குசும்பன் இந்த ஆண்டு தலை பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுகிறான். பிள்ளையார் சிலைக் கிடைக்கவில்லை என்றால் அவனே உட்கார்ந்துடுவான். இப்ப பிரச்சனை குசும்பனுக்கு கொழுக்கட்டை ரூபத்துல வந்து நிக்குது, திருமதி குசும்பனுக்கு கொழுக்கட்டை செய்யத் தெரியாதாம்...'யோவ் நீ ஊரெல்லாம் ப்ரண்ட்ஸ் வச்சிருக்கியே....கொழுக்கடடை செய்றது எப்படின்னு கேட்டு நீ தான் செய்யனும் ' என்று சொல்லி பூரிக்கட்டையை தூக்கி இருக்கு தங்க்ஸ். பூரிக்கட்டை இல்லாமலேயே கொழுக்கட்டை செய்ய முடியும் என்று ஒருவாறு சமாளித்து பூரிக்கட்டையை வாங்கி வச்சிட்டு, இங்கே சாட்டில் வந்து ஆலோசனை கேட்கிறான்.
கொழுக்கட்டை செய்வது எப்படி ?
அதுக்கும் முன்னால ஒரு பாட்டிக் கால கதையைப் பார்போம்.குசும்பனைப் போலவே ஒருவன், அதனால் குசும்பன் என்றே கதையில் பெயர் வைத்துக் கொள்வோம்.
குசும்பன் ஒருமுறை மாமியார் வீட்டுக்கு சென்ற போது கொழுக்கட்டை செய்து போட்டார்களாம், நல்லா சுவையாக இருந்ததும், பெயரைக் கேட்டு 'கொழுக்கட்டை' என ஞாபகம் வைத்திருந்து மற்றொருநாள் திருமதி குசும்பனைச் செய்யச் சொல்லவேண்டும் என்பதற்காக....திரும்பும் வழியெங்கும் 'கொழுக்கட்டை' ....... 'கொழுக்கட்டை' என்று சொல்லிக் கொண்டே வ்ந்தானாம். வழியில் குறுக்கே ஒரு கால்வாய் ஓடியது, கால்வாயில் இறங்கிச் செல்லாமல் ஒரே தாண்டு தாண்ட வேண்டுமென்பதற்காக...'அத்தேரிபச்சா.....' என்று சொல்லியபடி தாண்டி இருக்கிறான். அத்தோடு கொழுக்கட்டை என்று சொல்லி வந்தது மறந்துவிட்டது. 'அத்தேரிபச்சா.... அத்தேரிபச்சா' என்று சொல்லிக் கொண்டே வீடு வந்தவுடனே, மனைவியிடம் சொல்லி 'அத்ததேரிபச்சா...' செய்து கொடு என்றிருக்கிறான்.
'இது என்ன புதுமாதிரி பலகாரம், நான் கேள்விப்பட்டதே இல்லையே' என திருமதி குசும்பன் மடக்கவும், கோபமாகி, 'உங்க அம்மாவிட்டில் செய்தாங்க, உனக்கு தெரியும்...அத்தேரிபச்சாவை இப்பவே செய்து கொடு...' என்று சொல்லி டார்சர் செய்து, திரும்ப திரும்ப 'அத்தேரிபச்சா செய்' என்று நச்சரித்தானாம். பொறுக்கமாட்டாத மனைவி அப்பளகுழவியை எடுத்து நைய புடைக்க, குசும்பனின் அளறல் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் கூடி இருக்கிறார்கள், அதில் ஒரு பாட்டி, 'ஏண்டி...இந்த அடி அடிச்சிருக்கே...ஒடெம்பெல்லாம் கொழுக்கட்டையாக வீங்கி இருக்கு' என்று சொன்னவுடன் 'கொழுக்கட்டை' என்றதைக் கேட்டு வலியை மறந்து குசும்பன் பிரகாசமாகி....உற்சாகத்தில் துள்ளினானாம். அத்தேரிபச்சா இல்லை, கொழுக்கட்டை செய்து கொடு என்றிருக்கிறான். அப்பறம் தான் மனைவிக்கு விசயமே புரி்ந்து கொழுக்கட்டை செய்து போட்டாளாம்.
********
உண்மையிலேயே குசும்பனுக்கு கொழுக்கட்டை செய்வது பற்றிய குறிப்புக் கொடுக்க வேண்டும் என்று வலையில் தேடினேன். ஏகப்பட்ட குறிப்புகள் இருக்கிறது.
அவற்றில் பிடித்ததை படித்து கொழுக்கட்டை செய்து விநாயக சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடவேண்டும். குசும்பனைப் போல் கொழுக்கட்டை செய்ய நிர்பந்தம் உள்ளவர்களும் முயன்று பார்க்கலாம்
பிடிகொழுக்கட்டை :
தேவையான பொருட்கள்
அரிசி - 1/2 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
ஏலக்காய் - 5
தேங்காய் - அரை முடி
செய்முறை
அரிசி மாவு :
பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து தண்ணீர் விட்டு அலசி நிழலில் உலர்த்தவும்.
அரிசி நன்கு காய்ந்ததும் மாவாக அரைத்துக் கொள்ளவும். வெளியில் கடையில் கொடுத்தும் அரைத்துக் கொள்ளலாம்.
மாவை சுத்தமான கடாயில் கொட்டி நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். மாவில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வறுப்பதற்கு பதிலாக பலரும் ஆவி கட்டுவது உண்டு. அதாவது இட்லி குண்டானில் வெள்ளைத் துணியைப் போட்டு அதில் மாவைக் கொட்டி மூடி விட வேண்டும்.
5 நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கினால் மாவு நன்கு வெந்து இருக்கும். ஆனால் மாவு உதிரியாகத்தான் இருக்க வேண்டும்.
தற்போது வெல்லத்தை பொடியாக இடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தைப் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு பாகு போல காய்ச்சவும்.
அதற்குள் தேங்காயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை சர்க்கரை வைத்து பொடித்துக் கொள்ளவும். இரண்டையும் மாவில் கொட்டிக் கிளறிவிடவும்.
வெல்லம் நன்கு கொதித்ததும் அதனை சிறிது சிறிதாக மாவில் ஊற்றிக் கிளறவும். மாவைக் கிளறுவதற்கு மத்தின் காம்பு அல்லது கரண்டியின் கைப்பிடிப் பாகத்தைப் பயன்படுத்தலாம்.
மாவு எந்த இடத்திலும் கட்டிப்போய் விடக் கூடாது. தண்ணீரும் அதிகமாகிவிடக் கூடாது. சப்பாத்திக்கு பிசைவது போல் வெல்லம் தண்ணீரை ஊற்றி பிசைந்து அதனை கொழுக்கட்டைக்கு பிடித்து வைத்துக் கொள்ளவும்.
தற்போது இட்லி குண்டானை தண்ணீர் ஊற்றி ஒரு தட்டு மட்டும் வைத்து அடுப்பில் மூடி வைக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து 10 கொழுக்கட்டைகளை அடுக்கி மூடி விடவும். சிறிது நேரம் கழித்து 15 கொழுக்கட்டைகளை அடுக்கவும். இப்படியே சிறிது சிறிதாக அடுக்கி 15 நிமிடம் வேக விடவும்.
இட்லி குண்டானை இறக்கி கொழுக்கட்டைகள் உடையாமல் எடுத்துப் பரிமாறவும்.
பின்பற்றுபவர்கள்
குசும்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குசும்பன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1 செப்டம்பர், 2008
17 ஜூலை, 2008
சென்னையில் வீடுகட்ட பொருள் உதவி !
இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், சென்னையில் விற்கும் விலைவாசியில் இடம் வாங்கிப் போட்ட கோடிஸ்வரர்களுக்கு... 'இடம் தான் வாங்கிப் போட்டிங்க, வீடுகட்டுவதற்கு என்ன செய்வீர்கள் ?
யாருக்காவது வீடுகட்ட கல்வேண்டுமென்றால் குசும்பனை அனுகவும்.
மேட் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுதான்... குசும்பன் வயித்துல கல் உருவாகி இருக்கிறதாம், 'அது வைரக்கல்லாக இருக்கும் யாரிடமும் சொல்லவேண்டாம், இப்போதைக்கு ரகசியமாக வைத்துக் கொள்' என்று அண்ணாச்சி ஆசிப் மீரான் சொல்லி இருக்கிறார்.
இதைக் ஒட்டுக்கேட்ட அபி அப்பா, குசும்பனை தள்ளிக் கொண்டு ஆப்பரேசனுக்கு சேர்த்ததாக கேள்வி, 'வைரக்கல் முட்டையிடும் குசும்பனை அறுத்து பார்த்து மொத்தத்தையும் கெடுத்துவிடாதே' என்று ஐய்யனார் அபிஅப்பாவுக்கு அட்வைஸ் செய்தாரம்.
இதையெல்லாம் பார்த்து ரொம்ப குழம்பிய குசும்பன், அந்த கல்லை யாராவது சென்னையில் இடம் வாங்கிப் போட்ட ஏழைகளுக்கு வீடுகட்ட தரப்போவதாக என்னிடம் சாட்டில் சொன்னான்.
கல்லு வேண்டுவோர் குசும்பனுக்கு ரகசியமாக போன் செய்து காதும் காதும் வைத்தது போல் பேசி முடித்துக் கொள்ளலாம். முதலில் அழைத்துப் பேசுபவருக்கு முன் உரிமை உண்டாம்.
பின்குறிப்பு : குசும்பனுக்கு மட்டும், என்னிய லேபிள் போட்டு வம்பு வளர்த்தே இல்லே ? இது எப்படி இருக்கு......?
மற்றவர்களுக்கு : குசும்பனை கும்முவதற்கு மாடுரேசன் நீக்கப்பட்டுள்ளது. :)
யாருக்காவது வீடுகட்ட கல்வேண்டுமென்றால் குசும்பனை அனுகவும்.
மேட் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுதான்... குசும்பன் வயித்துல கல் உருவாகி இருக்கிறதாம், 'அது வைரக்கல்லாக இருக்கும் யாரிடமும் சொல்லவேண்டாம், இப்போதைக்கு ரகசியமாக வைத்துக் கொள்' என்று அண்ணாச்சி ஆசிப் மீரான் சொல்லி இருக்கிறார்.
இதைக் ஒட்டுக்கேட்ட அபி அப்பா, குசும்பனை தள்ளிக் கொண்டு ஆப்பரேசனுக்கு சேர்த்ததாக கேள்வி, 'வைரக்கல் முட்டையிடும் குசும்பனை அறுத்து பார்த்து மொத்தத்தையும் கெடுத்துவிடாதே' என்று ஐய்யனார் அபிஅப்பாவுக்கு அட்வைஸ் செய்தாரம்.
இதையெல்லாம் பார்த்து ரொம்ப குழம்பிய குசும்பன், அந்த கல்லை யாராவது சென்னையில் இடம் வாங்கிப் போட்ட ஏழைகளுக்கு வீடுகட்ட தரப்போவதாக என்னிடம் சாட்டில் சொன்னான்.
கல்லு வேண்டுவோர் குசும்பனுக்கு ரகசியமாக போன் செய்து காதும் காதும் வைத்தது போல் பேசி முடித்துக் கொள்ளலாம். முதலில் அழைத்துப் பேசுபவருக்கு முன் உரிமை உண்டாம்.
பின்குறிப்பு : குசும்பனுக்கு மட்டும், என்னிய லேபிள் போட்டு வம்பு வளர்த்தே இல்லே ? இது எப்படி இருக்கு......?
மற்றவர்களுக்கு : குசும்பனை கும்முவதற்கு மாடுரேசன் நீக்கப்பட்டுள்ளது. :)
22 ஏப்ரல், 2008
முடியல்ல... தயவு செய்து நிறுத்தவும் - குசும்பன் !
கல்யாணம் எல்லாம் நல்லபடியாக முடிஞ்சுதான்னு கேட்க குசும்பன் தம்பிக்கு தொலைபேசினேன்...
நம்ம சரவணவேலு குசும்பன் தம்பி மூச்சு விட சிரமப்படுறாராம்,
"யோவ் என்னய்யா சின்ன வயசுதானே அதுக்குள்ளே இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு..."
"பெருசு ஓவராக கற்பனை பண்ணாதிங்க...இது அது இல்ல இது வேற மேட்டர்".
"என்னைய்யா மேட்டரு...சொல்லேன்யா"
"கல்யாணம் ஆகி 7 நாள் ஆச்சு"
"சந்தோசம் தானே"
"டெய்லி நான் வெஜ்ஜா போட்டு கொல்லுராங்கய்யா ...எறா சுறா நண்டு நெத்திலி, ஆடு, கோழி......எவ்வளவு தான் திங்க முடியும்"
"யோவ் துபாய் போனால் இப்படி சாப்பிட முடியுமா ... அன்பான உபசரிப்பு கிடைக்குமா எஞ்சாய் பண்ண வேண்டியதுதானே...."
"அது இல்ல பெருசு...பேண்ட் எல்லாம் இடுப்புல ஏறமாட்டக்குது.....புதுசா ஒரு டஜன் பேண்ட் சர்ட் எடுக்கனும் போல இருக்கு...முடியல நான் வெஜ்ஜை தயவு செய்து நிறுத்தவும்னு சொல்லப் போறேன்"
"கல்யாணம் ஆச்சுன்னு ஓணான் கூட கொமோடோ சைசுக்கு பெருசாகிடும்யா"
"பினாங்கு பதிவருக்கு போட்டியா ஆகிடுவேனோன்னு பயமாக இருக்கு"
"ஆனா என்னையா ?"
"அவரு உடம்ப வச்சுதான் ஓட்டுவேன்...இனிமே எந்த மூஞ்சோடு ஓட்டுறது"
"அவனவனுக்கு ஆயிரம் கவலை...ஒனக்கு டிபிசிடியை ஓட்ட முடியலைன்னு கவலை "
"அண்ணாச்சி, சிவா மோசம் பண்ணிப்புட்டான்"
"தண்ணி அடிச்சு படுத்து தூங்கி மூகூர்த்த நேரத்துக்கு வராம இருந்துட்டானா ?"
"அதை செஞ்சிருந்தாலும் பரவாயில்லை, எதிரிலேயே இருந்தான்... மேரேஜை லவ் டெலிகாஸ்ட் பண்ணப் போறேன்னு லேப்டாப்பை நோண்டிக்கிடே இருந்தான்...என்கிட்ட வந்து பேசவே இல்லை... எனக்கு கடுப்பாயிட்டு"
"கல்யாண மண்டபத்தில் கலர் பஞ்சமா ? பாவம் சிவா... வேற வழி இல்லாமல் வீக் எண்டு ஜொள்ளுக்காக எதாவது படம் தேடி இருப்பான்... அதை விடுய்யா"
"நிறைய பதிவர்கள் வந்திருந்தாங்க, அறிமுகம் இல்லாதவர்கள் கூட போன் பண்ணி வாழ்த்தினாங்க, மனசுக்கு சந்தோசமாக இருந்துச்சு பெருசு..."
"மிக்க மகிழ்ச்சி... ம் ஏன்யா பெருசு பெருசுன்னு கொல்லுறே...எனக்கு மீசை கூட நரைக்கல தெரியுமா ?"
"டிபிசிடியும் நீங்களும் ஒருத்தர் ஒருத்தர் பேசிவச்சிக்கிட்டு அவரு உங்களை பார்த்து 'நீங்க இளமையோ இளமைங்கிறது', நீங்க அவரைப் பார்த்து 'ரொம்ப ஸ்லிம்மா ஸ்மார்டாக இருக்கேன்னு' சொல்லிக்கிட்டு ஊரை ஏமாற்றி வருவது எனக்கு தெரியாதா ?"
"யாரோ கூப்பிடுறாங்க ....சரிடா சரவணா நான் போனை வச்சுடுறேன்...கல்யாண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடு"
"இன்னொருதடவை காலங்காத்தால போனைப் போட்டு...இங்கிதம்..."
திட்டுவதற்குள் போனை துண்டித்துவிட்டேன்.
நம்ம சரவணவேலு குசும்பன் தம்பி மூச்சு விட சிரமப்படுறாராம்,
"யோவ் என்னய்யா சின்ன வயசுதானே அதுக்குள்ளே இப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு..."
"பெருசு ஓவராக கற்பனை பண்ணாதிங்க...இது அது இல்ல இது வேற மேட்டர்".
"என்னைய்யா மேட்டரு...சொல்லேன்யா"
"கல்யாணம் ஆகி 7 நாள் ஆச்சு"
"சந்தோசம் தானே"
"டெய்லி நான் வெஜ்ஜா போட்டு கொல்லுராங்கய்யா ...எறா சுறா நண்டு நெத்திலி, ஆடு, கோழி......எவ்வளவு தான் திங்க முடியும்"
"யோவ் துபாய் போனால் இப்படி சாப்பிட முடியுமா ... அன்பான உபசரிப்பு கிடைக்குமா எஞ்சாய் பண்ண வேண்டியதுதானே...."
"அது இல்ல பெருசு...பேண்ட் எல்லாம் இடுப்புல ஏறமாட்டக்குது.....புதுசா ஒரு டஜன் பேண்ட் சர்ட் எடுக்கனும் போல இருக்கு...முடியல நான் வெஜ்ஜை தயவு செய்து நிறுத்தவும்னு சொல்லப் போறேன்"
"கல்யாணம் ஆச்சுன்னு ஓணான் கூட கொமோடோ சைசுக்கு பெருசாகிடும்யா"
"பினாங்கு பதிவருக்கு போட்டியா ஆகிடுவேனோன்னு பயமாக இருக்கு"
"ஆனா என்னையா ?"
"அவரு உடம்ப வச்சுதான் ஓட்டுவேன்...இனிமே எந்த மூஞ்சோடு ஓட்டுறது"
"அவனவனுக்கு ஆயிரம் கவலை...ஒனக்கு டிபிசிடியை ஓட்ட முடியலைன்னு கவலை "
"அண்ணாச்சி, சிவா மோசம் பண்ணிப்புட்டான்"
"தண்ணி அடிச்சு படுத்து தூங்கி மூகூர்த்த நேரத்துக்கு வராம இருந்துட்டானா ?"
"அதை செஞ்சிருந்தாலும் பரவாயில்லை, எதிரிலேயே இருந்தான்... மேரேஜை லவ் டெலிகாஸ்ட் பண்ணப் போறேன்னு லேப்டாப்பை நோண்டிக்கிடே இருந்தான்...என்கிட்ட வந்து பேசவே இல்லை... எனக்கு கடுப்பாயிட்டு"
"கல்யாண மண்டபத்தில் கலர் பஞ்சமா ? பாவம் சிவா... வேற வழி இல்லாமல் வீக் எண்டு ஜொள்ளுக்காக எதாவது படம் தேடி இருப்பான்... அதை விடுய்யா"
"நிறைய பதிவர்கள் வந்திருந்தாங்க, அறிமுகம் இல்லாதவர்கள் கூட போன் பண்ணி வாழ்த்தினாங்க, மனசுக்கு சந்தோசமாக இருந்துச்சு பெருசு..."
"மிக்க மகிழ்ச்சி... ம் ஏன்யா பெருசு பெருசுன்னு கொல்லுறே...எனக்கு மீசை கூட நரைக்கல தெரியுமா ?"
"டிபிசிடியும் நீங்களும் ஒருத்தர் ஒருத்தர் பேசிவச்சிக்கிட்டு அவரு உங்களை பார்த்து 'நீங்க இளமையோ இளமைங்கிறது', நீங்க அவரைப் பார்த்து 'ரொம்ப ஸ்லிம்மா ஸ்மார்டாக இருக்கேன்னு' சொல்லிக்கிட்டு ஊரை ஏமாற்றி வருவது எனக்கு தெரியாதா ?"
"யாரோ கூப்பிடுறாங்க ....சரிடா சரவணா நான் போனை வச்சுடுறேன்...கல்யாண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடு"
"இன்னொருதடவை காலங்காத்தால போனைப் போட்டு...இங்கிதம்..."
திட்டுவதற்குள் போனை துண்டித்துவிட்டேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்