காலத்தில் தேட...

பொடியன் சஞ்சைக்கு கடுமையான கண்டனம் !

Monday, July 13, 2009

தன்னை எதிர்பதிவு ஏகாம்பரமாக நினைத்துக் கொண்டு சஞ்சை எனது பதிவுக்கு விளம்பர நோக்கத்துடன் எதிர்பதிவு போட்டு இருக்கிறார். எனது அந்தப் பதிவு ஜக்கிவாசுதேவின் சிறுகதையைத் தான் எடுத்து எழுதி இருந்தேன். எனக்கு எதிராக எழுதுவதாக நினைத்து ஒரு ஆன்மிக அறிவாளியின் கதையை போதை, கஞ்சா என்று அஞ்சாமல் கொசசைப்படுத்தி இருக்கிறார். பொடியன் சஞ்சை பெயருக்கு ஏற்றார் போல் பொறுப்பின்றி எழுதியதற்கு கடுமையான எனது கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். தொலைபேசி மூலம் சமாதானம் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. இந்த கண்டனத்தை ஏற்று சஞ்சை எதிர்பதிவை தூக்கிவிட்டால் அடுத்த 5 நிமிடத்தில் எனது இந்தப் பதிவையும் தூக்கிவிடுவேன்.

***

யூசுப்பால்ராஜ் Said...

எனக்கு பொடியன் சஞ்செய் பொடியானாக ஜட்டியோடு இருக்கும் பொழுதில் இருந்தே தெரியும், நான் சொல்லித்தான் அவன் ட்ராயரில் இருந்து பேண்டுக்கு மாறினான். அப்புராணி, அவன் தெரியாமல் செய்திருப்பான். விவரம் இல்லாதவன், சித்தப்பன் ஸ்தானத்தில் இருந்து அவனுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.

பாதுஷா said ...

கோவி போன்ற பிரபல பதிவர்களை இப்படி வம்பிலுப்பது வேண்டுமென்றே சஞ்செயின் விளம்பர புத்தியைக் காட்டுது.

பாஸ்கி said ...
பாதுஷா சொல்வதை நானும் வழி மொழிகிறேன்.

*****

அனானிகளே ! அங்கே எரிகிற தீயில் ஈத்தரை ஊற்றாதிங்கப்பா !

51 கருத்துக்கள்:

பதிவு பார்வைகள்

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP