//இனி கோவி.கண்ணனுக்கு நான் கேட்கும் அறிவியல் பூர்வமான/ அறிவுப் பூர்வமான கேள்வி:
காக்காவை நாம காக்கான்னு கூப்பிடுவதால், காக்கா "கா கா" ன்னு கத்துதா இல்லை, காக்கா "கா கா" ன்னு கத்துறதால, நாம காக்காவை காக்கா ன்னு கூப்பிடுறோமா?
பாக்கியராஜ் பதில் சொல்லமுடியாத இந்தக் கேள்விக்கு அண்ணன் என்ன பதில் சொல்றாருன்னு பார்ப்போம்...
கோவியாரே, விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த கேள்வியைக் கேளுங்கள்..//
என்னை சவாலுக்கு இழுத்திருக்கும் ஜெகதீசன் தம்பி, இதெல்லலம் ஜிஞ்சுபி கேள்வி. இதுக்கு பின்னூட்டம் போடத்தெரியாத அனானிகளே கூட பதில் சொல்லிவிடுவார்கள்.
காக்கா - தமிழில் ஒரு காக்காவுக்கான பெயர்ச் சொல். கன்னடம், தெலுங்கு மொழிகளில் 'காகி' ன்னு சொல்லுவாங்க. உலகத்தில் எந்த நாட்டில் காக்காகளாக இருந்தாலும் (தலையில் விழும் 'அந்த கக்கா'... 'இருந்தாலும்' இல்லை) கா...கா ன்னு தான் கரையும். மத்த நாடுகளிலும் காகா வைக் காக்கா என்று பெயர் வைத்துக் கூப்பிடவில்லை என்பதால் காக்கா 'கா...கா' என்று கரையாமல் இல்லை.
காக்கை மட்டுமல்ல... அனைத்து பறவை இனங்களும், மழலைகளின் அழுகுரலும் மொழிக்கு அப்பாற்பட்டது.
இங்கே விடையை நேரடியாகாவே சொல்லிவிடுகிறேன். காகத்திற்கு தமிழ் உட்பட எந்த மொழியும் தெரியாது. அதற்கு தெரிந்த ஒரே மொழி......'கா...கா' தான். தமிழில் பொருளின் தன்மைக்கு (எடுத்துக்காட்டு நான்கு கால்கள் இருப்பதால் நாற்காலி) ஏற்ப பெயர் சொல் வழங்கி வருவதால் நாம் 'காக்கா' என்கிறோம். உறுதியாக சொல்கிறேன், நாம் காக்கா என்பதால் அது 'கா...கா' என்று கரையவில்லை.
அடுத்து நான் கேள்வி எழுப்ப விரும்பும் பதிவர் பரிசல்காரன் (கே.கிருஷ்ண குமார்). எளிமையான கேள்வி, ஆனால் இதுவரை யாரும் விடை சொல்லவில்லை. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பார்த்து இருந்தால் உங்களுக்கே தெரியும். இது பற்றிய நிபந்தனைகளை சின்னத் தம்பி ஜெகதீசன் (பெரிய தம்பி டிபிசிடி) பதிவில் படித்துக் கொள்ளுங்கள்
ஒரே கேள்வி :
தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன ?
பரிசலாரே...! விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த (மொக்கை) உடனே கேள்வியைக் கேளுங்கள்.
பின்பற்றுபவர்கள்
கேள்வி பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்வி பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
7 ஜூலை, 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்