சிங்கையில் இருந்து வெளியாகும் இணைய இதழ்

மீண்டும் கல(ர்)ப் படங்கள் !

Wednesday, February 24, 2010

சிங்கையில் ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலாவினரை ஈர்க்க சிஙகே ( Chingay 2010) அணிவகுப்பு நடக்கும், Chingay அணிவகுப்பு என்றால் வட தென் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் ஓரின (Gay Lesbian) புணர்ச்சியாளர்களின் அணிவகுப்பு போன்றதல்ல. அலங்கார வண்டிகளுடன் பல்வேறு குழுக்கள், அதன் செயல்பாடுகள், நிறுவனங்களின் செயல்பாடுகளின் விளம்பரம் போன்ற காட்சி வண்டிகள் அணிவகுப்பில் கலந்து கொள்ளும், இந்த ஆண்டு 10,000 க்கும் மேற்பட்ட தன்விருப்ப (Volunteer) ஆர்வலர்களின் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது. நாடுகள் சார்பிலும், குறிப்பிட்ட இன, குழு பண்பாட்டினரைச் சார்ந்த குழுக்களும் இதில் இடம் பெறுகிறது.

இந்த ஆண்டு கடந்த காரிக் கிழமை இரவு 8 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை கிட்டதட்ட 2 மணி நேரங்கள் நடந்தது. இந்த அணிவகுப்பு இரவு நேரங்களிலும் சில ஆண்டுகளில் பகலிலும் கூட நடக்கும், இந்த ஆண்டு இரவில் நடந்தது, வண்ணங்கள் பொதுவாக அழகு, அதை இரவு நேரத்தில் மின் விளக்குகளால் ஏற்படுத்தும் போது கொள்ளை அழகு, இரவில் வண்ண மின்னல்களாக பளிச்சிடும் ஒளி விளக்குகளுடன் சென்ற ஊர்வல அணிவகுப்பு அதைக் காண வந்த வெளிநாட்டு பயணிகளையும் உள்நாட்டினரையும் ஈர்த்தது என்றால் அது மிகையல்ல. அணிவகுப்பின் முடிவில் வானவேடிக்கைகள் அருகில் இருந்து பார்க்கும் போது பலவண்ணங்களில் .... பெருவெடிப்பு கூட இப்படித்தான் நிகழ்ந்திருக்குமோ என்று நினைத்தேன்.






















மேலும் படங்களுக்கு http://www.chingay.org.sg

************

பகலில் பார்த்தவற்றை இரவில் பார்க்கும் போது எல்லாம் ஒளிகலன் இருந்தது.





5 கருத்துக்கள்:

QR Code for this Blog

qrcode

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

- : புலிகளைக் காப்பாற்றுவோம் : -

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP