தலித் கோவிந்தம் ! ஒரு கண்துடைப்பு பஜனை !
Wednesday, July 30, 2008
இதைவிட தலித் மக்களை கேவலப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை !!!
இதைப் சமூக புரட்சி, நல்லிணக்கம் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடியெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள்
"இந்த புரட்சிகரமான சமூக மாற்ற நிகழ்ச்சியின் மூலம் ... சமூகத்தில் நிலவி வரும் மூடத்தனத்தை, தலித் புறக்கணிப்புப் போக்குக்கு முடிவு கட்ட முடியும் என்று நம்புகிறோம்.
தலித் மக்களையும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியே இது. இந்த தலித் கோவிந்தம் மூலம் தலித் கிராமங்களுக்கு பெருமாளை நேரடியாக கொண்டு செல்வது, தலித் கிராமங்களில் பஜனைப் பாடல்களை இசைப்பது, அவர்களையும் பூஜிக்க அனுமதிப்பது ஆகியவை அடங்கும்.
தலித் மக்கள் மீது தேவஸ்தானம் அக்கறை கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கவே இந்தத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு தலித் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கடவுள் யாரையும் பாரபட்சப்படுத்திப் பார்ப்பதில்லை. அதை அனைவருக்கும் உணர்த்தவே இந்த தலித் கோவிந்தம் நிகழ்ச்சி. "
படிப்பதற்கு புரட்சிப் போன்று இருந்தாலும், தலித்துக்களுக்கு திருப்பதி கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்பதை பச்சையாகச் சொல்வது தான் இது. யார் சொன்னது ? யார் வேண்டுமானாலும் கோவிலுக்குள் செல்லலாமே ? என்றும் சிலர் வாதிடுகிறார்கள். ஒருவர் தன்னை தலித் என்று கூறிக் கொண்டோ, அல்லது அவர் தலித் என்று தெரிந்த பின்னர் கோவிலுக்குள் அனுமதிப்பபர்களா என்பதே கேள்வி. தேவஸ்தானாத்தின் புரட்சிகர திட்டத்தின் அறிவிப்பிலேயே தலித்துக்களுக்கான அனுமதி மறுப்பு உண்மைத்தான் என்பது போலவே உள்ளது.
"திருமலையைச் சுற்றிலும் உள்ள பல கோவில்களிலும் தலித் மக்கள் நுழைய தடை உள்ளது. இதனால் தலித் மக்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை வழிபட முடியாத அவலம்.
இந்த நிலையைப் போக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், தலித் கோவிந்தம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி கூறுகையில், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின் அபிலாஷைகளை தீர்க்கும் வகையிலான திட்டங்களை தேவஸ்தானம் தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியே இந்த தலித் கோவிந்தம்."
தலித்துக்களின் சுறுக்குப் பைச் சில்லரை மீதும் குறிவைத்துக் கொண்டு வரப்படும் சிலைகள், திருப்பதி திரும்பும் போது யாரும் புழங்காத இடங்களில் மறைத்து வைக்கப்படும், அல்லது அழிக்கப்பட்டுவிடும் என்று அண்மையில் ஒருவர் மனக்குமுறலைக் கொட்டி இருந்தார்.
புரட்சி செய்வதென்றால் திருப்பதியில் கக்கூஸ் கழுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் தலித் மக்களில் ஒருவரை ஒரு நாள் அர்சகர் ஆக்கிப் பார்க்க வேண்டியதுதானே ?
நீங்கள் அங்கெல்லாம் வந்துடாதிங்க, நாங்களே இங்கே வருகிறோம் அதுதான் நல்லது என்கிறார்களோ.
என்ன கொடுமைய்யா இது 21 ஆம் நூற்றாண்டு கணனியுகத்தில் மனிதரில் சாதியால் தாழ்த்தப்பட்டவர் என்ற முத்திரையை சுமக்க வைப்பதும் இல்லாமல், அவர்களுக்கும் பெருமை சேர்ப்பது போல் இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுகிறது. இன்னும் எத்தனைக் காலம் தான் பொம்மைகளை வைத்து இப்படி ஆன்மிக பித்தலாட்ட பொம்மலாட்டாம் நடத்தப் போகிறார்களோ. கோவிலுக்குள் நுழைய சம உரிமைகேட்பதோடு அன்றி 'தலித் கோவிந்தத்திற்கு' நாமம் போட்டு திருப்பி அனுப்புவதே நல்லது. கோவிலிலும், கோவில் திருப்பணிகளிலும் இட ஒதுக்கீடு கேட்டு போராடினால் தான் இவற்றிற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்.
புனிதம்...புண்ணாக்கு...அசுரன்...கிருஷ்ணன்...பரமாத்மா...நாய்...சங்கராச்சாரியார்...விபூதி... வாந்தி...லிங்கம்...பண்ணாடை...சலூன்....சால்னாகடை...ஐயப்ப சாமி...இரட்டை டம்ளர்...வெங்கடாஜலபதி...நடிகைரோஜா...சாராயக்கடை...புளிச்சேப்பம்...புளியோதரை...சோமபானம்...நீலப்படம்...பூக்கூடை...ஆர்லிக்ஸ்...அப்பப்பா
முடியல்ல மூச்சு வாங்குது !
தலித்துக்களை மேலும் இழிவு படுத்த .... அவர்கள் நிலை அப்படித்தான் இருக்கிறது என உறுதி செய்யவும் மேலும் அப்படியே வைத்திருக்க வேண்டும்... என வரும் 'தலித் கோவிந்தம்' வன்மையாக கண்டிக்கத் தக்கது.
பெருமாளுக்கும் தன் சிலையை வைத்து இவர்கள் ஆடும் ஆட்டம் இதெல்லாம் பிடிக்காது.
"புனிதம் என்று சொல்வதெல்லாம் புளிப்பேறியே கிடக்கிறது..." - சமூகவியல் எழுத்தர் க.சு.நடராஜன் !
********
"எலே மூக்கைய்யா...என்னல்லே எதோ சாமி வருதாம்லே"
"ஆமாண்டா செங்கோடா...நாமெல்லாம் கோவிலுக்கு போவ முடியாதுல்ல..."
"அப்ப சாமி வர்றது நமக்கெல்லாம் பெருமைங்கிறியா ?"
"மண்ணாங்கட்டி...அவங்க வருவாங்க போட்டா எடுத்து பேப்பரில போடுவாங்க...அதுல நமக்கு என்னய்யா பெருமை ? அது வந்தாலும் வராட்டாலும் ஏர் ஓட்டினாதான் நமக்கு சோறு...வா போய் வேலய பார்ப்போம்"

23 கருத்துக்கள்:
:)
அடக் கொடுமையே, இதத்தான் தலைய சுத்தி மூக்கை தொட்டு வெறுப்பேத்தி, விஷயத்தை மூடி மறைக்கரதுங்கறதா?
ம்ம்ம்ம்ம்...
//
"தலித் கோவிந்தம் ! ஒரு கண்துடைப்பு பஜனை !"
//
அது கண்துடைப்பு அல்ல... ஏமாற்று வேலை.. மொள்ளமாரித்தனம்
\\
ஏர் ஓட்டினாதான் நமக்கு சோறு...வா போய் வேலய பார்ப்போம்"
\\
நச்
\\
புரட்சி செய்வதென்றால் திருப்பதியில் கக்கூஸ் கழுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் தலித் மக்களில் ஒருவரை ஒரு நாள் அர்சகர் ஆக்கிப் பார்க்க வேண்டியதுதானே ?
\\
என்ன ஓய் நம்மவாளா இருந்துண்டு
இப்படிலாம் பேசறேள்
பி.கு ; அண்ணா தயவு செய்து உங்கள் வலைப்பூவில் இருந்து அந்த வாத்து கேமை தூக்கவும் , உங்க பதிவ தொறந்ததும் பப்பறப்பானு பழைய வீடியோ கேம் மாதிரி கத்தி ஊரக்கூட்டுது ஆபிஸூல எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாக்கறாங்க.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு சம உரிமை மற்றும் சமூக, வாழ்க்கை தரங்களில் உயர்வு என்று கூறிக்கொண்டு அவர்களின் சுயமரியாதையை சீண்டி சிறுமைப்படுத்துவதே இந்த அறிவிப்பு. உண்மையான சமத்துவமடைய நம் சமூகம் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது....
*****ஒருவர் தன்னை தலித் என்று கூறிக் கொண்டோ, அல்லது அவர் தலித் என்று தெரிந்த பின்னர் கோவிலுக்குள் அனுமதிப்பபர்களா என்பதே கேள்வி******
அனுமதிக்கமாட்டங்கன்னு சொல்றீங்களா ?
ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை கோவில் நிர்வாகமே தெளிவாக எடுத்து காட்டும் விதமாக அமைந்துள்ளது இந்த முன்னெடுப்பு.
//தலித் மக்கள் மீது தேவஸ்தானம் அக்கறை கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கவே இந்தத் திட்டம்.//
அவர்கள் எங்கே கோயிலுக்குள்ளே வந்துவிடுவார்களோ என்ற (அச்சம் மற்றும் அகந்தை கலந்த) அக்கறை நல்லா நிரூபனமாயிருக்கு.
//அவனும் அவளும் said...
*****ஒருவர் தன்னை தலித் என்று கூறிக் கொண்டோ, அல்லது அவர் தலித் என்று தெரிந்த பின்னர் கோவிலுக்குள் அனுமதிப்பபர்களா என்பதே கேள்வி******
அனுமதிக்கமாட்டங்கன்னு சொல்றீங்களா ?//
அவனும் அவளும்,
"திருமலையைச் சுற்றிலும் உள்ள பல கோவில்களிலும் தலித் மக்கள் நுழைய தடை உள்ளது" - இது கோவில் நிர்வாகத்தினர் 'தலித் கோவிந்தம்' தொடர்பாக வெளியிட்ட செய்தியில் இருப்பது தான்.
இதை நாம் அறிந்திருப்பதை விட அறியவேண்டிய மக்கள் அறிய வேண்டும்.
இதை நாம் அறிந்திருப்பதை விட அறியவேண்டிய மக்கள் அறிய வேண்டும்.
//VIKNESHWARAN said...
:)
3:01 PM, July
//
நானும் :)
//rapp said...
அடக் கொடுமையே, இதத்தான் தலைய சுத்தி மூக்கை தொட்டு வெறுப்பேத்தி, விஷயத்தை மூடி மறைக்கரதுங்கறதா?
3:11 PM, July 30, 2008
//
rapp இதுதான் (தலித் கோவிந்தம்) பூனைக் கண்ணை மூடிக் கொண்டே வந்து நாளைக்குக் காலையில் விடிந்துவிடும் என்று நன் பகலிலேயே சொல்வது.
//பி.கு ; அண்ணா தயவு செய்து உங்கள் வலைப்பூவில் இருந்து அந்த வாத்து கேமை தூக்கவும் , உங்க பதிவ தொறந்ததும் பப்பறப்பானு பழைய வீடியோ கேம் மாதிரி கத்தி ஊரக்கூட்டுது ஆபிஸூல எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாக்கறாங்க.
3:40 PM, July 30, 2008
//
அதீசா,
தூக்கிவிட்டேன் !
//Vijay Anandh said...
ஒடுக்கப்பட்டவர்களுக்கு சம உரிமை மற்றும் சமூக, வாழ்க்கை தரங்களில் உயர்வு என்று கூறிக்கொண்டு அவர்களின் சுயமரியாதையை சீண்டி சிறுமைப்படுத்துவதே இந்த அறிவிப்பு. உண்மையான சமத்துவமடைய நம் சமூகம் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது....
4:27 PM, July 30, 2008
//
Vijay Anandh ,
பயணிக்க எல்லோரும் தயாராகவே இருக்கிறார்கள், சிலர் வெற்றிகரமாக படிப்பறிவால் இலக்கை அடைந்தும் விட்டார்கள், இருந்தாலும் தயாராக இருப்பவர்களுக்கான முட்டுக்கட்டைகளும் வழிகாட்டுதலும் எதிர்திசையை நோக்கியே இருக்கிறது
//கங்கை கொண்டான் said...
ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை கோவில் நிர்வாகமே தெளிவாக எடுத்து காட்டும் விதமாக அமைந்துள்ளது இந்த முன்னெடுப்பு.
//தலித் மக்கள் மீது தேவஸ்தானம் அக்கறை கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கவே இந்தத் திட்டம்.//
அவர்கள் எங்கே கோயிலுக்குள்ளே வந்துவிடுவார்களோ என்ற (அச்சம் மற்றும் அகந்தை கலந்த) அக்கறை நல்லா நிரூபனமாயிருக்கு.
4:35 PM, July 30, 2008
//
கங்கை கொண்டான் அவர்களே,
கருத்தாதரவிற்கு நன்றி !
//நையாண்டி நைனா said...
இதை நாம் அறிந்திருப்பதை விட அறியவேண்டிய மக்கள் அறிய வேண்டும்.
6:45 PM, July 30, 2008
//
நைனா,
கண்டிப்பாக அறிவார்கள், புறக்கணிப்பார்கள் அதுதான் க(ழ)லகக் காரர்கள் ஆங்காங்கே இருக்கிறார்களே !
//அது கண்துடைப்பு அல்ல... ஏமாற்று வேலை.. மொள்ளமாரித்தனம்//
நிச்சயமான உண்மை.. செய்தியைக் கேட்கவே அசிங்கமாக இருக்கிறது.
கோவி சார்..எனது பழ்னி மலை....பதிவு படித்தீர்களா?
//ஏர் ஓட்டினாதான் நமக்கு சோறு...வா போய் வேலய பார்ப்போம்"//
இது தான் நிதர்சனம் என்றாலும் இந்த கண்துடைப்பு பஜனை கடுமையாக கண்டிக்கப்படவேண்டும்.
ஆனால் நடப்பது என்ன? இப்படி பல அநியாயங்கள் நடப்பதும், மக்கள் அனைவரும் சில காலத்துக்கு பரபரப்பாக பேசிக்கொள்வதும் பிறகு மற்றொரு பிரச்சினை வரும் போது, சுலபமாக இதை மறந்துவிடுவதுமே தொடர்ந்து நடக்கிறது.
// Vijay Anandh ,
பயணிக்க எல்லோரும் தயாராகவே இருக்கிறார்கள், சிலர் வெற்றிகரமாக படிப்பறிவால் இலக்கை அடைந்தும் விட்டார்கள், இருந்தாலும் தயாராக இருப்பவர்களுக்கான முட்டுக்கட்டைகளும் வழிகாட்டுதலும் எதிர்திசையை நோக்கியே இருக்கிறது //
ரொம்பச்சரி..ஆனா, என்ன செய்ய???வழிநடத்த சரியான தலைமை வேண்டும்(எனக்கும் சேர்த்துதான்).
அர்ச்சகர் கூட அவர்கள் ஆக வேண்டாம். மற்ற மேல்சாதியினருக்கு சமமாக வழிபடவாவது அனுமதித்தால் போதாது!!!
//தலித்துக்களின் சுறுக்குப் பைச் சில்லரை மீதும் குறிவைத்துக் கொண்டு வரப்படும் சிலைகள்//
:-(
எல்லாக் கோணங்களிலும் அலசி எழுதியுள்ளீர்கள்.
கொஞ்சம் ஓவரா சரக்கு அடிச்சிட்டு தெரு ஓரத்தில் எடுத்த வாந்தி மாதிரி இந்தப் பதிவு. தலித் கோவிந்தம் முட்டாள்தனம் என்றால் அதற்கு ஏன் வரவேற்பு? எல்லா தலித் மக்களும் முட்டாள்களா? அவங்களுக்குப் பிடிக்கலைன்னா அவங்க ஏன் வரணும். உருப்படியா தலித்துக்கு நீங்க எதையும் புடிங்கின மாதிரி தெரியலே.. யாரோ ஒருத்தர் ஏதோ செய்தால் மட்டும் அவங்க மேல வாந்தி எடுக்க மட்டும் ரெடி நீங்க...
Post a Comment