பின்பற்றுபவர்கள்

24 ஜூன், 2010

இனியவை 40 - இன்னா 400 !

போர்வாள்களாகத் துணியவில்லை,
கேடயங்களாக இருக்கத்தான் இயலவில்லை,
காயங்களை ஆற்றவும் மனமுமில்லை,
காயங்கள் தானே ஆறுவதற்குள் பொறுமையுமில்லை,
ஊர்வலத்தின் முன்பே தெரியும்
ஊர் அவலக்காட்சிகள்
மறைக்க மனத்திரை ஒன்றை
மாநாட்டில் தேடிப்பார்த்தேன்
தென்படவில்லை...
இன்றைய இனியவை நாற்பதின்
மயிலாடும் முகத்தின் மறைவில்
நேற்றைய மறக்க முடியாத
காட்சிகளாக தொடர்காட்சிகளாக.........இன்னா நானுறு !


9 கருத்துகள்:

JTP சொன்னது…

Good one

priyamudanprabu சொன்னது…

NO COMMENTS

துளசி கோபால் சொன்னது…

????????????

ஆ.ஞானசேகரன் சொன்னது…

யோசிக்க வைக்கும் உண்மை...

கோவி.கண்ணன் சொன்னது…

/ துளசி கோபால் said...

????????????//

குறிப்பிட்டப் படம் லிங்கி இருந்தது, ஆனால் அந்த இணைய தளம் படத்தை மாற்றிவிட்டதால் வேற படம் வந்திருந்திருக்கலாம். இப்ப படத்தையும் சேர்த்து போட்டு இருக்கிறேன்

TBR. JOSPEH சொன்னது…

இத்தகைய வாதங்கள் சரியா என்பது தெரியவில்லை. ஏதோ இலங்கையில் நடந்த அனைத்து அக்கிரமங்களுக்கு முக தான் காரணம் என்பதுபோல. ஜெயலலிதாவும் இதையேதான் சொல்கிறார். உங்களைப் போன்றவர்களும் இதையே சொன்னால் எப்படி? இப்படி சொல்வதற்கென்றே தமிழ்மணத்தில் நிறைய பேர் இருக்கின்றனரே!

கோவி.கண்ணன் சொன்னது…

//டி.பி.ஆர் said...

இத்தகைய வாதங்கள் சரியா என்பது தெரியவில்லை. ஏதோ இலங்கையில் நடந்த அனைத்து அக்கிரமங்களுக்கு முக தான் காரணம் என்பதுபோல. ஜெயலலிதாவும் இதையேதான் சொல்கிறார். உங்களைப் போன்றவர்களும் இதையே சொன்னால் எப்படி? இப்படி சொல்வதற்கென்றே தமிழ்மணத்தில் நிறைய பேர் இருக்கின்றனரே!//

தமிழ், தமிழினம் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் உளரும் மு.க தான் ஆட்சிக்கட்டிலில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. செயல்படக் கூடிய இடத்திலிருந்தும் கள்ள மவுனம் கடுப்படைய வைத்திருக்கிறது, முக 60 களில் போட்ட நாடகங்களை மூன்று மணி நேரக் காட்சியாக கடற்கரையில் உண்ணாவிரதம் என்பதாக வசனம் எதுவுமின்றி போட்ட போதே,இவருக்கும் ஜெவுக்கு பெரிய வேறுபாடு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எதிரிகளை விட துரோகிகளைத்தான் எந்த இனமும் மன்னிக்காது

துளசி கோபால் சொன்னது…

//ஆட்சிக்கட்டிலில்...//

ஹஹ்ஹாஹஹ்ஹாஹா

தூங்கிட்டார்:-)))))))))

அஹோரி சொன்னது…

பழைய சோறு போட்டு வெங்காயம் குடுத்தாலே மூச்ச கட்டி கிட்டு பாராட்டு வானுங்க. குஸ்காலாம் போடுறாங்களாம் , ஓவ்வோருத்தன் காதுலயும் ரத்தம் தான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்