பின்பற்றுபவர்கள்

செம்மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செம்மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 ஜூன், 2010

350 கோடி செலவில் இல்லவிழா !

தமிழர் நலனை புறக்கணிக்கும் மைய அரசு நூற்றாண்டுகள் (காலம்) கடந்து செம்மொழி என்னும் தகுதியை தமிழுக்கு கொடுத்ததால் தமிழ் தற்பொழுது தான் தாவணி உடுத்திக் கொண்டது போலவும், அதனால் "மஞ்சள்" நீராட்டுவிழா என்பதாக முதன் முதலில் தமிழுக்காக என்பதாக 18 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் முதன் முறையாக மாநாடு நடத்திய கருணாநிதி அதை செம்மொழி மாநாடு என்று பெயரிட்டு நடத்தினார். முதல் செம்மொழி மாநாடு என்னும் பெயர் அரசியலில் இதுவரை தமிழுக்காக எந்த ஒரு நிகழ்வும் நடந்ததே இல்லை என்கிற தோற்றம் ஏற்படுத்தினார். தமிழ்மொழி மாநாடு நடப்பது முதன் முறையன்று. இதற்கு முன்பு செம்மொழி மாநாடு நடத்திய எம்ஜிஆர் மற்றும் ஜெவின் பெயர்கள் மாநாட்டில் திட்டுவதற்குக் கூட பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மாநாட்டில் கவியரங்கம் என்பதாக முழுக்க முழுக்க கருணாநிதியின் புகழ்பாடினார்கள் அண்டிப்பிழைக்கும் கவிஞர்களும், கவிதாயினிகளும், உச்சகட்டமாக கருணாநிதியின் உமிழ்நீரும் தமிழ் நீர் என்று செம்மொழி மீது பச்சையாக மஞ்சள் எச்சிலை உமிழ்ந்தார் தமிழச்சி தங்கபாண்டியன் என்கிற ஒரு ஒருகவிதாயினி. ஏற்கனவே கவிதைவடிவில் இருக்கும் புராண புளுகுகளுக்கு புதுக்கவிதை புனுகு பூசி உலாவிட்ட வாலி ஒருபடி மேலே போய் கருணாநிதியை வாழ்த்துவது ஜெவைச் சாடுவதாது தான் என்பதாக புரிந்து கொண்டு "மாமிகள், சாமிகள் என்று, அறிவாலயம்" என்றெல்லாம் எளுதி கூடவே பார்பனர்களையும் வம்பிக்கிலுத்தார், வாலி அக்கிரகாரத்து அக்மார்க் என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை, இருந்தாலும் பொற்கிழி பெரும் ஆர்வக் கோளாரில் வாய்கிழித்துப் பாடுவதாக நினைத்து இவர் பாடிய ஆசனவாய்கவிதைகள் அருவெருப்பானவையே.

முதல்வர் இல்லத்தில் இருந்து மொத்தம் 84 பேர் கலந்து கொண்டார்களாம். இது இல்லவிழா இல்லை என்றும் யாரும் உதட்டுச் சாயம் கூடப் பூசி சாயம் ஏற்படுத்த வேண்டாம் என்று முதல்வர் சொன்னதால் கட்சி பேனர்கள் அகற்றப்பட்டதாம், ஆறுமாதங்களாக நடக்கும் ஏற்பாடு, திமுக அரசின் ஏற்பாடு இதில் உடன்பிறப்புகள் எந்த அளவுக்கு வரவேற்புகாட்டுவார்கள் என்பது கூட ஒரு முதல்வரால் யூகிக்க முடியாமல் போனதும் அதை வைக்கும் முன்பே தவிர்க்கச் சொல்ல தடுக்கச் சொல்ல ஒரு முதல்வரால் முடியாமல் போனதை அனைவரும் நம்பித்தான் ஆகவேண்டும். உடன்பிறப்புகள் பேனர் வைத்தப் பிறகு அகற்றச் சொன்னது பெருந்தன்மை என்றெல்லாம் கூட சில அப்பாவிகள் எழுதுகிறார்கள், நினைக்கிறார்கள். வைக்கச் சொல்லி எடுக்கச் சொல்லுவது பெரும்தன்மையாம்.


மாநாட்டில் நடுவில் திரு சுதர்சனம் மறைவு. அந்நிகழ்வை 'இதயத்தை தாக்கிய இடி' என்று குறிப்பிட்டு இருக்கிறார் கருணாநிதி. இதற்கும் சேர்த்து 'இடியையும் இதயத்தில் தாங்கும் எங்கள் ஒரே தலைவன்' என்று எவரேனும் அடுத்து பாராட்டுவிழா ஏற்பாடு செய்தாலும் வியக்க ஒன்றுமில்லை.

மாநாட்டை பிடிக்காதவர்கள் விமர்சிக்க இதை செம்மொழி மாநாடு இல்லை என்று உடன்பிறப்புகளைப் போல் சொல்லிவிட்டு போனால் யார் விமர்சிக்கப் போகிறார்கள் ? அதுவும் அரசு வரிப்பணத்தில் நடக்காவிட்டால் யார் விமர்சனம் செய்வார்கள்? பொதுமக்கள் வரிப்பணத்தில் இப்படி ஒரு கேலிக்கை நடந்ததை விமர்சனம் செய்வது வெறும் காழ்புணர்வு அன்று.

இங்கு, அங்கு எநத ஒரு அசாதராண சூழலும் இல்லை, கிரிக்கெட் நடக்கிறது பாருங்கள் என்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நடுவில் கிரிக்கெட் நடத்திக் காட்டியாது இலங்கை, அதற்கு வீரர்களை அனுப்பி ஆசிர்வதிதது இந்தியா, அதன் தொடர்ச்சியாக தமிழர்கள் மத்தியில் துயர் இல்லை, இதோ அவர்கள் கொண்டாடும் மனநிலையில் தான் இருக்கிறார்கள், அப்படி இல்லை என்றால் மொழிக்கு மகுடம் சூட்ட அவர்களால் இயலுமா ? இராஜபக்சே கூப்பிட்டு சுட்டிக்காட்ட உலகினருக்கு இன்னொரு நிகழ்வு நடந்து முடிந்த கேலி(க்கை) செம்மொழி மாநாடு.......வெற்றி வெற்றி........மாபெரும் வெற்றி!

படம் நன்றி : ஜூவி

நெஞ்சு பொறுக்குதில்லையே - செம்மொழி (திரு வந்தியத்தேவன்)

26 ஜூன், 2010

சந்துல "சிந்து" !

ஒரு இனத்தை அழிப்பெதென்பது இனத்தின் தொண்மைகளை அழித்துவிட முயற்சிப்பது, பிறகு அந்த இனத்தினை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டால் அந்த இனத்தையே அழித்துவிடலாம், அமெரிக்காவில் வேட்டையாடி கொல்லப்பட்ட செவ்விந்தியர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடிகளை வெள்ளை இன ஐரோப்பியர்கள் அழித்துவிட்டு அவ்விடங்களை தங்கள் ஆளுமைக்குக் கொண்டு வந்தார்கள். இருந்தாலும் வரலாறுகள் மண்ணில் மறைத்துவிட்டால் மறையாது துளிர்த்தெழும் விதைகளைக் கொண்டிருக்கிறது என்பதை இன ஒழிப்பாளர்கள் மறந்துவிடலாகாது என்பது போல் இன ஒழிப்பின் கதைகள் நூற்றாண்டுகள் கடந்து விழிப்படைகிறது. வரலாறுகளை திரிப்பதும் மாற்றி எழுதுவதும் தற்காலிகமேயன்றி அவை உறுதியான ஒன்று அல்ல. கட்டுமானங்கள் அனைத்துமே விரிசல் ஏற்பட்டு என்றோ ஒரு நாள் உதிரும் என்பது விதி.

பழந்தமிழர் பண்பாட்டுச் சின்னங்களையும், அரிய நூல்களைக் கொண்ட மாபெரும் களஞ்சியமாக திகழ்ந்திருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதை தமிழர்கள் குறிப்பாக இலங்கை வாழ்தமிழர்கள் மறக்க் கூடியதே அல்ல. ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் நூலகம் இலங்கையில் தமிழர்களின் ஆயிரம் ஆண்டு வேர்களை தாங்கி நின்று கொண்டிருந்தது, அதை அழிப்பதன் முலம் இலங்கையில் தமிழர்கள் நூற்றாண்டுக்கு முன்பு பிழைப்புக்காக வந்த மலையகத் தமிழர்களாக வரலாறுகளில் காட்டிவிடலாம் என்று முனைந்தே அந்த யாழ்நூலகத்தை எரித்து மகிழ்ந்தனர் சிங்களர்கள். தற்போது எரிப்பு குறித்த மன்னிப்புகளை இலங்கை அமைச்சர் ஒருவர் கேட்டு இருக்கிறார். மன்னிப்புகள் மனக்காயங்களை அகற்றிவிடாது என்பது தெரிந்தவை தான் என்றாலும் குற்றங்களை ஒப்புக்கொள்வதை வரலாறுகள் பதிந்து கொள்கிறது என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழர்களின் தொண்மைகளை முற்றிலும் அழித்துவிட முடியாது என்பதை கடல்கோள்களுக்கே புரிய வைத்து வாழ்கிறது தமிழ். செம்மொழிகள் என்று அடையாளம் கூறப்பட்டவை எதுவுமே வாழும் மொழியாக இல்லாத காலகட்டத்தில் வாழும் மொழியாக குன்றா இளமையுடன் திகழும் தமிழை ஒரே யாழ் நூலகம் மட்டும் தாங்கி இருந்ததாக நினைத்த சிங்களர்களின் சிறுமதியை எள்ளி நகையாடும் நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன.

செம்மொழி மாநாடும், அதை நடத்துபவர்களின் தன்னலமும் கேள்விக்கும் கேலிக்கும் உரியது என்பதாக எதிர்ப்புகளை பல்வேறு தரப்பினரும் பதிய வைத்திருக்கின்றனர். செம்மொழி மாநாடு இச்சூழலில் தேவையற்றது என்பதை மறுப்பதற்கே இல்லை. இருந்த போதினும் செம்மொழி மாநாட்டு சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் மற்றும் அதன் பின்னனி சின்னங்களில் மிக அழகாக தமிழர் தொண்மங்கள் பதிய வைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை. கடல்கோள்களால் கொள்ளப்பட்ட தமிழகத்தை உணர்த்தும் வண்ணம் கடற்கோள் அலைகளின் பின்னனியில் எழுச்சி சின்னமாக திருவள்ளுவர் சிலை, காலம் கடந்து தமிழ் வாழ்ந்து வருவதை உணர்த்துவதாகவும், சிந்து சமவெளி சின்னங்கள் சுற்றிலும் அமைத்து தமிழ் மொழி உலக நாகரிங்களுக்கு முற்பட்டவை அல்லது நாகரிகங்களின் துவக்கம் என்பதாக சிந்து சமவெளி எழுத்துகள் மற்றும் சின்னங்களுடன் அமைக்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதே ஆகும்.

சிந்து சமவெளிக்கு தமிழர்கள் உரிமை கொண்டாடலாமா ? என்னும் கேள்வியை புறந்தள்ளும் வண்ணம் அண்மையில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த தமிழர் தொண்மங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் காலத்தை ஒட்டியது மட்டுமின்றி சிந்துவெளியில் கிடைத்த அதே எழுத்துருக்கள் கிடைத்தது அனைவரையும் வியப்ப அடைய வைத்ததுடன் சிந்துசமவெளி நாகரிகம் முன்னாள் திராவிடநாகரீகம் என்பதை தெளிவுபடுத்தாவிட்டாலும் இரண்டிற்குமிடையேயான தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டு தமிழர் நிலம் தமிழ்நாடு சிந்துவெளி காலத்தை ஒட்டிய வரலாற்று சிறப்பு மிக்கது என்பதுடன் சிந்துவெளி வரை பரவியிருந்தது என்பதை ஏற்கும் வண்ணம் அமைந்தது.

சிந்துசமவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டவரின் மிகவும் அறியப்பட்டவர்கள் இருவர், அஸ்கோ பர்போலா மற்றும் ஐராவதம் மகாதேவன் இருவருமே கிட்டதட்ட சிந்து சமவெளி நாகரிகம் திராவிடச் சார்புடைய நாகரிகம் அல்லது திராவிட நாகரீகம் என்பதை நம்புவர்கள், சிந்துசமவெளியை அழித்தது ஆரிய படையெடுப்பா என்பதில் தான் இருவருக்கும் மாறுபட்ட கருத்துகள். ஆதிச்ச நல்லூர் தொல்பொருள்களுக்கு பிறகு சிந்துவெளி நாகரீகம் என்பது திராவிட நாகரீகமே என்பதில் உறுதியாக நிற்கின்றனர். இவர்கள் இருவரையும் உயர்வுபடுத்தும் வண்ணம் இருவருக்கும் செம்மொழி மாநாட்டில் விருதுகள் வழங்கப்பட்டது. சிந்துசமவெளி ஆராய்ச்சியில் வாழ்நாளை அற்பணித்த இருவரும் செம்மொழி மாநாட்டுச் சின்னத்தில் சிந்துவெளி சின்னம் இருப்பதைப் பற்றி எந்த ஒரு எதிர்கருத்தும் கூறவில்லை. மாறாக அவர்களின் ஒப்புதலில் தான் சின்னமே உருவாகப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மொழி, தமிழர்கள், தமிழின் தொண்மை என்பவை தொல்காப்பியத்தை ஒட்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதை தாண்டி, சிந்துவெளி ஆராய்ச்சிகளின் முடிவில் ஐந்தாயிரம் ஆண்டுகளைக் கடந்து எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதை மாநாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இவ்விரு ஆராய்சியாளர்களும் மிக முதன்மையான பங்காற்றி இருக்கிறார்கள் இவர்கள் இருவருக்கும் தமிழர்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள்.

******

இவையெல்லாம் அறிந்தே தாமும் தமிழர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், சிந்துவெளி சின்னம் மாநாட்டின் சின்னத்தில் செதுக்கி இருப்பதை மறைமுகமாக கண்டனம் செய்வதுடன், அவ்விரு ஆராய்ச்சியாளர்கள் மீதும் அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள், அதற்குகாரணமாக அவர்கள் கூறும் சப்பைக்காரணம் தமிழின் தொண்மையும் தொடர்ச்சியும் ஆரிய நாகரிகம் எனப்படும் வேத நாகரிகத்துடன் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவையாம் அதற்கு ஆதாரமாக குறுந்தொகைப் பாடலைக் கூறி இமயமும் தென்குமரியும் பற்றி பாடல்களில் வருகிறது அதையெல்லாம் மாநாட்டில் புறக்கணித்துள்ளார்கள் என்றும் கூறி இருக்கின்றனர்.

கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்

சிந்துவெளி தற்பொழுது பாகிஸ்தானில் இருக்கிறது, அதுவரை சென்றுவிட்ட அடையாளத்தை இமயம் வரை மட்டுமே குறுக்கி இருந்திருந்தால் போதும் என்பதாகவும் அவை மறைகப்பட்டதாகவும் ஓலம் இடுகிறார்கள். ஐராவதம் மகாதேவன் ஒரு பார்பனர், நேர்மையாளர், சிந்துசமவெளி நாகரிகம் ஆரியத்தொடர்புடையது என்றும் கண்டுபிடிக்கப்பட்ட காளை சின்னத்தை குதிரையாக காட்டச் சொன்ன வட ஆரியர்களின் கோரிக்கைகளை புறம் தள்ளியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது, ஏனெனில் சிந்துவெளியில் குதிரைகள் கிடையாது. ஆரியர்களின் படையெடுப்புகளுக்கு பிறகே குதிரைகள் இந்தியாவிற்குள் வந்தன.

தமிழ் இந்துக்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் வட ஆரியர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி இருப்பதுடன் தமிழின் தொண்மை போற்றும் சிந்துசமவெளி நாகரிகம் பற்றி தவறான தகவல்களை தொடர்ந்து எழுதிவருவதுடன், இன்று மாநாட்டில் அச்சின்னத்தை அமைத்திருப்பதையும் கடுமையாக எதிர்க்கிறார்கள். தமிழுக்கு எதிரிகள் தரணியில் இல்லை, அவன் தமிழருள் ஒருவனாகவே இருக்கிறான்.

22 ஜூன், 2010

செம்மொழி மாநாடும் புலிகள் ஆதரவும் !

நடைபெறும் செம்மொழி மாநாட்டிற்கு பரவலான எதிர்ப்பும், எதிர்ப்பு ஏன் என்பது பலரும் அறிந்ததே. இருந்தாலும் சுருக்கமாக சிலவற்றைச் சொல்கிறேன்.

* தமிழ் என்பது நிலம் சார்ந்த மொழி என்பதை கடந்து.. கடந்த நூற்றாண்டுகள் பல ஆகிவிட்டது, எனவே தமிழ் மொழி சார்ந்த பொதுவானவற்றைப் பற்றிய நிகழ்வுகள் பல்வேறு நிலங்களில் வசிக்கும் தமிழர்களிடம் பரிந்துரை மற்றும் அளவளவல்கள் கேட்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாடு அரசு நடத்தும் செம்மொழி மாநாடு என்று இருந்திருக்க வேண்டும், உலக செம்மொழி என்று சொல்லும் வண்ணம் பல்வேறு தமிழர் தரப்புகளிடம் கலந்து பேசவில்லை

* முதன்மையாக இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழர்கள் முற்றிலும் அவர்களது இடத்தில் மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில், எந்த ஒரு தமிழ் சார்ந்த அமைப்பும் தற்போதைய சூழலில் மகிழ்ச்சியாக இல்லை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அல்லது ஆண்டுகளாக தொடரும் நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்திவருகிறார்கள், இத்தகைய சூழலில் ஒட்டுமொத்த உலக தமிழர்களின் அடையாளமான மொழிக் குறித்தான மாநாட்டை நடத்துவது என்பது ஏற்புடையது அல்ல

* தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தமிழ் முன்னிலைப்படுத்தப்பட வில்லை (தமிழை வழக்கின் மொழியாகச் சொல்லி நடத்தும் போராட்டம் குறிப்பிடத் தக்கது)

இது பற்றி துளி கூடக் கவலைப்படாமல் தமிழக அரசால் தன்விருப்ப உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவதை மொழி மற்றும் தமிழர் நலன் சார்ந்தவர்கள், பற்றாளர்கள் புறக்கணிக்கிறார்கள்.

********

விடுதலைப் புலிகளின் மீதான தடை இந்தியாவில் தொடர்ந்துவருவது அனைவரும் அறிந்ததே, தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவே ஒப்புதல் அளிப்பவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என்று அண்மையில் கூட நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. நேரிடையாக ஆதரவு தெரிவிப்பவர் மீதான சட்டம் பாயும் என்பது கூட புரிந்து கொள்ளக் கூடியது தான், ஆனால் மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் பாயும் என்று சொல்லுவது மிகவும் ஆபத்தானது, இதன் மூலம் ஐயத்தின் பலனை ஒருவருக்கு அளித்து இவர் விடுதலைப் புலிகளுக்கு உதவ முயன்றார் என்ற குற்றச்சாட்டில் உள்ளே வைக்க முடியும், இதற்கெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர் தானே அல்லது தன்னார்வளர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் தான் ஒருவர் தம்மை குற்றவாளி இல்லை என்று கூறிவிட்டு வெளியே வரமுடியும், வெறொரு குண்டுவெடிப்பு வழக்கில் குனங்குடி மஸ்தான் 15 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு குற்றமற்றவர் என்பதாக வெளியே வந்திருக்கிறார் என்பதை நோக்குக. இடையில் குற்றம் சாட்டப்பட்டவர் இழப்பது எவ்வளவோ. சொல்ல வந்த தகவல் விடுதலைப் புலிகளை எதிர்ப்பது ஆதரவு கொடுப்பது பற்றியது அல்ல.

செம்மொழி மாநாட்டுக்கு விடுதலைப் புலிகள் ஆதரவு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள், மகிழ்ச்சி அளிக்கிறது என்பதாக மாநாட்டை நடத்தும் முதல்வர் அறிவிப்பது, மாநாட்டுக்கு பல்வேறு தரப்பில் இருக்கும் எதிர்பை மறைமுகமாக ஒப்புக் கொள்வதாகும். இல்லை என்றால் ஒரு முதல்வரால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கடிதம் மாநாட்டை வாழ்த்துகிறது என்று வெளிப்படையாகக் கூறிக் கொள்ள முடியுமா ? மாநாட்டை விடுதலைப் புலிகள் தான் எதிர்க்கிறார் என்கிற தோற்றம் இருந்தது போலவும் தற்பொழுது அவர்களே கடிதம் அனுப்பி ஆசிர்வதித்து இருக்கிறார்கள் என்பது போலக் கூறுவது எதிர்ப்புகளை மறைக்கும் ஒரு உத்தி மட்டுமே. இது தவிர்த்து விடுதலைப் புலிகள் கடிதம் என்றால் காங்கிரஸ் முகம் சுளிக்கும் என்று தெரிந்தே... அல்லது கவலைப்படாமல் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் கடிதத்தை முதல்வர் குறிப்பிடக் காரணம் வேறு என்னவாக இருக்கும். தூக்கு தண்டனை அல்லது மரண தண்டனைக் கூடாது என்று மனித உரிமை போராளிகள் கூறும் போது காசாப்பை தூக்கிலிடச் சொல்லி காஷ்மீர் தீவிரவாதிகள் இந்திய அரசுக்கு பாராட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் என்று மன்மோகன் சிங் அறிவித்தார் என்று சொன்னால் மனித உரிமை போராட்டக்காரர்கள் அதைச் சரி என்று சொல்லிவிடுவார்களா ?

மாநாட்டுக்கு பலமான எதிர்ப்புகள் இருக்கிறது என்பது உண்மை ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்கிறது என்பதாக 10,000 காவலர்கள் பாதுகாப்பு வளையம்.......அமைத்து மாநாடு நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளே ஆதரவு அளித்துவிட்டார்களே, பிறகு வேறு யாரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடப் போகிறது ? மாநாட்டை எதிர்பவர்கள் அனைவரும் தமிழ் தீவிரவாதிகளா ? இல்லை ஆயுதம் ஏந்தி போராடுபவர்களா ? 10,000 காவலர்கள் வந்தால் தான் மாநாடு நடத்த முடியும் என்கிற அளவில் எதிர்ப்பு இருக்கிறது என்பதாக இம்மாநாட்டை முதல்வர் வரலாற்றில் பதிய வைக்கிறாரா ? அப்படி என்றாலும் கூட இவ்வளவு எதிர்ப்பையும், எதிர்பாளர்களின் உணர்வுகளையும் முதல்வர் புறக்கணித்து, கண்டு கொள்ளாது தன் முடிவில் பிடிவாதமாக இருந்தார் என்பதை வரலாறு கண்டு கொள்ளாமல் விட்டுவிடுமா ? அல்லது உறுதியான முதல்வர் சொன்னபடி நடத்தி முடித்தார் என்று வரலாறு பதிவை தம் முதுகில் ஏற்றிக் கொள்ளுமா ?



செம்மொழி மாநாடு காணும் மங்கள நாயகன், மஞ்சள் நாயகன், முதல்வர் கருணாநிதி வாழ்க, அவர் தம் அழியா புகழ் வாழ்க !

10 ஜூன், 2010

செம்மொழி மாநாடு - எழவு வீட்டில் கறிவிருந்து !

தமிழ்மொழி மாநாடுகள் நெடிய வரலாறுகள் கொண்டது, அதன் துவக்கம் சங்காலத்திற்கு முன்பே துவங்கினாலும் சங்காலங்கள் வரலாற்றில் பதியப்பட்டவை. முதல் சங்க காலம் என்பவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பானவை.

இதோ இன்று இவரால் தான் தமிழ் பெருமைப் படப் போகிறது என்பது போன்ற தடபுடலான ஆடம்பரங்களுடன், வரலாறுகளை எழுதிக்கொள்ளும் நிகழ்வாக கோவையில் செம்மொழி மாநாடு துவங்குகிறதாம். தமிழ்மொழி என்பது நிலம் சார்ந்த மொழி என்பது தாண்டி நாடுகளைக் கடந்து அம்மொழி பேசும் மக்கள் வாழும் நிலையில் தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளை நிலப்பரப்புக்குள் அடக்கிவிடும் நிகழ்வுகள் என்னாளும் தமிழ் வளர்ச்சிக்கு பயன் தராது.

தமிழ் புத்தாண்டு துவக்கம் தை 1 ஆக மாற்றியதில் என் போன்ற பலருக்கு உடன்பாடு என்றாலும் கூட பிற நாடுகளில் வசிக்கும் தமிழர் அமைப்புகளிடம் இதுபற்றிய அளவளாவல்களைப் பெற்றபிறகாவது அறிவித்திருக்கலாம். பெரியண்ணன் வழிகாட்டி என்பது போல் ஓர் இரவில் இதுபற்றிய முடிவை அறிவித்து தமிழ் புத்தாண்டு நாளை மாற்றியது தமிழக அரசு, அதன் தொடர்ச்சியாக இவை இராண்டுகளுக்கு மேலாக பல்வேறு தரப்பினராலும் வெளிநாடு வாழும், புலம் பெயர்ந்த தமிழர்களாலும், பிற நாட்டுத் தமிழர்களாலும் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சிங்கையில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு என்பதாகத் தான் கொண்டாடிவருகிறார்கள், ஒருவேளை சிங்கைத் தமிழ் அமைப்புகளிடம் இதுபற்றிய பரிந்துரைகள் கேட்டு இருந்தால் தமிழ் புத்தாண்டு தேதிமாற்றம் முழுதாக ஏற்றுக் கொள்ளப்படும் நிலையோ அல்லது புரிந்து கொள்ளக் கூடிய நிலையோ ஏற்பட்டிருக்கும்.

தமிழுக்கு செம்மொழி தகுதி என்னவோ ஒரே இரவில் காசு கொடுத்து வாங்கியதைப் போன்று அண்டைமாநில மொழிகள் எந்த வித போராட்டங்களும் நடத்தாமல் தமிழுக்கு கொடுத்தீர்களே என்பது போல் கேட்டுப் பெற்றுக் கொண்ட சூழலில் செம்மொழியின் சிறப்புகள் என்பது தமிழுக்கான தனிச்சிறப்புகள் மட்டுமே இல்லை என்பது போன்ற தவறான புரிதல்களை ஏற்படுத்திவிட்டார்கள். தமிழுக்கான செம்மொழி தகுதி பெரும் கோரிக்கைகள் 100 ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது, இவ்வகையான போராட்டங்கள் எதையும் செய்யாமலேயே அண்மையில் கன்னட மொழியும் அதைத் தொடர்ந்து தெலுங்கும் செம்மொழி தகுதியை பெற்றுக் கொண்டன. அவையும் திராவிட மொழிக் குடும்பம் என்றாலும் கூட அவர்கள் மொழிகளுக்கு செம்மொழி தகுதி இருந்தாலும் கூட அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ள அடிப்படைக்காரணமே தமிழர்கள் தமிழுக்காக அந்தத் தகுதியைப் பெற்றுக்கொண்டது தான். அவ்வகையில் அம்மொழிபேசுபவர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கடமை பட்டவர்கள், ஆனால் நடைமுறையில் தமிழனுக்கும் தமிழுக்கும் ஏச்சுகளே மிஞ்சுகிறது என்பது கசப்பான உண்மை. இவை வேறு அரசியல்.

இன்றைக்கு ஏற்பாடு செய்திருக்கும் செம்மொழி மாநாடுகள் என் பார்வையில் ஒரு பெரிய இல்லத்தின் பெற்ற குழந்தைகளில் சிலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு, குற்றுயுரும் குலை உயிருமாக இருக்க பெற்றோர் அறுபதாம் திருமணத்தை ஊர் கூட்டி கோலாகலமாக நடத்துவது போன்றிருக்கிறது.

இலங்கையின் இன அழிப்புப் போர் கிட்டதட்ட முடிவுக்கு வந்த நிலையில் இன்னும் ஒரு லட்சத்திற்கு மிகுதியான தமிழர்கள் வதை முகாம்களில் தங்கி இருப்பது தொடர்ந்து வரும் வேளையில் இவர்களையும் சேர்த்து இவர்களுக்கும் தலைமை அதாவது தமிழ் இன தலைமை என்று சொல்லிக் கொள்ளும் முதாட்டி ஒருத்தி தண்டட்டிப் போட்டு மினுக்கிக் கொண்டு என்னைப் பார் என் அழகைப் பார் அல்லது பல்லுபோன முதியவர் ஊன்று கோலுக்கு தங்கக் கைப்பிடிப் போட்டிருக்கிறேன் பாருங்கள், என்னோடு சேர்ந்து பெருமைபடுங்கள், கொண்டாடுங்கள் என்றால் நிலைமை தெரிந்தவர்கள் வேதனை படமாட்டார்களா ?

உலகத்திலேயே 'உன் நாட்டில் உன்னால் மனித அவலம், மக்களை காப்பாற்ற முயற்சி செய்' என்று இன்னொரு நாட்டில் இருந்து வேண்டுகோள் வைக்கும் போது அதை சிரித்துக் கொண்டே செய்துவருவதாகவும், செய்யப் போவதாகவும் சொல்லும் ஒரே அதிபர் இராஜபக்சே தான். அந்த அளவுக்கு தன்னாட்டு மக்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர் என்பதை அண்மையில் சிங்கப்பூர் முன்னால் பிரதமர் வரை விமர்சனம் செய்துள்ளார்கள், ஹிட்லரை ஒத்த அந்த அதிபருக்கு இரத்த(ன) கம்பள வரவேற்பு வழங்குபவர்களைத் தான் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்து சிறப்பு செய்யுமாறு தமிழக அரசால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

தமிழரின் ஒட்டுமொத்த அடையாளம் தாங்கள் தான் என்பதாக காட்டும் இந்த மாநாட்டு முயற்சியில் தமிழ் எழுத்துகளை மாற்றப் போகும் கூத்துகள் கூட நடைபெறப் போவதாக தமிழார்வளர்கள் பம்மியபடியும், விம்மியபடியும் முனுகிக் கொண்டி இருக்கிறார்கள்.

இந்த வேளையில் செம்மொழி மாநாடு (இவ்வளவு ஆடம்பரமாக!!!) நடந்தால், தமிழர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள், தமிழர்கள் கொண்டாடும் மனநிலையில் இருக்கிறார்கள் என்பதாக உலகினரால் புரிந்து கொள்ளப்படும் வகையில், செம்மொழி மாநாடு என்ற பெயரில் தமிழர்களின் மீதான படுகொலையை முற்றிலும் வெளி உலகுக்கு மறைக்கும் ஒரு செயலை, தமிழ் தாயின் தொடர் அழுகுரலை நிறுத்த அல்லது மறக்கக் கொடுக்கப்படும் மதுவாக இம்மாநாடு நடைபெறுவாதாக எண்ணும் நான் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்.

24 மே, 2010

பொட்டிக்கடைகாரர்கள் மூலம் செம்மொழி வளர்க்கும் அரசு !

எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மொழிகளில் பெயர்பலகைகள் இடம் பெற்றிருக்கிறது, ஒருங்கிணைந்த இந்தியா என்று காட்டுவதற்கு நடுவன் அரசின் அனைத்து அலுவலங்களிலும் இந்தி பெயர் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் என்றுமே தொடரும் பிறமொழிவிருப்பத்தால் ஆங்கிலப் பெயர் பலகைகளும், பிறமாநில பெயர் பலகைகளும் இடம் பெற்றிருக்கிறது, தமிழக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் போது அங்குள்ள கழிவரைகளில் கூட மலையாள எழுத்துக்களைப் பார்க்கலாம், ஆனால் கேரளா உள்ளிட்ட பிறமாநிலங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கூட தமிழில் பெயர் பலகைகள் பார்பது அரிது. தமிழர்களிடம் இருக்கும் பெரிய குறைபாடே தமிழை முன்னிறுத்த வேண்டுமென்பதில் காட்டும் மந்த போக்கு (அலட்சியம்). இவை சரி செய்யப்பட வேண்டும், தமிழர்களுக்கு தம் மொழியும் பெருமைக்குரியதே என்று காட்ட சிறுகடைகள், பெரும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து விற்பனை நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைப்பது வரவேற்கத்தக்கது.

சென்றவாரம் ஒரு நாள் தமிழ் உணவகம் ஒன்றில் 'தென்னிந்திய சாப்பாடு ஒண்ணு கொடுங்க' என்று நான் தூய தமிழில் கேட்டு கல்லாவில் இருந்தவரை விழிக்க வைத்தேன். அதன் பிறகு 'சவுத் இந்தியன் மீல்ஸ்' என்றதும் அவருக்கு புரிந்தது. 'ச்சே என்னது தமிழனுக்கு தமிழ் புரியவில்லையே....என்று ஒரு நொடி மனம் வருந்தினாலும்....... நாம தமிழை எதிர்பார்க்கும் இடம்... குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் ஒரு பணியாளர் ...அவருக்கு தூய தமிழ் தெரிந்திருக்க வேண்டுமென்பது என்னுடைய எதிர்பார்ப்பே அன்றி அவருடைய குறையோ, குற்றமோ இல்லை என்று தேற்றிக் கொண்டேன். மற்றபடி தூய தமிழ் தெரிந்தவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைவான ஊதியத்தில் பணி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்ணுற்று இருக்கிறேன். நன்கு தமிழ் தெரிந்தவன், படித்தவனே ஆங்கிலத்தில் பேசுவதை வழக்கமாகிக் கொண்டிருக்கும் போது நாள் தோறும் பலவகையான வாடிக்கையாளர்களை எதிர்நோக்கும் ஒரு பணியாளருக்கு நடைமுறை பேச்சு தவிர்த்து தூய தமிழ் தெரிந்திருக்கும் என்று நினைப்பது என்னுடைய அறிவு குறைபாடு (அறிவீனம்) என்பதாக நினைத்துக் கொண்டேன். .

மலேசியாவில் எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் துவங்கினாலும் தனியார் நிறுவனம், பொது நிறுவனம் என்று காட்டக் கூடிய 'Sendirian Berhad' என்ற மலாய் சொல்லுடன் எழுதும் படி மலேசிய அரசால் பணிக்கப்பட்டுள்ளது. அதன் படி மைக்ரோ சாப்ட் நிறுவனம், Microsoft Malaysia Sdn Bhd என்றே பெயர் எழுதப்பட்டு வருகிறது, இதன் பொருள் ஆங்கிலத்தில் Microsoft Malaysia pte ltd. ஆனால் அதே மைக்ரோ சாப்ட் மற்ற நாடுகளில் மொழிகளில் எதிர்ப்பு இல்லை என்றால் Microsoft pte ltd அல்லது Microsoft pvt ltd அல்லது Microsoft ltd என்றே எழுதும். அதாவது அரசு ஆணையில் கண்டிப்புடன் இப்படியாகத்தான் பெயர் பலகை எழுத வேண்டும் என்று சொல்லிவிட்டால் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட எந்த ஒரு பெரிய நிறுவனமும் மீறுவதில்லை. மற்றபடி பன்னாட்டு நிறுவனங்கள் வட்டார மொழியை மதிக்கிறார்கள் என்று சொல்வதற்கு இல்லை.

தமது மொழியின் தனித்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதில் மலேசிய அரசு உறுதியாக உள்ளது, அதே போன்று இந்திய நடுவன் அரசும் (ஆளுகைக்கு உட்பட்ட) அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழியிலும் பெயர் பலகை வைப்பதைவிட இந்தியில் வைப்பதை விரும்புகிறது. பெங்களூருவில் இந்திய நிறுவனங்களான வங்கிகளின் பெயர் பலகை மருந்துக்கு கூட கன்னடத்தில் வைக்கவில்லை என்பதற்கு வாட்டாள் கும்பல் ஆ(ர்பா)ட்டம் காட்டிய பிறகு மாற்றிக் கொண்டார்கள்.

பொட்டிக்கடைக்கரார்களும், அரசு உதவியில் செருப்புக் கடை வைத்திருக்கிறவர்களும் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்பதில் செம்மொழி மாநாட்டை ஒட்டி தமிழக அரசு முனைப்பு காட்டுவது வரவேற்கத்தக்கது என்றாலும், திடிரென்று கால கெடு (அவகாசம்) கொடுத்து பெயர் பலகை வைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பது (நிர்பந்தம்) சரி அல்ல. ஒரு நாளைக்கு 200 ரூபாய் மட்டுமே விற்பனையில் பெறும் சிறுகடைகாரர்கள் உடனடியாக பெயர் பலகை வைக்க 1000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். இந்த திடீர் செலவை அவர்கள் எவ்வாறு ஈடுகட்டுவார்கள் ? இவர்களுக்கு அரசே இலவசமாக பெயர் பலகை செய்து கொடுக்கலாமே.

ஊருக்கெல்லாம் தமிழில் பெயர் பலகை வைக்கச் சொல்லவும், தமிழ் பெயர்களை பரிந்துரை செய்யும் திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் தம் "தமிழ்" திரைப்பட நிறுவனத்திற்கு வைத்திருக்கும் பெயர் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்'. எண்ணிக்கை அளவில் 18 ஆண்டுகளாக தமிழக முதல்வராக இருந்துவரும் கருணாநிதிக்கு மேற்சொன்னது போல் செருப்பு தைக்கும் சிறு கடை வைத்திருப்பவர்களும், பொட்டிக்கடைகாரர்களும் தான் தமிழை வளர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது போலும்.

26 அக்டோபர், 2008

கன்னடத்துக்கு செம்மொழி சிறப்பு ஏன் வழங்கக் கூடாது ?

செம்மொழிக்கான சிறப்புத் தகுதியான,

"A classical language, is a language with a literature that is "classical"—ie, "it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own, not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature."[1] (George L. Hart of UC Berkeley)"

மிகவும் பழையதாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும், இலக்கிய வளங்களை உடையதாக இருக்கும் மொழிகளே சொம்மொழிக் கான சிறப்புத் தகுதி வாய்ந்தவை என்றுச் சொல்லப்படுகிறது. தமிழ் செம்மொழி என்று நாம் கண்டுகொள்ளமால் வெளிநாட்டுக்காரர்கள் அறிந்த உண்மைகளின் வழியாகவே அறிந்து பல ஆண்டுகளாகப் போராடி ஞாயமாகக் கிடைக்க வேண்டிய ஒன்றை 'நமது' இந்திய அரசிடம் வேண்டா வெறுப்பாகப் பெற்றோம். அதையும் பழிக்கும் வண்ணமாக செம்மொழி சோறுபோடுமா ? என்று ஒரு கூட்டம் கூறிவருகிறது. செத்துப் போன மொழியே சோறுபோடும் போது செம்மொழி சோறுபோடாதா ? சோறு போட்ட அன்னை உணவுடன் ஊட்டி வளர்த்த மொழி தானே. தூற்றுபவர்களை புறம் தள்ளுவோம்.

இந்திய மொழிகளில் குறிப்பாக தென்னிந்திய மொழிகளில் தமிழைப் போலவே தொன்மையானது கன்னட மொழி, கன்னட மொழியில் இருந்து பிரிந்த மொழியே தெலுங்கு, கன்னடத்தின் எழுத்துவடிவம் கிபி 500க்கு பிறகு முழு தனி வடிவம் பெற்றது. அதற்கும் முன்பு தமிழுக்கும் கன்னடத்திற்கும் பொதுவாக தமிழ் எழுத்துக்களே பயன்பட்டது. வடமொழி ஆதிக்கத்தால் முதலில் சிதைந்தது கன்னடம் தான். கன்னட மொழி தமிழ் மொழியில் இருந்து பிறந்தது என்று சொல்வதை விட தமிழின் உடன்பிறந்தவள் (சகோதரி) என்று சொல்வதே சாலப் பொருத்தம் என்று தேவ நேயப்பாவாணர் முதல் பலர் சொல்லி இருக்கிறார்கள். காரணம் தமிழில் இருந்து கன்னடம் பிரிந்தது என்று சொல்வதைவிட இரண்டு மொழிகளும் எப்போதும் இருந்தது. இரண்டிற்கும் பொதுவாக ஆயிரக்காணக்கான சொற்கள் உண்டு. கிபிக்கு பிறகு வடமொழி ஆதிக்கத்தால் வேறு வழி இன்றி புதிய எழுத்துக்களை ஏற்றுக் கொள்ளும் நிலையில் கிரந்த எழுத்துக்களில் தமிழில் இல்லாத எழுத்துக்களையும் சேர்ந்து மொத்தம் 51 எழுத்துக்களுடன் புதிய வடிவம் எடுத்தது. கன்னடத்தில் 'ழ' வும், 'ள' வும் இருந்தது வரலாறு. 'ழ' 400 நூற்றாண்டுக்கு முன்பு வழக்கு இழந்தது 1972லிருந்து 'ள' வையும் எடுத்துவிட்டது. கன்னடத்திலிருந்து எழுத்தை உருவாக்கிய தெலுங்கில் 'ள' இன்னும் பயன்பாட்டில் தான் இருக்கிறது. தெலுங்கு மட்டுமின்றி கொங்கனி மற்றும் துளு ஆகிய மொழிகளை எழுத கன்னட எழுத்துக்களே பயன்படுகின்றன.

கீழே உள்ள பட்டியலைப் பார்த்தால் தெரியும், செம்மொழி எவ்வளவு ஆண்டு பழையதாக இருக்க வேண்டும் என்ற கணக்கெல்லாம் எதுவுமில்லை.

The following languages are generally taken to have a "classical" stage.

Classical Sumerian (literary language of Sumer, ca. 26th to 23rd c. BC)
Middle Egyptian (literary language of Ancient Egypt from ca. the 20th century BC to the 4th century AD)
Old Babylonian (The Akkadian language from ca 20th to 16th c. BC, the imitated standard for later literary works)
Classical Hebrew (the language of the Tanakh, in particular of the prophetic books of ca. the 7th and 6th c. BC)
Classical Chinese (based on the literary language of the Zhou Dynasty from ca. the 5th c. BC)
Classical Greek (Attic dialect of the 5th c. BC)
Classical Sanskrit (defined by Panini's grammar, ca. 4th c. BC) [3]
Classical Tamil (the language of Sangam literature[4], 2nd c. BC to 3rd c. AD)[5]
Classical Latin (literary language of the 1st c. BC)
Classical Mandaic (literary Aramaic of Mandaeism, 1st c. AD)
Classical Syriac (literary Aramaic of the Syriac church, 3rd to 5th c.)
Classical Armenian (oldest attested form of Armenian from the 5th c. and literary language until the 18th c.)
Classical Persian (court language of the Sassanid empire, 3rd to 7th c.)
Classical Maya (the language of the mature Maya civilization, 3rd to 9th c.)
Classical Arabic (based the language of the Qur'an, 7th c.)
Classical Kannada (Used in inscriptions from 5th c. and language of the Rashtrakuta literature, 9th to 10th c.)
Classical Japanese (language of Heian period literature, 10th to 12th c.)
Classical Icelandic (the language of the Icelandic sagas, 13th c.)
Classical Gaelic (language of the 13th to 18th c. Scottish Gaelic literature)
Classical Quechua (lingua franca of the 16th c. Inca Empire)
Classical Nahuatl (lingua franca of 16th c. central Mexico)
Classical Quiché (language of 16th c. Guatemala)
Classical Tupi (language of 16th -18th c. Brazil)
Classical Ottoman Turkish (language of poetry and administration of the Ottoman empire, 16th to 19th c.)

இருந்தாலும் ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க அந்த நாட்டு அரசாங்கம் தான் முயற்சிக்க வேண்டும். வடமொழியைத் தவிர்த்து திராவிட மொழிகளின் மீது பாராமுகமாக இருந்த இந்திய அரசு போனால் போகட்டும் என்ற ரீதியில் பழமையான மொழி என்றால் சுமார் 2000 ஆண்டுகள் முந்தையது என்ற விதியை வைத்து தமிழை செம்மொழியாக அறிவித்தது. கன்னட மொழியில் ஏன் பழமையான இலக்கியமே இல்லையா ?

தமிழைப் போலவே கன்னட மொழிக்கும் பழமையான இலக்கியம் வளம் இருந்தது. அன்றைய தமிழி எழுத்துருவில் இருந்ததெல்லாம் அழிக்கப்பட்டு இருக்க வேண்டும், அல்லது அவை தொல் தமிழாக அறியப்பட்டு இருக்க வேண்டும். தற்பொழுது கன்னட மொழியும் பழங்கன்னடமும் முற்றிலும் மாறுபட்டது. பழங்கன்னட மொழி நூல்கள் அழிந்திருக்கலாம், அல்லது தமிழாக அறியப்பட்டு இருக்கலாம். 'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்ற ஆத்திச் சூடியில் 'ஓதாமல்' என்றால் 'படிக்காமல்' என்று பொருள், தமிழில் படிப்பு, வாசித்தல் என்பதை இன்றும் கன்னடத்தில் 'ஓது' என்று தான் சொல்லுவார்கள். அதே ஓது என்ற சொல்லை மந்திரம் ஓதுதல், பாத்தியா ஓதுதல் என்று வழிபாட்டு வாசிப்புக்கு பயன்படுத்தி வருகிறோம். இங்கே ஆத்திச்சூடி கன்னட இலக்கியம் என்று சொல்ல வரவில்லை. எடுத்துக்காட்டு வெறும் எடுத்துக்காட்டு. நாம் 'எச்சரிக்கை' என்ற சொல்லை தமிழில் பயன்படுத்துகிறோம், இந்த 'எச்சரிக்கை' என்ற சொல் கன்னடச் சொல் 'எச்சரிக்கே' என்றதிலிருந்து வந்ததுதான். 'எச்சரிக்கைக்கு' மாற்றான சொல் தமிழில் இல்லை. 'விழிப்புணர்வு' என்று சொல்லலாம் ஆனால் அதில் 'கவனத்துடன் அனுகுங்கள் என்ற பொருளும் சேர்ந்தே வராது. 'கவனம்' என்ற சொல் கூட சரியாக 'எச்சரிக்கை' என்பதன் பொருளை தந்துவிடாது.

தமிழைப் போலவே பல சமய இலங்கியங்கள், அதாவது சமணம், பவுத்தம், ஆசிவகம், வைதீகம், சைவம், வைணவம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் சார்பில் எழுதப்பட்ட நூல்கள் எண்ணற்றவையும் பழமையானவையாகவும் ஏராளம் உண்டு. வடமொழியில் கிறித்துவர்களின் பைபிளோ, இஸ்லாமியர்களின் குரோனோ மொழிப்பெயர்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்க. மதங்களுக்கு அப்பாற்பட்ட மொழிகள் என்ற தகுதியில் தமிழைப் போலவே கன்னடமும் சிறப்பு வாய்ந்தது. அதுமட்டுமல்ல புழக்கத்தில் உள்ள மொழியும் கூட. நான் அறிந்தவகையில் கன்னட மழலைச் சொல் தமிழைவிட இனிமையானது.

தமிழுக்கு செம்மொழி சிறப்புத் தகுதி கிடைத்தது போலவே, மற்றொரு திராவிட மொழியான கன்னடத்திற்கும் செம்மொழி சிறப்புத் தகுதி கொடுக்கப் படவேண்டும், 500 ஆண்டுகளுக்கு குறைவான வரலாறு உள்ள மொழிகளுக்கு இந்த தகுதியை சில நாடுகள் அவர்களின் மொழிக்குக் கொடுக்கும் போது வரலாற்று அளவில் 1500 ஆண்டுகளுக்கும் மேலான கன்னட மொழிக்கு கொடுப்பதில் தவறேதும் இல்லை.

தமிழைப் போலவே போற்றப் படவேண்டிய மற்றொரு மொழி கன்னடம், இந்திய அரசு கன்னடர்களின் கோரிக்கையை ஏற்று கன்னடத்திற்கு செம்மொழி சிறப்புத் தகுதி வழங்க உடனடியாக முன்வரவேண்டும்.
கன்னடத்திற்கு செம்மொழி தகுதி கிடைப்பது திராவிட இனத்திற்கும் பெருமையானதும் கூட.

இணைப்பு : கன்னடத்துக்கு செம்மொழி-பிரதமருக்கு எச்சரிக்கை - தட்ஸ்தமிழ்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்