சிங்கையில் இருந்து வெளியாகும் இணைய இதழ்

திராவிடத் தாய் குஷ்பு மற்றும் திராவிட புலி வடிவேலு - முதல்வர் புகழாரம் !

Monday, April 11, 2011

நேற்றைய பிரச்சாரங்களை முடித்துக் கொண்ட வடிவேலு இரவு 10:30 வாக்கில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். வடிவேலுவை கண்ட நெகிழ்ச்சியில் மிகவும் உயர்வாகப் பாராட்டினார்.

"வாய்யா வடிவேலு....விஜயகாந்துக்கு முன்பே நீ கட்சி ஆரம்பிச்சிருந்தா உன் கூட கூட்டணி வச்சிருந்தாலே திமுக பெரும்பான்மை பெற்றிருக்கும்.....இன்று முதல் உனக்கு 'திராவிட புலி' என்று பட்டம் சூட்டுகிறேன்" என்று மனம் திறந்து பாராட்டினாராம். இதை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட வடிவேலு, எனக்கு இவ்வளவு கூட்டம் கூடும் என்று தெரிந்தால் விஜயகாந்தை எதிர்த்து நின்றிருப்பேன், முதல்வர் ஐயாவும் எனக்க்கு 100 சீட்டு தந்திருப்பார், இம்சை அரசன் இரண்டாம் புலி கேசி என்பதைவிட திராவிடப் புலி பட்டம் தனக்கு பொருத்தமாக இருப்பதாகவும் திமுகவை கரையேற்றுவதில் தனது பங்கு பெருமை சேர்ப்பதாகவும் உள்ளது" என்று கூறினார்.

வடிவேலுவைத் தொடர்ந்து குஷ்புவும் கருணாநிதியைச் சந்தித்தார். "பெண்களின் கற்பு குறித்த சிந்தனையில் உன்னிடம் ஒரு பெண் பெரியாரையே பார்க்கிறேன், இன்று முதல் நீ நடிகை குஷ்பு அல்ல, திராவிடர்களின் இளையத் தாய்" என்று மனம் நெகிழ்ந்து பாராட்டினாராம். விஜயகாந்த், வடிவேலுவைப் போலவே தனக்கும் கூட்டம் கூடுவதால் முன்பே கட்சி துவங்கி இருந்தால் திமுகவிடம் 50 சீட்டுகள் வரையிலும் தன்னாலும் பெற்றிருக்க முடியும் என்று குஷ்பு செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

4 கருத்துக்கள்:

QR Code for this Blog

qrcode

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

- : புலிகளைக் காப்பாற்றுவோம் : -

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP