பின்பற்றுபவர்கள்

11 செப்டம்பர், 2009

புதிய தலைமுறை - ஒரு வாசகப் பார்வை !

அச்சு ஊடக இதழ்களை இணைய ஊடகங்கள் தின்று வரும் இன்றைய காலகட்டங்களில் அச்சு ஊடகங்களில் புதிய வார இதழ்களின் வரவுகள் குறைந்துவிட்டது. அது தவிர ஏற்கனவே இருக்கும் குமுதம், ஆவி, குங்குமம் போன்ற நன்கு அறிமுகமான இதழ்களுடன் பொட்டிக் கடைகளில் தொங்கி வாசகருக்கு முன்னாள் அறிமுகம் ஆக வேண்டுமென்றால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதுடன் பக்களின் உள்ளடக்கம் மற்றும் பகிர்வின், இலக்கியத்தின் தன்மை தரமெல்லாம் ஏற்கனவே இருக்கும் இதழ்களுக்கு போட்டி போடும் தன்மையில் இருந்தால் தான் ஓரளவு நின்று வளரமுடியும்.

சென்ற வாரம் சென்னை சென்றிருந்த போது பதிவர் நண்பர் மற்றும் அன்பு தம்பி அதிஷா(வினோத்) அழைப்பின் பேரில் அவர் அலுவலகம் அருகில் சென்றேன். பதிவர் யுவகிருஷ்ணாவும் (லக்கிலுக்) அங்கிருந்தார்.

பொதுவான் பேச்சுகளுக்கு பிறகு விரைவில் மூத்த மற்றும் பிரபல பத்திரிக்கையாளர் திரு மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும், 'புதிய தலைமுறை' வார இதழை அறிமுகப்படுத்தினார்கள். வாங்கிப் பார்த்தேன். நண்பர்களிடையேயும் கொடுத்து பரவலாக்கம் செய்யச் சொல்லி 20 பிரதிகள் கொடுத்தனர். சிவப்பு எழுத்தில் தலைப்பு 'புதிய தலைமுறை' கம்யூனிச பெயர் போல் இருக்கிறது, புத்தகம் தலைப்பை பார்த்து வாசகர் டரியல் ஆகமாட்டாங்களா ? ன்னு கேட்டேன். சிரித்தார்கள்.

சரி புத்தகம் பற்றி இப்போது, புத்தகத்தில் உள்ள அனைத்துக் பக்கங்களையும் படிக்கவில்லை, ஆனால் அனைத்துத் தலைப்புகளிலும் என்ன பொருளில் எழுதி இருக்கிறார்கள் என்பதை உள்ளிடில் ஒரிரு வரிகள் படிக்கும் ஊகிக்க முடிகிறது.

வடிவமைப்பு :அளவு புதிய ஆனந்த விகடன், மூன்று அட்டைகள் (விளம்பரம்) தவிர்த்து, பளபளப்பான தாளில் வண்ணப் படங்களுடன் வேறு விளம்பரம் இன்றி 48 பக்கங்கள், விலை பற்றிய விவரங்கள் இல்லை.

உள்ளடக்கம் :

முன் அட்டையில் இந்திய இளைஞர்கள் (இரு இளைஞிஞள், இரு இளைஞர்கள், நடுவில் ஒரு சிங் இளைஞன்) , மற்றும் உள்ளிட்டின் குறிப்பு சினிமா, நலம்,விளையாட்டு, சந்திப்பு என இருக்கிறது.

முன் அட்டையின் பின் பக்கம் யுனிவெர்செல் (மொபைல்) விளம்பரம், முதல் பக்கம்
எம்ஜிஆர் படத்தின் தொடக்கத்தில் வருவது போல் 'வெற்றி...வெற்றி' எனத் தலைபிட்ட கட்டுரை தொடக்கமாக இருக்கிறது. கடைகாரர்கள் லாபம் என்று எழுதி பட்டியல் எழுதுவது போல், எதையும் நேர்மறையாக தொடங்க வேண்டும் என்று முதல் பக்கத்தை தொடங்கியதாக தெரிகிறது. அந்தக் கட்டுரையில் 'சாய்னா நெஹ்வால்' மற்றும் இந்திய பெண் வீராங்கணைகளைப் பற்றிய தகவல் புகைப்படங்களுடன் நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்டு இருந்தது. அது ஒரு தன்முனைப்பு மற்றும் பாராட்டுக் கட்டுரை.

அடுத்து உடல்குறையுற்றோர் மற்றும் ஏழைகள் கல்வி உதவி பெறுவதற்கான தகவல் கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. சிங்கையில் ஊனம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இல்லை, அதற்கு பதிலாக உடல் குறையுற்றோர் என்று எழுதுவார்கள். ஊனம் என்ற சொல்லுக்கு பதிலாக இந்திய தமிழ் இதழ்கள் உடல் குறையுற்றோர் என்று எழுதினால் அவர்களுடைய தன்னம்பிக்கை மிகுதியாகும், ஊனம் என்ற சொல்வது அவர்களை தனித்துவிட்டுவிடுகிறது. அவர்களைக் குறிக்க ஒரு அடையாளப் பெயர் தேவைதான். இருந்தாலும் அதை புண்படா வண்ணம் குறிப்பிட வேண்டும். அதாவது அடையாளம் தேவை, அடைமொழி தேவையற்றது. குருடர் என்பதை பார்வையற்றோர் என்றும், செவிடர் என்பதை கேளாதோர் என்றும் எழுதிப் பழகிக் கொள்ள வேண்டும். கைகால் நன்கு செயல்படாதவர்களை மாற்றுத் திறனுடையோர் என்று குறிப்பது வழக்காகி இருக்கிறது.

அடுத்ததாக அதிஷா மற்றும் லக்கிலுக், அண்ணா பல்கலை வளாகத்தில் பொறியல் கல்லூரி சேர்க்கைக்கு நடைபெற்ற நேர்முகம், சேர்க்கை ஆகிய பற்றி மாணவர்களும் பெற்றோர்களும் அடைந்த துன்பங்களை நேரில் சென்று கண்டு வந்து எழுதி இருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று 'காலை 7 மணிக்கு நேர்முகம் தொடங்கி விடுவதால் தொலைவில் இருந்து வருபவர்கள் நேரடியாக கோயம்பேட்டிலிருந்து கல்லூரிக்கு வந்துவிடுகிறார்கள், அவர்களுக்கு குளிக்க பல்விளக்கக் கூட நேரம் இல்லாமல் போய்விடுகிறது, கல்லூரி நிர்வாகம் நேரங்களை மாற்றி அமைத்தால் பெற்றோர்கள் சிரமத்துக்கு உள்ளாக மாட்டார்கள் என்று சொல்லி இருந்தார்கள்.

அடுத்து வாமனன் திரை விமர்சனம், சீமானுடன் மாணவர்கள் பேட்டி, கடவுள் எங்கே இருக்கிறார் ? ஆன்மிகம் தொடர்புடைய உரையாடல் கதை, சர்கரை நோய் பற்றிய மருத்துவ கட்டுரை, இளைஞர்களுக்காக 'பைக் வாங்குவது எப்படி ?' ங்கிற கட்டுரை.

சரியாக நடுப்பக்கத்துக்கு முன் உமாஷக்தியின் கவிதை.

நடுப்பக்கம் அரசியல், இருபக்கம் சேர்ந்த நடுப்பக்கத்தில் இந்திய அரசியல் மரத்தின் அரசியல் வாதிகளின் கிளைகளும், கிளைக்களுக்கு கிளைகளாக அரசியல் வாதிகளின் வாரிசு பெயர்கள், அவர்களின் சிரிய புகைப்படங்களுடன் படங்களுடன் வாழ்க ஜெனநாயகம் என்று ஒரு பெரிய வண்ண இந்திய வரைபடம்அடுத்து இதழின் பல்சுவைக்காக சேர்க்கப்பட்ட புறநகர் பயணக் கட்டுரை, ஆலம்பரா கோட்டை பற்றிய விவரங்கள் அடங்கி இருந்தது.. அடுத்து இன்றைய திரையில் வெற்றி நடைபோட்டு வரும், சமுத்திரகணி, பாண்டிராஜன் மற்றும் சசிகுமார் ஆகியோர் பற்றிய தகவல்கள், நேர்முகம் இடம் பெற்றிருந்தன.

சன் குழும திரைப்படம் ஒன்றை கிண்டலடித்த 'காசிலா மணி' என்னும் நகைச்சுவை படங்களுடன் சிரிப்பு. வைரமுத்துவின் நடந்து வந்த பாதை, தனது முதல் பேச்சு எங்கே எப்போது என்பதைப் பற்றி எழுதி இருந்தார்.

சிறுகதை இல்லாமல் வார இதழா ? அருணா ஸ்ரீனிவாசன் எழுதிய 'நிறைவு' சிறுகதை இடம் பெற்றிருக்கிறது. அடுத்ததாக ஒரு சமூகக் குற்றம் பற்றி, 'தவறு செய்தவர் ஆசிரியர் தண்டனை அனுபவிப்பது மாணவன்!' என்கிற புலனாய்வு செய்திக் கட்டுரை.

தமிழில் தட்டச்சு செய்வது பற்றியும், இகலப்பை பயன்பாடு தரவிரக்கத் தகவலுடன் கணிணி தொடர்புடைய ஒரு கட்டுரை. நிறைவாக ஒரு புத்தக அறிமுகத்துடன் 46 அவது பக்கத்தில் இதழ் முடிகிறது.

******

வார இதழ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை திரு மாலன் மிக மிக நன்கு அனுபவமாகவே அறிந்தவர் என்பதால் 'புதிய தலைமுறை' யும் அவ்வாறே பொருளடக்கம் மற்றும் வடிவம் பெற்றிருக்கிறது. அதனால் வார இதழ்களில் மற்றொரு புதிய இதழாகப் பார்க்கிறேன். மற்றபடி வார இதழின் வடிவங்களை, கட்டுமானங்களை கட்டுடைத்து மாறுபட்ட வார இதழாக அமைக்க முயற்சித்தது போல் தெரியவில்லை, எல்லோரும் பயணிக்கும் சாலையில் பயணித்தால் சரி என்று நினைப்பதாக தெரிகிறது. கட்டுரைகளின் எழுத்தில் வழக்கமான ஊடக நீட்டல் முழக்கல், வருணனை சுற்றல், அலங்காரங்கள் போல் எழுதப்பட்டு இருக்கிறது. அதாவது பத்திரிக்கைத் தனம் நிறையவே இருந்தது. பத்திரிக்கையில் எழுதுபவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள். அனுபவம் தானே எழுத்து. எழுதியது தானே அனுபவம்.

குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் வரிசையில் 'புதிய தலைமுறை' மற்றொரு வார இதழாக அமைந்திருகிறது என்று சுறுக்கமாக சொல்லிவிடுகிறேன். எதாவது மாறுதல் இருக்க வேண்டும் என்கிற வம்படியாக கருத்துச் சொல்ல முடியவில்லை. மாறுதல் என்றால் என்ன மாறுதல் வாசகர் எதிர்ப்பார்ப்பு குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் இவைகளால் ஏற்கனவே நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளதால், புதியமாறுதல்களுடம் ஒரு இதழை முன்மொழிவது, அமைப்பது கடினம் என்பதை நான் இந்த நூலின் அமைப்பையும் பொருளடக்கத்தையும் வைத்துப் புரிந்து கொண்டேன்.

பலசரக்குடன் எத்தனை மளிகைக் கடை திறந்தாலும், தரம், மளிவு மற்றும் அருகில் இருக்கும் கடை எதுவோ அதில் தான் மக்கள் வாங்குவார்கள். வாசகர் நாடிகளை அறிந்து எத்தனை இதழ்கள் வந்தாலும் அவைகள் வெற்றிபெரும். அந்த வகையில் 'புதிய தலைமுறை' வார இதழ் வாசகர்களைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட வார இதழ்.

புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியர் திருமாலன், உதவி ஆசிரியராக ((எடிட்டராக) திரு யுவகிருஷ்ணா, மற்றொரு உதவி ஆசிரியராக திரு அதிஷா ஆகியோரை வாழ்த்துகிறேன். உங்கள் இதழ் பிற பிரபல வார இதழ்கள் போல் வாசகர்களை ஈர்த்து நிலைக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்.

8 கருத்துகள்:

க. தங்கமணி பிரபு சொன்னது…

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்

அப்பாவி முரு சொன்னது…

//புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியர் திருமாலன், உதவி ஆசிரியராக ((எடிட்டராக) திரு யுவகிருஷ்ணா, மற்றொரு உதவி ஆசிரியராக திரு அதிஷா ஆகியோரை வாழ்த்துகிறேன்.//

மூவருக்கும் வாழ்த்துகள்.


ஆனா, மாலன் குமுதம் ஆசிரியராக இருந்தப்ப இருந்த கிளுகிளுப்புகள் இல்லாத மாதிரியில்ல இருக்கு?

Robin சொன்னது…

பதிவர்கள் பத்திரிகையுலகில் அங்கீகாரம் பெறத் தொடங்கியிருப்பது பாராட்டத் தக்க விஷயம். வாழ்த்துகள்.

வால்பையன் சொன்னது…

அதிஷான்னா, திரிஷா மாதிரி பொண்ணுன்ல நினைச்சேன்!

சுண்ட கஞ்சி அடிச்ச சுறாமீன் கணக்காவுல இருக்காரு!

அச்சசோ வட போச்சே!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அதிசாவும், லக்கிலுக்கும் சாப்புடுறாங்களே அது என்ன பக்கோடாவா?

பக்கத்துல தம்புலருல இருக்குறது தண்ணி என்பது தெரிகிறது.

பீர் | Peer சொன்னது…

"புதிய தலைமுறை" யின் பழைய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நானும் ஒரு வாசகன்

சிங்கக்குட்டி சொன்னது…

உங்கள் அன்புக்கு என் பதிவில் ஒரு நன்றி கோவி.கண்ணன்.
http://singakkutti.blogspot.com/2009/09/blog-post_12.html

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்