பின்பற்றுபவர்கள்

17 ஜூன், 2006

வலைப்பூ - ஒரு முழம் கொடுங்க !

வலைப்பூ நண்பர்களுக்காக சுவையாகவும், புதிய பதிவாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை நகைச்சுவை உரையாடலாகவும் கொடுத்திருக்கிறேன். இந்த வரிசையில் இது மூன்றாவது பதிவு

முதலிரண்டு இங்கே,

வலைப்பூ - ஒரு கால் கிலோ குடுங்க ...
வலைப்பூ ? கிலோ என்ன விலை ?

கற்பனையான பெயர்களுக்கு பதில், கற்பனையான வலைப்பூக்களின் பெயர் இடம் பெருகிறது.




நேர் பார்வை : எனக்கு தெரிந்து நடுனிலை பதிவாளர் என்றால் 'வர்ண தாசனின் நினைவுகள்' என்று எழுதுபவர் தான்.
ஆதவன் நிழல் : எப்படி சொல்கிறீர்கள் ???
நேர் பார்வை : தன் பெயரில் எழுதும் போலி தன்னைவிட நன்றாகவே எழுதுவதாக போலியை வாழ்த்தி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார் பார்த்தீர்களா ?


ஓடக்காரன் : 'சிந்தனை சிகாமணி' பதிவாளரை நேரில் சந்தித்து வந்தீர்களே அவருடன் உறையாடிய அனுபவம் எப்படி இருந்தது ?
இரவின் ஒளி: நிஜமாகவே அவர் சிந்தனையாளர்தான், பார்த்ததுமே தெரிஞ்சுக்கிட்டேன்.
ஓடக்காரன் : அப்படியா ??? !
இரவின் ஒளி: அவருடைய தலையில் ஒரு முடிகூட இல்லையின்னா நீங்களே முடிவுபண்ணிக்குங்க


நாட்டு நடப்பு : வர வர நம்ப வலைப்பதிவாளர்கள் மத்தியில் கோஷ்டி தொல்லை அதிகமாக போய்விட்டது ?
நெஞ்சின் ஏக்கம்: ஏ.....ன் என்ன நடந்தது, கோஷ்டியா வந்து பின்னூட்டம் போட்டு கலங்கடிக்கிறாங்களா ?
நாட்டு நடப்பு : அப்படி இருந்தா தான் பரவாயில்லையே ?
நெஞ்சின் ஏக்கம்: பின்ன ?
நாட்டு நடப்பு : எதோ 'பின்னூட்ட மறுப்பாளார் குழுவாம்', யார் எழுதினாலும் மருந்துக்கு கூட அவுங்க குழுவில் இருக்கிறவர்கள் பின்னூட்டம் போடவே மாட்டார்களாம்.


புதிய பதிவாளர் : அண்ணே பின்னூட்டம்னா என்ன அண்ணே ?
பழம் தின்னவர் : இது கூடத் தெரியாதா ? ... வயைக் கொடுத்து எதையோ .... சாரி வாங்கிக் கட்டிக்கொள்வது தான்.
புதிய பதிவாளர் :இன்னொரு சந்தேகம் இந்த மீள்பதிவு ???
பழம் தின்னவர் : திடீர்னு யாரோ உங்க வீட்டுக்கு வந்துடுராங்க, அப்ப பழைய இட்லிதான் இருக்கு என்ன செய்விங்க ? உடனே உதிர்த்து உப்புமா செய்ய மாட்டீர்களா ? இல்லையா ? அதாவது எழுதுறத்துக்கு விசயமே இல்லேன்னு வையுங்க... இன்னைக்கு எப்படியாவது ஒரு பதிவு போடனும்னு நெனெச்சுடுறீங்கன்னு வையுங்க என்ன செய்விங்க ? பாத்து பாத்து எழுதினபதிவு, யாரும் கவனிக்காமல் போன பதிவு இது மாதிரி பழையபதிவு ஒன்றை எடுத்து இட்லி உப்புமா செஞ்சு மீள்பதிவுன்னு போடனும் புரியுதா ?
புதிய பதிவாளர் : இந்த மட்டுறுத்தல் ....?
பழம் தின்னவர் : உங்க வீடு திறந்திருந்தா என்ன நடக்கும் ? வேண்டாதவர் யாராவது நுழைஞ்சிடுவாங்கள் இல்லையா ? கதவை மூடிவெச்சுட்டு லென்சு வழியா வந்திருப்பவர் ஆபத்தானவரான்னு பார்த்தற்கு அப்பறம் அவரை அனுமதிப்போம் இல்லையா ? அதுதான் மட்டுறுத்தல்

அன்பு ஆதவன் : அந்த நட்சத்திர பதிவாளர் இவ்வளவு தூரம் போவருன்னு யாரும் எதிர்பார்க்கவில்லை
எண்ண வேள்வி : என்ன ஆச்சு ? பெரிய படைப்பாளராக ஆகிவிட்டாரா ?
அன்பு ஆதவன் : இல்ல ஓய், தனக்கு பின்னூட்டம் போடும் ஆதரவாளர்கள் தான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தின்னு சொல்லி, ஒரு பெரிய கட்சியிடம் எம்.எல்.ஏ சீட்டு கேட்டு இருக்காராம்.




11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//எதோ 'பின்னூட்ட மறுப்பாளார் குழுவாம்', யார் எழுதினாலும் மருந்துக்கு கூட அவுங்க குழுவில் இருக்கிறவர்கள் பின்னூட்டம் போடவே மாட்டார்களாம்.//

:-))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

நன்மனம் said...
//எதோ 'பின்னூட்ட //

நன்மனம் நீங்க அந்த குழுவில் இல்லையென்று சிம்பாளிக்காக சொல்லிவிட்டீர்கள் :)

பெயரில்லா சொன்னது…

//நன்மனம் நீங்க அந்த குழுவில் இல்லையென்று சிம்பாளிக்காக சொல்லிவிட்டீர்கள் :) //

என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே!! :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே!! :-) //
கிளம்பிட்டாங்கையா, கிளம்பிட்டாங்க ...

பெயரில்லா சொன்னது…

நான் இப்போதாவது பின்னூட்டம் இடாவிட்டால் ஏதாவது குழுவில் வலுக்கட்டாயமாகச் சேர்த்து விடுவீர்கள் போலிருக்கிறதே ! வந்தாச்சு சாமி, குறிச்சிகிடுங்க:)

பெயரில்லா சொன்னது…

// இல்ல ஓய், தனக்கு பின்னூட்டம் போடும் ஆதரவாளர்கள் தான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தின்னு சொல்லி, ஒரு பெரிய கட்சியிடம் எம்.எல்.ஏ சீட்டு கேட்டு இருக்காராம்.
//

:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//மணியன் said...
நான் இப்போதாவது பின்னூட்டம் இடாவிட்டால் ஏதாவது குழுவில் வலுக்கட்டாயமாகச் சேர்த்து விடுவீர்கள் போலிருக்கிறதே//
சாமி சத்தியமாக, பின்னூட்டம் வாங்குவதற்காக எழுதலிங்கோ :)

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
:-)))) //
திரு குமரன்
வாய்விட்டு சிரிச்ச மாதிரி தெரியுது :)

பெயரில்லா சொன்னது…

//பின்னூட்டம் போடும் ஆதரவாளர்கள் தான் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தின்னு சொல்லி, ஒரு பெரிய கட்சியிடம் எம்.எல்.ஏ சீட்டு கேட்டு இருக்காராம்.//
கேட்டா என்ன தப்பு......
திண்டிவனம் ராமமூர்த்தி 30 சீட் கேட்குறார், ராஜேந்தர் 20 சீட் கேட்குறார்.........நம்ம ஏன் ஒரு சீட் கேட்கனும், கேட்குறது நிறைவே கேட்போம். நாகை தொகுதி உங்களுக்கு தான்.......

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
கேட்டா என்ன தப்பு......//
சிவா,
சத்தமாக சொல்லாதீர்கள், யாராவது உண்மையிலேயே கெளம்பிட போறாங்க :)

பெயரில்லா சொன்னது…

அரைவேக்காட்டு விசயத்த வச்சுக்கிட்டு மக்களை ஈர்க்குறதுக்காகவே ஸ்பெசலா தலைப்பு போட்டு ஏமாத்துறாங்களே, அதப் பத்தி ஒரு சோக்கு எடுத்துவிடுங்க?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்