'........பேசுகிறேன்...நாம் இப்போது 29 ஆயிரம் அடிக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறோம். வழக்கமாக 39 ஆயிரம் பறப்போம், குறும்தொலைவு விமானங்களுக்கு உயரக்கட்டுபாடு வைத்திருக்கிறார்கள், வழக்கமாக உயரமாக பறப்போம் நெடுந்தொலைவு விமானங்களுக்கு மட்டும் 39 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் , விமானத்துக்கு வெளியே -15 டிகிரி தட்ப வெப்பம் நிலவுகிறது, உள்ளே உங்கள் வசதிக்காக 25 டிகிரி வைத்திருக்கிறோம். நாம் சென்னை ஓடு தளத்தில் சுமார் நான்கு நிமிடம் பயணப்பட்டு, பிறகு சென்னையை கடக்கும் வரை புறப்பட்டதில் இருந்து 8 நிமிடங்கள் ஆகியது, இன்னும் ஒரு மணி நேரத்தில்
வழக்கமாக இந்தியில் / ஆங்கிலத்தில் கேட்கும் விமான குரல்கள் இந்த முறை தமிழிலும் கேட்ட போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த விமானிக்கு பாராட்டுகள்.
அது மட்டுமல்ல உற்சாக பானம் சாப்பிடுபவர்கள் 'பியர்' கேட்கும் போது திறந்து தான் தருவார்கள், திறக்க வேண்டாம் கொடுங்கள் என்றால் தரமாட்டார்கள், சிலர் பயணம் முடிந்து பிறகு தனக்கு பிடிக்காவிட்டாலும் நண்பர்களுக்கு கொடுக்கலாம் என்று 'பியர்' டின் திறக்காமல் கேட்டு வாங்கி வைத்துக் கொள்வார்கள். இந்த முறை பயணத்தின் போது திறக்காமல் கேட்டவர்களுக்கு அப்படியே தந்தார்கள். இந்தியன் வான்வழி விமான சேவை தரம் மேம்பட்டு இருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை. முன்பெல்லாம் அதிகாலை தரை இறங்கினால் வாழை இலையில் சுற்றிக் கட்டிய மல்லிகைப் பூவை விருப்பப்படும் பெண்களுக்கு கொடுப்பார்கள், தற்போது இல்லை. மேலும் மிதமான சூடுநீரில் நனைத்து பிழியப்பட்ட துண்டு துணியை முகம் துடைத்துக் கொள்ளக் கொடுப்பார்கள் அதுவும் நடப்பில் இல்லை. பயன்படுத்திய போர்வைகளைக் கொடுக்கிறார்கள் என்றும் சிலர் சொல்லுகிறார்கள். விமான ஊழியர்களுக்கு காலம் தாழ்த்தி ஊதியம் கொடுக்கிறார்களாம், பயணிகளுக்கான சிறப்பு சேவை குறைந்து போனதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
சிங்கைக்கு வரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் உள்நாட்டு விமானம் தான், வரிசைக்கு ஆறு என 3 - 3 இருக்கைகள் நெருக்கமாகவும் நடுவில் சென்று வரும் வழியும் இருக்கும். படக்காட்சிகள் காட்டும் வசதி இந்த விமானங்களில் இல்லை. நேரத்திற்கு கிளப்பிவிடுகிறார்கள் அதுவே பெரும் சாதனைதான்.
***
சென்னையில் ஊர்திகள் மிகுந்துவிட்டதால் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கம் ஏற்படுகிறது. நானோ (nano) சிற்றுந்துகள் வந்துவிட்டால் போக்குவரத்து நெருக்கம் இன்னும் மிகுதி ஆகும். சிற்றுந்து வைத்திருக்கும் நடுத்தர வாழ்வாளர்கள் எண்ணிக்கை மிகுந்திருக்கிறது. பெருநகரத்திற்கு வெளியே கூடுவாஞ்சேரி, மறைமலை நகரில் பணி செய்பவர்கள் கூட சென்னைக்குள் குடி இருப்பதே காரணம், அதைத் தவிர்க்கவும் முடியாது, சென்னை புறநகரில் நல்ல வேலை, ஊதியம் கிடைக்கும், குழந்தைகளுக்கான படிப்பு ?

***
ஏதும் நோய்வந்ததும், மருத்துவர் பரிந்துரையினால் உடற்பயிற்சி நடைபெயற்சி செய்யும் வழக்கம் மிகுந்திருக்கிறது, வரும் முன் உடற்பயிற்சி செய்தால் என்ன ? சென்னை ஜீவா பூங்காவில் நடுவயதைக் கடந்த ஆண்களும் பெண்களும் நடைபயிற்சி செய்கிறார்கள். கூட்டம் மிகுதியால் அனைவரும் எதோ ஊர்வலம் செல்வது போன்று இருந்தது. இந்த இடத்தில ஒரு ஆன்மிகச் செய்தியைச் சொல்லிவிடுகிறேன்.
