பின்பற்றுபவர்கள்

மதவெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதவெறி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 மார்ச், 2014

இந்துத்துவாவை மறைமுகமாக வளர்பவர் யார் ?

இன்னிக்கு செய்தி ஒன்றை படித்தேன், 'நாணயத்தில் ஸ்ரீவைஷ்ணவதேவி உருவப்படம்: - ' முஸ்லிம் அமைப்புகள் கண்டனம். இந்தியாவில் கண்டனம் செய்வதற்கு காரணங்களே தேவை இல்லை. ஏதாவது ஒன்றை தமக்கு எதிர்ப்பாக நினைத்துக் கொண்டாலே போராட்டம், சாலை மறியல், மனு கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்துவிடலாம்.

காலம் காலமாக பணத்தை லெட்சுமி, தெய்வம் என்ற பொருளில் தான் இந்தியர்கள் நம்பிவந்தார்கள், இன்றும் நம்பிக் கொண்டார்கள், ஒருசிலரின் மதமாற்றத்திற்கு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவருமே அந்த நம்பிக்கையை தூக்கி எரியவேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் அனைவரும் 'மதச்சார்பின்மை' என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

'ஹலல்' என்ற எழுதப்பட்ட கறிவிற்கும் கடையில் 'அல்லா சாமியை வேண்டி' வெட்டியதை நாங்கள் வாங்கமாட்டோம் என்று ஏனைய மதத்தினர் புறக்கணித்தால், கறிக்கடைக்காரர் வயிற்றில் ஈரத்துணியை நனைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியது தான், இதெல்லாம் விட நாத்திகரும் வாழும் நாட்டில் குழாய் ஒலிப்பெருக்கியில் 'அல்லாஹு அக்பர்' தொழுகை நேர அறிவிப்பு மற்றவர்களின் மதசார்பின்மையெல்லாம் கேட்டு தான் பின்னர் எழுப்பப்படுகிறதா ?

கிட்டதட்ட 95 விழுக்காடு நெல்வயல்களும் தாணியங்களும் பயிறிடும் முன் விருப்ப தெய்வத்திற்கு வேண்டிவிட்டு தான் விதைக்கப்படுகின்றன, அது போன்று அறுவடையில் முதலில் படையலுக்கு எடுத்துவைத்துவிட்டு தான் பிறகு விற்பதற்கான தாணியங்களை அறுத்து எடுக்கிறார்கள், ஏன் விளைச்சல் நன்றாக விளைந்தால் தான் நம்பிய கடவுள் கொடுத்தவையே அவை என்று நம்புகிறார்கள். மேற்கண்ட போராட்ட அமைப்புகள் இந்த தாணியங்களையெல்லாம் வாங்கி உண்ணாமல் எதை உண்ணுகிறார்கள் ? மதச்சார்பற்ற தாணியங்கள் என்று ஏதேனும் விளைகிறதா ?

உலகிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தோனிசியாவில் பிள்ளையார் படத்தை ரூபியாவில் அடித்து புழக்கத்தில் விட முடிகிறது, இராமயண நாயகர்களை, இந்து கோவில்களை பணத்தில் அச்சடித்து விட முடிகிறது, அங்கெல்லாம் அந்த நாட்டு இஸ்லாமிய அமைப்புகளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.




தீவிரமாக இந்து நம்பிக்கைக் கொண்ட ஒருவன் மேற்கண்ட செய்தியைப் படித்தால் தனக்குள்ளே கேள்வி கேட்கவே மாட்டானா ? இந்து பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் தங்கள் நம்பிக்கை சார்ந்த ஒன்றை கவுரவப்படுத்தும் பொழுது அதனை எதிர்ப்பது தனது நம்பிக்கையை மதிப்பதையும் எதிர்பதாகும் என்று நினைக்கமாட்டானா ?

மதச்சார்பின்மை என்பது எனது எல்லைக் கோட்டிற்குள் நீ வராதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது, அதனால் இந்தியாவிற்கு தேவை மதச்சார்பின்மை அல்ல மதச் சகிப்புத் தன்மையே. இவர்களின் எதிர்ப்பு தேவையற்ற காழ்புணர்வுகளையும் இந்துத்துவத்தை வளக்கவே உதவும். இவர்களது வைஷ்ணவி உருவம் பதிக்கப்பட்ட நாணய எதிர்ப்புணர்வும், இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதே என்கிற இந்துத்துவ கோஷமும் ஒன்றே.

இன்னும் இவர்கள் தமிழ்நாட்டு அரச முத்திரையில் இருக்கும் கோபுரத்தை தூக்கவேண்டும் என்று சொல்லாதது வியப்பளிக்கிறது, ஒருவேளை தமிழ்நாட்டின் அரசு சின்னத்தில் கோபுரம் இருப்பதை இவர்கள் கவனிக்கவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

மேற்கண்ட போராளிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒருவகையில் மதம் அல்லது வேலை ஆகிவற்றில் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான், இவர்கள் ஏன் அந்த நாடுகளில் இவர்கள் விரும்பும் மதசார்பின்மையை பரிந்துரைத்து ஏக உலகத்தில் மதசார்பு அற்ற அரசுகள் ஏற்படுவதை முன்னெடுக்கக் கூடாது ?

8 மே, 2012

சிந்திக்க சில உண்மைகள் !


மதம் தொடர்பான சர்சைகளுக்கு இடமளிக்காத வண்ணம் சில பதிவர்களின் சில இடுகைகளை அண்மையில் நீக்கியது தமிழ் மணம், அதன் தொடர்பில் எனது மூன்று பதிவுகள் நீக்கப்பட்டன. மதவாதச் செயலை தடுப்பதற்காக எனது மூன்று இடுகைகள் நீக்கியதில் எனக்கு மகிழ்ச்சியே. இது பற்றி நான் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

சிந்திக்க சில உண்மைகள் என்கிற பெயரில் ஒரு பதிவு நீண்ட நாள்களுக்கு முன்பிலிருந்தே தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ளது, இதில் தி.க தலைவர் கி,வீரமணி அவர்களின் படமும், தந்தைப் பெரியாரின் படமும்  போட்டு இருப்பது அன்றி அதில் வரும் தகவல்களுக்கும் பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை நான் அந்தப் பதிவினை தகவல்களை தொடர்ந்து பார்த்துவருவதன் மூலம் அறிந்து கொண்டுள்ளேன்.

பெரியாருக்குப் பிறகான தி.க வின் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட பற்றும் இல்லாவிட்டாலும் ஒரு இயக்கத்தின் பெயரில் மதவெறியைப் பரப்ப அதனை வாய்ப்பாகக் கருதும் கூட்டம் தொடர்ந்து இந்திய சமய நம்பிக்கைகளையும், கிறித்துவ சமயத்தையும் மிகவும் கேவலமாக தாக்கிவருகிறது, அதில் மறந்தும் கூட இஸ்லாமின் பிற்போக்குத் தனங்கள் (குறிப்பாக இளம் வயது திருமணம் மற்றும் பலதார மணம்) ஆகியவை கண்டிக்கபடவில்லை என்பதால் இந்த தளம் இஸ்லாமியப் பதிவரால் தான் நடத்தப்படுகிறது என்றே நினைக்கிறேன். அது எனது ஐயமாகவோ, சந்தேகமாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்தப் பதிவின் சுட்டிகள் பல்வேறு இஸ்லாமியத் தளங்களில் பின்னூட்டத்தில் சுட்டியாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இது போன்று தொடர்ச்சியாக குறிப்பிட்ட மதத்தின் மீது அவதூறுகளை எழுதி மத ஒற்றுமை சிதைக்கிறது என்கிற அடிப்படையில் தமிழ் மணம் அந்தப் பதிவை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்த பதிவை எழுதுபவர் யார் என்றே தெரியாத நிலையில் எனக்கு அந்தப் பதிவர் மீது எந்த காழ்புணர்வும் இல்லை.

பெரியாரின் கடவுள் குறித்த பொதுவான சிந்தனைகள் / முழக்கம் 'கடவுளை நம்புவன் முட்டாள், கடவுளை பரப்புபவன் காட்டுமிராண்டி, கடவுளை மற, மனிதனை நினை' என்பதெல்லாம் அந்தத் தளத்தில் இல்லை என்பதால் அந்தத் தளம் கடவுள் மறுப்புத் தளம் அல்ல, மாறாக அந்தத் தளத்தில் இந்து மதமும், கிறிஸ்துவ மதமும் கடுமையாக தாக்க எழுதப்படுகிறது.

சிந்திக்க சில உண்மைகள் என்கிற பதிவை படிக்கும் கிறிஸ்துவர்களுக்கு பெரியார் மற்றும் கி.வீரமணி மீது வெறுப்பு வருவதற்கு இந்தத் தளம் காரணமாக அமைகிறது என்பதால் இதன் மீதான தமிழ் மணத்தின் தடை தேவையாகப் படுகிறது.



"இந்தப் பொழப்புக்கு...என்று யாரும் காரி உமிழ்ந்தாலும் வெட்கமற்றவர்கள் திருத்திக் கொள்ளவே மாட்டார்கள்" -  இது எந்த மதத்தின் வசனம் ?

- இதையெல்லாம் எந்த இறை வேதத்திலும் தேடாதீர்கள். இறைவேதமெல்லாம் உண்மையில் நல்லது சொல்லி இருந்தால் நம்மிடையே மதவெறியர்கள் இருக்க மாட்டார்கள்.

3 மே, 2012

இவர்களால் மட்டும் எப்படி ? எல்லாம் (ஏக) இறைவனின் ஆசி !

நான் கடந்த 4 - 5 மாதங்களாக வலைப்பதிவுகளை குறிப்பாக தமிழ்மணம் திரட்டியில் வரும் வலைப்பதிவுகளைப் பார்க்க ஒன்று நிச்சயமாகத் தெரிகிறது.

உலகத்தில் உள்ள ஒரே ஒரு நல்ல அமைதியான மார்க்கம் வாஹபிய மார்க்கம் தான். வஹாபியர்களின் சுறுசுறுப்பும், ஒற்றுமையும், இறை அச்சமும், இறைப் பற்றும், இறைப் பறைச்சாற்றலுக்கும் முன் ஒரு பய மார்த்தட்ட முடியாது. அதற்காக அவர்கள் செய்யும் தியாகங்கள் என்ன என்ன நான் கேள்விபட்ட வரையில் அவர்களது செயல் திறன் சிலிர்க்க வைக்கிறது, ஒற்றுமையாக ஒரு நாளைக்கு 10 பதிவுகள் எழுதுவதாகட்டும், அதில் கள்ள ஓட்டோ நல்ல ஓட்டோ ( மற்றவர்கள் ) போட்டு குத்தாது தற்காத்து தாமே ஓட்டுகளைப் போட்டு கண்ணும் கருத்துமாக குத்தி மகுடம் ஏற்றுவதாகட்டும் வியக்க வைக்கிறார்கள், சிலிர்க்க வைக்கிறார்கள். இதைப் படித்து வஞ்சப் புகழ்ச்சி மாதிரி தெரிந்தால் உங்களுக்கு வாசிப்பு அனுபவமே இல்லை என்றே சொல்வேன். இவர்களைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இன்றைய உலகத்தில்  இவர்களது வஹாபிய மார்க்கம் தான் வேகமாக வளர்க்கிறது, தொடர்ந்து இவர்கள் மகுடம் ஏற்றும் பதிவுகள் அதைத்தான் சொல்கின்றன. உங்களால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஏனெனில் சிலை வணங்கி உங்களுக்கு ஏக இறைவனின் ஆதரவு இல்லை, நீங்கள் செய்வது இறைச் சேவையும் இல்லை. இவர்களால் மட்டும் இது எப்படி சாத்தியம்  ? ஆச்சர்யபட்டீர்களா ? நானும் வியப்படைந்தேன் ஏக இறைவனின் ஆசி இல்லாமல் இவர்களால் இவ்வளவு ஒற்றுமையாக செயல்படமுடியாது, இதை மறுப்பவர்கள் இந்தப் பதிவுக்கு நெகட்டிவ் வாக்குப் போடலாம். 






Add caption
Add caption

Add caption


Add caption



(யாராவது வஹாபி நண்பர்கள் பெயர் விட்டிருந்தால் மன்னிக்கவும், எனக்கு போதிய நேரமின்மையால் உங்கள் அத்தனை பேரின் மகுடங்களை ஸ்கீர்ன் ஷாட் எடுக்க முடியவில்லை, இருந்தாலும் 30 நாளைக்கு 25 பதிவுகளுக்கு மேல் உங்களது தான் மகுடம் சூட்டியது என்பதை நான் சாட்சியாகவும், வாழ்த்தாகவும் தெரிவித்துக் கொள்கிறேன், ஆமினா போல் 55 வாக்குகளை ஒருத்தனும் இதுவரை வாங்கவில்லை)

சவுதியில் பாலாறும் தேனாறும் ஓடுவதைத் தெரிந்ததால் தான் என்னவோ, இது போல் இந்தியாவில் ஓடினால் இந்தியா எப்படி இருக்கும், கூடவே அல்லாவின் ஆட்சி நடந்தால் எப்படி இருக்கும் ? நம் வாஞ்ஜையுடன் வாஞ்சூர் ஐயாவைக் கேளுங்கள், கேடுகெட்ட இந்தியா, அசிங்கப் பிடித்த இந்தியா, நாகரீகமற்ற இந்தியா எப்படி இருக்கும்? இது பற்றி இதுவரை ஒரு 10 பதிவாக எழுதி இருப்பார்,. இவருக்கு இருக்கும் தேசப்பற்று தான் என்னை சிந்திக்க வைக்கிறது, இறைவன் நாடி இந்தியாவில் இஸ்லாமிய வஹாபிய ஆட்சி ஏற்படும் போது நம் வாஞ்சூர் ஐயாவின் இந்தியாவின் மீதான வருத்தமெல்லாம் நீங்கி இருக்கும்.
(வாஞ்சூர் ஐயாவின் விடா முயற்சிக்கு என் வாழ்த்துகள், இந்த காஃபீரின் வாழ்த்து உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தெரியும், இருந்தாலும் என் திருப்திக்காக வாழ்த்துகிறேன், எங்காளுங்க சாகுற வயதானால் (தான்) சங்கரா சங்கரான்னு சொல்லுவாங்க, ஆனா ஒருத்தரும் உங்களைப் போல் இறைச் சேவை செய்யமாட்டார்)

ஒருவனுக்கு முக்கியத் தேவை நாட்டுப் பற்றா ? இறைப் பற்றா ? இதில் என்ன சந்தேகம், இறைவனின் படைப்பாற்றலை ஒப்பிட நாடு என்பதே அற்பம், இதன் மீது பற்று வைப்பதைக் காட்டிலும் இறைப் பற்று எவ்வளவோ மேல், நாட்டு பற்று 'நாம் சிட்டிசன் ஆப் வேர்ல்ட்' ஆக இருக்கும் வரை தான், அதன் பிறகு மறுமை இந்த நாடு எப்படிப் போனால் என்ன ? இறைப் பற்றில் இளைப்பாருங்கள், அதைத் தான் நம் வாஞ்சூர் ஐயா 'இந்தியாவின் அவலங்கள் இவை' என்று தோல் உறித்துக் காட்டுகிறார். மார்க்கத் தடையில்லை என்றால் இந்தியாவில் பிறந்ததற்காக உயிரை விட்டு இருப்பார். சிந்திக்க வேண்டாமா மனிதர்களே, அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவலங்கள் நிறைந்த நாட்டில் ஒரு வஹாபியாக பிறந்தது மட்டுமே, அவருக்கு ஜென்மங்களின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் நீங்கள் அடுத்த பிறவியில் அரேபியாவில் பிறக்கவும் என்று என்னால் வாழ்த்தவும் முடியவில்லை. இருந்தாலும் அவருக்கு இந்தியா மீது இருக்கும் வெறுப்பான பற்றிற்கு என் வாழ்த்துகள், உங்களைப் போல் குடிமகனைப் பெற இந்தியா தான் தவம் செய்திருக்க வேண்டும். அரேபிய அவலங்கள் என்று எவரேனும் எதிர்பதிவு போட்டு படம் போட்டால் நம்பாதீர்கள், நாட்டில் கிராபிக்ஸ் தொழில் நுட்பம் தெரிந்த நயவஞ்சகர்கள் நிறைய உண்டு, அவர்கள் உங்களை காழ்புணர்வால் தூற்றுவதற்கும் இட்டுக் கட்டிய படங்களைக் காட்டக் கூடும்.

யா அல்லா, இந்தியாவில் உன் நல்ல ஆட்சியை நயவஞ்சக வெள்ளையர்கள் களைத்துவிட்டார்கள் மீண்டும் அது ஏற்படுமா ? ஏற்படும் என்கிறார் நண்பர் சுவனப்பிரியன் இந்தியாவில் அவருடைய மார்க்கம் வேகமாக வளர்ந்துவருகிறதாம். எல்லாம்..... எல்லாம் வல்ல அல்லாவின் ஆ(ட்)சி நாம என்ன செய்ய ? நானும் அவருடைய மார்க்கத்திற்கு திரும்ப வேண்டுமாம், மார்க்க சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டுமாம், தீர்ப்பு நாளில் நிற்க வைத்து அல்லா கேள்வி கேட்கும் பொழுது சுவனப் பிரியன் எனக்கு ஒழுங்காக புரியும் படிச் சொல்லிக் கொடுக்கவில்லை என்று சொன்னால் அவருக்கு கிடைப்பதில் எண்ணிக்கை குறையுமாம். எல்லாம் சரி தான் ஆனால் எனக்கு குபீர்னு செண்ட் அடித்துக் கொள்பவர்களுடன், பலநாள் மழிக்காத தாடி உள்ளவர்களுடன் சொர்கம் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லையே., மயக்கமாகி சொர்கத்தில் கிடப்பதைவிட அல்லாவின் தண்டனையை ஏற்று சுவனப் பிரியன் நல்லா தான் விளக்கினார் நான் தான் வெளங்கிக் கொள்ளவில்லை, நம்பவில்லை என்று இறைவனிடம் கூறி அவருக்கு எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நகரம் செல்ல இருக்கிறேன்.

இதை யாரும் நக்கல் பதிவாகக் கொள்ளவேண்டாம்.

***********

தமிழ்மண மகுடத்தை கைப்பற்றுவதில் காஃபிர்கள் தோல்வி அடைந்துவிட்டனர், ஆனால் அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். அதற்கு தான் நான் இங்கே சாட்சிகளை வைத்துள்ளேன்.  பதிவை மகுடம் ஏற்றுவது எவ்வளவு கடினம் தெரியுமா ? கள்ள ஓட்டைப் போட்டு கீழே தள்ள காஃபிர் கும்பல் சதி தீட்டும், இதையும் மீறி இம்புட்டு பேர் நாளொரு மேனியும் பொழுதெருவண்ணமும் மகுடம் ஏற்றுவதைப் பார்க்க அவங்க ஒழைப்பு எனக்கு பிடிச்சிருக்கு.  இதை நான் மனதில் கொள்ளும் போது இதே வேலையாக இவர்கள் இருப்பதால் தொழுகையை தவறி இறைதண்டனைக்கு ஆளாகிவிடுவார்களோ, வேலையை இழந்துவிடுவார்களோ என்று நானும் அச்சப்படுகிறேன், ஆகவே நண்பர்களே நீங்கள் வேண்டுகோள் வைத்தால் தமிழ்மணம் மகுடம் பகுதியை வஹாபிய மகுடம் என்று மாற்றி அவர்களது பதிவு ஒவ்வொன்றாய் மணிக்கு ஒரு முறை மாற்றி மாற்றி காட்டும், அவர்களுக்கு தேடித் தேடி வாக்குப் போடும் நேரமும் மிச்சம், தொழுகையை ஒழுங்காக தொழுது இறைவனின் அன்பையும் மறுமை வாழ்வில் மேன்மையும் பெறுவார்கள். 

தமிழ் மணம் திரட்டிக்கு பணிவான வேண்டுகோள் 'தமிழ்மணம் மகுடம்' என்பதை 'வஹாபிய மகுடம்' என்று பெயர் மாற்றி எங்களது அன்பு வஹாபிய நண்பர்களுக்கு உதவுங்கள், சக பதிவர்கள் நீங்கள் எந்த ஒரு பிற பதிவுக்கும் வாக்கு செலுத்தி வஹாபியர்களின் இறைச் சேவையை நிந்தித்து இறை தண்டனை[ப் பெற வேண்டாம்.

இறைவன் மிகப் பெரியவன், மகுடம் ரொம்ப ரொம்ப சிறுசு. ஆகாவே வஹாப்பி அல்லாத பதிவர்கள் தமிழ்மண மகுடத்தை வஹாப்பிய பதிவர்களுக்கே விட்டுக் கொடுங்கள் / பெயர் மாற்ற பரிந்துரை செய்யுங்கள்.

இன்ஷா அல்லா, மாஷா அல்லா !

இந்தியாவில் நல்லாட்சி ஏற்படும் முன் இந்த தமிழ்மணத்தை வஹாபிய மணமாக்கிக் நல் அத்தாட்சி வைத்துவிட்டாய். நீயே மிகப் பெரியவன்.

அவர்களும் திட்டமிட்டார்கள். இறைவனும் திட்டமிட்டான். தவிரவும், திட்டமிடுதலில் இறைவனே சிறந்தவனாவான் - குர்ஆன் 3:54

ஏக இறைவனின் ஆசி பெற்றவர்களிடம், அவன் புகழ் பாடுபவர்களிடம் மோதினால் தோல்வி என்று நன்கு உணர்ந்து கொண்டேன், இனி அவர்கள் என்ன எழுதினாலும் (இறை நாடினால் அன்றி) இனி இது குறித்து எதுவுமே சொல்வதாக இல்லை.

26 மார்ச், 2012

தோழர் செங்கொடி மற்றும் வினவு !

தோழர் செங்கொடியுடன் எனக்கு நேரடியான பழக்கம் எதுவும் இல்லை, தமிழ்மணத்தில் அவரது இடுகைகளைப் படிப்பேன், காரணம் தெளிவான எழுத்து நடை மற்றும் கைதேர்ந்த விவாதம், தரவுகள், படங்கள் சேர்த்து தெள்ளத் தெளிவாக எதையும் எழுதுவதுடன் அது குறித்துவரும் விவாதங்களுக்கு மிகத் தெளிவாக விடை சொல்லுவார், ஆதாரமின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதாமல் பிறகு இவை சர்சையானால் எப்படி பதில் சொல்லுவது உள்ளிட்டவற்றை நன்கு உணர்ந்தே ஊடக பொறுப்புணர்வுடன் எழுதுபவர் என்பதால் அவர் பதிவை மவுனமாக படித்துச் செல்வேன், குறிப்பாக பின்னூட்டங்களையும்.

தோழர் செங்கொடியின் பதிவுகள் கடந்த பிப்ரவரியில் பொதுப்பார்வையில் இருந்து மூடப்பட்டு இருந்தது, உள்ளே நுழைந்து படிக்க கடவுச் சொல்லெல்லாம் கேட்டது, நான் உள்ளே செல்ல முயற்சிக்கவில்லை, காரணம் ஒருவேளை கொள்கை அடிப்படையில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கிறாரோ அப்படிப்பட்டவற்றை படிக்கத் தேவை இல்லை என்று விட்டுவிட்டேன், தமிழ்மணம் தொடுப்பிலும் அவரது இடுகைகளைக் காண முடியவில்லை, இதற்கு இடையே மார்ச் துவக்கத்தில் கூகுள் ப்ளஸ் மூலம் அவரது இடுகைக்கான இணைப்புகள் கொடுக்கபட்டிருந்தது, உள்ளே சென்று படித்த போது அதிர்ச்சியே மிஞ்சியது. மதரீதியிலான விமர்சனங்களை எழுதுபவர்கள் தொடர்ந்து அதனை செய்யமுடியாது, அதற்கான அச்சுறுத்தல்களை சந்தித்தே ஆகவேண்டும் என்பதை உணர்ந்த போது கிட்டதட்ட வியர்த்தே விட்டது.

பொதுவாக மதவாதம் பற்றிய விமர்சனங்களை மதவாதிகள் சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்பது தெரிந்தவிடயம் என்றாலும் அதனை எதிர்க்கும் செயல்களில் இவ்வளவு தூரம் கீழ் இறங்குவார்கள் என்பது கொஞ்சம் கற்பனைக்கு எட்டாதவை என்றாலும் மதவாதிகளை விமர்சனம் செய்பவர்கள் பின்விளைவுகளை கொஞ்சம் கூடுதலாகவே நினைத்துக் கொண்டு தான் எழுதவேண்டியுள்ளது, சென்ற ஆண்டில் 'கேரளாவில் கை எடுக்கப்பட்ட பேராசிரியர் ஒருவரை நினைவு கொள்க'. தோழர் செங்கொடிக்கு கை எடுக்கப்படவில்லை என்பது ஆறுதல் ஆனது என்றாலும், அவர் பணிபுரிந்த நாட்டில் இருந்து மிரட்டப்பட்டு தமிழகம் துறத்தப்பட்டிருக்கிறார். ஒரு மதவாத நாட்டில் இருந்து அந்த மதத்திற்கு எதிரான கருத்துகளை எழுதியது அவர் செய்த அவரது கொள்கை அளவில் தவறு என்று சொல்லமுடியாது, ஆனால் அதனால் தனக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே உணர்ந்திருந்து எழுதுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டு இருந்ததை அவரது 'முட்டாள்' தனம் என்றே நினைக்கிறேன். கம்யூனிசம் பேசி முதலாளித்துவத்திற்கு எதிராக பேசுபவர்கள் பலர் பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணி செய்பவர்களாக இருப்பது முரண் என்பது போல் தான் தோழர் செங்கொடி கம்யூனிசம் பேசுபவர் முதலாளித்துவத்திற்கும். மதவாதத்திற்கும் எதிரானவர், அவற்றிற்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் ஒரு நாட்டில் அவர்களின் கீழ் வேலைப் பார்ப்பதும், அதை தனிமனித பொருளாதார தோற்றுவாயாக நினைத்திருந்ததும் கொள்கை முரண், கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு வேலைக்குச் சென்றவர் அங்கு அடக்கிக் கொண்டு இருந்தால் பிரச்சனை வந்திருக்காது. ஆனால் அவ்வாறு செய்யாமல் இருந்தது அவருடைய முட்டாள் தனம் என்றே திரும்பச் சொல்கிறேன், இங்கு நான் 'முட்டாள்' என்று குறிப்பிடுவதற்கு நண்பர் செங்கொடி சினந்தாலும் பரவாயில்லை, அவர் இரண்டு குதிரை மீது சவாரி செய்ய முயன்றிருக்கிறார் என்பதால் இவ்வாறு சொல்கிறேன்.

இங்கே ஏன் தலைப்பில் வினவு இடம் பெற்றுள்ளது ? யாரோ துரப்ஷாவுக்கு கட்டுரைகள் எழுதிய வினவு குழு, தோழர் செங்கொடி வேலைப் பறிபோய் உயிருக்கு பயந்து தமிழகம் திரும்பியது பற்றி வினவு பதிவில் எந்தக் கட்டுரையும் இடம் பெறவில்லை, புனைவு எழுதி சீண்டப்பட்டது போல் தனிப்பட்ட ஒரு பதிவர் பிரச்சனையாகவும் தெரியவில்லை. நடந்தது மதவாத விமர்சனம் தொடர்பாக நடந்த அச்சுறுத்தல் மற்றும் வேலை இழப்பு அதன் மூலம் பணிய வைக்க நடந்த முயற்சி, அதில் மதவாதிகள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை நேர்மையுடன் ஒப்புக் கொள்ளவே நேரிடுகிறது, இவற்றை அறிந்தும் வினவு குழுவினர் அதுபற்றிப் எழுதாமல் விட்டது, தோழர் செங்கொடியின் இரட்டை நிலைப்பாடோ என்று எண்ண வைக்கிறது, வினவுக்குழு விளக்கினால் நன்று.


மதவாதம் பற்றி எழுதும் போது சொல்ல வந்ததை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் சிந்திக்க மறுக்கும் மதவாதிகள் சினந்து எழுவார்கள் என்பது தெரிந்தவிடயம் தான், எனக்கு அவ்வப்போது 'நீ வேலை செய்யும் நாட்டின் சட்டம் ஒழுங்கு உனக்குத் தெரியுமா ?' என்று மிரட்டல் விடுகின்றனர், இத்தனைக்கும் நான் எந்த மதத்தையும் நேரிடையாக விமர்சனம் செய்வதே கிடையாது, அது எனது கோழைத்தனம் என்றே நான் ஒப்புக் கொண்டாலும், அத்தகைய கோழைத்தனங்களுக்கு மதச் சகிப்புத்தன்மையும், கருத்துரிமையை மதிப்பதையும் சொல்லிக் கொடுக்காத மதங்களே காரணம் என்பதை ஒப்பு நோக்க எனது கோழைத்தனம் எனக்கு அவமான ஒன்று அல்ல, அவை மதவாதிகளுக்கும், அவர்களின் சகிப்புத்தன்மைகளுக்கும் அவர்களே பிறரிடம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவமானம்.

இருந்தாலும் மதவாத எதிர்ப்பாக எழுதுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டியவை இவை என்பது தோழர் செங்கொடிக்கு நேர்ந்த கொடுமைகளில் இருந்து அறிந்து கொள்ள வேண்டியவை,

1. மதவிமர்சனம் செய்பவர்களுக்கு நேரிடையாக, மறைமுகமாக மிரட்டல் ஏற்படலாம்
2, தோழர் செங்கொடிக்கு நேர்ந்தது போல் வேலை இழப்பும் பொருளாதாரா இழப்பும் ஏற்படலாம்
3. கடுமையான மன உலைச்சல் ஏற்படலாம் (இக்பால் செல்வன் என்பவர் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது, என்று கூறி பதிவு எழுதுவதை விட்டு, பதிவுகளை மூடிவிட்டார்)
4. அனுமதியில்லாமல் (பதிவர்) புகைப்படங்களைச் சுட்டிக்காட்டி வசைபபடலாம்
5. உயிருக்கு ஆபத்து (?) அந்தளவுக்கு இன்னும் நிலைமை மோசமாகவில்லை என்பது தான் தற்போதைய ஆறுதல்.

*********

நாம் தமிழ் சூழலில் தமிழில் எழுதுகிறோம் என்று தமிழன் என்பதற்காகப் பெருமைபட்டாலும், இதே தமிழ் சூழலில் மதவாதிகளும் அங்கமாக அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது எழுதி மயிரையா புடுங்கப் போகிறோம் ? என்று வெறுப்பாகவும் உள்ளதை நான் இங்கே பதிவு செய்து கொள்கிறேன், தாய்மொழி, இனம் இவற்றையெல்லாம் வெற்றி கொள்ள மதவாத விசச்செடிகள் ஒரு குறிப்பிட்ட இன சமூகத்தில் ஊன்றப்படும் போது நாளடைவில் அச்சமூகம் தனக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டு சாகும், இதற்கு தமிழ் பேசுபவனும் விதிவிலக்கு இல்லை.

நான் எந்த ஒரு தனிப்பட்ட மதத்திற்கும் எதிரி அல்ல, அதே போல் ஒரு குறிப்பிட்ட மதக் குழுதான் அந்த மதத்தின் அடையாளம் என்று சொல்லப்படுவதையும் நான் புறக்கணிக்கிறேன், ஏனெனில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் என்னிடையே நல்லத் தோழமையில் உள்ளனர்.


6 ஜூன், 2011

இக்பால் செல்வனும் முகமது நபி படமும் !

பதிவர் இக்பால் செல்வன் முந்தைய நாள் பதிவொன்றில் குரானில் குறிப்பிட்டிருக்கும் ஏசு (இஸ்லாமியர்களுக்கு ஈஸா அலை) மற்றும் முகமது பற்றிய குறிப்புகளை சுரா (செய்யுள் எண்) எண் உள்ளிட்டவைகளைக் குறிப்பிட்டு ஒப்பிடுகளை எழுதி இருந்தார், அதாவது குரானில் முகமதுவை ஒரு கொள்ளைக்காரர் ரேஞ்சுக்கு தான் குறிப்புள்ளது ஆனால் ஏசு பற்றி உயர்வாகவே குரான் பேசுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக ஏசு திருமணம் ஆகாதவர், பெற்றோர் உடலுறவாள் பிறக்காதவர், ஏசுவின் தாயார் ஆசிர்வதிகப்பட்டவர் என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளது, ஆனால் அத்தகைய சிறப்புகள் ஒன்றும் முகமதுவுக்கு குரானில் இல்லையே என்று சுட்டிக்காட்டி இருந்தார், எனக்கு தெரிந்தவகையில் இக்பால் செல்வன் குறிப்பிட்டுருந்தவை அனைத்தும் குரானைத் தொட்டே இருந்தன. இஸ்லாமிய பதிவர்களும் (சுவன பிரியன் மற்றும் ஆசிக்) அவை குறித்த ஆழமான மறுப்புகள் எதையும் எழுதவும் இல்லை. ஆனால் முகமதுவை ஒப்பிடுகையில் ஏசு ஒன்றும் புனிதமானவர் இல்லை என்பதை சொல்வதற்கு முனைந்திருந்தனர். இந்த ஒப்பீடு இடுகையில் இக்பால் செல்வன் ஏசு மற்றும் முகமது பற்றீய படங்களை இணைத்திருந்தார்.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் அவரது இடுகையின் சாரம் பற்றி எதுவும் பேசாது, 'அவர் முகமதுவின் படத்தை வெளியிட்டுவிட்டார், எனவே பதிவுலக தினமலமாக செயல்படுகிறார்' என்று திரு ஆசிக், திரு இக்பால் செல்வன் மீது எழுத்து வன்முறையை காட்டி இருக்கிறார்.

* முகமது மற்றும் ஏசு (ஈஸா அலை) ஆகியோர் குரானில் குறிப்பிடப்பட்டிருக்கும் இறைத்தூதர்கள் ஆவார்கள், முகமது பற்றி எழுதிவிட்டால் பொங்குவது ஏன் ஏசுவிற்கு பொங்குவதில்லை, ஏசுவின் படத்தை எவர் வேண்டுமானாலும் போடலாமா ? ஒரு இஸ்லாமியருக்கு முகமது மேல் எவ்வளவு அன்பு இருக்கிறதோ அதே அளவுக்கு ஏசுவின் மீதும் இருக்க வேண்டும் அல்லவா ? அதையெல்லாம் விட அல்லா தன்னைத் தவிர வேறு எவர் மீதும் இறைக்கு சமமான மதிப்பு வைத்திருக்கக் கூடாது என்று குரானில் சொல்லுகிறார், ஒரு இஸ்லாமியருக்கு அல்லாவைத் தவிர்த்து அனைவரும் மனிதர்களே, பிறகு ஏன் முகமது பற்றிய கேள்விகளுக்கு முறையான பதில் கொடுக்காது, கேட்டவர்களின் குடும்ப நலம் விசாரிக்க வேண்டும் ?

* அல்லாவைத் தவிர்த்து யாரையும் குறியீடாகக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே முகமது தன்னைப்பற்றிய படங்கள் கூட கூடாதென்றார். ஆனால் சவுதி அரேபியாவில் அவர் பயன்படுத்திய செருப்பு மற்றும் வாள் ஆகியவை பாதுக்காப்பாக பலர் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. ஒருவரின் தனிப்பட்ட அடையாளம் என்பது வெறும் அவருடைய முகம் மட்டும் தானா ? ஒருவரைப்பற்றி நினைக்க அவர் பயன்படுத்திய பொருள்கள் பயன்படாது என்பது உண்மை என்றால் அவர் பயன்படுத்தியவற்றை பாதுகாப்பது எதற்காக ?

* முகமது பற்றி நிறைய டாக்குமெண்ட்ரிகள் எனப்படும் குறும்படங்கள், கார்டூன் படங்கள் பலமுறை வெளிஆகி இருக்கிறது, முகமது படத்தை வணங்கக் கூடாது, கேலி செய்யக் கூடாது என்பது மட்டும் தான் இஸ்லாமிய கட்டுப்பாடு அன்றி முகமது படத்தை வரைந்தவர்கள் கையை வெட்ட வேண்டும் என்று எங்கும் சொன்னது போல் தெரியவில்லை, மேலும் டென்மார்க் நாளிதழ் ஒன்றில் முகமதுவை கொச்சைப்படுத்துவதாக வரைந்திருந்த கார்டூனுக்குத்தான் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர், அதை மறுவெளியிடு செய்த தினமலர் தமிழக இஸ்லாமிய பெருமக்களின் வேண்டுதலால் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டது, ஆனால் முகமது பற்றிய டாக்குமெண்ட்ரிகள் அரபு நாடுகளில் இதுவரை தடைசெய்யப்பட்டதாக தெரியவில்லை. டாக்குமெண்ட்ரிகளில் முகமது பற்றிய படங்கள் இல்லாது எடுத்துவிடமுடியுமா ? நான் பார்த்த டாகுமெண்டிரிகளில் முகமது காணப்படுகிறார். பிறகு ஏன் அவற்றை அரபு நாடுகள் தடைசெய்யவில்லை ?

பதிவர் இக்பால் செல்வன் வெளி இட்டிருந்த முகமது குறித்தப்படத்தில் எந்த ஒரு கேலியும் இல்லை. இதே போன்ற படங்களை இஸ்லாமியர்கள் துணையுடன் வரையப்பட்டு குறும்படங்கள், பிரச்சாரப்படங்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன, பதிவர் இக்பால் செல்வன் கேலிச்சித்திரம் வரைந்திருந்தாலோ, முகமது பற்றி உண்மைக்கு புறம்பாக எழுதி இருந்தாலோ நான் கண்டனம் தெரிவித்திருப்பேன், எம் போன்றவர்கள் தினமலர் டென்மார்க்கின் கார்டூனை வெளி இட்ட உடனேயே கண்டனம் தெரிவித்திருந்தோம் அன்று மாலையே இணையப்பதிப்பில் இருந்து அதனை நீக்கிவிட்டார்கள்,

முகமது பற்றி இஸ்லாமியர்கள் எடுத்த குறும்படம் :

http://en.wikipedia.org/wiki/Muhammad:_Legacy_of_a_Prophet
http://video.google.com/videoplay?docid=-5588678537059723932#

மற்றொரு டாக்குமெண்ட்ரி
http://www.sodahead.com/united-states/have-anyone-seen-a-movie-of-muhammed/question-748903/?link=ibaf&imgurl=http://www.iranian.com/main/files/blogimages/message.jpg&q=Muhammad:_Legacy_of_a_Prophet
http://www.iranian.com/main/files/blogimages/message.jpg
http://en.wikipedia.org/wiki/Mohammad,_Messenger_of_God

முகமதுவின் படைத்தைப் போட்டதாலேயே இஸ்லாத்தை கொச்சைபடுத்திவிட்டார் இக்பால் செல்வன் என்கிற கூப்பாடும் அவர் மீதான தூற்றலும் நிராகரிக்கத்தக்கதாகும்.

தொடர்புடைய சுட்டிகள் :

28 அக்டோபர், 2010

மதவாதிகளால் கொலை செய்யப்பட்ட திருநங்கை !

திருநங்கைகள் பற்றி பரவலான புரிந்துணர்வு துவங்கி உள்ள காலகட்டத்தில் இன்னும் கற்காலத்தில் இருந்து கொண்டு அவர்களை கொல்லும் (மத) அமைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.

பால் சார்ந்த உடலமைப்பு மற்றும் மனம் இவை ஒன்றியிராத மனிதப் பிறவிகளே திருநங்கைகள் எனப்படுவர். பருவ வயதை நெருங்கும் முன்பே மனம் சார்ந்து தன்னை எதிர்பாலினம் என்று உணர்ந்து அதில் நாட்டம் கொண்டு அவ்வாறு வாழ முடிவு செய்பவர்கள் திருநங்கைகள். இவை பெற்றோருக்கு அதிர்ச்சி என்றாலும் ஐரோபிய நாகரீகம் சார்ந்த வெளிநாடுகளில் பரவலாக அவர்களின் உணர்வுகள்
புரிந்து கொள்ளப்படுகிறது. திருநங்கைகளும் தற்பால் விரும்பிகளும் ஒன்றல்ல, தற்பால் விரும்பிகள் தங்கள் பாலினத்தை வெறுப்பது இல்லை, தனது பால் உறுப்புகளையும் வெறுப்பதில்லை அதே போன்று பாலியல் நாட்டத்தில் தன்பாலினத்தைச் சேர்ந்தவர்களையே நாடுவார்கள், எதிர்பாலினத்தை அவர்கள் பாலியல் நாட்டத்திற்கு விரும்பிவதில்லை என்றாலும் அவர்களை தனிமனிதனாக வெறுப்பதில்லை. திருநங்கைகளாக உணர்ந்து கொண்ட பின் தங்களது பால் உறுப்பை வெறுத்து முற்றிலுமாக நீக்கிக் கொண்டு பெண்ணாக மாற விழைபவர்களே திருநங்கைகள், இவர்களும் தற்பால் சேர்கையாளர்களும் ஒன்று அல்ல, திருநங்கைகள் பாலியல் ரீதியாக ஆண்கள் மீது நாட்டம் கொண்டிருந்தாலும் மன அடிப்படையில் அவர்கள் தங்களை பெண்ணாகவே நினைப்பவர்கள். தன்னை பெண்ணாக உணர்ந்துள்ள ஆணே திருநங்கை, அதே போன்று ஆணாக உணர்ந்து கொண்ட பெண்களும் உள்ளனர் என்றாலும் அவர்களுக்கு திருநங்கைகளுக்கு இருக்கும் அளவுக்கு சமூகச் சிக்கல் இல்லை, காரணம் ஒரு பெண் தன்னை ஆணாக நினைத்து அதன்படி நடந்து கொண்டாலும் வீட்டை விட்டு துறத்தும் நிலைக்கு சமூகம் அவர்களை தள்ளுவது கிடையாது ஏனெனில் பெண் ஆணாக தன்னை உணர்வதை ஆளுமை என்ற அளவில் மட்டுமே சமூகம் கருதுகிறது. ஆண் பெண்ணாக உணரும் போது
உடலியல் மற்றும் உணர்வியல் தாழ்ச்சி சமூகக் கேடு என்பதாக அவர்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுகிறார்கள். ஏன் உடலும் உள்ளமும் ஏற்றவாறு பொருந்தவில்லை, அதை சரிசெய்ய முடியுமா முடியாதா
என்பதை எந்த ஒரு அறிவியலும் முற்றிலுமாக விளக்கவில்லை மாறாக மனம் மற்றும் உளவியல் என்பதாகவே வகைப்படுத்தி இருக்கிறார்கள்.


படைப்பு படைத்தவன் என்றெல்லாம் புகழ்பாடும் மதவாதிகள் படைப்பு சரி இல்லை என்றால் படைத்தவனை விட்டுவிட்டு படைப்பை சிதைப்பது எந்தவகையில் ஞாயம் என்று தெரியவில்லை, இறைவன் நாடினால் நன்மை கிடைக்கும் என்று ஆசி கூறுவோர், திருநங்கைப் பிறப்புகளை
இறைவன் நாடவே இல்லை என்பதையாவது ஒப்புக் கொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பார்களா ? அவ்வாறு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் கூட ஏன் இவர்களுக்கு மட்டும் இறைவன் குறைவாக நாடினான் என்ற கேள்வியாவது கேட்டுக் கொள்வார்களா ? இந்தியாவில் இந்து மதத்தினாரால் திருநங்கை பிறப்புகள் புரிந்து கொள்ளப்படுகிறது காரணம் மகாபாரதத்திலேயே அர்ஜுனன் திருநங்கையாக மாறிய கதை உண்டு என்று நம்புவோர் இந்தியாவில் திருநங்கைகளின் வாழ்வியல் நிலையை எண்ணிப் பார்கவும், எனக்கு தெரிந்து ஒரே ஒரு வடமாநில எம் எல் ஏ என்பது தவிர்த்து அவர்களில் ஒருவர் கூட அரசு உயர்பதவி வகித்தது கிடையாது. இந்தியாவில் 95 விழுக்காடு திருநங்கைகளுக்கு பாலியல் தான் தொழில் என்பதாக தள்ளப்பட்டுவிட்டனர், பின்னர் இவர்களை இந்து மதத்தினர் மதிக்கின்றனர் என்று கொள்ள முடியும் ?

ஒரு இஸ்லாமிய ஆண் திருநங்கையாக ஆகிப் போனது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதாக ஓட ஓட விரட்டி வெட்டிக் கொள்ளப்பட்டுள்ளார். படிக்கும் போதே பதறியது. சவுதி இளவரசர் (சவுதி மன்னரின் மகளின் மகன் அதாவது மகள் வயிற்றுப் பேரன்) ஒருவர் இங்கிலாந்தில் தன்னுடைய உதவியாளர் (அவர்கள் மொழியில் அடிமையை) அடித்தே கொன்றார், விசாரணையில் அந்த இளவரசர் ஓரின விரும்பி என்று தகவல்கள் தெரியவந்ததாக இங்கிலாந்தின் செய்தி இதழ்கள் குறிப்பிடுகின்றன. மேற்கண்ட குற்றச் சாட்டை வைத்து சவுதி இளவரசரை இம்மத அமைப்புகள் இஸ்லாத்தின் பாலியல் கொள்கைக்கு எதிரானவர் என்று கூறி தூக்கிலடச் சொல்லி போராட்டம் நடத்துமா ? இதெல்லாம் நடக்காது ஏனெனில் சவுதி என்னும் புண்ணிய பூமியில் பிறந்த இளவரசர் அப்படி பட்டவராக இறைவன் படைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றே நம்புவார்கள் மற்றும் இவை இஸ்லாத்து எதிராக கிறித்துவ நாடான இங்கிலாந்து இட்டுக்கட்டிப் பரப்பப்படும் செய்தி என்றே நம்புவார்கள்.

ஒருவருக்கு எதிர்பாராமல் நடக்கும் திடீர் விபத்து அல்லது குணப்படுத்த இயலாத திடீர் நோய் என்பது இறைவன் அவரை நாடவில்லை என்பதால் ஏற்பட்டது என்று நம்பவும் பரப்பவும் முடிந்தால் உடல் ஊனம் மன ஊனம் இவைகளும் மற்றும் திருநங்கை பிறப்புகளும் கூட அவ்வாறே ஏற்பட்டது என்று நம்பலாமே, அவர்கள் வழியில் அவர்கள் செல்கிறார்கள் இஸ்லாமிய பெயரை தாங்கி இருந்தார்கள் அல்லது இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு இந்த மரண தண்டனை என்றால்
குறையாக படைத்த இறைவனுக்கு என்ன தண்டனையோ ?

எங்கேயோ படித்த கவிதை தான் நினைவுக்கு வருகிறது,

ஊனமுற்றோர் கடவுளின் குழந்தைகள் என்றால்
உடனடியாக குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டியது
கடவுளுக்குத்தான்
!


தொடர்புடைய செய்தி :

திருநங்கை மின்னல் மீனா கொலையில் 3 பேர் கைது

திருச்செந்தூர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த திருநங்கை சேக் அலி என்கிற மின்னல் மீனா(35), கடந்த செப்டம்பர் மாதம் 17 ம் தேதி காலையில் காட்டுப்பகுதியில், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.


பிரேதத்தை கைப்பற்றிய ஆறுமுகநேரி போலீசார் கொலையாளிகளை தேடிவந்தனர்.

இக்கொலை தொடர்பாக காயல்பட்டணத்தில் புரோட்டா கடை வைத்துள்ள தாஜீதீன்(28), ஆட்டோ டிரைவர்கள் ஜாபர் சதீக்(24), ஹசன்(எ) முகம்மது ஹசன் (32) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், ‘எவ்வளவு கண்டித்தும் கேட்காமல், இஸ்லாம் மத கோட்பாடுகளுக்கு மாறாக, பெண் வேடமிட்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதால் கொலை செய்ய முடிவெடுத்தோம்.

இதனால் செப்டம்பர் மாதம் 16 ம் தேதி இரவு மின்னல் மீனாவை கம்பால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டோம்’’என்று தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பான உமர் பாரூக் தலைமறைவாகவுள்ளார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

சுட்டி : http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42072

பின்குறிப்பு : இந்தப் பதிவு எந்த மதத்திற்கு எதிராகவும் எழுதப்படவில்லை, மதவாதிகளின் செயல் மட்டுமே விமர்சனம் செய்யப்பட்டுள்ளது என்பதை மதவாதிகள் அல்லோதோர் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்

7 டிசம்பர், 2008

டிச 6 : தேன்கூட்டில் கல் எறிவதற்கு முன் ...

இஸ்லாமியர்களில் தீவிரவாதிகளை உருவா(க்)கிய நாள் தான் டிச 6. அந்த நிகழ்வுகளைத் தடுக்காமல் இருந்ததற்காக காங்கிரசிற்கும் இதில் பங்கு உண்டு. ஆட்சி பறிபோய்விடப் போகிறது என்ற பயத்தில் மறைந்த நரசிம்மராவ் கண் எதிரே நடந்த இந்த சமத்துவ இடிப்பை தடுக்காமல் இருந்துவிட்டார். கரசேவை என்ற பெயரில் தமிழ்நாட்டிலிருந்தும் செங்கற்கள் அனுப்பப்பட்டது. அதற்கு அம்மாவும் ஆசி கொடுத்தனுப்பினார். 1992 டிச 6 அந்த பயங்கரம் நடந்த அன்று நான் ஹைதராபாத்தில் தான் இருந்தேன். ஊரடங்கு சட்டம் போடவில்லை என்றாலும் நகரே மயான அமைதியில் இருந்தது. போகும் வரும் வாகனங்களெல்லாம் சோதனைக் குட்படுதப்பட்டது. பெரிய விரும்பத்தகாத (அசம்பாவிதங்கள்) நிகழ்வுகள் எதும் அங்கு நடைபெறவில்லை. மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வந்தது நகரம்.

1992 டிசம்பர் 6 க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவிற்கு 'திக்' 'திக்' நாளாகவே டிச 6 இருப்பதை அனைவரும் அறிவோம், அன்றைய நாள் பேருந்து பயணம் செய்பவர்கள், தொடர்வண்டி பயணம் செய்பவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அச்சத்துடனேயே பயணம் செய்கிறார்கள். இவை ஏன் ? ஏன் ? தனிமனித சுதந்திரத்தையே இழந்து ஆடையையும் அவிழ்த்து சோதனை செய்யும் இந்த அவமானம் பொதுமக்களுக்குத் தேவையா ? இதைத் தூண்டியவர்கள் இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள். அடிப்பட்ட பாம்பும் சீறுவது இயற்கைத் தானே ?

பெரும்பாண்மை என்கிற திமிரில் பாபர் மசூதியை இடித்த கயவர்கள் இதையெல்லாம் இப்போதாவது நினைத்துப் பார்க்கிறார்களா ? என்றால் அதுவும் இல்லை, அதன் பிறகும் அங்கங்கே ஒரிசா பயங்கரம், கோத்ரா சம்பவம் என மேலும் மேலும் இதைத் தூண்டிவிடுவதன் மூலம் மதவெறி அணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சிறுபான்மையினராக இருப்பவர்கள் என்ன செய்வார்கள் ? துடிப்புள்ள இளைஞர்கள் பழிக்கு பழிவாங்கவேண்டும் என்று தான் துடிப்பார்கள். 1992 க்கு பிறகு முஸ்லிம் அமைப்புகள் பல தோன்றியதற்கு இதுவே காரணம். ஆர்எஸ்எஸ் என்று ஒரு அமைப்பாக இருந்த இந்து சார்ப்பு அடிப்படை வாதம், சங்கர்பரிவார், பஜ்ரங்தள் போன்ற பெயர்களிலும் சிவசேனா, பாஜக என அரசியல் அமைப்புகளாகவும் வளர்ந்துவிட்டன. இதே வளர்ச்சியில் இஸ்லாமிய அமைப்புகளில் சிமி மற்றும் ஏனைய அமைப்புகள் உருவாகிவிட்டன.

மோடி போன்ற அரசியல்வாதிகளில் ஆசிர்வாதத்துடன் நடைபெறும் பயங்கரவாதங்களை எதிர்கொள்ள தீவிரவாதத்தை கையில் எடுப்பதையும் அதை மறைவாக தயார் செய்யும் நிலைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். டிச 6 இஸ்லாமியர்கள் அவமானம் அடைந்த நாளாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டு பழிக்கு பழிவாங்கும் நடவெடிக்கைகளுக்கு தூபம் போடப்படுகிறது. யார் காரணம் ? ஒருவரின் இருப்பிடம் தேடி வீடுபூந்து ஒருவரை அடிக்கிறோம், அவர் நம்மை தேடிவந்து அடிக்காவிட்டாலும் நாளை நாம் அந்த வழியாக போனால் சலாம் போட்டு தேனீர் கொடுத்து விருந்து வைப்பாரா ?

டிசம்பர் 6 கேடுகெட்ட செயலால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான், தூண்டிவிட்ட தலைவர்களும் அதனை ஆதரித்த அரசுகளும் போலிஸ் பாதுகாப்பில் இருப்பார்கள். இதுபோன்ற இருபக்க தீவிரவாத அமைப்புகள் மோதிக்கொண்டால் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளவேண்டியது தானே, ஏன் பொதுமக்களை கொல்லவேண்டும் ? இந்த கேள்வி இஸ்லாமிய அமைப்புகளுக்கும் எழுந்திருக்கலாம் அதனால் தான் டிச 6 தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் பெரிய அளவில் நடக்கவில்லை. அப்படி நடந்துவிட்டால் பொதுமக்கள் அனைவருமே இஸ்லாமியரின் செயலாக அதனை கருத ஆரம்பித்துவிடுவர் என்றே அடக்கிவாசிக்கின்றனர். மற்றபடி அதனை மறந்திருக்க மாட்டார் என்பதை அரசும் நம்புவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறது.


(பாபர் மசூதி இடிப்பு கரசேவைக்கு ஆர்வமுடன் சென்ற "சாதுக்கள்" மேலும் படங்களுக்கு...)

டிசம்பர் 6,

பொது இடங்களில் அரசுக்கு பாதுகாப்பு செலவுகள் கூடுதலாகும் நாள் (பொதுமக்கள் வரிப்பணம்)

பொதுமக்கள் அச்சம் அடையும் நாள் (குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றை செய்ய முடியாமல் போவது)

அரசியல்வாதிகள் பாதுகாப்புடன் இருக்கும் நாள். (கூடுதல் பாதுகாப்பு...அரசு வரிப்பணம்)

இந்த டிசம் 6 இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு / நினைவு நாளாக அறிவிக்கலாம். அட மூடர்களே, அடுத்தவர் உடைமை என்னும் தேன்கூட்டிற்குள் கல் எறியும் முன், இனியாவது கேடுகெட்ட செயலைச் செய்யும் முன், பொதுமக்கள் பின்னாளில் சந்திக்கப் போகும் தீமைகளையும், அவதிகளையும் நினைத்துப் பாருங்கள். ஆனால் இதுபற்றி விழிப்புணர்வு ஊட்டாமல் ஆண்டுக்கு ஆண்டு ஊடகங்களால் டிசம்பர் 6 ஐப் பற்றி பதிய வைப்பதெல்லாம் முஸ்லிம் தீவிரவாதிகளால் எங்கும் குண்டு வெடிக்கலாம் என்பது மட்டுமே.

சென்ற ஆண்டு கட்டுரை இங்கே

27 நவம்பர், 2008

தமிழில் தேசிய கீதம் - இராமகோபலன் ஆ'வேஷம் !

இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை: புதுச்சேரியில், "ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி, சேகர் ஆகியோர், பிரிவினையைத் தூண்டும் பேச்சுக்கள் பேசி இருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

"தமிழகம் பாகுபட்டு விடும், தமிழில் தேசிய கீதம் பாடக்கூடிய நேரம் விரைவில் வரும்' என்று பேசிய பேச்சு, சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. ஞானசேகரன், சுதர்சனம் உள்ளிட்ட பிரிவினைவாத எதிர்ப்பு காங்கிரஸ் தலைவர்கள், இயக்குனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்கள் முப்பது ஆண்டுகளாக போராடி வருகின்றனர் எனக் கூறும் இவர்கள், முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் சினிமா தானே எடுத்துக் கொண்டிருந்தனர். சினிமாவில் மார்க்கெட் சரிந்து, முகவரி இல்லாமல் போய்விட்ட இவர்கள், புலி ஆதரவு முகமூடி அணிந்து, பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்கி, அவரை தலைவராக சித்தரிப்பது கேவலத்திலும், கேவலம். தமிழகம் பிரிவினையை ஏற்றுக்கொள்ளாது (தமிழகம் இராஜஜி ஆட்சியிலா இருக்கு ?). கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்றெல்லாம் உதாரணம் காட்டி எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை (இப்படித்தான் பேசி பேசி சூத்திர பசங்க ஆட்சியை பிடிச்சு நாட்டை கெடுத்துட்டானுங்க) நாளை நாட்டிற்கு பெரும் தலைவலியாக அமைந்து விடும்.

அந்த கருத்தரங்கில் பேசப்பட்ட பேச்சுக்களை உளவுத்துறை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காஷ்மீர், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் தனி நாடு கோரிக்கை வைத்து பேசியபோது, நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தால் இன்று அங்கு பிரிவினைவாதம் பேயாட்டம் ஆடுகிறது (அங்கெல்லாம் பிஜேபி, இந்துத்துவாக்களுக்கு அட்வைஸ் செய்யும் கடமை இல்லையா ? ஐயோ பாவம்) . எனவே, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தமிழர்கள் படும் துயங்களுக்கு குரல் கொடுக்காமல், இந்த சினிமாக்காரர்கள், இலங்கை பிரபாகரனுக்கு துதி பாடுவதற்கு காரணம், இனப்பற்றா, இல்லை பணப்பற்றா?பாரதிராஜா, செல்வமணி, வி.சேகர் போன்ற கடல் கடந்த தேசபக்தர்கள், இலங்கையில் சென்று போராடினால் பொருத்தமாக இருக்கும்.இவ்வாறு ராம.கோபாலன் அருள்வாக்கினார்.

- நன்றி தினமலர்
******

தமிழக சு.சாமி இராம கோபல் ஐயா,

அப்படியே மும்பை பக்கம் போய் இப்படி ஒரு அறிவுரையை ராஜ் தாக்ரே ஐயாவிடம் சொல்லி கண்டனம் தெரிவித்துவிட்டு வரலாம். மாராட்டியர் தவிர மாற்றாற்கு இங்கிடமில்லை என்று பல மாநில மக்களின் உடமைகள் உயிர்கள் கூட அங்கு தான் சூறையாடப்படுகிறது. இந்து... இந்து, இந்தியா இந்து நாடு என்று கூவி தேசியவாதம் பேசி இந்து மதம் காப்பதற்கு எடுக்கும் முயற்சியைப் போலவே, நேராக நேபாளத்திற்கு சென்று நீங்களெல்லாம் போராடி இருந்தால், உலகிலேயே 'ஒரே இந்து நாடு' என்று நீங்களெல்லாம் பெருமை பொங்க கூறிய இந்து நேபாளத்தை மாவோயிஸ்டுகளிடமிருந்து மீட்டு இருக்கலாம், செய்தீர்களா ? இனி செய்வீர்களா ?

பாபர் மசூதியை இடிக்க மண்வெட்டியை தூக்கிக் கொண்டு ஓடி மதச்சார்பு பிரிவினை வாதம் பேசும் தாங்களெல்லாம் தமிழரென்று கூறிக் கொண்டு தமிழினத்துக்காக போராடுவதற்கு, ஆதரவாக இருப்பதற்கு எதிராக எச்சில் உமிழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறானே அதுதான் தமிழன். இதே போல் மாநிலத்துக்கு தனிக்கொடி கண்ட கர்நாடகத்தில் இதே சூழல் இருந்திருந்து உங்களைப் போன்றவர்கள் அங்கே அட்வைஸ் மழையும், கண்டன ஆசிட்டும் பொழிந்திருந்தால் உங்களையெல்லாம் அவர்கள் தக்கபடி பாராட்டி இருப்பார்கள். தமிழன் இழிச்ச வாயந்தேன்.

1 நவம்பர், 2007

மதன் சாவலின் சக்கர வியூகம் !

குழந்தை வயிற்றுக்குள்ளேயே கதை கேட்ட கதை வடமொழி இதிகாசத்தில் இரண்டு இருக்கிறது. இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதனும், அர்சுனன் மகன் அபிமன்யுவும் கருவாக இருக்கும் போதே கதை கேட்டவர்களாம். பிரகலாதன் நாரதரிடம் கதை கேட்டு தந்தை சொல் மந்திரத்தை விட நாராயண நாமம் சிறந்ததாக சொன்னான், அதனாலேயே தன் தந்தை அழிவுக்கு காரணமாக இருந்தான். அந்த கதையின் முடிவில் தான் நரசிம்ம அவதாரம். மற்றொரு கதை அபிமன்யு பற்றியது, மகாபாரத கிருஷ்ணன் அபிமன்யுக்கு தாய்மாமன். கிருஷ்ணனின் தங்கையும் அர்சுனனின் மனைவியுமான சுபத்திரா கர்பமுற்று இருந்த போது கிருஷ்ணன் போர் முறைகள் பற்றியும், வகுக்கும் வியூகங்கள் பற்றியும் கதை சொல்லிக் கொண்டிருந்தார். அதில் சக்ரவியூகம் பற்றி சொல்லும் போது ... சக்ர வியூகம் என்பது சக்கர வடிவில் இருக்கும்... போர் வீரர்கள் வட்டமாக சூழ்ந்து கொண்டு உள்ளே சிக்கியவர்களை ரவுண்டு கட்டி அடிப்பது. அதில் வெற்றிகரமாக நுழைந்து, தந்திரமாக போர் செய்தால் வியூகத்தை உடைத்து அனைத்து வீரர்களையும் கொன்று விடமுடியுமாம். மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான். சக்ர வியூகத்தில் உள்ளே எந்த பக்கமாக ... லாவகமாக நுழைவது எப்படி என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்படி சக்கர வியூகம் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே கேட்டுக் கொண்டிருந்த சுபத்திரா நன்றாக தூங்கிவிட்டாள்,

ஆனால் கதை போக்கை 'உம்...' கொட்டி கேட்கும் ஒலி மட்டும் வந்து கொண்டிருந்ததாம். திடுக்கிட்ட கிருஷ்ணன் ஞான திருஷ்டியில் பார்த்த போது வயிற்றில் இருக்கும் குழந்தை கேட்டுக் கொண்டிருந்த்தை அறிந்து சுதாரித்தாராம். 'இவன் அபிமன்யு...மாபெரும் வீரனாக வருவான்...வரும் பாரத போரில் எதிரிகள் அனைவரையும் அழிக்கும் ஆற்றல் பெற்றவன்...இவனுக்கு சக்கர வியூகத்தை அழிப்பது என்று சொல்லிவிட்டால் பதினெட்டு நாள் யுத்தம் ஒரு பொழுதில் முடிந்துவிடும்.மேலும் அழிக்க முடியாத சக்தி ஆகிவிடுவான் என்று எண்ணி கதையை சொல்வதை நிப்பாட்டிவிட்டாராம். ( சிலர் பத்ம வியூகம் என்றும் சொல்கிறார்கள் எது சரி என்று தெரியவில்லை

அதுபோல் பாரத போர் நடந்த போது 13 ஆம் நாள் யுத்தத்தில் அபிமன்யு தந்திரமாக சக்கர வியூகத்தினுள் நுழைந்துவிட்டான். ஆனால் உள்ளே சென்றதும் தாக்குதல்களை தாக்குபிடிக்க முடியாமல் ஆயுதங்களை கீழே எறிந்துவிட்டு நிராயுதபாணியாக நின்றான். இதுதான் சமயம் என்று சூழ்ந்து பல்முனை தாக்குதல் செய்து அவன் கதை முடிக்கப்பட்டது. அபிமன்யு தானாகவேதான் சென்று சிக்கிக் கொண்டான். அனால் உள்ளே நுழைந்து அழிந்ததற்கு பின்னால் சக்கர வியூக உத்தியை பற்றி சொல்லும் போது பாதியில் நிறுத்திய கிருஷ்ணனின் சூழ்ச்சியும் இருக்கிறது.

******

எந்த பாவமோ, போரோ செய்யாத அப்பாவிகளை, இஸ்லாமிய சமயம் சார்ந்தவர்கள் என்பதற்காகவே ... அவர்கள் பயத்தில் கையெடுத்து கும்பிட்டு ... நிராயுதபாணியாக நின்றவர்களை நிர்வாணப்படுத்தி, வயிற்றை கிழித்து, உறுப்பை சீவி கொன்றதை ... வியூகம் அமைத்துக் (ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டு) கொன்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்... கர்பினிப் பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை கதையை கேட்டு நாளை தங்களை அழித்துவிடும் என்று நினைத்திருப்பார்களோ ?

மதன் சாவல் பா.ஜ.க. தொண்டர்:
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம். அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி:

வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.
பேய் நாடாண்டால் பிணம் தின்னும் ... :(

30 அக்டோபர், 2007

மோடியிசமும் - இந்திய மதச்சார்பின்மை முகமூடியும் !

மோடி வகையறாக்கள் தொகல்காவிடம் சிக்கியது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறதா ? என்று பார்த்தால் அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் மோடிவகையறாக்கள் அப்படி செய்யக் கூடியவர்கள், அவர்கள் தான் செய்திருக்கிறார்கள் என்பதை எல்லோருமே ஊகித்தி இருக்கிறார்கள், தற்போது கிடைத்திருக்கும் ஆதாரம் மதவெறியில் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்ற சான்றிதழ் மாட்டுமே.

குஜராத் கலவரம் தொடர்புடைய சாட்சி அடைப்படையில் வழங்கப்பட்ட நீதிகள்(?), தெகல்கா ஆதாரத்துக்கு முன்பு வெட்கி தலைகுனிகிறது.

இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்தியர்களே, குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் வெளியில் இருந்து வந்தேறவில்லை. முன்னாள் குடிமக்களான அவர்கள் தீண்டாமை கொடுமைகளில் விடுபட மதம் மாறி சுயமரியாதை மற்றும்
அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொண்டனர். இதில் என்ன தவறு இருக்கிறது ? எந்த ஒரு குடிமகனுக்கும் அவன் விரும்பிய மதத்தில் இணைய உரிமை உண்டு. ஒருவர் இஸ்லாமியராகவோ, கிறித்துவராகவோ இருப்பதை வைத்து அவர்களை சிறுபாண்மையினர் என்று சிறுமைபடுத்தி பார்ப்பது எதற்கு ?

மதம் அன்பை போதிக்கிறது, இந்துமதமே எல்லா மதங்களுக்கும் 'மூலம்',, அனைத்து மதங்ககளும் கலந்த இந்துமதம் கங்கையைப் போல் ஒரு புனித(?) சாக்கடை என்று புனிதம்(?)
பேசிக் கொண்டே, இந்து மதத்தின் பெயரால் தீவிரவாதம் ஒருபக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது. காந்தியை கொன்ற கோமான்களின் இரத்த வேட்டை காந்தி பிறந்த பூமியில் வீறுநடை போட்டு இருக்கிறது. குஜராத் நிகழ்வுகளுக்கு பின்னால், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று பெருமை பேசினால் காக்கை கூட பேசுபவனின் நாக்கில் எச்சமிட்டு எள்ளிவிட்டு செல்லும்.

குடிமகன் அடிப்படை தகுதிக்கு முன்பு மதத்தின் பெயரால் மைனாரிட்டி மசுரு(நன்றி அசுரன்) பேசுவதெல்லாம் எதற்கு ? அவனும் மற்றும் எல்லோரும் இந்திய தாய்க்கு பிறந்தவன் தானே ? மைனாரிட்டி என்பதால் இராணுவத்தில் இல்லாமல் இருக்கிறார்களா ?
மைனாரிட்டி என்பதால் இலவசமாக எல்லாமும் கிடைக்கறதா ?

"அரசியலில் மைனாரிட்டியிஸத்தை புகுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன்" - மோடி

மோடி வெளிப்படையாக சிறுபாண்மையினருக்கு எந்த உரிமையும் இல்லை என்று கருத்து சொல்லும் அளவுக்கு இந்தியர்கள் மதவெறிகளை சகித்துக் கொள்ளுகிறார்களா ? அல்லது விரும்புகிறர்களா ? பதில் எப்படி இருந்தாலும் மோடியின் கருத்துக்கள் சிறுபாண்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன,
மோடியின் மைனாரிட்டி பேச்சு இன்னும் பல பாகிஸ்தான்களை இந்தியாவுக்குள்ளேயே உருவாக்கும் ஆபத்து இருக்கிறது. இந்திய மதச்சார்பற்ற முகமூடி அழுகிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் இந்துத்துவ கோரப்பற்கள் தெரிய ஆரம்பித்திருப்பது கவலை அளிக்கிறது.

தொட்டதற்கெல்லாம் கருத்து கூறும் நீதிமன்றம் மோடி உதிர்த்தவைகளுக்கு மெளனம் காப்பது ஏன் ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்