பின்பற்றுபவர்கள்

தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீவிரவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 டிசம்பர், 2008

பாகிஸ்தானுடன் போர் வரலாம் !

மும்பைத் தாக்குதலில் பாகிஸ்தானின் உளவுத்துறையின் பங்கு வெட்ட வெளிச்சமாகியுள்ளதைத் தொடர்ந்து இந்தியாவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதை உணர்ந்து, அமெரிக்கா பாகிஸ்தானை தீவிரவாதிகளை கைது செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்துவருகிறது.

இந்தியா கேட்டுள்ள இருபது தீவிரவாதிகளின் பட்டியலை கீழே எறிந்துவிட்டு குதர்கமாக, அத்வானியை ஒப்படைக்க இந்தியா தயாரா ? என்ற கேள்வியை பாகிஸ்தான் அரசியல்வாதிகள் கேட்டுவருகின்றன. இது நிராகரிக்கக் கூடிய ஒன்று, ஏனெனின் இந்தியாவைப் பொருத்த அளவு அத்வானியும் இந்துத்துவாக்களும் இந்திய முஸ்லிம்களுக்குத் தான் தலைவலியே அன்றி, பாகிஸ்தானுக்கும் அதற்கும் யாதொரு தொடர்ப்பும் இல்லை. மேலும் பாப்ரி மஸ்ஜித் மற்றும் ஏனைய சிறுபாண்மையினர் மீதான அச்சுறுத்தல்கள் அனைத்தும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், அத்வானியோ, தொகடியாவோ பாகிஸ்தானுக்குள் எதையும் தூண்டிவிடவில்லை, அப்படியே தூண்டினாலும் அங்குள்ள சிறுபாண்மை இந்து அமைப்பினரால் அதையெல்லாம் செய்யும் அளவுக்கு மனபலம் கிடையாது, பாகிஸ்தானில் நடக்கும் அனைத்து குழப்பங்கள், தீவிரவாதம், மசூதிக்குள் குண்டுவெடிப்பது எல்லாம் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள், முழுபாகிஸ்தானும் இராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ கட்டுப்பாட்டில் இருப்பதாலும், தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடமாக இருப்பதால் அவர்களின் நேரடி செயல் பயிற்சியாகவே அங்கே அவ்வப்போது குண்டுகள் வெடிக்கப்பட்டு முன்னோட்டம் பார்க்கப்படுகிறது. இதற்கும் அத்வானி குழுவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பாகிஸ்தான் இந்திய முஸ்லிம்களின் நலன் மீது முதலைக் கண்ணீர் வடிப்பது தங்களது தீவிரவாத ஆதரவிற்கு இந்தியாவிற்குள் கைநீட்டுவதற்கான வெறும் உத்திமட்டுமே. இதனை அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் தவிர்த்து அனைத்து இந்திய முஸ்லிம்களும் நிராகரிக்கின்றனர்.

மும்பைத் தாக்குதலை தடுக்காமல் விட்ட உளவுத் துறையின் தோல்வியையும், பல்வேறு அரசியல் நடவடிக்கைகளினால் சரிந்துவிட்ட காங்கிரசின் இமேஜை தூக்கி நிறுத்த காங்கிரசிற்கு இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பு பாகிஸ்தானுக்குள் இருக்கும் தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்துவது மட்டுமே. பல்வேறு நாடுகளும் "இந்தியா பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களின் மீது விமானப்படை தாக்குதலை நடத்தலாம்" என்று சொல்லிவருவது கூட இதனையும் கவனத்தில் கொண்டுதான் என்று நினைக்கிறேன். தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் சும்மா இருக்குமா ? என்பதே கேள்விக்குறி. ஆனால் தீவிரவாதிகளின் மீதான எதிர்தாக்குதலைப் பொருத்த அளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முன்னோடியாக இருப்பதால், ஞாயம் என்று பார்த்தால் இந்தியாவின் மீது தனக்கு பாதுகாப்பிற்கான ஞாயம் இருப்பதாக அனைத்துலகும் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே பாகிஸ்தான் இந்தியாவின் மீது எதிர்த்தாக்குதல் நடத்தினால் ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் தவிர்த்து வேறு எவரும் வரமாட்டார்கள். கடுமையான போர் எனும் போது பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர் உட்பட்ட இந்தியர்களுக்கும் பாதிப்புகளும், பாதுகாப்பின்மையும் இருக்கும். இவையெல்லாம் நினைத்துப் பார்த்து இந்தியா செயல்படாமல் இருக்கும் என்கிற நப்பாசையும் பாகிஸ்தானுக்கு இருக்கிறது. ஆனால் இந்தியா போர்தொடுத்தால் அதை பிரச்சாரமாக்கி பாகிஸ்தான் மக்களை தொடர்ந்து இந்திய வெறுப்பில் வைப்பதற்கு அதுவாய்ப்பாகவும், புதிய தீவிரவாதிகளை அதைச் சொல்லித் தூண்டி உருவாக்கவும் பாகிஸ்தானால் முடியும் என்பதால் எதற்கும் தயாராகவே பாகிஸ்தான் இருக்கிறது.

அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளபடி தீவிரவாதிகளை அழிப்பது பாகிஸ்தானால் இயலாதகாரியம்.

எவ்வளவு காலம் தான் பாகிஸ்தான் பயிற்சிபெற்ற தீவிரவாதிகளின் செயலிற்கு அவ்வப்போது மக்களை பறிகொடுக்க முடியும் ? என்ற கேள்வியில் துணிந்து இந்தியா தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. 100, 200 என ஆண்டுக்கு 1000 பேர்வரை காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை தீவிரவாதிகளின் கொடுஞ்செயலுக்கு இரையாகக் கொடுப்பதைவிட ஒரு சில பாதிப்புகள் தற்காலிகமாக ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று இந்தியா துனியும் என்றே நினைக்கிறேன். அடுத்தகாரணமாக மீண்டும் காங்கிரஸ் செல்வாக்கை உயர்த்திக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கவும் போர் ஒரு முக்கிய காரணியாக காங்கிரசின் வரவேற்பு அறையில் காத்துக் கொண்டு இருக்கிறது.

தொடர்புடைய சுட்டிகள் :

தீவிரவாதிகள் எங்கள் நாட்டவரே-யுஎஸ்சிடம் பாக். ஒப்புதல்
தாவூதுக்கு அத்வானியை கேட்கும் லஷ்கர்!!

1 டிசம்பர், 2008

யாருக்கும் எங்கும் பாதுகாப்பில்லை என்பது உண்மையா ? கோர்வையற்ற எண்ணங்களாக !

எந்த ஒரு நாட்டிலும் இராணுவம், காவல் துறை என்ற சொல்லெல்லாம் "மக்களின் வாழ்வாதரத்தின் நம்பிக்கை" என்ற பொருளில் இருக்கிறது என்றே பலரும் நம்புகிறார்கள். மக்களாட்சி என்ற தத்துவத்தில் அரியணையேறும் கட்சி அரசுகள் அவற்றை கையாளுவதிலுற்கும் கட்டுப்படுத்தற்கும் சட்டம் அனுமதியளிக்கிறது.

ஆயிரம் பேர் கூடும் இடங்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பைவிட தேர்தல் வழியாக அரசு பதிவியில் இருப்பவர்களுக்கே அதாவது அமைச்சர்கள், முதல்வர், பிரதமர் போன்றோர்களுக்கு கொடுக்கப் படும் பாதுகாப்பு மிகுதி. ஆயிரம் பேரின் பாதுகாப்புக்கு 2 போலிசார் இருப்பதே பெரிய செயல்தான்.

இராணுவத்தின் மீதும், போலிசின் மீதும் இருக்கும் நம்பிக்கை உண்மையிலேயே நம்பத்தகுந்ததா என்பது ஆராய்ச்சிக்குரியதே. கையூட்டு வாங்காத அலுவலர்களை விரல்விட்டே எண்ணிவிடலாம் என்பதால் தான் சமூகவிரோதிகள் மிக எளிதாக எதையும் செய்துவிடுவார்கள்.

சொல்வதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தாலும் அல்கொய்தா போன்ற மிகவும் பயங்கரமான தீவிரவாதக் கும்பல் நினைத்தால் இந்தியா போன்ற நாடுகளை அழிப்பது எளிதுதான். ஊழல் மிகுந்த நாடுகளில் அரசு அலுவர்களை, அமைச்சர்களையும் வளைப்பது மிகவும் எளிதே என்பதை தெகல்கா போன்றவை ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளனர்.

நாம் எதோ பாதுகாப்புகள் பலமானது என்றே நம்பிக் கொண்டு இருக்கிறோம். குண்டு வெடித்த ஒருவாரம் பொறுப்பான சோதனைகள் நடக்கும், அதன் பிறகு பழையடி ஒழுங்கீனத்தை தொடர்வார்கள்.

இந்தியா போன்ற நாடுகளில் ஓடும் ரயில்களும், பேருந்துகளும் என்னேரமும் பாதுகாப்புடன் செல்வது கிடையாது, இவற்றை தகர்க்க வேண்டுமென்றால் ரயிலுக்கு இருவர் என்ற அளவில் அதனை செய்து முடித்துவிடுவர். கிட்டதட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு குறைவு அல்லது இல்லை என்றே சொல்லலாம்.

பொதுமக்களுக்கு என்னேரமும் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று சொல்லவரவில்லை. ஆனால் பொதுமக்களுக்கு ஏன் பாதுக்காப்பு தேவைப்படுகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். பொறுப்பற்ற மதவாதிகளின் தூண்டல்களால் பாதுகாப்பு இன்மை ஏற்படுகிறது. ஒரே நாளில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தை மிகுதியாக்கிறது. டிசம்பர் 6 ஆம் தேதி நள்ளிரவு கடந்து பிறகு தான்... 'அப்பாடா...எங்கும் குண்டுவெடிக்கல' நிம்மதி என்று அனைவரும் மூச்சுவிடுகின்றனர். மறுநாள் சோதனைகள் எதுவுமே இருக்காது. பழிக்கு பழிவாங்கவேண்டுமென்றால் டிச 6 ஐ மட்டும் தான் நினைவு வைத்து பழிவாங்குவதாகவே அரசாங்கத் தரப்பு நினைப்பது சிறுபிள்ளையின் சிந்தனைப் போல் இருக்கிறது அல்லவா ? அதற்காக ஆண்டுமுழுவதும் பாதுகாப்புச் சோதனை என்றால் அதில் சிக்கி அல்ல படுபவர்கள் பொதுமக்கள் தான். ஆனால் இவற்றை சீர் செய்யவே முடியாதா ?

கண்டிப்பாக முடியும், மதவாதிகள் மூடிக் கொண்டு இருந்தாலே இவ்வித அச்சுறுத்தல்கள் குறைந்து போகும். கோத்ரா போன்ற ஒரு ரயிலை எரித்துவிட்டு வீரவசனம் பேசும் மோடி போன்றவர்களுக்கு ஒன்றுமே ஆகாது, ஏனென்றால் அவர்கள் வைத்திருக்கும் பாதுகாப்பு வளையம் அத்தகையது. அதிலும் கூட ஊடுறுவி இந்திராகாந்தி படுகொலை போல் நடத்திவிடுவார்கள் என்று இவர்கள் ஏன் நினைப்பதே இல்லை.

தன்னுடைய பேச்சிற்கும், மதசார்பிற்கும் இருக்கும் அச்சுறுத்தல் குறித்தே அத்வானி துணை பிரதமராக ஆகத்துடித்து 8 அடுக்கு பாதுகாப்புடன் வலம் வந்தார். இவையெல்லாம் தேவையா ? பேசக் கூடாதையெல்லாம் பேசி மதக்கலவரங்களுக்கு வழிவகுத்துவிட்டு, தனக்கு பாதுகாப்பில்லை என்று கூறி பாதுகாப்பைக் கூட்டிக் கொண்டு பாதுகாப்பாக இவர்கள் மட்டுமே வலம் வருவதால் ஆத்திரம் அடைவோரின் குறி பொதுமக்கள் கூடும் இடங்களை நோக்கித்தான் செல்கிறது.

தீவிரவாதம் என்றால் அது எந்த மதத்தினரின் தீவிரவாதம் என்று ஆராயாமல் பொதுமக்களே அதனை முறியடிக்க வருவேண்டிய நேரத்தை நெருங்கிவிட்டோம் என்பதையே கடந்த கால இழப்புகள் காட்டுகின்றன

மதத் தீவிரவாதங்களினால் யாருடைய உயிருக்கும் உத்தரவாதமில்லை என்பது தான் உண்மை. மதக் கலவரங்களை தூண்டிவிடுவிடும் இவ்வளவு அடாத செயல்களை செய்துவிட்டு பாதுகாப்பாகவும் இருந்து கொண்டு நடக்கும் வன்செயல்களை மத அரசியலாக்கி. அதையும் வாக்குச் சீட்டாக, வாக்கு வேட்டையாக மாற்றிக் கொள்கிறார்கள் என்பதை ஏன் பலரும் உணரவில்லை.

முன்பெல்லாம் ஒருவினாடிக்கு மூன்று குழந்தைகள் பிறப்பதாக சொல்லுவார்கள், உலகெங்கிலும் மதத்தீவிரவாததினால் நிமிடத்திற்கு
10 பேராவது இறப்பார்கள், இதில் தற்கொலை தாக்குதல் நடத்துபவனும் "அடக்கம்".


போலிஸ் மற்றும் இராணுவம் எதிர்தாக்குதலை தொடுக்க உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்திருப்பார்கள், தீவிரவாதிகள் யாருடைய ஏவலுக்கும் காத்திருக்காது, தங்களது உயிரைக் கூட பணயம் வைத்தே எளிதில் நினைத்தை நடத்தி முடித்துவிடுகிறார்கள். அவர்களை எந்த ஒரு சட்டமும் கட்டுப்படுத்தாது. சட்டமும் தண்டனையும் பிடிபட்டவர்களுக்கு மட்டுமே. எந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலும் "கண்டனம்" என்ற சொல்லால் முடிவுக்கு வந்துவிடுமா ? மதத்தீவிரவாதம் அது எந்த வடிவாக இருந்தாலும் புறக்கணிக்க வேண்டும், பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற உறுதியான மனநிலைக்கு பொதுமக்கள் செல்லாதவரை அவர்களின் உயிருக்கு யாருமே உத்திரவாதம் தரமுடியாது என்பது பேருண்மை.

உணர்வார்களா ? உணர்வோமா ?

இதோ இங்கே மதத்தீவிரவாதத்தை தூண்டி விடுபவர்கள் எத்தனை பேர் சொந்த பெயரில் எழுதுகிறார்கள் என்பதை பார்த்தாலே, இந்திய நாட்டின் பாதுகாப்பு இன்மைக்கு இவர்களும் ஒரு காரணமாக இருப்பதும், இவர்களின் எழுத்தே இவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி இருப்பதை உணர்ந்தே அவ்வாறு செய்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பாருங்கள். இவர்கள் எதோ பெயரில் எழுத, இவர்களுக்கு சொந்த பெயரில் ஆதரவு வழங்குபவர்கள் சிந்திக்க வேண்டும். யாரும் பாதுகாப்பற்ற நிலையில் இன்று இருப்பதற்கு என்ன காரணம் ? தூண்டிவிடுபவர்கள் பாதுகாப்பாக வலம் வருவார்கள், ஆனால் இந்த தூண்டுதலில் எதிர்வினையால் பாதிக்கப்படுபவர்கள் வெளியில் இருப்பவர்களே.

போலிசும் இராணுவம் பயங்கரவாதத்திற்கு பிறகு காப்பற்ற முயற்சிப்பார்கள், ஆனால் தடுப்பதற்கான, முறியடிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறைவுதான். யாருக்கும் பாதுகாப்பில்லாத நிலையே பலநாடுகளில் தொடர்கிறது. குறுதி புனல் படம் தான் நினைவுக்கு வருகிறது. கையூட்டு பெறுபவர்களும், காட்டிக் கொடுப்பவர்களும், மதவெறியர்களும் நம்மிடையேவும் இருப்பார்கள்.

ப்ரேக்கிங் பாயிண்டை வைத்து எதையுமே செய்து முடித்துவிடுவார்கள் !

30 நவம்பர், 2008

கோர்வையற்ற எண்ணங்களாக மதத்தீவிரவாதம் !

தீவிரவாதம் என்ற தீம்புயல் மதங்களில் மையம் கொண்டிருப்பது ஒப்புக் கொள்ளவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை அனைவருமே புரிந்து கொள்வது நல்லது. மதத்தை மையப்படுத்தி தீவினையாற்றும் தீவிரவாதிகள் எவரும் சாத்தானின் பிள்ளைகளாக மேலுலகத்தில் இருந்து குதித்து வந்துவிடுவதில்லை. இங்கே பூமியில் தாய்களின் மார்பில் பாலறுந்தியவர்களே. இவர்கள் ஒரே இரவில் மனமாற்றப்பட்டார்கள் மூளைச் சலவை செய்யப்பட்டார்கள், மதத்திற்கும் இவர்களுக்கும் தொடர்புகளே இல்லை என்னும் வாதம் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஏற்க்கப்படும், அல்லது சொல்லிக் கொண்டு இருக்கப்படும் என்பதை நன்கு சிந்திக்க வேண்டும்.

மதக்கூட்டங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் அனைத்து கூட்டங்களில், தத்தமது இறை நம்பிக்கையைவிட மாற்று மதத்தினரை எப்படி எதிர்கொள்ளவேண்டு,ம் தூற்றவேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகச் சொல்லிக் கொடுக்கும் மதங்கள் எதுவுமே, தத்தமது மதத்தில் முளைக்கும் தீவிரவாத விதைகளை தீயிலிட்டு பொசுக்காமல் மதத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்கிற சாக்கு போக்குகள் வரும் காலத்தில் எள்ளி நகையாடப்படும் மேலும் தூற்றப்படும்.

நாங்கள் உத்தமர்கள் எங்கள் மதமே புனிதமானது என்பதைப் போன்ற வாதமே சகமனிதனை சுட்டுவீழ்த்துவதும், உடமைக்கும் உயிருக்கும் உத்தரவாதமின்மையைத் தரும் மதத் தீவிரவாதிகளின் மத்தியில் இருக்கும் எதோ ஒரு மதம் சார்ந்த கொள்கையின் இருக்கும் எதோ ஒரு தவறான (புரிதலில்) ஒன்றாகவே இருக்கிறது. இது போர் செய்வது தருமம் என்றும் வலியுருத்துக்கும் கீதையாக இருந்தாலும் சரி, புனித போர் என்று சொல்லப்படும் 'ஜிகாத்' ஆக இருந்தாலும் சரி. எல்லாம் ஒரே விதமான மனித குல வேரறுப்பு மகாவாக்கியங்கள் தாம்.

எங்கள் மதம் தீவிரவாதம் போதிக்கவில்லை என்று துன்பவேளையில் யாழிசைப்பவர்களே, தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் ? பிறக்கும் போதே தீவிரவாதிகளாக பிறந்தவர்களா ? நேற்றுவரை நம்முடன் இருந்தவன் ஒருவனே நாளை நம் முன் தீவிரவாதியாக வந்து நம்முன் வந்து நிற்கிறான் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். நான் சிறுவனாக இருந்த போது என்னுடன் விளையாடிய இரு மத சிறுவர்களும் இன்று மதச்சார்பு என்ற பெயரில் முகங்களையே மாற்றிக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் யாவரும் இறைநம்பிக்கை ஊட்டப்படாமல் தீயவர்களின் கூடாரத்திலேயே வளர்ந்தவர்கள் அல்ல.

எங்கள் மதங்களுக்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை என்பது காலவதியாகிப் போகும் செய்தியாகிக் கொண்டிருப்பதை உணர்பவர் எவரோ அவர்களே மதங்களில் இருக்கும் தீமையை உணர்ந்து அகற்ற முன்வருவர். சீழ்பிடித்த சிரங்கை மருந்திடாமல் மறைப்பது அதை மேலும் பெரிதாக்கி உடலையே இழக்க நேரிடும் என்பதை உணர்க்க.

தீவிரவாதிகள் யார் ? என்ன செய்கிறார்கள் ? என்கிற புரிந்துணர்வு இருந்தால், செத்துப் போவதில் என் மதத்தைச் சேர்ந்தவனும் இருக்கிறான் என்கிற புரிந்துணர்வு இருக்கும். இதோ மதத்தீவிரவாதிகள் முன்பு சமாதானம் பேசும் மதவாதிகள் எவரையும் தன் மதத்தைச் சேர்ந்தவன் என்பதற்காக எவனும் கொல்லாமல் விடுவதில்லை. திரிசூலத்தில் இருக்கும் மூன்று முனைகளில் நடுவில் இருப்பது தன் மதத்தைச் சேர்ந்தவர்களை அழிப்பதற்கே என்ற அரைகூவலும், தீவிரவாத வெறியில் தம் மதத்து மசூதிக்குள்ளேயே வெடிகுண்டு வீசுவதும் ஒன்றே. தீவிரவாதத்திற்கான காரணம் மதத்தின் மையமாக இருப்பது கண்கூடாகத் தெரியும் போது, எரிந்து கொண்டிருப்பதை அறிந்தும் உடையில் தீப்பற்றவில்லை என்று சொல்லி ஏமாற்றி தன்னை தீயின் நாக்குக்கு தீக்கிரையாக்கும் செயலுக்கு ஒப்பானது.

மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பில்லை என்பதை மதவாதிகள் சொல்லக் கூடாது. மதவாதிகள் அவ்வாறு தொடர்ப்புகளை துண்டித்து காட்டும் போது பொதுமக்களே சொல்லுவார்கள். மதத்தீவிரவாதத்தால் சந்தேகத்தின் பெயரால் கைதாகுபவர்கள் அப்பாவி மதப்பற்றாளர்கள் மற்றும் மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்ல. அவர்களால் கொல்லப்பட்டுள்ளவர்களிலும் அப்பாவி மதப்பாற்றாளர்களும், மதமே வேண்டாம் என்று மண்டியிட்டு கெஞ்சுபவர்களும் உண்டு. இறந்தவர்களுக்கான இரக்கம் சிறிதும் இன்றி மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் தொடர்பே இல்லை என்னும் சீற்றமோ, போலிக் கண்ணீரோ மதத்தைக் காப்பாற்றும் நெடுநாளைய அணைப்பாக இருக்கவே முடியாது.

மதத்தீவிரவாதம் என்ற சொல் மதம் வேண்டாம் என்று சொல்பவர்களைவிட மதப்பற்றாளர்களாலேயே மிகுந்து சொல்லப்படுகிறது என்பதையும் உணர்க. மிகச் சரியான இறைநம்பிக்கை உடையவர் எவருமே மதச் சிந்தனைக்கும், இறை நம்பிக்கைக்கும் தொடர்பில்லை என்று சரியாக புரிந்து கொண்டிருப்பர். மதத்தின் தீவிரவாதத் தன்மைகளைச் சுட்டிக் காட்டும் போது அவர்களில் ஒருவரும் அதனை இறைவனை பழிப்பதாக எண்ணி மறுக்கவும் மாட்டார்கள்.

******

இறைவன் சாத்தானின் பிடியிலும், மாயையின் பிடியிலும் மனிதன் சிக்கி இருப்பது சொல்வது, மனிதன் மதங்களின் பிடியில் சிக்கி இருப்பது குறித்தான சொல்லே என்பதாகத்தான் எனக்கு புரிகிறது.

28 நவம்பர், 2008

அமெரிக்காவிற்கு இருக்கும் வீரம் ஏன் இந்தியாவுக்கு இல்லை ?

தீவிரவாதிகளின் பயிற்சிக்களம் என்று கண்டறிந்து தலிபான்களை துடைத்தொழிக்க முடிவெடுத்த பின், அனைத்துலக ஆலோசனைகளோ, ஐநா நைனாக்களையோ கலந்து ஆலோசிக்காமல் 'என் நாட்டு பாதுகாப்பிற்கு...எவரிடம் ஆலோசனை கேட்கவேண்டும் ?' என்று கேள்வியையே முடிவெடுவாக எடுத்து ஆப்கான் தலிபான்களை ஒழித்துக் கட்டியது அமெரிக்கா. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சதாம் உசேனை அரசாங்கத்தையும் காலி செய்து ஈராக்கில் தனக்கு ஏதுவான ஒரு பொம்மை அரசாங்கத்தை ஏற்படுத்துக் கொண்டது.

உலகில் 5 ஆவது பெரிய இராணுவப் படை உடைய இந்தியா, பாகிஸ்தானில் நுழைந்து தீவிரவாதிகளை அழிப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்? உண்மையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் பயறிசிக் களங்களையெல்லாம் இந்திய அரசு வீடியோ ஆவனமாக பதிவு செய்து உலக நாடுகளுக்கு கொடுத்து இருக்கிறது, பின்லேடனைக் காட்டும் காட்சிகளின் போது கடுமையாக தீவிரவாதிகள் பயிற்சி பெரும் காட்சிகளைக் காட்டுவார்கள், இவையெல்லாம் இந்திய அரசு உளவு துறை மூலம் பெற்ற படங்கள் தான் என்று சொல்கிறார்கள். அதாவது பாகிஸ்தானில் தீவிரவாதிகள் செயல்படும், பயிற்சி பெரும் இடங்கள் பலவற்றை இந்திய அரசும், இராணுவம் அறிந்தே வைத்திருக்கிறது.

முன்பு மறைமுகமாக இந்தியா மீது பாகிஸ்தான் கார்கில் போரை நுழைத்த போது அதை வெற்றிகரமாக முறியடித்ததைத் தொடர்ந்து அதற்கு வருத்தம் தெரிவிப்பது போல் வாஜ்பாய் அரசு பர்வேஷ் முஷாரப்புக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளித்தனர். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து என்றாவது இந்திய இறையாண்மைக்கு மதிப்பு கொடுத்து நடந்திருக்கிறதா என்றால் அப்படி நடந்ததே இல்லை.

மும்பையில் குண்டு வைத்த தாவூத் இப்ராகிம் சுதந்திரமாகத்தான் பாகிஸ்தானில் உலா வருகிறான். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று பேசும் தேசிய வியாதிகள் தாவூத் இப்ராகிமை பிடித்துவருவது பற்றி வாய்த்திறப்பதே இல்லை, அவனை சீண்டாமல் இருப்பதே அரசியல்வாதிகளுக்கும் பெரிய பெரிய இந்தி சினிமா தலைகளுக்கும் நல்லது என்று விட்டு வைத்திருப்பதாகவே தெரிகிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்தும், உதவியும் வரும் பாகிஸ்தானிடமிருந்து தாவூத் இப்ராஹிமை பிடித்துவருவதோ, தீவீரவாதிகளின் பயிற்சிக் கூடத்தை அழிப்பது இந்தியாவிற்கு மிகவும் கடினமான செயலா ? ஆனால் இதையெல்லாம் முன்றாம் நபர் தெரியாமல் பாகிஸ்தான் செய்து அதில் வெற்றி பெற்றும் வருகிறதே ?

இலங்கையில் விடுதலைபுலிகளை அழிக்க உதவுகிறோம் என்ற போர்வையில் அப்பாவி தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் அழிப்பதற்கு சிங்களர்களுக்கு உதவும் இந்திய அரசு, பாகிஸ்தான் பக்கம் கவனம் செலுத்தாமல் இருக்க என்ன காரணம் ? வழக்கம் போல் அடுத்த குண்டுவெடிப்பிற்கு ஆசிர்வாதமாக கண்டன விழாவைக் கொண்டாடுவதுடன் முடித்துக் கொள்கிறார்கள்.

பெரும அளவில் இந்தியர்கள் இந்திய இராணுவத்தின் மீது நம்பிக்கை இழந்துவருகிறார்கள், அமைதிப்படையாக அனுப்பப்பட்டவர்கள் அஸ்ஸாமிலும் ஈழத்திலும் பாலியல் வன்முறைகளை நிகழ்த்திய செயல்களைத்தான் பலரும் நினைவு வைத்திருக்கின்றனர். எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கிவிட்டு, அணிவகுப்பு நடத்துவதை தற்காலிககமாக நிறுத்துவிட்டு இந்திய இராணுவம் என்றால் பாகிஸ்தான் பயந்து நடுங்கச் செய்ய வேண்டும், நாட்டின் 60 விழுக்காடு வருமானம் இராணுவத்துக்காக செலவிடும் போது, அடிக்கடி நடக்கும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு மூல காரணமான பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயிற்சிக்கூடங்களை அழித்தால் தான், ஏழை எளியோர் வரிப்பணம் முறையாக செலவிடப்படுகிறது என்ற நம்பிக்கையே பிறக்கும்.

மும்பையில் நடந்திருப்பது பொருளாதார சீர்குழைவுக்கான தாக்குதல் என்பதால் இந்தியாவின் அசுரவளர்ச்சியை தடுப்பதற்காக பல்வேறு நாடுகளால் நடத்தப்பட்ட சதித்திட்டமா ? என்று ஆராயவேண்டியதன் தேவையும் இருக்கிறது.

இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்ற ஒரு நிலையை உருவாகினால் அந்நிய முதலீடுகள் குறையும், இந்திய பொருளாதார வளர்ச்சி தடைபடும் என்ற பொறாமை எண்ணத்தில் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் கூட இது நடந்திருக்க வாய்ப்புள்ளதாக நான் நினைக்கிறேன்.

*****

இது லோக்கல் பாலிடிக்ஸ்.....

இதுதான் சமயம் என்று பொடோ இருந்தால் இதெல்லாம் நடக்காது என்று ஒரு கும்பல் பிரச்சாரம் தொடங்கி இருக்கிறது, பொடா இருந்தால் கடல்வழியாக ஊடுறுவிய தீவிரவாதிகளின் கால் மயிரை பிடித்து இழுத்து நிறுத்திவிடுமா ? பொடா சட்டத்தால் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் யார் தெரியுமா ? வைகோவும், நக்கீரன் கோபாலும், 14 வயது சிறுவனும் தான். நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு சிறுவன் விடுதலை செய்யப்பட்டான். பொடோ சட்டம் என்ற பெயரில் அரசியல் வாதிகள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பிடித்துப் போட்டார்கள், வெறொன்றும் நடக்கவில்லை. தற்கொலை படையாக ஊடுறுவல் செய்பவனை பொடோ என்ன செய்யும் ? அவர்களது கோவணத்தைக் கூட பொடோ தீண்டமுடியாது

தீவிரவாதம் உலகெங்கிலுமே பெரும் சவாலாகத்தான் இருக்கிறது, ஆனல் எங்கும், இங்கும் பரப்பப்படுவது 'துலுக்கன் குண்டு வச்சிட்டான், துலக்கனை ஒழித்துவிட்டால் எல்லா சரியாகிடும்' என்பது போல் கிடைக்கும் சந்தில் இந்துத்துவா சிந்து பாடப்படுகிறது. இந்தோனிசியா கூட இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுதான், அங்கு பாலியில் குண்டுவெடித்து 100க் கணக்கானோர் பலியாயினர். இஸ்லாமியர் என்பதற்காக குண்டு வைத்தவனை அந்த அரசு கொஞ்சவில்லை, குற்றத்தில் தொடர்பிருந்த மூவருக்கும் தண்டனையாக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

பாகிஸ்தானில் கூட நாள்தோறும் மசூதிகுள்ளேயே குண்டுவெடிக்கிறது, இதற்கும் 'இந்திய துலுக்கன் தான் காரணமா ?' குண்டுவெடிக்கும் போதெல்லாம் 'துலுக்கனை ஒழிக்க வேண்டும்' என்று சொல்லும் இந்து அமைப்புகளும் அதன் ஆதரவாளர்களும் 'மலேக்கான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார் என்று அறிந்தும்' போது மல்லாக்க படுத்து இருந்தது ஏன் ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்