பின்பற்றுபவர்கள்

13 செப்டம்பர், 2014

குழந்தைகள் பெற்றோருடன் உறங்கலமா ? 18+

ஹோம் சிக் எனப்படும் பெற்றோரின் நினைவு நம் தமிழக / இந்தியர்களுக்கு தான் மிகுதி, பருவ அகவையை கடந்தும் பெற்றோரை விட்டு இரண்டு நாள் பிரிவு கூட மன உளைச்சலையும் ஏக்கத்தையும் ஏற்படுத்திவிடுவதால் எதற்கு சென்றோமோ அதை நிறைவாக செய்து திரும்ப மாட்டார்கள்.

கூட்டுக் குடும்பம் என்னும் அமைப்பில் இருந்து நாம் விலகி 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது, கூட்டுக் குடும்பமாக வசித்த காலங்களில் பெற்றோர்களுடன் குழந்தைகள் உறங்குவது கிடையாது. பால் குடி மறக்கும் வரை பெற்றோருடன் படுத்திருக்கும், பிறகு தத்தா பாட்டியுடன் தான் உறங்குவார்கள், 6 ஆம் அகவைக்கு மேல் வசிக்கும் அறையில் (ஹால்) மற்ற பெரியப்பா, சித்தப்பா குழந்தைகளுடன் சேர்ந்து படுத்துக் கொள்வார்கள், 8 ஆம் அகவைக்கு மேல் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் தனித் தனியாக குழுவாக உறங்குவார்கள், பருவ வயதை அடைந்ததும் தனி அறை வசதி இருந்தால் அதில் உறங்குவார்கள், பெரும்பாலும் பருவத்தை கடந்த ஓரிரு ஆண்டுகளில் திருமணமும் முடிந்துவிடும்.

நம் அப்பா காலத்திலேயே கூட்டு குடும்ப அமைப்பில் இருந்து நாம் விலகியாகிவிட்டது, நடுத்தர வர்கம் என்னும் கோட்டில் ஓரறை வீடுகளில் (ஒரு படுக்கை அறை மற்றும் ஒரு ஹால் வசதி கொண்டதில்) வசித்து தான் நம்மில் பெரும்பாலோர் படித்து வளர்ந்திருப்போம், குழந்தைகளை தனித்து படுக்க வைத்தால் இரவில் அச்சமடையலாம் என்பதால் பெற்றோர்களுடன் தான் இரு குழந்தைகளும் உறங்கும் படி பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள், இதில் இருக்கும் சிக்கல் பெற்றோரான கணவன் - மனைவியுடன் ஆன உறவு சீர்கெடுவதுடன். கணவன் மனைவி இருவருக்குமான பிணைப்பு குறைந்துவிடும்.

திருமணமானவர்களின் படுக்கை அறை என்பது ஓய்வெடுக்கும் அறை மற்றும் பாலியல் தேவைக்கான வடிகால் என்பதைத் தாண்டி கணவன் மனைவி இருவருக்குமிடையேயான பேச்சு வார்த்தைகளும் அதன் மூலம் இருவரின் புரிந்துணர்வை வளர்க்கும் இடம், ஆனால் குழந்தைகளை கூடவே படுக்க வைத்திருப்பதால் பெற்றோர்களின் தனிமையும் அதை சார்ந்த விருப்புகளும் குழந்தைகள் தூங்கினால் இன்றி வாய்பே இருக்காது, குழந்தைகள் உடனேயே தூங்கிவிடாது, 9 மணிக்கு தூங்க வைத்தாலே கொட்ட கொட்ட விழித்திருந்து கதைகளை சொல்லக் கேட்டு 10 மணிக்கு தான் தூங்கும், அதற்குள் அசதியில் கணவனோ, மனைவியோ தூங்கி இருப்பர், 

திருமண மான ஆண்களைப் பொருத்த அளவில் பாலியல் தேவை என்பது அன்றாடம் தேவைப்படும் ஒன்று, அதை ஒரு மனைவியால் புரிந்து கொள்ள முடிந்தாலும் எதுவும் செய்ய இயலாத நிலையில் விடியற்காலையிலோ, வீட்டில் குழந்தைகள் இல்லாத பகல் பொழுதிலோ, எந்த ஒரு தூண்டலும் இல்லாத வேளைகளில் உறவு வைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் இயல்பான பாலியல் இன்பம் தூய்பதற்கு மாற்றாக, கழிவறையைப் பார்த்ததும் ஏற்படும் சிறு நீருக்கான உந்துதல் போல் நேரம் கிடைக்கும் போது மட்டும் நடந்து முடிந்துவிடுகிறது.

தலையணை மந்திரம் என்று மாமியார்கள் விமர்சனம் செய்யும் காலகட்டங்களில் கூட மண முறிவுகள் மிக அறிதாகவே நடந்தது, தற்காலத்தில் மிகுந்துவிட்டதற்கு காரணமே, கணவன் - மனைவி இடையே பேச்சு வார்த்தைகள் குறைந்து போய், பாலியல் தேவையின் தீர்வு, கடமை என்ற நிலைக்கு தள்ளப்படும் பொழுது, தேவையற்ற சிறு சொல்லும் சீண்டலும், கிண்டலாக ஏற்கப்படாமல் வெறுப்பாக மாற்றி நினைக்கப்பட்டு உறவுகள் சீர் குழைகின்றன, திருமணமான ஆண்களின் வெளி நாட்டமும் மிகுந்துவிடுகிறது, திருமணம் ஆன ஆண்களில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் கள்ளத் தொடர்புகளையோ, பாலியல் தொழிலாளியை நாடுவதையோ ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

25 அகவைக்குள் திருமணம் நடந்தால் தம்பதியினரிடையே புரிந்துணர்வு மேம்பட இரண்டு ஆண்டுகள் குழந்தை பிறப்பை தள்ளிப் போட முடியும், ஆனால் இனிமே நமக்கு சந்தை மதிப்பு இல்லை என்னும் நிலையில் ஆண்கள் 30 அகவைக்கு மேலும் பெண்கள் 25 க்கு மேலும் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் குழந்தைப் பிறப்பு உடனடியாக நிகழவேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றனர், குழந்தை உருவனாதுமே குழந்தைக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வில் தம்பதிகள் தள்ளிப்படுக்க நேர்ந்துவிட இயல்பான நெருக்கம் குறைந்துவிடும், குழந்தை பிறந்து ஒராண்டாகியும் அடுத்து உடனேயே ஏற்பட்டுவிட்டால் ? என்ன செய்வது என்பதில் தம்பதியினரின் நெருக்கம் குறைந்து இடைவெளி மிகுந்து கொண்டே வரும், பின்னர் குழந்தைகள் உறங்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று பாலியல் தேவையின் தீர்வு, வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே.

குழந்தைகளை வெளிநாட்டினர் 3 ஆம் திங்களில் (மாதம்) இருந்தே தனித்து படுக்க வைத்துப் பழக்குகின்றனர், இதனால் தம்பதியினரின் நெருக்கம் எந்த விதத்திலும் பாதிப்பு அடைவதில்லை, குழந்தைகளின் மீதான அன்பும் குறைவதும் இல்லை, இந்திய பெற்றோர்களும் குழந்தைகளை தனியாக படுக்க வைக்கும் வசதியுடன் வீடு இருந்தால் படுக்க வைத்து பழக்கலாம், குழந்ந்தைகளின் நடவடிக்கைக் குறித்து, குழந்தைகளை அருகில் படுக்க வைத்துக் கொண்டு பேசவே முடியாது, ஒன்றாக படுக்கும் குழந்தைகள் பல வேளைகளில் நடு இரவில் கூட விழித்திருக்கும்,  குழந்தைதான் தூங்கி விட்டதே என்று நினைத்து தம்பதிகள் கூடினால், மறுநாள் தன்னுடன் படிக்கும் குழந்தைகளிடம் 'அப்பாவும் அம்மாவும் ராத்திரி கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்' என்று வெகுளியாக சொல்லிவிடும், சிறுவயதில் இது போன்ற பேச்சுக்களை நான் என் அகவையை ஒத்தவர் (7, 8 அகவையினர்)  சொல்லக் கேட்டிருக்கின்றேன். எந்த குழந்தையும் பெற்றோர்கள் இருவரும் தன்னிடம் மட்டுமே நெருக்கமாக இருக்க வேண்டும் என்றே விரும்பும், இரவில் தப்பித் தவறி அம்மா அப்பா கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்களால் அதை ஏற்க இயலாது. 

நடு இரவின் அமைதியில் நாம் பெற்றோர்களுடன் படுத்தகாலங்களில் 'குழந்தைகள் தூங்கட்டும்...' னு அம்மா மெல்லிய குரலில் சொல்லுவதை காது கொடுத்திருப்போம், அதற்கான பொருள் நாம் பெற்றோர் அகவையை அடையும் பொழுது நினைத்தால், மிகவும் தாழ்வுணர்வை ஏற்படுத்துகிறது, பெற்றோரின் தனிமையும் அதற்கான தேவைகளை நாம் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டோமே என்கிற வெட்கப்பட வைக்கிறது. அதே தாழ்வுணர்வை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டாமே.

குழந்தைகளுக்கு 6 அகவை வரை பாலியல் உறுப்பு பற்றிய விழிப்புணர்வும், அம்மணமாக நிற்பதின் கூச்சமும் தெரியாது, அதுவரை கூட பெற்றோர்களுடன் படுப்பதால் அதற்கு மன அளவில் பாதிப்பு ஏற்படாது, 6 ஆம் அகவைக்கு மேல் சுற்றி நடப்பவற்றை ஆராயும் எண்ணம் ஏற்படும், பெற்றோரின் உறவு காட்சிகளை பார்க்கும் நிலை ஏற்பட்டால் மன அளவில் பாதிப்பு அடையும். 5 அகவைக்கு மேல் குழந்தைகளை தனித்து படுக்க வைப்பதன் மூலம் அவர்களுக்கு தனிமை குறித்த அச்சம் நீங்கும், தன்னம்பிக்கை வளரும்.

படுக்கை அறையின் தேவை கணவன் மனைவியினரிடையே புரிந்துணர்வை வளர்க்கும் இல்லத்தை மேம்படுத்தும் வீடு வாங்குதல், வசதிகளை மேம்படுத்திக் கொள்ளுதல் குறித்த பேச்சுவார்த்தைகான இடம், அதன் பிறகு பால் உணர்வு தீர்வு, அதில் முன் விளையாட்டு, ஒன்று கூடல் என தூங்கும் முன் ஒரு மணி நேரமாவது செலவிட்டு பின்னர் கட்டியணைத்தப்படி தூங்குவதால் இருவருக்குமான நெருக்கம் மேம்படும், அன்றாடம் முடியாவிட்டாலும் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்டாலே தேவையற்ற பிணக்குகள் குறைந்து போய்விடும், வேலைக்கு செல்லும் மனைவியரின் நிலையை கணவர்கள் புரிந்து கொள்ள படுக்கை அறையை விட்டால் வேறு நேரமோ இடமோ வாய்காது. 

குழந்தைகளுக்காக பெற்றோர்கள் தங்கள் உணர்வுகளை அடக்கிக் கொள்ள வேண்டும் என்கிற வெகுளித்தனமான கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை,  இல்லம் என்பதில் பலர் ஒன்றாக இருந்தாலும் தேவைகள் தனித்தனியானவை,  ஒவ்வொருவரின் தேவைகளுமே கவனிக்கத் தக்கத்து, இன்றியமையாதது,  அப்பா என்னும் ஆண்களைப் பொருத்த அளவில் தம் குழந்தைகள் மீது அன்பு இருக்கும் அளவுக்கு, மனைவியுடன் கூட விரும்பும் பாலியல் தேவைக்கான வடிகாலும் தேவைப்படும். மனைவியின் வெறும் முகத்தை மட்டுமே பார்த்து தூங்க ஆண்கள் விரும்புவதில்லை. சூழல்களை ஆண்கள் புரிந்து கொண்டாலும் ஏற்க விரும்புவதுமில்லை, நாளடைவில்  உன் முகத்தை பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள், அதே போன்று எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு அது தான் முக்கியமா ? என்கிற மனைவியின் ஏளனம் / இயலாமை / வெறுப்பு...இதை எதிர் கொள்வதை தவிர்க்க ஆண்களின் வெளி நாட்டம், அதன் பிறகு அவை வெளியே தெரிய மொத்தத்தில் இல்லத்தின் அமைதி குலையும். பொதுவாகவே பெருவாரியான ஆண்களின் அலையும் மனது சந்தர்ப்பத்திற்கும் காரணத்திற்கும் காத்திருக்கும், இதில் இரண்டில் எது வாய்த்தாலும் தவறு செய்துவிடுவார்கள், 

***************

வளர்ந்த குழந்தைகளை தனியாக படுக்க வைத்துப் பழக்கி, அங்கேயே சிறிது நேரம் இருந்து தூங்க வைத்துவிட்டு, தேவை ஏற்பட்டால் நடு இரவில் அவர்கள் நன்றாக உறங்குகிறார்களா, அருகில் தண்ணீர் இருக்கிறதா என்று எழுந்து வந்து பார்க்கலாம், ஒற்றைக் குழந்தைகளுக்கு கூடவே ஒரு பொம்மையை படுக்க வைத்தால், மிகவும் பிடித்த பொருள்களை வைத்துவிட்டால் அவர்களுக்கு தனிமை தெரியாது, அவர்களுக்கு உடல் நலமில்லாமல் இருந்தால் அவர்களின் அறையிலேயே அருகில் படுத்திருந்து பார்த்துக் கொள்ளலாம்,  விடுமுறை நாட்களில் பகலில் மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்து குழந்தைகளின் அன்பு குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும், எங்காவது சுற்றுலா சென்றால் ஒன்றாக படுத்து உறங்கலாம், அதைவிடுத்து வீட்டிற்குள் குழந்தை பாசம் என்கிற உணர்வில் தம் உணர்வுகளை அழித்துக் கொள்வதால் தீமையே தவிர்த்து எந்த நன்மையும் இல்லை, கூடவே படுத்து பழகும் குழந்தைகள் ஒரிரு நாட்கள் கூட பெற்றோர் இல்லை என்றால் தங்கள் தேவையை தீர்த்துக் கொள்ளத் தெரியாது வளரும். நன்றாக குழந்தைகளை வளர்த்து,  இல்லற இன்பத்தை நீட்டித்து வாழ விரும்புவர்கள் குழந்தைகளை தனியாக படுக்க வைப்பத்தால் கிடைக்கும் மிகப் பெரிய நன்மை.

என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பி, வெளிநாடு சுற்றுலா சென்றால் அவரின் நான்கு குழந்தைகளுக்கும் தனி அறை தான் எடுப்பார், ஏன் என்று கேட்டேன்,  அவர் சொன்னார்,

My Husband also important for me, I have to / like to entertain him in the night, sleeping with children is nothing other than sleepless, So when ever we go for tour, I  always prepare to book 2 bedroom residential apartment type hotel, instead of separate hotel rooms. 

Seems to be valid right ?

6 செப்டம்பர், 2014

திக தலைவர் திரு Dr வீரமணி ஐயாவின் அரிய படம் !

தமிழக மூத்த அரசியல் தலைவர்களில் எனக்கு பிடித்த தலைவர்களில் திரு வீரமணி ஐயாவும் ஒருவர்,  ஐயாவின் அண்மையகால தமிழக அரசியல் சார்ந்த முடிவுகளில் எனக்கு உடன்பாடுகள் இல்லாவிட்டாலும், பெரியார் பற்றாளன் என்ற முறையில் வீரமணி ஐயாவின் மீது எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு.

ஒரு முறை சிங்கப்பூருக்கு திருக்குறளில் இல்லற மேன்மை என்கிற தலைப்பில் அவர் பேச வந்த போது நானும் நண்பர் குழலி புருசோத்தமனும் அவரை சந்தித்தோம், பின்பு அவர் தங்கி இருக்கும் இல்லத்திற்கு சென்று அவரிடம் ஒரு 30 நிமிடம் பேசும் நல்ல வாய்ப்பும் கிடைத்தது, வழக்கமாக கருப்பு உடையில் பார்க்கும் அவரை வெள்ளை சட்டையில் பார்ப்பதற்கு எங்களுக்கும் வியப்பாகவே இருந்தது, கொஞ்சமும் தயக்கமின்றி படம் எடுக்கவும் அனுமதி அளித்தார்,  நான் அந்த படத்தை பொக்கிஷமாகவே பாதுகாத்து வந்தேன், எதாவது ஒரு நல்ல வேளையில் வெளி இட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். இந்த இதழ் ஆனந்த விகடனில் ஐயா அவர்களின் நேர்காணலில் அவர் அணியும் மற்ற ஆடைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார், ஆனால் படம் எதுவும் வெளி வரவில்லை.

வலைப்பதிவு வாசிப்பவர்களுக்கே அந்த அரிய வாய்ப்பு. ஐயாவுக்கு தெரிந்தாலும் தவறாக கொள்ளமாட்டார் என்று எண்ணியே இந்த படத்தை இங்கு வெளியிட்டுள்ளேன்.



2 செப்டம்பர், 2014

Who is செல்லாத்தா ?

என்னுடைய மனம் புண்பட்டது, அதனால் தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன், கட்டுரையைப் படிக்கும் பலரில் சிலரது மனமும் புண்படலாம், அப்படி புண்பட்டால் ? முதல் வரியை படிக்கவும். 

தமிழன் இந்து தேசிய நீரோட்டத்தில் கரைந்து போகும் விதமாக பிள்ளையார் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடிவருகிறான். பகுத்தறிவாளர்கள் பிள்ளையார் தோன்றிய 'அழுக்கு' கதைகளை எடுத்துச் சொன்னாலும் வழிபாடுகள் புறக்கணிக்கப்படுவதில்லை மாறாக ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்தே வருகின்றன. 'மதம்' என்ற சொல்லும் யானைக்கும் தொடர்பிருப்பதால் தானோ, யானை முக பிள்ளையார் வழிபாடு எழுதப்படாத மதவெறி விழாகவாக பல இடங்களில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. தமிழர்களுக்கென்றே தனிப் பெருமையும் குலவழிபாட்டு அம்மன் தெய்வங்களுக்கும், தொன்று தொட்ட மாயோன் சேயோன், சிவ வழிபாடுகளும் இருக்கும் பொழுது, பொது தெய்வம் என்ற கட்டமைப்பில் ஆரியமயமாக்கப்பட்ட / வேத தெய்வமாகக் காட்டப்பட்ட வடிவங்களை மட்டுமே வணங்குவது வளர்ந்த நாகரீகப் பண்பாடுகள் போல் கிராம தெய்வமான முனீஸ்வரனுக்கும் பூணூல் அணிவித்து சைவ படயலிட்டு வணங்கி வருகின்றனர்.

ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழகத்தில் பரவலாக கட்டப்பட்ட 108 வைணவ ஆலயங்களும், 108 சிவாலயங்களும், அவற்றிற்கான பஞ்சமி நிலங்களும் படிப்பு வழி வேலை அல்லது நிரந்தர வேலை வாய்ப்பு இல்லாத காலங்களில் குறிப்பிட்ட பிரிவினரின் வயிற்றுப்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவை. இவற்றில் முருகனின் அறுபடை வீடுகளும் அடக்கம்,  19 ஆம் நூற்றாண்டு துவக்கம் வரை அஹ்ரகாரங்களில் பஞ்சம் பசி பட்டினி என்பதே கிடையாது. தாது வருட பஞ்சத்தில் மாண்டோர் எல்லாம் அஹ்ரகாரம் சாராதோர்களே.

தமிழர்கள் வஞ்சப் புகழ்ச்சி அணியை இலக்கணத்தில் படித்திருந்தாலும், அது மிகவும் நுட்பமாக கட்டப்பட்டு திணிக்கப்படும் பொழுது அறியாமையால் அவற்றை உண்மை என்றும், தாம் தாழ்த்தப்படுகிறோம் என்கிற அறியாமையால் அவற்றையும் போற்றுகின்றனர், உதாரணத்திற்கு தமிழர் பழம் பெரும் தெய்வமான முருகனுக்கு அறிவு குறைவு என்பதால் அம்மையப்பன் தான் உலகம் என்று உணராது புற உலகை சுற்றிவிட்டான், ஞானப் பழம் பெரும் தகுதியற்றவன் என்கிற கதையை 'சிவபெருமானின் திருவிளையாடல்' கதை என்று சிலாகிக்கின்றனர். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டு வணங்கப்பெரும் முருகனை பொது ஆண்டு (கிபி) யில் அறிமுகப்படுத்த பிள்ளையாருக்கு தம்பி என்றாலும் ஏற்கின்றனர். அது எப்படி முன்னடி அறியப்பட்டவனுக்கு பின்னால் வந்தவன் தம்பியாவான் ? வட இந்தியாவில் கந்தன் என்று சொல்லப்படுவன் பிள்ளையாருக்கு அண்ணன், அங்கு பிள்ளையாரும் இருமனைவிகளுடன் திருமணமானவர், தமிழர்களுக்காகவே முருகன் பிள்ளையாருக்கு தம்பி என்றும் பிள்ளையார் மணமாகதவர் (பேச்சிலர்) என்று சொல்லப்படுகிறது. நம்ம தமிழக வழக்கத்தில் அண்ணனை விட்டு அல்லது முன்பே தம்பி திருமணம் செய்து கொள்வானா ? 

தவிர நமக்கெல்லாம் நன்கு தெரியும் குறிஞ்சி நிலம் சார்ந்ததே முருக வழிபாடு, குறிஞ்சி, குற்றால குறவஞ்சி ஆகியவை முருகனோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவை, இயல்பிலேயே குறவஞ்சி வள்ளி தான் முருகனின் ஒரே மனைவியாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் வேதக் (கட்டுக்) கதைகளில் தேவேந்திரனின் மகள் தேவயானி தான் முதல் மனைவி என்றும் தாழ்ந்த குலத்து வள்ளி இரண்டாம் மனைவி என்று சொல்லப்படுகிறது.

அடிப்படை அல்லது பண்பாட்டுக் கூறுகள் எதையும் ஆராயும் சிந்தனை எதுவுமின்றி, தமிழர் குறித்து தமிழர்களுக்கு சொல்லப்படும் தமிழர்கள் அல்லாதோரின் கதைகளை அப்படியே தமிழர்கள் நம்புவது வேறெந்த இனத்தினரும், மொழியினரும் செய்யாத ஒரு மூடத்தனம் என்று கூறுவதைத் தவிர்த்து வெறென்ன சொல்வது ?

தமிழ்நிலத்தில் பன்னெடுங்காலமாக மாரியம்மன் வழிபாடு, கோடைக்கு பிறகு மழைவேண்டி, அறுவடை இல்லாத ஓய்வுகாலமான கோடைகாலத்தில் கொண்டாடப்படுகிறது, மாரி என்றால் மழை.

பின்னர் வேதவழி தெய்வம் என்று கூற புனையப்பட்ட மாரியம்மன் கதையும், பிள்ளையார் கதையும் எடுத்துக் கொண்டால் கிட்டதட்ட இரண்டும் ஒன்று போன்றதே, பரசு இராமன் தந்தை சிவனின் ஆணையை நிறைவேற்ற தன் தாய் பார்வதியின் கழுத்தை வெட்டுவான், பின்பு தவறை உணர்ந்து அவ்வழியாக செல்லும் தாழ்ந்த குலப் பெண்ணின் தலையை ஒட்டிப் முண்டத்தை பார்வதியின் உடலில் பொருத்துவார்கள், இது தான் மாரியம்மன் வழிபாட்டிற்கு சொல்லப்படும் ஆரிய வழிக்கதை. மாறாக குளிக்கச் செல்லும் முன் காவலுக்காக பார்வதி தன் அழுக்கினால் செய்யப்பட்ட பிள்ளையார் (மனித) உருவத்தை, மாற்றோன் என்று ஐயம் கொண்டு பிள்ளையார் தலையை வெட்டி, பின்னர் தவற்றை உணர்ந்த சிவன், அந்த பக்கமாக சென்ற குட்டியானையின் தலையை வெட்டி பொறுத்தப்பட்டதால் தான் பிள்ளையாருக்கு யானைத் தலையாம்.

மாரியம்மன் கதையை உண்மை என்றே நம்பி இன்றும் தமிழகத்தில் பல பல மாரியம்மன் கோவில்களில் பார்வதியின் தலையை மட்டும் சிலையாக வைத்து வைத்து வணங்குகிறார்கள், தாழ்ந்த குலப் பெண்ணில் உடலை வணங்கக் கூடாதாம். ஆனால் பிள்ளையாருக்கு அவ்வெறெல்லாம் அவமரியாதை இல்லை, ஏனெனில் யானை என்னும் விலங்கு தலையை விட தாழ்ந்த குலப் பெண்ணின் உடல் அசுத்தமானது போலும். பரசு இராமன் கதையில் உயிரோடு இருக்கும் பார்வதியின் தலை போன்று, பிள்ளையார் கதையில் பிள்ளையாரின் தலை வெட்டியதும் பிள்ளையாரின் (ஒரிஜினல்) தலை இல்லாமல் போவதும் அதன் பொருட்டு யானைத் தலையை ஒட்டவைப்பதும் வியப்பானதே. மாரியம்மனுக்கு சொல்லப்படும் பரசு இராமன் கதை, பிள்ளையார் கதைக்கு பிந்தியது என்பதால் தலை ஒட்டும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது என்று நாம் கொள்ள வேண்டும் போல். 

மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுவதும் கொண்டாடுவதும், ஆடித் திங்களில் தான், ஆடித் திங்கள் ஜூலை 15 - ஆகஸ்ட் 15 வரையில் வரும், அந்த திங்களில் வெள்ளிக் கிழமைகளில் (ஆடிவெள்ளி) ஒன்றில் அம்மன் கோவில்களில் விழா களைகட்டியிருக்கும், அப்பொழுது பள்ளிகள் துவங்கும் காலம், தேர்வுகள் நடைபெறும் காலமும் அல்ல, ஆனால் அவற்றை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் தேர்வுக்கு படிக்கும் பொழுது, அம்மன் பாடல்கள் குறிப்பாக 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா...' பாடல் குடிசைபக்கத்தில் இருந்து இரைச்சலாக கேட்பதாகவும், படிப்பு கெடுவதாகவும் எந்திரன் படத்தில் காட்சி வைக்கப்பட்டு, அதை எந்திரன் நக்கல் அடித்து 'Who is செல்லாத்தா ?' என்று கேட்க படம் பார்ப்பவர்களுக்கு அது ஒரு (மலிவான) நகைச்சுவை காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. காரணம் மாரியம்மனை கும்பிடும் ஏழை எளியோர் எதிர்ப்பு காட்டமாட்டார்கள் என்று துணிந்தே அந்த காட்சியை நகைச்சுவை என்ற பெயரிலும், அவ்வாறு மாரியம்மனை கும்பிடுவர்களில் ரவுடிகள் உண்டு, அவர்கள் 'ஆத்தாள கும்பிட்டுட்டு துண்ணூறு வாங்கிப் பூசிட்டு போ...பாஸாகிவிடுவாய்' என்கிற மூட நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் காட்சியாக்கப்பட்டுள்ளது.

உண்மையில் தேர்வு நெருங்கும் காலமென்றால் அது ஐயப்பன் சீசன் தான், ஜனவரி 12 ஆம் தேதிவரை ஐயப்ப சாமிக்கு மாலை போட்டவர்களின் பூசை புனஸ்காரங்கள் தான் நடைபெறும், ஆடியில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஒன்றோ அல்லது இரண்டோ வெள்ளிக்கிழமைகள் சார்ந்த நிகழ்வு, ஆனால் ஐயப்ப சீசன் என்பது 42 நாள்களுக்கு அங்கங்கே உள்ள கோவில்களில் ஒலிப்பெருக்கிக் கட்டி வீரமணி அல்லது வீரமணி தாசன் பாடல்களை போடுவார்கள், ஷங்கர் போன்றோருக்கு 'Who is Saranam Ayyappaa ?' என்று அவற்றை நகைச்சுவையாக்கி கேட்கும் துணிவும் இல்லை, ஒரு வேளை கேட்டிருந்தால் இந்து இயக்கம், அந்த படத்தில் அந்த காட்சியை நீக்காமல் ஓட விட்டிருக்காது. இளிச்சவாய்கள் கூழ் ஊற்றிக் கொண்டாடுபவர்களும் அவர்களது நம்பிக்கையும் தான்.

போலிப் பகுத்தறிவு வாதியான நடிகர் விவேக் போன்றோர், லாரிக்கு எலுமிச்சைபழம் கட்டி இருப்பதை கிண்டல் அடிப்பார்கள், ஹெலிக்காப்பட்டரின் சர்கரத்தில் வைக்கும் எலுமிச்சைக்கும். மாலைக்கும் அவர்களிடம் இருந்து எந்த நகைச்சுவை காட்சியும் வைக்கத் தெரியாது.


தமிழகத்தில் இந்து என்று கூறிக் கொள்ளும் அனைவருக்குமே குலதெய்வம் என்று ஒன்று உண்டு, அந்த தெய்வங்களை வணங்குபவர்கள் அவர்களே தொட்டு கழுவி, பூசை செய்வது வழக்கம், ஆனால் அங்கு பிறந்த குழந்தையின் காது குத்திக்கு, முதல் மொட்டைக்கும் செல்வதுடன் சரி, பிறகு பொட்டல் காட்டில் கூரை இல்லாது அந்த குலசாமி அப்படியே தான் நிற்கும், ஆனால் இவர்களோ ஆகமவிதி கோவில்களில் திருக்கல்யாண உற்சவத்திற்கு ரூ 50,001 கட்டி  10 - 20 அடி தள்ளி உட்கார்ந்து 'திருக்கல்யாண கோலம்' பார்த்து முக்தி அடைந்ததாக நினைத்துக் கொள்வர். தமிழுக்கு இரண்டாம் இடமே என்று அறிவிக்கும் 'இங்கு தமிழிலும் அர்சனை செய்யப்படும்' எந்த ஒரு தமிழனையும் உறுத்தாது. 

மலேசிய தமிழர்களைப் பாருங்கள், இந்தியாவில் நீ பிள்ளையாருக்கோ அல்லது, பிற தெய்வங்களுக்கோ என்ன வேத கதைகளை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போ, எங்களுக்கு எங்கள் தமிழ் முருகனே உயர்வானவன், எங்களது குல சாமிகளே உயர்ந்தது என்று போற்று கின்றனர், தமிழ் இந்துகளுக்கு தை பூசமே பெருநாள், சிறப்பாகக் கொண்டாடத்தக்க திருநாள்,  என்று அவர்கள் போற்றுகின்றனர்.



ஆனால் தமிழகத்தில் ? பெரியாரை தமிழன் மறக்க மறக்க பெருச்சாளிகளின் ஊர்வலங்கள் தான் பெருகிவருகிறது. உண்மை தானே ?

19 ஆகஸ்ட், 2014

படகர் மொழியை காப்பாற்றுவது யார் ?

வட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழியில் உரையாடுபவர்களுக்கும் அவ்வட்டார வழக்கில் உரையாடுபவர்களும் உரையாடினால் புரிந்து கொள்வது கடினம், அதாவது வேர் மொழியில் இருந்து தனித்துவிட்டது என்ற நிலையில் வட்டார வழக்குகள் தனி மொழி என்னும் சிறப்பை பெருகின்றன அல்லது அடையாளப்படுத்தப்படுகிறது. திராவிட மொழிகள் அனைத்தும் பழந்திராவிட மொழிகள் இருந்து கிளைத்தன, பழந்திராவிட (Proto Dravidan) மொழி அமைப்பு பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின் மாற்றம் மிகப் பெரிய அளவில் இல்லை என்பதால் திராவிட மொழிகளின் ஊற்று தமிழாக இருக்கக் கூடும் என்கின்றனர், தமிழை திராவிட மொழிகளின் தாய் என்று முன்னிருத்துவதில் தற்போதைய சிக்கல் கன்னடம், தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளைப் பேசும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை, தம்மொழியே சிறந்தது என்கிற உயர்வு மனப்பான்மையில் தமிழை திராவிடத் தாய் என்று ஒப்புக் கொள்வதற்கு அவர்களுக்கு இருக்கும் மனத்தடையை நாம் புரிந்து கொள்ள வேண்டும், பழந்திராவிட மொழி என்கிற பொதுமையை முன்னிருத்தினால் அதன் வழி திராவிட மொழிகள் கூட்டாக தத்தம் வளர்ச்சிக்கு பயனடைய முடியும். இது என் தனிப்பட்ட கருத்து.

*****

திராவிட மொழிகள் இவை என்று அடையாளப்படுத்தப்பட்டவை ஏறத்தாள 45, அவற்றில் வரிகள் அமைப்பு மற்றும் பொதுவான வினைச் சொற்கள் மற்றும் பெயர் சொற்கள் உண்டு, அவற்றிற்கிடையேயான தொடர்புகளைப் பொருத்து அவை திரிந்தோ, திரியமலோ இருக்கும், பொதுவான இலக்கண அமைப்பும் சேர்ந்து தான் குறிப்பிட்ட மொழிகள் ஒரு தொகுப்பில் வரும், திராவிட மொழிகள் இந்தியாவின் தென்மாநிலங்களிலும், வட இந்தியாவின் மைய பகுதிவரையும், பாகிசுதானில் ஒரு பகுதியிலும் கூட (Brahui) பேசப்பட்டுவருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் தவிர்த்து ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் பேசும் மொழியாக கர்நாடகாவின் மங்களூர் பகுதியில் துளுவும், தமிழ்நாடு நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் படகர் மொழியும் பேசப்படுகிறது, துளுவுக்கு தனி எழுத்துகள் (Tigalari script) இருந்தாலும் தற்பொழுது கன்னட எழுத்துகளைத் தான் பயன்படுத்துகின்றனர். கர்நாடக மாநிலத்திற்குள் அமைந்துள்ளதால் துளு பேசுவர்களுக்கு அது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

நீலகிரி தமிழகத்தில் அமைந்துள்ளது, படகர்கள் / வடகர் / படுகு / வடுகு என்று குறிக்கப்படும் ஒரே வடுகு மொழியை பேசுபவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவர்களின் மொழி பெரும்பகுதி கன்னடத்தை ஒத்திருந்தாலும் கன்னட எழுத்தில் அவர்களின் மொழியை வளர்ப்பதில் தமிழக அரசின் உதவியையோ, கர்நாடக அரசின் உதவியையோ அவர்களால் பெற முடியாது. படகர் மொழி கன்னடம் தமிழ் ஆகியவற்றின் திரிந்த கலவைதான், ஆனால் படகர் மொழிக்கென்றே தனிச் சொற்களும் நிரம்ப உண்டு, தமிழும் கன்னடமும் அறிந்தவர்கள் படகர் உரையாடலை புரிந்து கொள்ள முடியும். படகர்களின் பள்ளிக் கல்விக்கு கொடுக்கப்படும் இருவாய்ப்புகள் முதல் மொழியாக கன்னடமும் தமிழும் மட்டுமே, அவர்களுடைய மொழியை வீட்டில் பேசினாலும் அவர்களுக்கு படகர் மொழிக்கல்விக்காக எந்த ஒரு பள்ளிக் கூடங்களோ, தனியார் அமைப்போ கிடையாது, நம்முடைய தாய் மொழி ஒன்றாக இருந்து பெரும்பான்மையினர் பேசும் மொழி என்று தமிழை மட்டுமே கற்றுக்கொள்வது மன அளவில் அவர்களுக்கு இருக்கும் தடைகளை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வது போல் தெரியவில்லை, தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் நல்லது என்பது தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம், அவர்களுக்கும் ஏன் கட்டாயமாக திணிக்க வேண்டும், இந்தி திணிப்புக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் தமிழகம் (எனக்கு அதில் உடன்பாடு உண்டு) படகர்களுக்கான கல்வி வாய்ப்பில் தமிழை காட்டுவது எந்தவிதத்தில் ஞாயம் என்று எனக்கு தெரியவில்லை, அவர்களுக்கு ஆரம்ப பள்ளிகளாவது படகர் மொழியை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை கொடுக்கலாம்,

வீட்டில் தான் பேசுகிறார்களே, பின்னர் ஏன் பள்ளியில் கற்றுக் கொள்ள வேண்டும் ? பள்ளிக் கல்வி என்பது எழுத்தை படிக்கக் கற்றுக் கொள்வது அல்ல, மாறாக அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மொழி வரலாறு, இலக்கணம் இலக்கியம் உள்ளடக்கியவையே, படகர் மொழிக்கென்றே தமிழ் எழுத்துகளை பின்பற்றி தனி எழுத்துகளை அம்மக்களில் ஒருவர் உருவாக்கி இருக்கிறார், அது ஒரு நல்ல முயற்சி, எழுத்தில்லாத மொழிகள் இலக்கிய இலக்கணங்களையும், மொழி சார்ந்த படைப்புகளையும் அடுத்த சந்ததியினருக்கு அளிக்க முடியாது,  அவர்கள் மொழியை தமிழ் எழுத்துகளிலேயே எழுதலாமே ? மொழிக்கான தனிச் சிறப்பு என்பது அது தனக்கான தனி எழுத்து வடிவத்தை கொண்டிருப்பது தான், இந்தியாவில் உள்ள மலையாளம், தமிழ் தவிர்த்து ('ழ்') ஏனைய மொழிகளை இந்தி மற்றும் வடமொழியை எழுதப்பயன்படும் தேவநகரியில் எழுதிவிட முடியும், ஆனால் அதில் தனித்துவம், தனிச்சிறப்பு ஏதுவும் இல்லை, அதனால் தான் படகர் மொழிக்கென தனி எழுத்துகளை உருவாக்கி, கணிணி ஒருங்குறியில் (Unicode) படகர் மொழி எழுத்துகளையும் ஏற்ற) முயற்சிக்கின்றனர், இதற்கு தமிழக அரசு எந்திரம் ஒத்துழைத்தால் படகர் மொழி இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மேலும் வாழும்.
The Badaga Script developed by Anandhan Raju

வெறும் 15,000 பேர் மட்டுமே பேசும் வடமொழியை அழிவில் இருந்து காப்பாற்ற கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது, பல்கலைகழகங்கள், 100க் கணக்கான சபாக்கள் இயங்குன்றனர். வடமொழி விழிப்புணர்வுக்காக ஏழுநாள் கொண்டாடப்படுகிறது, சங்காலத்தில் (புறநானூற்று குறிப்புகள்) வடகர் என அறியப்பட்டு 4 லட்சம் பேர் பேசும் ஒரு மொழியை வளர்த்தெடுக்க மைய அரசோ, மாநில அரசோ முன்வரவில்லை, தமிழ் திணிப்பால் அழிந்த மொழி என்னும் நிலை படகர் மொழிக்கு வரவேண்டாம், படகர் இனமக்கள் ஒன்று திரண்டு தமிழக அரசிடம் தங்கள் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கையை வைத்து பேராடி மொழி உரிமையைப் பெறுவது தான் தற்போதைய வழி, அம்மக்களை தமிழகத்தின் எல்லைக்குள் அடைத்துவிட்டு, அம்மக்களின் மொழியை கண்டுகொள்ளாமல் இருந்தால் படகர் மொழி அழிவுக்கு, தமிழ் திணிப்பும் தமிழக அரசுமே காரணமாக அமைந்துவிடும்.




கும்கி படத்தில் அம்மக்களின் வாழ்வியலை பதிய வைத்திருப்பார்கள், ஆனால் அவர்கள் பேசும் மொழி பற்றி ஒருகாட்சி அமைப்பு கூட கிடையாது. படகர் மொழியில் இலக்கியம் படைக்க படகர்களில் பலருக்கு ஆர்வம் உண்டு, அவர்கள் பள்ளிகளுக்கு தேவையான பாடத்திட்டங்களை தமிழ் பாடத்திட்டங்களை ஒட்டி அமைத்து தருவதற்கும் ஆவலாகவே உள்ளனர், நீலகிரி படகர் இனமக்கள் திராவிட மக்கள், தமிழகத்தை சார்ந்தவர்கள், வெள்ளைக்காரன் அவர்களது மலைவாழ் இடங்களை பறிக்க, பின்னர் திரைப்படம் எடுக்கவும், சுற்றுலாவிற்காகவும் அவற்றையெல்லாம் நாம் பறித்து கொண்டோம், அவர்களின் மொழியை காப்பாற்றிக் கொடுப்பது ஒவ்வொரு தமிழனுக்குமே கடமையாகும், ஏனெனில் விரைவில் அழியும் மொழிகளின் பட்டியலில் படகர் மொடியும் உண்டு.

இணைப்புகள் :

Badaga language

16 ஆகஸ்ட், 2014

கணிணிக்கு ஏற்றமொழி என்னும் புரட்டு !

மனிதர்களுக்கு விளங்காது, ஆனால் தேவர்களுக்கு விளங்கும் மொழி அதனால் தான் தேவ பாஷை என்றார்கள், ஆனாலும் வடமொழியை வளர்த்து எடுக்க முடியவில்லை, மனிதர்கள் மனிதர்களோடு உரையாட தேவ பாஷை எதற்கு என்பதாலோ அல்லது அதன் கடின இலக்கண வரையரைகளினாலோ, அண்மைய இலக்கியத்தின் உரைநடை, புதுக்கவிதை போன்ற புதிய உத்திகளை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாத தாலோ, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள் ஆங்கிலம் என்கிற பிழைப்பு சார்ந்த மொழியை நாடிய தாலோ வடமொழியை 19 ஆம் நூற்றாண்டில் வளர்த்து எடுக்க முடியவில்லை, எனக்கு தெரிந்து 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட புதிய நூல்கள் என்று எதுவுமே வடமொழியில் இல்லை, இருந்தால் தெரிவிக்கவும் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன், தற்பொழுது தான் சங்கரமடம் உள்ளிட்ட வடமொழி பற்றாளர்களால் வடமொழியில் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, புரியாவிட்டாலும் வடமொழி 'ஸங்கீதத்தை' தலையாட்டி ஆட்டி கேட்பது போல் ஒரு கூட்டம், ஒருவேளை சொர்கத்தில் பலன் தரக்கூடும் தேவர்களுடன் பேச பயன்படக் கூடும், தவறவிடக்கூடாது என்று கேட்கின்றனர். 

மற்றபடி அண்மைய கணக்கு எடுப்பின்படி வடமொழி பேசுவர்களின் எண்ணிக்கை 120 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதுடன், நாளடைவில் அதுவும் குறைந்து பேசப்படாத வெறும் வழிபாட்டு மொழி என்கிற நிலையை அடையலாம், மாறாக பலரும் கூறும் கருத்து வடமொழி என்றைக்குமே மக்களால் பேசப்பட்ட மொழி கிடையாது, அந்த 15 ஆயிரம் பேரும் வேண்டுமென்றே வடமொழியை வாழவைக்க வேண்டும் என்பதற்காக வலிந்து தான் பேசுகின்றனர் என்கின்றனர்.

நான் அறிந்த அல்லது படித்து தெரிந்த வரையில் வடமொழிக்கு தமிழுக்கு இருப்பது போன்று பிராமி (தமிழி) எழுத்து பின்னர் வட்டெழுத்து என்று தொன்று தொட்டாக, வரலாற்றின் தொடர்ச்சியாக எழுதும் முறைகள் கிடையாது, திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு தமிழுக்கு எழுத்துகள் பயன்படுத்தப்படுவதால் 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...' என்று குறளில் எழுத்துகள் பற்றியும் எழுத முடிந்திருக்கிறது, மீன் இலட்சினை சிந்து சமவெளி நாகரீகத்தில் விண்மீனைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டதாலும் தற்கால அல்லது பண்ணெடுங்காலமாக தமிழில் விண்மீனை  வான் மீன் என்ற இடப்பெயர் சொல்லாக மீன் என வழங்கும் வழக்கும் உள்ளது தவிர சிந்துசமவெளி மக்களின் சிவ வழிபாடு திராவிட வழி வந்தவை என்பதாலும் வேறு சில சான்று அடிப்படையில் சிந்துவெளி நாகரீகம் பண்டைய திராவிட நாகரீகம் தான் என்று ஐராவதம் மகாதேவன் மற்றும் ஐரோப்பிய ஆய்வளர்கள் உரைக்கின்றனர்,  திராவிட மொழிப்பிரிவில் ஒன்றான Brahui மொழி பேசுவர்கள் தற்காலத்திலும் சிந்துசமவெளி அமைந்த பாகிதான் பகுதியில் வாழ்ந்துவருகின்றனர், வடமொழியில் வேதகாலம் முதலாக / முன்பாக மீன் என்ற சொல் 'மச்ச' என்றும்.  வின்மீன் 'நக்‌ஷத்திர' என்றும் வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.


அஃதாவது 11 ஆம் நூற்றாண்டுவரை எழுத்தே இல்லாத மற்றும் ஆண்குறி வழிபாடு என்று சிவ வழிப்பாட்டை வேதங்களினால் பழித்த வடமொழிக்கு சிந்துவெளி நாகரீக தொடர்பு இருக்க கூறுகளே இல்லை என்கிறனர், சிந்துவெளியில் பயன்படுத்தப்பட படக்குறி (சித்ர / Symbol) எழுத்துகளின் தொடர்ச்சியாக திராவிட எழுத்து முறையான பிராமியும், அதே பிராமியில் கூடுதல் எழுத்துக்களுடன் மாற்றம்  செய்து 'அசோகர் பிராமி' பாலி மொழியில் அசோகர் காலத்து கல்வெட்டுகள் எழுதப்பயன்பட்டதாக ஆய்வாளர்கள் கூற்று, முதலில் வடமொழிக்கு எழுத்து முறைகள் தோன்றி அது தமிழுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் நாமும் 31 எழுத்துகளுக்கு (உயிர், மெய் மற்றும் ஆய்தம்) மாற்றாக 51 எழுத்துகளைத் தான்  பயன்படுத்தி இருப்போம், எனவே தமிழ் பிராமி எந்த மொழியிலும் இருந்தும் பெறப்படவில்லை மாறாக அவை தமிழுக்காக உருவாக்கப்பட்டது என்கிறனர்.

வடமொழிக்கு எழுத்து வடிவம் கிடைத்ததே 11 ஆம் நூற்றாண்டுகளில் தான், அதற்கு முன்பு (10 நூற்றாண்டு) வரை குறிப்பாக தஞ்சாவூர் கல்வெட்டுகளில் கூட வடமொழியை தமிழ் எழுத்தில் தான் எழுதி வந்திருக்கின்றனர், விக்கிப்பீடியாவில் வடமொழி தொடர்பான சான்றாவணமாக தமிழ் எழுத்தில் எழுதப்பட்டதைத் தான் காட்டுகின்றனர்,


( இது தற்பொழுது விக்கியில் நீக்கப்பட்டுள்ளது)



அது மட்டும் தான் முதன் முதலில் வடமொழி எழுத்துவடிவாக அமைந்ததற்கான தகவல், பின்னர் தேவநகரி என்னும் (தற்போது உள்ள) எழுத்துவடிவம் 51 எழுத்துகளுடன் அமைக்கப்பட்டு அவற்றை 11 ஆம் நூற்றாண்டுகள் முதல் வடமொழியை எழுதப் பயன்படுத்துகின்றனர். ஒரு பேச்சுக்கு சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் வடமொழி / வேத நாகரீகத்திற்கும் தொடர்பு இருந்தால் இடைப்பட்ட காலத்தில் வடமொழிக்கு எழுத்துகளே இல்லாது போனது ஏன் ? என்று நினைக்க, 'ஸ்மிருதி' அல்லது மனனம் செய்யும் அடைப்படையில் மட்டுமே வடமொழி வழி வழியாக பயிற்று விக்கப்பட்டுவந்திருப்பது தெளிவாகிறது. ஆசிரியர் - மாணவர்கள், பின்னர் அவர்களின் மாணாக்கர்கள் என தொடர்ந்து அவை பாதுக்காப்பட்டது அன்றி எழுதி வைக்கப்பட்ட ஒன்று அல்ல, வால்மிகிக்கு காலத்தில் ஓலைச் சுவடிகளில் வடமொழியை எழுதி வாய்ப்பிருக்கவில்லை, அதாவது 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் கட்டிய பாலத்தில் செங்கற்களில் 'राम' (ராம்) என்று 11 ஆம் நூற்றாண்டில் உருவான எழுத்தில் எழுதப்பட்டிருப்பதாக காட்டுவதே ஒரு மோசடியும் முரண்பாடானதும் ஆகும், ஸ்வஸ்திக் சின்னம் தவிர ॐ உள்ளிட்டவை தேவநகரி எழுத்து உருவான பின்பு பயன்படுத்தப்படுவையே. வடமொழியின் எழுத்து வரலாற்றின் சுருக்கம் இவை. 

வடமொழி கணிணிக்கு வேறெந்த மொழியைக்காட்டிலும் ஏற்ற மொழி என்றும், அதை நாசா உறுதி செய்துள்ளதாகவும் இணையம் பொதுப்பயன்பாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளாக இட்டுக்கட்டிய கட்டுரைகள் குப்பைகளாக குவிந்துள்ளன, இதையெல்லாம் எந்த சுனாமியும் தூக்காது என்கிற இறுமாப்பில் தொடர்ந்து பரப்புகின்றனர், எந்த வகையில் கணிணிக்கு சிறந்தது என்பதற்கு இவர்கள் வடமொழியில் உள்ள வேற்றுமை உருபுகளாக (they call it is vibhakti) காட்டும் சான்றுகள் அனைத்தும் திராவிட மொழிகள் அனைத்திற்குமே பொதுவானது.

அதாவது பெயரெழுத்தின் விகுதியை மாற்றி வரிகள் அமைப்பது

இராமனை அடைந்தனர்,
இராமனால் கொல்லப்பட்டான்,
இராமனுக்கு பசித்தது,
இராமனின் வேண்டுகோள்,
இராமனது வில்
இராமன்கண் விடப்பட்டது
இராமனிடம் வந்து சேர்ந்தனர்,
இராமனே கொன்றான்,
( ஐ, ஆல், கு, இன், அது, கண், இடம் மற்றும் விளி வேற்றுமை)

இதில் கண் வேற்றுமையும்,  இட வேற்றுமையும் தற்போதைய இலக்கணத்தில் ஒன்றாகவே பயன்பாட்டில் உள்ளது,

ஆக எட்டு வேற்றுமைகள் தமிழிலும் உள்ளது. இதே எட்டு வேற்றுமைகள் தான் வடமொழியிலும் உள்ளன. ஆங்கிலத்தில் இது போன்று பெயர் சொற்களை மாற்றி வரிகள் அமைப்பது கடினம், Belong to Ram > Ram's (இது கூட அண்மையில் ஏற்பட்டவையே) Raamaa feel hungry, Raavana Killed by Raamaa, Raamaa Request... இது போல் இராம் தனித்து மட்டுமே வரும், தவிற ஒவ்வொரு செயலுக்கும் வினைச் சொற்கள் மாறுபடும்m முன்னிலையின் (Subject) விகுதி மாறாது,  இந்த பெயர்ச் சொல் விகுதி மாற்றம் என்னும் வேற்றுமை உருபு இலக்கணம் மட்டும் ஆங்கிலத்தில் மாறுபடுகிறது, இதனால் ஆங்கிலத்தை விட வடமொழி கணிக்கு Object Oriented Program, மற்றும் Class' எழுத மிகவும் பயனுள்ளது, அதனால் கணிக்கு மிகவும் ஏற்ற மொழி என்கிறார்கள். இவர்களுக்கு வடமொழி தவிர்த்து திராவிட மொழியும் அதன் இலக்கண அமைப்பு குறித்து கொஞ்சமும் தெரியாது அல்லது அவற்றை மறைத்துவிட்டு வடமொழியே சிறந்தது என்று நிறுவ முயற்சிக்கின்றனர்.

வடமொழியில் ஒன்றின் பால், இரண்டின் பால், பலவின்பால் என்கிற இலக்கண விதிகள் உண்டு, அதாவது, Baaley (குழந்தையினுள் - Singular) , Baalayo (குழந்தையருள் Dual ), Baaleshu (குழந்தைகளுக்குள் Plural), காலப்போக்கில் தமிழில் உள்ள இருமை 'ர்' விகுதி மதிப்புக்காகப் பயன்படுத்துவதால் தந்தையர், தாயார் என்று ஒருமை சார்ந்த விகுதியாவிட்டது,

குழந்தை அழுதது (Singular)
குழந்தையர் அழுதனர் (Dual)
குழந்தைகள் அழுதனர்  (Many / Plural)

ஒன்றிற்கு மேற்பட்டவை பல என்பதால் தற்காலத்தில் திராவிட மொழிகளில் இருமை குறிப்புகள் எழுவாயின் விகுதியாக வருவதில்லை.

மற்றபடி தமிழிலோ, திராவிட மொழிகளிலோ, இருமை விகுதிகள் இல்லை என்று சொல்வதற்கில்லை, அதுவும் வடமொழிக்கான தனிச்சிறப்பும் இல்லை, பயன்பாட்டில் இல்லாத மொழியின் தனிச்சிறப்புகள் என்பவை வானவில்லின் வண்ணம் போன்றவை அவற்றை எடுத்து வந்து கலந்து சுவற்றில் பூசமுடியுமா ? எனக்கு தெரிந்து வடமொழியில் திராவிட மொழிகளைக்காட்டிலும் அணி இலக்கணங்கள் ஏனெனில் அணி (உவமை அணி, இல்பொருள் உவமை அணி...போன்றவை)  சற்று கூடுதல், அதனால் அது கணிக்கு ஏற்ற மொழி என்று கூற ஒன்றும் இல்லை, அணி இலக்கணத்திற்கும் Computer Program or Object Oriented Program க்கும் எந்த ஆணித் தொடர்பும் இல்லை.

மேலும் 'I Love You' என்பது போன்ற ஆங்கில வரியின் சொற்களை இடம் மாற்றினால் 'You Love I', Love I You' போன்றவை ஆங்கிலத்தில் பொருள் தராது மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும், வடமொழியில் எழுதப்பட்டும் வரிகளின் சொற்களை மாற்றினால் பொருள் மாறாது, இந்த வசதி ஆங்கிலத்தில் இல்லை அதனால் வடமொழியே ஆங்கிலத்தைக்காட்டிலும் சிறந்த மொழி என்கிறார்கள், அதனால் வடமொழியைப் பயன்படுத்துவதால் கணிணியின் விரைவுத் திறன் கூடுமாம், திராவிட மொழிகளிலும் சொற்களை இடம் மாற்றினால் பொருள் மாராது,

இராமதாசு மரத்தை வெட்டினார்,
இராமதாசு வெட்டினார் மரத்தை,
மரத்தை வெட்டினார் இராமதாசு,
மரத்தை இராமதாசு வெட்டினார,
வெட்டினார் மரத்தை இராமதாசு,
வெட்டினார் இராமதாசு மரத்தை ,


ஆறுவகையாக இடம்மாற்றில் எழுதினாலும் இதில் எங்காவது பொருள் மாறுகிறதா ? ஆக சொற்களை இடம் மாற்றி பொருள் மாறாமல் இருக்கும் இலக்கண அமைப்பு திராவிட மொழிகளுக்கும் பொதுவானதாகும் எனவே வடமொழி மட்டும் தான் கணிணிக்கு ஏற்ற மொழி என்பது முற்றிலும் புறக்கணிக்கக் கூடிய கூற்றாகும், ஒருவேளை அவ்வாறு அவற்றை பலரும் ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்ள நேர்ந்தாலும் கணிக்கு ஏற்ற மொழிகள் இந்திய மொழிகள் அனைத்துமே என்பதே சரியானதாக இருக்கக் கூடும். 

என்னைக் கேட்டால் இன்றைய மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிகவிரைவு கணிணிகளும் (Super CPU, I7 Processor), அளவுக்கு மிதியான நினைவு சில்லுகளும் (Memory in TB) வந்துவிட்டதால் கணிணியில் பயன்படுத்தப்பட இது சிறந்த மொழி என்று எந்த மொழியையுமே பயன்படுத்திவிட முடியும், ஒரு குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்திப் பெறப்படும் விரைவுத் திறன் குறித்த கூற்றெல்லாம் இன்றைய தொழில் நுட்பத்திற்கு முன்பு ஒன்றுமே இல்லை. ஒருவேளை இவர்கள் இந்த பொய்களை பரப்பும் காலத்தில் இருந்த 8 Bit CPU, 16MB Memory க்கு மேல் எதிர்காலத்தில் மேம்பட வாய்ப்பே ஏற்படாது என்று தவறாக நினைத்திருக்கக் கூடும். மற்றபடி இந்த 'வடமொழி மட்டுமே கணிக்கு ஏற்ற மொழி' என்பது முற்றிலும் அடைப்படை அற்ற கூற்று, மற்றும் புறந்தள்ள வேண்டியதும் ஆகும்.

கணிணிகள் பொதுப் புழக்கத்திற்கு (Even Before Internet) வந்த பிறகு வடமொழி கணிக்கு ஏற்ற மொழி என்று ஏறக்குறைய 25 ஆண்டுகளாக பரப்பட்டுவருகிறது, இந்திய அரசுகள் கோடிக்கணிக்கில் மக்கள் வரிப்பணைத்தை வாரி இறைத்து வடமொழி வளர்ச்சிக்கு செலவிட்ட போதிலும் அந்த 36 விழுக்காடு நாசா பொறியார்களில் ஒருவரும் வடமொழியை கணிணியில் ஏற்றி இவர்களின் கூற்றை மெய்ப்பிக்கவும் முயற்சிக்கவில்லை,  தவிர இவ்வாறு தவறான கூற்றை பரப்புவர்களும் இதுவரை அதை செய்து காட்டவும் இல்லை, வெறும் பரப்புரையாக மட்டுமே இவை நம்ப வைக்கப்படுகிறது.



அகண்டபாரதம் இருந்தால் நல்லா இருக்குமே என்பது போன்ற வெறும் கற்பனை கனவே கணிணியில் வடமொழி ஏறும் என்பதும், சிறந்த கணிணி மொழியாக திகழும் என்பதும். இதை மறுப்பவர்கள் தகுந்த சான்றுகளுடன் வந்து வடமொழியே கணிணிக்கு சிறந்தது என்று கூறலாம். எனக்கு மனத்தடை எதுவும் இல்லை.

பின் இணைப்பு :

http://www.vedicsciences.net/articles/sanskrit-nasa.html (புரட்டு 1)
http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (புரட்டு 2)

Similarities between Sanskrit and Programming Languages (புரட்டு 3)

http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (எதிர்வினை)
http://mushafiqsultan.com/nasa-and-sanskrit-hoax/ (எதிர்வினை)

12 ஆகஸ்ட், 2014

வடமொழி கிழமை கொண்டாட்டம் !

நான் தனிப்பட்டு எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் இல்லை, ஆனால் மொழித் திணித்தலும் பண்பாட்டு அழித்தலும் ஒன்றில் ஒன்று தொடர்புடையது என்கிற புரிதல் உள்ளவன், ஒருவர் விருப்பப்பட்டு எந்த மொழியையும் எத்தனை மொழியையும் கற்கலாம், அவை வரவேற்கத்தக்கது, ஆனால் எந்த ஒரு பலனும் முன்னே இல்லாத ஒரு மொழியை பெரும்பான்மையினர் பேசுகின்றனர் என்று சிறுபான்மையினரிடம் திணிப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கதே.

சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக மலாய் கற்றுக் கொடுக்கப்பட்டது, பின்னர் பன்னாட்டு நிறுவனங்களால் தான் உள்நாட்டு பொருளியல் வளரும் எனவே அனைவரும் ஆங்கிலம் கற்று தொடர்பு மொழியாக அதனைப்பயன்படுத்தலாம் என்று முன்னெடுக்கப்பட்டு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்டு, பாமரர்களும் பேச எளிமையான வடிவில் சிங்கப்பூர் ஆங்கிலம் உருவாகி, அனைவரும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக பயன்படுத்துவதால் பெரும்பான்மை மக்களின் சீன மொழியோ, வட்டார மொழியான மலாய் மொழியோ அம்மொழி பேசாதவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் திணிக்கப்படுவதில்லை, மாறாக அவரவர் தாய்மொழி கல்வி இரண்டாம் மொழியாக அனைவருக்குமே பயிற்றுவிக்கப்படுகிறது, சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு அதன் நில அமைப்பு, மக்களின் உழைக்கும் திறன் தவிர்த்து தொடர்பு மொழி ஆங்கிலம் என்பதால் ஆசியாவில் அமைந்த ஐரோப்பிய நாடு என்கிற எண்ணத்துடன் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் முதலீடு செய்து சிங்கப்பூரை வளமாக்கினார்கள்.

இது போல் அல்லாமல் எந்த ஒரு வகையிலும் பயனிளிக்காத இந்தியையும், வடமொழியையும் அனைத்து மாநிலங்களிலும் திணித்தே தீருவோம் என்று பொறுப்பேற்றுள்ள மோடி அரசு முதலில் இந்தியை அரசு சமூக ஊடகத் தொடர்பு மொழியாக அறிவித்து, பின்னர் எதிர்ப்பு கிளம்பவே வடமொழியை முன்னிருத்துகிறார்கள், வடமொழியில் இராமயண ம(ஹா)பாராத கதைகள், மற்றும் வேத உபநிசத்து, காம சாத்திரம், பிற இந்து சமயம் சார்ந்த நூல்களே உள்ளன, அது தவிர்த்து வடமொழி கற்றுக் கொள்வதால் வேறெதையும் புதிதாக அறியமுடியாது, வடமொழியில் அன்றாட செய்தி இதழ்களோ, கிழமை இதழ்களோ, திங்கள் இதழ்களோ வெளி வருவது கிடையாது, இந்தியை வடமாநிலங்கள் முன்னெடுத்த போதே வடமொழி வளர்ச்சி என்பது முற்றிலும் நின்று விட்ட ஒன்றாகும், ஆனால் வடமொழி காணாமல் போனதற்கு அல்லது புழக்கமற்று போனதற்கு கருணாநிதியை குறை சொல்கின்றனர், கருணாநிதி காரணமென்றால் இந்தியா என்பது தமிழ்நாடு அல்லது கருணாநிதியின் செல்வாக்கு இந்திய துணைகண்டத்தில் ஆளுமை மிக்கதாக இருக்க வேண்டும், இவற்றில் எதுவுமே உண்மை கிடையாது. வடமொழி வழக்கொழிந்து போனதற்கு இந்தியை வட மாநிலங்கள் தாங்கிப் பிடித்ததே ஆகும்,

ஏற்கனவே வடமொழி சார்ந்த நூல்களில் காமசூத்திரம் உள்ளிட்டவை ஆங்கிலத்தில் மொழி பெயர்கப்பட்டுவிட்டன, மாபாரதம் உள்ளிட்டவை ஆங்கில அசைபடங்களாக வெளிவந்துவிட்டன, ஆங்கிலம் அறிந்தவர்களும் அவையே போதுமானதாக உள்ளது, நான் பார்த்த லிட்டில் கிருஷ்ணா அருமையாக ஆங்கிலத்தில் ஆக்கி இருக்கிறார்கள், எனவே வடமொழி அறிந்து வடமொழியை அறிந்தால் மட்டுமே வடமொழியில் உள்ளவற்றை கற்றுக் கொள்ளலாம் என்பதில் யாதொரு உண்மையும் கிடையாது. தவிர வடமொழியை அறிவதால் அந்த நூல்களை படிக்க முடியும் என்பது தவிர்த்து பெரும் பயன் எதுவும் இல்லை. ஏற்கனவே வேதம் படிக்கிறவர்கள் பார்பனர் அல்லாதவர்கள் என்றால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தவேண்டும் என்று சொல்லி இருப்பதை வடமொழி அறிந்து படிப்பதால் அம்மொழி மீது மேலும் வெறுப்பே மிஞ்சும். மற்றபடி பாரம்பரியம், நமது இந்திய மொழி போன்ற கூற்றுகள் அடிப்பட்டுப் போய்விட்டன.

விக்கிப்பீடியாவில் வடமொழி இந்தோ - ஐரோப்பிய பிரிவை சார்ந்தது என்று தெளிவான சான்றுகளுடன் சொல்லி இருக்கிறார்கள், எந்த ஒரு வடமொழி ஆர்வளரும், மொழியாளரும் அதை இதுவரை மறுக்க முடியவில்லை, ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் வடமொழிச் சொற்கள் கனிசமான அளவில் இருப்பதற்கு வாய்ப்பும் அம்மொழியின் தாயகம் இந்தியாவாக இருக்கமுடியாது என்பதால் தான் என்றே சொல்லுகிறார்கள்,

இன்றைக்கு இந்திய மொழிகளில் ஆங்கிலம் நீக்கமற கலந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை திரிப்பது போன்று தான், வடமொழி பல்வேறு மொழிகளில் கலந்து அவற்றை சிதைத்தது, மற்றபடி வடமொழி இந்திய மொழிகளுக்கும் தாய் என்பது தவறான மற்றும் புறந்தள்ளக் கூடிய கூற்றுமாகும், அதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை, மொழியைப் பற்றி பெருமை பேசுபவர்கள் மொழி ஆராய்ச்சியாளர்களாக மட்டுமே இருந்தால் இது போன்ற தவறான கூற்றுகள் ஏற்பட்டிருகாது, மொழிப்பற்றாளார்கள், தம்மொழி மீது பெருமை கொண்டவர்கள் இட்டுக்கட்டிக் கூறித் திரித்தவையே இவையாகும். 

வடமொழி தென்னிந்திய மொழிகளில் கலந்ததற்கு எனக்கு தெரிந்து இருவாய்ப்புகள் தான், தென்னிந்தியாவில் பார்பனர்களின் பரவல், மற்றும் இராமயண மாபாரத இதிகாசங்களின் சொற்பொழிவுகள். கோவிலை பிழைப்பிடமாகக் கொண்ட வடமொழி கற்ற பார்பனர்கள் பிறருடன் உரையாடும் போது கலந்தவை, இராமயண, மாபாரத சொற்பொழிவுளில் அதன் செய்யுளை வடமொழியில் சொல்லி பின்னர் வட்டார மொழியில் கதைவிளக்கம் கொடுப்பார்கள், இராமயணக் கதை ஊடுருவல் என் டி ஆரை கிருஷ்ணராகவே பார்க்க வைத்துள்ளது என்றால் அந்த கதையின் தாக்கம் தெலுங்கில் எந்த அளவில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் வடமொழி கலப்பு குறைந்ததற்கு வில்லிபாரதம் தமிழில் எழுதப்பட்டதும், கம்ப இராமயணம் தமிழில் மொழிமாற்றப்பட்டதும் ஆகும், இல்லை என்றால் மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளைப் போல் 50க்கு 50 என்ற கணக்கில் தமிழ் சிதைந்திருக்கக் கூடும், உரைநடைகள் வளர்ந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வடமொழி கலப்பு மிகுந்திருந்தது, ஏனெனில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொடுக்கும் வேலையில் குருகுலம் அமைத்த்து பார்பனர்கள் தான் அதனையும் செய்துவந்தனர், அவர்களிடம் தமிழ் கற்றவர்களின் பேச்சு வழக்கில் இயல்பாகவே வடமொழி கலப்பு ஏற்பட பெரியார் உள்ளிட்டவர்களின்  மேடைப்பேச்சில் நீங்கள் வடமொழிக்கலப்பு மிகுந்திருப்பதைப் பார்க்கலாம், பின்னர் தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பிறகே அவை முற்றிலுமாக களையப்பட்டு, செந்தமிழ் இல்லாவிட்டாலும் நல்ல தமிழில் எழுத முடிந்தது.

இந்தி போன்ற பெரும்பான்மையினர் பேசும் ஒரு மொழியை திணிப்பது அல்லது படிக்கச் சொல்லி அறிவுறுத்துவது தவறா ? இந்தியர்களுக்கு பொதுவான இந்திய மொழி ஒன்று இருந்துவிட்டு போகட்டுமே ? கொஞ்சம் சிந்தித்துப்பாருஙகள், எந்த ஒரு மொழியும் தகவல் தொடர்பு என்ற அளவில் இருந்தால் கெடுதல் இல்லை, ஆனால் தற்கால தொலைகாட்சி மற்றும் திரை ஊடகங்களின் தாக்கம் உடனடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது, நன்கு திறமையானவர்கள், நாம் ஏன் 6 கோடி தமிழர்கள் மட்டும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியை படைக்க வேண்டும் ? என்ற கேள்வியில் பெரும்பான்மையினர் பாராட்டுகளே முதன்மையானது என்று மாற்றிக் கொள்வார்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட திறமையானவர்கள் அனைவருமே இந்தி பேசும் பெரும்பான்மையினருக்காக உழைக்க முடிவெடுத்தால், தமிழை பாமரனும் தாய்மொழியாக வீட்டில் பேசுபவன் மட்டுமே வாழ வைக்க முடியுமா ?

தமிழ் மற்றும் தென்னிந்திய இயக்குனர்களுக்கு இந்திபடம் இயக்க வேண்டும் என்பதே கனவு. அதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் அங்கு சென்றுவிட்டால் நமக்காக படம் எடுப்பவர் யார் ? ரஜினியோ கமலோ இந்தியில் தொடர்ந்து வென்றிருந்தால் அவர்கள் தமிழ் சூப்பர் ஸ்டார்களாக நம் முன் நிற்கமாட்டார்கள், அவர்களுக்கு இந்தி பேசத் தெரிந்தாலும் பெரிதாக வரவேற்பு இருக்க வில்லை, ஆனால் தென்னிந்திய இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் இந்தியில் வெற்றிக்கொடிகட்டுகின்றனர், முதல் போடுபவர் இந்திகாரராக இருக்கும் பொழுது படமும் வெற்றி என்னும் பொழுது இயக்குனரின், இசை அமைப்பாளரரின் திறமையை நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்பது போல் தான் அவர்கள் வரவேற்கின்றனர்.  வட இந்தியர்கள் தென்னிந்தியரின் முகத்தை திரையில் பார்க்க விரும்பமாட்டார்கள், ஆனால் திரைக்கு பின்னால் இருக்கும் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்

இந்தியா முழுவதும் இந்தி மயமாகிவிட்டால், தமிழ் படம் என்று வரவே வராது, தமிழ் சார்ந்த செய்திதாள்களின் எண்ணிக்கை குறைந்து போகும், தமிழ் சார்ந்த கலைகளோ தொண்மங்களோ வளராது. தமிழின் வளர்ச்சி முற்றிலுமாக நின்று போய்விடும், அண்டை மாநிலங்களில் அவ்வாறு நடைபெற வில்லையே ?

கன்னடப் படங்கள் நன்றாக ஓடுவது குறைவு, அதனால் தான் கன்னட திரையுலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை பிற மொழி படங்களின் மீது விதிக்கிறது. தெலுங்குக்கு அந்த நிலமை வர சற்று காலம் எடுக்கலாம் ஆனால் நடக்காது என்று சொல்ல ஒன்றும் இல்லை. கேரளத்தினர் தம்படைப்புகள் மீது ஆழ்ந்த மதிப்பு வைத்திருப்பவர்கள் என்பதால் அவர்களும் தப்பி வருகின்றனர், அதுவும் எவ்வளவு நாள் என்று சொல்ல முடியாது.

ஒரே சமயத்தில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், பிரபு தேவா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்திபட வாய்ப்பும் தமிழ் பட வாய்ப்பும் கிடைத்தால் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நான் அவர்களை மொழி பற்று இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லவரவில்லை, ஆனால் தமிழனாக இல்லாமல் 'இந்தியானாக' வெற்றி பெருவதையே அவர்கள் விரும்புவார்கள், ஊடகங்களில் பிற மொழி நுழைந்தால் தாய் மொழியின் வளர்ச்சி குறைந்து கொண்டே நாளடைவில் நின்று போகும், இது தான் இந்தி மொழி வளர வளர வடமொழி வளர்ச்சி தடைபட்டு நின்று போனதற்கும் காரணம்.

தமிழகத்தில் பிறமொழி தாக்கம் ஏற்பட ஏற்பட அவற்றை அறிந்தவர்களின் ஊடகத் தேர்வும் அம்மொழியை நோக்கியும் திரும்பும். நாளடைவில் தமிழ் வெளிநாடுகளில் மட்டுமே வாழும் மொழியாகிவிடும். வடமொழி வளர்ச்சி நின்று போனது ஏன் என்று விடை அறிந்துவிட்டு பின்னர் வடமொழி கிழமை (வாரம்) கொண்டாடுங்கள்.

31 ஜூலை, 2014

உலக வலம் (2) !

எந்த பயணம் என்றாலும் முன்கூட்டிய திட்டமிடல் மிகவும் தேவையான ஒன்று, திட்டமிடல் இன்றியும் பயணச்சீட்டு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து விட்டு செல்லாம், ஆனால் அத்தகைய பயணம் அவ்வளவு மன நிறைவாக அமையாது, நான் கனடா செல்ல முடிவெடித்த பிறகு கண்டிபாக அமெரிக்காவிலும் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றே முடிவு செய்திருந்தேன்.

அமெரிக்காவில் நிறைய பதிவர் நண்பர்கள் இருந்தனர், அதில் எனக்கு நெருக்கமான இரு நண்பர்களிடம் நான் கனடா வருவது குறித்து சொன்ன போது கண்டிபாக அமெரிக்காவிற்கு வந்து அவர்களது இல்லத்தில் தங்கி சுற்றிப் பார்க்கும் படி அழைத்தனர், எனவே கனடாவில் வேலைகளை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டு தான் சிங்கை திரும்ப வேண்டும் என்பதை திட்டமிட்டு, சிங்கப்பூருக்கு திரும்பும் பயணச் சீட்டை நார்த் கரோலினா 'ராலே தர்காம் (Raleigh-Durham)' விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் படி போட்டுவிட்டேன். அது போன்று சிங்கையில் இருந்து இந்தியா புறப்பட்டு அங்கிருந்து சென்னை, பிறகு நான்கு நாள்கள் கழித்து திருச்சி - பெங்களூரு வழியாக பெங்களூரில் இருந்து கிளம்பி பிரான்ஸ் வழியாக கனடா மோன்ட்ரியல் அடைவது தான் திட்டம்.

கனடாவில் எதை எதையெல்லாம் பார்ப்பது, கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு எப்படி செல்வது என்பதையெல்லாம் திட்டமிடவில்லை, காரணம் நாங்கள் செல்ல முடிவெடுத்திருந்தது கனடாவில் பனிப் பொழிவு துவங்கும் காலம் ஆகையால், முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணிவிட்டு பின்னர் பருவ நிலை மாற்றங்களினால் வெளியே செல்வதே அறைகூவலாக அமைந்துவிட்டால், பணம் செலவு செய்தாகிவிட்டதே என்று குழந்தைகளையும் போட்டுபடுத்தி, போன இடத்தில் போக முடியாத இடங்களுக்கு செய்த செலவுகளுக்காக வருந்தி, பயணம் என்பது வெறுப்பை வரவழைத்துவிட்டால் எல்லாம் வீண் என்பதால், முதலில் கனடா போய் சேருவோம், பிறகு கனடாவில் என்னவெல்லாம் பார்க்கலாம், அங்கிருந்து அமெரிக்கா எப்படி செல்லலாம் என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.

நான் இந்தியா வழியாக ஏற்பாடு செய்ததன் நோக்கமே, சென்ற (2012) மறைந்த தம்பியின் ஓராண்டு நினைவு நிகழ்வில்கலந்து கொள்வதை முன்னிட்டு தான். எனவே மனைவி மகள் மற்றும் மகனை நேரடியாக கனடா செல்வதற்கானஏற்பாடு செய்துவிட்டு, அதன் படி அவர்களுக்கான பயணச் சீட்டு
 
17 நவ 2013 00:55 (ஞாயிறு பின்னிரவு / அதிகாலை 0055 சிங்கையில் இருந்து புறப்பட்டு
17 நவ 2013 0830 (ஞாயிறு) காலை 0830 ஜப்பான் டோக்கியோ நரிட்டா நிலையத்தை அடைந்து
17 நவ 2013 1100 (ஞாயிறு) அங்கிருந்து காலை 1100 புறப்பட்டு வடஅமெரிக்கா காலை 0735க்கு சிக்காகோ வர
17 நவ 2013 0735 (ஞாயிறு) சிக்காகோவில் இருந்து கனடா மோண்ட்ரியல் செல்ல காலை 1023  புறப்பட்டு
17 நவ 2013 1023 (ஞாயிறு) மோண்ட்ரியல் அடையும் நேரம் மாலை 13:25

மொத்தம் 20 மணி நேரத்திற்கும் மேலான பயணம், உலக நேர அமைப்பு படி பின்னிரவு புறப்பட்டு மாலை வரை அதே நாள் தான்.
 
இந்த திட்டத்தில் சென்றால் தான் மறுநாள் திங்கள் 18 நவ 2013  அன்று மனைவி அங்கு அலுவலகம் செல்ல முடியும்,அலுவலகம் செல்லும் போது குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால் 18 நவ 2013 (திங்கள்) காலைக்குள்நான் சென்றாக வேண்டும்,  இல்லை என்றால் குழந்தைகள் விடுதி (ஹோட்டல்)யில் தனியாக இருக்க வேண்டும், அந்தநாட்டில் பாதுகாப்பில்லாமல் குழந்தைகளை விட்டுச் செல்ல முடியாதாம், எங்களுக்கும் அவ்வாறு விட்டுச் செல்லமனதில்லை, எனவே எப்படி கணக்கு போட்டாலும் 18 நவ 2013 அதி காலை 2 மணிக்கு பெங்களூருவில் இருந்துபுறப்படும் வழித்தட சேவையில் ஏறினால் தான் குறைந்தது பகல் 12 மணிக்குள்ளாவது மோண்ட்ரியல் அடையமுடியும், நவ 17 ஆம் தேதி தான் தம்பிக்கு நினைவு நாள் என்பதால் அதனை மனதில் வைத்தே எல்லா பயணசீட்டுகளின் புறப்படும் நேரம் தேதி உள்ளிட்டவற்றை முடிவு செய்தோம். இந்தியாவில் பல நகரங்கள் (சென்னை,பெங்களூரு,  மும்பை, ஹைத்ராபாத் மற்றும் டெல்லி) வழியாக இணைப்பு வழி சேவையில் செல்ல முடியும்என்றாலும் அந்த வழிதடங்கள் கனடாவை அடையும் நேரம் எதுவும் ஒத்துவரவில்லை.
 
17 ஆம் தேதி தம்பிக்கு செய்ய வேண்டிய நிகழ்வு நாகையில் தான், அதனால் எனது இந்திய பயணம் 15 நவ 2013 வெள்ளி அன்றே அமைத்துக் கொண்டேன், அவை முடிந்து அங்கிருந்து திரும்பவும் சென்னைக்கு வழியாக செல்வதற்கானவானூர்தி  போக்குவரத்து வாய்ப்பு இருந்தாலும் அவை கனடாவை 18 நவ 2013 மதியம் 3 மணிக்கு தான் அடையும்,அதுவரையில் குழந்தைகள் தனியாக விட்டு வைப்பது பெரிய சிக்கல் ஏற்படுத்துவிட்டால் ? வேறு வழியில்லை, வேறுவழியில்லை, 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாகையில் தம்பியின் ஓராண்டு நினைவு நாள் நிகழ்வு, அதை முடித்துஅங்கிருந்து சிற்றுந்தில் 2 மணி நேரத்தில் திருச்சியை அடைந்துவிடலாம், அன்றே திருச்சியில் மாலை 5:30 மணிக்குகொச்சி வழியாக பெங்களூர் செல்லும் வானூர்தியில் ஏறினால் மாலை 8 மணிக்கு பெங்களூருவை அடைந்துவிடும்,பிறகு 6 மணி நேரம் ஓய்வு, அங்கிருந்து பிரான்ஸ் ஏர்வேஸ் 18 நவ 2013 அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு, பாரிஸைஅன்று காலை  8 மணிக்கு அடைந்து, இரண்டு மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு காலை 10 மணிக்கு புறப்பட்டால்அன்று மதியம் 12:15க்கு மோண்ட்ரியல் அடைந்துவிடலாம், எனவே எனது பயணத் திட்டம்
 
எனது புறப்பாடு
 
15 நவ 2013 0920 சிங்கையில் இருந்து சென்னைக்கு காலை 1100 மணிக்கு போகும், பிறகு ஒருநாள் விட்டு 
17 நவ 2013 1530 திருச்சியில் இருந்து கொச்சி வழியாக பெங்களூரூ மாலை 20:25 போய் சேரும்,
18 நவ 2013 1:45 (அதிகாலை) பெங்களூரில் இருந்து பாரிஸ், 2 மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு
18 நவ 2013 10:45 க்கு பாரிஸிலிந்த்து மோண்ட்ரியல், அங்கு சென்று சேரும் நேரம்
18 நவ 2013 12:15 (நன்பகல்), ஆக மொத்தமாக பெங்களூரில் இருந்து 20 மணி நேரப் பயணம், ஆனால் தேதிபடி வெறும் 11மணி நேரம். பூமி சுழலும் திசைக்கு எதிர் திசை பயணம் என்பதால் 11 மணி நேரம், எதிர்திசையில் சென்றால்கூடுதலாக இன்னும் இரண்டு மணி நேரமாகி இருக்கும்.
 
பயணம் குறித்து இரண்டு திங்கள் முன்பு முடிவு செய்திருந்தாலும், பயணத்தேதி, வழித்தடம் இவற்றை முடிவுசெய்யவே ஒருவார காலம் பிடித்தது, பின்பு குளிர் ஆடைகள், காலணிகள், உணவு பொருள்கள் உள்ளிட்டஅனைத்தையும் பயணத்தேதிக்கு ஒரு திங்கள் முன்பாகவே வாங்கி சேகரித்தோம்.
 
எந்த ஒரு நெடுநாள் பயணத்திற்கும் எடுத்துச் செல்லும் பொதுவான பட்டியல் என்னிடம் உண்டு, அதன் படி அனைத்தும்எடுத்து வைத்துள்ளோமா என்பதை பயணத்தின் முதல் நாள் இரவு சரிபார்த்துக் கொள்வேன். உடைகளைப் பொருத்தஅளவில் வெளி ஆடைகளுடன், தூக்கிப் போட வேண்டியது என்று எடுத்து வைத்திருக்கும் காலுறைகள்,உள்ளாடைகளைத் தான் எடுத்துச் செல்வேன், ஒவ்வொரு நாளும் பயன்படுத்திய பிறகு அவைகளை அங்கேயேகுப்பையில் போட்டுவிட்டு வருவது. இதற்கு காரணம் பொதுவாக நல்ல நிலையில் இருக்கும் துணிகளை அவ்வளவுதூக்கிப் போட மனம் வராது, உள்ளாடைகளை ஓராண்டுக்கு மேலும் துவைத்து துவைத்து பயன்படுத்துவதும் உடல்நலத்திற்கு ஏற்றதல்ல என்ப‌தே.
 
10 நாளைக்கு மேல் வெளிநாட்டுக்கு செல்வ‌தென்றால் க‌ண்டிப்பாக பயணக் காப்பீடு இன்றிய‌மையாத‌து, எதிர்பாராமருத்துவம் தவிர்த்து குறிப்பாக‌ வானூர்த்தி சேவைக‌ள் எதிர்பாராமல் முடங்கும் பொழுது ந‌ம‌க்கு கைகொடுக்கும், எனக்கும் அப்படி ஒரு நிலை வருவது போல் இருந்தது.

சிங்கையில் இருந்து சென்னை நோக்கி ஜெட் ஏர்வேஸில் புறப்பாட்டேன்...


நேரமின்மையால் இரண்டு திங்களுக்கு முன்பு எழுதியதை இப்பொழுது தான் பதிவேற்றுகிறேன்

இனி சிங்கையில் இருந்து புறப்பட்டது முதல் திரும்பு வரையில் பார்த்தவற்றையும், நடந்தவற்றையும் அடுத்து பார்ப்போம். 

19 ஜூன், 2014

மதம் மாறிய மொழி !

மனிதர்கள் தானே மதம் மாறுவார்கள், மொழி மதமாறுமா ? என்ற கேள்வி உங்களுக்கு வந்தால், மதம் தாங்கிப்பிடிக்கும் மொழிகள் பல உள்ளன என்பதை நினைவு கூறுங்கள், மொழிகளுக்கும் இனத்திற்கும் உள்ள தொடர்புகள் போலவே சிற்சில மொழிகளுக்கும் மதத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு, எனவே குறிப்பிட்ட பலர் சேர்ந்து ஒரு மொழியை தங்களது ஆக்கிக் கொள்ள அந்த மொழிக்கு தங்கள் மதத்து ஆடையைக் கட்டிவிடுவார்கள். 

இந்தி என்ற சொல் இந்தி மொழிக்கு பெயராக வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் கூட இல்லை என்றால் உங்களில் பலரலால் நம்ப முடியாது, ஆனால் உண்மை அது தான்.  துளசி தாசர் (1532–1623) இந்தியில் இராமாயணத்தை எழுதவில்லையா ? என்று என்று உங்களால் கேட்க முடியும். துளசிதாசர் இந்தியில் இராமாயணத்தை எழுத வில்லை, மொகலாயர்கள் ஆண்ட அந்த காலகட்டத்தில் இந்தி வடிவமே பெறவில்லை, மொகலாயர்கள் பேசிய பெர்சியன் மொழி கலந்து, மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியின் வட்டார வழக்கான கரிபோலியும் (நரிக்குறவர் பேசும் வக்ரபோலி மொழி போன்ற ஒரு பிரிவு) கலந்து உருவான 'அவதி' என்ற மொழியில் வடமொழியை எழுதப்பயன் படுத்தப்பட்ட எழுத்துக்களான தேவநகரியில் தான் இராமாயணத்தை எழுதினார், எனவே துளசி தாசர் எழுதிய இராமாயணம் என்பது வால்மிகி இராமயணத்தின் வட்டார வழக்கு மொழி மாற்றம் மட்டுமே. 

தற்போதைய நிலையில் துளசி தாசர் எழுதிய இராமாயணத்தை இந்தி தெரிந்தவர்களாலும் படித்து புரிந்து கொள்ள முடியாது, எனெனில் மொகலாயர்கள் ஆட்சியில் இருந்து வெள்ளையர்கள் இந்தியாவைப் பிடிக்கும் வரையில் கிட்டதட்ட மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலெல்லாம் அவர்கள் பேசிய வட்டார மொழி கலந்த பெர்சியன் மொழி திரிந்து திரிந்து உருதாக வடிவம் பெற்றது, மொகலாயர்காலத்திலேயே உருதை பெர்சியன் எழுத்தில் தான்  (அரபி எழுத்து வடிவம் தான்) எழுதினார்கள். உருது எழுத்து தெரியாத மற்றவர்கள் எழுதும் பொழுது (தற்பொழுது எழுதப்படும்) தேவ நகரி எழுத்தைப் பயன்படுத்தினார்கள், அதுவும் 1881க்கு பிறகே அரசுவழியாக முறையாக அறிவிக்கப்பட்டு, அதற்கு இந்துஸ்தானி மொழி என்ற சிறப்பும், இந்தி என்ற பெயரும் கொடுக்கப்பட்டது, ஆக இந்தி மொழி 'இந்தி என்ற பெயரில் வழங்கப்பட்டு' 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை.

மொகலாயர்கள் பேசிய இந்தியும் உருதும் ஒன்று தானே, பிறகு ஏன் அவற்றிற்கு தனித்தனி எழுத்துக்கள், ஏன் இரண்டு பெயர்களுடன் ஒரே மொழி ? அதற்கான அடிப்படைகாரணம், உருது இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தது, உருது என்ற பெயரில் இருப்பதாலும் மொகலாயர்களின் மொழி என்பதாலும் அவற்றை பேசுவர்களுக்கு ஏற்பட்ட தாழ்வுணர்ச்சியே, அந்நிய மொழியை பேசுகிறோம், இதை மாற்ற என்ன வழி என்று சிந்தித்த போது, ஏற்கனவே துளசிதாசரின் வழிகாட்டல் இருந்ததால்,  உருதிற்கு இந்திய மொழியின் (தேவநகரி) எழுத்துச் சட்டையைப் போட்டுவிட்டால் அது இந்திய மொழி / இந்திய வழித்தோன்றல் மொழி ஆகிவிடும் என்று நினைத்து இந்துக்கள் பேசும் (உருது) இந்தி என்றும் இஸ்லாமியர்கள் பேசுவது உருது என்றும் சொல்லப்பட்டது.

தற்போது பாகிஸ்தானில் உருது அலுவலக மற்றும் தேசிய மொழி, மொகலாயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அனைத்து இந்திய மாநிலங்களிலும் இந்தி அலுவலக மொழி, உருதிற்கு கிடைத்த தேசிய மொழி பெருமை இந்திக்கு கிடைக்க வேண்டும் என்று இந்திக்காரர்கள் விரும்புவதுடன், அவர்கள் நோகாமல் தமிழகம் வந்து செல்ல தமிழகத்திலும் இந்தி இருப்பது கட்டாயம் என்று திணிக்க முற்பட்டனர்.


ஆங்கிலம் எந்த அளவுக்கு அந்நிய மொழி என்பது உண்மையோ, அதே அளவுக்கு இந்தியும் வெளியில் இருந்து வந்து இந்திய வடிமாக சிதைந்த மற்றொரு அந்நிய மொழி, இரண்டும் இந்தியாவிற்கு நுழைந்ததில் ஆங்கிலத்திற்கு முற்பட்டு இந்தி நுழைந்தில் வேறுபாடும் வெறும் 200 ஆண்டுகள் தான், கிபி 1500களில் மொகலாயர்கள் ஆட்சி, கிபி 1700 களின் இறுதியில் வெள்ளையன் நுழைந்துவிட்டான். தவிர ஆங்கிலமும் இந்தியும் மொழிக்குடும்ப அடிப்படையில் ஒரே மொழிக்குடும்ப பிரிவை சார்ந்தவையே, அதாவது இந்தோ - ஐரோப்பியன்' மொழி குடும்பத்தை சார்ந்தவையே. உருதிற்கும் இந்திக்கும் சில நூறு வடமொழிச் சொற்கள் உள்வாங்கியதில் மட்டுமே வேறுபாடு, ஒரு சில சொற்கள் இந்தி வடமொழியில் இருந்தும் அதே சொற்கள் உருது அரபி மொழிக் குடும்பத்திலிருந்தும் எடுத்துக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு வேறு சட்டைப் போட்ட இரண்டும் இரட்டைப் பிறவிகள்.

வெறும் 300 ஆண்டுகளில் வடமாநிலங்களை மொகலாயர்கள் இந்தி / உருது பேச வைத்துவிட்டனர், வெள்ளையர்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஆண்டிருந்தால் வட இந்தியர் ஆங்கிலத்திற்கு மாறி இருப்பார்கள். நம்மை இந்திப் படிக்கச் சொல்லி வருந்தி இருக்கமாட்டார்கள். தென்னிந்திய திராவிட மொழியை ஒப்பிட ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்த மொழி என்பதால் வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்வதும் எளிது.

இந்தியோ, ஆங்கிலமோ இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட மொழி அல்ல, இரண்டுமே வெவ்வேறு காலகட்டத்தில் அரசு ஆணையாக / பயன்பாடாக இந்தியாவை கைப்பற்றியவர்களால் திணிக்கப்பட்டவையாகும்.

இந்த உண்மைகள் தெரியாத நம்மில் சிலரும், இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும் எல்லோரும் 'கட்டாயமாக' படிக்க வேண்டும் என்கிறார்கள்.

மொழி மீதான  தனிப்பட்ட ஆர்வம் என்பது தவிர்த்து, இந்திப் படிக்காததால் வேலை வாய்ப்புகள் எதுவும் பறிபோகாது, என்றோ ஒருநாள் வட இந்தியா சுற்றுலா போனால் பயன்படலாம் அல்லது இந்திவாலாக்கள் தமிழகம் வந்தால் வழிகாட்டலாம், சாருக்கான் படம் பார்க்கலாம் மற்றபடி அதைப் பாடச் சுமையில் ஒன்றாக படித்து சுமப்பதால் ஒரு பயனும் இல்லை.

தமிழகத்தைவிட இலங்கையில் இருந்து புத்தகயா செல்லும் சிங்களவர்கள் தான் மிகுதி, அவர்களையும் வடவர்கள் இந்திபடிக்க பரிந்துரைக்கலாமே, செய்யமாட்டார்கள், காரணம் வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்பவர்கள் குறைவு, கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு போனால் தான் உண்டு. ஆனால் தென்மாநிலங்களுக்கு அவர்கள் சுற்றுலா வருவது மிகுதி, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இந்தி தெரிந்தால் நாம இங்கும் வந்து ஆளுமையை காட்டலாம் என்பதற்காகவே தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சிக்கிறார்கள். தற்பொழுது இந்திக்காரர்கள் தான் தமிழகத்தில் பரவலாக கூலிவேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களால் முடியும் பொழுது இந்தி 'படித்தவர்களால்' தமிழகத்தில் குப்பை கொட்ட முடியாதா ?

ஒரு வலைப்பதிவு நண்பர் ஒருவர் ( அகவை 60தை தாண்டியவர்) வட இந்தியா சுற்றுலா போனபோது இந்தி தெரியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாராம், அவரிடம் நீங்கள் சிங்கை வந்த போது சீன மொழி தெரியாமலும், மலேசியா சென்ற போது மலாய் தெரியாததாலும் மன உளைச்சல் அடையவில்லையே என்று கேட்டேன், என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். சிங்கப்பூரில் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றலாம், ஆனால் மலேசியாவில் எல்லோருக்குமே ஆங்கிலம் தெரியாது, இவர் எப்படி சென்று வந்தார் என்பது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது.

இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் படிப்பதில் உள்ள நன்மைகள் எதுவும் இந்திக்கு பொருந்தாது, வடமொழி பற்றாளர்கள் இந்தி தேவநகரி எழுத்தில் எழுதுவதால் வடமொழியை (சமஸ்கிரதம்) மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்தி ஆதரவளர்களாக இருக்கிறார்கள், மற்றபடி தென்னிந்தியாவில் இந்திக்கான ஆதரவு குறைவே, பெங்களூர் அல்லது ஹைத்ராபாத் வாசிகளிடமோ, உங்கள் தலைநகரில் இந்தி ஆதிக்கம் உங்களுக்கு பெருமையான ஒன்றா என்று கேட்டுப்பாருங்கள், ஒருவரும் ஆமோதிக்கமாட்டார்கள், அந்த நிலைமை சென்னைக்கும் வர வேண்டாம்.

இந்தி என்பது உருது மொழியின் இந்து / இந்திய வடிவம் மட்டுமே, மனிதனை மதமாற்றுவது போல் ஒரு மொழியையே மதம் மாற்றி இந்திய மொழி என்கிறார்கள்.

ஒருவேளை முகலாய பேரரசு தமிழகத்தையும் கைப்பற்றி இருந்தால் இந்தி ஆதிக்கத்திற்கு நாமும் அடிமை பட்டிருக்கக் கூடும்.

பின்குறிப்பு : எனக்கு இந்தி ஓரளவு தெரியும், மொழிகளின் மீதான தனிப்பட்ட ஆர்வங்களால் இந்தியையும் ஓரளவு கற்றுள்ளேன். என் குழந்தைகளுக்கு விருப்பமில்லாத எந்த மொழியையும் நான் திணிப்பதும் இல்லை.

இணைப்பு : 

http://en.wikipedia.org/wiki/Ramcharitmanas
http://en.wikipedia.org/wiki/Hindi

Turkey the birthplace of Hindi, English: study

இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:
அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் ! 


31 மே, 2014

அப்பாவின் நண்பர்கள் !

நட்பு என்பது நம்மோடு முடிந்து போகும், உறவுகள் மட்டுமே நிலைக்கும் என்பதால் தான் உறவுகள் தொடர்கதை என்று உணர்ந்தே சொல்லி இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும் போது எண்ணங்களை சுமந்து கொண்டு வரும் போது வெறுமையுடன் திரும்புவது எனக்கு வாடிக்கைதான். அப்பா மறைந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அப்பாவின் செயல்களை தம்பி ஞாபகப்படுத்துவான், அப்பா எடுக்கும் காவடி அப்பா செல்லும் சபரிமலை பயணம் இதெல்லாம் நினைவு வைத்திருந்து தம்பி செய்து கொண்டுவருகிறான். எனக்கு தனிப்பட்ட முறையில் காவடி எடுப்பதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், பார்த்து பழகியது, அப்பாவை நினைவு படுத்துவது என்பதால் முடிந்த வரையில் மே மாதம் காவடி நிகழ்வின் போது ஊரில் இருப்பதற்கு முடிந்த வரையில் முயற்சி செய்து சென்றுவிடுவேன்.
(இது என் தம்பி)
அம்மாவின் முயற்சியில் இல்லாம் விவாசயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டிருந்தாலும் அப்பாவிற்கு அவ்வப்போது கொத்தனார் வேலை தான், நாகப்பட்டினத்தில் கொத்தனார் சங்கத்தை முன்னின்று உருவாக்கியது, மாநில அளவில் சங்க தலைவர்களை பொன் குமார் உள்ளிட்டவர்களை அழைத்துவந்து கொத்தனார் தொழிலில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர் என்பதால் நாகைப் பகுதி கொத்தனார்களுக்கு நன்கு அறிமுகமாகியவர், கொத்தனார் சங்கத்தின் சார்பில் நாகை மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது எடுக்கப்படும் 'கைலாச வாகன' ஊர்வல நிகழ்வில் அப்பாவிற்கு மாலை அணிவித்து பரிவட்டமெல்லாம் கட்டுவார்கள், மாரியம்மன் கோவில் திருவிழாவின் முதல் நாள் இரவில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடக்கும்,  இந்த முறை சென்றிருந்த போது கூடப் பார்த்தேன், அங்கு வந்த கொத்தனார்களில் அதில் ஒருவரையும் எனக்கு தெரியவில்லை, அந்த நாளில் அதேநேரத்தில் மறுநாள் காவடிக்காக, நிகழ்வு நல்லபடியாக நடக்க காத்தவராயன் பூசை செய்ய நாங்கள் அங்கு இருப்போம், அங்கு வந்தவர்களில் சிலரை தெரியும் என்றான் தம்பி.

அப்பாவும் நாகை கொத்தனார் சங்கத்தில் தலைவராக இருந்தார் பின்னர் தலைவராக இன்னொருவருக்கு வழிவிட்டார், பெரும்பாலும் சங்கக் கூட்டம் எங்கள் வீட்டுவாசலில் திங்களுக்கு (மாதம்) ஒருமுறை நடக்கும், 25 லிருந்து 50 பேர் வரை வருவார்கள், அவர்களில் 20 பேராவது எனக்கு தெரிந்திருந்திருக்கும், அண்ணன் மாமா என்றெல்லாம் உறவு முறைகளில் அவர்கள் அழைத்துக் கொள்வார்கள். அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பா வைத்திருந்த கரனை, ரசமட்டம், மட்டப் பலகை உள்ளிட்டவற்றை ஞாபகார்த்தமாக சிலர் வாங்கிச் சென்றார்கள், அப்பாவின் மறைவிற்கு பிறகு கொத்தனார்களும், கொத்தனார் தொழிலும் சற்று தள்ளிப் போனாலும் அண்ணன் சிவில் பொறியாளர் என்பதால் அவர்களில் சிலரிடம் இன்னும் தொடர்பு இருக்கிறது, எனக்குத்தான் ஒருவரையும் தெரியவில்லை.

அப்பாவின் அடுத்த நடவடிக்கை ஆண்டு தோறும் சபரிமலைக்கு செல்வது, 12 வயதில் என்னையும் ஒருமுறை அழைத்துச் சென்றிருக்கிறார், அப்பாவின் சபரிமலைக்கு மாலை போடும் நண்பர்கள் என்கிற பெரிய நண்பர் வட்டமே இருந்தது. வாரத்தில் ஒருநாள் / இரண்டு நாள் ஐயப்பன் பூசை என்று அவ்வப்போது அழைப்பு வரும், அப்பா மலைக்கு செல்லத்துவங்கியது முதல் அப்பாவின் பெயர் 'சாமி' என்றே நிலைத்தது, அவருடன் பழகும் யாருக்குமே அவருடைய பெயரே தெரியாது, சபரிமலை சீசன் இல்லாத காலங்களிலும் அழைத்துப் பழகியவர் என்பதால் 'சாமி' என்றே அழைப்பார்கள், இவரும் 5 வயது குழந்தைகள் முதல் எந்தவயது பெரியவர் என்றாலும் 'சாமி' என்றே கூப்பிடுவார். வீட்டில் நாங்களும் அப்பா என்று கூப்பிட்டத்தைவிட 'சாமி' என்றே கூப்பிட்டுவந்தோம், 

அப்பாவுக்கு இருமுடிகட்டும் குருசாமி அப்படியே அவர்கள் அனைவரையும் மன்னார் குடி அருகே இருக்கும் லட்சுமாங்குடிக்கு அழைத்துச் என்று அங்குள்ளவர்களுக்கு முடிகட்டி பின்னர் சபரிமலைக்கு செல்வார்கள், ஆண்டுக்கு ஒருமுறை வெறும் 5 நாட்கள் சந்தித்தவர் என்ற முறையில் அந்த ஊரில் உள்ள ஒரு அயப்ப சாமிகள் அப்பாவுக்கு நண்பர்களாகவும் ஆனார்கள், அதில் ஒருவர் அப்பாவின் காலம் வரையில் ஆண்டுக்கு ஒருமுறையேனும் வீட்டுக்கு வந்து செல்வார், சபரிமலை பெருவழியில் நான் நடக்க முடியாமல் திணறிய போது என்னை தூக்கிக் கொண்டு சென்றவர்களில் அவரும் ஒருவர்/. அவரின் பெயர் எங்களைப் பொருத்த அளவில் 'லட்சுமாங்குடி சாமி' சபரிமலை சீசன் முடிந்து ஒருமுறை அவர் வீட்டுக்கு வந்த போது அவருக்கு அளித்த விருந்தில் தான் அவர் அசைவம் சாப்பிடுகிறார் என்று வியப்படைந்தேன், 'லட்சுமாங்குடி சாமி' சாமி என்று நினைத்துவந்ததால் என்னவோ அவர் அசைவம் சாப்பிடமாட்டார் என்று நினைத்திருந்தேனோ என்னவோ ? அப்பாவின் மறைவிற்குப் பிறகு லட்சுமாங்குடி சாமி என்ன இருக்கிறாரா ? இல்லையா என்றே தெரியவில்லை.

அப்பா காலை 6 மணிக்கு எழுந்ததும் டீ கடை, அங்கு தான் காலை ஒரு மணி நேரம் செல்லும், பெரும்பாலும் கடையாக இடம் பெயராவிட்டால் டீ கடையை மாற்றமாட்டார், ஒரு மணி நேரத்தில் இரண்டு டீ, மைனர் சேட் பீடி, செய்தித் தாள் அங்குள்ளவர்களுடன் அரட்டை மற்றும் அரசியல், அப்பாவை தேடிவருவர்களிடம் டீ கடையில் இருபபர் என்று எளிதாக வழிகாட்டிவிட முடியும், அப்பா அங்கு இல்லை என்றால், 'சாமி எப்போ போனார் ?' என்று கேட்டால் அரை மணி நேரத்திற்கு முன்பே சென்றுவிட்டாரே என்று சொல்லிவிடுவார்கள். டீ கடை நடத்துபவர்களும் அங்குள்ள பணியார்களும் உறவினர்கள் போலவே பழகி வீட்டிற்கெல்லாம் வந்து செல்வார்கள். அதே போன்று ஆண்டு கணக்கில் அப்பா ஸ்டார் திரையரங்கு அருகே இருக்கும் முடித்திருத்தகத்திற்கு மட்டுமே செல்வார், அது எந்தக் கடை என்று எனக்கு இன்றுவரை தெரியாது. அங்கு யார் யாரிடம் பழகினார் என்கிற விவரமும் தெரியாது.

அப்பா வேலைக்குச் செல்லாத நேரங்களிலும் மாலை வேளைகளிலும் அப்பாவின் மற்றொரு பொழுது போக்கிடம் இரண்டு மரக்கடைகள், ஒருவர் நாயர், இன்னொருவர் திருமேணி, அங்கு செய்தி தாள்கள் இருக்கும், அதைப் படிக்க வயது வேறுபாடின்றி சிறுவர் முதல் பெரியவர் வரை எந்நேரமும் நான்கைந்து நபர்கள் இருப்பார்கள், அவர்களில் சிறுவர்களிடம் 'கட்டியால் எட்டு கட்டி... கால் அரை முக்கால் மாற்று....' என்ற விடுகதைப் போடுவது, கழுத கால் ரூபாய், குதுரை முக்காருவ...' போன்ற கணக்கு போட்டு திணறடிப்பது, பெரியவர்களிடம் அரசியல் என்று ஓடும், அங்கு செய்தித்தாள் படிக்க வரும் என்னுடன் +2 வில் சேர்ந்து படித்த எஸ்  இரவிச்சந்திரனுக்கும் அப்பாவிற்கும் நல்ல நட்பு போல, 'என் பையனும் ஆண்டனீஸ் பள்ளியில் தான் படிக்கிறான் என்றார், பேரைக் கேட்டேன், 'கண்ணன்' என்று சொன்னார்' நீ ஏண்டா அவருடைய பையன் என்று சொல்லவே இல்லை ?' என்று கேட்டப்போது அப்பா பீடி குடிப்பார், கொத்தனார் வேலை செய்பவர் என்பதால் வெளிப்படையாக இவர் தான் என் அப்பா ? என்று நான் ரவிச்சந்திரனிடம் முன்பே அறிமுக்கப்படுத்ததால் எனக்கு சற்று அவமானமாகவே இருந்தது. அவனிடம் எதோ சொல்லி சமாளித்தேன். 

அப்பாவிற்கு சோதிடத்தில் நல்ல நாட்டம், கட்டம் பார்த்து சொல்லுவார், பாம்பு பஞ்சாங்கம் பார்ப்பார், புலிப்பாணி புத்தகம், மற்றும் 50 க்கும் மேற்பட்ட புத்தகம் வீட்டில் இருக்கும், செவ்வாய் வெள்ளி கிழமைகளில் மாலையில் வீட்டு வாசலில் பெரும் கூட்டமே சோதிடம் கேட்க வரும், அதில் பெரும் பகுதியினர் பக்கத்தில் உள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தினர் உள்ளிட்ட ஏழைகள் தான், பொண்ணுக்கு கல்யாணம் எப்போ நடக்கும், காணாமல் போன மாடு கிடைக்குமா ? போன்றவைகள் குறித்து கேட்க வந்திருப்பர், கட்டணமாக எதுவுமே வாங்குவதில்லை, அவர்கள் வாங்கிவரும் வெற்றிலைபாக்கு நாலண காசு, அது மட்டும் தான், காசை பக்கத்தில் உள்ள கோவில் உண்டியலில் போட்டுவிடுவார், வெற்றிலை பாக்கை போடுவர்களிடம் கொடுத்துவிடுவார், சோதிடம் பார்க்க வருபவர்கள் தவிர்த்து சோதிட ஆர்வம் உள்ள, சோதிடம் தெரிந்த நண்பர் கூட்டமும் அப்பாவுக்கு உண்டு, அவர்களெல்லாம் என்ன ஆனார் என்றே தற்போது தெரியவில்லை.

இது தவிர்த்து குழுமமாக செயல்பட்டு எடுக்கும் எட்டுக்குடி காவடி, முத்துமாரியம்மன் கோவில் காவடி, அரப்ஷா தர்கா சந்தனக்கூடு என்கிற இன்னொரு நண்பர்கள் வட்டத்திலும் அப்பா இன்றியமையாதவராகவே இருந்தார், நாகை வெளிப்பாளையத்தில் சாமி வீடு எது ? என்று கேட்டால் எங்க வீட்டுக்கு வழிகாட்டும் அளவுக்கு அப்பாவிற்கு அந்த பகுதியில் நல்ல அறிமுகமே இருந்தது. அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பாவின் நெருங்கிய நண்பர்களில் சிலர் ஓரிரு ஆண்டுகளில் இறந்துவிட்டனர். அப்பாவின் சிறுவயதில் அவர் வளர்ந்த இடமான நாகை சவுரிராஜ பெருமாள் மேல வீதியில் இருந்த நண்பர்களில் அவரைவிட சிறியவர்கள் 'ரமண்ணா'  (ராமன் அண்ணா), என்று அப்பா வயதினர் 'டேய் ராமன்' என்றும், பெரியவர்கள் 'ராமு' என்று கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன், அப்பா வழி உறவுக்காரகளுக்கு அப்பாவின் பெயர் 'ராமன்', எங்கள் பள்ளி சான்றிதழ்களில், அழைப்பிதழ்களில் கோவிந்தராஜு', மற்றவர்கள் எல்லோருமே கூப்பிடுவது 'சாமி', அப்பாவின் ஒன்றுவிட்ட அண்ணன் மறைந்த பிறகு 'இராமன்' என்று அப்பாவை உரிமையுடன் குறிப்பிட்டு சொல்ல இன்று யாரும் இல்லை, அவர் சிறுவயதில் வாழ்ந்த இடத்தில் இன்றும் வாழும் ஒரு சிலர் 'ராமண்ணா பையனா வா, எப்படி இருக்கே ?' என்று கேட்பார்கள்.

இந்ந முறை ஊருக்கு சென்ற போது தம்பியிடம் அப்பாவின் நண்பர்கள் குறித்து கேட்க, சற்று நகைச்சுவையாக 'அப்பாவின் (அப்பா வயது) பிரண்ட் எல்லோருமே டிக்கெட் வாங்கிட்டாங்க...அதில் மீதம் சமூன் பாய் மட்டும் தான் இன்னும் இருக்கார்' என்றான். சமூன் பாய் இன்னும் இருக்க காரணம், அவருக்கு அப்பாவைவிட 15 வயது குறைவு, ஆனால் அவரை வெளியில் பார்க்க முடியவில்லை.

***

இதை நான் அப்பாவின் நண்பர்கள் குறித்து மட்டுமே எழுதவில்லை, தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு எவ்வளவு தான் நெருக்கம் என்றாலும் நட்புகள் என்பவை அது அவர் வாழும் வரை மட்டுமே, அதை தொடர நண்பர்களுடன் திருமண உறவை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தாலும், 'சாதி' என்கிற ஒன்று குறுகே நிற்பதால், நண்பர்களின் நட்பு நாம் இருக்கும் வரை மட்டுமே, அப்பாவின் நினைவுகளைப் போற்றுகிறோம், ஆனால் அவருடைய நண்பர்களை சந்திக்க முயற்சித்தில்லை. நண்பரின் மறைவின் பிறகு நண்பரின் வீட்டை கடந்து  செல்லும் / நினைக்கும் நண்பர்கள் மனம் குறித்து நாம் நினைப்பது இல்லை. அப்பாவின் மறைவிற்கு பிறகு தேடிச் சென்று பேசினால் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளவில்லாதது என்பதை நாம் என்றுமே உணர்ந்தது இல்லை.

நட்புகள் நம்மோடு சேர்ந்தே மறித்துவிடுகின்றன. 

இதை வாசிக்கும்  நீங்கள் தந்தையை இழந்தவரென்றால் உங்கள் அப்பாவின் மற்றும் அவர் நண்பர்கள் பற்றிய நினைவை இவ்விடுகை கிளறிவிட்டிருக்கும் என்றே நினைக்கிறேன், நீங்களும் உங்கள் பதிவில் உங்கள் அப்பாவின் நினைவுகளையும் அவர் தம் நண்பர்களையும் போற்றுங்கள். 

இது நான் தான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்