tag:blogger.com,1999:blog-102672672024-03-14T22:30:20.980+08:00காலம்எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger1492125tag:blogger.com,1999:blog-10267267.post-1275861049386606762023-05-01T12:22:00.000+08:002023-05-01T12:22:04.641+08:00நித்தி என்பது வெறும் சாமியார் அல்ல<p>சாமியார் என்றால் ஏதோ காவியோ கோமணமோ கட்டிய பஞ்ச பரதேசி என்று மக்களுக்கு காலம் காலமாக திணித்திருந்த எண்ணத்தை உடைத்தவர் யார் ?</p><p>பட்டும் பீதாம்பரமும் தங்க மகுடமும் அரசர்க்கும் பெரும் செல்வந்தர்களுக்கே உடையது என்ற மாயையை உடைத்தது யார் ?</p><p>சாமியார் என்றாலே சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு ஆன்மீக உபதேசம் செய்பவர் என்ற பிற்போக்கு எண்ணத்தை உடைத்து பெண்கள் புடை சூழ ‘கல கல’ சிரிப்பில் கூத்தும் கும்பாளமாகவும் சத்சங்கம் நடத்த முடியும் என்று செய்து காட்டியது யார் ?</p><p>யார் ? யார் ? யார் ? சாமியார்களின் சாமியார் ராஜ ரிஷி நம்ம நித்யானந்த பரமஹம்சர் தான் அந்த பெருமைக்குறிய மஹான்</p><p>நேத்திக்கு சொல்வதெல்லாம் உண்மையில் குந்தி இருந்து இன்னிக்கு சொல்வதெல்லாம் அருள் வாக்கு என்று உருமாறி இருக்கும் அன்ன பூரணி அரசு அம்மா தங்க மகுடம் சூட்டி ஆத்தாவாக அவதரித்துள்ளது என்றால், ‘வெத போட்டது யாரு ?’</p><p>நம்ம பரமஹம்சர் தான். </p><p>ஓம் நித்யானந்த பரமசிவம். A trendsetter, ஒரு புரட்சியாளர்</p><p><br /></p><p>- கோவி <img src="blob:https://www.blogger.com/043fb3c0-2d53-43e7-911f-9c81f94f6cb4" /><img src="blob:https://www.blogger.com/99eb3fb1-40fc-4226-9c7f-df5da68eb062" /></p>கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10267267.post-18546451376360979732023-04-23T13:30:00.002+08:002023-04-23T13:30:19.723+08:00 Legend - யாரை வைத்து செய்துள்ளது ?<p>சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடித்த அந்த படத்தை ஓடிடியில் வெளியான நிலையிலும் பார்க்க விரும்பியதில்லை.</p><p>நம்மைப் போல் எளிய மனிதனாக வயதானவன் நடித்த ஒரு படத்தை பார்க்க நமக்கு என்ன மனத்தடை ? மனதளவில் ஏன் ஏற்க முடியவில்லை, அது வெறும் ‘இவனெல்லாம் நடிக்க வந்துட்டான்’ என்ற பொறாமை உணர்வு தானா ? என்று யோசித்துப் பார்த்தேன்.</p><p>சிவகார்த்திகேயன் நடிக்க வந்த பிறகு கூட பலர் ‘இவனெல்லாம் பெரிய திரைக்கு வந்துட்டான், இவனெல்லாம் ஹீரோவாக ஆகனும்னு தமிழ் சினிமா தலையெழத்து இருக்கு’ என்று பலர் குமைந்தனர்</p><p>சிவகார்த்திகேயன் நடிக்க வந்து அவர் தன்னை வளர்த்துக் கொண்டு நிற்கும் இன்றைய நிலைக்கும் சரவணா ஸ்டோர் அதிபர் நடிக்க வந்ததும் ஒன்றா ? கண்டிப்பாக இல்லை.</p><p>ஒரு நடிகனாக அந்த துறையில் நுழைவது வாரிசு நடிகர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு எளிதன்று, சிறு சிறு வேடங்கள் நடித்து பல இயக்குனர்கள் அறிமுகம் கிடைத்து, தனக்கு கிடைத்த சிறு வேடங்களிலும் தனித்துவம் காட்டி, பின்னர் நாயகனாக நடிக்கும் தகுதி வாய்ந்தவன் என்ற நம்பிக்கையை இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்படுத்தி வாய்ப்புக் கிடைத்த முதல் படத்தில் முத்திரை படைத்து அடுத்த அடுத்த படங்களில் வெற்றியை தக்க வைக்க தேர்ந்தெடுத்த படங்களை நடித்து மக்கள் மத்தியில் மற்றொரு கதை நாயகனாக மனதில் நிற்க வைக்க ஒரு நடிகனுக்கு அந்த துறையில் குறைந்த பட்சமாக பத்தாண்டு உழைப்புத் தேவைப்படுகிறது, சிவ கார்த்திகேயன் மற்றும் விஜய சேதுபதி இவ்வாறு தான் வளர்ந்து தனக்கான இடத்தை பிடித்தனர், அதன் பின்னரே 50 கோடிகளுக்கு மேல் செலவு பிடிக்கும் பெரிய பட்ஜட் படங்களில் அவர்களால் நடிக்கவே முடிந்தது.</p><p>ஒரு மனிதன் கடுமையாக உழைத்து ஒரு துறையில் தனக்கான இடத்தை அடையும் பத்தாண்டு கால உழைப்பையும் அலட்சியப்படுத்தி அந்த இடத்தை பணம் படைத்தவன் அடைய முடியும் என்று நினைப்பதே பணத் திமிர் என்று மட்டுமே சொல்ல முடியும், பெரும்பாலும் பணத்தில் உச்சமடைந்த என்ன செலவு செய்யலாம் என்ற நிலையில் பெரும்பாலான இந்திய பணக்கார ஆசை நடிகைகளுடன் ஒருமுறை படுக்க அவர்களை சம்மதிக்க வைக்க பெரிய விலை கொடுப்பது, அதைத் தாண்டி யோசித்துள்ளார் அண்ணாச்சி. நாமே பெரிய பட்ஜெட் படம் எடுத்து நாயகனாக நடித்தால் என்ன ? இந்த பணக் கொழுப்பு தனக்குத் தானே படம் எடுத்து எளிய மக்கள் வைத்துக் கொள்ளும் ஒருநாள் திருமண கட்அவுட் போல அவரும் அவரைச் சார்ந்தோரும் பார்க்க எடுத்துக் கொண்டால் நமக்கு அதில் எந்த விமர்சனமும் இல்லை, திரை சார்ந்த திரைப்பட சந்தையில் எந்த நம்பிக்கையில் தரமற்ற ஒரு பொருளை தயாரித்து நடித்து அதை ஐந்து மொழிகளில் வெளியிட்டது ஏற்கனவே அந்த துறையில் உள்ளவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்தும் செயலாகத் தான் நான் பார்த்தேன்</p><p>எப்படி நினைத்துப் பார்த்தாலும் இதை பணத்திமிர் என்பது தாண்டி ஞாயப்படுத்த எந்த சிறு துரும்பு கூட படத்திலோ செயலிலோ உள்ளது என்று யாராலும் கூற இயலுமா ?</p><p>ஒரு பணக்காரன் தன் பணத்தினால் ஒரு கலைஞன் அடையும் உயரத்திற்கு விலைவைத்திருப்பது ஒட்டுமொத்த கலைத்துறையையும் கேவலப்படுத்தும் செயல்</p><p>பணத்தினால் எல்லாம் செய்ய முடியும் என்றால் இது போன்ற அசிங்கத்தையும் தான் செய்ய முடியும் என்றே இதைப் பார்க்கிறேன்</p><p>போட்டி நிறைந்த கல்லூரிகளில் பணத்தை கொடுத்து சீட் வாங்ஙி அதை வீணடித்துவிட்டு “படிப்பெல்லாம் என் பணத்துக்கு முன் மயிர்” என்று மார்த்தட்டுவது போன்ற பணத்திமிராகத் தான் இதைப் பார்க்கிறேன். பணத்தினால் கல்வித் தகுதியையும் கலையையும் கேவலப்படுத்துவதை பணத்திமிர் என்று தான் சொல்ல முடியும்</p><p><img src="blob:https://www.blogger.com/4e3308fb-5554-4972-b8f4-cd36846044e1" /></p><p><br /></p><p><br /></p><p>பணத்தின் பக்க விளைவுகள் பெருங்கொடுமை</p>கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10267267.post-53525069869503178462022-08-17T11:09:00.001+08:002022-08-17T11:09:48.223+08:00FeTNA வாங்கிய குட்டு<p></p><p>FeTNA எனப்படும் வட அமெரிக்க தமிழ் சங்கம் பல ஆண்டுகளாக செயல்படுகிறது, இந்த அமைப்பு அங்குள்ள தமிழர்களுடன் இணக்கமாக இருக்கவும் தாய் தமிழ்நாட்டுடன் தொடர்பை காக்கவும் உருவாக்கப்பட்டது, தொண்டு நிறுவனமாகவும் செயல்படுகிறது, அங்கு நடைபெறும் ஆண்டுவிழாக்களில் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு தமிழறிஞர்களை, திறனாளர்களை அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் பயணத்திற்கான அவர்களது முழுச் செலவையும் ஏற்று, அழைத்து பேச வைப்பது, நிகழ்ச்சி படைப்பது வழக்கம். இது அங்கு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும், இணைய தளமும் செயல்படுகிறது.</p><p>அங்கு புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் கல்வெட்டு என்கிற பலூன் மாமா என்ற நண்பர் அண்மையில் அந்த இணைய தளத்தை பார்வையிட்ட போது அதிர்ச்சி அடைந்தார். நண்பர் முற்போக்கானவர், தமிழ் அறிவியல் என்ற பெயரில் அந்த அமைப்பு வெளியிட்ட நூல் இணைய பக்கத்தில் இருக்க, அதைப் படித்தும் மிகுந்த கவலைக்குள்ளானார். </p><p>வாட்சப் பார்வேர்டுகளாக வரும் இந்து புராணக் கதைகளை அறிவியலுடன் தொடர்புபடுத்தும் கற்பனையாக எழுத்தப்பட்டவை தமிழ் அறிவியல் என்ற பெயரில் புத்தகமாக்கி வெளியிட்டுள்ளனர். இதனை படிக்கும் அங்குள்ள இளையர்களுக்கு எந்த ஒரு ஆய்வும், அறிவியில் அமைப்புகளில் சான்றிதழோ பெற்றிருக்காத வெறும் கற்பனையாக எழுதப்பட்ட இந்த சோடிப்புகள் இளையோர் மூளையை மழுங்கடிக்கவோ செய்யும். அதை விரும்பியவர்கள் படிக்கட்டுமே உங்களுக்கென்ன ? என்று கேட்டால், ‘இந்து அறிவியல்’ என்ற பெயரில் எதையாவது கடை விரித்தால் யாரும் கேட்கப் போவதில்லை, ஆனால் ‘தமிழ் அறிவியல்’ என்ற பெயரில் இந்து புராணக் கதைகளுக்கு அறிவியல் முலாம் பூசி கடைவிரிப்பது கண்டனத்துக்கு உரியதே. இதே போல நாங்களும் தமிழர்கள் தமிழில் மொழியில் எழுதப்பட்ட சீறாப் புராணத்திலும் (இஸ்லாமிய நூல்), தேம்பாவனியிலும் (கிறித்துவ நூல்) அறிவியல் உள்ளது, அதையும் ‘தமிழ் அறிவியல்’ என்றே கருத வேண்டும் என்று கூறினால், அந்த நூலை எழுதியவர்கள் ஏற்பார்களா ? தமிழமைப்புகள் மதச் சார்பு அற்ற அமைப்புகள் அதில் கள்ளத் தனமாக ஒரு மதம் சார்நத நம்பிக்கையை நுழைப்பது ஏற்கத் தக்கதல்ல.</p><p>நண்பர் கல்வெட்டு அதை கவனத்திற்கு கொண்டுவர, நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் அந்த அமைப்புத் தலைமைகளில் ஒருவரான பாலா சுவாமிநாதனைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க, அந்த நூலை இணையத் தளத்தில் இருந்து உடனடியாக நீக்க நடவெடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். </p><p><br /></p><p>தாய்த் தமிழ் ஒன்று, தமிழர்கள் பின்பற்றும் மதங்கள் வேறு வேறு. இந்த புரிதல் இல்லாமல் தமிழுடன் மதம் சார்ந்த (சொந்த) வாட்சப் குப்பையை தமிழ் மீது கொட்டுவது கண்டிக்கத் தக்கதே. விரைந்து செயல்பட்டோருக்கு பாராட்டுகள்</p><p><br /></p><p><img src="blob:https://www.blogger.com/fdac326c-c095-441d-a3a2-2609d29bc179" /></p><p><br /></p><p><img src="blob:https://www.blogger.com/8fbb2b8d-dcf6-4440-80e3-207ecd648a99" /></p>கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10267267.post-79201161757904145202020-10-12T12:54:00.003+08:002020-10-12T12:54:27.293+08:00Test<p> Tesr</p>கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-10267267.post-64307698299036157632017-07-07T23:24:00.003+08:002017-07-07T23:30:35.440+08:00பதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;">நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்போதும் நம்மை துறத்திக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு சிலரை விரைவாக பிடித்துவிடுகிறது, ஒரு சிலருடன் பல ஆண்டுகள் பின் தொடர்கிறது, பலருடன் நடந்தே சென்று ஒரு நாள் கை கொடுத்து அணைத்துக் கொள்கிறது. மரணத்திற்கு பிடிக்காதவர்கள் எவரும் இல்லை, அதற்கு எவ்வளவு நம்மை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதைப் பொருத்து நம் வாழ்நாள், இந்த ஓட்டத்தினூடாகத் தான் நாம் பல்வேறு உணர்ச்சிகள், குற்ற உணர்ச்சிகளோடு, ஆணவம், எல்லாவற்றையும் சுமந்து கொண்டு ஓடுகிறோம், நம்மோடு சேர்ந்து அவைகளும் மறைந்து போகின்றன, பின்னர் வேறு பலரின் நினைவுக்குள் மட்டும் அவர்கள் இருக்கும் வரை வாழ்வோம், அதுவும் நமக்கு தெரியாத ஒரு வாழ்க்கை, நம்மால் உணரமுடியாத வாழ்க்கை.</span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;">*****</span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><a href="http://imsaiilavarasan.blogspot.com/">பித்தனின் வாக்கு என்ற பெயரில் பதிவு எழுதும் சுதாகர்</a> சிங்கையில் இருந்து அவற்றை எழுதினார், பதிவர் சந்திகளில் நேரடி அறிமுகம் கிடைத்தது, அவரது சமூகம் சார்ந்த கருத்துகளில் எனக்கு ஏற்பு இல்லை என்றாலும், நகைச்சுவை பதிவுகள், துணுக்குகள், சமையல் பற்றி அவர் எழுதியவை சுவையானவை. நேரில் பழகுவதற்கும் இனியவர், சிங்கையில் ஈராண்டுகள் (2008-2010) பணிபுரிந்தார், பின்னர் சென்னைக்கு திரும்பி கல்பாக்கத்தில் தங்கி, நாள் தோறும் பைக் பயணமாக சென்னையில் வேலை பார்த்து வந்தார், நான் சென்னை வரும் போது அழைத்துப் பேசுவார், எப்போதும் முக நூலில் தொடர்பில் இருப்பார், </span></span><span style="background-color: transparent; font-size: 14px;"><span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;">உடன் பிறந்த உறவுகள் தவிர்த்து அவருக்கு தனிக்குடும்பம் இல்லை. ஒண்டிக்கட்டைத்தான் </span></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNV0oUHynG0fVS4lYPIomoXzR7ZvuhrMFligtiW50LoHL1skLnk47AZNRHwzm55mUk4pMw6Wk07EPv5RVbg6PVtAnT33Re-L_MRLCf9OtDPv0z64C0DvXJ50g2Oa2evu2OXqso/s1600/sudha2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="484" data-original-width="484" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNV0oUHynG0fVS4lYPIomoXzR7ZvuhrMFligtiW50LoHL1skLnk47AZNRHwzm55mUk4pMw6Wk07EPv5RVbg6PVtAnT33Re-L_MRLCf9OtDPv0z64C0DvXJ50g2Oa2evu2OXqso/s320/sudha2.jpg" width="320" /></a></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;">3 மாதம் முன்பு பணித் தொடர்பில் சிங்கை வந்திருந்தார், தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன், இரண்டு நாட்கள் இருந்தார், முதல் நாள் மாலையும் அடுத்த நாள் மாலையும் சந்தித்துப் பேசினேன், ஒத்தையாளாக இருக்கிங்க சேமிப்பு கையிருப்பு வைத்துக் கொள்ளுங்கள், முடிந்தால் சொந்தமாக சிறிய வீடு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன், கொஞ்சம் சேமிப்பு இருக்கு ஆனா வீடு வாங்கும் அளவுக்கு இல்லை, முயற்சிக்கிறேன் என்றார்.</span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;">நாள் தோறும் கல்பாக்கத்தில் இருந்து 40 நிமிட பைக் பயணம் செய்து வேலை செய்கிறேன் என்றார், இந்த வயதில் 40 நிமிட பயணம் நல்லது அல்ல, முடிஞ்ச அளவு சென்னையில் தங்கி வேலை பார்க்கலாமே என்றேன், தனிமையில் இருப்பதைவிட அண்ணன் வீட்டில் வசிப்பது மன நிறைவாக உள்ளது, அண்ணன் மகளுடன் பொழுது போகிறது என்றார்</span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;">புறப்பட்ட நாளில் விமான நிலையத்திற்கு டாக்சி பிடித்து அனுப்பினேன் போகும் போது மொபைலை தவறவிட்டுச் சென்றார், ஒருவழியாக டாக்சி ஓட்டுனரை தொடர்ப்பு கொண்டு திரும்ப போனைப் பெற்று அடுத்து சிங்கை வந்த வேறு நண்பர் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைத்தேன், பெற்று கொண்டு நன்றி தெரிவித்தார் </span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;">அவர் சிங்கையில் இருந்து போன பிறகு ஒருமுறையாவது திரும்ப வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்ததை நிறைவேற்றிக் கொண்டது போல் தெரிகிறது கடந்த அந்த இருநாள் பயணம், சிங்கையில் முன்பு பார்த்து, பார்க்க விரும்பிய கோயில்களை பார்த்து , சாப்பிட விரும்பிய உணவு கடைகளில் சாப்பிட்டு வந்ததாக சொன்னார் வேறு/மாறுபட்ட கருத்துகள் எனக்கும் அவருக்கும் இருந்தாலும் ஒரு வயது தான் வேறுபாடு என்றாலும் என்னை மரியாதையுடன் அழைத்து பேசுவார் </span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span>
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px;">நேற்று (06/ஜூலை/2017)அவரது உறவினர் அவர் மறைவு குறித்து முகநூலில் பகிர்ந்தது என் பார்வைக்கு டைம்லைனில் வந்தது, மாரடைப்பில் உயிர் பிரிந்ததாக குறிப்பிட்டு இருந்தனர், மேற்கொண்டு தகவல்கள் எதுவும் இல்லை</span></span><br />
<span style="color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif;"><span style="color: #1d2129; font-family: helvetica, arial, sans-serif; font-size: 14px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;">அவர் தற்போது இல்லை என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது. பதிவுலகம் மூலமாக அவரை அறிந்தவர்கள் தொடர்பு கொண்டவர்களுக்கு தகவலாக இதனை இங்கு பதித்துள்ளேன்</span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px; text-align: justify;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;"><br /></span></span></div>
<div style="background-color: white; margin-bottom: 6px; margin-top: 6px;">
<span style="color: #1d2129; font-family: "helvetica" , "arial" , sans-serif;"><span style="font-size: 14px;">நண்பரின் ஆன்மா அமைதியடையட்டும்</span></span></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx0pgAc8RFdxX8lsCnM-eDkg2tju5JBe2X7j3qXdv3ObSR4fB7wRgNuSsOHbLFS0gd_2OzyH_3uDn6LtI-EOuGXoLl_9NZCumNrywYppg0jwOK7efjgr8NB14MMTBLXOZQ2R4w/s1600/sudhakar.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="960" data-original-width="720" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgx0pgAc8RFdxX8lsCnM-eDkg2tju5JBe2X7j3qXdv3ObSR4fB7wRgNuSsOHbLFS0gd_2OzyH_3uDn6LtI-EOuGXoLl_9NZCumNrywYppg0jwOK7efjgr8NB14MMTBLXOZQ2R4w/s640/sudhakar.jpg" width="480" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">மார்ச் 2017ல் சிங்கை வந்திருந்த போது எடுத்தப்படம்</td></tr>
</tbody></table>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
<br /></div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-10267267.post-37696133629219238522016-10-22T00:16:00.000+08:002016-10-23T00:10:01.973+08:00மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் பற்றி !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பொதுவாக பாலியல் என்றாலே நம் சமுகம் முகம் சுளிப்பதால், உடல் உறுப்புகள் நூறு விழுக்காடு சரியுள்ளவர்களாலும் முழுதாக புரிந்து கொள்ள இயலாதவை பாலியல் தேவை, அவைபற்றி பருவ வயது ஆண்களுக்கு சொல்லித் தரத்தேவையில்லை, பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியதே இல்லை என்பதே நமது சமூக நிலைப்பாடு, மாற்றுத்திறனாளிகளை மன அளவில் ஏனையோரைப் போல் தான் நடத்தவேண்டும் என்பதையே நாம் கற்றுக் கொண்டு அவர்களுக்காகக்கான தேவைகளை அமைத்துதருவது தான் அவர்களுக்கு செய்யவேண்டியவை என்று புரிந்து கொள்ளவே நமக்கு இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆகுமோ ?<br />
<br />
ஆனால் மாற்றுத்திறனாளுக்கும் பாலுறவு வேட்கை உண்டு, அவற்றைப்பற்றிய தெளிந்த அறிவு, அவைகளுக்கான வடிகால் ஏற்படுத்தித்தருவது, அதற்கான பயிற்சிவகுப்புகள் (Sexuality for Disabilities) என்று ஐரோப்பியர்கள் எங்கேயோ சென்றுவிட்டார்கள், இன்னும் நாம் 'உன்னால முடியாத ஒன்றிற்கு ஆசைபடுவதே தவறு, விதி, முன்பிறவி வினை' என்றெல்லாம் கூறிக் கொண்டு அதற்கான சிந்தனைகளையே மறுக்கிறோம், நம்மைப் பொறுத்த அளவில் மாற்றுத்திறனாளியை விரும்பி மணம் செய்து கொள்பவர்களை தியாகி என்ற அளவில் உயர்த்தி வைப்பதுடன் மாற்றுத்திறனாளிகள் குறித்த சிந்தனையை வளர்க்க விரும்பவே மாட்டோம், எனது கல்லூரிக்கால நண்பர் ஒருவர், இளம்பிள்ளை வாதத்தில் கால்களில் ஒன்றில் திறனும் போதிய வளர்ச்சியும் இல்லாமல் வளர்ந்தவர், திருமணம் ஆகும் முன் 26 வயதில் அவரிடம் பேசும் போது 'எனக்கெல்லாம் எங்கேருந்து திருமணம் ? யாராவது உறவுக்காரர்கள் மனது வைத்து பெண் கொடுத்தால் உண்டு, அதற்கு நல்ல வேலையில் இருந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும்...' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார், பின்னர் அவருடைய உறவுக்காரர்கள் பெண் கொடுத்து அவருக்கு நல்ல உடல் நலத்துடன் ஆண்குழந்தை பிறந்து வளர்ந்துவருகிறது.<br />
<br />
எதற்காக அவரைப்பற்றிக் குறிப்பிடுகிறேன் என்றால், யாராவது மனது வைத்தால் என்ற அளவில் தான் உடல்குறையுற்றோரின் குடும்ப வாழ்கையும் பாலியல் தேவைக்கான தீர்வும் கிடைக்கும், அனைவருக்கும் உடலில் இரத்தம் ஓடுவது போன்றே அவர்களுக்கும் பாலியல் தேவைகள், வேட்கைகள் இருக்கும், தயக்கங்கள் காரணமாக பெற்றோர்களால் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில் அவர்களுக்கான அமைப்புகள் ஏற்பட்டால், அதன் மூலம் பாலியல் வேட்கையை தனித்துக் கொள்வது (தன்னின்ப வழி) அல்லது கட்டுபடுத்திக் கொள்வதற்கான பயிற்சி, உடலை வருத்திக் கொள்ளாமல் எளிய முறையில் எந்த கோணத்தில் (Positions) அவர்களுடைய வாழ்கை துணையுடன் உறவில் ஈடுபடலாம் என்பற்கான விளக்கங்கள் அல்லது செயற்கை பாலியல்கருவிகள் பற்றி அறிதல் , கூச்சத்தை ஒழித்து குறிப்பாக நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் அவர்களை அதுபோன்ற அமைப்புகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் தான் அவர்கள் ஏனையோரைப் போல் மனத்தடை இன்றி வாழமுடியும்.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4o3kEf7e8FsgUKK3KExUMvvSVgg9xyZ5b7SZLUlTVFIbT_VE_PfQkQdj_xnxPpCjOxMHwdGF3-IDdaZspzLTZDVh4vFHHgMw4wtTqw3RelSoRFp-kBdK1oyXXtuBSVUyFJIF3/s1600/fv7lqo435e3377wjsnym.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="180" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4o3kEf7e8FsgUKK3KExUMvvSVgg9xyZ5b7SZLUlTVFIbT_VE_PfQkQdj_xnxPpCjOxMHwdGF3-IDdaZspzLTZDVh4vFHHgMw4wtTqw3RelSoRFp-kBdK1oyXXtuBSVUyFJIF3/s400/fv7lqo435e3377wjsnym.jpg" width="400" /></a></div>
<br />
15 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கில யாகூ குழுமங்களில் (Yahoo Groups / Geo cities) Disabilities and Sexuality பற்றி நிறைய தகவல்கள், இணையப்பக்கங்கள் பேசின, ஆனால் அவைபற்றி இன்னமும் கூட நமது சமூகம் பெரிதாக அக்கறை கொண்டது போலவே தெரியவில்லை. நம்மிடம் இருக்கும் பெரிய மூட நம்பிக்கைகளில் ஒன்று எதையும் விதி என்று நம்பி அவற்றைப் பற்றி சிந்திக்க மறுப்பது தான், உடல்குறையுற்றோர்களுக்கு கண்டிப்பாக தனியறையும் தனிமையும் ஏனையோரை விடத் தேவையானதே. உடற்குறையுற்றோர் ஆணோ பெண்ணோ திருமணமே அவர்களுக்கு கிட்டாத போது அல்லது அவர்கள் விரும்பாதபோது செயற்கை பாலியல் கருவிகள் (Sex Toys) அவர்களுக்கு கிடைக்கும் படி கடைகள் உருவாகவேண்டும், தற்காலத்தில் இணையம் வழி வாங்கிக் கொள்ள வசதிகள் வந்துவிட்டன ஆனாலும் இந்தியாவில் அவற்றை வாங்கிப்பயன்படுத்துவதற்கான தயக்கங்கள் நீங்குவதற்கு மாற்றுத்திறானிகள் அல்லாத பிறர் ஊக்கப்படுத்தினால், கூச்சங்களை கடந்து அவர்கள் வாங்கிப்பயன்படுத்திக் கொள்ள முடியும், இன்னும் கூட மணமாகாத விதவைகள் என்ற அளவில் மாற்றுத்திறானிகளை வைத்திருப்பதற்கும் நாம் தான் வெட்கப்பட வேண்டும்.<br />
<br />
ஓரின சேர்கையாளர்களை அங்கீகரிக்காததால் அவர்கள் பேருந்து நிலைய கழிவறையில் அவர்களுகான ஆட்களைப் பிடிப்பது போல் மாற்றுத்திறானிகளின் பாலியல் தேவைபற்றி நாம் நினைக்க மறுத்தால் தவறான நபர்களை அவர்கள் நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்<br />
<br />
<a href="http://www.handjobtw.org/">தைவானில் தன்னார்வ குழுவொன்று</a> கைகள் அற்றவர்களுக்கு சுய இன்பம் செய்துவிடுவதை தொண்டாகக் கொண்டுள்ளனராம், நம்மைப் பொறுத்த அளவில் அது முகம் சுளிக்கக் கூடிய செயல், ஆனால் அந்த சேவைகிடைக்கும் மாற்றுத்திறனாளிகளை பொருத்த அளவில் அந்த தொண்டூழியர்களின் கைகள் கடவுளின் கைகள், பாலியல் வேட்கை தீர்வு என்பதைவிட எல்லைக்கு அப்பாற்பட்ட அன்பை உணர்கிறார்கள், மனித மலத்தை அள்ள வைப்பதை முகம் சுளிக்காமல் அதுவும் ஒரு தொழிலாக ஏற்றுக் கொண்ட நம் சமூகம் இவற்றையெல்லாம் அருவெறுப்பாக பார்ப்பதே நகைமுரண் தானே ?<br />
<br />
வட இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் பயிற்சி வகுப்புகள், அமைப்புகள் உண்டு, தென்னிந்தியாவில் ஏற்பட்டது போல் தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள்<br />
<br />
இணைப்புகள்:<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="https://www.youtube.com/embed/eMAJHmoj9zs" width="480"></iframe><br />
<br />
http://workshop.sexualityanddisability.org/category/workshops/<br />
http://www.sexualityanddisability.org/<br />
https://en.wikipedia.org/wiki/Sexuality_and_disability<br />
http://marius.sucan.ro/propaganda/sex-without-prejudice/<br />
<br /></div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-10267267.post-47010104154056867302016-09-11T17:14:00.000+08:002016-09-11T17:14:27.594+08:00முடவனும் கொம்புத் தேனும்...!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், எண்ணிப் பாருங்கள், நான் உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றிருக்கிறேன், <b>மனிதாபிமானம் / மனிதர் மீதான அன்பு என்ற கோட்டைத் தொட இந்தியர்கள் பயணிக்க வேண்டிய தொலைவு மிகுதி,</b> ஒரு சில தனிநபர்கள் மனிதாபிமான மிக்கவர்கள், அவர்கள் நாட்டின் பின்புலத்தால் வழிகாட்டலால் அவ்வாறு இல்லை, இயல்பிலேயே அவ்வாறு உள்ளவர்களாக இருக்கக் கூடும். எதோ ஒரு தனிமனித மனிதாபிமானச் செயல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதை நாட்டிற்கு பொதுவானதாக காட்டுவதற்கு / எடுத்துக் கொள்வது இயலாத ஒன்று, இதே கூற்றைத் தான் சாதி / மத ஆர்வமிக்கவர்கள் குறித்தும் நான் கூறிவருகிறேன், அதாவது ஒரு சாதியில் / மதத்தில் ஒருவன் நல்லவனாக இருந்தால் அது அந்த சாதி / மதத்தின் அடையாளமன்று, அது அவனின் தனித்தன்மை, தெரிந்தோ தெரியாமலோ அவனோ / அவனைச் சார்ந்தவர்களோ அதை சாதி மதப் பெருமையாக அடகு வைத்து அவனை முன்னிறுத்தி சாதி / மதத்தின் பிழைகளை மறைக்க முயல்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*****</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பொதுவாகவே இந்திய மனநிலையில் / மதவாதிகளின் மனநிலையில் ஊனம் என்பது கடவுளின் தண்டனை / முற்பிறவியில் செய்தவினை என்று பார்க்கப்படுவதால் குறிப்பிட்ட உடற்குறையுற்ற நபரின் இல்லத்தினர் தவிர்த்து உறவினர் உள்ளிட்ட ஏனையோர் ஏளனமாக பார்ப்பதும், பிணக்குகளின் போதும் 'அதான் உனக்கு/உன் குடும்பத்திற்கு கடவுள் தண்டனை கொடுத்திருக்கானே, தெரிந்துமா ஆடுறே...?' ஒற்றை கேள்வியில் கூனிக்க்குறுக வைப்பர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உடைந்த பொருள்கள் என்றாலே அபசகுணம் என்று உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று பதைப்புடன் அதனை வீட்டில் இருந்து வெளியேற்றுவர், கடவுள் சிலை என்றாலும் உடைந்த்தால் அது குப்பைத் தொட்டிக்குத் தான், உடற்குறையுற்றோர் / திருநங்கைகள் எந்த இனக்குழுவிலும் / சமூகங்களிலும் உண்டு, ஆனால் இவர்களை பெருமைப்படுத்தும் புராணக் கதைகளோ, கடவுள் உருவங்களோ, மதரீதியான கதைகளோ சொல்லப்பட்டதே கிடையாது, இவர்களைப் பொருத்த அளவில் உடற்குறை என்றாலே அவமானம், அதனால் தான் குருடர்களை பார்க்க வைப்போம், முடவர்களை நடக்க வைப்போம் என்ற அற்புதங்கள் இங்குண்டு என்ற ரீதியிலெல்லாம் மதங்களை வளர்க்கிறார்கள், முடவர்களை பாதிரி ஆக்குவோம், முடவர்களை புரோகிதர் ஆக்குவோம், பார்வையற்றவரை இமாம் ஆக்குவோம் என்றெல்லாம் இவர்கள் என்றுமே கூற மாட்டார்கள், அவர்களைப் பொருத்த அளவில் 'ஊனம்' இறைவனின் தண்டனை, ஒருவேளை இறைநாடி இருந்தால் அவன் ஊனமில்லாது பிறந்திருக்கக் கூடும் என்றே அவர்கள் நினைக்கின்றனர்கள். மதங்கள் உடற்குறையுற்றோரையும் உங்களைப் போன்ற மனிதர்களாவே கண்ணியமாக நடத்துங்கள் என்று கூறவில்லை. ஒருவேளை கூறி இருந்ததால் அவர்கள் சமூகத்தில் தனித்து நடத்தபடமால் இருந்திருக்கக் கூடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கைவிடப் பெற்றோர் தவிர்த்து உடற்குறையுற்றோர்கள் அனைவரும் யாரிடமும் உதவி கேட்பதில்லை, தங்களுக்கான வசதிகள் இல்லை, தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்று தான் கூறிவருகின்றனர், ஊனமுற்றோர் தங்களின் மீது பரிதாபம் கொள்ளச் சொல்லி கெஞ்சுவதில்லை, எங்களால் என்னவெல்லாம் முடியும் என்று புரிந்து கொண்டு எங்களுக்கான வழிவகைகள் செய்துதரவேண்டும் என்று தான் கேட்கிறார்கள், அது உரிமை அல்ல, அரசுகள் பொது நிறுவனங்கள் செய்ய மறந்ததைத் தான் கேட்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
******</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் சென்று வந்த நாடுகளில் உடற்குறையுற்றோர் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதில்லை, அவர்கள் வெளியே சென்றுவரும் வகையில் அரசுகள் பேருந்து வசதிகளில் அவர்கள் ஏறுவதற்கும், அவர்களுக்கான இருக்கைகளை அமைத்து தருகிறது, அனைத்து பேருந்துகளிலும் சர்கரநாற்காலி ஏறக்கூடிய வசதி உண்டு, ஓட்டுநர் சாய்தளம் அமைத்து அவர்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏற்பாடு செய்து தருவார். உடற்குறையுற்றோருக்கான கைப்பிடிகளுடன் கூடிய மின்தூக்கி வசதிகள் உண்டு, பார்வையற்றவர்கள் மின்தூக்கி மற்றும் தொடருந்துகளை பயன்படுத்த அவர்கள் பாதங்கள் உணரக்கூடிய தனிப்பட்ட ஒற்றையடி பாதைகளை அமைத்திருப்பார்கள், யாருடைய உதவியுமின்றி அவற்றின் தடத்தை மிதித்துக் கொண்டே மின் தூக்கி அல்லது ரயில் கதவுகள் இருக்கும் இடத்தின் அருகே வந்துவிட முடியும், குறிப்பாக கழிவறைகளில் ஆண் / பெண் கழிவறைகள் உள்ளது போலவே உடற்குறையுற்றோருக்கு தனி கைப்பிடிகளுடன் கூடிய கழிவறைவசதிகள், அதனுள் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ள அழைப்பு பொத்தான்களும் இருக்கும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlhKx2gtz7q9PZkyDxNa2uJnoQq2ZFdppypnAPeFBL5pJ7mYFiCH6r0Y8nTJ4pcvNsSvp_yKB6nuEp0jHM01Plvp2QbI127wy0JNtYMlmoTf-igB2KMe0ABndLQTi14KsegJir/s1600/wheelchair.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="231" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlhKx2gtz7q9PZkyDxNa2uJnoQq2ZFdppypnAPeFBL5pJ7mYFiCH6r0Y8nTJ4pcvNsSvp_yKB6nuEp0jHM01Plvp2QbI127wy0JNtYMlmoTf-igB2KMe0ABndLQTi14KsegJir/s400/wheelchair.jpg" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் இந்திய மனநிலையில் உடற்குறையுற்ற ஒருவர் வீட்டில் தன் வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே அழைத்துச் செல்லச் சொன்னாலும், 'உன்னால தான் முடியலையே, நீ எல்லாம் எதுக்கு இப்படி ஆசைப்படுறே, எங்களையும் ஏன்படுத்துறே...'ன்னு பட்டென்று சொல்லிவிடுவார்கள், இதுக்கு காரணம் நாம காலம் காலமாக உடற்குறையுற்றோர் குறித்து கேட்டுவந்த பழமொழிகள் தான், உடல்குறையுற்றோர்கள் என்றால் மற்றவர்கள் போல் அவர்கள் ஆசைகள் வைத்திருக்கக் கூடாது, இதுதான் தலைப்பு 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா ?' கால் ஊனமுற்றோர் மரத்தில் உள்ள தேனை அருந்த ஆசைப்படலாமா ?' ஆசைப்படுவதில் என்ன தப்பு, தேன் சாப்பிடுகிற அத்தினிபேரும் தானே மரத்தில் ஏறி தேனை எடுத்து பயன்படுத்துகிறார்களா ? எவரோ விற்பனைப் பொருளாக அதனை எடுத்து தர பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், கால் இல்லாததற்கும் தேன் சாப்பிடுவதற்கும் என்ன தொடர்பு ? தேன் சாப்பிடுவது நாக்கு தானே...?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கண்ணு தெரியாத கபோதி... கவனக்குறைவாக உள்ளவரை திட்டுவதற்கு அவருக்கு இல்லாத ஒரு உடல் குறையை ஏளனாமாக பயன்படுத்துகிறோம், செவிடன் காதில் ஊதிய சங்கு > காதுகேளாதவர் என்று தெரிந்தும் சங்கு ஊதிப்பார்ப்பவன் தானே மடையன், காதுகேளாதவருக்கு சங்கின் ஒலி ஏன் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ? சொன்னதை செய்யாதவர்களை இழிக்க செவிடன் காதில் ஊதியது / ஓதியது என்று சொல்வது என்று ஊனமுற்றோர்களை ஒழிங்கினக் குறியீடுகளாகவே நாம் கேட்டுவந்திருக்கிறோம், அதனால் நம் மனநிலையில் அவர்களை நம்மில் ஒருவராக பொதுவானவர்களாக பார்க்கவே முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வாய்ப்புக் கிடைத்தால் நாங்கள் சாதிப்போம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே தாண்டலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தங்கவேலு, தங்கவேலுவின் சாதனை மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கைக் கொடுப்பதுடன், அவர்கள் யார் உதவியுமின்றி வெளி இடங்களுக்கும் சென்றுவரும் வசதி வாய்ப்புகளை பெருக்கித்தரும் என்று நம்புகிறேன். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit85cMvU_jduA1JLe-JmVa-OEqP_PUZrxhy878wGWq4TTNpLfX3k65r_F_jgkUYdRSq5aZEee6aRnhyphenhyphenTvAKoeo5KMDl3UW5yBG7xrsCL2cUPh-W_ZnTNCJpMFUDQG1Qo8_Sz4w/s1600/para.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="258" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit85cMvU_jduA1JLe-JmVa-OEqP_PUZrxhy878wGWq4TTNpLfX3k65r_F_jgkUYdRSq5aZEee6aRnhyphenhyphenTvAKoeo5KMDl3UW5yBG7xrsCL2cUPh-W_ZnTNCJpMFUDQG1Qo8_Sz4w/s400/para.png" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உடற்குறையுறோர் குறித்த தமிழ் சார்ந்த பழமொழிகளையும் ஒழித்து அவர்களை தலை நிமிர செய்வோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-10267267.post-51399466301615681882016-09-05T23:42:00.000+08:002016-09-05T23:42:34.573+08:00வலைப்பதிவுகள் குறைந்து வருவது ஏன் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வலைப்பதிவுகள் வளர்ச்சி குறைந்ததற்கு முகநூல் மற்றும் வாட்ஸப் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி என்பது மேம்போக்கான கருத்து மட்டுமே<br />
<br />
உண்மையில் மொபைல் இயங்குதளம் வந்தபிறகு ஒவ்வொருவரின் மடிக்கணிணி மற்றும் மேசை கணிணி பயன்பாடு குறைந்துவிட்டது, என்னேரமும் மொபைல் மற்றும் ஆப்சுகள் கையில் இருப்பதால் முகநூல் மற்றும் வாட்ஸப் பயன்பாடுகள் எளிதானது, பொதுவாகவே நாம எல்லோருமே சோம்பேரிகளே, எது வசதியோ, எளிதானதோ அதைத்தான் பயன்படுத்துவோம்<br />
<br />
வலைப்பதில் எழுத மொபைல் பயன்படுத்துவதும் அதன் ஒருவிரல் தட்டச்சும் போதுமானதாக இல்லை, ஒரு வலை இடுகை எழுத 5-10 நிமிடம் பிடிக்கும், ஒற்றைவிரலால் அதை தட்டச்சுவது அயற்சி (boring) ஏற்படுத்தும், இந்த காரணங்களினால் வலைப்பதிவில் எழுதுவது வதைதான்<br />
<br />
மற்றபடி முகநூல் வலைப்பதிவுகளுக்கு ஆப்பு வைக்கவில்லை, வைத்தது ஆப்பிள் மற்றும் ஆண்டராய்ட் செயலிகளே, கூடவே நம் சோம்பேறித்தனமும், தற்போது வலைப்பதிவில் எழுவதை சூழல் என்னும் காரணி பங்குவகிக்கிறது, முதலில் விசைப்பலகையுடன் கூடிய கணிணி மற்றும் ஒரு இடத்தில் அமர்வதற்காக நேரம் ஒதுக்குவது, இதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது<br />
<br />
வலைப்பதிவுகள் மொபைல் ஆப்சுகளால் எளிமைபடுத்தபட்டால் மீண்டும் எழும், பிரபலங்களைத்தவிர என்னதான் எழுதினாலும் வலைப்பதிவின் வீச்சுகளை முகநூல் தந்துவிடாது<br />
<br />
வலைபதிவுகள் திரட்டிகள் ஆப்சுகளுக்கு மாறி சரிசெய்து கொண்டால் வலைபதிவுகள் வளர்ச்சியுறும், இல்லை என்றால் ஜெமோ சொன்னது போல் வலைப்பதிவர்கள் வெறும் புற்றீசல்கள் தான் அவர்களால் தொடர்ந்து எழுத முடியாது என்ற கூற்று உண்மையாகிவிடும், நாம எழுத தற்போதைய கட்டுப்பாட்டில் முதன்மையானது மொபைல் தொழில் நுட்பமே<br />
<br />
வலை எழுத்தை கைவிட்ட பின் தலைக்கு பின்னால் இருந்த ஒளிவட்டங்கள் மங்கி வருவதை பிரபலபதிவர்கள் உணர்ந்துவருகிறார்கள்,<br />
<br />
உண்மை தானே ?<br />
<br />
இதை ஒருவிரலால் தட்டச்சவே தாவு தீர்ந்துவிட்டது, இந்த அளவு தட்டச்ச விசைபலகையில் ஐந்து நிமிடம் என்றால் இதை மொபைலில் நான் 25 நிமிடம் தட்டச்சினேன் :(<br />
<br />
இன்னமும் வலைப்பதிவில் எழுதுபவர்களில் 90 விழுக்காட்டினர் தங்கள் பதிவுகளை விசைப்பலகை வழியாக தட்டச்சிப் போடுவதினால் தான் அவர்களால் தொடர முடிகிறது. விசைப்பலகையை பயன் குறைந்து பற்பயன் (ஸ்மார்ட் ஃபோன்) பேசிக்கு அனைவருமே மாறிவிட்டால் நீண்ட பதிவுகளை எழுதுவது இயலாததாக ஆகிவிடும், தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.<br />
<br />
*****<br />
<br />
பழைய வலைப்பதிவர்கள் எழுதுவதற்கு ஆர்வமாக உள்ளனர், ஆனால் எழுதும் சூழல் மாறிவிட்டதால், இரண்டு வரி டிவிட்டர், கூகுள் + மற்றும் முகநூல்களில் படங்கள் மற்றும் ஐந்துவரிகளுக்கு மிகாமல் இரண்டு மார்க் கேள்விக்கான விடைகள் போன்று சுருக்கிக் கொண்டனர், நான் வலைபதிவில் எழுதவில்லை ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் 10K டிவிட்டுகளை எழுதிவந்துள்ளேன். நான் மடிக்கணிணியை தொட்டே இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.<br />
<br />
வலைப்பதிவு திரட்டிகள் போன்று முகநூல் பதிவு திரட்டிகள் வந்தால் தமிழ் சமூக எழுத்து ஆர்வலர்களை ஒன்று திரட்ட முடியும், அப்படி இருந்தாலும் நீளமான கட்டுரைகளை கண்டிப்பாக மொபைலில் தட்டச்ச முடியாது.<br />
<br />
வலைப்பதிவை இன்னார் தான் படிக்க வேண்டும் என்று மறைக்க முடியாது. வலைப்பதிவு கட்டற்ற ஊடகம், முகநூல், கூகுள் + இவற்றிற்கு மாற்றாக வரமுடியாது, தொழில் நுட்பங்கள் நம் வசிதிக்காக மாறிக் கொண்டே இருக்கும், ஒருவிரலால் தட்டச்ச முடிவதில்லை என்ற சூழல் வரும் போது அதற்கும் மாற்றுவரும், நம் சோம்பேறித்தனத்தை கைவிட்டால் வலைப்பதிவில் நின்று ஆடலாம், ஏனெனில் வலைப்பதிவுகள் போன்று முகநூல் பலதரப்பு நண்பர்களை பெற்றுத் தராது.<br />
<br />
<br /></div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-10267267.post-85907310017650014702016-09-04T00:29:00.002+08:002016-09-04T00:31:48.007+08:00தெரியாமல் போய் இருக்கலாம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<span style="background-color: white;">முன்பெல்லாம் அலைபேசிகள் இல்லாத காலத்தில் அலுவலகம் வழியாக பழகிய நண்பர்களை அந்த அலவலகத்தின் தொடர்பு முடியும் போது கிட்டதட்ட முடிந்துவிடும், நெருக்கமான நண்பர்கள் ஒருவருக்கொருவர் இல்லம் வரையிலான அறிமுகம் கிடைக்கப்பெற்றவர்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும். பேச்சிலராக இருந்த காலகட்டத்தில் நம்முடன் பழகிய நண்பர்கள் எத்தனையோ அதில் ஒரு சிலரை என்றாவது பார்ப்போம் என்று நம்பிக்கைகள் மட்டும் இருக்கும், தற்போது போன்று முகநூல் மற்றும் பிற சமூக ஊடகங்கள் சாராத காலத்தில் தொடர்பறுந்த நட்பை தொடர்வதற்கான வாய்ப்புகள் மிக அறிது, அப்படியும் பார்க்க நினைக்கும் நண்பர்கள் முகநூல் கணக்கு துவங்கி இருப்பார்களோ என்ற ஊகத்தில் எதிர்ப்பார்ப்பில் அவ்வப்போது ஊர் பெயர், இனிசியல், தந்தை பெயர் மற்றும் நண்பர் பெயர், பள்ளி கல்லூரி, முடித்த ஆண்டு, வேலை பார்த்த இடம் என்ற குறிச் சொற்களாக தேடித் தேடி சிலரை கண்டுபிடித்து 15-20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர்களைத் தேடிச் சென்று கட்டிப்பிடித்து மகிழ்ந்ததுண்டு.</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv5Jb1W0yf6Rc3wkRaKUopRhV2Vz3iyhm1dirCdnW4HoWXEECa7EKmjnB49tZy1B9nDR_cboWs791VHkhPrmtk1oMluOUM_Nq9zsP-NhQ8DVyPQZNDxsCTRsHvOzjvJ7UQloO8/s1600/SOW.png" imageanchor="1" style="clear: right; float: right; font-family: "Times New Roman"; font-size: medium; margin-bottom: 1em; margin-left: 1em; text-align: center;"><img border="0" height="400" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv5Jb1W0yf6Rc3wkRaKUopRhV2Vz3iyhm1dirCdnW4HoWXEECa7EKmjnB49tZy1B9nDR_cboWs791VHkhPrmtk1oMluOUM_Nq9zsP-NhQ8DVyPQZNDxsCTRsHvOzjvJ7UQloO8/s400/SOW.png" width="311" /></a><br />
என்னுடன் வேலை பார்த்த நண்பர் ஒருவர் பெயர் சவுரி ராஜன், 1989 வாக்கில் ஒன்றாக வேலை செய்திருந்தோம், சென்னையில் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்திருக்கிறோம், பிறகு 1989 - 97 வரையில் அவர் வேலை செய்த இடத்திற்கு நானோ அல்லது நான் வேலை செய்யும் இடத்திற்கு அவரோ சென்று ஆண்டுக்கு ஒருமுறையேனும் சந்தித்துக் கொள்வோம், நான் சிங்கை வந்த பிறகு அவருடன் முற்றிலும் தொடர்பு அறுந்து போனது, அதற்கு முன்பே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது, என்னுடைய அன்றைய சூழலில் என்னால் அவரின் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை, அதற்கும் முன் ஒருமுறை அவர் அரும்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த போது அவர் தங்குமிடம் இருக்கிறேன், அவரே அப்போது அழைத்துச் சென்றதால் எனக்கு முகவரியும் தெரியாது, 97 க்கு பிறகு முற்றிலும் தொடர்பு அறுந்துவிட 2013 வாக்கில், பதினைந்து ஆண்டுகள் கழித்து எதற்கும் பழைய அலுவலகம் இணைய தளம் (http://kores.in/) துவங்கி இருந்தால் ஒருவேளை அதில் தொடர்பு எண்கள் எதேனும் இருக்கும், முயற்சித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்து அலைத்தால் நண்பர் தற்போதும் அதே நிறுவனத்தில் மதுரையில் பணிபுரிவதாக சொல்லி அலைபேசி எண்ணைக் கொடுத்தார்கள், அலைபேசியில் பேசிவிட்டு, தமிழகம் சென்ற போது அவரைப் பார்க்க வேண்டும் என்றே மதுரைக்குச் சென்றேன், என்னை இரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்றார்.<br />
<br />
15 ஆண்டுகள் ஆகிவிட்டதே நான் இன்னும் பழைய நண்பராகவே நினைக்க, 'சிங்கப்பூர்' பின்புலத்தில் இருந்து வந்ததால் என்னை பழைய படி டா போட்டு அழைத்துப் பேச நண்பர் தயங்கி 'ங்க' போட, நாய செருப்பால் அடி என்று நான் கடிந்து கொண்டு உரிமையில் ஒருமைக்கு மாறி இயல்பாக பேச அன்றைய பொழுது இருவரும் விடுபட்ட கதைகளை பேசிக் கொண்டோம், நான் மதுரையில் இருக்கேன், குடும்பம் சென்னையில் இருக்கிறது சென்னைக்கு வரும் போது சொல்லு நான் உன்னை வீட்டுக்கு கூட்டிச் செல்கிறேன் என்றார், பிறகு பிரியா விடைபெற்றோம், அதன் பிறகு ஒரு சில முறை நான் சென்னை செல்லும் போதெல்லாம் அழைத்துப் பேசுவேன், ஒரு முறை சென்னையில் இருந்தார், வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார், ஆனால் அன்றைக்கு அடைமழை சாலைகள் போக்குவரத்து இடையூறு என்று அவரது குடும்பத்துடன் எனது சந்திப்பு இயலாமல் போய்விட்டது</div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br />
பிறகு சென்ற ஆண்டு மே மாதம் மும்பை சென்றிருந்த போது அங்கிருந்தே அவருக்கு அலைபேசினேன், மும்பையில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு இருந்தபடியால் எனக்கு உணவு மற்று சுற்றிப் பார்க்கும் இடம் குறித்து நிறைய தகவல்கள் சொன்னார், இப்ப சென்னைக்கே மாற்றலாகி வந்துவிட்டேன், சென்னை வரும் போது சொல்லுடா வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன் என்றார். </div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br />
பிறகு ஜூன் மாதம் திரும்பவும் மும்பை சென்றிருந்தேன், அங்கிருந்தே அவரது அலைபேசிக்கு அலைத்தேன், எதிர் முனையில் வயதான பெண்குரல், நீங்க யார் பேசுகிறீர்கள் ? அவரை எப்படித் தெரியும் போன்ற அனைத்துவிவரங்களையும் கேட்டுவிட்டு 'அவர் (சவுரிராஜன்) சென்ற வாரம் மாரடைப்பால் இறந்துவிட்டார்' நான் அவங்க மாமியார் தான் பேசுகிறேன், என் பொண்ணு (நண்பரின் மனைவி) அழுதுகிட்டே இருக்கா ஒருவாரமாக சரியாக சாப்பிடவில்லை... அவர் பையன் +12 படிக்கிறான், சரியாகவே படிக்கமாட்டேன்கிறான், என்ன செய்றது என்றே தெரியவில்லை என்று கலங்கிய குரலில் கூறினார். சென்னை வந்தால் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறி மற்றொரு அலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கினேன்<br />
<br />
கேட்க கேட்க நாம் ஒருவேளை அவரை சந்திக்காமலே இருந்திருக்கலாமோ? இ(ப்ப)டியான தகவலைக் கேட்கவா 15 ஆண்டுகள் கழித்து அவரை தேடிக் கண்டுபிடித்தேன், ஒருவேலை தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால் இன்னும் என் நினைவில் எங்கு வாழ்ந்து கொண்டிருப்பாரோ ? </div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br />
நண்பர் குடும்பத்தை இதுவரை சந்தித்தே இல்லை, அலைபேசி எண்ணை அழைத்து அவர் வீட்டுக்கு சென்று அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி அவரைப் பற்றி கேட்டு ஆறி இருக்கும் புண்ணை கிளறிவிடுவது என்பது தவிர்த்து என் அறிமுகம் அவர்களுக்கு எந்த பயனும் அளிக்காது என்பதால் நான் அவர் விட்டுச் சென்ற குடும்பத்தை சந்திக்க செல்லவே இல்லை</div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br />
<b>நான் என்ன செய்திருக்க வேண்டும் ?</b></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<b><br /></b>நேற்று எழுதிய பதிவின் பின்னூட்டத்தில் பதிவர் <a href="http://parvaiyil.blogspot.sg/">இராஜ நடராஜன் </a>மறைவு குறித்து வரூண் குறிப்பிட்டு இருந்தார், இராஜ நடராஜன் மறைவு கூட எனக்கு தெரியாமலே போய் இருக்கலாம், என்றாவது சந்திக்க முடியும் என்ற எண்ணிக் கொண்டிருந்த பதிவர்களில் அவரும் ஒருவர், என்னைப் போல் பலருக்கும் பிடித்தவர், காற்றுக் குமிழி போல் வண்ணங்களை காட்டி மறைந்துவிட்டார் :(<br />
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br /></div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-10267267.post-4017717823236637182016-09-02T22:28:00.001+08:002016-09-02T22:30:14.112+08:00 உள்ளேன் ஐயா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span style="color: #222222; font-family: "arial" , sans-serif; font-size: x-small;">2012 வரை ஓடிக் கொண்டிருந்த வலைப்பதிவு வண்டி பிறகு சுணக்கம், எனக்கு அதன் பிறகு வேலை மாற்றம், முன்பு போல் பணியிடையில் ஊதியத்துடன் வலைப்பதியும் நல்வாய்ப்பு பிறகு ஏற்படவில்லை, கிட்டதட்ட அதே காலகட்டத்தில் வாட்ஸப், முகநூல் என்று சமூக ஊடக பதிவர்கள், வாசிப்பவர்கள் பயணத்தை விரிவுபடுத்திக் கொள்ள, வலைப்பதிவில் பதிவுகள் எழுதி திரட்டிகளில் சேர்ப்பது குறைய, திரட்டிகளின் வளர்ச்சிகளும் நின்றுவிட்டதற்கு தமிழ்மணமும், பிற திரட்டிகளுமே சாட்சியாக நிற்கின்றன</span></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
என்னுடைய முக நூல் பக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கணக்கு துவக்கப்பட்டாலும் 2010க்கு பிறகு அவ்வப்போது பயன்படுத்திவர அதில் நண்பர்களாக இணைந்து / இணைத்து இருப்பவர்கள் 80 விழுக்காடு வலைப்பதிவில் நான் முழுமூச்சாக இயங்கி வந்த காலத்தில் இயங்கியவர்கள் தான். வலைப்பதிவின் வழி எனக்கு கிடைத்த நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது, நாட்டு எல்லைகளை கடந்தது.</div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
வலைப்பதிவர் அல்லாத முகநூல் நண்பர்களின் வட்டத்தில் பெரும்பாலும் உடன் வேலை செய்பவர்கள், அவர்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்ற அளவிலும் விருப்ப அடைப்படையில் சில குழுக்களில் இணைந்து இருப்பவர்களாக உள்ளனர், ஆனால் என்னைப் போன்ற பதிவர்களின் முகநூல் பலதரப்பட்ட நண்பர் வட்டம் கிடைக்கப்பெற்றவர்களால் முக நூலிலும் நல்ல விவாதப் பதிவுகளையும், வாசிப்பு அனுபவம் தரும் கட்டுரைகளை படைக்கின்றனர்.</div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
அறிமுகமில்லாதவர்களை முகநூலில் இணைத்து அவர்களுக்கும் பிடிக்கும் படி எழுதுவது என்பது நடைமுறையில் வாய்ப்பற்றது, முக நூல் பிரபலங்களுக்கு ஏற்ற ஒரு சமூக வலைதளம், முக நூல் திரட்டி போன்ற அமைப்பில் திரட்டித் தரப்படாததால் யாராவது அறிமுகப்படுத்தினால் அல்லது விருப்பக் குறி(லைக்) இட்டிருந்தால் மட்டுமே அது நம்முடைய நேரவரிசை( டைம்லைன்)க்கு வரும், மற்றபடி ஒரு கட்டுரையை எழுதிவிட்டு வலைப்பதிவு போல் எல்லோரையும் அடையும்படி செய்வது இயலாது என்பதால், இன்னமும் நான் வலைப்பதிவுகளில் எழுதுவதை வரவேற்கிறேன்.</div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
வலைப்பதிவில் எழுதும் போது எழுத்து சமரசம் (யார் என்ன நினைபபார்கள்) தேவையில்லை, நமது எண்ண ஓட்டம் எழுத்துகளில் வெளிப்படும் என்பதால் குறிப்பிட்ட காலம் எழுதிவந்தாலே ஒத்த சிந்தனை உள்ள நண்பர்களால் புதிய நட்புகள் உருவாகுவது மிகவும் நேர்த்தியாக இயற்கையாக வலைப்பதிவுகளால் ஏற்பட்டுவிடும்.</div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
என்னைப் பொருத்த அளவில் நான் எழுதுவதை எழுத விரும்பி கோர்வை வராதவர்கள், சொல்லத் தயங்குபவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை பாராட்டுவதுண்டு, என்னுடைய மதவாத எதிர்ப்பு மூட நம்பிக்கை பதிவுகளை பாராட்டியவர்கள் 99 விழுக்காடு எதாவது ஒரு மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களே, அவர்கள் சொல்லத் தயங்குவதை மென்று விழுங்குவதை, தொண்டையில் நிற்பதை சிலர் எழுதும் போது அவர்கள் அதை பாராட்டவே செய்வார்கள்.</div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
கொஞ்ச நாள் முகநூல் மற்றும் வாட்சப்புகளில் சிக்கிக் கொண்டுள்ளவர்கள் ஓவர் டோஸ் அல்லது திகட்டியதும் வலைப்பதிவு போன்ற கட்டுபாடுகளற்ற ஊடகத்தை திரும்பவும் நாடுவார்கள் என்றே நம்புகிறேன்</div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
முடிந்த அளவிற்கு வலைப்பதிவுகளில் நானும் அவ்வப்போது தலைகாட்டலாம் என்றே உள்ளேன். ஆனால் அது 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' என்ற அளவுக்கெல்லாம் முழுமூச்சாக இருக்காது :)</div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; text-align: justify;">
<b><span style="font-size: x-large;">Once Again</span></b></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
<br /></div>
<div style="color: #222222; font-family: arial, sans-serif; font-size: small; text-align: justify;">
</div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com33tag:blogger.com,1999:blog-10267267.post-42430157091952575682015-10-06T00:24:00.002+08:002015-10-06T00:24:51.268+08:00மும்பையின் வியப்புகள் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: left;">
</div>
<div style="text-align: justify;">
<b><span style="font-size: x-large;">மு</span></b>ம்பைக்கு அலுவலக பயணமாக மும்முறை கிட்ட தட்ட 60 நாட்கள் நாரிமன் பகுதியில் உள்ள ட்ரைடென்ட் விடுதியில் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தி தெரியாமல் அவமானப்பட்டேன், அசிங்கப்பட்டேன் என்று சொல்லும் திராவிட எதிர்ப்பு மற்றும் இந்தி ஆதரவு தூற்றிகள் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDkmniP8pA40b-1WIog6HO-0dsXkzgWryex_fLSk-4cN0acukJ-i-N-wK431k5r_Q4g5gqeiQOAajd4G8_di4u8oE5t506XFJ_KgYpNtqswz14_vmevugAYH_nh6oyxGBbT4QA/s1600/IMG_4110.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDkmniP8pA40b-1WIog6HO-0dsXkzgWryex_fLSk-4cN0acukJ-i-N-wK431k5r_Q4g5gqeiQOAajd4G8_di4u8oE5t506XFJ_KgYpNtqswz14_vmevugAYH_nh6oyxGBbT4QA/s320/IMG_4110.JPG" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
60 நாட்கள் தங்கியதில் முதல் 15 நாட்களுக்கு வாடகை உந்துகளில் தனித்து சொல்ல நேரிடிகையில் செல்லும் இடம் குறித்தும் இறங்கும் இடம் குறித்தும் </div>
<div style="text-align: justify;">
விளக்கிச் சொல்ல கடினமாக இருந்தது, அது நமக்கு ஆங்கிலம் தெரியாத வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஏற்படும் அனுபவம் போன்றது தான், ஆனால் அடுத்த 15 நாட்களில் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து ஓரளவு இந்தியில் தெரியும், தெரியாது, இங்கே அங்கே, அதற்கு பக்கத்தில் (ஏர் இண்டியாகா பில்டிங்கே பாஸ்) என்ற அளவுக்கு இந்தி புலமை வந்துவிட்டதால் பிறகு வாடகை உந்திகளில் எங்கும் செல்லவும் தயக்கமின்றி சென்று வந்தேன். எந்த மொழியையும் ஊட்டவேன்றுமென்ற தேவையில்லை, அந்த மொழியை மதித்து அவற்றை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலே குறிப்பிட்ட மொழி பேசும் நகரத்தில் தங்க நேறும் பொழுது 6 மாதங்களுக்குள் நன்றாகவே பேச முடியும். இந்த திறமை யற்றவர் எவ்வளவு தான் ஒரு மொழியை படிப்பின் வழி திணித்தாலும் பேச கற்றுக் கொள்ளாவே முடியாது. ஒன்றாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை ஆங்கில வழி கல்வி கற்பவர்களாலும் கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடன் சரளமாக ஆங்கிலத்தால் பேசமுடியும் ? தயக்கமின்றி பேசி பயிற்சி எடுத்தால் மட்டுமே கல்வியாக கற்ற எந்த மொழியையும் பேச முடியும், </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWkuxUD_bQXT4u0ejv760wSSenmB9ZPwNZtX5dEKYwlT4_jucXabGGUb3Y8jBvVGRrjm3axMPHKEhp3khOlSeoqQ-OeAF2AU09lSfKjY_dAXl4UJQsvD8886PwsKj_2YRGHVOY/s1600/IMG_3659.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWkuxUD_bQXT4u0ejv760wSSenmB9ZPwNZtX5dEKYwlT4_jucXabGGUb3Y8jBvVGRrjm3axMPHKEhp3khOlSeoqQ-OeAF2AU09lSfKjY_dAXl4UJQsvD8886PwsKj_2YRGHVOY/s320/IMG_3659.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQrf3hAADSLvIB-gMrBPqyOgvdk3N22C25GRJIJI_TclYF2Mh9pJGYiPm-CqNsyqGuCAFxO2sup21ucr4FdmQqY1imvVnG0UVb88ObQVaGVsiZ2XpNd70ZNnIaAKErOBvFbm5K/s1600/IMG_3660.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQrf3hAADSLvIB-gMrBPqyOgvdk3N22C25GRJIJI_TclYF2Mh9pJGYiPm-CqNsyqGuCAFxO2sup21ucr4FdmQqY1imvVnG0UVb88ObQVaGVsiZ2XpNd70ZNnIaAKErOBvFbm5K/s320/IMG_3660.JPG" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தி கற்றுக் கொடுத்திருந்தால் நாங்கள் வடநாட்டுக்காரனிடம் அசிங்கப்பட்டிருக்கமாட்டோம் என்று மொழியியில் அறிவின்றி கூறுவோரைக் கண்டால் திராவிட இயக்கங்களைத் திட்டும் பாவம் பைத்தியம் என்றே எனக்கு நினைக்கத் தோன்றும். கொத்து வேலைக்கு வடநாட்டுக்கு செல்லும் தமிழக கூலிகள் எந்த பள்ளியில் படித்து அங்கே இந்தி பேசக் கற்றுக் கொள்கிறார்கள், பிழைக்கும் வழிக்கு அங்குள்ள மொழியின் முக்கிய தேவை என அறிந்தோர் ஆர்வத்தினால் கற்றுக்கொள்வர், </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மலேசியாவில் முடித்திருத்தும் வேலைக்கு வருபவர்கள், மூன்று மாதங்களில் மலாய் பேசுகிறார்கள், எந்த பள்ளியில் படித்து கற்றுக் கொண்டார்கள் ? </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
**********</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-size: x-large;"><b>மு</b></span>ம்பை என்றதும் இரயில் வெடிகுண்டு வெடிப்புகளும், அண்மையை ஆண்டில் நிகழ்ந்த தாஜ் ஹோட்டல் துப்பாக்கி சூடு நிகழ்வுகளும் தவிர்க்க முடியாதவை, மும்பையை பொறுத்த அளவில் இந்த நிகழ்வுகளால் இந்திய இந்து இஸ்லாமிய சமயத்தினரிடையே கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை பிரித்துள்ளதை உணர முடிகிறது, அங்குள்ள இந்துக்களிடம் தனிப்பட்ட முறையில் பேசும் பொழுது இஸ்லாமியர்கள் குறித்து அவர்களுக்கு ஒரு நல்ல எண்ணம் இருப்பதாக நினைக்கவே முடியவில்லை, ஒரு 7 விழுக்காட்டு மக்கள் அவர்களால் தான் இங்கே பிரச்சனை என்பதாக குறிப்பிடுகிறார்கள், பெருகும் பிள்ளையார் ஊர்வலங்கள் அவர்கள் சொல்வதை மெய்ப்பிப்பதாகவே காணமுடிகிறது. இந்துக்களின் பலம் என்பது இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பினால் கட்டப்பட்டுள்ளது. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXjTqEHpeR9NNpp3PGNQ1ne_-dxTPsNkXdr4KQMtv3b-bGZR9pckp6Er05F38glM28HkVOWuq12_APmriNLgZMyUhLOO-D5wnZvnQ2J02DHSkz2eEaFINgrPhFpXISdtGMrAyn/s1600/IMG_5396.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXjTqEHpeR9NNpp3PGNQ1ne_-dxTPsNkXdr4KQMtv3b-bGZR9pckp6Er05F38glM28HkVOWuq12_APmriNLgZMyUhLOO-D5wnZvnQ2J02DHSkz2eEaFINgrPhFpXISdtGMrAyn/s320/IMG_5396.JPG" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மாநில ரீதியான எதிர்ப்புகளை சமாளிக்க இந்துப் போர்வை அவர்களுக்கு தேவைப்படுவதால் அவர்களின் ஆதரவுகளினால் அவை அணையாத நெருப்பாக காக்கப்படுவதை யாகூப் மோனன் தூக்கில் இடப்பட்ட நிகழ்வுகளினால் உறுதி செய்யமுடியும், எந்த ஒரு ஊடகமும் யாகூப் மோமனின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்ப முன்வரவில்லை, மாறாக புறக்கணித்தன.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgExEoE5lIx92fWe53gR37_RyB7bTT_6Ql18pA9fr_cbleD5t7IqX66r7FWlXSQHYFOcU70-UIRgg6NDSy4OZwFcipi84JbC-Wa0C3wS-BFUUsmZ7HVJhkXMJYHqNUHAqBbtvpB/s1600/IMG_5463.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgExEoE5lIx92fWe53gR37_RyB7bTT_6Ql18pA9fr_cbleD5t7IqX66r7FWlXSQHYFOcU70-UIRgg6NDSy4OZwFcipi84JbC-Wa0C3wS-BFUUsmZ7HVJhkXMJYHqNUHAqBbtvpB/s320/IMG_5463.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3868Yc0k57SqduVjpUHndOmezjQs5Hff_XgdgZ7ZxuxwvTEzpLIMY5tBYDeyGdo1HeWUGwc56bl7M366yRIbOrMXR66DKr_8NahCBf0sh_DRBtY04wWE5uD8M9yXmn_9CTXro/s1600/IMG_5464.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3868Yc0k57SqduVjpUHndOmezjQs5Hff_XgdgZ7ZxuxwvTEzpLIMY5tBYDeyGdo1HeWUGwc56bl7M366yRIbOrMXR66DKr_8NahCBf0sh_DRBtY04wWE5uD8M9yXmn_9CTXro/s320/IMG_5464.JPG" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இவற்றை அரசியல் சமூக ரீதியில் நான் பார்த்தாலும் மும்பையின் மாறுபட்ட முகமாக வேறு சிலவும் என் கவனத்தை ஈர்த்தது, இந்திய நகரங்களில் பொதுக்கழிவறைகள் நிறைந்த நகரம், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களை காண்பது அரிது. பொதுக்கழிவறைகளில் சிறுநீர் கழிப்பதற்கு கட்டணங்கள் கிடையாது, ஒரு பொதுக்கழிவறை இருந்தால் அங்கு அருகே நடைபாதை வாசிகளின் கூடாரங்களை காணமுடியும். அவர்களுக்கு கழிப்பறை, குளியல் அறை எல்லாமே பொதுக்கழிப்பிடம் தான். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வேறெந்த நகரங்களைவிட கொசுக்கள் மும்பையில் குறைவே, மாலை ஏழுமணிக்கு மேல் திறந்த வெளியில் நின்றாலும் கொசுத் தொல்லைகளை உணரமுடியவில்லை, அவ்வளவு பெரிய நகராட்சியில் கொசு இனப்பெருக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மும்பையின் சிறப்பு, மீட்டருக்கு மேல் பணம் கேட்கும் வாடகை உந்திகளின் நச்சுக்கள் மிகக் குறைவு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெறெந்த நகரங்களைவிட சிலெம் எனப்படும் சேரிப்பகுதிகள் மும்பையில் மிக மிக அதிகம், மும்பையில் மொத்த மாக 50 சேரிகளுக்கு மேல் உண்டு, சேரிகளின் பெருக்கம் கட்டுப்படுத்த முடியாத ஒன்று, காரணம் மும்பைக்கு தேவைப்படும் கூலியாட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுவதால் சேரிகளின் எண்ணிக்கையும் மிகும், மும்பையின் வீட்டுமனைகளின் விலைக்கு குறைந்த கூலி வாங்குபவர்களால் வாடகைக்கு வீட்டின் ஒரு அறைகூட எடுக்க முடியாது, கூலியாட்களை அல்லது வேலைக்கு ஆள் எடுக்கும் எந்த நிறுவனமும் தங்குமிட வசதி எதுவும் செய்து தராததால் அவர்களின் புகலிடம் சேரிதான், அதற்குள்ளும் இடம் கிடைக்காத நிலையில் நடைபாதையில் டெண்ட் அடித்து தங்கிவிடுவார்கள், குடும்பம் குடும்பமாக மும்பையின் வணிக தளமான நாரிமன் பகுதியிலும் கூடாரங்களை பார்க்க முடிகிறது, அவர்களை அப்புறப்படுத்தவும் முடியாது, அவ்வாறு செய்தால் அந்த பகுதியில் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7d9IZVlrDN1XyDWidc3Boo1AJdZYviKzZ4nFjspP96VD1szNU8Xjms_UHQ2QwvH-vRQOyn0T9Z-tHnz9MnhnepmUnU5-TDZ0hQlTLgwsb2RNhwKrQ9XwyvVSWbt6DR7gU-tfb/s1600/IMG_5374.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7d9IZVlrDN1XyDWidc3Boo1AJdZYviKzZ4nFjspP96VD1szNU8Xjms_UHQ2QwvH-vRQOyn0T9Z-tHnz9MnhnepmUnU5-TDZ0hQlTLgwsb2RNhwKrQ9XwyvVSWbt6DR7gU-tfb/s320/IMG_5374.JPG" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மும்பை போன்ற மாநகரங்களில் சேரிகளும் கூடாரங்களும் தவிர்க்க முடியாதவை, என்னைக் கேட்டால் அவைகள் நகரத்தின் ஒரு அங்கம் அதற்காக முகம் சுளிக்கத் தேவை இல்லை. சேரிகளை பார்த்து முகம் சுளிப்பவர்கள் நகரங்களில் சேரிகளுக்கான தேவை ஏன் வந்ததது என்று நினைத்தால் சேரிகளில் வசிப்பவர்களின் இன்னல்களுக்காக பரிதாபப்படுவார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மும்பை வெடிகுண்டு வெடிப்பினால் பல உயிர்கள் பலியாகி இருந்தாலும் பல கோடிகள் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் எந்த நகரத்தையும் விட பாதுகாவலர் பணிக்கு மிகுந்த அளவில் ஆட்களை வைத்திருக்கும் நகரம் மும்பை தான், எந்த ஒரு கட்டிடங்களில் பாதுகாவலர்களின் சோதனைகளை கடக்காமல் நுழைந்துவிட முடியாது, கிட்டதட்ட 25 லட்சத்திற்கும் மிகுதியானவர்கள் குறைந்த படிப்பு படித்தவர்கள் பாதுகாவலர் உடையணிந்து ஆண் பெண் இருபாலரும் பணியில் இருக்கின்றனர், எந்த ஒருநிறுவனமும் லாபத்தில் 5 - 10 விழுக்காடு பாதுகாப்புகளுக்காக செலவிடுகிறது. மும்பையில் வெடிகுண்டே வெடிக்காமல் அமைதியாக இருந்திருந்தால் படிக்காத அல்லது குறைந்த படிப்பு படித்த 25 லட்சம் பேருக்கு மிகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் என்பதை அரசாங்கமோ தனியாரோ ஏற்படுத்தி கொடுத்திருக்க முடியுமா ? </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ1NMGHEM4xf5rncNFOWgH54gAdhByMTinurejJITuIKlsWwTEuKCqgQq5lMW9KlKN5G_3eirPljStG7R4RM72-YfngcsuDh5-oklCeMoaf3xoTlf3vnIqtGFlmoaEu6j9X_A6/s1600/IMG_4106.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZ1NMGHEM4xf5rncNFOWgH54gAdhByMTinurejJITuIKlsWwTEuKCqgQq5lMW9KlKN5G_3eirPljStG7R4RM72-YfngcsuDh5-oklCeMoaf3xoTlf3vnIqtGFlmoaEu6j9X_A6/s320/IMG_4106.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRP4oYTKECT5uvONJQHIXmVZ-l812gBWqBIhJFZ-5xVyLyQMCIVJJIe7hM1xUzG5fnu8bmpBT4xAYhAYp3DU3wP_GTfib3GAhXLg5kLWdLEzfk8deK4Uph9zH7rScVm8v8LbZu/s1600/IMG_4414.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiRP4oYTKECT5uvONJQHIXmVZ-l812gBWqBIhJFZ-5xVyLyQMCIVJJIe7hM1xUzG5fnu8bmpBT4xAYhAYp3DU3wP_GTfib3GAhXLg5kLWdLEzfk8deK4Uph9zH7rScVm8v8LbZu/s320/IMG_4414.JPG" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் மும்பை வெடிகுண்டு நிகழ்வு ஏற்படுத்தியிருக்கும் ஆக்கப்பூர்வமான பின் விளைவுகளைப் பார்த்து உண்மையில் வியந்தேன், லாபத்தில் முழுவதையும் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் நிறுவனங்களி 5 - 10 விழுக்காட்டை பாதுகாப்புக்கு கட்டாயமாக செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, நகரத்தில் வேலை வாய்ப்பை கூட்டும் ஒரு கூறுகாக அமைந்துள்ளதை முற்போக்கான மனநிலையில் தான் கொள்ள வேண்டும். ஓரளவுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்கிறது என்பதால் அங்கு சமூகம் சார்ந்த திருட்டு குற்றங்கள் குறைவு தான், இரயில் பிதுங்கி பயணம் செய்தாலும் பிக்பாக்கெட் திருட்டுகள் அரிது தான், சிக்கியவன் செத்துவிடுவான் அது வேற ஆனாலும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதால் திருட்டு தொழிலில் ஈடுபடுபவர்கள் சோம்பேரிகளாகவும் உழைக்க விரும்பாதவர்களாகவும் தான் இருக்கக் கூடுமே தவிர வேலை கிடைக்காதவர்கள் என்ற வாய்ப்பு மும்பையில் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெங்காயமும் உருளை கிழங்கும் உற்பத்தி நின்றால் மிகுதியாக பாதிக்கப்படுவது மும்பை வாசிகளாக இருக்கக் கூடும், அவர்களின் அன்றாட உணவுகளில் அவை இல்லாத நாட்களே இல்லை, வெறெந்த நகரங்களைவிட மும்பை பெண்கள் ஆண்கள் குறித்து அச்சப்படுவதில்லை, பொது இடங்களில் அவர்கள் புகைப்பதை பார்க்க முடிகிறது, ஆடைகளும் விரும்பிய அளவிற்கு அணிகிறார்கள், பெரிதாக யாரும் அவற்றை வெறித்துப் பார்ப்பதும் இல்லை, குடியகத்திற்கு (பப்) வருகிறார்கள், சேர்ந்தும் குடிக்கிறார்கள், ஆண் பெண் சமநிலை மும்பையில் பேணப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மும்பை அனைத்துலக விமான நிலையம் உள்கட்டமைப்பும் சேவைகளும் சர்வதேசத் தரத்துடன் உள்ளது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigqvAlgN8A1ZR4Hl08pwTzkkN2B4Vwn7zXjD8bKNuiE_wOiI4C9ItuX1D8KosnhdvUhkyUdZLnslRj28skiwJyl13ibl6n_YkY4BLz4Jrnq_dgOeWZOnLzCXCBBRQvomujggih/s1600/IMG_4766.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEigqvAlgN8A1ZR4Hl08pwTzkkN2B4Vwn7zXjD8bKNuiE_wOiI4C9ItuX1D8KosnhdvUhkyUdZLnslRj28skiwJyl13ibl6n_YkY4BLz4Jrnq_dgOeWZOnLzCXCBBRQvomujggih/s320/IMG_4766.JPG" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAMDdVJ1gj58scFYnLl2GM8bhGHKUEpenRZqppGeLmbI2NPW4pC_9Uo4dmnwCpNWRMEEHJ9tER6xgyBENJTIoQlJGQ4BumhJiFs8s8qwFuCDgStelJOq54a7NnHuE2X1xRd01l/s1600/IMG_4776.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiAMDdVJ1gj58scFYnLl2GM8bhGHKUEpenRZqppGeLmbI2NPW4pC_9Uo4dmnwCpNWRMEEHJ9tER6xgyBENJTIoQlJGQ4BumhJiFs8s8qwFuCDgStelJOq54a7NnHuE2X1xRd01l/s320/IMG_4776.JPG" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மும்பையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசிக்க நேரிடுபவர்களால் மும்பையை விட்டுச் செல்ல முடியாது, அவர்களை எல்லா விதத்திலும் மும்பை ஈர்த்துவிடும் அம்சம் மும்பையில் உண்டு. வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் தவிர்த்து மும்பையில் இயல்பு வாழ்க்கைக்கான தனிமனித பாதிப்புகள் வெறெந்த இந்திய நகரங்களைவிட குறைவே.</div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-10267267.post-59065389820851604252015-03-29T23:39:00.000+08:002015-03-29T23:58:51.188+08:00சிங்கப்பூர், திரு லீ குவான் யூ அவர்களின் இறுதி நிகழ்வு !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
உலகத்தில் எந்த ஒரு மக்கள் தலைவருக்கும் இல்லாத நற்பெயரும் புகழும் திரு லீ குவான் யூ விற்கு மட்டும் எப்படி ? மற்றவர்களைவிட இவர் எந்தவிதத்தில் மாறுபட்டவர் ? என்று கேள்விக்கு சிங்கப்பூரின் மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கைத் தரம், தனிமனித உரிமை விடையாக கூறிவிட முடியும். எத்தனையோ உலக தலைவர்கள் தங்கள் மக்களின் விடுதலைக்காக போராடி பெற்று தந்திருக்கிறார்கள், சேகுவாரா, லெனின், மாசேதுங், மார்டின் லூதர்கிங், அண்ணல் காந்தி மற்றும் மண்டேலா போன்றோரை எடுத்துக்காட்ட முடியும், ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத தனிச் சிறப்பு திரு லீ குவான் யூவிற்கு இருக்கிறது, அவர்களெல்லாம் போராளிகள், இவர் போராளி மட்டுமின்றி பொருளாதார மேதையும் கூட.</div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTMRkdlly55VonK02ys-B9_VAxOrsyDPJs1B46EELuvCwaznUzsMa7c4-ebv4dnC_dRYXlGnylGiJuYny7CFKl09bfRrg3cRl78oiIgolzD-Ytxc-quY-eeGvrf9FRY0UBjgww/s1600/1549565_993013817377674_7819926818054090254_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhTMRkdlly55VonK02ys-B9_VAxOrsyDPJs1B46EELuvCwaznUzsMa7c4-ebv4dnC_dRYXlGnylGiJuYny7CFKl09bfRrg3cRl78oiIgolzD-Ytxc-quY-eeGvrf9FRY0UBjgww/s1600/1549565_993013817377674_7819926818054090254_n.jpg" height="320" width="317" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
1963-1965 காலகட்டத்தில் மலேசியாவின் மாநிலமாக இணைந்திருந்து, பின்னர் மலேசிய அரசிடம் தங்களுக்கு கூடுதல் முதன்மைத்துவம் அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டு, அவை நிராகரிக்கப்பட்டு தனித்தே இருந்து கொள்ளுங்கள் என்று 1965 ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 ஆம் நாள் தள்ளிவிடப்பட்டது தான் சிங்கப்பூர், அன்றைய நாளின் நினைவில் தான் ஆண்டுதோறும் சிங்கப்பூர் தன்னுடைய தேசிய நாள் என்று கொண்டாடிவருகிறது. இனி என்ன செய்யப் போகிறோம் ? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்து அதற்கு விடையாக பல திட்டங்களைக் கூறி மக்களை வழிநடத்திச் சென்றதுடன் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத் தக்கவகையிலும், ஆசியாவிலேயே மிகச் சிறந்த, பொருளாதார வளர்ச்சியில் சிறந்த நாடாக உருவாக்கிக் காட்டினார் திரு லீ குவான் யூ, அவருடைய முப்பதாண்டு காலத்திற்கும் மேலான ஆட்சியில் கல்வித்தரம், அடிப்படைவசதிகள், சொந்தவீடு, வேலைவாய்பு, வெளிநாட்டு முதலீடு, உள்நாட்டு வர்தகம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் சிங்கப்பூர் குடிமக்கள் வளர்ந்தனர், இணைப்பு மொழியாக ஆங்கிலத்தை முதல் மொழியாக்கியும், அவரவர் தத்தம் தாய்மொழியை இரண்டாம் மொழியாக கற்பித்தும், அனைத்து மக்களும் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை ஒரு 20 ஆண்டுகளுக்குள்ளேயே ஏற்படுத்தித்தந்து வழிகாட்டினார், பல இன / மத நல்லிணக்க சமூகத்தை எப்படி பேணுவது என்பதற்கு சிங்கப்பூர் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழர் என்று நாம் பெருமைபடும் வகையில் உலக அரங்கில் நம்முடைய தமிழும் அதன் வளர்ச்சியும், தமிழர்களும் போற்றப்படும் ஒரே நாடு சிங்கப்பூர் மட்டுமே, மாநிலத்தைத் தாண்டினால் இந்தியாவில் கூட தமிழுக்கான அங்கீகாரம் சொற்பமே, அந்தவகையில் திரு லீ குவான் யூவை தலைவராக பெற்றதற்கு சிங்கப்பூர் தமிழர்கள் பெருமைப்படவும், நன்றிக்கடன்படவும் கடமைபட்டவர்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலக அரங்கில் மக்களை ஒன்றுபடுத்திய தலைவர்கள் எல்லோரும் செய்யாமுடியமல் விட்டதை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டு விடைபெற்றுக் கொண்டுள்ளார் திரு லீ, பெண்களுக்கான சம உரிமையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்களைத் தாண்டி, நமது பண்பாடு, கடமை மற்றும் பொறுப்பு என்ற அள்வில் சிங்கப்பூரார்களை உணரவைத்து அதை நடைமுறைக்கும் கொண்டுவந்துள்ளார், வெறெந்த நாட்டைவிட சிங்கப்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழுபாதுகாப்பு உண்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம உரிமை உண்டு. 1900 க்கு பிறகு விடுதலை பெற்ற நாடுகளை ஒப்பிட சிங்கப்பூரின் பொருளாதர வளர்ச்சியும் மக்கள் வாழ்வியல் தர மேம்பாடும் திரு லீ யின் வழிகாட்டுதலில் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளனர், விடுதலை அடைந்த ஏனைய நாடுகளில் நிலைமை இவ்வாறு இல்லை, திரு லீ அவர்களின் தொலை நோக்கு பார்வையும், அவரது நீண்ட வாழ்வும் சிங்கப்பூர் மக்களுக்கு கொடையாக அமைந்ததும் சிங்கப்பூர் பல்வேறு வளர்ச்சிகளில் மேம்பட முடிந்தது. சிங்கப்பூரின் கடவு சீட்டு (பாஸ்போர்ட்) ஐரோப்பிய நாடுகளின் கடவு சீட்டுகளைப் போன்று மதிப்பு வாய்ந்தது, குடிநுழைவு அனுமதியின்றி 160+ நாடுகளுக்கு சென்றுவர முடியும், </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கப்பூரின் சட்டதிட்டங்கள் கடுமை என்றும் திரு லீ கண்டிப்பானவர் முதலாளிகளுக்கு ஆதரவானவர் என்றெல்லாம் உலக அரங்கில் திரு லீ க்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பலர் முன்வைத்தாலும் சிங்கப்பூரர்கள் அதைப் புறந்தள்ளுவார்க்கள், காரணம் மக்கள் தலைவர்கள் எந்த கொள்கையை (இசம்) பின்பற்றினாலும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதுதான் அதன் நோக்கமாக இருக்கவேண்டும் என்பதற்கு உலக அரங்கில் சிங்கப்பூர் நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பதை சிங்கப்பூர் மக்கள் உணர்ந்துள்ளனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*****</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திரு லீயின் மறைவு பேரிழப்பு என்றாலும் 91 அகவை கடந்த அவரது உடலுக்கான ஓய்வு என்ற அளவிலேயே அவரது மறைவு பார்க்கப்படுக்கிறது, ஆகச்சிறந்த சுற்றுலா நகரம், வானூர்தி நிலையங்கள், கப்பல் கட்டுமானங்கள், உலக வங்கிகள் (பைனாஸ் செண்டர்), மற்றும் கட்டுமானத்துறை, சிங்கப்பூருக்கு சிறந்ததொரு அடித்தளங்களை திரு லீ அமைத்துக் கொடுத்துள்ளார், ஒரு மாபெரும் தலைவரின் மறைவும் அதன் பின்னான நிகழ்வுகளும் கூட உலக அரங்கில் வியப்பாக பார்க்கும்படி அமைந்துவிட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆம், திரு லீயின் மறைவு குறித்து அறிவிக்கப்பட்ட நாள் சோகமான நாள் என்பதைத் தாண்டி மக்களின் இயல்பு வாழ்க்கை நலிவடையவில்லை, பொது போக்குவரத்து நிறுத்தப்படவில்லை, பள்ளிகள், கல்லூரிகள் அலுவலகங்கள், அரசு செயல்பாடுகளுக்கு விடுமுறைவிடப்படவில்லை, கடையடைப்போ, சாலைமறியலோ, முன்னறிவிப்பற்ற பொதுமக்களுக்கு இடையூறான ஊர்வலங்கள் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyzp3T4X9tBgwvs8SDlrJJgORQqJqQqDlqeXYefOUPQcEgr6Ml3oR4MyNeNxPPx07GBwgBc9H0Z1-Qp-PUeCPapIyDrvg-tFxrPkP5J2AWr-t2ECmtv2CuFYj9O-1sDKLNBe8f/s1600/1549565_993185804027142_5503299935770164848_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyzp3T4X9tBgwvs8SDlrJJgORQqJqQqDlqeXYefOUPQcEgr6Ml3oR4MyNeNxPPx07GBwgBc9H0Z1-Qp-PUeCPapIyDrvg-tFxrPkP5J2AWr-t2ECmtv2CuFYj9O-1sDKLNBe8f/s1600/1549565_993185804027142_5503299935770164848_n.jpg" height="480" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjfCZuLCo4yt2ehZF4K5KLuGoTGiLPF0w0qJE8NdN8qYxqg56ePxsBaAmjvSHdqKy1cQTJYRNtvCkta0j0zKOmFM8Tc2ihy3tKc8I4LAd120_i1QUygWU9KQii3FSnugUDuA3d/s1600/11091192_993181460694243_6076378863904120077_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjfCZuLCo4yt2ehZF4K5KLuGoTGiLPF0w0qJE8NdN8qYxqg56ePxsBaAmjvSHdqKy1cQTJYRNtvCkta0j0zKOmFM8Tc2ihy3tKc8I4LAd120_i1QUygWU9KQii3FSnugUDuA3d/s1600/11091192_993181460694243_6076378863904120077_n.jpg" height="480" width="640" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
திரு லீயின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மூன்று நாட்களில் முதல் நாள் மட்டும், இதுபோன்ற நிகழ்வுகளின் முன்னனுபவம் இல்லாததால் பொதுமக்கள் தாங்களே நீள் வரிசையை அமைத்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர், முதல் நாள் வரிசையில் ஊர்ந்து செல்லும் நேரம் 10 மணிநேரமாகவும், அடுத்தடுத்த நாட்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட ஏற்பாடுகளுடன் மக்களுக்கான தண்ணீர், குளிர்பானம், ரொட்டிகள் மற்றும் வெயிலுகான குடைகள் என அனைத்து வசதிகளையும் 24 மணிநேரமும் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்திருந்ததனர், கடந்த வியாழன் மற்றும் வெள்ளி இறுதி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் 8 மணிநேர வரிசையில் சென்று அஞ்சலி செலுத்தினர், எந்தவித விரும்பத்தகாத நிகழ்வோ, உணர்ச்சிவசப்படலோ நடக்கவில்லை, ஒருவொருக்கொருவர் தேவையான உதவிகளை செய்து கொண்டு சென்று அஞ்சலி செலுத்தினர், மாற்றுத் திறனாளிகள், முதியோர், குழந்தைகளுடன் வருவோருக்கு விரைவில் அஞ்சலி செலுத்தும் தனி வரிசை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது, நானும் வலையுலக நண்பர்கள் சிலரும், அலுவலக நண்பர் ஒருவருடன் மாலை 5 மணிக்கு வரிசையில் சேர்ந்து இரவு 12 மணிக்கு அஞ்சலி செலுத்தி வீடுதிரும்பினோம், இரவு திரும்ப பொது போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. தமிழகத்தில் பல்வேறு சிற்றூர்களில் திரு லீயின் மறைவின் இரங்களுக்காக தட்டி வைக்கப்பட்டிருந்ததை சிங்கப்பூர் மக்கள் அறிந்து தமிழ்நாட்டு தமிழர்களின் நன்றி உணர்வை வெகுவாக நெகிழ்ந்து பாராட்டினர்</div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7pwMsdew3uZdMEY72h4vZuvdHpqO3gXcy0aRfWxdPibLqoZ0S_7f4Kr67s1dtq9uXvuyFjiNqbPenC0x7nywGK3vrovurpicW-zk2v3DKh94wCLd-dIF-B-e5e-X5uhFokyrs/s1600/10857174_10206375972022683_1002812891710966117_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7pwMsdew3uZdMEY72h4vZuvdHpqO3gXcy0aRfWxdPibLqoZ0S_7f4Kr67s1dtq9uXvuyFjiNqbPenC0x7nywGK3vrovurpicW-zk2v3DKh94wCLd-dIF-B-e5e-X5uhFokyrs/s1600/10857174_10206375972022683_1002812891710966117_o.jpg" height="424" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL0UjwgAwHA46NRT9jnzUHjZfSNdMFx-pukzLFALeZGkSJQGwlSiwyUN_nF_Ah6t2Esz0U28DaupiAQ4dxfaE2XYfIS5v6-VlXBhMTjvC8xTMOF-dxVX_cR3B79OWejNOuZyuI/s1600/11096422_612088358927000_7516659040150570809_o.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL0UjwgAwHA46NRT9jnzUHjZfSNdMFx-pukzLFALeZGkSJQGwlSiwyUN_nF_Ah6t2Esz0U28DaupiAQ4dxfaE2XYfIS5v6-VlXBhMTjvC8xTMOF-dxVX_cR3B79OWejNOuZyuI/s1600/11096422_612088358927000_7516659040150570809_o.jpg" height="424" width="640" /></a></div>
<div style="text-align: center;">
(முக நூலில் இருந்து)<br />
<br /></div>
</div>
<div style="text-align: justify;">
திரு லீயின் இறுதிப் பயண நிகழ்வான இன்று வானம் காலை முதலே அழுதது, கடந்த 10 நாட்களாக இல்லாத மழை சிங்கப்பூரில் இன்று பெய்ததும், திரு லீயின் இறுதி பயண 10 கிமி தொலைவு நெடுவிலும் மிதமான மழை இருந்து கொண்டே இருந்தது மக்களால் உணர்வுபூர்வமாகவே பார்க்கப்பட்டது, சாலைகளின் இருபுறமும் கொட்டும் மழையை பொருட்படுத்தாது பள்ளிக் குழந்தைகளுடன் நின்று கொண்டு திரு லீயின் இறுதிப் பயணத்திற்கு மரியாதை செலுத்தினர், இன்றும் கூட இறுதிப்பயண சாலைகளில் போக்குவரத்து முடங்கவில்லை ஒருபக்கம் இறுதிப்பயணம் செல்ல மறுபுறம் போக்குவரத்து சென்று கொண்டிருந்தது, ரயில்களும் ஓடின.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2OYxwE3jn3Qevod60HrkhI7nIWhHYMUDOSuFvZRFlBupEVBxX-KHQILd9q7ydnOtHS5Nlp4K7nm58HOs5OO2fweA4DM2e0MDKlDhp1eIKVilZtcT1aZ9G3Q7QYFodjEg9SGqW/s1600/19213_994116123934110_6023371267552197808_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2OYxwE3jn3Qevod60HrkhI7nIWhHYMUDOSuFvZRFlBupEVBxX-KHQILd9q7ydnOtHS5Nlp4K7nm58HOs5OO2fweA4DM2e0MDKlDhp1eIKVilZtcT1aZ9G3Q7QYFodjEg9SGqW/s1600/19213_994116123934110_6023371267552197808_n.jpg" height="370" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqDY_hyM_pX5JOegHgH3uzB5HB6cbPQ6e20Gc-ukIzS3p0uVUHRhUapyUfCA9CI40zr9g2_3Zg-vR_D60UChe4rCUrI8zot6emqq6LYu8xZqJfUUoIoZiNIq6r3wspuJV5Yw3E/s1600/10303289_994116310600758_3740949563776682843_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqDY_hyM_pX5JOegHgH3uzB5HB6cbPQ6e20Gc-ukIzS3p0uVUHRhUapyUfCA9CI40zr9g2_3Zg-vR_D60UChe4rCUrI8zot6emqq6LYu8xZqJfUUoIoZiNIq6r3wspuJV5Yw3E/s1600/10303289_994116310600758_3740949563776682843_n.jpg" height="356" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2qJbpKJeXhMNbfDbupAfETSRwkug3kqLA8Se6zh4ha8TGOaTA6YDAc-aByPvKFY9ZLffuGnhxHkstp2XUvVTpzw_UIhXbU7fFx0_kIC87aPwm7qez9PaARMwat9wW7zQ4QUah/s1600/10430832_994116347267421_4394588110281940229_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2qJbpKJeXhMNbfDbupAfETSRwkug3kqLA8Se6zh4ha8TGOaTA6YDAc-aByPvKFY9ZLffuGnhxHkstp2XUvVTpzw_UIhXbU7fFx0_kIC87aPwm7qez9PaARMwat9wW7zQ4QUah/s1600/10430832_994116347267421_4394588110281940229_n.jpg" height="358" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij9odUFsQsb5s6KVsrhWWdbY354elUZgXMiIWIQ2rCTOfOnqkPTc9-Xa88NTr6Imq49VqL1STlqVwnCZgOjgsX7D0BCKse5Vrmb6HlGAh1N4BkiAtIDpbr5OURX-HN78ECWZ-O/s1600/11074360_994116167267439_5615459930433167099_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij9odUFsQsb5s6KVsrhWWdbY354elUZgXMiIWIQ2rCTOfOnqkPTc9-Xa88NTr6Imq49VqL1STlqVwnCZgOjgsX7D0BCKse5Vrmb6HlGAh1N4BkiAtIDpbr5OURX-HN78ECWZ-O/s1600/11074360_994116167267439_5615459930433167099_n.jpg" height="342" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOkv4AFIj1elmbitHneyBf0mUUFRL0FFQxOpOBOdTRQPLMWJVF4Mx5f6o7w-vRFZVeWexhWUP3o1RPH8viSa0YaaLtrqs7K6Wol6nhkHEbiHMbtkdRXdefAlr_W9sveztToGiL/s1600/11074446_994116387267417_8147697575740596074_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOkv4AFIj1elmbitHneyBf0mUUFRL0FFQxOpOBOdTRQPLMWJVF4Mx5f6o7w-vRFZVeWexhWUP3o1RPH8viSa0YaaLtrqs7K6Wol6nhkHEbiHMbtkdRXdefAlr_W9sveztToGiL/s1600/11074446_994116387267417_8147697575740596074_n.jpg" height="354" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfpEMR9L7xk50QVqwf4eFYXABipREjAOISq9D72swTqkn_mk_2ugGzHtFcLzk7pzOkvYCZJOrhNw3gHuMB4B88e9cu_NnH03eAn0uSLRS3_ojYCu_YBk4wErMqW2DgX_N78Gxv/s1600/11074490_994116150600774_507889400981819733_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfpEMR9L7xk50QVqwf4eFYXABipREjAOISq9D72swTqkn_mk_2ugGzHtFcLzk7pzOkvYCZJOrhNw3gHuMB4B88e9cu_NnH03eAn0uSLRS3_ojYCu_YBk4wErMqW2DgX_N78Gxv/s1600/11074490_994116150600774_507889400981819733_n.jpg" height="350" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2NQb6IDEX9c-kJMjUWpsYeIhOspwXjHXPgJM2DQBBjPZU31hgBddCaMX-gbWcw7raiMRT0RlNfNhrpVGb0FPgORKytdMfGI8F7Vn8F3V0JkjL6ayZJpRCqUnxHiUMoJ6J2r-K/s1600/11080946_994116440600745_8266451028009077474_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2NQb6IDEX9c-kJMjUWpsYeIhOspwXjHXPgJM2DQBBjPZU31hgBddCaMX-gbWcw7raiMRT0RlNfNhrpVGb0FPgORKytdMfGI8F7Vn8F3V0JkjL6ayZJpRCqUnxHiUMoJ6J2r-K/s1600/11080946_994116440600745_8266451028009077474_n.jpg" height="358" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO7WpFh3BfZ8kcfWTCFOTYmR4fbgjaqZz_ttHFKfRm_dR_pSaJaslsAiNyfjt-sT8smv1jvRAhib3NEn4Dt00RcWIDBCMSZXLeLMBM-RefiFOJ4qVc9qGPi-YdlFYaEMJAIgwL/s1600/11082560_994116290600760_6972711635775167906_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjO7WpFh3BfZ8kcfWTCFOTYmR4fbgjaqZz_ttHFKfRm_dR_pSaJaslsAiNyfjt-sT8smv1jvRAhib3NEn4Dt00RcWIDBCMSZXLeLMBM-RefiFOJ4qVc9qGPi-YdlFYaEMJAIgwL/s1600/11082560_994116290600760_6972711635775167906_n.jpg" height="364" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFF5eo8H53fmdRMEF0ntYQDNa1okbIsZSFtObqJUgv3g5AE3nwDuMWp_7e3980tjSN7e2sRdn5utZQUvM50-deDiQczVXyKN4HJsZ44qbzFMtkYdaFXrmG9AT16tSzu4rby1en/s1600/11091279_994073130605076_1364747698992027275_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFF5eo8H53fmdRMEF0ntYQDNa1okbIsZSFtObqJUgv3g5AE3nwDuMWp_7e3980tjSN7e2sRdn5utZQUvM50-deDiQczVXyKN4HJsZ44qbzFMtkYdaFXrmG9AT16tSzu4rby1en/s1600/11091279_994073130605076_1364747698992027275_n.jpg" height="356" width="640" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
உலக நாடுகளின் தலைவர்களின் இறுதி மரியாதைக்காக திரு லீயின் உடல் கிட்டதட்ட 3 மணிநேரம் வைக்கப்பட்டு, அப்போது திரு லீயின் சிங்கப்பூர் வளர்ச்சி மற்றும் உலக நாடுகளுடான உறவுகள் குறித்தெல்லாம் சிங்கப்பூர் பிரதமர், ஆளுனர் மற்றும் பல்வேறு இனமேம்பாடுகளுக்கு லீ செய்த ஏற்பாடுகளைப் பற்றி அந்தந்த இன சார்ப்பில் ஒருவரும் பேசினர், அரங்கில் தமிழில் திரு லீ குறித்து கருத்தும் பகிர்ந்து கொள்ளப்பட்டது, துக்கமான ஒரு நிகழ்வு, இறுதி நிகழ்வு என்றாலும் திரு லீ குறித்து பேசியவர்களில் பிரதமர் திரு லீ சியான் லூங்க் (மறைந்த திரு லீயின் மூத்த மகன்) நகைச்சுவை தகவல்களையும் கூறி அரங்கின் இறுக்கத்தை தளர்த்தி ஒரு இயல்பான நிகழ்வாக மாற்றி இருந்ததனர். இதெல்லாம் சிங்கப்பூர் தவிர்த்து வெறெங்குமே பார்க்க முடியாத காட்சிகள். அதன் பிறகு திரு லீ யின் உடல் இல்லத்தினர் மற்றும் உறவினர்களுடன் பொது மின்மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவித்து இறுதி அஞ்சலி நிகழ்வை முடித்துக் கொண்டனர்<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoBFDtk3QM_dJDmWSdH-62byRsvyhsuRAuovqBZYDlVmd34dVhlYV-6Hvohjf-dVw1A-hYt8EjgXPhLhikFMO6VyBuIprdeGANkIBAIiJmUjqoJ-07rOf4ipMFiZuOWmyVWcsK/s1600/10408969_994116457267410_7220040915786480661_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoBFDtk3QM_dJDmWSdH-62byRsvyhsuRAuovqBZYDlVmd34dVhlYV-6Hvohjf-dVw1A-hYt8EjgXPhLhikFMO6VyBuIprdeGANkIBAIiJmUjqoJ-07rOf4ipMFiZuOWmyVWcsK/s1600/10408969_994116457267410_7220040915786480661_n.jpg" height="358" width="640" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*****</div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzu5LsAxweMAa__CcblnSjB88QDLrkv2BBXUYzT3mxDowA7aXpsgscgAxGv4EWb7ARmeSw_shNXvqtK_4HhikgUxaM1wLANqXix_gCi0Cek7ZzUDMrSl6oJ6kUhTPYdzsAqu__/s1600/CBQLJrYUkAEP0oF.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgzu5LsAxweMAa__CcblnSjB88QDLrkv2BBXUYzT3mxDowA7aXpsgscgAxGv4EWb7ARmeSw_shNXvqtK_4HhikgUxaM1wLANqXix_gCi0Cek7ZzUDMrSl6oJ6kUhTPYdzsAqu__/s1600/CBQLJrYUkAEP0oF.jpg" height="394" width="640" /></a></div>
<br />
<br /></div>
<div style="text-align: justify;">
முதல்முறை நடைபெறும் ஒரு மாபெரும் தலைவரின் இறுதி நிகழ்வு கூட சிங்கப்பூரில் அவருக்கான மரியாதையை சற்றும் குறைக்காமல் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் நடத்தப்பட்டதும் கூட திரு லீயின் வழிகாட்டுதலாகவே இருக்கக் கூடும். உலக அரங்கில் பொருளாதாரத்தில் உயர்ந்து, ஊழல் மற்றும் லஞ்சமற்ற சிங்கப்பூர் பற்றி திரு லீயின் வழிகாட்டுதல் தலைவர்களை உருவாக்கவும் தனிமனிதர்களை மேம்படுத்தவும் உதவும் என்பதை திரு லீயின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த தலைவர்கள் கண்டிப்பாக உணர்திருக்கக் கூடும்.</div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-10267267.post-12822815445697420942015-02-14T00:53:00.001+08:002015-02-14T01:34:53.308+08:00Onsen - ஜப்பானிய வெந்நீருற்று குளியல் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே</div>
<div style="text-align: justify;">
இடுக்கன் களைவதாம் நட்பு - </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த குறளுக்கு பொருள் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாத போது அம்மணத்தை மறைக்க உதவும் கை போன்றதே தக்க சமயத்தில் உதவக் கூடியது நட்பும். பருவ அகவையை கடந்தவர்களின் உடலில் பலர் முன்பு ஆடையற்ற நிலை என்பது ஒரு இக்கட்டான சூழல், வெட்கத்தையும் கூச்சத்தையும் ஏற்படத்தும் நிலை, அப்படியான நிலையை திருவள்ளுவர் மற்றும் சங்க காலத்திலும் யாரும் விரும்பியதில்லை, சபை முன்னிலையில் ஆடை அவிழ்பது ஒருவரை அவமானப்படுத்தும் முயற்சி என்றெல்லாம் மகாபாரதக் கதைகளில் பதிய வைக்கப்பட்டுள்ள ஆடையின் தேவை குறித்த தனிமனித தன்மானம் பற்றிய குறிப்புகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்கு பெண்ணோ வெட்க்கம் கொள்ளத் தேவை இல்லை என்பது பொதுவான பரிந்துரைகள் மற்றும் புரிந்துணர்வு தான், இந்தியாவிலும் தமிழகத்தில் இவை ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், நமது ஆடையற்ற உடலை ஒரு சில நிமிடங்கள் மருத்துவர்கள் தவிர்த்து வேறு எவருக்கும் காட்டுவது வழக்கம் இல்லை, பெண்களுக்கு மகப்பேற்றின் போது அந்த சூழலில் உதவி செய்பவர்கள் முன்னிலை தவிர்த்து எந்த பெண்ணும் தனது ஆடையற்ற உடலை தனது துணை தவிர்த்து எவருக்கும் காட்ட மாட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுக் குளத்தில் குளியல் இருந்தது, இன்னும் கூட கிராமங்களில் படித்துறைகளுடன் சேர்ந்த குளத்தில் குளிக்கிறார்கள், இன்னும் குற்றலாம், மலை அருவிகள், கடற்கரை தவிர்த்து வெறெங்கும் பொதுக் குளியல்களுக்கு வாய்ப்பற்ற நிலை உள்ளது. எனக்கு தெரிந்து <b>ஆசிய நாடுகளில் நான் பயணம் செய்தவரையில் குளியல் என்பது பொழுது போக்கு</b>, அதற்காகவே சீனா, தைவான், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் பலவித வசதிகளுடன் கூடிய பொதுக் குளியல் அறைகள் உண்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீன தலைநகரில் Beijing Bath Houses மிகவும் புகழ்பெற்றவையாக இருந்தது, தற்பொழுது அவைகள் மூடப்பட்டு, முற்றிலும் புதிய வடிவமாக SPA எனப்படும் பல்வேறு குளியல் வசதிகளுடன், சூட்டு அறை (Sauna) மற்றும் நீராவி அறைகள் (Steam Room) கூடிய பொழுது போக்கு இடங்கள் உண்டு. ஐரோப்பிய நாடுகளில் Russian Banya மற்றும் Turky Hammam புகழ்பெற்றவை. SPA இதைத் தமிழில் பொருளுடன் 'புத்துணர்வு கூடம்' என்று வேண்டுமானால் சொல்லலாம், </div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdKUN2-AK-boQn8TFGIl00o9BH1XddPoYU4skE90kLAhuhQ_B2RjsVMLOTg421MIfTe816qSfNe9eMSaip80wPvmsbPyGPJjjLDUUX799v2NqlBjPwiaQwu7Q3mgv-ZrJ0LWKt/s1600/BeigingBathHouse.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdKUN2-AK-boQn8TFGIl00o9BH1XddPoYU4skE90kLAhuhQ_B2RjsVMLOTg421MIfTe816qSfNe9eMSaip80wPvmsbPyGPJjjLDUUX799v2NqlBjPwiaQwu7Q3mgv-ZrJ0LWKt/s1600/BeigingBathHouse.jpg" height="302" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;"><span style="font-size: small; text-align: justify;"><a href="http://www.chinadaily.com.cn/cndy/2011-03/14/content_12164777.htm"> (Pic Courtesy : China Daily)</a></span></td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
வார இறுதிகளில் நண்பர்களுடன் அல்லது இல்லத்தினருடன் சென்று ஒரு மூன்று மணி நேரம் செலவு செய்துவிட்டு உடலை மனதையும் புத்துணர்வு செய்து திரும்பும் ஒரு பொழுது போக்கிடமாக அவற்றை அமைத்துள்ளனர். முழுவதுமாக உள்ளுக்குள் (Indoor) சுடுநீர் தண்ணீர் குளங்கள், குளிர் நீர் குளங்கள் மற்றும் சுடுகல் சூட்டு அறை (Sauna) உடல் வியர்க்க, நீராவி அறை இவற்றை முடித்துவிட்டு, ஓய்வெடுக்க தொலைகாட்சி அறை, அங்கு அருகே பாணங்கள் சிற்றுண்டிகள், மென்மது (Beer) எல்லாம் கிடைக்கக் கூடிய Bar வசதி மற்றும் விரும்பியவர்களுக்கு கட்டணம் செலுத்தினால் தசைப்பிடித்துவிடுவது (Massage) ஆகிய வசதிகள் இருக்கும். சிங்கப்பூர் மலேசிய நாடுகளில் பெண்களுக்கான SPA குறைவு, ஆனால் ஆண்களுக்கு நிறையவே உள்ளது. இவற்றிற்கும் சீனா, தைவான்,கொரியா மற்றும் ஜப்பான் SPA க்குளுக்கும் பெரிய வேறுபாடு அங்கு ஆடை தான். சிங்கப்பூர் மலேசிய ஆண்களுக்கான SPA க்களில் சிறிய வகை நீச்சல் கால்சட்டைக அணிந்திருப்பார்கள். மற்ற ஆசிய நாடுகளில் ஏதுமற்ற (Nude/Naked) ஏகாந்த ஜென் (ஜைன) நிலை தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
40ஐ கடந்த எனது அகவை மற்றும் துய்ப்புகளை கருத்தில் கொண்டு கீழ்கண்டவற்றை எழுதுவதற்கு எனக்கு சற்றும் கூச்சம் எதுவுமில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
******</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAjbRW7myi9uju6vkOMypnfuBm9ObtVckePcimfbjm6N0SH5CvDIX_JVAm8Uk3Zgx1FeyeY2OD12qq4uDg01GgxLarHvAdrG0jVT5RgYu24HIgn6ArK9iJKXJV8ZtqraAPusu5/s1600/sushou+spa.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAjbRW7myi9uju6vkOMypnfuBm9ObtVckePcimfbjm6N0SH5CvDIX_JVAm8Uk3Zgx1FeyeY2OD12qq4uDg01GgxLarHvAdrG0jVT5RgYu24HIgn6ArK9iJKXJV8ZtqraAPusu5/s1600/sushou+spa.jpg" height="320" width="288" /></a>ஏகாந்த நிலையை துய்க்கும் வாய்ப்பு முதன் முதலில் மூன்றாண்டுக்கு (2012) முந்தைய சீனப் பயணத்தில் தான் கிட்டியது, தங்கியிருந்த 4 நட்சத்திர விடுதியில் இருந்தது SPA, அங்குள்ளே எப்படி இருக்கும் என்று ஆர்வத்தில் சென்றேன், முதலில் உடமைகளை பூட்டி வைக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு சென்றதும் உடமைகளை வைத்துவிட்டு, உடைகளை களையச் சொன்னார்கள், கழட்டிவிட்டு உள் ஆடையில் நின்றேன், அதையும் கழட்டுமாறு அங்கு உதவி செய்யும் சீனர் சொன்னதும் கண்கள் சுறுக்கி இமைத்து 'திக்' ஒரு கூச்சம், திரும்பிவிடலாமா என்கிற எண்ணம், பிறகு இங்கு தான் நமக்கு தெரிந்தவரோ, இந்தியரோ தமிழரோ இல்லையே என்று தேற்றிக் கொண்டு முற்றிலும் களைந்தவுடன் உள்ளுக்குள் கூட்டிச் சென்றார். மஞ்சள் நிற ஆண் குழந்தைகள் அப்படியே 5 - 6 அடிக்கு வளர்ந்தது போல் பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வயது சீன ஆண்கள் ஜென் நிலையில் குளித்துக் கொண்டும், படுத்து ஓய்வெடுத்துக் கொண்டும் இருந்தனர், அங்கு கருநிறத்தில் நுழைந்த என்னை ஒரு முறை வியப்பாக பார்த்ததுடன் சரி, <span style="text-align: left;">பின்னர் பார்வையை மீட்டுக் கொண்டனர், ஒட்டுத் துணி கூட இல்லாத நிலையில், அருகே ஷவரில் நின்று குளித்துவிட்டு விரைவாக சென்று சுடுநீர் உள் நீச்சல் குளத்தில் (Indoor Hot spring Pool) தண்ணீரில் இறங்கி, தண்ணீரையே ஆடை ஆக்கிய ஒரு சில நிமிடங்கள் நானும் கூச்சம் மறக்க, மனதிற்கு இதமான சுதந்திர உணர்வுடன் உற்சாகம் தொற்றிக் கொள்ள, கூட்டில் இருந்து விடுதலை அடைந்த ஒரு பறவையின் மன நிலைக்கு மாறி அதனுள் அங்கும் மிங்கும் நீந்தி மகிழ்ந்தேன். அந்த சூழல் மறக்க இயலாததாகவும், பின்னர் நினைக்க அது போன்ற வாய்ப்பு இனி எப்போதோ என்ற ஏக்கமாகவும் இருந்தது.</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*****</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சென்ற வாரம் ஜப்பான் செல்லும் வாய்ப்பு, மூன்று மாதம் முன்பு திட்டமிட்ட ஒன்று தான், அங்கு வேறு சில வேலைகள் இருந்தாலும், ஏற்கனவே ஜப்பான் SPAக்கள் புகழ்பெற்றவை என்று அறிந்திருந்ததால், அங்கு சென்று வரவிரும்பி சிறந்த SPAக்களில் ஒன்றான <a href="http://www.spaworld.co.jp/english/">SPA World</a> அதன் மிகச் சிறந்த வசதிகளுக்காக தேர்ந்தெடுத்து சென்றேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwE-jZYBQn4kjxxoVSAo4V07kMLb-oY8oFpohYN2TXe-qmSLr-WVLOL3Y2GzAQChRFjxyek2zg698MJ2Yi_k-Oh0IgrK3zc6LcVNlcShjD74PplnjMntQnVQgD9wIrhsZLVtBx/s1600/locker.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwE-jZYBQn4kjxxoVSAo4V07kMLb-oY8oFpohYN2TXe-qmSLr-WVLOL3Y2GzAQChRFjxyek2zg698MJ2Yi_k-Oh0IgrK3zc6LcVNlcShjD74PplnjMntQnVQgD9wIrhsZLVtBx/s1600/locker.jpg" height="267" width="320" /></a>ஒரு நாள் முழுவதுமே அங்கிருக்க கட்டணம் குறைவு தான் இந்திய ரூபாய்க்கு 1200 என்ற அளவில் தான், உள்ளே நுழைந்தது, ஷூவை கழட்டி பூட்டி வைத்துவிட்டால், எண்ணுடன் கூடிய கையில் அணிந்து கொள்ளும் Strap Tag உடன் ஆண்களுக்கான 4 ஆம் தளத்திற்கு செல்ல வேண்டும். பெண்களுக்கு 6 ஆம் தளம் (Asian Zone), ஒவ்வொரு மாதமும் ஆண்கள் தளமும் பெண்கள் தளமும் மாறும், நான் சென்ற பிப்ரவரியின் பொழுது 4 ஆம் தளம் ஐரோப்பிய அமைப்பு (European Zone) ஆண்களுக்கானது, ஆறுவயதுக்குட்பட்ட ஆண் பெண் குழந்தைகள் எந்த தளத்திற்கும் பெற்றோர் ஒருவருடன் செல்லலாம். ஆண்களுக்கான 4 ஆம் தளத்தில் நுழைவாயிலை தாண்டியதும் அங்கு உடைமாற்றும் பகுதி, அங்கு நுழையும் போதே ஒரு சில அம்மணர்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர், கிட்டதட்ட 500 பேர் உடமைகளை பூட்டி வைக்கும் வைக்கும் Locker Room அமைந்த பகுதி, அ<span style="text-align: left;">ந்த தளமும் மிகப் பெரியது, பல்வேறு குளிப்பு வகை வசதிகளை உள்ளடக்கியது, கீழ்தளத்தில் வழங்கிய தனிப்பட்ட ஆடையை மூன்றாம் தளத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அணிந்து கொள்ள வேண்டும். அணிந்து கொண்டு முதலில் மூன்றாம் தளம் செல்ல முடிவெடுத்து சென்றேன்.</span></div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQrXMbLrahQuVIjouLQN9aieWTIBLSOTBuvPtw7Uz3OI6babOdWb6_Q7t14LD9s7Ao_yWOUor2QorzxfHt-_8sAHsQQAW59Mamo7-qH4oduTWqd3uHVgTBGqXJVFG-cEwyxbdi/s1600/GanBan.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQrXMbLrahQuVIjouLQN9aieWTIBLSOTBuvPtw7Uz3OI6babOdWb6_Q7t14LD9s7Ao_yWOUor2QorzxfHt-_8sAHsQQAW59Mamo7-qH4oduTWqd3uHVgTBGqXJVFG-cEwyxbdi/s1600/GanBan.png" height="400" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Ganban Yoku</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மூன்றாம் தளத்தில் ஆண்கள் பெண்களுக்கு பொதுவான சுடுகல் Stone SPA அதனை Ganban's Yoku என்ற ஜப்பானிய பெயரில் அழைக்கிறார்கள், அதற்கான தனிப்பட்ட ஆடையை அணிந்து அங்கு செல்ல வேண்டும், அதில் பல நாடுகளில் உள்ள சுடுகல் SPA அமைப்பும் அதற்கான தனித் தனி அறைகளும் அதற்கான வெப்ப நிலைகள் மற்றும் அலங்கார அமைப்புகளுடன் உள்ளது, ஒரு அறையில் 20 பேர் வரை ஓய்வெடுக்கும் அளவில் உள்ளது, மெல்லிய இசையும், இதமான மணமும், படுத்துக் கொள்ள அல்லது அமர்ந்து கொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டிருந்தது, மையப்பகுதியில் படுத்துக் கொண்டு ஒய்வெடுக்கும் மிக அற்புதமான வான் கூறையில் நட்சத்திரங்கள் அமைக்கப்பட்ட நடுக்கூடமும் இருந்தது, அருகில் உணவு மற்றும் குளிர்பான கடைகள் இருந்தன. அந்த பகுதியில் ஒவ்வொரு அறைக்கும் 5 - 10 நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு ஒரு மணி நேரம் களி(ழி)த்து நான்காம் தளத்தில் இருக்கும் ஆண்களுக்கான Onsen - japan hotspring spa பகுதிக்குள் மீண்டும் வந்தேன். Onsen என்றால் ஜப்பானிய மொழியில் வெந்நீர் ஊற்று அல்லது ஆங்கிலத்தில் Hot Springs எனப்படும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அங்கு உடைகளையும் களைந்து அங்கு பூட்டி வைத்து விட்டு, அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததில் இருந்து இரண்டு கைக்குட்டையை சேர்த்தால் இருக்கும் நீளத்தில் இருக்கும் ஒரு மஞ்சள் துண்டு அதை எடுத்துக் கொண்டு குளியல் பகுதிக்குச் செல்லவேண்டும், அந்த துண்டு இடுப்பு சுற்றளவுக்குக் கூட வராது, உடுக்கை இழந்தவன் கை அளவுக்கு வேண்டுமென்றால் மறைத்துக் கொள்ளலாம், வெப்ப அறையில் இருக்கும் பொழுது தண்ணீரில் நனைத்து அந்த துண்டை போட்டுக் கொள்ளலாம், தலையில் சூடு ஏறாது. மற்றபடி அந்த துண்டு சுருட்டினால் அம்மண உடலை மறைக்கும் கை அளவு கூட இல்லை,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Onsen - Hotspring பகுதிக்கு செல்லும் முன் உடலும் தலையும் நனைய குளித்துவிட்டு செல்ல வேண்டும், பொதுவாகவே ஆசிய நாடுகளின் நீச்சல் குளத்திற்கு இறங்கும் முன் குளித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அறிவுறுத்தல், உடலில் உள்ள வியர்வை மற்றும் அழுக்குகளை போக்கிவிட்டு பொதுக் குளத்தில் இறங்கினால் அங்கு குளிக்கும் மற்றவர்களுக்கு அருவெறுப்பு வராது என்பதால் இந்த ஏற்பாடு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
முதலில் சென்ற குளம் பழங்கால ரோமா புரி அமைப்பில் அமைக்கப்பட்ட பகுதியின் Hotspring, அங்கு இடுப்பளவு சுடுநீர் அதில் 15 பேர் வரை அமர்ந்திருந்தனர், அதில் சில அப்பாக்களும் அவர்களுடைய மகன்களும் ஆறுவயதிற்கு குட்பட்ட பெண் குழந்தைகளும் அடக்கம், <span style="color: #38761d;"><b>ஆறுவயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆடையற்ற பருவ வயதினரின் உடல் எந்த கவர்ச்சியையும் ஏற்படுத்தாது என்பதால் ஆசிய நாடுகளின் குளியல் அறைகளில் ஆண்கள் பெண்கள் பகுதிக்கு அவர்களால் கட்டுபாடின்றி சென்றுவர முடியும். ஆசிய நாடுகளில் குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து குளிப்பது வழக்கம். ஒரு சில விடுமுறை நாட்களில் மகனுடன் சேர்ந்து நானும் குளிப்பது உண்டு. குழந்தைகள் கள்ளம் கபடம் அறியாதவர் மட்டுமின்றி, அவர்கள் வளர்ந்தாலும் பெற்றோரின் நிர்வாண உடல் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை, படுத்த படுக்கையாக பெற்றோர் இருக்கும் பொழுது அவர்களுக்கு உடைமாற்றிவிட எந்த கூச்சமும் இல்லாமல், முகம் சுளிக்காமல், அருவெறுப்பு இல்லாமல் அன்புடன் செய்ய முடியும், பாலியல் உறுப்பு அனைவருக்கும் இருக்கும் என்று குழந்தை பருவத்திலேயே தெரியவருவதாலும் பார்த்து வருவதாலும் வளர்ந்த பிறகும் ஆண் - ஆண் அல்லது பெண் - பெண் ஓரின இனக்கவர்ச்சி அக்குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அவை குறைக்கிறது</b></span>.</div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_AHneeSvxeXAS5fTM9UwmAYaPJohBN64T9H3lqTxLlGtK7a00zwLbd2mRhR5hLQZB3DgYGqlgKzr-FfM4jIaE93m63lkSx5P5fOHnJdr_YtfILc9LWC21ZLJwIB_-2sCH-Ntp/s1600/Onsen.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_AHneeSvxeXAS5fTM9UwmAYaPJohBN64T9H3lqTxLlGtK7a00zwLbd2mRhR5hLQZB3DgYGqlgKzr-FfM4jIaE93m63lkSx5P5fOHnJdr_YtfILc9LWC21ZLJwIB_-2sCH-Ntp/s1600/Onsen.png" height="620" width="640" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">SPA World - Onsen European Zone</td></tr>
</tbody></table>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒருமுறை நீரில் மூழ்கிவிட்டு இடுப்பளவு தண்ணீரில் அமர்ந்து கொண்டேன், ஆடைகளுக்கு மாற்றாக நீந்தும் செதில் முளைத்த மீனின் புத்துணர்வை உணர்ந்தேன். யாரும் யாரையும் இடுப்புக் கீழ் வெறித்துப் பார்க்கவும் இல்லை, அளவு ஆய்வும் செய்யவில்லை, அம்மணமே என்றாலும் எல்லோரும் வெகு இயல்பாகவே இருந்தனர். இந்தியாவில் ஏன் இது போன்ற இடங்கள் இல்லை, அம்மணம் என்பதே துறவிகளுக்கானது என்று மட்டுமே நம்புகிறார்களோ ? என்றெல்லாம் நினைத்தேன், அங்கு பல்வேறு குளங்களில் கிட்டதட்ட 150 ஆண்கள் அதில் குழந்தைகளும் அடக்கம். வெப்பம் 40 Deg, Hotspring குளியல் பரிந்துரைபடி 10 நிமிடம் வரையில் அந்த தண்ணீரில் இருக்கலாம், பின்னர் வெப்ப அறையிலோ, நீராவி அறையிலோ ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வேறு ஒரு Hotspring பகுதிக்குச் செல்லலாம். ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு நாடுகளின் Hotspring குளியல் முறைபடி அமைக்கபட்டிருக்கும் குளங்களும், மிகவும் குளிர்ந்த நீர் (19 Deg) குளங்களும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Hotspring தண்ணீரில் உட்கார்ந்து ஓய்வெடுப்பது, படுத்து ஓய்வெடுப்பது, தனிப்பட்ட சிறிய தொட்டியில் அமர்ந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு அளவும் உயரமும் உள்ள அமைப்புகள் அங்கிருந்தன. ஒவ்வொன்றிலும் உப்புத் தண்ணீர், கந்தக தண்ணீர் மருந்து தண்ணீர் உள்ளிட்ட பல வகை குளங்கள், அவற்றில் வழியும் நீராக (Flowing / Over Flow Water) வந்து கொண்டே இருக்கும், எனவே யாரும் சிறுநீர் கழித்து இருப்பார்களா தண்ணீர் கெட்டு இருக்குமோ என்று ஐயப்படத் தேவை இல்லை. Hotspring க்கு செல்ல உடல் நிலை பரிந்துரைகள் உண்டு, எனவே நோயாளிகள் வந்திருப்பார்கள், தொற்று நோய் ஏற்படும் என்கிற அச்சமும் தேவை இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விருப்பட்டவர்களுக்கு கட்டண உடல் பிடிப்பு சேவைகளும் இருந்தன, அனைத்து சேவையாளர்களும் பெண்கள் அவர்கள் ஆண்களின் அம்மண உடலுடன் அப்பகுதிக்குச் செல்வதை பொருட்படுத்துவதும் இல்லை, மருத்துவ சேவை போன்று இதையும் செய்கிறார்கள். உள்ளுக்குள் செயற்கை சுடுநீர் அருவி உண்டு, அங்கு சுற்றிலும் சுவர் அமைப்பு வானத்தைப் பார்க்கலாம், வெளியில் இருந்து பார்பவர்களுக்கு தெரியாதபடி சுவர் அமைப்பு, ஆனால் வெளி உலகில் (Open / outdoor) இருப்பது போன்று நமக்கு உணர்வை ஏற்படுத்தும். சுடுநீர் கொட்டும் அருவியில் நின்றால் அதன் விழும் வேகத்தில் உடல் வலி போய்விடும், அங்கும் 10 நிமிடம் வரை குளிக்கலாம். தளத்தின் நடுவே குளிர்பானங்கள் மற்றும் பியர் விற்கும் கடை, மேசைகள் போட்டு இருப்பார்கள், மேசைக்குக் கீழே கால் நனையும் அளவுக்கு வெது வெதுப்பான தண்ணீர், நனைத்துக் கொண்டே குளிர்பானத்தை ரசித்து குடித்து ஓய்வெடுக்கலாம், எல்லாம் அம்மண நிலையில் தான். உள்ளே எதுவும் வாங்குவதற்கு பணம் தேவை இல்லை, எல்லாம் கையில் அணிந்துள்ள Locker Tag Scan வழியாகத்தான், வெளியேறும் போதனது காட்டும் செலவை கட்டிச் செல்லவேண்டும், தனிமனித உணர்வு (ப்ரைவசி) மதிக்கப்படுவதால் உள்ளுக்குள் படம் எடுக்கவும் அனுமதி கிடையாது</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெப்ப அறையிலோ (Sauna), நீராவி (Steam) அறையிலோ ஓய்வெடுக்க அமரக்கூடிய நீள மரமேசை அமைத்திருந்தார்கள், அதில் வெள்ளை பூ டவல் (ட்ர்கி டவல்) போடப்பட்டிருந்தது, அதன் மீது நேரடியாக அமராமல் உட்காருவதற்கு மெல்லிய ரப்பர் சீட்டுகளை (Silicon Seat) பயன்படுத்திக் கொள்ள வேண்டும், Hygenic அல்லது தூய்மை பேன அத்தகைய ஏற்பாடு. தலை </div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="float: right; margin-left: 1em; text-align: right;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe7-9qxlXDvWXyltvUvC63TBCbLGnva25B01DvEYDR3FMBmvKEmVWZvbrtZRl8H2lasA7hSfgPktol0QowRUd7aiWfXN1DnJM1K88ZVb50PmAaO_srePMr6hn7acfzZW903SLK/s1600/sauna.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe7-9qxlXDvWXyltvUvC63TBCbLGnva25B01DvEYDR3FMBmvKEmVWZvbrtZRl8H2lasA7hSfgPktol0QowRUd7aiWfXN1DnJM1K88ZVb50PmAaO_srePMr6hn7acfzZW903SLK/s1600/sauna.jpg" height="212" width="320" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Sauna</td></tr>
</tbody></table>
முடியும், தலையும் மிகுந்த சூடாகமல் இருக்க கையில் இருக்கும் மஞ்சள் துண்டை நனைத்து தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும், Sauna அறையில் இருக்கும் போது தேமே...என்று ஓய்வெடுக்கும் கை.. 'உடுக்கை இழந்தவன் கை' எடுத்துக்காட்டு இந்த இடத்தில் நட்புக்கு பொருந்தாதே என்றெல்லாம் நினைத்தேன்.<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அந்த Onsen - Hotspring இரண்டு மூன்று மணி நேரம் செலவிட்டாலும் நேரம் செல்வது தெரியாது, இறுதியாக ஜப்பானிய பாணி குளியல், அதில் சிறிய ஸ்டூலில் உட்கார்ந்து தண்ணீர் பிடித்து, சோப்பு தேய்த்து குளித்துவிட்டு, சிலர் அங்கேயே முகச் சவரம் செய்து கொள்கிறார்கள், நான் அங்கிருந்த மூன்று மணிநேரம் இந்திய ஆண்கள் எவரையும் காணவில்லை, (ஒசாகா சென்று திரும்பும் வரையில் கூட வெளியேயும் இந்தியர் எவரையும் பார்க்கவில்லை) பின்னர் அப்படியே ஒப்பனை அறைக்கு வந்து நன்றாக துவட்டிவிட்டு, தலைவாரிக் கொண்டு, உடல் எடையை பார்த்துவிட்டு, ஆடைகள் இருக்கும் இடத்திற்கு சென்று ஆடைக்குள் சிறைப்படுத்திக் கொண்டு வெளியே வந்தேன். அப்பாடா....என்ன புத்துணர்வு...என்ன சுகம். எந்த செயற்கையும் சுற்றாத அம்மண உடல்களும் அழகானது, புனிதமானது தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*****</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நாட்டுக்கு நாடு உடலில் ஆடையின்மை குறித்து பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு, <b>குடிகாரன் விழுந்து கிடக்கும் பொழுதும், தன் நினைவற்று சுருண்டு கிடக்கும் மனவளர்ச்சி குன்றியவர்களிடம் துணி விலகி இருக்கிறதா என்று ஒருமுறையேனும் பார்க்கும் மனநிலை நம்மில் பலருக்கும் உண்டு</b>, பொதுவாகவே வீட்டுக்குள்ளோ, விடுதியிலோ <b>தனியாக இருக்கும் பொழுது ஆடையின்றி இருக்க விரும்பும் ஆண்களின் மனநிலை</b>. இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் குறைவே. நீலப்படங்களையும் நிர்வாண உடல்களையும், ஆடையையும் ஊடுறுவி பார்த்து மிகுதியாக ரசிப்பதெல்லாம் உடைக்காட்டுப்பாடு மிக்கதாகவும் கூறிக் கொண்டே, உடை நாகரீகம் பற்றி வாய்கிழிய பேசி பேசியும், பண்பாடுகள் பாரம்பரியம் பற்றி பெருமையாக பேசும் நாடுகளில் உள்ளோரே மிகுதி. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*******</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTtnn4n3TQnUzXxDWNiFW51dW_pxbHe-TcxNtscHICe9Kb9Vyzs7HxR2Bmk0dS26V5SRdK9p9pxwEIPGv845TGwme7g1Fb7DaEBlqJN4d2CEzKLctsCMUaKy5wfRCEZAIlyJCn/s1600/IMG_1931.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTtnn4n3TQnUzXxDWNiFW51dW_pxbHe-TcxNtscHICe9Kb9Vyzs7HxR2Bmk0dS26V5SRdK9p9pxwEIPGv845TGwme7g1Fb7DaEBlqJN4d2CEzKLctsCMUaKy5wfRCEZAIlyJCn/s1600/IMG_1931.JPG" height="480" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஜப்பானிய Hotspring குளியல் எனக்கு ஒரு மாறுபட்ட அனுபவம், . ஒரு சில மணித்துளிகள் அங்கே அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்து பறந்து செல்லும் மன நிலையில் இருந்தேன், வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய ஒன்று, எனக்கு அந்த நல்லூழ் வாய்த்தது.<br />
<br />
இணைப்பு : <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE">ஸ்பா (தமிழில்)</a> - தமிழ் விக்கிபீடியா</div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-10267267.post-32987815109012605472014-09-13T23:08:00.001+08:002014-09-21T20:51:46.043+08:00குழந்தைகள் பெற்றோருடன் உறங்கலமா ? 18+<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
ஹோம் சிக் எனப்படும் பெற்றோரின் நினைவு நம் தமிழக / இந்தியர்களுக்கு தான் மிகுதி, பருவ அகவையை கடந்தும் பெற்றோரை விட்டு இரண்டு நாள் பிரிவு கூட மன உளைச்சலையும் ஏக்கத்தையும் ஏற்படுத்திவிடுவதால் எதற்கு சென்றோமோ அதை நிறைவாக செய்து திரும்ப மாட்டார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கூட்டுக் குடும்பம் என்னும் அமைப்பில் இருந்து நாம் விலகி 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது, கூட்டுக் குடும்பமாக வசித்த காலங்களில் பெற்றோர்களுடன் குழந்தைகள் உறங்குவது கிடையாது. பால் குடி மறக்கும் வரை பெற்றோருடன் படுத்திருக்கும், பிறகு தத்தா பாட்டியுடன் தான் உறங்குவார்கள், 6 ஆம் அகவைக்கு மேல் வசிக்கும் அறையில் (ஹால்) மற்ற பெரியப்பா, சித்தப்பா குழந்தைகளுடன் சேர்ந்து படுத்துக் கொள்வார்கள், 8 ஆம் அகவைக்கு மேல் ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் தனித் தனியாக குழுவாக உறங்குவார்கள், பருவ வயதை அடைந்ததும் தனி அறை வசதி இருந்தால் அதில் உறங்குவார்கள், பெரும்பாலும் பருவத்தை கடந்த ஓரிரு ஆண்டுகளில் திருமணமும் முடிந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நம் அப்பா காலத்திலேயே கூட்டு குடும்ப அமைப்பில் இருந்து நாம் விலகியாகிவிட்டது, நடுத்தர வர்கம் என்னும் கோட்டில் ஓரறை வீடுகளில் (ஒரு படுக்கை அறை மற்றும் ஒரு ஹால் வசதி கொண்டதில்) வசித்து தான் நம்மில் பெரும்பாலோர் படித்து வளர்ந்திருப்போம், குழந்தைகளை தனித்து படுக்க வைத்தால் இரவில் அச்சமடையலாம் என்பதால் பெற்றோர்களுடன் தான் இரு குழந்தைகளும் உறங்கும் படி பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள், இதில் இருக்கும் சிக்கல் பெற்றோரான கணவன் - மனைவியுடன் ஆன உறவு சீர்கெடுவதுடன். கணவன் மனைவி இருவருக்குமான பிணைப்பு குறைந்துவிடும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருமணமானவர்களின் படுக்கை அறை என்பது ஓய்வெடுக்கும் அறை மற்றும் பாலியல் தேவைக்கான வடிகால் என்பதைத் தாண்டி கணவன் மனைவி இருவருக்குமிடையேயான பேச்சு வார்த்தைகளும் அதன் மூலம் இருவரின் புரிந்துணர்வை வளர்க்கும் இடம், ஆனால் குழந்தைகளை கூடவே படுக்க வைத்திருப்பதால் பெற்றோர்களின் தனிமையும் அதை சார்ந்த விருப்புகளும் குழந்தைகள் தூங்கினால் இன்றி வாய்பே இருக்காது, குழந்தைகள் உடனேயே தூங்கிவிடாது, 9 மணிக்கு தூங்க வைத்தாலே கொட்ட கொட்ட விழித்திருந்து கதைகளை சொல்லக் கேட்டு 10 மணிக்கு தான் தூங்கும், அதற்குள் அசதியில் கணவனோ, மனைவியோ தூங்கி இருப்பர், </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திருமண மான ஆண்களைப் பொருத்த அளவில் பாலியல் தேவை என்பது அன்றாடம் தேவைப்படும் ஒன்று, அதை ஒரு மனைவியால் புரிந்து கொள்ள முடிந்தாலும் எதுவும் செய்ய இயலாத நிலையில் விடியற்காலையிலோ, வீட்டில் குழந்தைகள் இல்லாத பகல் பொழுதிலோ, எந்த ஒரு தூண்டலும் இல்லாத வேளைகளில் உறவு வைத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் இயல்பான பாலியல் இன்பம் தூய்பதற்கு மாற்றாக, கழிவறையைப் பார்த்ததும் ஏற்படும் சிறு நீருக்கான உந்துதல் போல் நேரம் கிடைக்கும் போது மட்டும் நடந்து முடிந்துவிடுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தலையணை மந்திரம் என்று மாமியார்கள் விமர்சனம் செய்யும் காலகட்டங்களில் கூட மண முறிவுகள் மிக அறிதாகவே நடந்தது, தற்காலத்தில் மிகுந்துவிட்டதற்கு காரணமே, கணவன் - மனைவி இடையே பேச்சு வார்த்தைகள் குறைந்து போய், பாலியல் தேவையின் தீர்வு, கடமை என்ற நிலைக்கு தள்ளப்படும் பொழுது, தேவையற்ற சிறு சொல்லும் சீண்டலும், கிண்டலாக ஏற்கப்படாமல் வெறுப்பாக மாற்றி நினைக்கப்பட்டு உறவுகள் சீர் குழைகின்றன, திருமணமான ஆண்களின் வெளி நாட்டமும் மிகுந்துவிடுகிறது, திருமணம் ஆன ஆண்களில் குறிப்பிட்ட விழுக்காட்டினர் கள்ளத் தொடர்புகளையோ, பாலியல் தொழிலாளியை நாடுவதையோ ஏற்படுத்திக் கொள்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
25 அகவைக்குள் திருமணம் நடந்தால் தம்பதியினரிடையே புரிந்துணர்வு மேம்பட இரண்டு ஆண்டுகள் குழந்தை பிறப்பை தள்ளிப் போட முடியும், ஆனால் இனிமே நமக்கு சந்தை மதிப்பு இல்லை என்னும் நிலையில் ஆண்கள் 30 அகவைக்கு மேலும் பெண்கள் 25 க்கு மேலும் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் குழந்தைப் பிறப்பு உடனடியாக நிகழவேண்டும் என்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றனர், குழந்தை உருவனாதுமே குழந்தைக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வில் தம்பதிகள் தள்ளிப்படுக்க நேர்ந்துவிட இயல்பான நெருக்கம் குறைந்துவிடும், குழந்தை பிறந்து ஒராண்டாகியும் அடுத்து உடனேயே ஏற்பட்டுவிட்டால் ? என்ன செய்வது என்பதில் தம்பதியினரின் நெருக்கம் குறைந்து இடைவெளி மிகுந்து கொண்டே வரும், பின்னர் குழந்தைகள் உறங்கட்டும் பிறகு பார்க்கலாம் என்று பாலியல் தேவையின் தீர்வு, வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குழந்தைகளை வெளிநாட்டினர் 3 ஆம் திங்களில் (மாதம்) இருந்தே தனித்து படுக்க வைத்துப் பழக்குகின்றனர், இதனால் தம்பதியினரின் நெருக்கம் எந்த விதத்திலும் பாதிப்பு அடைவதில்லை, குழந்தைகளின் மீதான அன்பும் குறைவதும் இல்லை, இந்திய பெற்றோர்களும் குழந்தைகளை தனியாக படுக்க வைக்கும் வசதியுடன் வீடு இருந்தால் படுக்க வைத்து பழக்கலாம், குழந்ந்தைகளின் நடவடிக்கைக் குறித்து, குழந்தைகளை அருகில் படுக்க வைத்துக் கொண்டு பேசவே முடியாது, ஒன்றாக படுக்கும் குழந்தைகள் பல வேளைகளில் நடு இரவில் கூட விழித்திருக்கும், குழந்தைதான் தூங்கி விட்டதே என்று நினைத்து தம்பதிகள் கூடினால், மறுநாள் தன்னுடன் படிக்கும் குழந்தைகளிடம் 'அப்பாவும் அம்மாவும் ராத்திரி கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்' என்று வெகுளியாக சொல்லிவிடும், சிறுவயதில் இது போன்ற பேச்சுக்களை நான் என் அகவையை ஒத்தவர் (7, 8 அகவையினர்) சொல்லக் கேட்டிருக்கின்றேன். எந்த குழந்தையும் பெற்றோர்கள் இருவரும் தன்னிடம் மட்டுமே நெருக்கமாக இருக்க வேண்டும் என்றே விரும்பும், இரவில் தப்பித் தவறி அம்மா அப்பா கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்களால் அதை ஏற்க இயலாது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நடு இரவின் அமைதியில் நாம் பெற்றோர்களுடன் படுத்தகாலங்களில் 'குழந்தைகள் தூங்கட்டும்...' னு அம்மா மெல்லிய குரலில் சொல்லுவதை காது கொடுத்திருப்போம், அதற்கான பொருள் நாம் பெற்றோர் அகவையை அடையும் பொழுது நினைத்தால், மிகவும் தாழ்வுணர்வை ஏற்படுத்துகிறது, பெற்றோரின் தனிமையும் அதற்கான தேவைகளை நாம் புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டோமே என்கிற வெட்கப்பட வைக்கிறது. அதே தாழ்வுணர்வை நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டாமே.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4N8m5DQsZq2bJ17FINJE_qMJV3Ue8uOsDCCXsj_akV-UCo-qgqL_d8KfQT6I_85t_I59hfIoLkPCkZEWQWLR1Is5zuh7EZhG8pmoJz7SXbpZ2s1Aj7Wl7twdUFtr4zX8RQu9G/s1600/images+(1).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4N8m5DQsZq2bJ17FINJE_qMJV3Ue8uOsDCCXsj_akV-UCo-qgqL_d8KfQT6I_85t_I59hfIoLkPCkZEWQWLR1Is5zuh7EZhG8pmoJz7SXbpZ2s1Aj7Wl7twdUFtr4zX8RQu9G/s1600/images+(1).jpg" height="567" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
குழந்தைகளுக்கு 6 அகவை வரை பாலியல் உறுப்பு பற்றிய விழிப்புணர்வும், அம்மணமாக நிற்பதின் கூச்சமும் தெரியாது, அதுவரை கூட பெற்றோர்களுடன் படுப்பதால் அதற்கு மன அளவில் பாதிப்பு ஏற்படாது, 6 ஆம் அகவைக்கு மேல் சுற்றி நடப்பவற்றை ஆராயும் எண்ணம் ஏற்படும், பெற்றோரின் உறவு காட்சிகளை பார்க்கும் நிலை ஏற்பட்டால் மன அளவில் பாதிப்பு அடையும். 5 அகவைக்கு மேல் குழந்தைகளை தனித்து படுக்க வைப்பதன் மூலம் அவர்களுக்கு தனிமை குறித்த அச்சம் நீங்கும், தன்னம்பிக்கை வளரும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
படுக்கை அறையின் தேவை கணவன் மனைவியினரிடையே புரிந்துணர்வை வளர்க்கும் இல்லத்தை மேம்படுத்தும் வீடு வாங்குதல், வசதிகளை மேம்படுத்திக் கொள்ளுதல் குறித்த பேச்சுவார்த்தைகான இடம், அதன் பிறகு பால் உணர்வு தீர்வு, அதில் முன் விளையாட்டு, ஒன்று கூடல் என தூங்கும் முன் ஒரு மணி நேரமாவது செலவிட்டு பின்னர் கட்டியணைத்தப்படி தூங்குவதால் இருவருக்குமான நெருக்கம் மேம்படும், அன்றாடம் முடியாவிட்டாலும் அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்டாலே தேவையற்ற பிணக்குகள் குறைந்து போய்விடும், வேலைக்கு செல்லும் மனைவியரின் நிலையை கணவர்கள் புரிந்து கொள்ள படுக்கை அறையை விட்டால் வேறு நேரமோ இடமோ வாய்காது. </div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCREKMG7ezZKauD6ntfwCpbP8uTQRXQd0B06tH91OEbmXDKoQNNDyUQjffb39tCN8Lk5VKuDt2tWHnGfRceY-lYbuOjSXt_DJBrmWXSDjn4HXg3HGe0dIepZFVeztQyy2cNBNQ/s1600/images.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCREKMG7ezZKauD6ntfwCpbP8uTQRXQd0B06tH91OEbmXDKoQNNDyUQjffb39tCN8Lk5VKuDt2tWHnGfRceY-lYbuOjSXt_DJBrmWXSDjn4HXg3HGe0dIepZFVeztQyy2cNBNQ/s1600/images.jpg" height="275" width="400" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
குழந்தைகளுக்காக பெற்றோர்கள் தங்கள் உணர்வுகளை அடக்கிக் கொள்ள வேண்டும் என்கிற வெகுளித்தனமான கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை, இல்லம் என்பதில் பலர் ஒன்றாக இருந்தாலும் தேவைகள் தனித்தனியானவை, ஒவ்வொருவரின் தேவைகளுமே கவனிக்கத் தக்கத்து, இன்றியமையாதது, அப்பா என்னும் ஆண்களைப் பொருத்த அளவில் தம் குழந்தைகள் மீது அன்பு இருக்கும் அளவுக்கு, மனைவியுடன் கூட விரும்பும் பாலியல் தேவைக்கான வடிகாலும் தேவைப்படும். மனைவியின் வெறும் முகத்தை மட்டுமே பார்த்து தூங்க ஆண்கள் விரும்புவதில்லை. சூழல்களை ஆண்கள் புரிந்து கொண்டாலும் ஏற்க விரும்புவதுமில்லை, நாளடைவில் உன் முகத்தை பார்க்கவே எனக்கு வெறுப்பாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள், அதே போன்று எது எப்படி இருந்தாலும் உங்களுக்கு அது தான் முக்கியமா ? என்கிற மனைவியின் ஏளனம் / இயலாமை / வெறுப்பு...இதை எதிர் கொள்வதை தவிர்க்க ஆண்களின் வெளி நாட்டம், அதன் பிறகு அவை வெளியே தெரிய மொத்தத்தில் இல்லத்தின் அமைதி குலையும். பொதுவாகவே பெருவாரியான ஆண்களின் அலையும் மனது சந்தர்ப்பத்திற்கும் காரணத்திற்கும் காத்திருக்கும், இதில் இரண்டில் எது வாய்த்தாலும் தவறு செய்துவிடுவார்கள், </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
***************</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வளர்ந்த குழந்தைகளை தனியாக படுக்க வைத்துப் பழக்கி, அங்கேயே சிறிது நேரம் இருந்து தூங்க வைத்துவிட்டு, தேவை ஏற்பட்டால் நடு இரவில் அவர்கள் நன்றாக உறங்குகிறார்களா, அருகில் தண்ணீர் இருக்கிறதா என்று எழுந்து வந்து பார்க்கலாம், ஒற்றைக் குழந்தைகளுக்கு கூடவே ஒரு பொம்மையை படுக்க வைத்தால், மிகவும் பிடித்த பொருள்களை வைத்துவிட்டால் அவர்களுக்கு தனிமை தெரியாது, அவர்களுக்கு உடல் நலமில்லாமல் இருந்தால் அவர்களின் அறையிலேயே அருகில் படுத்திருந்து பார்த்துக் கொள்ளலாம், விடுமுறை நாட்களில் பகலில் மடியில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்து குழந்தைகளின் அன்பு குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும், எங்காவது சுற்றுலா சென்றால் ஒன்றாக படுத்து உறங்கலாம், அதைவிடுத்து வீட்டிற்குள் குழந்தை பாசம் என்கிற உணர்வில் தம் உணர்வுகளை அழித்துக் கொள்வதால் தீமையே தவிர்த்து எந்த நன்மையும் இல்லை, கூடவே படுத்து பழகும் குழந்தைகள் ஒரிரு நாட்கள் கூட பெற்றோர் இல்லை என்றால் தங்கள் தேவையை தீர்த்துக் கொள்ளத் தெரியாது வளரும். நன்றாக குழந்தைகளை வளர்த்து, இல்லற இன்பத்தை நீட்டித்து வாழ விரும்புவர்கள் குழந்தைகளை தனியாக படுக்க வைப்பத்தால் கிடைக்கும் மிகப் பெரிய நன்மை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பி, வெளிநாடு சுற்றுலா சென்றால் அவரின் நான்கு குழந்தைகளுக்கும் தனி அறை தான் எடுப்பார், ஏன் என்று கேட்டேன், அவர் சொன்னார்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
My Husband also important for me, I have to / like to entertain him in the night, sleeping with children is nothing other than sleepless, So when ever we go for tour, I always prepare to book 2 bedroom residential apartment type hotel, instead of separate hotel rooms. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
Seems to be valid right ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-10267267.post-45775359532512608532014-09-06T00:55:00.000+08:002014-09-06T00:58:24.440+08:00திக தலைவர் திரு Dr வீரமணி ஐயாவின் அரிய படம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
தமிழக மூத்த அரசியல் தலைவர்களில் எனக்கு பிடித்த தலைவர்களில் திரு வீரமணி ஐயாவும் ஒருவர், ஐயாவின் அண்மையகால தமிழக அரசியல் சார்ந்த முடிவுகளில் எனக்கு உடன்பாடுகள் இல்லாவிட்டாலும், பெரியார் பற்றாளன் என்ற முறையில் வீரமணி ஐயாவின் மீது எப்போதும் மிகுந்த மரியாதை உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு முறை சிங்கப்பூருக்கு திருக்குறளில் இல்லற மேன்மை என்கிற தலைப்பில் அவர் பேச வந்த போது நானும் நண்பர் குழலி புருசோத்தமனும் அவரை சந்தித்தோம், பின்பு அவர் தங்கி இருக்கும் இல்லத்திற்கு சென்று அவரிடம் ஒரு 30 நிமிடம் பேசும் நல்ல வாய்ப்பும் கிடைத்தது, வழக்கமாக கருப்பு உடையில் பார்க்கும் அவரை வெள்ளை சட்டையில் பார்ப்பதற்கு எங்களுக்கும் வியப்பாகவே இருந்தது, கொஞ்சமும் தயக்கமின்றி படம் எடுக்கவும் அனுமதி அளித்தார், நான் அந்த படத்தை பொக்கிஷமாகவே பாதுகாத்து வந்தேன், எதாவது ஒரு நல்ல வேளையில் வெளி இட்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். இந்த இதழ் ஆனந்த விகடனில் ஐயா அவர்களின் நேர்காணலில் அவர் அணியும் மற்ற ஆடைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார், ஆனால் படம் எதுவும் வெளி வரவில்லை.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9VLlYNNqyZCu1udjAIoezwl0U4vEDUUfcFitsKkvzliwhabYl9pkjt9ADRQqKxgCDpabw611MjLCi6XTwGtQk8lqFfkHrBmTBXLkpQSot-6luMUffbsjJ326iMCMWihphlvs4/s1600/veeramani.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9VLlYNNqyZCu1udjAIoezwl0U4vEDUUfcFitsKkvzliwhabYl9pkjt9ADRQqKxgCDpabw611MjLCi6XTwGtQk8lqFfkHrBmTBXLkpQSot-6luMUffbsjJ326iMCMWihphlvs4/s1600/veeramani.png" height="136" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வலைப்பதிவு வாசிப்பவர்களுக்கே அந்த அரிய வாய்ப்பு. ஐயாவுக்கு தெரிந்தாலும் தவறாக கொள்ளமாட்டார் என்று எண்ணியே இந்த படத்தை இங்கு வெளியிட்டுள்ளேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF0Xlx2LK5AMzhHlQv1Izk_JN0KBx3d_BA3VH3dFZSbdOQsVK8AgU0lri8P7oSy9Bv9ElV7BPJKHdMZp5hBqMYiGjePyNpc-fPsPfOOtF4jzIG_2sCWtgvOm9u_k8iCFnO641X/s1600/IMG_2167.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiF0Xlx2LK5AMzhHlQv1Izk_JN0KBx3d_BA3VH3dFZSbdOQsVK8AgU0lri8P7oSy9Bv9ElV7BPJKHdMZp5hBqMYiGjePyNpc-fPsPfOOtF4jzIG_2sCWtgvOm9u_k8iCFnO641X/s1600/IMG_2167.JPG" height="480" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-10267267.post-58130234005669621442014-09-02T00:14:00.000+08:002014-09-02T00:37:56.526+08:00Who is செல்லாத்தா ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
என்னுடைய மனம் புண்பட்டது, அதனால் தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன், கட்டுரையைப் படிக்கும் பலரில் சிலரது மனமும் புண்படலாம், அப்படி புண்பட்டால் ? முதல் வரியை படிக்கவும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழன் இந்து தேசிய நீரோட்டத்தில் கரைந்து போகும் விதமாக பிள்ளையார் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடிவருகிறான். பகுத்தறிவாளர்கள் பிள்ளையார் தோன்றிய 'அழுக்கு' கதைகளை எடுத்துச் சொன்னாலும் வழிபாடுகள் புறக்கணிக்கப்படுவதில்லை மாறாக ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்தே வருகின்றன. 'மதம்' என்ற சொல்லும் யானைக்கும் தொடர்பிருப்பதால் தானோ, யானை முக பிள்ளையார் வழிபாடு எழுதப்படாத மதவெறி விழாகவாக பல இடங்களில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. தமிழர்களுக்கென்றே தனிப் பெருமையும் குலவழிபாட்டு அம்மன் தெய்வங்களுக்கும், தொன்று தொட்ட மாயோன் சேயோன், சிவ வழிபாடுகளும் இருக்கும் பொழுது, பொது தெய்வம் என்ற கட்டமைப்பில் ஆரியமயமாக்கப்பட்ட / வேத தெய்வமாகக் காட்டப்பட்ட வடிவங்களை மட்டுமே வணங்குவது வளர்ந்த நாகரீகப் பண்பாடுகள் போல் கிராம தெய்வமான முனீஸ்வரனுக்கும் பூணூல் அணிவித்து சைவ படயலிட்டு வணங்கி வருகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழகத்தில் பரவலாக கட்டப்பட்ட 108 வைணவ ஆலயங்களும், 108 சிவாலயங்களும், அவற்றிற்கான பஞ்சமி நிலங்களும் படிப்பு வழி வேலை அல்லது நிரந்தர வேலை வாய்ப்பு இல்லாத காலங்களில் குறிப்பிட்ட பிரிவினரின் வயிற்றுப்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவை. இவற்றில் முருகனின் அறுபடை வீடுகளும் அடக்கம், 19 ஆம் நூற்றாண்டு துவக்கம் வரை அஹ்ரகாரங்களில் பஞ்சம் பசி பட்டினி என்பதே கிடையாது. தாது வருட பஞ்சத்தில் மாண்டோர் எல்லாம் அஹ்ரகாரம் சாராதோர்களே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழர்கள் வஞ்சப் புகழ்ச்சி அணியை இலக்கணத்தில் படித்திருந்தாலும், அது மிகவும் நுட்பமாக கட்டப்பட்டு திணிக்கப்படும் பொழுது அறியாமையால் அவற்றை உண்மை என்றும், தாம் தாழ்த்தப்படுகிறோம் என்கிற அறியாமையால் அவற்றையும் போற்றுகின்றனர், உதாரணத்திற்கு தமிழர் பழம் பெரும் தெய்வமான முருகனுக்கு அறிவு குறைவு என்பதால் அம்மையப்பன் தான் உலகம் என்று உணராது புற உலகை சுற்றிவிட்டான், ஞானப் பழம் பெரும் தகுதியற்றவன் என்கிற கதையை 'சிவபெருமானின் திருவிளையாடல்' கதை என்று சிலாகிக்கின்றனர். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டு வணங்கப்பெரும் முருகனை பொது ஆண்டு (கிபி) யில் அறிமுகப்படுத்த பிள்ளையாருக்கு தம்பி என்றாலும் ஏற்கின்றனர். அது எப்படி முன்னடி அறியப்பட்டவனுக்கு பின்னால் வந்தவன் தம்பியாவான் ? <a href="http://en.wikipedia.org/wiki/Ganesha">வட இந்தியாவில் கந்தன் என்று சொல்லப்படுவன் பிள்ளையாருக்கு அண்ணன்,</a> அங்கு பிள்ளையாரும் இருமனைவிகளுடன் திருமணமானவர், தமிழர்களுக்காகவே முருகன் பிள்ளையாருக்கு தம்பி என்றும் பிள்ளையார் மணமாகதவர் (பேச்சிலர்) என்று சொல்லப்படுகிறது. நம்ம தமிழக வழக்கத்தில் அண்ணனை விட்டு அல்லது முன்பே தம்பி திருமணம் செய்து கொள்வானா ? </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3dKHd8V3HbqQNd9iKtg90GcWNTCygWPfI8mv5R0Q4BhtGZXkUbYf1M5CZ6n9YGThhavZCbqbrIcti1c0MSU3IqnN9Pg4CFEYtJXJvzYnLNESugtwumeze5d4t9kvprQFUrHSo/s1600/ganesha.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3dKHd8V3HbqQNd9iKtg90GcWNTCygWPfI8mv5R0Q4BhtGZXkUbYf1M5CZ6n9YGThhavZCbqbrIcti1c0MSU3IqnN9Pg4CFEYtJXJvzYnLNESugtwumeze5d4t9kvprQFUrHSo/s1600/ganesha.png" height="268" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தவிர நமக்கெல்லாம் நன்கு தெரியும் குறிஞ்சி நிலம் சார்ந்ததே முருக வழிபாடு, குறிஞ்சி, குற்றால குறவஞ்சி ஆகியவை முருகனோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவை, இயல்பிலேயே குறவஞ்சி வள்ளி தான் முருகனின் ஒரே மனைவியாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் வேதக் (கட்டுக்) கதைகளில் தேவேந்திரனின் மகள் தேவயானி தான் முதல் மனைவி என்றும் தாழ்ந்த குலத்து வள்ளி இரண்டாம் மனைவி என்று சொல்லப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அடிப்படை அல்லது பண்பாட்டுக் கூறுகள் எதையும் ஆராயும் சிந்தனை எதுவுமின்றி, தமிழர் குறித்து தமிழர்களுக்கு சொல்லப்படும் தமிழர்கள் அல்லாதோரின் கதைகளை அப்படியே தமிழர்கள் நம்புவது வேறெந்த இனத்தினரும், மொழியினரும் செய்யாத ஒரு மூடத்தனம் என்று கூறுவதைத் தவிர்த்து வெறென்ன சொல்வது ?</div>
<div style="text-align: justify;">
<br />
தமிழ்நிலத்தில் பன்னெடுங்காலமாக மாரியம்மன் வழிபாடு, கோடைக்கு பிறகு மழைவேண்டி, அறுவடை இல்லாத ஓய்வுகாலமான கோடைகாலத்தில் கொண்டாடப்படுகிறது, மாரி என்றால் மழை.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
பின்னர் வேதவழி தெய்வம் என்று கூற புனையப்பட்ட மாரியம்மன் கதையும், பிள்ளையார் கதையும் எடுத்துக் கொண்டால் கிட்டதட்ட இரண்டும் ஒன்று போன்றதே, பரசு இராமன் தந்தை சிவனின் ஆணையை நிறைவேற்ற தன் தாய் பார்வதியின் கழுத்தை வெட்டுவான், பின்பு தவறை உணர்ந்து அவ்வழியாக செல்லும் தாழ்ந்த குலப் பெண்ணின் தலையை ஒட்டிப் முண்டத்தை பார்வதியின் உடலில் பொருத்துவார்கள், இது தான் மாரியம்மன் வழிபாட்டிற்கு சொல்லப்படும் ஆரிய வழிக்கதை. மாறாக குளிக்கச் செல்லும் முன் காவலுக்காக பார்வதி தன் அழுக்கினால் செய்யப்பட்ட பிள்ளையார் (மனித) உருவத்தை, மாற்றோன் என்று ஐயம் கொண்டு பிள்ளையார் தலையை வெட்டி, பின்னர் தவற்றை உணர்ந்த சிவன், அந்த பக்கமாக சென்ற குட்டியானையின் தலையை வெட்டி பொறுத்தப்பட்டதால் தான் பிள்ளையாருக்கு யானைத் தலையாம்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
மாரியம்மன் கதையை உண்மை என்றே நம்பி இன்றும் தமிழகத்தில் பல பல மாரியம்மன் கோவில்களில் பார்வதியின் தலையை மட்டும் சிலையாக வைத்து வைத்து வணங்குகிறார்கள், தாழ்ந்த குலப் பெண்ணில் உடலை வணங்கக் கூடாதாம். ஆனால் பிள்ளையாருக்கு அவ்வெறெல்லாம் அவமரியாதை இல்லை, ஏனெனில் யானை என்னும் விலங்கு தலையை விட தாழ்ந்த குலப் பெண்ணின் உடல் அசுத்தமானது போலும். பரசு இராமன் கதையில் உயிரோடு இருக்கும் பார்வதியின் தலை போன்று, பிள்ளையார் கதையில் பிள்ளையாரின் தலை வெட்டியதும் பிள்ளையாரின் (ஒரிஜினல்) தலை இல்லாமல் போவதும் அதன் பொருட்டு யானைத் தலையை ஒட்டவைப்பதும் வியப்பானதே. மாரியம்மனுக்கு சொல்லப்படும் பரசு இராமன் கதை, பிள்ளையார் கதைக்கு பிந்தியது என்பதால் தலை ஒட்டும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது என்று நாம் கொள்ள வேண்டும் போல். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieJ0Ep5RlnpcAzEOW4G0pXQ16gpthQY1JxKUuudQkZ7JdPvyL4VCkIR0XPDwc6UzUVkoVZ8tOrJNS07SAOK5JrdHUjTo8z69oNulpHDKDNZ7tbSWxTbaRDzXPZAU7OPjqU3dhyphenhyphen/s1600/mari.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieJ0Ep5RlnpcAzEOW4G0pXQ16gpthQY1JxKUuudQkZ7JdPvyL4VCkIR0XPDwc6UzUVkoVZ8tOrJNS07SAOK5JrdHUjTo8z69oNulpHDKDNZ7tbSWxTbaRDzXPZAU7OPjqU3dhyphenhyphen/s1600/mari.jpg" height="424" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுவதும் கொண்டாடுவதும், ஆடித் திங்களில் தான், ஆடித் திங்கள் ஜூலை 15 - ஆகஸ்ட் 15 வரையில் வரும், அந்த திங்களில் வெள்ளிக் கிழமைகளில் (ஆடிவெள்ளி) ஒன்றில் அம்மன் கோவில்களில் விழா களைகட்டியிருக்கும், அப்பொழுது பள்ளிகள் துவங்கும் காலம், தேர்வுகள் நடைபெறும் காலமும் அல்ல, ஆனால் அவற்றை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் தேர்வுக்கு படிக்கும் பொழுது, அம்மன் பாடல்கள் குறிப்பாக 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா...' பாடல் குடிசைபக்கத்தில் இருந்து இரைச்சலாக கேட்பதாகவும், படிப்பு கெடுவதாகவும் எந்திரன் படத்தில் காட்சி வைக்கப்பட்டு, அதை எந்திரன் நக்கல் அடித்து <b>'Who is செல்லாத்தா ?' </b>என்று கேட்க படம் பார்ப்பவர்களுக்கு அது ஒரு (மலிவான) நகைச்சுவை காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. காரணம் மாரியம்மனை கும்பிடும் ஏழை எளியோர் எதிர்ப்பு காட்டமாட்டார்கள் என்று துணிந்தே அந்த காட்சியை நகைச்சுவை என்ற பெயரிலும், அவ்வாறு மாரியம்மனை கும்பிடுவர்களில் ரவுடிகள் உண்டு, அவர்கள் 'ஆத்தாள கும்பிட்டுட்டு துண்ணூறு வாங்கிப் பூசிட்டு போ...பாஸாகிவிடுவாய்' என்கிற மூட நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் காட்சியாக்கப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உண்மையில் தேர்வு நெருங்கும் காலமென்றால் அது ஐயப்பன் சீசன் தான், ஜனவரி 12 ஆம் தேதிவரை ஐயப்ப சாமிக்கு மாலை போட்டவர்களின் பூசை புனஸ்காரங்கள் தான் நடைபெறும், ஆடியில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஒன்றோ அல்லது இரண்டோ வெள்ளிக்கிழமைகள் சார்ந்த நிகழ்வு, ஆனால் ஐயப்ப சீசன் என்பது 42 நாள்களுக்கு அங்கங்கே உள்ள கோவில்களில் ஒலிப்பெருக்கிக் கட்டி வீரமணி அல்லது வீரமணி தாசன் பாடல்களை போடுவார்கள், ஷங்கர் போன்றோருக்கு <b>'Who is Saranam Ayyappaa ?' </b>என்று அவற்றை நகைச்சுவையாக்கி கேட்கும் துணிவும் இல்லை, ஒரு வேளை கேட்டிருந்தால் இந்து இயக்கம், அந்த படத்தில் அந்த காட்சியை நீக்காமல் ஓட விட்டிருக்காது. இளிச்சவாய்கள் கூழ் ஊற்றிக் கொண்டாடுபவர்களும் அவர்களது நம்பிக்கையும் தான்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
போலிப் பகுத்தறிவு வாதியான நடிகர் விவேக் போன்றோர், லாரிக்கு எலுமிச்சைபழம் கட்டி இருப்பதை கிண்டல் அடிப்பார்கள், ஹெலிக்காப்பட்டரின் சர்கரத்தில் வைக்கும் எலுமிச்சைக்கும். மாலைக்கும் அவர்களிடம் இருந்து எந்த நகைச்சுவை காட்சியும் வைக்கத் தெரியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXDBiHF5G7c6pJSKdZ3tPYtRxbGJPjox3VPL6P-XZVk2qQpabAtsGdt7xEKSNZbJUiW2FGzDNx6a9KhRFRiqLen6JFacxYaQ9wVbgX-HX5wn1CxMrR5iyDQLlmaRzLULaHRc62/s1600/helicopter.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXDBiHF5G7c6pJSKdZ3tPYtRxbGJPjox3VPL6P-XZVk2qQpabAtsGdt7xEKSNZbJUiW2FGzDNx6a9KhRFRiqLen6JFacxYaQ9wVbgX-HX5wn1CxMrR5iyDQLlmaRzLULaHRc62/s1600/helicopter.jpg" height="484" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxaKcQUm3saAx1iYl-4mc6TV3sbni1cgBZQ_B98i3Mjo3xtDRLKBtfrH7S4D-Y6PkEYotKwaixrNtn8Nf_u69zSZ9xihYMyHfiOCLKqtZ_AheTr2tHkwyASGRYJRcE2FShUWvj/s1600/airplane-puja.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxaKcQUm3saAx1iYl-4mc6TV3sbni1cgBZQ_B98i3Mjo3xtDRLKBtfrH7S4D-Y6PkEYotKwaixrNtn8Nf_u69zSZ9xihYMyHfiOCLKqtZ_AheTr2tHkwyASGRYJRcE2FShUWvj/s1600/airplane-puja.jpg" /></a></div>
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழகத்தில் இந்து என்று கூறிக் கொள்ளும் அனைவருக்குமே குலதெய்வம் என்று ஒன்று உண்டு, அந்த தெய்வங்களை வணங்குபவர்கள் அவர்களே தொட்டு கழுவி, பூசை செய்வது வழக்கம், ஆனால் அங்கு பிறந்த குழந்தையின் காது குத்திக்கு, முதல் மொட்டைக்கும் செல்வதுடன் சரி, பிறகு பொட்டல் காட்டில் கூரை இல்லாது அந்த குலசாமி அப்படியே தான் நிற்கும், ஆனால் இவர்களோ ஆகமவிதி கோவில்களில் திருக்கல்யாண உற்சவத்திற்கு ரூ 50,001 கட்டி 10 - 20 அடி தள்ளி உட்கார்ந்து 'திருக்கல்யாண கோலம்' பார்த்து முக்தி அடைந்ததாக நினைத்துக் கொள்வர். தமிழுக்கு இரண்டாம் இடமே என்று அறிவிக்கும் 'இங்கு தமிழிலும் அர்சனை செய்யப்படும்' எந்த ஒரு தமிழனையும் உறுத்தாது. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மலேசிய தமிழர்களைப் பாருங்கள், இந்தியாவில் நீ பிள்ளையாருக்கோ அல்லது, பிற தெய்வங்களுக்கோ என்ன வேத கதைகளை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போ, எங்களுக்கு எங்கள் தமிழ் முருகனே உயர்வானவன், எங்களது குல சாமிகளே உயர்ந்தது என்று போற்று கின்றனர், <b>தமிழ் இந்துகளுக்கு தை பூசமே பெருநாள், சிறப்பாகக் கொண்டாடத்தக்க திருநாள், </b> என்று அவர்கள் போற்றுகின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbU5HmngwHbSW-xVtWVl_G9lwANYlXrTA2RQ8Rnzau5pFyyOxFjiimBMfRPZt1JZg_H_jh9ZP33usZwZXMu50t3qPTHDTXxoXotZz2mevzOjAsKJCPi8RpDx2tYSY-S9vZqZeT/s1600/murugan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbU5HmngwHbSW-xVtWVl_G9lwANYlXrTA2RQ8Rnzau5pFyyOxFjiimBMfRPZt1JZg_H_jh9ZP33usZwZXMu50t3qPTHDTXxoXotZz2mevzOjAsKJCPi8RpDx2tYSY-S9vZqZeT/s1600/murugan.jpg" height="640" width="478" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆனால் தமிழகத்தில் ? <b>பெரியாரை தமிழன் மறக்க மறக்க பெருச்சாளிகளின் ஊர்வலங்கள் தான் பெருகிவருகிறது</b>. உண்மை தானே ?</div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-10267267.post-46811327339295089072014-08-19T00:27:00.001+08:002014-08-19T23:27:40.396+08:00படகர் மொழியை காப்பாற்றுவது யார் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
வட்டார வழக்குகள் தனிமொழி என்று அறியப்படும் போது அவற்றின் தொடர்புடைய அல்லது அவை இவற்றின் மூலம் வந்திருக்கக் கூடும் என்னும் குறிப்பிட்ட மொழியில் உரையாடுபவர்களுக்கும் அவ்வட்டார வழக்கில் உரையாடுபவர்களும் உரையாடினால் புரிந்து கொள்வது கடினம், அதாவது வேர் மொழியில் இருந்து தனித்துவிட்டது என்ற நிலையில் வட்டார வழக்குகள் தனி மொழி என்னும் சிறப்பை பெருகின்றன அல்லது அடையாளப்படுத்தப்படுகிறது. திராவிட மொழிகள் அனைத்தும் பழந்திராவிட மொழிகள் இருந்து கிளைத்தன, பழந்திராவிட (Proto Dravidan) மொழி அமைப்பு பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழின் மாற்றம் மிகப் பெரிய அளவில் இல்லை என்பதால் திராவிட மொழிகளின் ஊற்று தமிழாக இருக்கக் கூடும் என்கின்றனர், தமிழை திராவிட மொழிகளின் தாய் என்று முன்னிருத்துவதில் தற்போதைய சிக்கல் கன்னடம், தெலுங்கும் உள்ளிட்ட மொழிகளைப் பேசும் மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை, தம்மொழியே சிறந்தது என்கிற உயர்வு மனப்பான்மையில் தமிழை திராவிடத் தாய் என்று ஒப்புக் கொள்வதற்கு அவர்களுக்கு இருக்கும் மனத்தடையை நாம் புரிந்து கொள்ள வேண்டும், பழந்திராவிட மொழி என்கிற பொதுமையை முன்னிருத்தினால் அதன் வழி திராவிட மொழிகள் கூட்டாக தத்தம் வளர்ச்சிக்கு பயனடைய முடியும். இது என் தனிப்பட்ட கருத்து.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
*****</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திராவிட மொழிகள் இவை என்று அடையாளப்படுத்தப்பட்டவை ஏறத்தாள 45, அவற்றில் வரிகள் அமைப்பு மற்றும் பொதுவான வினைச் சொற்கள் மற்றும் பெயர் சொற்கள் உண்டு, அவற்றிற்கிடையேயான தொடர்புகளைப் பொருத்து அவை திரிந்தோ, திரியமலோ இருக்கும், பொதுவான இலக்கண அமைப்பும் சேர்ந்து தான் குறிப்பிட்ட மொழிகள் ஒரு தொகுப்பில் வரும், திராவிட மொழிகள் இந்தியாவின் தென்மாநிலங்களிலும், வட இந்தியாவின் மைய பகுதிவரையும், பாகிசுதானில் ஒரு பகுதியிலும் கூட (Brahui) பேசப்பட்டுவருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் தவிர்த்து ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் பேசும் மொழியாக கர்நாடகாவின் மங்களூர் பகுதியில் துளுவும், தமிழ்நாடு நீலகிரி மாவட்ட மலைப்பகுதியில் படகர் மொழியும் பேசப்படுகிறது, துளுவுக்கு தனி எழுத்துகள் (Tigalari script) இருந்தாலும் தற்பொழுது கன்னட எழுத்துகளைத் தான் பயன்படுத்துகின்றனர். கர்நாடக மாநிலத்திற்குள் அமைந்துள்ளதால் துளு பேசுவர்களுக்கு அது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீலகிரி தமிழகத்தில் அமைந்துள்ளது, படகர்கள் / வடகர் / படுகு / வடுகு என்று குறிக்கப்படும் ஒரே வடுகு மொழியை பேசுபவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவர்களின் மொழி பெரும்பகுதி கன்னடத்தை ஒத்திருந்தாலும் கன்னட எழுத்தில் அவர்களின் மொழியை வளர்ப்பதில் தமிழக அரசின் உதவியையோ, கர்நாடக அரசின் உதவியையோ அவர்களால் பெற முடியாது. படகர் மொழி கன்னடம் தமிழ் ஆகியவற்றின் திரிந்த கலவைதான், ஆனால் படகர் மொழிக்கென்றே தனிச் சொற்களும் நிரம்ப உண்டு, தமிழும் கன்னடமும் அறிந்தவர்கள் படகர் உரையாடலை புரிந்து கொள்ள முடியும். படகர்களின் பள்ளிக் கல்விக்கு கொடுக்கப்படும் இருவாய்ப்புகள் முதல் மொழியாக கன்னடமும் தமிழும் மட்டுமே, அவர்களுடைய மொழியை வீட்டில் பேசினாலும் அவர்களுக்கு படகர் மொழிக்கல்விக்காக எந்த ஒரு பள்ளிக் கூடங்களோ, தனியார் அமைப்போ கிடையாது, நம்முடைய தாய் மொழி ஒன்றாக இருந்து பெரும்பான்மையினர் பேசும் மொழி என்று தமிழை மட்டுமே கற்றுக்கொள்வது மன அளவில் அவர்களுக்கு இருக்கும் தடைகளை தமிழகத்தின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வது போல் தெரியவில்லை, தமிழ்நாட்டில் தமிழ் படித்தால் நல்லது என்பது தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம், அவர்களுக்கும் ஏன் கட்டாயமாக திணிக்க வேண்டும், இந்தி திணிப்புக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் தமிழகம் (எனக்கு அதில் உடன்பாடு உண்டு) படகர்களுக்கான கல்வி வாய்ப்பில் தமிழை காட்டுவது எந்தவிதத்தில் ஞாயம் என்று எனக்கு தெரியவில்லை, அவர்களுக்கு ஆரம்ப பள்ளிகளாவது படகர் மொழியை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை கொடுக்கலாம்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வீட்டில் தான் பேசுகிறார்களே, பின்னர் ஏன் பள்ளியில் கற்றுக் கொள்ள வேண்டும் ? பள்ளிக் கல்வி என்பது எழுத்தை படிக்கக் கற்றுக் கொள்வது அல்ல, மாறாக அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மொழி வரலாறு, இலக்கணம் இலக்கியம் உள்ளடக்கியவையே, படகர் மொழிக்கென்றே தமிழ் எழுத்துகளை பின்பற்றி தனி எழுத்துகளை அம்மக்களில் ஒருவர் உருவாக்கி இருக்கிறார், அது ஒரு நல்ல முயற்சி, எழுத்தில்லாத மொழிகள் இலக்கிய இலக்கணங்களையும், மொழி சார்ந்த படைப்புகளையும் அடுத்த சந்ததியினருக்கு அளிக்க முடியாது, அவர்கள் மொழியை தமிழ் எழுத்துகளிலேயே எழுதலாமே ? மொழிக்கான தனிச் சிறப்பு என்பது அது தனக்கான தனி எழுத்து வடிவத்தை கொண்டிருப்பது தான், இந்தியாவில் உள்ள மலையாளம், தமிழ் தவிர்த்து ('ழ்') ஏனைய மொழிகளை இந்தி மற்றும் வடமொழியை எழுதப்பயன்படும் தேவநகரியில் எழுதிவிட முடியும், ஆனால் அதில் தனித்துவம், தனிச்சிறப்பு ஏதுவும் இல்லை, அதனால் தான் படகர் மொழிக்கென தனி எழுத்துகளை உருவாக்கி, கணிணி ஒருங்குறியில் (Unicode) படகர் மொழி எழுத்துகளையும் ஏற்ற) முயற்சிக்கின்றனர், இதற்கு தமிழக அரசு எந்திரம் ஒத்துழைத்தால் படகர் மொழி இன்னும் சில நூற்றாண்டுகளுக்கு மேலும் வாழும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv7F7epdZ5lCa20T0jjR50p4cWmaIzkSqxIcPnO0ZnmWbGOrgbSeJUYKuqVKe0OUpCeR4InlnV3Wk-Mb7kg_BG0QUuY9KXaMwnqjWKnLLjgRRvXYnYiRRoOtGoinpt64sSE2rH/s1600/Badaga+New+Script.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgv7F7epdZ5lCa20T0jjR50p4cWmaIzkSqxIcPnO0ZnmWbGOrgbSeJUYKuqVKe0OUpCeR4InlnV3Wk-Mb7kg_BG0QUuY9KXaMwnqjWKnLLjgRRvXYnYiRRoOtGoinpt64sSE2rH/s1600/Badaga+New+Script.png" height="640" width="416" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="background-color: white; font-family: Georgia, serif; font-size: medium; font-weight: bold; line-height: 20.799999237060547px;">The Badaga Script developed by Anandhan Raju</span></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெறும் 15,000 பேர் மட்டுமே பேசும் வடமொழியை அழிவில் இருந்து காப்பாற்ற கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது, பல்கலைகழகங்கள், 100க் கணக்கான சபாக்கள் இயங்குன்றனர். வடமொழி விழிப்புணர்வுக்காக ஏழுநாள் கொண்டாடப்படுகிறது, சங்காலத்தில் (புறநானூற்று குறிப்புகள்) வடகர் என அறியப்பட்டு 4 லட்சம் பேர் பேசும் ஒரு மொழியை வளர்த்தெடுக்க மைய அரசோ, மாநில அரசோ முன்வரவில்லை, தமிழ் திணிப்பால் அழிந்த மொழி என்னும் நிலை படகர் மொழிக்கு வரவேண்டாம், படகர் இனமக்கள் ஒன்று திரண்டு தமிழக அரசிடம் தங்கள் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு கோரிக்கையை வைத்து பேராடி மொழி உரிமையைப் பெறுவது தான் தற்போதைய வழி, அம்மக்களை தமிழகத்தின் எல்லைக்குள் அடைத்துவிட்டு, அம்மக்களின் மொழியை கண்டுகொள்ளாமல் இருந்தால் படகர் மொழி அழிவுக்கு, தமிழ் திணிப்பும் தமிழக அரசுமே காரணமாக அமைந்துவிடும்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFeSdf4tAMWfK-AKTUjLnbzZfxNRJWDRNmpD8Ocl5Y_CScAqJHJDRdEiAcM4rRYvsPkDuxAHL_gRwtMYOvcnj7JEvK5GOaZlDUcoeVQACWvA0wSETfgz4Y9DUsheZDWiAdzwFv/s1600/Image168.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhFeSdf4tAMWfK-AKTUjLnbzZfxNRJWDRNmpD8Ocl5Y_CScAqJHJDRdEiAcM4rRYvsPkDuxAHL_gRwtMYOvcnj7JEvK5GOaZlDUcoeVQACWvA0wSETfgz4Y9DUsheZDWiAdzwFv/s1600/Image168.jpg" height="55" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-7nGyEiFYwGn_TeewdBVhR5f_n6GukLq2JfyD_NkuoMWikxQOA7xg0P6Jva7Wddk2rsfzYaa5nOOOh0T5FBhbMlvfd77KUBDZExeYfdGngk92L2lSobOpPORoL0RdHlFHHenh/s1600/Image169.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi-7nGyEiFYwGn_TeewdBVhR5f_n6GukLq2JfyD_NkuoMWikxQOA7xg0P6Jva7Wddk2rsfzYaa5nOOOh0T5FBhbMlvfd77KUBDZExeYfdGngk92L2lSobOpPORoL0RdHlFHHenh/s1600/Image169.jpg" height="160" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMwHnyMcIUlnZxfzPK9_wH8gZCv9drL45YbzZE-IiKmSVM7EnWNA8-x1o3XRMaU7QBjZT5m69sIKhRW7fcWlfo7-y5H2OUhuch9s2EIR-NFXy9K6cmDusl1vzqHAHTYVgqOkZh/s1600/Image170.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMwHnyMcIUlnZxfzPK9_wH8gZCv9drL45YbzZE-IiKmSVM7EnWNA8-x1o3XRMaU7QBjZT5m69sIKhRW7fcWlfo7-y5H2OUhuch9s2EIR-NFXy9K6cmDusl1vzqHAHTYVgqOkZh/s1600/Image170.jpg" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0-7YW2xQeJJQwKPmQxQ823ORtxBXhsXVI7KftLzRDVTNNnxs0GCCJreLeEXcu3f_miqSgjvqfi-ZGFs26r5LvdCm8YfJGSZcySxDtkXZEEAJNrgcvXAXt8T96LAvmVdrsyiwi/s1600/Image171.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0-7YW2xQeJJQwKPmQxQ823ORtxBXhsXVI7KftLzRDVTNNnxs0GCCJreLeEXcu3f_miqSgjvqfi-ZGFs26r5LvdCm8YfJGSZcySxDtkXZEEAJNrgcvXAXt8T96LAvmVdrsyiwi/s1600/Image171.jpg" height="480" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கும்கி படத்தில் அம்மக்களின் வாழ்வியலை பதிய வைத்திருப்பார்கள், ஆனால் அவர்கள் பேசும் மொழி பற்றி ஒருகாட்சி அமைப்பு கூட கிடையாது. படகர் மொழியில் இலக்கியம் படைக்க படகர்களில் பலருக்கு ஆர்வம் உண்டு, அவர்கள் பள்ளிகளுக்கு தேவையான பாடத்திட்டங்களை தமிழ் பாடத்திட்டங்களை ஒட்டி அமைத்து தருவதற்கும் ஆவலாகவே உள்ளனர், நீலகிரி படகர் இனமக்கள் திராவிட மக்கள், தமிழகத்தை சார்ந்தவர்கள், வெள்ளைக்காரன் அவர்களது மலைவாழ் இடங்களை பறிக்க, பின்னர் திரைப்படம் எடுக்கவும், சுற்றுலாவிற்காகவும் அவற்றையெல்லாம் நாம் பறித்து கொண்டோம், அவர்களின் மொழியை காப்பாற்றிக் கொடுப்பது ஒவ்வொரு தமிழனுக்குமே கடமையாகும், ஏனெனில் விரைவில் அழியும் மொழிகளின் பட்டியலில் படகர் மொடியும் உண்டு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இணைப்புகள் :</div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white; color: #393939; font-family: Georgia, 'Times New Roman', Times, serif; line-height: 25px; text-align: left;"><a href="http://timesofindia.indiatimes.com/city/coimbatore/Badaga-language-not-a-dialect-of-Kannada-claims-French-linguistic-scholar/articleshow/17472123.cms?referral=PM"><span style="font-size: large;">Badaga language not a dialect of Kannada, claims French linguistic scholar</span></a></span></div>
<h1 class="firstHeading" id="firstHeading" lang="en" style="background-attachment: initial; background-clip: initial; background-image: none; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border-bottom-color: rgb(170, 170, 170); border-bottom-style: solid; border-bottom-width: 1px; font-family: 'Linux Libertine', Georgia, Times, serif; font-weight: normal; line-height: 1.3; margin: 0px 0px 0.25em; overflow: hidden; padding: 0px;">
<span dir="auto"><a href="http://en.wikipedia.org/wiki/Badaga_language"><span style="font-size: large;">Badaga language</span></a></span></h1>
<div style="text-align: left;">
<span style="color: #393939; font-family: Georgia, Times New Roman, Times, serif; font-size: large;"><span style="background-color: white; line-height: 25px;"><a href="http://www.omniglot.com/writing/badaga.htm">படக மொழி</a></span></span></div>
<div style="text-align: left;">
<span style="color: #393939; font-family: Georgia, Times New Roman, Times, serif; font-size: large;"><a href="http://www.skyknowledge.com/badaga.htm">A script for Badaga</a></span></div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-10267267.post-42441643058574471122014-08-16T01:20:00.002+08:002014-08-17T01:30:19.297+08:00கணிணிக்கு ஏற்றமொழி என்னும் புரட்டு !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
மனிதர்களுக்கு விளங்காது, ஆனால் தேவர்களுக்கு விளங்கும் மொழி அதனால் தான் தேவ பாஷை என்றார்கள், ஆனாலும் வடமொழியை வளர்த்து எடுக்க முடியவில்லை, மனிதர்கள் மனிதர்களோடு உரையாட தேவ பாஷை எதற்கு என்பதாலோ அல்லது அதன் கடின இலக்கண வரையரைகளினாலோ, அண்மைய இலக்கியத்தின் உரைநடை, புதுக்கவிதை போன்ற புதிய உத்திகளை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாத தாலோ, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள் ஆங்கிலம் என்கிற பிழைப்பு சார்ந்த மொழியை நாடிய தாலோ வடமொழியை 19 ஆம் நூற்றாண்டில் வளர்த்து எடுக்க முடியவில்லை, எனக்கு தெரிந்து 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட புதிய நூல்கள் என்று எதுவுமே வடமொழியில் இல்லை, இருந்தால் தெரிவிக்கவும் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன், தற்பொழுது தான் சங்கரமடம் உள்ளிட்ட வடமொழி பற்றாளர்களால் வடமொழியில் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, புரியாவிட்டாலும் வடமொழி 'ஸங்கீதத்தை' தலையாட்டி ஆட்டி கேட்பது போல் ஒரு கூட்டம், ஒருவேளை சொர்கத்தில் பலன் தரக்கூடும் தேவர்களுடன் பேச பயன்படக் கூடும், தவறவிடக்கூடாது என்று கேட்கின்றனர். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மற்றபடி அண்மைய கணக்கு எடுப்பின்படி வடமொழி பேசுவர்களின் எண்ணிக்கை 120 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதுடன், நாளடைவில் அதுவும் குறைந்து பேசப்படாத வெறும் வழிபாட்டு மொழி என்கிற நிலையை அடையலாம், மாறாக பலரும் கூறும் கருத்து வடமொழி என்றைக்குமே மக்களால் பேசப்பட்ட மொழி கிடையாது, அந்த 15 ஆயிரம் பேரும் வேண்டுமென்றே வடமொழியை வாழவைக்க வேண்டும் என்பதற்காக வலிந்து தான் பேசுகின்றனர் என்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நான் அறிந்த அல்லது படித்து தெரிந்த வரையில் வடமொழிக்கு தமிழுக்கு இருப்பது போன்று பிராமி (தமிழி) எழுத்து பின்னர் வட்டெழுத்து என்று தொன்று தொட்டாக, வரலாற்றின் தொடர்ச்சியாக எழுதும் முறைகள் கிடையாது, திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு தமிழுக்கு எழுத்துகள் பயன்படுத்தப்படுவதால் 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...' என்று குறளில் எழுத்துகள் பற்றியும் எழுத முடிந்திருக்கிறது, மீன் இலட்சினை சிந்து சமவெளி நாகரீகத்தில் விண்மீனைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டதாலும் தற்கால அல்லது பண்ணெடுங்காலமாக தமிழில் விண்மீனை வான் மீன் என்ற இடப்பெயர் சொல்லாக மீன் என வழங்கும் வழக்கும் உள்ளது தவிர சிந்துசமவெளி மக்களின் சிவ வழிபாடு திராவிட வழி வந்தவை என்பதாலும் வேறு சில சான்று அடிப்படையில் சிந்துவெளி நாகரீகம் பண்டைய திராவிட நாகரீகம் தான் என்று ஐராவதம் மகாதேவன் மற்றும் ஐரோப்பிய ஆய்வளர்கள் உரைக்கின்றனர், திராவிட மொழிப்பிரிவில் ஒன்றான Brahui மொழி பேசுவர்கள் தற்காலத்திலும் சிந்துசமவெளி அமைந்த பாகிதான் பகுதியில் வாழ்ந்துவருகின்றனர், வடமொழியில் வேதகாலம் முதலாக / முன்பாக மீன் என்ற சொல் 'மச்ச' என்றும். வின்மீன் 'நக்ஷத்திர' என்றும் வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.</div>
<div style="text-align: justify;">
<br />
<br />
அஃதாவது 11 ஆம் நூற்றாண்டுவரை எழுத்தே இல்லாத மற்றும் ஆண்குறி வழிபாடு என்று சிவ வழிப்பாட்டை வேதங்களினால் பழித்த வடமொழிக்கு சிந்துவெளி நாகரீக தொடர்பு இருக்க கூறுகளே இல்லை என்கிறனர், சிந்துவெளியில் பயன்படுத்தப்பட படக்குறி (சித்ர / Symbol) எழுத்துகளின் தொடர்ச்சியாக திராவிட எழுத்து முறையான பிராமியும், அதே பிராமியில் கூடுதல் எழுத்துக்களுடன் மாற்றம் செய்து 'அசோகர் பிராமி' பாலி மொழியில் அசோகர் காலத்து கல்வெட்டுகள் எழுதப்பயன்பட்டதாக ஆய்வாளர்கள் கூற்று, முதலில் வடமொழிக்கு எழுத்து முறைகள் தோன்றி அது தமிழுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் நாமும் 31 எழுத்துகளுக்கு (உயிர், மெய் மற்றும் ஆய்தம்) மாற்றாக 51 எழுத்துகளைத் தான் பயன்படுத்தி இருப்போம், எனவே தமிழ் பிராமி எந்த மொழியிலும் இருந்தும் பெறப்படவில்லை மாறாக அவை தமிழுக்காக உருவாக்கப்பட்டது என்கிறனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வடமொழிக்கு எழுத்து வடிவம் கிடைத்ததே 11 ஆம் நூற்றாண்டுகளில் தான், அதற்கு முன்பு (10 நூற்றாண்டு) வரை குறிப்பாக தஞ்சாவூர் கல்வெட்டுகளில் கூட வடமொழியை தமிழ் எழுத்தில் தான் எழுதி வந்திருக்கின்றனர், விக்கிப்பீடியாவில் வடமொழி தொடர்பான சான்றாவணமாக தமிழ் எழுத்தில் எழுதப்பட்டதைத் தான் காட்டுகின்றனர், </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgD8xRE9RqGNu8uuSXHIODAagA-4_vb4wDmnkuTBKCioI9WyQgSZGE_GARu4VrofBz34jMLMhIZidYTk692zFTChiXw1GzkjldyeCxmBFqr0l_EG7mEELVK3wlYnPwCJlhiaXU/s1600/thanjavur.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgD8xRE9RqGNu8uuSXHIODAagA-4_vb4wDmnkuTBKCioI9WyQgSZGE_GARu4VrofBz34jMLMhIZidYTk692zFTChiXw1GzkjldyeCxmBFqr0l_EG7mEELVK3wlYnPwCJlhiaXU/s1600/thanjavur.png" height="400" width="377" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
( இது தற்பொழுது விக்கியில் நீக்கப்பட்டுள்ளது)</div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibnfAdEfbYc77UHGhgV88G61f1I_uZioAVkInuOObnP9cQG5UGxb_bE1BQUTVfz8GjD6RLxXCX4DHD5xQnDSKJxEIIShIr9UjR-ONxWtCrqbNUUF0OGryLBWhU4IIE_1iDMgKe/s1600/devanagari.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibnfAdEfbYc77UHGhgV88G61f1I_uZioAVkInuOObnP9cQG5UGxb_bE1BQUTVfz8GjD6RLxXCX4DHD5xQnDSKJxEIIShIr9UjR-ONxWtCrqbNUUF0OGryLBWhU4IIE_1iDMgKe/s1600/devanagari.png" height="200" width="400" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அது மட்டும் தான் முதன் முதலில் வடமொழி எழுத்துவடிவாக அமைந்ததற்கான தகவல், பின்னர் <a href="http://en.wikipedia.org/wiki/Devanagari">தேவநகரி </a>என்னும் (தற்போது உள்ள) எழுத்துவடிவம் 51 எழுத்துகளுடன் அமைக்கப்பட்டு அவற்றை 11 ஆம் நூற்றாண்டுகள் முதல் வடமொழியை எழுதப் பயன்படுத்துகின்றனர். ஒரு பேச்சுக்கு சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் வடமொழி / வேத நாகரீகத்திற்கும் தொடர்பு இருந்தால் இடைப்பட்ட காலத்தில் வடமொழிக்கு எழுத்துகளே இல்லாது போனது ஏன் ? என்று நினைக்க, 'ஸ்மிருதி' அல்லது மனனம் செய்யும் அடைப்படையில் மட்டுமே வடமொழி வழி வழியாக பயிற்று விக்கப்பட்டுவந்திருப்பது தெளிவாகிறது. ஆசிரியர் - மாணவர்கள், பின்னர் அவர்களின் மாணாக்கர்கள் என தொடர்ந்து அவை பாதுக்காப்பட்டது அன்றி எழுதி வைக்கப்பட்ட ஒன்று அல்ல, வால்மிகிக்கு காலத்தில் ஓலைச் சுவடிகளில் வடமொழியை எழுதி வாய்ப்பிருக்கவில்லை, அதாவது 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் கட்டிய பாலத்தில் செங்கற்களில் 'राम' (ராம்) என்று 11 ஆம் நூற்றாண்டில் உருவான எழுத்தில் எழுதப்பட்டிருப்பதாக காட்டுவதே ஒரு மோசடியும் முரண்பாடானதும் ஆகும், ஸ்வஸ்திக் சின்னம் தவிர ॐ உள்ளிட்டவை தேவநகரி எழுத்து உருவான பின்பு பயன்படுத்தப்படுவையே. வடமொழியின் எழுத்து வரலாற்றின் சுருக்கம் இவை. </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYsSBbfro5gQW1FOE0ZO3Q41xjPhx0nPNUlsToa4uBuVWl3TRU6o3-CqSMPNHkjzgxZ_VpkphTze0UdPcspPq67jzRHa2NwLNu23Xw2Ak1BMVRImNMMSqq31mSMErv_b2GAFIP/s1600/shri-ram-set.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYsSBbfro5gQW1FOE0ZO3Q41xjPhx0nPNUlsToa4uBuVWl3TRU6o3-CqSMPNHkjzgxZ_VpkphTze0UdPcspPq67jzRHa2NwLNu23Xw2Ak1BMVRImNMMSqq31mSMErv_b2GAFIP/s1600/shri-ram-set.jpg" height="400" width="365" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வடமொழி கணிணிக்கு வேறெந்த மொழியைக்காட்டிலும் ஏற்ற மொழி என்றும், அதை நாசா உறுதி செய்துள்ளதாகவும் இணையம் பொதுப்பயன்பாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளாக இட்டுக்கட்டிய கட்டுரைகள் குப்பைகளாக குவிந்துள்ளன, இதையெல்லாம் எந்த சுனாமியும் தூக்காது என்கிற இறுமாப்பில் தொடர்ந்து பரப்புகின்றனர், எந்த வகையில் கணிணிக்கு சிறந்தது என்பதற்கு இவர்கள் வடமொழியில் உள்ள வேற்றுமை உருபுகளாக <span style="font-family: Georgia, Times New Roman, serif;">(they call it is <em style="background-attachment: initial; background-clip: initial; background-color: white; background-image: initial; background-origin: initial; background-position: initial; background-repeat: initial; background-size: initial; border: 0px; color: #333333; line-height: 24px; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"><b>vibhakti</b>)</em> </span>காட்டும் சான்றுகள் அனைத்தும் திராவிட மொழிகள் அனைத்திற்குமே பொதுவானது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அதாவது பெயரெழுத்தின் விகுதியை மாற்றி வரிகள் அமைப்பது<br />
<br />
இராமனை அடைந்தனர்,<br />
இராமனால் கொல்லப்பட்டான்,<br />
இராமனுக்கு பசித்தது,<br />
இராமனின் வேண்டுகோள்,<br />
இராமனது வில்<br />
இராமன்கண் விடப்பட்டது<br />
இராமனிடம் வந்து சேர்ந்தனர்,<br />
இராமனே கொன்றான்,<br />
( ஐ, ஆல், கு, இன், அது, கண், இடம் மற்றும் விளி வேற்றுமை)<br />
<br />
இதில் கண் வேற்றுமையும், இட வேற்றுமையும் தற்போதைய இலக்கணத்தில் ஒன்றாகவே பயன்பாட்டில் உள்ளது,<br />
<br />
ஆக எட்டு வேற்றுமைகள் தமிழிலும் உள்ளது. இதே எட்டு வேற்றுமைகள் தான் வடமொழியிலும் உள்ளன. ஆங்கிலத்தில் இது போன்று பெயர் சொற்களை மாற்றி வரிகள் அமைப்பது கடினம், Belong to Ram > Ram's (இது கூட அண்மையில் ஏற்பட்டவையே) Raamaa feel hungry, Raavana Killed by Raamaa, Raamaa Request... இது போல் இராம் தனித்து மட்டுமே வரும், தவிற ஒவ்வொரு செயலுக்கும் வினைச் சொற்கள் மாறுபடும்m முன்னிலையின் (Subject) விகுதி மாறாது, இந்த பெயர்ச் சொல் விகுதி மாற்றம் என்னும் வேற்றுமை உருபு இலக்கணம் மட்டும் ஆங்கிலத்தில் மாறுபடுகிறது, இதனால் ஆங்கிலத்தை விட வடமொழி கணிக்கு Object Oriented Program, மற்றும் Class' எழுத மிகவும் பயனுள்ளது, அதனால் கணிக்கு மிகவும் ஏற்ற மொழி என்கிறார்கள். இவர்களுக்கு வடமொழி தவிர்த்து திராவிட மொழியும் அதன் இலக்கண அமைப்பு குறித்து கொஞ்சமும் தெரியாது அல்லது அவற்றை மறைத்துவிட்டு வடமொழியே சிறந்தது என்று நிறுவ முயற்சிக்கின்றனர்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வடமொழியில் ஒன்றின் பால், இரண்டின் பால், பலவின்பால் என்கிற இலக்கண விதிகள் உண்டு, அதாவது, Baaley (குழந்தையினுள் - Singular) , Baalayo (குழந்தையருள் Dual ), Baaleshu (குழந்தைகளுக்குள் Plural), காலப்போக்கில் தமிழில் உள்ள இருமை 'ர்' விகுதி மதிப்புக்காகப் பயன்படுத்துவதால் தந்தையர், தாயார் என்று ஒருமை சார்ந்த விகுதியாவிட்டது, <br />
<br />
குழந்தை அழுதது (Singular)<br />
குழந்தையர் அழுதனர் (Dual)<br />
குழந்தைகள் அழுதனர் (Many / Plural)<br />
<br />
ஒன்றிற்கு மேற்பட்டவை பல என்பதால் தற்காலத்தில் திராவிட மொழிகளில் இருமை குறிப்புகள் எழுவாயின் விகுதியாக வருவதில்லை.<br />
<br />
மற்றபடி தமிழிலோ, திராவிட மொழிகளிலோ, இருமை விகுதிகள் இல்லை என்று சொல்வதற்கில்லை, அதுவும் வடமொழிக்கான தனிச்சிறப்பும் இல்லை, பயன்பாட்டில் இல்லாத மொழியின் தனிச்சிறப்புகள் என்பவை வானவில்லின் வண்ணம் போன்றவை அவற்றை எடுத்து வந்து கலந்து சுவற்றில் பூசமுடியுமா ? எனக்கு தெரிந்து வடமொழியில் திராவிட மொழிகளைக்காட்டிலும் அணி இலக்கணங்கள் ஏனெனில் அணி (உவமை அணி, இல்பொருள் உவமை அணி...போன்றவை) சற்று கூடுதல், அதனால் அது கணிக்கு ஏற்ற மொழி என்று கூற ஒன்றும் இல்லை, அணி இலக்கணத்திற்கும் Computer Program or Object Oriented Program க்கும் எந்த ஆணித் தொடர்பும் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேலும் 'I Love You' என்பது போன்ற ஆங்கில வரியின் சொற்களை இடம் மாற்றினால் 'You Love I', Love I You' போன்றவை ஆங்கிலத்தில் பொருள் தராது மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும், வடமொழியில் எழுதப்பட்டும் வரிகளின் சொற்களை மாற்றினால் பொருள் மாறாது, இந்த வசதி ஆங்கிலத்தில் இல்லை அதனால் வடமொழியே ஆங்கிலத்தைக்காட்டிலும் சிறந்த மொழி என்கிறார்கள், அதனால் வடமொழியைப் பயன்படுத்துவதால் கணிணியின் விரைவுத் திறன் கூடுமாம், திராவிட மொழிகளிலும் சொற்களை இடம் மாற்றினால் பொருள் மாராது,<br />
<br />
இராமதாசு மரத்தை வெட்டினார்,<br />
இராமதாசு வெட்டினார் மரத்தை,<br />
மரத்தை வெட்டினார் இராமதாசு,<br />
மரத்தை இராமதாசு வெட்டினார,<br />
வெட்டினார் மரத்தை இராமதாசு,<br />
வெட்டினார் இராமதாசு மரத்தை ,<br />
<br />
<br />
ஆறுவகையாக இடம்மாற்றில் எழுதினாலும் இதில் எங்காவது பொருள் மாறுகிறதா ? ஆக சொற்களை இடம் மாற்றி பொருள் மாறாமல் இருக்கும் இலக்கண அமைப்பு திராவிட மொழிகளுக்கும் பொதுவானதாகும் எனவே வடமொழி மட்டும் தான் கணிணிக்கு ஏற்ற மொழி என்பது முற்றிலும் புறக்கணிக்கக் கூடிய கூற்றாகும், ஒருவேளை அவ்வாறு அவற்றை பலரும் ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்ள நேர்ந்தாலும் கணிக்கு ஏற்ற மொழிகள் இந்திய மொழிகள் அனைத்துமே என்பதே சரியானதாக இருக்கக் கூடும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னைக் கேட்டால் இன்றைய மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிகவிரைவு கணிணிகளும் (Super CPU, I7 Processor), அளவுக்கு மிதியான நினைவு சில்லுகளும் (Memory in TB) வந்துவிட்டதால் கணிணியில் பயன்படுத்தப்பட இது சிறந்த மொழி என்று எந்த மொழியையுமே பயன்படுத்திவிட முடியும், ஒரு குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்திப் பெறப்படும் விரைவுத் திறன் குறித்த கூற்றெல்லாம் இன்றைய தொழில் நுட்பத்திற்கு முன்பு ஒன்றுமே இல்லை. ஒருவேளை இவர்கள் இந்த பொய்களை பரப்பும் காலத்தில் இருந்த 8 Bit CPU, 16MB Memory க்கு மேல் எதிர்காலத்தில் மேம்பட வாய்ப்பே ஏற்படாது என்று தவறாக நினைத்திருக்கக் கூடும். மற்றபடி இந்த 'வடமொழி மட்டுமே கணிக்கு ஏற்ற மொழி' என்பது முற்றிலும் அடைப்படை அற்ற கூற்று, மற்றும் புறந்தள்ள வேண்டியதும் ஆகும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கணிணிகள் பொதுப் புழக்கத்திற்கு (Even Before Internet) வந்த பிறகு வடமொழி கணிக்கு ஏற்ற மொழி என்று ஏறக்குறைய 25 ஆண்டுகளாக பரப்பட்டுவருகிறது, இந்திய அரசுகள் கோடிக்கணிக்கில் மக்கள் வரிப்பணைத்தை வாரி இறைத்து வடமொழி வளர்ச்சிக்கு செலவிட்ட போதிலும் அந்த 36 விழுக்காடு நாசா பொறியார்களில் ஒருவரும் வடமொழியை கணிணியில் ஏற்றி இவர்களின் கூற்றை மெய்ப்பிக்கவும் முயற்சிக்கவில்லை, தவிர இவ்வாறு தவறான கூற்றை பரப்புவர்களும் இதுவரை அதை செய்து காட்டவும் இல்லை, வெறும் பரப்புரையாக மட்டுமே இவை நம்ப வைக்கப்படுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj81w6Kz7XRjof-OW5KJIbxzEMaujvsakGispWrn5Aw3CjzR_Whf_OkDu3BhNCds_W9ZPVIwn_aG70JWtwN1khdu5T9E8kxN841jEBA-HMMnIu4j44kZZCnnY8lFuKVY9kVtXAx/s1600/picture.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj81w6Kz7XRjof-OW5KJIbxzEMaujvsakGispWrn5Aw3CjzR_Whf_OkDu3BhNCds_W9ZPVIwn_aG70JWtwN1khdu5T9E8kxN841jEBA-HMMnIu4j44kZZCnnY8lFuKVY9kVtXAx/s1600/picture.jpg" height="400" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அகண்டபாரதம் இருந்தால் நல்லா இருக்குமே என்பது போன்ற வெறும் கற்பனை கனவே கணிணியில் வடமொழி ஏறும் என்பதும், சிறந்த கணிணி மொழியாக திகழும் என்பதும். இதை மறுப்பவர்கள் தகுந்த சான்றுகளுடன் வந்து வடமொழியே கணிணிக்கு சிறந்தது என்று கூறலாம். எனக்கு மனத்தடை எதுவும் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>பின் இணைப்பு :</b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">http://www.vedicsciences.net/articles/sanskrit-nasa.html (புரட்டு 1)</span></div>
<div style="text-align: justify;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (புரட்டு 2)</span></div>
<h2 class="entry-title" style="background: rgb(255, 255, 255); border: 0px; clear: both; line-height: 1.3em; margin: 0px; padding: 0px; text-align: justify; vertical-align: baseline;">
<span style="background: transparent; border: 0px; color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; font-weight: normal; margin: 0px; padding: 0px; text-decoration: none; vertical-align: baseline;"><a href="http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/" rel="bookmark" sl-processed="1" style="background: transparent; border: 0px; color: black; margin: 0px; padding: 0px; text-decoration: none; vertical-align: baseline;">Similarities between Sanskrit and Programming Languages</a> </span><span style="background: transparent; border: 0px; color: black; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: small; font-weight: normal; margin: 0px; padding: 0px; vertical-align: baseline;"><u>(புரட்டு 3)</u></span></h2>
<div style="text-align: justify;">
<span style="font-family: Arial, Helvetica, sans-serif;">http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (எதிர்வினை)</span></div>
<div style="text-align: justify;">
http://mushafiqsultan.com/nasa-and-sanskrit-hoax/ (எதிர்வினை)</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-10267267.post-39087966766527818492014-08-12T00:00:00.001+08:002014-08-12T00:30:14.660+08:00வடமொழி கிழமை கொண்டாட்டம் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
நான் தனிப்பட்டு எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் இல்லை, ஆனால் மொழித் திணித்தலும் பண்பாட்டு அழித்தலும் ஒன்றில் ஒன்று தொடர்புடையது என்கிற புரிதல் உள்ளவன், ஒருவர் விருப்பப்பட்டு எந்த மொழியையும் எத்தனை மொழியையும் கற்கலாம், அவை வரவேற்கத்தக்கது, ஆனால் எந்த ஒரு பலனும் முன்னே இல்லாத ஒரு மொழியை பெரும்பான்மையினர் பேசுகின்றனர் என்று சிறுபான்மையினரிடம் திணிப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கதே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக மலாய் கற்றுக் கொடுக்கப்பட்டது, பின்னர் பன்னாட்டு நிறுவனங்களால் தான் உள்நாட்டு பொருளியல் வளரும் எனவே அனைவரும் ஆங்கிலம் கற்று தொடர்பு மொழியாக அதனைப்பயன்படுத்தலாம் என்று முன்னெடுக்கப்பட்டு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்டு, பாமரர்களும் பேச எளிமையான வடிவில் சிங்கப்பூர் ஆங்கிலம் உருவாகி, அனைவரும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக பயன்படுத்துவதால் பெரும்பான்மை மக்களின் சீன மொழியோ, வட்டார மொழியான மலாய் மொழியோ அம்மொழி பேசாதவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் திணிக்கப்படுவதில்லை, மாறாக அவரவர் தாய்மொழி கல்வி இரண்டாம் மொழியாக அனைவருக்குமே பயிற்றுவிக்கப்படுகிறது, சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு அதன் நில அமைப்பு, மக்களின் உழைக்கும் திறன் தவிர்த்து தொடர்பு மொழி ஆங்கிலம் என்பதால் ஆசியாவில் அமைந்த ஐரோப்பிய நாடு என்கிற எண்ணத்துடன் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் முதலீடு செய்து சிங்கப்பூரை வளமாக்கினார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இது போல் அல்லாமல் எந்த ஒரு வகையிலும் பயனிளிக்காத இந்தியையும், வடமொழியையும் அனைத்து மாநிலங்களிலும் திணித்தே தீருவோம் என்று பொறுப்பேற்றுள்ள மோடி அரசு முதலில் இந்தியை அரசு சமூக ஊடகத் தொடர்பு மொழியாக அறிவித்து, பின்னர் எதிர்ப்பு கிளம்பவே வடமொழியை முன்னிருத்துகிறார்கள், வடமொழியில் இராமயண ம(ஹா)பாராத கதைகள், மற்றும் வேத உபநிசத்து, காம சாத்திரம், பிற இந்து சமயம் சார்ந்த நூல்களே உள்ளன, அது தவிர்த்து வடமொழி கற்றுக் கொள்வதால் வேறெதையும் புதிதாக அறியமுடியாது, வடமொழியில் அன்றாட செய்தி இதழ்களோ, கிழமை இதழ்களோ, திங்கள் இதழ்களோ வெளி வருவது கிடையாது, இந்தியை வடமாநிலங்கள் முன்னெடுத்த போதே வடமொழி வளர்ச்சி என்பது முற்றிலும் நின்று விட்ட ஒன்றாகும், ஆனால் வடமொழி காணாமல் போனதற்கு அல்லது புழக்கமற்று போனதற்கு <a href="http://www.thehindu.com/news/national/karnataka/dmk-tamil-organisations-responsible-for-sanskrits-decline-says-bhyrappa/article6265150.ece">கருணாநிதியை குறை சொல்கின்றனர், </a>கருணாநிதி காரணமென்றால் இந்தியா என்பது தமிழ்நாடு அல்லது கருணாநிதியின் செல்வாக்கு இந்திய துணைகண்டத்தில் ஆளுமை மிக்கதாக இருக்க வேண்டும், இவற்றில் எதுவுமே உண்மை கிடையாது. வடமொழி வழக்கொழிந்து போனதற்கு இந்தியை வட மாநிலங்கள் தாங்கிப் பிடித்ததே ஆகும்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏற்கனவே வடமொழி சார்ந்த நூல்களில் காமசூத்திரம் உள்ளிட்டவை ஆங்கிலத்தில் மொழி பெயர்கப்பட்டுவிட்டன, மாபாரதம் உள்ளிட்டவை ஆங்கில அசைபடங்களாக வெளிவந்துவிட்டன, ஆங்கிலம் அறிந்தவர்களும் அவையே போதுமானதாக உள்ளது, நான் பார்த்த லிட்டில் கிருஷ்ணா அருமையாக ஆங்கிலத்தில் ஆக்கி இருக்கிறார்கள், எனவே வடமொழி அறிந்து வடமொழியை அறிந்தால் மட்டுமே வடமொழியில் உள்ளவற்றை கற்றுக் கொள்ளலாம் என்பதில் யாதொரு உண்மையும் கிடையாது. தவிர வடமொழியை அறிவதால் அந்த நூல்களை படிக்க முடியும் என்பது தவிர்த்து பெரும் பயன் எதுவும் இல்லை. ஏற்கனவே வேதம் படிக்கிறவர்கள் பார்பனர் அல்லாதவர்கள் என்றால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தவேண்டும் என்று சொல்லி இருப்பதை வடமொழி அறிந்து படிப்பதால் அம்மொழி மீது மேலும் வெறுப்பே மிஞ்சும். மற்றபடி பாரம்பரியம், நமது இந்திய மொழி போன்ற கூற்றுகள் அடிப்பட்டுப் போய்விட்டன.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
விக்கிப்பீடியாவில் வடமொழி இந்தோ - ஐரோப்பிய பிரிவை சார்ந்தது என்று தெளிவான சான்றுகளுடன் சொல்லி இருக்கிறார்கள், எந்த ஒரு வடமொழி ஆர்வளரும், மொழியாளரும் அதை இதுவரை மறுக்க முடியவில்லை, ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் வடமொழிச் சொற்கள் கனிசமான அளவில் இருப்பதற்கு வாய்ப்பும் அம்மொழியின் தாயகம் இந்தியாவாக இருக்கமுடியாது என்பதால் தான் என்றே சொல்லுகிறார்கள்,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்றைக்கு இந்திய மொழிகளில் ஆங்கிலம் நீக்கமற கலந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை திரிப்பது போன்று தான், வடமொழி பல்வேறு மொழிகளில் கலந்து அவற்றை சிதைத்தது, மற்றபடி வடமொழி இந்திய மொழிகளுக்கும் தாய் என்பது தவறான மற்றும் புறந்தள்ளக் கூடிய கூற்றுமாகும், அதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை, மொழியைப் பற்றி பெருமை பேசுபவர்கள் மொழி ஆராய்ச்சியாளர்களாக மட்டுமே இருந்தால் இது போன்ற தவறான கூற்றுகள் ஏற்பட்டிருகாது, மொழிப்பற்றாளார்கள், தம்மொழி மீது பெருமை கொண்டவர்கள் இட்டுக்கட்டிக் கூறித் திரித்தவையே இவையாகும். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வடமொழி தென்னிந்திய மொழிகளில் கலந்ததற்கு எனக்கு தெரிந்து இருவாய்ப்புகள் தான், தென்னிந்தியாவில் பார்பனர்களின் பரவல், மற்றும் இராமயண மாபாரத இதிகாசங்களின் சொற்பொழிவுகள். கோவிலை பிழைப்பிடமாகக் கொண்ட வடமொழி கற்ற பார்பனர்கள் பிறருடன் உரையாடும் போது கலந்தவை, இராமயண, மாபாரத சொற்பொழிவுளில் அதன் செய்யுளை வடமொழியில் சொல்லி பின்னர் வட்டார மொழியில் கதைவிளக்கம் கொடுப்பார்கள், இராமயணக் கதை ஊடுருவல் என் டி ஆரை கிருஷ்ணராகவே பார்க்க வைத்துள்ளது என்றால் அந்த கதையின் தாக்கம் தெலுங்கில் எந்த அளவில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் வடமொழி கலப்பு குறைந்ததற்கு வில்லிபாரதம் தமிழில் எழுதப்பட்டதும், கம்ப இராமயணம் தமிழில் மொழிமாற்றப்பட்டதும் ஆகும், இல்லை என்றால் மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளைப் போல் 50க்கு 50 என்ற கணக்கில் தமிழ் சிதைந்திருக்கக் கூடும், உரைநடைகள் வளர்ந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வடமொழி கலப்பு மிகுந்திருந்தது, ஏனெனில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொடுக்கும் வேலையில் குருகுலம் அமைத்த்து பார்பனர்கள் தான் அதனையும் செய்துவந்தனர், அவர்களிடம் தமிழ் கற்றவர்களின் பேச்சு வழக்கில் இயல்பாகவே வடமொழி கலப்பு ஏற்பட பெரியார் உள்ளிட்டவர்களின் மேடைப்பேச்சில் நீங்கள் வடமொழிக்கலப்பு மிகுந்திருப்பதைப் பார்க்கலாம், பின்னர் தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பிறகே அவை முற்றிலுமாக களையப்பட்டு, செந்தமிழ் இல்லாவிட்டாலும் நல்ல தமிழில் எழுத முடிந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தி போன்ற பெரும்பான்மையினர் பேசும் ஒரு மொழியை திணிப்பது அல்லது படிக்கச் சொல்லி அறிவுறுத்துவது தவறா ? இந்தியர்களுக்கு பொதுவான இந்திய மொழி ஒன்று இருந்துவிட்டு போகட்டுமே ? கொஞ்சம் சிந்தித்துப்பாருஙகள், எந்த ஒரு மொழியும் தகவல் தொடர்பு என்ற அளவில் இருந்தால் கெடுதல் இல்லை, ஆனால் தற்கால தொலைகாட்சி மற்றும் திரை ஊடகங்களின் தாக்கம் உடனடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது, நன்கு திறமையானவர்கள், நாம் ஏன் 6 கோடி தமிழர்கள் மட்டும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியை படைக்க வேண்டும் ? என்ற கேள்வியில் பெரும்பான்மையினர் பாராட்டுகளே முதன்மையானது என்று மாற்றிக் கொள்வார்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட திறமையானவர்கள் அனைவருமே இந்தி பேசும் பெரும்பான்மையினருக்காக உழைக்க முடிவெடுத்தால், தமிழை பாமரனும் தாய்மொழியாக வீட்டில் பேசுபவன் மட்டுமே வாழ வைக்க முடியுமா ?<br />
<br />
தமிழ் மற்றும் தென்னிந்திய இயக்குனர்களுக்கு இந்திபடம் இயக்க வேண்டும் என்பதே கனவு. அதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் அங்கு சென்றுவிட்டால் நமக்காக படம் எடுப்பவர் யார் ? ரஜினியோ கமலோ இந்தியில் தொடர்ந்து வென்றிருந்தால் அவர்கள் தமிழ் சூப்பர் ஸ்டார்களாக நம் முன் நிற்கமாட்டார்கள், அவர்களுக்கு இந்தி பேசத் தெரிந்தாலும் பெரிதாக வரவேற்பு இருக்க வில்லை, ஆனால் தென்னிந்திய இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் இந்தியில் வெற்றிக்கொடிகட்டுகின்றனர், முதல் போடுபவர் இந்திகாரராக இருக்கும் பொழுது படமும் வெற்றி என்னும் பொழுது இயக்குனரின், இசை அமைப்பாளரரின் திறமையை நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்பது போல் தான் அவர்கள் வரவேற்கின்றனர். வட இந்தியர்கள் தென்னிந்தியரின் முகத்தை திரையில் பார்க்க விரும்பமாட்டார்கள், ஆனால் திரைக்கு பின்னால் இருக்கும் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தியா முழுவதும் இந்தி மயமாகிவிட்டால், தமிழ் படம் என்று வரவே வராது, தமிழ் சார்ந்த செய்திதாள்களின் எண்ணிக்கை குறைந்து போகும், தமிழ் சார்ந்த கலைகளோ தொண்மங்களோ வளராது. தமிழின் வளர்ச்சி முற்றிலுமாக நின்று போய்விடும், அண்டை மாநிலங்களில் அவ்வாறு நடைபெற வில்லையே ?<br />
<br /></div>
<div style="text-align: justify;">
கன்னடப் படங்கள் நன்றாக ஓடுவது குறைவு, அதனால் தான் கன்னட திரையுலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை பிற மொழி படங்களின் மீது விதிக்கிறது. தெலுங்குக்கு அந்த நிலமை வர சற்று காலம் எடுக்கலாம் ஆனால் நடக்காது என்று சொல்ல ஒன்றும் இல்லை. கேரளத்தினர் தம்படைப்புகள் மீது ஆழ்ந்த மதிப்பு வைத்திருப்பவர்கள் என்பதால் அவர்களும் தப்பி வருகின்றனர், அதுவும் எவ்வளவு நாள் என்று சொல்ல முடியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரே சமயத்தில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், பிரபு தேவா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்திபட வாய்ப்பும் தமிழ் பட வாய்ப்பும் கிடைத்தால் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நான் அவர்களை மொழி பற்று இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லவரவில்லை, ஆனால் தமிழனாக இல்லாமல் 'இந்தியானாக' வெற்றி பெருவதையே அவர்கள் விரும்புவார்கள், ஊடகங்களில் பிற மொழி நுழைந்தால் தாய் மொழியின் வளர்ச்சி குறைந்து கொண்டே நாளடைவில் நின்று போகும், இது தான் இந்தி மொழி வளர வளர வடமொழி வளர்ச்சி தடைபட்டு நின்று போனதற்கும் காரணம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழகத்தில் பிறமொழி தாக்கம் ஏற்பட ஏற்பட அவற்றை அறிந்தவர்களின் ஊடகத் தேர்வும் அம்மொழியை நோக்கியும் திரும்பும். நாளடைவில் தமிழ் வெளிநாடுகளில் மட்டுமே வாழும் மொழியாகிவிடும். <a href="http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81/article6290209.ece?utm_source=vuukle&utm_medium=plugin&utm_campaign=vuukle_referral">வடமொழி வளர்ச்சி நின்று போனது ஏன் என்று விடை அறிந்துவிட்டு பின்னர் வடமொழி கிழமை (வாரம்) கொண்டாடுங்கள்.</a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-10267267.post-26064143274926082742014-07-31T23:25:00.004+08:002014-07-31T23:25:58.283+08:00உலக வலம் (2) !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<div>
<span style="color: #222222; font-family: arial;">எந்த பயணம் என்றாலும் முன்கூட்டிய திட்டமிடல் மிகவும் தேவையான ஒன்று, திட்டமிடல் இன்றியும் பயணச்சீட்டு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து விட்டு செல்லாம், ஆனால் அத்தகைய பயணம் அவ்வளவு மன நிறைவாக அமையாது, நான் கனடா செல்ல முடிவெடித்த பிறகு கண்டிபாக அமெரிக்காவிலும் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றே முடிவு செய்திருந்தேன்.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">அமெரிக்காவில் நிறைய பதிவர் நண்பர்கள் இருந்தனர், அதில் எனக்கு நெருக்கமான இரு நண்பர்களிடம் நான் கனடா வருவது குறித்து சொன்ன போது கண்டிபாக அமெரிக்காவிற்கு வந்து அவர்களது இல்லத்தில் தங்கி சுற்றிப் பார்க்கும் படி அழைத்தனர், எனவே கனடாவில் வேலைகளை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்றுவிட்டு தான் சிங்கை திரும்ப வேண்டும் என்பதை திட்டமிட்டு, சிங்கப்பூருக்கு திரும்பும் பயணச் சீட்டை நார்த் கரோலினா 'ராலே தர்காம் (Raleigh-Durham)' விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் படி போட்டுவிட்டேன். அது போன்று சிங்கையில் இருந்து இந்தியா புறப்பட்டு அங்கிருந்து சென்னை, பிறகு நான்கு நாள்கள் கழித்து திருச்சி - பெங்களூரு வழியாக பெங்களூரில் இருந்து கிளம்பி பிரான்ஸ் வழியாக கனடா மோன்ட்ரியல் அடைவது தான் திட்டம்.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">கனடாவில் எதை எதையெல்லாம் பார்ப்பது, கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு எப்படி செல்வது என்பதையெல்லாம் திட்டமிடவில்லை, காரணம் நாங்கள் செல்ல முடிவெடுத்திருந்தது கனடாவில் பனிப் பொழிவு துவங்கும் காலம் ஆகையால், முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளையும் பண்ணிவிட்டு பின்னர் பருவ நிலை மாற்றங்களினால் வெளியே செல்வதே அறைகூவலாக அமைந்துவிட்டால், பணம் செலவு செய்தாகிவிட்டதே என்று குழந்தைகளையும் போட்டுபடுத்தி, போன இடத்தில் போக முடியாத இடங்களுக்கு செய்த செலவுகளுக்காக வருந்தி, பயணம் என்பது வெறுப்பை வரவழைத்துவிட்டால் எல்லாம் வீண் என்பதால், முதலில் கனடா போய் சேருவோம், பிறகு கனடாவில் என்னவெல்லாம் பார்க்கலாம், அங்கிருந்து அமெரிக்கா எப்படி செல்லலாம் என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">நான் இந்தியா வழியாக ஏற்பாடு செய்ததன் நோக்கமே, சென்ற (2012) மறைந்த தம்பியின் ஓராண்டு நினைவு நிகழ்வில்கலந்து கொள்வதை முன்னிட்டு தான். எனவே மனைவி மகள் மற்றும் மகனை நேரடியாக கனடா செல்வதற்கானஏற்பாடு செய்துவிட்டு, அதன் படி அவர்களுக்கான பயணச் சீட்டு</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"> </span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">17 நவ 2013 00:55 (ஞாயிறு பின்னிரவு / அதிகாலை 0055 சிங்கையில் இருந்து புறப்பட்டு</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">17 நவ 2013 0830 (ஞாயிறு) காலை 0830 ஜப்பான் டோக்கியோ நரிட்டா நிலையத்தை அடைந்து</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">17 நவ 2013 1100 (ஞாயிறு) அங்கிருந்து காலை 1100 புறப்பட்டு வடஅமெரிக்கா காலை 0735க்கு சிக்காகோ வர</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">17 நவ 2013 0735 (ஞாயிறு) சிக்காகோவில் இருந்து கனடா மோண்ட்ரியல் செல்ல காலை 1023 புறப்பட்டு</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">17 நவ 2013 1023 (ஞாயிறு) மோண்ட்ரியல் அடையும் நேரம் மாலை 13:25</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">மொத்தம் 20 மணி நேரத்திற்கும் மேலான பயணம், உலக நேர அமைப்பு படி பின்னிரவு புறப்பட்டு மாலை வரை அதே நாள் தான்.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"> </span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">இந்த திட்டத்தில் சென்றால் தான் மறுநாள் திங்கள் 18 நவ 2013 அன்று மனைவி அங்கு அலுவலகம் செல்ல முடியும்,அலுவலகம் செல்லும் போது குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டுமென்றால் 18 நவ 2013 (திங்கள்) காலைக்குள்நான் சென்றாக வேண்டும், இல்லை என்றால் குழந்தைகள் விடுதி (ஹோட்டல்)யில் தனியாக இருக்க வேண்டும், அந்தநாட்டில் பாதுகாப்பில்லாமல் குழந்தைகளை விட்டுச் செல்ல முடியாதாம், எங்களுக்கும் அவ்வாறு விட்டுச் செல்லமனதில்லை, எனவே எப்படி கணக்கு போட்டாலும் 18 நவ 2013 அதி காலை 2 மணிக்கு பெங்களூருவில் இருந்துபுறப்படும் வழித்தட சேவையில் ஏறினால் தான் குறைந்தது பகல் 12 மணிக்குள்ளாவது மோண்ட்ரியல் அடையமுடியும், நவ 17 ஆம் தேதி தான் தம்பிக்கு நினைவு நாள் என்பதால் அதனை மனதில் வைத்தே எல்லா பயணசீட்டுகளின் புறப்படும் நேரம் தேதி உள்ளிட்டவற்றை முடிவு செய்தோம். இந்தியாவில் பல நகரங்கள் (சென்னை,பெங்களூரு, மும்பை, ஹைத்ராபாத் மற்றும் டெல்லி) வழியாக இணைப்பு வழி சேவையில் செல்ல முடியும்என்றாலும் அந்த வழிதடங்கள் கனடாவை அடையும் நேரம் எதுவும் ஒத்துவரவில்லை.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"> </span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">17 ஆம் தேதி தம்பிக்கு செய்ய வேண்டிய நிகழ்வு நாகையில் தான், அதனால் எனது இந்திய பயணம் 15 நவ 2013 வெள்ளி அன்றே அமைத்துக் கொண்டேன், அவை முடிந்து அங்கிருந்து திரும்பவும் சென்னைக்கு வழியாக செல்வதற்கானவானூர்தி போக்குவரத்து வாய்ப்பு இருந்தாலும் அவை கனடாவை 18 நவ 2013 மதியம் 3 மணிக்கு தான் அடையும்,அதுவரையில் குழந்தைகள் தனியாக விட்டு வைப்பது பெரிய சிக்கல் ஏற்படுத்துவிட்டால் ? வேறு வழியில்லை, வேறுவழியில்லை, 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நாகையில் தம்பியின் ஓராண்டு நினைவு நாள் நிகழ்வு, அதை முடித்துஅங்கிருந்து சிற்றுந்தில் 2 மணி நேரத்தில் திருச்சியை அடைந்துவிடலாம், அன்றே திருச்சியில் மாலை 5:30 மணிக்குகொச்சி வழியாக பெங்களூர் செல்லும் வானூர்தியில் ஏறினால் மாலை 8 மணிக்கு பெங்களூருவை அடைந்துவிடும்,பிறகு 6 மணி நேரம் ஓய்வு, அங்கிருந்து பிரான்ஸ் ஏர்வேஸ் 18 நவ 2013 அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு, பாரிஸைஅன்று காலை 8 மணிக்கு அடைந்து, இரண்டு மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு காலை 10 மணிக்கு புறப்பட்டால்அன்று மதியம் 12:15க்கு மோண்ட்ரியல் அடைந்துவிடலாம், எனவே எனது பயணத் திட்டம்</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"> </span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">எனது புறப்பாடு</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"> </span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">15 நவ 2013 0920 சிங்கையில் இருந்து சென்னைக்கு காலை 1100 மணிக்கு போகும், பிறகு ஒருநாள் விட்டு </span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">17 நவ 2013 1530 திருச்சியில் இருந்து கொச்சி வழியாக பெங்களூரூ மாலை 20:25 போய் சேரும்,</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">18 நவ 2013 1:45 (அதிகாலை) பெங்களூரில் இருந்து பாரிஸ், 2 மணி நேர காத்திருத்தலுக்கு பிறகு</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">18 நவ 2013 10:45 க்கு பாரிஸிலிந்த்து மோண்ட்ரியல், அங்கு சென்று சேரும் நேரம்</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">18 நவ 2013 12:15 (நன்பகல்), ஆக மொத்தமாக பெங்களூரில் இருந்து 20 மணி நேரப் பயணம், ஆனால் தேதிபடி வெறும் 11மணி நேரம். பூமி சுழலும் திசைக்கு எதிர் திசை பயணம் என்பதால் 11 மணி நேரம், எதிர்திசையில் சென்றால்கூடுதலாக இன்னும் இரண்டு மணி நேரமாகி இருக்கும்.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"> </span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">பயணம் குறித்து இரண்டு திங்கள் முன்பு முடிவு செய்திருந்தாலும், பயணத்தேதி, வழித்தடம் இவற்றை முடிவுசெய்யவே ஒருவார காலம் பிடித்தது, பின்பு குளிர் ஆடைகள், காலணிகள், உணவு பொருள்கள் உள்ளிட்டஅனைத்தையும் பயணத்தேதிக்கு ஒரு திங்கள் முன்பாகவே வாங்கி சேகரித்தோம்.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"> </span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">எந்த ஒரு நெடுநாள் பயணத்திற்கும் எடுத்துச் செல்லும் பொதுவான பட்டியல் என்னிடம் உண்டு, அதன் படி அனைத்தும்எடுத்து வைத்துள்ளோமா என்பதை பயணத்தின் முதல் நாள் இரவு சரிபார்த்துக் கொள்வேன். உடைகளைப் பொருத்தஅளவில் வெளி ஆடைகளுடன், தூக்கிப் போட வேண்டியது என்று எடுத்து வைத்திருக்கும் காலுறைகள்,உள்ளாடைகளைத் தான் எடுத்துச் செல்வேன், ஒவ்வொரு நாளும் பயன்படுத்திய பிறகு அவைகளை அங்கேயேகுப்பையில் போட்டுவிட்டு வருவது. இதற்கு காரணம் பொதுவாக நல்ல நிலையில் இருக்கும் துணிகளை அவ்வளவுதூக்கிப் போட மனம் வராது, உள்ளாடைகளை ஓராண்டுக்கு மேலும் துவைத்து துவைத்து பயன்படுத்துவதும் உடல்நலத்திற்கு ஏற்றதல்ல என்பதே.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"> </span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">10 நாளைக்கு மேல் வெளிநாட்டுக்கு செல்வதென்றால் கண்டிப்பாக பயணக் காப்பீடு இன்றியமையாதது, எதிர்பாராமருத்துவம் தவிர்த்து குறிப்பாக வானூர்த்தி சேவைகள் எதிர்பாராமல் முடங்கும் பொழுது நமக்கு கைகொடுக்கும், எனக்கும் அப்படி ஒரு நிலை வருவது போல் இருந்தது.</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">சிங்கையில் இருந்து சென்னை நோக்கி ஜெட் ஏர்வேஸில் புறப்பாட்டேன்...</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqXxALUCRcWRnIx_psNCXOIBKqt27A9KAXO4Ngey0wjocMkvPGIpj0dD4DVkalyIUpdunTicKbBPjDGiZTyvWyGTC16oVoWj4-ruC4D0txSwpqAZhVzgs6pSqfDBCxNkMZg1ww/s1600/IMG_8635.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqXxALUCRcWRnIx_psNCXOIBKqt27A9KAXO4Ngey0wjocMkvPGIpj0dD4DVkalyIUpdunTicKbBPjDGiZTyvWyGTC16oVoWj4-ruC4D0txSwpqAZhVzgs6pSqfDBCxNkMZg1ww/s1600/IMG_8635.JPG" height="480" width="640" /></a></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">நேரமின்மையால் இரண்டு திங்களுக்கு முன்பு எழுதியதை இப்பொழுது தான் பதிவேற்றுகிறேன்</span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;"><br /></span></div>
<div>
<span style="color: #222222; font-family: arial;">இனி சிங்கையில் இருந்து புறப்பட்டது முதல் திரும்பு வரையில் பார்த்தவற்றையும், நடந்தவற்றையும் அடுத்து பார்ப்போம். </span></div>
<div>
<br /></div>
</div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-10267267.post-18638661454198552772014-06-19T00:29:00.001+08:002014-06-30T23:26:04.467+08:00மதம் மாறிய மொழி !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
மனிதர்கள் தானே மதம் மாறுவார்கள், மொழி மதமாறுமா ? என்ற கேள்வி உங்களுக்கு வந்தால், மதம் தாங்கிப்பிடிக்கும் மொழிகள் பல உள்ளன என்பதை நினைவு கூறுங்கள், மொழிகளுக்கும் இனத்திற்கும் உள்ள தொடர்புகள் போலவே சிற்சில மொழிகளுக்கும் மதத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு, எனவே குறிப்பிட்ட பலர் சேர்ந்து ஒரு மொழியை தங்களது ஆக்கிக் கொள்ள அந்த மொழிக்கு தங்கள் மதத்து ஆடையைக் கட்டிவிடுவார்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தி என்ற சொல் இந்தி மொழிக்கு பெயராக வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் கூட இல்லை என்றால் உங்களில் பலரலால் நம்ப முடியாது, ஆனால் உண்மை அது தான். துளசி தாசர் (1532–1623) இந்தியில் இராமாயணத்தை எழுதவில்லையா ? என்று என்று உங்களால் கேட்க முடியும். துளசிதாசர் இந்தியில் இராமாயணத்தை எழுத வில்லை, மொகலாயர்கள் ஆண்ட அந்த காலகட்டத்தில் இந்தி வடிவமே பெறவில்லை, மொகலாயர்கள் பேசிய பெர்சியன் மொழி கலந்து, மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியின் வட்டார வழக்கான கரிபோலியும் (நரிக்குறவர் பேசும் வக்ரபோலி மொழி போன்ற ஒரு பிரிவு) கலந்து உருவான 'அவதி' என்ற மொழியில் வடமொழியை எழுதப்பயன் படுத்தப்பட்ட எழுத்துக்களான தேவநகரியில் தான் இராமாயணத்தை எழுதினார், எனவே துளசி தாசர் எழுதிய இராமாயணம் என்பது வால்மிகி இராமயணத்தின் வட்டார வழக்கு மொழி மாற்றம் மட்டுமே. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்போதைய நிலையில் துளசி தாசர் எழுதிய இராமாயணத்தை இந்தி தெரிந்தவர்களாலும் படித்து புரிந்து கொள்ள முடியாது, எனெனில் மொகலாயர்கள் ஆட்சியில் இருந்து வெள்ளையர்கள் இந்தியாவைப் பிடிக்கும் வரையில் கிட்டதட்ட மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலெல்லாம் அவர்கள் பேசிய வட்டார மொழி கலந்த பெர்சியன் மொழி திரிந்து திரிந்து உருதாக வடிவம் பெற்றது, மொகலாயர்காலத்திலேயே உருதை பெர்சியன் எழுத்தில் தான் (அரபி எழுத்து வடிவம் தான்) எழுதினார்கள். உருது எழுத்து தெரியாத மற்றவர்கள் எழுதும் பொழுது (தற்பொழுது எழுதப்படும்) தேவ நகரி எழுத்தைப் பயன்படுத்தினார்கள், அதுவும் 1881க்கு பிறகே அரசுவழியாக முறையாக அறிவிக்கப்பட்டு, அதற்கு இந்துஸ்தானி மொழி என்ற சிறப்பும், இந்தி என்ற பெயரும் கொடுக்கப்பட்டது, ஆக இந்தி மொழி 'இந்தி என்ற பெயரில் வழங்கப்பட்டு' 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9Zh9I_Ounejd79X8NTnz-qlnZnNKdKak4FkT64DqS2XFSx6pYHPgs-XDPMFzyi-gdpK-LLO6-5ccD8_n8wHzIDlvicdSq5h8eDZyTVBx2aOuDY1pNulUQ-ws42K42g613poSI/s1600/Jahangir_of_India.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9Zh9I_Ounejd79X8NTnz-qlnZnNKdKak4FkT64DqS2XFSx6pYHPgs-XDPMFzyi-gdpK-LLO6-5ccD8_n8wHzIDlvicdSq5h8eDZyTVBx2aOuDY1pNulUQ-ws42K42g613poSI/s1600/Jahangir_of_India.jpg" height="400" width="301" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொகலாயர்கள் பேசிய இந்தியும் உருதும் ஒன்று தானே, பிறகு ஏன் அவற்றிற்கு தனித்தனி எழுத்துக்கள், ஏன் இரண்டு பெயர்களுடன் ஒரே மொழி ? அதற்கான அடிப்படைகாரணம், உருது இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தது, உருது என்ற பெயரில் இருப்பதாலும் மொகலாயர்களின் மொழி என்பதாலும் அவற்றை பேசுவர்களுக்கு ஏற்பட்ட தாழ்வுணர்ச்சியே, அந்நிய மொழியை பேசுகிறோம், இதை மாற்ற என்ன வழி என்று சிந்தித்த போது, ஏற்கனவே துளசிதாசரின் வழிகாட்டல் இருந்ததால், உருதிற்கு இந்திய மொழியின் (தேவநகரி) எழுத்துச் சட்டையைப் போட்டுவிட்டால் அது இந்திய மொழி / இந்திய வழித்தோன்றல் மொழி ஆகிவிடும் என்று நினைத்து இந்துக்கள் பேசும் (உருது) இந்தி என்றும் இஸ்லாமியர்கள் பேசுவது உருது என்றும் சொல்லப்பட்டது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தற்போது பாகிஸ்தானில் உருது அலுவலக மற்றும் தேசிய மொழி, மொகலாயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அனைத்து இந்திய மாநிலங்களிலும் இந்தி அலுவலக மொழி, உருதிற்கு கிடைத்த தேசிய மொழி பெருமை இந்திக்கு கிடைக்க வேண்டும் என்று இந்திக்காரர்கள் விரும்புவதுடன், அவர்கள் நோகாமல் தமிழகம் வந்து செல்ல தமிழகத்திலும் இந்தி இருப்பது கட்டாயம் என்று திணிக்க முற்பட்டனர்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIZz05xiC25ahQ1tlaeoNaBMqBAzFbtg3eDX7k73RJl8wM6scXbARJj2TWcBetSPQ7pCl0YkjwEW0w4_WGU0CU_C26Xy3SVLveFOdBXjLeVAUqszDkaPlmcKkX0vr13E0JXMqV/s1600/Urdu_example.svg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIZz05xiC25ahQ1tlaeoNaBMqBAzFbtg3eDX7k73RJl8wM6scXbARJj2TWcBetSPQ7pCl0YkjwEW0w4_WGU0CU_C26Xy3SVLveFOdBXjLeVAUqszDkaPlmcKkX0vr13E0JXMqV/s1600/Urdu_example.svg" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUrhdFZwKy6GLlHt2o5FttDtiaP9MOebua9yPtA3CLHjxF91hLNpWuCnby5_3o24SBr6xKvkya3oJ_xtM2ObritnL96uPeiNhKZAZ0fk_j6U0J20kC1jA68e7zVJZBm6fxbnfz/s1600/Hindi.svg.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUrhdFZwKy6GLlHt2o5FttDtiaP9MOebua9yPtA3CLHjxF91hLNpWuCnby5_3o24SBr6xKvkya3oJ_xtM2ObritnL96uPeiNhKZAZ0fk_j6U0J20kC1jA68e7zVJZBm6fxbnfz/s1600/Hindi.svg.png" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆங்கிலம் எந்த அளவுக்கு அந்நிய மொழி என்பது உண்மையோ, அதே அளவுக்கு இந்தியும் வெளியில் இருந்து வந்து இந்திய வடிமாக சிதைந்த மற்றொரு அந்நிய மொழி, இரண்டும் இந்தியாவிற்கு நுழைந்ததில் ஆங்கிலத்திற்கு முற்பட்டு இந்தி நுழைந்தில் வேறுபாடும் வெறும் 200 ஆண்டுகள் தான், கிபி 1500களில் மொகலாயர்கள் ஆட்சி, கிபி 1700 களின் இறுதியில் வெள்ளையன் நுழைந்துவிட்டான். தவிர ஆங்கிலமும் இந்தியும் மொழிக்குடும்ப அடிப்படையில் ஒரே மொழிக்குடும்ப பிரிவை சார்ந்தவையே, அதாவது இந்தோ - ஐரோப்பியன்' மொழி குடும்பத்தை சார்ந்தவையே. உருதிற்கும் இந்திக்கும் சில நூறு வடமொழிச் சொற்கள் உள்வாங்கியதில் மட்டுமே வேறுபாடு, ஒரு சில சொற்கள் இந்தி வடமொழியில் இருந்தும் அதே சொற்கள் உருது அரபி மொழிக் குடும்பத்திலிருந்தும் எடுத்துக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு வேறு சட்டைப் போட்ட இரண்டும் இரட்டைப் பிறவிகள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
வெறும் 300 ஆண்டுகளில் வடமாநிலங்களை மொகலாயர்கள் இந்தி / உருது பேச வைத்துவிட்டனர், வெள்ளையர்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஆண்டிருந்தால் வட இந்தியர் ஆங்கிலத்திற்கு மாறி இருப்பார்கள். நம்மை இந்திப் படிக்கச் சொல்லி வருந்தி இருக்கமாட்டார்கள். தென்னிந்திய திராவிட மொழியை ஒப்பிட ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்த மொழி என்பதால் வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்வதும் எளிது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b><span style="color: red;">இந்தியோ, ஆங்கிலமோ இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட மொழி அல்ல, இரண்டுமே வெவ்வேறு காலகட்டத்தில் அரசு ஆணையாக / பயன்பாடாக இந்தியாவை கைப்பற்றியவர்களால் திணிக்கப்பட்டவையாகும்.</span></b></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த உண்மைகள் தெரியாத நம்மில் சிலரும், இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும் எல்லோரும் 'கட்டாயமாக' படிக்க வேண்டும் என்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மொழி மீதான தனிப்பட்ட ஆர்வம் என்பது தவிர்த்து, இந்திப் படிக்காததால் வேலை வாய்ப்புகள் எதுவும் பறிபோகாது, என்றோ ஒருநாள் வட இந்தியா சுற்றுலா போனால் பயன்படலாம் அல்லது இந்திவாலாக்கள் தமிழகம் வந்தால் வழிகாட்டலாம், சாருக்கான் படம் பார்க்கலாம் மற்றபடி அதைப் பாடச் சுமையில் ஒன்றாக படித்து சுமப்பதால் ஒரு பயனும் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழகத்தைவிட இலங்கையில் இருந்து புத்தகயா செல்லும் சிங்களவர்கள் தான் மிகுதி, அவர்களையும் வடவர்கள் இந்திபடிக்க பரிந்துரைக்கலாமே, செய்யமாட்டார்கள், காரணம் வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்பவர்கள் குறைவு, கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு போனால் தான் உண்டு. ஆனால் தென்மாநிலங்களுக்கு அவர்கள் சுற்றுலா வருவது மிகுதி, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இந்தி தெரிந்தால் நாம இங்கும் வந்து ஆளுமையை காட்டலாம் என்பதற்காகவே தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சிக்கிறார்கள். தற்பொழுது இந்திக்காரர்கள் தான் தமிழகத்தில் பரவலாக கூலிவேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களால் முடியும் பொழுது இந்தி 'படித்தவர்களால்' தமிழகத்தில் குப்பை கொட்ட முடியாதா ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒரு வலைப்பதிவு நண்பர் ஒருவர் ( அகவை 60தை தாண்டியவர்) வட இந்தியா சுற்றுலா போனபோது இந்தி தெரியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாராம், அவரிடம் நீங்கள் சிங்கை வந்த போது சீன மொழி தெரியாமலும், மலேசியா சென்ற போது மலாய் தெரியாததாலும் மன உளைச்சல் அடையவில்லையே என்று கேட்டேன், என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். சிங்கப்பூரில் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றலாம், ஆனால் மலேசியாவில் எல்லோருக்குமே ஆங்கிலம் தெரியாது, இவர் எப்படி சென்று வந்தார் என்பது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது.<br />
<br />
இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் படிப்பதில் உள்ள நன்மைகள் எதுவும் இந்திக்கு பொருந்தாது, வடமொழி பற்றாளர்கள் இந்தி தேவநகரி எழுத்தில் எழுதுவதால் வடமொழியை (சமஸ்கிரதம்) மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்தி ஆதரவளர்களாக இருக்கிறார்கள், மற்றபடி தென்னிந்தியாவில் இந்திக்கான ஆதரவு குறைவே, <span style="color: red;">பெங்களூர் அல்லது ஹைத்ராபாத் வாசிகளிடமோ, உங்கள் தலைநகரில் இந்தி ஆதிக்கம் உங்களுக்கு பெருமையான ஒன்றா என்று கேட்டுப்பாருங்கள்</span>, ஒருவரும் ஆமோதிக்கமாட்டார்கள், அந்த நிலைமை சென்னைக்கும் வர வேண்டாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்தி என்பது உருது மொழியின் இந்து / இந்திய வடிவம் மட்டுமே, மனிதனை மதமாற்றுவது போல் ஒரு மொழியையே மதம் மாற்றி இந்திய மொழி என்கிறார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br />
ஒருவேளை முகலாய பேரரசு தமிழகத்தையும் கைப்பற்றி இருந்தால் இந்தி ஆதிக்கத்திற்கு நாமும் அடிமை பட்டிருக்கக் கூடும்.<br />
<br /></div>
<div style="text-align: justify;">
பின்குறிப்பு : எனக்கு இந்தி ஓரளவு தெரியும், மொழிகளின் மீதான தனிப்பட்ட ஆர்வங்களால் இந்தியையும் ஓரளவு கற்றுள்ளேன். என் குழந்தைகளுக்கு விருப்பமில்லாத எந்த மொழியையும் நான் திணிப்பதும் இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இணைப்பு : </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
http://en.wikipedia.org/wiki/Ramcharitmanas</div>
<div style="text-align: justify;">
http://en.wikipedia.org/wiki/Hindi</div>
<div style="text-align: justify;">
<h1 style="background-color: white; font-family: Arial, Helvetica, sans-serif; margin: 0px; padding: 0px;">
<span style="font-size: small;"><a href="http://phys.org/news/2012-08-turkey-birthplace-hindi-english.html">Turkey the birthplace of Hindi, English: study</a></span></h1>
<div>
<span style="background-color: white; font-family: Allerta; font-size: 14px; line-height: 19.4px;"><span style="font-weight: bold;">இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:</span></span><br />
<a href="http://govikannan.blogspot.com/2007/07/blog-post_18.html" style="background-color: white; color: blue; font-family: Impact, sans-serif; font-size: 14px; line-height: 19.4px; text-decoration: none;"><span style="font-size: x-small;">அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !</span></a><br />
<h3 class="post-title" style="background-color: white; font-family: Impact, sans-serif; font-size: 20px; font-weight: normal; margin: 0px; position: relative;">
<a href="http://govikannan.blogspot.com/2007/09/blog-post_7181.html" style="color: blue; text-decoration: none;"><span style="font-size: x-small;">மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !</span></a></h3>
<h3 class="post-title" style="background-color: white; font-family: Impact, sans-serif; font-size: 20px; font-weight: normal; margin: 0px; position: relative;">
<a href="http://govikannan.blogspot.com/2006/05/blog-post_114767424348424355.html" style="color: blue; text-decoration: none;"><span style="font-size: x-small;">இந்தி யா ?</span></a></h3>
<h3 class="post-title" style="background-color: white; font-family: Impact, sans-serif; font-size: 20px; font-weight: normal; margin: 0px; position: relative;">
<a href="http://govikannan.blogspot.com/2007/11/blog-post_15.html" style="color: blue; text-decoration: none;"><span style="font-size: x-small;">நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."</span></a></h3>
<h3 class="post-title" style="background-color: white; font-family: Impact, sans-serif; font-size: 20px; font-weight: normal; margin: 0px; position: relative;">
<a href="http://govikannan.blogspot.com/2008/04/blog-post_5030.html" style="color: blue; text-decoration: none;"><span style="font-size: x-small;">இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?</span></a></h3>
<h3 class="post-title" style="background-color: white; font-family: Impact, sans-serif; font-size: 20px; font-weight: normal; margin: 0px; position: relative;">
<a href="http://govikannan.blogspot.com/2009/08/blog-post_28.html" style="color: blue; text-decoration: none;"><span style="font-size: x-small;">ஜெய்'ஹிந்தி'புரம் ! </span></a></h3>
</div>
</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-10267267.post-2786512575284261452014-05-31T23:28:00.003+08:002014-06-01T01:26:59.169+08:00அப்பாவின் நண்பர்கள் !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
நட்பு என்பது நம்மோடு முடிந்து போகும், உறவுகள் மட்டுமே நிலைக்கும் என்பதால் தான் உறவுகள் தொடர்கதை என்று உணர்ந்தே சொல்லி இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும் போது எண்ணங்களை சுமந்து கொண்டு வரும் போது வெறுமையுடன் திரும்புவது எனக்கு வாடிக்கைதான். அப்பா மறைந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அப்பாவின் செயல்களை தம்பி ஞாபகப்படுத்துவான், அப்பா எடுக்கும் காவடி அப்பா செல்லும் சபரிமலை பயணம் இதெல்லாம் நினைவு வைத்திருந்து தம்பி செய்து கொண்டுவருகிறான். எனக்கு தனிப்பட்ட முறையில் காவடி எடுப்பதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், பார்த்து பழகியது, அப்பாவை நினைவு படுத்துவது என்பதால் முடிந்த வரையில் மே மாதம் காவடி நிகழ்வின் போது ஊரில் இருப்பதற்கு முடிந்த வரையில் முயற்சி செய்து சென்றுவிடுவேன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpqw0R6i_xrDxVOmzgdpuBSEXaS5SDqqFNTI44Trd5g74IDI2SSMyNmT4KHA9qfpFzSufy7gPR2U8x_Z7NOhBa7h2-qybroqoIr9mKNdtTdByb6OABsSwN7lqG4SjGnM_BqsV_/s1600/thambi.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpqw0R6i_xrDxVOmzgdpuBSEXaS5SDqqFNTI44Trd5g74IDI2SSMyNmT4KHA9qfpFzSufy7gPR2U8x_Z7NOhBa7h2-qybroqoIr9mKNdtTdByb6OABsSwN7lqG4SjGnM_BqsV_/s1600/thambi.JPG" height="240" width="320" /></a></div>
<div style="text-align: center;">
(இது என் தம்பி)</div>
<div style="text-align: justify;">
அம்மாவின் முயற்சியில் இல்லாம் விவாசயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டிருந்தாலும் அப்பாவிற்கு அவ்வப்போது கொத்தனார் வேலை தான், நாகப்பட்டினத்தில் கொத்தனார் சங்கத்தை முன்னின்று உருவாக்கியது, மாநில அளவில் சங்க தலைவர்களை பொன் குமார் உள்ளிட்டவர்களை அழைத்துவந்து கொத்தனார் தொழிலில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர் என்பதால் நாகைப் பகுதி கொத்தனார்களுக்கு நன்கு அறிமுகமாகியவர், கொத்தனார் சங்கத்தின் சார்பில் நாகை மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது எடுக்கப்படும் 'கைலாச வாகன' ஊர்வல நிகழ்வில் அப்பாவிற்கு மாலை அணிவித்து பரிவட்டமெல்லாம் கட்டுவார்கள், மாரியம்மன் கோவில் திருவிழாவின் முதல் நாள் இரவில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடக்கும், இந்த முறை சென்றிருந்த போது கூடப் பார்த்தேன், அங்கு வந்த கொத்தனார்களில் அதில் ஒருவரையும் எனக்கு தெரியவில்லை, அந்த நாளில் அதேநேரத்தில் மறுநாள் காவடிக்காக, நிகழ்வு நல்லபடியாக நடக்க காத்தவராயன் பூசை செய்ய நாங்கள் அங்கு இருப்போம், அங்கு வந்தவர்களில் சிலரை தெரியும் என்றான் தம்பி.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyoufDZLFU8DY7HCYrDLkhJaTYgPyczHVKA98eYrKrLQOoMmaZrLJMsgWvrDOPgG7Lcf_w1y-GLi2IGwdpgtONcxHASeW4CoHcNVhgXwk_coXGLiSjstT3f13Z4-nHIeQRvrOk/s1600/kailasa.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyoufDZLFU8DY7HCYrDLkhJaTYgPyczHVKA98eYrKrLQOoMmaZrLJMsgWvrDOPgG7Lcf_w1y-GLi2IGwdpgtONcxHASeW4CoHcNVhgXwk_coXGLiSjstT3f13Z4-nHIeQRvrOk/s1600/kailasa.JPG" height="640" width="480" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZglbw6K9UdabFj0RVBYsYuPyxWQ8c8sYYWrGP3y2Rff_QZb4t1GvrJhNXhNAAMgUrGeg_ppkX8oeNRt_dGYez8da5UuT6UeeEyB9owjG-OV3fz_O3XmXUesoqdautXd2XhS2p/s1600/kathavarayan.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZglbw6K9UdabFj0RVBYsYuPyxWQ8c8sYYWrGP3y2Rff_QZb4t1GvrJhNXhNAAMgUrGeg_ppkX8oeNRt_dGYez8da5UuT6UeeEyB9owjG-OV3fz_O3XmXUesoqdautXd2XhS2p/s1600/kathavarayan.JPG" height="640" width="480" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguPGGoWXi8V6MWS1_x060tcHfA9_bJ3-zpCIKExrrTqbOF3UFaVxSnMkJfg4PDJKD9YrGrJbPiGBQ8U722PNCBddus6rFF77u-1xOlbkNs1uq4B49QTzaSqnF9_LCiemhhVdsU/s1600/kavadi2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguPGGoWXi8V6MWS1_x060tcHfA9_bJ3-zpCIKExrrTqbOF3UFaVxSnMkJfg4PDJKD9YrGrJbPiGBQ8U722PNCBddus6rFF77u-1xOlbkNs1uq4B49QTzaSqnF9_LCiemhhVdsU/s1600/kavadi2.JPG" height="480" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பாவும் நாகை கொத்தனார் சங்கத்தில் தலைவராக இருந்தார் பின்னர் தலைவராக இன்னொருவருக்கு வழிவிட்டார், பெரும்பாலும் சங்கக் கூட்டம் எங்கள் வீட்டுவாசலில் திங்களுக்கு (மாதம்) ஒருமுறை நடக்கும், 25 லிருந்து 50 பேர் வரை வருவார்கள், அவர்களில் 20 பேராவது எனக்கு தெரிந்திருந்திருக்கும், அண்ணன் மாமா என்றெல்லாம் உறவு முறைகளில் அவர்கள் அழைத்துக் கொள்வார்கள். அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பா வைத்திருந்த கரனை, ரசமட்டம், மட்டப் பலகை உள்ளிட்டவற்றை ஞாபகார்த்தமாக சிலர் வாங்கிச் சென்றார்கள், அப்பாவின் மறைவிற்கு பிறகு கொத்தனார்களும், கொத்தனார் தொழிலும் சற்று தள்ளிப் போனாலும் அண்ணன் சிவில் பொறியாளர் என்பதால் அவர்களில் சிலரிடம் இன்னும் தொடர்பு இருக்கிறது, எனக்குத்தான் ஒருவரையும் தெரியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பாவின் அடுத்த நடவடிக்கை ஆண்டு தோறும் சபரிமலைக்கு செல்வது, 12 வயதில் என்னையும் ஒருமுறை அழைத்துச் சென்றிருக்கிறார், அப்பாவின் சபரிமலைக்கு மாலை போடும் நண்பர்கள் என்கிற பெரிய நண்பர் வட்டமே இருந்தது. வாரத்தில் ஒருநாள் / இரண்டு நாள் ஐயப்பன் பூசை என்று அவ்வப்போது அழைப்பு வரும், அப்பா மலைக்கு செல்லத்துவங்கியது முதல் அப்பாவின் பெயர் 'சாமி' என்றே நிலைத்தது, அவருடன் பழகும் யாருக்குமே அவருடைய பெயரே தெரியாது, சபரிமலை சீசன் இல்லாத காலங்களிலும் அழைத்துப் பழகியவர் என்பதால் 'சாமி' என்றே அழைப்பார்கள், இவரும் 5 வயது குழந்தைகள் முதல் எந்தவயது பெரியவர் என்றாலும் 'சாமி' என்றே கூப்பிடுவார். வீட்டில் நாங்களும் அப்பா என்று கூப்பிட்டத்தைவிட 'சாமி' என்றே கூப்பிட்டுவந்தோம், </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பாவுக்கு இருமுடிகட்டும் குருசாமி அப்படியே அவர்கள் அனைவரையும் மன்னார் குடி அருகே இருக்கும் லட்சுமாங்குடிக்கு அழைத்துச் என்று அங்குள்ளவர்களுக்கு முடிகட்டி பின்னர் சபரிமலைக்கு செல்வார்கள், ஆண்டுக்கு ஒருமுறை வெறும் 5 நாட்கள் சந்தித்தவர் என்ற முறையில் அந்த ஊரில் உள்ள ஒரு அயப்ப சாமிகள் அப்பாவுக்கு நண்பர்களாகவும் ஆனார்கள், அதில் ஒருவர் அப்பாவின் காலம் வரையில் ஆண்டுக்கு ஒருமுறையேனும் வீட்டுக்கு வந்து செல்வார், சபரிமலை பெருவழியில் நான் நடக்க முடியாமல் திணறிய போது என்னை தூக்கிக் கொண்டு சென்றவர்களில் அவரும் ஒருவர்/. அவரின் பெயர் எங்களைப் பொருத்த அளவில் 'லட்சுமாங்குடி சாமி' சபரிமலை சீசன் முடிந்து ஒருமுறை அவர் வீட்டுக்கு வந்த போது அவருக்கு அளித்த விருந்தில் தான் அவர் அசைவம் சாப்பிடுகிறார் என்று வியப்படைந்தேன், 'லட்சுமாங்குடி சாமி' சாமி என்று நினைத்துவந்ததால் என்னவோ அவர் அசைவம் சாப்பிடமாட்டார் என்று நினைத்திருந்தேனோ என்னவோ ? அப்பாவின் மறைவிற்குப் பிறகு லட்சுமாங்குடி சாமி என்ன இருக்கிறாரா ? இல்லையா என்றே தெரியவில்லை.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3Nbexeq7MsH-kGpVzZtE0guRwG8ZGO5XSMPzKmmNUp6F-HXFfKFK9lAxqpx9X03EV5egOYsBfPPWbvIgNOuN23DVN-GMZoTypcXu0PdtIzSz3xnVkefMZ9hKPFdeEXL-uXfXI/s1600/app3.PNG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3Nbexeq7MsH-kGpVzZtE0guRwG8ZGO5XSMPzKmmNUp6F-HXFfKFK9lAxqpx9X03EV5egOYsBfPPWbvIgNOuN23DVN-GMZoTypcXu0PdtIzSz3xnVkefMZ9hKPFdeEXL-uXfXI/s1600/app3.PNG" height="640" width="426" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பா காலை 6 மணிக்கு எழுந்ததும் டீ கடை, அங்கு தான் காலை ஒரு மணி நேரம் செல்லும், பெரும்பாலும் கடையாக இடம் பெயராவிட்டால் டீ கடையை மாற்றமாட்டார், ஒரு மணி நேரத்தில் இரண்டு டீ, மைனர் சேட் பீடி, செய்தித் தாள் அங்குள்ளவர்களுடன் அரட்டை மற்றும் அரசியல், அப்பாவை தேடிவருவர்களிடம் டீ கடையில் இருபபர் என்று எளிதாக வழிகாட்டிவிட முடியும், அப்பா அங்கு இல்லை என்றால், 'சாமி எப்போ போனார் ?' என்று கேட்டால் அரை மணி நேரத்திற்கு முன்பே சென்றுவிட்டாரே என்று சொல்லிவிடுவார்கள். டீ கடை நடத்துபவர்களும் அங்குள்ள பணியார்களும் உறவினர்கள் போலவே பழகி வீட்டிற்கெல்லாம் வந்து செல்வார்கள். அதே போன்று ஆண்டு கணக்கில் அப்பா ஸ்டார் திரையரங்கு அருகே இருக்கும் முடித்திருத்தகத்திற்கு மட்டுமே செல்வார், அது எந்தக் கடை என்று எனக்கு இன்றுவரை தெரியாது. அங்கு யார் யாரிடம் பழகினார் என்கிற விவரமும் தெரியாது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பா வேலைக்குச் செல்லாத நேரங்களிலும் மாலை வேளைகளிலும் அப்பாவின் மற்றொரு பொழுது போக்கிடம் இரண்டு மரக்கடைகள், ஒருவர் நாயர், இன்னொருவர் திருமேணி, அங்கு செய்தி தாள்கள் இருக்கும், அதைப் படிக்க வயது வேறுபாடின்றி சிறுவர் முதல் பெரியவர் வரை எந்நேரமும் நான்கைந்து நபர்கள் இருப்பார்கள், அவர்களில் சிறுவர்களிடம் 'கட்டியால் எட்டு கட்டி... கால் அரை முக்கால் மாற்று....' என்ற விடுகதைப் போடுவது, கழுத கால் ரூபாய், குதுரை முக்காருவ...' போன்ற கணக்கு போட்டு திணறடிப்பது, பெரியவர்களிடம் அரசியல் என்று ஓடும், அங்கு செய்தித்தாள் படிக்க வரும் என்னுடன் +2 வில் சேர்ந்து படித்த எஸ் இரவிச்சந்திரனுக்கும் அப்பாவிற்கும் நல்ல நட்பு போல, 'என் பையனும் ஆண்டனீஸ் பள்ளியில் தான் படிக்கிறான் என்றார், பேரைக் கேட்டேன், 'கண்ணன்' என்று சொன்னார்' நீ ஏண்டா அவருடைய பையன் என்று சொல்லவே இல்லை ?' என்று கேட்டப்போது அப்பா பீடி குடிப்பார், கொத்தனார் வேலை செய்பவர் என்பதால் வெளிப்படையாக இவர் தான் என் அப்பா ? என்று நான் ரவிச்சந்திரனிடம் முன்பே அறிமுக்கப்படுத்ததால் எனக்கு சற்று அவமானமாகவே இருந்தது. அவனிடம் எதோ சொல்லி சமாளித்தேன். </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLj9egrWEzZtHuf5dTR8sODCx-VlifPfjPYE4jQq8MuDFzLv6acJfCPlMSGJpKLK4V6GxUIohntxRNcGo8kVPqd5gbR1T4Blyhy9-5w5oThiIikqNQOJRXW9G9VHUN3LAWuqwg/s1600/appa1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLj9egrWEzZtHuf5dTR8sODCx-VlifPfjPYE4jQq8MuDFzLv6acJfCPlMSGJpKLK4V6GxUIohntxRNcGo8kVPqd5gbR1T4Blyhy9-5w5oThiIikqNQOJRXW9G9VHUN3LAWuqwg/s1600/appa1.JPG" height="480" width="640" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgvG4Pf7SJ8G1cwTFXOWWWcFXCTApwtJ9YjPZKWpcjw9Pdw5v5Q5nzic-ODruR0VSYc8ai7EzHqy3C1RehLyr4bubviY2EvLwGzXCVitbYASLRal7vn3KfIVN3Z5tivdy_GzJ3/s1600/appa2.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgvG4Pf7SJ8G1cwTFXOWWWcFXCTApwtJ9YjPZKWpcjw9Pdw5v5Q5nzic-ODruR0VSYc8ai7EzHqy3C1RehLyr4bubviY2EvLwGzXCVitbYASLRal7vn3KfIVN3Z5tivdy_GzJ3/s1600/appa2.JPG" height="480" width="640" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
அப்பாவிற்கு சோதிடத்தில் நல்ல நாட்டம், கட்டம் பார்த்து சொல்லுவார், பாம்பு பஞ்சாங்கம் பார்ப்பார், புலிப்பாணி புத்தகம், மற்றும் 50 க்கும் மேற்பட்ட புத்தகம் வீட்டில் இருக்கும், செவ்வாய் வெள்ளி கிழமைகளில் மாலையில் வீட்டு வாசலில் பெரும் கூட்டமே சோதிடம் கேட்க வரும், அதில் பெரும் பகுதியினர் பக்கத்தில் உள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தினர் உள்ளிட்ட ஏழைகள் தான், பொண்ணுக்கு கல்யாணம் எப்போ நடக்கும், காணாமல் போன மாடு கிடைக்குமா ? போன்றவைகள் குறித்து கேட்க வந்திருப்பர், கட்டணமாக எதுவுமே வாங்குவதில்லை, அவர்கள் வாங்கிவரும் வெற்றிலைபாக்கு நாலண காசு, அது மட்டும் தான், காசை பக்கத்தில் உள்ள கோவில் உண்டியலில் போட்டுவிடுவார், வெற்றிலை பாக்கை போடுவர்களிடம் கொடுத்துவிடுவார், சோதிடம் பார்க்க வருபவர்கள் தவிர்த்து சோதிட ஆர்வம் உள்ள, சோதிடம் தெரிந்த நண்பர் கூட்டமும் அப்பாவுக்கு உண்டு, அவர்களெல்லாம் என்ன ஆனார் என்றே தற்போது தெரியவில்லை.<br />
<br />
இது தவிர்த்து குழுமமாக செயல்பட்டு எடுக்கும் எட்டுக்குடி காவடி, முத்துமாரியம்மன் கோவில் காவடி, அரப்ஷா தர்கா சந்தனக்கூடு என்கிற இன்னொரு நண்பர்கள் வட்டத்திலும் அப்பா இன்றியமையாதவராகவே இருந்தார், நாகை வெளிப்பாளையத்தில் சாமி வீடு எது ? என்று கேட்டால் எங்க வீட்டுக்கு வழிகாட்டும் அளவுக்கு அப்பாவிற்கு அந்த பகுதியில் நல்ல அறிமுகமே இருந்தது. அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பாவின் நெருங்கிய நண்பர்களில் சிலர் ஓரிரு ஆண்டுகளில் இறந்துவிட்டனர். அப்பாவின் சிறுவயதில் அவர் வளர்ந்த இடமான நாகை சவுரிராஜ பெருமாள் மேல வீதியில் இருந்த நண்பர்களில் அவரைவிட சிறியவர்கள் 'ரமண்ணா' (ராமன் அண்ணா), என்று அப்பா வயதினர் 'டேய் ராமன்' என்றும், பெரியவர்கள் 'ராமு' என்று கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன், அப்பா வழி உறவுக்காரகளுக்கு அப்பாவின் பெயர் 'ராமன்', எங்கள் பள்ளி சான்றிதழ்களில், அழைப்பிதழ்களில் கோவிந்தராஜு', மற்றவர்கள் எல்லோருமே கூப்பிடுவது 'சாமி', அப்பாவின் ஒன்றுவிட்ட அண்ணன் மறைந்த பிறகு 'இராமன்' என்று அப்பாவை உரிமையுடன் குறிப்பிட்டு சொல்ல இன்று யாரும் இல்லை, அவர் சிறுவயதில் வாழ்ந்த இடத்தில் இன்றும் வாழும் ஒரு சிலர் 'ராமண்ணா பையனா வா, எப்படி இருக்கே ?' என்று கேட்பார்கள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்ந முறை ஊருக்கு சென்ற போது தம்பியிடம் அப்பாவின் நண்பர்கள் குறித்து கேட்க, சற்று நகைச்சுவையாக 'அப்பாவின் (அப்பா வயது) பிரண்ட் எல்லோருமே டிக்கெட் வாங்கிட்டாங்க...அதில் மீதம் சமூன் பாய் மட்டும் தான் இன்னும் இருக்கார்' என்றான். சமூன் பாய் இன்னும் இருக்க காரணம், அவருக்கு அப்பாவைவிட 15 வயது குறைவு, ஆனால் அவரை வெளியில் பார்க்க முடியவில்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
***</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை நான் அப்பாவின் நண்பர்கள் குறித்து மட்டுமே எழுதவில்லை, தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு எவ்வளவு தான் நெருக்கம் என்றாலும் நட்புகள் என்பவை அது அவர் வாழும் வரை மட்டுமே, அதை தொடர நண்பர்களுடன் திருமண உறவை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தாலும், 'சாதி' என்கிற ஒன்று குறுகே நிற்பதால், நண்பர்களின் நட்பு நாம் இருக்கும் வரை மட்டுமே, அப்பாவின் நினைவுகளைப் போற்றுகிறோம், ஆனால் அவருடைய நண்பர்களை சந்திக்க முயற்சித்தில்லை. நண்பரின் மறைவின் பிறகு நண்பரின் வீட்டை கடந்து செல்லும் / நினைக்கும் நண்பர்கள் மனம் குறித்து நாம் நினைப்பது இல்லை. அப்பாவின் மறைவிற்கு பிறகு தேடிச் சென்று பேசினால் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளவில்லாதது என்பதை நாம் என்றுமே உணர்ந்தது இல்லை.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நட்புகள் நம்மோடு சேர்ந்தே மறித்துவிடுகின்றன. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இதை வாசிக்கும் நீங்கள் தந்தையை இழந்தவரென்றால் உங்கள் அப்பாவின் மற்றும் அவர் நண்பர்கள் பற்றிய நினைவை இவ்விடுகை கிளறிவிட்டிருக்கும் என்றே நினைக்கிறேன், நீங்களும் உங்கள் பதிவில் உங்கள் அப்பாவின் நினைவுகளையும் அவர் தம் நண்பர்களையும் போற்றுங்கள். </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL_F-bJp8vBvGFvNls6APH-myyaAJG15mE7QC2s25n5KhvctZCtbPNzp6OCj12oI_AaTsUr_9g9urvNHkdjX3pOWF5ACTk75lEiB5Xzxx-YeykU2fysOtxVTUIc8i7AaC-ZJlZ/s1600/kavadi1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL_F-bJp8vBvGFvNls6APH-myyaAJG15mE7QC2s25n5KhvctZCtbPNzp6OCj12oI_AaTsUr_9g9urvNHkdjX3pOWF5ACTk75lEiB5Xzxx-YeykU2fysOtxVTUIc8i7AaC-ZJlZ/s1600/kavadi1.JPG" height="640" width="480" /></a></div>
<div style="text-align: center;">
இது நான் தான்</div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-10267267.post-88809332469809701372014-04-23T00:20:00.000+08:002014-04-23T09:30:58.919+08:00யாருக்கு வாக்களிக்கலாம் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
இந்தியாவில் கால் நூற்றாண்டுகளாகவே எதாவது சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்தால் நாடு உருப்பட்டுவிடும் என்று சொல்லத் துவங்கிவிட்டனர், இன்றும் கூட சஞ்சய்காந்தியைக் குறிப்பிட்டு சஞ்சய்காந்தி பிரதமராக இருந்திருந்தால் நாடு முன்னேரும், முதல்வன் படத்தில் ஷங்கர் நாட்டை திருத்த ஒரு முதல்வர் உருவாக்கியதைப் போல் சஞ்சய்காந்தி இந்தியாவை உருவாகி இருப்பார், பாகிஸ்தானை பயப்பட வைத்திருந்திருபபர் என்ற எண்ணங்கள் பரவலாக ஏற்பட்டு இருந்தது, காங்கிரசுக்கு மாற்று அரசு காங்கிரசில் இருந்து ஒருவரால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றே எண்ணி வந்தனர், நடப்பு காங்கிரசு ஆட்சியில் ஊழல் பூதங்கள் வெளிப்பட்ட பிறகு சர்வாதிகாரி குறித்த இந்திய வாக்களர்களின் தேர்வில் 'நான் தான் அது' என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் குஜராத் கலவரங்கள் மூலம் மக்கள் மனதில் பதியவைத்தவர் தான் நரேந்திரமோடி, அந்த பிம்பத்துடன் குஜராத் வளர்ச்சி என்னும் இட்டுகதைகளைக் கட்டி அவரை இந்தியாவைக் காக்க வந்த ஆபத் பாந்தவலு என்று முன்னிறுத்துகின்றனர். ஆளுமை, செயல் திறன் மிக்கவர் மோடி என்றும் அது தான் மோடி அலை என்னும் மாய வலையாக சரியாக பின்னப்பட்டு அவை விரிக்கப்பட்டு பலரால் 'ஆம்' என்று எண்ண வைத்ததே அவர்கள் பரப்புரைகள் மூலம் செய்த சாதனை. </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<b>மின்பற்றாக்குறை என்பதைத் தவிர்த்து வேறு எந்த அரசு சார்ந்த புள்ளி விவரங்களிலும் மோடி ஆளும் குஜராத் தமிழ்நாட்டைவிட முன்னே நிற்கவில்லை அதற்கும் காரணம் குஜராத்தைவிட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகுதி </b>என்பதை பல்வேறு கணிப்புகள் காட்டுகின்றன, இதை ஒப்புக் கொள்ளவும் மறுக்கவும் வழியில்லாமல் மோடி ஆதரவாளர்கள், தமிழ்நாட்டி சாராயம் விற்ற பணத்தில் குஜராத்தைவிட வளர்ந்துள்ளதாக காட்டுகிறார்கள், மற்றபடி மோடி சாரயம் விற்காமலே டீ விற்று குஜராத்தை வளப்படுத்தியுள்ளார் என்று கூறுகின்றனர். குஜராத்தில் கள்ளச் சாராய சாவுகள் குறித்து பேச நம்மிடம் போதிய தகவல்கள் இல்லை, குஜராத்தில் நட்சத்திர ஓட்டல்களிலும் சரக்கு விற்பதில்லையா ? அல்லது அங்குள்ளவர்கள் குடியையே மறந்துவிட்டார்களா ? என்பதெல்லாம் நமக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் கள்ளச் சாராய சாவுகள் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்பதைத் தவிர்த்து நான் சாராயக்கடைகள் திறந்து வைத்துள்ளதற்கு எந்தவித ஞாயத்தையும் கற்பிக்கமாட்டேன். அரசு சாரயம் விற்கவில்லை என்றால் குடிப்பவர்கள் எண்ணிக்கையும், அளவும் குறையலாமே அன்றி குடி முற்றிலும் ஒழிந்துவிடும் என்று நம்புவதற்கில்லை. தமிழ்நாட்டில் அரசு மது விற்காத முன்பும் பிற மாநிலங்களை ஒப்பிட்ட அனைத்து வகைகளிலுமே முன்னேற்றம் கண்டிருத்தது, அதற்கு காரணம் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும், அவர்கள் கல்வி வளர்ச்சிக்கு எடுத்த நடவடிக்கைதான். எனவே சாராயத்திற்கு முன், பின் எப்போதும் பிற வடமாநிலங்களை, தென்மாநிலங்களை ஒப்பிட தமிழ்நாடு பல துறைகளில் முன்னேறி தான் இருந்தது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தமிழ்நாட்டில் காங்கிரசை ஒழிப்பது பற்றி பேச்சுக்கே இடமில்லை, காரணம் காமராஜருக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கைகழுவி, தமிழக வாக்களர்கள் தற்பொழுது கையை உதறியே விட்டார்கள், காங்கிரஸ் தொண்டர்கள் தவிர்த்து பொதுமக்களிடம் காங்கிரசுக்கு எந்த செல்வாக்கும் இல்லை, எனவே <b>காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று சொல்வது கூட அவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் என்று சொல்லும் விளம்பரமாக அமைந்துவிடும்</b> என்பதால் அதனை தவிர்க்கிறேன்.<br />
<br />
பாஜகவிற்கு வாக்களிக்கலாமா ? தமிழ்நாட்டிற்குள் தேசிய கட்சிகளை வளர்த்துவிடுவது தமிழக நலனை தமிழர்களே கைவிடும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடும், நாம் ஏற்கனவே பார்த்தபடி தமிழக காங்கிரசாரின் தமிழகம் சார்ந்த எந்த ஒரு திட்டத்திற்கும் அன்னை சோனியாவின் கை அசைவிற்காக காத்துக் கொண்டு இருப்பார்கள், அல்லது 'அன்னை சோனியாவின் வழிகாட்டுதலுடன் என்றே பேசத் துவங்குவார்கள்' பாஜகாவும் தேசியவாதக் கட்சி தான், அவர்களால் தமிழ்நாட்டிற்கு என்று சிறப்பு கவனிப்பாக எதையும் செய்துவிட முடியாது, மையத்தில் ஆட்சியில் அமரும் எந்த தேசிய கட்சிக்கும் தமிழ்நாடு என்பது 22 மாநிலங்களில் ஒன்று எனவே நாம் அவர்களிடம் இருந்து தனித்து எதையும் பெற்றுவிட முடியாது. தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளை வளர்த்துவிடுவதன் மூலம் நமது தனிப்பட்ட பலத்தை, போராட்ட குணத்தை, தனித்தன்மையை இழந்துவிடுவோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
திமுக ஊழல் செய்யவில்லையா ? அதிமுக ஊழல் செய்யவில்லையா ? <b>ஒருவேளை 2ஜி ஏலத்தின் போது பாஜக ஆட்சியில் இருந்தால் ஊழல் நடைபெற்றிருக்காது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, </b>மறைந்த முன்னால் மத்திய அமைச்சர் பங்காரு லெட்சுமனன் டெகல்ஹா வீடியோவும், அதன் பிறகு நடந்த்தையும் நாம் அறிவோம், பக்கத்து மாநிலத்தில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற கிரானைட் ஊழல்கள் புகழ்பெற்றவை, எனவே பாஜக மிகப் பெரிய ஊழல்கள் செய்யாத கட்சி என்பதற்கு அவர்கள் ஆட்சியில் 2ஜி ஏலத்திற்கு வரவில்லை என்பது தவிர்து வேறு காரணம் இல்லை. திமுக அல்லது அதிமுக நாம் நினைத்தால் அவர்களில் ஒருவரை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும், பாஜகவை வளர்த்துவிட்டால் அந்த வாய்ப்பை பாஜக எடுத்துக் கொள்ளும், தமிழகத்தில் யாருடைய ஆட்சி என்பதை தமிழகத்தில் கூட்டணி சேரும் காங்கிரஸ் முடிவு செய்யும் நிலையில் இருந்தது, பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அவ்வாறு ஆதரவளித்து அதில் ஒருமுறை மண்ணையும் கவ்வினார்கள். அப்பொழுது தமிழக காங்கிரசார் எவ்வளவோ மன்றாடியும் காங்கிரஸ் தலைமை செவி சாய்க்கவில்லை, பாஜகவை வளர்த்துவிட்டால் தமிழக முதல்வர் யார் என்பதை முடிவெடுக்கும் சக்தியாக மாறுவார்கள், அது திராவிட சிந்தனைகளுக்கும் நாளடைவில் நெருக்கடியாகவே அமையும்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நடப்பது நாடாளுமன்ற தேர்தல், அறுதி பெரும்பான்மையால் மோடி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவு, கூட்டணி ஆட்சி தான் ஏற்படும், தமிழக எம்பிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் கட்சியால் மட்டுமே தமிழகத்துக்கு நன்மை, அந்த வாய்ப்பை தேசியவாதக் கட்சிகளுக்கு வக்களித்து ஆதரிப்பதால் தமிழகம் இழந்துவிடும். <b>காமராசருக்கு பிறகு இந்தி திணிப்பு உள்ளிட்ட தேசியவாதத்தினாலும் தேசிய கட்சிகளினாலும் தமிழகம் எப்போதும் நன்மை அடைந்ததே இல்லை.</b> </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஆகவே சிந்திப்பீர் வாக்களிப்பீர் !!! </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_eVvi4VzUJoXxLwNSjeqw5X0wmWjK7YlZ6UmARhQm9SCY6uLfNlVgCRCOeYVidWqb9vXNfLxK7oTv4aN8vDknMkl3AHCtiMSHKjXje46f9jDKH0_hVDl-DMc0dOvmP6Oq_xkP/s1600/logo.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_eVvi4VzUJoXxLwNSjeqw5X0wmWjK7YlZ6UmARhQm9SCY6uLfNlVgCRCOeYVidWqb9vXNfLxK7oTv4aN8vDknMkl3AHCtiMSHKjXje46f9jDKH0_hVDl-DMc0dOvmP6Oq_xkP/s1600/logo.png" height="320" width="320" /></a></div>
<b>தமிழகம் சார்ந்த அதிமுக, திமுக, மதிமுக, பாமக, விசி மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளில் நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் நேர்மையான / செயல்படக் கூடிய வேட்பாளருக்கே உங்கள் வாக்குகளை அளியுங்கள்</b>.</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-10267267.post-49145528485240942022014-04-13T23:33:00.002+08:002014-04-13T23:43:36.074+08:00உலக வலம் (1) !<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
எழுத நேரமின்மையால் மற்றொரு நொடுந்தொலைவு பயணம் பற்றி எழுத வேண்டும்... எழுத வேண்டும் என்று நினைத்து ஆறுதிங்கள்கள் கடந்துவிட்டன, எழுதுவது மற்றவர்களுக்கும் திரட்டிக் கொடுக்கும் தகவல் மட்டுமின்றி தத்தம் நினைவிற்கான சேமிப்பு என்ற அளவில் பயணக் கட்டுரைகள் எழுதுவதை பெரும்பாலும் தவிர்த்தது இல்லை. ஊர் சுற்ற பொருள் (பணம்) முதன்மையானது போலவே அதற்கான நேரம் வாய்பதும் இன்றியமையாததே. பணம் இருப்பவர்கள் அனைவரும் ஊர் சுற்றுவது இல்லை, பெரும்பாலும் பொருள் ஈட்டுவதிலேயே தங்களது நேரத்தை செலவிட்டுவிடுவார்கள், ஓய்வு காலத்தில் உடலும் ஓய்ந்துவிடும், சுற்றுச் சூழல் பருவ நிலைகளும் அச்சப்பட வைக்கும், காலும் கையும் நன்றாக இருக்கும் பொழுதே சுற்றும் வரை சுற்றிவிட வேண்டும் என்பது தான் என் நிலைப்பாடு.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இந்த அறிவியல் உலகத்தில் நமக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பு வானூர்திப் பயணம், எத்தனை முறை வானூர்தியில் பயணம் செய்தாலும் எனக்கு அலுத்ததே இல்லை, இடையே இடையே டர்புலன்ஸ் எனப்படும் காற்றுகுறைந்த வெற்றிடத்தைக் வானூர்திக் கடக்கும் போது குலுங்குவதில் அடிவயிறு கலக்கும், அந்த வேளையில் எனக்கு நீச்சல் தெரியும் என்கிற ஆறுதல் உயிர் அச்சத்தைக் கொஞ்சம் குறைக்கும், மற்ற ஊர்த்திப் பயணங்களைவிட வானூர்திப் பயணம் மிகவும் பாதுகாப்பானதே. வானூர்திப் பயணங்களில் உணவு முடிந்த பிறகு பெரும்பாலும் தூங்கிவிடுவேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
ஏற்கனவே ஒருமுறை என் நண்பர் ஒருவர் எனக்கு அமெரிக்க வேலைவாய்ப்பிற்காக முயற்சித்தார், அப்பொழுது அமெரிக்காவில் கடுமையான வேலையின்மை காரணங்களினால் எனக்கான வேலை வாய்ப்பு கிட்டவில்லை, அத்துடன் அமெரிக்கா செல்லும் எண்ணங்களை முற்றிலும் மறந்தே போனேன், சுற்றுலாவாக செல்லாம் என்றாலும் இந்திய கடவு சீட்டுக்கு அவ்வளது எளிதாக நுழைவு அனுமதி கிட்டுவதில்லை என்பதால் அமெரிக்காவிற்கு செல்வதற்கு பதில் அமெரிக்கர் காலடி வைத்த நிலவிற்கே சென்றுவிடலாம் என்ற அலுப்பு தான் தோன்றியது,</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
என்னுடைய தற்போதைய சூழலில் எனக்கு அமெரிக்கா நுழைவு அனுமதி பிரச்சனை இல்லை என்றாலும் பெரிதாக ஆர்வமும் இல்லாமல் இருந்தது, இந்த சூழலில் பணி தொடர்பில் வீட்டு அம்மணி கனடாவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கவே, சரி எல்லொருமே சென்றுவரலாம் என்று திட்டமிட்டு 2013 நவம்பர் திங்களில் செல்ல முடிவெடுத்து அதற்கு ஏற்பாடாக பயணச் சீட்டு, குளிர் உடைகள் எல்லாவற்றையும் மூன்று திங்களுக்கு முன்பாகவே ஏற்பாடு செய்து கொண்டே வந்தோம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
2013 ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்து திட்டமிட்டு நிறைய தடங்கல், பள்ளி விடுமுறை, போதிய விடுப்பு இன்மை என்றெல்லாம் தள்ளிப் போய் நிறைவாக நவம்பர் நடுவில் செல்லலாம் என்று முடிவு செய்திருந்தேன், எனக்கு இந்தியாவில் உறவினர்களை சந்தித்துவரவேண்டி இருந்தது, எனவே மனைவி, மகள் மற்றும் மகனை சிங்கப்பூரில் இருந்து கனடா கிளம்ப ஏற்பாடு செய்துவிட்டு நான் இந்தியாவில் இருந்து கனடா செல்ல முடிவு செய்திருந்தேன், சிங்கப்பூரில் இருந்து சென்னை, பின்னர் பயண சீட்டு செலவுகளை ஒப்பிட பெங்களூரில் இருந்து புறப்படும் ஏர் பிரான்ஸ் வானூர்தி தான், புறப்படும் நேரம், போய் சேரும் நேரம் உள்ளிட்டு எனக்கு எல்லா வகையிலும் சரியாக இருந்தது, </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOgqBtskodBTAOApg3y2wn-6LUMCHQb1AXu0p4Dis5rGUn7XTTfwLtuYe1kCsNeloB0Nhyphenhyphenn1nPLHtmiMPQ2iN2VkAI9kyQRJtDvRjDTz9NBFCIEUTzZsxq0s2wOPg3IY-NtpHv/s1600/IMG_8632.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOgqBtskodBTAOApg3y2wn-6LUMCHQb1AXu0p4Dis5rGUn7XTTfwLtuYe1kCsNeloB0Nhyphenhyphenn1nPLHtmiMPQ2iN2VkAI9kyQRJtDvRjDTz9NBFCIEUTzZsxq0s2wOPg3IY-NtpHv/s1600/IMG_8632.JPG" height="480" width="640" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitpLvRtMHmDYWXJ_GG0jfXCEcRfv5LZQAGN6KEwru9LLGEEcGxueWsrv8nDD6MH9uZu1fh4YCPf1_1JWYSc0iokRvnV5m3mtsYlAPhvIY1oD1eJhGg_lnKM_hZ33OCSxMDGZ1G/s1600/IMG_8634.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitpLvRtMHmDYWXJ_GG0jfXCEcRfv5LZQAGN6KEwru9LLGEEcGxueWsrv8nDD6MH9uZu1fh4YCPf1_1JWYSc0iokRvnV5m3mtsYlAPhvIY1oD1eJhGg_lnKM_hZ33OCSxMDGZ1G/s1600/IMG_8634.JPG" height="480" width="640" /></a></div>
<div style="text-align: center;">
சிங்கப்பூர் சாங்கி வானூர்தி (மூன்றாம்) நிலையம் </div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
பயணம் நல்ல துய்ப்பு, அமெரிக்கா கனடாவை பார்த்ததைவிட உலகத்தை வானூர்த்தி வழியாக வலம் வந்து, புறப்பட்ட இடத்தில் இருந்து கடிகார திசையில் மட்டுமே, ஒருவழி பயணமாக புறப்பட்ட இடத்திலேயே நிறைவுற்றது... எந்த வழியாக சென்றேன் ? மற்றும் யாரையெல்லாம் சந்தித்தேன், என்ன பார்த்தேன் ஆகியவற்றின் நிழல்படங்கள் இவற்றை பின்வரும் இடுகைகளில் தெரிவிக்கிறேன்.</div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-10267267.post-65656929876931885912014-03-31T00:02:00.000+08:002014-03-31T00:05:02.085+08:00இந்துத்துவாவை மறைமுகமாக வளர்பவர் யார் ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
இன்னிக்கு செய்தி ஒன்றை படித்தேன், <b>'<a href="http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=119002">நாணயத்தில் ஸ்ரீவைஷ்ணவதேவி உருவப்படம்: - ' முஸ்லிம் அமைப்புகள் கண்டனம்</a>.</b> இந்தியாவில் கண்டனம் செய்வதற்கு காரணங்களே தேவை இல்லை. ஏதாவது ஒன்றை தமக்கு எதிர்ப்பாக நினைத்துக் கொண்டாலே போராட்டம், சாலை மறியல், மனு கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்துவிடலாம்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
காலம் காலமாக பணத்தை லெட்சுமி, தெய்வம் என்ற பொருளில் தான் இந்தியர்கள் நம்பிவந்தார்கள், இன்றும் நம்பிக் கொண்டார்கள், ஒருசிலரின் மதமாற்றத்திற்கு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவருமே அந்த நம்பிக்கையை தூக்கி எரியவேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் அனைவரும் 'மதச்சார்பின்மை' என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEDOdIwN5jDzDfdHNJU320GgVLQWaJqMbWwYFeYDzqw0EFxFqYuELhDGK8ELgJPdCtV0ziFJhetUkLPNuKZDm4qU2VhvsXPC3XiwyB53sDOmE3PvHgOp_pIfKhumTK_HLuy58j/s1600/2+TEN+RUPEE+COIN.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEDOdIwN5jDzDfdHNJU320GgVLQWaJqMbWwYFeYDzqw0EFxFqYuELhDGK8ELgJPdCtV0ziFJhetUkLPNuKZDm4qU2VhvsXPC3XiwyB53sDOmE3PvHgOp_pIfKhumTK_HLuy58j/s1600/2+TEN+RUPEE+COIN.jpg" height="163" width="320" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
'ஹலல்' என்ற எழுதப்பட்ட கறிவிற்கும் கடையில் 'அல்லா சாமியை வேண்டி' வெட்டியதை நாங்கள் வாங்கமாட்டோம் என்று ஏனைய மதத்தினர் புறக்கணித்தால், கறிக்கடைக்காரர் வயிற்றில் ஈரத்துணியை நனைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியது தான், இதெல்லாம் விட நாத்திகரும் வாழும் நாட்டில் குழாய் ஒலிப்பெருக்கியில் 'அல்லாஹு அக்பர்' தொழுகை நேர அறிவிப்பு மற்றவர்களின் மதசார்பின்மையெல்லாம் கேட்டு தான் பின்னர் எழுப்பப்படுகிறதா ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
கிட்டதட்ட 95 விழுக்காடு நெல்வயல்களும் தாணியங்களும் பயிறிடும் முன் விருப்ப தெய்வத்திற்கு வேண்டிவிட்டு தான் விதைக்கப்படுகின்றன, அது போன்று அறுவடையில் முதலில் படையலுக்கு எடுத்துவைத்துவிட்டு தான் பிறகு விற்பதற்கான தாணியங்களை அறுத்து எடுக்கிறார்கள், ஏன் விளைச்சல் நன்றாக விளைந்தால் தான் நம்பிய கடவுள் கொடுத்தவையே அவை என்று நம்புகிறார்கள். மேற்கண்ட போராட்ட அமைப்புகள் இந்த தாணியங்களையெல்லாம் வாங்கி உண்ணாமல் எதை உண்ணுகிறார்கள் ? மதச்சார்பற்ற தாணியங்கள் என்று ஏதேனும் விளைகிறதா ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
உலகிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தோனிசியாவில் பிள்ளையார் படத்தை ரூபியாவில் அடித்து புழக்கத்தில் விட முடிகிறது, இராமயண நாயகர்களை, இந்து கோவில்களை பணத்தில் அச்சடித்து விட முடிகிறது, அங்கெல்லாம் அந்த நாட்டு இஸ்லாமிய அமைப்புகளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUf-af0gyZdu_Nvq6FCtUitM1ScXKRrmuAdNsBMUJ-06WtQBZtMBZwU_qSwBqtRIuiMBUpWJKtWaR4YMlc3keDz3e5ZLSFKZaHfsgu3t0zfvf8g_FJ-enwgCvEGwsXTDtEon0I/s1600/rupia.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUf-af0gyZdu_Nvq6FCtUitM1ScXKRrmuAdNsBMUJ-06WtQBZtMBZwU_qSwBqtRIuiMBUpWJKtWaR4YMlc3keDz3e5ZLSFKZaHfsgu3t0zfvf8g_FJ-enwgCvEGwsXTDtEon0I/s1600/rupia.jpg" height="182" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1Bt-mchTDk2NMEjXax2lTKW4jd9sOclFo67z7supzBpRrDwOyRaSMONE7LWcjU4K_MIKY5DZDWDy-ohJsWW1GSs3S46-35ATH1iC_0jqfijnuWZ2wfxOuaxg1JKcFHCdkHzuU/s1600/rupia2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1Bt-mchTDk2NMEjXax2lTKW4jd9sOclFo67z7supzBpRrDwOyRaSMONE7LWcjU4K_MIKY5DZDWDy-ohJsWW1GSs3S46-35ATH1iC_0jqfijnuWZ2wfxOuaxg1JKcFHCdkHzuU/s1600/rupia2.jpg" height="170" width="400" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
தீவிரமாக இந்து நம்பிக்கைக் கொண்ட ஒருவன் மேற்கண்ட செய்தியைப் படித்தால் தனக்குள்ளே கேள்வி கேட்கவே மாட்டானா ? இந்து பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் தங்கள் நம்பிக்கை சார்ந்த ஒன்றை கவுரவப்படுத்தும் பொழுது அதனை எதிர்ப்பது தனது நம்பிக்கையை மதிப்பதையும் எதிர்பதாகும் என்று நினைக்கமாட்டானா ?</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மதச்சார்பின்மை என்பது எனது எல்லைக் கோட்டிற்குள் நீ வராதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது, அதனால் இந்தியாவிற்கு தேவை மதச்சார்பின்மை அல்ல மதச் சகிப்புத் தன்மையே. இவர்களின் எதிர்ப்பு தேவையற்ற காழ்புணர்வுகளையும் இந்துத்துவத்தை வளக்கவே உதவும். இவர்களது வைஷ்ணவி உருவம் பதிக்கப்பட்ட நாணய எதிர்ப்புணர்வும், இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதே என்கிற இந்துத்துவ கோஷமும் ஒன்றே.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
இன்னும் இவர்கள் தமிழ்நாட்டு அரச முத்திரையில் இருக்கும் கோபுரத்தை தூக்கவேண்டும் என்று சொல்லாதது வியப்பளிக்கிறது, ஒருவேளை தமிழ்நாட்டின் அரசு சின்னத்தில் கோபுரம் இருப்பதை இவர்கள் கவனிக்கவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv7I183NvbMLCBLZNBhmF-jWvy2nY9t8hN0MKqd9z6GzlrShb4oWxOTYIqhtA74thRPCZC45rF4eiCOeHrqTl09Pe-LPpKaCk_8Nz72XLV5f2JfG2jopVt6DQHNbH8ob0wtCQb/s1600/tn2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv7I183NvbMLCBLZNBhmF-jWvy2nY9t8hN0MKqd9z6GzlrShb4oWxOTYIqhtA74thRPCZC45rF4eiCOeHrqTl09Pe-LPpKaCk_8Nz72XLV5f2JfG2jopVt6DQHNbH8ob0wtCQb/s1600/tn2.jpg" height="320" width="291" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
மேற்கண்ட போராளிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒருவகையில் மதம் அல்லது வேலை ஆகிவற்றில் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான், இவர்கள் ஏன் அந்த நாடுகளில் இவர்கள் விரும்பும் மதசார்பின்மையை பரிந்துரைத்து ஏக உலகத்தில் மதசார்பு அற்ற அரசுகள் ஏற்படுவதை முன்னெடுக்கக் கூடாது ?</div>
</div>
கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com39