .. என் கேள்விக்கும் யாராவது பதில் சொல்லுவாங்களான்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.//

என்ன தருமி சார் கிண்டல் பண்றீங்களா?
இத்தனை காலம் பதிவுலகில் பகுத்தறிவோடு நீங்கள் கேட்ட கேள்விகளூக்கெல்லாம் பதில் வந்த மாதிரி........
சின்ன பிள்ளாயிட்டம் அழிச்சாட்டியம் பண்ணிகிட்டு :))

தருமி சொன்னது…

//சின்ன பிள்ளாயிட்டம் அழிச்சாட்டியம் பண்ணிகிட்டு ..//

தப்பு .. தப்பு .. கன்னத்தில போட்டுக்கிட்டேன்!

kumar சொன்னது…

உண்மைதான்.பின்னூட்ட அளவில்தான் அறிமுகம்.ஆனால்
வெறும் பின்னூட்டத்தை வைத்து யாருக்கும் மதவாதி லேபிள்
குத்த வேண்டாம்.
உலகில் இரண்டே மதம்.ஏழை,பணக்காரன் என்று.
இந்த இரண்டு மதத்திலும் நல்லவர்கள்,கெட்டவர்கள்
என்று இரண்டு சாதிகள்.என் புரிதல் இவ்வளவே.
கோவியாரின் ரத்தம் எனக்கு ஒத்துபோகும் வாய்ப்பும் உண்டு.
என் சகோதரனின் ரத்தம் எனக்கு சேராமல் போகவும்
வாய்ப்புண்டு.
சுன்னத் விசயத்தில் உங்கள் கருத்தை ஏற்பதற்கில்லை.
5 சதவீதம் நல்லது என்றாலும் அதை ஏற்பதே அறிவுடைமை.
இது என் கருத்து.யாரிடமும் திணிப்பதற்கில்லை.
நன்றி.

Sadiq சொன்னது…

சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி Journal of American Medical associationல் வந்த கட்டுரை

The Medical Benefits of Male Circumcision
http://jama.jamanetwork.com/article.aspx?articleid=1104451

அதில் Aaron A. R. Tobian என்ற விஞ்ஞானி இவ்வாறு கூறுகிறார்

If a vaccine were available that reduced HIV risk by 60%, genital herpes risk by 30%, and HR-HPV risk by 35%, the medical community would rally behind the immunization and it would be promoted as a game-changing public health intervention.

"சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகளான HIV கிருமி பரவுவதை 60% குறைத்தல், genital herpes பரவுவதை குறைத்தல் HR- HPV (கர்ப்ப பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் கிருமி) பரவுவதை 35% குறைத்தல், இதே நன்மைகளை ஏற்படுத்தும் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் மருத்துவ உலகமே இந்த தடுப்பூசியை பரிந்துரைக்கும், அது பொது சுகாதரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படும்."

என்னுடைய கருத்து இது தான்:

சுன்னத் செய்வதை ஒரு குறிப்பிட்ட மதத்தின் சடங்காக பார்க்காதீர்கள். அது செய்வதால் ஏற்படும் நன்மைகள் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படுள்ளது. விரும்பியவர்கள் செய்து கொள்ளலாம்.

அடுத்து Aaron A. R. Tobian எந்த மதம் என்று கோவி கன்னன் கேட்பாரா என்று தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//"சுன்னத் செய்வதால் ஏற்படும் நன்மைகளான HIV கிருமி பரவுவதை 60% குறைத்தல், genital herpes பரவுவதை குறைத்தல் HR- HPV (கர்ப்ப பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் கிருமி) பரவுவதை 35% குறைத்தல், //

திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள், உலக சுகாதார நிறுவனம் சுன்னத் செய்து கொள்வது உயிர்கொல்லி நோய் தாக்காமல் இருக்கும் தீர்வ என்று எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக குறைந்தபட்ச தடுப்பு என்ற அளவில் மட்டுமே பரிந்துரைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அதுவும எய்ட்ஸ் தாக்கப்பட்ட பாலியல் தொழிலாளியை ஒருவர் எத்தனை முறை நாடுகிறார் என்பதைப் பொறுத்தும் இருக்கிறது,

இதுபற்றி ஆராய்ச்சி இன்னும் நடத்தப்பட வேண்டும் என்று தான் சொல்கிறார்கள் அன்றி தீர்வு என்பது அறுத்துக் கொள்பவர்களுக்கு ஆண்மை குறைவு என்கிற நட்டமெல்லாம் ஏற்படுவதில்லை என்பதால் குறைந்தபட்ச பாதுகாப்பு என்பதாக சுன்னத் பரிந்துரை செய்கிறார்கள், தவிர சுன்னத் செய்தவர்கள் ஆணுறை அணியாமல் பாலியல் தொழிலாளியை நாடலாம் என்று அவர்கள் எங்கேயாவது சொல்லி இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்ல முடியுமா ? சுவனப்பிரியனும், நீங்களும் மறைக்கும் விசயமே இங்கு தான் இருக்கிறது, உங்களது கருத்துகளை நம்பி சுன்னத் செய்தவர் ஆணுறை அணியாமல் பாலியல் தொழிலாளியை நாடினால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா என்று கேட்டேன், பதிலே இல்லை.

More research needed to further inform programme development

Experts at the meeting identified a number of areas where additional research is required to inform the further development of male circumcision programmes. These included the impact of male circumcision on sexual transmission from HIV-infected men to women

http://www.who.int/hiv/mediacentre/news68/en/index.html

கோவி.கண்ணன் சொன்னது…

“How the circumcision solution in Africa will increase HIV infections”


Van Howe and Storms also noted that the RCTs results may come from selection bias:

The men attracted by a free circumcision to enroll in the RCTs are not representative of the general population. The RCT participants were required to want to be circumcised. A faithful monogamous man with a faithful spouse would have little motivation to seek a free circumcision. This selection bias may have resulted in enrollment of men more likely to engage in high-risk behaviors. The free circumcision and financial inducements may have added to the selection bias.

If the selection bias resulted in more men at high risk of infection being in the trial, then the results would apply only to men who engage in high-risk behaviors. This would be consistent with the observational studies finding that the association between circumcision status and HIV infection was present primarily in studies of high-risk men.

It is unclear what agenda the people pushing for circumcising all men truly have. The evidence clearly shows that circumcising men does not prevent or reduce sexually transmitted HIV infections, and in some regions in Africa the infections are not sexually transmitted to begin with, making circumcision pointless. Worse, most of those pushing for circumcision also tell men that they will still need to use condoms to prevent HIV transmission and other STDs. As Van Howe and Storms argued, “How rational is it to tell men that they must be circumcised to prevent HIV, but after circumcision they still need to use a condom to be protected from sexually transmitted HIV?”

http://toysoldier.wordpress.com/2012/04/20/how-the-circumcision-solution-in-africa-will-increase-hiv-infections/

கோவி.கண்ணன் சொன்னது…

http://www.salem-news.com/fms/pdf/2011-12_JLM-Boyle-Hill.pdf

தருமி சொன்னது…

கண்ணன் நீங்கள் கொடுத்த தொடர்பில் உள்ள சில வாக்கியங்கள்:

there is no direct evidence showing that having foreskin puts men at greater risk,

If circumcision prevented HIV infections, one would expect to see a lower rate of infections among circumcised men, yet we do not.

In Africa, there are several countries where circumcised men are more likely to be HIV infected than intact men,

Claiming that circumcision prevents HIV infections can lead people to engage in riskier behavior. - இதைத்தான் நீங்கள் உங்கள் பதிவில் வலியுறுத்தியுள்ளீர்கள்.

It is unclear what agenda the people pushing for circumcising all men truly have. -இதுக்குத்தான் நமக்கெல்லோருக்கும் பதில் தெரியுமே!!!

It is irrational, and makes no sense for anyone to push for circumcising all men and boys when condoms provide instant and cheaper protection.

கோவி.கண்ணன் சொன்னது…

தருமி சார்,

அவர்கள் மதம் சார்ந்தவர்களுக்கு சிந்திக்கவே தெரியாது என்பதாலோ.. சிந்திக்கமாட்டீர்களா ? என்று குரானில் அடிக்கடி வரிகள் ஏன் வருது என்பது இப்பதான் புரிகிறது.

suvanappiriyan சொன்னது…

திரு தருமி!

//"We have indeed created man in the 'best of moulds'." (Qur'an 95:4)//

"You will not see any flaw in what the Lord of Mercy creates." (Qur'an 67:3)

இதை வைத்துதான் என் கேள்வி: எப்படி அல்லா தப்பு பண்ணிட்டார்னு “தைரியமா” இஸ். சகோ.சொல்றாங்கன்னு தெரியலையே!
என்ன கண்ணன் .. என் கேள்விக்கும் யாராவது பதில் சொல்லுவாங்களான்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.//

'ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததையோ அதற்குச் சமமானதையோ தருவோம். இறைவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவி;லலையா?'
-குர்ஆன் 2:106

'ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் 'நீர் இட்டுக் கட்டுபவர்' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை இறைவன் நன்கறிந்தவன். மாறாக (தருமி போன்றோர்) அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.'
-குர்ஆன் 16:101

ஒரு தாய் இரண்டு வயதுப் பாலகனுக்குச் சில உணவுகளை மறுப்பாள். சாப்பிடக் கூடாது என்று தடுப்பாள். அதே குழந்தை 10 வயதை அடையும் போது முன்பு தடுத்த உணவை உண்ணுமாறு கூறுவாள். இவ்வாறு கூறும் நிலை ஏற்படும் என்பது அவளுக்கு ஏற்கெனவே தெரியும். இங்கு குழந்தையின் நிலைதான் மாறியதேயொழிய தாயின் அறிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அது போல் படைத்த இறைவனே தனது அடியானுக்கு நன்மையைக் கருதி சில மாற்றங்களை செய்ய பணிக்கிறான். அவனது கட்டளையை நாம் பின்பற்றுகிறோமா என்று சோதிப்பதற்கும் இது போன்ற கட்டளைகளை இறைவன் கொடுக்கலாம்.

சட்டம் போட்டவனே அந்த சட்டத்தை மாற்றும் உரிமையும் பெறுகிறான். இது பற்றி ஏற்கெனவே விளக்கியுமிருக்கிறேன். திருப்பி...திருப்பி...திருப்பி....எத்தனை முறை சார்.

வேகநரி சொன்னது…

இவர்களது மதம் மட்டும் சுன்னத்தை வலியுறுத்தியிருக்காவிட்டால் சுன்னத்து பற்றி இவர்கள் பதில் எப்படியிருந்திருக்கும்? யாராவது சுன்னத்து செய்யுங்க என்று சொன்னாலே அவ்வளவு தான் அல்லாவால் முழுமையாகப் படைக்கப்பட்ட மனிதனுக்கு சுன்னத்து செய்ய ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது என்பார்கள். உலகம் மக்கள் தொகை பெருக்கத்தால் எதிர்காலத்தில் குடிநீர் மற்றும் உணவு தட்டுபாடுகள் பற்றி எச்சரிக்கைகள் வந்தாலும் தங்கள் மதம் சொன்னதிற்க்காக பிள்ளைகளை பெற்று தள்ளி கொண்டேயிருப்பார்கள்.
//அவர்கள் மதம் சார்ந்தவர்களுக்கு சிந்திக்கவே தெரியாது என்பதாலோ.. சிந்திக்கமாட்டீர்களா ? என்று குரானில் அடிக்கடி வரிகள் ஏன் வருது என்பது இப்பதான் புரிகிறது//
மிக சரி.

இதையும் அறிந்து கொள்வோம்.
http://www.dailymail.co.uk/news/article-2146410/A-small-minority-Pakistani-men-DO-believe-white-girls-fair-game-Tory-cabinet-minister-Baroness-Warsi-calls-mosques-act-Rochdale-grooming-gang-scandal.html#ixzz1vuPLW0au

கோவி.கண்ணன் சொன்னது…

தருமி சார், சுவனபிரியன் பின்னூட்டத்தைப் பார்த்த பிறகு காலமாற்றத்திற்கேற்ப அல்லா எப்படி தன் கட்டளையை மாற்றுகிறான் என்பது நன்றாக விளங்குகிறது.

துவக்கத்தில் ஆதாமை படைத்த போது கூடுதலாக இருந்த சிறிய கோலிக்குண்டு சைசு களிமண்ணை என்ன செய்வது என்று தெரியாமல் ஆதாமிற்கு ஆண்குறி முந்தோலாகப் படைத்தார், அதுவும் ஆதாமின் ஆண்மைக்கு மென்மையையும் கூடுதல் இன்பத்தையும் தந்தது, அங்கு ஆதாமின் மனைவியாக ஒரே ஒரு பெண் ஏவாள் தான் பாலியல் நோய் தொற்ற வாய்ப்பே இல்லை, கால ஓட்டத்தில் ஆண்களுக்கு ஒரே சமயத்தில் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று நினைத்த அல்லா அதை மோசஸ் காலத்திலேயே நடைமுறைப்படுத்தி, இதனால் பாலியல் நோய் வந்தால் என்ன செய்வது என்று கருதியே சுன்னத் பரிந்துரைத்து நடைமுறைப் படுத்தச் சொன்னான். சிந்திப்பவர்களுக்கு நல் அத்தாட்சி இருக்கும் என்பதை நீங்கள் ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள்

தருமி சொன்னது…

//சட்டம் போட்டவனே அந்த சட்டத்தை மாற்றும் உரிமையும் பெறுகிறான். இது பற்றி ஏற்கெனவே விளக்கியுமிருக்கிறேன். திருப்பி...திருப்பி...திருப்பி....எத்தனை முறை சார். //

திருப்பி...திருப்பி...திருப்பி....எத்தனை முறை சொன்னாலும் தப்பு தப்புதானே சார்?!

அதென்ன சார் .. உங்க சாமி commanding, editing, correcting, re-editing, recorrecting ...இப்டியே பண்றாரு.

ஏன் உங்க சாமி இப்படித் தப்பு தப்பா சொல்லி, பிறகு இப்படி திருத்துகிறாருன்னு திருப்பி ... திருப்பி...திருப்பி....எத்தனை முறை சொன்னாலும் ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது!! யோசிக்கவே மாட்டீர்களா?

தங்கப் பதக்கத்தில் ஒரு வசனம் வருமே .. அது மாதிரி .. மனுசன் தப்பு பண்ணினா திருத்திக் கொள்ளலாம். ஆனா கடவுளே தப்பு பண்ணினா ...

அதையும் திருத்திக் கொள்ளலாம் அப்டின்றது இஸ். கோட்பாடு. ரொம்ப நல்லா இருக்கு!!!!!!!

தருமி சொன்னது…

//ஒரு தாய் இரண்டு வயதுப் பாலகனுக்குச் சில உணவுகளை மறுப்பாள். சாப்பிடக் கூடாது என்று தடுப்பாள். அதே குழந்தை 10 வயதை அடையும் போது முன்பு தடுத்த உணவை உண்ணுமாறு கூறுவாள். இவ்வாறு கூறும் நிலை ஏற்படும் என்பது அவளுக்கு ஏற்கெனவே தெரியும். இங்கு குழந்தையின் நிலைதான் மாறியதேயொழிய தாயின் அறிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அது போல் படைத்த இறைவனே தனது அடியானுக்கு நன்மையைக் கருதி சில மாற்றங்களை செய்ய பணிக்கிறான். அவனது கட்டளையை நாம் பின்பற்றுகிறோமா என்று சோதிப்பதற்கும் இது போன்ற கட்டளைகளை இறைவன் கொடுக்கலாம். //

இந்தக் கதைதான் மதராசாவில் சொல்லிக் கொடுப்பீர்களோ?

நல்லா இருக்கு .. சின்னப்பிள்ளைகள் இதையெல்லாம் “அப்படியே” நம்பும் .. இல்லீங்களா?

Sadiq சொன்னது…

/குறைந்தபட்ச பாதுகாப்பு என்பதாக சுன்னத் பரிந்துரை செய்கிறார்கள், தவிர சுன்னத் செய்தவர்கள் ஆணுறை அணியாமல் பாலியல் தொழிலாளியை நாடலாம் என்று அவர்கள் எங்கேயாவது சொல்லி இருக்கிறார்கள் என்று நீங்கள் சொல்ல முடியுமா ? சுவனப்பிரியனும், நீங்களும் மறைக்கும் விசயமே இங்கு தான் இருக்கிறது, உங்களது கருத்துகளை நம்பி சுன்னத் செய்தவர் ஆணுறை அணியாமல் பாலியல் தொழிலாளியை நாடினால் நீங்கள் பொறுப்பேற்பீர்களா என்று கேட்டேன், பதிலே இல்லை.//

இந்த கேள்விக்கு சற்று விளக்கமாக பதிலளிக்க வேண்டி உள்ளது.


முதலில் தனி மனித ஒழுக்கமே HIV கிருமியிடமிருந்து பாதுகாப்பும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
மருத்துவ உண்மைகளை மறைக்க கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தை தருகிறேன்.

சுன்னத் செய்வது HIV கிருமியை தடுக்கிறதா என்பதைப்பற்றியுள்ள ஆதாரத்தை பார்ப்போம்.

மருத்துவ துறையில் எதுவும் ஆய்வுக்கு எடுக்கும் முன்னர் ' Observational studies'ல் ஆதாரம் உள்ள்தா என்று பார்ப்பார்கள். கிட்டதட்ட 40 Observational studies சுன்னத் செய்வதற்கும் HIV கிருமிக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்ததாக விக்கிபீடியா கூறுகிறது. இந்த Observational studies ஒரு சர்வே போலதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை எடுத்துக் கொண்டு, அதில் சுன்னத் செய்தவர் எத்தனை பேருக்கு HIV உள்ளது, சுன்னத் செய்யாதவர் எத்தனை பேருக்கு HIV உள்ளது என்று கணக்கிடுவார்கள். ஆனால் இதுபோன்ற ஆய்வுகளில் பல பாதகங்கள் உள்ளன. ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பழக்க வழக்கங்கள் மாறுவதால் (உடலுறவு போன்றவை) இத்தகைய ஆய்வுகளின் முடிவுகள் இறுதி முடிவாக ஏற்றுக் கொள்ள முடியாது. என்வே இத்தகைய Observational studiesகளில் கிடைக்கும் முடிவுகளை பரிசோதிக்க randomised controlled trial (RCT) என்ற வகை ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

என்வே ஒரு நாட்டில் சுன்னத் செய்தவர் எத்தனை பேருக்கு HIV உள்ளது, சுன்னத் செய்யாதவர் எத்தனை பேருக்கு HIV உள்ளது போன்ற கணக்கீடுகள் ஒருவகை Observational studiesகளே. RCT யில் கிடைக்கும் ஆதாரத்தை விட இவை தாழ்ந்ததே. நண்பர் தருமி இவ்வாறு குறிப்பிட்டுருந்தார்.

//If circumcision prevented HIV infections, one would expect to see a lower rate of infections among circumcised men, yet we do not.

In Africa, there are several countries where circumcised men are more likely to be HIV infected than intact men, //

Observational studiesக்கும் RCT க்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டால் தருமி இவ்வாறு கேட்கமாட்டார். சுன்னத் செய்வதற்கும் HIV கிருமிக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த Observational studies, சுன்னத் செய்வது பாதுகாப்பு (100% அல்ல) அளிப்பதாகவே கூறின. சில ஆய்வுகள் சுன்னத் செய்வது HIV தாக்குவதை அதிகரிப்பதாகவே கூறின. எனவே அடுத்தகட்ட ஆய்வான RCT க்கு இந்த தலைப்பு தேர்ந்தெடுக்கப்ட்டது.

RCT ஏன் மருத்துவ துறையில் உயர்ந்த ஆதாரமாக (gold standard) கருதப்படுகிறது ? ஒரு RCT எவ்வாறு நடக்கிறது என்று விளக்கினாலே எளிதாக புரியும்.

2003ல் உகான்டாவில் நடந்த RCT யை எடுத்துக்கொள்வோம்.

15 முதல் 49 வயதிற்குட்பட்ட 4966 ஆண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு HIV சோதனை , மருத்துவ பரிசோதனை செய்ய்ப்பட்ட பின்னர் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டனர் (randomisation). முதல் குழுவினருக்கு உடனேயே சுன்னத் செய்யப்பட்டது. 2வது குழுவினருக்கு 2 வருடம் கழித்து சுன்னத் செய்வதாக திட்டமிடப்பட்டது. இரு குழுவினருக்குமே HIV பரவுவதை தடுக்கும் முறை , பாதுகாப்பான உடலுறவு பற்றி அறிவுறுத்தப்பட்டது. இதற்கு பின்னர் அவர்களை 6 மாதத்திற்கு ஒருமுறை follow-up visit காக வரவழைக்கப்பட்டனர். இவ்வாறு 2 வருடங்களுக்கு அவர்களுடைய உடல் நலம் , உடலுறவு போன்ற பழக்க வழக்கங்கள் ஆராயப்பட்டன.

2 வருடங்களுக்கு பின்னர் சுன்னத் செய்தவர்களில் 22 ஆண்களுக்கு HIV இருப்பதும் , சுன்னத் செய்யாதவர்களில் 45 ஆண்களுக்கு HIV இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனடிப்படையில் 60% வரை சுன்னத் செய்வது HIV கிருமி பரவுவதை தடுக்கிறது என்று முடிவு செய்யப்பட்டது. தென் ஆப்ரிகா , கென்யாவில் நடந்த RCTகளிலும் இதே முடிவுகளே கிடைத்தன. இந்த மூன்று RCT முடிவுகளின் அடிப்படையிலேயே 2007ல் WHO சுன்னத் செய்வதை பரிந்துரைத்தது.

Sadiq சொன்னது…

இந்த ஆய்வுகளை கொஞ்சம் உற்று நோக்கினால் கோவி கண்ணனுடைய கேள்விக்கு பதில் உள்ளது.

கோவி கண்ணன் கூறுவது போல சுன்னத் செய்வதால் HIV நோய் அதிகமாக பரவுமென்பது உண்மையானால், இந்த ஆய்வில் சுன்னத் செய்தவர்களுக்கு அதிகமாக HIV பரவி இருக்க வேன்டும். பாதுகாப்பான உடலுறவு குறித்து அறிவுறுத்த‌ப்பட்ட பின்னரும் இங்கே HIV பரவியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எவ்வாறான விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோமோ அதைப்பொறுத்துதான் HIV பரவுவது குறையுமா அல்லது அதிகரிக்குமா என்று கூறமுடியும். கோவி கண்ணன் கொடுத்த ஆய்வுக்கட்டுரையில் ஒரு உதாரணத்தை கொடுக்கிறார்கள்.

Risk compensation occurs when people believe they have been provided additional protection (wearing safety belts) they will engage
in higher risk behavior (driving faster). As a consequence of the increase in higher risk behavior, the number of targeted events (traffic fatalities) either remains unchanged or increases.

கார் ஒட்டுபவர்களை , சீட் பெல்ட் போடுவது பாதுகாப்பானது எனவே சீட் பெல்ட் போடுங்கள் என்று கூறினால், அவர்களுக்கு அது ஒரு தவறான பாதுகாப்பான உணர்வை கொடுத்துடவிடுமாம். அவர்கள்
சீட் பெல்ட் போட்டுக்கொண்டு வேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்துவார்களாம்!!!

சீட் பெல்ட் போடுவது உங்கள் பாதுகாப்பிற்கே, அதோடு சாலை விதிகளை மதித்து , மிதமான வேகத்தில் காரை ஓட்டுங்கள் என்று கூறினால் விபத்து நிகழாதல்லவா?

அதே மாதிரி தான் சுன்னத் செய்வது HIV கிருமியிலிருந்து குறைந்த பட்ச பாதுகாப்பை அளிக்கிறது, ஆணுறை உபயோகிப்பது முழுமையான பாதுகாப்பை அளிக்கும் என்று கூறினால் விபத்து நிகழாது.


http://en.wikipedia.org/wiki/Randomized_controlled_trial
http://en.wikipedia.org/wiki/Circumcision_and_HIV

Sadiq சொன்னது…

அடுத்து இந்த முறை அறிவிப்பூர்வமானதா என்று கேள்வி எழுப்பிகிறார்கள்.

Van Howe and Storms argued, “How rational is it to tell men that they must be circumcised to prevent HIV, but after circumcision they still need to use a condom to be protected from sexually transmitted HIV?”

How rational என்று பார்ப்போம்
ஒரு உயிர்க்கொல்லி நோயை தடுப்பதற்கு 2 மருத்துவ முறை உள்ளது.

1. A முறையை தினமும் உபயோகப்படுத்த வேண்டும் 90% வரை பாதுகாப்பு அளிக்கும்.
2. B முறையை வாழ்க்கையில் ஒரு தடவை செய்து கொண்டால் போதும் , 60% வரை பாதுகாப்பு அளிக்கும்.

நீங்கள் rational ஆக இருந்தால் இரண்டு முறையையும் தேர்ந்தெடுப்பீர்களா, அல்லது A முறை மட்டும் போதும் என்று கூறுவீர்களா ?

சுன்னத் செய்வதால் எந்த நாட்டில் HIVயை குறைத்திருக்கிறார்கள் என்று கேட்பீர்கள்.

இதற்கும் ஆதாரம் இருக்கிறது !
தென் ஆப்பிரிக்காவில் உள்ள Orange Farm என்ற நகரில் சுன்னத் செய்வதால் 76% வரை HIVயை குறைத்திருக்கிறார்கள்.

Circumcision Reduces HIV Infections 76% In South Africa, Researchers Find

A circumcision program in a South African township reduced the rate of new HIV infections among men who had the procedure by 76 percent, according to the first data to show the effect of circumcision in the nation with the most AIDS cases.

Among circumcised men in Orange Farm, 6.2 percent have HIV, compared with 20 percent of those whose foreskins are intact, today’s findings show

Circumcised men were no more or less likely to use condoms than uncircumcised men, the study found. (கோவி சார் கவனிக்கவும்)

http://www.bloomberg.com/news/2011-07-20/circumcision-reduces-hiv-infections-76-in-south-african-study.html


கடைசியாக சுன்னத் செய்வதை HIV யை தடுக்கிறது என்பதற்கான நேரிடையான ஆதாரம் இல்லை என்று தருமி சார் அந்த ஆய்வுக்கட்டுரையிலிருந்து மேற்கோள் காட்டினார்.

//there is no direct evidence showing that having foreskin puts men at greater risk//

தருமி சார் உங்கள் வீட்டிலும் google search வேலை செய்யாதா?

சுன்னத் செய்வது ஏன் HIV பரவுவதை தடுக்கிறது என்பதை ஆய்வில் மூலம் கண்டறிந்துள்ளார்கள். சுன்னத் செய்த பிறகு ஆணுறுப்பில் ஏற்படும் கிருமிகளின் மாற்றமே இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

Clean-Cut: Study Finds Circumcision Helps Prevent HIV and Other Infections
The first microbiome study of the penis offers some clues as to why removing foreskin cuts the risk of HIV infection in circumcised men

http://www.scientificamerican.com/article.cfm?id=circumcision-penis-microbiome-hiv-infection
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2798966/?tool=pmcentrez

Sadiq சொன்னது…

என்னுடைய நீண்ட பின்னூட்டத்தின் சாராம்சம் இதுதான்.

1. கோவி கண்ணனுடைய இந்த கட்டுரை எந்தவித மருத்துவ ஆதாரமும் இல்லாமல் , வெறும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டது. தவறுகளை சுட்டிக்காட்டியும் திருத்த மறுக்கிறார்.

2. HIV பரவுவதை தடுப்பதற்கு தனி மனித ஒழுக்கமே தீர்வு.

3. சுன்னத் செய்வது HIV பரவுவதை 60% வரை தடுக்கிறது என்று உயர்ந்த ஆதாரமான randomized controlled trial (RCT) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் WHO ஆண் பெண் உறவு மூலம் HIV அதிகமாக பரவும் நாடுகளில் சுன்னத் செய்வதை பரிந்துரைத்துள்ளது.

4. சுன்னத் செய்வது 100% பாதுகாப்பு கிடையாது. இதனுடன் பாதுகாப்பான உடலுறவு முறை அவசியம்.

5. சுன்னத் செய்வது எவ்வாறு HIV யிலிருந்து பாதுகாக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்படுள்ளது.

6. உலகிலேயே அதிக எய்ட்ஸ் நோயாளிகள் வாழும் நாடு தென் ஆப்ரிக்கா. அதிலுள்ள‌ ஒரு நகரில், சுன்னத் செய்யும் முறையால் HIV பரவுவது 76% வரை குறைக்கப்பட்டுள்ளது.

7. சுன்னத் செய்வதால் வேறு மருத்துவ நன்மைகளும் உள்ளன .

8. நமது நாட்டில் சுன்னத் செய்வது ஒரு குறிப்பிட்ட மதச் சடங்காக கருதுவதால் , அரசு இதை பரிந்துரைக்க தயங்குகிறது.


இவையனைத்திற்கும் ஆதாரம் கொடுத்துள்ளேன்.

Sadiq சொன்னது…

எனக்கும் இன்னொரு பரிணாம ஆதரவாளரைப் போல , எதற்கெடுத்தாலும் பரிணாமமே ஞாபகத்திற்கு வருகிறது.

சுன்னத் செய்வது HIV , Herpes, HPV போன்ற நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாக்கிறது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு சிறு mutation மூலம் நுனித்தோல் இல்லாமல் பிறக்கும் மனிதர்களுக்கு மற்ற மனிதர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். HIV போன்ற நோய் தாக்கி நுனித்தோல் உள்ள மனிதர்கள் அழிவார்கள். காலப்போக்கில் இயற்கை தேர்வினால் நுனித்தோல் இல்லாத மனிதர்களே பூமியில் இருப்பார்கள். இது நடக்க சுமார் 10000 ஆண்டுகள் ஆகும் என்பது ஒரு அறிஞரின் கணிப்பு.


இறுதியில் நகைச்சுவைக்காக, ஹி ஹி :-)

கோவி.கண்ணன் சொன்னது…

சித்திக்

"சுன்னத் செய்து கொள்ளுங்கள் பாலியல் தொழிலாளியிடம் செல்லுங்கள் குறைந்த பட்சம் பாதுகாப்பு கேரண்டி' என்று விளம்பரம் வைத்துவிடுவோம்.

ஒழுக்கமாக இருப்பதற்கும் ஒழுக்கத்தையும் தான் வழியுறுத்த வேண்டுமே அன்றி, இதைச் செய்து கொண்டால் உனக்கு நோய் அண்டாது என்று சொல்வதன் மூலம் முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே அன்றி குறையாது, ஒருமுறை நோய் தாக்கவில்லை என்றால் அடுத்த முறை தாக்காது என்பதற்கு சுன்னத்தில் உத்தரவாதம் கிடையாது,. நான் ஆங்கிலத்தில் இணைத்திருக்கும் இணைப்புகள் எதையுமே படிக்காமல் திரும்ப திரும்ப நீங்கள் சொல்வதையே சொல்லி வருகிறீர்கள்.

நன்றாக் உடல் சுத்தம், ஒழுக்கமான வாழ்க்கை வாழும் ஒரு ஆண்டுக்கு சுன்னத் எப்படிப் பயனளிக்கும் என்று விளக்கம் சொல்லமுடியுமா ?

எய்ட்ஸ் அல்லாத பாலியல் நோய்களில் இருந்து தற்காக்க சுன்னத் முழுப்பாதுகாப்பு அளிக்காது என்பதால் அதன் பரிந்துரைகள் ஆணுறைகளை விட மேலானது அல்ல. தேவையற்ற செலவுகளே.

Sadiq சொன்னது…

இந்தக் கருத்து ஏன் வெளியிடப்படவில்லை?

//திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்//

நீங்களும் "உங்கள் மதம்" என்று திரும்ப திரும்ப கூறுவதை விட்டு விட்டு , மருத்துவ ஆதாரத்தை கொடுக்க முயன்றிருக்கிறீர்கள். மகிழ்ச்சி !

// உலக சுகாதார நிறுவனம் சுன்னத் செய்து கொள்வது உயிர்கொல்லி நோய் தாக்காமல் இருக்கும் தீர்வ என்று எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக குறைந்தபட்ச தடுப்பு என்ற அளவில் மட்டுமே பரிந்துரைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். //

சரி , சுன்னத் செய்வது HIVக்கு எதிரான குறைந்த பட்ச தடுப்பு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதாக , உங்கள் பதிவில் எங்கு உள்ளது?

//சுன்னத் செய்து கொள்வது எய்ட்ஸ் பரவலை தடுக்கிறதா ?
இதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, காரணம். எய்ட்ஸ் பரவல் பாதுகாப்பற்ற பாலியல் உறவால் பரவுகிறது என்றாலும், அவ்வாறு பாதுக்காப்பற்ற பாலியல்உறவை நாடும் சுன்னத் செய்யப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றிக் கொள்ளாது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. //

இதை எழுதுவதற்கு முன்னாடி கொஞ்சம் google search செய்து பார்த்திருக்கலாமே.

[b]ஆதாரம் இல்லையா ??? compelling evidence இருப்பதாக WHO கூறுகிறது!!!

There is compelling evidence that male circumcision reduces the risk of heterosexually acquired HIV infection in men by approximately 60%.

http://www.who.int/hiv/topics/malecircumcision/en/
சுன்னத் செய்வது HIVக்கு எதிரான குறைந்த பட்ச தடுப்பு என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது என்று உங்கள் பதிவில் சேர்த்தால், உங்களை நேர்மையை பாராட்டுவேன். [/b]



//இதுபற்றி ஆராய்ச்சி இன்னும் நடத்தப்பட வேண்டும் என்று தான் சொல்கிறார்கள்//

எது பற்றி ? சுன்னத் செய்ய சொல்லும் பரிந்துரையைப் பற்றியா ? சுன்னத் செய்வதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது பற்றிதான் ஆராய்ச்சி நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். சுன்னத் செய்வது பெண்களில் இருந்து ஆண்களுக்கு HIV பரவுவதை 60% வரை குறைக்கிறது என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்களில் இருந்து பெண்களுக்கு HIV பரவுவதை சுன்னத் செய்வது குறைக்கிறது என்று நிரூபிக்கப்படவில்லை . இதைப்பற்றிதான் ஆய்வு செய்ய வேண்டும் என்று WHO கூறுகிறது. நீங்கள் கொடுத்த வரிகளிலேயே விளக்கம் உள்ளது.

More research needed to further inform programme development

Experts at the meeting identified a number of areas where additional research is required to inform the further development of male circumcision programmes. These included the impact of male circumcision on sexual transmission from HIV-infected men to women

http://www.who.int/hiv/mediacentre/news68/en/index.html

Sadiq சொன்னது…

//சித்திக்

"சுன்னத் செய்து கொள்ளுங்கள் பாலியல் தொழிலாளியிடம் செல்லுங்கள் குறைந்த பட்சம் பாதுகாப்பு கேரண்டி' என்று விளம்பரம் வைத்துவிடுவோம்.//

ஏற்கனவே national aids institute எவ்வாறு விளம்பரம் வைக்க வேண்டும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறது. கொஞ்சம் உதவி செய்யுங்கள்

http://www.indianexpress.com/news/need-to-work-for-acceptability-of-circumcision-hiv-experts/748902/0


//ஒழுக்கமாக இருப்பதற்கும் ஒழுக்கத்தையும் தான் வழியுறுத்த வேண்டுமே அன்றி, இதைச் செய்து கொண்டால் உனக்கு நோய் அண்டாது என்று சொல்வதன் மூலம் முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகுமே அன்றி குறையாது, ஒருமுறை நோய் தாக்கவில்லை என்றால் அடுத்த முறை தாக்காது என்பதற்கு சுன்னத்தில் உத்தரவாதம் கிடையாது,. //

இது உங்களுடைய ஒரு ஊகம். சுன்னத் செய்வதால் HIV குறையும் என்பது தென் ஆப்பிரிகாவின் Orange Farm நகர‌த்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொடுத்த ஆதாரம் எதையும் படிக்க மாட்டீர்களா ?

http://www.bloomberg.com/news/2011-07-20/circumcision-reduces-hiv-infections-76-in-south-african-study.html

//நான் ஆங்கிலத்தில் இணைத்திருக்கும் இணைப்புகள் எதையுமே படிக்காமல் திரும்ப திரும்ப நீங்கள் சொல்வதையே சொல்லி வருகிறீர்கள்.//

அதில் கொடுத்திருக்கும் சில வாதங்களுக்கு தான் மிக நீண்ட பதில் கொடுத்துள்ளேன். சரி நீங்கள் முழுமையாக படித்திருந்தால் வாதங்களை இங்கே எடுத்து வைக்கிலாமே. உங்கள் வாதங்கள் எவ்வாறு தவறு என்று நிரூபித்துள்ளேன் , பதில் எதையும் காணவில்லையே !

//நன்றாக் உடல் சுத்தம், ஒழுக்கமான வாழ்க்கை வாழும் ஒரு ஆண்டுக்கு சுன்னத் எப்படிப் பயனளிக்கும் என்று விளக்கம் சொல்லமுடியுமா ?

எய்ட்ஸ் அல்லாத பாலியல் நோய்களில் இருந்து தற்காக்க சுன்னத் முழுப்பாதுகாப்பு அளிக்காது என்பதால் அதன் பரிந்துரைகள் ஆணுறைகளை விட மேலானது அல்ல. தேவையற்ற செலவுகளே.//

ஏற்கனவே medical benefits of circumcision சுட்டி கொடுத்துள்ளேன் முடிந்தால் படிக்கவும்

http://jama.jamanetwork.com/article.aspx?articleid=1104451

உங்கள் கட்டுரையில் உள்ள மருத்துவ தவறுகளை திருத்தும் எண்ணம் எதுவும் இல்லையா ?

சரி இத்தனை ஆதாரங்களுக்கு பிறகு , சுன்னத் செய்வது காட்டுமிராண்டித்தனம் என்று கூறுகிறீர்களா ?

ஆம் என்றால் "Ignorance is bliss".

கோவி.கண்ணன் சொன்னது…

// சரி , சுன்னத் செய்வது HIVக்கு எதிரான குறைந்த பட்ச தடுப்பு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதாக , உங்கள் பதிவில் எங்கு உள்ளது?//

பதிவில் நான் யூதப் பழக்கமாக சுன்னத் எப்படி ஆபிராகமிய மதங்களில் பரவியது என்று சொல்லி இருக்கிறேன், அதற்கான காரணம் பாலியல் நோய் தொற்றுக்கான குறைந்த பட்ச பாதுகாப்பு என்றே எழுதியுள்ளேன். அதே சமயத்தில் நீர் நிலைகள் நிறைந்த கிழக்கு நாடுகளில் இத்தகையப் பழக்கம் பரவ வில்லை என்பதையும் ஒப்பு நோக்க உடல் தூய்மை பேணுவதில் இருந்த சுணக்கம் அல்லது போதிய நீர்வசதி இன்மை என்பது தவிர்த்து இந்தப் பழக்கம் பரவி இருக்க வாய்ப்பில்லை. சுன்னத் செய்து கொண்ட அன்றைய யூத, ரோமானிய, அரேபிய சமூகத்தில் பாலியல் நோய்கள் எதுவும் இல்லாமல் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரம் எதுவும உங்களிடமும் கிடையாது. மற்ற நாடுகளில் சுன்னத் செய்யாதவர்கள் பாலியல் நோயால் பாழ்பட்டார்கள் என்று பெரிதாகக் குறிப்புகளும் கிடையாது.

சுன்னத் செய்து கொள்வதால் பாலியல் தொழிலாளியை நாடும் போது தொற்றிக் கொள்ளும் பாலியல் நோய் பற்றுதல் குறைவு, நோய் அண்டாது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, நோய் அண்டிய விழுக்காடுகள் சற்று குறைவாக இருக்கலாம். உலக சுகாதரா நிறுவனம் ஆண்கள் கவனக்குறைவால் ஆணுறை அணிந்து கொள்ளமாட்டார்கள் அல்லது அதற்காக செலவு செய்யத் தயங்குவார்கள் என்ற நிலையில் ஆப்பிரிக்கா போன்று உணவுக்கே வழியில்லாத நாடுகளில் சுன்னத் பரிந்துரை செய்திருக்கிறது, ஆனால் அதை நிரந்தரத் தீர்வு என்று அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.

There is compelling evidence that male circumcision reduces the risk of heterosexually acquired HIV infection in men by approximately 60%. - இது எத்தனை முறை சென்றவர்களுக்காக அல்லது சோதனை எலிகளாகப் பயன்படுத்தப்பட்ட ஒரே ஒரு முறை சென்றவர்களுக்காக என்றும் தெரியவில்லை, இந்த சோதனை எலிகளில் 40 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது தான் அந்த வரி சொல்லும் உண்மை, அடுத்த முறை செல்லும் போது மீதம் உள்ள 60 விழுக்காட்டின் 40 விழுக்காடுகள் பாதிக்கப்பட எஞ்சி இருப்பவர்களின் விழுக்காடுகள் 36 ஆக இருக்கும், அடுத்த முறை 21.6 விழுக்காடுகள், அடுத்த முறை சென்றால் 12.6 ஆக சுன்னத் செய்யப்பட்ட ஆண் ஐந்தாம் முறை பாலியல் தொழிலாளியை நாடும் போது அவனுக்கு நோய் தொற்றும் விழுக்காடு 98 விழுக்காடு வந்துவிடும்.

Male circumcision provides only partial protection, and therefore should be only one element of a comprehensive HIV prevention package which includes:
- the provision of HIV testing and counseling services;
- treatment for sexually transmitted infections;
- the promotion of safer sex practices;
- the provision of male and female condoms and promotion of their correct and consistent use.

http://www.who.int/hiv/topics/malecircumcision/en/

இதில் இருக்கும் ' only partial protection,' என்பதற்கு பொருள் தெரிந்து கொள்ளவும். they are not said it is complete solution or protection

கோவி.கண்ணன் சொன்னது…

//Sadiq கூறியது...
எனக்கும் இன்னொரு பரிணாம ஆதரவாளரைப் போல , எதற்கெடுத்தாலும் பரிணாமமே ஞாபகத்திற்கு வருகிறது.

சுன்னத் செய்வது HIV , Herpes, HPV போன்ற நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாக்கிறது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு சிறு mutation மூலம் நுனித்தோல் இல்லாமல் பிறக்கும் மனிதர்களுக்கு மற்ற மனிதர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். HIV போன்ற நோய் தாக்கி நுனித்தோல் உள்ள மனிதர்கள் அழிவார்கள். காலப்போக்கில் இயற்கை தேர்வினால் நுனித்தோல் இல்லாத மனிதர்களே பூமியில் இருப்பார்கள். இது நடக்க சுமார் 10000 ஆண்டுகள் ஆகும் என்பது ஒரு அறிஞரின் கணிப்பு.


இறுதியில் நகைச்சுவைக்காக, ஹி ஹி :-)//



அடேங்கப்பா ஒரு அறிஞர் குரங்குக்கும் மனிதனுக்கும் ஒரே மூததையர் என்று கூறினால் பரிணாம் பொய் ஆதாம் - ஏவாளின் மகனும் - மகளும் கூடித்தான் அனைவரையும் உற்பத்தி செய்தார்கள் என்று கூறுவீர்கள், இப்ப நுனித்தோலுக்கு பரிணாமம் காணுறிங்க, ஆக உங்க கொள்கைகள் என்பவை குரானுக்கு முட்டுக் கொடுக்கக் கூடிய அறிவியல் கருத்துகளாகத்தான் ஏங்குகிறது என்பது தெளிவாகிறது. :)

ஆணுறை இல்லாத காலங்களில் சுன்னத் பாலியல் நோய்க்கான ஓரளவான தீர்வாக இருந்தது, ஒப்புக் கொள்கிறேன். யாருக்கு ? ஒழுக்கக் கெட்டவர்களுக்கும் பரத்தையரை நாடுபவர்களுக்கும். யாரோ செய்த தவறுகளினால் அவை மதவழக்கமாக பரிந்துரைக்கப்பட்டு நல்ல இருப்பவர்களும் ஆண்குறியையே நிர்வாணமாக்கிவிட்டார்கள்.

நிர்வாணமாக ஆண்குறிகள் - சுன்னத்

கோவி.கண்ணன் சொன்னது…

//1. கோவி கண்ணனுடைய இந்த கட்டுரை எந்தவித மருத்துவ ஆதாரமும் இல்லாமல் , வெறும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டது. தவறுகளை சுட்டிக்காட்டியும் திருத்த மறுக்கிறார்.//
போதிய அளவு சுட்டிகளை இணைத்துள்ளேன், அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாக சுன்னத் செய்து கொண்டவர்கள் பெரும் விழுக்காடு, ஆனாலும் அவர்கள் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டவர்களும் பெரும் விழுக்காடு இருக்கிறார்கள், எனவே சுன்னத் நிரந்தர தீர்வு இல்லை, தகாத உறவுகளுக்கு ஆணுறையே சிறந்தது, இந்திய அரசின் விளம்பரங்கள் அப்படித்தான் இருக்கிறது, :)

//2. HIV பரவுவதை தடுப்பதற்கு தனி மனித ஒழுக்கமே தீர்வு.//

தனிமனித ஒழுக்கத்தில் உள்ளவர்களுக்கு சுன்னத் செய்வது தனிப்பட்ட ஆணுக்கு தன் பாலியல் ரீதியான உணர்வுகளுக்கான இழப்பு

//3. சுன்னத் செய்வது HIV பரவுவதை 60% வரை தடுக்கிறது என்று உயர்ந்த ஆதாரமான randomized controlled trial (RCT) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் WHO ஆண் பெண் உறவு மூலம் HIV அதிகமாக பரவும் நாடுகளில் சுன்னத் செய்வதை பரிந்துரைத்துள்ளது.//

இந்த 60 விழுக்காட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளியிடம் செல்லும் போது எய்ட்ஸ் பற்றிக் கொள்வார்கள்

//4. சுன்னத் செய்வது 100% பாதுகாப்பு கிடையாது. இதனுடன் பாதுகாப்பான உடலுறவு முறை அவசியம்.//

பாதுகாப்பான உடலுறவு முறைகள் இருந்தால் சுன்னத் செய்வது தேவையற்ற உறுப்பு சிதைப்பு, உணர்வு இழப்பு

//5. சுன்னத் செய்வது எவ்வாறு HIV யிலிருந்து பாதுகாக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்படுள்ளது.//

அது ஒருவர் எத்தனை முறை பாலியல் தொழிலாளியிடம் சென்றார் என்பதைப் பொருத்தது

//6. உலகிலேயே அதிக எய்ட்ஸ் நோயாளிகள் வாழும் நாடு தென் ஆப்ரிக்கா. அதிலுள்ள‌ ஒரு நகரில், சுன்னத் செய்யும் முறையால் HIV பரவுவது 76% வரை குறைக்கப்பட்டுள்ளது. //

சுன்னத் செய்வதால் எய்ட்ஸ் வராது என்று பிரச்சாரம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆணுறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊட்டப்படாததால் சுன்னத் செய்து கொண்டவர்கள் நோய் தாக்காது என்கிற நம்பிக்கையில் பாலியல் தொழிலாளியை தொடர்ந்து நாடுவர்கள், அவர்களுக்கு போதுமான பாலியல் தொழிலாளிகள் கிடைக்காத போது சமூகக் குற்றமும், பாலியல் குற்றமும் பெருகும், கூடவே பாலியில் தொழிலாளிகளின் எண்ணிக்கையும் பெருகும், தவிர இப்படி அதிரடியாக சுன்னத் செய்து வைக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் அவர்களுக்கு செய்யப்பட்ட ஆண்டும் அண்மைய ஆண்டுகள் என்பதால் பாதிப்பின் தன்மை வரும்காலத்தில் தான் தெரியவரும், அதற்குள் யாரும் தீர்ப்பு எழுதிவிட முடியாது

//7. சுன்னத் செய்வதால் வேறு மருத்துவ நன்மைகளும் உள்ளன . //

ஆண்குறியின் முந்தோலை பின்னுக்கு தள்ள முடியாதவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் எந்த நண்மையும் கிடையாது, மாறாக அவர்களுக்கு உணர்வு ரீதியான இழப்பே. ஆணுறை அணிந்த சுன்னத் செய்யப்படாத ஆணுக்கும், சுன்னத் செய்யப்பட்ட ஆணுக்கும் இருக்கும் உணர்வுகளை ஒப்பிட ஆணுறை அணிந்த ஆணுக்கே கூடுதல் உணர்வு ஏனெனில் குறி முனை வெறும் தோல் என்ற நிலையை அடைந்திருக்காது, உராய்வின் பலனை நன்கு அனுபவிக்கும்.

//8. நமது நாட்டில் சுன்னத் செய்வது ஒரு குறிப்பிட்ட மதச் சடங்காக கருதுவதால் , அரசு இதை பரிந்துரைக்க தயங்குகிறது.//

ஒழுக்கமானவர்களுக்கும் தூய்மையாக உடலைப் பேணுபவர்களுக்கும் வெளிப்படையாக எந்த ஒரு நன்மையும் தராது என்பதால் வளர்ந்த நாடுகள் இதனை பரிந்துரைப்பது கிடையாது

//இவையனைத்திற்கும் ஆதாரம் கொடுத்துள்ளேன்.//

இவை அனைத்தையும் மறுத்து இருக்கிறேன், உலகில் மருத்துவக் குழு எதுவும் ஒழுக்கமான ஆண்களுக்கு செய்யப்படும் சுன்னத் அவனுக்கு பயனளிக்கும் என்று சொல்லவில்லை என்பதால் உங்கள் கருத்துகள் அனைத்தும் நிராகரிக்கப்படுகின்றன. வேண்டுமானால் உங்களுக்கான ஆண்குறி முந்தோலின் நற்பயன்கள் பரிந்துரை

http://www.noharmm.org/advantage.htm

ஒழுக்கமான ஒரு ஆணுக்கு சுன்னத் செய்வதற்கு எதிர்பாக மருத்துவர்களின் தகவல்கள்

http://www.doctorsopposingcircumcision.org/info/benefit3.html

விருப்பமில்லாமல் சுன்னத் செய்யப்பட்டவர்கள் செய்து கொண்டவர்கள், விரும்பினால் முன் தோலை 50 விழுக்காடு வரை வளர்த்துக் கொள்ளமுடியும் என்கிற சில பயிற்சி முறைகள் விக்கிப்பீடியாவில் இருக்கிறது,

http://en.wikipedia.org/wiki/Foreskin_restoration

கோவி.கண்ணன் சொன்னது…

நன்றாக்உடல் சுத்தம், ஒழுக்கமான வாழ்க்கை வாழும் ஒரு ஆண்டுக்கு சுன்னத் எப்படிப் பயனளிக்கும் என்று விளக்கம் சொல்லமுடியுமா ?

எய்ட்ஸ் அல்லாத பாலியல் நோய்களில் இருந்து தற்காக்க சுன்னத் முழுப்பாதுகாப்பு அளிக்காது என்பதால் அதன் பரிந்துரைகள் ஆணுறைகளை விட மேலானது அல்ல. தேவையற்ற செலவுகளே. என்ற என்கேள்விக்கு

//ஏற்கனவே medical benefits of circumcision சுட்டி கொடுத்துள்ளேன் முடிந்தால் படிக்கவும்

http://jama.jamanetwork.com/article.aspx?articleid=1104451 //

சுட்டிக் கொடுத்துள்ளீர்கள், இதில் சென்று பார்க்கும் போது பாலியல் நோய் சார்ந்த குறிப்பாக எச் ஐ விக்கு தாக்குதல் குறைவாக இருக்கும் என்கிற தகவலும் கூடுதலாக பிற பாலியல் நோய்களையும் குறிப்பிட்ட அளவுக்கு தாக்காமல் பாதுகாக்கும் என்று தான் குறிப்பிட்டு இருக்கிறது. நான் கேட்டது ஒழுக்கமான ஆண்கள் குறித்தது, ஒருவேளை ஒழுக்கமான ஆண் என்றால் தொடர்ந்து ஒரே பாலியல் தொழிலாளியிடம் செல்பவன் என்று நினைத்திருக்கிறீர்களோ. :)

உங்களைப் போன்றோர் ஓரின சேர்க்கையால் தான் எய்ட்ஸ் பரவுகிறது என்றும் நம்புகிறார்கள், எந்த வகை உறவாக இருந்தாலும் நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் உறவு கொண்டால் தான் பாதிப்பு ஏற்படும்.

முடியல........!

Sadiq சொன்னது…

//Sadiq கூறியது...
எனக்கும் இன்னொரு பரிணாம ஆதரவாளரைப் போல , எதற்கெடுத்தாலும் பரிணாமமே ஞாபகத்திற்கு வருகிறது.

சுன்னத் செய்வது HIV , Herpes, HPV போன்ற நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாக்கிறது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு சிறு mutation மூலம் நுனித்தோல் இல்லாமல் பிறக்கும் மனிதர்களுக்கு மற்ற மனிதர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். HIV போன்ற நோய் தாக்கி நுனித்தோல் உள்ள மனிதர்கள் அழிவார்கள். காலப்போக்கில் இயற்கை தேர்வினால் நுனித்தோல் இல்லாத மனிதர்களே பூமியில் இருப்பார்கள். இது நடக்க சுமார் 10000 ஆண்டுகள் ஆகும் என்பது ஒரு அறிஞரின் கணிப்பு.


இறுதியில் நகைச்சுவைக்காக, ஹி ஹி :-)//



அடேங்கப்பா ஒரு அறிஞர் குரங்குக்கும் மனிதனுக்கும் ஒரே மூததையர் என்று கூறினால் பரிணாம் பொய் ஆதாம் - ஏவாளின் மகனும் - மகளும் கூடித்தான் அனைவரையும் உற்பத்தி செய்தார்கள் என்று கூறுவீர்கள், இப்ப நுனித்தோலுக்கு பரிணாமம் காணுறிங்க, ஆக உங்க கொள்கைகள் என்பவை குரானுக்கு முட்டுக் கொடுக்கக் கூடிய அறிவியல் கருத்துகளாகத்தான் ஏங்குகிறது என்பது தெளிவாகிறது. :)//

கோவி சார் நகைச்சுவையை புரிந்து கொள்ளாமல் டென்ஷன் ஆகுறீர்களே. அந்த பரிணாம ஆதரவாளர் சிரித்துக் கொண்டிருப்பார் :-)

கோவி.கண்ணன் சொன்னது…

// Circumcised men were no more or less likely to use condoms than uncircumcised men, the study found.//

சாதிக்,

இதில் இருக்கும் விபரீதம் தான் சுட்டிக்காட்டுகிறோம், சுன்னத் செய்து கொண்டால் எய்ட்ஸ் பரவாது என்று நம்பிக்கை ஊட்டி இருப்பதால் சுன்னத் செய்து கொண்டவர்கள் ஆணுறை அணிந்து கொள்ள விரும்புவதில்லை அல்லது அணிந்து கொள்வதே இல்லை, சுன்னத் செய்து கொள்ளாதவர்கள் விழிப்புணர்வு இருந்தால் எய்ட்ஸ் பயம் காரணமாக ஆணுறை அணிந்து செல்வார்கள், குறிபிட்ட http://www.bloomberg.com/news/2011-07-20/circumcision-reduces-hiv-infections-76-in-south-african-study.html கட்டுரையில் சுன்னத் செய்யப்படாத ஆண்கள் அனைவரும் ஆணுறை அணிந்து தான் பாலியல் தொழிலாளியை நாடினார்கள் என்று எந்த தகவலும் இல்லை, மாறாக அவர்களில் ஆணுறை அணிய விரும்பம் கொண்டவர்களும், அணிந்தவர்களும் உண்டு என்று தான் சொல்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

More evidence that circumcision leads to lower condom use

There is further evidence from Africa that the circumcision programs intended to reduce the risk of HIV infection are leading to reduced condom use. This is exactly what the critics of circumcision as an AIDS prevention strategy warned would be likely to happen, and events are proving the sceptics correct.

In Zambia, a school headmistress complains that media campaigns are driving teenage boys into agreeing to circumcision without any explanation of the risks or likely effects, and that the boys believe being circumcised means that it is now safe for them to indulge in unprotected sex.

In Swaziland, there are increasing fears that the aggressive circumcision programs there are discouraging men from using condoms, leading to an epidemic of unsafe sex. Men have realised that while the presence of the foreskin makes forms of safe sex such as masturbation highly enjoyable and satisfying, circumcision takes away most of the pleasure. Once circumcised, they find the only way to get satisfaction is by engaging in “bareback” sex with a partner.

Zambia: Boys see circumcision as licence for unprotected sex
THE recent headlines that circumcision has made are too loud for anyone to ignore. The media adverts coupled with other forms of campaigns for circumcision have certainly had an impact on the general public. Critics say circumcision is brutal and robs males of sexual sensation, but many in the medical community point to research that suggests circumcision reduces the risk of sexually transmitted infections including HIV.

மேலும்
http://www.circinfo.org/Circumcision_condoms.html

கோவி.கண்ணன் சொன்னது…

இன்னும்

HIV-AIDS control in Africa: Circumcised men more likely to have multiple partners and forget the condoms

From Africa there is ever-increasing evidence that men who have agreed to get circumcised because they have been told it will protect them from HIV infection believe they are immune. This is leading to an increase in high-risk behavior: increased promiscuity, multiple partners, more unsafe sex and failure to use condoms. As critics of the circumcision solution have warned from the beginning and emphasized on the rare occasions they have been allowed to get anything into print, such behavioural patterns are likely to increase the incidence of HIV infection, and at the very least must cancel out any benefits that might otherwise arise from the circumcision programs. As recent reports from Zambia, Kenya and Zimbabwe indicate, the much-vaunted circumcision programs are producing an epidemic of unsafe and high-risk sex, thereby defeating their own stated purpose.
http://www.circinfo.org/Circumcision_condoms.html

கோவி.கண்ணன் சொன்னது…

மேலும்

Kenya: Circumcised men more likely to have multiple partners, believe they are immune to HIV
THE Ministry of Public Health and Sanitation in conjunction with the National Male Circumcision taskforce have expressed concern over reports of multiple sex partners among those who recently underwent male circumcision. Nyanza provincial director of public health and sanitation, who is also the task force chairman Jackson Kioko, said there have been reports that those who have been circumcised are taking it as immunity against HIV.

http://www.circinfo.org/Circumcision_condoms.html

கோவி.கண்ணன் சொன்னது…

மேலும்

Zimbabwe: Circumcision a “canal for new HIV infections”
HARARE - Male circumcision is becoming a canal for new HIV infections as men are now reluctant to use condoms on the basis that they are 60 percent safe, a government official has said. MDC deputy spokesman and legislator for Bulawayo East Thabitha Khumalo said while circumcision was good in reducing the risk of HIV infections in men, the emphasis should be on the use of condoms [rather] than circumcision in order to save both men and women.

http://www.circinfo.org/Circumcision_condoms.html

கோவி.கண்ணன் சொன்னது…

சித்திக்,

ஒழுக்கமான, உடல் நலம் பேணும் ஆணுக்கு ஆண்குறி முனைத் தோல், பெண்களுக்கு ஒழுக்கம் தலை முக்காட்டில் இருக்கிறது என்று நீங்கள் நம்புவது போன்ற ஒரு பாலியல் ஒழுக்க(ம்) கவசம்.

முந்தோலின் நற்பயன் அது இருப்பவர்களால் மட்டும் தான் உணர்ந்து கொள்ளமுடியும். பல்லே இல்லாதவன் செயற்கை பல்செட் பல்லைவிட பயனானது என்று சொல்வது போன்றதே சுன்னத் குறித்த உங்கள் பயன் விளக்கமெல்லாம்.

அந்தக் கவசம் இருப்பது பற்றிக் கவலைப்படாமல் கண்டபடி ஒரு ஆண் பாலியல் தொழிலாளியை நாடினால் கவசமே அவனை நசுக்கிவிடும். அதையும் தடுக்கத் தான் மேலே ஆணுறை என்னும் மற்றொரு கவசம் போட்டுக் கொள்ளச் சொல்கிறார்கள்.

நினைத்துப்பார்த்தால் மனித ஒழுக்கத்தை இயற்கை எந்த அளவு அக்கரையுடன் உருவாக்கி இருக்கிறது என்று வியப்படையலாம்.

:)

Sadiq சொன்னது…

// Circumcised men were no more or less likely to use condoms than uncircumcised men, the study found.//

சாதிக்,

இதில் இருக்கும் விபரீதம் தான் சுட்டிக்காட்டுகிறோம், சுன்னத் செய்து கொண்டால் எய்ட்ஸ் பரவாது என்று நம்பிக்கை ஊட்டி இருப்பதால் சுன்னத் செய்து கொண்டவர்கள் ஆணுறை அணிந்து கொள்ள விரும்புவதில்லை அல்லது அணிந்து கொள்வதே இல்லை, சுன்னத் செய்து கொள்ளாதவர்கள் விழிப்புணர்வு இருந்தால் எய்ட்ஸ் பயம் காரணமாக ஆணுறை அணிந்து செல்வார்கள், குறிபிட்ட http://www.bloomberg.com/news/2011-07-20/circumcision-reduces-hiv-infections-76-in-south-african-study.html கட்டுரையில் சுன்னத் செய்யப்படாத ஆண்கள் அனைவரும் ஆணுறை அணிந்து தான் பாலியல் தொழிலாளியை நாடினார்கள் என்று எந்த தகவலும் இல்லை, மாறாக அவர்களில் ஆணுறை அணிய விரும்பம் கொண்டவர்களும், அணிந்தவர்களும் உண்டு என்று தான் சொல்கிறது. //

கோவி சார் அந்த வரியை கொஞ்சம் திரும்ப படிச்சு பாருங்க . நீங்கள் சொல்வது எதுவும் அந்த வரிகளில் கிடையாது.

சுன்னத் செய்யப்படாத ஆண்கள், சுன்னத் செய்யப்பட்ட ஆண்களைவிட கூடுதலாகவோ , குறைவாகவோ ஆணுறை உபயோகிக்கவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது ஆணுறை உபயோகத்தில் சுன்னத் செய்யப்பட்ட ஆண்களுக்கும், செய்யப்படாத ஆண்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறுகிறது.

சற்று விளக்கமாக அதே ஆய்வைப் பற்றி இந்த சுட்டியில் உள்ளது

Between 2007 and 2010, the percentage of circumcised men increased from 16% to 50% in the 15 to 49 age group, peaking at 59% in the 15 to 24 age group. There were no differences between circumcised and uncircumcised men in terms of sexual behavior, notably condom use. In circumcised men, there were reductions of 55% in HIV prevalence and 76% in HIV incidence. This incidence reduction did not differ statistically from that observed in the original three trials. The study also showed that if no man had been circumcised in this community over this period, HIV prevalence would have been 25% higher than it is and HIV incidence 58% higher.


http://www.anrs.fr/content/download/3830/20645/file/PR%2020%20july%202011%20%20-%20male%20circumcision%20(Engl).pdf

சுன்னத் செய்யப்பட்ட பின்னர் ஆணுறை உபயோகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.சுன்னத் செய்தது HIV பரவுவதை 76% குறைத்ததாக ஆய்வு முடிவு கூறுகிறது.

நான் கொடுப்பது மருத்துவ ஆய்வு முடிவுகள், நீங்கள் கொடுப்பதோ சுன்னத் செய்வதை எதிர்க்கும் ஒரு இனையதளத்தில் உள்ள செய்திகள். இரண்டிற்கும் மலையுக்கும் மடுவுற்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

மருத்துவ ஆய்வுகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ???

Sadiq சொன்னது…

//சரி , சுன்னத் செய்வது HIVக்கு எதிரான குறைந்த பட்ச தடுப்பு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதாக , உங்கள் பதிவில் எங்கு உள்ளது?//

என்னுடைய இந்த கேள்விக்கு பதில் தராமல் தலைப்பை திசை மாற்றி இருக்கிறீர்கள்

//Male circumcision provides only partial protection, and therefore should be only one element of a comprehensive HIV prevention package which includes:
- the provision of HIV testing and counseling services;
- treatment for sexually transmitted infections;
- the promotion of safer sex practices;
- the provision of male and female condoms and promotion of their correct and consistent use.

http://www.who.int/hiv/topics/malecircumcision/en/ //

நான் கொடுத்த சுட்டியை மேற்கோள் காட்டும் நீங்கள் , இதை பதிவில் சேர்ப்பீர்களா என்று கேட்டேன் பதில் இல்லை.

//இதில் இருக்கும் ' only partial protection,' என்பதற்கு பொருள் தெரிந்து கொள்ளவும். they are not said it is complete solution or protection//

பெரிய கண்டுபிடிப்பு ! நான் ஆரம்பித்தல் இருந்து என்ன சொல்கிறேன் ???

//There is compelling evidence that male circumcision reduces the risk of heterosexually acquired HIV infection in men by approximately 60%. - இது எத்தனை முறை சென்றவர்களுக்காக அல்லது சோதனை எலிகளாகப் பயன்படுத்தப்பட்ட ஒரே ஒரு முறை சென்றவர்களுக்காக என்றும் தெரியவில்லை, இந்த சோதனை எலிகளில் 40 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது தான் அந்த வரி சொல்லும் உண்மை, அடுத்த முறை செல்லும் போது மீதம் உள்ள 60 விழுக்காட்டின் 40 விழுக்காடுகள் பாதிக்கப்பட எஞ்சி இருப்பவர்களின் விழுக்காடுகள் 36 ஆக இருக்கும், அடுத்த முறை 21.6 விழுக்காடுகள், அடுத்த முறை சென்றால் 12.6 ஆக சுன்னத் செய்யப்பட்ட ஆண் ஐந்தாம் முறை பாலியல் தொழிலாளியை நாடும் போது அவனுக்கு நோய் தொற்றும் விழுக்காடு 98 விழுக்காடு வந்துவிடும்.//

மீண்டும் ஆதாரம் எதுவும் இல்லாமல் உளறுகிறீர்கள்.

உலக சுகாதார நிறுவனம் சொல்வதை கேளுங்கள்

Modeling studies suggest that male circumcision in sub-Saharan Africa could prevent 5.7 million new cases of HIV infection and 3 million deaths over 20 years.

http://www.who.int/hiv/mediacentre/news68/en/index.html

சுன்னத் செய்வதால் ஆப்பிரிகாவில் 30 லட்சம் மரணங்களை தவிர்க்கலாம் என்று கூறுகிறது. இது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா ? அல்லது நீங்கள் உலக சுகாதார நிறுவனத்தை விட பெரிய மருத்துவ நிபுணர் என்று மனதில் நினைப்பா ?


//உலக சுகாதரா நிறுவனம் ஆண்கள் கவனக்குறைவால் ஆணுறை அணிந்து கொள்ளமாட்டார்கள் அல்லது அதற்காக செலவு செய்யத் தயங்குவார்கள் என்ற நிலையில் ஆப்பிரிக்கா போன்று உணவுக்கே வழியில்லாத நாடுகளில் சுன்னத் பரிந்துரை செய்திருக்கிறது, //

உலக சுகாதரா நிறுவனம் இதைத்தான் சொல்கிறது !!!
Countries with high rates of heterosexual HIV infection and low rates of male circumcision now have an additional intervention which can reduce the risk of HIV infection in heterosexual men.

அதாவது HIV ஆண் பெண் உடலுறவு மூலம் அதிகம் பரவும் நாடுகள் மற்றும் சுன்னத் செய்வது குறைவாக உள்ள நாடுகளில் சுன்னத் செய்யும் தடுப்பு நடவடிக்கையை பரிந்துரைக்கிறது.
இதில் "உணவுக்கே வழியில்லாத நாடுகளில் "என்பது கோவி சாருடைய கற்பனை !!!

Sadiq சொன்னது…

//நன்றாக்உடல் சுத்தம், ஒழுக்கமான வாழ்க்கை வாழும் ஒரு ஆண்டுக்கு சுன்னத் எப்படிப் பயனளிக்கும் என்று விளக்கம் சொல்லமுடியுமா ?

எய்ட்ஸ் அல்லாத பாலியல் நோய்களில் இருந்து தற்காக்க சுன்னத் முழுப்பாதுகாப்பு அளிக்காது என்பதால் அதன் பரிந்துரைகள் ஆணுறைகளை விட மேலானது அல்ல. தேவையற்ற செலவுகளே. என்ற என்கேள்விக்கு

//ஏற்கனவே medical benefits of circumcision சுட்டி கொடுத்துள்ளேன் முடிந்தால் படிக்கவும்

http://jama.jamanetwork.com/article.aspx?articleid=1104451 //

சுட்டிக் கொடுத்துள்ளீர்கள், இதில் சென்று பார்க்கும் போது பாலியல் நோய் சார்ந்த குறிப்பாக எச் ஐ விக்கு தாக்குதல் குறைவாக இருக்கும் என்கிற தகவலும் கூடுதலாக பிற பாலியல் நோய்களையும் குறிப்பிட்ட அளவுக்கு தாக்காமல் பாதுகாக்கும் என்று தான் குறிப்பிட்டு இருக்கிறது. நான் கேட்டது ஒழுக்கமான ஆண்கள் குறித்தது, ஒருவேளை ஒழுக்கமான ஆண் என்றால் தொடர்ந்து ஒரே பாலியல் தொழிலாளியிடம் செல்பவன் என்று நினைத்திருக்கிறீர்களோ. :)

உங்களைப் போன்றோர் ஓரின சேர்க்கையால் தான் எய்ட்ஸ் பரவுகிறது என்றும் நம்புகிறார்கள், எந்த வகை உறவாக இருந்தாலும் நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் உறவு கொண்டால் தான் பாதிப்பு ஏற்படும்.

முடியல........!//

என்ன சொல்ல வருகிறீர்கள் ? ஒழுக்கமுள்ளவர்கள் உடலுறவில் ஈடுபடமாட்டார்களா ???

Sadiq சொன்னது…

//1. கோவி கண்ணனுடைய இந்த கட்டுரை எந்தவித மருத்துவ ஆதாரமும் இல்லாமல் , வெறும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டது. தவறுகளை சுட்டிக்காட்டியும் திருத்த மறுக்கிறார்.//
போதிய அளவு சுட்டிகளை இணைத்துள்ளேன், அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாக சுன்னத் செய்து கொண்டவர்கள் பெரும் விழுக்காடு, ஆனாலும் அவர்கள் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டவர்களும் பெரும் விழுக்காடு இருக்கிறார்கள், எனவே சுன்னத் நிரந்தர தீர்வு இல்லை, தகாத உறவுகளுக்கு ஆணுறையே சிறந்தது, இந்திய அரசின் விளம்பரங்கள் அப்படித்தான் இருக்கிறது, :) //

வாயில் வந்ததையெல்லாம் பேசினால் இந்த நிலைமை தான் !!!

இது நீங்கள் கூறியது தான் !!
//இன்றைய ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் யூதர்கள் அல்லாத கிறித்துவர்களில் சுன்னத் செய்து கொள்பவர்கள் 5 விழுக்காட்டிற்கும் குறைவே.//

இப்போது திடீரென்று அமெரிக்காவில் அதிக அளவில் சுன்னத் செய்கிறார்களா ? எது சரி ???

உண்மையில் அமிரிக்காவில் சுன்னத் செய்யும் விகிதம் அதிகம் தான். ஆனால் அமெரிக்காவில் HIV அதிகமாக ஆண் - ஆண் உடலுறவு மூலமே பரவுகிறது. சுன்னத் செய்வது ஆண் - பெண் உடலுறவிற்கே பாதுகாப்பளிக்கும்.

அமெரிக்க அரசின் centre for disease control and prevention இதை கூறுகிறது

Also, studies to date have demonstrated efficacy only for penile-vaginal sex, the predominant mode of HIV transmission in Africa, whereas the predominant mode of sexual HIV transmission in the United States is by penile-anal sex among MSM

http://www.cdc.gov/hiv/resources/factsheets/circumcision.htm


//2. HIV பரவுவதை தடுப்பதற்கு தனி மனித ஒழுக்கமே தீர்வு.//

தனிமனித ஒழுக்கத்தில் உள்ளவர்களுக்கு சுன்னத் செய்வது தனிப்பட்ட ஆணுக்கு தன் பாலியல் ரீதியான உணர்வுகளுக்கான இழப்பு//

பாலியல் ரீதியான உணர்வுகளுக்கான இழப்பு என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. மருத்துவ ஆய்வுக்கட்டுரை இருந்தால் கொடுங்கள்

//3. சுன்னத் செய்வது HIV பரவுவதை 60% வரை தடுக்கிறது என்று உயர்ந்த ஆதாரமான randomized controlled trial (RCT) மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் WHO ஆண் பெண் உறவு மூலம் HIV அதிகமாக பரவும் நாடுகளில் சுன்னத் செய்வதை பரிந்துரைத்துள்ளது.//

இந்த 60 விழுக்காட்டில் உள்ளவர்கள் தொடர்ந்து எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளியிடம் செல்லும் போது எய்ட்ஸ் பற்றிக் கொள்வார்கள்//

மீண்டும் ஆதாரம் இல்லாத உளறல்.

Modeling studies suggest that male circumcision in sub-Saharan Africa could prevent 5.7 million new cases of HIV infection and 3 million deaths over 20 years.

http://www.who.int/hiv/mediacentre/news68/en/index.html

சுன்னத் செய்வதால் ஆப்பிரிகாவில் 30 லட்சம் மரணங்களை தவிர்க்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

Sadiq சொன்னது…

/4. சுன்னத் செய்வது 100% பாதுகாப்பு கிடையாது. இதனுடன் பாதுகாப்பான உடலுறவு முறை அவசியம்.//

பாதுகாப்பான உடலுறவு முறைகள் இருந்தால் சுன்னத் செய்வது தேவையற்ற உறுப்பு சிதைப்பு, உணர்வு இழப்பு//

மீண்டும் மருத்துவ ஆதாரம் இல்லாத உளறல்

//5. சுன்னத் செய்வது எவ்வாறு HIV யிலிருந்து பாதுகாக்கிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்படுள்ளது.//

அது ஒருவர் எத்தனை முறை பாலியல் தொழிலாளியிடம் சென்றார் என்பதைப் பொருத்தது//

நான் எதைப்பற்றி சொல்கிறேன் என்று தெரியாமலேயே அதே பல்லவியை பாடுகிறார்

சுன்னத் செய்வது எவ்வாறு HIV யிலிருந்து பாதுகாக்கிறது என்பதற்கான தருமி சார் கேட்ட direct evidence.
Clean-Cut: Study Finds Circumcision Helps Prevent HIV and Other Infections
The first microbiome study of the penis offers some clues as to why removing foreskin cuts the risk of HIV infection in circumcised men

http://www.scientificamerican.com/article.cfm?id=circumcision-penis-microbiome-hiv-infection
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2798966/?tool=pmcentrez

//6. உலகிலேயே அதிக எய்ட்ஸ் நோயாளிகள் வாழும் நாடு தென் ஆப்ரிக்கா. அதிலுள்ள‌ ஒரு நகரில், சுன்னத் செய்யும் முறையால் HIV பரவுவது 76% வரை குறைக்கப்பட்டுள்ளது. //

சுன்னத் செய்வதால் எய்ட்ஸ் வராது என்று பிரச்சாரம் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆணுறையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊட்டப்படாததால் சுன்னத் செய்து கொண்டவர்கள் நோய் தாக்காது என்கிற நம்பிக்கையில் பாலியல் தொழிலாளியை தொடர்ந்து நாடுவர்கள், அவர்களுக்கு போதுமான பாலியல் தொழிலாளிகள் கிடைக்காத போது சமூகக் குற்றமும், பாலியல் குற்றமும் பெருகும், கூடவே பாலியில் தொழிலாளிகளின் எண்ணிக்கையும் பெருகும், தவிர இப்படி அதிரடியாக சுன்னத் செய்து வைக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் அவர்களுக்கு செய்யப்பட்ட ஆண்டும் அண்மைய ஆண்டுகள் என்பதால் பாதிப்பின் தன்மை வரும்காலத்தில் தான் தெரியவரும், அதற்குள் யாரும் தீர்ப்பு எழுதிவிட முடியாது//

சுன்னத் செய்தவர்கள் ஆணுறை அணியும் பழக்கத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பதற்கான மருத்துவ ஆய்வுக்கட்டுரை ஏற்கன்வே கொடுத்துள்ளேன்.

http://www.anrs.fr/content/download/3830/20645/file/PR%2020%20july%202011%20%20-%20male%20circumcision%20(Engl).pdf


/7. சுன்னத் செய்வதால் வேறு மருத்துவ நன்மைகளும் உள்ளன . //

ஆண்குறியின் முந்தோலை பின்னுக்கு தள்ள முடியாதவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் எந்த நண்மையும் கிடையாது, மாறாக அவர்களுக்கு உணர்வு ரீதியான இழப்பே. ஆணுறை அணிந்த சுன்னத் செய்யப்படாத ஆணுக்கும், சுன்னத் செய்யப்பட்ட ஆணுக்கும் இருக்கும் உணர்வுகளை ஒப்பிட ஆணுறை அணிந்த ஆணுக்கே கூடுதல் உணர்வு ஏனெனில் குறி முனை வெறும் தோல் என்ற நிலையை அடைந்திருக்காது, உராய்வின் பலனை நன்கு அனுபவிக்கும்.//

மீண்டும் மருத்துவ ஆதாரம் கிடையாது.
இந்த சுட்டியை படிக்கவும்
http://en.wikipedia.org/wiki/Sexual_effects_of_circumcision


நமது நாட்டு பெண்களை அதிகளவில் தாக்கும் கர்ப்ப பை வாய் புற்றுநோயை சுன்னத் செய்வது குறைக்கிறது
http://www.thehindu.com/health/medicine-and-research/article3251406.ece
http://www.nejm.org/doi/full/10.1056/NEJMoa011688

Sadiq சொன்னது…

நீஙகள் கொடுத்த http://www.circinfo.org/Circumcision_condoms.html இந்த தளத்தில் உள்ள செய்திகள் வெறும் தனி நபர் கருத்துகளே, ஆய்வு முடிவுகள் அல்ல.

இந்த செய்தி மட்டுமே ஆய்வின் அடிப்படையில் உள்ளது.

//Kenya: Circumcised men and partners more promiscuous, less likely use condoms
NAIROBI, 23 January 2012 A small Kenyan study has found that more women than men feel HIV is a less serious threat after their male partners are circumcised. The University of Illinois Chicago School of Public Health study of 51 young women was presented in December 2011 in Addis Ababa, Ethiopia, at the 16th International Conference on AIDS and Sexually Transmitted Infections in Africa. It found that more women than men were likely to perceive HIV as a less serious threat: 51 per cent of men compared with 76 per cent of female participants. Women were also more likely to believe that condoms were ‘less necessary” after circumcision: 4 per cent of men compared with 51 per cent of female participants.

Significantly more women than men said after circumcision, they were more likely to have more than one sexual partner: (22 per cent of women compared with 2 per cent of men) and to have sex without a condom (28 per cent of women compared with 2 per cent of men.
http://www.circinfo.org/Circumcision_condoms.html//

இந்த செய்தி மட்டுமே ஆய்வின் அடிப்படையில் உள்ளது.

மூல சுட்டி இங்கே இருக்கிறது

KENYA: Male circumcision - women need counselling too

http://www.plusnews.org/Report/94703/KENYA-Male-circumcision-women-need-counselling-too

தலைப்பையே மாற்றி , எவ்வாறு செய்தியை திரித்திருக்கிறார்கள் என்று பாருங்கள்

NAIROBI, 23 January 2012 (PlusNews) - A small Kenyan study has found that more women than men feel HIV is a less serious threat after their male partners are circumcised; the study also made local news for finding that female partners of recently circumcised men found sex more enjoyable.

பெண்களுக்கும் விழிப்புணர்வு தேவை என்று தான் இந்த ஆய்வு கூறுகிறது.

இதற்குதான் நடுநிலையான தளங்களிலிருந்து ஆதாரம் தாருங்கள் என்று கூறுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// சுன்னத் செய்யப்பட்ட பின்னர் ஆணுறை உபயோகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.சுன்னத் செய்தது HIV பரவுவதை 76% குறைத்ததாக ஆய்வு முடிவு கூறுகிறது.

நான் கொடுப்பது மருத்துவ ஆய்வு முடிவுகள், நீங்கள் கொடுப்பதோ சுன்னத் செய்வதை எதிர்க்கும் ஒரு இனையதளத்தில் உள்ள செய்திகள். இரண்டிற்கும் மலையுக்கும் மடுவுற்கும் உள்ள வித்தியாசம் உள்ளது.

மருத்துவ ஆய்வுகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ???//
//

A social custom disguised as a medical issue. Beware of culturally-biased studies on circumcision posing as science. ஆப்பிரிக்காவில் சுன்னத் ஊழல்கள் என்று செய்திகள் வரும் போது இதை திரும்பப் பேசுவோம், சுன்னத் கேம்ப்கள் துவங்கி சில ஆண்டுகள் தானே ஆகிறது. அதற்கு தீர்ப்பு எழுதிவிட முடியாது.

//நான் கொடுத்த சுட்டியை மேற்கோள் காட்டும் நீங்கள் , இதை பதிவில் சேர்ப்பீர்களா என்று கேட்டேன் பதில் இல்லை.//

சுன்னத் செய்து கொள்வது முழுமையான தீர்வு என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்யாத போது நான் சுவனப்பிரியன் இல்லை அதைப் பதிவில் சேர்க்க, உலக சுகாதார நிறுவனம் இதில் ஆர்வம் காட்டுவது ஹெஐவி தாக்குதலை சிறிய அளவிலாவது குறைப்பதற்கான (முற்றிலும் தடுப்பதற்கு அல்ல) காரணம் இருந்தாலும் முறையற்ற சுன்னத் அறுவை சிகிச்சையால் கனிசமான ஆண்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக தகுந்த மருத்துவ உபகரணங்களை வழங்கி செய்யச் சொல்கிறார்கள். அதை உலக சுகாதார நிறுவனத்தின் ஆசி ஆதரவு என்று நீங்கள் எடுத்துக் கொன்டால் பிரச்சாரம் செய்தால் அதை எப்படி உண்மையான தகவலாகக் கொண்டு பதிவில் எழுத முடியும் ? ஆணுறைகளைவிட சுன்னத் பாதுகாப்பானது அல்ல, ஒரு சுன்னத் செய்ய பயன்படும் பணத்தில் 3000 ஆணுறைகள் வாங்கலாம் என்கிற மற்றொரு பரிந்துரை.

ஆப்ரிக்கா போன்ற பரம ஏழை நாடுகளுக்கு எச் ஐவி என்றால் என்னவென்றே தெரியாத சூழலில் அவர்களுக்கு அதுபற்றிய சரியான அறிவும் தெளிவுக் கொடுக்கப்படாமல் சுன்னத் செய்து கொண்டால் நோய் அண்டாது என்று சொல்வதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பான உடல் உறவு என்றால் என்னவென்றே தெரியாமல் போய் மிகுதியானவர்கள் பாதிக்கக் கூடும் என்றே மருத்துவர்கள் கதறுகிறார்கள்.

Using or promoting unnecessary surgery when much less invasive, much less costly, and much more effective methods are available (e.g., condoms) raises ethical concerns and conflicts with common sense. The cost of one circumcision in Africa can pay for 3000 condoms. Significantly, the studies recommend the use of condoms in addition to circumcision. Because of the superior effectiveness of condoms, circumcision adds little additional protection. Unlike circumcision, condoms also have the advantage of also protecting women, and there are no surgical risks and complications.

//Modeling studies suggest that male circumcision in sub-Saharan Africa could prevent 5.7 million new cases of HIV infection and 3 million deaths over 20 years.

http://www.who.int/hiv/mediacentre/news68/en/index.html
//

இந்த பரிந்துரை வெளியாகி (MARCH 2007) ஏறக் குறைய ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலோ, ஆசிய நாடுகளிலோ இதை அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியான தகவலாக எடுத்துக் கொண்டிருந்தால் சுன்னத் செய்வது பற்றி அரசு ஆணைகள் வந்திருக்கும், அப்படி எதுவும் இல்லாத நிலையில் அந்த பரிந்துரைகள் ஒரு ஆராய்ச்சி என்ற அளவில் அப்படியே தான் இருக்கிறது என்பதாலும், பெரிய நன்மைகள் எதுவும் இல்லை என்பதாலும் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்னும் போது இதை பயன் தக்கது என்று சொல்ல ஒன்றுமே இல்லை, மாறாக அதில் நடைபெறப் போகும் ஆபத்துகளைப் பற்றி தான் தற்போது பரவலாக விவாதிக்கப்படுகிறது
If circumcision results in lower condom use, the rate of HIV infections will increase. Unfortunately, with the promotion of circumcision as a "natural condom," some African men have chosen circumcision with the mistaken belief that they will not have to use condoms. In addition, circumcision with instruments that are not sterilized would also increase the transmission of HIV.
The studies did not account for cultural bias on the part of researchers. The lead researchers of the studies are known circumcision advocates. They published previous work that proposed circumcision to reduce HIV infections. Research careers, reputations, and associated funding depended on producing studies with positive results. They found what they were looking for.

http://www.circumcision.org/hiv.htm

கோவி.கண்ணன் சொன்னது…

நன்றாக்உடல் சுத்தம், ஒழுக்கமான வாழ்க்கை வாழும் ஒரு ஆண்டுக்கு சுன்னத் எப்படிப் பயனளிக்கும் என்று விளக்கம் சொல்லமுடியுமா ?

என்ற என் கேள்விக்கு

என்ன சொல்ல வருகிறீர்கள் ? ஒழுக்கமுள்ளவர்கள் உடலுறவில் ஈடுபடமாட்டார்களா ??? - என்று பதில் சொல்லி இருக்கிறீர்கள், இவ்வாறு நான் எங்கே கூறினேன் ?, ஒழுக்க முள்ள ஆண்கள் பல பெண்களை நாடமாட்டார்கள் குறிப்பாக பாலியல் தொழிலாளியை நாடமாட்டார்கள் என்று தான் பொருள், பாலியல் ஒழுக்கம் என்பதன் பொருள் தெரியாமல் நீங்கள் சுன்னத் பரிந்துரை செய்வதன் பொருள் தற்பொழுது தான் புரிகிறது :)

இறை நாடியதன் மூலம் மனைவியை மட்டுமே நாடும் மன நிலை வாய்த்த ஒருவருக்கு கொனேரியா, சிலிபஸ் மற்றும் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய் வரும் வாய்ப்புள்ளது என்று நீங்கள் நம்பினால் உங்களிடம் நான் விவாதம் செய்வது என் நேர விரயம் :)

//இப்போது திடீரென்று அமெரிக்காவில் அதிக அளவில் சுன்னத் செய்கிறார்களா ? எது சரி ???//

அமெரிக்காவில் தற்பொழுது பிறந்த குழந்தைக்கு அறுத்துப் போடும் வழக்கம் குறைந்துள்ளது என்று நான் எழுதியதை வைத்து, நான் சொல்வதாக ஏற்கனவே சுன்னத் செய்த ஆண்களே அமெரிக்காவில் இல்லை என்று நான் எங்கே எவ்வாறு குறிப்பிட்டுள்ளேன் என்பதை நீங்கள் தான் விளக்கவேண்டும், முன்னுக்கு பின் முரண் தேடி அலைந்திருக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன்

//மீண்டும் மருத்துவ ஆதாரம் கிடையாது.
இந்த சுட்டியை படிக்கவும்
http://en.wikipedia.org/wiki/Sexual_effects_of_circumcision

நமது நாட்டு பெண்களை அதிகளவில் தாக்கும் கர்ப்ப பை வாய் புற்றுநோயை சுன்னத் செய்வது குறைக்கிறது
http://www.thehindu.com/health/medicine-and-research/article3251406.ece
http://www.nejm.org/doi/full/10.1056/NEJMoa011688//
//

பல் இருந்தால் பல்வழி வரும் என்றும் பல் இல்லாவிட்டால் பல்வழியே வராது என்பதற்கும் ஆதாரம் தரவேண்டும். நீங்கள் சுட்டியுள்ளதில் சுன்னத் செய்து கொள்வதன் நன்மைகள் என்று பெரிய அளவில் எதையும் எழுதவில்லை, மாறாக பாலியல் நோய் தாக்கம் குறைவு போன்ற பாலியல் மற்றும் 1000ல் ஒருவருக்கு நடக்க வாய்ப்பிருக்கும் Penile Cancer தடுக்கும் வாய்ப்பிருக்கிறது என்று மட்டும் தான் இருக்கிறது, முன் தோலை இழப்பவர்களுக்கு எதுவெல்லாம் பாதிப்பு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் ஆணுக்கு சுன்னத் பரிந்துரைகளால் எந்த நன்மையும் இல்லை, கர்ப்பப் பை புற்று நோய்க்கு சொல்லப்படும் HIP வைரஸ் ஆண்களினால் மட்டும் தான் அதுவும் ஒழுக்கமாக நடந்து கொள்ளும் ஆணாலும் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது, மாறாக பல்வேறு பாலியல் ரீதியான நடவடிக்கையில் இருப்பவர்களின் மனைவியருக்கு கர்ப்பப் பை புற்றுநோய் வரும் வாய்ப்பு 20 விழுக்காடு அதிகம் என்று சொல்கிறார்கள், அதற்கு சுன்னத் பரிந்துரை என்றாலும் கூட அதுவும் முழுமையான மீதம் 80 விழுக்காட்டினரின் கர்ப்பைப் பை புற்றுநோய் தடுப்பில் எந்த பங்கையும் ஆற்றவில்லை

**********

* பாலியல் தொழிலாளியினரிடம் பாலியல் ரீதியான தொடர்ச்சியாக உறவு வைத்திருக்கும் ஆண்கள் குறைந்த பட்சத் தீர்வாக சுன்னத் செய்து கொள்ளலாம் ஆனாலும் அதில் எந்த வித கேரண்டியும் கிடையாது.

* சுன்னத் என்பது மதரீதியான பழக்கம், அதை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யப்படும் போது காட்டுமிராண்டி பழக்கம் என்று விமர்சனம் செய்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை

* இறை நாடியதால் மனைவியை மட்டுமே நாடும் நல்ல ஒழுக்கமான ஆணுக்கு சுன்னத் பயன் தராது மாறாக உணர்வு இழப்பே

சாதிக் இதற்கு மேல் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வதற்கு தகவல் இல்லாமல் இல்லை, திரும்ப திரும்ப பேசியதையே பேச உங்களுக்கு அலுப்பு இல்லாமல் இருக்கலாம், எனக்கு இருக்கிறது. இருந்தாலும் உங்கள் பின்னூட்டத்தை கண்டிப்பாக வெளி இடுவேன், பதில் சொல்ல எனக்கு விருப்பம் கிடையாது

கோவி.கண்ணன் சொன்னது…

Politics.

The HIV/AIDS epidemic is quite severe in several African nations. In some areas, a high percentage of the population is HIV+.

Public health organizations are under intense pressure to solve the problem.

The use of male circumcision to prevent HIV infection is akin to a drowning man grasping at a straw. Although male circumcision is likely to be proposed for political reasons, it is likely to have little effect on the overall incidence of HIV infection and may cause later problems. According to Ntozi: It is important that, while circumcision interventions are being planned, several points must be considered carefully. If the experiment fails, Africans are likely to feel abused and exploited by scientists who recommended the circumcision policy. In a region highly sensitive to previous colonial exploitation and suspicious of the biological warfare origin of the virus, failure of circumcision is likely to be a big issue. Those recommending it should know how to handle the political implications.

Opposing evidence.

Both the public and the medical community must guard against being overwhelmed by the hyperbolic promotion of male circumcision and must receive these new studies with extreme caution. There is contradictory evidence that male circumcision is not as effective as proponents claim. One study found that male circumcision had no protective effect for women and another study found that male circumcision increased risk for women. Grosskurth found more HIV infection in circumcised men. Barongo et al. found no evidence that lack of circumcision is a risk factor for HIV infection. A study from India found little difference between circumcised and non-circumcised men in the conjugal relationship. A study carried out in South Africa found that male circumcision offered only a slight protective effect. A study carried out among American naval personnel found no difference in the incidence of HIV infection between non-circumcised and circumcised men.

The future.

The development of a vaccine is the best hope for the solution to the HIV epidemic. Several teams of scientists are working to develop vaccines that will prevent infection with HIV and other vaccines that will treat those already infected. The Bill & Melinda Gates Foundation has contributed $287 million to 16 research groups for development of a vaccine.

Conclusion.

Male circumcision is a highly emotive operation that generates strong feelings in many men, especially those who have been circumcised, as have most North Americans. The trauma associated with the operation may generate a desire to repeat or reenact the trauma. 62 Other men may feel a need to justify their own circumcision by the generation of claims of health benefits. The medical literature is full of protective claims for various diseases, such as sexually transmitted disease (formerly called venereal disease), male and female cancers, and urinary tract infection. All such claims have been disproved.

http://www.drmomma.org/2010/04/doctors-reject-circumcision-as-hiv.html

Sadiq சொன்னது…

கோவி சார், கடைசி வரை உங்களுடைய கருத்துக்களுக்கு ஆதாரமாக நடுநிலையான மருத்துவ குழுவின் அறிக்கையே, ஆய்வுக்கட்டுரையோ கொடுக்க முடியவில்லை.

நீங்கள் உங்கள் சொந்த கருத்தையும் , சுன்னத் செய்வதற்கு எதிராக உள்ள சில இனையதளங்களையும் தான் ஆதாரமாக கொடுக்கிறீர்கள்.

நீங்கள் கடைசியாக கொடுத்த ஆதாரமும் இந்த வகையை சார்ந்ததே !!!

பெயரிலேயே இருக்கிறதே, DOCTORS OPPOSING CIRCUMCISION .

இவர்களிடம் நடுநிலையான செய்திகளை எதிர்பார்க்க முடியுமா ???

//சுன்னத் செய்து கொள்வது முழுமையான தீர்வு என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்யாத போது நான் சுவனப்பிரியன் இல்லை அதைப் பதிவில் சேர்க்க, //

உலக சுகாதார நிறுவனம் என்ன கூறுகிறதோ அதைத்தான் பதிவில் சேர்க்க சொன்னேன். கடைசிவரை மறுத்து விட்டீர்கள்.

உங்களுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை விட famous intact men தான் பெரிய ஆதாரமாக தெரிகிறது !!!


உங்களிடம் உரையாடியதில் நிறைய கற்றுக்கொண்டேன். நன்றி.

Abdul Rahman சொன்னது…

Sadiq நிறுத்துங்கள் உங்கள் பெத்தலை. என் பெயர் அப்துல் ரகுமான். எனக்கு 50 வயது. சிறுவயதில் எனக்கு செய்யப்பட்ட சுன்னத் என்ற காட்டுமிராண்டித்தனமான child abuse எனக்கு மனதில் இன்றளவும் தீராத வடுவாக இருந்து என் முழு வாழ்வையே நாசமாக்கி விட்டது. என் உடலின் பாகத்தை என் விருப்பம் இல்லாமல் வேற்றுவதற்கு யார் என் தகப்பனுக்கு அதிகாரத்தை தந்தது ? இந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்க கூடாது. முஸ்லீம் சமுதாயம் இதை நிறுத்தவில்லை என்றால் நான் இதற்கான சட்ட போராட்டத்தை முன்னெடுக்க போகிறேன். நான் பாதிக்க பட்டவன். மதத்தின் பேரால் எனக்கு நடந்த child abuse இப்போது 50 வயதில் பதிவு செய்ய போகிறேன். இதனால் ஒரு குழந்தையவது காப்பாற்றப்படால் அதுவே எனக்கு போதும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்