பின்பற்றுபவர்கள்

3 செப்டம்பர், 2009

பேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் !

சீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவரும் பேய் மாதத்திற்கு முதன்மைத்துவம் கொடுப்பார்கள். சீனர்களில் பெரும்பான்மையினர் புத்தம், தாவோயிசம் சார்ந்தவர்கள், அவர்களின் சடங்குகள் ஒரே மாதிரியானவை. இந்திய சமய நம்பிக்கைகள் போலவே சொர்கம் நரகம் பற்றி நம்புகிறார்கள். நம்ம இந்திய சமயத்தினர் சொர்கம் செல்லும் போது சீனர்களை அங்கு பார்க்கலாம் அல்லது அவர்கள் சொர்கம் / நரகம் போகும் இந்தியர்களை சொர்கத்தில் பார்கலாம் போல, வைகுண்டத்தில் சீனர்களும், பிற இன மக்களும் இருப்பார்களா என்பதை வைண நண்பர்கள் தெளிவிக்க வேண்டும், இதே ஐயம் பிற மத சொர்க நரகம் குறித்தும் எனக்கு உண்டு, ஆனால் அவங்க நல்லா தெளிவு படுத்தி இருக்கிறார்கள், ஆப்ரகாமிய மதங்களில் மதத்தை ஏற்றுக் கொள்வோர்களுக்கு அவர்கள் மத சொர்கத்தில் இடம் உண்டாம், மற்றவர்களுக்கு நரகம் தான். அவர்கள் கோட்பாடு படி தீர்ப்பு நாளுக்கு பிறகு மகாத்மா காந்தி இந்து என்பதால் எதோ ஒரு நரக கூடாரத்தில் கொதிக்கும் எண்ணையில் முக்கி முக்கி எடுக்கப்படுவாரோ ! :)

சரி சப்ஜெக்ட்டுக்கு வருவோம், சப்ஜெக்ட்டுக்கு வருவோம். சீனர்களின் இந்த பேய் மாதத்தில் முன்னோர்களை நினைவு கொண்டு, அவர்களுக்கான பொருள்களை நெருப்பில் போட்டு எரிக்கிறார்கள். எரிப்பதில் முக்கியமானது போலிப் பணம், பார்பதற்கு பணம் போல் தாள்களில் அச்சடிக்கப்பட்டு இருக்கும், கட்டுக்கட்டாக போட்டு எரிப்பார்கள். முன்னோர்கள் என்ன என்ன பொருள்கள் பயன்படுத்தினார்களோ அது போன்று தாளில் செய்து அதை எரிப்பார்கள், அதில் செருப்பு, ஷூ, கார், சட்டை, பியர் கேன் ஆகியவை கூட அடங்கும், அந்த மாததின் முதல் நாள் 15 ஆவது நாள் கடைசி நாள் ஆகியவற்றில் தாள் எரிப்பது வழக்கம்.

பேய்களுக்காக / முன்னோர்களுக்காக எரிக்கும் வழக்கம் அவரவர் இல்லத்திலும் தனித்தனியாகவும் அலுவலகத்தில் பிறருடன் சேர்ந்தும் செய்வார்கள். இன்று எங்கள் அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளையில் அந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்சியில் பொருள்களை வைத்து படைப்பது வழக்கம். பொருள்கள் உணவு வகைகளை வைத்துவிட்டு, முழுதாக பொரிக்கப்பட்ட பன்றி ஒன்றையும் வைத்து வணங்குவார்கள். ஒவ்வொருவராக வந்து அங்கு வைக்கப்பட்டு இருக்கும் ஊது பத்தியில் மூன்றை எடுத்து கொளுத்தி இருகைகளாலும் குவித்து பிடித்து மேலும் கீழுமாக ஆட்டி வணங்குவார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து அவ்வாறு செய்தேன். சிலர் மண்டியிட்டு அவ்வாறு வணக்கம் செலுத்துவதும் உண்டு. பிறகு வைக்கப்பட்ட பொருள்களில் இருக்கும் தாள் மாதிரிகளை கொளுத்துவதற்கு ஆயத்தமாவார்கள். சிங்கப்பூரில் மாசுக்கட்டுபாடின் காரணமாக கண்ட இடங்களிலெல்லாம் கொளுத்துவதற்கு அனுமதி இல்லை.




கொளுத்துவதற்கு கம்பியினால் பிண்ணப்பட்ட உருளை வடிவ தடுப்புக்குள் எல்லாவற்றையும் அடுக்கிவிட்டு கொளுத்தி விடுவார்கள். எரியத்த்தொடங்கும் முன் 'ஹோ.....! வென பேரொலி எழுப்புவார்கள். பிறகு விசிரி அடிப்பதற்கு என்று சில தாள் வகைகள் இருக்கும் அதனை எடுத்து சுற்றிலும் வீசுவார்கள், கூடவே ரொட்டிகள் ஆகியவற்றையும் வீசுவார்கள்

பிறகு பொறித்த பன்றியின் இருப்பக்கமும் இருவர் பிடித்துக் கொள்ள, இருமுறை ஒருவர் வெட்டுவார் (எங்க நிறுவன உரிமையாளர் தான் வெட்டினார்) அதன் பிறகு, அதனை சிறு சிறு துண்டுகளாக்கி தட்டில் வைத்துவிடுவார்கள், பிறகு எல்லோரும் உணவு உண்ணுவதற்கு உணவு எடுத்துக் கொள்ளும் போது பொரித்த பன்றித்துண்டுகளையும் எடுத்துச் சென்று உண்ணுவார்கள். எனக்கும் இன்னும் சிலருக்கும் வெஜிடேரியன் உணவு வகைகள் வரவழைத்திருந்தார்கள் (இந்த முறை சைனீஸ் வெஜ் அவ்வளாக சகிக்கமுடியவில்லை, உணவகங்களில் சுவையாக இருக்கும்). பூசைக்கு வைத்த பிற பொருள்களை ஒவ்வொருவருக்கும் பிரித்து கொடுப்பார்கள்.

பண்டிகைகளில் பொரிக்கப்படும் பன்றிகள் பொதுவாக இரண்டு மாதக் குட்டி பன்றிகளாகத்தான் இருக்கும். இந்த ஆண்டு பணவீக்கம், பொருளியல் மந்தம் என்பதால் பல நிறுவனங்கள் செலவை மட்டுப்படுத்த பன்றிக்கு பதிலாக பொரித்த வாத்துகளை வைத்திருந்ததாக அலுவலக சீன நண்பர் ஒருவர் சொன்னார்.

புத்த மதம் என்றாலும் முனியாண்டி போல பயமூட்டும் சீன சாமிகள் பலவற்றை அவர்கள் வணங்குகிறார்கள். எங்கள் அலுவலகம் நுழைவாயிலிலும் தொங்கும் தாடி, மீசையுடன் அப்படி ஒரு சாமி உண்டு. சீனர்களின் பழக்க வழக்கம் நம்பிக்கை, ஆகயவற்றில் இந்திய சமயங்களைப் போல் மூட நம்பிக்கைகளும் இருந்தாலும் அதனால் நலிவுற்றோர் யாருமே கிடையாது, மதம் அவர்களை பிரித்துப் போடவில்லை, சாதி படி நிலைகளை ஏற்படுத்தவில்லை என்பதால் சீனர்களிடம் மதச் சீர்திருத்தம், மூட நம்பிக்கை தகர்ப்பு என்கிற தேவையும் இல்லாதிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் ஆட்சி என்றாலும் சீனாவில் மத நம்பிக்கைக்கு எதிராக பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

சீனர்கள் ஒரே நிறத்தில், தோற்றத்தில் இருப்பதால் வெவ்வேறு மதம் என்றாலும் அவர்களுக்குள் பாகுபாடு வேற்றுமை வரும் வாய்ப்புகள் கூட குறைவே. குடும்பப் பெயர்கள் இருந்தாலும் அவை இந்தியாவின் வருணாசிரம்த்தை தாங்கிப் பிடிக்கும் சாதிப் பெயர்கள் போன்ற பரிணமிக்கவில்லை, சீனர்கள் தொழில் அடிப்படையிலும் உயர்வு தாழ்வு பார்க்கும் வழக்கம் என்றால் என்னவென்றே அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

மீண்டும் சொல்கிறேன், அவர்களது மதப் பழக்கம், வழிபாடு ஆகியவற்றில் பலி இடுதல் மற்றும் பல அறிவுக்கு ஏற்பு இல்லாத வழக்கங்கள் இருந்தாலும், தீண்டாமை, பெண்களின் மாதவிலக்கைச் சொல்லி / பெண்களையே வழிபாடுகளில் இருந்து விலக்குதல் ஆகிவை கிடையாது. அவர்களுடைய வழிபாட்டு சமய நம்பிக்கைகள் அறிவுக்கு ஒவ்வாதவை என்றாலும் அதனால் தனிப்பட்ட பிறருக்கு எந்த ஒரு நட்டமும், நலிவும் ஏற்படுவதில்லை.

15 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

//ஆப்ரகாமிய மதங்களில் மதத்தை ஏற்றுக் கொள்வோர்களுக்கு அவர்கள் மத சொர்கத்தில் இடம் உண்டாம்//
:))

'அவர்கள் மத சொர்க்கம்' என்றால் மற்ற மதத்தினருக்கு தனி சொர்க்கம் உண்டு என அவர்கள் ஏற்றுக்கொள்ளுவதாக பொருள் ..அப்படி அவர்கள் நம்புவதாக தெரியவில்லை ..ஒவ்வொருவரும் தாங்கள் சொல்லும் கடவுள் தான் ஒரே கடவுள் ,தாங்கள் சொல்லும் சொர்க்கம் தான் ஒரே சொர்க்கம் என்பதாகத் தான் நம்புகிறார்கள் என்பது எனது புரிதல்.

ஜோ/Joe சொன்னது…

இந்த நோட்டுகளில் 'hell bank note' என இருக்கிறது ? சொர்கத்துக்கு அனுப்பாமல் ஏன் நரகத்துக்கு அனுப்புகிறார்கள் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ/Joe said...
இந்த நோட்டுகளில் 'hell bank note' என இருக்கிறது ? சொர்கத்துக்கு அனுப்பாமல் ஏன் நரகத்துக்கு அனுப்புகிறார்கள் :)
//

சின்ன லாஜிக் !

சொர்கம் என்றால் எல்லாம் கிடைக்கும், நரகத்தில் எதுவும் கிடைக்காது, ஜெயிலில் இருப்பவர்கள் காசு கொடுத்து கஞ்சா வாங்குவதில்லையா, அவர்களுக்கு உறவினர்கள் காசு கொடுப்பது இல்லையா ?

அது போல் நரகத்தில் இருப்பவர்கள், தீக்காயத்திற்கு இந்த பணத்தை வச்சு மருந்துவாங்கி தடவிக்குவாங்கப் போல :)

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//அவர்கள் கோட்பாடு படி தீர்ப்பு நாளுக்கு பிறகு மகாத்மா காந்தி இந்து என்பதால் எதோ ஒரு நரக கூடாரத்தில் கொதிக்கும் எண்ணையில் முக்கி முக்கி எடுக்கப்படுவாரோ ! :)

//

ஹா...ஹா...ஹா....

ஹேமா சொன்னது…

புதுமையான தகவல்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே லெக் பீஸ் கெடச்சிச்சா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஜோதின்னு கேட்டீங்கன்னா லெக் பீஸூ கொடுப்பாங்க. பன்னி லெக் பீஸூதான்.

மணிகண்டன் சொன்னது…

சீனர்கள் எல்லாரும் ஒரே தோற்றமா கோவி ?

சி தயாளன் சொன்னது…

ஆவ்...:-)

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

வெ.சாமிநாத சர்மா எழுதிய சீனாவின் வரலாறு தான் சிறுவயதில், முதன் முதலில் சீனாவைப் பற்றிப் படித்த புத்தகம், பிறகு வரிசையாக, ஏராளமான வரலாற்று ரீதியிலான, பொருளாதார, அரசியல் ரீதியிலான references பார்த்தாயிற்று.

எறும்புகள் தேனீக்களைப் போல ஒரே ஒரு தலைமைக்குக் கட்டுப்படும் இயல்பு ஓரியண்ட் அல்லது கிழக்கத்திய மக்களுக்கு இன்னமும் இருக்கிறது ஒரே ஒரு ராஜா அல்லது ராணித் தேனீ தான் மற்றவை அடிமைத் தேனீக்கள்! இந்த ஒரு அடிப்படைக் குணமே அவர்களுடைய பலமாகவும், பலவீனமாகவும் இருப்பதையும் நீங்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லையோ என்று கேட்கத் தோன்றுகிறது!

நிகழ்காலத்தில்... சொன்னது…

போட்டோக்களே இடுகையின் சாராம்சத்தை உணர்த்தி விட்டது.
நல்ல தேர்வு

வாழ்த்துக்கள்

உடன்பிறப்பு சொன்னது…

அவர்கள் கோட்பாடு படி தீர்ப்பு நாளுக்கு பிறகு மகாத்மா காந்தி இந்து என்பதால் எதோ ஒரு நரக கூடாரத்தில் கொதிக்கும் எண்ணையில் முக்கி முக்கி எடுக்கப்படுவாரோ ! :)

/\*/\

நம்மூர் ஜெயிகளில் இருப்பது போல் மகாத்மா காந்தி போன்ற மகான்களுக்கு முதல் வகுப்பு இருக்குமோ என்னவோ

தமிழ் முல்லை சொன்னது…

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!

மங்களூர் சிவா சொன்னது…

/
நம்ம இந்திய சமயத்தினர் சொர்கம் செல்லும் போது சீனர்களை அங்கு பார்க்கலாம் அல்லது அவர்கள் சொர்கம் / நரகம் போகும் இந்தியர்களை சொர்கத்தில் பார்கலாம் போல
/

:))))))))

Samuel | சாமுவேல் சொன்னது…

அடுத்தவர்கள் கலாசாரம் பற்றிய தகவல்...நன்றாக இருந்தது படிக்க. தகவலுக்கு நன்றி கோவியாரே.



///சீனர்கள் ஒரே நிறத்தில், தோற்றத்தில் இருப்பதால் வெவ்வேறு மதம் என்றாலும் அவர்களுக்குள் பாகுபாடு வேற்றுமை வரும் வாய்ப்புகள் கூட குறைவே. ///

சீனாவில் இப்ப ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் ஒரு பெரிய மத ரீதியான சண்டை நடந்து ..கிட்ட தட்ட 160 பேர் கொல்லப்பட்டார்கள். .
படிக்கிற தமிழர்களுக்கு , இது எல்லாம் தெரியாதுன்னு நினைச்சு எழுதுனீங்களா ?
சீன குடும்ப பெயர்கள் ...ஏற்ற தாழ்வு குறிக்கும் பெயர்கள் இல்லையா ? ..கண்டிப்பா அந்த மாதிரி இருக்கும் என்று நினைக்கிறன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்