பின்பற்றுபவர்கள்

வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 அக்டோபர், 2012

ஆர்காடு நவாபுகளால் உருவான இந்தியா !


ஆர்காடு நவாப்புகள் யார் ? தமிழகத்தில் இவர்கள் எப்படி கால் ஊன்றினார்கள் என்று தகவல்களைத் தேடிப் பார்க்கும் பொழுது, வரலாற்றில் கொடுங்கோலன் மற்றும் கடைசி காலத்தில் கையால் குரான் எழுதி தன்னை திருந்தியவன் என்று காட்டிக் கொள்ள முயன்றவன் என்றெல்லாம் வருணீக்கப்படும் பேரரசர் ஒவுரங்க சீப் தென்னிந்தியாவில் தனது ஆட்சி அதிகாரத்தை விரிவு படுத்த முயற்சித்தன் விளைவாக கிபி 1692ல் வரிவசூல் செய்ய தென்னிந்தியாவிற்கு அனுப்பட்டவர்களே நவாப்புகள்.  அவ்வாறு முதலாவதாக  தென்னிந்தியாவிற்கு வந்த நவாப் சுல்பிகர் அலி  என்பவர், இவர் விஜய்நகர மற்றும் மராட்டிய அரசுகளை முறியடித்து கிபி 1736ல் மதுரைவரை முகலாய அரசை விரிவுபடுத்தினார் என்கிறது வரலாற்று குறிப்புகள். சுல்பிகர் அலிக்கு  பிறகு பொறுப்பேற்றவர் அலி வாலாஜா, சுல்பிகரின் ஆட்சி காலம் 1732 - 1740 வரையில் 8 ஆண்டுகள் நீடித்து பின்னர் 1749 ஆம் ஆண்டு அலி வாலாஜா பொறுப்பெற்க இடைபட்ட 9 ஆண்டுகள் என்ன நடந்தது என்று தெரியவில்லை

அலி வாலாஜா ஓரளவு நேர்மையான ஆட்சி நடத்தினார் என்றும் அனைத்து மதத்தினரையும் மதித்தார், கிடைத்த வரி வருமானங்களில் இருந்து இந்து கோவில்களுக்கும் மானியம் வழங்கினர் என்றும் சொல்லப்படுகிறது. இவர் 1765ல் மொகலாய பேரரசிற்கு கப்பம் கட்ட மறுத்து தென்னிந்திய பகுதிகளை தனியாக ஆளுவதற்காக இவரது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நவாப்பு அரசாகவும், சுதந்திரம் பெற்றதாகவும் அறிவித்தார், இவரது ஆட்சி ஆர்காட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டதால் பின்னர் வந்த நவாப்புகள் ஆர்காடு நவாப்புகள் என்று பெயர் பெற்றனர், இவர்களது ஆட்சி கர்நாடகம் கிருஷ்ணா ஆறுவரை உட்பட்ட பகுதிகளாக இருந்தது.  இடையே பிரஞ்சுகாரர்களும் ஆங்கிலேயர்களும் உள்ளே நுழைய இருவருக்கும் மைசூரில் போர் மூண்ட சூழலில் மைசூர் மற்றும் திண்டுகல் பகுதியை விஜய நகர அரசுகளுடன் இணைந்து ஆண்டு வந்த ஹைதர் அலி பிரஞ்சுகாரர்களுக்கு போரில் உதவ, நவாப்புகள் ஆங்கிலேயர்களுக்கு ஆதாரவுடன் செயல்பட்டனர். பின்னர் தமது ஆளுமைகளுக்கு உட்பட்ட சமஸ்தானங்களை கட்டுப்படுத்த ஆங்கிலேய படைகளை நவாப்புகள் பயன்படுத்த அதுவே அவர்களுக்கு ஆப்பாக அமைந்ததாம். இதன் காரணமாக ஆங்கிலேயர்களிடம் தனது ஆளுமைகளை கொஞ்சம் கொஞமாக இழந்ததுடன் வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் ஆழமாக கால் ஊன்ற காரணமாக இருந்தவர்கள் என்பதுடன் தேச நலனுக்கு எதிராக செயல்பட்டவர்கள் என்ற பெயரை நவாபுகள் பெற்றனராம்.

"இதன் பிறகு பதிமூன்றாவது நவாபாக ஆட்சிக்கு வந்த குலாம் முகம்மது கவுஸ் காண் ( 1825 - 1855 ) தனக்கு பிறகு வாரிசு இல்லாமல் இறந்தார். இதனால் அவரது ஆட்சி ஆங்கிலேய அரசின் கீழ் சென்றது. இதன் பிறகு 1867-ல் குலாம் முகம்மது கவுஸ் கானின் சிறிய தந்தை ஆஸிம் ஜா, பிரித்தானிய மகாராணி விக்டோரியாவிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார். அதன்படி நவாப் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றனர். அதற்கு பகரமாக வரிவசூலில் ஒரு பகுதியை ஓய்வுதியமாக ஆஸிம் ஜா பெற்றார். மேலும் ஆர்காடு இளவரசர் என்றும் அங்கிகரிக்கப்பட்டார். 
இவரது பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் சென்னை நகரில் ஆர்காடு இளவரசர் என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர இந்தியாவும் இவர்களது பட்டத்தை அங்கீகரித்து, அரச குடும்பத்தினருக்கான ஓய்வுதியத்தை அளித்து வருகின்றது. இவர்களில் நடப்பு கடைசி ஆர்காடு இளவரசரான முகம்மது அப்துல் அலி ஆஸிம் ஜா ஜுலை 1994-ல் பட்டத்துக்கு வந்தார்".

- விக்கிப் பீடியா


******

இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டு இருக்காவிட்டாலும், பல்வேறு நாடுகளில் நடந்தது போல் காலத்தின் கட்டாயம் என்ற அளவில் மன்னர் ஆட்சிகள் ஒழிந்திருக்கும், ஆனால் இந்தியா என்கிற ஒரே நாடாக இருந்திருக்குமா ? காங்கிரசு அரசு போன்ற ஒற்றைத் தலைமைக்கு மொத்த மாநிலங்களும் கட்டுப்பட்டு இருக்குமா என்பது ஐயமே.

இந்தியா என்கிற நாடு உருவாக ஆங்கிலேயர்களும் அவர்களுடன் கைகோர்த்த  நவாப்புகளுமே காரணம், மொகலாய அரசர்கள் இந்தியாவெங்கும் ஆட்சியை விரிவுபடுத்தினார்கள் என்பதைவிட இந்தியாவின் பகுதிகளில் வரி வசூல் செய்யும் பொறுப்புகளை ஒப்படைத்திருந்தனர் என்பதும் பிறகு அதுவே அவர்களது ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்ககாரணமாக அமைந்ததும் வரலாறாக ஆகி இருக்கிறது.

வியாபாரம், வேட்டை என்ற அடிப்படையில் வெள்ளைக்காரர்கள் கிடைத்த வரை சுருட்டிக் கொண்டு திரும்பச் சென்றிருந்தாலும் மொகலாய மன்னர்கள் அவ்வாறு திரும்பிச் செல்லவில்லை, முகலாயர்கள் இடம் பெயர்ந்து வந்தவர்கள் என்ற அடைப்படையில் அவர்களுக்கு திரும்பிச் செல்ல வாய்ப்பும் இருக்கவில்லை என்பது உண்மை, 

ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள் என்று போற்றபடுகிறார்கள், மைசூரில் இன்றும் கொண்டாடப்படுகிறார்கள், நாவாப்புகளின் வாரிசுகளை  இளவரசர்கள் என்ற அங்கீகாரம் மட்டுமே அளித்து அவர்களுக்கு மானியம் வழங்குகிறது இந்திய அரசு, சொல்லப் போனால் மொகலாய ஆட்சியை துடைத்தொழித்த வெள்ளைக்காரர்கள் காலூன்ற காரணமாக இருந்து, இந்தியா என்ற நாடு உருவாக காரணமாக இருந்தவர்கள் நவாப்புகள், இதன்காரணமாக தமது ஆட்சியையும் இழந்து இவர்கள் இந்துக்களால் போற்றப்பட வேண்டியவர்கள், தமிழகத்தின் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்தியவர்கள் என்ற முறையில் நவாப்புகள் தமிழக மக்களால் நன்றியுடன் நினைத்துப் பார்க்கத் தக்கவர்கள்.

அமீர் மஹால், சென்னை

இணைப்புகள் : (விக்கி)

1 ஜூன், 2012

ஷக்கலக்கா பேபி !

சீனமொழியை கற்றுக் கொள்ளும் எனது ஆர்வத்தில் கொஞ்சமும் தொய்வின்றி தொடர்ந்து கற்றுக் கொண்டுதான் வருகிறேன், சீனர்கள் மாண்டரின் மொழியில் பேசுவதில் ஏறக்குறையை 60 விழுக்காடு அவர்கள் பேசுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்ற அளவுக்கு சீனமொழித்திறன் என்னுள் வளச்சி பெற்றுள்ளது. பேசுவது மட்டுமின்றி அம்மொழியை படிப்பதற்கும் கற்றுக் கொண்டால் ஒரளவும் முழுமை அடைய முடியும் என்று நினைத்து தற்பொழுது சீன எழுத்துகளையும் மனப்பாடம் செய்து வருகிறேன், சீன எழுத்துகளை மனப்பாடம் தான் செய்யமுடியும், ஏறக்குறையை 80,000 எழுத்துகளில் இன்றைக்கு செய்தித்தாளில் அல்லது அன்றாடம் எழுத்துப் புழக்கத்தில் பயன்படுபவை என்பதாக சுமார் 2000 சீன எழுத்துகள் வரை அவர்கள் பயன்படுத்துகிறார்கள், அவை அனைத்தையும் சொல்குறியீடாக மனப்பாடம் செய்து கொண்டால் தான் சீன மொழியைப் படிக்க முடியும். சீன / கொரிய / ஜப்பானிய மொழியின் எழுத்துகள் தான் உலகிலேயே மிகுதியான எழுத்துகளைக் கொண்ட மொழி. கொரிய / ஜப்பானிய எழுத்துகளுக்கு சீனமொழி எழுத்துகளே அடிப்படை. இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்வதற்கும் பிறமொழிகளைக் கற்றுக் கொள்வதற்கும் பெரிய வேறுபாடு என்னவென்றால் இந்திய மொழிகளைக் கற்றுக் கொள்ள வெறும் மூன்று மாதமே போதும் அதன் பிறகு தெரிந்ததை வைத்து நாம் மேலும் மேலும் குறிப்பிட்ட மொழி அறிவை கூட்டிக் கொள்ள முடியும், கூர்ந்த கவனிப்பும் ஆர்வமும் இருந்தால் ஆங்கிலம் உள்ளிட்ட மற்றொமொழிகள் பேச்சுவழக்காகவும் கற்றுக் கொள்ள முடியும், ஆனால் அவை அறிமுக மொழியாக கற்றுக் கொள்ளும் பொழுது ஓரளவு கற்றுக் கொள்ளவே ஓர் ஆண்டுக்கு மேலாக ஆகும்.

*****

இன்னிக்கு காலையில் சிங்கப்பூர் சீன வானொலி நிகழ்ச்சியின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே அலுவலகம் வந்தேன்,  ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் முதல்வன் படத்தில் சுஷ்மிதா சென் பாடும் பாடலாக வெளிவந்த ஷக்கலாக்க பேபி சைனீஸ் பாடல் வடிவில் ஒலிப்பரப்பானது. ஒரு தமிழன் இசையமைத்தப்பாடல் சீனமொழியிலும் எடுத்துக் கொள்ளப்பட்டது பெருமையானது. சீனப்பாடலைக் காப்பி அடித்த ரஹ்மானின் இசை என்று யாராவது மாற்றி எழுதி இருக்கிறார்களா ? என்றுத் தேட, இணையத்திலும் அவ்வாறு இல்லை. இப்பொழுது தெரியவருவது போல் ஆண்டு தேதி வழக்குகள் முன்பு இல்லாததால் யாரை யார் காப்பி அடித்தார்கள் என்பதே தெரியாத நிலையில் உரியவருக்கானப் பெருமை என்பவையெல்லாம் வரலாறு எழுதுபவர்களின் கைகளில் தான் இருந்தது, பாட்டும் நானே பாடலும் நானே பாடும் உனை நான் பாடவைத்தேனே - என்கிற திருவிளையாடல் பாடலை இயற்றியவர் ஒரு இஸ்லாமியர் ஆனால் அது கண்ணதாசன் பாடல் என்று சொல்லப்படுகிறது. 'அசையும் பொருளும், இசையும் நானே.....' என்பது அப்பாடல்வரிகளில் ஒன்று இஸ்லாமியர்களின் இணை வைத்தல் பற்றிய கருத்து நாம் அறிந்தவை தான் என்பதால் ஒரு இஸ்லாமியர் கற்பனைக்கும் கூட அசையும் பொருள் எல்லாம் இறைவன் என்ற பொருள் தரும் (இறைவனுக்கு இணை வைக்கும்) வரிகளை எழுதி இருக்க வாய்ப்பில்லை என்பது எனது கருத்து, எனது கருத்து உண்மை இல்லை என்றாலும் கூட அதை ஒரு இஸ்லாமியர் எழுதினார் என்பதற்காக மற்ற இஸ்லாமிய பெருமைப்படும் வரிகளாக அதில் எதுவும் இல்லை என்பது அது குறித்து பெருமை பேசும் இஸ்லாமியருக்கான செய்தி. ஏ ஆர் ரஹ்மான் சம்பாதித்து போதும் இசை அமைப்பதை நிறுத்தலாம், இஸ்லாத்திற்கு துரோகம் செய்வதை ரஹ்மான் நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று வாஹாபியர்களின் (கண்டனக்) குரலாக சுவனப்பிரியனே குரல் எழுப்பியுள்ளார். இசைக்கு மனிதன் அடிமையாவதை இஸ்லாம் எதிர்க்கிறது என்கிற அடிப்படையில் அவர் ஏ ஆர் ரஹ்மானை ஏற்கனவே நிறைய சம்பாதித்திவிட்டார் இனி இஸ்லாமிய வளர்ச்சி பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துவிட்டு இசைக்க ரஹ்மான் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்கிறார் சுபி.


திரும்பவும் சக்கலக்கா பேபிப் பாடலுக்கு வருவோம் இந்தப் பாடல் சிங்கப்பூர் பாப் பாடகி ஒருவரால் பாடப்பட்டு ஆல்பமாக வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. யுடியூபில் இப்பாடல் காணொளியாகக் காணக்கிடைக்கிறது. சிலர் அப்பாடல் குறித்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். இந்தப்பாடல் முதல்வன் படத்துப் பாடல் பின்னர் ஏர் ரஹ்மானின் பாம்பே ட்ரீம்ஸ் இசைத் தொகுப்பில் (ஆல்பம்) இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார், விக்கிப்பீடியாவிலும் இந்தத் தகவல் உண்மை என்றே கட்டுகிறது, யூடியூபில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள் ஒன்றில் இப்பாடல் கவனமாக ஏர் ரஹ்மான் பேரைத் தவிர்த்துவிட்டு மேற்கத்திய இசையில் பாம்பே ட்ரீம்ஸின் பாடல் பின்னர் முதல்வன் படத்தில் காப்பியடிக்கப்பட்டதாக ஒருவர் கருத்துவிட்டுள்ளார். பாம்பே ட்ரீம்ஸ் இசை அமைத்ததும் அதே தமிழனாக இருந்தாலும் அந்தப் பாடல் தமிழ் படத்தில் இடம் பெரும் முன் இந்திப்பாடலாக வந்ததுதான் என்பதாக மட்டம் தட்டியுள்ளனர். இப்படியெல்லாம் கூட தமிழனக்கு எதிர்ப்பு இருக்குமா ? வெறுப்பாக இருந்தாலும் வியப்பாகவும் இருக்கிறது. ஒரு தகவலை வெளி இடுபவர்கள் குறைந்தப்பட்சம் உண்மைத் தன்மை குறித்த எண்ணமே இல்லாமல் எழுதி-விடுகிறார்கள்.

நமக்கு தெரியும் அண்மைய காலத்திலேயே தமிழர்கள் குறித்த தகவல்கள் வரலாற்றில் திரிக்கப்படும் போது, நமக்கு தெரியாத காலத்தில் நடைபெற்றவற்றின் வரலாறுகளாகக் காட்டப்படுவதிலும் இருக்கும் உண்மைத் தன்மைகளை நாம் எந்த ஒரு ஆய்வும் இல்லாமல் ஏற்றுக் கொண்டுவிடுகிறோம் என்பவை துரதிஷ்ட வசமானது :(

17 ஆகஸ்ட், 2009

மாண்புமிகு மருத்துவ சமூகம் !

உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால் அதை மறுப்பவர்கள் எவருமே இருக்க முடியாது. இனவேறுபாடு எதுவும் இல்லாமல் அல்லது மிகக் குறைவான ஒரு நாட்டில் ஒன்று போல் முக அமைப்பு கொண்ட மக்கள் தனித்தனியாக பிரித்து வைத்துக் கொண்டு அவர்களில் ஒரு பகுதியினரை பிறப்பை, தொழிலை வைத்து தாழ்வு படுத்தி,அடிமையாக்கி வைத்திருக்க கண்ணுக்குத் தெரியாத சாதி என்கிற மாயவலையை பிண்ணி அதில் சிக்க வைத்து வாழ்வியல் சதி(ரா) ஆட்டம் ஆடும் நிலை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வழக்கம். அப்படி செய்பவர்களுக்கு முற்பட்ட, முற்போக்கு சமூகம் என்கிற உயர்ந்த பெயரையும். பாதிக்கப்பட்டவர்களை கிழான சமூகம், தீண்டத்தகாதவர்கள் என்றும் சொல்லி வந்திருப்பது 'தெய்வம் பிறந்ததாகக் வாய்கூசாமல்' சொல்லப்படும் 'பாரத திரு' நாட்டில் இன்றும் கூட நடை முறையில் தொடர்வதும், அதை தடுக்க முனையும் மனிதம் போற்றுவோருக்கு சா'தீயம்' பெரும் அறைகூவல் தான்.

***

சலூன் கடை என்றாலே சிறுவர்களாக இருந்த பொழுது அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் அங்கங்கள் நமக்கு அறிமுகமான இடம் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். சவரத்தொழிலாளிகள் என்பவர்கள் யார், ஏன் அவர்கள் அந்த தொழிலை செய்துவருகிறார்கள் ? அவர்களுக்கு அது குலத்தொழிலா ? என்கிற கேள்வியை நம்மில் கேட்டுக் கொண்டவர் குறைவே. எந்த ஒரு இனத்திலும் குலத்தொழிலாக இல்லாத பலத் தொழில்கள் இந்தியாவில் குலத்தொழில்களாகத் தொடர்வதில் சவரத் தொழிலும் ஒன்று. சவரத் தொழிலாளிகள் யார் ?

அம்பட்டர், பரியாரி, பார்பர், நாவிதர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் மருத்துவர் என்னும் ஆதிமருத்துவர் சமூகம் எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால், பண்டைய இந்தியாவில் முடிகளை மழித்துக் கொள்ளும் பழக்கம் பெளத்தர்களுக்கும், சமணர்களுக்குமே உரிய வழக்கம், அவர்கள் தவிர்த்து பார்பனர்கள் தலை உச்சியைத் தவிர்த்து தலையை மழித்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். உடலில் பூணூல் அணியாத காலங்களில் பார்பனர்கள் தங்களின் தனி அடையாளத்திற்காக உச்சிக் குடுமி வைத்து சிரைத்துக் கொள்வது வழக்கம். பூணூல் போட்டுக் கொள்வது ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே வந்திருக்க வேண்டும் என்று வரலாற்று, இலக்கிய ஆர்வளர்கள் சொல்லுகிறார்கள். பூணூல் பற்றி எதுவும் குறிப்பிடாத வள்ளுவரும், மழித்தலும் நீட்டலும் வேண்டாம்' என்று அறிவுறித்தியது பார்பனர்களின் வெளிப்பகட்டைக் கண்டிப்பதற்குத்தான் என்றும் உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மருத்துவத்தை பண்டைய தமிழகத்தில் பெளத்தர்களும், சமணர்களும் செய்து வந்ததாகக் கூறுகிறார்கள், சித்தர்களில் பலர் சமண சித்தர்கள் என்றும் இந்து, சைவ சமய ஆதிக்கங்களினால் அவர்கள் பின்னாளில் இந்து சமயம் சார்ந்தவர்களாகக் காட்டப்படுவதெல்லாம் வெறும் கட்டுமானங்களே என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மருத்துவம் பார்க்கும் வழக்கம் இருந்தது, பெரும்பாலும் சமணர்களே மருத்துவக் கலையில் தேர்ந்தவர்களாகவும் அறுவை சிகிச்சை முதற்கொண்டு மருத்துவத்தில் அனைத்தையும் செய்யக் கூடியவர்களாகவே இருந்தனர். பெளத்த, சமணர், பார்பனர் தவிர்த்து மழித்துக் கொள்ளும் பழக்கம் வேறொருவருக்கு இருந்ததில்லை. சமணர்களின் ஆதிக்கம் வீழ்த்தப்பட்ட காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட சமணர்கள் அனைவரும் மருத்துவத் தொழிலுடன் சவரம் செய்வதையும் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். அது அப்படியே ஆண்டு 1900 வரை தொடர்ந்தது.

காயங்கள் ஏற்பட்ட பகுதியில் மருத்துவம் செய்ய அந்த இடங்களில் மயிரையும் மழிப்பது வழக்கம் என்பதால் அன்றைய மருத்துவர்கள் அனைவருமே சவரம் செய்வதையும் தெரிந்து வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பார்பனர் மற்றும் சைவ வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தால் பக்தி இயக்கம் என்ற பெயரில் சமணர்கள் வீழ்த்தப்படுவதற்கு முன்பு பார்பனர்கள் தங்களுக்கு தாங்களே சிரைத்துக் கொள்வது தான் வழக்கம். வீழ்த்தப்பட்ட சமண சமூகத்தில் மருத்துவம் தெரிந்தவர்களை மருத்துவர்கள் என்கிற சாதிப் பிரிவாக ஆக்கி, மருத்துவம் தெரியாதவர்களை வண்ணார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகமாக மாற்றி ஊருக்கு ஒதுக்குப் புறம் குடி இருக்க அனுமதிக்கப்பட்டதாகத்தான பண்டைய சாதியம் தோற்றம் வளர்ச்சி பற்றி ஆய்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவெங்கும், புத்த சமண மத வீழ்ச்சி என்பது ஆதிசங்கரருக்கு பிறகு ஏற்பட்டவையே, அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாக தொடர்ந்ததும் ஆதிசங்கரருக்கு பிறகு நடந்த வரலாற்று நிகழ்வே.

இப்படியாக உருவான மருத்துவ சமூகம் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் உயர்சாதியினருக்கு சேவகம் செய்ய வேண்டி இருந்ததால், தீண்டாமை ஆதிக்கத்தின் பாதிப்புக்கு அவர்களும் ஆளானார்கள்.

மருத்துவர்களின் சமூகக் கடமைகளாக அவர்களுக்கு முற்பட்ட சமூகம் 'விதிக்கப்பட்டவை' எவை என்று பார்த்தால்,

* தேவையான போது தலை, முகச் சவரம் செய்துவிடுவது
* இல்லச் சடங்கின் போது ஹோமம் செய்ய வரும் பார்பனருக்கு உதவுதல்
* பூப்பு எய்தும் சடங்கு, சாவு ஆகியவற்றை பிறர்க்கு சொல்லிவிடுதல், பூப்பு எய்திய பெண்ணுக்கு மூலிகை சார் கலந்த குளிக்கும் நீரை ஆயத்தம் செய்து தருவது
* "மாப்பிள்ளை சவரம்" - திருமணத்தின் முதல் நாளின் போது மணமகனின் பிறப்பு உறுப்பு பகுதியில் முடி நீக்குதல், அப்போது அவனுக்கு எதேனும் ஆண்மை தொடர்பான நோய்கள் இருக்கிறதா என்று கண்டறிந்து சொல்லுதல்
* மணப்பெண்ணுக்கு சேலைக் கட்டிவிடுவது (மனுதர்மப்படி பால், பட்டுப் புடைவைக்கும் தீட்டு கிடையாதே !)
* ஆண் / பெண் இருபாலருக்கும் மாதம் ஒருமுறை மறைவிட மழித்தல்
* பெண்களுக்கு மகப்பேறுக்கு உதவுதல்
* சவத்துக்கு சவரம், சவத்தை குளிப்பாட்டி விடுவது, சவ ஊர்வலத்தில் சங்கு ஊதுதல், சவ அடக்கத்தில் உதவுதல்

இவைகளுக்கு "ஊர்ச் சோறும்", கூலியாக நெல் போன்ற தானியங்கள் வழங்கப்பட்டதாகவும், அவை இல்லாதவர்கள் பணம் கொடுப்பதும் வழக்கமாம். இந்த தொழிலில் ஈடுபடும் அந்த சமூகத்து ஆண்கள் மருத்துவர்கள் என்றும் பெண்கள் மருத்துவச்சிகள் என்றும் சொல்லப்பட்டனர். அவர்களில் பெண்கள் மருத்துவம் மிகுதியாக தெரிந்து வைத்திருந்ததால் 'பாட்டி வைத்தியம்' என்கிற சொல் கூட பெண்கள் சிறப்பாக மருத்துவம் பார்த்ததால் ஏற்பட்ட சொல் என்றே சொல்கிறார்கள்.

ஆங்கிலேயே மெக்கல்லே கல்வித் திட்டத்தினால் அலோபதி மருத்துவம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, குலத்தொழில் இறைவனால் விதிக்கப்பட்டது என்றும் பிறவற்றை செய்வது இறை விதிக்கு ஏற்புடையது அல்ல என்று கூறிவரும் பார்பனர்கள் மருத்துவத் தொழிலில் கிடைக்கும் பணம் புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது ஏனைய பிற சமூகமும் ஆங்கில மருத்துவத் தொழிலுக்கு மாறிவிட்டார்கள். 12 நூற்றாண்டுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்த ஆதி மருத்துவர்கள், அரசாங்க சட்டதிட்டம் காரணமாக மருத்துவத் தொழிலை தொடர முடியாமல் தங்களுக்கு தெரிந்த மற்றொரு தொழிலான சவரத்தொழிலை வேறு வழியின்றி தொடர்கின்றனர். அந்தத் தொழிலையும் கூட நகரச் சூழலில், அதற்கு ஒரு உ(ய)ரிய விலையை நிர்ணயம் செய்து 'ப்யூட்டி பார்லர்' என்ற பெயரில் முற்பட்ட சமூகம் வைத்து செய்து கொண்டு வருகின்றன.

நாம் நம் உடலைத் தொட அனுமதிப்பது மருத்துவர்களுக்கும், சவரத்தொழிலாளிக்கும் மட்டுமே. அந்த இருவேலையையும் ஒருவராக செய்துவந்த, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட மருத்துவர் சமூகம் முடித்திருத்ததை மட்டுமே செய்துவருகிறது. அதிலும் கிராமங்களில் தலித் பிரிவினருக்கு சவரம் செய்பவர்கள் மேல்சாதிக்காரர்களுக்கு சவரம் செய்ய தடுக்கப்பட்டு இருக்கிறது


நூல் சான்று : ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு (160 பக்கங்கள், விலை ரூ 90/-)

கிடைக்கும் இடம் : வல்லினம், எண் 9, Y-ப்ளாக், அரசு குடியிருப்பு, இலாசுப் பேட்டை, புதுச்சேரி - 605 008, தொலைபேசி : 0413 - 2257151

நூலில் சில பகுதிகள் உயர்சாதிக் கொடுமைகளாக சொல்லப்படுபவகளை வாசிக்கும் போதே வாசிக்குபவர்களுக்கு இரத்த கொதிப்பை ஏற்படுத்தக் கூடியவை, அதனால் அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முழுவதையும் தற்காலச் சூழலில் எழுதுவது தேவையற்றதாக நினைத்து பதிவில் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன், முழுவதும் அறிந்து கொள்ள நினைக்கும் சமூக ஆர்வலர்கள் நூலை வாங்கிப் படிக்கலாம்.

16 ஏப்ரல், 2009

சித்திரைப் புத்தாண்டுக்கு முழு ஆதரவு இல்லை !

ஏப்ரல் 14ல் பல்வேறு (எதிர்)தரப்பில் இருந்து சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினமலர் உட்பட பார்பன ஊடகங்கள் கூட அதைக் கண்டு கொள்ளவில்லை என்பதால் சித்திரை புத்தாண்டை மாற்றியது தவறு என்று எண்ணம் கொண்டோர் பலர் மனம் புண்பட்டுள்ளனர்.

இதற்குக் காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், பார்பன ஊடகங்கள் பலவும் தை ஒன்றில் பொங்கல் வாழ்த்துகளுடன் முடித்துக் கொண்டனர். எனவே அவர்களெல்லோரும் சித்திரை 1ல் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லப் போவதாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சொல்லி வைத்தார் போல் இந்துத்துவாதி இல.கனேசன் உட்பட பாஜக தலைகள் கூட சித்திரைக்கு 'புத்தாண்டு' வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இதன் தொடர்பான புலம்பல்களை இங்கு இட்லிவடையார்(?) பதிவில் காணலாம் :)

ஆனால் நான் அறிந்த வகையில் பொதுமக்களில் பலர் சித்திரை ஒன்றில் வழக்கம் போல் கோவிலுக்குச் சென்று வந்து, புத்தாண்டுக்கு செய்ய வேண்டியதைத் செய்து, அதுபற்றி பெரிதாக பேசிக் கொள்ளாமல் கொண்டாடினர். தை திங்களில் பொங்கலுடன், புத்தாண்டு வாழ்த்துகள் கூறி பல குறுந்தகவல்கள் வந்தன. ஆனால் சித்திரை 1க்கு ஒரே ஒரு குறுந்தகவல் வாழ்த்து மட்டுமே வந்தது. சிங்கையில் தமிழர் அமைப்புகள் பஞ்சகச்ச பஞ்சாங்கங்களின் பிடியில் இருப்பதால் சித்திரை 1 தான் புத்தாண்டு என்பதில் பிடிவாதம் நீடிக்கிறது. மலேசியாவில் தை க்கு மாறி, நாள்காட்டிகளையும் மாற்றிக் கொண்டு விட்டார்கள். பிற நாடுகளில் விருப்பம் போல் கொண்டாடுகிறார்கள்.

சித்திரை திருநாளை தமிழ் புத்தாண்டாகவே நினைத்து வாழ்த்துச் சொல்ல தமிழ் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் முன்வரவில்லை. மாற்றத்தை (வேறு வழியின்றி) ஏற்றுக் கொண்டதாக கொள்ள முடிகிறது. விதிகள் காலத்தால் மாறும் :)

தமிழ் புத்தாண்டை தை 1க்கு மாற்றியும், சீனப் புத்தாண்டை அனைத்து மதச் சீனர்களும் கொண்டாடுவது போல் தமிழ்சூழலில் அனைத்து மத தமிழர்களும் தமிழ் புத்தாண்டு கொண்டாடியது போல் தெரியவில்லை :(

வழக்கம் போல் இந்துமத தமிழ் பொதுமக்களுக்கு இதையும் கொண்டாட வில்லை என்றால் சாமி குத்தம் வந்துடுமோ என்ற அச்சத்தில் இரண்டு கொண்டாட்டம், ஆண்டுக்கு கூடுதலாக இருமுறை புத்தாண்டு என்ற பெயரில் விற்பனை கலைகட்டுகிறது என்பதால் சிறு விற்பனையாளர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

7 நவம்பர், 2008

நீலிக் கண்ணீர் !

சொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி - நீலிக்கேசியில் வரும் சமண பெண் துறவியும், காப்பியத் தலைவியுமான நீலி தான் நீலிக் கண்ணீர் என்று சொல்லிள் வருபவர். நீலிக்கும் கண்ணீருக்கும் என்ன தொடர்பு ?

பெளத்த சமண சித்தாந்தங்களுக்கு மாற்றாக, அதாவது சூனிய வாதத்திற்கு மாற்றாக ஆதிசங்கரர் முன்மொழிந்த அத்வைத கோட்பாடுகள் மேலோங்கி இருந்த நேரத்தில் சமணத் துறவிகள் மிகவும் துண்புறுத்தப்பட்டனர். சமணர்களின் வாதம் 'உலகில் எதுவுமே தான் தோன்றி கிடையாது, பெருட்களின் உருமாற்றம் தான் நிகழ்கிறது' என்பதே. மலை தேயும் போது மண் ஆகும், மண் இறுகும் போது மலையாகும். அதில் இருக்கும் துகள்களின் தன்மை மாறும் ஆனால் அவை முற்றிலும் ஒருக்காலமும் அழிந்துவிடாது என்பதே, அனைத்தையும் கடவுள் படைத்தார் என்கிற கோட்பாடுகளை ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

இவை முற்றிலும் அத்வைத,துவைத தத்துவங்களுக்கு எதிரானவை, ஏனென்றால் படைப்பு என்பது தான்தோன்றி (சுயம், சுயம்பு, வெளிப்பாடு) இறைவனின் சித்தத்தால் ஏற்படுவது என்பதே இவர்களின் நம்பிக்கை. சமணர்களும் அத்வைதிகளும் வாதத்தில் ஈடுபட்ட போது, அத்வைதிகள் எல்லாம் இறைவன் அல்லது பரம்பிரம்மத்தின் சித்தம், தான் தோன்றி என்றார்கள். நீலிகேசி அதை பலமாக மறுத்தாள், ஆதாரம் கேட்டாள், அவர்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வந்தார்கள், அப்பொழுது நீலிகேசி வெகுண்டு 'நடு இரவில், நடுவீதியில் எவருக்கும் தெரியாமல் ஒருவர் மலம் இருந்து சென்றால், காலையில் எழுந்து பார்க்கும் நீங்கள் அதைத் தான்தோன்றி, கடவுள் படைத்தது என்று சொல்லுவீர்களா ?' என்று ஆவேசமாகவே கேட்டாள். இதற்கு மேல் இவளிடம் வாதத்தில் வெல்லவே முடியாது என்பதால் அத்வைத சைவ ஆதாரவு அரசரின் ஆதரவுடன் அவளை சிறைப்பிடித்து மரணதண்டனைக் கொடுக்கப்போவதாக இழுத்துச் சென்றார்கள். அப்போது அவள் கண்ணீர் விட்டு சபித்திருக்கிறாள். அவளது கண்ணீரைப் பார்த்து...'எதற்கும் கலங்காத நீலியே கண்ணீர் வடிக்கிறாள் பார்...ஹஹ்ஹஹ் ஹா' என்று கேலி செய்து பலமாக சிரித்திருக்கிறார்கள். அதற்கு பிறகு சமணவாதங்களின் போதெல்லாம் நீலியின் கண்ணீரை குறிப்பிட்டு தூற்றுவதே வழக்காக மாறி, பழிப்பதற்கு பயன்படுத்தும் ஒரு பதமாக மாறியது.

உண்மையில் நீலி பயந்து போயோ, பொய் சொல்லிவிட்டதாக நினைத்தோ கலங்கவில்லை, உண்மையை உணராத மூடர்களிடம் சிறைபட்டுவிட்டேனே என்றே கண்ணீர்விட்டு வருந்தினாள். சமண மதப் பெண் வீரத் துறவியை பழிக்கும் விதாமாக இழித்துக் கூறிய சொல் நாளடைவில் போலியாக அழுபவர்கள் குறித்த பழிப்புச் சொல் ஆகியது. 'நீலி' என்ற அடைமொழியாக மாறி ஒரு சொல் காலம் கடந்து நிற்பதால் இவை வரலாறு வழி வந்தவை என்று சொல்லிவிட முடியும்.

******

பொதுவாக இனிப்பு, உப்பு சுவை சேர்ந்திருந்தாலும் இளநீரும், கண்ணீரும் தூய்மையானது என்றே சொல்லுவார்கள், ஏனெனில் வெளி மாசு அவற்றில் கலந்திருக்காது, கண்களில் மாசு சேரும் போது அதை அகற்ற சுரக்கும் கண்ணீர் தூய்மையற்றதாக இருக்க முடியாது. இவை எதிர்பாராமல் தேவையான நேரத்தில் சுரக்கும் கண்ணீர். உணர்வின் போது சுரக்கும் கண்ணீர் அதன் புனித ,தன்மை தூய்மை குறித்த புரிதலுடன் எண்ணத்தில் கட்டுப்பாட்டுடனேயே அதனை வெளிப்படுத்த வேண்டும். என்றுமே அழாத ஒருவர் அழும் போது அவரது சோகத்தின் அளவுகோல் கண்ணீர் தான் என்பதால் அதன் உண்மைத்தன்மையை மேலும் உயர்த்திக் கூற கண்ணீர் புனிதமானது என்று சொல்லப்படுகிறது. மன ஈரத்தின் உருதான் கண்ணீர். கண்ணீரை பிடிவாதத்தின் அளவு கோலாக்கி தொட்டதற்கு கண்ணீர் சுரப்பவர்களின் கண்ணீர் தூற்றப்படுகிறது. மன எண்ணத்திற்கு மாற்றாக வெளிப்படையாக கண்ணீர் வரும் போது அவை போலிக் கண்ணீர் என்று சொல்லப்படுகிறது. போலிக் கண்ணீர் சுரக்கும் போது முகமே காட்டிக் கொடுத்துவிடும். எனென்றால் அவை மனத்தூண்டிதலால் இயல்பாக ஏற்படுபவையே அல்ல. இறைக்காக ஏங்கி எவரும் சிக்கவில்லை அல்லது சிக்கிவிட்டது என்பதற்காக முதலலகள் வடிக்கும் கண்ணீரே முதலைக்கண்ணீர் எனப்படுக்கிறது. அதாவது தன்னலம் சார்ந்து வெளிப்படும் கண்ணீர் முதலைக்கண்ணீர் எனப்படுகிறது. நெடும் தொடரைப் பார்த்துவிட்டு தாய்குலங்களும் சில ஆண்களும் கூட கண்ணீர் வடிப்பது 'குறுகிய கால மெகா சீரியல்' அல்லது 'தேவையற்ற' கண்ணீர் என்று சொல்லலாமா ? ஏனென்றால் இந்த கண்ணீரினால் தொடர் முடிந்த அடுத்த நிமிடமே மன பாதிப்புகள் எல்லாம் மறைந்து போய்விடும். ஆனந்த கண்ணீர் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. பளார் என்று கன்னத்தில் அரை விட்டு அடுத்த நிமிடமே... 'என் செல்லாம் இல்லே...' கணவர் பல்லிளித்து மன்னிப்புக் கேட்கும் அடுத்த நிமிடமே வலியால் வரும் கண்ணீர் ஆனந்த கண்ணீர் ஆகிவிடும். இதுப்போல் ஆனந்த கண்ணீருக்கு நிறைய காட்டுகள் வைக்கலாம். சபை நடுவில் போற்றப்படுபவர்கள் எவருக்குமே முதல் முறை உணர்ச்சிப் பெருக்கால் வருவது ஆனந்தக் கண்ணீர்..

கண்ணீரின் புனிதத் தன்மை கருத்தி தண்ணீரைப் போலவே வீணாக்கமல் பயன்படுத்த வேண்டும் என்றே சொல்கிறார்கள்

***

யாரையும் பழிப்பதற்க்காக 'நீலிக் கண்ணீர்' என்ற பதத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஒரு பெண்ணை, ஒரு சமயத்தை சாடுவதற்காக வலிந்து உருவாக்கியச் சொல் அது. அந்த அநீதிக்கு நாமும் துணை போகவேண்டாம். ஏனென்றால் நீலி போலிக் கண்ணீர் வடிக்கவில்லை, நீதியின்மைக்கு எதிராக வருத்தப்பட்டுதான் கண்ணீர் விட்டாள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்