பின்பற்றுபவர்கள்

7 பிப்ரவரி, 2012

உன்னிக்கிருஷ்ண பணிக்கர் ஒட்ட வைப்பாரா ?

ஊடகங்கள் சசிகலா குடும்பத்தினர் போயாஸ் தோட்டத்தில் இருந்து துறத்தப்பட்ட பிறகு, நாள் தோறும் மர்மக் கதை போல் அதை எழுதிவருகின்றனர், இராவணன் போங்கு ஆட்டம் மற்றும் கைது, இராவணனின் அசுர வளர்ச்சி பற்றியெல்லாம் ஜூவி வெவ்வேறு கட்டுரைகளை வெளி இட்டு இருந்தது. அதே போல் திவாகரன் பதுங்கியது, முன் ஜாமினுக்கு முயற்சி செய்தது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த இதழிலும் எழுதியுள்ளது. சசி கும்பல் என்றே கட்டுரைகளில் குறிப்பிடுகிறார்கள்.

ஜெ - சசி நட்பு உறவுகள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீதான கஞ்சா வழக்கு கைதின் பிறகே முடிவுக்கு வந்திருக்க வேண்டும், அதையும் தாண்டி பத்து ஆண்டுகள் நீடித்ததற்கு ஜெ - சசி தொழில் ரீதியான முதலீடுகள் குறுக்கே நின்று இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். வளர்ப்பு மகனாக தத்தெடுத்து நாடே வியக்கும் வண்ணம் திருமணம் நடத்தி வைத்து பிறகு கைதும் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார், கூடவே இருந்த சசிகலாவால் அதனை தடுத்திருக்க முடியவில்லை, என்பதிலிருந்து ஜெ வின் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்ள போயாஸ் தோட்டத்தில் குடியிருந்திருக்கின்றனர், மற்றபடி ஜெ-வை கைக்குள் போட்டு வைத்திருக்க வில்லை என்பதை தற்போதைய கட்டம் கட்டிய காட்சிகளில் இருந்து ஒருவாராக ஊகிக்க முடிகிறது. ஜெவும் தனது பிடிகள் என்று சசி மற்றும் அவருடைய உறவினர்களிடம் சிக்கி இருக்க வில்லை என்பதால் நினைத்த மாத்திரத்தில் அவர்களை வெளியேற்றி சசி உறவுக்காரர்கள் மீதான நடவடிக்கையை எடுக்க முடிகிறது.

ஆகா ஆதயங்களின் அடிப்படையில் சசி ஜெவிடம் தொடர்பு வைத்திருந்தாலும் அதே ஆதாயங்களின் அடிப்படையிலும் தனக்கான பாதுகாப்பு என்ற முறையில் மட்டுமே ஜெ சசி உறவினர்களிடம் நீக்கு போக்காக நடந்திருக்கிறார் என்றும் நினைக்க முடிகிறது, ஜெ ஏற்கனவே இருமுறை பதவி இழந்திருந்தாலும் சசி மற்றும் அவரது உறவுக்காரர்கள் ஜெ வை கைவிட்டுவிட்டு ஓடி இருக்கவில்லை, கருணாநிதியிடமும் சென்று சேரவில்லை, பொன் முட்டையிடும் வாத்து ஓய்வெடுக்கிறது என்று நன்றாக தெரிந்து வைத்திருந்தினர். ஆனாலும் அவர்களின் நட்புகளிடையே எந்த ஒரு நம்பிக்கையும் நிலவி இருக்கவில்லை மாறாக ஜெவுக்கு பிறகான அதிமுகவை கைப்பெற்ற வேண்டும் என்ற முன்னெடுப்பாக தனது சமூகத்தைச் சார்ந்தவர்களை அதிமுகவில் வளர்தெடுத்தும், சட்ட உறுப்பினர் சீட்டுகளை மிகுதியாக பெற்றுத் தந்திருக்கிறார்கள். இவை கடந்த 15 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தாலும் இந்த முறை விழுக்காடு அளவில் ஜெவின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்குச் சென்றதால் நட்புகள் முறிந்து போயாஸ் தோட்டத்து துடைத்தொழிப்பு நடந்துள்ளது.

என்னதான் பிரச்சனை என்றாலும் சசியின் தம்பி திவாகரனை கைது செய்யும் முன் அவரது மனைவியை கூட காவல் நிலையத்திற்கு அழைத்து மிரட்டப்பட்டதாக ஜூவி செய்தி வெளி இட்டிருக்கிறது. அவர்கள் முறைகேடுகள் செய்திருந்தாலும் கூட குடும்பப் பெண்களையும் அழைத்து விசாரணை செய்தது கைது நடவடிக்கையின் அரச தந்திரம் என்று சொன்னாலும் கூட தனக்கு பிடிக்காதவர்களை, ஓரம் கட்டியவர்களி ஜெ எதுவும் செய்யத் தயங்கமாட்டார் அவர்கள் தன்னுடன் எவ்வளவு ஆண்டுகள் விசுவாசியாக இருந்திருந்தாலும் கூட என்பதையே புரிய வைத்தது.


"குடும்பப் பெண்ணுக்கு அவமானம்...

ஸ்டேஷனுக்கு வெளியே கூடியிருந்த திவாகரனின் ஆதரவாளர்கள், ''யார் ஆட்சி யில் இருந்தாலும் பக்கத்தில் இருக்கும் சிலர் சம்பாதிக்கத்தான் பார்ப்பாங்க. அதுக்காக எதையும் நியாயப்படுத்தலை. கூப்பிட்டு எச்சரிக்கை செஞ்சு அனுப்பி இருக்கலாம். அதை விட்டுட்டு, இத்தனை நாள் கூடவே இருந்து சேவகம் செஞ்சவங்க குடும்பப் பெண்களை ஸ்டேஷனுக்கு வரவழைச்சு, அவமானப்படுத்துறது துரோகம். இத்தனை நாளும் அந்தம்மா ஒருத்தரே தமிழ்நாடு முழுக்க கட்சியைக் கட்டுப்பாட்டில் வெச்சிரு ந்தாங்களா? மன்னார்குடி உறவுகள் இருக்கப்போய்தானே அது சாத்தியம் ஆச்சு? இப்ப டெல்டாவில் அமைச்சர் களாக இருக்கிற எத்தனை பேர் அந்தப் பதவிக்காக பாஸ் கிட்ட பவ்யம் காட்டி இருப்பாங்க? சின்னம்மாவை கார்டனை விட்டு அனுப்பி எவ்வளவு நாள் ஆச்சு? அவங்க ஒரு வார்த்தை மீடியாகிட்ட பேசி இருப்பாங்களா? சின்னம்மா வாயைத் திறந்தா, நிலைமை என்ன ஆகும்? எங்க பொறுமையை சோதிக்காதீங்க. எல்லாத் துக்கும் ஒரு எல்லை உண்டு...'' என்றார்கள் ஆக்ரோஷமாக!" - ஜூவி

வெளியில் இருந்து பார்க்கவும், பொதுப் புத்தியாகவும் அவங்க தப்பு செய்திருக்காங்க, இது அவர்களுக்கெல்லாம் தேவையே என்று நினைக்கத் தோன்றும், ஆனால் பயன்படுத்தித் தூக்கியெறிதல் என்ற கோணத்தில் பார்க்கும் போது ஜெ மீதான நம்பகத் தன்மை மற்றும் நன்மதிப்பு கெடத்தான் செய்கிறது. ஜெ-வுக்கு தேவை விசுவாசிகள் மட்டுமே அவர்கள் தடம் புரண்டால் அவர்கள் அதற்கான கூடுதல் விலையையும் சேர்த்தே கொடுத்தாக வேண்டும் என்பதாகத் தான் நடந்து கொண்டிருக்கிறார். இந்த நிலைமை 'எல்லாம் அம்மாதான்......அம்மா அம்மா' என்று சுற்றி வந்த சசி உறவுக்காரர்களுக்கு மட்டுமின்றி எதிர்காலத்தில் தற்போது போயாஸ் தோட்டத்தின் உரிமை புதுப்பித்துள்ள சோ வகையாறாவிற்கும் நடக்க வாய்ப்புகள் உண்டு.

********

ஜெ - சசி இருவரும் சேர்ந்து பல பரிகார பூசைகளை செய்திருக்கிறார்கள், உன்னிக்கிருஷ்ண பணிக்கர் என்ற சோதிடரின் ஆலோசனைப் படியே நடந்திருக்கிறார்கள், ஆட்சியை கைப்பற்றுதல், அல்லது தக்க வைத்துக் கொள்ளுதல் என்ற முறையில் பல்வேறு யாகங்களையெல்லாம் செய்தார்கள் என்றெல்லாம் செய்தி இதழ்கள் எழுதித் தீர்த்தன, அது போன்ற யாகங்கள் எதுவுமே உடைந்து போன நட்புறவை ஒட்டவைக்காதா ? உன்னிக்கிருஷ்ண பணிக்கரின் கைங்கர்யங்கள் இவர்களின் விரிசலை சரி செய்யாதா ? இந்த சோதிடம் சமய நம்பிக்கை இவை அனைத்தும் ஆதாயத்தின் பலனை நோக்கித்தான் செய்யப்படுகின்றன ஈகோ மற்றும் வெறுப்புகளை சரி செய்ய சோதிடமோ, பரிகாரமோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையோ அல்லது அதற்கான முயற்சிகளில் இவர்கள் இருவருக்கும் விருப்பம் இல்லையோ.

எனக்கு இதில் தனிப்பட்ட வருத்தம் மகிழ்ச்சி இல்லை, நம்பிக்கைத் தூரோகம் மற்றும் பயன்படுத்தி தூக்கி எறிதல் என்பதில் ஜெவிற்கும் சசிக்கும் பெரிய வேறுபாடு இல்லை, மக்கள் செல்வாக்கு என்ற அடிப்படையில் ஜெ ஓங்கி இருக்கிறார் அவரால் சசி குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிகிறது அது தமக்கு தனிப்பட்ட மக்கள் செல்வாக்கு இல்லாததால் சசி முடங்கி இருக்கிறார் அவ்வளவே.

கருத்துகள் இல்லை:

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்