பின்பற்றுபவர்கள்

11 ஜூன், 2008

இந்தியாவின் பேங்காக் !

பேங்காக் சுற்றுலா சென்றிருப்பவர்களால் இந்தியாவில் ஒரு நகரை தாய்லாந்த் பேங்காக் உடன் ஒப்பிட முடியும். ஆம்...! கேரளாவில் இருக்கும் கொச்சி - எர்ணாகுளம் தான் சிறிய பேங்காக் நகர் போலவே இருக்கிறது. குட்டி குட்டி தீவுகள், படகு பயணம், படகு போக்குவரத்து என கேரளாவின் கொச்சின் நகரம் பேங்காக் நகரைப் போலவே இருக்கிறது.

கொச்சி எர்ணாகுளத்தின் படகு துறையில் இருந்து பல்வேறு தீவுகளுக்கு படகில் அழைத்துச் செல்கிறார்கள், தனிப்பட்ட படகென்றால் 400 ரூபாய் வரை நான்கு மணி நேரப்பயணத்திற்கு வாங்குகிறார்கள். இதைத் தவிர்த்து பல்வேறு தீவுகளுக்கு அரசு போக்கு வரத்து (KRTC) படகுகளும் விடப்பட்டுள்ளன, சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு பெரும் படகும் 150 பேர்வரை ஏற்றிக் கொண்டு அக்கரை செல்கிறது. பேருந்த்தில் சென்றால் 1 மணி நேரம் வரை சுற்றிக் கொண்டு செல்லக் கூடிய தீவுகளை படகு பயணம் அரை மணி நேரத்திலேயே அடைந்துவிடுகிறது. படகு சவாரி கட்டணமும் 3 - 5 ரூபாய் என மிகவும் குறைந்த கட்டணம் தான்.


பால்காட்டி தீவு

பால்காட்டி அரண்மனை வளாகம்

எர்ணாகுளம் படகுதுறையில் இருந்து பால்காட்டி என்னும் தீவுபகுதிக்குச் சென்றோம். 3 ரூபாயில், 5 நிமிட படகு பயணம் தான் அது ஒரு சுற்றுலா தளம், அரண்மனையை ஓட்டல் அறைகளாக மாற்றி சுற்றுப்புரத்தை அழகுற பராமறித்துவருகிறார்கள்.

அதைத் தவிர்த்து யூதர்கள் வந்து இறங்கி ஆதிக்கம் செலுத்திய ஒரு தீவுக்குச் சென்றோம், அங்கு 500 ஆண்டுகளுக்கும் பழமையான யூத தேவலயம் ஒன்று இருந்தது.

தேவலயம் உள் அமைப்பு

பீங்கான் ஓடுகளால் ( டைல்ஸ்) பொருத்தப்பட்ட தரைகள் கவனம் பெற்றன. காரணம் ஒவ்வொரு சதுர ஓடுகளில் வரையப்பட்ட படங்கள் ஒன்று போல் இருந்தாலும் அங்கு பதித்திருக்கும் 2000க்கும் மேற்பட்ட ஓடுகள் ஒவ்வொன்றின் படமும் சிறிய அளவாவது ஒன்றோடு ஒன்று மாறுபட்டது (unique design)

கேரள மக்கள் மற்ற மாநிலங்களில் தேனீர் கடை வைத்திருப்பது போலவே கொச்சியில் பல சாலை ஓர தள்ளுவண்டி கடைகளில் தமிழர்கள் வடை, போண்டா, பஜ்ஜி செய்து விற்கிறார்கள். கேரளாவில் மக்கள் ஓரளவு சாதிவேற்றுமையின்றியே பழகுகிறார்கள்.


மேலும் ஒரு சுற்றுலா தளமாக கொச்சின் அரண்மனையை பார்த்தேன். சிறிய மலைபோன்ற உயர இடத்தில் கொச்சியை ஆண்ட மன்னர்களின் நினைவுப் பொருள்களையும், அக்கால சின்னங்கள், வடிவங்கள், பொருள்கள் என அதை ஒரு அரும்காட்சியகமாக மாற்றி வைத்திருந்தார்கள்,

(கிழேயிருந்து மேலே)

(மேலிருந்து கீழே)

சுற்றிலும் பூங்காக்களில் பெங்களூரு லால்பாக் போன்று மறைவிடங்களாக தேடிச் சென்று அமர்ந்து கொண்டிருக்கும் காதலர்களின் நிழல்கள் தெரிந்தன. சென்னையை ஆங்கிலேயர்கள் கையாண்டது போலவே கொச்சின் (சமஸ்தானம்) டச்சுக்காரர்களின் கைவசம் இருந்ததை வரலாற்றுச் சான்றுகள் காட்டுகின்றன.

ஜூராசிக் பார்க்

மான் கண்டேன்...மான் கண்டேன்

தென்னிந்தியாவில் மற்றொரு சிறந்த சுற்றுலா தளமாக கொச்சின் இருக்கிறது என்றால் மிகை அல்ல. நமது மாநிலங்கள் ஒன்றுபட்ட இந்தியா என்ற அமைப்பில் இருப்பதால் தான் என்னவோ சிறப்பாக விளம்பரப்படுத்தவோ, அழகுபடுத்தவோ ஒரு அளவுக்கு மேல் முடியவில்லை. அந்ததந்த மாநில வளர்சிக்காக சுற்றுலா தளங்கள் சிறப்பாக பராமறிக்கப்பட்டால் உலக சுற்றுலா தளங்களுடன் போட்டியிட முடியும். என்ன செய்வது எந்த மாநிலத்தில் இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் சுற்றுலாத்தளம் இதற்கு மேல் இருக்க முடியாது என்றே பெருமூச்சுவிட வைக்கிறது. இந்தியாவிலேயே மாநில தனிக்கொடி கொண்டுள்ள கர்நாடக மாநிலம் மட்டுமே சற்று விழித்துக் கொண்டு தங்கள் சுற்றுலாத் தளங்களை மிகவும் சிறந்த முறையில் பலரை கவரும் வண்ணம் மாற்றி அமைத்துக் கொண்டு வருகின்றனர். மற்ற மாநிலங்கள் இந்தியாவில் அங்க(ஹீன)மாகவே பரமாறிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுலா துறையை மேம்படுத்தினாலே, இந்தியா வல்லரசு கனவை விட முதன்மையான பொருளாதார தன்னிரவு அடைந்துவிட முடியும். மெத்தனத்தால் இன்னும் பல இடங்கள்...பராமரிப்பின்றி பாரா மரிப்பில் இருக்கின்றன.

3 கருத்துகள்:

இக்பால் சொன்னது…

'<"தள்ளுவண்டி கடைகளில் தமிழர்கல் வடை">,

தமிழர் கல்வடையை நான் பார்த்தில்லை. எப்படி வடையில கல் இருக்குமா? அல்ல்து கல்லுல வடை இருக்குமா?
ஹி..ஹி.. சும்மா

மோகன் கந்தசாமி சொன்னது…

///பராமரிப்பின்றி பாரா மரிப்பில் இருக்கின்றன.///
யாரும் பாராமல், கண்டுகொள்ளாமல் இருப்பதால் மரிப்பில் இருக்கின்றன. வார்த்தை சிலம்பம் நன்று.

சரி, சென்னை போன்று சிங்காரமாக ஏதேனும் உண்டா அங்கே?.....
..என்ன சிரிக்கிறீர்கள்?...சென்னை சிங்காரம் இல்லையா?

முரளிகண்ணன் சொன்னது…

படங்களும் விவரிப்பும் அருமை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்