பின்பற்றுபவர்கள்

6 நவம்பர், 2008

மு.கண்ணப்பனை மட்டும் தான் தூக்கில் இட வேண்டுமா ?

வைகோவும், மு.கண்ணப்பனும் தனித் தமிழ்நாடு பிரிவினை பற்றி பேசிவிட்டார்கள் அவர்களை பொதுவில் நிறுத்தி தூக்கில் போடவேண்டாமா ? நாமெல்லாம் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம், இந்திய தேசியத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம், வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்கள் என்று உலக்குக்கே பாடமாக இருக்கிறோம், நெய்யில் பொறித்தெடுத்த சொற்களை தேனில் தோய்த்து நயமாக பேசும் தேசியவாதிகளின் பேச்சைக் கேட்கும் சில ஆட்டு மந்தைகள் உணர்ச்சிவசப்பட்டு....."ஆம் வைகோவையும், கண்ணப்பனையும் நிர்வாணமாக்கி தூக்கில் போடலாம் என்று சொல்வது சரியே" என்கிறார்கள்.

தேசிய வியாதிகளின் தங்கள் தோல்களின் மீது பலமான கட்டுப்போட்டு வியாதியை மறைத்துவிட்டு பேசும் போது நாட்டு நலனில் இவர்கள் தான் எவ்வளவு அக்கரை கொண்டு இருக்கிறார்கள் என்று வியக்க வைத்துவிடுவார்கள். என்னைப் போன்ற சிலருக்கு எதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பாழ்மனது இருப்பதால் தேசியவியாதிகளின் கட்டுகளை மீறி அதன் மீது சீழ்வடிவதும் தெரிந்துவிடுகிறது.

என்ன சொல்ல வருகிறேன் ?

இதே தேசியவியாதிகள் இஸ்லாமியர், கிறித்துவர்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, 'இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்...இஸ்லாமியர்களே, கிறித்துவர்களே இந்தியாவை விட்டு ஓடுங்கள், என்று ஆவேசமாகச் சொல்லுவார்கள். இத்தனைக்கும் இஸ்லாமியர்களோ, கிறித்துவர்களோ வேறு வெளிநாடுகளில் இருந்து வந்தேறியவர்கள் அல்லர். சாதிக் கொடுமைகள் பிடிக்காமல் அதே சமயம் இறை நம்பிக்கையை இழக்க விருப்பமில்லாமல் எங்கிருந்தாலும் இறைவன் ஒன்றுதான் என்றே மதம் மாறிய இந்தியர்கள்.

'இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்' என்று அறைகூவும் தேசியவியாதிகளையும், இந்துத்துவாக்களையும் பிரிவினை பேசுகிறார்கள் என்று அடையாளம் கொடுத்து, இவர்கள் கூற்றுபடி பிரிவினை பேசுபவர்களைத் தூக்கில் போட வேண்டுமென்று நாடு தோறும் கழுமரம் நட்டால், இவர்களின் பிணங்களால் நாறிப்போகும் இந்தியாவே.

ஒருவர் ஒரு கருத்தைப் பேசிவிட்டாரே என்பதற்காக தூக்கில் போடவேண்டும் என்று சொல்லும் தேசியவியாதிகள், முத்து உதிர்க்கும் முன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்வது நல்லது

178 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

சரியான அலசல்.....
மிகவும் ஆழ்ந்த கருத்துக்கள்

கேட்க வேண்டிய கேள்விகள்.

நையாண்டி நைனா சொன்னது…

ஹை... நான் தான்.... முதல்வன்....

நவநீதன் சொன்னது…

"அடி வாங்கபோற பாரு ...."
அப்படீன்னு உங்க நண்பரை பார்த்து சொல்லிவிட்டால், அடித்து விட்டதாக கருதி உங்கள் மேல் கொலை முயற்சி வழக்கு போடுவார்கள் போலிருக்கிறது இந்த தேசிய வியாதிகள்....

என்ன கொடுமை சார் இது.....

வெண்பூ சொன்னது…

நான் உங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன். தனித்தமிழ்நாடு வேண்டும் என்று பேசுவதெல்லாம் சுத்த பேத்தல். தனித்தமிழ்நாடு வந்தால் மட்டும் இவர்கள் இலங்கை பிரச்சினையை தீர்த்துவிடுவார்களா? அப்போதும் இதே கலைஞர், இதே ஜெ.தான்..

அதே போல் மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக இவர்கள் செய்கிற தவறு சரி என்று ஆகிவிடாது. அந்த மனநிலையில் இருப்பதால்தான் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க இயலாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் உங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன். தனித்தமிழ்நாடு வேண்டும் என்று பேசுவதெல்லாம் சுத்த பேத்தல். தனித்தமிழ்நாடு வந்தால் மட்டும் இவர்கள் இலங்கை பிரச்சினையை தீர்த்துவிடுவார்களா? அப்போதும் இதே கலைஞர், இதே ஜெ.தான்..

அதே போல் மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக இவர்கள் செய்கிற தவறு சரி என்று ஆகிவிடாது. அந்த மனநிலையில் இருப்பதால்தான் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க இயலாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம்.//

வெண்பூ,
நானும் இந்த கட்டுரையில் எங்கும் தனித்தமிழ்நாடு கேட்பது சரி என்று சொல்லவில்லை. ஆனால் 'அவர்கள் அப்படி சொல்லிவிட்டார்களே.... தூக்கில் போடவேண்டும்' என்று சொல்பவர்களின் யோக்கிதையைத்தான் சுட்டி இருக்கிறேன்.

Bleachingpowder சொன்னது…

எனக்கு தமிழ் மேல் இருக்கும் பற்றை விட இந்தியாவின் மேல் தான் அதிகம் இருக்கிறது.

//ஒருவர் ஒரு கருத்தைப் பேசிவிட்டாரே என்பதற்காக தூக்கில் போடவேண்டும்//

கருத்தை கூற வில்லை விஷ விதையை மக்கள் மனதில் விதைகின்றனர். அரசாங்கம் நமது வேண்டுகோளை நிறைவேற்றவில்லை என்றால் உடனே தனி நாடு கேட்கும் இந்த மூடர்களுக்காக நீங்கள் பரிந்து பேசுவதில் சிறிதும் நியாமில்லை.

தனி தமிழ்நாட்டை ஆதிரிக்கும் சிலர், அது கிடைத்தால்(நிச்சயமாக கிடைக்காது) அதற்கு பிறகு தமிழ்நாட்டின் மன்னிக்கவும் தனிதமிழ்நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி சிந்தித்து பார்த்திருப்பார்களா.

தனி தமிழ்நாட்டு கேட்டால் என்ன தப்பு என கேட்க்கும் சிலர், தனி நாடு கிடைத்தால் குடிக்க தண்ணீருக்கு எங்கே போவோம், விவசாயத்திற்கு தண்ணீர் எங்கே இருந்து வரும் என்பதை கூட சிந்திக்காத இவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது.

கேட்டால் இந்தியாவிடம் கேட்டு பெருவோம் தரவில்லை என்றால் திரும்பவும் வெளிநாடுகளில் இருந்து ஆயுதம் வாங்கி இந்தியாவிற்கு எதிராகவும் போர் தொடுப்போம்னு பேசுவாங்க. ஆக மொத்தம் இவங்க யாரும் பொது மக்களை எங்கேயும் நிம்மதியாக வாழ விடமாட்டாங்க.

இலங்கை தமிழர்களுக்கு மருத்துவ உதவி செய்யலாம், பொருள் தந்து உதவலாம், அப்பாவி பொது மக்கள் மீது நடக்கும் ராணுவதாக்குதலை நிறுத்த சொல்லி நம் எதிர்ப்பை தெரிவிக்கலாம். இதை தவிர்த்து என்னுடைய பதிவில் வனங்காமுடி கூறியிருப்பது போல், உன் வூடு எரியுதா. இரு என் வீட்டையும் கொளுத்திவிட்டு இரண்டு வீட்டுக்கும் ரெண்டு பேரும் சேர்ந்து அழுவோம் என்பது போல் உள்ளது இவர்கள் செயல். முளையிலேயே வேருடன் பிடுங்கி எரிய வேண்டும் இந்த விஷ களைகளை.

// சில ஆட்டு மந்தைகள் உணர்ச்சிவசப்பட்டு.....//

தமிழ்னு சொன்னாலே உணர்ச்சிவசப்படுவது உங்களை போன்றவர்கள் தான். நான் என்னுடைய கருத்தில் தெளிவாக இருக்கிறேன். என் கருத்தை மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு ஒரு மொழி தேவை அதற்கு நான் தமிழை உபயோகிக்கிறேன். அவ்வளவுதான். மற்ற எந்த மொழியும் தமிழ் மொழியை விட உயர்ந்ததும் அல்ல தாழ்ந்ததும் அல்ல.

தமிழ்,தமிழன்,தமிழன்டா, தமிழ் தான் மூச்சு, பேச்சுனு சொல்லி மக்களிடம் மொழி வெறியை தூண்டுபவர்களிடம் இருந்து நான் விலகி இருக்கவே விரும்புகின்றேன்.

இந்த தலைப்பை பற்றி விவாதிக்கும் போது தயவு செய்யுது இந்துத்துவா, இஸ்லாமியர், மதவாதி என எழுதி பிரச்சனையை தயவு செய்து திசை திருப்ப வேண்டும். அவற்றை வேறொரு பதிவில் விவாதிக்கலாம்.

மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியா வேண்டாம், வெறும் தமிழை பேசுகிறார்கள் என்பதற்காக ஆயுதம் எந்தி போராடும் அமைப்போடு இனைந்து கொள்கிறோம்னு மாதிரி ஒருவன் அறிவிழந்து பேசுகிறான். அந்த கும்பலுக்கு நீங்கள் வக்காலத்து வேறு வாங்குகிறீர்கள்.

நாடு விளங்கீடும்

-ஆட்டு மந்தைகளில் ஒருவன்

கொழுவி சொன்னது…

தனி நாடு கிடைத்தால் குடிக்க தண்ணீருக்கு எங்கே போவோம், விவசாயத்திற்கு தண்ணீர் எங்கே இருந்து வரும் //

:) :) :) :) :) :)
இதற்கு வார்ததையால் பதில் சொல்லி நிர்வாணமாக தூக்கில் தொங்க நான் விரும்பவில்லை.

நையாண்டி நைனா சொன்னது…

/*தனி நாடு கிடைத்தால் குடிக்க தண்ணீருக்கு எங்கே போவோம், விவசாயத்திற்கு தண்ணீர் எங்கே இருந்து வரும் - Bleachingpowder said... */

இப்ப மட்டும் நெரம்பி வழியிதா?????

Sanjai Gandhi சொன்னது…

//இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்//

கண்ணப்பன் மற்றும் வைகோவுடன் சேர்ந்து இவர்களையும் தூக்கில் இட வேண்டும்.

...கண்ணப்பன் , வைகோவை தூக்கில் போட சொல்வதால் நான் ஆட்டுமந்தையா..இல்லை.. தூக்கில் போட வேண்டும் என்று சொல்வதால் நான் தேசியவியாதியா? அல்லது இரண்டுமேவா? .. டிபிசிடி.. :))

Sanjai Gandhi சொன்னது…

//வெண்பூ said...
நான் உங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன். தனித்தமிழ்நாடு வேண்டும் என்று பேசுவதெல்லாம் சுத்த பேத்தல். தனித்தமிழ்நாடு வந்தால் மட்டும் இவர்கள் இலங்கை பிரச்சினையை தீர்த்துவிடுவார்களா? அப்போதும் இதே கலைஞர், இதே ஜெ.தான்..

அதே போல் மற்றவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக இவர்கள் செய்கிற தவறு சரி என்று ஆகிவிடாது. அந்த மனநிலையில் இருப்பதால்தான் லஞ்சத்தையும், ஊழலையும் ஒழிக்க இயலாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம்.//

கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்.. :)

Bleachingpowder சொன்னது…

//இப்ப மட்டும் நெரம்பி வழியிதா?????//

தனி நாடு கிடைச்சா மட்டும் நெரம்பி வழிஞ்சிடுமா.

Sanjai Gandhi சொன்னது…

தனித் தமிழ்நாடு என்னும் பேத்தலுக்கு சிலர் வக்காலத்து வாங்கறத நெனச்சா செமக் காமெடியா இருக்கு.. :))

மோகன் கந்தசாமி சொன்னது…

////எனக்கு தமிழ் மேல் இருக்கும் பற்றை விட இந்தியாவின் மேல் தான் அதிகம் இருக்கிறது./////

இதற்காகவே உங்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும். தமிழ் நாட்டில் தமிழை புறக்கணித்து தேசியம் பேசுபவர்களை நடு ரோட்டில் நிர்வாணமாக்கி தூக்கில் இட வேண்டும்

இந்திய தேசியம் பேசுபவர்களின் அழிச்சாட்டியம் எவ்வளவு அபத்தமானது என்பதை எடுத்துக் காட்டத்தான் அதே அளவு அபத்தத்தை நான் மேற்கண்ட வரிகளில் குறிப்பிட்டேன். மற்றபடி நான் ஒருக்காலும் அப்படிப்பட்ட வாதத்தை எங்கும் வைக்க மாட்டேன்.

////கருத்தை கூற வில்லை விஷ விதையை மக்கள் மனதில் விதைகின்றனர். ////
உடலெங்கும் விஷத்துடன் நாடெங்கும் வளையவரும் சனாதனிகளை மொத்தமாக நாடுகடத்தினால் இதற்கு அவசியம் வராது. இங்கு தமிழை புனிதமாக்கிய கோஷ்டிகளை போல தேசியத்தை புனிதமாக்கும் வெறியர்களை உயிரோடு கொளுத்த வேண்டும். அல்லது வேண்டுமேன்றே கலவரத்தை உண்டு செய்து அவர்களை மாஸ் மர்டர் செய்ய வேண்டும். (அவங்க இஸ்டைலில்...)


////தனி தமிழ்நாட்டை ஆதிரிக்கும் சிலர், அது கிடைத்தால்(நிச்சயமாக கிடைக்காது) அதற்கு பிறகு தமிழ்நாட்டின் மன்னிக்கவும் தனிதமிழ்நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி சிந்தித்து பார்த்திருப்பார்களா.////

ஏன்? இதற்கான சாவி உங்கள் கொண்டையில் இருக்கின்றதா? ஒரு தேசிய இனம் தனியாக பிரிய முடிவு செய்து விட்டால் தேசிய வியாதிகளின் டப்பா டேன்ஸ் ஆடிவிடும். பிறகு உங்களைப்போன்றோர் லோக்கல் தேசியம் பேசி உள்ளூர் அதிகாரத்திற்கு கூழைகும்பிடு போட ஆரம்பித்துவிடுவீர். வரலாறு இதைத்தானே நமக்கு அறியத்தருகிறது.


////தமிழ்னு சொன்னாலே உணர்ச்சிவசப்படுவது உங்களை போன்றவர்கள் தான். நான் என்னுடைய கருத்தில் தெளிவாக இருக்கிறேன். என் கருத்தை மற்றவர்களுக்கு புரிய வைப்பதற்கு ஒரு மொழி தேவை அதற்கு நான் தமிழை உபயோகிக்கிறேன். அவ்வளவுதான். மற்ற எந்த மொழியும் தமிழ் மொழியை விட உயர்ந்ததும் அல்ல தாழ்ந்ததும் அல்ல.////

தமிழகத்தில் இந்திய தேசியம் பேசுபவர்கள் இருக்கிறார்களே ஒழிய, தமிழகம் தவிர்த்த ஏனைய இந்தியாவில் தமிழ் தேசியம் பேசுவோர் இல்லை. தமிழகத்தில் தமிழ் தேசியம் பேசுவது இயல்பானது. இந்திய தேசியம் பேசுவதுதான் உணர்ச்சி வசப்படுவதாகும். அதனால் நீர் உணர்ச்சி வசப்படாமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க முயற்சி செய்யும், சம்ச்சே!

////தமிழ்,தமிழன்,தமிழன்டா, தமிழ் தான் மூச்சு, பேச்சுனு சொல்லி மக்களிடம் மொழி வெறியை தூண்டுபவர்களிடம் இருந்து நான் விலகி இருக்கவே விரும்புகின்றேன்.////

இல்லாவிட்டால் மட்டும் நீர் இங்கு உள்ளோருடன் இரண்டற கலந்து விடுவீரா? எப்பவும் உம்போன்றோர் வாசிப்பது தனி ஆவர்த்தனம் தானே! உண்மையில், நீர் விலகத்தேவையே இல்லை. நாங்கள் உம்மை ஏற்கனவே விலக்கித்தான் வைத்துள்ளோம்.


///இந்த தலைப்பை பற்றி விவாதிக்கும் போது தயவு செய்யுது இந்துத்துவா, இஸ்லாமியர், மதவாதி என எழுதி பிரச்சனையை தயவு செய்து திசை திருப்ப வேண்டும். அவற்றை வேறொரு பதிவில் விவாதிக்கலாம்.////

உண்மையில் இதுதான் இந்துத்துவத்தை விமர்சிக்க ஏதுவான தலைப்பு. தேசிய இனங்களின் டங்கு வாரை தினமும் அறுத்துக்கொண்டிருப்பது இந்த இந்துத்துவம் தானே!

///வெறும் தமிழை பேசுகிறார்கள் என்பதற்காக ஆயுதம் எந்தி போராடும் அமைப்போடு இனைந்து கொள்கிறோம்னு மாதிரி////

அடக் கருமமே! இந்த வரிகளை முன்னமே படித்திருந்தால் மாங்கு மாங்கு -வென கமேன்டேழுதி இருக்க மாட்டேனே! லூசில் விட வேண்டிய கமெண்ட்டுக்கு எதிர் வினையாற்றி நேரத்தை வீணடித்து விட்டேனே!

மோகன் கந்தசாமி சொன்னது…

//////இப்ப மட்டும் நெரம்பி வழியிதா?????//

தனி நாடு கிடைச்சா மட்டும் நெரம்பி வழிஞ்சிடுமா.///

வழியலைன்னாலும் உல்ட்டா ஜால்ரா பார்டிங்க தொல்ல இல்லாம இருக்கும் இல்ல!

Sanjai Gandhi சொன்னது…

//தமிழகத்தில் இந்திய தேசியம் பேசுபவர்கள் இருக்கிறார்களே ஒழிய, தமிழகம் தவிர்த்த ஏனைய இந்தியாவில் தமிழ் தேசியம் பேசுவோர் இல்லை//

தமிழகத்தில் இந்திய தேசியம் தான் பேசுகிறார்களே ஒழிய மராத்தி தேசியம், குஜராத்தி தேசியம் , தெலுங்கு, கன்னட தேசியம் எல்லாம் பேசுவதில்லை. பிறகு தமிழகம் தவிர ஏனைய இந்தியாவில் மட்டும் எதற்கு தமிழ் தேசியம் பேசுவார்கள். அங்கும் இந்திய தேசியம் தான் பிரதானம் மோகன்.

போற போக்குல அடிச்சி விடாதிங்க மோகன்... :)

//தமிழகத்தில் தமிழ் தேசியம் பேசுவது இயல்பானது. அதனால் நீர் உணர்ச்சி வசப்படாமல் கொஞ்சம் அடக்கி வாசிக்க முயற்சி செய்யும், சம்ச்சே!
//

மோகன் கந்தசாமி சொன்னது…

///ஒழிய மராத்தி தேசியம், குஜராத்தி தேசியம் , தெலுங்கு, கன்னட தேசியம் எல்லாம் பேசுவதில்லை. பிறகு தமிழகம் தவிர ஏனைய இந்தியாவில் மட்டும் எதற்கு தமிழ் தேசியம் பேசுவார்கள்///

பேசுவது இல்லை. பேசுவது லாஜிக்கும் இல்லை. நான் பேசச்சொல்லவும் இல்லை. அதே சமயத்தில் இங்கு தமிழ் தேசியம் பேசினால் நடு ரோட்டில் தூக்கில் போடுவேன் என்று பிணாத்தினால் சட்டத்திற்கு உட்பட்டு தேசியத்தை டாரை கிழிக்க நான் தயங்க மாட்டேன்.

///அங்கும் இந்திய தேசியம் தான் பிரதானம் மோகன்.////

"மேரா பாரத் மாக்கான்" என்று தெருவில் சூலாயுதத்தை தூக்கிக் கொண்டு தலை தெறிக்க ஓடுவது (பிஜேபி, ஆர் எஸ் எஸ், ஏனைய இந்துத்துவா நான்சென்ஸ் -கள் போல), ஒரு இனத்தின் நலன் பாதிக்கப்படும் போது வாய்மூடி அரசியல் செய்வது (காங்கிரஸ் போல) என தேசியத்தை எங்கு வேணாலும் கார்பொரேட் இஸ்டைலில் ஊட்டி ஊட்டி வளர்க்கட்டும். ஆனால் இங்கு அந்த இஸ்டைல் தேசியம் பிரதானம் இல்லை. இங்கும் தேசியம் உள்ளது. அது கன்ச்டிடூஷன் சொல்லும் தேசியம். கலாச்சாரம் சொல்லும் இந்து தேசியமோ, பிஜேபியினர் சொல்லும் கொண்டை தேசியமோ அல்ல.

///போற போக்குல அடிச்சி விடாதிங்க மோகன்... :)///
சஞ்சய், நான் பேசுவது யாதென தெரியாமல் எப்போதும் பேசுவதில்லை. போற போக்கில் அடிச்சி விடும்போதும் அப்படித்தான். :-)))(ஆமாம்!, விஷயத்தை முழுசாக விவாதிக்காமல் லேசாக தொட்டு விட்டு செல்வதைத்தான் போற போக்கில் அடித்து விடுவது என்று சொல்கிறீர்கள், சரியா? நான் கூட வேற என்னமோன்னு நெனச்சிட்டேன்!)

Sanjai Gandhi சொன்னது…

//(ஆமாம்!, விஷயத்தை முழுசாக விவாதிக்காமல் லேசாக தொட்டு விட்டு செல்வதைத்தான் போற போக்கில் அடித்து விடுவது என்று சொல்கிறீர்கள், சரியா? நான் கூட வேற என்னமோன்னு நெனச்சிட்டேன்!)
//

ச்சிச்சி.. வாட் எ பேட் திங்கிங்.. :)))

மோகன்.. நாம இதெல்லாம் தனியா பேசிக்கலாம்பா :))

கோவியார் மாதிரி “நல்ல” பிள்ளை பதிவுல நோ ஆபாச திங்கிங் :))))

நையாண்டி நைனா சொன்னது…

/*எனக்கு தமிழ் மேல் இருக்கும் பற்றை விட இந்தியாவின் மேல் தான் அதிகம் இருக்கிறது*/

மராத்திய மாநிலத்தில், மராத்தி மாநிலம் மராத்தி மக்களுக்கே என்று சொல்கிறாரே ஒருவர் அவரை என்ன செய்ய?
பீகாரிலிருந்து தேர்வு எழுத வந்த மாணாக்கர்களை அடித்து உதைத்தார்களே அதற்கென்ன உங்கள் பதில்....

நினைவு கூறுமுகமாக ஒன்று.... இங்கே யாரும் தமிழ்நாட்டை பிரித்து கொடு என்று யாரும் கேட்கவில்லை.

Bleachingpowder சொன்னது…

////////இப்ப மட்டும் நெரம்பி வழியிதா?????//

தனி நாடு கிடைச்சா மட்டும் நெரம்பி வழிஞ்சிடுமா.///

வழியலைன்னாலும் உல்ட்டா ஜால்ரா பார்டிங்க தொல்ல இல்லாம இருக்கும் இல்ல!//

அது சரி அப்புறம் குடிக்க தண்ணீர் இல்லாம எவ்வளவு நாள் உயிரோடு இருக்க முடியும்னு தெரியுமா உங்களுக்கு. இப்பவே கர்நாடகாவும்,கேரளாவும் தண்ணீர் தர மாட்டேங்குறாங்க, இதுல தனி நாடு வேற கேட்டு வாங்குனா அப்புறம் தாகமெடுத்தா எதை குடிப்பீங்க.

இல்லை தண்ணீர் குடிகாமலே உயிர் வாழவது எப்படினு புலிகள் எதாவது கண்டு பிடித்துள்ளார்களா?

நையாண்டி நைனா சொன்னது…

/*இப்பவே கர்நாடகாவும்,கேரளாவும் தண்ணீர் தர மாட்டேங்குறாங்க */

அப்படின்னா... இந்திய தேசியத்தை அங்கே போய் பாடம் நடத்துங்க..... எங்களுக்கு எல்லாம் தெரியும்...

Bleachingpowder சொன்னது…

//மராத்திய மாநிலத்தில், மராத்தி மாநிலம் மராத்தி மக்களுக்கே என்று சொல்கிறாரே ஒருவர் அவரை என்ன செய்ய?
பீகாரிலிருந்து தேர்வு எழுத வந்த மாணாக்கர்களை அடித்து உதைத்தார்களே அதற்கென்ன உங்கள் பதில்....//

இதில் என்ன சந்தேகம் அவர்களையும் இப்படிதான் தண்டிக்க வேண்டும். காஷ்மீர் மாநில மக்களை தவிர இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் யார் பிரிவினை குரல் எழுப்பினால் அவர்களுக்கும் இதே தண்டனையை இந்திய அரசு அளிக்க வேண்டும்.

//நினைவு கூறுமுகமாக ஒன்று.... இங்கே யாரும் தமிழ்நாட்டை பிரித்து கொடு என்று யாரும் கேட்கவில்லை.//

நீங்கள் பேப்பர், டீவி பார்க்கும் பழக்கம் உண்டா நைனா? மு.கண்ணபப்பனின் உரையை ஏறத்தால எல்ல பத்திரிக்கைகளும் வெளியிட்டிருந்தது.

இதுவரை அவர் அப்படி கூறவில்லை என்று அவரை ஆதரிப்பவர்களே கூறவில்லை. அவர் பேசின உரையின் சுருக்கம் இது தான். "மதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், மதிமுக அவைத் தலைவர் மு கண்ணப்பன், தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வந்தே தீரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடு மலரும் என்று பேசினார்."

இதற்கென்ன சொல்கிறீர்கள் நையாண்டி நைனா?

Bleachingpowder சொன்னது…

//நையாண்டி நைனா said...
எங்களுக்கு எல்லாம் தெரியும்...//

இப்ப தெரியுது உங்களுக்கு எவ்வளவு தெரியுதுனு.

மோகன் கந்தசாமி சொன்னது…

/////இல்லை தண்ணீர் குடிகாமலே உயிர் வாழவது எப்படினு புலிகள் எதாவது கண்டு பிடித்துள்ளார்களா?////

மிஸ்டர் பிளீச்சிங், முதலில் புலிகள், ஈழம், இலங்கை போன்ற விசயங்களை எல்லாம் நீர் பேசாதீர். உமக்கு அதுபற்றி ஏதும் தெரியாது என்பது தெள்ள தெளிவு. (இல்லை, புலிகளின் பின்புறத்தை நோன்டிக்கொண்டுதான் இருப்பேன் என்றால், தாராளமாக நோன்டுங்கள், நான் அதற்கு பதிலளிக்கப் போவதில்லை).

///அது சரி அப்புறம் குடிக்க தண்ணீர் இல்லாம எவ்வளவு நாள் உயிரோடு இருக்க முடியும்னு தெரியுமா உங்களுக்கு. இப்பவே கர்நாடகாவும்,கேரளாவும் தண்ணீர் தர மாட்டேங்குறாங்க, இதுல தனி நாடு வேற கேட்டு வாங்குனா அப்புறம் தாகமெடுத்தா எதை குடிப்பீங்க.////

இப்ப நீர் எத குடிக்கிரீர் -ன்னு சொல்றீரா? ஏன்னா தண்ணி இப்பவும் வெளியிலிருந்து எவனும் கொடுக்கறதில்ல. இஸ்ரேல் -னு ஒரு நாடு இருக்குல்ல, அங்க என்ன நெலமைன்னு கூகுல் பண்ணி பார்ப்பீராக! எல்லாம் சரி, இப்ப தனி நாட்ட பத்தி நீர் ஏன் இவ்வளவு கவலை படரீர்? அப்படி கேட்டு, பரபரப்பை உண்டு பண்ணி, ஈழப்பிரச்சினையை பின்னுக்கு தள்ளிய இஸ்கூல் பசங்களை தூக்கி உள்ள போட்டாச்சு அல்லவா?(அந்த கேஸ் கோர்ட்டில் நிற்காது என்பது வேறு விஷயம், சட்டம் இப்படி பேசுவதை தடை செய்யவில்லை, பேசி கூட்டம் சேர்ப்பதை தான் தடை செய்கிறது) பதிவு பேசும் விஷயத்தை மட்டும் பேசுவோமா? தனி நாட்டை கோவியும் ஆதரிக்கவில்லை. நானும் ஆதரிக்க வில்லை. இங்கு நாம் கண்ணப்பனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத்தானே பேசுகிறோம்?. அதுபோல் இந்துத்துவா கோஷ்டிகளுக்கும் இப்படி ஒருவாட்டி அநீதி இழைப்பது பற்றி விவாதிப்போம். அல்லது இந்த அநீதி யாருக்கும் நடக்கூடாதேன்பதற்காக ஏதாவது பேசுவோம்.

அதைவிடுத்து, தனி நாட்டை பற்றியோ, ஈழம் பற்றியோ, புலிகள் பற்றியோ வால் வால் என கத்திக்கொண்டிருக்க வேண்டாம்.

மோகன் கந்தசாமி சொன்னது…

/////அப்படின்னா... இந்திய தேசியத்தை அங்கே போய் பாடம் நடத்துங்க....///

அங்க போய் நடத்தினால் டவுசர அவுத்து கைல கொடுத்துடுவாங்க அல்லவா அந்த இந்திய பிரஜைகள். ஜனநாயகம், டீசன்சி, ஏனைய தேசிய இனத்தை மற்றும் மொழியை மதித்தல், பிறரின் உடலுக்கும், பொருளுக்கும் வியாபாரத்திற்கும் ஊறு விளைவிக்காமை என கன்ச்டிடூசன் ஒழுங்காக பின்பற்றப்படும் வெகு சில மாநிலங்களில் தமிழகம் ஒன்று. அதனால் இங்குதான் தேசிய பருப்பை வேக வைக்கும் முயற்சிகள் செவ்வனே நடைபெறும். மேலும், கூலி வாங்காம மாரடிக்கும் கோஷ்டிகளும் இங்கு அதிகமல்லவா? (அதற்கும் சட்ட அனுமதி உண்டு! சட்டத்தின் ஆட்சிதான் எப்போதும் இங்கே!)

கோவி.கண்ணன் சொன்னது…

மோகன்,

'அடிச்சி' ஆடுறிங்க. நான் மட்டும் ஒத்தையாளாக ஆடவேண்டி இருக்குமே என்று நினைத்தேன். தட்டச்ச கைவலிக்குமே என்ற சலிப்பு இருந்தது. அந்த குறையை போக்கிட்டிங்க. பதில்களெல்லாம் சூப்பர் சிக்ஸ்.

முடிந்தால் கருத்துக்களை தொகுத்து தனிப்பதிவாகப் போடவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

மோகன்,

தேசியவியாதிக் கட்சியை சேர்ந்த இடையூறப்பாதான் ஒக்கேனக்கல்லில் திருட்டுத்தனமாக ஊடுருவி தமிழ் நாட்டுக்கு எதிராக கர்நாடகத்தில் கலவரம் ஏற்படுத்த முயன்று அங்குள்ள தமிழர்கள் சொத்துக்களை சூறையாடினார்கள். அங்கெல்லாம் போய் இந்த தேசியவியாதிகள் கேள்வி எழுப்பியதா என்றும் கேட்டுச் சொல்லுங்க.

Bleachingpowder சொன்னது…

//மோகன் கந்தசாமி said...
இப்ப நீர் எத குடிக்கிரீர் -ன்னு சொல்றீரா? ஏன்னா தண்ணி இப்பவும் வெளியிலிருந்து எவனும் கொடுக்கறதில்ல.//

அப்படியா நான் இத்தனை வருசமா கேரளாவில் இருந்து வரும் தண்ணீரை தான் குடித்து வருகிறேன். சென்னைக்கு கூட ஏதோ ஆந்திரானு ஒரு மாநிலம் இருக்குதாம் அங்கே இருந்து கூட தண்ணீரெல்லாம் வருதாம்.

அப்புறம் இந்த திருச்சி தஞ்சை மக்கள் உபயோகபடுத்தும் நீர் கூட எதோ கர்நாடகாவாம், அங்கே இருந்து தான் அது வருதாம்.

இப்ப நீங்க சொல்லீட்டீங்க இல்ல, இனிமே அதை எல்லாம் நான் நம்ப மாட்டேன்.


//இஸ்ரேல் -னு ஒரு நாடு இருக்குல்ல, அங்க என்ன நெலமைன்னு கூகுல் பண்ணி பார்ப்பீராக!//

இவ்வளவு நேரம் சீரியஸா தானே பேசிட்டு இருந்தோம் இப்ப என்ன தீடீர்னு காமெடி பண்ணரீங்க. தொழில் நுட்பத்தில அவங்க எங்க இருக்காங்க, தமிழ்நாடு எங்கே இருக்குனு நீங்க கூகுல் பண்ணி பார்ப்பீராக!

//இங்கு நாம் கண்ணப்பனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத்தானே பேசுகிறோம்?.//

அந்த சிறை கண்ட செம்மல் வெளில வந்த உடனே அவருக்கு மெரினா பீச்சுல பெருசா ஒரு சிலை வச்சிடலாமா

//அதுபோல் இந்துத்துவா கோஷ்டிகளுக்கும் இப்படி ஒருவாட்டி அநீதி இழைப்பது பற்றி விவாதிப்போம்.//

தலையும் இல்லாம வாலும் இல்லாம விவாதிப்போம்னா என்னத்தை விவாதிக்கறது??

//அதைவிடுத்து, தனி நாட்டை பற்றியோ, ஈழம் பற்றியோ, புலிகள் பற்றியோ வால் வால் என கத்திக்கொண்டிருக்க வேண்டாம்.//

நேரம் கிடைக்கும் போது இந்த பதிவின் பின்னூட்டங்களை ஒரு முறை பொறுமையாக படித்து பார்க்கவும். அப்போ தெரியும் யார் இங்கே வால் வால்னு கத்திட்டு இருக்காங்கனு.

கோவி.கண்ணன் சொன்னது…

//பொடியன்-|-SanJai said...
தனித் தமிழ்நாடு என்னும் பேத்தலுக்கு சிலர் வக்காலத்து வாங்கறத நெனச்சா செமக் காமெடியா இருக்கு.. :))
//

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் விடியல்கள் தான் நாடுகளின் உருவாக்கம், எங்கெல்லாம் விடுதலை வேட்கை தவிர்க்க முடியாதோ அங்கெல்லாம் இந்தியா உதவும் என்றே காங்கிரசின் நேருவும் பேசி இருக்கிறார்.

இராமேஷ்வர மீனவர்கள் பற்றி சிறிதும் கவலை கொள்ளாது தொடர்ந்து ஆயுதங்களையும், போர்விமானங்களையும் கொடுத்து அதையும் இந்திய இராணுவத்தை வைத்தே ஓட்டவைத்து தமிழனத்தை துடைக்க நினைத்தால் தமிழன உணர்வு உள்ளவர்கள் வாங்கடா சாக அடிங்கடான்னு கேட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள்.

உரிமைகள் மறுக்கும் இடத்தில், நசுக்கப்படும் இடத்தில் பிரிவினை என்பது தவிர்க்க முடியாது. இப்படி பிரிவினைக்கு காரணமாக இருப்பவர்கள் தான் தண்டிக்கப்படவேண்டியவர்கள். விழித்துக் கொண்டவர்கள் அல்ல.

தேசியம் இன்னும் முழுதாக நாசக்காரர்களின் கையில் விழுந்துவிடுவதில்லை என்பதால் தனித்தமிழ் நாடு கோஷத்தை யாரும் ஆதரித்துப் பேசவில்லை.

Bleachingpowder சொன்னது…

//'அடிச்சி' ஆடுறிங்க. நான் மட்டும் ஒத்தையாளாக ஆடவேண்டி இருக்குமே என்று நினைத்தேன். //

ரொம்ப சரி, மத்தவங்களுக்கு கொடுக்குறதை எல்லாம் இவர் தன்னோட முதுகுல வாங்கிட்டு வலிக்காத மாதிரியே நடிச்சிட்டிருக்காரு.

நீங்க ரொம்ப நல்லவருங்கோ

நசரேயன் சொன்னது…

மோகன்,
பட்டைய கிளப்புறீங்க.
உங்கள் கருத்துகள் எல்லாமே அருமையா இருக்கு.
தொடர்ந்து நடக்கட்டும்

Bleachingpowder சொன்னது…

//தொடர்ந்து நடக்கட்டும்//

பாவம் மொதல்ல எந்திரிகட்டும். கேட்ட கேள்விகளுக்கு இது வரை நேரடியாக ஒரு பதிலும் இல்லை.

திரும்ப திரும்ப இந்துத்துவ புராணத்தையே பேசிட்டு இருக்காரு

கோவி.கண்ணன் சொன்னது…

//திரும்ப திரும்ப இந்துத்துவ புராணத்தையே பேசிட்டு இருக்காரு//

தனித்தமிழ்நாடு தேசியவாதத்துக்கு எதிரானது என்றால் இந்திய இஸ்லாமியர்களை நாடுகடத்தச் சொல்வது எந்த வாதத்திற்கு எதிரானது ? இந்தி - இந்து என்று சொல்வதெல்லாம் தேசிய வியாதி அல்லாமல் வேறு என்ன ?

உண்மையான தேசியவாதியாக இருந்தால் அந்த தேசியவியாதிகளின் சீழ் பிடித்த காலை வெட்டிவிட்டு வந்து பேசவும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அப்புறம் இந்த திருச்சி தஞ்சை மக்கள் உபயோகபடுத்தும் நீர் கூட எதோ கர்நாடகாவாம், அங்கே இருந்து தான் அது வருதாம்.//


அப்படீங்களா அய்யா, நீங்க சொல்லித்தான் எனக்குத் தெரியுது.
தகவலுக்கு நன்றி!
கேரளாத் தண்ணியைக் கொஞ்சமாக் குடிங்க!
அவங்களும் குடிச்சு உயிர் வாழனுமில்ல.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//இவ்வளவு நேரம் சீரியஸா தானே பேசிட்டு இருந்தோம் இப்ப என்ன தீடீர்னு காமெடி பண்ணரீங்க. தொழில் நுட்பத்தில அவங்க எங்க இருக்காங்க, தமிழ்நாடு எங்கே இருக்குனு நீங்க கூகுல் பண்ணி பார்ப்பீராக!//

அய்யா சந்திராயன் விட்டது தமிழன் அண்ணாத்துரை!
நம்மை மெய் சிலிர்க்க வைத்த அணு குண்டு வெடித்தவர்கள் அப்துல் கலாம் சிதம்பரம். ஏனய்யா முடியாது. தாழ்வு மனப்பான்மையை கட்டிக்கொண்டு என்னத்தைக் கண்டோம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//தனி தமிழ்நாட்டு கேட்டால் என்ன தப்பு என கேட்க்கும் சிலர், தனி நாடு கிடைத்தால் குடிக்க தண்ணீருக்கு எங்கே போவோம், விவசாயத்திற்கு தண்ணீர் எங்கே இருந்து வரும் என்பதை கூட சிந்திக்காத இவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது.//

அய்யய்யோ கொஞ்சம் கடினம் தான் என்ன பண்றது.
பொறுத்துப் போவோம். ஆனா ஒன்னு.
யாரு அய்யா அவர்களிடம் தண்ணீர் கேட்டது.
அவர்களுடைய தண்ணீரை அடக்கி வைத்துக் கொள்ளச்சொல்லலாமே.
பிச்சையா கேட்கிறார்கள் இவர்களிடம்.
ஒரு சொட்டு தண்ணீர் விடாமல், அணைக் கட்டி தேக்கச் சொல்லுங்கள்.(முடிந்தால் ஒட்டகம் மாதிரி குடித்துத் தேக்கி வைத்துக் கொள்ளட்டும்)
அப்புறம் அந்த மாநிலமே புகார் நகரமாகிவிடும்.
அது மட்டும் ஆனா பரவா இல்லை. பக்கத்து மாநிலத்தையும் தரங்கம் பாடி ஆக்கிடுவாங்க. நிலைமை என்னான்னு அவங்களுக்கும் தெரியும்.
உங்களுக்கு???

மோகன் கந்தசாமி சொன்னது…

/////அப்படியா நான் இத்தனை வருசமா கேரளாவில் இருந்து வரும் தண்ணீரை தான் குடித்து வருகிறேன். சென்னைக்கு கூட ஏதோ ஆந்திரானு ஒரு மாநிலம் இருக்குதாம் அங்கே இருந்து கூட தண்ணீரெல்லாம் வருதாம்.

அப்புறம் இந்த திருச்சி தஞ்சை மக்கள் உபயோகபடுத்தும் நீர் கூட எதோ கர்நாடகாவாம், அங்கே இருந்து தான் அது வருதாம்.////


ஓஹோ! அங்க இருக்கின்ற சக கொண்டைகள் எல்லாம் சேர்ந்து ப்ளீச்சிங் பவுடருக்கென்று வாட்டர் மானு பாக்ச்சர் செய்து டெடிகேட்டட் பைப் லைன் வழியா அனுப்பி இந்திய ஒருமைப்பாட்டை வளர்கிரார்களா? அணைகள் நிரம்பினால் கழிநீரகற்றும் வேலையை செய்கிறார்கள் கர்நாடகாகாரர்கள். கேரளாக்காரன் தண்ணி உடலன்னா அவங்க ஊரு கோவிந்தா! ஆந்த்ராகாரன் உடரதன்னி பூண்டிய தாண்டி வர்ரதே இல்ல. (ஆந்த்ரா தவிர ஏனையோர், நமக்கு உள்ள உரிமையை மறுக்கின்றனர், மனவாடுகள் அவனுங்க பாணி பிளாக் மைலுக்கு தயாராகிவிட்டார்கள்)

அப்பறம் கர்நாடகா காரன் தண்ணி உடரான்னு இல.கணேசன் கிட்ட கூட போய் சொல்லாதீரும். ஏன்னா அவருக்குக்கூட கோவம் வந்து ஊடு பூந்து உதைப்பாரு.

////இவ்வளவு நேரம் சீரியஸா தானே பேசிட்டு இருந்தோம் இப்ப என்ன தீடீர்னு காமெடி பண்ணரீங்க. தொழில் நுட்பத்தில அவங்க எங்க இருக்காங்க, தமிழ்நாடு எங்கே இருக்குனு நீங்க கூகுல் பண்ணி பார்ப்பீராக!////


நான் சீரியசாதான் பேசிட்டு இருந்தேன், நீங்க எப்ப சீரியஸா பேசினீங்க, ஆரம்பத்திலிருந்து காமெடி தான் பண்றீங்க! இஸ்ரேல் இருக்கவனுங்களுக்கு ஜீசஸ் கூப்பிட்டு டெக்னாலஜிய கொடுத்தாரா? இல்ல யாகம் வளர்த்து ஒரே நள்ளிரவில் டெக்னிக்கை கண்டு பிடித்தார்களா?

////அந்த சிறை கண்ட செம்மல் வெளில வந்த உடனே அவருக்கு மெரினா பீச்சுல பெருசா ஒரு சிலை வச்சிடலாமா////

அந்த டுபுக்குக்காக ஒரு பதிவு போடறதே அதிகம். அவர்கள் பிரச்சினைய திசை திருப்பியதால் தன்னெழுச்சியாக மக்கள் கிளர்ந்து கொண்டைகளை பதம் பார்க்காமல் விட்டார்களே! அதற்காக அந்த செம்மலுக்கும் கலைஞருக்கும் நீங்கள் சிலை வையுங்களேன்!

////தலையும் இல்லாம வாலும் இல்லாம விவாதிப்போம்னா என்னத்தை விவாதிக்கறது??////
இந்த பதிவு எதை பற்றி என்றே புரியாமல் தேசிய கும்மி அடிக்கும் உங்களுக்கு உண்மையில் இங்கு வேலையே இல்லை. நீங்கள் சென்று வழக்கம் போல் கொண்டைபதிவுககளை எழுதலாம்.

////நேரம் கிடைக்கும் போது இந்த பதிவின் பின்னூட்டங்களை ஒரு முறை பொறுமையாக படித்து பார்க்கவும். அப்போ தெரியும் யார் இங்கே வால் வால்னு கத்திட்டு இருக்காங்கனு.///

ரெண்டு ஸ்பிலிட் பர்சனாளிட்டிகளை சேர்த்துக் கொண்டு தமிழ்மணத்தின் ஒரு முச்சந்தியில் நின்றவாறு சமீபகாலமாக யார் ஊளை இடுகிறார்கள் என சற்று யோசித்து பார்க்கவும்.

Bleachingpowder சொன்னது…

//தனித்தமிழ்நாடு தேசியவாதத்துக்கு எதிரானது என்றால் இந்திய இஸ்லாமியர்களை நாடுகடத்தச் சொல்வது எந்த வாதத்திற்கு எதிரானது ? //

ஈழத்தில் இஸ்லாம் மக்களுக்கு நேர்ந்த கதி எல்லாருக்கும் தெரியும் கண்ணன்.

இதை சரி என்று யாரும் சொல்லவில்லையே. சரி உங்கள் வாதத்திற்கே வருகிறேன். தனி தமிழ்நாடு கிடைத்தாலும் அப்பொழுதும் இங்கே இருக்கும் இந்துதுவா கட்சிகள் இதை தானே கூறுவார்கள்.பெரும்பாலான மக்கள் இந்துகளாக தானே இருப்பார்கள். பின் தனி நாடு பெற்று என்ன பிரோயோஜனம்.

இல்லை நீங்கள் முடிவே பண்ணிவிட்டீர்களா, தனி தமிழ்நாடு உருவானால் நிச்சயமாக அங்கே ஜனநாயக முறை படி ஆட்சி அமையாது. மக்களை எல்லாம் மிரட்டி அவர்கள் எல்லோரையும் இஸ்லாம் மதத்திற்கு மாற வைத்து, தனி தமிழ்நாட்டை ஒரு முஸ்லீம் நாடாக அறிவித்து விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

//இந்தி - இந்து என்று சொல்வதெல்லாம் தேசிய வியாதி அல்லாமல் வேறு என்ன ?//

இந்தி தமிழ்நாட்டில் இல்லை ஆனால் இந்து தனி தமிழ்நாடு உருவானாலும் இருக்கும். ஈழத்திலும் உள்ளது. இஸ்லாம் மக்களுக்கு ஈழத்தில் என்ன மரியாதை கிடைக்கும் என்ன மரியாதை கிடைத்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

நீங்கள் இங்கே சுட்டி காட்டிய எல்லா பிரச்சனைகளும் தனி தமிழ்நாடு உருவானாலும் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

வெண்பூ சொன்னது…

எச்சூஸ்மி... சிங்கப்பூர்ல குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கிடைக்குமா?

வெண்பூ சொன்னது…

//
வெண்பூ said...
எச்சூஸ்மி... சிங்கப்பூர்ல குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கிடைக்குமா?
//

டாய்.. யாருடா அது? எங்க வந்து என்ன கேக்குற? இது ரத்த பூமி.. இங்க பைப்பை தொறந்தா தண்ணி வராது.. ரத்தம்தான் வரும்...

Bleachingpowder சொன்னது…

//அய்யா சந்திராயன் விட்டது தமிழன் அண்ணாத்துரை!
நம்மை மெய் சிலிர்க்க வைத்த அணு குண்டு வெடித்தவர்கள் அப்துல் கலாம் சிதம்பரம். ஏனய்யா முடியாது. தாழ்வு மனப்பான்மையை கட்டிக்கொண்டு என்னத்தைக் கண்டோம்.///

இதையெல்லாம் அவங்க நாற்பது வருசம் முன்னாடியே செஞ்சுட்டாங்க.
தமிழ்நாட்டை இஸ்ரேலோடு ஒப்பிட்டு பேசியதற்கு தான் நான் அவ்வாறு கூறினேன். மற்றபடி அப்துல் கலாம், அண்ணாதுரை மீது எனக்கும் நிறைய மரியாதை இருக்கிறது. அவர்கள் தமிழர்கள் என்பதால் மட்டுமல்ல

மோகன் கந்தசாமி சொன்னது…

//////கேட்ட கேள்விகளுக்கு இது வரை நேரடியாக ஒரு பதிலும் இல்லை.///

இதுவரை டு த பாயிண்ட் பதில் சொல்லி இருக்கேன். அதுகூட இது கோவி பதிவு என்பதால். அன்றேல், உம்மை மதித்து எவர் பின்நூட்டமிடுவர்.


///பாவம் மொதல்ல எந்திரிகட்டும். ////

தமிழ்மணமே சேர்ந்து கும்மினாலும் நீங்கள் எடுத்த வாந்தியையே தான் எல்லா பதிவிலும் போய் எடுத்து வருகிறீர்கள் என்பது வெள்ளிடை மலை. இங்கு இதுவரை நீர் எடுத்த வாந்தி போதும், போய் வேறெங்காவது வாந்தி எடும்.நான் வேறு சிலருக்கும் பின்னூட்டம் இட வேண்டி உள்ளது.

Bleachingpowder சொன்னது…

//ஜோதிபாரதி said

இவர்களிடம்.
ஒரு சொட்டு தண்ணீர் விடாமல், அணைக் கட்டி தேக்கச் சொல்லுங்கள்//

இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு சந்தோசம அணை கட்டிடுவாங்க. அப்புறம் உங்க தனி தமிழ்நாடோட கதி என்னனு யாருமே சொல்ல மாட்டேகறீங்களே

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கேரளா, ஆந்திர, கர்நாடகா மட்டுமா நமக்கு தண்ணி கொடுக்குறாங்க.
பாண்டிச்சேரி(புதுச்சேரி)யும் தான் நமக்கு தண்ணி கொடுக்குது அவங்க என்ன உங்களாட்டம் கத்திகிட்டா இருக்காங்க. அதுக்கெல்லாம் பெருந்தன்மை வேணும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

////Bleachingpowder said...
//ஜோதிபாரதி said

இவர்களிடம்.
ஒரு சொட்டு தண்ணீர் விடாமல், அணைக் கட்டி தேக்கச் சொல்லுங்கள்//

இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு சந்தோசம அணை கட்டிடுவாங்க. அப்புறம் உங்க தனி தமிழ்நாடோட கதி என்னனு யாருமே சொல்ல மாட்டேகறீங்களே////

நீங்க தான் புரியாம பேசுறீங்க.
எனக்குத் தனித் தமிழ் நாட்டுல உடன்பாடு இல்லை.
உங்களுடைய பின்னூட்டத்தில தேசிய பழத்தோட்ட அருவி நிரம்பி வழியுது.
வெளிய சொல்ல வெக்கமாத்தான் இருக்கு.
அதனால நான் அதைப் பற்றியே பேசுவதில்லை.

Bleachingpowder சொன்னது…

// மோகன் கந்தசாமி said...
அணைகள் நிரம்பினால் கழிநீரகற்றும் வேலையை செய்கிறார்கள் கர்நாடகாகாரர்கள். கேரளாக்காரன் தண்ணி உடலன்னா அவங்க ஊரு கோவிந்தா!//

அந்த கவலை உங்களுக்கு வேண்டாம், நீங்க தனி தமிழ்நாடு வாங்குன உடனே அவன் தண்ணி வர வழியில் எல்லாம் அணையை கட்டிடுவான். சொட்டு தண்ணி கூட வராது.

//ரெண்டு ஸ்பிலிட் பர்சனாளிட்டிகளை சேர்த்துக் கொண்டு தமிழ்மணத்தின் ஒரு முச்சந்தியில் நின்றவாறு சமீபகாலமாக யார் ஊளை இடுகிறார்கள் என சற்று யோசித்து பார்க்கவும்.//

இதுக்கும் தப்பா தான் பதில் சொல்றீங்க அது ரெண்டு இல்ல மூனு. எதையுமே சரியா செய்ய மாட்டீங்களா???

மோகன் கந்தசாமி சொன்னது…

////நீங்கள் இங்கே சுட்டி காட்டிய எல்லா பிரச்சனைகளும் தனி தமிழ்நாடு உருவானாலும் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.///

இதென்ன ஜோதிடப்பதிவா? எதிர்காலத்தை பற்றி ப்ளீச்சிங் ஒரே கணிப்பா எடுத்து உடறார். நீரெல்லாம் என் பதிவில் மாட்டனுமைய்யா!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//Bleachingpowder said...
//அய்யா சந்திராயன் விட்டது தமிழன் அண்ணாத்துரை!
நம்மை மெய் சிலிர்க்க வைத்த அணு குண்டு வெடித்தவர்கள் அப்துல் கலாம் சிதம்பரம். ஏனய்யா முடியாது. தாழ்வு மனப்பான்மையை கட்டிக்கொண்டு என்னத்தைக் கண்டோம்.///

இதையெல்லாம் அவங்க நாற்பது வருசம் முன்னாடியே செஞ்சுட்டாங்க.
தமிழ்நாட்டை இஸ்ரேலோடு ஒப்பிட்டு பேசியதற்கு தான் நான் அவ்வாறு கூறினேன். மற்றபடி அப்துல் கலாம், அண்ணாதுரை மீது எனக்கும் நிறைய மரியாதை இருக்கிறது. அவர்கள் தமிழர்கள் என்பதால் மட்டுமல்ல//


அப்படியா! தெரியாம போயிட்டுதே! உலகம் முழுக்க ஓடி ஓடி உழைச்ச்சான்களே அவங்க யாருங்க? இஸ்ரேல்காரன் தானே!
இஸ்ரேல் காரனுக்கு முன்னாடியே தமிழன் நாகரிகத்துல சிறந்து விளங்குனான்களே!
இலக்கியம் எல்லாம் படைச்சானே! ஏங்க முடியாது!
உலகத்தில் முந்தின மூத்த குடி யாருங்க?

Bleachingpowder சொன்னது…

//நீரெல்லாம் என் பதிவில் மாட்டனுமைய்யா!//

ஹைய்யோ...ஹைய்யோ இத இங்க சொன்ன மாதிரி வெளியே போய் சொல்லீறாதீங்க அப்புறம் வாயில சிரிக்க மாட்டாங்க...

மோகன் கந்தசாமி சொன்னது…

//////அந்த கவலை உங்களுக்கு வேண்டாம், நீங்க தனி தமிழ்நாடு வாங்குன உடனே அவன் தண்ணி வர வழியில் எல்லாம் அணையை கட்டிடுவான். சொட்டு தண்ணி கூட வராது.////

யோவ், என்னய்யா பேசற நீ? அணையை கட்டினாத்தான் கேரளா காரனுக்கு பிரச்சினை. என்ன தமிழ்நாட்டுல இருந்து அங்க இப்ப என்ன போய்கிட்டு இருக்கின்னு சொல்லு பார்ப்போம்? பண்டமாற்று என்பது ஒருவழி அல்ல. மியூட்சுவல்.

Bleachingpowder சொன்னது…

//தமிழன் நாகரிகத்துல சிறந்து விளங்குனான்களே!//

தயவு செய்து கல் தோன்றி முன் தோன்றானு ஆரம்பிச்சிடாதிங்க

//இலக்கியம் எல்லாம் படைச்சானே! ஏங்க முடியாது!//

இப்ப அதெல்லாம் முக்கியமில்லை. யாரு கரெண்ட கண்டுபிடிச்சான், ரயில கண்டுபிடிச்சானு தான்.

உலகத்தில் முந்தின மூத்த குடி யாருங்க? //

நிச்சயாம அது தமிழ் இல்லை.

dharshini சொன்னது…

andai veetula aarambichi......andai manilangal ..andai nadugal....eppo mudiyum kovi anna?......namba ellorum serdhuthane society....idula nambuluke theriama namba virodhikala maritu varom!
edunala sanda pottukaranga(srilankala) romba confutiona irrukku clear panuga anna plz?

Bleachingpowder சொன்னது…

//தமிழ்நாட்டுல இருந்து அங்க இப்ப என்ன போய்கிட்டு இருக்கின்னு சொல்லு பார்ப்போம்? பண்டமாற்று என்பது ஒருவழி அல்ல. மியூட்சுவல்.//

தமிழ்நாட்டில் இருந்து தான் கேரளாவிற்கு அரிசி,காய்கறி, உணவு தானியங்கள் எல்லாம் போகிறது. நீங்க தனி நாடு வாங்கிடீங்கனா, கேரளாகாரன் இதையெல்லாம் வேற மாநிலத்தில் இருந்து வாங்கிடுவான்.

ஆனா தண்ணி நீங்க இவங்க கிட்ட இருந்து தான் வாங்கியாகனும்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அந்த கவலை உங்களுக்கு வேண்டாம், நீங்க தனி தமிழ்நாடு வாங்குன உடனே அவன் தண்ணி வர வழியில் எல்லாம் அணையை கட்டிடுவான். சொட்டு தண்ணி கூட வராது.
//

இப்பவே கட்ட சொல்லுங்க சாமி. வானத்துலேருந்து பொழியிற மழைத்தண்ணியை,
இயற்கையால் நடைபெறுகின்ற ஒரு நிகழ்வை, இது என்னோடது என்று கட்டிப் பிடித்துகொண்டு சாகட்டும். இதைச் செய்கிறவன் இயலாமை குணத்தைத் தன்னகத்தே கொண்டவனாகத்தான் இருக்க வேண்டும்.

dharshini சொன்னது…

tamizharnganradhala avanga kitta sanda podarangala? LTTE yilum muslim,hindu,chirstiannu irruka mattangala? (thappa eduthukkatheenga politics,dowry,rape..idhapathi padikaratha niruthi romba naal aachi)

மோகன் கந்தசாமி சொன்னது…

////இதையெல்லாம் அவங்க நாற்பது வருசம் முன்னாடியே செஞ்சுட்டாங்க.////

இத போய் நீ வெளியில சொல்லாத! இஸ்ரேல் காரன் கூட சிரிப்பான். வாயால இல்ல! நீ சொன்னியே அதால!

Bleachingpowder சொன்னது…

//இதென்ன ஜோதிடப்பதிவா? எதிர்காலத்தை பற்றி ப்ளீச்சிங் ஒரே கணிப்பா எடுத்து உடறார்//

இதுக்கு ஜோசியமெல்லாம் தெரிய வேண்டியதில்லை, கொஞ்சம் காமன் சென்ஸ் இருந்தா போதும்.

மோகன் கந்தசாமி சொன்னது…

/////இதுக்கும் தப்பா தான் பதில் சொல்றீங்க அது ரெண்டு இல்ல மூனு. எதையுமே சரியா செய்ய மாட்டீங்களா???/////

செய்யிறது கேவலமான வேல! இதுல பெருமை வேற அடிச்சிகறீங்க! எப்படி அது! அம்மணமா ஆக்கிவிட்டாலும், அம்மண குண்டியோட மீண்டும் மீண்டும் வருகிறீர். ரொம்ப நல்லவன், -ன்னா நீங்க!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//dharshini said...
andai veetula aarambichi......andai manilangal ..andai nadugal....eppo mudiyum kovi anna?......namba ellorum serdhuthane society....idula nambuluke theriama namba virodhikala maritu varom!
edunala sanda pottukaranga(srilankala) romba confutiona irrukku clear panuga anna plz?
//

இதே கேள்விய எங்கிட்ட ஒருத்தர் கேட்டாங்க.
அவருக்கு விளக்கிச் சொல்லிவிட்டு இந்தப் பதிவைப் போட்டேன்.

http://jothibharathi.blogspot.com/2007/12/blog-post_20.html

கோவியாரே நீங்கதான் விளக்கனும்.

ஆதவன் சொன்னது…

////எனக்கு தமிழ் மேல் இருக்கும் பற்றை விட இந்தியாவின் மேல் தான் அதிகம் இருக்கிறது./////

இதற்காகவே உங்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும். தமிழ் நாட்டில் தமிழை புறக்கணித்து தேசியம் பேசுபவர்களை நடு ரோட்டில் நிர்வாணமாக்கி தூக்கில் இட வேண்டும்


அட இவ்வளவு தூரம் தமிழ் தேசியம் பேசுற அண்ணாச்சி எதுக்கு அமெரிக்காவில் ஆங்கில தேசியம் செய்யனுங்கறேன். தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்தேசியம் செய்யலாம்க்கறே. என்ன நான் சொல்றது?

தேசியம் புண்ணாக்கு எல்லாம் நமக்கு எந்த அளவுக்கு பலன் இருக்கோ அந்த அளவுக்கு தான் ஆதரவு.

இந்திய தேசியம் எனபது தமிழ் தேசியம் என்பதை விட பெரும்பாலான மக்களுக்கு பலன் அதிகம்லே. அதான் மும்பை தில்லி பெஙளூரூன்னு தமிழ சாதி மக்கள் அங்கன ரொம்ப பேருஇருக்கானுவ.

வெறுமன இலங்கை பிரச்சனை எடுத்து இதல்ல்லாம் கதைக்கபடாதுலே. என்ன நான் சொல்றது.

உன்னோட சுயநலம் நீரு நாடு தாண்டி கடலை தாண்டி போனீரு. அங்கன உமக்கு காசு வருது.அதுக்காண்டி இங்கன இருக்குற ஆளுங்க எல்லாத்தையும் தப்பு சொல்றீரே. என்ன ஆளுய்யா நீரு.

ஆதவன் சொன்னது…

ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. இங்கன தமிழ் தேசியம் மலையாள தேசியம்ன்னு பேசற ஆளுங்க எல்லாம் நாட்டை உட்டு சுயநலத்துக்காக ஓடி போயி அங்கன உக்காந்து பேசுறீங்க.

உங்காளுங்களுக்கு தமிழ் தேசியம் வேணும்னா நாட்டுக்கு திரும்ப வாங்கண்ணே அப்புறம் இங்கன இருந்து தேசியம் பத்தி பேசலாம்.

நாட்டை வுட்டு சுயநலத்துகாக ஓடி பொயி அடுத்த நாட்டு தேசியத்துக்காக அடிமையான ஆட்கள் என்ன சொல்றதுண்ணேன்??

Bleachingpowder சொன்னது…

இப்ப உங்களுக்கு பதில் சொல்லனும்னா உங்களோட தரத்திற்கு நானும் இறங்கி வரனும். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இதுவரை நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளும் பதில் கூறிய எனக்கு,இதுக்கு மட்டும் பதில் சொல்ல தெரியாத என்ன.

ஆபாச பின்னூட்டங்கள் இடுவதையோ, இடுபவர்களிடம் விவாதிப்பதிலோ எனக்கு விருப்ப மில்லை.

பிழைத்து போ

Unknown சொன்னது…

சரியா கையாளத் தெரியாத முதுகெலும்பில்லாத இந்தியாவோட இருக்கிற வரைக்கும் தான் தண்ணிக்கு கெஞ்சணும். தனி நடு ஆயிட்டா நதி நீர் பங்கீடுல ஐ.நா தலையிட்டு ஆப்பு அடிக்கும். தெரியுமில்ல? ஆனா அது இங்க உள்ள சொ(கா)ங்கிரஸ் ஆட்சியாளர் மாதிரி கிடையாதுண்ணே. ரிவிட் அடிச்சிரும்.

Bleachingpowder சொன்னது…

//தனி நடு ஆயிட்டா நதி நீர் பங்கீடுல ஐ.நா தலையிட்டு ஆப்பு அடிக்கும்//

அப்படியா எங்கே அவங்கள இங்க வந்த சைனாகாரன் நம்ம இடத்தையெல்லாம் புடிச்சானே அதையெல்லாம் வாங்கி கொடுக்க சொல்லுங்க பாப்போம். இல்ல ஈராக்குனு கொஞ்ச வருசம் ஒரு நாடு இருந்துச்சுல அங்க ரசாயன ஆயுதம் இருக்குனு சொல்லு அமெரிக்க படையெடுத்து போய் அந்த நாட்டையே அழிச்சாங்கல அதையும் ஐ.நா சபையை கொஞ்சம் தட்டி கேட்க சொல்லுங்க பார்ப்போம் என்ன நடக்குதுனு.

ஏன் இதே ஐ.நா சபை இலங்கைக்கு வந்து ஈழ மக்களுக்கு தனி நாடு வாங்கி கொடுக்க சொல்லுங்களேன்.

தனி தமிழ்நாடு உருவான முதல்ல அதை எந்த நாடும் அங்கரிக்காது. அப்படி இருக்கும் போது ஐ.நா சபை மட்டும் எப்படி வரும்.

வேனும்னா செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து ஹெலிகாப்டர்ல வந்து அரிசி மூட்டையை போடுவாங்க. அவ்வளவு தான்

மோகன் கந்தசாமி சொன்னது…

////தமிழ்நாட்டில் இருந்து தான் கேரளாவிற்கு அரிசி,காய்கறி, உணவு தானியங்கள் எல்லாம் போகிறது. நீங்க தனி நாடு வாங்கிடீங்கனா, கேரளாகாரன் இதையெல்லாம் வேற மாநிலத்தில் இருந்து வாங்கிடுவான்./////

//ஆனா தண்ணி நீங்க இவங்க கிட்ட இருந்து தான் வாங்கியாகனும்////

தண்ணிய இவனுங்க கிட்ட இருந்து வாங்கவே முடியாது. தண்ணீர் கஷ்ட காலத்தில் நாம் பெரும் தண்ணீர் நம்ம ரிசவுர்ச்களில் இருந்தே 1974 -லிருந்து பெறுகிறோம். மிஞ்சிய காலத்தில் இவர்கள் வெளிவிடும் தண்ணீரை இவர்களால் தேக்கி வைக்க கூட முடியாது. ஆனால் நாம் இங்கிருந்து அனுப்பும் பொருளை உள்ளூரில் இறக்கினால் விலை வாசி கூட குறையும். இப்ப இவனுங்க கூட இருக்கும் பிரச்சினையே, கஷ்ட காலத்தில் தண்ணீரை பங்கிடுவது பற்றித்தான். அங்கு தான் தேசீயம் மற்றும் ஒருமைப்பாடு வருகிறது. தண்ணீரை பங்கிட்டால் நாட்டு பற்று உள்ளதாக கொள்ளலாம். மிதமிஞ்சிய காலத்தில் விஞ்சிய நீரை அகற்ற தேசிய அக்கறை ஒன்றும் தேவை இல்லை. அவ்வாறு வெளியேற்ற வில்லையென்றால் அவன் ஊரு காலி.

நீர் இப்படி அவனுங்களுக்கு கொடி புடிக்கரத்துக்கு பதிலா பேசாம, அவனுங்க ஊருக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ போய்டலாம்.

அப்பறம் உம்ம வலைப்பூவில் சலிக்க தேடியாயிற்று, வேற்று இனத்தவரின் தமிழருக்கெதிரான அநீதியை பற்றி ஒரு பதிவும் காணோம். அவனுங்களுக்கு மட்டும் இங்க இருந்து இவ்வளவு ஆவேசமா கொடி புடிக்கிரீர். ரொம்ப கேவலமான கொண்டை போலிருக்கு!

Bleachingpowder சொன்னது…

//நாட்டை வுட்டு சுயநலத்துகாக ஓடி பொயி அடுத்த நாட்டு தேசியத்துக்காக அடிமையான ஆட்கள் என்ன சொல்றதுண்ணேன்?? //

அவங்கெல்லாம் தனி தமிழ்நாடு உருவானா தான் இங்க வருவாங்களாம்

dharshini சொன்னது…

jothibharathi siroda blog padichapiragu konjam purinchadhu....thank you sir....
muzhudum puriyarathukku edhavathu blog irundha sollunga sir?

Bleachingpowder சொன்னது…

//நீர் இப்படி அவனுங்களுக்கு கொடி புடிக்கரத்துக்கு பதிலா பேசாம, அவனுங்க ஊருக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ போய்டலாம்//

ஓ அதனால தான் நீங்க அமெரிக்கா போயிட்டீங்கள. இதையெல்லாம் மொதல்லையே சொல்ல மாட்டீங்களா???

Unknown சொன்னது…

இருவேறு நாடுகளுக்கிடையில் உள்ள தண்ணீர்(நதினீர்) பங்கீட்டில் சர்வதேச நீதி மன்றத்திற்கு போனால் அவர்கள் சொல்கிறபடி பங்கிட்டாக வேண்டும். இப்போது உச்ச நீதி மன்ற ஆணையை காற்றில் பறக்கவிட்டு ஜாலியாக இருப்பது போல் இருக்க முடியாது. மீறினால் அடுத்த விநாடி ஐ.நா. படை வந்திறங்கும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//Bleachingpowder said...
//தமிழ்நாட்டுல இருந்து அங்க இப்ப என்ன போய்கிட்டு இருக்கின்னு சொல்லு பார்ப்போம்? பண்டமாற்று என்பது ஒருவழி அல்ல. மியூட்சுவல்.//

தமிழ்நாட்டில் இருந்து தான் கேரளாவிற்கு அரிசி,காய்கறி, உணவு தானியங்கள் எல்லாம் போகிறது. நீங்க தனி நாடு வாங்கிடீங்கனா, கேரளாகாரன் இதையெல்லாம் வேற மாநிலத்தில் இருந்து வாங்கிடுவான்.

ஆனா தண்ணி நீங்க இவங்க கிட்ட இருந்து தான் வாங்கியாகனும்//

நீங்க கண்டிப்பாகத் தமிழர்தான், தனிழனுக்காக போராடுகிறவர்களில் நிறைய பேர் வேற்று மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்பதை நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. தமிழ் நாட்டுக் காரர்கள் தண்ணீர் இல்லாமல் சாவதில், உங்களுக்கு அப்படி என்ன ஆனந்தம்? வருத்தத்துடன் தான் கேட்கிறேன் கொஞ்சம் சொல்லுங்களேன். அது எந்த வகையான தேசியம்?
யாருடைய நாட்டுப் பற்றியும் நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. நாங்களெல்லாம் கார்கிலில் இருந்து,குஜராத்,ஒரிசா போன்ற இடங்களில் நடந்த செயற்கை, இயற்கை பேரழிவுகளால் பதிக்கப் பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த அளவு நிவாரண உதவி செய்திருக்கிறோம். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? அனைவருக்கும் தெரிவியுங்கள்.

Bleachingpowder சொன்னது…

//இப்போது உச்ச நீதி மன்ற ஆணையை காற்றில் பறக்கவிட்டு ஜாலியாக இருப்பது போல் இருக்க முடியாது. மீறினால் அடுத்த விநாடி ஐ.நா. படை வந்திறங்கும்.
//

சும்மா ஓட்டாதீங்க சார், அதுக்கு ஐ.நா சபை உறுப்பினர்களின் ஒப்புதல் வேண்டும். ஐ.நா சபையில் உறுபினராக இருக்கும் எத்தனை நாடுகள் தனி தமிழ்நாட்டிற்கு ஆதரவாக குரல் கொடுக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

மோகன்,

கட்டுரையின் சாரம் வெள்ளிடைமலை, இங்கே வீன் விவாதம் பண்ணுகிறவர்களுக்கு வரிக்கு வரி பதில் சொல்லாதீர்கள். வழக்கம் போல் வாதத்தில் தோற்றுப் போகும் போது பர்சனல் லைப்பைப் பற்றி கேள்வி எழுப்புவார்கள், உணர்ச்சி வசப்படாதிங்க. அப்படி கேள்விகள் திசைமாறி செல்வதே, வாதத்தில் சறுக்கியதன் அறிகுறிதான்.

அதுவும் முடியவில்லை என்றால் ஆபாசமாக பேசுவார்கள். பெரியாரை எதிர்க்க திராணி இல்லாமல், அவரே விட்டொழித்த இராமசாமி 'நாயகர்' என்று அவர் சாதியை பறைசாற்றுபவர்களுக்கு எதைச் சொல்லி புரியவைக்க முடியும்.

நான் இங்கே பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் விட்டதே, இவர்களுக்கு பதில் சொல்லவதே வீண் என்பதால் தான். பதிவு எழுதியது பிறருக்கு இவையெல்லாம் தெரியவேண்டும் என்பதற்காகத்தான்.

Unknown சொன்னது…

இந்தியாக்காரன் எப்படியும் மின்சாரத்திற்கும் தோரியத்துக்கும்(தேவையான மோனோசைட் மூலப்பொருளுக்கும்) இன்னும் ரொம்ப விஷயத்துக்கும் நம்ம கிட்ட தான் கையகட்டிக்கிட்டு நிக்கணும்.
So no problem. after all water.
மிரட்டியே வாங்கிரலாம். இவனுங்களுக்கு தான் எப்பவுமே முதுகெலும்பே இருந்ததில்லையே. இனிமேலா இருக்கப்போகுது

Bleachingpowder சொன்னது…

//தமிழ் நாட்டுக் காரர்கள் தண்ணீர் இல்லாமல் சாவதில், உங்களுக்கு அப்படி என்ன ஆனந்தம்? வருத்தத்துடன் தான் கேட்கிறேன் கொஞ்சம் சொல்லுங்களேன்//

நீங்கள் என்னுடைய பின்னுட்டத்தை முழுவதுமாக படிக்க வில்லை என்று நினைக்குறேன். இங்கெ தனி தமிழ்நாடு கோரிக்கை சரி என வாதாடும் சில முட்டாள்களுக்கு சில உண்மைகளை புரிய வைக்க தான் அவர்களிடம் இந்த கேள்விகளை கேட்கிறேன்.

தனி தமிழ்நாடு உருவானால் பல சிக்கல்கள் இருக்கிறது அதில் தண்ணீரும் ஒன்று. அதை புரிய வைக்க தான் நானும் நாலு மணி நேரமா டைப் அடிச்சிட்டிருக்கேன்.


//நாங்களெல்லாம் கார்கிலில் இருந்து,குஜராத்,ஒரிசா போன்ற இடங்களில் நடந்த செயற்கை, இயற்கை பேரழிவுகளால் பதிக்கப் பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த அளவு நிவாரண உதவி செய்திருக்கிறோம். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? அனைவருக்கும் தெரிவியுங்கள்.//

நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றிலும் என்னுடைய பங்கும் இருக்கிறது

//அது எந்த வகையான தேசியம்?
யாருடைய நாட்டுப் பற்றியும் நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை//

விளையாட்டிற்கு கூட என் நாட்டை பிரிப்பதை பற்றி பேச கூடாது என நினைப்பவன் நான்.

Bleachingpowder சொன்னது…

//So no problem. after all water.//

தவறு நண்பரே. அடுத்த உலகப் போர் தண்ணிருக்காக தான் இருக்குமென்று எல்லா நாட்டு அறிஞர்களும் கூறியிருப்பதை மறந்து விடாதீர்கள்.

Unknown சொன்னது…

என்ன ஓப்புதல் பெரிய ஓப்புதல். நேத்து வந்த கொசாவாவுக்கு கிடைச்சது இன்னைக்கு வர நமக்கு கிடைக்காதா? பூகோள ரீதியா முக்கியமான இடத்தில் அதுவும் இந்தியாவுக்கு (அதிக செலவில்லாமல்) ஆப்பு அடிக்க ஏதுவான இடம். அமேரிக்கா காரன் முதற்கொண்டு அத்தன பேரும் அணிவகுத்து நிப்பான் ரெடியா ஒப்புதல் பத்திரத்தோட.

மோகன் கந்தசாமி சொன்னது…

////இப்ப உங்களுக்கு பதில் சொல்லனும்னா உங்களோட தரத்திற்கு நானும் இறங்கி வரனும். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.////

இதோ பாருங்கப்பா! நல்லவர! இவர் தரம் என்னன்னன்னு மொத்த தமிழ்மணத்திற்கும் தெரியும். இங்க வந்து பெர்பாமன்ஸ் காட்டினா ஓவர் நைட்ட்ல நல்லவராகிடுவீரா?

////இதுவரை நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளும் பதில் கூறிய எனக்கு,இதுக்கு மட்டும் பதில் சொல்ல தெரியாத என்ன.///

மிஸ்டர் பிளீச்சிங், நீங்க பதில் என்ற பேரில் உளறியவை யாவும் அம்பது சத கேள்விகளுக்கு கூட இல்லை. அதற்கும் குறைவு. தேசிய ஒருமைப்பாடு வேறெங்கும் பங்கமாகும் போது என்ன பதிவு இட்டீர் என்று கேட்டால் உடனே நல்லவன் வேஷம் போட்டு எஸ்கேப் ஆகின்றீர்.

////ஆபாச பின்னூட்டங்கள் இடுவதையோ, இடுபவர்களிடம் விவாதிப்பதிலோ எனக்கு விருப்ப மில்லை.////

நைனா! தமிழ்மணம் தாங்காதுன்னா! உம்ம பதிவு தலைப்புகளில் இல்லாத கொடுமை, உம்ம தேசிய பூச்சான்டியில் இல்லாத ஆபாசம் இங்கு எவர் பின்னூட்டத்திலும் இல்லை. எனவே, பதில் இல்லை என்றால் பொட்டி கட்டு. அதைவிடுத்து நீர் தான் நல்லவர் என்று காலாட்சேபம் நடத்தாதேயும்!

////பிழைத்து போ////

ஹா ஹா! நீர்தான் நாயடி வாங்கி குற்றுயிருடன் தவழ்கிரீர் இப்போது. போக்கிரி படம் பாத்தீங்களா ப்ளீச். செம அடி வாங்கிட்டு வடிவேல் சொல்வார், "முடிச்சிட்டீங்களா, சரி இனி ஒரு பய என் கண் முன்னாள் இருக்க கூடாது" -ன்னு.

முடிஞ்சா அந்த காமெடி கிளிப் பாருங்க!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//நீங்கள் என்னுடைய பின்னுட்டத்தை முழுவதுமாக படிக்க வில்லை என்று நினைக்குறேன். இங்கெ தனி தமிழ்நாடு கோரிக்கை சரி என வாதாடும் சில முட்டாள்களுக்கு சில உண்மைகளை புரிய வைக்க தான் அவர்களிடம் இந்த கேள்விகளை கேட்கிறேன்.

தனி தமிழ்நாடு உருவானால் பல சிக்கல்கள் இருக்கிறது அதில் தண்ணீரும் ஒன்று. அதை புரிய வைக்க தான் நானும் நாலு மணி நேரமா டைப் அடிச்சிட்டிருக்கேன்//

மற்றவர்களை முட்டாள் என்று சொல்வதை முதலில் நிறுத்துங்கள்!
தனி ஒரு ஆளை எதிர்க்க ஒரு நாட்டு மக்களுக்கே பிடிக்காத ஒரு விடயத்தை அப்பட்டமாக சொல்கிறீர்களே. அதைச் சொல்ல உங்களால் எப்படி முடிகிறது. உங்களிடம் சாரம் இல்லை, அதனால் நாலுமணி நேரமும் வீணாய்ப் போய்விட்டது பாருங்கள். நாலுமணி நேரத்தில் எதையும் கற்றுக் கொள்ளவும் இல்லை. ஒரு நல்ல விடயத்தை சொல்லிவிடவும் இல்லை.

Bleachingpowder சொன்னது…

//ஆப்பு அடிக்க ஏதுவான இடம்.//

யாருக்கு ஆப்பு அடிக்க இந்தியாவிற்கு தானே. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தானே சொன்னீர்கள் எங்களுடைய தேச பற்றை சந்தேகபட வேண்டாமென்று. இப்போ இதற்கு என்ன அர்த்தம் xavier.

இந்த முடிவிற்கு வந்ததற்கு பிறகு அமெரிக்கா எதற்கு பாகிஸ்தான், சீனாவிடமே நீங்கள் உதவி கேட்கலாமே.

Bleachingpowder சொன்னது…

//தனி ஒரு ஆளை எதிர்க்க ஒரு நாட்டு மக்களுக்கே பிடிக்காத ஒரு விடயத்தை அப்பட்டமாக சொல்கிறீர்களே.//

தனி ஒரு ஆளில்லை, ஒரு கூட்டமே இருக்கு. அந்த கூட்டத்தில் சிலர் பதிவுலகிலும் இருக்கிறார்கள்

மோகன் கந்தசாமி சொன்னது…

//////இதற்காகவே உங்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும். தமிழ் நாட்டில் தமிழை புறக்கணித்து தேசியம் பேசுபவர்களை நடு ரோட்டில் நிர்வாணமாக்கி தூக்கில் இட வேண்டும்/////

எங்கருந்து டா வரிங்க ஒரே கொண்டையா? ஒரு பயலும் அடையாளத்தோட வர மாட்டன்றிங்க! இந்த வரியா பொரிக்கி எடுத்த பெரிய மனுஷரே, அடுத்த வரியா படிச்சீரா! அதில் எனக்கு உடன் பாடு இல்லை என்று சொல்லி இருக்கிறேன்.

இனி கொண்டைகளுக்கு பதில் கிடையாது!

மோகன் கந்தசாமி சொன்னது…

மன்னிக்க வேண்டும் கோவி.

Bleachingpowder சொன்னது…

//ஹா ஹா! நீர்தான் நாயடி வாங்கி குற்றுயிருடன் தவழ்கிரீர் இப்போது. போக்கிரி படம் பாத்தீங்களா ப்ளீச். //

யாருக்கு யாரு ஆப்பு வச்சானு நாம முடிவு பண்ன வேண்டாம் அதை பின்னூட்டத்தை படிக்கிறவங்க முடிவு பண்ணட்டும்.

Unknown சொன்னது…

//யாருக்கு ஆப்பு அடிக்க இந்தியாவிற்கு தானே. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தானே சொன்னீர்கள் எங்களுடைய தேச பற்றை சந்தேகபட வேண்டாமென்று. இப்போ இதற்கு என்ன அர்த்தம் xavier.
//

நண்பரே என்னுடைய பின்னூட்டங்களை திருப்பி படிக்கவும். நான் "எங்களுடைய தேச பற்றை சந்தேகபட வேண்டாம்" என்ற சொற்றடொரை எங்கேயும் உபயோகிக்கவில்லை.

Bleachingpowder சொன்னது…

//கோவி.கண்ணன் said,
நான் இங்கே பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லாமல் விட்டதே, இவர்களுக்கு பதில் சொல்லவதே வீண் என்பதால் தான்.//

மண்ணிக்கவும் இந்த பின்னூட்டத்தை நான் கவணிக்கவில்லை. இப்பொழுது தான் பார்த்தேன். இனி உங்களுடய பதிவில் என்னுடைய கருத்துக்களை கூறி உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன். நேரம் இருந்தால் என்னுடைய பின்னூட்டங்களையும் அழித்து விடுகிறேன்.

நன்றி.

மோகன் கந்தசாமி சொன்னது…

/////இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்'////

பிரச்சினையின் மூலமே இங்கு தான் இருக்கின்றது கோவி. இந்துக்களுக்கு சொந்தமான இந்தியாவில் ஏன் ஏனையோரை பிடித்து வைக்க வேண்டும். எல்லோரும் ஒன்றாகவும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் ஒற்றை பரிமாண மேலாண்மையையும் தக்க வைக்க வேண்டும் என்றால் தேசிய உடையின் தையல் பிரியத்தான் தொடங்கும்.எதிர் குரல் எழும்போதே சர்வாதிகாரத்தை பயன் படுத்தினால் நிலைமை கை மீறும் என்று தெரிவதில்லை சில தேசிய அறிவிலிகளுக்கு.

////என்று அறைகூவும் தேசியவியாதிகளையும், இந்துத்துவாக்களையும் பிரிவினை பேசுகிறார்கள் என்று அடையாளம் கொடுத்து, இவர்கள் கூற்றுபடி பிரிவினை பேசுபவர்களைத் தூக்கில் போட வேண்டுமென்று நாடு தோறும் கழுமரம் நட்டால், இவர்களின் பிணங்களால் நாறிப்போகும் இந்தியாவே./////

அவ்வித அடையாளம் கிடைக்க கூடாது என்பதற்காகத்தானே அதை புனிதமாக்குகிறார்கள்!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//Bleachingpowder said...
//தனி ஒரு ஆளை எதிர்க்க ஒரு நாட்டு மக்களுக்கே பிடிக்காத ஒரு விடயத்தை அப்பட்டமாக சொல்கிறீர்களே.//

தனி ஒரு ஆளில்லை, ஒரு கூட்டமே இருக்கு. அந்த கூட்டத்தில் சிலர் பதிவுலகிலும் இருக்கிறார்கள்//

இது நான் கேட்காத விடயம்.



பின்னூட்டத்தில் மட்டும் தான் எழுதலாம். (ஆனா தண்ணி நீங்க இவங்க கிட்ட இருந்து தான் வாங்கியாகனும்?????????). பிச்சையா எடுக்கிறோம்? அப்படி எடுக்கிறோம் என்று வைத்துக் கொண்டால், அதில் தாங்களும் சேர்ந்து வருகிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.
தமிழகத்தில் இது போன்ற விடயங்களை பொது இடத்திலோ அல்லது தனி ஒருவரிடமோ கூற முடியுமா?
அந்த விடயத்தை எப்படி அப்பட்டமாக உங்களால் சொல்ல முடிந்தது என்று கேட்டேன்? அதற்கு பதில் சொல்லாமல் வேறு எதோ சொல்லவருகிறீர்கள்.

Unknown சொன்னது…

//
இந்த முடிவிற்கு வந்ததற்கு பிறகு அமெரிக்கா எதற்கு பாகிஸ்தான், சீனாவிடமே நீங்கள் உதவி கேட்கலாமே.
//
நாங்க ஏன் உதவி கேக்கணும். அவனவன் தான் Queue-ல நிப்பானே. நாங்களா பாத்து பண்ணுறது தான். ஹஹாஹஹாஹஹாஹஹாஹஹாஹஹா...................

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது தேசியம் வாயளவில்...!

இங்க போய் படியுங்கள்!
http://jothibharathi.blogspot.com/2008/04/blog-post_10.html

Unknown சொன்னது…

http://vayal-veli.blogspot.com/2008/11/blog-post_06.html

வாக்காளன் சொன்னது…

Mr Bleaching. so called national parties congress and BJP - wat r they doing in karnataka?

so called communist parites - what have they done in kerala?

nothing.. these nationalist can show their faces only in the eelam issues and not with the other critical issues like cauvery , mullai periyar which affects the life of tamilians

Indian சொன்னது…

தேசியவியாதிகளே,

நக்ஸலைட்டுகள தேடி காணாமல் போய்விட்ட ஹெலிகாப்டரின் கேப்டன் விபி.சிங்க தேடிக் கண்டுபுடியுங்க. அப்புறம் சோமாலியாக் கரையோரம் கடத்தி வைக்கப்பட்டுள்ள எம்.டி. ஸ்டோல்ட் வேலர் கப்பலில் இருக்கும் 18 'இந்தியர்களையும்' காப்பாத்துங்க. கேப்டன் வி.பி.சிங்கின் மகள் அதிதி சிங்கும், கப்பலின் கேப்டன் ப்ரபாத் கோயலின் மனைவி சீமா கோயலும் கிட்டத்தட்ட இரு மாதங்களாக கதறியும் ஒரு மண்ணையும் செய்யாமல் இருக்கும் இந்திய தேசியம் தேவையா? இன்னிக்கு அவங்க ரெண்டு பேரும் டைம்ஸ்-நவ் டிவியில் 'இந்தியராக இருப்பதற்கு வெட்கப்படுகிறோம்' அப்படின்னு சொல்றாங்களே. இதையெல்லாம் பாத்துட்டு இந்தியன்னு சொல்றவங்கெல்லாம் (என்னையும் சேர்த்துத்தான்) நாக்கப் புடுங்கிட்டுச் சாகவேண்டாமா?

Unknown சொன்னது…

//
தேசியவியாதிகளே,

நக்ஸலைட்டுகள தேடி காணாமல் போய்விட்ட ஹெலிகாப்டரின் கேப்டன் விபி.சிங்க தேடிக் கண்டுபுடியுங்க. அப்புறம் சோமாலியாக் கரையோரம் கடத்தி வைக்கப்பட்டுள்ள எம்.டி. ஸ்டோல்ட் வேலர் கப்பலில் இருக்கும் 18 'இந்தியர்களையும்' காப்பாத்துங்க. கேப்டன் வி.பி.சிங்கின் மகள் அதிதி சிங்கும், கப்பலின் கேப்டன் ப்ரபாத் கோயலின் மனைவி சீமா கோயலும் கிட்டத்தட்ட இரு மாதங்களாக கதறியும் ஒரு மண்ணையும் செய்யாமல் இருக்கும் இந்திய தேசியம் தேவையா? இன்னிக்கு அவங்க ரெண்டு பேரும் டைம்ஸ்-நவ் டிவியில் 'இந்தியராக இருப்பதற்கு வெட்கப்படுகிறோம்' அப்படின்னு சொல்றாங்களே. இதையெல்லாம் பாத்துட்டு இந்தியன்னு சொல்றவங்கெல்லாம் (என்னையும் சேர்த்துத்தான்) நாக்கப் புடுங்கிட்டுச் சாகவேண்டாமா?
//
Wow.. wow.. wow.....

மோகன் கந்தசாமி சொன்னது…

////யாருக்கு யாரு ஆப்பு வச்சானு நாம முடிவு பண்ன வேண்டாம் அதை பின்னூட்டத்தை படிக்கிறவங்க முடிவு பண்ணட்டும்.///

இதே மாதிரிதான் நாராயணீ ஒரு டப்பா அலப்பறை பண்ணிட்டு திரிஞ்சது கொஞ்ச காலத்துக்கு முன்னாடி. வரிக்கு வரி முரணா பேசிட்டு, நீ காலி!, நீ அவுட்டு!, பிழைச்சு போ!, என்று ஒரே அலம்பலா இருக்கும். கிட்டத்தட்ட காமெடியன் பிளீச்சும் அப்படித்தான். பின்னூட்டம் படிக்கிறவங்களுக்கு இப்படி ஒப்பனா அறைகூவல் விடுத்தா அவர்கள் உம்மை வெற்றி வீரன் என்று ஏற்றுவரா?


////மண்ணிக்கவும் இந்த பின்னூட்டத்தை நான் கவணிக்கவில்லை. இப்பொழுது தான் பார்த்தேன். இனி உங்களுடய பதிவில் என்னுடைய கருத்துக்களை கூறி உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்////

அப்பாடா! ஈஸ்கேப்புக்கு காரணம் கிடைச்சாச்சா! அடேங்கப்பா! எப்படிங்கண்ணா இப்படி, பிறக்கும்போதே நீங்க கலைஞனா? இனி வேறு எந்த பதிவிலும் போய் தேசிய கும்மிய அடிக்காதிங்க பிளீச். ஏன்னா யாரும் கண்டுக்க மாட்டாங்க!

Unknown சொன்னது…

//
////மண்ணிக்கவும் இந்த பின்னூட்டத்தை நான் கவணிக்கவில்லை. இப்பொழுது தான் பார்த்தேன். இனி உங்களுடய பதிவில் என்னுடைய கருத்துக்களை கூறி உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்////

அப்பாடா! ஈஸ்கேப்புக்கு காரணம் கிடைச்சாச்சா! அடேங்கப்பா! எப்படிங்கண்ணா இப்படி, பிறக்கும்போதே நீங்க கலைஞனா? இனி வேறு எந்த பதிவிலும் போய் தேசிய கும்மிய அடிக்காதிங்க பிளீச். ஏன்னா யாரும் கண்டுக்க மாட்டாங்க!
//
இப்படி ஒரு பின்னூட்டம் போட்ட கோவி ஒரு முந்திரிகொட்டையா? அல்லது சந்தர்ப்பம் பார்த்து எஸ்கேப் ஆவுற கக்கூஸ்காரன் ஒரு சந்தர்ப்பவாதியா?

முத்துகுமரன் சொன்னது…

ஆமா!

இந்திய தேசியம் இப்போ எங்க இருக்கு பாடப்புத்தகத்தை தவிர்த்து? கண்டுபிடித்து தந்து உதவங்களேன் தேசியர்களே

ஆதவன் சொன்னது…

தமிழ் தேசிய வியாதிகள் எல்லாம் வெளிநாட்டுக்கு ஓடி போன வியாதியால்ல இருக்கு. இதுகள நம்பி என்ன சொல்றது எல்லாம் விதி

சுரேஷ் ஜீவானந்தம் சொன்னது…

// கருத்தை கூற வில்லை விஷ விதையை மக்கள் மனதில் விதைகின்றனர். //

அதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

உங்களுக்கு இந்திய தேசியத்தை ஆதரித்துப் பேசுவதற்கு எவ்வளவுக்கு உரிமை இருக்கிறதோ அவ்வளவுக்கு மறுத்துப் பேசுவதற்கும் ஒருவருக்கு நியாயமாக உரிமை இருக்கிறது.

மற்றபடி "நான் இது தவறு என்று நினைக்கிறேன்; ஆகவே நீ இதை எதிர்த்துப் பேசக் கூடாது" என்று கூறுவது கருத்துரிமைக்கு எதிரானதாகும்."மற்றவன் முட்டாள், தான் அறிவாளி" என்று எண்ணுவதாகும்.

இந்திய தேசியம் எங்காவது இலேசாகக் கேள்விக்கும், சிந்தனைப்பூர்வ ஆய்வுக்கும் உள்ளாக்கப் பட்ட உடனே, "ஐயோ, தேச விரோதம்" என்று கத்துவதே, அஞ்சி நடுங்குவதே, அந்தக் கருத்து மக்களிடம் விவாதிக்கப் பட்டால் எடுபடாது என்று இவர்கள் நினைக்கிறார்களோ என்று எண்ணத் தோண்றுகிறது. இவர்கள் பக்கம் நியாயம் இருந்தால் ஏன் இந்த நடுக்கம்?

புதிய கோணங்கி ! சொன்னது…

சும்மா சொல்லக்கூடாது ப்ளீச்சிங் அடிச்சி ஆடுறார். hats off.

மோகன் கந்தசாமி சொன்னது…

////சும்மா சொல்லக்கூடாது ப்ளீச்சிங் அடிச்சி ஆடுறார். hats off.////

தோடா, அடுத்த ஸ்பிலிட் வந்துட்டாரு. உங்களுக்கெல்லாம் மூஞ்சே கிடையாதாடா?

நசரேயன் சொன்னது…

நான் 100 வது

Thamil சொன்னது…

தனி நாடு கிடைத்தால் இந்திய இறைமைக்குள் கிடைக்காத காவிரி நீரை, சர்வதேச சட்டங்களூடாக, நாடுகளுக்கு இடையில் பிரித்து எடுக்க முடியும், 25 வருடமாக கிடைக்காத காவிரி தண்ணிரை உலக நீதிமண்றில் இலகுவாக எடுக்க முடியும்,
இந்திய இறைமுக்குள் கொல்லப்பட்ட 300 இந்திய மீணவர்களை ஹிந்தி ராணுவத்தால் காப்பாற்ற முடியவில்லை, தடுக்கவும் முன்வரவில்லை, தமிழ் நாட்டு இராணுவம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா?

ஆயுதம் இங்கு முக்கியம் இல்லை, பெரும் போபம் கொண்ட இளைஞர்கள் மத்தியில் இந்த கருத்து பதியபட்டாலே அது தானக வளர்ந்து விடும், இதன் வலி அளப்பெரியது, இரத்தம்,நித்தம் மரணம், சொந்த சகோதரிகளின் கற்பழிப்பு என நீண்ட துண்பமான வாழ்க்கையே தொடரும். கருத்தை விதைப்பதற்க்கு முன்னர் நினத்து பார்க்க வேண்டும்.

"எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவது இழுக்கு"

தமிழ்நாடு இந்தியாவுக்கு 23 மாநிலத்துடன் 24வது, அது தழக பிரச்சினையை தானாக கவனத்தில் எடுக்காது, கலஞர் சொல்லியும் கேளாது, ஜெயலலிதா சொன்னாலும் கேளாது, கங்கிரசுதான் தனது தலமைக்கு தொளிவு படுத்த வேண்டும்.செய்கிறார்களோ இல்லையோ கேட்பார்கள்.இந்திய இறையாமையை பற்றி பேசுவோரே இதைபற்றி சரியான அறிவுறுத்தல் மத்திய அரசுக்கு கொடுக்கமுன் வரவேண்டும்.

இருப்பதை இழந்து விட்டு பின் வருந்தி பயன் இல்லை....போர் என்பது நீண்ட வலி கொண்ட மரணம்.

Matra சொன்னது…

Bleachingpowder has very much said what I wanted to say.

These language terrorists are an impediment to society.

Living in the US, I have the tendency to keep comparing with India.

Most of the people (except the original Natives) though proud of their heritage think only as American. For them, though they may be of German/English/French/Italian origin, the US is all that matters. This is the reason the US has become the Superpower it is.

Nowadays, I see many in India owing allegiance to their masters in Saudi/Italy/China etc.

For so many years, Kashmiri Pandits have been massacred and driven out of their region. Have these people ever raised their voice in support of them ?. Then why do they expect people from other parts of India to support ?.

Sanjai Gandhi சொன்னது…

//தனித்தமிழ்நாடு தேசியவாதத்துக்கு எதிரானது என்றால் இந்திய இஸ்லாமியர்களை நாடுகடத்தச் சொல்வது எந்த வாதத்திற்கு எதிரானது ?//

இதை மத வெறியர்கள் தான் சொல்கிறார்களே ஒழொய ஒட்டு மொத்த இந்தியனும் சொல்வதில்லை. இந்திய மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் பாருங்கள். எத்தனை சதவீத இந்தியன் முஸ்லிம்களை நாடு கடத்த சொல்கிறான். உங்கள் வாதத்திற்கு உதவியாய் சில புல்லுறுவிகளை நீங்கள் ஆதரவுக்கு அழைத்தால் அதற்கெல்லாம் இந்திய தேசியவியாதிகள் என்ன செய்ய முடியும் கோவியாரே?

சில தேசியவியாதிகள் மீது எனக்கு கடும் கோபம் உண்டு. அந்த முட்டாள் பயல்கள் தான் சிமி போன்ற தீவிரவாத இயக்கங்களையும் பகிரங்கமாக அதரிக்கிறார்கள்.

// இந்தி - இந்து என்று சொல்வதெல்லாம் தேசிய வியாதி அல்லாமல் வேறு என்ன ?//

இந்தி என்று சொல்வது மொழி வெறி.. நாம் தமிழ் என்று சொல்வது போல். இந்து என்று பீற்றிக் கொள்வது மதவெறி. இதை எல்லாம் தேசியவாதமாய் நீங்கள் எடுத்துக் கொண்டால் அதற்கு இந்தியன் பொறுப்பாக மாட்டான்.

//உண்மையான தேசியவாதியாக இருந்தால் அந்த தேசியவியாதிகளின் சீழ் பிடித்த காலை வெட்டிவிட்டு வந்து பேசவும்.//

காலை என்ன? தலையை கூட வெட்டத் தயார் தான். ஆனால் இது சர்வாதிகார நாடு அல்ல. அவர்களால் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் நம் எதிர்ப்பை காட்டினாலே போதும்.

இந்தி மொழி வெறியர்கள் நினைத்தாலும் இன்று இந்தியை யார் மீதும் திணிக்கவும் முடியாது. இந்து மத வெறியர்கள் நினைத்தாலும் இந்திய முஸ்லிம்களை நாடு கடத்தவும் முடியாது.

ஆகவே இவர்களை எல்லாம் உங்கள் வாதத்திற்கு துணைக்கு அழைக்காதிர்கள் கோவியாரே...

Sanjai Gandhi சொன்னது…

//அய்யா சந்திராயன் விட்டது தமிழன் அண்ணாத்துரை!
நம்மை மெய் சிலிர்க்க வைத்த அணு குண்டு வெடித்தவர்கள் அப்துல் கலாம் சிதம்பரம். ஏனய்யா முடியாது. தாழ்வு மனப்பான்மையை கட்டிக்கொண்டு என்னத்தைக் கண்டோம்//

திரு.ஜோதிபாரதி,
திரு அண்ணாதுரை அவர்கள் தன் வீட்டு மொட்டை மாடியில் இருந்து சந்திரயானை அனுப்பவில்லை. அதே போல் திரு கலாம் அவர்கள் மெரினா பீச்சில் அணுகுண்டு வெடிக்கைவில்லை என்பதையும் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

நம் கூடவே சேர்ந்து விடுதலைப் பெற்ற பாகிஸ்தானும் நம்மால் விடுதலை பெற்ற பங்களாதேஷும் சந்திரனுக்கு செயற்கை கோள் அனுப்பவில்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

ஏன் அவர்களால் முடியவில்லை என்பதை தெரிந்துக் கொள்ளலாமா?

நீங்கள் சொன்ன 2 திட்டங்களுக்கும் தலைமை ஏற்றது தமிழர் தான். ஆனால் அதற்கு துணையாக எத்தனை நூறு பேர் இருந்தார்கள் என்று தெரியும் அல்லாவா?அவர்களில் எத்தனை தமிழர் இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா?

ப்ரம்மோஸ் ஏவுகணை திட்டம் கூட தமிழர் தலைமையில் தான் செயல்படுகிறது. ஆனால் அதுவும் தமிழர்களால் மட்டுமே செயல்பட வில்லை.. மற்ற இந்தியர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உழைப்பையும் மதிக்க வேண்டும்.

Sanjai Gandhi சொன்னது…

// xavier said...
சரியா கையாளத் தெரியாத முதுகெலும்பில்லாத இந்தியாவோட இருக்கிற வரைக்கும் தான் தண்ணிக்கு கெஞ்சணும். தனி நடு ஆயிட்டா நதி நீர் பங்கீடுல ஐ.நா தலையிட்டு ஆப்பு அடிக்கும். தெரியுமில்ல? ஆனா அது இங்க உள்ள சொ(கா)ங்கிரஸ் ஆட்சியாளர் மாதிரி கிடையாதுண்ணே. ரிவிட் அடிச்சிரும்//

ஹிஹி.. தர்ஷினி பின்னூட்டம் பார்த்ததும் என்னையே அறியாமல் சிரிச்சிட்டேன்.. இங்க எல்லாரும் ஓரளவுக்கு சீரியஸா விவாதம் பண்றாங்க. இவங்க என்னாடான்னா கலவரம் புரியாமல் கேள்வி கேக்கறாங்க..

ஆனா இந்த சேவியர் பின்னூட்டம் படிச்சதும் ரொம்ப நேரம் எனனால சிரிப்பை அடக்க முடியலை :)))

சேவியர் அண்ணே.. அது ஐநா இல்லை அஐநா.. இந்த சப்பை மேட்டர் கூட புரியாம வந்து காமெடி பண்றிங்களே..

குச்சிமிட்டாயும் குருவி ரொட்டியும் சாப்டற வயசுல எதுக்கு இந்த கலவர பூமியில கால் வைக்கிறிங்க.. போங்க.. போய் சாப்ட்டு தூங்குங்க.. :))

ஹய்யோ ..ஹய்யோ.. இருங்க நல்லா சிரிச்சிட்டு வந்து மத்த கமெண்ட்ஸ் படிக்கிறேன்.. :))

Sanjai Gandhi சொன்னது…

// xavier said...
என்ன ஓப்புதல் பெரிய ஓப்புதல். நேத்து வந்த கொசாவாவுக்கு கிடைச்சது இன்னைக்கு வர நமக்கு கிடைக்காதா? பூகோள ரீதியா முக்கியமான இடத்தில் அதுவும் இந்தியாவுக்கு (அதிக செலவில்லாமல்) ஆப்பு அடிக்க ஏதுவான இடம். அமேரிக்கா காரன் முதற்கொண்டு அத்தன பேரும் அணிவகுத்து நிப்பான் ரெடியா ஒப்புதல் பத்திரத்தோட.//

நண்பர்கள் ஜோதிபாரதியும் மோகனும் தயவு செய்து இந்த காமெடியை ஆமோதிக்குமாறு நடிக்கவும்.. இல்லை எனில் இவர் அடங்க மாடடார் என்றே தோன்றுகிறது. :))

//பூகோள ரீதியா முக்கியமான இடத்தில் அதுவும் இந்தியாவுக்கு (அதிக செலவில்லாமல்) ஆப்பு அடிக்க ஏதுவான இடம்.//

இதை சொன்ன நீ ஒருவேளை இந்தியாவில் இருந்தால் உடனே நாட்டை விட்டு ஓடிடு. உன்னை மாதிரி விஷ ஜந்துக்களை எல்லாம் உடனே கொல்ல வேண்டும்.
@#$#@$#@$%^$%^&^&**&*^%
#$%#%$#%$^$%^&%&^%&^
$#@%#%$#$%^%^&^&^^
(மன்னிக்கவும் கோவியாரே)

இந்தியாவுக்கு ஆப்படிக்கிறானாம்ல.. அடி செருப்பால... உன் கிட்ட இருக்கிற இந்திய அரசாங்க சான்றிதல்களை தூக்கி போடு மொதல்ல.. இந்திய அடையாளத்தை எல்லாம் அழிச்சிடு.. ஒழுங்கு மரியாதையா எதுனா ஒரு தீவிரவாத கும்பல்ல சேர்ந்துடு.

Sanjai Gandhi சொன்னது…

// xavier said...
இருவேறு நாடுகளுக்கிடையில் உள்ள தண்ணீர்(நதினீர்) பங்கீட்டில் சர்வதேச நீதி மன்றத்திற்கு போனால் அவர்கள் சொல்கிறபடி பங்கிட்டாக வேண்டும். இப்போது உச்ச நீதி மன்ற ஆணையை காற்றில் பறக்கவிட்டு ஜாலியாக இருப்பது போல் இருக்க முடியாது. மீறினால் அடுத்த விநாடி ஐ.நா. படை வந்திறங்கும்//

அடச்ச.. இது அடங்காது போல இருக்கே.. :)))

டேய் எதுனா அடையாளத்தோட வந்து தொலைங்கடா. நீங்க எல்லாம் நிஜமா இல்ல எரியிற கொள்ளிக்கு எண்ணெய் ஊத்தற பலாந்து பலாந்துங்களான்னே தெரியலையேடா.. :((

ILA (a) இளா சொன்னது…

//ஒருவர் ஒரு கருத்தைப் பேசிவிட்டாரே என்பதற்காக தூக்கில் போடவேண்டும் என்று சொல்லும் தேசியவியாதிகள்//
கருத்து சொன்னவங்களை எல்லாம் தூக்குல போடனும்னா கருத்து கந்தசாமிகள் பல கோடி இருப்பாங்க

வெண்தாடிதாசன் சொன்னது…

கண்ணப்பனை தூக்கில் போட சொன்ன கோமான்களே, இந்திய ராணுவத்தில் இருந்து கொண்டு சாமியாரிணியின் கூட்டத்திற்கு வெடி மருந்துகள் supply செய்த ராணுவ அதிகாரியை என்ன செய்யலாம் என்று கருத்து சொல்லுங்கள்.

வெண்தாடிதாசன் சொன்னது…

//தனி தமிழ்நாடு உருவானால் பல சிக்கல்கள் இருக்கிறது அதில் தண்ணீரும் ஒன்று. அதை புரிய வைக்க தான் நானும் நாலு மணி நேரமா டைப் அடிச்சிட்டிருக்கேன்.//

ஹி ஹி ஹி இது எல்லாம் ஒரு பெரிய matter ஆ?

நம்ம ஜூப்பர் ஸ்டாரு அல்லாத்தையும் சுளுவா solve செய்து விடுவார். அவரு ஆட்சிக்கு வந்தால் நம்ம ஊருதான் அமேரிக்கா ஆயி புடுமே. கேவலம் தண்ணி .....

கோவி. கண்ணன் சிங்கையிலும்தான் தண்ணீர் பிரச்சனை இருக்கின்றது. அதை எப்படி சமாளிக்கின்றார்கள் என்று இந்த கோமாளிகளுக்கு தெரியபடுத்துங்கள்.

Unknown சொன்னது…

இந்தியாவில் கருத்து சுதந்திரத்தை நிர்வாணமாக்கி தூக்கிலிட்டு வெகு நாட்களாகிறது என்று மட்டும் புரிகிறது.

சுரேஷ் ஜீவானந்தம் சொன்னது…

பிசாசு,
கருத்துரிமையையும், பேச்சு சுதந்திரத்தையும் மனிதர்கள் கண்டு கொள்ளாத நிலையில், பிசாசாகிய நீங்களாவது குரல் தருவது ஆறுதல் அளிக்கிறது :)

வாக்காளன் சொன்னது…

சஞ்சய், ப்ளீச்சீங்.

ஒரு வேளை(நடக்கவே நடக்காது என்று தெரியும்.. சும்மா பேச்சுக்கு) தனி தமிழ்நாடு வந்துவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்தியாவிற்கு சென்றுவிடுவீர்களா?:)

Sanjai Gandhi சொன்னது…

//வாக்காளன் said...

சஞ்சய், ப்ளீச்சீங்.

ஒரு வேளை(நடக்கவே நடக்காது என்று தெரியும்.. சும்மா பேச்சுக்கு) தனி தமிழ்நாடு வந்துவிட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்தியாவிற்கு சென்றுவிடுவீர்களா?:)//
சும்மா பேச்சுக்கு தானே நண்பா.. எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். :)

கோவி.கண்ணன் சொன்னது…

கருத்துக் கூறிய நல்ல உள்ளங்கள், கெட்ட உள்ளங்கள் அனைத்திற்கும் நன்றி !

மாநில தன் முடிவு தவறு என்றால் தேசிய வாதமும் தவறு.

தேசியவாதம் பேசுபவர்கள் எவரும் நதீநீர் பிரச்சனைகளுக்கோ, மும்பையில் துறத்தப்படும் பிற மாநிலத்தவர், மோடி மஸ்தானின் கோரப்பிடியில் இருக்கும் குஜராத் மற்றும் இந்தித்துவ, இந்துத்துவ நிலைக்கள் பற்றி யாதொரு கண்டனம் தெரிவித்து இதுவரை பதிவிடவில்லை. இங்கே மு.கண்ணப்பன் என்ற தமிழன் பேசிவிட்டானே என்று குற்றச்சாட்டும் 'சோ' கால்டு தமிழர்கள் அதையெல்லாம் கண்டித்து தனிப்பதிவிட்டு இங்கே வந்து கண்ணப்பனைப் பற்றி பேசுங்கள். ஒருபக்க ஞாயம் மட்டுமே பேசும் உங்கள் வாதம் ஏற்கத்தக்கதல்ல.

Sanjai Gandhi சொன்னது…

ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்று சொன்னால் அதைத் தவிர ஆனால் அதே போன்ற மற்றவை எலலாம் நமக்கு பிடித்திருக்கிறது என்று அர்த்தம் இல்லை கோவியாரே. :)

இந்தியா என்பது ஒரு அப்பார்ட்மெண்ட் என்று வைத்துக் கொண்டால் தமிழகம் என்பது அதில் ஒரு வீடு. நம் வீட்டுக் கழிவறையை சுத்தம் செய்யும் போது அதே வீட்டில் இருக்கும் இன்னொருவர் வந்து பக்கத்து ஃப்ளாட்டிலும் தானே இது போன்று நாறும் கழிவறை இருக்கு. முதலில் அதை போய் சுத்தம் செய்துவிட்டு வா. பிறகு நம் கழிவறையை சுத்தம் செய்யலாம் என்றால் என்ன அர்த்தம்?

எல்லாக் கழிவறைகளுமே சுத்தம் செய்ய வேண்டியவை தான். வெண்டுமானால் நீங்கள்தாக்கரேக்களை பற்றியோ மோடிமஸ்தானை பற்றியோ எதிர்கருத்துக்களுடன்( உள்ளதை சொன்னாலே எதிர்மறையாகத் தான் தெரியும் இவர்கள் விஷயத்தில் )ஒரு பதிவு எழுதுங்கள். தேசியம் பேசும் எத்தனைப் பேர் அதை எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம்.

கண்ணப்பன் சொன்னது தவறு என்று சொல்வதால் இதே ரீதியில் செயல்படும் மற்ற விஷ ஜந்துக்கள் எல்லாம் சரி என்று அர்த்தம் கொண்டால் எப்படி கோவியாரே. :)

சிமியை ஆதரிப்பவனைக் கூட முட்டாள் பயல்கள் என்று தானே சொல்கிறோம்.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//பொடியன்-|-SanJai 4:01 PM, November 07, 2008
ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்று சொன்னால் அதைத் தவிர ஆனால் அதே போன்ற மற்றவை எலலாம் நமக்கு பிடித்திருக்கிறது என்று அர்த்தம் இல்லை கோவியாரே. :)

இந்தியா என்பது ஒரு அப்பார்ட்மெண்ட் என்று வைத்துக் கொண்டால் தமிழகம் என்பது அதில் ஒரு வீடு. நம் வீட்டுக் கழிவறையை சுத்தம் செய்யும் போது அதே வீட்டில் இருக்கும் இன்னொருவர் வந்து பக்கத்து ஃப்ளாட்டிலும் தானே இது போன்று நாறும் கழிவறை இருக்கு. முதலில் அதை போய் சுத்தம் செய்துவிட்டு வா. பிறகு நம் கழிவறையை சுத்தம் செய்யலாம் என்றால் என்ன அர்த்தம்?

எல்லாக் கழிவறைகளுமே சுத்தம் செய்ய வேண்டியவை தான். வெண்டுமானால் நீங்கள்தாக்கரேக்களை பற்றியோ மோடிமஸ்தானை பற்றியோ எதிர்கருத்துக்களுடன்( உள்ளதை சொன்னாலே எதிர்மறையாகத் தான் தெரியும் இவர்கள் விஷயத்தில் )ஒரு பதிவு எழுதுங்கள். தேசியம் பேசும் எத்தனைப் பேர் அதை எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம்.

கண்ணப்பன் சொன்னது தவறு என்று சொல்வதால் இதே ரீதியில் செயல்படும் மற்ற விஷ ஜந்துக்கள் எல்லாம் சரி என்று அர்த்தம் கொண்டால் எப்படி கோவியாரே. :)

சிமியை ஆதரிப்பவனைக் கூட முட்டாள் பயல்கள் என்று தானே சொல்கிறோம்.. :)
//

SanJai,

வடிவேலுவின் 'என்ன கையை பிடிச்சு இழுத்தியாம் ?' என்று திரும்ப திரும்ப சொல்லி எல்லோரையும் டென்சன் ஆகும் டயலாக் தான் நினைவு வருகிறது.

இங்கே நான் தனித்தமிழ் நாட்டை ஆதரிக்கவில்லை. கண்ணப்பனும் மீது ஆவேசப்படுபவர்கள் ஏன் மற்ற காலியப்பன்கள் மீதும் ஆவேசப்படவில்லை என்றே கேட்கப்பட்ட்டது.

இந்துவாக்கள் பற்றி நிறைய பதிவுகள், கண்டனங்கள் ஏற்கனவே போட்டாகிவிட்டது. எந்த மதவெறியாளர்களும் நாம பதிவு போடுவதைப் பார்த்து உடனே மாறிவிடமாட்டார்கள். மதவெறியை முறியடிக்கும், கட்டுப்படுத்தும் சக்தி எழுத்துக்களுக்கு கிடையாது. ஆனால் எழுதுவாது எதற்கென்றால் மதவாதிகளின் கருத்துக்களுக்கு மாற்று கருத்து வைப்பது பிறர் அறிந்து கொள்வதற்கு மட்டுமே, மதவாதிகளை திருத்தும் நோக்கில் அல்ல.

Sanjai Gandhi சொன்னது…

//இங்கே நான் தனித்தமிழ் நாட்டை ஆதரிக்கவில்லை//

நன்றாகத் தெரியும் கோவியாரே. நீங்கள் மட்டும் இல்லை.. இந்திய தேசியத்தை எதிற்கும் பல நண்பர்களும் தனித் தமிழ்நாட்டை எதிர்க்கவில்லை என்பதை அறிந்திருக்கிறென். ( விரைவில் சில சந்தேகங்களுடன் தனி பதிவில் சந்திக்கிறேன் )

ஆனால் கண்ணப்பனை எதிர்ப்பவர்கள் எல்லாம் மற்றவர்களை ஆதரிப்பது போல் நீங்கள் சொல்லியிருப்பதாக ”உணர்ந்ததால்” அப்படி சொன்னேன்.

எனக்கும் கூட ஈழம், விடுதலை புலிகள், காங்கிரஸ் அடிவருடிகள் அல்லது எடுபிடிகள், இந்திய தேசியம், தனித் தமிழநாடு போன்ற விஷயங்களில் திரும்பத் திரும்ப ஒரே கருத்தை சொல்லிக் கொண்டிருப்பது ஆயாசமாக இருக்கிறது. உங்களைப் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே இந்த மாதிரி விஷயங்களில் தொடந்து பின்னூட்டம் இடுகிறேன். விரைவில் இதையும் நிறுத்திவிடுவேன்.

Sanjai Gandhi சொன்னது…

//பல நண்பர்களும் தனித் தமிழ்நாட்டை எதிர்க்கவில்லை //

மன்னிக்கவும்.. தனித் தமிழ்நாட்டை ஆதரிக்கவில்லை என்று வந்திருக்கனும். :(

கிருஷ்ணா சொன்னது…

//மதவெறியை முறியடிக்கும், கட்டுப்படுத்தும் சக்தி எழுத்துக்களுக்கு கிடையாது. ஆனால் எழுதுவது எதற்கென்றால் மதவாதிகளின் கருத்துக்களுக்கு மாற்று கருத்து வைப்பது பிறர் அறிந்து கொள்வதற்கு மட்டுமே, மதவாதிகளை திருத்தும் நோக்கில் அல்ல.//

Super..

லக்கிலுக் சொன்னது…

கோவி, மோகன், ஜோதிபாரதி, சேவியர்!

யாராவது ரொம்ப நல்லவர் உங்க கிட்டே மாட்டிக்கிட்டா இப்படியா மூத்திர சந்துலே போட்டு கும்முற மாதிரி கும்முறது. பாருங்க இனிமே இந்தப் பக்கமே வரமாட்டேன்னு சொல்லிட்டு ஓடிட்டார்!

தமிழனுக்காவது தேசியம்னு சொல்லிக்க தமிழ் தேசியம் இருக்கு. பார்ப்ஸுங்களுக்கு ஒழிஞ்சிக்க பொந்து மட்டும் தானே மிச்சம்? அதுதான் இந்திய தேசியம் பேசுதுங்க... :-)))))

லக்கிலுக் சொன்னது…

//பொடியன்-|-SanJai said...
//பல நண்பர்களும் தனித் தமிழ்நாட்டை எதிர்க்கவில்லை //

மன்னிக்கவும்.. தனித் தமிழ்நாட்டை ஆதரிக்கவில்லை என்று வந்திருக்கனும். :(
//

நல்லாவே கூத்து கட்றேளே அண்ணாச்சி! :-)

Bleachingpowder சொன்னது…

// இப்படியா மூத்திர சந்துலே போட்டு கும்முற மாதிரி கும்முறது. //

ஓ இந்த இடம் மூத்திர சந்தா??? தெரியாம போச்சே...எத்தனை பேருக்கு எத்தனை தடவ காயடிச்சாலும் புத்தி வரலைனா நான் என்ன பண்றது.

எல்லாத்தோட டவுசரையும் அவுக்கும் போது ஒளிஞ்சி நின்னு பாத்துட்டு போன வுடன பொட்ட மாதிரி பின்னாடி இருந்து பேசறீங்க. வெட்கமா இல்லை.

மதியாதர் வாசலை மிதிக்க கூடாது என்பதற்காக தான் அதற்கு பிறகு எந்த பின்னூட்டமும் இடவில்லை. திரும்பவும் சொல்றேன் சும்மா போறவனை சொறிஞ்சு விடாதீங்க. குடுத்து குடுத்து வாங்குனது எல்லாம் பத்தாதா.

Kannan,
Lets agree to disagree. Please tell your friends not to provoke me further.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

////இப்ப மட்டும் நெரம்பி வழியிதா?????//

தனி நாடு கிடைச்சா மட்டும் நெரம்பி வழிஞ்சிடுமா.///

கட்டாயம் தனித்தமிழ்நாடு அமைஞ்சா நிரம்பித்தான் வழியும். ஏன்னா நாம 3 தடவ போரிட்ட பாகிஸ்தானுக்கும் நமக்கும் இடையே பல நதிநீர் பங்கீடுகள் இருக்கு, அங்கயெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல. ஏன்னா நாடுகளுக்கு இடையே நதிநீர் பங்கீடு செய்வதற்கென பல சர்வதேச விதிமுறைகள் உள்ளன. அதை எல்லா நாடுகளும் இதுவரை ஒழுங்கா கடைபிடிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க.

நான் தனித்தமிழ்நாட்டை ஆதரிக்கவில்லை. ஆனால் தேசியம் பேசும் ப்ளீச்சீங் பவுடர் போன்ற தேசிய வியாதிகளுக்கு ஒரு கேள்வி. நீங்கள் பேசும் தேசியம் எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்படுகின்றது? கர்நாடாக தண்ணீர் தர மறுக்கும் போது, தமிழகத்தின் எல்லையில் உள்ள ஒகேனக்கலில் நாம் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முனையும் போது கூட அதை எதிர்க்கும் கர்நாடகா மாநிலத்து பாஜக, காங்கிரஸ் எல்லாம் உங்களைப் பொறுத்தவரை தேசியவாதிகள் தானே? அவர்களை என்ன செய்தீர்கள்? அவர்கள் செய்வது சரி என்றால் தேசியம் என்று நீங்கள் பேசுவது தவறு. அவர்கள் செய்வது தவறு என நீங்கள் ஒப்புக்கொண்டால், அதை கூட சரி செய்ய இயலாமல் தேசியம் என்னத்த ****கிட்டு இருக்கு? எங்கைய்யா போச்சு உங்க தேசியம்?

இங்க 2 பேரு தனித்தமிழ்நாடு வேணும்ணு பேசிட்டாங்களாம், அதுக்கு அவங்கள தூக்குலப் போடணுமாம். அப்ப மராட்டியத்துல பேயாட்டம் ஆடிகிட்டு இருக்க ராஜ் தாக்கரேயவும், அவரோட வெறிபிடிச்சத் தொண்டர்களும் ஆடுற ஆட்டத்துக்கு உங்க தேசியம் என்ன சொல்லுது? இத்தனைக்கும் அங்க ஆட்சியில இருக்கது நூறு ஆண்டுகாலப் பெருமை வாய்ந்த தேசியக் கட்சியான காங்கிரஸ். சும்மா புடிச்சு உள்ள வைக்கிறது, அதுக்கும் அவரு ஆளுங்க பேயாட்டம் ஆடுவாங்க, உடனே பிணையில வெளில உடுறது. இதத்தானே உங்க தேசியம் செஞ்சுகிட்டு இருக்கு?

இங்க வைகோ பேசுனதாலயோ, அல்லது கண்ணப்பண் பேசுனதாலயோ யாரும் உடனே ஆயுதத்த எடுத்துக்கிட்டு கிளம்பிடல. ஆனா அங்க மராட்டியத்துல இருக்க மத்த மாநிலத்துக்காரங்களுக்கெல்லாம் குலை நடுங்கி போனதுக்கு அப்றமும் தேசியம் சும்மாதானேய்யா இருக்கு?

வைகோ, கண்ணப்பண் போன்றவர்களின் பேச்சால விச விதை விதைக்கப்படுதுன்னு சொல்றீங்களே? அப்ப தேசியம் பேசிக்கிட்டே பாரதிய சனதா கட்சி செஞ்ச வேலைகள எல்லாம் என்ன சொல்லுவீங்க? அவங்கள எல்லாம் தூக்குல போட்டு கிழிச்சுட்டீங்க, இப்ப இங்க வந்து கழுமரம் நடப் போறீங்களா? தீவிரவாதத்த தீவிரமா வளர்த்ததே நம்ம தேசிய கட்சிகள்தான்.

நையாண்டி நைனா சொன்னது…

/*இந்தியா என்பது ஒரு அப்பார்ட்மெண்ட் என்று வைத்துக் கொண்டால் தமிழகம் என்பது அதில் ஒரு வீடு. நம் வீட்டுக் கழிவறையை சுத்தம் செய்யும் போது அதே வீட்டில் இருக்கும் இன்னொருவர் வந்து பக்கத்து ஃப்ளாட்டிலும் தானே இது போன்று நாறும் கழிவறை இருக்கு. முதலில் அதை போய் சுத்தம் செய்துவிட்டு வா. பிறகு நம் கழிவறையை சுத்தம் செய்யலாம் என்றால் என்ன அர்த்தம்?*/

ஆனால் நம்ம வீட்டை கழுவும்போது, அதற்கான முகாந்திரங்களில் ஈடுபட்டு இருக்கும் போது ஏன் முகாரி பாடுகிறீர்கள். நீங்கள் நடந்துக்கிற விதத்தை பார்த்தால் வீட்டு ரேஷன் கார்டில் பெயர் உள்ளவன் மாதிரி தெரியலையே. நம்ம பிள்ளை அடி வாங்கிட்டு வந்தா, இந்த தறுதலை இப்படித்தான் செய்யும், புத்தி கெட்டது, முட்டாள் என்றும், நீங்களே வசவு பாடுகிறீர்களே ஏன்? நீங்க அடுத்த வீட்டில போய் சண்டை கூட போட வேண்டாம்... ஒரு நியாயம் கேட்டு வரலாம் அல்லவா?

லக்கிலுக் சொன்னது…

//எல்லாத்தோட டவுசரையும் அவுக்கும் போது ஒளிஞ்சி நின்னு பாத்துட்டு போன வுடன பொட்ட மாதிரி பின்னாடி இருந்து பேசறீங்க. வெட்கமா இல்லை.//

டேய் மொட்டை!

உன் மூஞ்சை எவனாவது வலையுலகில் பார்த்ததுண்டா? பொட்டை மாதிரி ஒளிஞ்சிக்கிட்டு ப்லாக் பண்ணுறது நீயா இல்லை நானா?

மூஞ்சை காட்ட கூட தில்லு இல்லாத மொள்ளமாறி நியாயம் பேசுதோ? போடா போய் பூவும், பொட்டும் வெச்சிக்கிட்டு பொழைப்பை பாரு :-))))

லக்கிலுக் சொன்னது…

//குடுத்து குடுத்து வாங்குனது எல்லாம் பத்தாதா.//

ஆமாம் ஆமாம். இவரு குடுத்தாராம். நாங்க வாங்கிக்கிட்டோமாம். உன்னை மாதிரி பொட்டைப் பசங்களுக்கு மூஞ்சை மறைச்சிக்கிட்டு பேசிதானே பழக்கம். மவனே என்னிக்கு நீ மூஞ்சைக் காமிக்கிறியோ அன்னிக்கே அதை டிபன் பாக்ஸு மாதிரி நசுக்குறேன் வாடா :-))))))

கோவி.கண்ணன் சொன்னது…

லக்கி லுக் தென்கலை ஐயங்கார் மற்றும் ப்ளீச்சிங்கபவுடர் (ஐயர்?) தனிமனித தாக்குதல் இன்றி தொடரவும், முடியவில்லை என்றால் விடவும்.

கருத்துக் குப்பைகளை விட ஒருவரை ஒருவர் மதிப்பதே சரி என்ற நம்பிக்கைக் கொண்டவன் நான்.

வெண்பூ சொன்னது…

//
லக்கி லுக் தென்கலை ஐயங்கார் மற்றும் ப்ளீச்சிங்கபவுடர் (ஐயர்?)
//

ரணகளத்துலயும் இத மறக்க மாட்டீங்களே!!!! :)))

லக்கிலுக் சொன்னது…

//லக்கி லுக் தென்கலை ஐயங்கார் மற்றும் ப்ளீச்சிங்கபவுடர் (ஐயர்?) தனிமனித தாக்குதல் இன்றி தொடரவும், முடியவில்லை என்றால் விடவும்.

கருத்துக் குப்பைகளை விட ஒருவரை ஒருவர் மதிப்பதே சரி என்ற நம்பிக்கைக் கொண்டவன் நான்.//

கோ.வி.க. தென்கலை அய்யங்கார். கண்ட கபோதிகளும் இங்கே வந்து என் மீது சேறு வாறி இறைப்பதை நான் விரும்பவில்லை. முகம் காட்ட கூட தில்லு இல்லாத பொறம்போக்கு எந்த லெவலுக்கு தரம் இறங்குகிறானோ அந்த லெவலுக்கு நானும் தரம் இறங்க தயார். என் முகத்தில் சேறு வாறி இறைக்கும் என்றால் கவலையில்லை. நான் ஏற்கனவே சேற்றில் தான் இருக்கிறேன். :-)

லக்கிலுக் சொன்னது…

எலி அம்மணமா ஓடிடிச்சி போலிருக்கு :-))))

Sanjai Gandhi சொன்னது…

//லக்கிலுக் said...

//பொடியன்-|-SanJai said...
//பல நண்பர்களும் தனித் தமிழ்நாட்டை எதிர்க்கவில்லை //

மன்னிக்கவும்.. தனித் தமிழ்நாட்டை ஆதரிக்கவில்லை என்று வந்திருக்கனும். :(
//

நல்லாவே கூத்து கட்றேளே அண்ணாச்சி! :-)//

ரைட்டு.. ஊறுகாய் நக்கியாச்சா? :))
ஏன் ராசா.. ஒரு வார்த்தையை மாத்தி டைபடிச்சது தெரிந்ததும் அதில் உள்ள தவறை திருத்தி அடுத்த பின்னூட்டமா போட்டிருக்கேன்.. இதுல கூத்து கட்ட என்ன எழவு இருக்கு? உங்க கூட மல்லுக்கு நிக்க தான் ஆளிருக்கு இல்ல.. என்னை ஏன் ஓய் வம்புக்கு இழுக்கறேள்?

Sanjai Gandhi சொன்னது…

//வெண்பூ said...

//
லக்கி லுக் தென்கலை ஐயங்கார் மற்றும் ப்ளீச்சிங்கபவுடர் (ஐயர்?)
//

ரணகளத்துலயும் இத மறக்க மாட்டீங்களே!!!! :)))//

:))))))

Bleachingpowder சொன்னது…

//எலி அம்மணமா ஓடிடிச்சி போலிருக்கு :-)))) //

ஆமா, சிங்கத்தை மேட்டர் பண்ணீட்டு

லக்கிலுக் சொன்னது…

//ரைட்டு.. ஊறுகாய் நக்கியாச்சா? :))//

ஓ... நீரு ஊறுகாய் மட்டும் தான் நக்குவேளா?

//ஏன் ராசா.. ஒரு வார்த்தையை மாத்தி டைபடிச்சது தெரிந்ததும் அதில் உள்ள தவறை திருத்தி அடுத்த பின்னூட்டமா போட்டிருக்கேன்.. இதுல கூத்து கட்ட என்ன எழவு இருக்கு?//

வார்த்தை மாறுறது தப்பில்லே அண்ணாச்சி. பொருளே மாறுதுன்னா நடுங்கிப்போய் பின்னூட்டம் இட்டீங்கன்னு அர்த்தம்.



//உங்க கூட மல்லுக்கு நிக்க தான் ஆளிருக்கு இல்ல.. என்னை ஏன் ஓய் வம்புக்கு இழுக்கறேள்?//

அய்யய்யோ. மல்லு வேற கட்டுவீங்களோ? பயமாயிருக்கே...

Sanjai Gandhi சொன்னது…

ஐய்யய்யோ என் மச்சான் ஜோசப் வந்துடடானா? எலேய் எல்லாரும் ஓடுங்கடா டேய்.. :))

மாப்பி நான் இங்க சும்மா தான் மாப்பி வந்தேன்.. என் பேர்ல யாரோ கமெண்ட் போட்டிருக்கிறதா கேள்வி பட்டு தன் இங்க வந்தே.. :((

என் பேர்ல இருக்கிற இந்த கமெண்ட் மட்டும் தான் மாப்பி என்னோடது.. மத்ததெல்லாம் வேற யாரொ ஒப்பட்டாம்.. சாரி.. போலியாம்.. :))

லக்கிலுக் சொன்னது…

//ஆமா, சிங்கத்தை மேட்டர் பண்ணீட்டு//

மொதல்லே மூஞ்சிய காமிடா பொட்டை.. அதுக்கப்புறம் யாரு யாரை மேட்டரு பண்ணுறதுன்னு பாப்போம் :-)

Sanjai Gandhi சொன்னது…

//வார்த்தை மாறுறது தப்பில்லே அண்ணாச்சி. பொருளே மாறுதுன்னா நடுங்கிப்போய் பின்னூட்டம் இட்டீங்கன்னு அர்த்தம்.//

அட.. என்னா ஒரு கண்டுபிடிப்பு.. :)))

Bleachingpowder சொன்னது…

//அன்னிக்கே அதை டிபன் பாக்ஸு மாதிரி நசுக்குறேன் வாடா //

பென்சில் கோடு போட்ட மாதிரி இருந்துட்டு. எல்லாரும் சொன்னாங்க உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தினு அதுக்காக இப்படியா :)))))

லக்கிலுக் சொன்னது…

//அட.. என்னா ஒரு கண்டுபிடிப்பு.. :)))//

நீங்கள்லாம் கண்டுபுடிச்ச தேசியத்தை விட பெரிய கண்டுப்பிடிப்பா என்ன?

லக்கிலுக் சொன்னது…

//பென்சில் கோடு போட்ட மாதிரி இருந்துட்டு. எல்லாரும் சொன்னாங்க உங்களுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தினு அதுக்காக இப்படியா :)))))//

டேய் மூஞ்சக் காமிடா. நசுக்கறன்னா இல்லையான்னு பாப்போம்.

Bleachingpowder சொன்னது…

நான் இங்கே சிரிச்சுகிட்டே சண்ட போடறேன் அதனால தான் இதுவரைக்கு யாரையும் ஒருமையில் பேசாமல் இருக்கிறேன்.

உங்களுக்கு ரெண்டு பின்னூட்டம் டைப் அடிச்ச வுடனே பிபி எகிறுது. அதான் வாடா, போடா,மொள்ளமாறீன்னு கத்துறீங்க

Bleachingpowder சொன்னது…

//டேய் மூஞ்சக் காமிடா. நசுக்கறன்னா இல்லையான்னு பாப்போம்.//

ந்னா...வேண்டாங்கனா..ரொம்ப பயமா இருக்குங்னா.. அப்படி எல்லாம் பண்ணிறாதீங்கனா.. இனிமே நிங்க சொல்ற மாதிரியே நடந்துக்குறனா...போதுங்களானா...

ஹே..ஹேஹே...ஹேஹேஹே...

லக்கிலுக் சொன்னது…

//நான் இங்கே சிரிச்சுகிட்டே சண்ட போடறேன் அதனால தான் இதுவரைக்கு யாரையும் ஒருமையில் பேசாமல் இருக்கிறேன்.//

அய்யய்யோ. இல்லேன்னா தர்ப்பைய தூக்கி எறிஞ்சிட்டு அரிவாளை தூக்கிட்டு வெட்ட வந்துருவேளோ? அதிகபட்சம் சத்ருசம்ஹார‌யாகம் பண்ணுவேள். பண்ணிட்டுப் போங்கோ. :-)))))

லக்கிலுக் சொன்னது…

//ஹே..ஹேஹே...ஹேஹேஹே... //

அய்யோ பாவம். பேடித்தனமா சிரிக்க மட்டும் தான் முடியுது. அப்படியே சிரிச்சிக்கிட்டே ரோடு பக்கமா போ. யாராவது சேர்க்க வேண்டிய எடத்துலே சேத்துடுவாங்க.

Bleachingpowder சொன்னது…

நீங்க எந்த ஆஸ்பிட்டல்னு சொன்னா அங்கேயே வந்திடுவேன். ஒரே ஆஸ்பத்திரினா போரடிக்காது நம்ம இரண்டு பேரு ஜாலியா பேசிட்டு இருக்கலாம் ;)

லக்கிலுக் சொன்னது…

//நீங்க எந்த ஆஸ்பிட்டல்னு சொன்னா அங்கேயே வந்திடுவேன். ஒரே ஆஸ்பத்திரினா போரடிக்காது நம்ம இரண்டு பேரு ஜாலியா பேசிட்டு இருக்கலாம் ;) //

மொதல்லே மூஞ்சிய காமிச்சிட்டு பேசுடா வெண்ணை. ஏதோ ஓசியிலே ஒரு பிளாக்கர் அக்கவுண்ட் கிடைச்சிடிச்சின்னா நீயெல்லாம் பெரிய தேசியவாதி, கருத்தாளன் ஆயிடுவீங்களோ? மவனே என்னிக்கு உன் மூஞ்சி வெளியே தெரியுதோ. அன்னிக்கு உனக்கு இருக்குடி சேதி.

மோகன் கந்தசாமி சொன்னது…

டேய் நல்லவனே! இன்னும் இங்கதான் இருக்கியா நீ?


(கோவி உங்கள் இந்த பதிவிற்கு மட்டும் ஒரு விதிவிலக்கு அளியுங்கள் பிளீஸ்!)

Unknown சொன்னது…

தேசிய வாதிகளுக்கும் அப்பார்ட்மென்டிய வாதிகளுக்கும் வாழ்த்துகள்.
மூத்திர சந்தில் தினமும் பிளீச்சிங் பவுடரை தூவி விடுவது அந்த ஏரியாவில் வசிப்பவர்களுக்கு நல்லது. பிளீச்சிங் பவுடரை கக்கூஸ் பவுடர் என்றும் சொல்லலாம் என அண்ணன் செந்தழல் ரவி சொல்லியிருக்கிறார்.

Bleachingpowder சொன்னது…

//ஏதோ ஓசியிலே ஒரு பிளாக்கர் அக்கவுண்ட் கிடைச்சிடிச்சின்னா நீயெல்லாம் பெரிய தேசியவாதி, கருத்தாளன் ஆயிடுவீங்களோ?//

நான் ரொம்ப ஏழைங்கனா, உங்கள மாதிரியெல்லாம் தனியா வெப்சைட் தொடங்கறத்துகெல்லாம் வசதி பத்தாது.

///மவனே என்னிக்கு உன் மூஞ்சி வெளியே தெரியுதோ. அன்னிக்கு உனக்கு இருக்குடி சேதி.//

I liked this joke :)))

Unknown சொன்னது…

அடச்ச.. இது அடங்காது போல இருக்கே.. :)))

டேய் எதுனா அடையாளத்தோட வந்து தொலைங்கடா. நீங்க எல்லாம் நிஜமா இல்ல எரியிற கொள்ளிக்கு எண்ணெய் ஊத்தற பலாந்து பலாந்துங்களான்னே தெரியலையேடா.. :((

Bleachingpowder சொன்னது…

//டேய் நல்லவனே! இன்னும் இங்கதான் இருக்கியா நீ? //

ஆமாங்கனா...திரும்பவும் கூட்டிட்டு வந்துட்டாங்க... எல்லாரும் ரொம்ப மிரட்டறாங்கனா...ரொம்ப பயமாயிருக்குது...நீங்களாவது என்ன காப்பத்துங்கனா

மோகன் கந்தசாமி சொன்னது…

////தேசிய வாதிகளுக்கும் அப்பார்ட்மென்டிய வாதிகளுக்கும் வாழ்த்துகள்.////

வாழ்த்துக்கள்,

ஆனால் அப்பார்ட்மன்ட் வாதி பேசுவதில் சற்று விஷயம் இருக்கு. அவற்றில் பல ஏற்றுகொள்ளும்படி உள்ளன. அவர் செய்த மிஸ்டேக் என நான் கருதுவது, பதிவு பேசும் விஷயம் என்னவென்று விளங்கிக் கொள்ளாமால் தேசிய கும்மி அடிப்பது தான்.

மோகன் கந்தசாமி சொன்னது…

/////நீங்களாவது என்ன காப்பத்துங்கனா////

மிஸ்டர் பிளீச், ஒன்னு பண்ணுங்க, இணைய இணைப்பு இல்லாத ஒரு பிரதேசத்துக்கு கொஞ்சநாளைக்கு தலை மறைவாய்டுங்க! (இப்ப மட்டும் நான் என்ன தலைய வெளிய காட்டிட்டா இருக்கேன் என கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்!)

பேசாம, பீகார், யூ பி என்று தேசிய கும்மி கண ஜோரா அடிக்கற இடமா பாத்து டேரா போட்டுட்டிடீங்கன்னா ரொம்ப நல்லது. ஏன்னா பிரவிசிங் பாயன்ட்டுங்க கூட அங்க கெடைக்காது.

இல்லானா குஜராத் போய் குண்டு வெடிப்புல மாட்டிகிட்டு செத்துருங்க. ஐடியா ஓகே?

Sanjai Gandhi சொன்னது…

மிஸ்டர் கருத்து கந்தசாமி :)

சில பின்னூட்டங்களுக்கு பதில் அளித்ததால் அது தேசிய கும்மியாக போய் விட்டதே ஒழிய பதிவை புரிந்துக் கொள்ளாமல் எல்லாம் எதுவும் பேசவில்லை..

நீங்களும் ப்ளீச்சிங் பவுடரும் சில நல்லவர்களும் பேசி இருப்பதை பாருங்க.. பதிவுக்கு சம்பந்தம் இல்லாம பேசறது யார்னு புரியும்..

தேசியத்தை எதிர்ப்பது ஃபேஷனாக போச்சி போல.. :)

புதுசா அப்பார்ட்மெண்ட் வாதின்னு ஒரு விஞ்சானி புதுசா கண்டுபுடிச்சி இருக்கார். இந்த கைபுள்ளைங்க தொல்லை தாங்கலைடா சாமி.. :))

Athisha சொன்னது…

தீப்பெட்டி கிடைக்குமா...

Unknown சொன்னது…

//
இல்லானா குஜராத் போய் குண்டு வெடிப்புல மாட்டிகிட்டு செத்துருங்க. ஐடியா ஓகே?
//

என்ன மோகன் இப்படி சொல்லிட்டீங்க. இவங்க எல்லாம் தியாகிங்க. செத்தாலும் நாட்டுக்காக தான் சாவாங்க.
அதனால காஷ்மீர் பார்டர் போய் அங்க உள்ள பாகிஸ்தான் மிலிட்டரிகாரன சுட்டுகிட்டு.... சே இவங்களுக்கு அந்தளவுக்கு வீரம் இல்லயே.... அதனால அங்க உள்ள நம்ம மிலிட்டரிகாரனுக்கு தோச சுட்டு போட்டுட்டு பார்டர்ல இருக்கிற பயத்துலயே போய் சேர வேண்டியது தான்.

Unknown சொன்னது…

குஜாத்தில் விடுவதும் நல்லதுதான். இந்தியா என்னும் அபார்ட்மென்டின் டாய்லெட் குஜராத்.
எனவே பொருத்தமான இடம்தான். அபார்ட்மென்டியவாதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்.

Unknown சொன்னது…

//
பொடியன்-|-SanJai said...

புதுசா அப்பார்ட்மெண்ட் வாதின்னு ஒரு விஞ்சானி புதுசா கண்டுபுடிச்சி இருக்கார். இந்த கைபுள்ளைங்க தொல்லை தாங்கலைடா சாமி.. :))
//
கைப்புள்ளைங்க தொல்லையவிட பொடிப்புள்ளைங்க தொல்ல தாங்க முடியலடா சாமீ. :)))

Unknown சொன்னது…

என்ன அப்பார்ட்மென்டுல இவ்வளவு கூச்சல். வாட்ச் மேன் மண்ணு மோகன் ஜிங்கு எங்க போனா*.

Unknown சொன்னது…

//அதிஷா said...
தீப்பெட்டி கிடைக்குமா...
//

என்கிட்ட தீப்பெட்டி இருக்கு. உங்ககிட்ட தம் இருக்கா?

மோகன் கந்தசாமி சொன்னது…

////தேசிய கும்மியாக போய் விட்டதே ஒழிய பதிவை புரிந்துக் கொள்ளாமல் எல்லாம் எதுவும் பேசவில்லை.. ////

நல்லது.


////நீங்களும் ப்ளீச்சிங் பவுடரும் சில நல்லவர்களும் பேசி இருப்பதை பாருங்க.. பதிவுக்கு சம்பந்தம் இல்லாம பேசறது யார்னு புரியும்..////
சரிதான். பிளீச்சை அகற்றும் பணியில் சம்பந்தம் இல்லாமல் தான் பேசினேன். சம்பந்தத்தோடு பேசிய போதெல்லாம் கோவியின் கருத்தை ஒட்டித்தான் பின்னூட்டமிட்டுள்ளேன். நீங்கள் அவ்வாரல்லவே! ஏனெனில், கண்ணப்பன் செய்ததை கண்ணன் தற்காக்கிறார் என்ற எண்ணத்தில் நீங்கள் தேசியத்தை தூக்கி பிடித்ததை மறுக்க முடியுமா? நீங்கள் தாங்கிப்பிடித்தது என்ன தமிழர் ஏற்கின்ற, கான்ச்டிடூஷன் சொல்கின்ற தேசியமா? இல்லை, கொண்டைகள் கூறும் இந்து தேசியம். தமிழ் வெறிக்கு நிகரானது உங்கள் தேசியம்.

///அப்பார்ட்மெண்ட் வாதின்னு///

இதெல்லாம் ச்சும்மா ட்டமாஷுக்கு...உங்களிடமிருந்தும் புதிய கண்டு பிடிப்புகள் வரவேற்கப்படுகின்றன. :-))))

மோகன் கந்தசாமி சொன்னது…

/////தேசியத்தை எதிர்ப்பது ஃபேஷனாக போச்சி போல.. :)/////

இந்திய தேசியத்திற்கு நீங்கள் வரிந்து கட்டுவது சரியல்ல. இந்த வகை நாம் எதிர்த்தே ஆகவேண்டும். அதை புனிதமாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

மேலும், இந்த தேசியத்தை எதிர்ப்பது இப்போது ரொம்ப ஃபேஷனா இருக்கு. வரவேற்க வேண்டிய ஒன்று. தனிநாடு கோரிக்கை -யை அண்ணா கைவிடும் போது இருந்ததை விட இப்போது புண் புரையோடிப்போய் விட்டது. முன்பில்லாமல் இப்போது தேசியம் எதிர்க்கப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

மோகன் கந்தசாமி சொன்னது…

////அதனால அங்க உள்ள நம்ம மிலிட்டரிகாரனுக்கு தோச சுட்டு போட்டுட்டு பார்டர்ல இருக்கிற பயத்துலயே போய் சேர வேண்டியது தான்.////

ஹா ஹா, இதென்ன கலாட்டா!

மோகன் கந்தசாமி சொன்னது…

/////இந்தியா என்னும் அபார்ட்மென்டின் டாய்லெட் குஜராத்.//

அடிப்பின்றிங்களே பிசாசு சார்!

////என்ன அப்பார்ட்மென்டுல இவ்வளவு கூச்சல். வாட்ச் மேன் மண்ணு மோகன் ஜிங்கு எங்க போனா*.///
அவர் இப்ப அமெரிக்க கார்பொரேட் ஆபிஸ்ல செக்கூரிட்டியா நின்னுகிட்டு இருக்கார்!

நையாண்டி நைனா சொன்னது…

/*இந்தியா என்னும் அபார்ட்மென்டின் டாய்லெட் குஜராத்*/

அதனால் தான் அதன் காப்பாளர்... அள்ள வாங்க.. அள்ள வாங்க ... என்று கூவினாறா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//திரு.ஜோதிபாரதி,
திரு அண்ணாதுரை அவர்கள் தன் வீட்டு மொட்டை மாடியில் இருந்து சந்திரயானை அனுப்பவில்லை. அதே போல் திரு கலாம் அவர்கள் மெரினா பீச்சில் அணுகுண்டு வெடிக்கைவில்லை என்பதையும் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன்.

நம் கூடவே சேர்ந்து விடுதலைப் பெற்ற பாகிஸ்தானும் நம்மால் விடுதலை பெற்ற பங்களாதேஷும் சந்திரனுக்கு செயற்கை கோள் அனுப்பவில்லை என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

ஏன் அவர்களால் முடியவில்லை என்பதை தெரிந்துக் கொள்ளலாமா?

நீங்கள் சொன்ன 2 திட்டங்களுக்கும் தலைமை ஏற்றது தமிழர் தான். ஆனால் அதற்கு துணையாக எத்தனை நூறு பேர் இருந்தார்கள் என்று தெரியும் அல்லாவா?அவர்களில் எத்தனை தமிழர் இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா?

ப்ரம்மோஸ் ஏவுகணை திட்டம் கூட தமிழர் தலைமையில் தான் செயல்படுகிறது. ஆனால் அதுவும் தமிழர்களால் மட்டுமே செயல்பட வில்லை.. மற்ற இந்தியர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உழைப்பையும் மதிக்க வேண்டும்.//


வணக்கம் திரு சஞ்சய்,
வெட்டிப் பேசுதல், ஒட்டிப் பேசுதல் எல்லாம் பின்னூட்டத்தில் கேட்ட கேள்விகளுக்குப் பதிலும், இருட்டடிக்கப் பட்ட, மறைக்கப் பட்ட அல்லது திரிக்கப் பட்ட கருத்துக்களுக்கு விளக்கமே தவிர, வேறொன்றும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மொட்டை மாடியில ராக்கெட் விட, கடற்கரையில் அணுகுண்டு வெடிக்க அவர்கள் ஒன்றும் தெரியாவர்கள் அல்ல. அடிப்படை இல்லாத உதாரணத்தைச் சொல்லி பூசி மொழுக வேண்டாம். திரு.கஸ்தூரி ரங்கன்,மாதவன் நாயர், கலாம், சிதம்பரம் இவர்களிடம் கேட்டுப்பாருங்கள் எங்க விடலாம் என்று சொல்வார்கள்.


தமிழக பொறியாளர்களை, தொழில் நுட்ப வல்லுனர்களை அவமானப் படுத்தக் கூடிய கருத்தை இவ்வளவு எளிதாகச் சொல்கிறீர்கள்.
தமிழகத்தின் கல்வி மற்றும் தொழில் நுட்ப வளம், மனித வளத்தை பாகிஸ்தான் (இவன் அணு குண்டு வெடிச்சுட்டான் தெரிஞ்சுக்குங்க) மற்றும் பங்களா காரனோடு ஒப்பிடுவதிலிருந்தே, நீங்கள் எவ்வளவு விளங்கிக் கொண்டீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அண்ணாதுரை, கலாம், சிதம்பரத்துக்கு பின்னால் நூறு பேர் இருந்ததாகச் சொன்னீர்கள். உண்மைதான். காந்திக்குப் பின்னால் லட்சோப லட்சம் பேர் இருந்தார்கள். அவர்களையும் கொஞ்சம் கௌரவியுங்களேன். காந்தி நேரு இவர்களைப் புகழ்வதிலேயே காலங்கள் கடப்பது ஏனோ?

hemamalini சொன்னது…

sema time pass.. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா 7:34 PM, November 07, 2008
தீப்பெட்டி கிடைக்குமா...
//

ஒரு பீடியை இங்க தள்ளுங்க !

Unknown சொன்னது…

//
அவர் இப்ப அமெரிக்க கார்பொரேட் ஆபிஸ்ல செக்கூரிட்டியா நின்னுகிட்டு இருக்கார்!
//
அட! அந்த *** பொழப்ப பார்சி-பண்டிட் க்ராஸ் குடும்பத்துகிட்ட இருந்து புடுங்கிகிட்டாரா?

TBCD சொன்னது…

போலீசுகார்..போலீசுகார்...இங்கே இரையா ஆண்மைப் பற்றி தப்பு தப்பா பேசுறாங்க...சும்மா ஒரு பத்து நாள் உள்ளே வைச்சி அனுப்புங்க....

நசரேயன் சொன்னது…

எல்லோரும் சோடா குடிக்க போயாச்சா?

நசரேயன் சொன்னது…

/*
போலீசுகார்..போலீசுகார்...இங்கே இரையா ஆண்மைப் பற்றி தப்பு தப்பா பேசுறாங்க...சும்மா ஒரு பத்து நாள் உள்ளே வைச்சி அனுப்புங்க....
*/
ராணுவத்தை வரவலைகனும் போல இருக்கே

Unknown சொன்னது…

அது எப்படிப்ப ச்ஞசய் , சலிக்காம பதில் சொல்ற?? ரொம்ப பொறுமைப்பா... ரகசியம் என்னனு சொல்லுஙக்ளேன்..
எங்களுக்கு இந்த கமென்ட்ஸ் படிக்கவே கண்ண கட்டுது..


ஸ்டேன் ஜோ STANJOE நு ஒருத்தர் வருவாரெ.. அவர கானோமே... விளாவாரிய பேசிட்டு போவாரு , அவர் கானோமே..

நசரேயன் சொன்னது…

நான் 175 வது

குடுகுடுப்பை சொன்னது…

அதிஷா 7:34 PM, November 07, 2008

தீப்பெட்டி கிடைக்குமா...


வீடே பத்திகிட்டு எரியுது இந்த சண்டைல நீங்க தீப்பெட்டி கேட்டு நக்கலா.

தனிதமிழ்நாடு போன்ற விவாதங்களை விட்டுவிட்டு ஈழத்தமிழர்களின் உண்மையான பிரச்சினையை அலசுங்கள். இது அனைவருக்கும் நேர விரயம் என்றே தோண்றுகிறது.

Unknown சொன்னது…

//
ஸ்டேன் ஜோ STANJOE நு ஒருத்தர் வருவாரெ.. அவர கானோமே... விளாவாரிய பேசிட்டு போவாரு , அவர் கானோமே..
//

என்னது.... ராஜீவ கொன்னுட்டாங்களா??

Unknown சொன்னது…

//
போலீசுகார்..போலீசுகார்...இங்கே இரையா ஆண்மைப் பற்றி தப்பு தப்பா பேசுறாங்க...சும்மா ஒரு பத்து நாள் உள்ளே வைச்சி அனுப்புங்க....

//

ஹா... ஹா.............
:)

ஆளாளுக்கு தனி நாடு கேட்டு கேட்டு அந்த ஆண்மையே போயிடுச்சாமே!!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்