தினமலரின் கார்ட்டூன் கொழுப்பை கண்டிக்கக் கூடிய இஸ்லாமிய பெருமக்கள், தங்கள் மதத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும், இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாதிகளை கண்டித்து கண்டன பேரணி நடத்துவது எப்போது ?
இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் நச்சுக் கும்பல்களின் ஏச்சுக்களை புறம் தள்ளவேண்டுமென்றால் தீவிரவாதத்திற்கு எதிராக தங்களின் குரலை பலமாக பதியவைக்க வேண்டியது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமை.
தினமலருக்கு எதிராக இஸ்லாமிய சமுதாயமே திரண்டதை பொதுமக்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர், அவர்கள் மனதில் இந்த கேள்வி இயற்கையாகவே எழும். வெறும் அறிக்கைகள், கண்டனங்கள் எல்லாமே கண்துடைப்புதான், உண்மையான அக்கரை வெளிப்படையாக ஒன்று திரண்டு கண்டிப்பதால் தான் பிறரால் புரிந்து கொள்ளப்படும்.
இந்துத்துவாக்களின் செயல்களை திராவிட இயக்கத்தினர் எப்போதும் வெளிப்படையாகவே கண்டிப்பதுடன் இல்லாமல் பொதுக்கூட்டம்ம் கண்டன பேரணி எல்லாமும் நடத்தி இஸ்லாமிய பெருமக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார்கள். மதவெறி இல்லாத, சமூக அக்கரை உள்ள ஒவ்வொரு இந்து சகோதரனும் அதனைச் செய்கிறான், ஆதரவு கொடுக்கிறான்.
உங்களால் ஏன் முடியவில்லை, லட்சக்கணக்கில் தினமலருக்காக திரட்டிய கூட்டத்தை தீவிரவாதிகளுக்கு எதிராகவும் திரட்டுவதற்கு எது தடையாக உள்ளது ?
அப்படி பட்ட பேரணி நடந்தால் மதச் சார்பற்று அனைவருமே கலந்து கொள்வர், இஸ்லாமியர்கள் தங்கள் செயலை சிறிதளவு கூட ஆதரிக்கவில்லை, மாறாக பலமாகவே வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ளப்பட்டு தீவிரவாதிகளும் செயல்களை படிப்படியாக நிறுத்திக் கொள்வார்கள்.
'தினமலர் அமிரகத்தில் தடைசெய்யப்பட்டது' என்ற செய்திகளைத் தாங்கி வந்த பதிவுகளைப் போல், 'தீவிரவாதிகளைக் கண்டிக்க திரண்ட இஸ்லாமிய பெருமக்கள்' என்ற செய்திகளைத் தாங்கிவரும் பதிவுகளையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.
பின்பற்றுபவர்கள்
குண்டு வெடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குண்டு வெடிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
14 செப்டம்பர், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்