பின்பற்றுபவர்கள்

21 டிசம்பர், 2007

நஒக : அச்சில் வார்த்த பதுமை !

தாமோதரன் ஐம்பது வயதை கடந்தவர், ஈஸிசேரில் சாய்ந்தபடி, யோசனை செய்து கொண்டிருந்தார். அவர் மனதில், அவளைப் பற்றிய நினைவுகளால், கவலைகள் அழுத்திக் கொண்டிருந்தது. மூன்றாண்டுக்குமுன் முடிந்து போன உறவுவை நினைத்து, பல நாட்கள் தூக்கத்திலிருந்து விடியற்காலை வரை வெறித்துப் பார்த்தபடி முழித்துக் கொண்டிருப்பார். அவருடைய மனைவி கமலாவிற்கும் தெரிந்தது தான். அவள் இருக்கும் நிலையில் கணவருக்கு ஆறுதல் சொல்வது என்பது அவர் மனதை தூண்டிவிடுவது மாதிரி ஆகிவிட்டால் ? என்று பேசாமல் அமைதியாகி விடுவாள்.

எத்தனை நாளைக்குத் தான் இப்படி மனதை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது, ஒரு கடைத்தெருவில் எப்போதோ கண்ணில் பட்டவளாக ... கடைசியாய் பார்த்து கிட்டத்தட்ட மாதக்கணக்கில் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது , அவளுக்கு ஒரு வயதுள்ள குழந்தை என்று யாரோ ஒரு நண்பர் சொன்னதை கேள்விபட்டதிலிருந்து ஒரே தவிப்பாக இருக்கிறது.

"என்னப்பா... தாமோதரா, யாரு சொல்லனும்னு எதிர்பார்கிற, ஆனது ஆகிப் போச்சு...உன்னோட வாரிசை நீ போய் பாக்கறத்துக்கு எதுக்கு, யாருக்காக தயங்குற, அது உன்னை மாதிரியே அச்சு அசலாக இருக்காமே" என்று அவருடைய நண்பர் தினமும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்.

அவர் சொல்வதில் ஞாயம் இல்லாமல் இல்லை, அவருக்கும் பார்க்க வேண்டுமென்று ஆசைதான், அவளை ஒரேடியாக உன் உறவே வேண்டாமென்று தலைமுழுகியதையும் மறக்க முடியவில்லை. தாமோதரன் ரொம்ப பிடிவாதம் கொண்டவர். அவர் தீர்மானித்தால் உடனே செயல்படுத்திவிடுவார், எப்படியோ அவரின் இந்த முடிவுக்கு, அவர் மனைவி கமலாவும் அதிகம் பாதிக்கப்பட்டவள் என்பதால் அவளை நினைக்கும் போதெல்லாம், 'துரோகி' என்றே நினைத்து அமைதியாக இருந்தாள். ஆனால் அவளுக்கும் இந்த வாரிசு விசயம் தெரியவந்ததும், தன் கனவரின் மனநிலை குறித்து கவலை அதிகமானது.

இன்று எப்படியும் ஒரு முடிவு எடுத்துவிடுவது என்று நினைத்துக்கொண்டு அலுவலகம் புறப்பட்டார். நாளெல்லாம் புதுவாரிசின் நினைவிலேயே
கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மனைவியை எப்படியும் சமாளித்து விடலாம், நியாயமாக எடுத்து சொன்னால் புரிந்துகொள்வாள், ஒரு வாராக தன்னை தேற்றிக்கொண்டு 'இப்போ அவ எங்கே இருக்கிறா ?' என்று நண்பரிடம் இடம் விசாரித்துவிட்டு...அவளின் வீடு தேடிசென்றாள்.

மெதுவாக அக்கம், பக்கம் பார்த்துவிட்டு, வீட்டிற்குள் சென்றார். கதவு சாத்தி இருந்தது...அச்சத்துடன் அதன் மேல் கைவைக்க ... தாள்பாள் போடாமல் இருந்ததால் திறந்து கொண்டது...உள்ளே சென்றார்... வீட்டின் கூடத்தில் யாரும் இல்லை, குளியல் அறையில் குளிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. தூளியில் குழுந்தை தூங்கிக் கொண்டிருந்தது, மெதுவாக தூளியை விளக்கி எட்டிப் பார்த்தார். அப்படியே தாமோதரரை உரித்துவைத்து அச்சில் வார்த்த பதுமை மாதிரி அழகாக இருந்தது. அந்த நிமிடம் அவருடைய அனைத்து உணர்வுகளும் எழுந்தது, பாசமுடன் குழந்தையின் தலையில் மெல்லமாக வருடிவிட்டு, பூப்போன்று தூக்கி உச்சியில் முத்தமிட்டுவிட்டு...மீண்டும் படுக்க வைத்துவிட்டு... சத்தமில்லாமல் வெளியேறினார்.

அன்று இரவு இந்த விசயத்தை எப்படி மனைவியிடம் சொல்வது, எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பியிருந்தாலும், ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியில் மெதுவாக படுக்கையை விட்டு வெளியே வந்து ஈஸிச்சேரில் அமர்ந்தார். மெதுவாக கேட்ட காலடி சத்தம் நெருங்க திரும்பிபார்த்தார்.

"என்னங்க, நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன், சரியான்னு சொல்லுங்க, மனசை புடுங்குது" என்றாள் அவர் மனைவி

"என்ன விசயம் கேள்விபட்டம்மா?"

"நீங்க அவவீட்டுப் பக்கம் போனத பாத்ததா எதிர்வீட்டுக்காரங்க சொன்னாங்க..."

சற்று அதிர்ச்சியுடன், மெதுவாக ஆரம்பித்தார்,

"கமலா, நான் போனது உண்மை தான்" என்றார் தாமோதரன். கணவரை ஆச்சர்யமுடன் பார்த்தாள் கமலா, தாமோதரன் தொடர்ந்து,

"இவ்வளவு நாள், வைராக்கியமா இருந்தது உண்மை தான், ஆனால் எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே இருக்கமுடியும், எனக்கும் வயச்சாயிடுச்சி"

மேலும் தொடர்ந்தார்.

"பாரு கமலா, நம்ப மகள், காதல்னு, அவளா தன்னுடைய வாழ்கையை அமைத்துகிட்டத நாம ஏத்துக்காம அவளை அவமானப் படுத்தியதும்,
நாம அவளை விலக்கி வைத்து, எங்கமேல் நம்பிக்கை இல்லாமல் எங்களுக்கு ஒரு துரோகத்தை பண்ணிட்டியே ...எங்க மூஞ்சில இனி முழிக்காதே என்று நம்மகிட்ட ஆசி வாங்க வந்த அவளையும், அவள் கணவனையும் துரத்தியதை நினைத்து நினைத்தே... ஊர்வாயிக்கு பயந்து இவ்வளவு நாள் மெளனமாக, புழுங்கி வாழ்ந்தது போதும்..."

******* இன்னும் வேண்டுமானால் தொடர்ந்து படிக்கலாம் ********

"அவளை நாம தண்டிக்கல, நாமதான் நமக்கு தண்டனை கொடுத்துகிட்டு இருக்கோம், மூன்று வருடமாக அவள் செத்தாளா, இருக்காளான்னு தெரியாமல் வைராக்கியமாக இருந்துவிட்டோம், நமக்கு பேரன் பொறந்து இருக்கிறான், அவனுக்கு வயசு ஒண்ணாகுதுன்னு கேள்வி பட்டதிலிருந்து என்னால அவனை பார்க்காமல் இருக்கமுடியவில்லை. ஊர்வாயிக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆனா நம்ப பேரன் நாளைக்கு வளர்ந்து கேள்விகேட்டால், நம்பளால பதில் சொல்லமுடியாது, அதுதான் என்னோட வைராக்கியமெல்லாம் ஒடைஞ்சி போயிடுச்சு, போயி பார்த்தேன், அப்படியே அவனை அள்ளிக்கனும் போல இருந்தது"

"நாளைக்கு காலையில முதல் வேளையா, நாம ரெண்டுபேரும், போயி நம்ப மகளையும், மருமகனையும் பார்த்துவிட்டு, நம்ப பேரனை நம்ப வீட்டுக்கு அழைத்து கொண்டுவரனும்" என்று சொல்லி கண் கலங்கினார்

"எனக்கும் இந்த விசயமெல்லாம் தெரியுங்க, ஒவ்வொரு நாளும், நீங்கள்படும் அவஸ்தையை பார்த்துகிட்டுதான் இருக்கேன், என்னைக்காவது நீங்க, பிடிவாதத்தை தளர்த்தி, மனம் மாரமாட்டிங்களான்னு காத்துக்கிட்டு இருந்தேன், என் வயித்தில பால வார்த்திட்டிங்க" என்று உணர்ச்சி வசப்ப்பட்டாள் கமலா.

இரண்டு வருடங்களுக்கு பிறகு, மன நிறைவுடன், நாளைய விடியலை எதிர்ப்பார்த்து தூங்கப்போனார்கள் தாமோதரன் தம்பதிகள்.

பின்குறிப்பு : குமுதம் டைப் பழைய கதை படிப்பவர்களுக்கு அர்பணம், இதை எழுதியும் 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. கதையில் வரும் கதை வசனம், பெயர்கள் அனைத்தும் கற்பனையே. ஆனால் இது போன்று நடப்பவைகள் நிஜமானால் நல்லதுதான். இந்த கதை போட்டிக்கு அல்ல.

10 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

கதை நல்லா இருக்கு...
ஆனா நச்சின்னு எந்தத் திருப்பமும் இல்லை...
:))

VSK சொன்னது…

23 - ம் தேதிக்கு இன்னும் 3 நாள் இருக்கு சாமீ!

போட்டுத் தாக்குங்க!:))

கின்னஸ் புக்குல்ல வர்றதா எதுனாச்சும் ப்ளானா?

உங்க கற்பனைவளம் பிரமிக்க வைக்கிறது!

கோவி.கண்ணன் சொன்னது…

// VSK said...
23 - ம் தேதிக்கு இன்னும் 3 நாள் இருக்கு சாமீ!

போட்டுத் தாக்குங்க!:))

கின்னஸ் புக்குல்ல வர்றதா எதுனாச்சும் ப்ளானா?

உங்க கற்பனைவளம் பிரமிக்க வைக்கிறது!
//

வீஎஸ்கே ஐயா,

"நான் சுஜாதாவும் இல்லை பாலகுமாரனும் இல்லை - நன்றி லக்கி லுக்"

எனக்கு கற்பனை வரட்சி ஏற்படும் முன்பே ஊறிய வரை எடுத்து சேமித்துவிட வேண்டியதுதானே என்று முடிவு செய்தேன்.

TBCD சொன்னது…

சொன்ன மாதிரி இது கிளிஷே கதை தான்..ஆனா, குமுதத்திலே வர தகுதியிருக்குதுங்கோ...

TBCD சொன்னது…

இடுகைக்கு தொடர்பில்லாத

TBCD சொன்னது…

சும்மா சொல்லிப்பார்த்தேன்...அப்படி போட்டா போடுறீங்களா இல்லையா என்று...

மங்களூர் சிவா சொன்னது…

//
TBCD said...
சொன்ன மாதிரி இது கிளிஷே கதை தான்..ஆனா, குமுதத்திலே வர தகுதியிருக்குதுங்கோ...

//
REPEATEY

மங்களூர் சிவா சொன்னது…

//
TBCD said...
இடுகைக்கு தொடர்பில்லாத

//
REPEATEY

மங்களூர் சிவா சொன்னது…

//
TBCD said...
சும்மா சொல்லிப்பார்த்தேன்...அப்படி போட்டா போடுறீங்களா இல்லையா என்று...

//
REPEATEY



TBCD மகிழ்ச்சியா?????!!!?!?!?!?!!?

ஜெகதீசன் சொன்னது…

//
மங்களூர் சிவா said...
//
TBCD said...
சும்மா சொல்லிப்பார்த்தேன்...அப்படி போட்டா போடுறீங்களா இல்லையா என்று...

//
REPEATEY



TBCD மகிழ்ச்சியா?????!!!?!?!?!?!!?

//
REPEATEY

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்