பின்பற்றுபவர்கள்

ஆங்கிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆங்கிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஆகஸ்ட், 2008

பொன்முடியை நான் ஏன் ஆதரிக்கிறேன் ?

இது உகாண்டா தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியை நான் ஏன் ஆதரிக்கிறேன் போன்ற மொக்கை மேட்டர் இல்லை. மனோன்மணியம் பல்கலையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பல்கலை வளாகத்திற்குள் ஆங்கிலம் தவிர்த்து பிற மொழிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறதாம்.

//ஆங்கிலத்தில் பேச வேண்டும்-பொன்முடி:

விழாவில் கலந்துக் கொண்டு முதுநிலைப் படிப்புகளை தொடங்கி வைத்து, விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டி அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

இந்தியாவிலேயே இதுவரை அறிமுகம் செய்யப்படாத 3 புதிய முதுநிலை படிப்புகள் இங்கே தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 18 ஆண்டுகாலமாக இப்பல்கலைக்கழகம் தென்மாவட்ட கல்விப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. இப்பல்கலைகழகத்தில் புதிய பட்டப்படிப்பு பாடங்களை நடத்திட வெளிநாட்டு பேராசியர்கள் வருகை தர உள்ளனர்.

இப்பல்கலை கழகத்தில் ஆங்கிலத்தில்தான் மாணவர்கள் பேச வேண்டும் என்று துணை வேந்தர் கூறியதை வரவேற்கிறேன். இதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்க் கூடாது. ஆங்கிலம்தான் நம்மை உலகத் தரத்துக்கு உயர்த்த உதவும் மொழி. சீனர்கள் கூட இப்போது ஆங்கிலம் கற்க ஆரம்பித்துவிட்டார்கள்.//

தமிழுக்குத் தடையா ? என்று படித்ததும் ஒரு நொடி திகைத்தது என்னவோ உண்மைதான். பிறகு நினைத்துப் பார்த்ததில் கல்லூரி முடித்த எத்தனை மாணவர்கள் வேலையில் சேரும் போது சரளமாக ஆங்கிலம் பேசுகிறார்கள் ? தமிழகத்தில் இருக்கும் இயந்திரவியல், தகவல் தொழில் நுட்பம், மற்றும் ஏனைய மாத ஊதியம் வழங்கும் தொழில் சார்ந்த நிறுவனங்கள் அனைத்திலுமே ஆங்கிலமே பொதுவாக புழக்கத்தில் இருக்கிறது. அலுவலக கூட்டங்களில் (Meeting) எப்போதுமே ஆங்கிலத்தில் தான் உரையாடல் நடைபெறும். நான் முதன் முதலில் நேர்முகத் தேர்வை சந்திக்கும் போது ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாததால் ஒரு சில அலுவலகத்தில் (HCL,L&T,WIPRO)எழுத்து தேர்வு நன்கு செய்தும் நிராகரிக்கப்பட்டேன். என்னைப் போன்று ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி இல்லாதவர்கள் பலருக்கும் இதே நிலை இருந்திருக்கும்.

தமிழ்வழிக் கல்வியை உயர்நிலை வரை படித்த மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லும் போது ஆங்கிலபாடங்களைப் படிக்கும் போது திணரவே செய்கிறார்கள். தமிழ்வழிக்கல்வியில் ஆங்கில பாடம் சிறப்பாக சொல்லிக் கொடுக்கப்படாததும் ஒரு காரணம். மற்றும் தமிழ்வழிக்கல்வியில் ஆங்கிலம் ஒரு மொழிப்பாடம் மட்டுமே. 12 ஆம் வகுப்புவரை ஆங்கிலக் கட்டுரைகளை மனப்பாடம் செய்தால் தான் எழுத முடியும் என்பது தான் தமிழ்வழி கல்வி கற்பவர்களின் நிலை. நான் பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவில் ஆங்கிலத்தில் தேறுவதுதான் கடினம் என்றே பயந்து கொண்டே தேர்வு முடிவை எதிர்நோக்கினேன். நல்லவேளை தவறவில்லை.

ஆரம்ப பள்ளிக் கூடங்களில் தாய்மொழியை பேசவே கூடாது என்ற விதிகள் தான் மொழியை முடக்கிவிடும். சிறுவயது மொழிகளைக் கற்றுக் கொள்ளும் வயது, அங்கு தடைசெய்தால் தாய்மொழியை பொதுவாக பேச்சில் பயன்படுத்துவது குறைந்துவிடும்.

மனோன்மணியம் சுந்தரானார் பல்கலையில் எடுத்த முடிவு தவறானது அல்ல. மாணவர்கள் ஆங்கில உரையாடலில் சிறந்து விளங்கினால் தான் உலக அளவில் நாம் சிறந்து விளங்க முடியும் பொன்முடி சொல்வதும் சரிதான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்