பின்பற்றுபவர்கள்

28 நவம்பர், 2008

அமெரிக்காவிற்கு இருக்கும் வீரம் ஏன் இந்தியாவுக்கு இல்லை ?

தீவிரவாதிகளின் பயிற்சிக்களம் என்று கண்டறிந்து தலிபான்களை துடைத்தொழிக்க முடிவெடுத்த பின், அனைத்துலக ஆலோசனைகளோ, ஐநா நைனாக்களையோ கலந்து ஆலோசிக்காமல் 'என் நாட்டு பாதுகாப்பிற்கு...எவரிடம் ஆலோசனை கேட்கவேண்டும் ?' என்று கேள்வியையே முடிவெடுவாக எடுத்து ஆப்கான் தலிபான்களை ஒழித்துக் கட்டியது அமெரிக்கா. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சதாம் உசேனை அரசாங்கத்தையும் காலி செய்து ஈராக்கில் தனக்கு ஏதுவான ஒரு பொம்மை அரசாங்கத்தை ஏற்படுத்துக் கொண்டது.

உலகில் 5 ஆவது பெரிய இராணுவப் படை உடைய இந்தியா, பாகிஸ்தானில் நுழைந்து தீவிரவாதிகளை அழிப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்? உண்மையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் பயறிசிக் களங்களையெல்லாம் இந்திய அரசு வீடியோ ஆவனமாக பதிவு செய்து உலக நாடுகளுக்கு கொடுத்து இருக்கிறது, பின்லேடனைக் காட்டும் காட்சிகளின் போது கடுமையாக தீவிரவாதிகள் பயிற்சி பெரும் காட்சிகளைக் காட்டுவார்கள், இவையெல்லாம் இந்திய அரசு உளவு துறை மூலம் பெற்ற படங்கள் தான் என்று சொல்கிறார்கள். அதாவது பாகிஸ்தானில் தீவிரவாதிகள் செயல்படும், பயிற்சி பெரும் இடங்கள் பலவற்றை இந்திய அரசும், இராணுவம் அறிந்தே வைத்திருக்கிறது.

முன்பு மறைமுகமாக இந்தியா மீது பாகிஸ்தான் கார்கில் போரை நுழைத்த போது அதை வெற்றிகரமாக முறியடித்ததைத் தொடர்ந்து அதற்கு வருத்தம் தெரிவிப்பது போல் வாஜ்பாய் அரசு பர்வேஷ் முஷாரப்புக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளித்தனர். பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து என்றாவது இந்திய இறையாண்மைக்கு மதிப்பு கொடுத்து நடந்திருக்கிறதா என்றால் அப்படி நடந்ததே இல்லை.

மும்பையில் குண்டு வைத்த தாவூத் இப்ராகிம் சுதந்திரமாகத்தான் பாகிஸ்தானில் உலா வருகிறான். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று பேசும் தேசிய வியாதிகள் தாவூத் இப்ராகிமை பிடித்துவருவது பற்றி வாய்த்திறப்பதே இல்லை, அவனை சீண்டாமல் இருப்பதே அரசியல்வாதிகளுக்கும் பெரிய பெரிய இந்தி சினிமா தலைகளுக்கும் நல்லது என்று விட்டு வைத்திருப்பதாகவே தெரிகிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்தும், உதவியும் வரும் பாகிஸ்தானிடமிருந்து தாவூத் இப்ராஹிமை பிடித்துவருவதோ, தீவீரவாதிகளின் பயிற்சிக் கூடத்தை அழிப்பது இந்தியாவிற்கு மிகவும் கடினமான செயலா ? ஆனால் இதையெல்லாம் முன்றாம் நபர் தெரியாமல் பாகிஸ்தான் செய்து அதில் வெற்றி பெற்றும் வருகிறதே ?

இலங்கையில் விடுதலைபுலிகளை அழிக்க உதவுகிறோம் என்ற போர்வையில் அப்பாவி தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் அழிப்பதற்கு சிங்களர்களுக்கு உதவும் இந்திய அரசு, பாகிஸ்தான் பக்கம் கவனம் செலுத்தாமல் இருக்க என்ன காரணம் ? வழக்கம் போல் அடுத்த குண்டுவெடிப்பிற்கு ஆசிர்வாதமாக கண்டன விழாவைக் கொண்டாடுவதுடன் முடித்துக் கொள்கிறார்கள்.

பெரும அளவில் இந்தியர்கள் இந்திய இராணுவத்தின் மீது நம்பிக்கை இழந்துவருகிறார்கள், அமைதிப்படையாக அனுப்பப்பட்டவர்கள் அஸ்ஸாமிலும் ஈழத்திலும் பாலியல் வன்முறைகளை நிகழ்த்திய செயல்களைத்தான் பலரும் நினைவு வைத்திருக்கின்றனர். எல்லையில் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கிவிட்டு, அணிவகுப்பு நடத்துவதை தற்காலிககமாக நிறுத்துவிட்டு இந்திய இராணுவம் என்றால் பாகிஸ்தான் பயந்து நடுங்கச் செய்ய வேண்டும், நாட்டின் 60 விழுக்காடு வருமானம் இராணுவத்துக்காக செலவிடும் போது, அடிக்கடி நடக்கும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு மூல காரணமான பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயிற்சிக்கூடங்களை அழித்தால் தான், ஏழை எளியோர் வரிப்பணம் முறையாக செலவிடப்படுகிறது என்ற நம்பிக்கையே பிறக்கும்.

மும்பையில் நடந்திருப்பது பொருளாதார சீர்குழைவுக்கான தாக்குதல் என்பதால் இந்தியாவின் அசுரவளர்ச்சியை தடுப்பதற்காக பல்வேறு நாடுகளால் நடத்தப்பட்ட சதித்திட்டமா ? என்று ஆராயவேண்டியதன் தேவையும் இருக்கிறது.

இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்ற ஒரு நிலையை உருவாகினால் அந்நிய முதலீடுகள் குறையும், இந்திய பொருளாதார வளர்ச்சி தடைபடும் என்ற பொறாமை எண்ணத்தில் பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் கூட இது நடந்திருக்க வாய்ப்புள்ளதாக நான் நினைக்கிறேன்.

*****

இது லோக்கல் பாலிடிக்ஸ்.....

இதுதான் சமயம் என்று பொடோ இருந்தால் இதெல்லாம் நடக்காது என்று ஒரு கும்பல் பிரச்சாரம் தொடங்கி இருக்கிறது, பொடா இருந்தால் கடல்வழியாக ஊடுறுவிய தீவிரவாதிகளின் கால் மயிரை பிடித்து இழுத்து நிறுத்திவிடுமா ? பொடா சட்டத்தால் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் யார் தெரியுமா ? வைகோவும், நக்கீரன் கோபாலும், 14 வயது சிறுவனும் தான். நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு சிறுவன் விடுதலை செய்யப்பட்டான். பொடோ சட்டம் என்ற பெயரில் அரசியல் வாதிகள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பிடித்துப் போட்டார்கள், வெறொன்றும் நடக்கவில்லை. தற்கொலை படையாக ஊடுறுவல் செய்பவனை பொடோ என்ன செய்யும் ? அவர்களது கோவணத்தைக் கூட பொடோ தீண்டமுடியாது

தீவிரவாதம் உலகெங்கிலுமே பெரும் சவாலாகத்தான் இருக்கிறது, ஆனல் எங்கும், இங்கும் பரப்பப்படுவது 'துலுக்கன் குண்டு வச்சிட்டான், துலக்கனை ஒழித்துவிட்டால் எல்லா சரியாகிடும்' என்பது போல் கிடைக்கும் சந்தில் இந்துத்துவா சிந்து பாடப்படுகிறது. இந்தோனிசியா கூட இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுதான், அங்கு பாலியில் குண்டுவெடித்து 100க் கணக்கானோர் பலியாயினர். இஸ்லாமியர் என்பதற்காக குண்டு வைத்தவனை அந்த அரசு கொஞ்சவில்லை, குற்றத்தில் தொடர்பிருந்த மூவருக்கும் தண்டனையாக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

பாகிஸ்தானில் கூட நாள்தோறும் மசூதிகுள்ளேயே குண்டுவெடிக்கிறது, இதற்கும் 'இந்திய துலுக்கன் தான் காரணமா ?' குண்டுவெடிக்கும் போதெல்லாம் 'துலுக்கனை ஒழிக்க வேண்டும்' என்று சொல்லும் இந்து அமைப்புகளும் அதன் ஆதரவாளர்களும் 'மலேக்கான் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது யார் என்று அறிந்தும்' போது மல்லாக்க படுத்து இருந்தது ஏன் ?

84 கருத்துகள்:

சி தயாளன் சொன்னது…

//ஆப்கான் தலிபான்களை ஒழித்துக் கட்டியது அமெரிக்கா. //

சும்மா பகிடிதானே இது...?

உள்துறைப் பாதுகாப்பில் இந்தியா கவனம் செலுத்தாமல்..கோஷ்டி மோதல்களுக்கும்..அரசியல் வாதிகளின் கொடிபிடித்தல்களுக்கும் வால் பிடித்தால் இதுதான் நடக்கும்...பாதிக்கப் படப் போவது சாதாரண பொதுமக்கள் தான்...

பொடோ இருக்கும் போதுதான் பாராளுமன்றம் தாக்க்கப் பட்டதாக ஞாபகம்...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமையான பதிவு கோவி...
.சிந்தனையை தூண்டும் பதிவு

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

// விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று பேசும் தேசிய வியாதிகள் தாவூத் இப்ராகிமை பிடித்துவருவது பற்றி வாய்த்திரப்பதே இல்லை, அவனை சீண்டாமல் இருப்பதே அரசியல்வாதிகளுக்கும் பெரிய பெரிய இந்தி சினிமா தலைகளுக்கும் நல்லது என்று விட்டு வைத்திருப்பதாகவே தெரிகிறது.//

தாவூத் என்ன‌ ராஜிவ்க‌ந்திய‌வா கொன்னாரு? சும்மா ஏதோ ரோட்ல‌ போன‌வ‌ன் வ‌ந்த‌வ‌ன‌த்தானே குண்டு வைச்சு கொன்னாய்ங்க‌? இந்தியாவுல‌ ராஜிவ் உசுரு ம‌ட்டும்தானே வெல்ல‌க்க‌ட்டி, ம‌த்த‌வ‌ன் உசுரு எல்லாம் ம‌** தானே. அது எல்லாம் இருந்தா என்ன? போனா என்ன?

//இதுதான் சமயம் என்று பொடோ இருந்தால் இதெல்லாம் நடக்காது என்று ஒரு கும்பல் பிரச்சாரம் தொடங்கி இருக்கிறது, பொடா இருந்தால் கடல்வழியாக ஊடுறுவிய தீவிரவாதிகளின் கால் மயிரை பிடித்து இழுத்து நிறுத்திவிடுமா ? //

இந்த கு கும்பல் தொல்லை தாங்க முடியலண்ணே. எங்க போனாலும் பொடா பொடானு கத்துராய்ங்க. அத ஒழுங்கா உபயோகிச்சுருந்தா யாரு அதக் குறை சொல்லப்போறா? சரி பொடா இருந்துருந்தா இந்த தாக்குதல் எல்லாம் நடக்காதுன்னு சொல்றாய்ங்களே, இந்திய பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்துச்சே அப்ப பொடா இருந்துச்சுல்ல. அப்றம் எப்டி வந்து பாராளுமன்றத்தையே தாக்குனாய்ங்க? பொடா அப்ப என்ன புடுங்குச்சு?

//அமெரிக்காவிற்கு இருக்கும் வீரம் ஏன் இந்தியாவுக்கு இல்லை ? //

ஏன்னா அமெரிக்காவுல எல்லாரும் தங்கள் கட்சி நலன், தனிப்பட்ட நலனையெல்லாம் விட நாட்டு நலனுக்குத்தான் முன்னுரிமை தர்றாங்க. இந்த மாதிரி இக்கட்டான சூழலில் கூட வெத்து அறிக்கைகளை விட்டு அரசியல் செய்வத் இல்லை. 9/11 தாக்குதலுக்கு பிறகு தேசமே ஒன்றாய் சேர்ந்து தீவிரவாத எதிர்ப்பு போரை ஆதரித்தது. ஆனால் இங்கு??? எத்தனை பேரு செத்தாலும் சரி, நம்ம கட்சிக்கு எத்தனை ஓட்டு தேறும்னு பார்குற ஓட்டுப் பொறுக்கி அரசியல்தானே நடக்குது? இந்த சூழல்களில் அரசுக்கு ஆதரவளித்து, ஆலோசனை அளிப்பதை விட்டு விட்டு இப்படி அரசியல் செய்தால் எப்படி இந்தியா அமெரிக்கா போல் நடவடிக்கை எடுக்க முடியும்?

தற்போது குறைந்த பட்சம் இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையாது அடித்து ஒழித்து அதை மீட்க வேண்டும். அங்குதான் மிக அதிகளவில் தீவிரவாத முகாம்கள் உள்ளன.

பெயரில்லா சொன்னது…

//உலகில் 5 ஆவது பெரிய இராணுவப் படை உடைய இந்தியா, பாகிஸ்தானில் நுழைந்து தீவிரவாதிகளை அழிப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்?//

கோவி அண்ணா, ரெண்டு நாடுகளும் அணு ஆயுதம் வைத்து இருப்பவை. இந்தியா மட்டும் பாகிஸ்தானில் நுழைந்தால் விளைவு வெறும் சாதாரண போராக இருக்கும் என்று தோன்றவில்லை.

Unknown சொன்னது…

கடுமையான சட்டங்கள் தீவிரவாதியைத் தடுத்து நிறுத்தப் போவதில்லை. ஆனால் அவர்களுக்கு உதவும் உள்ளூர் ஆட்களை சிறிது யோசிக்க வைக்கும்.

Thamiz Priyan சொன்னது…

பாகிஸ்தானில் அரசு என்பது வேறு.. இராணுவம் என்பது வேறு. அங்கு பல பகுதிகள் போலிஸ், இராணுவக் கட்டுப்பாட்டில் கூட வராதவைகள். பாகிஸ்தானின் அரசுகள் நினைத்தால் இராணுவத்தைக் கட்டுப்படுத்த இயலாது. இராணுவம் நினைத்தால் அரசுகள் சின்னாபின்னமாகி விடும். (நவாஸ் ஷெரிப் உதாரணம்).

பாகிஸ்தானின் பகுதிகளே பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இல்லை எனும் போது பாகிஸ்தானில் ஊடுறுவி நாம் அந்த கொலைபாதகர்களை அழிக்க இயலுமா என்று தெரியவில்லை.

பாகிஸ்தான் அரசுகளுக்கு இராணுவத்தின் ஏகாதிபத்தியத்தை குறைக்கக் கூடிய வழிமுறைகளை பொருளாதார ரீதியில் கையாள தெரியவேண்டும். அதற்கு இந்தியா உதவலாம். ஆனால் இப்படி ஒன்று நடப்பது தெரிந்தாலே இராணுவம் அரசைக் கவிழ்த்து விடும்.

கடைசியாய் ஒரு கொசுறு.. சர்தாரி ஒரு 23 ம் புலிகேசி மாதிரி..:)

மு.வேலன் சொன்னது…

அருமையான படைப்பு!

வாய்பாயின் தலைமையில், பிஜெபி-ன் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு சற்று பலமாகவே இருந்தது. இதை நான் மலேசியாவிலிருந்து உணர்ந்தேன். மீண்டும் இவர்களே (BJP) இந்தியாவை ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும். இது மலேசியாவிலிருந்து என் தனிப்பட்ட கருத்து. நன்றி.

http://mumbaihelp.blogspot.com/

Vetirmagal சொன்னது…

இந்தக் கேள்விகள் சாதாரண இந்தியன் மனதில் எழும் கேள்விகள். யார் காதில் போட்டுக்கொள்ளப் போகிறார்கள்? ஊர் சொத்தைக் கொள்ளை அடிக்கும் தலைவர்கள் இருக்கும் வரை நாட்டின் தலை எழுத்தைப் பற்றி பெரு மூச்சு விட்டுக் கொண்டிருக்கலாம்.

தருமி சொன்னது…

//மும்பையில் குண்டு வைத்த தாவூத் இப்ராகிம் சுதந்திரமாகத்தான் பாகிஸ்தானில் உலா வருகிறான்//

அந்த தலைவர் துபாயிலும் இருப்பாராமே!

ஒரு பாக்.கிரிக்கெட்காரருக்கு சம்பந்தியாமே தாவூத். அப்டிங்களா? நகையால் உடம்பை மூடிய ஒரு பொண்ணு மாப்பிள்ளை படம் பார்த்தேன்; அதான் கேட்டேன்.

குடுகுடுப்பை சொன்னது…

திருடனாய் பாத்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

// தருமி said...
//மும்பையில் குண்டு வைத்த தாவூத் இப்ராகிம் சுதந்திரமாகத்தான் பாகிஸ்தானில் உலா வருகிறான்//

அந்த தலைவர் துபாயிலும் இருப்பாராமே!

ஒரு பாக்.கிரிக்கெட்காரருக்கு சம்பந்தியாமே தாவூத். அப்டிங்களா? நகையால் உடம்பை மூடிய ஒரு பொண்ணு மாப்பிள்ளை படம் பார்த்தேன்; அதான் கேட்டேன்.

11:33 AM, November 28, 2008
//

ஐயா,

நீங்கள் சொல்வது சரிதான்.

பாகிஸ்தான் அரசு இந்திய அரசை விருந்துக்கு கூப்பிட்டால் அதில் தாவூத் இப்ராகிம் கலந்து கொள்வதாக இருந்தாலும் நம்ம தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பு சேர்ப்பாங்க.
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//மு.வேலன் said...
அருமையான படைப்பு!

வாய்பாயின் தலைமையில், பிஜெபி-ன் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு சற்று பலமாகவே இருந்தது. இதை நான் மலேசியாவிலிருந்து உணர்ந்தேன். மீண்டும் இவர்களே (BJP) இந்தியாவை ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும். இது மலேசியாவிலிருந்து என் தனிப்பட்ட கருத்து. நன்றி.

http://mumbaihelp.blogspot.com/

11:27 AM, November 28, 2008
//

வாஜ்பேயின் அரசின் போது தான் கார்க்கில் ஊடுறுவல் பெரிய அளவில் நடந்தது.

முகவை மைந்தன் சொன்னது…

இப்ப பாகிசுத்தான் இருக்குற நிலமைல இவ்வளவு துல்லியமா திட்டமிட்டு செஞ்சிருப்பாங்கன்னு தோணலை. வழக்கம் போல வருத்தப் படத்தான் முடிகிறது. கடவுளைக் காட்டிக் கொடுத்தவர்கள் இவர்கள்.

//இந்தியாவின் அசுரவளர்ச்சியை//
வீக்கத்தைப்போயி வளர்ச்சின்றீங்க. இன்னும் பெருசா வீங்குச்சுன்னா நாட்டுல யாரும் யாரையும் காப்பாத்த முடியாது. நல்ல வேளை பொருளாதாரம் கொஞ்சம் மந்தப்பட்டுருக்கு. வீக்கம் கொஞ்சம் வத்துனா மற்ற பகுதிகளோட வளர்ச்சியோட சீரா அமைய வாய்ப்பிருக்கு.

பின்குறிப்பு பெருசா இருக்கே :-)

நசரேயன் சொன்னது…

கோவி அண்ணே நல்ல உரைக்கிற மாதிரி கேள்வி

சரவணகுமரன் சொன்னது…

தீவிரவாதி எவனா இருந்தா என்ன, பிடிச்சி நொங்க பிரிக்க வேண்டியதுதான். அத விட்டுட்டு, நல்ல திறமையான போலீஸ், ராணுவ அதிகாரிகளை இழந்த பின்னும், கருணை மனுவ பரிசிலிச்சிட்டு இருக்குறோம் நாம. நமக்கு வாக்கு வங்கி தான் முக்கியம். எவன் எப்படி போனா என்ன? இந்த நிலையில, நாமாவது பாகிஸ்தானுக்கு உள்ள நுழையிறதுவாவது?

அத்திரி சொன்னது…

//மும்பையில் குண்டு வைத்த தாவூத் இப்ராகிம் சுதந்திரமாகத்தான் பாகிஸ்தானில் உலா வருகிறான். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று பேசும் தேசிய வியாதிகள் தாவூத் இப்ராகிமை பிடித்துவருவது பற்றி வாய்த்திறப்பதே இல்லை//,

தற்போது இருக்கும் மத்திய அரசு தீவிரவாத விசயங்களில் மிதமான போக்கை கடைபித்ததால்தான் இன்று இந்த நிலைமை.
தாவூத்தை பற்றி எப்படி பேசுவார்கள்?. முஸ்லிம்கள் ஓட்டு போய்விடுமே?....
மத்திய அரசின் மெத்தன போக்குக்கு உதாரணம் அப்சல் தூக்குத்தண்டனை, சிமி,பஜ்ரங்தள்


//ஆனால் இங்கு??? எத்தனை பேரு செத்தாலும் சரி, நம்ம கட்சிக்கு எத்தனை ஓட்டு தேறும்னு பார்குற ஓட்டுப் பொறுக்கி அரசியல்தானே நடக்குது? இந்த சூழல்களில் அரசுக்கு ஆதரவளித்து, ஆலோசனை அளிப்பதை விட்டு விட்டு இப்படி அரசியல் செய்தால் எப்படி இந்தியா அமெரிக்கா போல் நடவடிக்கை எடுக்க முடியும்? //

ரிப்பீட்டேய்.................


//பொடோ சட்டம் என்ற பெயரில் அரசியல் வாதிகள் தங்களுக்கு பிடிக்காதவர்களை பிடித்துப் போட்டார்கள், வெறொன்றும் நடக்கவில்லை. தற்கொலை படையாக ஊடுறுவல் செய்பவனை பொடோ என்ன செய்யும் ? அவர்களது கோவணத்தைக் கூட பொடோ தீண்டமுடியாது//

நூற்றுக்கு நூறு உண்மையான விசயம்.
பிடிபடும் தீவிரவாதிகளை பொது இடத்தில் வைத்து மரண தண்டனை கொடுத்தால் தான் கொஞ்சமாவது அடங்குவார்கள்.

Sanjai Gandhi சொன்னது…

என்னாது தலிபான்களை அமெரிக்கா அழிச்சிடிச்சா? புத்தம் புதிய தகவலுக்கு நன்றி கோவி.

அது இருக்கட்டும்.. விஷயத்துக்கு வருவோம். அடுத்த நாட்டில் நுழைந்து தீவிரவாதிகளை அழிக்கும் வீரத்தில் இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தை அமெரிக்காவுடன் ஒப்பிடுவது எப்படி சரியாகும்?

அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் , அமெரிக்கா - ஈராக்... இவைகள் எதாவது அண்டை நாடுகளா? இவைகளுக்கு உள்ள நிலப்பரப்பு தொடர்பு உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன். இந்த 2 நாடுகளின் மீதான தாக்குதல் அமெரிக்காவுக்கு எதிரான போராக மாற சிறிதும் வாய்ப்பு இல்லை. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் நிலப்பரப்பு தொடர்பு பற்றி உங்களுக்கு தெரியும் தானே. இந்தியா பாகிஸ்தானில் நுழைந்தால் இரு நாடுகளுக்கு இடயேயான போராகத் தான் மாறும். ஆகவே உங்க ஒப்பீடு தப்பு.

மேலும் அமெரிக்கா ஆப்கனிலும் ஈராக்கிலும் நுழையும் போது அந்த அரசுகளுக்கு எதிரான் இயன்க்கங்கள் இருந்தது. மக்களும் சிலர் ஆதரித்தார்கள். அதனால் அமெரிககவால் முடிந்தது.

இந்தியாவை ஆதரித்து வரவேற்க பாகிஸ்தானில் யார் இருக்கிறார்கள்?

அமெரிக்கா இந்த 2 நாடுகளுக்கும் தனியாக போகவில்லை. நேட்டோ படைகளுடன் தான் போனது. இந்தியாவுடன் சேர்ந்து பாகிஸ்தானில் நுழைய யார் தயார்?

சும்மா இந்தியாவை மட்டம் தடுவதற்காக போற போக்குல பொலம்பாதிங்க சாரே.. :)

உங்க தலைப்புக்கு சரியான பதிவு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்று கத்தும் இந்தியா இலங்கை அரசுடன் சேர்ந்து வி.புலிகள் மீது போரிட்டு பிரபாகரனை பிடிக்க வேண்டியது தானே? அமெரிக்காவிற்கு இருக்கும் வீரம் ஏன் இந்தியாவுக்கு இல்லை ?

இப்படி இருந்திருக்க வேண்டும்? இதில் வேண்டுமானால் லாஜிக் இருக்கு.. இன்னும் சொல்ல வேண்டும். ஆனால் அவர வேலை.. அப்புறம் வருகிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தீவிர வாதிகள் பிடிக்கப்பட்டவுடன் விரைவு நீதிமற்றத்தில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்.(சும்மா வாய்தா எல்லாம் போட்டு இழுக்கக் கூடாது). தண்டனைகள் உடனே நிறைவேற்றப் பட வேண்டும். வெளிநாட்டுப் பயணிகளையோ விமானங்களையோ அல்லது சில இந்திய அதிகார வர்க்கத்தையோ(சாதாரண இந்திய மக்களை பிடிச்சு வைத்தால் கண்டுக்க மாட்டார்கள், நாய்கள்) பிடித்து வைத்துக் கொண்டு முன்னமே கைதான தீவிர வாதிகளை விடுவிக்கச் சொல்லும் வரை காத்திருப்பது, அப்சலின் கருணை மனுஅவை பரிசீலிக்கிறேன் பேர்வழி என்று கிடப்பில் போடுவதோ, தான் தலையிலேயே பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொள்வது போலாகும் அல்லது ரோட்டுல போறவனை,
ஹலோ! ப்ளீஸ் கம்!
ப்ளீஸ் கம்!!
ப்ளீஸ்!!!
வரமாட்டியா?
ப்ளீஸ் வாப்பா!
வந்து எனக்கு ஒரு ஆப்பு வச்சுட்டுப் போ!
அப்படின்னு சொல்ற மாதிரி அர்த்தப்படுகிறது.
வாழ்க இந்தியா! வளர்க தீவிரவாதம்!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//உங்க தலைப்புக்கு சரியான பதிவு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்று கத்தும் இந்தியா இலங்கை அரசுடன் சேர்ந்து வி.புலிகள் மீது போரிட்டு பிரபாகரனை பிடிக்க வேண்டியது தானே? அமெரிக்காவிற்கு இருக்கும் வீரம் ஏன் இந்தியாவுக்கு இல்லை ?

இப்படி இருந்திருக்க வேண்டும்? இதில் வேண்டுமானால் லாஜிக் இருக்கு.. இன்னும் சொல்ல வேண்டும். ஆனால் அவர வேலை.. அப்புறம் வருகிறேன்.//

ஆகா! வாங்க சஞ்சய்!
ஒரு விடயத்தைப் பற்றி விவாதிக்கும் போது, வேறு விடயத்தைச் சொல்லி திசை திருப்புவது பதிவின் சாரத்தைக் குறைக்கவா இல்லை வேறு ஏதும் உள் நோக்கமா?

வாசகன் சொன்னது…

>>இஸ்லாமியர் என்பதற்காக குண்டு வைத்தவனை அந்த அரசு கொஞ்சவில்லை, குற்றத்தில் தொடர்பிருந்த மூவருக்கும் தண்டனையாக துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்>>

பார்லிமெண்ட் குண்டு வைத்த அப்சல் குருவுக்கு காங்கிரஸ் அரசு ஏன் பேன் பார்த்துக் கொண்டிருக்கிறது???

நாயை எங்கே அடித்தாலும் அது காலைத்தான் நொண்டுமாம்;அது போல என்ன எழுதினாலும் அதில் இந்துத்வா அல்லது இந்தமத நக்கல் சேர்ப்பதும் ஒரு வியாதியின் பார்ப்பட்டது.

வாசகன் சொன்னது…

>>ஒரு விடயத்தைப் பற்றி விவாதிக்கும் போது, வேறு விடயத்தைச் சொல்லி திசை திருப்புவது பதிவின் சாரத்தைக் குறைக்கவா இல்லை வேறு ஏதும் உள் நோக்கமா?
>>

இந்தியாவில் நடக்கும் பயங்கர வாதச் செயல்களிடையே சந்தடி சாக்கில் விடுதலைப்புலிகளின் விவகாரத்தை அல்லது இந்துத்வா அல்லது இந்துமத நக்கல் போன்றதை நீங்கள் நுழைப்பதை விடவா????

அதுக்கெல்லாம் என்ன நோக்கமோ அதேதான் இதுக்கும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திரி 12:47 PM, November 28, 2008
தாவூத்தை பற்றி எப்படி பேசுவார்கள்?. முஸ்லிம்கள் ஓட்டு போய்விடுமே?....
மத்திய அரசின் மெத்தன போக்குக்கு உதாரணம் அப்சல் தூக்குத்தண்டனை, சிமி,பஜ்ரங்தள்
//

அத்திரி,

இந்தவரி சரி இல்லை, இந்தியாவில் இருக்கும் முஸ்லிம் வாக்குக்கும் தாவூத் இப்ராகிமுக்கும் என்ன தொடர்ப்பு ? தாவூத் இப்ராகிமை இந்திய முஸ்லிம்கள் காட் பாதராக கருதுகிறார்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது ?

இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாடுவதை இந்திய இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள் என்பது போல் ஒரு மாயையை இந்துத்துவ வியாதிகள் தான் பரப்புவார்கள், நீங்களும் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வாசகன் said...

இந்தியாவில் நடக்கும் பயங்கர வாதச் செயல்களிடையே சந்தடி சாக்கில் விடுதலைப்புலிகளின் விவகாரத்தை அல்லது இந்துத்வா அல்லது இந்துமத நக்கல் போன்றதை நீங்கள் நுழைப்பதை விடவா????

அதுக்கெல்லாம் என்ன நோக்கமோ அதேதான் இதுக்கும் !

1:14 PM, November 28, 2008
//

:)

எது எதனுடன் தொடர்ப்பு இருக்கிறதோ அல்லது ஒப்பாக இருக்கிறதோ அதை அதனுடன் இணைத்து சொல்லும் போது தானே சொல்லவது சரியான பொருளில் புரியும் ?

இந்துத்துவ தீவிரவாதிகளால் மலேக்கான் தொடர் குண்டுவெடிப்பை கண்டித்த இந்துத்துவ பதிவாளர்கள் யாரும் இருந்தால் பதிவு சுட்டிக் கொடுங்க நானும் படிச்சு தெரிஞ்சிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்க தலைப்புக்கு சரியான பதிவு எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்று கத்தும் இந்தியா இலங்கை அரசுடன் சேர்ந்து வி.புலிகள் மீது போரிட்டு பிரபாகரனை பிடிக்க வேண்டியது தானே? அமெரிக்காவிற்கு இருக்கும் வீரம் ஏன் இந்தியாவுக்கு இல்லை ?

இப்படி இருந்திருக்க வேண்டும்? இதில் வேண்டுமானால் லாஜிக் இருக்கு.. இன்னும் சொல்ல வேண்டும். ஆனால் அவர வேலை.. அப்புறம் வருகிறேன்.//

இலங்கை இராணுவ வீரனிடம் மட்டையடி வாங்கியதை மறந்த காங்கிரசார் மற்றதையெல்லாம் ஏன் நினைவில் வைத்திருக்க வேண்டும் ?
அட்லீஸ்ட் உயிரோடு விட்டானே என்கிற நன்றி உணர்வால் ?அதையெல்லாம் மறந்துவிட்டு தமிழன் இராமேஸ்வர தமிழன் செத்தாலும் பரவாயில்லை என்று காங்கிரஸ் தமிழன் டெல்லி குர்தா அரசியலுக்கு வக்காலத்து வாங்குவது ஏன் ?

சீரா சொன்னது…

முதல்பகுதி தவறு இரண்டாம் பகுதி சரி.

இந்த தீவிரவாத தாக்குதல்கள் எல்லாமே ஆர்.எஸ்.எஸ் கும்பலால் நடத்தப்படுபவை. பாகிஸ்தானிலிருந்து சில அப்பாவி பெயர் தாங்கி முஸ்லீம்களை வைத்து இங்கே பயங்கரவாத செயல் செய்து முஸ்லீம்களின் மீதும் இஸ்லாமிய பாகிஸ்தான் மீதும் இந்து படைகள் போர்தொடுக்க ஆர்.எஸ்.எஸ் போடும் நாடகம்.

உங்களைபோன்றோருக்கு மாவு இந்துத்வவாதிகளே பரவாயில்லை. அவர்கள் பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உண்டு என்று தெரிந்தவர்கள். உங்களைப்போல ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பு செலுத்தியதுபோல பாகிஸ்தான் மீது இந்தியா பண்ணமுடியாது. தெரியுமா? இஸ்லாமிய பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உண்டு.

ஆகவே பொத்திக்கொண்டு இருக்கவும்

கோவி.கண்ணன் சொன்னது…

//அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் , அமெரிக்கா - ஈராக்... இவைகள் எதாவது அண்டை நாடுகளா? இவைகளுக்கு உள்ள நிலப்பரப்பு தொடர்பு உங்களுக்கு தெரியும் என நம்புகிறேன். இந்த 2 நாடுகளின் மீதான தாக்குதல் அமெரிக்காவுக்கு எதிரான போராக மாற சிறிதும் வாய்ப்பு இல்லை. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் நிலப்பரப்பு தொடர்பு பற்றி உங்களுக்கு தெரியும் தானே. இந்தியா பாகிஸ்தானில் நுழைந்தால் இரு நாடுகளுக்கு இடயேயான போராகத் தான் மாறும். ஆகவே உங்க ஒப்பீடு தப்பு.//

நிலப்பரப்பு கதையெல்லாம் வேண்டாம், நம் நாட்டிற்கு பாதுகாப்பின்மை என்ற நிலையில் அதையெல்லாம் ஏன் கவலைப்படவேண்டும் ? கார்கில் போரில் இறந்த இராணுவ வீரர்களின் சாவுக்கு யார் பொறுப்பு ? மறைமுக யுத்தம் என்றால் பரவாயில்லை, அவ்வப்போது இராணுவ வீரர்களை பலியிடலாம் என்ற முடிவிலேயே இருக்கிறார்களா ?

பாகிஸ்தான் வாலை நறுக்க இந்தியா என்ன நடவெடிக்கை எடுத்துவருகிறது ? பாகிஸ்தானுடன் சமாதனக்கொடி யாருக்கு வேண்டும் ?

ஒன்றும் உதவாமல் இருக்கும் காஷ்மீரைக் 30 ஆண்டுகளாக காப்பாற்றி இருக்கிறோமோ, மீட்டு இருக்கிறோமா ? இதே நிலையில் சீனர்கள் இருந்தால் அவர்கள் பாகிஸ்தானுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டு இருப்பார்களா ?

நன்றி உணர்வுடன் நாடாக மாறியா பங்களாதேசால் தான் நமக்கு தலைவலியே இல்லாமல் இருக்கிறதா ?

காங்கிரசுக்கும், மற்ற தேசிய வியாதிகட்சிகளுக்கும் ஆட்சியை யார் பிடிப்பது என்கிற அரசியல் மட்டும் தான் நடக்கிறதேயன்றி இந்திய(ர்) நலனில் அக்கரை கொண்டவர்கள் யாருமில்லை.

இந்த தேசியவியாதிகளின் ஆட்சியில் தான் வேறு எந்த மாநிலத்தைவிட இராணுவத்தில் இருந்த தமிழனே மிகுதியாக பலி ஆகி இருக்கிறான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சீரா said...
முதல்பகுதி தவறு இரண்டாம் பகுதி சரி.

இந்த தீவிரவாத தாக்குதல்கள் எல்லாமே ஆர்.எஸ்.எஸ் கும்பலால் நடத்தப்படுபவை. பாகிஸ்தானிலிருந்து சில அப்பாவி பெயர் தாங்கி முஸ்லீம்களை வைத்து இங்கே பயங்கரவாத செயல் செய்து முஸ்லீம்களின் மீதும் இஸ்லாமிய பாகிஸ்தான் மீதும் இந்து படைகள் போர்தொடுக்க ஆர்.எஸ்.எஸ் போடும் நாடகம்.
//

இதெல்லாம் டூ மச்சாக தெரியல ?

இன்னும் கூட சொல்லலாம், குண்டுவெடிப்பை முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்பதற்காக இந்துத்துவாக்கள் தங்கள் பெயரையும் மதத்தையும் ஏன் சுன்னத் கூட செய்து கொண்டார்கள், பாகிஸ்தானிலும் ஆப்கானிலும் பயிற்சி பெற்றார்கள் என்று.

வெள்ளைக் காக்கா மல்லாக்க பறக்குதுன்னு எப்போதும் சொல்ல முடியாது. பிடிபட்டவன் எவனும் இந்து இல்லை இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவன் என்று தெரிந்தால் தலையை தொங்கப் போட்டுக் கொள்வீர்களா ?

எதையாவது உளறி அதை இஸ்லாமியரின் கருத்தாக பதியவைப்பதை நிறுத்துங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சீரா said...
உங்களைபோன்றோருக்கு மாவு இந்துத்வவாதிகளே பரவாயில்லை. அவர்கள் பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உண்டு என்று தெரிந்தவர்கள். உங்களைப்போல ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பு செலுத்தியதுபோல பாகிஸ்தான் மீது இந்தியா பண்ணமுடியாது. தெரியுமா? இஸ்லாமிய பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உண்டு.

ஆகவே பொத்திக்கொண்டு இருக்கவும்//

பாகிஸ்தான் மேல குண்டு போடனும் என்றால் உங்களுக்கு ஏன் பதைக்குது ?

பாகிஸ்தான் காரன் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தும் போது இந்திய முஸ்லிம்கள் யாருமே கொல்லப்படலையா ? இல்லை முஸ்லிம்கள் யாரும் பாதிக்காதபடி பார்த்து தாக்குதல் நடத்துங்கள் என்று எதேனும் தகவல் சொல்லி அனுப்பி அதன் படி தீவிரவாதிகள் நடந்து கொண்டார்களா ?

இந்தியாவைப் பற்றி கவலைப்படுங்கள், அது தான் குடிமகன்களுக்கு அழகு.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//சீரா said...
உங்களைபோன்றோருக்கு மாவு இந்துத்வவாதிகளே பரவாயில்லை. அவர்கள் பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உண்டு என்று தெரிந்தவர்கள். உங்களைப்போல ஈராக் மீது அமெரிக்கா ஆக்கிரமிப்பு செலுத்தியதுபோல பாகிஸ்தான் மீது இந்தியா பண்ணமுடியாது. தெரியுமா? இஸ்லாமிய பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உண்டு.

ஆகவே பொத்திக்கொண்டு இருக்கவும்//

திரு சீரா,
உங்கள் புராணத்தை இங்கு யாரும் ரசிக்க மாட்டார்கள். பாகிஸ்தானில் வேண்டுமென்றால் ரசிக்கக் கூடும். தாங்கள் இந்தியராக இருக்கும் பட்சத்தில் தீவிர வாதத்தைத் தூண்டும் பாகிஸ்தானை, பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஆதரிப்பது ஏனோ? அது ஓர் இந்தியருக்கு அழகா? உங்கள் வார்த்தை பிரயோகங்கள் இங்கே எடுபடாது.

அத்திரி சொன்னது…

//தாவூத்தை பற்றி எப்படி பேசுவார்கள்?. முஸ்லிம்கள் ஓட்டு போய்விடுமே?....//

அப்சல் என்று வரவேண்டிய இடத்தில் தவறுதலாக அந்தப்பெயர் வந்துவிட்டது.

மற்றபடி தீவிரவாத செயல்களை யார் செய்தாலும் தவறு தவறு தான்.

நன்றி கோவியாரெ

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திரி said...
//தாவூத்தை பற்றி எப்படி பேசுவார்கள்?. முஸ்லிம்கள் ஓட்டு போய்விடுமே?....//

அப்சல் என்று வரவேண்டிய இடத்தில் தவறுதலாக அந்தப்பெயர் வந்துவிட்டது.

மற்றபடி தீவிரவாத செயல்களை யார் செய்தாலும் தவறு தவறு தான்.

நன்றி கோவியாரெ
//

ஒரு சிலர் அப்சலுக்கு ஆதரவாக இருக்கலாம், மதங்களில் அடிப்படை வாதிகள் இல்லாமல் இருப்பார்களா ?

கார்கில் போரில் இந்திய இஸ்லாமிய இராணுவ வீரர்கள் கூட இறந்திருக்கிறார்கள் என்று தெரிந்தும், கார்கில் போருக்கு பொதுமக்கள் சார்பில் பணம் வசூல் செய்த போது சில இஸ்லாமியர்கள் பொருளதவி செய்யமால் இஸ்லாமியருக்கும் இந்துவுக்கும் நடக்கும் போர் போலவே எண்ணிக் கொண்டு இருந்தனர், பத்து பைசாவை உண்டியலில் தன் பங்காக போட்ட ஏழைகளும் இருக்கின்றனர், என்னால் முடியாது என்று சொன்ன சில இஸ்லாமியர்களும் இருக்கின்றனர்,

ஆனால் அந்த ஒரு சிலரின் செயலை வைத்து ஒட்டு மொத்தமாக இஸ்லமியர் கருத்து என்று எதையும் யாரும் பதிவு வைத்துவிட முடியாது

வாக்காளன் சொன்னது…

காங்கிரஸ் ஆட்சி தான் காரணம்.. வேறென்ன..

இதுவே இப்போ பி ஜே பி ஆட்சியா இருந்திருந்தா , நம்ம சஞ்சய் எப்படி பதிவு போட்டிருப்பார், எப்படி எழுதியிருப்பார்னு நெனைச்சேன்.. ஒரே சிப்பு சிப்பா வருது எனக்கு..

அடுத்த வர்ஷம் ஏதாச்சம் இப்படி நடந்தா , என்ன அரசு இது, பாக் மேல போரிட்டு அடித்து ஒடுக்க வேணாமானு ஒரு பதிவு போடுவாரு நம்ம சஞ்சய்

கோவி.கண்ணன் சொன்னது…

//Vanangamudyy //

கொண்டைகளில் கையில் தான் எல்லாமும் இருக்கா ? தெரியாமல் போச்சே அச்சச்சோ...ஆட்சி மாறியவுடன் பதிவை அழிச்சுட்டு நானும் இந்துத்துவாவாக மாறிவிடுகிறேன்.

சாரி...அடுத்து பின்னூட்டம் போட்டாலும் டெலிட் செய்யப்படும், வேறு எங்காவது பின்னூட்டம் இட்டுக் கொள்ளவும்

Naina சொன்னது…

அன்பு சகோதரரே!
உங்களுடைய பதிவுகளை பார்த்து தங்களது பொது அறிவு குறித்து மகிழ்வதுண்டு. ஆனால் ஆத்திரம் மனிதனுக்கு வந்து விட்டால் அது அவனது அறிவை ஒருகணம் மழுங்கிவிட செய்யும் என்பதையே தங்களுடைய இப்பதிவில் காண்கிறேன். நூற்றுக்கணக்கான அப்பாவிகள் மிருகங்ளை விட கொடிய மனித குலவிரோதிகளால் கொல்லப்பட்டதோடு, அதிகமானோர் காயங்களுக்கு உட்படுத்தபட்டிருப்பது உணர்வோடு படைக்கப்பட்ட மனிதர்களாகிய நமக்கு வேதனையையும், விரக்தியையும் உருக்குவது நியாயமே. அதே தருணத்தில் நாம் ஏதேனும் முடிவு எடுப்பது நம்மை அறிவீனனாக ஆக்கிவிடும் என்பது இயல்பு. இப்போதைய தேவை சாக்கடை கயவர்களிடம் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கபட வேண்டும், அடுத்து இந்த இழிபிறவிகள் முடிந்தால் உயிரோடு பிடிக்கபட வேண்டும் இல்லையானால் கொன்றொழிக்கபட வேண்டும். அதன் பிறகு சம்பவத்திற்கான விசாரணையில் ஈடுபட வேண்டும். சூத்திரகாரிகள், சண்டாளர்கள் யார்? என்பது ஆதாரத்தோடு அம்பலபடுத்த பட வேண்டும். அதன் ஆணி வேர் கண்டறியபட்டு பிடிங்கி எறியபடுவதோடு இச்சண்டாளர்களுக்கு மிக உயர்ந்த பட்ச தண்டனை விரைவாக துரிதமாக வழங்கப்பட்டால் தவிர, நமது நாட்டில் குண்டு வெடிப்புகளும் துப்பாக்கி சூடுகளும் மனித குல துரோக கும்பலால் நிகழ்தப்பட்டு அப்பாவிகளின் வாழ்வு பாதிக்கபடுவதும், அரசியல்வா(வியா)திகள் கண்டணம் தெரிவித்து அற்ப உதவி தொகை வழங்குவதாக அறிவிப்பு செய்யவதும் தவிர்க்க முடியாத நிகழ்வாக தொடர்ந்து நடந்து வரும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

தற்போதைய துர்சம்பவம் நான் எழுதி கொண்டிருக்கும் இக்கணம் வரை (28/11/08 மணி பகல் 12:20) இன்னும் முடிவுக்கே வராத நிலையில் ஏதோ உறுதிசெய்யப்படாமல் அறியப்பட்ட தகவலை வைத்து கொண்டு லஷ்கரி தொய்பா கடல் வழியாக வந்து காட்டுமிராண்டி தாக்குதலை நிகழ்த்திவிட்டதாக சம்பவம் நிகழ்ந்த சிலமணி நேரத்தில் அரசியல்வியாதி அறிக்கை தருகிறது. சம்பத்திறகான சான்றை இவ்வளவு குறுகிய நேரத்தில் தரக்கூடிய பேரறிவாளராக இருந்திருந்தால் பல குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு உறுதியான தீர்ப்புகள் பலமுறை வழங்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரையில் ராஜீவ் கொலை, மும்பாய் தொடர் குண்டு வெடிப்பு தவிர்த்து வேரெந்த சம்பவத்திலும் தீர்ப்பு சொல்லபட்டதாக நான் அறியவில்லை.

நம்முடைய அவசரபுத்தியை எதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். நம்மை திசை திருப்பும் வகையில் சில ஆதாரங்களை விட்டு செல்வதாலும், சம்பவம் நிகழ்ந்த சில நிமிடங்களுக்குள்ளேயே காவல்துறை உயரதிகாரி ஒருவர் இது இந்த முஜாகிதீன் அமைப்பின் செயல் என்று பேட்டி அளித்து விடுவதாலும் அதை தாண்டி உண்மை சதிகாரரர்கள் யார்? என்பது இதுவரையில் காவல்துறையால் பல்லாண்டு கழிந்தும் இனம் காட்டபடவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

தங்களது இப்பதிவும் அதே தரத்தோடு தான் வெளியிடப்பட்டுள்ளது என்பது எனது கருத்து

மனித குல விரோதிகள் வேரறுக்கபடும் நாளை விரக்தியோடு எதிர்பார்த்து காத்திருக்கும்..... நெய்னா முஹம்மது

கோவி.கண்ணன் சொன்னது…

//நம்முடைய அவசரபுத்தியை எதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள். நம்மை திசை திருப்பும் வகையில் சில ஆதாரங்களை விட்டு செல்வதாலும், சம்பவம் நிகழ்ந்த சில நிமிடங்களுக்குள்ளேயே காவல்துறை உயரதிகாரி ஒருவர் இது இந்த முஜாகிதீன் அமைப்பின் செயல் என்று பேட்டி அளித்து விடுவதாலும் அதை தாண்டி உண்மை சதிகாரரர்கள் யார்? என்பது இதுவரையில் காவல்துறையால் பல்லாண்டு கழிந்தும் இனம் காட்டபடவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

தங்களது இப்பதிவும் அதே தரத்தோடு தான் வெளியிடப்பட்டுள்ளது என்பது எனது கருத்து

மனித குல விரோதிகள் வேரறுக்கபடும் நாளை விரக்தியோடு எதிர்பார்த்து காத்திருக்கும்..... நெய்னா முஹம்மது //

நெய்னா முஹம்மது,

முஜாஹுதின் அமைப்பு என்று சொன்னால், தவறாக சொன்னால் கூட நீங்கள் ஏன் உணர்ச்சி வசப்பட வேண்டும் ? பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று சொன்னால் நீங்கள் ஏன் உணர்ச்சி வசப்படவேண்டும் ?

தேவையின்றிய பதட்டத்தில் நீங்கள் உளறுவதும், இந்துத்துவ தீவிரவாதிகள் இது இஸ்லாமியரின் சதி என்று சொல்வதும் ஒன்றுதான்.

தேவையின்று உணர்ச்சிவசப்படாதீர்கள், இந்திய இஸ்லாமியர்களுக்கோ, இஸ்லாமிய சமூகத்திற்கோ இதில் தொடர்பு இருக்கு என்று யாரும் சொன்னார்களா ?

ஒரு திவீரவாத அமைப்பின் தொடர்பு இருப்பதாகவும், பிடிபட்ட படகுகளை வைத்து அவை பாகிஸ்தானில் இருந்து வந்தவை என்று உறுதிபடுத்தப்பாட்ட தகவல்கள் தான், புகைப்படங்கள் கூட வெளியாகிவிட்டது.

உங்களுக்கு இருப்பது தேவையற்ற பதட்டம், உங்களை நோக்கி கைகாட்டினால் செருப்பால் அடிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கு, அதே சமயத்தில் தேவை இல்லாதவற்றை நீங்கள் உளரவேண்டிய தேவையும் இல்லை என்பதை நீங்கள் உணருங்கள்

பாச மலர் / Paasa Malar சொன்னது…

இந்தியா சமாசாரங்கள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்...நிறைய உண்மைகள் உள்ளன அதில்..


ஆனால் அமெரிக்காவின் வீரம்?!!

//சதாம் உசேனை அரசாங்கத்தையும் காலி செய்து ஈராக்கில் தனக்கு ஏதுவான ஒரு பொம்மை அரசாங்கத்தை ஏற்படுத்துக் கொண்டது//

இருந்தாலும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிக்க முடிந்ததா?

//ஆப்கான் தலிபான்களை ஒழித்துக் கட்டியது அமெரிக்கா//

இது எப்போ?

//மும்பையில் நடந்திருப்பது பொருளாதார சீர்குழைவுக்கான தாக்குதல் என்பதால் இந்தியாவின் அசுரவளர்ச்சியை தடுப்பதற்காக பல்வேறு நாடுகளால் நடத்தப்பட்ட சதித்திட்டமா ? என்று ஆராயவேண்டியதன் தேவையும் இருக்கிறது//

இது யோசிக்க வேண்டிய விஷயம்தான்..

எல்லாம் சரிதான்..ஆனால் 'அமெரிக்காவின் வீரம்' என்ற வார்த்தைப் பிரயோகம்தான் சற்றே இடிக்கிறது..

Bleachingpowder சொன்னது…

இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் கடுமையாக நடந்து கொண்டால் எங்கே இஸ்லாமியர்களின் ஓட்டு நமக்கு கிடைகாமல் போய் விடுமோ என்று அஞ்சுபவர்கள் ஆட்சியில் இருக்கும் போது இந்த குண்டு வெடிப்பை எல்லாம் நான் அன்றாட நிகழ்வாக நினைத்து பழகி கொள்ள வேண்டும்.

பேசாமல் இந்தியாவை ஒரு இஸ்லாமிய நாடாக அறிவித்து விட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடுமென்றே தோன்றுகிறது.

ஒரு வாதத்திற்கு இந்தியா பாகிஸ்தான் மீது படையெடுத்தால், எந்த ஒரு இஸ்லாமிய நாடும் நமக்கு பெட்ரோல் தர மாட்டார்கள். அது தவிர கிட்டதட்ட இரண்டு கோடி இந்திய மக்கள் இஸ்லாம் நாடுகளில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் உயிருக்கும் உத்திரவாதம் இல்லை.

போர் மூண்டாலும் அமெரிக்காவும், சீனாவும் மற்ற மேற்கத்திய நாடுகளும் பாக்கிஸ்தானையே ஆதரிக்கும். நம்முடைய நட்பு நாடான ரஷ்யாவின் பொருளாதாரமும் நம்மை ஆதரிக்கும் நிலையில் இல்லை.

எரிபொருள் இல்லாமல், எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் நம்மால் பாக்கிஸ்தானை அவ்வளவு எளிதில், எளிதில் என்ன வெல்லவே மூடியாது.

தனி தமிழ்நாடு என கும்மி அடித்து கொண்டிருந்த தமிழ்மண பதிவர்கள், இந்தியாவை பற்றி கவலை பட ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி.

என்ன சேவல் படம் நல்லாயில்லைனு ஒரு பதிவை எழுதினாலும் அதிலும் விடுதலை புலிகள் ஆதரித்து இரண்டு வரிகளாவது இருக்கிறது.

மின்வெட்டை பிரச்சனையை திசை திருப்ப ஈழ தமிழர்கள் பிரச்சனையை கையில் எடுத்து அதில் வெற்றி கண்ட தமிழக அரசின் ராஜதந்திரத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியலை

கோவி.கண்ணன் சொன்னது…

//எல்லாம் சரிதான்..ஆனால் 'அமெரிக்காவின் வீரம்' என்ற வார்த்தைப் பிரயோகம்தான் சற்றே இடிக்கிறது..//


பாச மலர் மேடம்,

அரசு செய்யும் (என் கவுண்டர்) கொலைகளுக்கு சட்ட ஒழுங்கு பாதுகாப்பு என்று பெயர் வைத்து இருப்பது போல், பொது புத்தியில் 'வீரம்' என்று சொல்லி இருக்கிறேன். நீங்கள் அமெரிக்கா பற்றி குறிப்பிட்டது யாவும் சரியே

கோவி.கண்ணன் சொன்னது…

// 'டொன்' லீ said...
//ஆப்கான் தலிபான்களை ஒழித்துக் கட்டியது அமெரிக்கா. //

சும்மா பகிடிதானே இது...?//

பகடி இல்லை, தலிபான்களை அழிக்க முடியாவிட்டாலும் அவர்களை துறத்த முடிந்தது, முன்பை போல் தலிபான்கள் தங்களை தலிபான்கள் என்று சொல்லிக் கொண்டு பொது இடத்துக்கு வர முடிகிறதா ? குறிப்பாக பாகிஸ்தான் டிவி நிலையத்துக்கு.


//பொடோ இருக்கும் போதுதான் பாராளுமன்றம் தாக்க்கப் பட்டதாக ஞாபகம்...
//

பொடோ, பாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு தான் வந்தது, ஆனால் அதற்கு முந்தேதியில் விடுதலை புலிகளை ஆதரித்து பேசியதற்காக வைகோ கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேல் உள்ளே இருந்தார்

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
அருமையான பதிவு கோவி...
.சிந்தனையை தூண்டும் பதிவு
//

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...

தாவூத் என்ன‌ ராஜிவ்க‌ந்திய‌வா கொன்னாரு? சும்மா ஏதோ ரோட்ல‌ போன‌வ‌ன் வ‌ந்த‌வ‌ன‌த்தானே குண்டு வைச்சு கொன்னாய்ங்க‌? இந்தியாவுல‌ ராஜிவ் உசுரு ம‌ட்டும்தானே வெல்ல‌க்க‌ட்டி, ம‌த்த‌வ‌ன் உசுரு எல்லாம் ம‌** தானே. அது எல்லாம் இருந்தா என்ன? போனா என்ன?
//

உங்கள் உணர்வுகளும் மனவருத்தமும் ஞாயமானவை. தனக்கு 7 அடுக்கு பாதுகாப்பு வைத்துக் கொள்பவர்கள் எதைவேண்டுமானலும் துணிந்து பேசுவார்கள். சாதாரணமக்களின் உயிரு அவர்களுடைய உதிர்ந்த மசுருதான்

Naina சொன்னது…

அன்பு சகோதரர் கோவி கண்ணணன் அவர்களே!
நான் இந்த சம்பவத்திற்கு இஸ்லாமிய சமூகத்தை சார்நத தீவிரவாதிகள் அல்லது இந்து சமூகத்தை சார்ந்த தீவிரவாதிகள் அல்லது கெளிநாட்டை சார்ந்த தீவிரவாதிகள் என்று கூறும் அனைத்தையுமே சாட முற்படுகிறேன். இஸ்லாமியர் என்று சொல்வதால் நான் பதட்டபடுவதாக கூறுகிறீர்கள். அதற்காக நான் பதட்டபடவில்லை. தெளிவான, உறுதியான சான்றுகள் கிடைக்கும் வரையிலும் எந்த மீதும் முத்திரை குத்துவது தான் எனக்கு பதட்டத்தை ஏற்படுத்தகிறது. ஏனென்றால் முஜ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்கிற எண்ணம் மீடியாக்களால் அழமான விதைக்கப்பட்டு அதனால் பாதிப்புகளை சந்தித்து கொண்டிருக்கும் சமூகத்தை சார்ந்தவன். எனவே என் பதட்டம் நியாயமா? நியாயமற்றதா?

உறுதியான சான்றுகள் இல்லாமல். வெடித்த கணப்பொழுதிலேயே உளறி கொட்டுவதால் தான், குண்டு வெடிப்புகளை நிகழ்த்தும் சதிகார கும்பலை நோக்கி அங்குலம் அளவுக்கு கூட முன்னேற முடியவில்லை என்றம் என்னுடைய குற்றச்சாட்டில் நியாயம் உள்ளதா? இல்லையா?

மனித குல விரோதிகள் வேரறுக்கபடும் நாளை விரக்தியோடு எதிர்பார்த்து காத்திருக்கும்..... நெய்னா முஹம்மது

மு.வேலன் சொன்னது…

Blogger கோவி.கண்ணன் said...
//வாஜ்பேயின் அரசின் போது தான் கார்க்கில் ஊடுறுவல் பெரிய அளவில் நடந்தது.//

வாஜ்பாய் அரசு கார்கில் போரை வெற்றிகரமாக வேரறுத்தார்கள். அப்பொழுது இந்தியாவின் பங்குச் சந்தை மூடபடவில்லை. இந்தியாவை பாதுகாத்த அவர்கள் தங்கள் கட்சியை பாதுகாக்க முடியவில்லை. என்ன செய்வது, வெங்காயப் பிரச்சனையில் ஆட்சியை கவிழ்த்த்வர்கள் இந்தியர்களாயிற்றே!

கோவி.கண்ணன் சொன்னது…

//சின்ன அம்மிணி said...

கோவி அண்ணா, ரெண்டு நாடுகளும் அணு ஆயுதம் வைத்து இருப்பவை. இந்தியா மட்டும் பாகிஸ்தானில் நுழைந்தால் விளைவு வெறும் சாதாரண போராக இருக்கும் என்று தோன்றவில்லை.//

அதுக்காக சிறுக சிறுக மறைமுகமாக அவர்கள் தொடுக்கும் போரை எதிர்கொண்டே இருக்க வேண்டும் என்பது நம் தலையெழுத்தா என்ன ?

கோவி.கண்ணன் சொன்னது…

//கெளிநாட்டை சார்ந்த தீவிரவாதிகள் என்று கூறும் அனைத்தையுமே சாட முற்படுகிறேன். //

வெளிநாட்டை என்று ஏன் சொல்றிங்க, பாகிஸ்தானை என்று சொல்லுங்க, நான் பாகிஸ்தான் பற்றி தான் எழுதி இருக்கிறேன். பாகிஸ்தானை பார்த்து ஒரு இந்திய முஸ்லிம் பரிதாபப்படும் அளவுக்கெல்லாம் பாகிஸ்தான் யோக்கியமாக நடந்து கொண்டது இல்லை. நீங்கள் இந்திய இராணுவ வீரனாக அவன் முன்னால் சென்றால் உங்களை இஸ்லாமியர் என்பதற்காக கட்டித்தழுவ மாட்டான் பொட்டில் சுடுவான். பாகிஸ்தான் மீது தாங்கள் கொண்டிருக்கும் பரிதாபம் தேவையற்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

//Bleachingpowder said...

எரிபொருள் இல்லாமல், எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் நம்மால் பாக்கிஸ்தானை அவ்வளவு எளிதில், எளிதில் என்ன வெல்லவே மூடியாது.//

இதெல்லாம் அடிச்சு நொருக்கிட்டு அதன் பிறகு சமாதானமாக பேச வேண்டிய ஒன்று, செத்துப் போனவர்களுக்காக இரண்டு சொட்டு கண்ணீரையும் கொஞ்சம் பரிதாபம் படுவதைத்தான் இதுவரை உலகநாடுகள் செய்துவருகின்றன. ஈராக் விவகாரம் கூட அப்படித்தானே.

//தனி தமிழ்நாடு என கும்மி அடித்து கொண்டிருந்த தமிழ்மண பதிவர்கள், இந்தியாவை பற்றி கவலை பட ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி.//

தேசப்பற்று பற்றிய கவலைகளை நாங்கெளெல்லாம் தேசியவியாதிகளிடம் விட்டுவிட்டோம் என்று சொல்ல முடியாது, அவிங்களே மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டார்களாம்.


//என்ன சேவல் படம் நல்லாயில்லைனு ஒரு பதிவை எழுதினாலும் அதிலும் விடுதலை புலிகள் ஆதரித்து இரண்டு வரிகளாவது இருக்கிறது.//

எல்லாம் கிழே நீங்கள் சொல்லி இருக்கும் டெக்னிக் தான். எதுல அரசியல நுழைக்கலாம் என்று நினைப்பது எல்லோருக்கும் சகஜம் தானே, அடுத்தவர்கள் செய்யும் போது அடாவடியாக தெரியும் அம்புட்டுதான்.

//மின்வெட்டை பிரச்சனையை திசை திருப்ப ஈழ தமிழர்கள் பிரச்சனையை கையில் எடுத்து அதில் வெற்றி கண்ட தமிழக அரசின் ராஜதந்திரத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியலை

4:29 PM, November 28, 2008
//

வண்ணான் சொன்னது…

இது எதிர் பார்க்காத போர்

அவசர பட்டு பரபரப்புக்காக மிடியாதான் துப்புறிந்து? சொல்கிறது....

உண்மை வெளியில் வரும் வரை காத்திருத்து கருத்து சொல்கிறேன்

(சட்டகல்லூரி மலெகான் தரும் படிப்பினை)

Unknown சொன்னது…

ப்ளீச்சீங்க்பவுடர் - யோக்கிய சிகாமனி பாருங்கோ...


//Bleachingpowder said...
மின்வெட்டை பிரச்சனையை திசை திருப்ப ஈழ தமிழர்கள் பிரச்சனையை கையில் எடுத்து அதில் வெற்றி கண்ட தமிழக அரசின் ராஜதந்திரத்தை எப்படி பாராட்டுவது என்றே தெரியலை
//

யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை..

ராஜ நடராஜன் சொன்னது…

பதிவைப் படித்துக் கொண்டு பின்னூட்டத்திற்கு வரும் போது மீண்டும் பொடா வேண்டும் என்று சிலர் கூறுவதாக சொன்னதும் நேற்று ஜெ மீண்டும் பொடா தேவையென்று சொன்னதும் வரும் எரிச்சலை எங்கே போய் உரசுவது எனத் தெரியவில்லை.பொடா என்பது எல்லை கடந்த தீவிரவாதம் அடக்க கொண்டுவந்தது.ஜெ எங்கோயோ போகிற பொடா வை கோ மேல வந்து ஏறுன்னு திசை திருப்பி விட்டு விட்டு இப்ப மறுபடியும் பொடா கேட்க..ஜெ!வெட்கம்!உங்கள் அரசியல் காலங்கள் எப்போது முடியும்?

மணிகண்டன் சொன்னது…

லட்சக்கணக்கான வேறு நாட்டவரின் உயிர்கள் போனாலும் எங்கள் நாட்டில் இனி பயங்கரவாதம் இருக்க கூடாது என்பது அமெரிக்கர் முடிவு. இது போன்று இந்தியா பாகிஸ்தானை அணுகுவது எளிது அல்ல தான். ஆனால் மாதத்திற்கு ஆயிரம் உயிர்களை பயங்கரவாதத்தில் இழப்பது சரியான தீர்வும் அல்ல. போடா போன்ற சட்டங்கள் நல்லதை செய்யலாம். ஆனாலும் அதை நமது அரசியல் தலைவர்கள் காடு வெட்டி குரு, கோபாலன் போன்றவரை சிறை வைக்க தான் பயன்படுத்துவர்.

மணிகண்டன் சொன்னது…

வைக்கோவை விட்டுவிட்டேன்.

மணிகண்டன் சொன்னது…

நைனா, உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். ஒன்றை தீர விசாரித்த பிறகு தான் குற்றம் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி சொன்னாலும் அதற்கு மத முலாம் பூசி போலீஸ்காரர்களை வில்லனாகவே நாம் காண முயற்சிப்போம். இந்த முறை தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டு உள்ளனர். ஆதலால் நிச்சயமாக உண்மைகள் வெளிவரும். இந்திய அரசின் செயல்பாடும் உறுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை என்று எழுதப்படும் பதிவை படித்து பாருங்கள்.

http://tmpolitics.blogspot.com/2008/11/blog-post_86.html

Sanjai Gandhi சொன்னது…

//ஆகா! வாங்க சஞ்சய்!
ஒரு விடயத்தைப் பற்றி விவாதிக்கும் போது, வேறு விடயத்தைச் சொல்லி திசை திருப்புவது பதிவின் சாரத்தைக் குறைக்கவா இல்லை வேறு ஏதும் உள் நோக்கமா?/

ithil irandume illai jothi sir. pathivil prabagaran pathi irunthathal avar peyarai vaithu solla vendi irunthathu..

..

Sanjai Gandhi சொன்னது…

//இந்த தேசியவியாதிகளின் ஆட்சியில் தான் வேறு எந்த மாநிலத்தைவிட இராணுவத்தில் இருந்த தமிழனே மிகுதியாக பலி ஆகி இருக்கிறான்.//

:)))

yen ippadi? namma militarye ivangala suttu konnudarangala? :))

what happened to u goviji? :)

Sanjai Gandhi சொன்னது…

//பதிவின் சாரத்தைக் //

saaramaa? enakku appdi ethum theiryalaye. joseph machan mathiri keeral viluntha records ku mattume eluthina mathiri iruku. :)

kalakkal சொன்னது…

இந்த தீவிரவாத தாக்குதல்கள் எல்லாமே ஆர்.எஸ்.எஸ் கும்பலால் நடத்தப்படுபவை. பாகிஸ்தானிலிருந்து சில அப்பாவி பெயர் தாங்கி முஸ்லீம்களை வைத்து இங்கே பயங்கரவாத செயல் செய்து முஸ்லீம்களின் மீதும் இஸ்லாமிய பாகிஸ்தான் மீதும் இந்து படைகள் போர்தொடுக்க ஆர்.எஸ்.எஸ் போடும் நாடகம்.
//

இதெல்லாம் டூ மச்சாக தெரியல ?
//
/
/ இது டூ மச் இல்லை உண்மை !

இந்துத்வா தீவிரவாதிகள் பி ஜெ பி யை ஆட்சியில் உட்காரவைக்க செய்யும் சதி இது என்பது எல்லோருக்கும் தெரிந்த வொன்று

ஹைதராபாத்தில் மசூதியில் குண்டு வைத்தவர்கள் பங்களாதேஷ் காரர்கள் என்று சொன்ன காவல் துறைக்குத்தான் உண்மை தெரியும்.

இன்றைய சூழலில் உண்மை என்ன வென்று உடனே கூறமுடியாது !

என்ன இருந்தாலும் மும்பையில் நடந்த வெறிச்செயல் தண்டிக்க வேண்டிய குற்றம்

இனி நடக்காமல் அரசாங்க தடுக்க

மக்கள் மனதில் மத வெறி தூண்டும் அனைத்து மதத்தினருக்கும் விசாரணை இல்லாமல் தூக்கு என்று சட்டம் இயற்றவேண்டும்!

Darren சொன்னது…

//அமெரிக்காவிற்கு இருக்கும் வீரம் ஏன் இந்தியாவுக்கு இல்லை ?//

வர வர அதிகமாக உணர்ச்சிவசப்படுகிறீர்கள்.

Darren சொன்னது…

//இந்துத்வா தீவிரவாதிகள் பி ஜெ பி யை ஆட்சியில் உட்காரவைக்க செய்யும் சதி இது என்பது எல்லோருக்கும் தெரிந்த வொன்று//

கபில் சிபல் பேசும்போது இதை உள்குத்தாக சொன்னார். மலேகான் துப்பறியும் அதிகாரி, Encounter Specialist, and one more High official ஆகிய மூன்று பேரையும் வந்தவுடன் போட்டுட்த்தள்ளியிருக்கிறார்கள்.........கொண்டைகளின் தீவீரவாதம் வெளியே தெரியாமல் அடிப்பதும் அப்பாவி போல் நடிப்பதும் உலகரிந்த ஓன்று.

Sanjai Gandhi சொன்னது…

//இந்தியாவைப் பற்றி கவலைப்படுங்கள், அது தான் குடிமகன்களுக்கு அழகு.//

ithai ketkave santhoshama irukku goviji :)

Sanjai Gandhi சொன்னது…

//தாவூத் என்ன‌ ராஜிவ்க‌ந்திய‌வா கொன்னாரு? சும்மா ஏதோ ரோட்ல‌ போன‌வ‌ன் வ‌ந்த‌வ‌ன‌த்தானே குண்டு வைச்சு கொன்னாய்ங்க‌? இந்தியாவுல‌ ராஜிவ் உசுரு ம‌ட்டும்தானே வெல்ல‌க்க‌ட்டி, ம‌த்த‌வ‌ன் உசுரு எல்லாம் ம‌** தானே. அது எல்லாம் இருந்தா என்ன? போனா என்ன?
//

correct maapla... :)

intha mumbai attacks la sethu pona antha police men kooda intha theeviravathigal than raji va konnanga nu nenachi than avangala kolla poi ivanga sethu poitangalam..

paaru machi.. epdi thappu thappa thagaval solrangannu? :(

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

வாங்க சஞ்செய்,

வெகு சீக்கிரம் தமிழக காங்கிரஸ்ல சஞ்சய் கோஷ்டின்னு ஒரு கோஷ்டி உருவாக்குற அளவுக்கு உனக்கு அரசியல்ல பெரிய எதிர்காலம் இருக்கு உங்களுக்கு.

ஈழத்தமிழர்களப்பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈரவெங்காயம், இறையாண்மைன்னு பேசுவீங்க.
இப்ப நம்ம தேசத்தோட வர்தகத் தலைநகர் மேல ஒரு மோசமான, ஈனத்தனமான ஒரு தாக்குதல் நடந்துருக்கு அதப் பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈழத்தப் பத்தி பேசுவீங்க. நான் தெரியாமத்தான் கேட்குறேன் உங்களுக்கு எல்லாம் உண்மையிலயே தேசியம், இறையாண்மை இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுமா இல்லையா?
மும்பை என்ன தமிழ்நாட்டுலயா இருக்கு? அங்க எவன் எவன அடிச்சா என்னான்னு நாங்க சும்மாவா உக்காந்துருக்கோம்? வெட்டி வாய்பேச்சு பேசுற போலி தேசியக் கும்மிகள் கூட்டணிய விட எங்களுக்குத் தான் அதிகமா தேசிய உணர்வு இருக்கு, இறையாண்மையும் இருக்கு. உங்களுக்கு எங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னான்னா எங்களுக்கு இன உணர்வும், மனிதாபிமானமும் கொஞ்சம் அதிகமா இருக்கு.
வெட்டிப் பேச்சுத்தான்யா உங்களுக்கு. உளவுத்துறை என்ன இழவுத்துறையா? எல்லா வந்து குண்டு வைச்சதும் இழவு விசாரிக்க?
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்னு ஒரு புண்ணியவான வைச்சிருக்கீங்களே, அவரு என்ன செய்யிறாருன்னு சிங்குக்கு தெரியுமா? இல்ல அதையும் அன்னைகிட்ட கேட்டுத்தான் அவரு தெரிஞ்சுக்குவாறா?

வெட்டிப் பேச்சு பேசி எல்லாரையும் திசை திருப்புறதயே தொழிலா செய்யாம வரும் முன் காக்க என்ன வழின்னு பாருங்கப்பு. போங்க, நீங்க மட்டும் பொழைச்சா பத்தாது. எல்லாரும் நல்லா இருக்கனும். அதுதான் ஆட்சிக்கு அழகு.

Sanjai Gandhi சொன்னது…

//ஈனத்தனமான ஒரு தாக்குதல் நடந்துருக்கு அதப் பத்தி பதிவெழுதுனா அங்க வந்து ஈழத்தப் பத்தி பேசுவீங்க.//

மச்சி கீறல் ரிக்கார்ட்... நான் பிரபாகரனப் பத்தி தான் பேசினேன்.. ஈழத்தை பத்தி இல்ல.. அது கூட இந்த பதிவுல பிரபாகரன் , தாவூத் போன்ற தியாகிகள் பத்தி எல்லாம் இருந்ததால அப்டி பேசினேன்.

நீ ஏன் உணர்ச்ச்வசப் படற? ஈழத்தை பத்தி பேசாததை பேசியதா ஏன் புருடா விட்டு திரியற? :)) கூட்டுக்கு ஆள் வேணும்னா மேட்டர பேசு.. ஏன் ஈழம்னு சொல்லி திசை திருப்பற? தனி ஈழம் அல்லது ஈழத்தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதில் நானும் விருப்பம் உள்ளவன் என்று பல முறை சொல்லியாச்சி.. ஆனா உன்னோட கீரள் ரிக்கார்டை தான் என்னால சமாளிக்க முடியலை மப்ள.. :)

சும்மா பின்றியேபா :))

//Prince

has left a new comment on the post "அமெரிக்காவிற்கு இருக்கும் வீரம் ஏன் இந்தியாவுக்கு ...
//

ஹிஹி.. கொண்டை கொண்டை :))
அவனா நீயி? :))

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

தீவிரவாதத்திற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாத உன்னோடு பேசிப் பிரயோசனம் இல்ல.
தாவூத் இப்ராகிம் கூட எல்லாம் பிரபாகரன ஒப்பிடுற உன் அறிவை என்னா செய்யிறது?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//தனி ஈழம் அல்லது ஈழத்தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதில் நானும் விருப்பம் உள்ளவன் என்று பல முறை சொல்லியாச்சி.. //

இதவிடக் காமெடி வேற ஒன்னுமே இல்லீங்ணா.
ஆநொந்த சங்கரி, கருணா, பிள்ளையான், டக்கிளஸ் தேவானந்தா இவங்க தலைமையில தனி ஈழம் அமையணும்னு தானே ஆசைப்படுறீங்க?
நீங்க ஆசைப்படுறதுதான் எங்களுக்கு நல்லாத் தெரியுமே?
நாங்க இலங்கை அரசுக்கு ஒன்னுமே செய்யலன்னு சொல்லிக்கிட்டே பின்னாடி வழியா எல்லாத்தையும் செய்றவங்கத்தானே நீங்க?
வவுனியா விமானத் தாக்குதல்ல சில இந்தியர்கள் காயமடைஞ்சாங்களே, இந்தியால உச்சா போக இடமேயில்லன்னு வவுனியால போயி உச்சா அடிக்க போனவங்க மேலயா புலி விமானம் குண்டு போட்டுச்சு?
நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு.

இரா.சுகுமாரன் சொன்னது…

//உலகில் 5 ஆவது பெரிய இராணுவப் படை உடைய இந்தியா, பாகிஸ்தானில் நுழைந்து தீவிரவாதிகளை அழிப்பதற்கு ஏன் தயங்க வேண்டும்? உண்மையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் பயறிசிக் களங்களையெல்லாம் இந்திய அரசு வீடியோ ஆவனமாக பதிவு செய்து உலக நாடுகளுக்கு கொடுத்து இருக்கிறது, பின்லேடனைக் காட்டும் காட்சிகளின் போது கடுமையாக தீவிரவாதிகள் பயிற்சி பெரும் காட்சிகளைக் காட்டுவார்கள், இவையெல்லாம் இந்திய அரசு உளவு துறை மூலம் பெற்ற படங்கள் தான் என்று சொல்கிறார்கள். அதாவது பாகிஸ்தானில் தீவிரவாதிகள் செயல்படும், பயிற்சி பெரும் இடங்கள் பலவற்றை இந்திய அரசும், இராணுவம் அறிந்தே வைத்திருக்கிறது.//

மிக நெருக்கமான இடத்திற்கு வந்து விட்டீர்கள் அரசு இயந்திரம் ஏன் இப்படி செயல்படுகிறது என்பதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் நீங்கள் இப்படி ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறீர்கள்.

மக்கள் நாளை என்ன பேச வேண்டும் என்பதை உளவுத் துறை தீர்மானிக்கிறது என்று கூட சொல்லலாம், அதன் படிதான் இது நடக்கிறது. அதாவது அரசுக்கு ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால் திசை திருப்ப இது போன்ற விசயங்களை காத்திருப்பில் வைத்திருப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் கிளப்பிவிட்டு மக்களை திசை திருப்ப இவை எப்போதும் அரசுக்கு பயன்படும்.

ஒருமுறை இராசீவ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் சர்வதேச உளவு நிறுவனமான ”ரா” (RAW) பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை இந்திய விமானத்தில் கடத்தி வந்தது. பின்னர் அது பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் கடத்தி வந்தார்கள் என ரா சொன்னது ஆனால், கடைசியில் இந்தியாவின் ”ரா” நிறுவனம் தான் இவற்றை கடத்தி வந்தது என்பதை விமான நிலைய அதிகாரிகள் இவர்களின் முத்திரை உள்ளிட்ட சில அடையாளங்களை வைத்து நிறுபித்தபின் அம்பலப்பட்டுப் போனார்கள். இது ஏன் நடைபெற்றது என்றால் ராசீவ் அட்சியின் போது பேபார்ஸ் ஊழல் பற்றி பேசிய போது திட்டமிட்டு திசை திருப்ப செய்யப்பட்டதாகும். எனவே, உளவு நிறுவனத்தின் லீலைகளை நீங்கள் அறிந்து கொண்டால் உங்களுக்கு இத்தகைய சந்தேகங்கள் எழ வாய்ப்பில்லை


தோழமையுடன்
இரா.சுகுமாரன்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//ஒருமுறை இராசீவ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் சர்வதேச உளவு நிறுவனமான ”ரா” (RAW) பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை இந்திய விமானத்தில் கடத்தி வந்தது. பின்னர் அது பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் கடத்தி வந்தார்கள் என ரா சொன்னது ஆனால், கடைசியில் இந்தியாவின் ”ரா” நிறுவனம் தான் இவற்றை கடத்தி வந்தது என்பதை விமான நிலைய அதிகாரிகள் இவர்களின் முத்திரை உள்ளிட்ட சில அடையாளங்களை வைத்து நிறுபித்தபின் அம்பலப்பட்டுப் போனார்கள். இது ஏன் நடைபெற்றது என்றால் ராசீவ் அட்சியின் போது பேபார்ஸ் ஊழல் பற்றி பேசிய போது திட்டமிட்டு திசை திருப்ப செய்யப்பட்டதாகும். எனவே, உளவு நிறுவனத்தின் லீலைகளை நீங்கள் அறிந்து கொண்டால் உங்களுக்கு இத்தகைய சந்தேகங்கள் எழ வாய்ப்பில்லை //


அய்யா! போபர்ஸ் பீரங்கிப் பேரத்தை திசை திருப்ப அப்போதைய இராஜீவ் ஆட்சியில் இந்திய வான் எல்லையை எல்லாம் கடந்து இலங்கையில் உணவுப் பொட்டலம் போட்டு(ஒரே கல்லுல இரண்டு மாங்காய், எப்படி இருக்கிறது இவர்களது இனப் பற்று, பேச்சு வார்த்தைக்கு வந்தவர்களை சிறைவைத்து மிரட்டியவர்களாச்சே! ) அதை ஒரு சர்ச்சையாக்கி போபர்ஸ் பீரங்கி ஊழலை மறைக்க முயன்றது தெரியும். நீங்கள் சொல்வது புதுக் கதையாக இருக்கிறதே?

ஒரு நாட்டிலிருந்து விமானத்தில் ஆயுதம் கடத்திக் கொண்டு வர முடியுமா? பாகிஸ்தான் அதற்கு அனுமதிக்குமா? பாகிஸ்தான் அரசுக்குத் தெரியாமல் விமானத்தில் கடத்தி வரமுடியுமா? இந்த இடத்தை கொஞ்சம் விளக்குங்களேன்.

இரா.சுகுமாரன் சொன்னது…

//ஒரு நாட்டிலிருந்து விமானத்தில் ஆயுதம் கடத்திக் கொண்டு வர முடியுமா? பாகிஸ்தான் அதற்கு அனுமதிக்குமா? பாகிஸ்தான் அரசுக்குத் தெரியாமல் விமானத்தில் கடத்தி வரமுடியுமா? இந்த இடத்தை கொஞ்சம் விளக்குங்களேன்.//

உடனடியாக ஆதாரம் அளிக்க இயலாது ஆனால் “ மனஓசை” என்ற இதழில் இது தொடர்பான கட்டுரை வந்துள்ளது. அந்த இதழ் என்னிடம் இருக்கும் என நினைக்கிறேன். 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. ஆனால், பழைய இதழ்கள் தொகுப்பில் இருக்கலாம். ஆனால் இது போன்ற பல்வேறு தொகுப்பிலிருந்து எந்த இதழில் வெளிவந்தது எனபார்த்து கண்டுபிடிப்பது சற்று கடினம் தான் இருப்பினும் முயற்சிக்கிறேன்.

Matra சொன்னது…

Please read this hard hitting article in an european news magazine.

http://europenews.dk/en/node/16654

இரா.சுகுமாரன் சொன்னது…

//ஒரு நாட்டிலிருந்து விமானத்தில் ஆயுதம் கடத்திக் கொண்டு வர முடியுமா? பாகிஸ்தான் அதற்கு அனுமதிக்குமா? பாகிஸ்தான் அரசுக்குத் தெரியாமல் விமானத்தில் கடத்தி வரமுடியுமா? இந்த இடத்தை கொஞ்சம் விளக்குங்களேன்.//

பெங்களூரில் ஒருமுறை சோதித்தார்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?. இந்தியாவில் ஆயுதங்களை கடத்தமுடியுமா? என சோதித்தார்கள் விமான பாதுகாப்பு துறை சேர்ந்தவர்கள். சோதனைக்காகவே இது செய்யப்பட்டது. ஆனாலும் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை அப்போது உறுதி செய்தார்கள்.

இதற்கு முன்பாக இந்திய விமானம் ஒன்று கடத்தப்பட்டது. அதன் பின்னரே இந்த சோதனை நடத்தப்பட்டது. விமானங்கள் கடத்தப்பட்ட வரலாறுகளை படியுங்கள் இப்படி கடத்துபவர்கள் ஆயுதங்கள் இல்லாமல் கடத்துவதில்லை. என்பதை இது தொடர்பான பழைய ஆதரங்களை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

இது தொடர்பான முழுமையான தகவல் என்னிடம் இல்லை எனினும், பி.ஜெ.பி ஆட்சிகாலத்தில் இந்த சோதனை நடந்ததை நினைவு படுத்த முடிகிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//பெங்களூரில் ஒருமுறை சோதித்தார்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா?. இந்தியாவில் ஆயுதங்களை கடத்தமுடியுமா? என சோதித்தார்கள் விமான பாதுகாப்பு துறை சேர்ந்தவர்கள். சோதனைக்காகவே இது செய்யப்பட்டது. ஆனாலும் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதை அப்போது உறுதி செய்தார்கள்.

இதற்கு முன்பாக இந்திய விமானம் ஒன்று கடத்தப்பட்டது. அதன் பின்னரே இந்த சோதனை நடத்தப்பட்டது. விமானங்கள் கடத்தப்பட்ட வரலாறுகளை படியுங்கள் இப்படி கடத்துபவர்கள் ஆயுதங்கள் இல்லாமல் கடத்துவதில்லை. என்பதை இது தொடர்பான பழைய ஆதரங்களை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

இது தொடர்பான முழுமையான தகவல் என்னிடம் இல்லை எனினும், பி.ஜெ.பி ஆட்சிகாலத்தில் இந்த சோதனை நடந்ததை நினைவு படுத்த முடிகிறது.//

பெங்களூரில் சோதனை செய்து பார்த்தது தெரியும். ஒரு துப்பாக்கி எடுத்துக் கொண்டு போவதே 99 சதம் முடியாத காரியம். அந்த ஒரு சதம் தப்பிக்கும் பட்சத்தில் தான் விமான கடத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. விமானக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் முன்பெல்லாம் ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கி எடுத்துச் சென்றே காரியம் சாதித்து விடுவதை செய்திகளில் அறிகிறோம். 99 சதம் முடியாத விடயத்தில் ஒன்றிரண்டு துப்பாக்கி எடுத்துகொண்டு வந்தால் அது ஆயுதக் கடத்தல் என்கிறீர்களா? இப்போது அதுவும் முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன் அப்படி நடந்திருந்தால், இதை ஒரு ஆயுதக் கடத்தலாக வகைப் படுத்தவும் முடியாது.


நீங்கள் தெரிவித்த கருத்து இங்கே!

//ஒருமுறை இராசீவ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் சர்வதேச உளவு நிறுவனமான ”ரா” (RAW) பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை இந்திய விமானத்தில் கடத்தி வந்தது. பின்னர் அது பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் கடத்தி வந்தார்கள் என ரா சொன்னது ஆனால், கடைசியில் இந்தியாவின் ”ரா” நிறுவனம் தான் இவற்றை கடத்தி வந்தது என்பதை விமான நிலைய அதிகாரிகள் இவர்களின் முத்திரை உள்ளிட்ட சில அடையாளங்களை வைத்து நிறுபித்தபின் அம்பலப்பட்டுப் போனார்கள். //

இரா.சுகுமாரன் சொன்னது…

//20 ஆண்டுகளுக்கு முன் அப்படி நடந்திருந்தால், இதை ஒரு ஆயுதக் கடத்தலாக வகைப் படுத்தவும் முடியாது.//

நான் ஆயுத கடத்தல் எனச் சொல்லவில்லை, இந்தியா ஏன் இவ்வளவு அறிந்த பின்னும் அமைதியாக இருக்கிறது என்ற கேள்விக்கான பதிலை நான் அளித்தேன். இப்போது விவாதம் வேறு எங்கோ திசைதிருப்பி போகிறது எனவே நான் அளித்த பதிலை இந்த பதிவுக்கு தொடர்பு படுத்தி பாருங்கள்.

தமிழ்கீ சொன்னது…

http://tamilkey.blogspot.com

நண்பர்களே உங்கள் கருத்துக்களை கூறுங்கள்

வாசகன் சொன்னது…

கடந்த காலத்தில் மே.வ.மாநிலத்தில் விமானங்கள் ஆயுதமழை பொழிந்துசென்ற சம்பவங்கள் கூட நிகழ்ந்துள்ளன. ஹரே ராம் இயக்கத்தினரொ என்னவோ சொன்னார்கள். அமெரிக்கன் இன்ஃப்ளுயன்ஸ் காரணமாக அது அப்படியே அமுக்கப்பட்டது என்றும் தெரிந்தது. அல்லது சுகுமாரன் ஐயா சொல்வது போல அவை ஒருவேளை பிரச்னைகளை திசைத் திருப்புவதற்காக நம் அரசியல்வாதிகள் cum உ.துறையினரின் லீலையாகவும் இருக்கலாம்.

தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான சட்டங்கள், அவை முறையாகவும் தவறில்லாமலும் பயன்படுத்துவதன் தேவை ஒருபுறம் வேண்டுமென்றாலும் அரசியல்வாதிகள் ஓட்டுகளுக்காக மதவெறியைத் தூண்டுவதை நிறுத்தினாலே போதும் (உதாரணம் மோடி, அத்வானி போன்றவார்கள்). நாட்டை மேலும் பிளவுபடுத்துபவர்கள் இவர்களே

சிலபோது மதவெறி, சிலபோது ஜாதிவெறி, கேவலம் ஓட்டுக்காக என்று இந்த பன்னாடைகள் தூண்டிவிட்டு நடந்துகொள்வதால்தான் அப்பாவிகளின் உயிர் பணயமாகிறது.

இந்தியாவில் நிகழ்திருப்பது போல பாகிஸ்தானிலும் முன்பொருமுறை Marriott Hotel தீவிரவாதிகள் இதே மாதிரி நுழைந்து அழிச்சாட்டியம் செய்திருந்தார்கள். அப்போதே நாமும் உஷாராகியிருக்கவேண்டும்.

தீவிரவாதத்தை ஒடுக்கியே ஆக வேண்டும். ஆனால் அதற்கான வழிமுறைகளில் அதை மேலும் தூண்டுவதற்கான செயல்களையே இதுவரை அரசும் அரசியல்வாதிகளும் செய்து வந்திருக்கின்றனர்.

Jeyapalan சொன்னது…

இந்தச் சம்பவத்தில் யூதர் இன வளாகம் பணயம் வைக்கப் பட்டதால் இஸுரவேலும் யூ.எஸ். உம் இந்தியாவில் அடுத்த நிமிடமே நிற்கிறார்கள். இதுவே இலங்கைப் பிரச்சினையாயின் இந்தியாவிற்கு இது உள்விவகாரம், வெளி விவகாரம் ஆது இது என்று பல. (வட) இந்தியா படிக்க வேண்டிய விடயங்கள் நிறைய இருக்கின்றன ஐயா. இந்தியாவை கேட்டு வந்தார்களா இல்லையா என்றும தெரியவில்லை :-(

அமர பாரதி சொன்னது…

கோவி,

நம் ஆட்கள் பேச்சில் மட்டுமே வீரர்கள். தத்துவத்தை மட்டுமே தத்து பித்தென்று உளறுபவர்கள். யார் எதைச் சொன்னாலும் அதை மறுத்துப்பேசுவதற்கு ஒரு சாரார் இருப்பார்கள். இதனால் வேகமான முடிவுகள் எடுக்க முடியாமல் போகிறது. மேலும் இந்தியாவை வழி நடத்தும் பெரும் பொறுப்பில் இருப்பவர்கள் கோழைகள். எந்த செயலை செய்தாலும் தனக்கு என்ன லாபம் என்று பார்த்தே செய்பவர்கள்.

யார் பாதிக்கப்பட்டாலும் அது பாதிக்கப்பட்டவனின் தவறு என்றே வாதிடுபவர்கள். எந்த

அமர பாரதி சொன்னது…

கோவி,

நம் ஆட்கள் பேச்சில் மட்டுமே வீரர்கள். தத்துவத்தை மட்டுமே தத்து பித்தென்று உளறுபவர்கள். யார் எதைச் சொன்னாலும் அதை மறுத்துப்பேசுவதற்கு ஒரு சாரார் இருப்பார்கள். இதனால் வேகமான முடிவுகள் எடுக்க முடியாமல் போகிறது. மேலும் இந்தியாவை வழி நடத்தும் பெரும் பொறுப்பில் இருப்பவர்கள் கோழைகள். எந்த செயலை செய்தாலும் தனக்கு என்ன லாபம் என்று பார்த்தே செய்பவர்கள்.

யார் பாதிக்கப்பட்டாலும் அது பாதிக்கப்பட்டவனின் தவறு என்றே வாதிடுபவர்கள். எந்த பிரச்சினையென்றாலும் அடுத்தவன் மீது குற்றம் சுமத்துபவர்கள்.

பதிவுலக அரசியலிலேயே இது தெரிகிறது. அப்படி இருக்கும் போது இந்திய அளவில் எவ்வளவு இருக்கும்?

suvanappiriyan சொன்னது…

மிகவும் சிந்தித்து எழுதப்பட்ட பதிவு.

நம் நாடு வல்லரசாவதை எப்பாடுபட்டாவது தடுக்கும் நோக்குடனே நடத்தப்பட்ட தாக்குதலாகவே இதை நினைக்கத்தோன்றுகிறது. குற்றவாளிகள் எந்த மதத்தை சார்ந்தவராயினும் சமூகத்தின் முன் கொண்டு வந்து அந்த மிருகங்களைத் தூக்கில் ஏற்ற வேண்டும்.

உயிரிழந்த அனைவருக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்.

Krishna Kumar.S சொன்னது…

I read your blogspot article. Nice. I like it very much. I appreciate your thoughts very much. We are a secular country and the political parties shouldn't go against any religion. I agree with your point.

Whether you know it or not, during the late 1970's during the Soviet Invasion of Afghanistan, US supported Taliban to defeat the Soviets. This is where Taliban got the confidence. Arms, Bombs, finance were given by US just because they didn't like the USSR. This is where it all originated.

Sanjai Gandhi சொன்னது…

// ஜோசப் பால்ராஜ் said...

தீவிரவாதத்திற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாத உன்னோடு பேசிப் பிரயோசனம் இல்ல.
தாவூத் இப்ராகிம் கூட எல்லாம் பிரபாகரன ஒப்பிடுற உன் அறிவை என்னா செய்யிறது..

ஹிஹி.. என்னா செய்யிறது மாப்ள.. பின்லேடன் கூட விடுதலைப் போராட்டம் புனிதப் போர்ன்னு சொல்லிட்டு தான் திரியறான்.

தற்கொலை படை என்ற பெயரில் தம்மக்களை எல்லாம் அழித்துவிட்டு யாருக்கு ராசா விடுதலை வாங்கி தருவாரு? :) இலங்கை அரசு செய்ற அதே வேலைய தானே பிரபாகரனும் செய்யிறாரு.. திருந்து மாப்ள.. புது ரிக்கார்ட் வாங்கு மாப்ள.. பாவம் உன்னோடது ரொம்ப கீறல் விழுந்து கெடக்கு.. :))

Sanjai Gandhi சொன்னது…

// ஜோசப் பால்ராஜ் said...

//தனி ஈழம் அல்லது ஈழத்தமிழர்களுக்கு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதில் நானும் விருப்பம் உள்ளவன் என்று பல முறை சொல்லியாச்சி.. //

இதவிடக் காமெடி வேற ஒன்னுமே இல்லீங்ணா.
ஆநொந்த சங்கரி, கருணா, பிள்ளையான், டக்கிளஸ் தேவானந்தா இவங்க தலைமையில தனி ஈழம் அமையணும்னு தானே ஆசைப்படுறீங்க?//

ஏன் மச்சி.. இவங்க எல்லாம் தமிழர்கள் இல்லையா? :)))


// நீங்க ஆசைப்படுறதுதான் எங்களுக்கு நல்லாத் தெரியுமே?
நாங்க இலங்கை அரசுக்கு ஒன்னுமே செய்யலன்னு சொல்லிக்கிட்டே பின்னாடி வழியா எல்லாத்தையும் செய்றவங்கத்தானே நீங்க?
வவுனியா விமானத் தாக்குதல்ல சில இந்தியர்கள் காயமடைஞ்சாங்களே, இந்தியால உச்சா போக இடமேயில்லன்னு வவுனியால போயி உச்சா அடிக்க போனவங்க மேலயா புலி விமானம் குண்டு போட்டுச்சு?
நல்லா சொல்றாங்கய்யா டீட்டெய்லு.//

கிகிகி... :))))

மாப்ள.. மற்ற மத சார்பற்றவர்கள் (உன்னை) மாதிரி ராமனை கல்லாகவும் ஏசுவையும் அல்லாவையும் கடவுளா பாக்கற ஆள் நான் இல்லை.. எனக்கு இது எல்லாமே கற்பனை தான்..

பிரபாகரன் உனக்கு தலைவன்.. எனக்கு பயங்கரவாதி.. அம்புட்டு தான்.. பின்லேடனும் தான் குண்டு வைக்க ஆள் அனுப்பறான்.. தற்கொலைப் படை வச்சிருககான்.. பிரபாகரனும் அவ்வண்ணமே... ஒப்பீட்டுக்கு மட்டுமே இவர்கள் இருவரையும் சொல்றேன்.. இன்னும் நிறைய தியாகிகள் இந்த மாதிரி இருககாங்க.. ஏன் அவங்கள சொல்லலைனு குதிக்காத..

என்னால உன்னமாதிரி மணிகணக்குல எல்லாம் வலைப்பூவுல தேன் குடிக்க முடியாது.. அதனால அளவா தான் பேச முடியும்.. சரியா மச்சி? :))

Vishwa சொன்னது…

தமிழில் தேசிய கீதம் - இராமகோபலன் ஆ'வேஷம் !
இந்து... இந்து, இந்தியா இந்து நாடு என்று கூவி தேசியவாதம் பேசி இந்து மதம் காப்பதற்கு எடுக்கும் முயற்சியைப் போலவே, நேராக நேபாளத்திற்கு சென்று நீங்களெல்லாம் போராடி இருந்தால், உலகிலேயே 'ஒரே இந்து நாடு' என்று நீங்களெல்லாம் பெருமை பொங்க கூறிய இந்து நேபாளத்தை மாவோயிஸ்டுகளிடமிருந்து மீட்டு இருக்கலாம், செய்தீர்களா ? இனி செய்வீர்களா ?"
----------------கோவிகண்ணன்...

"அமெரிக்காவிற்கு தீவிரவாதிகளின் பயிற்சிக்களம் என்று கண்டறிந்து தலிபான்களை துடைத்தொழிக்க முடிவெடுத்த பின், அனைத்துலக ஆலோசனைகளோ, ஐநா நைனாக்களையோ கலந்து ஆலோசிக்காமல் 'என் நாட்டு பாதுகாப்பிற்கு...எவரிடம் ஆலோசனை கேட்கவேண்டும் ?' என்று கேள்வியையே முடிவெடுவாக எடுத்து ஆப்கான் தலிபான்களை ஒழித்துக் கட்டியது அமெரிக்கா.
வீரம் ஏன் இந்தியாவுக்கு இல்லை ? "
----------------கோவிகண்ணன்..

என்ன சாரே இப்டி அவசர பட்டுடீங்க. உங்களுக்குத்தான் இலங்கையில, இல்ல...... இல்ல ஈழத்தில் கோவில் கட்ட போறாங்களே.. மும்பைல குண்டுவெடிச்சா என்ன? டெல்லில குண்டுவெடிச்சா என்ன? கவலைய விடுங்க.. அங்கதான் தமிழர்கள் சாகலியே...ஹிந்தி பேசற ஹிந்துகள்தானே செத்தாங்க. போங்க ..போயிட்டு உங்க சீமான் அண்ணன கூபிடுங்க..இல்ல இனமுரசு பாரதிராஜாவ கூபிடுங்க...இல்ல ரோஜாவுக்கு என்ற சுத்த தெளுங்கச்சிய கல்யாணம் பண்ணிகிட்ட சுத்த தமிழன் செல்வமனிய கூபிடுங்க. ஓஹோ அவங்களுக்கு ஈழப்ரச்சனை இருக்குல்ல. போயிட்டு பிரபாகரன் கால கழுவ சொல்லுங்க...அந்தாளுக்கு இருக்குற தேசிய கொள்கைகூட உங்கள மாதிரி கைக்கூலிகளுக்கு இல்லாம போயிருச்சு.. போங்க..போயிட்டு ஈழ கவிதை எழுதுங்க..நிறைய COMMENTS வரும்.

அமெரிக்காவுக்கு இருக்குற தைரியம் கூட இந்தியாவுக்கு இல்லையாம்...சாரே ....சும்மா சொல்லகூடாது.. நல்லாவே நடிக்குறீங்க.உங்களமாதிரி கைகூளிகள வெச்சிகிட்டு இருந்தா எவனுக்குதான் தைரியம் வரும்.

தமிழகத்துக்கு பூகோள அமைப்பால ஒரு நன்மை....என்ன தெரியுமா தீவிரவாதிக்கு ரொம்ப தூரம் கடந்து வந்து அடிக்கறது கஷ்டம்.அதனால தமிழகத்த விட்டுட்டான்... ஆனா கவலையே படாதீங்க...உங்க அண்ணன் பிரபாகரன் விடமாட்டாரு.. அவரு தமிழும் பேசுவாரு....இந்தியாவோட பிரதமரையும் கொல்லுவாரு.

ஆனா,நீங்க கவலை படாதீங்க....ஏன்ன,அவருதான் தமிழ் பேசுறாரே... அதனால யாரவேனும்னாலும் எப்ப வேணும்னாலும் கொல்ல அவருக்கு உரிமை இருக்கு.

தீவிரவாதி தமிழ் பேசினாலும் தீவிரவாதிதான் சாரே......அவனுக்கு தாய்மொழி தீவிரவாதம்தான். அதனால நீங்க இனிமேல் இந்தியா,தேசியம், ஒற்றுமை அப்டின்னு comedy பண்ணாதீங்க.....

அன்புடன்...
விஷ்வா

புதுகை.அப்துல்லா சொன்னது…

இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாதிகளை இந்தியா வேட்டையாடுவதை இந்திய இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள் என்பது போல் ஒரு மாயையை இந்துத்துவ வியாதிகள் தான் பரப்புவார்கள், நீங்களும் ?
//

இஸ்லாம் பெயரில் நடக்கும், நடத்தும் தீவிரவாதத்தை மிகவும் கடுமையாக எதிர்க்கும் நான், தமிழ்பிரியன் போன்றோர் எல்லாம் யார் அத்திரி???

புதுகை.அப்துல்லா சொன்னது…

ஆகவே பொத்திக்கொண்டு இருக்கவும்//

//

சீரா நீங்க மூடிக்கிட்டு போரது மிகவும் நல்லது. நீங்க ஒரு இஸ்லாமியனாக இருக்கும் பட்சத்தில் ”தாய்நாட்டிற்கு துரோகம் நினைப்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல” என்ற முகமது நபியின் கட்டளையை மீறுகிறீர்கள். ஆகையால் இனி நீங்கள் இஸ்லாமியரும் அல்ல.

Jackiesekar சொன்னது…

நம் கோபத்தை இப்படித்தான்பதிவு எழுதி தீர்த்த கொள்ள வேண்டியதாய் இருக்கிறது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்