பின்பற்றுபவர்கள்

சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமையல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 டிசம்பர், 2010

பைவ் ஸ்டார் சமையல் !

தேவையான பொருட்கள் : சின்ன வங்காயம் ஒரு கிலோ, சிறிய எலுமிச்சை அளவுக்கு புளி, பழுத்த தக்காளி இரண்டு, தாளிக்க கருவடம் அல்லது வெந்தயம் சிட்டிகை அளவுக்கு. நல்ல எண்ணை இரண்டு தேக்கரணடி, கறிவேப்பிள்ளை சிறிது, கொழம்புப் பொடி அரை மேசைக்கரண்டி, ஒரு கீற்று தேங்காய், பூண்டு பற்கள் பத்து, தேவையான அளவு உப்பு

சிறிய வெங்காயத்தை ஐந்து நிமிடம் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும், கூறிய நகத்தினாலோ அல்லது பேனா கத்தியாலோ ஊறவைத்த வெங்காயத்தை உரிப்பது எளிது, கண்களில் எரிச்சலும் வராது, அதில் ஐந்து முதல் பத்து வெங்காயங்களை எடுத்து குறுக்குவாட்டில் சிறிது சிறுதாக நறுக்கிக் கொள்ளவும், தக்காளியை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

புளியையும் தேவையான அளவுக்கு வெது வெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும், விரைவில் எளிதில் கரைய வெதுவெதுப்பான தண்ணீரைப் பயன்படுத்தலாம், புளியைக் கரைத்து, திப்பிகளை நீக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்

தேங்காயையும், கொழம்புபொடியையும் சிறுதி நீர் சேர்த்து (மைபதம் வருவதற்கு சற்று முன்பாக) அரைத்து வைத்துக் கொள்ளவும்

அடுப்பில், மிதமான சூட்டில் குழம்பு சட்டியை (மண்பாண்டம் சிறப்பு) வைத்து சூடு ஏறியதும், நல்லெண்ணைய ஊற்றி காய்ந்ததும் வெந்தயத்தைப் போட்டு சிவந்ததும், வெட்டி வைத்த வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும், சிவந்ததும், மீதம் இருக்கும் உறித்த வெங்காயங்கள், பூண்டு பற்கள் அனைத்தையும் போட்டு ஐந்து நிமிடம் வதக்கவும், பிறகு புளி நீரை ஊற்றி, தேவையான அளவு உப்பைப் போட்டு, தக்காளி துண்டுகளைப் போட்டு ஒரு கொதி வரும் வரை மூடி வைக்கவும்.

பிறகு தேங்காய் - கொழம்புப் பொடி சாந்தை கொதிக்கும் குழம்பில் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும், பிறகு தீயைக்குறைத்து ஒரு பத்து நிமிடம் வைக்க குழம்பு சுண்டிய பக்குவதில் சுவையாக இருக்கும், இறக்கும் சற்று முன்பாக கறிவேப்பிள்ளையைப் போட்டு இறக்கவும். இந்தக் குழம்பில் முருங்கைக் காய் அல்லது உருளை கிழங்கு சேர்க்க அவைகள் இன்னும் சுவையாகவும் தொட்டுக் கொள்ளவும் பயனாக இருக்கும்.

பொறித்த அப்பளம், கூழ்வடகம் இந்தக் குழம்புடன் தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும், இந்தக் குழம்பை பாசுமதி பச்சை அரிசி சாதத்துடன் சாப்பிட இன்னும் சுவையான உணவாக இருக்கும்




இந்தக் குழம்பின் பெயர் வெங்காயக் குழம்பு. வெங்காயம் கிலோ 80 - 100 ரூபாய் விற்கும் போது இது பைவ் ஸ்டார் சமையல்.....காஸ்ட்லியான குழம்பு தானே. :)

பின்குறிப்பு : எழுதி இருப்பவை செயல்முறை குழம்பு (ஒரிஜினல் ரிசிப்பி) தான் சமைச்சுப் பாருங்க

9 ஆகஸ்ட், 2009

இது எங்க ஊர் அரிசி உப்புமா !

பேச்சிலர் சமையலில் எப்போதும் சிறப்பிடம் பெற்றிருப்பதில் உப்புமாவுக்கே முதல் இடம், சென்னையில் பேச்சிலராக இருந்த போது அடிக்கடி உப்புமா செய்து சாப்பிட்டத்தன் விளைவாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு உப்புமா என்றாலே உவ்வே...ஆக இருந்தது. இப்பவும் கூட வீட்டில் நீண்ட நாள் தங்கும் திட்டத்துடன் வரும் உறவினர்களை சத்தமில்லாது / சண்டை
இல்லாது அனுப்ப உப்புமா செய்து போடுவது எழுதப்படாத உத்தி :)

பெங்களூரில் காரபாத் என்ற பெயரில் கிடைக்கும் மஞ்சள் நிற உப்புமா
தேங்காய் சட்டினியுடன் உண்ட நினைவுகளிலும் என்றும் அதன் சுவையும் நினைவில் நிற்கும்.  இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என சுழற்சியில் தின்றுவிட்டு அதன் திகட்டல் காரணமாக மாறுபட்ட உணவாக ஒரு காலை / இரவு சிற்றுணவு வகையில் என்றாவது ஒரு நாள் ரவா உப்புமா அல்லது அரிசி உப்புமா செய்து சுவைப்பதுவழக்கம். கன்னடத்தில் உப்புமாவை உப்பிட்டு என்பார்கள், உவர்ப்பு என்கிற சுவைச் சொல்லின் மறுவலே உப்பு, திராவிட மொழிகள் அனைத்திலும் 'உப்பு' என்ற ஒற்றைச் சொல்லே உப்பைக் குறிக்கும் சொல்லாகும். உப்புமா என்ற சொல்வழக்கின்பொருள், மூலம் பற்றி சரியாகத் தெரியவில்லை. உப்பு சுவையை முதன்மையாகக் கொண்டு செய்யப்படுவதால் இந்த உணவுக்கு உப்புமா என்று வந்திருக்கலாம் என்பதைத் தவிர்த்து மற்றேதும் முடிவு செய்ய முடியவில்லை. உப்புமாவில் சேர்க்கப்படும் பொருள்களுக்கு ஏற்ற அதன் பெயர்களும் மாறுகிறது, காய்கறிகள் சேர்த்து செய்தால் அது கிச்சடி என்றும் சொல்லப்படுகிறது


அரிசி உப்புமா செய்வது எப்படி ?

தேவையான பொருள்கள்
* பச்சை அரிசி 1/2 லிட்டர்
* பெரிய வெங்காயம் ஒன்று

* தக்காளி பெரிதாக ஒன்று

* இஞ்சி சிறிதளவு

* இரண்டு பச்சை மிளகாய்
* கறிவேப்பில்லை சிறிதளவு

* வெண்ணை அல்லது சூரியகாந்தி எண்ணை சிறிதளவு

* கடுகு மற்றும் பெரும்சீரகம் சிறிதளவு

* இரண்டு துண்டு பட்டை அல்லது கிராம்பு மற்றும் பிரிஞ்சி இலை இரண்டு

* தோல் நீக்கிய உருளை கிழங்கு ஒன்று

* சிறிய அளவு கேரட் ஒன்று

* இரண்டரை லிட்டர் தண்ணீர்

* தேவையான அளவு உப்பு

* தேவையானல் கடலைப் பருப்பு சிறிதளவு / அல்லது ஊரவைத்த அல்லது பச்சை பட்டாணி

* நிறம் தேவை என்றால் தேவையான அளவு மஞ்சள் பொடி

பச்சரிசியை5 நிமிடம் வாணலியில் இட்டு நன்றாக வறுத்து எடுத்து தனியாக வைக்க வேண்டும், வெங்காயத்தையும் பொடிப் பொடியாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும், தக்காளியை சிறு சிறு துண்டங்களாக வெட்டிக் கொண்டு, இஞ்சியைபொடிதாக வெட்டிக் கொள்ள வேண்டும். உருளை கிழங்கையும், கேரட்டையும் எடுத்து உண்பதற்கு ஏற்ற சிறிய அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

வாணலி சூடாகியதும் எண்ணையை ஊற்றி நன்றாக சூடானதும் கடுகு,பெருஞ்சீரகம் போட்டு வெடித்தவுடன், கடலைப்பருப்பு, பட்டை மற்றும் பிரிஞ்சிஇலைகளை சேர்த்து வதக்கிவிட்டு கருகும் முன் வெட்டி வைத்த இஞ்சி பச்சை மிளகாயை போட்டு சிறிது நேரம் வதக்கவும். பிறகு கரிவேப்பில்லையுடன், வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கிவிட்டு, தக்காளி மற்றும் உருளைகிழங்கு, கேரட் துண்டுகளைப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். அதன் பிறகு இரண்டரை லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு வறுத்து வைத்திருந்த பச்சை அரிசியை அதில் கொட்டி கிளறிவிட்டு, உப்பைச் சேர்த்து, 8 - 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். அதன் பிறகு திறந்து நன்றாக கிளறி, தண்ணீர் வற்றி இருந்தால் 1/4 லிட்டர் தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டுவிட்டு, மிதமான வெப்பத்தில் அடுத்து 5 நிமிடம் வைத்து விட்டு இடையிடையே கிளறிவிட வேண்டும், அரிசி நன்றாக வெந்து தனித்தனியாக பிரிந்து இருக்கும் போது இரண்டு நிமிடம் அப்படியே மூடி வைத்துவிட்டு அதன் பிறகு எடுத்து பரிமாறலாம்.

மேலே சொன்ன பொருள்களில் அளவு மூவருக்கு தேவையான அளவாகும். இந்த அரிசி உப்புமாவுடன், தக்காளிச் சட்டினி அல்லது (கார) அப்பளம் சேர்த்து உண்ண திகட்டமலும் சுவை கூடுதலாகவும் இருக்கும்.







மின் அஞ்சல் வழியாக போட்ட பதிவு, பக்கம் ஒழுங்கில்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்