பின்பற்றுபவர்கள்

3 ஏப்ரல், 2010

நானும் பார்பனியமும் !

பார்பனியம் என்பதன் என் புரிதல் பூணூலோ, பார்பனர்களாக பிறந்த அனைவருமே இல்லை, உயர்சாதி மனப்பான்மையில் மேட்டிமையாக நடந்து கொள்பவர்கள் அனைவரும் பார்பனர்களே. உயர்சாதியம் என்று எழுதுங்களேன் என்று சில பார்பனர்களும் பார்பன ஆதரவாளர்களும் சொல்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை, உயர்சாதியம் என்று உயர்வு படுத்தி எந்த சாதியையும் நான் குறிப்பிட விரும்புவதில்லை ஏனெனில் எல்லா சாதியிலும் பணக்காரர்களும் உண்டு ஏழைகளும் உண்டு, ஏழைகள் என்றுமே தாழ்ந்தவர்களாகவே சமூகம் பார்க்கிறது, பொருளாதார ரீதியாகக் கூட எந்த ஒரு சாதியையும் உயர்சாதி என்று சொல்லிவிட முடியாது. முகத்திலிருந்து பிறந்தவனே எல்லாவற்றிலும் உயர்ந்தவன் என்கிற ஒட்டுமொத்தமாக தங்களை மனித குலத்தின் உயர்ந்தவர்கள் என கூறிக் கொள்பவர்கள் பார்பனர்களே என்பதால் பார்பனியம் என்ற சொல்லைப் உயர்சாதியத்திற்கு ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவது சரி என்றே பலரும் நினைப்பதால் நானும் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்து பயன்படுத்திவருகிறேன். இது குறித்து என்னிடம் வாதிடுபவர்களுக்கும் எனது பதில் இது தான்.

பார்பனியத்திற்கு பூணூல் அடையாளம் என்று நான் கருதுவதில்லை. பூணூல் என்பது சடங்கு என்ற அளவில் இந்துக்களின் இறப்பு சடங்கின் போதும் பல்வேறு இந்து சாதியினரால் பயன்படுத்தப்படுவதால் ஒருவர் பூணூல் அணிந்திருப்பதை சாதியம் என்று பார்க்காமல் பண்பாடு, பழக்கவழக்கம், சடங்கு சம்பிரதாயம், பெற்றோர்களின் விருப்பம் இந்த எதோ ஒன்றின் காரணமாகக் கூட ஒருவர் பூணூல் தொடர்ந்து அணிகிறார் என்கிற புரிதல் எனக்கு உண்டு, அதனால் ஒருவர் பூணூல் அணிந்திருக்கிற ஒரே காரணத்தினால் அவர் உயர்சாதி மேட்டுமையுடன் நடந்து கொள்வார் என்பதை நான் ஏற்பது இல்லை. ஆனால் பூணூலை உயரிய சாதி அடையாளமாக அணிந்து கொண்டு தாங்கள் பிராமணர்கள் என்று கூறிக் கொள்ளும் பார்பனர்களை நான் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை. இப்படியான உயர்சாதி மேட்டிமைத் தன பார்பனர்களை சாதிக்காக சாதிக்க முயற்சிக்கும் சாதி அபிமானிகள் அல்லது சாதி வெறியர்கள் என்று அவர்களின் தீவிரத்திற்கு ஏற்ப அவர்களின் அடையாளாமாகுகிறார்கள் என்று நினைக்கிறேன். இவர்களுக்கு பார்பனர்கள் தாம்ராஸ் எனப்படும் பார்பன சாதி சங்கத்தில் சிலைகளோ, புகைப்படமோ வைப்பது ஏற்பாடு கூட ஆகியிருக்கும் அதனால் அவர்கள் சாதிப் பெருமையை சாதி வெறியுடன் பரப்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.

ந்த ஒரு சாதி சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடாத ஒருவரை இவன் பார்ப்பான் என்று கூறும் தனிமனித தாக்குதல் என்னைப் பொருத்த அளவில் ஒருவர் பூணூல் அணிந்திருப்பதற்காக தூற்றுவது கண்டிக்கத்தக்கதே. முன்வரிசையில் அமர்ந்திருந்த பார்பனர்கள் என்று கூறிய சர்சைக்குரிய பதிவுக்கு என் பின்னூட்டம் அவர் அதை மனதில் வைக்காமல் வெளிப்படையாக பேசினார் என்பதற்கு மட்டுமே அன்றி வேறொன்றும் இல்லை. முன் வரிசையில் யார் யார் அமர்ந்திருந்தார்கள் என்று எனக்கு தெரியாது. ஒரு உண்மையைச் சொல்லப்போனால் பார்பனர்களாக அடையாளப்படுத்தப்படும் (அவ்வாறு தங்களைக் கூறிக் கொள்ளாதவர்களை) பல பதிவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள், அவர்களிடம் ஒரு சக பதிவர் என்பதையும் தாண்டி உள்ளார்ந்த நெருக்கத்துடன் உறவு முறைப் பெயர்களிலேயே அவர்களை அழைத்தும் வருகிறேன்.
என்னைப் பொருத்த அளவில் ஒருவரின் அடையாளம் எதுவேண்டுமானாலும் இருக்கலாம் அது அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்றும் அந்த நிலைப்பாடுகளள சமூகக் கெடுதல்களைக் கொண்டிருக்கும் கருத்து ஆதரிக்காவிடில் அவர்கள் இன்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் நான் பார்ப்பது இல்லை. என்னைப் பொருத்த அளவில் அவர்கள் எனக்கு நெருக்கமான உறவினர் போன்ற நண்பர்கள்.

பார்பனர்களாக அடையாளப் படுத்தப்பட்டவர்கள் எனக்கு நண்பர்களாக இருப்பதாலேயே நான் பார்பனக் கருத்துகளை ஆதரிக்கவேண்டும், அல்லது பார்பனீயம் பற்றி எழுதக் கூடாது என்று எந்த ஒரு அடையாளப்படுத்தப்பட்ட பார்பன நண்பரும் என்னை கடிந்து கொண்டது கிடையாது.

பார்பனீயத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பூணுல் வெளியே தெரிகிறவர்களையெல்லாம் வம்பிலுப்பது என்னைப் பொருத்த அளவில் கண்டிக்கத்தக்கதாகவே இருக்கிறது. அப்படியும் கூட விடாமல் பூணூல் போடாத பார்பனர்களையும் சிலர் பார்பனியவாதிகளாகவே அடையாளப்படுத்துகிறார்கள். குறிப்பாக எழுத்தாளர் ஞானி போன்றவர்கள் தாங்கள் பார்பனிய கருத்துகளை ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாக எழுதினாலும் அவர் சில அரசியல் கருத்துகளைக் கூறும் போது பார்பனிய புத்தி என்றும் பூணூல் நெளிகிறது என்றும் விமர்சனம் செய்கிறார்கள். இது போன்ற வம்படி அரசியல்களை நான் அதரிப்பது இல்லை. பார்பனரின் அடையாளம் பூணூல் என்போர், அந்த பூணூலை கழட்டிய பார்பனர்களையும் பார்பனியவாதிகளாகவேப் பார்த்தால், பார்பனியத்தை அழிப்பது என்பது பார்பனர்கள் அனைவரையும் அழிப்பதா ? அல்லது அடிமை ஆக்குவதா ? என்ற கேள்விக்கு இதுவரை யாரும் சரியாகப் பதில் சொல்லுவது போல் தெரியவில்லை.

ழிக்கப் படவேண்டியது சாதிகள் மட்டும் தான் தனி மனிதர்கள் இல்லை. ஒரு சாதியில் பிறந்த ஒரு காரணத்திற்காக தலித்துகள் அனுபவிக்கும் அத்தனை கொடுமைகளையும், பார்பனர்களாகப் பிறந்து சாதியே வேண்டாம் என்றும், சாதி எந்த உயர்வையும் தரவில்லை என நினைக்கும், நம்பும் பார்பனருக்கும் நடக்க வேண்டுமா ? பள்ள நாயே என்று திட்டுவதற்கும் பார்பன நாயே என்று திட்டுவதற்கும் வேறுபாடுகள் கிடையாது, அதையும் ஒருவர் பார்பனராக பிறந்தார் என்பதற்காக எந்த ஒரு சாதி அடையாளமும் போற்றாதவர்களையும் 'பார்பான்.......பார்பான்.... பார்பான் புத்தி ' என்று கூவுவது அருவெறுப்பையே தருகிறது.

பார்பனீயம் என்கிற அரசியல் நிலைப்பாட்டை உயர்சாதி அடையாளமாகச் சொல்வதை ஏற்கும் என்னால் பார்பனர்கள் அனைவருமே பார்பனீயவாதிகள் என்று கூற்றை ஏற்க இயலாது. ஒருவர் தன்னை பார்பனர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விழையாதபோது அவர்களுக்கு 'பார்பனர்கள், பார்பனியவாதிகள்' என்று சாதிச் சாயம் பூசுவதும் கூட குறிப்பிட்ட சாதி இருக்கவே கூடாது என்று நினைக்கும் ஆளுமை மனப்பான்மையாகும் அதற்கு நான் ஆதரவு கொடுப்பது இல்லை. குறிப்பிட்ட மதத்தினர் அனைவரும் தீவிரவாதிகள் என்று சொல்வது எவ்வளவு மடத்தனமோ, மதவெறியோ.....அப்படித்தான் பார்பனர்களாக பிறந்த ஒரே காரணத்திற்காக அதைப் பற்றி பேசாதவர்களையும் பார்பனர்களாகவே அடையாளப்படுத்திப் பார்ப்பதும் மடத்தனமே.

நான் பார்பன ஆதரவாளன், பார்பன எதிரி என்று கட்டமைப்பவர்களுக்கு இது தான் என் நிலைப்பாடு என்று கூறிக் கொள்கிறேன்.

123 கருத்துகள்:

Robin சொன்னது…

உங்கள் நிலைப்பாடு நியாயமானது.

//குறிப்பாக எழுத்தாளர் ஞானி போன்றவர்கள் தாங்கள் பார்பனிய கருத்துகளை ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாக எழுதினாலும் அவர் சில அரசியல் கருத்துகளைக் கூறும் போது பார்பனிய புத்தி என்றும் பூணூல் நெளிகிறது என்றும் விமர்சனம் செய்கிறார்கள்.// இது அருவருக்கத்தக்க விமர்சனம்தான், தவிர்க்கப்படவேண்டிய செயல்.

பெயரில்லா சொன்னது…

பொதுவாக பார்ப்பணர் என்றாலே பல மக்கள் வெறுக்கின்றனர்.ஒரு கருத்தை நான் வலியுருத்துகிறேன்.நாட்டிலே ஜாதிகள் எதுவும் சாதிக்கமுடியாது.பணம் படைத்தவன்,பணம் இல்லாதவன் இந்த இரண்டுதான் மாற்றத்தை நிர்ணயிக்கின்றன.தற்காலத்தில் அரசு பிற்படுத்தபட்ட வகுப்பினர்களுக்கு பல சலுகைகளை கூறுகின்றது.அந்த வகுப்பில் வசதியாக பல பேர் உள்ளனர்.அதே போல் உயர்ஜாதி களிலும் பல குடும்பங்கள் வறுமையில் உள்ளனர்.எனவே நாம் ஜாதிரீதியாக யாரையும் ஒருதலை பக்ஷமாக பேசாமல் அவர்களின் பொருளாதார ரீதியாக அனுகுவோம்

வஜ்ரா சொன்னது…

கோவி கண்ணண் வலைப்பதிவை இட்லி வடை குரூப் ஹைஜேக் செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இராகவன் நைஜிரியா சொன்னது…

இந்த இடுகைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்

PERFECT.

உமர் | Umar சொன்னது…

அனைத்தையுமே சொல்லிவிட்டீர்கள். பாராட்டுக்கள்! வலையுலகம் இதை புரிந்துக் கொள்ளும். ஆனால் அந்த செவிடர்களுக்குதான் ஊதிய சங்கொலி கேட்காது.

டிராகன் சொன்னது…

அண்ணே ,
உங்கள் பதிவுக்கு பின்னுட்டம் இடுவது இதுவே முதல் தடவை ,
உங்களின் இந்த பதிவுக்கு எத்தனை மைனஸ் ஒட்டு விழ போவது பாருங்க ..,

டிராகன் சொன்னது…

//ஏழைகள் என்றுமே தாழ்ந்தவர்களாகவே சமூகம் பார்க்கிறது, //

அசைக்க முடியாத உண்மை !!!

ப.கந்தசாமி சொன்னது…

No comments

பெயரில்லா சொன்னது…

ஒரே ஒரு வரியில் சொல்லிவிடலாம் உங்கள் பதிவு முழுவ்தையும்:

பார்ப்பனீயத்தை முழுக்கமுழுக்க உதறி, பிறதமிழர்களுடன் சக மனிதர்களாக பழகுபவர்களை ‘பார்ப்பான்’ என விமர்சனம் செய்யக்கூடாது.

இதைதானே சொல்கிறீர்கள்? இல்லையா?

ஏன் செய்கிறார்கள்? பதில் வெறும் காழ்ப்புணர்ச்சியா? இனத்துவேசமா?

ஒரு இனத்துவேசமென்றால் ஏன் அத்துவேசம் அவர்களிடம்?

அப்படி விமர்சனம் செய்வோர் எவ்வளவு பேர் தேறுவார்கள்? பெரியார் அல்லது தி.கவினர் மட்டும்தானா?

கோவி கண்ணன்!

அவர்கள் மட்டுமல்ல. அர்ச்சகரின் முதல் வரியைப்படியுங்கள். அவர் சொல்வது ஒரு கூட்டத்தை மட்டுமல்ல. பொதுவாக ஒரு ‘வெறுப்பு’ இருக்கிறது என்கிறார்.

இதை டோண்டு ராகவன் போன்றோரிடம் கேட்டால் பெரியாருக்கு அப்புறம்தான் அவ்வெறுப்பு ஏற்பட்டது;பெரியார்தான் காரணம், என்பார்கள்.

நான் பலபதிவுகளில் எழுதியது என்னவென்றால், பார்ப்பன வெறுப்பு என்பது பெரியாருக்கு முன் ஆதிகாலத்திலிருந்து வருவது. உங்களுக்குத் தெரியும் - ஒரு சிறிய மக்கள் கூட்டமான தமிழ்பார்ப்பனர்கள் தமிழ்கத்தில் அனைத்து துறையிலும் வியாபித்து மற்ற மக்களப்பின் தங்க வைத்தனர் என்பது. அது இன்று நேற்றல்ல. ஆதிகாலத்திலிருந்து. பெரியார் ஒரு culmination அவ்வள்வுதான்.

உங்கள் கருத்தான ‘பார்ப்ப்னீயத்தை உதறிய..” etc. வுக்கு காரணம், பயம்தான். உருசி கண்ட பூனை விடுமா? என்ற உணர்வே. விட்டால் மறுபடியும் வீழ்வோமோ?

நீங்கள் குறிப்பிடும் பாப்பனீய்மில்லா பார்ப்பனர்கள் நிலையப்பார்ப்போம்: பார்ப்ப்னீயத்தைத் தூக்கியெறிந்தாலும், பார்ப்பனீயத்தை அதாவது வைதீக இந்து மத நெறிகளை (பார்ப்பன்ருக்கு மட்டும் ஆனது)கடைபிடிப்போரை இவர்கள் ஒன்றும் சொல்லமாட்டார்கள். சொன்னவர்களை இவர்களும் எதிர்ப்பார்கள்.

பாரதியார் ஒரு எடுத்துக்காட்டு. எல்லாவற்றையும் உதறியவர் - ஆரிய வைதீக மதக்கூறுகளச்சரியெனவும், ஜாதிகளை உதறிய்வர், ஜாதிகள் வரக்காரணமான வருணக்க்கொள்கையைச்சரியெனவும், வாணாள் முழுக்க வைதீகமத்த்துக்காக போராடி வாழ்ந்தார். அவர் காலம் பெரியார் காலம் அல்ல. ஆனால் ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பித்தது. அதைப் பகடி பண்ணி எழுதினார்.

இவரைப்போலவே பலரும்.

ஒரு பதிவில் ஜாதிவெறியப்பற்றி எழுதியிருந்தார் ஒருவர். அதற்கு முதல் பின்னூட்டமிட்டவர் ‘ஜாதியா த்தூ..’ எனத்துப்பினார். ஆனால் அவர் பதிவிலோ, ஆதிகாலம் வருணக்க்கொள்கை எவ்வள்வு சரி; அதை நாம் இன்றும் கொண்டுவரவேண்டும் என எழுதுகிறார்.

பலரும் தங்களிடம் பார்ப்ப்னீயமில்லயென சொல்லிக்கொண்டே பார்ப்பன்ப்பற்றோடுதான் வாழ்கிறார்கள்.

ஆரை நம்புவது?

The onus of proving your innoncence is upon you, if you want to be accepted by your former enemies.

Once bitten forever shy.

பார்ப்பனர்களில் தங்களை மற்ற தமிழர்களோடு ஐக்கியப்படுத்திய்வர்கள் மிகக்குறைவு. கம்யூனிஸ்டுகள் போன்றோர். இவர்களும் தாக்கப்பட்டால் அதன் பெயர் collateral damage.

பலதலைமுறைகளுக்குப்பின்னரே, பார்ப்பனீயம் முழுக்கமுழுக்க தூக்கியெறியப்பட்டு பன்னெடுங்காலம் ஆன பின்னரே, பார்ப்பன் எதிர்ப்பு முழுக்க மறையும். நீங்கள் ஆதங்கப்பட ஒன்றும் அப்போது இருக்காது.

ஒன்றுமட்டும் நினைவில் கொள்ளுங்கள்: பலரின் வெறுப்பு அவரவர் வாழ்க்கையனுபவத்தின் அடிப்படையிலே. அவர்களின் வெறுப்புக்கு பெரியார் காரணமல்ல. பார்ப்பன்ரே காரணம். பார்ப்பனீயத்தைத் தூக்கியெறிந்தவர்கள் சுத்த்மானவர்கள் எனத் தெரிந்தாலே அவர்களிடம் இவர்கள் நெருங்குவார்கள்.

பத்மநாபன் சொன்னது…

//.......... என்று திட்டுவதற்கும் பார்பன நாயே என்று திட்டுவதற்கும் வேறுபாடுகள் கிடையாது, அதையும் ஒருவர் பார்பனராக பிறந்தார் என்பதற்காக எந்த ஒரு சாதி அடையாளமும் போற்றாதவர்களையும் 'பார்பான்.......பார்பான்.... பார்பான் புத்தி ' என்று கூவுவது அருவெறுப்பையே தருகிறது.// சரியாக சொன்னீர்கள் ... அருவெறுப்பு தான் மிஞ்சுகிறது.. சாதியோ , மதமோ கூட்டு விவாதங்கள் ஆரம்பித்து விட்டால் சொந்த அரிப்புகளுக்கு சொரிதலாக அமைவைதை சமிப கால பதிவுகளிலும் ,அதன் பின்னூட்டங்களிலும் பார்த்து வருகிறோம்.. நமக்கு கால காலமான கற்பிதமும் ,நம்முடைய மரபணு பதிவுகளும் அப்படி. எல்லா இனவாதத்திலும் நம்முடைய பார்வையை பொறுத்து கீழ்மையும் தென்படும் , மேன்மையும் இருக்கும். இப்படி விதண்டாவாதம் பேசியும், அவசியமற்ற கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியும் தான் சமுகத்தை திருத்திக்கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் வெறும் வேஷம் ... சொந்த விருப்பு வெறுப்பிற்காக ஒரு குறிப்பிட்ட பிரிவின் கீழ்மையை நோணாவட்டமாக பார்க்கும்பொழுது , மற்றவனும் தனி பட்ட முறையில் இறங்கி அடுத்தவனின் கீழ்மையை பார்க்க ஆரம்பித்து விடுகிறான் ..கடைசியில் காழ்ப்புணர்வும் வெறுப்புணர்வும் தான் மிஞ்சுகிறது. படிப்படியாக அறிவியலோடு அழகாக மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது என்று நம்பி சக மனிதனோடு இதமாக வாழ்வது தான் சுகம். இது நம் மாநில எல்லையை கடக்கும்பொழுது நன்றாகவே புரியும் .. உங்கள் பதிவு தரமாகவும் நேர்மையாகவும் இருந்ததால் சற்று அதிகமாகவே கருத்து பரிமாற்றம் செய்துள்ளேன் .. நன்றி.. வாழ்த்துக்கள் .

Sabarinathan Arthanari சொன்னது…

"காலம்” எதையும் மாற்றும் என்பதை நிறூபிப்பதை போல உங்களுடைய அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது.

//கோவி.கண்ணன் சொன்னது…
சாதீய அடையாளங்களும் 'கழட்டப்பட' வேண்டும் என்கிற வழியுறுத்தல் இல்லையே, சாதி பட்டப் பெயராக இருந்தாலும் தோளைச் சுற்றிய அடையாளமாக இருந்தாலும் ஒண்ணு தானே
//
-- http://sabaritamil.blogspot.com/2009/11/2.html

ஆனாலும் பார்ப்பனியம் என்ற சொல்லே குறிப்பிட்ட சாதி மக்களை குறிப்பிட பயன்படுத்திய பழம் தமிழ் சொல் என்பதும் அது மக்களிடையே புழங்கி கொண்டிருக்கும் வரை காழ்ப்புணர்ச்சியை தோற்றுவித்து கொண்டிருக்கும் என்பதும் என்னுடைய கருத்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//பாரதியார் ஒரு எடுத்துக்காட்டு. எல்லாவற்றையும் உதறியவர் - ஆரிய வைதீக மதக்கூறுகளச்சரியெனவும், ஜாதிகளை உதறிய்வர், ஜாதிகள் வரக்காரணமான வருணக்க்கொள்கையைச்சரியெனவும், வாணாள் முழுக்க வைதீகமத்த்துக்காக போராடி வாழ்ந்தார். //

உங்கள் கூற்று உண்மை என்றாலும் மதம் மாற்றும் குழுவை வரவேற்று அவர்களுக்கு சாமரம் வீசுவது தான் மதச்சார்பற்ற நிலை என்று நான் கருதுவதில்லை. சொந்த மதம் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த முயலுபவர்களை மதவெறியர்கள் என்று சொல்வதற்கில்லை.

பாரதியார் இந்து மதம் அழியவேண்டும் என்று எண்ணவேண்டும் என்று பலர் எதிர்பார்பது போலவே நீங்களும் நினைக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். பாரதியார் இந்து மதத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்று விரும்பினார் என்பது அவரின் பாடல்களின் இருந்து தெரியும் உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//http://sabaritamil.blogspot.com/2009/11/2.html

ஆனாலும் பார்ப்பனியம் என்ற சொல்லே குறிப்பிட்ட சாதி மக்களை குறிப்பிட பயன்படுத்திய பழம் தமிழ் சொல் என்பதும் அது மக்களிடையே புழங்கி கொண்டிருக்கும் வரை காழ்ப்புணர்ச்சியை தோற்றுவித்து கொண்டிருக்கும் என்பதும் என்னுடைய கருத்து.

3:02 PM, April 04, 2010
//

சபரி,

பானை கழுவுறவனுக்கு சட்டிக் கழுவுறவன் இளக்காரமாம், இதுதான் வருணாசிரம த(க)ருமத்தில் நடக்கிறது. ஒரு செட்டியோ, பிள்ளையோ பார்பனர்களைவிட சாதியில் உயர்ந்தவர்கள் என்று வைதீக தர்மமே உயரியது என்று சொல்லும் பார்பனரால் இயலாத காரணம். சாதிநோய் பீடித்திருப்பவர்கள் எவராயினும் வருணாசிரமத்தைக் கட்டிக்காப்பவர்களாகவே உள்ளனர், ஒருவர் யாரை பின்பற்றுகிறீராரோ அவருடைய அடையாளத்தில் தான் அவர் அழைக்கப்படுவார். பகுத்தறிவாதிகள் எவர் என்றாலும் அவர்களை பெரியாரிஸ்டுகள் என்று சொல்வது போலவே வருணம், சாதி உயர்ந்தது என்று சொல்லுவார் அதன் தலைமை ஏற்கும் பார்பன, பார்பனீயம் அடையாளத்துடன் விழிப்பது சரி என்று குறிப்பிடும் போது ஏற்றுக் கொள்ளவே வேண்டி இருக்கிறது. அதை விட்டொழிந்தவர்கள் அதைப் பற்றிக் கவலைக் கொள்ளத் தேவை இல்லை. கழுவியை கையை எப்போதும் முகர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பது தூய்மையாக இருக்க விரும்புவதன் அடையாளம் இல்லை. அது மன வியாதி.

Sabarinathan Arthanari சொன்னது…

@கோவி,

மறுபடியும் சாதியும் வர்ணாசிரமுமா ? ;) [நாம் ஏற்கனவே விவாதித்து இருக்கிறோம் http://sabaritamil.blogspot.com/2009/11/blog-post.html ]

என்னுடைய நிலைப்பாடு
1. இப்போதய சாதி வேறு பழைய வர்ணாசிரமம் வேறு.
2. பிறப்பின் அடிப்படையிலான சாதி ஒழிக்க பட வேண்டும்.
3. வேலையை வைத்து உயர்வு தாழ்வு கற்பித்தலும் ஒழிய வேண்டும்.

ஒரு திறந்த சவால் என்னிடமிருந்து இன்றைய சாதி சங்க தலைவர்களில்
1. எத்தணை பேர் மனு நீதியையும், வர்ணாசிரமத்தையும் கேள்வி பட்டிருக்கிறார்கள்?
2. எத்தணை பேர் அந்நூட்களை பார்த்து இருக்கிறார்கள் ?
3. எத்தணை பேர் அதன் பொருள் உணர்ந்து இருக்கிறார்கள்?

1% முதல் 5% ?

இன்றைய சாதி என்பது பொருளாதார ரீதியாக உள்ளது என்பதே என்னுடைய நிலைப்பாடாக உள்ளது.

Sabarinathan Arthanari சொன்னது…

நான் வர்ணாசிரமத்தை எதிர்க்க வேண்டாமெனவா கூறி இருக்கிறேன் ? (அது அவரவர் நிலைப்பாடு) வர்ணாசிரமம் சாதிக்கான காரணமாக இருப்பது 21ம் நூற்றாண்டில் காலாவதியாகி விட்டது பொருளாதார ரீதியான காரணம் பூதாகரமாக இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளேன்.

நோய்க்கான காரணம் ஒன்றாக இருக்க நாம் தவறான சிகிச்சை செய்து வருகிறோம் என்பதே சாதி சங்கங்கள் இன்றைக்கு பெருகி இருக்கிறது என்பதற்கான காரணங்கள்

பெயரில்லா சொன்னது…

வருணக்கொள்கையே ஜாதிகளின் அடிப்படை. ஜாதிகள் வேண்டா; வருணக்கொள்கை வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களா? பாரதியார் நினைத்தார். அவரைப்போல பலரும் நினைக்கிறார்கள்.

இதில் உங்கள் நிலையென்ன?

இந்து மதம் அழியவேண்டும் என்று மற்றவர்கள் நினைக்கிறார்கள். அவர்களை நாம் என்ன செய்யமுடியும்>

நம் கருத்தென்ன?

வருணக்கொள்கை சரியெனச்சொன்னால், உங்களின் பார்ப்பனீயம் சரியல்ல என்பது இரட்டைவேடமாகும்.

வருணக்கொள்கை இருந்தாலே, பார்ப்பனர் பிராமணன் என அழைத்துக்கொண்டு, தனக்கென இந்துக்களுக்குள்ளேயே, தனியான சடங்குகளை வைத்துக்கொள்கிறான்.

வருணக்கொள்கை ஜாதிகளாக திரிந்து இனிதியாவில் தலித்துகளை உருவாக்கிய்து. அவர்கள் இன்னும் அதில் வேகுகிறார்கள்.

இக்கொள்கையை பாரதி ஆதரித்தார். வைதீக இந்துமதத்தில் இருந்தபடியால், அவர் அம்மதத்தின் இன்றியமைக்கூறுகளின் ஒன்றாகச்சொன்னார்.

என் கேள்வி:

இந்து மதம் இக்கொள்கையில்லாம்ல் வாழ் முடியாதா? 30 கோடி தலித்துமக்களுக்கு நீங்கள் இம்மத்த்தில் கடைசியான தாழ்த்தப்பட்டவர்கள் இல்லயென்று சொல்லமுடியாதா?

இக்கொள்கையை எதிர்த்தவனின் கேள்வி இதுதான். அக்கேள்வி கேட்டவன் இந்து மதம் அழியவேண்டும் என பாரதி சொல்ல்வேண்டும் என நினைக்கிறான் எனச்சொல்வீர்களா?

நினவிருக்கட்டும். இக்கொள்கையை ஆதரித்தால், அங்கு பிராமணன் உண்டு, தலித்தும் உண்டு. இல்லயென்றால், அங்கு மனிதர்கள்தான் உண்டு. அவர்க்ளுக்குள்ளே வேறுபாடுகள் - அர்ச்சகர் சொன்னமாதிர் - பொருளாதாரத்தாலே வரும். அங்கே தலித்து ஏழையும் பார்ப்பன் ஏழையும் ஒன்றாம்.

இந்து மதம் இக்கொள்கையாலே பெரும் கேட்டையடைந்தது. இன்றுமா அதற்கு ஆதரவு? இப்படிக்கேட்டால் இந்து மதம் அழியவேண்டும் என விழைகிறார் என்றுதான் பொருளா?

பாரதியார் இக்கொள்கையை ஏற்ற்தாலேயே, அவரால் தலித்துகளை அவர்களின் நிலையிலேயே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பூணுல் போட்டுத்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஒருவனுக்குப்போட்டார். மேலும், அவர்களப் பற்றிக்குறிப்பிடும்ப்போது,
‘ஈனப்பறையர்கள்’ என்றார். எப்படி ந்ந்தனாரைப்பறையராக ஏற்றுக்கொள்ள வைதீக இந்து பிராமணர்களால் ஏற்றுக்கொள்ளமுடிய்வைல்லையே அப்படி. அவர்கள் நந்தனாரை பூணுல் போட்டு தீயிலிட்டார்கள் பிராம்ணனாக்க.

பார்ப்ப்னீயத்தை வெறுக்கிறேன். ஆனால் வருணக்கொள்கையை ஏற்கிறேன். ஜாதிகள் இல்லயடி பாப்பா.ஆனால் வருணக்கொள்கை உண்டு பாப்பா!

இதுவா கோவி கண்ணனின் நிலை?

பெயரில்லா சொன்னது…

தலித்துகளும் மனிதர்கள்தானே? அவர்களை ஏன் தீண்டத்தகாதவர்கள் என இந்துமதக்கொளையான் வருணக்கொள்கை இருக்கிறது?

வருணக்கொள்கை பற்றி விள்க்காதீர்கள். ஏனென்றால், அவர்கள் சொல்வார்கள் இப்படி அதை இல்லை. அப்படி இருக்கிறது

ஆனால் விளைவென்ன? தலித்துகல் எப்படி உருவானார்கள்? அவர்கள் மீது தீண்டாமை - பட்டால் தீட்டு, தொட்டால் தோஷம் = என்று ஏன் வைதீகப்பிராமணர்கள் ஓடினார்கள்? ஏன் இக்காலம் வரையில் அவர்கள் கோயிலுக்குள் நுழையமுடியவில்லை. அதற்கு பெரிய போராட்ட்மே ந்டத்தவேண்டியதாயிற்றே? இதற்கெல்லாம் எக்க்கொள்கை காரணம்? வருணாஷ்ரமக்கொள்கைதானே?

அக்கொள்கை தேவையா? அதில்லாமல் இந்து மதம் இருக்கமுடியாதா?

தன்னை பிராமணன் என அழைத்துக்கொண்டு, பூணுலும் மற்றும்பல இத்தியாதி சடங்குகளும் செய்து வாழ் இக்கொள்கையே பிராமண்னுக்கு வேண்டும். எனவே, அர்த்தநாரி போன்ற பார்ப்பன்ர்கள் இக்கொள்கை வேண்டும் என்கிறார்கள்.

பார்ப்பனரும், மற்றும் இக்கொள்கையால் பன்னெடுங்காலமாக் இம்மத்த்தின் வழி பெருமையடைந்த உயர்ஜாதீயன்ருமே இக்கொளை ஆதரவாளர்கள். என்வேதான் பிராமணரான் இராசாசி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவர முயன்றார்.

ஒரு சவால் அர்த்தநாரிக்கு:

எந்த்வொரு தலித்தாவது இக்கொளகை வேண்டும் என்று சொல்வானா?

பெயரில்லா சொன்னது…

நான் என்ன நினைக்கிறேன் என்று dont mind read Mr Govi.

Just read my points and go on responding to it please.

I am an independent thinker and I own all my opinions as my own. Not borrowed from anyone.

Dont try to club me with periyaarists or dkists any other ists.

இந்துமதம் அழியவேண்டும் என பாரதியார் நினைக்கவேண்டும் என நான் நினைப்பதாக சொல்வது ஒரு mindreading. Please avoid it.

பெயரில்லா சொன்னது…

//இப்போதய சாதி வேறு பழைய வர்ணாசிரமம் வேறு.
//

அப்படியென்றால் ஏன் பிராமணன் என்று பேர். ஏன் உப்நயனச்ச்டங்கும் மற்றும் பல சடங்குகளும். ஏன் வைதீகப்பிராமணருக்கு கோயில் சிறப்பு மரியாதை (இதற்கு பதில் சொல்ல உங்களுக்கு சில கோயில்களின் சடங்குகளைப்பற்றித்தெரிந்திருக்கவேண்டும்). ஏன், இன்னும் பிறஜாதியனர் அர்ச்சகராகக்கூடாதென எதிர்ப்பு? ஏன் கருவறைக்குள் பிராமணரே செல்லவேண்டும் என தடுப்பு?

அர்த்தநாரி சொல்வதை அப்படியே எடுத்துக்கொண்டாலும்,

மதம் என்று பார்த்தால்,

இந்து மதம் தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது என்பது உண்மைதான். ஆனால் அதன் அடிப்படைக்கொள்கைகள் இருக்கின்றன.

Vedas, Upanishad, Puraanaas, Ithikaasas, Karma theory, Creation of Universe, Concept of Man, Concept of God and Gods, Expectations of God, Hindu social philosophy (wherein occurs varnas) and many more -

எல்லாமே அப்படித்தான் இருக்கின்றன. இருப்பின், இந்து மதம். இல்லாவிடில் அது இந்து மதமில்லை.

எங்கு இம்மதம் வேறுபடிகிறதென்றால், அவற்றை ஒரு ஏற்றும் ஏற்ற்க்கொள்ளமாலும் இருக்க்லாம்.

இன்றைக்கு வருணாஷ்ரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இடமேயில்லை. க்டைபிடிக்கவில்லையென்றால், அது மதக்கொள்கையில்லென்றாகிவிடாது.

இன்றைய் ஜாதிகள் வேறுதான். ஆனால் அவை வருணக்கொள்கையில் perversionயே.

வருணக்கொள்கை வேண்டாமென சொல்ல்வேண்டும். எபபடி உடன்கட்டையேறுதலையும் பாலிய விவாகத்தையும் விதவை மறுமணத்தையும் மதக்கொள்கைகளாக இருப்பினும் தூக்கிப்போட்டபடி, இதையும் தூக்கிப்போடவேண்டும். ஆனால் இதற்கு ஆதரவு இருக்கிறது. எந்தவொரு சாமியாரும் இதை எதிர்க்கவில்லை. இராசாசி எதிர்க்கவில்லை. பாரதி எதிர்க்கவில்லை.

ஏன்?

பெயரில்லா சொன்னது…

//எத்தணை பேர் மனு நீதியையும், வர்ணாசிரமத்தையும் கேள்வி பட்டிருக்கிறார்கள்?
2. எத்தணை பேர் அந்நூட்களை பார்த்து இருக்கிறார்கள் ?
3. எத்தணை பேர் அதன் பொருள் உணர்ந்து இருக்கிறார்கள்?
//

என் எதிர் சவால்:

பார்க்கவேண்டிய்வர்கள் பார்த்திருக்கிறார்கள்.

பொது சமூகம் வேறு. இங்கு எழுதும் பார்ப்பன்ர்களே கூட அவைகளப்பார்த்திருக்க் மாட்டார்கள். பார்க்கவும் விழையமாட்டர்கள்.

அவர்கள் பொது சமூகத்தின் உறுப்பினர்கள்.

அப்பொது சமூகத்தைப்பார்த்த் நீங்கள் இக்கேள்விகளைக்கேட்கலாம்.

இங்கு ஒன்று நினைவில் கொள்ள்வேண்டும்.

பொது சமூகம் தலித்துகளைக்கோயிலுக்குள் வரவேண்டா என சொல்லவில்லை.

பொது சமூகம் தீண்டாமைக்கொள்கை கடைபிடிக்க்வைல்லை. தலித்துகள வெறுத்தார்கள். ஆனால் தலித்து தொட்டால் ஓடிப்போய் குளித்து தீட்டைப்போக்கிக்கொள்வதில்லை.

வைதீக இந்துக்க்ளே காரணம். அவர்க்ளே எதிர்ப்புக்குள்ளாகிறார்கள். அவர்களை எதிர்த்தே பெரியாரின் போராட்டம். அவர்கள் இந்து மதத்தின் நூல்களைக் கசடற கற்றவர்கள்.

Chittoor Murugesan சொன்னது…

//ஒழிக்கப் படவேண்டியது சாதிகள் மட்டும் தான் தனி மனிதர்கள் இல்லை//

I agree with you .

கோவி.கண்ணன் சொன்னது…

//பார்ப்ப்னீயத்தை வெறுக்கிறேன். ஆனால் வருணக்கொள்கையை ஏற்கிறேன். ஜாதிகள் இல்லயடி பாப்பா.ஆனால் வருணக்கொள்கை உண்டு பாப்பா!

இதுவா கோவி கண்ணனின் நிலை?//

உங்கள் கற்பனைகளை என்னால் தடுக்கவோ, பொறுப்பேற்றுக் கொள்ளவோ முடியாது.

பயிர்செழிக்க இருவகையில் செயல்படலாம். ஒன்று பயிருக்கு இடையேயான களைகளை முற்றிலும் நீக்குதல், இன்னொன்று பயிருக்கு
உரமிடுதல்.

பெரியார் போன்றவர்களை களை எடுப்பவர்களாகவும், வள்ளலார் போன்றோரை உரமிடுபவர்களாகவும் நான் நினைக்கிறேன். என்னால் இது இரண்டையுமே ஆதரிக்க முடியும்.

ஆனால் இங்கே களை எடுக்கிறேன் என்கிற பெயரில் பயிரையும் சேர்த்து அழிப்பதையோ, உரமிடுகிறேன் என்றுக் கூறி களைகளை கண்டு கொள்ளாமல் விடுவதுடன் அந்த களைகளுக்கும் சேர்த்தே உரமிடுவதை நான் புரட்சி என்று கருதுவதில்லை.

//Jo Amalan Rayen Fernando said...
தலித்துகளும் மனிதர்கள்தானே? அவர்களை ஏன் தீண்டத்தகாதவர்கள் என இந்துமதக்கொளையான் வருணக்கொள்கை இருக்கிறது?

//

உங்களை ஏற்கனவே ஒரு பதிவில் கேள்வி எழுப்பினேன் பதிலே இல்லை. மறுபடியும் அதே கேள்வியைக் கேட்கிறேன். ஒரு தலித் கிறித்துவனும், வன்னிய கிறித்துவனும் ஒரே சர்சில் வழிபட முடியவில்லை. ஹிந்து மதம் சாக்கடை என்று கூறி கைகூப்பி வரவேற்கும் தமிழக கிறித்துவத்தின் அல்லது உலக கிறித்துவத்தின் நிலை என்ன ? ஒரு கருப்பர் போப் ஆண்டவர் ஆகுவதற்கு இதுவரை கிடைத்த வாய்ப்புகள் என்ன ?

உங்கள் விமர்சனத்துக்குள்ளானது ஹிந்து மதம் மட்டும் தானா ? கிறித்துவத்தில் இருக்கும் சாதியத்தை நீங்கள் எந்த அளவிற்கு எதிர்த்துள்ளீர்கள் ? பேராசிரியர் தருமியைப் போன்று உங்களால் உங்கள் மதத்தைவிட்டு வெளியே வரமுடியுமா ?

நான் வருணாசிரமத்தை ஆதரிக்கவில்லை, என்னுடைய பதிவுகளைப் படிப்பவர்களுக்கு அது தெரியும். உங்களுடைய வருணாசிரம எதிர்ப்பு என்பது வெறும் இந்து மதம் தொடர்புடையதாக மட்டுமே இருக்கிறது. பைபிளிலும், குரானிலும் கூட 'உயர்ந்த இனங்களுக்கு' ஆதாரவான கருத்துகள் இருக்கிறது, அதன் படியே கிறித்துவ சமயத்தில் ஐரோப்பியர்களும், யூதர்களும், இஸ்லாமில் அரபுகளின் கை ஓங்கி இருக்கிறது அதற்கு அம்மதங்களும் அனுமதி கொடுக்கிறது. இந்து மதத்தில் வருணாசிரமம் உண்டு, அது ஒழிக்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறேன். அதே போன்று பிறமதத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு இந்துவை கைநீட்டி குற்றம் சொல்லும் முன் தத்தம் மதங்களில் இருக்கும் பழைமை வாதங்களுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார்களா ?

ஐயா, இங்கே மதம்வாதம் என்பது நாய்கள் தன் எல்லைக் கோட்டுக்குள் வந்தால் உன்னை நோக்கி குலைப்பேன் என்ற அளவிலேயே ஒவ்வொரு மதவிரும்பிகளாலும் நடைபெற்றுவருகிறது. இதில் மதச்சார்பற்றவர்கள் கருத்துக் கூறினால் மட்டுமே அது ஞாயமான கருத்தாக இருக்க முடியும்

ராஜ நடராஜன் சொன்னது…

சர்ச்சைகளை ஏற்படுத்தும் களத்தில் இடுகையும்,அதனை சார்ந்த பின்னூட்டங்களும் இதுவரை நாகரீக வெளிப்பாடாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

ராஜ நடராஜன் சொன்னது…

Jo Amalan Rayen Fernando!நன்றாகவே தமிழில் கதைக்கிறீர்கள்.தொடரலாமே இதே பாணியை:)

Sabarinathan Arthanari சொன்னது…

@Jo Amalan Rayen Fernando
உங்களுக்கு என்னுடைய பதிவிலேயே தெளிவாக அடிப்படையில் வர்ணாசிரமம் என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லை என கூறி இருக்கிறேன். அதை படித்து பார்க்கவும். திரும்ப திரும்ப ஒரே துவேச பிரச்சாரத்தை நீங்கள் கூறுவதன் பிண்ணனி எளிதில் அனைவருக்கும் விளங்கும்.

நான் சில நாட்களில் சமணம் பற்றிய நல்ல விசயத்தையும் எழுதுவேன் என்னை சமணர் என்று சொல்லாமல் இருந்தால் சரி :))

//தீண்டத்தகாதவர்கள் என இந்துமதக்கொளையான் வருணக்கொள்கை இருக்கிறது?

வருணக்கொள்கை பற்றி விள்க்காதீர்கள். ஏனென்றால், அவர்கள் சொல்வார்கள் இப்படி அதை இல்லை. அப்படி இருக்கிறது//

எனக்கு விளக்காதீர்கள் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றால் விவாதம் செய்து என்ன பிரயோசனம்?

//அர்த்தநாரி போன்ற பார்ப்பனர்கள் இக்கொள்கை வேண்டும் என்கிறார்கள்.//
மதம் கண்ணை மறைத்தால் அறிவு வேலை செய்வதில்லை. என்னுடைய சாதி என்னவென்று உங்களுக்கு ஞான கண் வழியாக தெரிந்ததா ஜோ ? ;)

உங்களுடைய விவாதம் கசப்புணர்வையே ஏற்படுத்துகிறது. நான் இங்கு பின்னூட்டமிட்டது கோவி. கண்ணனுக்காகவே.

என்னை குறித்து தனிப்பட்ட முறையில் எதுவும் விவாதம் செய்ய வேண்டாம் இல்லையெனில் அதற்கு தகுந்த விளைவுகளை சட்ட ரீதியாக சந்திக்க வேண்டியிருக்கும் என ஞாபக படுத்துகிறேன்.

பெயரில்லா சொன்னது…

//உங்கள் கற்பனைகளை என்னால் தடுக்கவோ, பொறுப்பேற்றுக் கொள்ளவோ முடியாது.
//

நான் கேட்டது உங்கள் நிலை என்ன ? என்றுதான். நான் கற்பனை பண்ணவில்லை. உங்கள் பதிவில் குழப்பம் அடைதேன். பார்ப்பனீயத்தை வெறுக்கிறேன் என்று சொல்லிவிட்டு பாரதியின் நிலையை ஆதரிக்க்மாதிரி இருக்கிறது. அவரின் நிலையைச்சுட்டிக்காட்டும்போது, நீங்க்ள அவர் இந்து மதத்தைத் தாக்கினான உங்களுக்குச்சரி போல என்கிறீர்கள்.

வருணக்கொள்கையே பார்ப்பனீயத்தின் அடிப்படை. அதுவே அதன் ஆறாத் புண். இதையெல்லாம் நான் சொல்லவில்லை. மத்த்தின் சரித்திரம் சொல்கிறது. அப்புண்ணை நக்கி வாழ்பவர்களே பார்ப்பனீயத்தைக்கடைபிடித்து வாழ்பவர்கள்.

பார்ப்பனீய்ம் கேடு வருணம் கேடல்ல என்று சொல்லமுடியாது. இரண்டும் ஒன்றே.

சாதிகள் இல்லையென்று சொல்லிக்கொண்டே வருணக்கொள்கை வேண்டுமென்பது impossible.

வருணக்கொள்கையே சாதிகளைப்பெற்ற ஊற்று.

உஙக்ள் பதிவில் பார்ப்பனீயத்தை விட்டவர்களை விமர்சனம் செய்யக்கூடாது என்பதற்கு நான் போட்ட பதில் அது ஒரு பழக்கதோசம். அதிலிருந்து விடுபட தலைமுறைகள் ஆகும். ஆனாலும், வேதாளம் முருங்கைமரம் ஏறினது போல பார்ப்ப்னர்கள் பழைய் வாழ்க்கைக்குத் திரும்பினால், தொடரும் என்ப்துவே என் பார்வை.

இப்பதிவில் என்ன் கருத்து சொல்லப்படுகிறதோ அதையே வாதிப்போம். என் மதம் என்ன? கிருத்துவம், இசுலாமியம் என்றெல்லாம் ஏன் தாவுகிறீர்கள்?

நான் பொது, நீங்கள் பொது. இங்கே வாதப்பொருள் பார்ப்பனீயம்.

இப்படி ஏன் உங்களால் பார்க்கவியலவில்லை.

வருணக்கொள்கையை ஆதரிக்கவில்லை என்பது சரி. அது இம்மதத்தின் சாபக்கேடு எனபதை நீங்க்ள் சொலல்முடியுமா? அதனால் 30 கோடி தலித்துமக்கள் ஆயிரக்கணக்கான் ஆண்டுகளாக மாரடித்தி வாழ்ந்தது தெரியுமல்லவா? என்வே என்ன தயக்கம்? ஏன் அது இந்து மத்த்தின் சாபக்கேடு எனவும், அதை ஆதரிப்பவன் எவராக இருந்தாலும் - பாரதியோ, இராசாசியோ, டோண்டு இராகவனோ, இல்லை அர்த்தநாரியோ - அவர்க்ள் சமூகத்துரோகிகள் என்று உங்களால் சொல்லமுடியுமா?

என்னால் முடியும்! சொல்வேன்.

கிருத்துவத்தைப்ப்போய் திருத்து; இசுலாமியத்தைப்போய் திருத்து என்பதெல்லாம், திசை திருப்பும் உபாயம்.

இங்கே பார்ப்பனர்கள் இல்லை. வைதீக பிராமணர்கள் இல்லை. இந்துத்வாவினரில்லை. பின்னூட்டமிடும் வருணக்கொள்கையாயரில்லை; நாமிருவரும்தான். நான் என்ன மதம் என்பதோ, நீங்கள் என்ன மதம் என்பதோ இல்லை. இருவரும் பொது. நமக்கு முன் கோடிக்கணக்கான தலித்துகள் நிற்கிறார்கள்.

சொல்லுங்கள் ஆருக்கு உங்கள் ஓட்டு? வருணக்கொள்கைக்கு வால்பிடித்த பாரதிக்கா? இல்லை எனக்கா?

பெயரில்லா சொன்னது…

நினைவில் கொள்க:

ஒருவீட்டில் நான்கு பூனைக்குட்டிகள். ஒவ்வொன்றும் ஒரு நிறம். ஆனால் ஒரு தாய் வயிற்றுக்குட்டிகள். அவைகள் ஒற்றுமையாக வாழவேண்டும்.

இதுவே வருணக்கொள்கை என்றார் பாரதி. அதன்படி ஒவ்வொரு குட்டியும் பிறப்பிலே ஒரே ஒரு நிறத்தை தனிதனியாக கொண்டது. அதன்படி மனிதர்கள் பிறப்பிலே குலமும் குலத்தொழிலும் வருகிறது. அப்படியாக் படிப்பது பார்ப்பனனுக்கு, வேத்மோதுதல் படித்தல். பண்டங்கள் செய்து விற்பது செட்டி...etc.

இதை ஒருகவிதையாக எழுதினார் பாரதி.

பிறப்பிலேயே குணம்..குலம் என்றார் பாரதி.

சம்மதிக்கலாமா?

பெயரில்லா சொன்னது…

ஒரு இனம் அழியவேண்டுமென நினைப்பவர்களைப்பற்றி நீங்கள் பேசிக்கொள்ளுங்கள். ஒரு இனம் நசுக்கப்பட்டது. அத இக்கொள்கையால் என்பதைப்பற்றி நான் பேசுகிறேன்.

பார்ப்பனீயம் அதைச்செய்ததது.

அதன் விளைவு இன்றும் போகவில்லை.

சரியா தப்பா?

பெயரில்லா சொன்னது…

அர்ச்சகர் எழுதிய முதல் வரியைச் சுட்டிக்காட்டினேன். அதை ஆராய்ந்தீர்களா?

ஏன் அந்த வெறுப்பு? அதை நான் ante-dated to periyaar என்றேன். அதைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?

வருணக்கொள்கை தலித்துகளை மட்டுமல்ல, சூத்திரர் எனப்பட்டோரையும் தாக்கியது. அச்சூத்திரர்கள் இன்று ஓபிசியில் பெரும்பகுதி.

ஆக், பார்ப்பனருக்கு எதிராக எழுந்தவர்கள் அனைவரும் ஆவர். பெரியாரிஸ்டுகள் மட்டுமே என்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து இன்று எழுதப்படுவது. பாரதி காலத்தில் இல்லை.

ஏன் அனைவருக்கும் எதிராக? அதன் அடிப்படை வருணக்கொள்கையால் அனைவரையும் இழிவுபடுத்தி வாழ்ந்தவர்கள் பார்ப்பனர்கள். அதன் வழியாகவே பார்ப்பன்ர் நன்னிலை அடைந்தனர். பிறரை ஆதிக்கம் செய்தனர்.

The வெறுப்பு is a logical reaction.

அதன் collateral damageஏ இன்று நீங்கள் ஆதங்கப்படும் பார்ப்ப்னீயத்தை விட்ட பார்ப்ப்னர்களும் சந்தேககக்ண்ணோடு பார்க்கப்படுதல்.

சரியா தப்பா?

பெயரில்லா சொன்னது…

மீண்டும் சொல்கிறேன்:

எதை வெறுக்கிறோம் என்பதில் கோவி கண்ணன் தெளிவாக இல்லை அல்லது நான் அறியவில்லை.

ஆனால் நான் உறுதி.

பார்ப்பனீயம் எனப்து வெறுக்கப்பட்வேண்டியது என்று ஆர் சொன்னார்கள் கோவி கண்ணனுக்கு?

பார்ப்ப்னீயம் என்பது வைதீக இந்து மதச்சித்தாந்தகளைப் போற்றுவது. அதை எதிர்க்கவேண்டுமானால் உங்களுக்கு ஒரே ஒரு தகுதி மட்டுமே இருக்க வேண்டும். நீங்கள் நாத்திகவாதியாக இருந்தால் போதுமானது. பார்ப்ப்னீயம் முழுக்க்முழுக்க ஏமாற்று எனச்சொல்ல்லாம். ஆனால் ஆத்திகருக்கு அப்படியில்லை.

இப்படிப்பட்ட பார்ப்ப்னீயம் விஷமாவது வருணக்கொள்கையாலே. அது மட்டும் இல்லாதிருந்தால் அது வெறுப்புக்குள்ளாக காரணமில்லை.

Following it in letter and spirit can make you only a saintly being. Nothing else. Dont fear to accept and follow it.

I hate only one thing in it, as explained.

What does he hate? ஏனென்றால் பார்ப்ப்னீயத்தைப்பற்றி பதிவு போட்டு வெறுக்கிறேன் என்றால்?

கோவி.கண்ணன் சொன்னது…

//
இதை ஒருகவிதையாக எழுதினார் பாரதி.

பிறப்பிலேயே குணம்..குலம் என்றார் பாரதி.

சம்மதிக்கலாமா?//

எந்த நிறமிருந்தாலும் – அவை யாவும்
ஒரே தரம் அன்றோ?

என்றும் சொல்லி இருக்கிறார்.

உங்களைப் போலவே ஒரு சில வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு 'மெல்லத் தமிழ் இனி சாகும் !' என்று பாரதி சொன்னான் என்று திரிப்போர் உண்டு

கோவி.கண்ணன் சொன்னது…

//Jo Amalan Rayen Fernando said...

மீண்டும் சொல்கிறேன்:

எதை வெறுக்கிறோம் என்பதில் கோவி கண்ணன் தெளிவாக இல்லை அல்லது நான் அறியவில்லை.

ஆனால் நான் உறுதி.//

திரும்ப திரும்ப கீறல் விழுந்த பழைய ரெக்கார்ட் மாதிரியே பேசிக் கொண்டிருந்தால் எப்படி, பார்பனீயம் கொடுமையானது என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று. வாருங்கள் இந்து பார்பனீயம், கிறித்துவ பார்பனீயம் ஆகியற்றையும் சேர்த்து எதிர்கலாம். நான் பார்பனியமும் பணியாரமும் இந்து மதத்தில் மட்டுமே இருப்பவை என்று கருதுவதில்லை.

ஜோ அமலனுடன் இருக்கும் 'ராயன்' நீங்கள் படிச்சு வாங்கிய பட்டமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//சொல்லுங்கள் ஆருக்கு உங்கள் ஓட்டு? வருணக்கொள்கைக்கு வால்பிடித்த பாரதிக்கா? இல்லை எனக்கா?//

கிறித்துவ பார்பனியம் என்று நான் கேள்வி கேட்டாலே அதை திசை திருப்புதல் என்று தவிர்க்கும் நீங்கள் எதிர்க்க நினைப்பது பார்பனியமோ அல்லது வருண கொள்கையோ அல்ல, வெறும் இந்து எதிர்ப்பு, வெறுப்பு மட்டுமே. ஏனென்றால் வருணக் கொள்கையும் பார்பனியமும் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவையாகவே இருக்கிறது என்று மதவாதிகள் மறுக்க முடியாமல் ஒப்புக் கொள்ளும் உண்மை.

உங்களுக்கு நேர்மை இருந்தால் இந்துக்களை எதிர்கிறேன் என்று வெளிப்படையாக சொல்லிவிடலாம் எதற்கு தேவையே இல்லாமல் வருணம், பார்ப்பான் என்று முலாம் பூசிக் கொண்டு வரவேண்டும்.

சர்சுகளில் தலித் தள்ளி வைக்கிறார்கள் என்று கூறினால் அதைப் பேசாதே என்று சொல்லும் தாங்கள் எதிர்க்க விரும்புவது என்ன ?

உங்களைப் பொருத்த அளவில் பெரியார் கூட பார்பன ஆதரவாளர் ஏனெனில் வருணக் கொள்கையை ஆதரிக்கும் இந்து மதத்தைவிட்டு அவர் இறக்கும் வரையில் கூட வெளியேரவில்லை என்று கூறினாலும் கூறுவீர்கள். உங்கள் வாதங்கள் அனைத்தும் முன்னுக்கும் பின் முரணான ஒன்று.

அடுத்தவன் முதுகில் அழுக்கு இருக்கு என்று சொல்லும் முன் தன் முதுகை யாரிடமாவது காட்டி சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.

Suresh சொன்னது…

ஒழிக்கப் படவேண்டியது சாதிகள் மட்டும் தான் தனி மனிதர்கள் இல்லை. ஒரு சாதியில் பிறந்த ஒரு காரணத்திற்காக தலித்துகள் அனுபவிக்கும் அத்தனை கொடுமைகளையும், பார்பனர்களாகப் பிறந்து சாதியே வேண்டாம் என்றும், சாதி எந்த உயர்வையும் தரவில்லை என நினைக்கும், நம்பும் பார்பனருக்கும் நடக்க வேண்டுமா ? பள்ள நாயே என்று திட்டுவதற்கும் பார்பன நாயே என்று திட்டுவதற்கும் வேறுபாடுகள் கிடையாது, அதையும் ஒருவர் பார்பனராக பிறந்தார் என்பதற்காக எந்த ஒரு சாதி அடையாளமும் போற்றாதவர்களையும் 'பார்பான்.......பார்பான்.... பார்பான் புத்தி ' என்று கூவுவது அருவெறுப்பையே தருகிறது.
/////

nice

பெயரில்லா சொன்னது…

I cant put up replies to your all posts immediately. Dont mistake me for evading them.

பெயரில்லா சொன்னது…

//எந்த நிறமிருந்தாலும் – அவை யாவும்
ஒரே தரம் அன்றோ?

என்றும் சொல்லி இருக்கிறார்.

உங்களைப் போலவே ஒரு சில வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு 'மெல்லத் தமிழ் இனி சாகும் !' என்று பாரதி சொன்னான் என்று திரிப்போர் உண்டு//

கதையை மாற்றாதீர்கள். திரிப்பவர்கள் வந்தால் திர்ப்பதைப்பற்றிச்சொல்லுங்கள். என்னிடம் நான் சொல்வ்தைப்பற்றி மட்டுமே பதில் கருத்து எழுதுங்கள்.

கவிதை முழுக்கபடித்துவிட்டு வாருங்கள்.

நீங்கள்தான் பாரதியின் கருத்தை மாற்ற மூயல்கிறீர்கள்.

பூனைக்குட்டிகள் ஒருதாய் வயிற்றில் பிறந்தவை. சரி. அவை ஒன்றாகத்தான் வாழும்.

ஆனால் அவை வெவ்வேறு நிறங்களில் பிறக்கின்றன. அன்னிறம் போக்காது என்கிறார் பாரதி.

சொல்லிவிட்டு மனிதர்களும் அப்படியே என்கிறார்.

குலம் பிறப்பிலேயே அமைகிறது; குலத்தொழிலும் அவ்வாறே.

முதலில் பூனைக்குட்டிகளைச்சொல்லிவிட்டு மனிதர்கள் வகுப்புவாரியாக என்னென தொழில் செய்ய்வேண்டும் என்கிறார்: வேத்மோதுதல் பார்ப்பனருக்கு. அதாவது கற்றல். இபபடி தனிமைப்படுத்துகிறார்.

இப்பாட்டைத் திரிப்பது நீங்களா நானா?

பெயரில்லா சொன்னது…

//உங்களுடைய விவாதம் கசப்புணர்வையே ஏற்படுத்துகிறது. நான் இங்கு பின்னூட்டமிட்டது கோவி. கண்ணனுக்காகவே.

என்னை குறித்து தனிப்பட்ட முறையில் எதுவும் விவாதம் செய்ய வேண்டாம் இல்லையெனில் அதற்கு தகுந்த விளைவுகளை சட்ட ரீதியாக சந்திக்க வேண்டியிருக்கும் என ஞாபக படுத்துகிறேன்.//


You are an educated person. I expect a lot from you.

I read your blog and I find your statement that we are not born with குலத்தொழில் is contradictory to your defence of varnshradharma


In fact, that is the manin theme of my posts here.

Castes come from Varnas. For keeping up varnas, brahmins benefited. Hence they are vested interests in the game of upholding the ancient asram. This is the main point that is held against them by others. The act of others thus, is called பார்ப்பனதுவேசம்.

பார்ப்பனதுவேசம் will immediately vanish if the asram is thrown out of the religion.

If you believe with me, if you are strong against the arsam, if you are sincere in your statement that we are born free, then, from where the bitterness comes when you read me?

பெயரில்லா சொன்னது…

//உங்களைப் போலவே ஒரு சில வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு 'மெல்லத் தமிழ் இனி சாகும் !' என்று பாரதி சொன்னான் என்று திரிப்போர் உண்டு//

I have no connection with such people. I am independent.

பெயரில்லா சொன்னது…

//திரும்ப திரும்ப கீறல் விழுந்த பழைய ரெக்கார்ட் மாதிரியே பேசிக் கொண்டிருந்தால் எப்படி, பார்பனீயம் கொடுமையானது என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று. வாருங்கள் இந்து பார்பனீயம், கிறித்துவ பார்பனீயம் ஆகியற்றையும் சேர்த்து எதிர்கலாம். நான் பார்பனியமும் பணியாரமும் இந்து மதத்தில் மட்டுமே இருப்பவை என்று கருதுவதில்லை.
//

புரிதலே தவறு. புது ரிக்கார்டு. எங்கும் கேள்விப்படாத்தது.

பார்ப்பனீயம் கொடுமையானது என்று எல்லாரும் சொல்கிறார்கள். நான் அவர்களிடம் ஒத்துப்போகவைல்லை. அவர்களைப்பற்றிக் கவலையுமில்லை.

பார்ப்ப்னீயம் கொடுமையானது என்பதை மறுக்கிறேன். நீங்கள் எப்படி?

பார்ப்பனீயம் ஒரு பால்குடம். அதில் விழுந்த துளிவிசம் வருணக்கொள்கையே.

இது கீறல் விழுந்த ரிக்கார்டி என்றால், நீஙகள் புரிதலுக்கு முன்பே முடிவெடுக்கிறீர்கள்.

Hanging a man before hearing his case.

பெயரில்லா சொன்னது…

னீங்கள் எழுதியது:

’...வருணக்கொள்கையும் பார்ப்பனீயமும்’

இரண்டும் வேறுவேறல்ல.

பார்ப்பனீயம் என்றால் என்ன ?

இந்து மதச்சித்தாந்தங்களை ஏற்றி, போற்றி, கடைபிடித்து வாழ்வதே பார்ப்பனீயம்.

அச்சித்தாந்தங்கள் அனைத்தும் வெறுக்கப்பட்வேண்டியது என நீங்கள் நினைத்தால், நீங்களே இந்து மத எதிர்ப்பாளர்.

நான் நினைக்கவில்லை.

அச்சித்தாந்தங்களுள் ஒன்று: வருணாஷ்ரதர்மமாகும். அஃது ஒன்றே வெறுக்கப்பட்வேண்டியது.

அதைச்சரியெனவும், அதைக்கடைபிடித்தலும் வெறுக்கப்பட்வேண்டியவை.

அதற்காக இந்துமத்தததையே பொருளகாது.

நன்றாகப் புரிந்தபின் எழுதவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சொல்லிவிட்டு மனிதர்களும் அப்படியே என்கிறார்.

குலம் பிறப்பிலேயே அமைகிறது; குலத்தொழிலும் அவ்வாறே.

முதலில் பூனைக்குட்டிகளைச்சொல்லிவிட்டு மனிதர்கள் வகுப்புவாரியாக என்னென தொழில் செய்ய்வேண்டும் என்கிறார்: வேத்மோதுதல் பார்ப்பனருக்கு. அதாவது கற்றல். இபபடி தனிமைப்படுத்துகிறார்.

இப்பாட்டைத் திரிப்பது நீங்களா நானா?//

இன்னும் அபத்தமாக மனிதனை பூனைக் குட்டிகளுடன் ஒப்பிடுகிறார் நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று குற்றம் கண்டிபிடித்தும் நீங்கள் சொல்லலாம்.

மனிதனில் கருப்பன், வெள்ளையன், மஞ்சள் நிறத்தவன் இல்லையா ?

அப்படி இருந்தாலும் எல்லோரும் மனிதர்கள் தான் என்று சொல்வதில் என்ன தவறு கண்டீர்கள் என்று தெரியவில்லை. நீங்க இல்லை என்று சொன்னால் வெள்ளையனுக்கு கருப்பு பெயிண்ட் அடித்து கருப்பன் ஆக்கிவிடுவீர்களா நீங்கள் ?

வேற்றுமையில் ஒற்றுமை வேண்டும் வரிகளில் குதர்கம் கண்டுபிடிக்கும் உங்களால் நான் கேட்ட கிறித்துவ பார்பனியம் பற்றி கேள்விகளுக்கு இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்துக்களுக்காவது பெரியார்கள் களையெடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள், உங்க நிலமையெல்லாம் நினச்சா பரிதாபம்.

உங்கள் பேரில் 'ராயன்' என்கிற சாதிப் பெயரை வைத்துக் கொண்டு நீங்களெல்லாம் வருணாசிரமத்தைக் கண்டிக்கிறேன் என்று கிளம்புவதைப் பார்க்கும் என்னமோ என்னமோ ஓதுச்சாம் என்கிற பழமொழியே நினைவு வருகிறது.

பெயரில்லா சொன்னது…

பார்ப்பனீயம் வேறு; உயர்ஜாதியம் வேறு.

இச்சொல்லை எல்லாருக்கும் சுட்ட்லாமா என்பதைப்பற்றி என் கருத்து டோண்டு இராகவன்பதிவில் இருக்கிறது.

பார்ப்பனீயம் இந்துமதச்சித்தாந்தத்தை அடிப்படையாகக்கொண்டது.

உயர்ஜாதீயம் - தோல் நிறம், பொருளாதாரம், சுத்தம் சுகாதாரம், இருப்பிடம், மற்றும் பல - அடிப்படையாகக்கொண்டது.

இதன்பிரகாரம், ஒரு வெள்ளைக்காரன் உங்களை ஒதுக்கிவைப்பான்.

‘Dogs and Indians are not allowed'

என்று பம்பாய் ஜிம்கானா கிளப்பின் எழுதி வைத்தான்.

இதன் பெயர் apartheid, என்பார்கள். நம்மவர்களிடையே நடக்கும்போது உயர்ஜாதீயம் என்றும் சொல்லலாம்.

பார்ப்பனீயம் என்ற சொல்லை பொதுவாக பயன்படுத்துவதை எதிர்த்து நான் ருத்ரனின் பதிவில் போட்டிருக்கிறென் அவர் உங்களைப்போல. இது ஒரு பொதுச்சொல்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Jo Amalan Rayen Fernando


னீங்கள் எழுதியது:

’...வருணக்கொள்கையும் பார்ப்பனீயமும்’

இரண்டும் வேறுவேறல்ல.

பார்ப்பனீயம் என்றால் என்ன ?//

ராயரே, பார்பனியம் வருணம் குறித்து எனக்கு பாடம் நடத்தியது போதும்.

//இந்து மதச்சித்தாந்தங்களை ஏற்றி, போற்றி, கடைபிடித்து வாழ்வதே பார்ப்பனீயம்.

அச்சித்தாந்தங்கள் அனைத்தும் வெறுக்கப்பட்வேண்டியது என நீங்கள் நினைத்தால், நீங்களே இந்து மத எதிர்ப்பாளர்.

நான் நினைக்கவில்லை.//

உங்களை யார் நினைக்கச் சொன்னது, நான் இந்து சமயத்தைச் சார்ந்தவன் என்று எனது பிறப்பு சான்றிதழ் சொல்கிறது, அதை எதிர்பதும் ஏற்பதும் எனது உரிமை.
நீங்கள் தான் எதிர்த்து பாருங்களேன் அதற்கெல்லாம் நான் பதில் சொல்லப் போவது இல்லை.

//அச்சித்தாந்தங்களுள் ஒன்று: வருணாஷ்ரதர்மமாகும். அஃது ஒன்றே வெறுக்கப்பட்வேண்டியது.
//

ஒப்புக் கொள்வோம், ஒழியட்டம், ஆனால்

எந்த கிறித்து இந்து வருணாசிரமம் கிறித்துவத்தில் ஏற்கப்பட்டுள்ளது என்று சொல்லுகிறார், எங்கே இருந்து வந்தது 'தலித்' கிறித்துவன் என்கிற பதம் ?

//அதைச்சரியெனவும், அதைக்கடைபிடித்தலும் வெறுக்கப்பட்வேண்டியவை.

அதற்காக இந்துமத்தததையே பொருளகாது.
//

இதைப் போய் சர்சிலும் சொல்லிவிட்டு வாங்க

//
நன்றாகப் புரிந்தபின் எழுதவும்.//

புரிந்து தான் எழுதுகிறேன். ஒரு கிறித்துவரான உங்களுக்கு முதலில் தலித் கிறித்துவர்கள் மீது அக்கரை இருந்திருக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...

பார்ப்பனீயம் வேறு; உயர்ஜாதியம் வேறு.

இச்சொல்லை எல்லாருக்கும் சுட்ட்லாமா என்பதைப்பற்றி என் கருத்து டோண்டு இராகவன்பதிவில் இருக்கிறது.

பார்ப்பனீயம் இந்துமதச்சித்தாந்தத்தை அடிப்படையாகக்கொண்டது.

உயர்ஜாதீயம் - தோல் நிறம், பொருளாதாரம், சுத்தம் சுகாதாரம், இருப்பிடம், மற்றும் பல - அடிப்படையாகக்கொண்டது. இதன்பிரகாரம், ஒரு வெள்ளைக்காரன் உங்களை ஒதுக்கிவைப்பான்.//

தோல் நிறமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, கருப்பாக இருக்கும் பார்பனர் ஒருவரை உன் பிறப்பில் எனக்கு சந்தேகம் என்று சொல்லிப் பார்த்துவிட்டு இங்கு வந்து உங்கள் விளக்கத்தைச் சொல்லுங்க.

// ‘Dogs and Indians are not allowed'

என்று பம்பாய் ஜிம்கானா கிளப்பின் எழுதி வைத்தான். இதன் பெயர் apartheid, என்பார்கள். நம்மவர்களிடையே நடக்கும்போது உயர்ஜாதீயம் என்றும் சொல்லலாம்.//

இந்தியனும் நாயும் அலவுட் இல்லை என்று ஒரு வெள்ளைக்காரன் சொன்னது இந்திய கிறித்துவர்களையும் சேர்த்தே தான்.

// பார்ப்பனீயம் என்ற சொல்லை பொதுவாக பயன்படுத்துவதை எதிர்த்து நான் ருத்ரனின் பதிவில் போட்டிருக்கிறென் அவர் உங்களைப்போல. இது ஒரு பொதுச்சொல்.//

உங்களுக்கு தொடர்பே இல்லாத ஒன்றிலெல்லாம் உங்கள் பரிந்துரை. போய் தலித் கிறித்துவர்களுக்கு 'விடுதலை' வாங்கித்தாருங்கள் சார் தீர்ப்பு நாள் முடிவதற்குள்

பெயரில்லா சொன்னது…

//அப்படி இருந்தாலும் எல்லோரும் மனிதர்கள் தான் என்று சொல்வதில் என்ன தவறு கண்டீர்கள் என்று தெரியவில்லை. நீங்க இல்லை என்று சொன்னால் வெள்ளையனுக்கு கருப்பு பெயிண்ட் அடித்து கருப்பன் ஆக்கிவிடுவீர்களா நீங்கள் ?
//

நான் சொல்வது குலம் பிறப்பில் என்கிறார்.

அதற்கு பூனைக்குட்டிகளின் நிறங்களை ஒப்பிடுகிறார். அன்னிறங்கள் பிறப்பிலே. அதைப்போல்வே குலத்தொழிலும் என்கிறார். பாடல் முழுவதையும் படிக்கவும்.

நான் கருப்பு, நீங்கள் சிவப்பு, ஒன்றாக் வாழலாம். நம் நிறத்தை மாற்ற முடியாது. யாரும் மறுக்கவில்லை கண்ணன்.

ஆனால் கறுப்பன் உடலுழைப்பு, கூலி வேலை.

சிவப்பன் கல்வி கற்றல் போத்தித்தல் என்பது பிறப்பிலேயே இருக்கிறது என்பதை நான் மறுக்கிறேன்.

பாரதி அதைச்சரியென்று எழுதுகிறார்.

குலத்தொழிலகள் உள. ஆனாலும் நாம் சரி சமம் என்கிறார்.

பாடலைப்போடுகிறேன் படியுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவப்பன் கல்வி கற்றல் போத்தித்தல் என்பது பிறப்பிலேயே இருக்கிறது என்பதை நான் மறுக்கிறேன்.

பாரதி அதைச்சரியென்று எழுதுகிறார்.

குலத்தொழிலகள் உள. ஆனாலும் நாம் சரி சமம் என்கிறார்.

பாடலைப்போடுகிறேன் படியுங்கள்//

குலத்தொழில் என்ன ஆனாலும் மனிதன் ஒண்ணு தான் என்பதில் என்ன தவறு. உங்கள் சிந்தனைகள் தற்கால பார்பனீய சிந்தனைகளை விட ஆபத்தானதாக இருக்கிறது.

ஒருவன் பிணம் புதைப்பவனாக இருந்தால் அவனை மனிதனே இல்லை என்று சொல்லிவிடுவீர்களா நீங்கள் ? அவனும் வேதம் ஓதுபவனும் ஒன்று என்று தானே பாரதி சொல்கிறான். நீங்கள் இல்லை என்று சொல்லவருகிறீர்களா ?

உங்கள் மனநிலை மோசமாக இருக்கிறது. வருணாசிரமத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் இந்து எதிர்ப்பை கக்குகிறீர்கள், அதையும் வலு இல்லாத வாதத்துடன்.

ராயரே .........ராயன் என்பது சாதிப் பெயர் தானே.

பெயரில்லா சொன்னது…

ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக்கெல் லாம்முத லாகும் - ஒரு
தெய்வம் துணை செய்ய வேண்டும்.

வேதமறிந்தவர்ன் பார்ப்பான் - பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்;
நீதிநி லைதவறாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாயக்கன்.

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றொர் வகுப்பில்லை - தொழில்
சோம்பலைப் பேலிழிவில்லை.

நாலு வகுப்புமிங் கொன்றே - இந்த
நான்கினி லொன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழிந்திடும் மானிடச் சாதி.

பெயரில்லா சொன்னது…

இதுதான் பாடல்.

இது முரசுப்பாடல்.

இதிலேயே பூனைக்குட்டிகள் உவமையும் வரும்.

எல்லாரும் ஒன்று. செய்யும் தொழிலால் உயர்வு தாழ்வு இல்லை.

நல்ல கருத்துகள்தான்.


ஆனால் வகுப்பவாரியாகத்தான் மக்கள் உண்டு. அவர்களுக்கு தனித்தனி குலத்தொழில்கள் உண்டு. அவற்றை அவாகள் வழுவாமல் திறமபட செய்து வந்தால் மானிடச்சாதி நலம்பெறும் என்று சொல்வது பாரதியின் சொந்தக்கருத்தல்ல; அஃது இந்துமதக்கொள்கையான வருணாச்ரதர்மமாகும்.

இது கடுமையாக எதிர்க்கப்படுகிறது. என்னால் மட்டுமல்ல. பார்ப்பனரும் மற்றும் உயர்ஜாதி இந்துகளைத்தவிர.

பாரதி சொன்னது சரியென்கிறீர்கள். எடுத்துக்காட்டியவனைத் திரிப்பவன் என்கிறீர்கள். உன்மதம் யோக்கியமா? உன்பெயரில் ஜாதி இருக்கிறது என்கிறீர்கள்!

என்ன சொல்ல?

பெயரில்லா சொன்னது…

//குலத்தொழில் என்ன ஆனாலும் மனிதன் ஒண்ணு தான் என்பதில் என்ன தவறு. //

குலத்தொழில் இல்லை என்கிறேன். ஆரும் எத்தொழிலையும் செய்யலாம்.

பெயரில்லா சொன்னது…

//ஒருவன் பிணம் புதைப்பவனாக இருந்தால் அவனை மனிதனே இல்லை என்று சொல்லிவிடுவீர்களா நீங்கள் ? அவனும் வேதம் ஓதுபவனும் ஒன்று என்று தானே பாரதி சொல்கிறான்//

பிணம் புதைப்பவன் மகன் பிணம் புதைப்பவனாக வேண்டிய தேவையில்லை. அவன் பள்ளி செல்லலாம். கலெகடரும் ஆகலாம். அல்லது அர்ச்சகரும் ஆகலாம்.

வேதம் ஓதுதல் (கற்றல்) குலத்தொழில் என்கிறார் பாரதி. பிணம் புதைப்பவன் மகன் அதைத்தான் செய்யவேண்டும் ஏனென்றால், அஃது அவன் குலத்தொழில்.

இப்படி மக்களை பிறப்பிலெயே சிறையிலிட்டு விட்டு,

இருவரும் ஒன்றுதான் என்கிறாரே பாரதி என்றால் என்ன அர்த்தம் கண்ணன்?

பெயரில்லா சொன்னது…

//உங்கள் மனநிலை மோசமாக இருக்கிறது. வருணாசிரமத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் இந்து எதிர்ப்பை கக்குகிறீர்கள்//

வருணாஷ்ரதர்மத்தை பல இந்துப்பெரியவர்களெல்லாம் சரியில்லை. வேண்டாமென எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.

All of them are mental, according to Govi Kannan. All of them are bent upon destroying Hindu religion.

கோவி.கண்ணன் சொன்னது…

//
ஆனால் வகுப்பவாரியாகத்தான் மக்கள் உண்டு. அவர்களுக்கு தனித்தனி குலத்தொழில்கள் உண்டு. அவற்றை அவாகள் வழுவாமல் திறமபட செய்து வந்தால் மானிடச்சாதி நலம்பெறும் என்று சொல்வது பாரதியின் சொந்தக்கருத்தல்ல; அஃது இந்துமதக்கொள்கையான வருணாச்ரதர்மமாகும்.

இது கடுமையாக எதிர்க்கப்படுகிறது. என்னால் மட்டுமல்ல. பார்ப்பனரும் மற்றும் உயர்ஜாதி இந்துகளைத்தவிர.

பாரதி சொன்னது சரியென்கிறீர்கள். எடுத்துக்காட்டியவனைத் திரிப்பவன் என்கிறீர்கள். உன்மதம் யோக்கியமா? உன்பெயரில் ஜாதி இருக்கிறது என்கிறீர்கள்!

என்ன சொல்ல?//

ஐயா ராயரே....பெரியவரே !

பாரதி பெரியார் இல்லை. பாரதியார் காலத்தில் சாதிக்கு எதிராகப் பேசுவது கூட புரட்சியாகத்தான் இருந்தது, பாரதி பார்பனர்களுக்கு எதிராகப் பேசினார் என்பதால் அவரை தள்ளிவைத்தார்கள், அவர் அதை பெரிதாகவும் எடுத்துக் கொள்ளவில்லை, பாரதி சாவுக்கு சென்றவர்கள் மொத்தமே 8 பேர் தான், அதில் ஒரு சில பார்பனர்கள் இருந்திருப்பார்களா என்பது ஐயமே.

தொழில்கள் குலவழக்கப்படி செய்து வந்த காலத்தில் அவர் வாழ்ந்தார், அந்த காலத்தில் தொழில் தான் குலம், குலம் தான் தொழில், அதனால் அதை வைத்து ஒருவரை தாழ்ந்த வேண்டாம் என்று சொன்னதில் என்ன தவற்றைக் கண்டு கொண்டீர்கள் என்றே தெரியவில்லை. எவ்வளவோ மரண தண்டனை முறைகள் இருந்து ஏசுவை ஏன் சிலுவையில் அறைந்தார்கள் ? ஏனென்றால் அது யூதப்பழக்கம், அதையே தான் இன்றைய யூதர்களும் மரண தண்டனைக்கு பயன்படுத்தனும் என்பீர்களா ? பாரதி வாழ்ந்த காலத்தில் எதிர்க்கத் தேவை இல்லாத ஒன்றை எதிர்த்திருக்க வேண்டும் என்று தற்போதைய சூழலை வைத்து கருத்து கூறுவது ஏற்பதற்கு இல்லை. சொத்தைவாதம்.

பெய்யன பெய்யும் மழை என்றும் கற்புடைய பெண்டீர் என்றும் அன்றைய பெண்களை புகழ்ந்து பாடிய வள்ளுவர் குறள் பாடல்கள் இன்றைக்கு பெண்ணடிமைத்தனமாகத் தெரிவது ஒன்றும் வியப்புக்குரியது அல்ல, ஏனெனில் பெண்கள் விடுதலை அடைய வேண்டும் என்ற விழிப்புணர்வு இன்றைக்குத்தான் பலருக்கும் வந்திருக்கிறது, அன்றைக்கு பெண்கள் அடிமையாக இருந்தார்கள் என்கிற உணர்வு சமூகத்திற்கும் கிடையாது.

அன்றைக்கு ஏன் பாரதி எதிர்க்கவில்லை என்ற உங்கள் கேள்விக்கு பதில் அன்றைக்கு அது பற்றிய விழிப்புண்ர்வு தேவையற்றதாகக் கூட இருந்திருக்கும். பாரதி மட்டுமல்ல சாதியை எதிர்த்தவர்கள் ஒளயார் ஆயாகாலத்தில் இருந்தே உண்டு, சாதி இரண்டொழிய என்று பாடினார், இட்டார் பெரியோ இடாதோர் இழிகுலத்தோர் என்று பாடினார். அந்த பாடலிலும் குலம் இருக்கிறது ஒளவையார் ஒரு பாப்பாத்தியாகத்தான் இருக்க வேண்டும் என்பீரோ ?

பெயரில்லா சொன்னது…

//உங்களுக்கு தொடர்பே இல்லாத ஒன்றிலெல்லாம் உங்கள் பரிந்துரை. //

இது தலிபானிசம்.

இந்து மதம் விமர்சனத்தை வரவேற்கிறது அவ்விமர்சனம் உள்ளோக்கம் கொண்டதாக இல்லாவிட்டால்.

வருணக்க்கொள்கை ஒரு தீங்கு. அது வேண்டாம் என்பது உள்ளோக்கம் கொண்ட விமர்சனம் அல்ல.

அதை இந்துக்கள்தான் பண்ணவேண்டும் என்று இந்து மதம் சொல்லவேயில்லை.

இந்துமத்த்தில் பட்வா கிடையாது.

ஆங்கிலேயர்கள், பலரும் விமர்சித்திருக்கிக்றார்கள். அவர்களை உங்களுக்குச்சம்பந்தமில்லா விடய்த்தில் தலைய்டாதீர்கள் என்று எவரும் சொல்லபட்டதில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...

//குலத்தொழில் என்ன ஆனாலும் மனிதன் ஒண்ணு தான் என்பதில் என்ன தவறு. //

குலத்தொழில் இல்லை என்கிறேன். ஆரும் எத்தொழிலையும் செய்யலாம்.//

அதெல்லாம் இன்னிக்கு, ஆனால் உங்கள் தாத்தா......அவருக்கு தாத்தா ? எல்லோரும் ஒரே தொழிலைத்தான் செய்துவந்திருப்பார்கள், அதையும் பிற குலத்தினர் தட்டிப் பார்க்க முயன்றிருக்கமாட்டார்கள், அன்றைக்கு உயர்வான தொழில் தாழ்ந்த தொழில் என்று வகைப்படுத்தி தான் இருந்திருக்கும். அதைத்தான் கூடாது என்று சொல்கிறான் பாரதி.

பெயரில்லா சொன்னது…

Pl refer to your post timed 2.23.

உங்கள் பதிவின் தலைப்பு ‘காலம்’.

அது கைகொடுத்து விட்டது.

அதை வைத்து சொல்லிவிட்டீர்கள்: அவர் காலத்தை வைத்துப்பார்த்தால் அது சரி.

அவர் காலத்திலேயே நீதிக்கட்சி தோன்றியது. அவர்கள் கடுமையாக வருணக்கொள்கை எதிர்த்தார்கள்.

பாரதியின் காலம் மிகப்பண்டைக்காலமல்ல.
அது கிடக்கட்டும்.

பாரதியின் வருணக்கொள்கை ஆதரவை இன்றுன் சரியெனச்சொல்கிறார்கள்.

இதற்கு மேல நான் பேசவில்லை.

Matra சொன்னது…

Well replied to "Joe Amala Rayen", Govi Kannan Sir.

There are people who oppose social evils because they genuinely want a better society.

Unfortunately, there are larger number of people who oppose genuine and imagined evils just to gain political mileage or attack Hinduism in order to spread their own religion.

People like Mr Rayan have lot of explaining to do about the mindboggling cases of paedophilism , extortion, land grabbing , murder and other crimes committed by the church across the world. Now the Pope himself is having a tough time after the homosex prostitution ring scandal broke out.

Mr Rayan could also do a bit of reading about the Goan Inquisition.

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...

Pl refer to your post timed 2.23.

உங்கள் பதிவின் தலைப்பு ‘காலம்’.

அது கைகொடுத்து விட்டது.

அதை வைத்து சொல்லிவிட்டீர்கள்: அவர் காலத்தை வைத்துப்பார்த்தால் அது சரி.

அவர் காலத்திலேயே நீதிக்கட்சி தோன்றியது. அவர்கள் கடுமையாக வருணக்கொள்கை எதிர்த்தார்கள்.

பாரதியின் காலம் மிகப்பண்டைக்காலமல்ல.
அது கிடக்கட்டும்.

பாரதியின் வருணக்கொள்கை ஆதரவை இன்றுன் சரியெனச்சொல்கிறார்கள்.

இதற்கு மேல நான் பேசவில்லை.//

இன்னிக்கு மட்டும் என்ன வாழுது....டாக்டர் மகனை டாக்கடாக்கிப் பார்க்கத்தான் விரும்புகிறார், வக்கில், பொறியலாளர்கள் அவர்களும் அப்படியே, இதில் வாரிசுகளாக விரும்பினால் மட்டும் தான் வேறொரு தொழிலை செய்யமுடியும் என்கிற நிலைமை இருக்கிறது. அதுவும் விருப்பத்துடன், லாபம் தருவதாக இருந்தால் மட்டும் தான்.

100 ஆண்டுகளுக்கு முன்பு வரை குழந்தை திருமணம் நடந்தது, அப்படி என்றால் அன்றைய பெற்றோர்கள் காட்டுமிராண்டிகள் என்று சொல்லிவிட முடியுமா ? அன்றைய விழிப்புணர்வு அந்த அளவுக்குத்தான்.

உங்கள் அளவுக்கு ஆராயமல் தான் பாரதியாரின் பெயரை புரட்சிக்கவிஞர் தன்னுடைய பெயராக்கி பாரதிதாசன் ஆனாரோ !

அந்த காலத்தில தங்கம் வெல 100 ரூபாய் தான் இந்த காலத்தில் 10000 என்றீர்கள் என்றால் உங்களை 'பெரிசு' என்று தான் சொல்லுவார்கள். ஏனென்றால் நிலைமை எதுவுமே ஆராயமல் வெறுமையான ஒப்பீட்டை மட்டுமே வாதம் என்ற பெயரில் வைக்கிறீர்கள்

dondu(#11168674346665545885) சொன்னது…

//எவ்வளவோ மரண தண்டனை முறைகள் இருந்து ஏசுவை ஏன் சிலுவையில் அறைந்தார்கள் ? ஏனென்றால் அது யூதப்பழக்கம், அதையே தான் இன்றைய யூதர்களும் மரண தண்டனைக்கு பயன்படுத்தனும் என்பீர்களா?//
தகவல் பிழை. சிலுவையில் அறைதல் ரோமானிய தண்டனையே. அதைத்தான் பிலாத்து கொடுத்தான். யூதர்களது மரணதண்டனை கல்லால் அடித்து கொல்வது.

அன்ப்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//தகவல் பிழை. சிலுவையில் அறைதல் ரோமானிய தண்டனையே. அதைத்தான் பிலாத்து கொடுத்தான். யூதர்களது மரணதண்டனை கல்லால் அடித்து கொல்வது.

அன்ப்புடன்,
டோண்டு ராகவன்//

டோண்டு சார்,

கண்ட கண்ட பதிவுகளை உங்கள் பதிவுக்கு வரும் அனானிகள் படிக்காவிட்டாலும் நீங்கள் படிப்பீர்கள் என்று தெரிகிறது. தகவல் பிழையை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி !

பெயரில்லா சொன்னது…

First of all, I thank Kannan for releasing all my posts uncensored. It requires courage to tolerate a person who holds opposite views.

I don’t agree at all with him that Bharati should be read in the context of his time. His time (30s and 40s) is not ancient. At that time, people already began to voice for equality of births. They were against occupation-by-birth theory of Hindu religion.

Bharati, for all that he wrote about equality, still believed the theory of occupation-by-births.

To say that people are born into occupations is a conspiracy against the people who had to do polluting occupations like scavenging, leather tanning, grave digging, removing carcasses of animals, etc.

After emphasizing that theory, to say that
‘In spite of different occupations-by-births, we are one’
- is a sick joke inflicted on the hapless and unfortunate dalits who were ostracized by Hindu society for the very occupations which were forced upon them from generation to generation.

It is a very, very sick joke. One must be heartless to force such people, by skewing up a variety of theories.

Hindu social reformers, then and now, are against it, even today. Reverent bows to them ! Bharati was not against it. That he lived in different times, so he was naive enough to hold that, is a lame excuse as his time and our times are not so different. We still have dalits ostrcised; humiliated, still walls are erected to keep themn off, still they are not allowed to worship in the same temple, still their children are humiliated in schools, still their women are raped in Bihar and Maharastra, still in AIIMS, separate basket balls courts need to built, separate hostel blocks for dalit students, still their hero Ambedkar Jayanti could not be celebrated, still Tamilians and Maharastraian oppose the naming of Law College after him. etc. The tale of woe is long!

Bharati also believed, just as Chidamabaram diksithars, that a dalit has to be purified, by giving him sacred thread; else, he is a polluted human being by birth. His audacious attempt to give punuul for a dalit boy evidences his belief that the sacred thread is necessary, meaning, a person can’t be dalit and saintly at one and the same time. Nandanar can’t be a pulaiyan and a saint, according to Chidambaram Dikshitars.

Dalits are not accepted as they are born - that is the main point in the two episodes. Govi Kannan may come to his defense again, calling me paranoid for misinterpreting the episode of sundaralingam. He has his right. I have mine. Let the neutral umpire rules out.

I like Bharati but I like people more. Exactly as Brutus said:

'I love Ceaser; but I love Rome more.', or, as Socretes told Plato:
‘Plato is dear to me; but dearer still is Truth’.
He made the comment when Plato begged him to recant in the interests of his disciples.

We ought to be like that. Bharati may be our hero. But our true heroes should be the people, especially those who are condemned by society. If need be, we must sacrifice individuals for the masses.

No argument on this anymore, please. I stand by my conviction that Bharti's view aforesaid should be spurned by all good people who keep the welfare of society. I refer to that view only: he has had so many about which any comments here are irrelevant. For which he can be rightly lionized.

பெயரில்லா சொன்னது…

This is for Matra.

Please forgive me for using the word 'religious fanatics' hereinbelow.

In an argument, if the religion of the writer is dragged, thinking that he can be silenced, it is the usual trick of a religious fanatic.

In so many fora, we find quarrels between Hindus and Muslims. If it is on which religion is better or good, the ensuing of quarrel is expected. But what to say, even on an innocuous subject like school education or children, they fight. How the fight develops is that one side drags the other side into quarrel unable to argue reasonably, by attacking the religion of other side, or the ethnicity of others.

In fact this is the theme of Govi Kannan's post here.

He says, when gnani says something, which is not liked, his critics say பார்பனிய புத்தி என்றும் பூணூல் நெளிகிறது என்றும் சொல்கிறார்கள்!

They are cowards who are unable to face the points he raises.

Similarly, if you say I have a hidden agenda here, you and the critics of Gnanai are of the same blood. Any doubt?

You cant be blamed for that; Govi Kannan has already shows the way by talking about me personally.

கோவி.கண்ணன் சொன்னது…

//No argument on this anymore, please. I stand by my conviction that Bharti's view aforesaid should be spurned by all good people who keep the welfare of society. I refer to that view only: he has had so many about which any comments here are irrelevant. For which he can be rightly lionized.//

என்ன கொடுமை இராயர் ஐயா,

தமிழில் தட்டியது எல்லாத்தையும் மறுபடியும் ஆங்கிலத்தில் தட்டி போடுகிறீர்கள், வூட்டுகார அம்மா உங்களை தண்ணி தெளிச்சு விட்டுவிட்டார்களா ?

பெயரில்லா சொன்னது…

//வூட்டுகார அம்மா உங்களை தண்ணி தெளிச்சு விட்டுவிட்டார்களா ?//

appadi enRaal enna artham? sathiyamaa enakku theriyaathu.

You could have disallowed it, if you think it is a repeat and encroach your space unnecessarily.

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...

//வூட்டுகார அம்மா உங்களை தண்ணி தெளிச்சு விட்டுவிட்டார்களா ?//

appadi enRaal enna artham? sathiyamaa enakku theriyaathu.
//

அட சும்மா கிண்டல் அடிச்சேனுங்க.

dondu(#11168674346665545885) சொன்னது…

//His time (30s and 40s) is not ancient.//
தகவல் பிழை. அவர் 1921 செப்டம்பர் 11-ஆம் தேதி இறந்தார்.
//Exactly as Brutus said: 'I love Ceaser; but I love Rome more.'//
And Brutus is an honorable man!

அன்புடன்,
டோண்டு ராகவன்

Matra சொன்னது…

//In an argument, if the religion of the writer is dragged, thinking that he can be silenced, it is the usual trick of a religious fanatic.//

On the contrary.I am a devout Hindu and if you have a problem with that, I'm sorry for you.

I have seen many people who criticise Hinduism without understanding it or pretending to not understand it. All for the purpose of evangelizing their own religion.
Thats why I mentioned your religion.

Please understand that Hinduism is not an organised religion with a single book of authority and set rules/rituals.

Hinduism is a term used by westerners/arabs to describe the religion and culture of the people who lived in India.

The term Hinduism more appropriately describes the religious beliefs, culture and also lifestyle of the person living in this land.

One can be a Hindu but he need not even believe in God.

My mixed Tamilian/Telugu lifestyle and mode of worship may differ from some one in say, Jaipur or Shimla but the important thing here is that it is homegrown and of this Land. Not imposed by an invader seeking to enslave physically/mentally/culturally.

There are innumerable practices which are social in nature but people wanting to attack Hinduism attribute them to Hinduism or misinterpretations of it.

There are social evils in society which appear to be of religious sanction but they are not. They are really misinterpretations or insertions brought in over the years by people who wanted to dominate or exploit others. This is also described as 'Parpaneeyam' by Mr Govi Kannan.

This attitude of wanting to dominate over others is really part of human nature. The problem is when it goes beyong limits. Usually this attitude gets boosted when someone thinks he/she has religious or ideological justification to do it. Thats what happened when some rigidity crept into Hinduism and some people started dominating religious affairs. This was not the case during ancient times.

Didnt the advent of Christianity and Islam lead to the adherents of these religions going on holy wars and crusades ?. Communism isnt really different here.
It is estimated that the victims of these wars exceed the total victims of natural calamities/outbreak of diseases in history.

Compare to earlier times when Alexander invaded India.

Another point I would like to make here is that the number of castes multiplied rapidly and casteism also became more rigid after India got invaded by Mughals/British. This again is simply human nature in order to protect religion/culture and have a sense of security.

Thanks Mr Kannan for giving me the space here.

உமர் | Umar சொன்னது…

@ Jo Amalan Rayen Fernando
நண்பரே! கீழிருக்கும் வரிகளும் 'முரசு' பாடலில்தான் வருகின்றன. பாருங்களேன்.

சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

மேலும் பூனைக்குட்டிகள் உவமையையும் எப்படிப் பொருத்துகிறார் என்று பாருங்கள்.

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

இந்த வரிகளுக்குப் பிறகு அவர் முரசறைவதையும் பாருங்கள்.

நிகரென்று கொட்டு முரசே! - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே! - பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.
அன்பென்று கொட்டு முரசே! - மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;
இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்

இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரிகளுள் ஒன்று:

அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;

பாடல் முழுதுமே அவர் சாதிகளை எதிர்த்துதான் பேசுகின்றார். உவமையாகக் கூறப்பட்ட ஒன்றை மட்டும் out of the context எடுத்து, நீங்கள் உரையாடியுள்ளீர்கள்.

Sabarinathan Arthanari சொன்னது…

//பாரதியோ, இல்லை அர்த்தநாரியோ - அவர்க்ள் சமூகத்துரோகிகள் என்று உங்களால் சொல்லமுடியுமா?//

மதவெறி பிடித்து பாரதியையே சொல்லும் போது எனக்கு என்ன ? ஆனால் நான் பாரதி அளவிற்கு வொர்த் இல்லைங்கண்ணா :)

நீங்க தவற விட்ட இன்னோரு பெயர் காந்தி. அவரளவிற்கு சமூக விரோதி உண்டா என்ன உங்களது பார்வையில் ?

அவர்தான் வர்ணம் திரிக்கப்பட்டு இப்போது நடைமுறை படுத்த படும் சாதி தவறு என்று கூறியவர் ஆயிற்றே :))

பெயரில்லா சொன்னது…

Ragavan!

We can add 20s, or simply 20s. Still it is the fact that Justice party was there when he was there. He knew that the antibrahmism was brewing.

Brutus ok. What abt Socretes?

Have you read Julius Ceaser? Antony took full advantage of the nobility of Brutus, to win the kingdom.

Brutus remained a honourable man because he lived upto his words, and died for it.

I am ready to sacrifice my friendship for the sake of people.

His words.

What about Bhrati and his loyalists?

They are ready to accept Varnams and humilate dalits, just because they love Bharati more.

பெயரில்லா சொன்னது…

Matri!

Fine. You write English.

You say, you are a devout Hindu. Why do you want a word created by foreigners i.e your invaders to describe yourself?

The real name of what we call Hindu religion is Sanatana Dharma, isnt ? It does not, however, occur anywhere in your long piece, why?

All that you have written about your religion is more beautifully written by many. Why dont you take up and read the primer on Hindu Relgion by Prof D.S.Sarma, formerly Prof of English, Vivekananda College. A cheaply priced small book published by Ramakrishna Mutt, Mylapore.

You need not tell us how a good custom became corrupt in your religion. Suffice it is to tell us whether you agree with Bharati that we are born into occupations-by-birth. If you disagree with him, you are my party. If not, you are Govi party.

Which is your party? The answer is all that I want from you. Not a lecture on Hindu religion, which I am conversant with; hence boring.

பெயரில்லா சொன்னது…

Arthnaari!

You have hit the nail on the head.

Gandhi - ya, Gandhi is no sacred cow. Maybe, for you. You need sacred cows. Bharti is one. Gandhi is another.

I said you have hit the nail on the head in refering to Gandhi. Because, dalits of India look upon him as their enemy. Because that man endorsed varnashradharma.

It is on this subject I had entered into an acrimoious agitation with Erodu Kadhir. He threatened me to take to court. I stood by my ground: GANDHI IS ENEMY NO 1 OF DALITS.

Jeyamohand tried to portray him as their savior and Ambedkar as their enemy; and Erodu Padhivar Kuzam wanted to hail Jeyamohan's book on Gandhi. Which raised my ire. Who do they want to fool?

All is in my blog you can read there.

Sabarinathan Arthanari சொன்னது…

http://www.jeyamohan.in/?p=4103

//காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று.//

ஆனால் சாதி என்பது குலத்தொழிலின் அடிப்படையில் இழிபொருளாக பார்க்கபடும் நிலை வந்ததுமே முழுமுதலாக கேடு கெட்ட நிலைக்கே கொண்டு சென்றது.

//1931ல் காந்தி எழுதினார் ” நான் நவீன அர்த்தத்தில் சாதி அமைப்பில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது ஒரு சமூகத்தீங்கு, முன்னேற்றத்துக்கு தடை. மனிதர்கள் நடுவே உள்ள எவ்வகையான ஏற்றதாழ்வுகளையும் நான் நம்பவில்லை. நாமெல்லாம் மூற்றிலும் சமம். சமத்துவம் என்பது ஆன்மாவிலே ஒழிய உடல்களில் அல்ல….புறவயமாக தெரியும் //

//சாதியை அழிப்பதற்கு மிகச்சிறந்த மிகவேகமான தடையற்ற வழி என்னவென்றால் சீர்திருத்தவாதிகள் அதை தங்களிடமிருந்தே தொடங்குவதுதான். தேவையென்றால் அதற்காக அவர்கள் சமூகத்தின் புறக்கணிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளவேண்டும் .மாற்றம் படிபப்டியாக ஆனால் உறுதியாக நிகழும்”

சொன்னதை தானே செய்வதற்கும் காந்தி தயாரானார். மார்க் லிண்ட்லே கோராவுக்கும் காந்திக்கும் இடையேயான உறவைச் சுட்டிக்காட்டுகிறார். பிறப்பால் பிராமணரான கோரா தன் சாதியை துறந்தார்.அதற்காக அவர் வேலையை விட்டு துரத்தப்பட்டார். தலித் மக்கள் நடுவே சேவைசெய்த கோராவை 1944 ல் காந்தி தன் ஆசிரமத்துக்கு அழைத்து தன்னுடன் வைத்துக்கொண்டார்.//

//1945 ல் காந்தி எழுதினார். ”பெண்ணுக்கு எந்த தகுதி இருந்தாலும் திருமணம் ஒரே சாதிக்குள் என்றால் என் ஆசீர்வாதத்தை தயவுசெய்து கோராதீர்கள். அவள் வேறு சாதி என்றால் மட்டுமே நான் என் ஆசீர்வாதத்தை அனுப்புவேன்”//

//இனிமேல் கவனியுங்கள், காந்தியை அவதூறுசெய்து வெளியிடப்படும் எந்த ஒரு ஆய்வேட்டுக்கு அல்லது நூலுக்குப் பின்னாலும் ஓர் அயல்நாட்டு பல்கலைக் கழகம் இருக்கும். அல்லது ஏதேனும் ஒரு கிறித்தவ மதப்பரப்பு நிறுவனத்தின் நிதியுதவி இருக்கும்.//

ஜெயமோகன் எழுதியது மிகச்சரி !!!

பெயரில்லா சொன்னது…

//ஜெயமோகன் எழுதியது மிகச்சரி !!!//

உங்களைப்போன்றோருக்கு. தலித்துகளுக்கும் தலித்துகளுக்காக பேசுவோருக்கும் அல்ல.

காந்தி கதையும் அதேதான். ஏராளமான விமர்சனங்கள் அவரின் இந்துக்கொள்கைகளைப்பற்றி, தலித்துகளைப்பற்றி.

அம்பேத்கரே தலித்துகளின் ஒரே குரல். காந்தியல்ல என்பது தலித்துகளின் நிலைபாடு.

நீங்கள் வேறுபடலாம்.

இன்றைய ஜெயமோகன், நேற்றைய காந்தி -தலித்துகளுக்கு எதிரானவர்கள் என்பது தலித்துகள் சொல்வது.

காந்தியின் பார்ப்பன ஆதரவு, வருணக்கொள்கை ஆதரவு பற்றி அவரின் விமர்சகர்கள் நூலகள் எழுதப்பட்டிருக்கின்றன.

ஜெயமோகனை மட்டுமே படித்தால் போதுமா?

தஞ்சை காங்கிரஸ் மாநாட்டில் காந்தி பேசிய பேச்சு வருணக்கொள்கையே சிறந்தது எனச்சொல்ல, பெரியார்-காந்தி லடாய் வந்தது.

அமேத்கர் - காந்தியின் தலித்துகளுக்கு எதிரான தந்திரமான சூழ்ச்சியை அறிந்ததால், அம்பேத்கர்-காந்தி லடாய்.

ஆக, காந்தி தலித்து சமூகத்தின் துரோகியாகப்பார்க்கப்படுகிறார்.

உங்களுக்கு என்ன கவலை? உங்களுக்குத்தான் ஜெயமோகன், காந்தி போன்றோரிருக்கின்றார்களே!

அவர்கள் பேசியதும், எழுதியதும் மிகச்சரி.

தலித்துகளைப்புரிய அவர்களோடு சிலகாலம் வாழ்ந்தால் தெரியும். பீகாரில், உ.பியில், மகாராட்டிய்த்தில்.

தனக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும் திருகுவலியும். அதுவ்ரை வருணக்கொள்கை எப்படி நாட்டுக்கு நல்லது என ஜெய்மோகனோடு சேர்ந்து ஆராயலாம். முடிவுகளை பதிவு எழுதி கொண்டாடலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//Sabarinathan Arthanari
//
சபரி,
மறுபடியும் பின்னூட்டம் போட்டு புலிவாலை மிதிச்சிருக்கிங்க. கிளம்பிட்டாரு பாருங்க.

Sabarinathan Arthanari சொன்னது…

@கோவி

//புலிவாலை மிதிச்சிருக்கிங்க

புலி இனம் அழிவதற்கு தற்கொலையும் ஒரு காரணமாக இருக்கலாமோ என் சந்தேக படவைக்கிறது உங்கள் உவமை ;)

நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஒருவருக்கு விடை சொல்ல தெரியாமல் தவித்து தனிமனித தாக்குதலில் இறங்கும் போதே அவர் காமெடி பீஸ் ஆகி விடுகிறார். :)

காமெடி பீஸ்கள் எல்லாம் உளற உளற தான் உலகிற்கு தெரிய வரும் :))

Sabarinathan Arthanari சொன்னது…

பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி.

http://jssekar.blogspot.com/2009/08/blog-post_23.html

கோவி.கண்ணன் சொன்னது…

// Sabarinathan Arthanari said...

பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி.

http://jssekar.blogspot.com/2009/08/blog-post_23.html//

காந்தி பெண்கள் புடை சூழத்தான் இங்கும் வந்திருக்கிறார் போல.
காந்தியின் அம்மண முயற்சிகள் அருவெருப்பானவை தான், அவருக்கு வயது 70 ஆகி இருக்கலாம் கூடப் படுத்திருந்த பெண்கள் இளைஞிகள் தானே, காந்தியைவிட மேலானவர்கள் என்று சொல்லலாம்.

Sabarinathan Arthanari சொன்னது…

காந்தியின் தாந்திரிகம் பற்றி எழுதியாச்சு கோவி. ;)
தாந்திரிகம், காந்தி, காமம்- விளக்கங்கள்

அடுத்தது என்ன ? :)

பெயரில்லா சொன்னது…

//மறுபடியும் பின்னூட்டம் போட்டு புலிவாலை மிதிச்சிருக்கிங்க. கிளம்பிட்டாரு பாருங்க//

இப்படி எழுதுவதும், மனைவி, மக்களைப்பற்றி எழுதி கேலிசெய்வதற்கு பதிலாக என் பின்னூட்டங்களைத் தடை செய்தாலென்ன?

நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

வருணக்கொள்கையை ஆதரிபோரும், அவர்களுக்குக்கொடி பிடிப்போரும், தலித்துகளின் எதிரிகள் என்னும் என் கருத்தில் மாற்றமே இல்லை. அதைப் பலவழிகளில் என் மூச்சுஇருக்கும் வரை சொல்வேன்.

பெயரில்லா சொன்னது…

கும்மி உங்கள் முரசுப்பாட்டு விளக்கத்திற்கு என்பதிவிலேயே பதில் போடுகிறேன் விரைவில். இங்கு போட்டால், என் மகனைப்பற்றியும் எழுதிவிடுவார் கோவி கண்ணன்.

நல்ல வேளை, என் மகள் பிழைத்தாள். அதாவது எனக்கு மகள் கிடையாது.

பெயரில்லா சொன்னது…

‘மலம் அள்ளுபவன் அத்தொழிலை நன்கு செய்வனாயின், அடுத்த பிறவியில் நன்னைலை அடையலாம்’ - இது மோடி.

இதுவே வருணக்கொள்கையாகும்.

எல்லாரும் நலமாக வாழலாம். தலித்துகளை ஆரும் அவமானபடுத்தப்போவதில்லை.

நாங்கள் நல்லவர்கள். நாங்கள் பிராமணர்கள், செட்டியார்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள். நாயுடுக்கள் - நாங்கள் பெருந்தனமையானவரகள்.

அவர்கள நாங்கள் மரியதையாக நடாத்துவோம. அவர்கள் கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடலாம். இந்துக்களாக இருக்கலாம். எங்கள் விருப்பம் அதுவே.

ஆனால், அவர்கள் தலித்துவ நிலை -அதாவது, ஐந்தாவது வருண நிலை - மாறாது. நாங்கள் உயர்ஜாதியினர். அவர்கள் கீழ்ஜாதியனர். இன்னிலையில் மாற்றம் இல்லை.

இப்படிக்கு,

உயர்ஜாதி காமெடி பீசு.

கோவி.கண்ணன் சொன்னது…

//Jo Amalan Rayen Fernando said...
கும்மி உங்கள் முரசுப்பாட்டு விளக்கத்திற்கு என்பதிவிலேயே பதில் போடுகிறேன் விரைவில். இங்கு போட்டால், என் மகனைப்பற்றியும் எழுதிவிடுவார் கோவி கண்ணன்.

நல்ல வேளை, என் மகள் பிழைத்தாள். அதாவது எனக்கு மகள் கிடையாது.
//

சும்மா சிறுபிள்ளைத்தனமாக பேசுவதால் சின்னப் பையன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்று ஆக்ட் கொடுக்காதிங்க. சின்ன புத்தி தனமாக இருக்கு. வன்மையாக கண்டிக்கிறேன்

உங்க மனைவி கணிணியே பின்னூட்டமே கதி என்று நீங்கள் இருப்பதை கண்டு கொள்ளமாட்டாரா என்ற பொருளில் கேட்டேன், இதில் யார் அவமானப்பட்டது ? எப்படி என்று விளக்கவும். உங்க திரித்தலை நினைத்தால் எரிச்ச்சலாக இருக்கு சார்.


இப்ப நான் உங்களுக்கு மகன், மகள் இருக்காங்களா என்று பட்டியல் கேட்டேனா ? ஏன் இந்த உளரல், வயதுக்கு முதிர்ச்சிக்கும் தொடர்பில்லை என்று நிருபனம் செய்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.

கிறித்துவ தலித்துகளைப் பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லக் காணும் இவரு வருணாசிரமத்தை எதிர்கிறாராம், நல்ல கூத்து சாமி.

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்படி எழுதுவதும், மனைவி, மக்களைப்பற்றி எழுதி கேலிசெய்வதற்கு பதிலாக என் பின்னூட்டங்களைத் தடை செய்தாலென்ன?//

இது போல் சின்ன புத்தி தனமாக பேசி பின்னூட்டத்தை படிப்பவர்கள் இடையே உங்கள் மதிப்பை குறைத்துக் கொள்ள வேண்டாம்.

கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வழியில்லை என்றால் திரிப்பதா ? மோசமான பார்பனீய மனநிலை.

டீச்சர் என்னை கிள்ளிட்டான் பாணியிலான பின்னூட்டம் போட்டு அழுகாச்சி காவியம் எதற்கு ? உங்க சீனை வேறு எங்காவது போடுங்க நான் தொடர்ந்து எழுதிவருகிறேன். நான் யாரையாவது தேவையில்லாமல் கடிந்து கொண்டிருக்கிறேனா என்று படிப்பவர்கள் அறிந்துள்ளார்கள். பெட்டர் லக் நெக்ஸ் டைம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...
‘மலம் அள்ளுபவன் அத்தொழிலை நன்கு செய்வனாயின், அடுத்த பிறவியில் நன்னைலை அடையலாம்’ - இது மோடி.

இதுவே வருணக்கொள்கையாகும்.

//

மோடியை இங்கே வலைப்பதிவில் பலரும் செருப்பால் அடிச்சாச்சு. தலித் கிறிதுவர்கல் சர்சுக்குள் நுழைய வழிசெய்யாத கத்தோலிக்க பாதிரிகளை செருப்பால் அடிக்க நீங்கள் தயாரா ? உங்க அழுக்கை கழுவிட்டு அடுத்துவன் முதுகைப் பாருங்க சார்.

பெயரில்லா சொன்னது…

மோடியை அடிசாச்சு. வருணக்கொள்கையை அடிச்சாச்சா? இல்லையே?

எனக்கு எதிர்வினைகள் வருகிறதே?

கிருத்துவ மதததுக்கும் வருணாஷ்ரதர்மத்துக்கும் என்ன ச்ம்பந்தம் கோவி கண்ணன்?

பெயரில்லா சொன்னது…

சின்னப்புத்தித்தனமாக...//

ஆர் அப்படி பேசியது?

’மனைவி தெளிச்சு அனுப்பிட்டாரா?” என்று எழுதியது என்ன புத்தி சார்?

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருத்துவ மதததுக்கும் வருணாஷ்ரதர்மத்துக்கும் என்ன ச்ம்பந்தம் கோவி கண்ணன்? //

பிறகு "என்ன மயித்துக்குடா தலித் கிறித்துவன் என்று கிறித்துவ மதம் மாறிய தலித்துகளை தள்ளி வைக்கிறீர்கள்", என்று பிரச்சனைக்குரிய சர்சுகளில் நுழைந்து பாதிரிகளை கேள்வி எழுப்பிவிட்டு இங்கு வந்து அர்தநாரியிடம் கேளுங்க, அவர் பதில் சொல்லுவார்.
***

கோவி.கண்ணன் என்னை மரியாதை இல்லாமல் பேசிவிட்டான் என்று திரிக்க வேண்டாம்.

பெயரில்லா சொன்னது…

மற்றவர்கள் உங்கள் குடுமபத்தினர் யாரையாவது குறிப்ப்ட்டால் மட்டுமே நீங்கள் பிறரை அப்படியே சொல்லலாம்.

நீங்கள் செய்யலாமா?

நான் எப்போதுமே அப்படி செய்வதில்லை.

செய்தபின், நான் நல்ல எண்ணத்தில்தான் செய்தேன் என்பது damage control.

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...
சின்னப்புத்தித்தனமாக...//

ஆர் அப்படி பேசியது?

’மனைவி தெளிச்சு அனுப்பிட்டாரா?” என்று எழுதியது என்ன புத்தி சார்?
//

திரிக்கும் உங்களுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை, மீறி பதில் போட்டால் என்னையும் காமடி பீஸுன்னு எவராவது சொல்லக் கூடும்.

Matra சொன்னது…

Sri Jo Amalan Rayen Fernando.

There is a simple explanation for me typing here in English. Just convenience and lack of time. I can speak and read fluently in Thamizh but not savvy enough to type it here fast enough.

English has become a kind of universal language. As long as one continues to follow and respect ones culture and traditions, I don't see why using English is wrong.

Ok, being in a hurry I didnt use the term Sanathana Dharma, does it make such a difference ?

You are just nit picking.

It looks like you are following the classic methods of the Evangelist. Attack the beliefs of others, demean / criticise their leaders, discredit the good work being done,
put people in defensive....

Racism, casteism and many other forms of discrimination exist in this world. You talk as if non Hindus dont practise any form of discrimination. Dont you know the racism which happened and is happening in Africa/America and is caused by the Christian whites ?. The rapes, murders, tortures enslavement and other heinous crimes are massive in scale and level.

Sri Govi Kannan should excuse me but the reason I'm telling all this is because Rayen has hijacked this issue of 'Parpaneeyam' and is trying to slowly bring in his religious propaganda. He will soon say, Gandhi, Vivekanandar and in future Ambedkar too are not true supporters of Dalits and only Christians are so.

Sabarinathan Arthanari சொன்னது…

@கோவி,

//திரிக்கும் உங்களுக்கு பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை, மீறி பதில் போட்டால் என்னையும் காமடி பீஸுன்னு எவராவது சொல்லக் கூடும். //

same blood கோவி. இது தான் நான் முதலிலேயே சொன்னது. நான் பின்னூட்டம் போட்டது உங்களுக்காகதான் என்று.

உங்களுடன் உரையாடியது பல விசயங்களை பகிர்ந்து கொள்ள உதவியது. வேறு பல பயனுள்ள உரையாடல்கள் அடுத்தடுத்த பதிவுகளில் நடக்குமென நம்புவோம்

நன்றி
[இதற்கு மேல் விவாதம் இந்த பக்கத்தில் கிடையாது]

K.R.அதியமான் சொன்னது…

அன்புள்ள அய்யா,

/////நான் பார்பன ஆதரவாளன், பார்பன எதிரி என்று கட்டமைப்பவர்களுக்கு இது தான் என் நிலைப்பாடு என்று கூறிக் கொள்கிறேன்.///

இது எம்மை தான் குறிக்கிறது என்பது புரிகிறது. உங்களை பார்பனர்களை வெறுப்பவர் அல்லது எதிர்ப்பவர் என்று என்றும் கருதியதில்லை. அப்படி ’கட்டமைக்கவும்’ முயலவில்லை. ’பதிவர் சந்திப்பில் பார்பானியம்’ என்ற அந்த பதிவு முட்டாளதனமானது என்றே பலரும் கருதுகின்றனர். ஞாநி அவர்களை சமீபத்தில் சந்தித்து பேசிய போதும் அதையே தெரிவித்தார். தர்க்க ரீதியாக அதை நியாயப்படுத யாராலும் முடியவில்லை. பதிவை கண்டிக்காமல், ’வெளிப்படை தன்மையை’ மட்டும் பாராட்டியதால் ஏற்பட்ட எரிச்சலில் தான் எழுதினேன். பிறகு நம் விவாதம் சென்ற திசையை கண்டு (முக்கியமாக வினவு தளத்தில் எம் பதிவுகள் முட்டாளதனமானது என்று சொல்கிறார்கள் என்று நீங்கள் சொன்னது), இனி உங்கள் பதிவுகளை படிக்க கூடாது, உங்களுடன் என்றும் விவாதம் செய்யக் கூடாது என்றும் தோன்றியது. ஆனால் இந்த பதிவு முக்கியமானது. சரியானது. ஆகவே இங்கு எழுதுகிறேன்..

மற்றபடி, இப்படி ஒரு ’தன்னிலை விளக்க பதிவு’ அதன் மூலம் உருவானதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

கண்ணன்!

ஒன்றை மட்டும் நாம் எல்லாரும் புரிந்து கொள்வது நல்லது. Pointwise:

1. இங்கு நடப்பது மதச்சண்டையல்ல.

2. இங்கு பேசப்படுவது இந்துமதச்சித்தாந்தங்க்ளில் ஒன்றான வருணக்கொள்கை.

3. இந்து மத விமர்சன்ம் இந்துக்களால தடுக்கப்படுவதில்லை.

3. ஆரும் அதைச்செய்ய்லாம். அப்படிச்செய்பவர்கள் அதை உள்ளோக்கம் கொண்டுசெய்கிறார்களா என்பதைத்தான் பார்ப்பர். இல்லயென்றால், அவர் கருத்து உண்மையிலே நலம்பயக்கும் என்றால் இந்துக்கள் நன்றாகச்செவி சாய்ப்பர். இப்ப்டித்தான் உடன் கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டது. ஒரு எ.காதான்.

4. உங்கள் பார்ப்ப்னியம் என்றால் என்ன என்பதில் எனக்கு தலைகீழ் வேறுபாடு. அதை டோண்டு ராகவன் பதிவில் அரவிந்தன் நீலகண்டனுக்குப்பதிலாகப்போட்டிருக்கிறேன்.

5. எனது பதிவிலும் புதிதாகப்போட்டிருக்கிறேன்.

6. நீங்கள் குறைகண்டு அது வெறுக்கத்தகுந்ததே எனலாம். நான் சொல்லவில்லை. என்னைப்பொறுத்தவரை, வருணக்கொள்கை மட்டுமே பார்ப்ப்னீய்த்தின் குறை. அஃது இன்றும் பார்ப்பனர்களாலும் இந்து சாமியார்களாலும் முறையாக தூக்கியெறியப்படவில்லை.

7. பாரதி, இராசாசி போன்றவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

8. பார்ப்பனீயத்தில் வேறு சில குறைபாடுகள் இருக்கலாம். எதுதான் உலகத்தில் முழுமை? ஆனால் அக்குறைபாடுகள் எல்லா மதங்களிலும் உள்ளவையே. இவர்களைத் தனியாகபோட்டுத் தாக்கமுடியாது.

9. பார்ப்ப்னியம் தற்காலத்தில் கேட்ப்பாரற்றுக்கிடக்கிறது என்பது பாரதி போன்றோரின் ஆதங்கம். பார்ப்பன்ரின் வாழ்க்கை முறை அதிவேகமாக மாறிக்கொண்டிருக்கின்றபடியால் அது வெளியேறிக்கொண்டிருக்கிறது.

10. உயர்ஜாதீயம் வேறு; பார்ப்ப்னீயம் வேறு.

12. பார்ப்ப்னியம் மதத்தை ஒட்டியது. மதமே ஆதாரம். வருணக்கொள்கையும் அப்படியே. இந்துகளில் புனித நூலான கீதை அதை எடுத்துச்சொன்னது. பகவானே தானே நால்வகை குலங்களையும் படைத்ததாகச் சொன்னான்.

13. பிறமதங்களில் ஜாதிகள், ஜாதிச்சண்டைகள் உள. ஆனால், ஏசுவோ, அல்லாவோ நாந்தான் அப்படி மனிதர்களைப்பிரித்தேன் என்று சொல்லவில்லை.

14. அங்கு ப்ரவலாக அது காணப்படாது. சன்னிகளும், சியாக்களும் திருனெல்வேலி மேட்டிப்பாளைத்தில் அடித்துக்கொள்ளவில்லை. ஆனால் வாழ்கிறார்கள். நாடார் கிருத்துவர் தலித் கிருத்துவரை திருனெல்வேலி மாவட்டத்திலேயே ஜாதித்துவேசம் பண்ணுவார். சென்னையில் பண்ணமாட்ட்டார். அதுவும், பெந்தெகோஸ்தோவில் கிடையவே கிடையாது.

15. என்வே உங்களது கிருத்துவமதச்சாடல், நாம் எடுத்துக்கொண்ட வாதப்பொருளான வருணக்க்கொள்கையை, திறமையாக காலால் ஒதுக்க செய்யும் உபாயமே.

பெயரில்லா சொன்னது…

அடுத்து நான் மோடியைப்பற்றி எழுதியது. அஃது ஒரு விவாத்த்துக்கு அல்ல. அது மோடியைப்பாரட்டவே.

மோடியின் - மலம் அள்ளுபவன் அத்தொழிலை நன்றாகச்செய்யின் சொர்க்கத்துக்குச் செல்வான் - என்பது வருணக்கொள்கையின் briefest defintion ஆகும். அதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும்.

ஆம் இதுவே வருணக்கொள்கையாகும்.

தலித் தன் குலத்தொழிலை ஏற்று குலதர்மத்தை நிலைநாட்டி விட்டுச் சென்றால், இறைவன் அவனுக்கு சொர்க்கத்தை அளித்து, ம்றுபிறவியில் இன்னும் உயர்ந்த வாழ்க்கை தருவான் என்பது கர்மா தியரி. The result of varnashradharmam is nothing but the karma theory.

இதைத்தான் சொல்லவந்தேன்.

வேதகால வாழ்க்கை இன்று வரவேண்டுமென்பவர் நால்வகை குலங்கள் வேண்டுமென்கிறார்.

பெயரில்லா சொன்னது…

ஜாதிகள் வேறு. வருனங்கள் வேறு என்று இந்து மதப் primer உங்களுக்குச்சொல்லும்.

ஜாதிகள்தான் ஒழிக்கப்படவேண்டுமென்றாரே தவிர வருணங்கள் ஒழிக்கப்பட்வேண்டுமென்று பாரதி சொல்லவில்லை.

அவர் தெளிவாகத்தான் இருக்கிறார். நாம்தான் பாரதியைப் பற்றி குழப்பிக்கொள்கிறோம்.

அவர் கட்டுரைகளின் அவரின் ஒட்டுமொத்தப்பார்வை தெளிவாக இருக்கிறது.

பாரதியோ காந்தியோ எல்லாத்தொழிலும் சிறப்பே. அனைவ்ரும் ஒன்று. ஒருவர இல்லாவிட்டால் மற்றவர் இல்லை. என்றார்கள். இது வருணக்கொள்கையின் சாரம்.

பெயரில்லா சொன்னது…

First I found your new post on names. But now It has gone missing. Have you deleted it?

பெயரில்லா சொன்னது…

Today, I have posted a reply to Pazamaipeesi in his caste subject blog, which is hyperlinked by our friend, Arthanaari.

There I have explained how hypocritical we are in saying Castes can be abolished.

சாதிகள் ஒழிக்கமுடியும் என்பது ஏமாற்று வேலை என்பது என் கருத்து.

பெயரில்லா சொன்னது…

//Ok, being in a hurry I didnt use the term Sanathana Dharma, does it make such a difference ?
//

Yes definitely. Not a minor difference. But a huge one. There is no religion called Hindu religion. The word is loosely used. In fact, it refers to all people who lives in the socalled akanad bharat.

Bharati gives the people of India, whichever religion they follow, ஆரிய சம்பத்து.

Savarakar accepts that. Please read some RSS tracts.

Strict or orthodox Hindus reject the word, Hindu, as a conspiracy of foreigners. You yourself have said that.

Please be conscious of the difference.

பெயரில்லா சொன்னது…

//It looks like you are following the classic methods of the Evangelist. Attack the beliefs of others, demean / criticise their leaders, discredit the good work being done,
put people in defensive....
//

O, I see.

Are they anyone here for me to convert to Christianity? Please raise your hands dear!

பெயரில்லா சொன்னது…

//You talk as if non Hindus dont practise any form of discrimination//

No, they do practice, in more virulent forms. Witness Middleeast. Witness pentocostalist faith healing tamasha. Witness the sexual orgies of RC clergy. Witness the pedophiles parading in the white robe of christian priests in an Irish convent for more than a decade.

But all of them are out of context here, as I hve explained to our friend Kovi Kannan.

Here, we are discussing Hindu relgious core tenets.

And, how some innocent brhamin chaps who have disowned the parppaneeyam have fallen victim to collateral damage or friendly fire.

பெயரில்லா சொன்னது…

//only Christians are so...//

Matra!

No Chritians can be said to be supportive of dalits w/o some motive. If at all they do, they do only as noble individuals, not as a religious affliation.

Supporting dalits is part and parcel of their programme of proselytisation.

For e.g in my areas - the coastal villages of southern TN - the Church had taken over all fishermen to Christianity centuries ago. It was done by Fr.Xavier who camped in the very village where I live, off and on.

He did it only among the fishermen. But his mission was half finished.

After him, there was a fear of being attacked by Muslim invaders, so the fishermen ran to the portuguese governor of Cochin for help who at that time was Albuequrque. He made a quid pro quo approach. 'Come ye all to our religion, we will save you from Muslims.'

He did, they did, and I am standing before you with a Portuguese name.

So, you see, it is not Christian priest who converted these people but the rulers.

Now, come to dalits. The dalits were neglected, since they lived somewhat interior and did not come under the eyes of Fr.Xavier. Further, the rulers were not interested in them.

Dalits in the areas are continued to be Hindus - but of dravidian type, whereby they worship the so-called tribal deities. Today the Church is helping them but they still remain Hindus.

Hindu religion of vedic vareity has completely neglected them. The caste Hindus and their serving brahmins lived far away in the nearby Tiruchendur or still far away, Srivaikuntam. They neve come near my village.

The dalits have been orphaned by all religions for generations.

And, to come to the pet theme of Govi Kannan, the dalits there are treated as outcasts even by fishermen, not to say of the Hindus, the main creators of such outcast status under religion.

செருப்பாலடிக்கலாமா அவர்களை?

கோவி.கண்ணன் சொன்னது…

//பதிவை கண்டிக்காமல், ’வெளிப்படை தன்மையை’ மட்டும் பாராட்டியதால் ஏற்பட்ட எரிச்சலில் தான் எழுதினேன். பிறகு நம் விவாதம் சென்ற திசையை கண்டு (முக்கியமாக வினவு தளத்தில் எம் பதிவுகள் முட்டாளதனமானது என்று சொல்கிறார்கள் என்று நீங்கள் சொன்னது), இனி உங்கள் பதிவுகளை படிக்க கூடாது, உங்களுடன் என்றும் விவாதம் செய்யக் கூடாது என்றும் தோன்றியது.//

அதியமான் ஐயா,

அசோக் எழுதியது அவரது ஐயம், அதை முட்டாள் தனம் என்று வகைப்படுத்தினீர்கள், அதைப் படிக்கும் போது அவருக்கு எப்படி உணர்வார் என்று நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்கள் வினவு பதிவு பின்னூட்டம் குறித்து எழுதினேன். வலி எல்லோருக்கும் ஒண்ணு தான் சார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Jo Amalan Rayen Fernando said...
Today, I have posted a reply to Pazamaipeesi in his caste subject blog, which is hyperlinked by our friend, Arthanaari.

There I have explained how hypocritical we are in saying Castes can be abolished.

சாதிகள் ஒழிக்கமுடியும் என்பது ஏமாற்று வேலை என்பது என் கருத்து.
//

சாதிகளை ஒழிக்க முடியாது என்று ஒப்புக் கொண்டமைக்கு நன்றி,

சுவிஷேச கூட்டங்களும், கத்தோலிக்க மதகுருமார்களும் தலித்துகளுக்கு விடுதலை வாங்கிதருவதாகக் கூறி தங்களுக்கான வெளிநாட்டு பணத்தை சம்பாதித்துக் கொண்டார்களேயன்றி, ஒரு தலித் எந்த மதத்திற்குப் போனாலும் அவன் தலித்தாகவே தள்ளிவைக்கப்படுகிறான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தலித் தன் குலத்தொழிலை ஏற்று குலதர்மத்தை நிலைநாட்டி விட்டுச் சென்றால், இறைவன் அவனுக்கு சொர்க்கத்தை அளித்து, ம்றுபிறவியில் இன்னும் உயர்ந்த வாழ்க்கை தருவான் என்பது கர்மா தியரி. The result of varnashradharmam is nothing but the karma theory.
//

இந்த கருமத் தியரி எல்லா மதத்திலும் இருக்கு, என்னமோ நீங்க இந்துவில் தான் இருப்பது போலும் கண்டுபிடிப்பு போல பேசுவதும் வியப்பு இல்லை. ஏனென்றால் நீங்க உங்க முதுகில் அழுக்கு இருக்கிறதென்றால் நம்பப் போவதில்லை.

ஆசிர்வதிக்கப்பட்ட இனங்கள், கோத்திரங்கள், குலங்கள் குறித்து பைபிள்களிலும் குரானிலும் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?
பிற இனத்திற்கு எதிரான சாபங்களை நான் பைபிளிலும் குரானிலும் தான் தெரிந்து கொண்டேன். ஒரு யூதனிடம், ஜெர்மானியனிடம் சென்று நான் உன்னை விட உயர்ந்த குலம் என்று சொல்லிப் பார்க்கவும்.

கிறித்துவத்திலும் இஸ்லாமிலும் குலம் கோத்திரம் பற்றிய குறிப்புகளை
நான் அவற்றை எடுத்துக்காட்டினால் வருணம் என்ற வர்ணம் பூசிவரும் உங்கள் இந்து காழ்புணர்வை விட்டுவிட ரெடியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//
13. பிறமதங்களில் ஜாதிகள், ஜாதிச்சண்டைகள் உள. ஆனால், ஏசுவோ, அல்லாவோ நாந்தான் அப்படி மனிதர்களைப்பிரித்தேன் என்று சொல்லவில்லை.
//

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஓர் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாமகிக் கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்’ (திருக்குர்ஆன் 49:13) மேலும் படிக்க...

கிறித்துவத்தில் எத்தனை குலங்கள் குறிப்பிட்டு இருக்கிறது என்பதை பழைய ஏற்பாட்டில் பார்க்கவும்.

கிருஷ்ணன் மட்டுமல்ல, அல்லாவும் ஏசுவும்(ஜெஹோவா) கூட குலங்களை நாங்களே படைத்தோம் என்று மார் தட்டுகிறார்கள்

*****

எனக்கு ஒரு பழமொழி தான் ஞாபகம் வருது,

"காலில் இல்லாத நாய்க்கு வாலில்லாத நாய் இளக்காரமாம்"

கோவி.கண்ணன் சொன்னது…

//தலித் தன் குலத்தொழிலை ஏற்று குலதர்மத்தை நிலைநாட்டி விட்டுச் சென்றால், இறைவன் அவனுக்கு சொர்க்கத்தை அளித்து, ம்றுபிறவியில் இன்னும் உயர்ந்த வாழ்க்கை தருவான் என்பது கர்மா தியரி. The result of varnashradharmam is nothing but the karma theory.
//

மிஸ்டர் ராயன்,

இந்த 'கருமத்' தியரி எல்லா மதத்திலும் இருக்கு, என்னமோ நீங்க இந்துவில் தான் இருப்பது போலும் கண்டுபிடிப்பு போல பேசுவதும் வியப்பு இல்லை. ஏனென்றால் நீங்க உங்க முதுகில் அழுக்கு இருக்கிறதென்றால் நம்பப் போவதில்லை.

ஆசிர்வதிக்கப்பட்ட இனங்கள், கோத்திரங்கள், குலங்கள் குறித்து பைபிள்களிலும் குரானிலும் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?
பிற இனத்திற்கு எதிரான சாபங்களை நான் பைபிளிலும் குரானிலும் தான் தெரிந்து கொண்டேன். ஒரு யூதனிடம், ஜெர்மானியனிடம் சென்று நான் உன்னை விட உயர்ந்த குலம் என்று சொல்லிப் பார்க்கவும்.

கிறித்துவத்திலும் இஸ்லாமிலும் குலம் கோத்திரம் பற்றிய குறிப்புகளை
நான் அவற்றை எடுத்துக்காட்டினால் வருணம் என்ற வர்ணம் பூசிவரும் உங்கள் இந்து காழ்புணர்வை விட்டுவிட ரெடியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//14. அங்கு ப்ரவலாக அது காணப்படாது. சன்னிகளும், சியாக்களும் திருனெல்வேலி மேட்டிப்பாளைத்தில் அடித்துக்கொள்ளவில்லை. ஆனால் வாழ்கிறார்கள். நாடார் கிருத்துவர் தலித் கிருத்துவரை திருனெல்வேலி மாவட்டத்திலேயே ஜாதித்துவேசம் பண்ணுவார். சென்னையில் பண்ணமாட்ட்டார். அதுவும், பெந்தெகோஸ்தோவில் கிடையவே கிடையாது.
//

சென்னையில் சாதிப் பிரச்சனை கிளப்புவர்களுக்கு கண்டிப்பாக சுளுக்கு கிடைக்கும், மற்றபடி எந்த மதத்தைசெ சேர்ந்த்வனாக இருந்தாலும் அங்கு எதுவும் எடுபடாது.

****

இவ்வளவு நேரம் மலிவு விளம்பரமாக செயல்படும் ஒரு மதம் பரப்பும் மிசினெரிக்குத்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன் என்று வெளிச்சம் போட்டுக் கொண்டதற்கு நன்றி.

K.R.அதியமான் சொன்னது…

////அசோக் எழுதியது அவரது ஐயம், அதை முட்டாள் தனம் என்று வகைப்படுத்தினீர்கள், அதைப் படிக்கும் போது அவருக்கு எப்படி உணர்வார் என்று நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்கள் வினவு பதிவு பின்னூட்டம் குறித்து எழுதினேன். வலி எல்லோருக்கும் ஒண்ணு தான் சார்.////

அப்படியா. அந்த பதிவில் ‘குற்றம் சாட்டப்பட்ட’ பல பார்பன சாதியில் பிறந்த பதிவர்களின் ’வலி’ பற்றி யாரும் கவலைபடவில்லை. அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். சாதி வித்யாசம் பார்க்காமல் அன்புடன் பழகுபவர்கள். Brahmin domination என்று அங்கு ஒரு புண்ணாக்கும் இல்லை. நீங்கள் சென்னையில் இல்லை. இங்கு உள்ள பல புதிய பதிவர்களை நேரில் சந்தித்ததில்லை. நல்ல நண்பர்கள் கூட்டத்தை இப்படி பாகுபடுத்துவது முட்டாள்தனம் தான். முட்டாள்தனம் : அது மிக mild ஆன சொல். வக்கிர புத்தி, பகுத்தறிவற்ற மூடத்தனம், அயோக்கியத்தனம், கொழுப்பு என்று தான் சொல்லியிருக்க வேண்டும். உண்மையில் அசோக்கிற்க்கு ’சந்தேகம்’ இருந்திருந்தால் அன்றே மைக்கில் கேட்டிருக்கலாம். அதற்க்கு துணிவில்லாமல், கோழையை போல் பதிவில் எழுதுவது அயோக்கியத்தனம். வலியாம் வலி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்படியா. அந்த பதிவில் ‘குற்றம் சாட்டப்பட்ட’ பல பார்பன சாதியில் பிறந்த பதிவர்களின் ’வலி’ பற்றி யாரும் கவலைபடவில்லை. அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். சாதி வித்யாசம் பார்க்காமல் அன்புடன் பழகுபவர்கள். Brahmin domination என்று அங்கு ஒரு புண்ணாக்கும் இல்லை. நீங்கள் சென்னையில் இல்லை. இங்கு உள்ள பல புதிய பதிவர்களை நேரில் சந்தித்ததில்லை. நல்ல நண்பர்கள் கூட்டத்தை இப்படி பாகுபடுத்துவது முட்டாள்தனம் தான். முட்டாள்தனம் : அது மிக mild ஆன சொல். வக்கிர புத்தி, பகுத்தறிவற்ற மூடத்தனம், அயோக்கியத்தனம், கொழுப்பு என்று தான் சொல்லியிருக்க வேண்டும். உண்மையில் அசோக்கிற்க்கு ’சந்தேகம்’ இருந்திருந்தால் அன்றே மைக்கில் கேட்டிருக்கலாம். அதற்க்கு துணிவில்லாமல், கோழையை போல் பதிவில் எழுதுவது அயோக்கியத்தனம். வலியாம் வலி.//

அதியமான் சார்,

எல்லோரையும் பார்பனராக சுட்டிக் காட்டுவது எனக்கும் ஒப்புதல் இல்லை. ஆனால் அவர் குற்றச் சாட்டை வைத்து பாதிக்கப்பட்டதாக நீங்கள் கருதுபவர்களே புறம் தள்ளிய பிறகு நீங்கள் எதற்கு கவலைப்பட வேண்டும் (டோண்டு தவிர்த்து யாரும் அதைப் பற்றி பதிவில் பேசவே இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை). அசோக் விட்டாலும் நீங்கள் முதல் வரிசையில் இருந்தவர்கள் எல்லோரையும் பிராமணன் பிராமண புத்தி உடையவர்கள் அல்ல அல்ல திரும்ப திரும்ப குறிப்பிட்டு கூண்டில் ஏற்றாமல் விடமாட்டீர்கள் போல இருக்கே.

//வக்கிர புத்தி, பகுத்தறிவற்ற மூடத்தனம், அயோக்கியத்தனம், கொழுப்பு என்று தான் சொல்லியிருக்க வேண்டும்.//

இப்படிப் பட்ட உங்கள் கமெண்டுகளை சோ கல்ட் பார்பனர் புகழ் மற்றும் 'மாண்பு மிகு பிள்ளைமார் சமூகம்' என்று சாதி வெறி பரப்பும் பெரியவர் பதிவில் பார்ததே இல்லையே. உங்களுக்கு அவரெல்லாம் உத்தமரா ?

K.R.அதியமான் சொன்னது…

///ஆனால் அவர் குற்றச் சாட்டை வைத்து பாதிக்கப்பட்டதாக நீங்கள் கருதுபவர்களே புறம் தள்ளிய பிறகு நீங்கள் எதற்கு கவலைப்பட வேண்டும் (டோண்டு தவிர்த்து யாரும் அதைப் பற்றி பதிவில் பேசவே இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை). ///

That is becasue they are too decent for all this shit. and shy to talk about this. While I am not.

In fact most bloggers do not know or care to know the caste of other bloggers.

கோவி.கண்ணன் சொன்னது…

//
That is becasue they are too decent for all this shit. and shy to talk about this. While I am not.

In fact most bloggers do not know or care to know the caste of other bloggers.//

அதியமான் சார்,

என்னுடைய கடைசி பின்னூட்டத்தின் சில வரிகளை ஒட்டிய பொருளில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததற்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

//சுவிஷேச கூட்டங்களும், கத்தோலிக்க மதகுருமார்களும் தலித்துகளுக்கு விடுதலை வாங்கிதருவதாகக் கூறி தங்களுக்கான வெளிநாட்டு பணத்தை சம்பாதித்துக் கொண்டார்களேயன்றி, ஒரு தலித் எந்த மதத்திற்குப் போனாலும் அவன் தலித்தாகவே தள்ளிவைக்கப்படுகிறான்.//

Not in pentacostalism.

Other sects it is true. Dalits are discrimianted among Tamil christians.

A strong basis on which Karunanithi is seeking reservations for them.

பெயரில்லா சொன்னது…

//கிறித்துவத்திலும் இஸ்லாமிலும் குலம் கோத்திரம் பற்றிய குறிப்புகளை
நான் அவற்றை எடுத்துக்காட்டினால் வருணம் என்ற வர்ணம் பூசிவரும் உங்கள் இந்து காழ்புணர்வை விட்டுவிட ரெடியா ?//

You should not stop at saying 'I can...!'

You should write them all about that. Since you write interestingly in Tamil, it would be a pleasure if you go hammer and tongs against Islam and Christianity.

All religions have one form or other to discriminate against the week among them. It is a universal fact. An eternal fact. I mean, as long as man lives, he will need someone or some group to discrimiante against. Power, Kannan, Power.

But to write a theory that a scavenging dalit will go to heaven if he performs toilet cleaning efficiently - is too much. To softpedal that crime against dalits, by comparing with other religions that such exists there, too - கோவி கண்ணன் நீஙக எங்கேயோ போயிட்டீங்க!!

Hindu relgiious concepts are under discussion in your blogpot here, so people need to take that subject here. How many times need I tell you, the learned Sir?

Further, we enjoy the liberality of Hindus to criticise such tenets as I have pointed out to Matra, the motive is important before accepting the criticism.

You write a new blogpost on the religious concepts and practice of other two religion, I will be present there, - for what? To stand behind you and stand up with you.

Lets us stand up against all kinds of racism. Ready?

கோவி.கண்ணன் சொன்னது…

/
Not in pentacostalism.
Other sects it is true. Dalits are discrimianted among Tamil christians.
//

அமல ராயர் ஐயா,

சோழியன் குடுமி சும்மா ஆடாதுன்னு சொல்லுவாங்க. ஞாயிற்றுக் கிழமை நடு இரவில் ஏசு அழைக்கிறார் என்று மைக் வைத்து கூவும் அந்த கூட்டத்தவரா தாங்கள் ?

"சுவிசேசக்காரர்களுக்கு சுண்ணாம்பு தடவுவோம் வாருங்கள்" வாலோ, இராஜனோ எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//You write a new blogpost on the religious concepts and practice of other two religion, I will be present there, - for what? To stand behind you and stand up with you.

Lets us stand up against all kinds of racism. Ready?//

பொறிவிக்கிறவன் பெருச்சாளியை துணைக்கு கூப்பிட்டானாம் அந்த கதையாகப் போய்விடும்.
நான் வரல இந்த ஆட்டத்துக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

////But to write a theory that a scavenging dalit will go to heaven if he performs toilet cleaning efficiently - is too much. To softpedal that crime against dalits, by comparing with other religions that such exists there, too - கோவி கண்ணன் நீஙக எங்கேயோ போயிட்டீங்க!!
//

அமல ராயர் சார்,

மோடி சொர்கம்னு சொல்லி ஞாயப்படுத்துறான், அதை அவன் வெளிப்படையாகவே சொல்கிறான். மத்த மதத்துக்காரனுவ மோட்சம் தருகிறேன் என்று கூட்டிட்டு போய் சுண்ணாம்பு தடவுறானுவ.

வலது காலில் நரகலை மிதித்தவன் இடது காலில் மிதித்துக் கொண்டவனைப் பார்த்து உங்கிட்ட நாத்தம் கொடலை புடுங்குதுன்னு சொன்னானாம்

பெயரில்லா சொன்னது…

No Mr Kannan. I am serious.

There are two things in life: Theory and Practice.

For e.g. the Hindus claim, as Matra did it here, that their theory of varnashradharma is noble in its pristine purity. But was perverted by vested groups later on, during the course of the religious history.

If I discuss the theory, then it would be better for me to leave out the practice - so that theory is understood correctly.

Similarly pentacostalaism.

That which you are talking here, is the practice of the sect in Tamilnadu and elsewhere. Not the theory.

The theology insists that all of us are equal. Rich or poor, weak or mighty, all of us need to wear spartan clothes (like white dress for women) and no ornments (women should not wear any ornaments etc.)

This is to make the sect out and out egalitarian.

The reason for such egalitarianism is not far too seek. It is there in its origins in Chicago in 1900. The Sect was originated by a Negro slave who took Christianity as his faith, but superimposed all the pagan rituals and ceremonies of Africa with which he was familar.

Further such external changes or cosmetic changes became necessary because he was gathering all negro slaves of Chicago and teaching Christian principles to him. They could better feel integrated on if they are taught through the idiom they can understand: idion of paganism to base Christian faith.

In theology, such style is called inculturaton.

Slowly, other fringe and negected sections of Chicago society joined the sect in its sessions which were held, as expected, in an abandoned garage.

The sect spread fast among the lowest classes of people. The white men of high society called it satanical sect.

Rest is history.

It is their poor begginnings and total lack of elitism that galvanise the neglected sections towards them.

If you find it despicable because of their faith healing etc. it is a perverted vareity of the sect that is being paraded here.

Why dont you read certain books on the origin and history of pentacostalism.

பெயரில்லா சொன்னது…

Modi is correct. He was just giving a defintion of Varnashradharma in his own way.

Dont kill the messenger.

கோவி.கண்ணன் சொன்னது…

அமல ராயர் ஐயா,

நீங்கள் எதில் எழுதவேண்டும் என்று சொல்வது என் வேலை இல்லை, ஆனால் ஆங்கிலப் பின்னூட்டங்களை நான் படிப்பதும் இல்லை விரும்புவதும் இல்லை. தகவலுக்காக சொல்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Dont kill the messenger.//

எவன் அவன் யாகூ மேசேஞ்சரா கூகுள் மேசேஞ்சரா ?

பெயரில்லா சொன்னது…

ஓகே ஐ ஸ்டாப் ஆங்கிலப்பின்னூட்டங்கள்.

பெயரில்லா சொன்னது…

//பயிர்செழிக்க இருவகையில் செயல்படலாம். ஒன்று பயிருக்கு இடையேயான களைகளை முற்றிலும் நீக்குதல், இன்னொன்று பயிருக்கு
உரமிடுதல்.
//

நான் கேட்ட கேள்வி:

வருணக்கொள்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதே. நேரடியாகப்பதில் சொல்லவும்.

இங்கு இப்பொது எழுதும் நோக்கம் அண்ணல் அமேத்கர பதிவைப் படிக்கப்போகிறேன். அங்கு போடுங்கள் உங்கள் பதிலை. விவாதிக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Jo Amalan Rayen Fernando said...

//பயிர்செழிக்க இருவகையில் செயல்படலாம். ஒன்று பயிருக்கு இடையேயான களைகளை முற்றிலும் நீக்குதல், இன்னொன்று பயிருக்கு
உரமிடுதல்.
//

நான் கேட்ட கேள்வி:

வருணக்கொள்கையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதே. நேரடியாகப்பதில் சொல்லவும்.

இங்கு இப்பொது எழுதும் நோக்கம் அண்ணல் அமேத்கர பதிவைப் படிக்கப்போகிறேன். அங்கு போடுங்கள் உங்கள் பதிலை. விவாதிக்கலாம்.//

வருணக் கொள்கை காலாவதியான ஒன்று, ஆனால் அவற்றை இராசாசி போன்ற பார்பனர்கள் தான் ஆதரித்தனர். வருணக் கொள்கைப்படி எந்த ஒரு பார்பனரும் 'பிரமணானாக' வாழ்ந்ததே இல்லை. அது ஒரு தியரிட்டிக்கல் பரிந்துரை மட்டுமே. அவற்றை முற்பட்ட சமூகம் தவிர்த்து எவரும் ஆதரக்கவில்லை, எதிர்பதற்கு துணியவும் இல்லை.

கிறித்துவத்தில் தலித் வருணாசிரமம் தானே ? அப்படி என்றால் கிறித்துவம் வருணாசிரம அடிவருடி மதமா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்