பின்பற்றுபவர்கள்

11 ஜனவரி, 2012

நாகைக்கும் காரைக்கும் காதம் !

இன்றைக்கு நாம் மெட்ரிக் அளவுகளுக்கு மாறிவிட்டோம், ஆனாலும் நீளம் அகலம் எடை குறித்த அளவி (அளவு) சொற்கள் தமிழில் ஏராளமாக இருந்தன, வெள்ளைக்காரர்களின் வருகைக்குப் பிறகு இவை முற்றிலும் வழக்கு இழந்து போயின, 35 ஆண்டுகளுக்கு முன்பு கூட 'வீசம்' என்ற நிறுத்தல் அளவீடுகளில் எடைகள் நிறுத்து கொடுக்கப்பட்டு வந்தன. குறிப்பாக ஆங்கில ஆட்சியின் கீழ் வந்த காமென் வெல்த் நாடுகளில் அளவைகள் இங்கிலாந்தைப் பின்பற்றி மாற்றிக் கொள்ளப்பட்டது, ஆனால் இங்கிலாந்தில் சாலைகளின் அளவீடுகள் கிமீ சொல்லப்படுவதில்லை, மைல் கணக்கில் தான் விரைவு தொலைவு உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்கள்.

*****

நாகைக்கும் காரைக்கும் காதம்
காரைக்கும் கடையூருக்கும் காதம்
கடையூருக்கும் யாழிக்கும் காதம்
யாழிக்கும் தில்லைக்கும் காதம்.

இது எந்த வகைப்பாடல், யார் எழுதியது என்று எனக்கு தெரியாது, சிறு வயதில் அம்மா வாய்பாடு போல் சொல்லக் கேள்விப்ப்ட்டிருக்கிறேன், இதன் பொருள்

நாகைக்கும் காரைக்காலுக்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் அது போன்று
காரைக்காலுக்கு திருக்கடையூருக்கும் இடைபட்ட தொலைவு ஒரு காதம்,
திருக்கடையூருக்கும் சீர்காழிக்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் மற்றும்
சீர்காழிக்கும் (தில்லை) சிதம்பரத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு காதம் என்பதாகும்

அதாவது நாகையிலிருந்து சிதம்பரம் நான்கு காதம் தொலைவில் உள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். காதம் என்ற தொலைவு எவ்வளவு ?


வெட்டவெளியில் இருகை சேர்த்து ஒருமுறை பலத்த ஓசையுடன் கைதட்டினால் அல்லது இரவில் தீப்பந்தம் அல்லது விளக்கைக் காட்டி அது எவ்வளவு தொலைவில் உள்ளவரை ( தீப்பந்ததால் ஆட்டி சைகை செய்து) கூப்பிட வைக்க முடியும் என்பதே கூப்பீடு அளவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், தமிழில் பெரும்பாலும் சொல்லுக்கு நேரடியான பொருள் உண்டு என்பதால் அவ்விதம் நினைக்கிறேன். அதாவது கண்ணுக்கும் காதுக்கும் எட்டிய தொலைவு 'கூப்பிடு' என்ற நீளம் குறித்த நீட்டல் அளவையாக இருக்கிறது. அது போன்ற நான்கு அளவுகளான கூப்பிடும் தொலைவு ஒரு காத தொலைவு எனப்படுகிறது. இந்த ஊர்களின் இன்றைய தொலைவு ஒவ்வொன்றிற்கும் இடைப்பட்டு சுமார் 20 கி மீட்டர்கள், தமிழார்வளர்கள் காதம் என்பதற்கு வடபுல தென்புல வாய்ப்பாடு என்ற அளவில் இரு அளவீடுகளைத் தருகிறார்கள், ஒரு காதம் எனப்படுவது 6.7 கிமீ தென்புல அளவீடாகவும், அதில் அரை அளவான 3.35 கிமி அளவு ஒரு காதம் என வடபுல அளவீடாகவும் குறிப்பிட்டுள்ளனர். இவை இரண்டும் கூட மேல் குறிப்பிட்ட வாய்பாட்டு பாடலில் குறிப்பிடும் தொலைவான ஒரு காதம் = 20 கிமீ அளவுடன் முரண்படுகிறது. திரு இராமகி ஐயா அவர்களின் ஆய்வு கூற்றுபடி காதம் = 3.35 என்று வைத்துக் கொண்டால், மேற்கண்ட பாடலில் ஆறு என்ற எண் அளவு விடுபட்டு இருக்க வேண்டும்,



அதாவது

நாகைக்கும் காரைக்கும் ஆறு காதம்
காரைக்கும் கடையூருக்கும் ஆறு காதம்
கடையூருக்கும் யாழிக்கும் ஆறு காதம்
யாழிக்கும் தில்லைக்கும் ஆறு காதம்.

என்பதில் இருந்த 'ஆறு' காலப்போக்கில் வாய்பாட்டுப் பாடலில் இருந்து எதுகை மோனை மயக்கத்தில் விடுபட்டி இருக்க வேண்டும், அதாவது காதம் என்ற அளவுச் சொல் பயன்பாடு குறைந்த பிறகு முழுப்பாடலின் மையப் பொருளான தொலைவு வாய்ப்பாட்டின் பலன் தேவையற்றதாகி வெறும் தொலைவு சார்ந்த சந்தப் பாடலாக திரிந்திருகிறது.

எண்கள், பின்னங்கள் - வகுத்தல், நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவீடுகள் ஏராளமானவை தமிழில் இருந்தது, தற்போது அவற்றின் பயன்பாடுகள் இல்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளாதது நமக்கு மட்டுமல்ல உலகத்தினருக்கே இழப்பு தான். ஒரு மொழியில் ஒரு கலைச் சொல் அழியும் போது அவற்றின் பயன்பாடுகள் அழியும், அவை கொண்டுள்ள அறிவின் பொருளும் அழியும், ஒரு வேளை இந்தச் அளவைகளைப் பயன்படுத்தினால் அளவீடுகளை பயன்படுத்தித் தீர்வு காணும் இன்றைய சிக்கலான கணக்குகள் கூட எளிமையான வடிவில் தீர்க்க முடியும். எடுத்துக்காட்டிற்கு போதையனார் பாடல் ஒன்று.

ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.



இவற்றின் பொருள் செங்கோண முக்கோன நீளத்தில் (அடிப்பாகம்) 8 பங்கில் ஒன்றைக் கழித்துவிட்டு உயரத்தில் பாதியை எடுத்து கூட்டினால் வரும் நீள அளவே கர்ணம் என்பதாகும். இவ்வளவு எளிமையாக கர்ண நீளம் காணும் வாய்ப்பட்டை விட்டுவிட்டு வர்கமூலம், பெருக்கல் என பிதார்கரஸ் தியரம் சொல்லிவருவதை நாம் பயன்படுத்துகிறோம் இன்று.

5 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

இரு இடங்களுக்கு இடையே உள்ள தூரம் குறித்தும் கணக்கியல் குறித்தும் நம்மவர்கள் சொன்னதை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.,

அடிக்கடி இந்தமாதிரி கட்டுரைகள் நிறைய எழுதுங்க கோவியாரே...


வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

சிவா, மிக்க நன்றி,

நினைவில் இருப்பவை விழித்துக் கொள்ளும் போது இது போன்ற பதிவுகள் வரும்

கோவி.கண்ணன் சொன்னது…

// Rathnavel said...
நல்ல பதிவு.
நன்றி.//

மிக்க நன்றி ஐயா

எம்.கே.குமார் சொன்னது…

Good Info...

Thanks.

கோவி.கண்ணன் சொன்னது…

மிக்க நன்றி குமார்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்