பின்பற்றுபவர்கள்

5 மார்ச், 2009

வாய்மூடி சிரிக்கலாம் போங்க ! அரசியல்

தலைவர் : ... நான் பேசியவை அனைத்தும் உண்மை, இதைத்தான் தான் திருவள்ளுவரும் தன் நூலில் தெரிவித்துள்ளார்
தொண்டன் : எந்த நூலில் தலைவா ?
தலைவர் : (பெயரை மறந்து...) அந்த நூலின் பெயரை எதிர்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்த போது அரசு குறிப்பில் இருந்து அழித்து சதிசெய்துவிட்டனர். அதற்கு இங்கே பலமான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.

***

தலைவர் : இந்த முறை அலையில்லாத தேர்தல்னு ஊடகங்கள் தெரிவிக்குது, இதுக்கு நாம எதாவது செய்து அலையை கொண்டுவந்து தேர்தலில் ஜெயிக்கனும்

பொதுசெயலளர் : வேட்பாளர்களுக்கு காவி உடை கொடுத்து கையில் திருவோட்டைக் கொடுத்து ஓட்டு கேட்கச் சொல்லுவோம், பரிதாப அலை ஏற்பட்டு அத்தனை ஓட்டையும் அள்ளிடலாம்

***

மேடையில் தலைவர் : 'எதோ எங்களுடன் போட்டி போட்டு பிரியாணி போட்ட எதிர்கட்சி அதில் உப்புப் போட மறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது, பிரியாணியில் உப்புப் போட மறப்பவர்கள், நாளைக்கு ஜெயித்து வந்தால் நாட்டுமக்களை நினைப்பார்களா ? நினனத்துப் பாருங்கள். உங்களுக்கு இப்படி ஒரு (க)சப்பான அரசு தேவையா ?

தொண்டர் மெதுவாக அவரது காதில் (தலைவா பிரியாணியில் உப்பு போட மறந்தது நம்ம கட்சிதான்)

மேடையில் தலைவர் : .... இப்படியெல்லாம் எதிர்கட்சி உங்களை குழப்பிவிடுவார்கள், உப்பு உடலுக்கு நல்லதல்ல என்பது மக்கள் மீது அக்கரை கொண்ட எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.

***

தொண்டன் 1 : நம்ம தலைவர் மைக்கு முன்னாடி போய் திரும்பிப் பார்த்துட்டு பேசாமல் நிற்கிறாரே ஏன் ?

தொண்டன் 2 : இன்னிக்கு ஸ்டாட் ஆக்சன் சொல்றவருக்கு உடம்பு சரியில்லைன்னு உடன் வரலையாம். வேறொருத்தரை கூப்பிட ஆள் போய் இருக்கு. நடிகராக இருந்தவராச்சே !

***

நிருபர் : உங்கள் கட்சி எந்த கூட்டணியில் சேர்ந்திருக்கிறது

யாருமே சேர்த்துக் கொள்ள விரும்பாத கட்சியின் தலைவர் : எங்களோடு கூட்டணி சேரும் தகுதி எந்த கட்சிக்குமே இல்லாததால் இந்த தேர்த்தலில் நாங்கள் தனித்தே போட்டி இடப் போகிறோம். நாளையே கூட்டணிக்கு அழைப்பு வந்தாலும் இனி ஏற்கமாட்டோம்

நிருபர் : ஏன் ஏற்கமாட்டிங்க ?

தலைவர் : ஏனென்றால் இன்றோடு வேட்பு மனுதாக்கல் அனைத்தும் முடிகிறது என்று தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டது

5 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

;-))))

Anbu சொன்னது…

முதல் காமெடி மிக அருமை

நன்றாக இருக்கிறது அண்ணா

Unknown சொன்னது…

அரசியல் காமெடி ஆரம்பிச்சாச்சு போல..

priyamudanprabu சொன்னது…

////
வேட்பாளர்களுக்கு காவி உடை கொடுத்து கையில் திருவோட்டைக் கொடுத்து ஓட்டு கேட்கச் சொல்லுவோம், பரிதாப அலை ஏற்பட்டு அத்தனை ஓட்டையும் அள்ளிடலாம்
//////


வயிறு வலிக்குது

///
இப்படியெல்லாம் எதிர்கட்சி உங்களை குழப்பிவிடுவார்கள், உப்பு உடலுக்கு நல்லதல்ல என்பது மக்கள் மீது அக்கரை கொண்ட எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.
/////

நல்ல பல்டி



//////
இன்னிக்கு ஸ்டாட் ஆக்சன் சொல்றவருக்கு உடம்பு சரியில்லைன்னு உடன் வரலையாம். வேறொருத்தரை கூப்பிட ஆள் போய் இருக்கு. நடிகராக இருந்தவராச்சே !
/////


உள் குத்து உள்குத்து....



///////

யாருமே சேர்த்துக் கொள்ள விரும்பாத கட்சியின் தலைவர்
/////


யாருங்க அதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

//, உப்பு உடலுக்கு நல்லதல்ல என்பது மக்கள் மீது அக்கரை கொண்ட எங்களுக்கு மட்டும் தான் தெரியும்.//


:))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்