பின்பற்றுபவர்கள்

27 ஜனவரி, 2008

பார்பனர்களால் தமிழ் ஏன் தாக்கப்படுகிறது ?

ஒரு சில நடுநிலையாளர்கள் தவிர்த்து (அப்படி யாரும் இல்லை என்று தான் சொல்கிறார்கள்) பார்பனர் அல்லோதோர், பார்பனர் என்று கருத்தாக்கங்கள் எழுகின்றன. பார்பனரல்லோதோர் பார்பனர்களின் கருத்துக்களை மறுப்பதற்கு குறிப்பாக சாதி ரீதியிலான குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றனர். ஆனால் பார்பனர்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஏன் பார்பனரல்லாத பதிவர்கள் ( ஒட்டுமொத்தமாக அல்ல) எல்லோரும் பார்பனரையே குறை சொல்கிறார்கள், தாக்குகிறார்கள் ?. பார்பனர்களால் சரியான எதிர்கருத்துக்களை வைக்க முடியவில்லையே பார்பனர்கள் கேட்டுக் கொண்டு அமைதியாகத்தானே இருக்கிறார்கள். பார்பனர் யாரும் யாரையும் சாதியைச் சொல்லி திட்டவில்லையே என்ற ஞாயமான கேள்வி என்னைப் போன்ற பல பார்பனரல்லாத பதிவர்களுக்கு ( நன்றி வீஎஸ்கே ஐயா) வரக்கூடும். ஞாயமான கேள்விதானே ?

ஏனைய சாதிக்காரர்கள் குற்றமற்றவர்களா ? யோக்கியவான்களா ? நெஞ்சில் கை வைத்துப் பார்ர்த்துக் கொள்ள வேண்டியதுதான். கிராமங்களில் நடக்கும் சாதித் தாக்குதல் இரட்டை குவளை முறைக் கெல்லாம் பார்பனர் காரணமா ? என்று கேட்டால் பார்பனரை எதிர்பவர் 'ஆம்' என்றே பதில் சொல்லி சப்பைக் கட்டாக வருண அடுக்குமுறையை ஏற்படுத்தியது பார்பனர் அதனால் அவ்வாறு நடக்கிறது என்பர். ஆனால் அவ்வாறு சாதிய கொடுமைகளை செய்யும் சாதிகளைப் பற்றி மறந்தும் விமர்சிப்பது இல்லை. இது ஏன் பார்பனரல்லாத சாதியெல்லாம் சாதிவெறி பிடித்தவர்களே இல்லையா ? இருக்கிறார்கள். இல்லை என்று எவரும் மறுக்க மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் நரிக் குறவர்களை தாழ்வாக சொல்வதைப் பார்த்து இருக்கிறேன். குறவர்கள் தன் சாதியைவிட தாழ்ந்த சாதி என்று நினைத்துக் கொண்டவராக இருக்கிறார்கள்.

மற்ற சாதிக்காரார்களின் சாதிவெறிக்கும் பார்பனர்களின் சாதிவெறிக்கும் வேறுபாடு உண்டு. பார்பனரல்லோதோர் எவரும் வலைப்பதிவு போன்ற பொது இடத்தில் தான் இன்ன சாதியைச் சேர்ந்தவன் என்று தேவை இன்றி அடையாளப்படுத்திக் கொள்வது இல்லை. பதிவில் பார்பனரல்லாத பதிவர்களின் சாதி இன்னது என்பதை அவர்களே வெளிப்படுத்தியிருந்தால் அன்றி எவருக்கும் தெரியவராது. மற்றவர்கள் சாதியை பெருமைக்குரிய ஒன்றாக கருதுவதில்லை என்றே நினைக்கிறேன். அசுரன் என்ற பதிவர் 'முத்துராமலிங்க தேவரின் சாதிவெறியைப்' பற்றி பதிவு எழுதினார். அதில் தேவர் சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு தேவருக்கு வக்காலத்து வாங்குபவர் எவரும் இல்லை. அனானியாக எவராவது தேவருக்கு ஆதரவாக கருத்து சொல்லி இருக்கலாம். ஆனால் வெளிப்படையாக சாதியை உயர்த்திப் பிடித்து பார்பனரல்லோதோர் எழுதுவது விரல்விட்டு எண்ணக் கூடியதே.

பார்பனர்கள் மட்டும் ஏன் தன் சாதியை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் ? இன்னும் உயர்சாதி மனப்பாண்மையிலேயே இருக்கிறார்கள் என்று பார்பனரல்லாத பதிவர்கள் நினைக்கக் கூடும். அதுமட்டுமா ? தமிழுக்கு ஆதராவாக எடுக்கும் முயற்சிகளுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் பார்பனராகவே இருப்பதால் (இயற்கையாகவே அமைந்துவிடுகிறதா ?) பார்பனர்களின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவற்றை பார்பனிய சித்தாந்தமாகவே நினைக்கிறார்கள். பார்பனரில் கருத்துக்கள் ஞாயாமானதாக இருந்தாலும் பார்பனர் லாபம் இல்லாமல் இதனைச் சொல்லமாட்டார்கள் என்றே நினைத்து பார்பனர் மீதான சாதிய குற்றச் சாட்டுகளாக ஆக்குகிறார்கள். பார்பனர்கள் - பார்பனரல்லோதர் என்று பார்பனர்களே பிரித்துக் இன்னும் வழக்கில் bhramin - NonBhramin என்னபதை வெகு சாதரணமாக புழக்கதில் சொல்லிவருவதால் எதிர்ப்பவர்கள் ஓரணியாக (பார்பனரல்லோதோர்) என இணைவது இயற்கையாக அமைந்துவிடுகிறது.

பார்பனரல்லோதோரை பார்பனர்கள் தாக்குவதற்கான வாய்ப்புகள் என்பது சாதிய ரீதியாக இருக்க முடியாமல் போவதற்கு காரணம், பார்பனரல்லோதோர் பொதுவில் (ஊடகத்தில்) சாதிகளாக பிரித்துக் கொள்ளாமால் இருப்பதே. தேவர்களோ, வன்னியர்களோ, செட்டியார்களோ குழுக்களாக இருந்து கொண்டு பார்பனரை எதிர்த்தால் பார்பனர்களாலும் பதிலடி கொடுக்க முடியும், தூரதிஷ்டவசமாக பார்பனர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் பார்பனரல்லாதவர்களை தாக்குவதற்கு பார்பனர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு தமிழை தூற்றுவது (நீஷ பாசை, வடமொழியில் பிறந்ததாக பொய் சொல்வது), தமிழர்கள் தலைவர்களாக நினைப்பவர்களை ( பெரியார், அண்ணா கலைஞர் போன்றவர்களைத்) தாக்குவதன் மூலம் தங்கள் பதிலடியைக் கொடுப்பதாக நினைக்கிறார்கள். இதுவும் அவர்களுக்கு எதிராக அமைந்துவிடுகிறது. கருணாநிதியை பிடிக்காதவர்கள் பார்பனர்கள் தாக்குகிறார்கள் என்று கருணாநிதிக்கு ஆதரவாக மாறிவிடுவார்கள். தமிழார்வமே இல்லாத தமிழர்களுக்குக் கூட பார்பனர் தமிழைத் தூற்றினால் பொத்துக் கொண்டு வருகிறது. இதே அரசியலில் தான் தாம் தமிழர், தமிழ் பேசுபவர் என்றாலும் தமிழுக்கு எதிராக நடந்து கொள்வதுதான் தங்களது நிலைப்பாடாக பார்பனர்களும் ஆக்கிக் கொள்கிறார்கள்.

பார்பனர்களின் வழக்கமான பேச்சு 40 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தமிழகம் சோமாலியாவாக மாறிவிட்டதாக சொல்லும் குற்றச்சாட்டு, இதில் உண்மை இல்லை என்றாலும், இவர்கள் திராவிட ஆட்சி என்று கைகாட்டுவது அண்ணா, கருணாநிதி போன்றவர்களைத்தான், மறந்தும் திராவிடக் கட்சியான அதிமுகவின் ஜெ வையோ, எம்ஜிஆரையோ இவர்கள் குற்றம் சொல்லியதே இல்லை. பார்பனர்களைப் பொறுத்து திராவிடர்கள் என்பது பார்பனரல்லோதோர் என்பதை அவர்களே அழுத்தமாக சொல்லி வருவதால் திராவிடர்கள் ஓரணியில் இருப்பதற்கு அவர்களே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

பார்பனர்கள் - பார்பனரல்லோதோர் அரசியல் லாவனிகளுக்கு முடிவே இருக்காதா ? முன்பெல்லாம் பார்பனர்களின் அரசியல் எவருக்கும் தெரியாது, இயல்பான நடப்பாக அனைவரும் நினைத்தனர். ஆனால் அப்படி எதுவும் தற்போது இல்லை. பார்பனர் பேச்சின் ஒவ்வொன்றிக்கும் எதோ ஒரு காரணம், அரசியல் இருக்கும் என்பதை பார்பனரல்லோதோர் புரிந்து கொண்டுள்ளனர்.

சீனன் நாள் ஒன்றுக்கு நான்கு வேளை சாப்பிடவில்லை என்றால் செத்துவிடுவான். மலாய்காரன் தொடர்ந்து ஒருமாதம் வேலை செய்தால் செத்துவிடுவான் என்று இந்த பகுதியில் ஒரு வழக்குண்டு. பார்பனர் - பார்பனர் அல்லோதோர் அவரவரால் ஆன அரசியலை அவரவர் செய்கின்றனர். அதைத்தாண்டி அவர்களால் வரயிலாது. நடக்கும் அரசியல் யாவும் தங்கள் நிலையை தக்கவைத்துக் கொள்வதற்குத்தான், எப்போதும் பார்பனர்கள் செய்து கொண்டுகின்றனர். தற்பொழுதுதான் பார்பனரல்லோதோர் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். பார்பனரல்லோதோர் எவற்றையெல்லாம் போற்றவேண்டும் என்பதை பார்பனர்கள் தங்கள் எதிர்பின் வழி பதிய வைத்துவிடுகின்றனர்.

தமிழ் புத்தாண்டை மாற்றுவதற்கு தமிழர்கள் மகிழ்ச்சி தெரிவித்ததை, பார்பனர்களுக்கு எதிரான ஒன்றாக தமிழ் பேசும் பார்பனர்கள் தங்களாகவே எதிர்நிலையை எடுத்துக் கொண்டனர். அவர்கள் அதற்கு வைக்கும் வாதங்களில் கருத்து என்று ஒன்று உண்டென்றால் அது வழிவழி வருவதை மாற்றக் கூடாது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. வழிவழிவருவது ஒன்றை பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அது தொடரக்கூடாது, தொடரவும் முடியாது என்பது அவர்களுக்கு புரியவில்லை என்றே நினைக்கிறேன். வறட்டுத்தனமாக தமிழை பார்பனர்கள் ஒதுக்குவதற்கும், தூற்றுவதற்கும் காரணம் ? தங்கள் மீது சாதி ரீதியிலான தாக்குதல் நடத்தும் பார்பனரல்லாதவர்களை, தமிழை தாக்குவதன் மூலம் பதிலுக்கு தாக்குவதாக நினைக்கிறார்கள். மொழிக்கு எதிராக தாக்குதல் தெலுங்கு, கன்னட மொழி மீதும் மற்ற மாநிலங்களில் நடந்துவருகிறது. மற்றபடி தாங்களும் பேசும் 'தமிழ்' மொழியின் மீதான வெறுப்பிற்கான காரணம் மிகக் குறைவே. சிலர் வெறுப்பே இல்லாமல் சூழ்நிலையால் எதிரான நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்

பின்குறிப்பு : இங்கு பார்பனர் / பார்பனரல்லோதோர் என்று தனிப்பட்ட எவரையும் சுட்டவில்லை. ஒட்டுமொத்தமாகவும் குறிப்பிடவில்லை. அவ்வாறு எவரும் கருதினால் அந்த குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக அவரே உணர்வதற்கு நான் பொறுப்பு அல்ல. இது முழுக்க உளவியல் ரீதியிலான கருத்து. எல்லோருக்கும் தெரிந்ததுதான் புதிதாக எந்த கருத்தையும் இங்கே விதைக்கவில்லை. ஏன் ? என்பதையும் அவற்றிக்கான காரணம் எது என்று எல்லோரும் அறிந்ததையே கொஞ்சம் கோர்வையாக சொல்ல முயன்றேன்.

44 கருத்துகள்:

ஜமாலன் சொன்னது…

பார்ப்பனர்களால் தமிழ் தாக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம் 1. தமிழர்கள்தான் அவர்களது மேலாதிக்கத்தை கேள்வி கேட்டதுடன் எதிர்த்து செயல்படவும் செய்தனர். (குறிப்பாக பெரியார்) 2. தமிழ்மொழி அதாவது திராவிட மொழிக் குடும்பம் சமஸ்கிருத மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல. சமஸ்கிருத மேலாண்மையை கேள்வி கேட்கும் பலம் தமிழுக்கு இருப்பதாக முன்னெடுக்கப்பட்ட தனித்தமிழின் அரசியல். 3. ஆரிய திராவிட முரண்பாட்டை கட்டமைத்தது ஆங்கிலேயே ஓரியண்டலிஸ்டுகள். அதனைப் பிடித்துக்கொண்டு வளர்த்தெடுத்த தமிழ் இனக்காவலர்கள் மற்றும் தமிழினத் தலைவர்கள். திராவிட மொழியில் தமிழ் மட்டுமே செம்மொழி என்பதான ஒரு தலைமைப் பீடமாக தமிழை ஆக்க முயற்சித்ததின் விளைவும் ஒரு காரணம். இப்படியாக சில வரலாற்றுக் காரணங்கள்.

நுட்பமான உளவியல் காரணம்... பார்ப்பன வாழ்வியலை உன்னதப்படுத்திய ஒரு பொதுப்புத்தியானது அந்த வாழ்வை எட்டிப்பிடிக்க இயங்கிய ஏக்கத்தின் விளைவுதான் தமிழின அரசியலின் உள்ளமைப்பாக உள்ளது. உடல்அரசியல்ரீதியாக சொன்னால் தமிழனின் பெண் உடல் குறித்த வேட்கையின் அல்லது ஏக்கத்தின் உச்சமாக கட்டமைக்கப்பட்டிருப்பது பார்ப்பனீய பெண் உடல்தான். அதாவது வெள்ளளைநிற உடல்கள் துவங்கி.. ஆணை அதிக்கம் செய்யும் பெண் உடல் வரை இப்படியாக. சாதி என்பது அடிப்படையில் தனது குழுவின் பெண் உடலை பெறவும் துய்க்கவும் தனக்குள்ள உரிமையை நிலைநாட்டிக் கொள்வதில்தான் உள்ளது. அதற்காகவே சாதியை காப்பாற்ற சாதிய ஆண் உடல்கள் தங்களை வீரமிக்க உடல்களாக கற்பிதம் செய்து கொள்கிறது. அதனால் சாதிய ஆண் உடல்கள் தங்களது சாதியத்தின் அல்லது குழுவின் காப்பாளராக தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். நிலமும் பெண் உடலும் ஒன்று என்கிற உருவகமாக இந்த மனப்பான்மை கட்டப்பட்டள்ளது. இதில் மதங்கள் புராணங்கள் துவங்கி இலக்கியங்கள்வரை கணிசமாக பங்காற்றி உள்ளன. பெண் உடலை ஒரு விளைநிலமாக இவை கட்டமைத்துள்ளன. சாதி தனது ஆதிக்கத்தை காப்பது என்பது தனது குழு உடல்கள் குறிப்பாக பெண் உடல்களை தனக்குள் வைத்துக் கொள்வதற்கானதே. பொதுவெளிக்கான ஒரு வேட்கைப் பெண் உடலாக பார்ப்பன பெண் உடல்களை கட்டமைப்பதே தமிழ் என்கிற இனத்திற்கான அரசியலாக உள்ளது. தமிழ் பெண் உடலின் அழகியல்கூறு என்ன என்பதை சங்ககால தமிழ் பெண்களின் உடலமைப்பிலிருந்து பெறலாம் என்றாலும்.. அதிலும் பார்ப்பனிய அழகியல் கூறுகள் ஊடுகலந்தே உள்ளன. ஆக... சாதியமாக கட்டப்பட்ட ஒரு சமூக உளவியல் தளத்தில் பார்ப்பனீயம் என்கிற எதிரியை கட்டமைக்காமல் தமிழினம் என்கிற அரசியல் முன்செல்ல சாத்தியமே இல்லை என்பது உலகின், சிந்தனை முறையின் இருண்மை எதிர்வு (binary opposition) என்கிற அம்சத்திலிருந்து வருகிறது.

நீங்கள் கொஞ்சம் விரிவான தளத்தில் இதனை அனுகியதால் மேற்கண்ட எனது விளக்கத்தையும் கொஞ்சம் விரிவாக வைக்க வேண்டியதாகிவிட்டது. பார்ப்பனர்களையும் அவர்களது கருத்தியலையும் விமர்சிக்கும் நாம் நமக்குள் ஊடுறுவியுள்ள சாதியக் கூறுகளையும் களையவேண்டும். இல்லாவிட்டால் அம்பேத்கார் கூறியதுபோல.. சமத்தவமின்மை என்கிற பார்ப்னீய கருத்தியலால் ஆளப்படும் ஒரு நவ பார்ப்பனராகவே நாம் இருப்போம் இப்படி எதற்கெடுத்தாலும் பார்ப்னீயர்களை குறைக் கூறிக்கொண்டே...

அன்புடன்
ஜமாலன்.

வவ்வால் சொன்னது…

கோவி,

என்ன அடுத்தடுத்து குண்டு போடுறிங்க :-))

இதில் இன்னொரு காரணமும் இருக்குங்க, மற்றவர்கள் எல்லாம் பொது இடத்தில் இருந்தால்(அயல்நாட்டில் என்றே வைத்துக்கொள்ளுங்களேன்), தமிழன், ஊர்க்காரன், மாவட்டத்துக்காரன், என்றெல்லாம் அடுத்தவரை தம்முடன் சேர்த்துக்கொள்வார்கள், ஆனால் பார்ப்பனர்கள் மட்டும் முதலில் ஒரு பார்ப்பனருக்கே முன்னுரிமை தருவார், அவர் வேற்று ஊர்க்காரர், மொழிக்காரர், எதுவாக இருந்தாலும்.

மேலும் இயல்பிலேயே அவர்களுக்கு "அனைவரையும்" விட உயர்ந்தவர் என்ற எண்ணம் இருப்பதும், தமிழ் குறித்து எப்போதும் சிறப்பான அபிப்ராயம் இல்லாது இருப்பதும் வழக்கம்.

இப்படி எல்லாருக்கும் பொதுவான , எதிரான குணங்கள் கொண்டிருப்பதே மற்றவர்கள் ஓரணியாக செய்ய வைக்கிறது.
-----------------------------
ஜமாலன்,
எப்படிங்க இப்படிலாம்... எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான விளக்கம் தறிங்க! நீங்க எங்கியோ போய்ட்டிங்க! :-))(நல்லா இருக்குனு சொன்னேன்!)

வீ. எம் சொன்னது…

நல்ல கட்டுரை, ஏற்புடையது கோ வீ.

//பார்பனர்கள் கேட்டுக் கொண்டு அமைதியாகத்தானே இருக்கிறார்கள். பார்பனர் யாரும் யாரையும் சாதியைச் சொல்லி திட்டவில்லையே என்ற ஞாயமான கேள்வி //

இது மட்டும் உடன்பாடில்லை.. அவர்களுக் அமைதியாக இல்லை, யாரையும் சாதி சொல்லி திட்டாமலும் இல்லை, குறிப்பிட்ட சாதியை சொல்லாவிட்டாலும், ஒட்டு மொத்தமாக பார்பனரல்லாதோரை குறிப்பிட்டு அவர்களும் சரிக்கு சமமாக திட்டிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்.

வீ எம்

ஜமாலன் சொன்னது…

நண்பருக்கு.. எனது இப்பின்னோட்டம் பொதுவான நோக்கிலேயெ எழுதப்பட்டுள்ளது. தவிர இப்பதிவில் சாதிய கண்ணொட்டம் வெளிப்படுவதாக நான் புரிந்துகொண்டுள்ளதாக ஒரு நண்பர் மின்-உரையாடலில் சுட்டிக்காட்டினார். அவரிடம் விளக்கிய பிறகே இதனை எழுதுகிறேன். உண்மையில் இப்பதிவில் எந்தவிதமான சாதிய பக்கச்சார்போ பார்வையோ இல்லை. பதிவு நுட்பமான தமிழ் எதிர்ப்பு என்கிற ஒரு பிரச்சனையை எடுத்த அலசுகிறது. பொதுவாக சாதியம் என்பது அகமணமுறையை அடிப்படையாகக் கொண்டே இன்றுவரை காக்கப்பட்டுள்ளது என்பதையெ சுட்டிக்காட்டியுள்ளேன். மற்றபடி பதிவில் சாதிய கண்ணோட்டம் இருப்பதான புரிதல் எனக்கு இல்லை.

அடுத்து பார்ப்பனியத்தின் தந்போதைய வடிவம் எஸ்.வி.ஆர் சுட்டிக்காட்டும் இந்த - இந்தி - இந்தியா என்கிற திரிசூலம்தான். இதுவே எதிர்க்கப்பட வேண்டிய நிலைப்பாடு. தமிழுக்கு எதிர்ப்பாக இந்தியை முன்வைப்பதும் அதனால்தான்.

எனது பின்னோட்டம் தவறான புரிதலுக்க வழிவகுக்க வேண்டாமே என்றுதான் இந்த விளக்கம்.

TBCD சொன்னது…

என்ன சொல்லுறீங்க..

இப்ப எல்லாம்.நிறைய தமிழர்கள் (?!) ரெம்பிளேற் (அது தமிழாமே..) என்று எல்லாம்..எழுதுறாங்க...

தூய தமிழில் பதிவு எழுதுறேன்னு சொல்லுறாங்க..

அப்படி இருக்கிற சூழலில்..இப்படி ஒரு பதிவா..

அவ்வ்வ்வ்வ்வ்வ்

நடுநிலை வாந்தி ஆயிட்டேனா இல்லையா..

சொல்லிடுங்க..

TBCD சொன்னது…

தரமான பதிவு...ISO முத்திரைப் பதித்த பதிவு..

தமிழர்கள் படிக்க வேண்டியப் பதிவு..

இதைப் படித்து,

ஒரு காமன் மினிமம் திட்டம் போடனும் என்ற உணர வைக்கும் பதிவு..

திட்டம் என்னன்னு வேற தனியாச் சொல்லனும்மா..

புல்லுருவிகளிடமிருந்து தமிழர்களை காப்போம்...இது தான் திட்டம்..

VSK சொன்னது…

திரு. ஜமாலனிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு அருமையான பின்னூட்டம் வரவழைத்த இந்தப் பதிவு பாராட்டத்தக்கது!
அதற்காக என் நன்றி கோவியாரே!

கோவி.கண்ணன் சொன்னது…

// VSK said...
திரு. ஜமாலனிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு அருமையான பின்னூட்டம் வரவழைத்த இந்தப் பதிவு பாராட்டத்தக்கது!
அதற்காக என் நன்றி கோவியாரே!
//

விஎஸ்கே ஐயா,

ஜமாலன் போன்ற சில புதிய பதிவர்களின் வரவால் தான் எனக்கு பதிவுலகம் இன்னும் போரடிக்காமல் இருக்கிறது. எனது கருத்துக்களில் அவரது எழுத்துக்களை வைத்து சீர் செய்து கொள்கிறேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன். வியக்கவைக்கும் அவர் எழுத்துக்கு நான் வாசகன்.

TBCD சொன்னது…

வீஎஸ்கே ஐயா,

பதிவை ஆழமா படிச்சிட்டீங்கப் போல..

ஜமாலனின் இரண்டாவது பின்னுட்டம்..உங்களுக்குன்னே போட்டு இருக்கார் பாருங்க..

///

VSK said...

திரு. ஜமாலனிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு அருமையான பின்னூட்டம் வரவழைத்த இந்தப் பதிவு பாராட்டத்தக்கது!
அதற்காக என் நன்றி கோவியாரே!

///

குமரன் (Kumaran) சொன்னது…

கோவி.கண்ணன்.

இது தான் இங்கே விதியைப் (Rule) போல் நடக்கிறது என்று நீங்கள் கட்டமைத்திருந்தாலும் விதிவிலக்குகளாகவாவது (Exception) நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சில எடுத்துக்காட்டுகளை என் அவதானத்தின் மூலம் வைக்க முயல்கிறேன். பாருங்கள் ஏற்றுக் கொள்ள முடிகிறதா என்று.

பார்ப்பனர்கள் தமிழை எதிர்த்துக் கருத்து சொல்கிறார்கள் என்பது ஒரு நிலை - தமிழை எதிர்த்துக் கருத்து சொல்பவர்கள் எல்லாம் பார்ப்பனர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று ஊகிப்பதும் இங்கே நடக்கிறது. தான் எந்த சாதி என்று அடையாளம் காட்டிக் கொள்ளாதவர்களையும் அவர்கள் எழுத்தில் தங்களுக்கு ஏற்பு இல்லை என்பதால் அவர்களைப் பார்ப்பனர்களாக அடையாளம் காட்ட விழைவதையும் அப்படி அடையாளம் காட்டி அவர்களைத் தாக்கியதையும் நீங்களே பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சாதியைப் பற்றி அவர்கள் வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அவர்கள் வெளிப்படையாகச் சொல்லாத போதும் கூட கருத்துகளை மட்டுமே வைத்து பார்ப்பனரல்லாதவர்களையும் பார்ப்பனராக அடையாளம் கண்டு திட்டுவதும் நடக்கிறது என்று நான் சொல்ல வருகிறேன். அப்படி குருட்டுப் பூனை விட்டத்தில் பாயும் போது சில நேரங்களில் இதுவரை வெளிப்படுத்திக் கொள்ளாத பார்ப்பனரும் அதில் மாட்டிக் கொள்கிறார். நீங்கள் சொல்லும் கருத்தாக்கத்திற்கு அது வலு சேர்த்து விடுகிறது. இதுவும் ஒருவகை ஜோசியம் போல் தான் ஆகிவிட்டது. பலித்துவிட்டால் ஜோசியம் அருமை. பலிக்காவிட்டால் யாரும் கேட்கப் போவதில்லை. அது போல் பார்ப்பனர் என்று யாரையாவது அடையாளப் படுத்தும் போது அவர் பார்ப்பனராகவே இருந்துவிட்டால் உங்கள் கருத்தாக்கத்திற்கு வெற்றி. அப்படி அமையாவிட்டால் யாரும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடவேண்டியது தான்.

குமரன் (Kumaran) சொன்னது…

ஜமாலன். முன்பெல்லாம் நீங்கள் உடலும் நிலமும் பற்றி எங்காவது பேசும் போது எனக்குப் புரிந்ததில்லை; புரியும் என்றும் நினைத்ததில்லை. ஆனால் இங்கே இருக்கும் பின்னூட்டத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் இனிமேலும் தயங்காமல் தங்களின் மின்னூலைப் பெற ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறேன். நன்றிகள்.

Thamizhan சொன்னது…

ஒரு இனத்தை அழிக்க அவர்களுடைய மொழியை அழிக்க வேண்டும் என்பது வரலாறு.
ஆரியப் பார்ப்பனீயம் தங்களைவிட
நாகரீகத்தில் உயர்ந்திருந்த ஒரு இனத்தை அழிக்க முயன்ற,முயன்று வெற்றியும் பெற்று விட்டதுதான் பார்ப்பனரின் தமிழ் மொழி வெறுப்பு.
தமிழிலிருந்த ந்ல்லது அத்தனையையும்
திருடிக் கொண்டது மட்டுமன்றி,கதையையே மாற்றி தமிழே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்று தமிழர்களையே நம்ப வைத்தது எப்படிப் பட்ட நரித்தனம்.

ஒரு வெளி
நாட்டவர் கால்டுவெல் வந்து பார்த்துவிட்டுச் சொல்லும் வரை தமிழின் பெருமை தெரியாமல் தமிழர்கள் சிந்தனையே மாற்றப் பட்டு விட்டதே!

தமிழ் தமிழ் என்று பேசும் பார்ப்பனர்களிடம் இருக்கும் சமஸ்கிருத உயர்வு மனப்பான்மை எதைக் காண்பிக்கிறது?மநுவும்,வேதங்களும்,
உபநிடதங்களும் உண்மையான மொழி
பெயர்ப்புக்களுடன் வந்து கொண்டிருக்கின்றன.அப்போது தெரியும்
கீதையின் மறு பக்கம் போல
உண்மையும்,அரசனின் அலங்கார உடையா,அம்மணமா? என்பது.
தமிழை அழியாமல் தடுக்கவும்,தமிழ்
வளர்ச்சிக்கு உழைப் போரையும் தமிழ்
வெறியர்கள் என்று தமிழர்களையே
நம்ப வைப்பதுதான் இன்றைய
பார்ப்பனியத்தின் தமிழ் எதிர்ப்பு!

கோவி.கண்ணன் சொன்னது…

குமரன்,

பதிவு நீளம் கருதியே சிலவற்றை எழுதாமல் விட்டேன். காரணம் பதிவர்கள் சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொள்வார்கள் என்ற நினைப்பும் தான்.

பெரும்பாண்மை சிறுபாண்மை அரசியல் எல்லோருக்கும் தெரியும். கொள்ளைக் கூட்டத்தில் கொலை செய்பவனும் உண்டு, கொள்ளை அடிப்பதே போதும் என்று நினைப்பதும் உண்டு, கொள்ளைக் கூட்டதின் செயல் பாவமானது என்பதால் சிலர் கொள்ளைக் கூட்டதில் இருந்து விலகி மற்றவர்களைப் போலவே வாழ்வதும் உண்டு.

இங்கெ பார்பனரல்லோதோர் - பார்பனர் என்று பேசும் போது அத்தகைய அரசியல் செய்யாமல் இருப்பவர்கள் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை. முழுக்க முழுக்க அரசியல் செய்பவர்களைப் பற்றித்தான் சொல்லி இருக்கிறேன். அதில் அரசியல் செய்யாதவர்களும் அதே பொதுப் பெயர் தங்களுக்கும் சொந்தம் என்று கருதினால் பாவத்துக்கு பங்கு கேட்பது போன்றதுதான். நடுநிலையாளர் எவரும் அப்படி பங்கு கேட்கமாட்டார்கள்.

வாக்கு வேறுபாட்டில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சி அமைக்ககிறது, அந்த ஆட்சியின் கீழ் அவர்களுக்கு ஓட்டு போடாதவர்களும் அடக்கம்.
பொதுப்படையாக பேசுவது அவசியம் இல்லை என்று கருதினால் பொதுப்படையான ஒன்றில் தொடர்பு படுத்திக் கொள்வதும் தவறே.

உங்கள் மறுமொழிக்கு சரியான பதில் தானா என்று தெரியவில்லை. ஆனாலும் அதை ஒட்டியே இருக்கும் என நினைக்கிறேன்.

குற்றமுள்ளவர்களுக்கு குறுகுறுத்தால் போதும் என்பதாலேயே பொதுபெயரையே அதாவது பார்பனர் -பார்பனரல்லோதோர் என்று பொதுப்படையாக பலரும் பயன்படுத்துகிறார்கள். இந்த அரசியலில் விருப்பமில்லாதவர்கள் இதைப் பற்றி 'ஒட்டு மொத்தமாக' எல்லோரையும் செல்வதுதவறு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...
கோவி,

என்ன அடுத்தடுத்து குண்டு போடுறிங்க :-))

இதில் இன்னொரு காரணமும் இருக்குங்க, மற்றவர்கள் எல்லாம் பொது இடத்தில் இருந்தால்(அயல்நாட்டில் என்றே வைத்துக்கொள்ளுங்களேன்), தமிழன், ஊர்க்காரன், மாவட்டத்துக்காரன், என்றெல்லாம் அடுத்தவரை தம்முடன் சேர்த்துக்கொள்வார்கள், ஆனால் பார்ப்பனர்கள் மட்டும் முதலில் ஒரு பார்ப்பனருக்கே முன்னுரிமை தருவார், அவர் வேற்று ஊர்க்காரர், மொழிக்காரர், எதுவாக இருந்தாலும்.

மேலும் இயல்பிலேயே அவர்களுக்கு "அனைவரையும்" விட உயர்ந்தவர் என்ற எண்ணம் இருப்பதும், தமிழ் குறித்து எப்போதும் சிறப்பான அபிப்ராயம் இல்லாது இருப்பதும் வழக்கம்.

இப்படி எல்லாருக்கும் பொதுவான , எதிரான குணங்கள் கொண்டிருப்பதே மற்றவர்கள் ஓரணியாக செய்ய வைக்கிறது.
-----------------------------
ஜமாலன்,
எப்படிங்க இப்படிலாம்... எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான விளக்கம் தறிங்க! நீங்க எங்கியோ போய்ட்டிங்க! :-))(நல்லா இருக்குனு சொன்னேன்!)
//

வவ்வஸ்,

குற்றமாகவும் சொல்லவில்லை, குண்டும் போடவில்லை. உளவியல் அரசியல் ரீதியிலான கருத்துக்களைச் சொன்னேன்.

வெளிநாட்டில் பார்பனர்கள் மட்டும் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது. மலேசியாவில் தேவர் சாதி சங்கங்கள் இருக்கின்றன. சிங்கையில் செட்டியர்கள், தேவர்கள் சாதி குழுக்களாகத்தான் இருக்கிறார்கள்.
உறவின் முறை என்ற அளவில் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. அதைத் தவிர்த்து சாதிக் குழுக்களில் இங்கே நுண்ணிய அரசியல் இருப்பதாக தெரியவில்லை.

உயர்ந்த எண்ணம் மட்டுமல்ல, சற்று அறிவு அதிகம் என்றும் சில மேதாவிகள் சொல்லிக் கொண்டு தான் திரிகிறார்கள். அறிவும், நுட்பமும் குள்ளநரித்தனத்திற்கும், ஏமாற்றுவதற்கும் கூட தேவைப்படும் தான் என்று பதில் கூறினேன்.

நான்கு வருணங்களாக இருந்தை இருவருணாமாக சுருங்கியதிற்கு காரணமும் தேவையற்ற எதிர்ப்பை குழுவாக இருந்து கொண்டு தெரிவிப்பதால் 3 ஒன்றாகவும், ஒன்று தனியாகவும் தெரிகிறது. 3ம் ஒன்றாக மாறி இருக்கிறதா ? இல்லை கருத்தியல் ரீதியில் மட்டுமே, எதிர்பின் காரணமாக சேர்ந்து இருக்கிறது. எல்லாம் பார்பனர்களின் 'உயர்ந்த' என்ற சொல்லில் இருந்து எதிராக ஒன்றிணைந்தாது தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//
ஜமாலன் said...
பார்ப்பனர்களால் தமிழ் தாக்கப்படுவதற்கு மிக முக்கிய காரணம் 1. தமிழர்கள்தான் அவர்களது மேலாதிக்கத்தை கேள்வி கேட்டதுடன் எதிர்த்து செயல்படவும் செய்தனர். (குறிப்பாக பெரியார்) 2. தமிழ்மொழி அதாவது திராவிட மொழிக் குடும்பம் சமஸ்கிருத ......//

ஜமாலன்,

உங்கள் அளவுக்கு வாழ்வியல் அரசியல் நுட்பம் எனக்கு புரிந்தது இல்லை. நான் எழுதுவது அனைத்தும் கண்டும், கேட்டும், படித்ததையும் வைத்து எழுதுகிறேன். இந்த இடுகை எழுதும் போது உங்கள் உடல் அரசியல் பற்றிய கருத்தாங்கள் நினைவில் வந்து சென்றன.

நெடிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
தரமான பதிவு...ISO முத்திரைப் பதித்த பதிவு..

தமிழர்கள் படிக்க வேண்டியப் பதிவு..

இதைப் படித்து,

ஒரு காமன் மினிமம் திட்டம் போடனும் என்ற உணர வைக்கும் பதிவு..

திட்டம் என்னன்னு வேற தனியாச் சொல்லனும்மா..

புல்லுருவிகளிடமிருந்து தமிழர்களை காப்போம்...இது தான் திட்டம்..
//

TBCD ஐயா,

பினாங்கில் ISO முத்திரை விற்கிறார்களா ? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வீ. எம் said...
நல்ல கட்டுரை, ஏற்புடையது கோ வீ.

//பார்பனர்கள் கேட்டுக் கொண்டு அமைதியாகத்தானே இருக்கிறார்கள். பார்பனர் யாரும் யாரையும் சாதியைச் சொல்லி திட்டவில்லையே என்ற ஞாயமான கேள்வி //

இது மட்டும் உடன்பாடில்லை.. அவர்களுக் அமைதியாக இல்லை, யாரையும் சாதி சொல்லி திட்டாமலும் இல்லை, குறிப்பிட்ட சாதியை சொல்லாவிட்டாலும், ஒட்டு மொத்தமாக பார்பனரல்லாதோரை குறிப்பிட்டு அவர்களும் சரிக்கு சமமாக திட்டிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்.

வீ எம்
//

வீ. எம்,

சாதியைக் காட்டிக் கொண்டவர்களை பார்பனர்கள் அவர்களின் சாதியைச் சொல்லி திட்டுவதில் தவறு அல்ல.

ஆனால் திட்டும் போது
தாழ்த்தப்பட்டவர் என்ற ரீதியில் ஈனப்பிறவிகள், இழிபிறவிகள் என்று எவர் எந்த சாதியைத் குறித்தும் இழிவாக திட்டினாலும் பதிலுக்கு திட்டுவாங்கிய சாதியைச் சேர்ந்தவர் செருப்பால் அடிக்க முன்வர வேண்டும்.

சாதியைச் சொல்லி தூற்றுவதற்கு பார்பனர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு மிக குறைவே. அதனால் அதனை குறிப்பிடவில்லை.

G.Ragavan சொன்னது…

பதிவைப் படித்தேன். ஆனால் ஒன்று உண்மை. பொதுவில் பார்ப்பனர்கள் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் என்று பிரிப்பது எளிதாகிறது. இது பொதுவில். தமிழ் தாக்கப்படுகிறது..படாமை என்ற கருத்துக்குப் பிறகு வருவோம்.

ஏன் இந்தப் பிரிவினை எளிதாகிறது? அதுதான் சிந்திக்கப்பட வேண்டிய கருத்து. நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காவிட்டாலும்... பார்ப்பனர் அல்லாதவர்களுக்குப் பார்ப்பனர்கள் மீது ஒருவித வெறுப்புணர்ச்சி இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

ஒரு செட்டியார் நண்பன் இருந்தான். இப்பொழுது அவனோடு தொடர்பு இல்லை. படிக்கும் பொழுது அவன் வீட்டிற்குச் செல்கையில் முதலில் என்னைப் பார்ப்பனர் என்று நினைத்துக் கொண்டு தயக்கத்தோடு பழகினார்கள். ஆனால் இல்லை என்று நண்பன் சொன்னதும்...அவர்களின் பழக்கத்திலேயே ஒரு பெரிய மாற்றம் தெரிந்தது. அவர்கள் வீட்டிலேயே பலமுறை உண்டும் உறங்கியும் இருக்கிறேன். என்னிடம் அவர்கள் அதைச் சொன்ன பொழுது...ஏனப்படி? நான் பார்ப்பனராக இருந்திடக்கூடாது என்று விரும்பினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்..."அவர்களை நம்ப முடியாது" என்று கூறினார்கள். சாதீயக் கூற்றின் முதல் பார்ப்பனீயத் தாக்கத்தை நான் புரிந்து கொண்டது அன்றுதான்.

தனிப்பட்ட முறையில் என்னைவிட என்னுடைய சாதி முக்கியமானதல்ல. இதுதான் என் கருத்து.

ceylon Tamilan சொன்னது…

தமிழ் நாட்டுப் பார்ப்பணர்கள் ஏன் இலங்கைத் தமிழர்களை எதிரிகளாகப் பார்க்கின்றார்கள்?

இலங்கைத் தமிழன்

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//TBCD said...
என்ன சொல்லுறீங்க..

இப்ப எல்லாம்.நிறைய தமிழர்கள் (?!) ரெம்பிளேற் (அது தமிழாமே..) என்று எல்லாம்..எழுதுறாங்க...

தூய தமிழில் பதிவு எழுதுறேன்னு சொல்லுறாங்க..

அப்படி இருக்கிற சூழலில்..இப்படி ஒரு பதிவா..

அவ்வ்வ்வ்வ்வ்வ்

நடுநிலை வாந்தி ஆயிட்டேனா இல்லையா..

சொல்லிடுங்க..
//

டிபிசிடி ஐயா,

நீங்கள் கூட எதையாவது அபத்தமாக எழுதிவிட்டு, குறுகுறுப்பில் 'இந்த பதிவை சில அறிவு ஜீவிகள் அபத்தம் என்று சொல்வார்கள்' என 'ரெம்பிளேற்' போட்டுக் கொள்ளலாம். கருத்து சு'தந்திரம்'
:)

அப்படி செய்தால் 'அபத்தம்' என்று கருத்து சொல்ல வந்தவரை தடுத்து போல் ஆச்சு. அப்படியும் அதே போன்று கருத்து வந்தால், நான் தீர்க்க தரிசி முன்பே நினைத்தேன் என்று பதிவுலக சாமியாராகிவிடலாம்.

கருப்பு சொன்னது…

சமசுருகிருத மொழியினை தேவ பாசை என்று சொல்லும் பார்ப்பனர்களுக்கும், அவனது அடிவருடிகளுக்கும் தமிழ் புத்தாண்டைப் பற்றி அப்படி என்ன அக்கரை? அது சித்திரையில் நடந்தால் என்ன? தையில் நடந்தால் என்ன இல்லை மாசியில் நடந்தால்தான் என்ன?

நானும் தமிழன் என்று வாய்கூசாமல் பொய் சொல்லிவிட்டு தமிழைப் பழிக்கும் வந்தேறிக் கூட்டத்துக்கு சவுராஸ்டிர மற்றும் ஆசாரி நாய்கள் துணைபோவது இன்றைக்கு நேற்று ஒன்றும் புதிதல்ல. தமிழில் பாசுரங்கள் அத்தனை இருந்தும் இழிமொழியான தேவபாடையில் ஆண்டவனுக்கு மந்திரம் சொன்னால்தான் இனிக்கும் என்று புறம் பேசித்திரியும் பூனூல் போட்ட வெட்டிக் கூட்டத்துக்கு அடிவருடியே காலத்தைத் தள்ளியதுதானே இந்த இரண்டு சாதிகளும்!

தமிழ் வருடப் பிறப்பு எந்த மாதத்தில் தொடங்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டியது தமிழகத்தின் முதுகெலும்பான தூய தமிழரான திராவிடர்கள்தான்.

நல்லவேளையாக காஞ்சி காமகேடி ஊத்தைவாயன் சுப்பிரமணியை மைசூர் மஹாராஜாவுக்கு கள்ள உறவில் பிறந்த ஜெயலலிதா கைது செய்தார். அதனால்தான் இந்த பார்ப்பனர்களும் குரு மூர்த்தியும் சோமாறி சொட்டைப்பயலும் மற்ற பார்ப்பன அடிவருடிகளும் ஊத்தைவாயனுக்கு மட்டுமே சப்போர்ட் செய்தார்கள். மறந்து ஜெயலலிதாவை அவர்கள் எதிர்க்கத் துணியவில்லை.

இதையே கருணாநிதி செய்திருந்தால் அத்தனை பன்னாடைகளும் ஒருசேர களத்தில் குதித்து இருக்கும்!

ஆடுமாடு வெட்ட தடை என்று யாரையும் கலந்து ஆலோசிக்காமல் விட்டேத்தியாக ஆணை கொண்டு வந்த ஜெயாவினை வான் அளவுக்கு புகழ்ந்த பரதேசி பன்னாடைகள்தானே இவர்கள்?

ஆரியன் நாட்டுக்குள் கள்ளத்தனமாக ஊடுருவியபோதே அசைவம்தான் சாப்பிட்டான், கள்ளுண்டான், கஞ்சா அடித்தான் என்பதற்கு போதிய ஆதாரங்களை நான் எனது பதிவிலே எழுதி வைத்திருக்கிறேன்.

கருணாநிதிக்கு பதிலாக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து சித்திரைக்குப் பதிலாக மாசிதான் தமிழ் புத்தாண்டு என அறிவித்து இருந்தால் மகிழ்ந்திருக்குமோ இந்த ஆரிய அடிவருடிக் கூட்டங்கள்?

குமரன் (Kumaran) சொன்னது…

என்ன கோவி.கண்ணன். சொல்லி அனுப்பிச்சீங்களா? எப்படியோ உங்க கோபம் என் மேல தீர்ந்தா சரி தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
என்ன கோவி.கண்ணன். சொல்லி அனுப்பிச்சீங்களா? எப்படியோ உங்க கோபம் என் மேல தீர்ந்தா சரி தான்.
//

உங்க மேல் எனக்கு என்ன கோவம் ?
இங்கே உங்களைக் யாராவது குறிப்பிட்டீர்களா ? என் பதிவில் தனிமனித தாக்குதல் எதையும் அனுமதிப்பது இல்லை. இங்கு நான் எழுதி இருப்பதை வைத்து சாதி பிரதிநிதி போல் எவராக தன்னையே நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பு ஆக முடியுமா ?

உங்களைக் குறித்த பின்னூட்டம் எதுவென்று காட்டினால் நீக்குவேன். அதில் எனக்கு ஒன்றும் தயக்கமில்லை.

மற்ற உங்கள் ஊகங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பதாயின் அதாவது இருப்பது ஒன்று பிரச்சனை என்பது போல் நினைத்து அதற்கு காரணமாக அனுமானத்தில் 'நாம் நினைப்பது சரியாக இருக்கும்' என்று தன்னைப் பற்றிய கணிப்பைக் எண்ணி மகிழ்வார்களாம், அப்படி மகிழ்ந்தால் எனக்கும் மகிழ்ச்சியே.

ஒரு பதிவரைக் குறித்து வந்த தனிமனித தாக்குதலை நிறுத்து வைத்துள்ளேன். வெளி இடுவதாகவும் இல்லை, வேண்டுமென்றால் சொல்லுங்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

குமரன் (Kumaran) சொன்னது…

சிரிப்பு தான் வருகிறது கோவி.கண்ணன். நான் யாரைச் சொல்கிறேன், எந்த பின்னூட்டத்தைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது இல்லையா? ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் வெளியிட்ட பின்னூட்டங்களை அப்படியே வைத்திருங்கள். எனக்காக எதையும் அழிக்க வேண்டாம். நான் அழிக்கவும் சொல்லவில்லை. என் கற்பனைகள் என்னோடு போகட்டும். நீங்கள் நன்கு வாழுங்கள்.

தமிழ் நாய்கள் என்று திட்டினால் நீங்கள் எப்படி உணர்வீர்களோ தமிழ்நாட்டவனான நான் எப்படி உணர்வேனோ அதே போல் தான் என் தாய்மொழியை வைத்துத் திட்டினாலும் உணர்வேன் என்று உங்களுக்கு புரியவில்லை என்பதை நம்புகிறேன். மிக்க நன்றி. இது மிகப்பெரிய நன்றி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களை நான் எதிர்த்து கேள்வி கேட்டபோதெல்லாம் அவர் வருகிறார். அவரை நீங்கள் சொல்லி அனுப்பி வரவழைக்கிறீர்கள் என்று முன்பே நான் சொன்ன குற்றச்சாட்டே இப்போதும் மீண்டும் வைத்திருக்கிறேன். அதனை என் கற்பனை என்று நீங்கள் சொன்னால் அப்படியே இருக்கட்டும்.

குமரன் (Kumaran) சொன்னது…

நான் கற்பனை செய்து கொள்கிறேனா நீங்கள் கண்ணையும் சிந்தையையும் மூடிக்கொண்டீர்களா என்று நீங்கள் யாரைச் சொல்லி அனுப்பி பின்னூட்டம் இடவைத்தீர்களோ அவர் பதிவில் சென்று பாருங்கள். பெயர்களையும் போட்டிருக்கிறார். நல்ல நாடகம் ஐயா இது. வாழ்ந்து போங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
சிரிப்பு தான் வருகிறது கோவி.கண்ணன். நான் யாரைச் சொல்கிறேன், எந்த பின்னூட்டத்தைச் சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியவே தெரியாது இல்லையா? ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் வெளியிட்ட பின்னூட்டங்களை அப்படியே வைத்திருங்கள். எனக்காக எதையும் அழிக்க வேண்டாம். நான் அழிக்கவும் சொல்லவில்லை. என் கற்பனைகள் என்னோடு போகட்டும். நீங்கள் நன்கு வாழுங்கள்.

தமிழ் நாய்கள் என்று திட்டினால் நீங்கள் எப்படி உணர்வீர்களோ தமிழ்நாட்டவனான நான் எப்படி உணர்வேனோ அதே போல் தான் என் தாய்மொழியை வைத்துத் திட்டினாலும் உணர்வேன் என்று உங்களுக்கு புரியவில்லை என்பதை நம்புகிறேன். மிக்க நன்றி. இது மிகப்பெரிய நன்றி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

உங்களை நான் எதிர்த்து கேள்வி கேட்டபோதெல்லாம் அவர் வருகிறார். அவரை நீங்கள் சொல்லி அனுப்பி வரவழைக்கிறீர்கள் என்று முன்பே நான் சொன்ன குற்றச்சாட்டே இப்போதும் மீண்டும் வைத்திருக்கிறேன். அதனை என் கற்பனை என்று நீங்கள் சொன்னால் அப்படியே இருக்கட்டும்.

10:42 AM, January 28, 2008
//

தமிழ் நாய்கள் மட்டுமல்ல, தேவடியா பையன் என்று கூட என்னை பின்னூட்டத்தில் திட்டி இருக்கிறார்கள். வெளி இட்டுவிட்டு நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் நீக்கிக் கொண்டேன். வழக்கம் போல் என் மீது ஒரு கட்டமைப்பு முயற்சி செய்கிறீர்கள். எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை. என்னை தெரிந்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கு நான் எதுவும் விளக்கம் கொடுக்கத் தேவை இல்லை. நீங்கள் குறிப்பிடும் பின்னூட்டம் இன்னும் சில பதிவுகளில் கூட வந்திருக்கிறது. அங்கெல்லாம் என்னை யாரும் திட்டவில்லை.

உங்களுக்கு அவரை என் நண்பராக காட்டுவதில் என்ன இன்பமோ, அப்படியோ சொன்னாலும் அதற்கெல்லாம் நான் கவலைப்படப் போவதில்லை. உங்களுக்கு அவருடைய மின் அஞ்சல் தெரியும் அவரிடமே விளக்கம் கேட்கலாமே ?

என் நண்பர்களின் எழுத்துக்களை கட்டுப்படுத்த முடியும், வழிநடத்த முடியும் என்று நம்பினால் அதில் உங்கள் எழுத்துக்கள் கூட அடக்கமாக இருக்க முடியும். அப்படி எதுவுமில்லை. அவரவர் கருத்தை அவரவர் தெரிவிக்கின்றனர்.

தேவை இல்லாமல் என்னை உங்களின் விரோதி போன்று கற்பனை செய்து கொண்டு என்னுடன் தொடர்ந்து உறையாடுவது உங்களுக்கு மன உளைச்சலையே தரும்.

வேண்டாமே.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
நான் கற்பனை செய்து கொள்கிறேனா நீங்கள் கண்ணையும் சிந்தையையும் மூடிக்கொண்டீர்களா என்று நீங்கள் யாரைச் சொல்லி அனுப்பி பின்னூட்டம் இடவைத்தீர்களோ அவர் பதிவில் சென்று பாருங்கள். பெயர்களையும் போட்டிருக்கிறார். நல்ல நாடகம் ஐயா இது. வாழ்ந்து போங்கள்.
//

குமரன்,

இந்த அநாகரீகத்தை நிறுத்துங்கள், எந்த மயிரானோ உங்களுக்கு பின்னூட்டம் போட்டான் என்றால் அதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது. எனக்கு வேறு வேலையே இல்லையா ? உங்களை யார் யார் நோண்டுகிறார்கள் என்று கணக்கெடுப்பது தான் எனக்கு வேலையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
சமசுருகிருத மொழியினை தேவ பாசை என்று சொல்லும் பார்ப்பனர்களுக்கும், அவனது அடிவருடிகளுக்கும் தமிழ் புத்தாண்டைப் பற்றி அப்படி என்ன அக்கரை? அது சித்திரையில் நடந்தால் என்ன? தையில் நடந்தால் என்ன இல்லை மாசியில் நடந்தால்தான் என்ன?

நானும் தமிழன் என்று வாய்கூசாமல் பொய் சொல்லிவிட்டு தமிழைப் பழிக்கும் வந்தேறிக் கூட்டத்துக்கு சவுராஸ்டிர மற்றும் ஆசாரி நாய்கள் துணைபோவது இன்றைக்கு நேற்று ஒன்றும் புதிதல்ல.
//

கருப்பு சார்,

சாதியைக் குறித்த குற்றச் சாட்டு என்பதாலேயே உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்தேன். அதில் ஒருவர் சாதியை மொழியாக புரிந்து கொண்டு என்மீது பாய்கிறார் என்பதை அவர் பின்னூட்டத்தில் இருந்து தெரிகிறது.
********

இது மற்றவர்களுக்கு,

ஆசாரியை எப்படி நாய் என்று சொல்லலாம் ?
அனுமதித்தற்காக,
பதிவுலகில் எழுதுவர்களில் ஆசாரி எவனும் இல்லையா ? ஆசாரிக்கு சாதி பற்று இல்லையா ?

வந்து கும்முங்கைய்யா.

bala சொன்னது…

//பார்ப்பனர்களால், தமிழ் ஏன் தாக்கப்படுகிறது?//

பார்ப்ப்பனர்களால் தாமிழ் தாக்கப்படுகிறது என்ற அபத்தமான குற்றசாட்டை வைத்து பம்மத்து பண்ணும் கோ.மு.கண்ணன் அய்யா,

முதலில் நீங்கள் சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்,பிறகு உங்கள் அசட்டு குற்றசாட்டுக்களுக்கு பதில் தானாகவே விளங்கும்.
1)தங்களை திராவிடர்கள் என்று வர்ணித்துக் கொல்ளும் சிலர்(உங்களைப் போன்றவர்கள்) ஏன் எப்பொழுதும் திராவிடன்,ஆரியன்,வடக்கு,தெற்கு என்று பிரிவினை செய்து,ஒருமித்த இந்தியா என்ற கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள்?
2)இந்த கும்பல் மட்டும் ஏன் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று எப்பொழுதும் ஜாதி வெறி பிடித்து அலைகிறார்கள்?
3)தமிழ்நாட்டில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் இவர்கள் ஏன் எப்பொழுதும் தங்களை ஒடுக்கப்பட்டவர்கள் என்று பாசாங்கு ஒப்பாறி செய்கிறார்கள்?
4) ஏதோ இவர்கள் தான் தமிழுக்கு சேவை செய்வதாகவும்,இவர்களால் தான் தமிழ் கப்பாற்றப்பட்டு வருவதாகவும் ஏன் பம்மாத்து பண்ணுகிறார்கள்?(மருத்துவர் அய்யா கூட அவர் ஒருவரால் தான் இந்த காரியம் நடைபெறுவதாக கூவுகிறார்).
5) இவர்கள் ஏன் கேவலமான தீவிரவாதிகளாக விளங்குகிறார்கள்?(வெறுப்பு என்னூம் பால் குடித்து வளர்க்கப் பட்டதாலா?)

பாலா

Unknown சொன்னது…

குழலி அவர்களின் "ஆண்ட சாதி.."" பதிவை இந்த பின்புலத்தில் வாசிக்கலாம்/ அல்லது மறுவாசிப்பு செய்யலாம்..

Unknown சொன்னது…

குழலி அவர்களின் "ஆண்ட சாதி.."" பதிவை இந்த பின்புலத்தில் வாசிக்கலாம்/ அல்லது மறுவாசிப்பு செய்யலாம்..

http://kuzhali.blogspot.com/2007/07/blog-post_16.html

bala சொன்னது…

ஜனவரி 1 தான் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் தினம்னு அறிவிச்சிருந்தா சிறப்பாக இருந்திருக்குமே?அதை விட்டு விட்டு தை தைன்னு குதிக்கணுமா?

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said... பார்ப்ப்பனர்களால் தாமிழ் தாக்கப்படுகிறது என்ற அபத்தமான குற்றசாட்டை வைத்து பம்மத்து பண்ணும் கோ.மு.கண்ணன் அய்யா,//

ஜயராமன் சார்.

நாடறிந்த பார்பனியத்துக்கு நான் விளக்கம் கொடுப்பதால் முழுசா தெரிந்துவிடப் போகிறது என்று நம்புகிறீரா ?
//முதலில் நீங்கள் சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்,பிறகு உங்கள் அசட்டு குற்றசாட்டுக்களுக்கு பதில் தானாகவே விளங்கும்./
1)தங்களை திராவிடர்கள் என்று வர்ணித்துக் கொல்ளும் சிலர்(உங்களைப் போன்றவர்கள்) ஏன் எப்பொழுதும் திராவிடன்,ஆரியன்,வடக்கு,தெற்கு என்று பிரிவினை செய்து,ஒருமித்த இந்தியா என்ற கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கிறார்கள்?//

என்னப்பு ஒன்னும் தெரியாதது மாதிரி பீலா உடுறீர் ? ஆரியம் திராவிடம் எல்லாம் வடமொழி இதிகாச பிரிவினைகளில் இருந்தே தெரிந்து கொண்டார்கள். கால்டு வெல் 'ஐயரை' நொந்து கொள்ளுவீராக.

//2)இந்த கும்பல் மட்டும் ஏன் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று எப்பொழுதும் ஜாதி வெறி பிடித்து அலைகிறார்கள்?//

அப்படியா ? எந்த சாதிக்காரன் அப்படி சொல்லிக் கொள்கிறான். சொல்லுங்கண்ணா.

//3)தமிழ்நாட்டில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் இவர்கள் ஏன் எப்பொழுதும் தங்களை ஒடுக்கப்பட்டவர்கள் என்று பாசாங்கு ஒப்பாறி செய்கிறார்கள்?//

நீங்கள் பார்பனர்களை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆளும் 'சக்திகள்' ஆதிக்க சக்தியாக இருந்தது வாஸ்தம் தான்.

//4) ஏதோ இவர்கள் தான் தமிழுக்கு சேவை செய்வதாகவும்,இவர்களால் தான் தமிழ் கப்பாற்றப்பட்டு வருவதாகவும் ஏன் பம்மாத்து பண்ணுகிறார்கள்?(மருத்துவர் அய்யா கூட அவர் ஒருவரால் தான் இந்த காரியம் நடைபெறுவதாக கூவுகிறார்).//

வாங்கைய்யா, பாரதி போன்ற புலவர்களையும் பார்பன சங்கத் தளபதி ஆக்கிக் கொண்டு தமிழ் சேவை செய்கிறர்வர்கள் பார்பனர் தவிர்த்து யாருமே இல்லை. வெறும் உள்ளே வெளியே போராட்டதில் நம்பிக்கை இல்லாமல் சாமி எதைப் பேசினாலும் புரிஞ்சிக்கும், சாமிக்கு தமிழ் என்ன சமசுகிருதம் என்ன என்ற பம்மாத்து அடிக்கறவர்கள் பற்றிதானே சொல்கிறீர்கள். வெல் செட்.

///
5) இவர்கள் ஏன் கேவலமான தீவிரவாதிகளாக விளங்குகிறார்கள்?(வெறுப்பு என்னூம் பால் குடித்து வளர்க்கப் பட்டதாலா?)//

திராவிடர்கள் ? அதெல்லாம் தீட்டு இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாக ஸ்வாக செய்யப்படுக்கிறது. இவை எல்லாம் மாறவேண்டும் என்று மனப்பால் வேண்டுமானால் குடிபார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
ஜனவரி 1 தான் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் தினம்னு அறிவிச்சிருந்தா சிறப்பாக இருந்திருக்குமே?அதை விட்டு விட்டு தை தைன்னு குதிக்கணுமா?

பாலா
//

ஜயராமன் சார்,

ஏப்ரல் 14 ஐ தமிழ்நாடு முட்டாள்கள் தினமாக அறிவிக்கவும் கோரிக்கை வைத்து, தீக்குளிங்க ஐயா, நான் வேண்டுமானாம் சீமை எண்ணை 5 லிட்டர் ஸ்பான்சர் பண்ணுகிறேன்.
:)

bala சொன்னது…

//நான் வேண்டுமானாம் சீமை எண்ணை 5 லிட்டர் ஸ்பான்சர் பண்ணுகிறேன்//

கோவி.மு.கண்ணன் அய்யா,

அடப்பாவி ,வீட்டுக்கு வந்தா காஃபி தருவதாக சொல்லிவிட்டு இப்போ மண்னெண்ணை ஊத்துவீங்கன்னு மிரட்டறீங்களே?நியாயமா?

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்களை நான் எதிர்த்து கேள்வி கேட்டபோதெல்லாம் அவர் வருகிறார். அவரை நீங்கள் சொல்லி அனுப்பி வரவழைக்கிறீர்கள் என்று முன்பே நான் சொன்ன குற்றச்சாட்டே இப்போதும் மீண்டும் வைத்திருக்கிறேன். அதனை என் கற்பனை என்று நீங்கள் சொன்னால் அப்படியே இருக்கட்டும்.//


மிஸ்டர் குமரன்,

இவ்வளவு கேவலமான கற்பனையை வைத்துக் கொண்டு என்னுடன் தொடர்ந்து பேசுவதற்கு உங்களுக்கு கூச்சமாகவே இருந்திருக்க வில்லையா ?

எனக்கு என்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, அவர்களை கண்கானித்து என்னைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து வந்து கவனிக்கும் படி ஏவி விடுகிறானா ?

எந்த மடையன் அவ்வாறு சொன்னான் ?

சுத்த பேத்தலாக இருக்கிறது, என்னை எதிர்த்து என்ன எழுதினீர்கள் ? அதற்கு நான் உங்களை எதிர்த்து கேள்வி கேட்கத் தெரியாதவனா ? நான் கோழையா ? என்னைய்யா உளறுகிறீர் ?

நான் என்ன அடியாள் வைத்து இருக்கிறேனா ?
என்ன கொடுமைடா சாமி, இவரை எவனோ கேள்வி கேட்பானாம், அதையும் நான் தான் அனுப்பினேன் என்பாராம் ? கேட்பவர்கள் எல்லோரும் காதுல பூ வைத்து இருக்கிறார்களா ?

உங்களுக்கு ஓவ்வாத கருத்துக்களை எழுதுகிறேன் என்பதற்காக என் மீது சேறு வாரி இறைக்கும் முயற்சி. தாராளமாக செய்யலாம், இது கூகுள் பக்கம் நான் ஒன்றும் என் பதிவு என்று பட்டா போட்டு வைத்துக் கொண்டு இருக்கவில்லை. தனிமனித தாக்குதல் இல்லாத கருத்துக்களை வெளி இடுகிறேன்.

உங்களைத்தான் குறிப்பிட்டார் என்பது அவர் பதிவில் சென்று படிக்கும் முன்பே உங்களுக்கு எப்படி தெரியும்.
அதையும் எல்லோருக்கும் தெரிந்துகொள்ளட்டும் என்று இங்கு குறிப்பிட்டு சென்றுவிட்டு என்னிடம் குதிப்பதற்கு என்ன இருக்கிறது ?
நீங்கள் சொல்லித்தான் அவர் பதிவில் அப்படி இருப்பது தெரியும்.

உங்கள் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் ஊடலா ? கூடலா ? ஒரு எழவும் எனக்கு தெரியாது. இந்த சண்டையை தூக்கிக் கொண்டு என்னிடம் வருவதற்கு அவசியம் என்ன ? உங்களுக்கு எவனாவது சொறிந்துவிட்டால் பதிலுக்கு நீங்கள் போய் அவனுக்கு சொறிந்துவிடுங்கள், அரிப்புகளை தீர்த்துக் கொள்ள அதுதான் சரியான வழி. இங்கு தேவையில்லாமல் என்னை புண்ணாக்க வேண்டாம்.

இங்கு பதிவில் மதுரையைச் சேர்ந்த மற்ற பதிவர்களும் இருக்கிறார்களே ? அவர்களுக்கெல்லாம் இங்கே வந்து என்னை கேவலப்படுத்திவிட்டார்கள் எம்பி குதிப்பது போன்று தெரியவில்லையே.

உங்களுக்கு இதைவைத்து என்மீது நடவடிக்கை எடுக்க இந்த முறை எந்த வாய்ப்பும் இல்லை என்பதை நினைத்து நீங்கள் வருந்துவீர்களோ என்று நானும் வருந்துகிறேன். கற்பனைகள் உங்களுக்கு மட்டும் சொந்தமல்ல நண்பரே. இப்படியும் இருக்கலாம் என்று நான் நினைப்பது கூட தவறாக இருக்க முடியாது அல்லவா ?

அருண்மொழி சொன்னது…

கோவியாரே,

//அவர்கள் அதற்கு வைக்கும் வாதங்களில் கருத்து என்று ஒன்று உண்டென்றால் அது வழிவழி வருவதை மாற்றக் கூடாது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை//

"வழிவழியாக வந்தது" என்று எப்படி இதற்கு மட்டும் பொருந்தும் என்பது புரியவில்லை. பாப்பான் கடல் கடந்து செல்ல கூடாது என்பது கூட வழிவழியாக வந்ததுதான். எல்லா பாப்பானும் அதை ஏற்றுக்கொண்டா இருக்கின்றார்கள். அவாளுக்கு இரட்டை நாக்கு என்று தெரியாமலா சொல்லி இருக்கின்றனர்.

குமரன் (Kumaran) சொன்னது…

//அதில் ஒருவர் சாதியை மொழியாக புரிந்து கொண்டு என்மீது பாய்கிறார்//

கோவி.கண்ணன். இனி மேலாவது புரிந்து கொள்ளுங்கள். சௌராஷ்ட்ரம் என்பது தமிழைப் போல் ஒரு மொழி தான். நான் பல முறை என் பதிவிலும் மற்றவர் பதிவில் பின்னூட்டங்களிலும் சொல்லியிருக்கிறேன். நீங்கள் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று அது சாதியைத் திட்டியது என்று வெளியிட்டதாகச் சொல்கிறீர்கள். அது புரிதல் தவறு என்று விட்டுவிடலாம் தான். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு 'சித்திரையா தையா தமிழ் புத்தாண்டு தொடங்குவது என்று' என்ற தலைப்பில் இடுகை இட்ட சௌராஷ்ட்ர மொழி பேசுபவன் நான் மட்டும் தானே. இது உங்களுக்குத் தெரியாததா என்ன? விடாது கருப்பு
இங்கே திட்டியது சாதியை இல்லை; என்னைத் தான் என்பதும் அப்போது உங்களுக்குப் புரிந்திருக்காதா?

//
இவ்வளவு கேவலமான கற்பனையை வைத்துக் கொண்டு என்னுடன் தொடர்ந்து பேசுவதற்கு உங்களுக்கு கூச்சமாகவே இருந்திருக்க வில்லையா ? //

முன்பே இந்தக் குற்றச்சாட்டை நான் வைத்தேன். அப்போது பலமாக மறுத்தீர்கள். நானும் நம்பினேன். அதனால் நேற்றும் உங்களை நண்பர் என்று கூறிக் கொள்ள கூச்சமில்லாமல் இருந்தது. ஆனால் நீங்கள் என்னைத் தான் விடாது கருப்பு திட்டினார் என்று புரிவதற்கு வாய்ப்புகள் எத்தனையோ இருந்த போதிலும் அதனை வெளியிட்டதைப் பார்த்த பின் பழைய குற்றச்சாட்டு மீண்டும் வந்தது. அது கற்பனை என்று நீங்கள் சொல்கிறீர்கள். நானும் நம்புகிறேன். ஆனால் சப்பை கட்டு கட்டுவது எதற்காக?

//எனக்கு என்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, அவர்களை கண்கானித்து என்னைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து வந்து கவனிக்கும் படி ஏவி விடுகிறானா ?

எந்த மடையன் அவ்வாறு சொன்னான் ?

சுத்த பேத்தலாக இருக்கிறது, என்னை எதிர்த்து என்ன எழுதினீர்கள் ? அதற்கு நான் உங்களை எதிர்த்து கேள்வி கேட்கத் தெரியாதவனா ? நான் கோழையா ? என்னைய்யா உளறுகிறீர் ?

நான் என்ன அடியாள் வைத்து இருக்கிறேனா ?
என்ன கொடுமைடா சாமி, இவரை எவனோ கேள்வி கேட்பானாம், அதையும் நான் தான் அனுப்பினேன் என்பாராம் ? கேட்பவர்கள் எல்லோரும் காதுல பூ வைத்து இருக்கிறார்களா ?
//

இதெல்லாம் நான் செய்தது உளரல் என்று நிறுவுவதாகவே இருக்கட்டும். அதனைத் தான் விரும்புகிறேன்.

//உங்களைத்தான் குறிப்பிட்டார் என்பது அவர் பதிவில் சென்று படிக்கும் முன்பே உங்களுக்கு எப்படி தெரியும்.//

இது உங்களுக்கும் அவர் பதிவைப் பார்ப்பதற்கு முன்பே புரிந்திருக்கும் என்று நினைத்தேன். தெரியும்; தெரிந்தே அந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டீர்கள் என்று தான் இப்போதும் நினைக்கிறேன்.

//இந்த சண்டையை தூக்கிக் கொண்டு என்னிடம் வருவதற்கு அவசியம் என்ன ?//

அவர் யாரோடு தான் தொடர்போடு சண்டை இட்டார். உங்கள் பதிவில் வந்து அய்யா போட்டு பேசும் பாலாவைப் போல் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இந்த விடாது கருப்பு கூடத் தான் எல்லோரையும் திட்டிக் கொண்டிருக்கிறார் / கொண்டிருந்தார். அப்படி என்றால் அவரிடம் எல்லோரும் கூடல் ஊடல் கொண்டிருந்தார்கள் என்று பொருளா? அவர் என்னைக் குத்திக் குதறிக் கொண்டிருப்பதனை இங்கே கொண்டு வந்ததற்குக் காரணம் என்னைத் திட்டுகிறார் என்று நன்கு தெரிந்தும் மொழிச் சிறுபான்மையினரைக் கேவலமாகப் பேசும் அந்தப் பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட்டது தான்.

இனி மேல் இந்த உரையாடல் வேண்டாம் என்று நினைக்கிறேன். இந்த இடுகையில் இதுவே நாமிருவருக்கும் இதனைப் பற்றிய உரையாடலாக இருக்கட்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி.கண்ணன். இனி மேலாவது புரிந்து கொள்ளுங்கள். சௌராஷ்ட்ரம் என்பது தமிழைப் போல் ஒரு மொழி தான். நான் பல முறை என் பதிவிலும் மற்றவர் பதிவில் பின்னூட்டங்களிலும் சொல்லியிருக்கிறேன். நீங்கள் கட்டாயம் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று அது சாதியைத் திட்டியது என்று வெளியிட்டதாகச் சொல்கிறீர்கள். அது புரிதல் தவறு என்று விட்டுவிடலாம் தான். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு 'சித்திரையா தையா தமிழ் புத்தாண்டு தொடங்குவது என்று' என்ற தலைப்பில் இடுகை இட்ட சௌராஷ்ட்ர மொழி பேசுபவன் நான் மட்டும் தானே. இது உங்களுக்குத் தெரியாததா என்ன? விடாது கருப்பு
இங்கே திட்டியது சாதியை இல்லை; என்னைத் தான் என்பதும் அப்போது உங்களுக்குப் புரிந்திருக்காதா?
//

மிஸ்டர் குமரன்,

அவருடைய பின்னூட்டத்தை வெளியிட்டவுடன், அவருக்கு நான் மறுமொழி பின்னூட்டம் போடுவதற்குள், 'என்னைத்தான்' சொல்கிறார் என்று நீங்களும் அவரும் பேசி வைத்துக் கொண்டு சொல்வது போல் சொல்லிவிட்டு என் மீது பாய்வதில் பொருளே இல்லை, நான் வெளி இடாவிட்டாலும் எங்காவது அவர் போட்டு இருப்பார் என்றே நினைக்கிறேன். என் பதிவில் அவருக்கு தகுந்த மறுமொழி என்னால் சொல்லி இருக்க முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவர் உங்களைச் சொன்னதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தை உங்களின் விருப்பமாகவே எடுத்துக் கொண்டேன்.
பின்னூட்டம் வெளியான அடுத்த நிமிடத்தில் பாயத் தெரிந்த உங்களுக்கு அதை தனி மின் அஞ்சலில் குறிப்பிட்டு நீக்கச் சொல்லி இருந்தால் குறிப்பிட்ட பின்னூட்டத்தை நீக்கி இருப்பேன். என் மீது பாய்வதற்கான சந்தர்பம் என்று நீங்கள் வரும் போது அதை உங்களுக்கு கொடுப்பதால் எனக்கு ஒன்றும் குறையில்லை. எதிர்பார்த்ததை நிறைவேற்றி வைத்த திருப்தி தான்.

//
முன்பே இந்தக் குற்றச்சாட்டை நான் வைத்தேன். அப்போது பலமாக மறுத்தீர்கள். நானும் நம்பினேன். அதனால் நேற்றும் உங்களை நண்பர் என்று கூறிக் கொள்ள கூச்சமில்லாமல் இருந்தது. ஆனால் நீங்கள் என்னைத் தான் விடாது கருப்பு திட்டினார் என்று புரிவதற்கு வாய்ப்புகள் எத்தனையோ இருந்த போதிலும் அதனை வெளியிட்டதைப் பார்த்த பின் பழைய குற்றச்சாட்டு மீண்டும் வந்தது. அது கற்பனை என்று நீங்கள் சொல்கிறீர்கள். நானும் நம்புகிறேன். ஆனால் சப்பை கட்டு கட்டுவது எதற்காக? //


முன்பே இதே விட உறைக்கும் படியே பதில் சொல்லி இருக்க முடியும். ஒன்று குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக அள்ளி தெளிப்பீர்கள், என்பதால் விட்டுவிட்டேன் பழகினால் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைத்தேன். ஆனால் அவ்வாறொல்லாம் இல்லை கருத்தை மாற்றிக் கொண்டு இருப்பீர்க்க்ள் என்று நினைத்தது என் தவறோ ? பழைய கணக்கை தீர்பதற்காக அதே குற்றச் சாட்டைக் கொண்டு வரும் போது, இந்த முறை ஏமாற்றவேண்டாம், தாராளமாக கத்திவிட்டூ போகட்டும் என்றே விட்டுவிட்டேன். பாவம் நீங்களும் தான் எத்தனை முறை முயற்சி எடுப்பீர்கள் ? சப்பை கட்டு ? எதற்கு சப்பை கட்ட வேண்டும் ?

**********************
நான் கற்பனை செய்து கொள்கிறேனா நீங்கள் கண்ணையும் சிந்தையையும் மூடிக்கொண்டீர்களா என்று நீங்கள் யாரைச் சொல்லி அனுப்பி பின்னூட்டம் இடவைத்தீர்களோ அவர் பதிவில் சென்று பாருங்கள். பெயர்களையும் போட்டிருக்கிறார். நல்ல நாடகம் ஐயா இது. வாழ்ந்து போங்கள்.

*******************
நான் சொல்லி அழைத்து அதனால் அவர் வந்து போட்டத்தாக குற்றச் சாட்டை வைத்துவிட்டு நான் எதோ சப்பைக் கட்டுகட்டுவதாக சொன்னால் சரியாக இருக்குமா ? உங்களுக்கு நான் ஏன் பயப்பட வேண்டும் ? உண்மை என்றால் ஆம் என்று சொல்லிவிடப் போகிறேன். உங்களை சீண்டுவது தான் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போன்று அனுமானத்தில் நான் சொல்லித் தான் அவர் செய்ததாக 'என் மீதான மாபெரும் நம்பிக்கையில்' சொல்லி இருப்பதால், ஒரு வேளை நானே சொல்லாவிட்டாலும், சப்பைக் கட்டத்தேவையே இல்லை. ஆம் நான் தான் போடச் சொன்னேன் என்று சொல்லி இருக்கலாம் போல் தெரிகிறது. எதற்காக சப்பைக் கட்டை கேவலப்படுத்தவேண்டும். அது இயலாதவர்களால் செய்யக் கூடியது. நல்ல நாடகம் எல்லாம் எனக்கு போடத்தெரியாது அதற்கெல்லாம் பக்தி மானாக இருக்க வேண்டும். கெட்ட நாடகம் என்று சொல்லுங்கள்.


//
இதெல்லாம் நான் செய்தது உளரல் என்று நிறுவுவதாகவே இருக்கட்டும். அதனைத் தான் விரும்புகிறேன். //

உங்களின் நீண்ட நாள் ஆசையை இன்று நிறைவேற்றிவிட்டேன்.

//இது உங்களுக்கும் அவர் பதிவைப் பார்ப்பதற்கு முன்பே புரிந்திருக்கும் என்று நினைத்தேன். தெரியும்; தெரிந்தே அந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டீர்கள் என்று தான் இப்போதும் நினைக்கிறேன். //

நான் திரும்பவும் சொல்கிறேன், மொழிகுறித்தான புரிதலில் அதை இடவில்லை. சாதியைக் குறிப்பிட்டுள்ளதால் பரவாயில்லை என்றே நினைத்தேன். உங்களுக்கும் சாதி வெறி இருப்பது போல், நீங்களாக வந்து ஒப்புக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும் ? பதிவுலகில் சவுராஷ்டிராக்கெளெல்லம் வெளிப்படுத்திக் கொண்டு கோஷ்டியாகத்தான் இருக்கிறார்களா ? நான் அவ்வாறு கருதவில்லை. எவருக்கும் சுடாத போது உங்களுக்கு மட்டும் ஏன் ? இங்கு பார்பனர்கள் பற்றிய கருத்தியல் பார்வையும் உள்ளது, எவருமே அதைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத போது, சவுராஷ்டிரர்களை குறித்து சொன்னதற்கும், அவர்களுக்கெல்லாம் நீங்கள் தான் வலையுலக தலைவர் போல் வந்து குதிப்பது ஏன் ? நீங்கள் அவ்வாறு இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. உங்களுக்கு சவுராஷ்டிரர் குறித்து பின்னூட்டம் வெளியிட்டது பிடிக்கவில்லை என்று தனி மடலில் அனுப்பி இருந்தால் கூட நீக்கி இருப்பேன்.

//
அவர் யாரோடு தான் தொடர்போடு சண்டை இட்டார். உங்கள் பதிவில் வந்து அய்யா போட்டு பேசும் பாலாவைப் போல் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் இந்த விடாது கருப்பு கூடத் தான் எல்லோரையும் திட்டிக் கொண்டிருக்கிறார் / கொண்டிருந்தார். அப்படி என்றால் அவரிடம் எல்லோரும் கூடல் ஊடல் கொண்டிருந்தார்கள் என்று பொருளா? அவர் என்னைக் குத்திக் குதறிக் கொண்டிருப்பதனை இங்கே கொண்டு வந்ததற்குக் காரணம் என்னைத் திட்டுகிறார் என்று நன்கு தெரிந்தும் மொழிச் சிறுபான்மையினரைக் கேவலமாகப் பேசும் அந்தப் பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட்டது தான். //

மொழி சிறுபாண்மை பெரும்பாண்மை பட்சாதாப அரசியலெல்லாம் எதற்கு இங்கே பேசுகிறீர்கள், நீங்கள் வேண்டுமானால் எதாவது சாதியை திட்டி பின்னூட்டம் போடுங்கள், தாராளமாக வெளி இடுவேன். இதே பதிவில் தேவர்கள் , வன்னியர்கள், தாழ்த்தப்பட்டோர், பார்பனர், ஆசாரியார் என்று எல்லோரை பற்றியும் இருக்கிறது, எவருக்கும் வராத கோவம் உங்களுக்கு மட்டும் வருவதேன் ? சாதிவெறியை எல்லோருமே கேவலமாகத்தான் பேசுகிறார்கள், அதற்கு முன்பு சாதியை குறிப்பிடுவதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.

//இனி மேல் இந்த உரையாடல் வேண்டாம் என்று நினைக்கிறேன். இந்த இடுகையில் இதுவே நாமிருவருக்கும் இதனைப் பற்றிய உரையாடலாக இருக்கட்டும். //

அவ்வளவு சீக்கிரம் முடித்துக் கொள்வீர்களா ? ஒரு நாளைந்து பதிவவாவது போடுங்கள், வந்து பின்னூட்டமும் போட்டு செல்கிறேன். அங்கே எனது நடுநிலை வேசத்தை உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு குற்றச்சாட்டாக வைத்து 'அம்பலப்' படுத்தலாம். எவ்வளவு நாளைக்குத்தான் நானும் நடுநிலைவாதி மாதிரி நடிக்க முடியும், இன்று வி.க வை அழைந்து வந்தேன், நாளைக்கு வெறொருவரை அனுப்புவேன், அவரும் எனது மிரட்டலுக்கு பணியா விட்டால், அதன் பிறகு நானே போலி புரொபைல் தயார் செய்து உங்களை வந்து சீண்டிச் செல்லனும். இதையெல்லாம் தவர்க்க ஒரே வழி, என் பெயரில் நாளைந்து இடுகைகளைப் போட்டு வேசத்தை, முகமூடியை கழட்டிவிட்டுடுங்க. பலர் பயன் பெறுவார்கள்.

நல்லது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண்மொழி said...
கோவியாரே,

"வழிவழியாக வந்தது" என்று எப்படி இதற்கு மட்டும் பொருந்தும் என்பது புரியவில்லை. பாப்பான் கடல் கடந்து செல்ல கூடாது என்பது கூட வழிவழியாக வந்ததுதான். எல்லா பாப்பானும் அதை ஏற்றுக்கொண்டா இருக்கின்றார்கள். அவாளுக்கு இரட்டை நாக்கு என்று தெரியாமலா சொல்லி இருக்கின்றனர்.
//

அருண் மொழி ஐயா,

வழிவழியாகவும் அதே வழியாகவும் எல்லோருக்கும் வருவது, ஏற்றுக் கொள்ளக் கூடியது, மாற்றமுடியாதது என்று ஒன்று உண்டென்றால் அது மலமும் அது வரும் வழியும் தான். மத்ததெல்லாம் சுயநலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மாறிக் கொண்டுதான் இருக்கிறது.

bala சொன்னது…

//அது மலமும் அது வரும் வழியும் தான்//
கோவி.மு.கண்ணன் அய்யா,

பொதுவா நீங்க சொல்வது சரி தான் என்றாலும்,விதி விலக்கு என்று ஒன்று உண்டல்லவா?உதாரணம் கோவி.மு.கண்னன் அய்யா அவர்களையே எடுத்துக்கொள்ளலாம்.உங்களுக்கு மலம் மேல் வழியாக அல்லவா வருகிறது.வெறுப்பு,கொழுப்பு,கடுப்பு,உளறல்,மற்றும் பொய் கலக்கப்பட்டு வரும் உங்கள் பேச்சுக்களையும்,எழுத்தையும் பார்த்தாலே அந்த உண்மை புலப்படுகிறதே.ஆண்டவனின் படைப்பில் இந்த மாதிரி விசித்திரமான பிறவியும் வரும் என்று நொந்து கொள்வதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்?

பாலா

PS.

என்ன ரொம்ப நாளா உங்க தீவிரவாத மலேஷிய ஜல்லிக்கள்,ஜெகதீசனையும்,பாரி.அரசு அய்யாவையும் காணோம்?நான் ரொம்ப விசாரித்ததாக சொல்லுங்கள் அய்யா.

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
//அது மலமும் அது வரும் வழியும் தான்//
கோவி.மு.கண்ணன் அய்யா,

பொதுவா நீங்க சொல்வது சரி தான் என்றாலும்,விதி விலக்கு என்று ஒன்று உண்டல்லவா?உதாரணம் கோவி.மு.கண்னன் அய்யா அவர்களையே எடுத்துக்கொள்ளலாம்.உங்களுக்கு மலம் மேல் வழியாக அல்லவா வருகிறது.வெறுப்பு,கொழுப்பு,கடுப்பு,உளறல்,மற்றும் பொய் கலக்கப்பட்டு வரும் உங்கள் பேச்சுக்களையும்,எழுத்தையும் பார்த்தாலே அந்த உண்மை புலப்படுகிறதே.ஆண்டவனின் படைப்பில் இந்த மாதிரி விசித்திரமான பிறவியும் வரும் என்று நொந்து கொள்வதைத் தவிர நாம் வேறு என்ன செய்ய முடியும்?

பாலா

PS.

என்ன ரொம்ப நாளா உங்க தீவிரவாத மலேஷிய ஜல்லிக்கள்,ஜெகதீசனையும்,பாரி.அரசு அய்யாவையும் காணோம்?நான் ரொம்ப விசாரித்ததாக சொல்லுங்கள் அய்யா.

11:23 AM, January 29, 2008
Post a Comment
//

ஜயராமன் சார், காலையில் கக்கூஸ் எடுக்கிற வேலை செய்கிறீரோ, சரியாக வந்து சொல்றேள். பாரி அரசும் ஜெகதீசனும் அவாளே கழுவிண்டாராம், வேறு ?
யாராவது ஆயோடு வந்து ஆள் தேடினால் உங்க பேரைச் சொல்லி அனுப்பிகிறேன். பார்த்து நன்னா செய்து கொடுங்கோ.
டெல்லிக்கு போனால் பொதுக்கழிப்பிடம் குத்தக்கைக்கு எடுக்கலாமாம், உங்க ஆளுங்க நிறைய பேர் இருக்கார்களாம், பேச்சு துணைக்காச்சு. சென்றுவிட்டால் இங்கே நாங்களாவது நிம்மதியாக 'இரு'ப்போம்.
:)

நோக்கு ஒடம்பில் கொழுப்பு அதிகமாகவும் உப்பு குறைவாக இருக்கு ஐயரே,
உங்காத்து மாமி இன்னும் உப்பு போட்ட காஃபியை நோக்கு கொடுக்கலையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//இசை said...
குழலி அவர்களின் "ஆண்ட சாதி.."" பதிவை இந்த பின்புலத்தில் வாசிக்கலாம்/ அல்லது மறுவாசிப்பு செய்யலாம்..

http://kuzhali.blogspot.com/2007/07/blog-post_16.html
//

இசை,

நீங்கள் குறிப்பிட்ட நண்பர் குழலியின் பதிவை பார்த்தேன். அதில் ஆண்ட சாதிகள் என்று பெருமை பேசுபவர்கள் எவரும் இதுவரை ஆண்டதே இல்லை. குறிப்பாக பார்பனரின் ஆதிக்கத்தீன் கீழ் தமிழகம் வந்தது இல்லை என்று எழுதி இருக்கிறார்.

ஆதிக்கம் செலுத்தாவிட்டாலும் கோவில் போன்றவற்றில் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்து அவர்களுக்கான அரணாக அமைத்துக் கொண்டது பார்பனர்களுக்கே உரிய குழு ஒற்றுமைக்கான அவர்களின் வெற்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
பதிவைப் படித்தேன். ஆனால் ஒன்று உண்மை. பொதுவில் பார்ப்பனர்கள் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் என்று பிரிப்பது எளிதாகிறது. இது பொதுவில். தமிழ் தாக்கப்படுகிறது..படாமை என்ற கருத்துக்குப் பிறகு வருவோம்.

ஏன் இந்தப் பிரிவினை எளிதாகிறது? அதுதான் சிந்திக்கப்பட வேண்டிய கருத்து. நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காவிட்டாலும்... பார்ப்பனர் அல்லாதவர்களுக்குப் பார்ப்பனர்கள் மீது ஒருவித வெறுப்புணர்ச்சி இருக்கிறது என்றே நினைக்கிறேன்.

ஒரு செட்டியார் நண்பன் இருந்தான். இப்பொழுது அவனோடு தொடர்பு இல்லை. படிக்கும் பொழுது அவன் வீட்டிற்குச் செல்கையில் முதலில் என்னைப் பார்ப்பனர் என்று நினைத்துக் கொண்டு தயக்கத்தோடு பழகினார்கள். ஆனால் இல்லை என்று நண்பன் சொன்னதும்...அவர்களின் பழக்கத்திலேயே ஒரு பெரிய மாற்றம் தெரிந்தது. அவர்கள் வீட்டிலேயே பலமுறை உண்டும் உறங்கியும் இருக்கிறேன். என்னிடம் அவர்கள் அதைச் சொன்ன பொழுது...ஏனப்படி? நான் பார்ப்பனராக இருந்திடக்கூடாது என்று விரும்பினீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள்..."அவர்களை நம்ப முடியாது" என்று கூறினார்கள். சாதீயக் கூற்றின் முதல் பார்ப்பனீயத் தாக்கத்தை நான் புரிந்து கொண்டது அன்றுதான்.

தனிப்பட்ட முறையில் என்னைவிட என்னுடைய சாதி முக்கியமானதல்ல. இதுதான் என் கருத்து.
//

ஜிரா,

வெறுப்புணர்ச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் பார்பனர்களிடம் இதுபற்றி கேட்டால் காழ்புணர்ச்சி என்றே 'உயர்ந்த' மனப்பான்மையில் சொல்லுவார்கள்.

எனக்கு சிறுவயதில் பார்பனர்கள் குழுமனப்பான்மை பற்றி எதுவும் தெரியாது. பின்னாளில் வேலைக்குச் சென்ற போதுதான் அப்படி ஒரு 'தனி'ப்பட்ட சமுகமாக அவர்கள் வாழ்வது புரிந்தது. வெகு சில நெருங்கிய நண்பர்கள் பார்பனர்களாக இருக்கிறார்கள். எனக்கு பார்பனர் சாதியைச் சேர்ந்த எந்த தனிப்பட்ட மனிதர் மீதும் வெறுப்பு இல்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்