தற்போது தமிழ்மணத்தில் புதிய பதிவர்கள் நிறைய வருகிறார்கள். பல்வேறு தமிழர்கள் தமிழால் ஒன்று கூடுவது ஆரோக்கியமானது தானே. ஒவ்வொருவருக்கும் தத்தம் படித்த, கேட்ட, பிடித்ததைப் பற்றிய
நிலைப்பாடுகளே பதிவில் வெளிப்படும். புதிய பதிவர்களை எளிதில் அடையாளம் காண 'புதியது' என்ற சிவப்பு குறிசொல்லை தமிழ்மணம் அவர்களது இடுகையுடன் இணைத்திருக்கிறது.
அப்படி வருகிறவர்களெல்லாம் புதியவர்களா ? அது ஒருபுறம் இருக்க, புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு ஆதரவளிக்க வேண்டியது பதிவர்கள் கடமைகளில் ஒன்று :) யாருமே பின்னூட்டவில்லை என்றால் நம்ம கருத்து இந்த சபையில் எடுபடாது போல, இங்கே குழுவாக செயல்படுகிறார்கள் என்று நினைத்து 3 இடுகையோடு காணாமல் போய்விடுவார்கள்.
முன்பெல்லாம் புதிய பதிவர்களுக்கு உடனடியாக பின்னூட்டுவேன், தற்போது அவ்வாறு செய்வதில் சற்று தயக்கமாகவே இருக்கிறது. காரணம் வெளிப்படையானது தான்.
வந்திருப்பவர்கள் புதியவர்களா ? அல்லது ஏற்கனவே இணைப்பில் இருப்பவரின் மற்றொரு வலைப்பதிவா ? அல்லது ஏதோ ஒரு பெயரில் வந்து கும்மி அடிக்கும் பிரபல பதிவர்களா என்ற ஐயம் (சந்தேகம்) இருப்பதால் சட்டென்று, அவர்களுக்கு வணக்கம் போட முடிவதில்லை.
புதிய பதிவர்களின் பதிவு எப்படி இருக்கும் ?
* கண்டிப்பாக ஜிகினா வேலை எதுவும் இல்லாத பொதுவான ப்ளாக்கர் டெம்ப்ளேட் வைத்திருப்பார்கள். ரொம்ப அலப்பறையாக இருந்தால் அது பழம் திண்ணு துப்பியவரின் பதிவாகத்தான் இருக்கும்
* புதிய பதிவர்களுக்கு வழக்கமாக பதிவர்கள் பயன்படுத்தும், பின்னூட்டம், மறுமொழி, புதசெவி, சொசெசூ மற்றும் ஏனைய குழூக்குறிச் சொற்கள் தெரிந்திருக்காது
* இதுதான் என் முதல் பதிவு என்றெல்லாம் ஆரம்பிக்க மாட்டார்கள்
* முதல்பதிவில் மூச்சு முட்ட எழுதி இருக்கமாட்டார்கள்
* பெயருக்காக மூன்று இடுகைகள் மட்டுமே இணைத்திருக்க மாட்டார்கள்
* ஏற்கனவே நீண்டகாலமாக பதிவை படித்துவந்திருந்து புதிதாக பதிவு எழுத வந்திருந்தால் மேற்சொன்னவைகளெல்லாம் இல்லாமால் இருக்கும்.
* மெக்கலேய கல்வி முறை, கிறித்துவ மெசினரி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றெல்லாம் புதிய பதிவர்களின் பதிவில் காண்பது அரிது
* பெரியார் தொண்டராக அறிமுகப்படுத்திக் கொள்பவராக இருந்தால் வெறும் பார்பனியம் பற்றி மட்டுமே எழுதமாட்டார்கள். இஸ்லாமியர் பெயர்களில் கிறித்துவர்களை திட்டி எழுதமாட்டார்கள் அதை வைத்தே பதிவுக்காரர் குல்லாவா, கொண்டையா என்று கண்டுபிடித்துவிடலாம்.
* புதிய பதிவர் எவருமே ஆறுமாதத்திற்கு முன்பு நடந்த விவாதங்களைப் மீண்டும் கிளறி எழுதமாட்டார். புதிய பதிவர்களுக்கு அவை நடந்ததே தெரிந்திருக்காது.
* வேர்டு வெரிபிகேசன் வைத்திருப்பார்கள்
* புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால் ரொம்ப மதிப்பு கொடுத்து மறுமொழி இடுவார்கள்
* புதிய பதிவர்கள் ஒரு சிலரின் பின்னூட்டங்கள் சூடான இடுகையில் இடம் பிடிக்கும் லக்கி லுக் போன்றவர்களின் இடுகையில் காணப்படும். தங்கள் பெயரை ஒருசிலராவது படித்து தங்கள் பக்கத்துக்கு வரவேண்டும் என்று விரும்புவார்கள். இதுல எதுவுமே தவறல்ல. புதிதாக எழுதிய போது எனக்கு யாராவது திட்டியாவது பின்னூட்டமிடமாட்டார்களா என்று நினைத்திருக்கிறேன்.
* கமெண்ட் மாடுரேசன் வைத்திருக்க மாட்டார்கள் (அம்பி பின்னூட்டத்தில் தெரிவித்தது)
* அனானி / அதர் ஆப்சன் திறந்து வைத்திருப்பார்கள் (அம்பி பின்னூட்டத்தில் தெரிவித்தது)
இதையெல்லாம் படிச்சுட்டு இதை தவிர்த்துவிட்டு புதிதாக முயற்சிக்கும் பழைய பதிவர்களை எப்படி கண்டுபிடிப்பது ?
வெர்ரி சிம்பிள்...
தலைப்புச் சூடாக வைப்பார்கள், இரண்டு நாளைக்கு ஒருமுறையேனும் சூடான இடுகையில் இடம்பிடிப்பார்கள்.
மேலும் குசும்பன் ஆராய்ச்சியில் கண்டுகொண்டவை இங்கே !
பின்பற்றுபவர்கள்
பதிவர் சதுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவர் சதுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
20 ஆகஸ்ட், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்