சிங்கையில் இருந்து வெளியாகும் இணைய இதழ்

இனியவை 40 - இன்னா 400 !

Thursday, June 24, 2010

போர்வாள்களாகத் துணியவில்லை,
கேடயங்களாக இருக்கத்தான் இயலவில்லை,
காயங்களை ஆற்றவும் மனமுமில்லை,
காயங்கள் தானே ஆறுவதற்குள் பொறுமையுமில்லை,
ஊர்வலத்தின் முன்பே தெரியும்
ஊர் அவலக்காட்சிகள்
மறைக்க மனத்திரை ஒன்றை
மாநாட்டில் தேடிப்பார்த்தேன்
தென்படவில்லை...
இன்றைய இனியவை நாற்பதின்
மயிலாடும் முகத்தின் மறைவில்
நேற்றைய மறக்க முடியாத
காட்சிகளாக தொடர்காட்சிகளாக.........இன்னா நானுறு !


10 கருத்துக்கள்:

  • JTP
     

    Good one

  • பிரியமுடன் பிரபு
     

    NO COMMENTS

  • துளசி கோபால்
     

    ????????????

  • துளசி கோபால்
     

    ????????????

  • ஆ.ஞானசேகரன்
     

    யோசிக்க வைக்கும் உண்மை...

  • கோவி.கண்ணன்
     

    / துளசி கோபால் said...

    ????????????//

    குறிப்பிட்டப் படம் லிங்கி இருந்தது, ஆனால் அந்த இணைய தளம் படத்தை மாற்றிவிட்டதால் வேற படம் வந்திருந்திருக்கலாம். இப்ப படத்தையும் சேர்த்து போட்டு இருக்கிறேன்

  • டி.பி.ஆர்
     

    இத்தகைய வாதங்கள் சரியா என்பது தெரியவில்லை. ஏதோ இலங்கையில் நடந்த அனைத்து அக்கிரமங்களுக்கு முக தான் காரணம் என்பதுபோல. ஜெயலலிதாவும் இதையேதான் சொல்கிறார். உங்களைப் போன்றவர்களும் இதையே சொன்னால் எப்படி? இப்படி சொல்வதற்கென்றே தமிழ்மணத்தில் நிறைய பேர் இருக்கின்றனரே!

  • கோவி.கண்ணன்
     

    //டி.பி.ஆர் said...

    இத்தகைய வாதங்கள் சரியா என்பது தெரியவில்லை. ஏதோ இலங்கையில் நடந்த அனைத்து அக்கிரமங்களுக்கு முக தான் காரணம் என்பதுபோல. ஜெயலலிதாவும் இதையேதான் சொல்கிறார். உங்களைப் போன்றவர்களும் இதையே சொன்னால் எப்படி? இப்படி சொல்வதற்கென்றே தமிழ்மணத்தில் நிறைய பேர் இருக்கின்றனரே!//

    தமிழ், தமிழினம் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் உளரும் மு.க தான் ஆட்சிக்கட்டிலில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. செயல்படக் கூடிய இடத்திலிருந்தும் கள்ள மவுனம் கடுப்படைய வைத்திருக்கிறது, முக 60 களில் போட்ட நாடகங்களை மூன்று மணி நேரக் காட்சியாக கடற்கரையில் உண்ணாவிரதம் என்பதாக வசனம் எதுவுமின்றி போட்ட போதே,இவருக்கும் ஜெவுக்கு பெரிய வேறுபாடு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எதிரிகளை விட துரோகிகளைத்தான் எந்த இனமும் மன்னிக்காது

  • துளசி கோபால்
     

    //ஆட்சிக்கட்டிலில்...//

    ஹஹ்ஹாஹஹ்ஹாஹா

    தூங்கிட்டார்:-)))))))))

  • அஹோரி
     

    பழைய சோறு போட்டு வெங்காயம் குடுத்தாலே மூச்ச கட்டி கிட்டு பாராட்டு வானுங்க. குஸ்காலாம் போடுறாங்களாம் , ஓவ்வோருத்தன் காதுலயும் ரத்தம் தான்.

QR Code for this Blog

qrcode

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

- : புலிகளைக் காப்பாற்றுவோம் : -

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP