பின்பற்றுபவர்கள்

27 ஏப்ரல், 2011

துறவியின் மறுபக்கம் !

அரசியல் ஒன்றும் பொதுச் சொத்து அல்ல வாரிசுகள் வரிந்து கட்டிக் கொள்ள என்று ஒருசாரார் வாரிசு அரசியலைச் சாடுகிறார்கள். இந்த நிலையில் பழைய நேர்காணல் ஒன்றை நினைவு படுத்த....


********

தமிழ்நாட்டு அரசியலின் அழுத்தமான அதிகார மையங்களில் ஒருவர் ராஜாத்தி
கருணாநிதி!

மகள் கனிமொழி, பேரன் ஆதித்தனுடன் வாழும் சி.ஐ.டி. காலனி இல்லம்தான்
கோபாலபுரத்துக்கு அடுத்து கழகத்தினர் காத்திருக்கும் முக்கியத் தலம். நீண்ட
யோசனைக்குப் பிறகு, பேட்டிக்குச் சம்மதித்தார் ராஜாத்தியம்மாள்.

''முன்பெல்லாம் கேமராவைப் பார்த்தாலே ஒதுங்கிக்கொள்ளும் நீங்கள், இப்போது
அடிக்கடி விழா மேடைகளில் தலைகாட்டுகிறீர்கள். அரசியல் பிரவேச ஐடியா எதுவும்
இருக்கா?''

''தலைவரின் மனைவி என்பதால் மட்டுமல்ல... கட்சிக்காரர்கள் நிறையப் பேர்
என்னையும் விழாக்களுக்கு வரச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். தலைவரையும்
குடும்பத்தையும் பார்த்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது. அதையும் மீறி
நேரம் கிடைக்கும்போது மட்டுமே விழாக்களில் கலந்துகொள்கிறேன். கனி நடத்தும் விழா
என்றால், எப்படிப் போகாமல் இருக்க முடியும்? 'தலைவரின் பொண்ணு கனி அரசியலில்
இருக்கே... அது போதும் எனக்கு!''

''கலைஞரை நீங்களும் 'தலைவர்' என்றுதான் அழைப்பீர்களா?''

''எல்லோருக்கும் தலைவராக இருக்கும் அவர் எனக்கும் தலைவர்தான்! 'வாங்க... போங்க'
என்று எப்போதாவது அழைப்பேன். ஆனாலும், 'தலைவர்' என்று அழைப்பதில்தான் எனக்குக்
கம்பீரமே இருக்கு.''

''கழகத் தலைவர், குடும்பத் தலைவராக எப்படி?''

''வீட்டில் இருந்தாலும் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார். எதையாவது
எழுதிக்கொண்டு இருப்பார். ஃபைல்களைப் பார்ப்பார். 'அதைச் செய்... இதைச் செய்'
என்று மற்றவர்களையும் வேலை வாங்குவார். இப்போது மோட்டார் நாற்காலியில் அவர்
உட்கார்ந்துகொண்டு வரவேண்டிய நிலையிலும், ஓய்வு எடுக்காமல் வேலை
பார்க்கிறார்!''

''இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் நீங்கள் பொக்கிஷமாக வைத்திருக்கும் பொருள்
என்ன?''

''ஒரு சமயம் பெரியாரைப் பார்ப்பதற்காக நானும் தலைவரும் போயிருந்தோம். அப்போது
கனிக்கு ஒரு வயசு இருக்கும். அவளும் எங்களுடன்தான் வந்தாள். மணியம்மையாரும்
பெரியாரும் விருந்து தந்து எங்களை உபசரித்தார்கள். கிளம்பும்போது பார்சல் ஒன்றை
என்னிடம் நீட்டி 'இந்தாம்மா, இதைப் பரிசா வெச்சுக்க!' என்று சொன்னார் பெரியார்.
அந்த பார்சலில் என்ன இருக்கும் என்று அப்போதே எனக்கு ஆர்வம் பொங்கியது. காரில்
வீட்டுக்குக் கிளம்பும்போது 'சால்வையாகத்தான் இருக்கும்' என்றார் தலைவர்.
'பெரியார் பரிசாக் கொடுத்தது புடவைதான்' என்று சொன்னேன். 'பெரியாருடன் எனக்கு
நெருக்கம் அதிகம். அவரைப்பற்றி எனக்குத் தெரியும். பார்ப்போம் இதில் யார்
ஜெயிக்கிறார்கள்?' என்று தலைவர் சொன்னார். பார்சலைப் பிரித்தால், அழகான புடவை.
பெரியார் கொடுத்த அந்தப் புடவையை இப்போதும் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.இதேபோல
பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் கொடுத்த கொடி ஒன்றையும்
பாதுகாத்துவைத்திருக்கிறேன். இரண்டு பேரும் திராவிட இயக்கத்தின் மூத்தவர்கள்.
அவர்கள் எனக்குக் கொடுத்த சொத்து அவை!''

''கனிமொழி இன்று தீவிர அரசியலில் வலம் வருகிறார். அவருடைய ப்ளஸ், மைனஸ் என்ன?''

''கனி நிறையச் சமூக சேவைகள் செய்து வருகிறாள். அது எனக்குப் பிடிக்கும். ஒரு
அம்மாவா எனக்கு இதை நினைத்துப் பெருமையாக இருந்தது. தலைவரின் பிறந்த நாளையட்டி
விருதுநகர், காரியாப்பட்டி பகுதியில் சின்னதா ஆரம்பிச்ச வேலைவாய்ப்பு முகாம்
இன்னிக்குப் பெரிய அளவில் வளர்ந்துக்கிட்டு இருக்கு. நாகர்கோவில், வேலூர்,
ஊட்டி, விருதுநகர், கடலூர்னு நிறைய ஊர்களில் இப்படி முகாம்கள் நடத்தப்பட்டு
இருக்கின்றன. 80 ஆயிரம் பேருக்கு மேல வேலை வாங்கிக் கொடுத்திருக்கு கனி. நாலு
வருஷமா பிரபலமாகி வரும் சென்னை சங்கமம் விழா, பெண்களுக்கு அரசியல் பயிலரங்கம், திருநங்கைகளின் முன்னேற்றம் என்று நிறைய விஷயங்களில் ஆர்வம் காட்டி வரும் கனியைக் கொஞ்சம் கர்வத்தோடுதான் நான் பார்க்கிறேன். யாருக்குமே தெரியாம
அடிக்கடி ரத்ததானம் செய்வாள். யாருக்குமே தெரியாத விஷயம்... இரண்டு
வருஷத்துக்கு முன்னாடியே தன் உடலை மருத்துவமனைக்குத் தானம் கொடுப்பதா எழுதிக்
கொடுத்திருக்கு. சமீப காலமா தான் ரத்ததானம் கொடுக்கலை. காரணம், அது உடம்புலேயே
ரத்தம் இல்லை. அந்த அளவுக்குச் சாப்பிடாம, உடம்பை வருத்தி உழைச்சுக்கிட்டு
இருக்கு.

எனக்குப் பிடிக்காத விஷயம்... தனக்குன்னு எதுவுமே கனி செஞ்சுக்காது. எந்தப்
பொருள் மீதும் ஆசையோ, பற்றோ இல்லை. கழுத்தில் செயினோ, காதுல நகை நட்டோ
போட்டுக்க விரும்பாது. 'நகை போட்டுக்கம்மா'னு சொன்னா, 'வேண்டாம்'னு சொல்லி
என்கிட்டயே சண்டை போடும். ஒரு துறவி மாதிரிதான் கனி வாழ்ந்துட்டு இருக்கா!''

**********

ஈராண்டுக்கு முன்பு ஏதோ ஒரு வார இதழில் கருணாநிதியின் இணைவி திருமதி இராசாத்தி அம்மாள், தன் மகள் பற்றிக் பெருமையாக கூறியவை அவை.

மே 6 ஆம் தேதி துறவி பாட்டியாலா நீதிமன்றத்தை அலைக்கற்றை ஊழல் தொடர்பில் சந்திக்கிறார்கள்.

அரசியலில் பேரும் பொருளும் அடைவதென்றால் எவ்வளவு பெரிய ரிஸ்க், சும்மா எதையும் அனுபவித்துவிட முடியாது சார். வாரிசு அரசியில் என்று வயிறு எரிபவர்கள் சிந்திக்கவும்.

2 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எந்தப்
பொருள் மீதும் ஆசையோ, பற்றோ இல்லை. கழுத்தில் செயினோ, காதுல நகை நட்டோ
போட்டுக்க விரும்பாது. 'நகை போட்டுக்கம்மா'னு சொன்னா, 'வேண்டாம்'னு சொல்லி
என்கிட்டயே சண்டை போடும். ஒரு துறவி மாதிரிதான் கனி வாழ்ந்துட்டு இருக்கா!'' //
நல்ல துறவு வாழ்க்கைதான்.

வேடிக்கை மனிதன் சொன்னது…

//அரசியலில் பேரும் பொருளும் அடைவதென்றால் எவ்வளவு பெரிய ரிஸ்க், சும்மா எதையும் அனுபவித்துவிட முடியாது சார். வாரிசு அரசியில் என்று வயிறு எரிபவர்கள் சிந்திக்கவும்.//

வடிவேலு சொல்ற மாதிரி சொல்லனும்னா டெபனெட்லி டெபனெட்லி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்