கோவியார் கூற்று !

மதத் தீவிரவாதங்கள் , பழமை வாதங்கள் மறுக்கப் படமால் ஆன்மிகம் பேசுவது பொருளற்றது, பயனற்றது.

மதம் என்பது இறை நம்பிக்கை அல்ல... அது பிரிதொரு மத நம்பிக்கையின் நாத்திகக் குறியீடு





முதல் சுற்றில் வாக்குகள் அளித்து கரையேற்றிவீட்டஅனைத்து பதிவுலக உறவுகளுக்கும் நன்றி, அடுத்தச் சுற்றிற்கும் உங்கள் பொன்னான வாக்குகளை,

பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்

யாதும் நாடே யாவரும் பாரீர் - 1

பிரிவு: அரசியல், சமூக விமர்சனங்கள்

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 1

என்ற இடுகைகளுக்கு பிடித்து இருந்தால் போடுங்கள் ! நன்றி !!

கைப்பு போட்ட ஆறு !

Monday, June 26, 2006

கைப்புவை கலாய்த்தால் தான் சங்கத்துல சேர்த்துக்குவோம், கைப்பு எப்படி ஆறு போடுவார் என்று எழுதும்படி சங்கத்தினர் என்னை கலாய்த்ததை தொடர்ந்து, கைப்பு மறுபடியும் கையில் சிக்கிக் கொண்டார்.

கைப்புவும், பார்த்தியும் விளம்ப்ர பலகை எழுதும் வேலை பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள். பார்த்தி சற்று மேலே சாளரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
கைப்பு கீழே நின்று சுவற்றில் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறார்


பார்த்தி : மிஸ்டர் வேலு உன்னை பழைய பெயின்ட மட்டும் சுரண்டுன்னு சொன்ன, என்ன பண்ணுகிட்டு இருக்க ?
கைப்பு: கொஞ்சம் பொறுப்பா, விவராமா சொல்றேன், நம்ப புள்ளெங்கலெள்ளாம் சேந்து, அண்ணே நீங்க ஆறு போடம்னுனே, அதப் பாத்து எங்க கண்ணுல ஆறாப் பெருகனும்ணே கண்ணீரு ... உனக்கு படிக்கத் தெரியதுன்னு சென்னவங்க கண்ணுல மண்ணப் போடனும்ணே மண்ண-ன்னு' பய புள்ளைங்க அழுதுச்சு. அத பாத்து பொங்கிப் போயி ஆறு போடுறேன்பா ஆறு...

பார்த்தி : என்னது நீ படிச்சிருக்கியா ?
கைப்பு: இப்பிடியெல்லாம் கேக்கக் படாது, நான் ஆறாம்பு ... என்று நிறுத்துவதற்குள்
பார்த்தி : நீ ஆறாவது படிச்சிருக்கியா ?
கைப்பு: ஆமப்பு ஆறாம்பு ஆறுதடவை படிச்சிருக்கேன்
பார்த்தி : அடச்சீ ... ஆறுவருசம் படிச்சிருக்கேன்னு சொல்கிறியே உனக்கு வெட்கமாயில்ல ?
கைப்பு: எதுக்கு வெட்கப்படறது... சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு... அம்புட்டு படிச்சத சொல்றதுல என்ன ... வெட்கம் ?
பார்த்தி : சரி சொல்ல வந்தத சொல்லு ... அப்பயும் ஆறுமட்டும் தான் போடத் தெரியுமா ?
கைப்பு: போடுவன் அப்பு, இதோ பாரு அண்ணெ எப்படி ஆறு போட்டிருக்கேன்னு
பார்த்தி : என்னது நீ அண்ணனா ? வெண்ணை ! ஆறு போட்டேன்னு சொல்லிட்டு ஒன்பது போட்டுவெச்சுருக்கே
கைப்பு: சத்தியமா, இது ஆறுதான் அப்பு, சொன்னா நம்பனும்
பார்த்தி : அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றியா
கைப்பு: அப்படி சொல்லப்பு
பார்த்தி : ஓ அப்ப நான் படிக்கதவன்னு சொல்லவர்ற
கைப்பு: அட எதசொன்னாலும் மடக்குறியேப்பு
பார்த்தி : வெண்ண மறுபடியும் சொல்றேன் ... இப்ப நீ போட்டது ஒன்பது ஒன்பது ...
கைப்பு: யப்பா... எனக்கு கோவம் வரவெக்காதப்பு ... அப்புறம் ?
பார்த்தி : என்ன வெட்டிப்பயல்னு இப்ப நீ சொன்ன
கைப்பு: நான்... எப்ப சொன்னே ...?
பார்த்தி : இப்பதானே சொன்ன, எனக்கு கோவம் வரவெக்காதேன்னு, அப்படின்னா நான் வெட்டிப்பயலா ?
கைப்பு: சரி விடு ... நீயே சொல்லு இது ஆறா, ஒம்போதா
பார்த்தி : அப்படி வழிக்குவா எ வென்று
கைப்பு: எங்கோயே கேட்ட மாதிரி இருக்கே ... எ எ .. ஒன்னுமில்லப்பா
பார்த்தி : அப்படியே மேல ஏறி வா
கைப்பு: வந்துட்டன்... ப்பா ... வந்துட்டேன்
பார்த்தி : நல்லா கண்ண அகலமா ஒப்பன் பண்ணி பாரு... நீ போட்டது ஆறா, ஒன்பதா ?
மேலிருந்து பார்கும் போது ஆறு ஒன்பதாக தெரிகிறது
...வடிவேலு குழம்பி போகிறார் ... 'பய சரியாத்தான் சொல்றான்'

கைப்பு: தப்பு பண்ணிட்டம்பா ... தப்பு... நீ சரியாத்தான் சொல்ற ... அதுக்குதாம்பா படிக்கனும் ... அதுக்குதாம்பா..... படிக்கனும்
என்று புலம்புகிறார்
பார்த்தி : இப்ப புரியுதா, உன்னை பெயின்ட் சுரண்டுற மட்டும் சொல்லியிருக்காங்னு ...
கைப்பு: புரிஞ்சி போச்சுப்பா, நல்ல புரிஞ்சு போச்சுப்பா
பார்த்தி : புரிஞ்சிடுச்சில்ல ... அப்ப போயி நீ போட்ட ஒன்பதை நல்ல சுரண்டி எடுக்கனும்
கைப்பு: செஞ்சிடுறேம்ப்பா
என்று கீழே இறங்குகிறார். அந்த சமயத்தில் வடிவேலு மனைவி சோறு கொண்டுவருகிறார்
கைப்பு: அப்பு என் ஆளு சோறு கொண்டுவந்திடுச்சி ...
கிழே இறங்கிவந்த பார்திபன்
பார்த்தி :இந்த நாட்டுக்கட்டைத் தான் பொண்டாட்டியா ?
கைப்பு: ஆமாப்பு, பேரு ஆறாயி ... பாவம் புள்ளதாச்சி பொம்பள... ஆறுமாசம் முழுகாம இருக்கா
பார்த்தி : இங்க மட்டும் ஆற கரக்டா போ .... சாரி... ஆறுமாசம் ஆக்கியிருக்க... என்று நாக்கைக் கடித்துக் கொண்டு நிறுத்துகிறார்.
கைப்பு: அப்பு, மனுசன்னா எதாவது ஒரு விசயத்துல தெரமை இல்லாம இருக்காது
பார்த்தி : தத்துவம் ... இப்ப ...
கைப்பு: போதும்பா போதும் விட்டுடு ... நான் நிம்மதியா சாப்புடுனும் ... பருக்கையில் மண்ணப் போட்டுடாத என்று கையெடுத்து கும்பிடுகிறார்

20 கருத்துக்கள்:

பதிவு பார்வைகள்

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP