பின்பற்றுபவர்கள்

தாய்லாந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாய்லாந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9 ஜனவரி, 2008

மொக்கை TAG - ராசி கற்கள் !

இந்திய - இந்துமத மூடநம்பிக்கைகளை மூலதனமாக வைத்து... 'உழைக்காமல் முன்னேறுவதற்கு முன்னூறுவழிகள்' என்று ஒரு புத்தம் எழுத முதலில் ராசி 'கற்களால் வாழ்கையில் பெரும் மாற்றம்'...என்று முதல் அத்யாயத்தை தொடங்கலாம். புத்தகம் நன்றாக விலை போகும், எதாவது நகைக்கடை பக்கம் அந்த புத்தகத்தை விற்றால் கடைக்காரனும் கமிசனை தருவான்.

அண்மையில் நானும் பதிவுலகம் சாராத நண்பர் ஒருவரும் ஜாய் டூராக தாய்லாந்து சென்ற போது, பேங்காகில் உள்ள புத்தர் கோவில்களை சுற்றிப் பார்க்க டாக்சி தேடினோம், ஒரு ஆட்டோகாரர், அவராகவே முன் வந்து அழைத்துச் செல்வதாக கூறினார், ஆட்டோ கட்டணம் எப்படி மீட்டரா ? என்று கேட்க, அதெல்லாம் வேண்டம் வெறு 20 பாட் கொடுங்க போதும் என்றார். 20 பாட் இந்திய ரூபாய் மதிப்புக்கும் 20 ரூபாய்தான். 'வெரீ சீப்' என்று அகமகிழ்ந்து ஏறி அமர்ந்தோம். நிற்கும் புத்தர், படுத்திருக்கும் புத்தர், எமரால்ட் புத்தர், பலிங்கு புத்தர் என விதவிதமான புத்தர் கோவில்களுக்கு கூட்டிச் செல்வதாக சொன்னார். சொன்னபடி முதலில் பலிங்கு புத்தர் கோவிலுக்கு கூட்டிச் சென்றார். பெரிய விகார் அதனுள்ளே ஒரு அடி உருவ வெள்ளை பலிங்கில் செய்யப்பட்ட புத்தர். கோவில் மூடி இருந்ததால் ஜன்னல் வழி தரிசனம் தான் கிடைத்தது. அங்கு வந்த வெள்ளைக்காரனிடம் இந்திய பெருமைகளை பேசிவிட்டு ஆட்டோவுக்கு திரும்பினோம்.

ஆட்டோகாரன் அடுத்து 'நிற்கும் புத்தரை' காட்டப் போகிறேன் என்று ஆட்டோவை செலுத்தினார். போகும் வழியில், 'இன்னிக்கு நகை எக்சிபிசன் போட்டு இருக்காங்க...நான் உங்களை அந்த ஜுவல்ல்ரி கடைக்கு கூட்டிச் செல்கிறேன், பிடித்தால் வாங்குங்கள்' என்றார். '20 பாட் - க்கு வருகிறேன் என்றாரே' என்று நாங்கள் பாட்டுக்கு தலையாட்டிவிட்டோம், ஜுவல்லரி கடையில் நிறுத்திவிட்டு காத்திருந்தார். உள்ளே பலமான வரவேற்பு, விதவிதமான ராசிக்கற்களை வெள்ளி, வெள்ளை தங்கம் மற்றும் தங்கதில் பதித்து மோதிரம் மற்றும் பல அணிகளில் சேர்த்து விற்கிறார்கள், பலவகையான கற்கள் இருந்தது. உடனடியாக பிறந்த மாதம் கேட்டுவிட்டு 'இந்த கற்கள் உங்களுக்கு ராசியானது' என்று சொன்னார்கள். கடலை பருப்பு அளவுக்கு சின்ன சின்ன கற்கள் கூட 2000 பாட் வரை சொன்னார்கள், அதிலும் உயர்ந்த வகை கற்கள் 10,000 - 50,000 பாட்-க்கு மேல் இருந்தது. மெதுவாக நண்பர் ஆரம்பித்தார், பேங்காக வந்த ஞாபகத்துக்கு தங்கமணிகளுக்கு எதாவது வாங்கலாம் என்று சொல்ல, தலையாட்டிவிட்டு ஆளுக்கு 3000 பாட்-க்கு ராசி கற்கள் பதித்த வெள்ளி மோதிரத்தை வாங்கிவிட்டு ஆட்டோவுக்கு திரும்பினோம்.

அடுத்து 'நிற்கும் புத்தரை' பார்க்கப் போவதாக சொன்னார் ஆட்டோகாரார். ஆட்டோகாரரிடம் அந்த ஜூவல்லரி கடையில் உங்களுக்கு கமிசனா ? என்று கேட்டேன், ஒப்புக் கொண்டார். ஆட்டோ சென்று கொண்டிருக்கும் போதே...'இதைவிட பெரிய கடை ஒன்று இருக்கிறது, அதில் வெளிநாட்டினருக்கு ஸ்பெசல் ப்ரோமசனில் கற்கள் விற்கிறார்கள்' என்று சொன்னார். 'ஐயோ சாமி ஆளை விடுங்க' என்று சொல்லியும் கெஞ்சாத குறையாக, 'நான் அங்கு சென்றால் எனக்கு இலவச பெட்ரோல் என்றார். சரி பொழைச்சு போகட்டும் என்று அங்கும் சென்றோம். அங்கு ஒரு சிறிய கல்லை 300 பாட்-க்கு வாங்கிவிட்டு திரும்பினோம், இந்த முறை 'நிற்கும் புத்தர் கோவிலுக்குச்' சென்றார். அங்கேயே அவரிடம் 20 பாட் கொடுத்துவிட்டு, வேறொரு டாக்சி பிடித்து தங்குமிடம் வந்து சேர்ந்தோம். அதுக்கு மேல் கற்களுக்கு கொடுக்க மனசோ, பாட்- டோ இல்லை. :)

வாங்கி வந்த கற்கள் இப்போது எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை. வாங்கி கடாசியதோடு சரி.

*****

பெயர் ராசி, ராசி கற்கள், ஜோசியம் பார்த்து பரிகாரம் செய்வது இவையெல்லாம் வாழ்கையை மாற்றுதாம். நம்புறாங்க. அப்பறம் ஏன் சாமி.....'சாமி நம்பிக்கை எல்லாம் வைக்கிறீங்க ?' கேட்கத்தான் ஆசை. சாமிகளை விட கற்கள் சக்தி படைத்ததா ? ம் கல்லும் சாமியும் ஒன்னுதான்னு கல்லில் சிலை வடித்திருக்கிறார்கள் போலும்.

ராசி கற்கள் அணிவதிலும் தவறான கற்களை அணிந்துவிட்டால் அதிர்ஷ்டம் ரிவர்சில் காணாமல் போய்...பெரும் துன்பம் நேர்ந்துவிடுமாம். அப்படியும் அடம்பிடித்து ராசி கற்களை அணிய விரும்பினால், கீழே இருக்கு கற்களின் பட்டியல், உங்க பிறந்த தேதிக்கு எந்த கல்லு நல்ல கல்லுன்னு பார்த்துக் கொள்ளுங்கள்.


சொடுக்கிப்பார்த்தால் விவரம் பெரியதாக தெரியும்.

*****

பேங்காக் செல்பவர்கள் குறைந்தவிலையில் நிறைந்த சவாரி செய்ய ஆட்டோ வந்தால் எச்சரிக்கையாக இருக்கவும்.

இந்த இடுக்கை பாச மலர் மொக்கை TAG க்காக எழுத அழைப்பு விடுத்தைத் ஏற்றுக் கொண்டு எழுதியது. இடுகை மொக்கையாக இல்லை என்று வருத்தப்பட்டால், பின்னூட்டத்தை மொக்கையாக போடுங்க. அட்ஜிஸ்டு பண்ணிக்கிடுவோம்.

நான் யாரை மொக்கை TAG க்கு கூப்பிடுவது ?

ஏற்கனவே பலர் மொக்கைதான் போடுகிறார்கள் ( அடிக்கவர்றாதிங்க என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) அப்பறம் தனியாகவேற மொக்கை பதிவா ?

பாவம் விட்டுடுவோம். பதிவர் பாவம் பொல்லாதது !!!
:)))

பின்குறிப்பு : முதல் புகைப்படத்தில் ஆட்டோவினுள் இருப்பது நான் அல்ல. எனது நண்பர் ஜெ.கண்ணன்.

18 செப்டம்பர், 2007

ஆசிய நாடுகளில் பரவிய அவதாரகதைகள்...



மரணத்துக்கு அச்சப்படதாவர்கள் விண்ணுலகிலும் இல்லை போலும். ஒருமுறை தேவர்களும், அசுரர்களும் பிறப்பு இறப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள எதாவது வழி இருக்கிறதா ? என்று பரமசிவனிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் திருமால் பள்ளி கொண்டுள்ள பாற்கடலை கடைந்தால் அதிலிருந்து அமிர்தம் கிடைக்கும் அதை எடுத்து உண்டால் மரணமில்லாமல் என்றும் இளமையுடன் வாழலாம் என்றும் கூறினாராம். இது சரியான வழி என்று தேவர்களும் அசுரர்களும் முடிவு செய்து கிருஷ்ணனின் உதவியையும் கேட்டனர். வாசுகி என்ற பாம்பை கயிறாக கொண்டு மந்தாகினி மலையை மத்தாக கொண்டு பாற்கடலை கடைய ஆரம்பித்தனர். மத்துக்கு கீழே முட்டுக் கொடுத்து தாங்கி பிடிக்க கிருஷ்ணன் ஆமை அவதாரம் எடுத்து தாங்கிபிடித்தாராம்.

அவ்வாறு பாற்கடல் கடையும் போது அதிலிருந்து தோன்றியதுதான் காமதேனு, கற்பகவிருட்ஷம், லக்குமி மற்றும் பல பல. அமிர்த்தம் திரளும் முன்பு வலி பொருக்காமல் வாசுகி(பாம்பு) விஷத்தை கக்க ஆரம்பித்ததும் அதனை எடுத்து சிவன் உண்டதாகவும், சிவனின் உடல் நீல நிறமாக மாறியதையும், வயிற்றுக்குள் சென்றுவிட்டால் ஈரேழு உலகமுமே அழிந்துவிடும் என்பதால் பார்வதி சிவனின் கழுத்தில் கையை வைத்து விஷம் வயிற்றுக்குள் இறங்காமல் தடுத்துவிட்டாள் நீல விஷத்தை தொண்டையில் தாங்கிக் கொண்டுள்ளதால் சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வந்ததாக அந்த கதையில் மேலும் சொல்ல்லப்படும் தகவல். இவ்வாறாக பாற்கடல் கடைந்து அமிர்த்தம் வந்ததும் அவற்றை தாங்கள் மட்டுமே அடைய வேண்டும் என்று தேவர்கள் சூழ்ச்சி செய்தனர். இதற்கு மோகினி அவதாரம் எடுத்த கிருஷ்ணன் உதவி செய்வதாகவும், மோகினியே சமமாக அமிர்த்த கலச்சத்தில் இருந்து அமிர்தத்தை ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. தீர்த்து முடிக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலில் தேவர்களுக்கு அமிர்தம் கொடுக்கப்பட்டது இதனை தெரிந்து கொண்ட அசுரர்களில் ஒருவன் தேவர் உருவம் எடுத்து தேவர்களுக்கு இடையே நின்று அமிர்தத்தை வாங்கி உண்டுவிடுவான். இதனை அறிந்த கிருஷ்ணன் அந்த அசுரனை நோக்கி சக்ராயுதத்தை வீச அவன் உடல் தலைவேறு முண்டம் வேறாக ஆகிவிடுவான். இந்த அசுரன் ஏற்கனவே அமிர்த்தம் உண்டு இருப்பதால் மரணிக்க மாட்டான். பின்னர் அவன் உடலில் ஒரு பாம்பை வெட்டி தலையை முண்டத்துடனும், உடலை தலையுடனும் இணைக்க ஒன்று இராகுவாகவும், மற்றது கேதுவாகவும் மாறிவிடுவதாக மகா விஷ்ணு அவதாரக் கதைகளில் ஆமை அவதார கதையில் சொல்கிறார்கள். இது போன்ற கதைகளை பயபக்தியுடன் படித்தால் அடுத்தவரின் உழைப்பை உறிஞ்சிவிட்டு அவர்களை எப்படி ஏமாற்றுவது போன்ற நல்லொழுக்கங்களை கற்றுக் கொள்ள முடியும். :)

புத்தரை கிருஷ்ணனின் ஒன்பதாவது அவதாரமாக (விஷ்ணு என்று) வைணவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதால் (பெளத்ததை வைதிக வைணவம் உள்வாங்குதல்) புத்தமதம் பரவிய கிழக்கு ஆசிய நாடுகளில் கிருஷ்ண அவதாரக்கதைகளும் புத்த மதத்துடன் சேர்ந்தே பரவியுள்ளது. புத்தரின் போதனைகளை உள்வாங்கி அத்வைதம் அமைந்ததால் ஆதிசங்கரையும் வைணவர்கள் பிரசன்ன புத்தர் என்றே அழைத்தார்கள். குறிப்பாக இராமயணம் கடல் கடந்து சென்றதற்கு காரணம் அவை புத்தருக்கும் விஷ்ணுவிற்கும் ஏற்கனவே தொடர்பு படுத்திவிட்டதால், வைணவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதால் வைணவ கதைகளை மேடை நாடகங்களுக்காக பவுத்தர்களால் ஆசிய நாடுகளுக்கு எடுத்துச் சென்று இருக்கக்கூடும், பல கிருஷ்ண அவதாரக்கதைகளும், இராமயணமும் கடல் கடந்து சென்றுள்ளது. அம்மக்களுக்கு கிருஷ்ணன், இராமன் என்றால் புத்தரின் மற்றொரு பிறவி, அவதாரம் என்று தான் கொள்கிறார்கள். கிழக்கு ஆசியவில் பலநாடுகளில் சூரியன் கோவில்கள் இருக்கிறது. ஆனால் அங்கு சூரியன் இல்லை. ஞான சூரியனான புத்தரே அங்கு இருக்கிறார்.

அண்மையில் கட்டப்பட்டுள்ள தாய்லாந்தின் புதிய விமான நிலையமான சொர்ண பூமி விமான நிலையத்தில் மேற்சொன்ன பாற்கடல் கடைதல் பற்றிய அமைப்புக் காட்சி வைக்கப்பட்டு இருந்தது. மிக அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. இதிகாசங்களுக்கு உருவம் கொடுத்தை இந்தியாவில் சூரசம்ஹாரம் தவிர்த்து வேறெதும் நான் பார்த்தது இல்லை.

படங்களை பெரிதாக பார்க்க 'கிளிக்' செய்யுங்கள்.


அன்புடன்,

கோவி.கண்ணன்

17 செப்டம்பர், 2007

தாய்லாந்தில் விநாயகர் சதுர்த்தி !

விநாயக சதுர்த்தி அன்று தாய்லாந்து பேங்காக்கில் இருக்கும் பேறு பெற்றேன். நானும் எனது நண்பரும் தங்கியிருந்த சிலோம் வில்லேஜ் என்ற நகர பகுதியின் அருகிலேயே மாரியம்மன் ஆலயம் இருந்தது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நல்ல கூட்டம். இந்திய தலைகள் மிக்கவையாக காணப்படவில்லை. தாய்லாந்து இன மக்களும், சீன மக்களுமே மிக்கவர்களாக (அதிகமாக) இருந்தனர். 30 மீட்டர் நீள அகலத்தில் சிரிய கோவில் அதில் நாட்டார் சிறு தெய்வங்கள் காத்தவராயன் உட்பட அனைத்தும் இடம்பிடித்து இருந்தனர். பொன்னிர புத்த சிலைகள் பல்வேறு தோற்றத்தில் மூல சன்னதியில் இடதுபக்கம் இருந்தது. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் எடுக்க முடியவில்லை.

தாய்லாந்து அரசு சார்பில் பவுத்த நாடு ? என்பது தெரியவில்லை. ஆனால் 32,000 க்கும் மிக்கவையான பவுத்த கோவில்கள் இருப்பதாக கணக்கு சொல்கிறார்கள். தடுக்கி விழுந்தால் எதாவது புத்தர் சிலைமேல் விழும் அளவுக்கும் எங்கும் புத்தர் பல்வேறு கோலங்களில் காட்சி தருகிறார். கூடவே அரசமரத்தடி புத்தரின் வைதீக வடிமான அதே அரசமரத்தடி சிறிய பிள்ளையாரையும் தாய்லாந்து மக்கள் போற்றுகின்றனர்.

விநாயக சதுர்த்தியன்று இந்தியாவில் நடப்பது போன்றே சிறப்பாக (விஷேசமாக) வழிபாடு நடந்தேறியது. ஆராதனை (அர்சனை) தட்டுகளுடன் தாய்லாந்து மக்களும், சீனர்களும் கோவிலுக்கு குடும்பம் குடும்பமாக வந்து சென்றனர். இதைப் பார்க்கும் போது இந்து மதம் வெளிநாட்டில் வளர்ந்திருக்கிறது என்பது போல் தோன்றினாலும் பவுத்தம் இந்துதத்துவங்களுக்கு உரிய இடம் தந்து அரவணைத்து வளர்வது போன்று தான் எனக்கு தெரிந்தது.

பூனூல் அணிந்த வேதியர்களின் ( அவர்கள் பிரமணர்களா ? என்பதை உறுதிபடுத்த முடியவில்லை... ஆனால் தமிழ் பேசுபவர்கள் என்று தெரிந்தது) தேவபாசை மந்திரத்துடன் மேளதாளம் விண்ணைப் பிளந்தது. குறைந்த அளவு தமிழர்கள் அங்கு இருப்பதால் தமிழிலும் அர்சனை பதாகைகளுக்கு தேவை இல்லை என்ற நிலை இருந்தது. கோவில் ஆராதனைக்காக தாய்லாந்து மக்களுக்கு தமிழென்றாலும் வே(ற்)று மொழி என்றாலும் ஒன்றுதான். கோவிலில் எல்லா விளங்கங்களும் தாய் மொழியிலும் (பாஷா தாய்) சில இடங்களில் ஆங்கிலத்துடனும் இருந்தது.

தாய்லாந்து மக்கள் மங்கோலிய இன நிற அடையாளத்தைக் கொண்டவர்கள் (மங்கோலியர் அல்ல) என்றாலும் 'தாய்' மொழியின் எழுத்துருவடிவம் பிரம்மி எழுத்துருவகையைச் சார்ந்ததும்... அதில் சில எழுத்துக்கள் பாலி மற்றும் வடமொழி சொற்களை எழுதுவதற்கென்றே ( தமிழ் ஹ், ஜ, ஷ இன்னும் பிற போன்று ) பயன்ப்படுத்தப்படுவதாக குறிப்புக்கள் இருக்கிறது.

தாய்லாந்தின் சூரியன் கோவில் (WAT ARUN) பற்றிய சுவையான தகவல்களையும், இந்து மத இதிகாசமான இராமயணம் சில ஆசிய நாடுகளில் போற்றப்படுவதற்கான சில காராணங்களையும் வேறு ஒரு இடுகையில் பகிர்வேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்