பின்பற்றுபவர்கள்

10 மே, 2010

வராகம் சுவைக்கலாம் வாருங்கள் !

வழக்கமாக விவகாரமாக மதவாதக் கருத்துகளை எழுதி வெளியிடும் ஹிந்து இணையத்தளத்தில் சமயல் குறிப்புகளுடன் பன்றி மாமிசம் குறித்தான 'சுவையான' விரிவான கட்டுரை வெளி வந்திருக்கிறது. பன்றி இறைச்சி உண்போருக்கு நாவில் எச்சில் ஊரவைக்கும் வருணனைகளுடன் எழுதி இருக்கிறார்கள்.

ஒருபக்கம் ஹிந்து தருமம் சனாதனம், சாத்வீகம், சைவம், ஹிந்து மதம் மட்டும் தான் விலங்குகளிடத்தும் அன்பு செலுத்துகிறது என்று கட்டுரைகள் வரும் அந்தத்தளத்தில் பன்றி மாமிசம் குறித்தான சிறப்புக் கட்டுரை ஏன் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

பவுத்த, சமண சமயங்களால் முன்னெடுக்கப்பட்ட புலால் மறுத்தல், பிறகு திருவள்ளுவர், வள்ளலாரும் மற்றும் ஏனைய சைவ, வைணவ சமயங்களால் பரிந்துரைக்கப்பட்டு ஓரளவுக்கு மரக்கறி உணவை (விரத நாட்களிலாவது) கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கும் நிலைக்கு இந்துக்கள் மாறி இருக்கின்றனர். மதங்களின் வழியான உணவு பழக்கம் என்பது நல்லதோ கெட்டதோ அவற்றில் ஓரளவேனும் உண்மை உண்டு என்ற அடிப்படையில் தான் அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் கடைபிடிக்கின்றனர். மேலும் உணவு பழக்கமும், உணவும் அந்தந்த நாடுகளின் தட்பவெட்ப, விவசாய சூழல்களைப் பொருத்ததே. சைவம், அசைவம் புனிதம், புனிதமற்றது, புண்ணியம் , பாவம் என்பதைவிட அவற்றின் மறு உற்பத்திகள் பாதிக்காத அளவுக்கு அவற்றை மனிதன் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை மட்டும் கருத்தில் கொள்கிறேன், அந்த விதத்தில் உணவுக்காக விலங்குகள் படைக்கப்பட்டதாகக் கூறி அவற்றை முற்றிலும் அழித்து திண்பதை நான் ஏற்பது இல்லை. உயிரினங்கள் பல முற்றிலும் அழிந்ததன் காரணமே அவற்றின் மறு உற்பத்தியை கணக்கில் கொள்ளாது அவற்றை மனிதர்கள் தின்று தீர்ததே. உணவு சுழற்சி அடிப்படையில் இயற்கையிலேயே ஒன்றை ஒன்று அடித்து திண்ண வேண்டும் என்பது விதி என்றாலும் கூட பயிரிட தெரிந்த மனிதன் விலங்கு உணவை மட்டும் சார்ந்திருக்கத் தேவை இல்லை என்பதுடன் விலங்களைப் பாதுக்காக்கும் பொறுப்பும் உள்ளது என்றே நான் கருதுகிறேன். மற்றபடி விலங்குகளை உண்ணுவது பாவம் என்று யாரேனும் போதித்தால் 'இயற்கை மற்றும் உணவு சுழற்சி பற்றிய எந்த ஒரு அறிவும் இல்லாதவர்' என்று கருதுவேன். இயற்கை தாவர உணவு வகைகளை பெருக்க வைக்கிறோம் என்று கூறி அறிவியல் முறையில் இரசாயணம் கலந்த வீரிய வகைகளை அறிமுகப்படுத்தி வழமையான இயற்கை உணவுகளை அழிப்பதும் கூட மனிதன் தனக்கு தானே வைத்துக் கொள்ளும் தீ தான் என்பதாக பலரும் பேசுகிறார்கள்.

கதைப்படி கண்ணப்பனுக்கு என்ன கிடைத்ததோ அதைத்தான் படைத்தான், கண்ணப்பனுக்கு கிடைத்தது பன்றி மாமிசம் மட்டும் தான். காட்டுவாசியான கண்ணப்பன் பன்றிக்கறிக்கு பதிலாக பாம்புக்கறி / நரிக்கறி / பூனைக்கறி படைத்திருந்தால் பாம்பு மாமிசம் பற்றி விரிவான பதிவை ஹிந்து இணையத்தளம் எழுதி இருக்குமா ? பன்றி கிருஷ்ண அவதாரத்தில் ஒரு (வராக) அவதாரம் தானே, நாயை பைரவனாகவும், யானையை பிள்ளையாராகவும் பார்க்கின்றனர் ஹிந்துக்கள். அப்படி என்றால் பன்றி இறைச்சி ? பன்றியை இறைச்சிக்காகக் கொன்றால் பாவம் இல்லையா ?

பசுமாடுகளிடம் இருந்து பாலை ஒட்ட ஒட்ட கறந்து பசு கிழடு ஆனதும் அதையும் அடிமாட்டுக்காரனிடம் விற்றுவிட, வாங்கியவன் அந்த பசுமாட்டைக் கொன்றால் கொல்லுபவன் பாபம் செய்கிறானாம். குலதெய்வத்திற்கு ஆடுகோழி பலி இட தடைவிதிக்க தூண்டுதலாக இருந்தவர்கள் தான் இன்று பன்றி இறைச்சியை பதமாக சமைப்பது பற்றி எழுதுகிறார்கள்.

எலி ஏரோப்ளேன் ஓட்டிய கதையாகத்தான் இருக்கு. பன்றி மாமிசம் குறித்து எழுதியுள்ள இணைய தளம் அதைப் அவர்கள் 'பிராமணர்கள்' என்று அழைத்துக் குறிப்பிடும் பார்பனர்களுக்கும் பரிந்துரைத்தால் நான் இதை இங்கே எழுதி இருக்கவே மாட்டேன்.

8 கருத்துகள்:

Athisha சொன்னது…

சூப்பர்!

Barari சொன்னது…

தவறு என்று தோன்றினாள் உடன் தட்டி கேட்கும் தைரியம் கோவியாருக்கே உரியது.

தனி காட்டு ராஜா சொன்னது…

இந்த பிரச்சினையைப் பத்தி நான் ஐ .நா சபையில பேசறேன் .............

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல கருத்துக்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

திருச்சிற்றம்பலம்!

சிவனடியார்களுக்கு வணக்கம்!!

Ashok D சொன்னது…

ஆழமான கட்டுரை.. சிறப்பு

priyamudanprabu சொன்னது…

சூப்பர்!

எதுவா இருந்தா என்ன ருசியா இருந்தா சரி

priyamudanprabu சொன்னது…

மாட்டு கறிகூட நல்லத்தான் இருக்கும்
அதை பற்றி எழுதுவங்களா??
?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்