பின்பற்றுபவர்கள்

நீரிழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீரிழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17 ஜூலை, 2012

பழைய சோறு நல்லதா ?


காலை உணவு குறித்து இன்றைய இளைஞர்கள் இளைஞிகள் பெரிதாக நாட்டம் கொள்வதில்லை, காலையில் எதுவும் சாப்பிடாமல் இருப்பேன் என்பதை பலர் பெருமையாகச் சொல்கிறார்கள், காரணம் வறுமை இல்லை என்றாலும் காலை உணவைத் தவிர்ப்பது எதோ ஒரு புதிய உடற்பயிற்சி போன்று நம்பப்படுவதுட்ன் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் என்றும் நம்புகிறார்கள், உண்மையில் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு நீரிழிவு குறைபாடு வருவதற்கான வாய்ப்பு மிகுதி. இரவு உணவிற்கும் காலை உணவிற்குமான இடைவெளி ஏற்கனவே குறைந்தது 8 மணி நேரமாக இருக்கும் பொழுது, அதை தவிர்த்துவிடுவதால் அந்த இடைவெளி கூடுதலாகி 12 மணி நேரம் வரையிலும் கூட நீட்டிக்கப்படுகிறது, உடலில் உற்பத்தியாகும் இரத்ததிற்கேற்ற அளவில் தான் கணையம் வேலை செய்து இன்சுலினைச் சுரந்து இரத்தத்தில் உள்ள சர்கரையை எரிக்கிறது, காலை உணவு எடுத்த்துக் கொள்ளாததால் இரத்த உற்பத்திக் குறைந்த நிலையில் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்வதும் இயல்பாகவே குறைய, நாளடைவில் கணையத்தின் இன்சுலின் உற்பத்தித் திறனும் குறைந்துவிடும். இதனால்  இன்சுலின் சுரப்பதில் கட்டுப்பாடு ஏற்பட, வேளை விட்டு சாப்பிடும் போது உண்டாகும் உபரியான இரத்தத்தில்  உபரியாக உற்பத்தியான சர்க்கரையை எரிக்க முடியாமல் அவை இரத்ததில்யே தங்குவதைத் தான் நீரிழிவு குறைபாடு என்கிறார்கள், அதாவது இரத்தத்தில் உள்ள சர்க்கரை எரிக்கப்படாமல் இரத்ததுடன் கலந்து இருப்பதைத் தான் நீரிழிவு என்கிறது மருத்துவ்ச உலகம், இருந்துவிட்டுப் போகட்டுமே என்றுவிட முடியாது, ஏனெனில் இரத்தத்தில் சேரும் சர்க்கரை இரத்ததின் நீர்மத் தன்மையை கெட்டியாக்குவதுடன் இரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது. 

இரத்த சர்க்கரை அளவு கூட உடலில் அனைத்து பாகங்களுக்குமான தேவையான இரத்த ஓட்டம் குறைய இயல்பாகவே உடல் பாகங்கள் சீர்கேடு அடைகின்றன, அதனால் தான் மற்ற நோய்களைவிட நீரிழிவு நோய் மனித வாழ்க்கையின் மிகப் பெரிய அரைகூவலாக இருக்கிறது. நீரிழிவு குறைபாடு இதனை நோய் என்று சொல்லமுடியாது) முற்றிலும் குணப்படுத்தப்படாவிட்டாலும் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும் என்பது தான் தற்காலிக மருத்துவத் தீர்வு, அதாவது இரத்தச் சர்க்கரையைக் கூட்டாத வண்ணம் உணவு பழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதுடன் தேவையான போது அதற்குறிய மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், இதைத் தவிர்த்து மருத்துவ உலகம் நீரிழிவு குறித்து முழுமையான எந்த ஒரு தீர்வையும் இதுவரை கண்டிபிடிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை. மற்றொரு நிரந்தர தீர்வு மாற்று கணையம் பொறுத்துவது தான், ஆனாலும் உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து கணையம் பெறுவதற்கு வாய்ப்புகள் கிடையாது, கணையம் சிறுநீரகங்களைப் போல் இரண்டாக இல்லாமல் ஒன்றாக இருப்பதால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை, மூளைச் சாவு கண்டவர்களிடம் இருந்து கணையம் பெறப்பட்டாலும் அவை முற்றிலும் பழுதானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொறுத்தப்படுவதால் பொதுவான நீரிழிவு குறைபாட்டினருக்கு மாற்று உறுப்பு சிகிச்சைகளுக்கான வாய்புகள் கிடையாது. மாற்றுக் கணையம் பொருந்துவதும் மிகக் கடினம், பிழைப்பதற்கான வாய்ப்புகளும் அரிது. இதனால் தான் நீரிழிவுக்கு  இரத்த சர்க்கரையைக் குறைக்கும் மருந்துகளும் உணவுக் கட்டுப்பாடும் தீர்வாக பரிந்துரைக்கப்படுகிறது. 

எனக்கெல்லாம் எந்த நோயும் அண்டாது என்று நம்புவர்களும் இருக்கிறார்கள்', இவையெல்லாம் நாற்பது வயதுவரையான நம்பிக்கையாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நாற்பது வயதிற்குமேல் இப்படியான நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கை. ஆண்டுக்கு ஒருமுறையேனும் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, இதய துடிப்பு, சிறுநீர், கண்கள் ஆகியவற்றை சோதனை செய்து அனைத்து உறுப்புகளும் நல்ல முறையில் இயங்குகிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறையான சோதனை நோய்களின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுப்பிடிக்கப்படுவதால் அவற்றை குணப்படுத்திக் கொள்ள வாய்பாக அமையும் அலட்சியம் காட்டினால் 'நேற்று வரை நன்றாகத் தான் இருந்தார் என்று நாலு பேர் தன்னைப் பற்றிப் பேசும் போது கேட்க முடியாமல் போய்விடும், இதை பயமுறுத்தல் என்று எடுத்துக் கொள்ளாமல் பரித்துரை என்ற அளவில் பார்த்தால் தனக்கும் தனக்கும் பின்னால் இருக்கும் குடும்பத்தின் மீதான நன்மை கருதியவை என்று புரிந்து கொள்ளப்படும். சர்கரை நோய் 50 - 60 வயதிற்கு மேல் தான் வரும் என்ற நம்பிக்கையும் பலரிடம் உள்ளது, அதன் துவக்க காலம் 30 வயதில் கூட துவங்கி இருக்க இன்றைக்கு வாய்ப்புகள் இருப்பதால் 35 வயதில் நீரிழிவு குறைபாடுகள் வெகு சாதாரணமானவையாக உள்ளது. நீர்ழிவு நோய்களில்  இருவகைப் பிரிவில் ஒன்று (Type 2) பெற்றோர் வழியாக பரம்பரையாக வருவது என்பதால் காலை உணவு எடுத்துக் கொள்ளாதவர்களை அவை 30 வயதிலேயே பற்றிவிடுகிறது. தனக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதை உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அறிந்து கொள்ளலாம், நீரிழிவினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் (Symptoms) குறித்து நூற்றுக் கணக்கான இணையத் தளங்கள் தகவல்களைத் தருகின்றன.


நீரிழிவு குறைபாட்டால் ஏற்படும் உடல் மாற்றங்களில் பொதுவானவை

1. சிறுநீர் பையில் தேவையான அழுத்தம் இல்லாவிட்டாலும் குளிர்ந்த நீரில் அல்லது பச்சைத் தண்ணீரில் காலோ கையோ படும் பொழுது  சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும் கழிவரை உள்ளிட்ட இடங்களில் எறும்புகளைப் பார்க்க முடியும், சிறுநீரில் இருக்கும் சர்கரையை நுகர எறும்புகள் சேறும்.

2. கணுக்காலிலும் அதற்கும் கீழேயும் கால் பகுதிகளின் தோல் உடல் தோலின் நிறத்தைவிட கருமையாக அல்லது கருமைத் திட்டுகள் காணப்படுதல் மற்றும் காலில் அடி விரல் உள்ளிட்ட சில பகுதிகளில் உணர்வுகள் குறைந்திருத்தல்

3. ஆண்குறியின் முன்தோலில் ஏற்படும் வெடிப்பு, இவை பாலியல் ரீதியான அல்லது அப்பகுதிகளில் காற்றோட்டம் குறைவானதாக  இருப்பதால் ஏற்படும் வியர்வையினால் உற்பத்தி ஆகும் பாக்டீரியா வகைச் சார்ந்த நோயாக இருக்கும் என்று நினைத்து களிம்புகளை தடவி குணப்படுத்திக் கொள்வர். இவை சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும், காரணம் சிறுநீரில் சேர்ந்திருக்கும் சர்கரை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து தோலின் கடினத் தன்மையைக் குறைக்க வெடிப்பு ஏற்படும். இவற்றைக் மருத்துகளின் மூலமாக குணப்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் மருந்துகளற்ற நிரந்தரத் தீர்வு 'முனைத் தோல் நீக்கம் (சுன்னத்)' இங்கே அடிக்கடி அந்த குறைபாடு கண்டவர்களுக்கான பரிந்துரை என்ற அளவில் சுன்னத் பரிந்துரை உள்ளது மற்றபடி நலமாக இருப்பவர்களுக்கு சுன்னத் செய்வது உறுப்பு சேதம், பல் சொத்தை ஆகமல் தடுக்க அதை எடுத்துவிடுவது தான் நல்லது என்பது போன்ற முட்டாள் தனமான பரிந்துரை.

4. எப்போதும் தாகம் எடுப்பது

5. வழக்கத்துக்கு மாறான சோர்வு மற்றும் உடல் எடை குறைவு

6. உடலில் பல பகுதிகளில் ஏற்படும் அரிப்பு, இரத்த ஓட்டக் குறைவினால் தோல் உலர்ந்து போவதால் ஏற்படும்

7. கண் பார்வை அவ்வபோது மங்குதல்

8. காலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுப்பது.

*********

பசுமாடு பற்றிய தலைப்பில் ஏன் தென்னை மரம் பற்றி எழுதி இருக்கிறீர்கள் ? என்று வாசிப்பவர்கள் நினைக்கக் கூடும், பழைய சோற்றில் மிகுந்த சத்துகள் இருப்பதாகவும் பழைய சோற்றை நாம்  புறக்கணித்ததால் தான் பல வித நோய்கள் நமக்கு ஏற்படுவதாகவும் சில பெரிசுகள் மற்றும் முற்போக்கு இளசுகளும் கருத்துகளைப் பரப்புகின்றனர், பழைய சோறு பாரம்பரிய உணவு என்பது தவிர்த்து மற்ற காலை உணவுகளை ஒப்பிட அதில் சத்துகள் எதுவும் பெரிதாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்களா ? என்று தெரியவில்லை, பழைய சோற்றில் நீர் சேர்த்து இரவு முழுவதும் வைத்திருப்பதால் சற்று ஈஸ்டுகள் சேர்ந்திருக்கும், தவிர்த்து பெரிய சத்துகள் எதுவும் கிடையாது, அதில் இருக்கும் ஈஸ்டுகள் மற்றும் சத்துகளின் அளவு இட்லி தோசையில் இருப்பதைவிடக் குறைவே, இட்லி மாவில் உளுந்து சேர்த்து அரைக்கபடுவதால் புரத சத்து கூடுதலாக இருக்கும், பழைய சோற்றில் அதுவும் கிடையாது, பொதுவாக அரிசி உணவில் கூடுதல் சர்க்கரை இருக்கும் என்பது பழைய சோற்றுக்கும் பொருந்தும். 

பழைய சோறு பாரம்பரிய உணவும் கிடையாது, தமிழர்களின் காலை உணவாக கம்பு, கேழ்வரகு, திணை மற்றும் சாமை ஆகியவையே இருந்தன,  மாவாக அரைத்து கூழாகவோ, களியாகவோ செய்து அவற்றில் அசைவம் / காய்கறி குழம்பைச் சேர்த்து உண்பது தான் வழக்கமாக இருந்தது, இத்தகைய உணவுகளில் போதிய அளவு புரதச் சத்து இருப்பதால் நாள் முழுவதுமான பகல் உழைப்பிற்கு தேவையான சத்துகள் கிடைத்துக் கொண்டிருக்கும், நெல் அரிசியை உணவ உட்கொள்ளும் வழக்கம் கடந்த 60 ஆண்டுகளில் பரவலாகியவை தான், மற்ற உணவு பொருள்களை விட விலை கூடுதல், சமைக்க / பரிமார / கலந்து சாப்பிட எளிது என்ற வகையில் வசதியானவர்கள் நெல் அரிசி உண்பது மேம்பட்ட நிலையின் உணவுச் சின்னம் அல்லது பழக்கமாகிப் போனதால் அரிசி உணவை உண்பது கவுரமாகக் கருதப்பட அவை பரவலாக்கம் ஆகி அரிசி உற்பத்தியும் பெருக, தற்போதைக்கு அரிசி உணவு விலை மற்ற உணவு பொருளைவிடக் குறைவாக இருக்கிறது என்பது தவிர்த்து அரிசி உணவில் எந்த ஒரு தனிச் சிறப்பும் இல்லை. மேலும் அரிசிக்கும் கோதுமைக்கும் சர்கரை அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதால் அரிசிக்கு மாற்றாக கோதுமை சப்பாத்தி, பூரி போன்றவை சர்கரை நோயைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, ஆனாலும் கோதுமை பரிந்துரை என்பது செரிமான நேரத்தை நீட்டிக்கும் என்பதால் கோதுமை குறைந்த பட்சத் தீர்வு என்ற அடிப்படையில் தான் சொல்லப்படுகிறது ஆனால் மாற்றுத் தீர்வு இல்லை, அரிசிக்கு மாற்றாக கோதுமை என்றால் சர்கரை குறைபாடு கண்ட சர்தாஜி என்ன சாப்பிடுவான் ? என்றும் கேட்கிறார்கள் என்பதை கவனத்தில் வையுங்கள்.

பழைய சோற்றில் இருக்கும் நீராகாரம் குடிப்பதால் உடலில் குளிர்ச்சி கிடைக்கும் என்பது தவிர்த்து பழைய சோற்றில் சத்துகள் எதுவும் கிடையாது, பழைய சோற்றைத் தொடர்ந்து காலை வேலையில் சாப்பிடுவதால் பீர் குடிக்காமலேயே தொப்பையை வளர்க்கலாம், கிராமத்தினர் பழைய சோறு தின்றுவிட்டு தெம்பாக வேலை செய்யவில்லையா ? அவர்கள் செய்யும் கடுமையான உடல் உழைப்பினால் பழைய சோறு மட்டுமல்ல எந்த ஒரு உணவும் அவர்களின் உடலை பாதிக்காது. ஆனால் உடல் உழைப்பற்ற மற்றவர்களுக்கு அது பொருத்தமான உணவு அல்ல. பழைய சோற்றில் தனிச் சிறப்புகள் எதுவும் கிடையாது அதை உணவாக எடுத்துக் கொள்வதால் கூடுதல் பலன் எதுவும் கிடையாது. பொதுவாகவே அரிசி சார்ந்த நூடுல்ஸ் உள்ளிட்ட எந்த உணவிலும் சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கும் என்பதில் பழைய சோறும் சேர்த்தி தான்.  பழைய சோற்றைவிட பாசிப் பயிறு சேர்த்த கஞ்சி உடலுக்கு நல்லது. பாசிப் பயிற்றில் தேவையான புரதமும் இருக்கும். நான் பழைய சோற்றைப் பழிக்கவில்லை, ஆனால் அவற்றை பரிந்துரை செய்யும் அளவுக்கு அதில் தனிச் சிறப்புகள் இல்லை என்று மட்டுமே சொல்கிறேன்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் எதைத் தான் சாப்பிடுவது ? எதையும் சாப்பிடலாம் ஆனால் ஒரே வேளையில் கட்டு கட்டுவோம் என்று உண்ணக் கூடாது, அளவோடு குறிப்பிட்ட இடைவெளியில் எந்த உணவையும் சாப்பிடலாம், இரத்த சர்க்கரை அளவை உடனடியாகக் கூட்டும்   படி எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது, இவ்வாறு உடனடி சர்கரை மாற்றங்கள் (Blood Glucose In-Balance) உடலின் இரத்த ஓட்டத் தன்மைகளிலும் அளவிலும் ஏற்றம் இரக்கம் காட்டுவதால் இயல்பாக செயல்படும் உடலுறுப்புகள் திணறும், பழுதடையும்.

இந்த இடுகையில் முதன்மையாக சொல்ல வந்தது காலை உணவை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்காதீர்கள், இருவரும் வேலை செய்யும் சூழலில் உணவு செய்வதற்கு அலுப்பாக இருந்தாலும் வாட்டிய இரண்டு துண்டு பிரட் அல்லது (கடையில் வாங்கிய) இரண்டு இட்லி, ஒரு தோசை, பாலில் ஊறவைத்த சோள சொதில்கள் (சீரியல்) ஆகியவற்றில் எதோ ஒன்றுடன் தேவையான நீர் சத்திற்காக ஒரு டம்ளர் பால் அல்லது தண்ணீர் பருகலாம்.

6 ஆகஸ்ட், 2009

ஒரு கசப்பான பதிவு ! (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

"சர்க்கரை" - நினைத்தாலே இனிக்கும் என்பது நீரிழிவு நோய் (நோய் அல்ல உடலின் இன்சுலின் குறைபாடு) அற்றவர்களுக்குத் தான். நீரிழிவு இருப்பவர்களுக்கு ஒரு துண்டு மைசூர்பாவைக் கூட நஞ்சைப் போல் பாக்கும் நிலைதான் அவர்களது நிலை. இனிப்புகளைப் பார்த்தால் நாவில் எச்சில் ஊரினாலும் அதை அப்படியே துப்பிவிட்டு, முடிந்தால் முழுங்கிவிட்டு, விரல் நுனி அளவிற்கு எடுத்து பெயரளவுக்கு இனிப்புகளை சுவைக்க முடியும்.

"திருப்பதி லட்டுன்னாலும் சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அது ஆலகால விசம்" தான் என்று என் உறவினரிடம் சொன்னேன். நம்ப மறுத்தார். கடவுள் நம்பிக்கை ஆழமாக இருந்தால் உண்மையைக் கூட ஏற்க கசக்கத்தான் செய்கிறது!!!

சர்க்கரைக்கு மாற்றாக இனிப்பு சுவைக்காக பயன்படுத்தப்படும் செயற்கைச் சக்கரை சாக்கரீன் எவ்வளவு கெடுதலான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பதிவர் நண்பர் மருத்துவர் தேவன் மாயம் சிறப்பாக பட்டியல் இட்டிருக்கிறார்.

சர்க்கரை குறைபாடு விலங்குகளுக்குக் கூட வருமாம், நம்ம பதிவர் துளசி அம்மாவிட்டு (செல்லப் பூனை) ஜிகேவுக்கும் அந்தக் குறைபாடு இருந்ததாம். இருவகை சர்கரை குறைபாட்டில் ஒன்று சர்க்கரை மரபுக் கூறுகளால் வரும் என்றாலும் சரியான உணவு முறைகளின் மூலம் அவை அணுகும் நாளைத் தள்ளிப் போடலாம், முற்றிலும் தவிர்த்துவிடக் கடுமையான உணவுப் பழக்கம் மேற்கொள்ளலாம், இருந்தாலும் அவை பாதிக்கப்பட்டவர்களின் உணவு பழக்கத்தைப் போன்றுதான்.

சர்க்கரை நோய் பற்றி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் ? "இதில் பயப்பட ஒன்றும் இல்லை, வழக்கமான உங்கள் உணவுப் பழக்கத்தில் எதையெல்லாம் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுமோ, கூடுமோ அவற்றை தவிர்த்துவிட்டு, பரிந்துரைக்கப்படும் உணவு முறைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும், சர்கரை நோய்கான அறிகுறி வந்துவிட்டால் Time to Change your food habits என்கிறார்கள்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?

உச்சிமுதல் உள்ளங்கால் வரை உடல் இயக்கத்திற்கு தேவை இரத்தம், அது நீர்த்(த) தன்மையுடன் இருந்தால் உடல் இயக்கம் சீராக இருக்கும், இன்சுலின் குறைபாட்டடல் இரத்ததில் இருக்கும் சர்க்கரை முழுவதுமாக எரிக்கப்படாத நிலை ஏற்படுவதால், சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களின் இரத்தம் நீர்த்தத் தன்மையிலிருந்து குழைவுத் தன்மைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறும் (Thingkness of Blood) அதனால் இரத்த ஓட்டத்தின் சீர்மை கெட்டுவிடும், குழைவின் காரணமாக இரத்தக் குழாயில் அடைப்புகள் ஏற்படும், இரத்தத்தின் மூலம் இயங்கும் அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.

சர்கரைக் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் கண், சிறுநீரகம் பாதிக்கப்படும், அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும், இரத்த ஓட்டத்தின் சீர்மை கெடுவதால் உடல் அசதி இயல்பாகவே ஏற்படும். சர்க்கரை அளவு மிகுதியாகிவிட்டால் மயக்கம் வரும். இதய நோய், மாரடைப்பு, ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளைப் பெருகிவிடும். அதனால் கண்களையும் சிறுநீரகத்தையும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் மருத்துவரிடம் சோதித்துக் கொள்ள வேண்டும். பாதங்களை ஒட்டிய கால்பகுதியில் தோலின் நிறம் கறுப்பாகும். கால்களில் மரப்பு (Numbness) ஏற்படும். கால்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்காவிட்டால், காலில் காயம் பட்டாலும் உடனடியாக ஆறாது. காலையே எடுத்தால் தான் உயிர்பிழைக்க முடியும் என்கிற நிலை எல்லாம் பலருக்கு ஏற்பட்டு இருக்கிறது. ஆண்களுக்கு விரைப்பு / எழுச்சிக் குறைப்பாடு ஏற்பட சாத்தியம் உண்டு.

மேலும் ஆண்களுக்கு......

சர்க்கரை நோய் கண்ட முப்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு, இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை என்றால் உடல் தோலின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கும், விரிவடையும் தன்மையுடன் கூடிய ஆண்குறியின் முனைத் தோல் (foreskin) எழுச்சியின் போது விரிவடைந்த (சுறுக்கம் விரிவு மாறி மாறி ஏற்படும் elasticity) நிலையில் இருப்பதால் அதில் சிரிதளவு இரத்தக் கசிவுடன் கூடிய வெடிப்பு(புண்)கள் சுற்றிலும் அடிக்கடி (அதாவது ஆண்டு/மாதத்தில் பலமுறை) ஏற்பட்டுவிடும். முனைத்தோலுக்கும் ஆண்குறியின் மொட்டுப்பகுதிக்கும் இடையே உள்ள மூடிய பகுதிகளில் பல்வேறு தாது உப்புகளால் அழுக்கு படிமங்கள் (phimosis, டெட்ஸ்கின்) அடிக்கடி உற்பத்தியாகி அரிப்பும் ஏற்பட்டு இரத்தக் களறி ஆகிவிடும். உடல் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தினால் சரியாகிவிடும் என்றாலும் சரியாகும் வரை (தன்னின்பம் அல்லது உடலுறவின் போது) ஒவ்வொரு முறை தோல் விரிவடையும் போதெல்லாம் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். ஆண்குறியில் ஏற்படும் இந்த பாதிப்பு குறித்த விவரம் தெரியாதோர் 'பாலியல் நோயாக இருக்கும், நாம இராமனாச்சே....!' என்று பயந்துவிடுவதும், கவலைப்படுவதும் உண்டு. ஏற்கனவே (எங்கும் பாலியல் தொழிலாளியிடம் சென்று வராமல் இருந்து) அப்படி அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு இருப்பவர்கள் எந்த சோதனையும் மேற்கொள்ளாமல் தங்களுக்கு சர்க்கரை நோய் கடுமையாக பாதித்து இருப்பதாக உணர்ந்து உடனடியாக மருத்துவரை அனுகுவது நல்லது. சர்க்கரை நோய்க்கான சிகிச்சையுடன் பாதிப்பு அடிக்கடி ஏற்படுபவர்கள் தோல் (புண்ணின்) எரிச்சலை தவிர்க்க முனைத்தோலை (Foreskin - Circumcision) அகற்றிக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்படுகிறது.

இன்றைக்கு மருத்துவ உலகினருக்கு வற்றாத பணமழைப் பொழிவதற்கு நீரிழிவு நோய் ஒன்றே போதுமானதாக இருக்கிறது. சர்கரை நோய் கட்டுப்படுத்தலாம் முற்றிலும் போக்கிவிட முடியாது என்பதே மருத்துவ உலகம் இதுவரை சொல்லிவரும் தகவல்.

அப்படி இருந்தும் நம்ம ஊர் ரூம்போட்டு மருத்துவம் பார்க்கும் டுபாக்கூர் மருத்துவர்கள் எல்லாவற்றையும் குணப்படுத்துவதாக புளுகிவருவதும் அவர்களிடம் நோயாளிகள் ஏமாறுவதும் வாடிக்கை.

எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது, அதை முயற்சி செய்து பார்க்கலாம், பக்க விளைவுகள் எதுவும் கிடையாது. மின் அஞ்சலில் வந்த விவரங்களை இணையத்தில் தேடிப்பார்த்தேன். தகவல் பரவலாக சென்று கொண்டு இருக்கிறது. இது வதந்தியா இல்லையா என்று தெரியாது. காசு பணம் மிகுதியாக செலவும் இல்லை, பக்க விளைவுகள் இல்லை, முயற்சித்துப் பார்க்கலாம், இதோ சிகிச்சை முறை (ஆங்கிலத்தில்)

DIABETIC?
FINALLY GOOD NEWS FOR ALL DIABETICS



A woman (65) was diabetic for the last 20+ years and was taking insulin twice a day,
she used the enclosed homemade medicine for a fortnight and now
she is absolutely free of diabetes and taking all her food as normal including sweets ............ ......... ......

The doctors have advised her to stop insulin and any other blood sugar controlling drugs.
I request you all please circulate the email below to as many people as you can and
let them take the maximum benefit from it.


AS RECEIVED :


DR. TONY ALMEIDA (Bombay Kidney Speciality expert ) made the extensive
experiments with perseverance and patience and discovered a successful treatment for diabetes.
Now a days a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes.

Ingredients:
1 - Wheat flour 100 gm
2 - Gum(of tree) (gondh) 100 gm ( மரப் பிசின்...இது எங்கே கிடைக்கும் ?)
3 - Barley 100 gm
4 - Black Seeds (kalunji) 100 gm (கருஞ்சீரகம்)

Method of Preparation :
Put all the above ingredients in 5 cups of water.
Boil it for 10 minutes and put off the fire. Allow it to cool down by itself.
When it has become cold, filter out the seeds and preserve the water in a glass jug or bottle.

How to use it?
Take one small cup of this water every day early morning when your stomach is empty.
Continue this for 7 days. Next week repeat the same but on alternate days. With these 2 weeks of treatment you
will wonder to see that you have become normal and can eat normal food without problem.

SINCE THESE ARE ALL NATURAL INGREDIENTS, TAKING THEM IS NOT HARMFUL. SO THOSE WHO ARE SCEPTICAL ABOUT THIS TREATMENT MAY STILL TRY IT WITHOUT ANY HARM. WORST CASE SCENARIO WILL BE THAT YOU REMAIN STILL SAME AS YOU WERE BEFORE

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்