பின்பற்றுபவர்கள்

பார்பனீயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்பனீயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 மே, 2010

இரட்டை தம்ளர் மற்றும் பிராமின்ஸ் ஒன்லி !

பொதுப்புத்திக்காரர்கள் அனைவருமே சொல்லுவது,

* சாதிக் கொடுமையை பார்பனர்கள் செய்கிறார்களா ?

* சாதிக்கலவரங்களில் பார்பனர்கள் ஈடுபடுகிறார்களா ?

* இரட்டை தம்ளருக்கும் 'பிராமணர்களுக்கும்' ஏதாவது தொடர்பு இருக்கிறதா ?

பிறகு ஏன் சாதிக் கொடுமைகள் குறித்து சாடுதலில் பார்பனர்களை இழுக்கிறீர்கள் என்று.

பொதுச் சமூகத்தில் சாதிக் கொடுமை என்பது சிறுபான்மை பெரும்பான்மை என்ற அளவில் நடக்கிறது. பிற்பட்ட சாதியினர்கள் நிறைந்துள்ள கிராமங்களில் தலித்துகளைத் தள்ளி வைப்பது பெரும்பான்மை எனும் பெயரில் பிற்பட்ட சாதியினர் செய்யும் வன்கொடுமை. சிறு நகரங்களில் தீண்டாமைச் சுவர், இரட்டை தம்ளர் முறைகளை வைத்திருக்கிறார்கள். கிராமங்களில் நடக்கும் வன்கொடுமை பெரும்பாலும் அந்த கிராமத்தினரின் பெரும்பான்மையினர் சாதியினரால் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து சாதிக்காரர்களுமே அடக்கம். இதையெல்லாம் பாப்பான் செய்கிறானா ? அவனை ஏன் இதில் தேவை இன்றி இழுக்கிறீர்கள் என்பதாக பொதுப் புத்திக் குற்றச் சாட்டு எழு(து)வது வாடிக்கை தான். நினைத்துப் பார்த்தால் சொல்வது ஞாயம் தானே... !. பார்பனர்கள் எல்லோருமே படித்துவிட்டு நகரங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டார்கள், 'அவாள் உண்டு, அவா வேலை உண்டுன்னு இருக்கா' அவாளை ஏன் இழுக்கிறேள்...?', என்று நினைக்கத் தோன்றும்.

கிராமங்களில் நடக்கும் வன்கொடுமைகளுக்கு பார்பனர்கள் காரணமில்லை, அவர்கள் என்றோ அங்கிருந்து இடம் பெயர்ந்துவிட்டார்கள். 'பெருங்காயம் இருந்த டப்பா வாசனைப் போகாது' என்பது போல், பார்பனர்கள் உயரடுக்கில் அமர்ந்து கொண்ட வருண அடுக்கு முற்றிலும் சரிய இன்னும் கூட ஒரு நூற்றாண்டு பிடிக்கும், ஆனால் சாதி எதிர்ப்புக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றால் இன்னும் 50 ஆண்டுகளிலும் கூட சாதிப் பகைமைகள் ஒழியலாம். பிறப்பு வழியாகப் புகுத்தப்பட்ட ஒன்றை மனிதர்கள் அனைவருக்குமே ஞாபகமறதி என்ற நோய் தாக்கி தாம் எந்த சாதி என்பது கூட மறந்துவிட்டது என்பது ஏற்பட்டால் சாதி உணர்வு முற்றிலும் மறையலாம்.

இன்றைய தேதிக்கு மது, மாமிசம், மீன், முட்டை தொடாத பார்பனர்கள் மிக மிகக் குறைவு, உணவு வாழ்க்கை முறை அனைத்திலும் பார்பனர்களுக்கும் பிற சாதிமதத்தினருக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது, கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை வெளிப்படையானது, ஆனால் பெருநகரங்களில் வீடுகளை வாடகைக்கு விடும் பார்பனர்களில் பலர் 'பிராமணர்களுக்கு மட்டும்' என்று விளம்பரம் செய்வது நன்கொடுமையா ? வீடு வாடகைக்கு எடுக்கிறவன் வாடகைக் கொடுககப் போகிறான். அது எவனாக இருந்தால் என்ன ? முன்பாவது 'நாங்களெல்லாம் அசைவம் சாப்பிடாதவா....ஆச்சாரமானவா' என்று பீலா விடுவார்கள், இப்பொழுது பார்பனர்களில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே அசைவம் சாப்பிடாதவர்கள் உண்டு. அவன் வீடு அவன் வாடகைக்கு விடுகிறான் என்றாலும் கூட இதுவும் மறைமுகமாக பிற சாதியினரிடம் எந்த விதத்திலும் கலந்துவிடக் கூடாது என்பதான நவீனத் தீண்டாமை தான், இரட்டை தம்ளர் வன்கொடுமைகளுக்கு முற்றிலும் மாற்றான நகரத் தீண்டாமை இது. இரட்டை டம்ளர் கடை நடத்துபவனும் யாரும் என் கடைக்கு வா... என்று அழைக்காமல் தான் அந்த இழிவை வருகிறர்களுக்கு நடத்துகிறார்கள். பார்பனர்கள் முடிந்த அளவு தீண்டாமை கடைபிடித்து தான் வருகிறார்கள். எக்சப்சன் உண்டு, அது அந்த ஒரு சிலரின் தனிப்பட்ட சிறப்பு குணம். அதை சாதியின் பெருந்தன்மை என்று கொள்ள முடியாது.

பார்பனர்கள் மிகப் பெரிய அளவிலான தீண்டாமைகளில் தொடர்பில்லாமல் இருக்க அவர்களின் அங்குள்ள எண்ணிக்கை தான் அடிப்படையே அன்றி பிற சாதியினரைப் போல் குழுவாக வாழும் இடத்தில் எல்லாக் கொடுமையையையும் பிறரைப் போல் செய்தே வருகிறார்கள் என்பது பிராமணாள் ஒன்லி டூ லெட் போர்டுகளே சாட்சி. எனக்கு தெரிந்து சென்னை வாடகை வீடு விளம்பரங்களில் செட்டியார் ஒன்லி, நாடார் ஒன்லி, முதலியார் ஒன்லி என்று நான் பார்த்தது கிடையாது.

பாப்பான் தீண்டாமையை விட்டுவிட்டான், பார்பனர்கள் செய்வது இல்லை, பிராமணர் தீண்டாமையோ, வன்கொடுமையோ செய்வதில்லை போன்றவை பொது புத்தி சார்ந்த புரிதல்கள் மற்றும் பரப்புதல்களே. தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாக ஒரு சாரரை ஒதுக்குவதைப் போலவே, ஒட்டுமொத்தமாக பார்பனர் அல்லாத அனைத்து சாதியினரையும் புறக்கணிப்பதன் பெயர் என்ன ?


தாயாரின் சாதிய மனநிலையால் பார்பனர்களுக்கு மட்டுமே வீட்டை வாடகைக்கு விட்ட பார்பனரின் மோசமான அனுபவம் ஆங்கிலத்தில் To-Let:Brahmins Only « Maami's Weblog

8 ஏப்ரல், 2010

அண்ணாச்சிகள் உயர்சாதிக்கு மாறிவிட்டார்களா ?

ஒரு காலத்தில் சென்னையில் ஓட்டல்களாக இருந்தாலும் பெரிய துணிக்கடைகளாக இருந்தாலும் செட்டியார்களாலும், பார்பனர்களாலும் பெருவாரியாக நடத்தப்பட்டன. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக நாடார் சமூகம் என்று அழைத்துக் கொள்ளும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கை ஓங்கி இருக்கிறது. அங்காடித்தெரு படத்த்தில் காட்டியது போல் அண்ணாச்சிக் கடைகளில் பணிக்கு இருப்பவர்கள் அதே சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் என்றாலும் அண்ணாச்சிகள் அந்த சமூகத்து இளைஞர்களை தங்களின் லாபத்திற்கான உற்பத்திப் பொருளாகத்தான் பார்க்கிறார்களேயன்றி அந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்று பெரிதாக ஒன்றும் இல்லை. தங்கள் தொழில் நொடித்துவிடக் கூடாது என்பதற்காக நாடார் சங்கங்களுக்கு மிகுதியான நிதிவுதவி செய்துவருகின்றனர். நாடர்களைப் பொருத்த அளவில் ஒரு நாடார் இந்து நாடார் கிறித்துவ நாடார் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது, தங்கக் கடற்கரை முதலாளி கிறித்துவராக இருந்தாலும் சரி, முருகனைப் போன்று (பார்பன மற்றும் பார்பன அல்லாத பெண்) வல்லி மற்றும் கார்திகா என இரு தாரமும் அதற்கு மேலும் ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய ஜீவஜோதி புகழ் அண்ணாச்சியாக இருந்தாலும் சரி அவர்களைப் பொருத்த அளவில் நாடார்கள் என்பது அவர்களது தனிச் சமூகம்.

என் நண்பன் ஒருவன், கட்டுனா என் சாதிக் காரப் பொண்ணைத்தான் கட்டுவேன், அது கிறித்துவ மதமாக இருந்தாலும் ஒண்ணும் பிரச்சனை இல்லை, எங்களை விட கிறித்துவர்கள் பணக்காரர்களாகத்தான் இருக்காங்க, மதமா சோறுபோடுது என்பது போல் பேசி சாதிக்கு சாமரம் வீசினார். எல்லோரும் தான் சாதியில் திருமணம் செய்கிறார்கள் இருந்தாலும் சாதிக்கு மதம் ஒரு தடையாக இல்லாதிருப்பது நாடார்களிலும் தலித்துக்களிலும் கூடுதலாக நடைபெறுகிறது. இவ்வாறு மதம் மாறி திருமணம் செய்து கொண்டாலும் அவர்களில் மதம் தொடர்புடைய பெரிய குழப்பங்கள் ஏற்படுவது இல்லை.

எதுக்காக இதைச் சொல்கிறேன் என்றால் மதம் மாறுவது சாதியை அழித்துவிட வில்லை. குருடன் நடக்கிறான், செவிடன் பார்க்கிறான் என்பது போன்றும் பாவிகளான உங்களுக்கு பரலோக ராஜ்ஜியம் அதுக்கு நாங்க கேரண்டி என்று கூறியவர்களும் மதம் மாறி வந்த அந்தந்த சாதியினரை அப்படியே தான் (விட்டு) வைத்திருக்கிறார்கள். வருணாசிரம கருமாந்திரத்தை ஒழிக்க மதம் மாறுவது தீர்வே இல்லை, மேலும் தலித்துகளுக்கு அரசாங்க சலுகை இழப்பும் ஏற்பட்டுவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்து பெரும்பாண்மையைக் காக்க வேண்டும் என்பதற்காக மதம் மாறினால் உனக்கு சலுகை கட் என்பதாகத்தான் 'மதச் சார்பற்ற' இந்தியாவும் சட்டதிட்டங்களை வைத்திருக்கிறது. ஒருவர் மதம் மாறினால் அவரின் பொருளாதாரத்திற்கும் கல்வி அறிவிற்கும் நாங்க கேரண்டி என்று எந்த ஒரு மத அழைப்பாளர்களும் இதுவரை சொல்லாத போது மதம் மாறும் தலித்துகளுக்கான சலுகை பறிப்பு இந்தியாவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்று சொல்வதில் தவறே இல்லை (எது எதற்கோ பொது நல வழக்கு தொடுப்பவர்கள் இதற்கு ஏன் தொடுப்பதில்லை என்று தெரியவில்லை, அப்படித் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட மத நிறுவனங்கள் தலைகுனிய நேரிடும் என்பதால் அவர்களும் பாதிப்பட்ட தலித்துகள் குறித்து அக்கரை காட்டுவதில்லை)

திரும்பவும் தலைப்பு......நாடார்கள் நிறுவனங்கள் நடத்தி பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள், முதலாளிகளாக இருக்கிறார்கள், அப்படி என்றால் அவர்கள் உயர்சாதிக்காரர்கள் பட்டியலில் சேர்த்துவிட உயர்சாதி சமூகம் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சாதி சமூகங்கள் அதற்கு தயாராக இருக்கிறார்களா ? பனமரம் ஏறியவனெல்லாம் இன்னிக்கு முதலாளி ஆகிவிட்டான் என்று தூற்றவே செய்வார்கள்.

பொருளாதார மற்றும் தொழில் வள அடிப்படையிலும் உயர்சாதின்னு ஒரு இழவும் கிடையாது, தனது சாதியை முன்னிலைப் படுத்த எத்த(னிப்பவ)ர்கள் அவ்வாறுக் கூறிக் கொண்டார்கள். பார்பனீயம் என்பதற்கு மாற்று சொல்லாக நான் ஏன் உயர்சாதியம் என்று பயனபடுத்துவதில்லை என்றால் எந்த ஒரு சாதி சாக்கடையையும் நான் உயர்சாதி என்று உயர்த்திக் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு கோடுகள் தத்துவம் தான், ஒரு பிரிவினரை உயர்சாதி என்று குறிப்பிடும் போதே அதில் இல்லாதவர்கள் தாழ்ந்த சாதி என்கிற பாகுபாட்டை ஏற்படுத்திவிடும். சாதி என்பது கொடுமையான ஒன்று, மனிதர்களை ஒன்று சேர விடாத ஒன்று, மேல் சொன்னது போல் ஒரு நாடார், முதலியார், வன்னியர், தலித் ஆகியோர்கள் கிறித்துவராக இருந்தாலும் ஒருநாளும் அவர்களது சாதி அழிவதற்கு இந்திய சூழலில் வாய்ப்பே இல்லை. இவை வருணாசிரம கருமாந்திரத்தால் பீடித்த நோய், இந்திய நோயான சாதியத்தை சாடுவதற்கு அதற்கு தலைமை ஏற்பதுடன், ஞாயப்படுத்துவதற்கும் வருண அடுக்கில் மேலே உள்ளவர்களாகவும் பார்பனர்கள் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளதால், ஒட்டுமொத்த சாதி இழிவுகளின் அடையாளமாக 'பார்பனீயம்' என்ற சொல் எனக்கு ஞாயமாகவே படுகிறது. சாதியைப் பெரிய விசயமாக கருதாதவர்கள் இதைப் புறந்தள்ளலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்