சிங்கையில் இருந்து வெளியாகும் இணைய இதழ்

கொலை விளையாட்டு !

Wednesday, January 04, 2012

இன்னிக்கு வந்த செய்தி சமூகம் என்பதில் வல்லவன் வைத்ததே சட்டம் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது, 100க் கணக்கில் பொது மக்கள் கொலை செய்யப்பட்டார்கள், இராசாயன கருவிகள் வைத்திருந்தார்கள் என்று ஈராக்கில் உள்ளே நுழைந்த அமெரிக்க செய்த போரில் கொல்லப்பட்டவர்கள் 1.67 லட்சம் பேர். இதில் அப்பாவிகள் 79 விழுக்காட்டினராம். கிட்டதட்ட ஒன்னேகால் லட்சம் அப்பாவிகளை கொன்று குவித்திருக்கிறது அமெரிக்க இராணுவம் என்கிறது அந்தச் செய்தி.


இந்தக் கொலைக்கு அமெரிக்காவை மட்டுமே குற்றம் சுமத்தி ஆர்பரிக்கும் மதவாதிகள், அமெரிக்காப் படைகள் இறங்கிப் போர் செய்ய இடம் கொடுத்தது யார் யார் கேள்வியைக் கேட்டுக்கொள்வதே இல்லை என்பது தான் அந்த ஆர்பரித்தலில் உள்ள முரண்பாடு.

கொலை செய்ய பெரும்பான்மையும், ஆளுமையும் அதைத் தக்க வைத்திருக்க பணக்காரத் திமிர்த் தனமும் இருந்தால் கொலைகள் கண்டு கொள்ளப்படாது என்பதை வரலாறு இலங்கை ஈராக் நிகழ்வுகளின் வழியாகப் பதிந்துக் கொண்டுள்ளது என்பது தான் நிகழ்வுகள் விட்டுச் செல்லும் தகவல்.

ஒரு பணக்காரன் நாலு பேரைக் கொல்லலாம், ஒரு பெரும்பான்மை இனம் தன்னை விட 40 சதவிகிதம் குறைவாக உள்ள மக்களைக் கொல்லாம்.

2 கருத்துக்கள்:

  • Barari
     

    அமெரிக்க படைகள் இறங்கி கொலை செய்ய இடம் கொடுத்தது யார்//
    இந்த கேள்வி ஈராக் மற்றும் இலங்கைக்கும் பொருந்தும் தானே?

  • கோவி.கண்ணன்
     

    //இந்த கேள்வி ஈராக் மற்றும் இலங்கைக்கும் பொருந்தும் தானே?//

    இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாகவே சீமான், வைகோ, நெடுமாறன் உள்ளிடோர் கண்டித்து சிறை சென்றனர், தவிர பெருவாரியான தமிழ்நாட்டினரும் இந்திய செயல்பாடுகளை விரும்பவில்லை என்பதன் சாட்சியே காங்கிரஸ் பல இடங்களில் பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வியதாகும்

QR Code for this Blog

qrcode

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

- : புலிகளைக் காப்பாற்றுவோம் : -

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP