பின்பற்றுபவர்கள்

13 ஜனவரி, 2012

பாலுக்கும் பூனைக்கும் காவல் - முதல்வர் அம்மா !

என்ன கொடுமை முதல்வர் அம்மா ?

பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த முதல்வர், மாட்டுக்கறி உண்பாரா? என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் நக்கீரன் செய்தி உருவாக்கிவிட்டது, என கூறியுள்ளார் ஜெயலலிதா.
****
எமக்கெல்லாம் ஜெயலலிதா எம்ஜிஆரின் அரசியல்வாரிசு மற்றும் குறிப்பாக எம்ஜிஆரின் திராவிடக் கட்சியான அதிமுகவை கடந்த 20 ஆண்டுகளாக வழிநடத்தும் திராவிட சிந்தனையாளர் (சிரிக்காதிங்க சார், நான் சீரியஸாக சொல்கிறேன்) மற்றும் திராவிடத் தாய், ஈழத்தாய் அம்மா முதல்வர் என்று நினைத்துக் கொண்டிருந்தோம், ஆனால் அம்மாவோ திடிரென்று தாம் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று மக்கள் மனதில் பதிந்துள்ளதால், அவர்களிடையே நக்கீரனின் செய்தி தாம் மாட்டுகறி சாப்பிடுவது தவறான செயல் என்று நினைத்திருக்கக் கூடும், என்று வருத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


முதல்வரம்மா, பொதுமக்களிடையே ஒரு பார்பனர் மாட்டுகறியோ வேறு 'மாம்சமோ' முட்டையோ மீனோ சாப்பிடுவது தவறான செயலாக நினைக்கப்படுவதில்லை, ஆனால் பொது மக்களின் கவலை பொருளியல் ரீதியானது மட்டுமே, பலர் வெளிப்படையாகவே 'பார்பனர்கள் அசைவம் சாப்பிடுவதால், மீன், ஆடு கோழி உள்ளிட்ட அசைவம் விலையேறிவிட்டதாக பெருமூச்சு விடுகிறார்கள், எனது பார்பன நண்பர்களில் சிலரோ 'யார் செய்த சதியோ, இவ்வளவு ருசியான அசைவ உணவை எங்கள் சமூகத்திற்கு கிடைக்கவிடாமல் செய்து எங்கள் பிராமண சமுதாயத்தை சைவ பிராணி ஆக்கிவிட்டார்கள்' என்று புலம்புவதுடன் வீட்டுக்கு வெளியே அசைவம் தவிர்த்து எதுவும் சாப்பிடுவதற்கு விருப்பம் இல்லை என்கிறார்கள். எனவே ஒரு பார்பனர் அசைவம் சாப்பிடுவது தவறு என்று பொது மக்களோ, பார்பனர்களோ கூட நினைக்காத போது பொதுமக்கள் தவறான எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டு இருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள் ?

ஒருவேளை நீங்கள் குறிப்பிடும் படி தவறாக நினைக்க வாய்பு இருந்தால் பின்னர் அல்லது முன்னர் 'உயர்சாதி ஆளுமை எண்ணம் கொண்ட பிராமண சமுதாயத்தைச் சார்ந்த ஜெயலலிதா எப்படி தொடர்சியும், பாரம்பரியம் மிக்க , பெரியார் வழியில் உருவான திராவிடக் கட்சியின் மற்றொரு பிரிவிற்கான அண்ணாவின் பெயரை முன்மொழிந்து ஏற்பட்டுள்ள அதிமுக கட்சியினை வழிநடத்த முடியும் என்று நினைத்திருக்க மாட்டார்களா ?
பொதுவாகவே மக்கள் யாரும் தனிமனித நிலைப்பாடுகளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை, ஒருவேளை அப்படி நினைத்திருந்தால்

பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கவர்ச்சி நடிகையாக முடியுமா ? அல்லது உங்களைப் போல் கதாநாயகி ஆக முடியுமா ? அதற்கு அந்த சமூகம் அனுமதி அளிக்குமா ? ஏற்றுக் கொள்ளுமா என்று நினைத்திருக்கக் கூடும்.

நடிப்பு மற்றும் அரசியல் ஒரு தொழிலாகப் பார்க்கப்படுவதால் பொதுமக்கள் பார்வையில்ஷகீலா, நமீதா,நயன்தாரா ஆகியவர்களின் மதம் பார்க்கப்படாது, ஜெயமாலினி ஜோதிலட்சுமி உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகளின் சாதியும் பார்க்கப்படாது.

பூணூலை கழட்டிவிட்டு நடிக்கும் பார்பன நடிகர்களையாரும் பார்பனராகப் பார்ப்பதும் இல்லை, அப்படி இருக்க, ஒருவேளை நக்கீரன் வெளியிட்டது தவறான செய்தி என்ற போதிலும் உங்களுக்கு பொது மக்கள் இப்படித்தான் நினைத்திருக்கக் கூடும் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட தவறானத் தகவலாக இருக்கும், உங்களின் இது போன்ற அறிக்கை உங்கள் அரசியலுக்கும் கட்சிக்கும் பின்னடைவே. நீங்களே நினைத்துப் பாருங்கள்

திராவிடத் தாயாக முதல்வர் ஜெயலலிதா அல்லது
திராவிடத் தாயாக ஒரு பார்பன சமூக முதல்வர்
ஈழத்தாயாக முதல்வர் ஜெயலலிதா அல்லது
ஈழத்தாயாக ஒரு பார்பன சமூக முதல்வர்
திராவிடக் கட்சியின் தலைவி ஜெயலலிதா அல்லது
திராவிடக் கட்சியின் தலைவியாக ஒரு பார்பன சமூகத்தைச் சார்ந்தவர்

எது மக்கள் மனதில் பதிந்திருக்கும் ?

சாதி, மதங்களைக் கடந்தவர் என்ற உறுதி மொழியில் முதல்வர் பதவி ஏற்ற தாங்கள், அதை வழங்கிய பொது மக்கள் தங்களை ஒரு பார்பனத்தியாகவே நினைப்பார்கள் என்று தாங்கள் நினைப்பது உங்கள் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முரணானது, தவறான செய்தி என்பதற்காக நக்கீரனைக் கண்டிக்கிறோம் அதே வேளையில் தாங்கள் மீண்டும் ஒருமுறை தங்களை பிராமணப் பெண்' என்று மறைமுகமாக பொதுமக்களை சாக்கிட்டு, பழிபோட்டு கூறி பெருமைப்பட்டுக் கொள்வதையும் அரசியல்சாசனத்திற்கு எதிரான செயல் என்று கண்டிக்கிறோம். அப்படிக் கூறிக் கொள்வது உங்கள் விருப்பம் என்றால் உங்கள் கட்சி திராவிடக் கட்சியாக இருக்க முடியாது என்றே பொதுமக்கள் கருதுவார்கள், அதாவது 'பிராமண சமுதாயத்தில் இருந்து வந்த பெண் திராவிடக் கட்சிக்கு பொருத்தமானவரா ?

உங்கள் கட்சி திராவிடம் பேசுகிறதா இல்லையா என்பதெல்லாம் வேற, ஆனால் பார்பன உ(ர்)ணவு அடிப்படையில் நீங்கள் அதை பெரிது படுத்தும் போது உங்கள் கட்சியின் திராவிட சார்ப்பு அடிப்படை நிலைப்பாடுகளும் அதற்கு உங்களின் தகுதிகளும் உங்களாலேயே கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

உங்கள் அறிக்கை ஒருவேளை மாட்டுகறி உண்ணும் பார்பனர் இருந்தால் அவர்கள் பொதுமக்கள் முன்பு வெட்க்கப்பட வேண்டும், அல்லது பொது மக்கள் அவர்களை தூற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைத்திருக்கிறது என்று நீங்கள் அறிந்துள்ளீர்களா ?

2 கருத்துகள்:

அக்கப்போரு சொன்னது…

நடிப்பு மற்றும் அரசியல் ஒரு தொழிலாகப் பார்க்கப்படுவதால் பொதுமக்கள் பார்வையில்ஷகீலா, நமீதா,நயன்தாரா ஆகியவர்களின் மதம் பார்க்கப்படாது, ஜெயமாலினி ஜோதிலட்சுமி உள்ளிட்ட கவர்ச்சி நடிகைகளின் சாதியும் பார்க்கப்படாது.//

நச்

suvanappiriyan சொன்னது…

பதிவின் அனைத்து கருத்துகளோடும் ஒத்துப் போகிறேன். அருமையான அலசல்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்