பின்பற்றுபவர்கள்

26 ஜூன், 2006

கைப்பு போட்ட ஆறு !

கைப்புவை கலாய்த்தால் தான் சங்கத்துல சேர்த்துக்குவோம், கைப்பு எப்படி ஆறு போடுவார் என்று எழுதும்படி சங்கத்தினர் என்னை கலாய்த்ததை தொடர்ந்து, கைப்பு மறுபடியும் கையில் சிக்கிக் கொண்டார்.

கைப்புவும், பார்த்தியும் விளம்ப்ர பலகை எழுதும் வேலை பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். பார்த்தி சற்று மேலே சாளரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
கைப்பு கீழே நின்று சுவற்றில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்


பார்த்தி : மிஸ்டர் வேலு உன்னை பழைய பெயின்ட மட்டும் சுரண்டுன்னு சொன்ன, என்ன பண்ணுகிட்டு இருக்க ?
கைப்பு: கொஞ்சம் பொறுப்பா, விவராமா சொல்றேன், நம்ப புள்ளெங்கலெள்ளாம் சேந்து, அண்ணே நீங்க ஆறு போடம்னுனே, அதப் பாத்து எங்க கண்ணுல ஆறாப் பெருகனும்ணே கண்ணீரு ... உனக்கு படிக்கத் தெரியதுன்னு சென்னவங்க கண்ணுல மண்ணப் போடனும்ணே மண்ண-ன்னு' பய புள்ளைங்க அழுதுச்சு. அத பாத்து பொங்கிப் போயி ஆறு போடுறேன்பா ஆறு...

பார்த்தி : என்னது நீ படிச்சிருக்கியா ?
கைப்பு: இப்பிடியெல்லாம் கேக்கக் படாது, நான் ஆறாம்பு ... என்று நிறுத்துவதற்குள்
பார்த்தி : நீ ஆறாவது படிச்சிருக்கியா ?
கைப்பு: ஆமப்பு ஆறாம்பு ஆறுதடவை படிச்சிருக்கேன்
பார்த்தி : அடச்சீ ... ஆறுவருசம் படிச்சிருக்கேன்னு சொல்கிறியே உனக்கு வெட்கமாயில்ல ?
கைப்பு: எதுக்கு வெட்கப்படறது... சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு... அம்புட்டு படிச்சத சொல்றதுல என்ன ... வெட்கம் ?
பார்த்தி : சரி சொல்ல வந்தத சொல்லு ... அப்பயும் ஆறுமட்டும் தான் போடத் தெரியுமா ?
கைப்பு: போடுவன் அப்பு, இதோ பாரு அண்ணெ எப்படி ஆறு போட்டிருக்கேன்னு
பார்த்தி : என்னது நீ அண்ணனா ? வெண்ணை ! ஆறு போட்டேன்னு சொல்லிட்டு ஒன்பது போட்டுவெச்சுருக்கே
கைப்பு: சத்தியமா, இது ஆறுதான் அப்பு, சொன்னா நம்பனும்
பார்த்தி : அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றியா
கைப்பு: அப்படி சொல்லப்பு
பார்த்தி : ஓ அப்ப நான் படிக்கதவன்னு சொல்லவர்ற
கைப்பு: அட எதசொன்னாலும் மடக்குறியேப்பு
பார்த்தி : வெண்ண மறுபடியும் சொல்றேன் ... இப்ப நீ போட்டது ஒன்பது ஒன்பது ...
கைப்பு: யப்பா... எனக்கு கோவம் வரவெக்காதப்பு ... அப்புறம் ?
பார்த்தி : என்ன வெட்டிப்பயல்னு இப்ப நீ சொன்ன
கைப்பு: நான்... எப்ப சொன்னே ...?
பார்த்தி : இப்பதானே சொன்ன, எனக்கு கோவம் வரவெக்காதேன்னு, அப்படின்னா நான் வெட்டிப்பயலா ?
கைப்பு: சரி விடு ... நீயே சொல்லு இது ஆறா, ஒம்போதா
பார்த்தி : அப்படி வழிக்குவா எ வென்று
கைப்பு: எங்கோயே கேட்ட மாதிரி இருக்கே ... எ எ .. ஒன்னுமில்லப்பா
பார்த்தி : அப்படியே மேல ஏறி வா
கைப்பு: வந்துட்டன்... ப்பா ... வந்துட்டேன்
பார்த்தி : நல்லா கண்ண அகலமா ஒப்பன் பண்ணி பாரு... நீ போட்டது ஆறா, ஒன்பதா ?
மேலிருந்து பார்கும் போது ஆறு ஒன்பதாக தெரிகிறது
...வடிவேலு குழம்பி போகிறார் ... 'பய சரியாத்தான் சொல்றான்'

கைப்பு: தப்பு பண்ணிட்டம்பா ... தப்பு... நீ சரியாத்தான் சொல்ற ... அதுக்குதாம்பா படிக்கனும் ... அதுக்குதாம்பா..... படிக்கனும்
என்று புலம்புகிறார்
பார்த்தி : இப்ப புரியுதா, உன்னை பெயின்ட் சுரண்டுற மட்டும் சொல்லியிருக்காங்னு ...
கைப்பு: புரிஞ்சி போச்சுப்பா, நல்ல புரிஞ்சு போச்சுப்பா
பார்த்தி : புரிஞ்சிடுச்சில்ல ... அப்ப போயி நீ போட்ட ஒன்பதை நல்ல சுரண்டி எடுக்கனும்
கைப்பு: செஞ்சிடுறேம்ப்பா
என்று கீழே இறங்குகிறார். அந்த சமயத்தில் வடிவேலு மனைவி சோறு கொண்டுவருகிறார்
கைப்பு: அப்பு என் ஆளு சோறு கொண்டுவந்திடுச்சி ...
கிழே இறங்கிவந்த பார்திபன்
பார்த்தி :இந்த நாட்டுக்கட்டைத் தான் பொண்டாட்டியா ?
கைப்பு: ஆமாப்பு, பேரு ஆறாயி ... பாவம் புள்ளதாச்சி பொம்பள... ஆறுமாசம் முழுகாம இருக்கா
பார்த்தி : இங்க மட்டும் ஆற கரக்டா போ .... சாரி... ஆறுமாசம் ஆக்கியிருக்க... என்று நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்துகிறார்.
கைப்பு: அப்பு, மனுசன்னா எதாவது ஒரு விசயத்துல தெரமை இல்லாம இருக்காது
பார்த்தி : தத்துவம் ... இப்ப ...
கைப்பு: போதும்பா போதும் விட்டுடு ... நான் நிம்மதியா சாப்புடுனும் ... பருக்கையில் மண்ணப் போட்டுடாத என்று கையெடுத்து கும்பிடுகிறார்

20 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு...

கோவி.கண்ணன் சொன்னது…

//ராம் said...
நல்லா இருக்கு... //
வாங்க ராம். நீங்களும் கைப்பு ரசிகரா ?:)

பெயரில்லா சொன்னது…

கண்ணா, இது சூப்பர். ஆண்டவன் சொல்லறான் அருணாச்சலம் செய்யறான்னு அவரு சொன்னாரு. நான் சொன்னதக் கேட்டு பதிவ போட்டு டச் பண்ணிட்டயேப்பா.

இத இத இதத்தான்யா எதிர்பார்த்தோம்.

நல்லா போ... சாரி எழுதுங்க. :D

கோவி.கண்ணன் சொன்னது…

//இத இத இதத்தான்யா எதிர்பார்த்தோம்.//
ஒரு மார்க்கமாதான் அலயுறாங்கப்பு ...

பெயரில்லா சொன்னது…

உங்களை சங்கத்தில் வந்து எழுதுமாறு அழைக்கிறேன்..

vavaasangam.blogspot.com

கோவி.கண்ணன் சொன்னது…

//செந்தழல் ரவி said...
உங்களை சங்கத்தில் வந்து எழுதுமாறு அழைக்கிறேன்..

vavaasangam.blogspot.com //
இப்படியெல்லாம் சொன்ன அண்ண வர்ரமாட்டாறு...மொறப்படி சங்கது-து பதிவேலேர்ந்து அழைப்பு வெக்கனும் அழைப்பு... என்னாது ?

பெயரில்லா சொன்னது…

:-))))

பெயரில்லா சொன்னது…

சூப்பரா இருக்கு தேவ்..

பெயரில்லா சொன்னது…

சாரி கோவி கண்ணன்..

தேவ் இதுக்கு சுட்டி குடுத்துருந்தாரா..

அதான்..:(

பெயரில்லா சொன்னது…

கிளம்பிட்டாருயா
கிளம்பிட்டாருயா
கைப்புவை
கலாய்க்க
கண்ணனும்
கிளம்பிட்டாருயா

கைப்பு: சோ! இப்பவே கண்ண கட்டுதே

பெயரில்லா சொன்னது…

//
வாங்க ராம். நீங்களும் கைப்பு ரசிகரா ?:)
//
என்னா பன்னுறது நானுந்தான் ஹி ஹி ஹி

பெயரில்லா சொன்னது…

தேவ் அழைப்பு வைச்சிருக்காக வாம்மா மின்னலு சாரி வாம்மா வா..........

பெயரில்லா சொன்னது…

சரி, சரி, சங்கத்திலே சேர்ந்தாச்சா? சங்கத்தின் விதிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//At 12:06 PM, குமரன் (Kumaran) said…

:-))))
//
வருகைக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//tbr.joseph said...
சாரி கோவி கண்ணன்..

தேவ் இதுக்கு சுட்டி குடுத்துருந்தாரா..

அதான்..:(
//
நீங்கள் எழுதும் காமடி தான் எனக்கு தூண்டுகோல். நான் உங்கள் சிஷ்யன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//மின்னுது மின்னல் said...
தேவ் அழைப்பு வைச்சிருக்காக வாம்மா மின்னலு சாரி வாம்மா வா..........
//
அழைப்பு வெச்சிருக்காகளா ? ஆப்பு வெச்சிருக்காகளா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//இலக்கியன் said...
கிளம்பிட்டாருயா
கிளம்பிட்டாருயா
கைப்புவை
கலாய்க்க
கண்ணனும்
கிளம்பிட்டாருயா //
அடுத்த பதிவு 'அர்ச்சகர் கைப்பு' தயாராகிவிட்டது

பெயரில்லா சொன்னது…

//கைப்பு: சரி விடு ... நீயே சொல்லு இது ஆறா, ஒம்போதா//

இப்பல்லாம் எந்த பக்கம் பாத்தாலும் ஏழரையாவே தெரியுதே? கண்ணன் உங்களுக்குத் தெரியுமா?

:)

பெயரில்லா சொன்னது…

கண்ணா பதுங்கு குழியிலே பதுங்கியிருந்த எங்க சிங்கத்தோடு பிடரியைத் தட்டி எழுப்பிட்டீங்க நீங்க்.. பார்த்தீங்களா யார் ஆப்புக் கொடுத்தாலும் சந்தோஷமா வந்து வாங்கிட்டுப் போறதை....

சென்னையிலா இருக்கீங்க? தலைமை நிலையத்தில் போஸ்ட்டிங் போட்டுரலாமா பாஸ்சு

கோவி.கண்ணன் சொன்னது…

//
கைப்புள்ள said...

இப்பல்லாம் எந்த பக்கம் பாத்தாலும் ஏழரையாவே தெரியுதே? கண்ணன் உங்களுக்குத் தெரியுமா?//

அசராம நின்னு.... எவ்வளவு வெச்சாலும் வாங்கிட்டுப் போறியே... நீ ரொம்ப நல்லவன்பா ...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்