பின்பற்றுபவர்கள்

23 ஜூலை, 2008

ஒரு விஞ்ஞானக் கடத்தல் !

2054 - ஜனவரி 30ல் உலகையே பரபரப்பு தொற்றிக் கொண்டது

"அணு ஆயுத விஞ்ஞானி ஏகே.தாசன் கடத்தல்..." என்ற

ஒருவரிச் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் ஓடிய மறுநாள்... சன் உட்பட உலக தொலைக்காட்சிகளில்...காட்டிய அசைபடத்தில் ... அணு விஞ்ஞானியைக் காட்டி தீவிரவாதிகள் கொக்கறித்துக் கொண்டு இருந்தனர்...


"நாங்கள் விஞ்ஞானியை தற்போது கொல்லப் போவதுமில்லை, அணு ஆயுதங்களைக் கடத்தப் போவதுமில்லை, இதோ இந்த விஞ்ஞானியை வைத்தே நாங்கள் அதைச் சாதிக்கப் போகிறோம்..." என்று சொல்லிவிட்டு மறைந்தார்கள்

ஏகே.தாசன் அணு ஆயுத தொழில் நுட்பம் தெரிந்தவர் என்பதால் அவரை வைத்து அணு ஆயுதங்களை தயாரித்து உலகை தொடர்ந்து அச்சுறுத்தலில் வைத்திருப்பது தான் தீவிரவாதிகளின் திட்டம் என்று உளவுத் துறை மோப்பம் பிடித்து இருந்தது

அங்கே தீவிரவாதிகளின் ஆயுதக் கூடத்தில்...

"என் உயிரே போனாலும் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன்..." தீவிரம் தெரிந்து...நாட்டுப்பற்று மிகுதியால் முரண்டு பிடித்தார் ஏகே.தாசன்

தீவிரவாதத் தலைவன் வீரப்பன் பாணியில் கொக்கறித்தான்

"மிஸ்டர் விஞ்ஞானி யாருக்கு வேண்டும் உன் உயிர் ? உன்னைக் கேட்டுக் கொண்டு தான் செய்வேன் என்று எதிர்பார்த்தாயா ?....ஹஹ்...ஹஹ்ஹா...இந்த ஏகே.தாசனை தூக்கிச் சென்று படுக்க வையுங்கள்"

அவரை வலுக்கட்டாயமாக சிலர் தூக்கிக் கொண்டு படுக்க வைத்தனர். அருகில் இன்னொருவனையும் படுக்க வைத்தனர்.

கணணியில் உள்ள மென்பொருளை இயக்க... கம்பியில்லா இணைப்பின் (வயர்லஸ்) மூலம் ஏகே.தாசனின் மூளைப் பதிவுகள் அனைத்தும் வினாடிக்கு 100 டெராபைட் விரைவில் அருகில் படுத்து இருந்தவரின் மூளைச் செல்லுக்குள் பதிந்து கொண்டிருந்தது,

100 வினாடியில் பயன்படுத்தப் பட்ட முளை செல்களில் (Used Cells) இருந்த தகவல்கள் சுமார் 100 எக்ஸாபைட் அளவுடையதாக இருந்ததாகவும்...அது முழுவதும் பதிவு செய்யப்பட்டதாக கணணி தகவல் வரவே..

"ஏகே.தாசனை இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றுவிடுங்கள்..." என்றான் தீவிரவாதத் தலைவன்.

அதன்படியே ஈவு இரக்கமின்றி ஏகே.தாசன் சுட்டுக் கொல்லப்பட்டார்... இந்த செய்தியும் வெளியே வர நாட்டை சோகம் அப்பிக் கொண்டது

தீவிரவாதிகளின் ஆயுதக் கூடத்தில் அடுத்த 60 நாட்களுக்குள் அணு ஆயுதம் செய்யப்பட்டு ஏவுவதற்கு தயாராக வைக்கப்பட்டு இருந்தது.

மீண்டும் தொலைக்காட்சிக்கு தீவிரவாதிகளின் தலைவன் அனுப்பிய அசைபடத்தில் அவனே தோன்றி ... அவர்கள் தயாரித்த அணு ஆயுதத்தை வைத்து வேண்டாத சில நாடுகளை அடுத்த ஒருவாரத்திற்குள் சிதறடிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு இருந்தான்.

உலகெங்கும் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது, மக்கள் என்ன செய்வதென்று திகைத்தனர்...எங்கும் குழப்பம் நிலவியது

பாதுகாப்புத் துறை அமைச்சர் அரசின் ரகசிய கூட்டத்தில் அமைதியாக பேசிக் கொண்டு இருந்தார்

"விலைவாசி உயர்வில் பொதுமக்களுக்கு அரசு மீது இருந்த வெறுப்பு...தீவிரவாதிகள் விஞ்ஞானியை கடத்தி கொன்று இருப்பதாலும் , தீவிரவாதிகளின் அணு ஆயுத அச்சுறுத்தலாலும் சற்று மறைந்திருப்பதை பிரதமரே ஒப்புக் கொண்டிருக்கிறார் ... "

"ஏகே.தாசனைக் கடத்தி அணு ஆயுதம் செய்தவரை தீவிரவாதிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே தொழில் நுட்பம் முழுவதையும்
நாங்கள் ஒரே விஞ்ஞானியை / பொறியாளரைக் கொண்டு உருவாக்குவதில்லை..."

"விஞ்ஞானி ஏகே.தாசனின் மூளை அணு ஆயுதத்தை வடிவமைக்கும் திறன் பெற்றது தான், அதுவரையில் தீவிரவாதிகள் அணு ஆயுதத்த வடிவமைத்துவிட்டார்கள். ஏகே.தாசனின் அறிவைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட அணு ஆயுதம்... விசையை அழுத்திய 10வினாடிக்குள் முற்றிலும் அழிந்துவிடுவது போன்று மட்டுமே அணு ஆயுதத்தை அதனால் செய்ய முடியும்..."

சற்று நிறுத்தி...தொடர்ந்தார்

"அந்த ரகசியம் ஏகே.தாசனுக்கே கூட தெரியாது... அந்த 10 வினாடிக்குள் அணு ஆயுதத்தின் செயல்பாட்டு மென்பொருளில் திசை திருப்பும் மாற்றம் செய்யாவிட்டால், ஆயுதம் தன்னைச் சார்ந்துள்ள பகுதியையே அழித்துவிடும். 10 வினாடிக்குள் மாற்றம் செய்யும் வல்லுனர்கள் / பொறியாளர்கள் நம்மிடம் பாதுகாப்பாகத் தான் இருக்கிறார்கள். எனவே நாம் தீவிரவாதிகளுக்கு அடிபணிய வேண்டாம்...." என்றார்

மறுநாள் அனைத்து உலக தொலைகாட்சிகளும் ஏதோ ஒரு மலைப்பகுதியில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு அந்த இடமே 50 கிலோ மீட்டர் வரை தரைமட்டமானாதாக செய்கள் காட்டப்பட்டன.

மக்கள் திகைப்பில் இருந்து மீண்டனர்

அதுதான் ஏகே தாசனின் அறிவைப் பயன்படுத்தி அணுஆயுதம் தயாரித்த தீவிரவாதிகளின் இடம் என்று உடனடியாக அறியப்பட்டது.

அடுத்தவாரத்தில் தீவிரவாதிகள் மொத்தமாக அழிந்ததற்காக விழாக்கள் எங்கும் நடைபெற்றன. ஏகே.தாசனுக்கு உலக மக்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

**********

சிறில் அலெக்சின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட மூன்றாவது சிறுகதை இது. முதலிரண்டு,

சிறுகதை 1சிறுகதை 2

சிறுகதை மேலேயே முடிந்தது... இதற்கும் கீழே உள்ளது அறிவாளிகளுக்கு அல்ல.

மெசேஜ் : பாதுகாப்புக் காரணங்களுக்கு ஏற்படும் தொழில் நுட்பத்தையே பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் மிகப் பெரிய சேலஞ்ச்.

இதெல்லாம் தேவையா ? :)

அறிவியல் கதைதான் என்பதற்கான குறிப்பு : டெராபைட், எக்சாபைட் மற்றும் மூளைப் பதிவு டெக்னாலஜி :)

8 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

இதெல்லாம் தேவையா ? :P

பரிசல்காரன் சொன்னது…

மற்ற இரண்டைவிட இது என்னை மிகக் கவர்ந்தது!

பரிசல்காரன் சொன்னது…

// ஜெகதீசன் said...

இதெல்லாம் தேவையா ?//

ஏன்.. என்னாச்சு கண்ணன் சார் இவருக்கு? ஒரு நல்ல டாக்டராப் பாத்து கூட்டீட்டு போங்க..

Unknown சொன்னது…

//அறிவியல் கதைதான் என்பதற்கான குறிப்பு : டெராபைட், எக்சாபைட் மற்றும் மூளைப் பதிவு டெக்னாலஜி :)//

நாங்கள் நம்புகிறோம். :)

யோசிப்பவர் சொன்னது…

கதை நன்றாயிருக்கிறது. ஆனால் நடையில் உங்களிடம் நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன்(க்கிறேன்).

manikandan சொன்னது…

நல்லா இருக்குங்க.

****மற்ற இரண்டைவிட இது என்னை மிகக் கவர்ந்தது!****

வழிமொழிகிறேன்.

கோவை விஜய் சொன்னது…

மிக அருமையான திருப்பம்.
நல்லவன் வாழ்வான்
கெட்டவன் அழிவான்
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

மங்களூர் சிவா சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்