பின்பற்றுபவர்கள்

27 நவம்பர், 2008

தமிழில் தேசிய கீதம் - இராமகோபலன் ஆ'வேஷம் !

இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் அறிக்கை: புதுச்சேரியில், "ஈழத்தமிழர் இன்னல் நீங்க போர் நிறுத்தம் ஒன்றே தீர்வு' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி, சேகர் ஆகியோர், பிரிவினையைத் தூண்டும் பேச்சுக்கள் பேசி இருப்பதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

"தமிழகம் பாகுபட்டு விடும், தமிழில் தேசிய கீதம் பாடக்கூடிய நேரம் விரைவில் வரும்' என்று பேசிய பேச்சு, சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. ஞானசேகரன், சுதர்சனம் உள்ளிட்ட பிரிவினைவாத எதிர்ப்பு காங்கிரஸ் தலைவர்கள், இயக்குனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி அரசை வற்புறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்கள் முப்பது ஆண்டுகளாக போராடி வருகின்றனர் எனக் கூறும் இவர்கள், முப்பது ஆண்டுகள் தமிழகத்தில் சினிமா தானே எடுத்துக் கொண்டிருந்தனர். சினிமாவில் மார்க்கெட் சரிந்து, முகவரி இல்லாமல் போய்விட்ட இவர்கள், புலி ஆதரவு முகமூடி அணிந்து, பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்கி, அவரை தலைவராக சித்தரிப்பது கேவலத்திலும், கேவலம். தமிழகம் பிரிவினையை ஏற்றுக்கொள்ளாது (தமிழகம் இராஜஜி ஆட்சியிலா இருக்கு ?). கருத்து சுதந்திரம், பேச்சுரிமை என்றெல்லாம் உதாரணம் காட்டி எது வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை (இப்படித்தான் பேசி பேசி சூத்திர பசங்க ஆட்சியை பிடிச்சு நாட்டை கெடுத்துட்டானுங்க) நாளை நாட்டிற்கு பெரும் தலைவலியாக அமைந்து விடும்.

அந்த கருத்தரங்கில் பேசப்பட்ட பேச்சுக்களை உளவுத்துறை மத்திய அரசுக்கு தெரிவித்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காஷ்மீர், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலங்களில் தனி நாடு கோரிக்கை வைத்து பேசியபோது, நடவடிக்கை எடுக்கத் தவறிய காரணத்தால் இன்று அங்கு பிரிவினைவாதம் பேயாட்டம் ஆடுகிறது (அங்கெல்லாம் பிஜேபி, இந்துத்துவாக்களுக்கு அட்வைஸ் செய்யும் கடமை இல்லையா ? ஐயோ பாவம்) . எனவே, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தமிழர்கள் படும் துயங்களுக்கு குரல் கொடுக்காமல், இந்த சினிமாக்காரர்கள், இலங்கை பிரபாகரனுக்கு துதி பாடுவதற்கு காரணம், இனப்பற்றா, இல்லை பணப்பற்றா?பாரதிராஜா, செல்வமணி, வி.சேகர் போன்ற கடல் கடந்த தேசபக்தர்கள், இலங்கையில் சென்று போராடினால் பொருத்தமாக இருக்கும்.இவ்வாறு ராம.கோபாலன் அருள்வாக்கினார்.

- நன்றி தினமலர்
******

தமிழக சு.சாமி இராம கோபல் ஐயா,

அப்படியே மும்பை பக்கம் போய் இப்படி ஒரு அறிவுரையை ராஜ் தாக்ரே ஐயாவிடம் சொல்லி கண்டனம் தெரிவித்துவிட்டு வரலாம். மாராட்டியர் தவிர மாற்றாற்கு இங்கிடமில்லை என்று பல மாநில மக்களின் உடமைகள் உயிர்கள் கூட அங்கு தான் சூறையாடப்படுகிறது. இந்து... இந்து, இந்தியா இந்து நாடு என்று கூவி தேசியவாதம் பேசி இந்து மதம் காப்பதற்கு எடுக்கும் முயற்சியைப் போலவே, நேராக நேபாளத்திற்கு சென்று நீங்களெல்லாம் போராடி இருந்தால், உலகிலேயே 'ஒரே இந்து நாடு' என்று நீங்களெல்லாம் பெருமை பொங்க கூறிய இந்து நேபாளத்தை மாவோயிஸ்டுகளிடமிருந்து மீட்டு இருக்கலாம், செய்தீர்களா ? இனி செய்வீர்களா ?

பாபர் மசூதியை இடிக்க மண்வெட்டியை தூக்கிக் கொண்டு ஓடி மதச்சார்பு பிரிவினை வாதம் பேசும் தாங்களெல்லாம் தமிழரென்று கூறிக் கொண்டு தமிழினத்துக்காக போராடுவதற்கு, ஆதரவாக இருப்பதற்கு எதிராக எச்சில் உமிழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கிறானே அதுதான் தமிழன். இதே போல் மாநிலத்துக்கு தனிக்கொடி கண்ட கர்நாடகத்தில் இதே சூழல் இருந்திருந்து உங்களைப் போன்றவர்கள் அங்கே அட்வைஸ் மழையும், கண்டன ஆசிட்டும் பொழிந்திருந்தால் உங்களையெல்லாம் அவர்கள் தக்கபடி பாராட்டி இருப்பார்கள். தமிழன் இழிச்ச வாயந்தேன்.

8 கருத்துகள்:

பொன்னர் சொன்னது…

இராமகோபாலன் ஐயரே ஈழத்தில் எத்தனை இந்துக்கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இது உங்கள் ஆரியக் கண்ணுக்குத் தெரியாதா?

நையாண்டி நைனா சொன்னது…

/*Trisha said...
இராமகோபாலன் ஐயரே ஈழத்தில் எத்தனை இந்துக்கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர் இது உங்கள் ஆரியக் கண்ணுக்குத் தெரியாதா?*/

ஓ... ய்... அவாள்லாம் குறுக்காலே கயிறு தரித்தவாளா... அப்படின்னா சொல்லும் ஓய்...

நசரேயன் சொன்னது…

செய்தியும் விளக்கமும் அருமை

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தலைப்புக்கு மட்டும் இந்த கமெண்டு!
நீங்கள் ஆ"தரிக்கிரீங்களா" இல்லையா?
இந்த முதியவரும் ஓர் மின்னணு எஞ்சினியராமே?(அணுகுண்டு ஏதும் வச்சிருந்தாலும் இருப்பார், அப்பப்ப வெடி மட்டும் வெடிப்பார்,சு.சுவாமி மாதிரி, கவுண்டமணிய விடுறமாதிரி விட்டுடனும்)
நிறைய ஸ்மெல்லி போடுறீங்க கோவியாரே!
பரவாயில்லை கோவிக்காம வாங்க!
நாம மெட்ராஸ் உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண மந்திரத்தில சாப்பிடுவோம்.
புரியலைன்னா பரவா இல்லை.

தமிழ் ஓவியா சொன்னது…

பேசுனதுக்கே ஆவேசம் என்றால் இந்து என்று சொல்லிகொண்டு மாலேகான் பகுதியில் குண்டு வைத்த இந்து தீவிரவாதிகளைக் கண்டு வீரத்தை துறந்த இந்த துறவிக்கு ஆவேசம் வராதது ஏன்? அதில் சம்பந்தபட்டவர்களில் பார்பனர்களும் இருப்பதாலா?

கன்னியாகுமரியிலே பார்ப்பானுகு தேள் கொட்டினா காஸ்மீர் பார்ப்பான் மருந்து கொடுப்பானாம்.

பார்ப்பானின் புத்திஎப்போதும் இப்படித்தான் இருக்கும்.

மணிகண்டன் சொன்னது…

***************** கன்னியாகுமரியிலே பார்ப்பானுகு தேள் கொட்டினா காஸ்மீர் பார்ப்பான் மருந்து கொடுப்பானாம்.

பார்ப்பானின் புத்திஎப்போதும் இப்படித்தான் இருக்கும் ***********

பிரமாதம் ஓவியா. இப்ப இருக்குற population distributionla கன்னியாகுமரி/காஷ்மீர் ஒத்து வரல. நீங்க இன்னும் கொஞ்சம் பரந்து யோசிங்க.

Vishwa சொன்னது…

தமிழில் தேசிய கீதம் - இராமகோபலன் ஆ'வேஷம் !
இந்து... இந்து, இந்தியா இந்து நாடு என்று கூவி தேசியவாதம் பேசி இந்து மதம் காப்பதற்கு எடுக்கும் முயற்சியைப் போலவே, நேராக நேபாளத்திற்கு சென்று நீங்களெல்லாம் போராடி இருந்தால், உலகிலேயே 'ஒரே இந்து நாடு' என்று நீங்களெல்லாம் பெருமை பொங்க கூறிய இந்து நேபாளத்தை மாவோயிஸ்டுகளிடமிருந்து மீட்டு இருக்கலாம், செய்தீர்களா ? இனி செய்வீர்களா ?"
----------------கோவிகண்ணன்...

மொத்தத்தில் நீங்களும் விஜயகாந்த் போல Raincoat அணிந்துகொண்டு உலகில் எங்கெல்லாம் பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் போய் சுட்டுவீழ்த்தவேண்டும் என்குறீர்கள். இலங்கையில் பிரச்சனை என்றால் தமிழன் என்ற உணர்வு என்பீர்கள். ஆனால் தேசியம் பேசினால் நீ ஏன் நேபாளம் போகவில்லை என்று கேள்வி கேட்பீர்கள்? என்ன ஒரு லாஜிக்.கண்டிப்பாக இதை போன்ற பதிவுகளை போடுங்கள்...அப்போதுதான் BLOG என்றாலே சீரியஸ் விஷயம் என்ற என்னுடைய நினைப்பு உடைந்து உங்களது பதிவுகள் சிரிப்பூட்டும்.

அன்புடன்...
விஷ்வா

மீரா ஜமால் சொன்னது…

இராம கோபலன் போன்ற மதவியாபாரிகளின் மதவெறிபேச்சுகளுக்கு தக்க தண்டனை கொடுத்தாலே அவா வாயை முடிப்பா.

(அவாளுக்கு தான் ஜெயில் என்றாலே பயமாச்சே)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்