பின்பற்றுபவர்கள்

21 மே, 2010

மணற்கேணி - 2009 நிறைவு நிகழ்ச்சிகள் !


மணற்கேணி - 2009 நிறைவு நிகழ்வுகளாக, வெற்றியாளர்களை சிறப்பிக்கும் வண்ணம், வெற்றியாளர்கள் கலந்து கொள்ளும், சிங்கைப்பதிவர்கள் சார்பாக கீழ்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதைத் சிங்கைப் பதிவர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

(நூல் அட்டைப்படம் மருத்துவர் ருத்ரன் ஐயா)

வெற்றியாளர்கள்:
திரு தருமி (அரசியல் சமூகம்)
திரு தேவன் மாயம் (தமிழ் அறிவியல்)
திரு பிராபகர் (தமிழ் இலக்கியம்)

மணற்கேணி போட்டியில் கலந்து கொண்ட பதிவுகளின் இணைப்பு இங்கே (தமிழ்வெளி)

நிகழ்ச்சியில் சிங்கைப் பதிவர்கள், வலைப்பதிவு வாசிப்பவர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

நிகழ்ச்சி பற்றி மேலும் அறிய அழையுங்கள்:
கோவி.கண்ணன் 9876 7586
குழலி 8116 5721
ஜோசப் பால்ராஜ் 9337 2775

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்