பின்பற்றுபவர்கள்

13 ஏப்ரல், 2013

தவிட்டு ரொட்டிக்கு மாறுங்கோ !


தவிட்டு ரொட்டி என்று ஒண்ணு உண்மையிலேயே தனியாக இருந்ததா ? இன்றும் இருக்கிறதா என்று தெரியாது. ஆனால் குருவி ரொட்டி (பறவைகள், விலங்குகள் போன்ற உருவங்களால் செய்யப்பட்டது), உப்பு ரொட்டி, ஐஞ்சு ரொட்டி (ஐஞ்சு பைசாவுக்கு ஐஞ்சு - பழைய 25 பைசா அளவில் இருக்கும்), சாரொட்டி (சென்னையில் வரிக்கி அல்லது பொறை என்பார்கள், சாரொட்டி என்ற பெயர் காரணம் தெரியவில்லை, ஒருவேளை சறக் மொறுக் என்பதால் அல்லது முற்றிலும் ஈரச் சாறு இல்லாமல் சாரற்ற ரொட்டி சாரொட்டி என்று மறுவியதா தெரியவில்லை)  இது போன்று இன்னும் சில ரொட்டிகளை சிறுவயதில் வாங்கி தின்றிருப்பேன், இவற்றில் சாரொட்டி தவிர்த்து ஏனையவற்றில் தவிடும் அரிசி மாவும் இருப்பது தவுடு சுவை அறிந்தவர்களால் உணர முடியும், தவிடு / உமி என்றாலே பலருக்கு என்னவென்று தெரியாது என்றே நினைக்கிறேன், அரவை மில்லில் நெல்லை இட்டு அரைக்கும் பொழுது நெல்லின் தோலும் மாவாக அரைக்கப்பட்டே வெளியே வரும், அதில் ஒரு கையளவு நெல் அரைத்து முடித்த பின் மீண்டும் போட்டு அரைப்பார்கள், காரணம் கடைசியாக எந்திரத்தில் இருக்கும் நெல்லும் அரைந்து வெளியே வந்துவிடும். அரைத்த அரிசியை மறுபடியும் ஒரு சல்லடை எந்திரத்தினுள் கொட்டுவார்கள், அது அரிசி தனியாகவும், நொய் / குருணை  (பாதிக்கும் குறைவாக உடைந்த அரிசி, ஆங்கிலத்தில் Grain அல்லது fine grain என்று சொல்லி முடித்துவிடுவான்) தனியாகவும் பிரித்து வெளியே கொட்டும், ஏற்கனவே அரவை கட்டணம் செலுத்தி இருந்தாலும் இரண்டு கை சேர்த்து மூட்டைக்கு ஒரு கை அளவு அரிசியை அரைக்கும் தொழிலாளிக்கு கொடுத்துவிட்டு அரிசி, நொய் மற்றும் தவிட்டை கட்டிக் கொண்டு வீடு வருவோம்.

நொய் கஞ்சு காய்த்து குடிக்கவும், தவிடு மாடுகளுக்கு கழுநீரில் (கழனி தண்ணி) கொட்டி கலக்கி வைக்க, பிரியாணி சாப்பிடுவது போல் சுவைத்து சாப்பிடும், தவிட்டின் பயன் அத்துடன் முடியாது, அடுப்பில் விறகு நன்றாக எரியும் போது அதன் மீது கொஞ்சம் தூவி விட மேலும் நன்கு எரியும், பெரும்பாலும் புழுங்கல் அரிசிக்காக நெல் வேக வைக்கும் பொழுது எரியூட்டியாக பயன்படும், தவிட்டு அல்லது உமி ( ஒதுக்கப்பட்டது / உமிழ்ந்தது என்ற பொருளில் உமி வந்திருக்கும் என்றே நினைக்கிறேன்)  அடுப்பில் உமி தான் முதன்மையான எரிபொருள். இப்போதெல்லாம் மாடும் இல்லை, உமி அடுப்பும் இல்லை, தவிடு எரிக்கப்பட்டு மறுப்பயனீட்டு உரமாக்கப்படுகிறதா என்று தெரியவில்லை, நெல் அரவை நிலையங்களில் எரிக்கப்பட்ட தவிடு முன்பெல்லாம் உரமாக எடுத்துச் செல்லப்படும்.

அரவை எந்திரங்கள் வராத பொழுது உரல் உலக்கை தான் நெற்களில் இருந்து அரிசியையும் உமியையும் பிரித்து எடுக்க பயன்படும், அவ்வாறு எடுக்கப்படும் அரிசியை அரவை எந்திரங்கள் வந்த பிறகு கைக்குத்தல் அரிசி என்பார்கள், அதற்கு முன்பு நெல் குத்துவதற்கு தனியாக பெயர் தேவைப்படாமல் இருந்தது, தமிழில் அரிசி என்பது தோல் நீக்கிய அனைத்து தானியங்களுக்குமான பொதுப் பெயர் தான், நெல் அரிசி, வரகரிசி, சாமை அரிசி, கேப்பரசி, கம்பரிசி, திணை அரிசி என்று தான் சொல்லுவார்கள், கால மாற்றத்தில் அவற்றை உண்ணும் வழக்கம் மறைந்ததால் நெல் அரிசிக்கு மட்டுமே அரிசி என்ற பெயர் வழங்கிவருகிறது, அரிசி தான் ஆங்கிலத்தில் Rice க்கும் மூலச் சொல், காரணம் விவசாயம் பண்டைய காலம் தொட்டே (இன்றும் செயலபடும் கல்லணை தான் உலகின் முதல் அணை) தமிழகத்தில் நடந்து, ஏற்றுமதி செய்யப்பட்டவை என்பதால் அந்த சொல் தமிழகத்தில் இருந்தே பல்வேறு மொழிகளுக்கு சென்றிருக்க வேண்டும் A-RI-CE (அ-ரி-சி), இவற்றில் 'அ' வை விழுங்கிவிட்டு ரிசி யை (Rice) ரைஸ் ஆக்கி நம்மையும் அவ்வாறே சொல்ல வைக்கிறார்கள், தமிழகத்தில் ரைஸ் / ஷாதம் என்று சொல்வது தான் நாகரீகம் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது, யாராவது சோறு என்று கேட்டால் பிச்சைகாரனோ ? என்பது போல் முகத்தை ஏறிட்டு பார்க்கிறார்கள், உலகினருக்கு ஒரு உணவுப் பொருளின் சொல் பிச்சை அளித்து அவற்றை திரும்பவும் நாமே வாங்கி உண்கிறோம் :)


Etymology

First attested in English in the middle of the 13th century, the word "rice" derives from the Old French ris, which comes from Italian riso, in turn from the Latin oriza, which derives from the Greek ὄρυζα (oruza). The Greek word is the source of all European words (cf. Welsh reis, German Reis, Lithuanian ryžiai, Serbo-Croatian riža, Polish ryż, Dutch rijst, Hungarian rizs, Romanian orez).[7][8][9] The origin of the Greek word is unclear. It has sometimes held to be from the Tamil word அரிசி (arisi), or rather Old Tamil arici.[10][11] However, Krishnamurti[12] disagrees with the notion that Old Tamil arici is the source of the Greek term, and proposes that it was borrowed from descendants of Proto-Dravidian *wariñci instead. Mayrhofer[13] suggests that the immediate source of the Greek word is to be sought in Old Iranian words of the types *vrīz- or *vrinj-, but these are ultimately traced back to Indo-Aryan (as in Sanskrit vrīhí-) and subsequently to Dravidian by Witzel and others.

நன்றி விக்கி

*****

கைக்குத்தல் அரிசிகளில் தானியங்களின் சத்துகள் நிரம்ப இருக்கும், அரவை எந்திரங்கள் மூலம் அரைக்கப்படுவதில் அரிசியின் மேற்பகுதி நன்றாக தீட்டப்பட்டு வெறும் மாவுப் பொருள் மட்டுமே நமக்கு உணவாக கிடைக்கிறது, இவற்றை கால விரைவாக உணர்ந்து கொண்டவர்கள் தற்போதும் வெளிநாட்டினரே, குறிப்பாக ஐரோப்பியர்கள் உணவுக்காக தயாரிக்கப்படும் ரொட்டிகளில் தானியங்களின் உமியும் கலந்த (whole meal) ரொட்டிகளே சத்தானவை என்று பரிந்துரைக்கப்படுகிறது, whole meal bread விற்பனை தற்போது விரும்பி வாங்கப்படும் ரொட்டி உணவு வகையாக மாறியுள்ளது, தானியங்களின் மேல் தோல் உள்ளிட்டவைகளில் புரத சத்துகள் உண்டு, என்பதால்  whole meal உணவு பொருள்கள் பல்வேறு சுவையூட்டத்துடன் கிடைக்கிறது.  புரதம், நார்சத்து, கொழுப்புசத்து, இரும்பு சத்து ஆகியவை தானியத்தின் தோல் மற்றும் அவற்றின் முளைகளில் உண்டு,  தீட்டபட்ட அரியினுள்  மாவு சத்து மட்டுமே உண்டு, அதனால் தான் உடல் பருமன் மிகுவது மற்றும் நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு உண்டவுடனேயே சர்கரை அளவு கூடுவது போன்ற உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

whole meal க்கு விக்கி ஒரு பக்கமே திறந்து வைத்து அதன் பயனை தெரிவித்துள்ளனர், நெல் மட்டுமின்றி அனைத்து தானியங்களிலுமே அனைத்து சத்துகளும் அவற்றின் தோலையும் சார்ந்தவையாகவே உள்ளது. இந்த whole meal, digestive   Biscuit ஆகியவை நாம் முன்பு தவிட்டு ரொட்டி என்ற பெயரில் சாப்பிட்ட ரொட்டி. சுவை தான், கொஞ்சம் சக்கை போன்று சற்று சுவை குறைந்ததாக (சப்பென்று) இருக்கும், வெள்ளைக்காரன் சாப்பிடும் தவிட்டு ரொட்டிக்கு whole meal என்று பெயர் வைத்ததால் அவற்றை உண்ணுவது உடல் நல மேன்மை மற்றும் நாகரீக உணவு என்ற நிலையை அடைந்துள்ளது. 

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்