பின்பற்றுபவர்கள்

24 பிப்ரவரி, 2010

மீண்டும் கல(ர்)ப் படங்கள் !

சிங்கையில் ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலாவினரை ஈர்க்க சிஙகே ( Chingay 2010) அணிவகுப்பு நடக்கும், Chingay அணிவகுப்பு என்றால் வட தென் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் ஓரின (Gay Lesbian) புணர்ச்சியாளர்களின் அணிவகுப்பு போன்றதல்ல. அலங்கார வண்டிகளுடன் பல்வேறு குழுக்கள், அதன் செயல்பாடுகள், நிறுவனங்களின் செயல்பாடுகளின் விளம்பரம் போன்ற காட்சி வண்டிகள் அணிவகுப்பில் கலந்து கொள்ளும், இந்த ஆண்டு 10,000 க்கும் மேற்பட்ட தன்விருப்ப (Volunteer) ஆர்வலர்களின் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது. நாடுகள் சார்பிலும், குறிப்பிட்ட இன, குழு பண்பாட்டினரைச் சார்ந்த குழுக்களும் இதில் இடம் பெறுகிறது.

இந்த ஆண்டு கடந்த காரிக் கிழமை இரவு 8 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை கிட்டதட்ட 2 மணி நேரங்கள் நடந்தது. இந்த அணிவகுப்பு இரவு நேரங்களிலும் சில ஆண்டுகளில் பகலிலும் கூட நடக்கும், இந்த ஆண்டு இரவில் நடந்தது, வண்ணங்கள் பொதுவாக அழகு, அதை இரவு நேரத்தில் மின் விளக்குகளால் ஏற்படுத்தும் போது கொள்ளை அழகு, இரவில் வண்ண மின்னல்களாக பளிச்சிடும் ஒளி விளக்குகளுடன் சென்ற ஊர்வல அணிவகுப்பு அதைக் காண வந்த வெளிநாட்டு பயணிகளையும் உள்நாட்டினரையும் ஈர்த்தது என்றால் அது மிகையல்ல. அணிவகுப்பின் முடிவில் வானவேடிக்கைகள் அருகில் இருந்து பார்க்கும் போது பலவண்ணங்களில் .... பெருவெடிப்பு கூட இப்படித்தான் நிகழ்ந்திருக்குமோ என்று நினைத்தேன்.






















மேலும் படங்களுக்கு http://www.chingay.org.sg

************

பகலில் பார்த்தவற்றை இரவில் பார்க்கும் போது எல்லாம் ஒளிகலன் இருந்தது.





5 கருத்துகள்:

Kesavan சொன்னது…

படங்கள் அருமை

தத்துபித்து சொன்னது…

அண்ணே நல்லா படம் காட்டுறீங்க , நன்றி .

பாலகுமாரன், வத்திராயிருப்பு. சொன்னது…

நல்லது.
நாளை நானும் போடுவேன்
கல(ர்)ப் படங்கள் !

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அருமையான படங்கள் கண்ணன் அண்ணே !

நன்றாக கண்டு களித்தீங்களா ...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

அருமையான படங்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்